Tag Archives: Lists

Where is the Party – Silambattam Inspirations

முதற்கண் வேர் இஸ் தி பார்ட்டி திறனாய்வை வாசிக்கவும். அதன் தொடர்ச்சியாக வேர் இஸ் தி பார்ட்டி? ஆங்.. திருமங்கலத்துல! அரசியலாக்கத்தையும் காணவும்.

இப்போது பிற பரிந்துரை:

  1. பன்ச் சிம்புவின் ஏற்றத்தாழ்வு: வேர் இஸ் தி Parity
  2. சீன சிம்பு பார்ட்டி: வேர் இஸ் தி copper-t
  3. லிட்டில் சிம்புவின் பீட்டர்: வேர் இஸ் தி Potty
  4. ஜூம் கணினி சிம்பு: வேர் இஸ் தி PuTTY
  5. பால் குழப்பம் மன்மதன்: வேர் இஸ் தி Panty டுனைட்
  6. பொய் சொல்லப் போறோம் மாப்பிளை முறுக்கு சிம்பு: வேர் இஸ் தி ப்ராப்பர்டி
  7. பைரேட்ஸ் ஆஃப் தி பீச் வாலிபால் சிம்பு: வேர் இஸ் தி Booty

வேற எதுனாச்சும் தோணிச்சுனா சிம்புவுக்கு சொல்லுங்க 🙂

2008 – Tamil Books

சென்ற முறை இந்தியா போனபோது எனி இந்தியனில் வாங்கிய புத்தகப் பட்டியல். பரிந்துரைத்த எனி இந்தியன் தேவராஜனுக்கும் நிழல்கள் பிரசன்னாவுக்கும் நன்றி. கிழக்குப் பதிப்பகத்தில் வாங்கியது தனிப் பட்டியல்.

படித்ததும் பிடித்தவை நீலவண்ணத்திலும், கவராதவை சிவப்பு வண்ணத்திலும், படிக்க எடுக்காதவை கறுப்பு நிறத்திலும் உள்ளது.

வெங்கட்டின் இவ்வருடத் தொகுப்பு :: சென்னை புத்தகக் கண்காட்சி 2009

‘நுனிப்புல்’ உஷா: 2009ன் புத்தக சந்தையும் நான் வாங்கியவைகளும்

தொடர்புள்ள சில:

1. இரண்டாம் ஜாமங்களின் கதை: சல்மா – காலச்சுவடு
2. நாஞ்சில் நாடன் கதைகள் – தமிழினி
3. கானல் நதி: யுவன் சந்திரசேகர் – உயிர்மை
4. கணையாழி கடைசிப் பக்கங்கள் – சுஜாதா
5. சிலுவைராஜ் சரித்திரம்ராஜ் கௌதமன் – தமிழினி
6. ஆழிசூழ் உலகு: ஜோ டி குருஸ் – தமிழினி
7. கன்னி: ஜெ.பிரான்சிஸ் கிருபா – தமிழினி
8. யாமம்: எஸ்.ராமகிருஷ்ணன் – உயிர்மை
9. மணல் கடிகை: சூத்ரதாரி – தமிழினி
10. சாருநிவேதிதா ராஸ லீலா – உயிர்மை
11. சிலிர்ப்பு: தி. ஜானகிராமனின் தேர்ந்தெடுத்த சிறுகதை தொகுப்பு
12. வெள்ளாவி: விமல் குழந்தைவேல் – உயிர்மை
13. கமண்டல நதி – நாஞ்சில் நாடனின் புனைவுலகு: ஜெயமோகன் – தமிழினி
14. குள்ளச்சித்தன் சரித்திரம்: யுவன் சந்திரசேகர் – தமிழினி
15. நான் சரவணன் வித்யா: லிவிங் ஸ்மைல் வித்யா – கிழக்கு
16. நளினி ஜமீலா – ஒரு பாலியல் தொழிலாளியின் சுய சரிதை: தமிழில்: குளச்சல் மு. யூசுப் – காலச்சுவடு
17. கண்ணீரைப் பின் தொடர்தல்: ஜெயமோகன் – உயிர்மை
18. நிழல் முற்றம்: பெருமாள் முருகன்
19. மகாராஜாவின் ரயில்வண்டி: அ. முத்துலிங்கம்
20. வாஸவேச்வரம்: கிருத்திகா
21. சூடிய பூ சூடற்க: நாஞ்சில் நாடன்
22. கோவில் – நிலம் – சாதி: பொ. வேல்சாமி – காலச்சுவடு
23. பூமியின் பாதி வயது: அ. முத்துலிங்கம்
24. பெர்லின் இரவுகள்: பொ கருணாகரமூர்த்தி – உயிர்மை
25. ஆழ்நதியைத் தேடி: ஜெயமோகன் – உயிர்மை
26. ஆஸ்பத்திரி: சுதேசமித்திரன் – உயிர்மை
27. நிழல்வெளிக்கதைகள்: ஜெயமோகன்
28. நித்தியக்கன்னி: எம். வி. வெங்கட்ராம்
29. நவீனன் டைரி: நகுலன்
30. நினைவுப் பாதை: நகுலன்
31. இவர்கள்: நகுலன்
32. வாக்குமூலம்: நகுலன்
33. கூகை: சோ தர்மன்
34. தூர்வை: சோ தர்மன்
35. விசும்பு: ஜெயமோகன் – எனிஇந்தியன்
36. உயிர்த்தலம்: ஆபிதீன் – எனிஇந்தியன்
37. நவீனத் தமிழிலக்கிய அறிமுகம்: ஜெயமோகன் – உயிர்மை
38. நதியின் கரையில்: பாவண்ணன் – எனிஇந்தியன்
39. துங்கபத்திரை: பாவண்ணன் – எனிஇந்தியன்
40. ஸீரோ டிகிரி: சாரு நிவேதிதா – உயிர்மை
41. என் இலக்கிய நண்பர்கள்: ந.முருகேச பாண்டியன் – உயிர்மை
42. ஒற்றன்: அசோகமித்திரன்

Online resources for fashion sales

Insider Alerts

Online Guides & Outlets

  • ShopItToMe.com – Emails you about sales involving favorite brands or stores
  • 6PM.com – Offers shoes, apparel & accessories at deep discounts, but not always luxury
  • DealDivine.com – Compiles coupons, sales & other deals
  • TopButton.com – Offers a cornucopia of online sample sales
  • Gilt.com
  • RueLaLa.com – These members-only sites hold limited-time-only sales of luxury brands

Naan Kadavul – Music

Music Reviews:

Writer Previews:
jeyamohan.in » Blog Archive » சென்னையில்…: யூகிசேது எல்லார் பேரையும் சொல்லி வழக்கம்போல பாராட்டினார். நவீன இலக்கியம் என்றாலே ஜெயமோகன் தான் என்ற வகையில் அவர் சொன்னபோது இருவர் கைதட்டினார்கள். நான் மகிழ்ச்சி அடைய ஆரம்பிப்பதற்குள் ‘ஜெயமோகன் ஒழிக’ என்று அரங்கில் இருந்து ஒரு குரல் எழுந்தது.

நான் இதுவரை தொலைக்காட்சிகளில் தலைகாட்டியதில்லை. அந்த ஊடகம் மேல் அப்படி ஒரு கசப்பு உண்டு. மேலும் அதன் வழியாக ஒன்றும் வாசகர்கள் வரமாட்டார்கள் என்ற எண்ணம். எனக்குத்தெரிந்து தொலைக்காட்சி ஊடகங்களில் பேட்டி கொடுக்காத ஒரே எழுத்தாளன் நான் தான்

Movie Previews:
ராம் சுரேஷ்: நான் கடவுள் – பாலாவின் விகடன் பேட்டி: “பக்திப் படம் எடுப்பது என் வேலை இல்லை. எவருடைய நம்பிக்கை களையும் காயப்படுத்தக் கூடாது என்பது என் இயல்பு. அந்த அடிப்படை நாகரிகத்தில் நான் எப்போதும் தெளிவா இருக்கேன். இது விளிம்பு நிலை மனிதர்களின் உலகம்.

‘நான் கடவுள்’ படத்தில், ஆர்யா, பூஜாவைத் தவிர, அத்தனை பேரும் புதுமுகங்கள். உடல் வளர்ச்சி இல்லாத, மன வளர்ச்சி இல்லாத மனிதர்கள். அவங்க கையில வசனப் பேப் பரைக் கொடுத்து, ‘பேசுப்பா!’னு படம்பிடிக்க முடியாது. அவங்க ளோட பழகி, அவங்க நம்மோட பழகின்னு ஒவ்வொருத்தரையும் ஒரு குழந்தை போலப் பார்த்துக்கணும். ஆறு மாச ஷூட்டிங் முடிஞ்ச பிறகு, இப்போ அவங்க அத்தனை பேரும் என் குடும் பம்.

இன்னொரு பக்கம் காசி சாமி யார்கள். அகோரின்னு சொல்லப் படுகிற, நர மாமிசம் சாப்பிடுற சாமியார்களையும் நடிக்க வெச்சிருக்கேன். இப்படி ஒரு படத்தை உருவாக்குற வலியை, வார்த்தைகளில் புரியவைக்க முடியாது. ஏன்னா, இது வித்தி யாசமான படம்னு சொல்றதே பழைய வார்த்தையாகிப்போச்சு. இது நாம் கருணை காட்டாத, நம்மால் புரிந்துகொள்ளப்படாத, கடைசி மனிதர்களின் உலகம்!'”

Twitter Reviews:

  • நான் கடவுள் ஏழாம் உலகம் தான் – naadodi
  • நான் கடவுள்-ல் இளையராசா ஒரு Mediocre ஆகத் தெரிகிறார் (பாடல்களில் மட்டும்) …மது பாலக்கிருட்டின ணைவிட இ.ராசாவின் ரமண மாலையில் வரும் பிச்சைப் பாத்திரம் ஏந்திவந்தேன்…பாடல் பிழிவதோடு மட்டுமல்லாமல் ராசாவின் உச்சரிப்பும் சொக்க வைக்கும் இரு…இரு…அருள்…அருள்..களில் வரும் ரு வின் ஏற்றம் என்னை அசரவைத்திருக்கிறது. இம்மாதிரியான ஏற்ற இறக்கம் ராசாவிற்கு அடுத்தபடியாக கமலகாசனில் பாடல் உச்சரிப்பில் கண்டிருக்கிறேன் (அ) கேட்டிருக்கிறேன். – Potteakadai
  • Naan Kadavul songs reminded me of early 90s Rama.Narayanan movies. Not my cup… maybe I’ll start liking after a few mo re hrs of listening! – dynobuoy
  • நான் கடவுள் – ஹே ராம் கிளாஸை எதிர்பார்ப்பவர்கள் ஒழியக்கடவது. ராஜா kep t it simple. எனவே, complexity எதிர்பார்க்கும் என்னைப்போன்றவர்களுக்கு பெருத்த ஏமாற்றமாகத்தானிருக்கும். ஆனாலும் ஒன்றிரண்டு பாடல்கள் பிரபலமாகும். ஷ்ரேயா கோஷாலின் குரல் இனிமை. பிச்சை பாத்திரம் – பழைய ராஜாவின் வடிவத்தைவிட ஏமாற்றம்தான். மெது பாலகிருஷ்ணன் சொதப்பல்.- donion
  • ̀நான் கடவுள்’ மிகுந்த ஏமாற்றம்;புதிதாய் ஒரேயொரு சாதாரண பாடல். இனி எந்த இசைக்கொடையும் ராஜாவால் அளிக்க முடியாது என்ற அலுப ்பு மட்டுமே வருகிறது – rozavasanth
  • ராஜா பாடிய ஒரு காற்றில் கொஞ்சம் திறமையான இசைக்கோர்ப்பு. கண்ணில் பார்வை சில முறை கேட்டால் பிடிக்ககூடும். – donion
  • ஒரு பெரிய ரசிகர் கூட்டம் பயித்தியமாய் ராஜா அமைத்து வெளிவரும் இசைக்காக காந்திருந்து, முதல் நாள் ஒரிஜினல் சிடி வாங்கி, பலமுறை கேட்டு கழகக்கண்மணி போல, அற்புதம் மீண்டும் நிகழ்ந்ததாய் சமாதானமும் ஒவ்வொருமுறையும் சொல்லிக்கொள்கிறது – rozavasanth
  • ராஜா தன் ரசிகர்களுக்கு தருவதும் ஒரு அரசியல் தலைவரின் நரம்பு சிலிர்ப்பு தரும் அறிக்கையை போலத் தான் இருக்கிறது. – rozavasanth
  • இனி பாலாவின் திரையாக்கத்தில்தான் இருக்கிறது. – donion
  • ’நான் கடவுள்’ படம் இளையராஜாவுடன் உத்தம் சிங் இணைந்து இசை என்கிறார்களே, இவருக்கு எதற்கு உதவி? தனியே செய்யமுடியாதபடி கடினமான சப்ஜெக்டா? – nchokkan

Top Tamil Bloggers in 2008

சென்ற வருடத்தில் தமிழ்ப்பதிவுகளைக் கலக்கியது யார்?

கடந்த வருடத்தில் 1500+ பதிவுகள் தமிழ்மணத்தில் இணைந்துள்ளன. (துவக்கம் – 2008 இறுதி)

குறிப்பிடத் தகுந்த பதிவுகளை சேமித்து வைக்கும் முயற்சியில் இறங்காவிட்டால், இந்தத் தகவல் எனக்கு தெரிந்திருக்காது. இத்தனை புதியவர்களில் நான் வாசிக்க ஆரம்பித்தது மிகமிகக் குறைவு. முதல் நான்கு வருடத்தில் 2500 பதிவுகளும், கடந்த வருடம் மட்டும் 60% வளர்ச்சி கண்டிருப்பதும் மிக ஆரோக்கியமான சூழல்.

கவனிக்க மறந்திருப்பீர். தமிழ்ப்பதிவும் பதிவரும் கடந்த வருடத்தில் 60+ சதவீதம் (1500 new Tamil Blogs) எண்ணிக்கையில் அதிகரித்துள்ளது.

எனவே, நான் புலம்பியதை வாபஸ் வாங்க வேண்டிய நிலை?!

இதே போல், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மொழிகளின் புள்ளிவிவரம் என்ன? எத்தனை ஜாஸ்தி ஆகியிருக்கும்? மொத்தம் எவ்வளவு?

புதிய வலைப்பூ ஒவ்வொருவரையும் சொடுக்கி, மேலோட்டமாகவாது மேய்ந்து, தலை பத்து பட்டியலிடுவது என்னும் முடிவில் மாற்றம். 1500+ஐயும் படித்து முடிக்க மூன்று மாதமாவது ஆகும். அதற்குள் ‘சூடான இடுகை’, சீமான், பாலஸ்தீனம், தமிழ்மண விருது எல்லாமே ஆறிப் போகும்.

முதற்கண் முக்கியஸ்தர் கவனிப்பு

(அதாவது புதிதாக எதுவும் எழுதாமல், வேறெங்கோ இட்டதை மீள்பதிவு செய்யும் பத்து பட்டியல்)

  1. கவிதை & பேட்டி
  2. தமிழச்சி தங்கபாண்டியன்

  3. creations
  4. நீல பத்மநாபன்

  5. Revathy | PassionForCinema
  6. ரேவதி

  7. பேசுகிறார்
  8. பாலகுமாரன்

  9. துணிவே துணை :: கல்கண்டு
  10. லேனா தமிழ்வாணன்

  11. வாழ்க தமிழுடன் !
  12. நெல்லை கண்ணன்

  13. எழுத்துகள்
  14. அ.ராமசாமி

  15. Pamaran
  16. பாமரன்

  17. சாரு ஆன்லைன்
  18. சாருநிவேதிதா

  19. Era murugan
  20. இரா முருகன்

உடனடியாக நினைவுக்கு வருபவர், நண்பரின் பரிந்துரை, சூடான இடுகையில் அடிக்கடி உலா வந்தவர், ட்விட்டரில் என்னைப் பின் தொடர்பவர், துறைசார்ந்து எழுதுபவர், திரட்டி சாராமல் இயங்குபவர், மாற்று(.நெட்) திரட்டியில் தொடர்ந்து கவனிக்கப்பட்டவர், என்னை கவனிப்பவர், கிழக்கு பதிப்பகத்தில் இருந்து கிளம்பிய கூட்டம், வோர்ட்ப்ரெஸ்.காம்-இல் அடிக்கடி தென்பட்டவர் என்றெல்லாம் ரொம்ப யோசித்து என்னுடைய பட்டியல்.

தலை பத்து(+1) 2008

  1. யாழிசை ஓர் இலக்கிய பயணம்
  2. லேகா

  3. பயணங்கள்
  4. மரு. ஜா. மரியானோ அண்டோ புருனோ மஸ்கரனாஸ்

  5. வினவு, வினை செய்!
  6. மக்கள் கலை இலக்கியக் கழகம்

  7. மனம் போன போக்கில்
  8. என். சொக்கன்

  9. ச்சின்னப் பையன் பார்வையில்
  10. பூச்சாண்டி

  11. ஏ ஃபார் Athisha
  12. அதிஷா

  13. பரிசல்காரன்
  14. கிருஷ்ணகுமார்

  15. இந்திய மக்களாகிய நாம்….
  16. சுந்தரராஜன்

  17. Pennin(g) Thoughts
  18. ரம்யா ரமணி

  19. மணியின் பக்கம்
  20. பழமைபேசி

  21. தமிழில்
  22. டாக்டர் ஷாலினி

விஐபி, பழம்பதிவர், நான் அதிகம் வாசிக்காத பத்து(+1) உப பட்டியல்:

  1. R P Rajanayahem
  2. ஆர் பி ராஜநாயஹம்

  3. தங்கள் அன்புள்ள
  4. முரளிகண்ணன்

  5. சிதைவுகள்…
  6. பைத்தியக்காரன்

  7. சூர்யா – மும்பை
  8. சுரேஷ்குமார்

  9. mathimaran
  10. வே. மதிமாறன்

  11. வெட்டிவம்பு
  12. விஜய் குமார்

  13. ஓவியக்கூடம்
  14. ஜீவா

  15. முத்துச்சரம்
  16. ராமலக்ஷ்மி

  17. மொழி விளையாட்டு
  18. ஜ்யோவ்ராம் சுந்தர்

  19. US President 08 :: அமெரிக்க அதிபர் தேர்தல்
  20. குழுப்பதிவு

  21. writerpara.net | பேப்பர்
  22. பா ராகவன்

நிறைய அடிபடுகிறார்

(அ)

இவர்களும் இருக்கிறார் 13

தொடர்புள்ள சில:

1. Happening Tamil Blogs – Must Read 30: Index

2. தமிழ்ப்பதிவுகள் – குறிப்பிடத்தக்க முகமூடிகள்

3. வலைப்பதிவுகள் – அடுத்த கட்டம

Superhit Songs in Tamil Cinema – 2008 Year in Review

நினைவுகூர்தல்: 1. Tamil Film Songs – Best of 2007 :: திரைப்பட இசை வரிசை

2. 2008 – பேசப்பட்ட தமிழ் திரைப்படங்கள்

3. தமிழ்ப்பதிவர்களின் விக்கி, வாக்கெடுப்பு: தமிழ்நாட்டின் டாப் 10 விஷயங்கள்

தமிழ்ப்பட பாடல் பட்டியல்:

என்றும் கேட்கலாம் பத்து

  1. ஆழியிலே முக்குளிக்கும் அழகே தாம் தூம் :: ஹாரிஸ் ஜெயராஜ் – ஹரிச்சரண்
  2. சூச்சூ மாரி பூ :: எஸ் எஸ் குமரன் – மிருதுளா எஸ், பார்த்தசாரதி, ஸ்ரீமதி
  3. அனல் மேலே பனித்துளி வாரணம் ஆயிரம் :: ஹாரிஸ் ஜெயராஜ் – சுதா ரகுநாதன்: தாமரை
  4. சொல் சொல்லு சொல்லம்மா குசேலன் :: ஜிவி பிரகாஷ்குமார் – ஹரிஹரன், பூஜா, ரஞ்சனி, சுஜாதா: பா விஜய்
  5. அன்பே அன்பேதான் வாழ்க்கையே – கண்ணும் கண்ணும் :: தினா – தினா
  6. எப்போ நீ – காளை :: ஜீவி பிரகாஷ் – மதுஸ்ரீ
  7. சின்னச் சின்ன கனவுகள் – வாழ்த்துகள் :: யுவன் சங்கர் ராஜா – ஸ்வேதா
  8. இரு விழியோ – பிரிவோம் சந்திப்போம் :: வித்யாசாகர் – சைந்தவி, வினீத் ஸ்ரீனிவாசன்: ஜெயந்தா
  9. அபிநயம் காட்டுகின்ற ஆரணங்கே – உளியின் ஓசை :: இளையராஜா – பாம்பே ஜெயஸ்ரீ, சுதா இரகுநாதன்
  10. அய்யாரே! மனம் தய்யார்ரே (ஆவாரம்பூவுக்கும்) – அறை எண் 305இல் கடவுள் :: வித்யாசாகர் – ஷ்ரேயா கோஸல்

ஒளிப்பதிவு பத்து (பாடல் அருமை என்றால், வெள்ளித்திரை படமாக்கலில் பின்னி அமர்க்களப்படுத்திய பத்து கானங்கள்)

  1. கத்தாழக் கண்ணால அஞ்சாதே :: சுந்தர் சி பாபு – நவீன் மாதவ்: கபிலன்
  2. அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல வாரணம் ஆயிரம் :: ஹாரிஸ் ஜெயராஜ் – கார்த்திக் & வி பிரசன்னா: தாமரை
  3. கண்கள் இரண்டால் சுப்ரமணியபுரம் :: ஜேம்ஸ் வசந்தன் – பெல்லிராஜ், தீபா மரியம்
  4. தோழியா? என் காதலியா? காதலில் விழுந்தேன் :: விஜய் ஆன்டனி – ஹரீஷ் ராகவேந்திரா, மேகா, ஸ்ரீசரண்: பிவி பிரசாத்
  5. குட்டிப் பிசாசே – காளை :: ஜீவி பிரகாஷ் – சிலம்பரசன், சுசித்ரா
  6. ரகசியக் கனவுகள் ஜல் ஜல் – பீமா :: ஹாரிஸ் ஜெயராஜ் – ஹரிஹரன் & மதுஸ்ரீ: யுகபாரதி
  7. வெண்மேகம் பெண்ணாகி – யாரடி நீ மோகினி :: யுவன் சங்கர் ராசா – ஹரிஹரன்
  8. மெதுவா மெதுவா – பிரிவோம் சந்திப்போம் :: வித்யாசாகர் – ஹரிணி & கார்த்திக்: கபிலன்
  9. அட கடகட டம்டம் அதிரடி பிம்பம் – சத்யம் :: ஹாரிஸ் ஜெயராஜ் – ப்ரேம்ஜி
  10. அடடா… என்னை ஏதோ செய்கிறாய் – சந்தோஷ் சுப்ரமணியம் :: தேவி ஸ்ரீப்ரசாத் – சித்தார்த்: நா முத்துக்குமார்

துள்ளிசை பத்து

  1. நாக்க முக்க காதலில் விழுந்தேன் :: விஜய் ஆன்டனி – சின்னப்பொண்ணு: பிவி பிரசாத்
  2. வேர் இஸ் தி பார்டி? – சிலம்பாட்டம் ::  யுவன் ஷங்கர் ராஜா – முகேஷ், ப்ரியதர்ஷினி
  3. டாக்ஸி டேக்சி – சக்கரக்கட்டி :: ஏ ஆர் ரெஹ்மான் – பென்னி தயால், ப்ளேஸ், ஜாவெத் அலி, விவியன் Chaix: ப்ளேஸ், நா முத்துக்குமார், விவியன் Chaix
  4. உலக நாயகனே – தசாவதாரம் :: ஹிமேஷ் ரேஷம்மயா – வினீத்
  5. உய்யாலாலோ – தாம் தூம் :: ஹாரிஸ் ஜெயராஜ் – கைலாஷ் கெர், சுஜாதா
  6. கட்டிப்பிடிக்கும் கரடிய நம்புங்கமுனியாண்டி, விலங்கியல் மூன்றாமாண்டு :: வித்யாசாகர் – மாலதி லஷ்மண், ஜெயமூர்த்தி: வைரமுத்து
  7. கட்டிலுக்கு மட்டும்தானா பொம்பள – தனம் :: இளையராஜா – இளையராஜா: முத்துலிங்கம்
  8. கிச்சு கிச்சு – ஏகன் :: யுவன் சங்கர் ராஜா – வசுந்தரா தாஸ் & யுவன் ஷங்கர்ராஜா
  9. ஆடியடங்கும் உலகத்தில் ஆட வந்திருக்கேன் – பாண்டி :: ஸ்ரீகாந்த் தேவா – கிரேஸ் கருணாஸ், செந்தில் தாஸ்: அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல
  10. திண்டுக்கல்லு, திண்டுக்கல்லு/நகரு நகருடா – திண்டுக்கல் சாரதி :: தினா

What were the notable & forgettable Tamil Movies in 2008: Thamil Cinema

சென்ற வருட நினைவுகூர்தல்: Tamil Film Songs – Best of 2007 Movie Music | 2007 – பேசப்பட்ட தமிழ் திரைப்படங்கள்

இந்த வருடம் – தமிழ்ப்பதிவர்களின் விக்கி, வாக்கெடுப்பு: தமிழ்நாட்டின் டாப் 10 விஷயங்கள்

என்னுடைய திரைப்பட பட்டியல்:

பேயறைய வைத்த பத்து:

  1. அறை எண் 305இல் கடவுள் – மகாமக கொடுமையான நாடகத்தனம்.
  2. குருவி – ஆளுங்கட்சி தயாரித்தால் ப்ரொடக்ஷன் க்வாலிடி கியாரண்டி; படத்தின் க்வாலிடி பணால்.
  3. பீமா – டாம் க்ரூய்ஸ் மாதிரி ஆகிட்டு வருகிறார் விக்ரம். த்ரிஷாவைத் தேய்ச்சால் மட்டும் போதுமா?
  4. பழனி – குரங்கு கையில் பூமாலை என்றால் பழமொழி; பேரரசு கையில் படம் என்றால் அதே மொழி புதுசாயிடும்.
  5. உளியின் ஓசை – அமெரிக்க அதிபர்களுக்கு ஓய்வெடுத்தபின் அருங்காட்சியகமோ நூலகமோ வைப்பது பொழுதுபோக்கு; அதே போல் தமிழினத் தலைவருக்கு திரைவசனம் எழுதுவது கொடும்போக்கு.
  6. நெஞ்சத்தைக் கிள்ளாதே – நடிக்கத் தெரிந்த நடிகையை கொண்டு நல்ல தலைப்பை நாறடித்த அகத்தியன்.
  7. வல்லமை தாராயோ – தன்னைத்தானே மூத்தப் பதிவராக நினைத்துக் கொண்டு சூடான இடுகைக்கும் சொந்தக்காரராய் பாவித்து படுத்தியெடுக்கும் தமிழ்ப்பதிவராக ரோல் தேவைப்பட்டால் சொல்லுங்க; பார்த்திபன் வருவார்; அவர் வந்தாலே தானியங்கியாக அகம்பாவ நிறைகுடம் ரொம்பும்.
  8. வைத்தீஸ்வரன் – தன்னைத்தானே சவுக்கால் அடித்துக்கொண்டு காசு கேட்கும் கழைக்கூத்தாடிக்கு கிடைக்கும் காசு கூட அதிகமாக இருக்கும். சரத்திற்கு ஏன் இந்த மசாக்கிஸ்ட் மனப்பான்மை? சமத்துவமாக ‘அரசி’யில் நடிக்க வரணும்.
  9. பசும்பொன் தேவர் வரலாறு: இட ஒதுக்கீடு
  10. அய்யாவழி: இட ஒதுக்கீடு

கொசுறு: சக்கரக்கட்டி: காசிருந்தா சேமநல உண்டியலில் நிதியாக்குங்க; அருணாச்சலத்தில் ரஜினி செஞ்ச மாதிரி ‘செந்திலை’ இயக்குநராக வைத்து படமெடுக்கவா செய்யணும்?

விமர்சகரின் விருப்ப பத்து:

  1. காஞ்சிவரம் – அவசியம் பாருங்க.
  2. பூ – புஷ்பமாரி பொழிகிறது; ஆளுயர பூமாலை குவிகிறது. வாசம் இன்னும் மோப்பம் பிடிக்காததால் நோ காமென்ட்ஸ்.
  3. சுப்ரமணியபுரம் – Difference between a quality movie & exploitative film: ‘Revolutionary Road’ uses 50s backdrop to define its characters. இங்கே எண்பதுகளைக் காட்டி மயக்கி சாதா சொக்குகிறது.
  4. தசாவதாரம் – Bolt ஆங்கிலப் படத்தில் அசகாய சூரனாக நாய் தன்னைத் தானே கற்பனை செய்து கொண்டு உலாவும். கமலும் கேயெஸ் ரவிக்குமாரும் அந்த உலகநாயக நாய்க்குட்டியாக (கவனிக்க போல் அல்ல) சஞ்சரித்ததாக வித்தகப் பதிவர்கள் எழுதி மாய்ந்த படம்.
  5. வாரணம் ஆயிரம் – இரண்டு விமர்சனம் எழுதியிருக்கோம்ல 🙂
  6. அரசாங்கம் – ஐந்து வயதுக்குட்பட்டோருக்குத்தானே விஜய்காந்த் படம் எடுப்பார் என்னும் நம்பிக்கையை பொய்யாக்கி, பத்து வயது மிகாதோரும் புளகாங்கிதமடைந்தனராம்!
  7. வெள்ளித்திரை – தெலுங்கில் அசல் பார்த்த ‘ரசிகர்்’ மீண்டும் விஜய்/’ரீமேக்’ ரவியை சகித்துக் கொள்வார். ஆனால், இந்த மலையாளத்தில் பார்த்தவரின் அங்கசேஷ்டையும் கலாரசனையும் இருக்கே! என்னத்த சொல்லுவேன்?
  8. தனம் – அதிகம் பேசப்படாததை எடுத்தாண்டதற்கான பொலிடிகலி கரெக்ட் ஒதுக்கீடு.
  9. இராமன் தேடிய சீதை – அந்த பசுபதி பிட் இன்னொரு முழுப்படமா இருந்திருக்கலாம்.
  10. பொம்மலாட்டம் – ‘கல்லுக்குள் ஈரம்’ இயக்குநர் சிகப்பு ரோஜாக்களாக டிக்..டிக்…டிக்!?

ரசிகரின் ரசனைக்கு பத்து:

  1. அஞ்சாதே – மற்ற படம் எல்லாம் டெட்ராய்ட்டின் மும்மூர்த்தி அமெரிக்க ஆட்டோ நிறுவனங்கள் போல் தத்தி தத்தி நடக்கும் சாலையில் லம்போர்கினியாக ஊர்வலம் காட்டி மிரட்டியது.
  2. பிரிவோம் சந்திப்போம் – அமெரிக்காவில் மனைவியை இட்டாண்டு வந்திருக்கீங்களா? எங்கோ கிள்ளி, நெளியவைக்கும்.
  3. கண்ணும் கண்ணும் – நம்பமுடியாத விஷயங்களை நம்பக்கூடிய முறையில் நடைகோணாத பாணியில் சொன்னது.
  4. யாரடி நீ மோகினி – என்னுடைய மேனசரை நான் டாவடித்த ஞாபகம் வந்து ஒரே ஃபீலிங்ஸ் ஆஃப் லோக்கல்ஸ் ஆயிடுச்சுபா!
  5. சரோஜா சுப்ரமணியபுரத்தை எல்லாம் கொண்டாடும் சிற்றிதழ் இந்த மாதிரி முயற்சிகளை புறந்தள்ளும் கபடவேடம் ஏனோ?
  6. ஜெயங்கொண்டான் – அதிகாரமும் உரிமையும் மருட்சியும் சமவிகிதத்தில் கலந்த சகோதர பாசத்தையும் சூட்டிகையான காதலும் சிவாஜிக்கு தங்கச்சியாக ஓவர்-ஆக்டிங் தந்துவிடும் அபாயமுள்ள பாவ்னாவிடம் அமரிக்கையும் தந்தற்காக ஷொட்டு.
  7. சந்தோஷ் சுப்ரமணியம் – சித்தார்த்தை சின்னப் பையனாகவும், ஜெனீலியாவை இன்னும் கொஞ்சம் க்யூட்டாகவும் கண்டிருந்தாலும், ஆங்கில மொழியாக்கம் படிக்காமல், பார்க்க வைத்தது.
  8. பொய் சொல்லப் போறோம் ஹிந்தியில் பார்த்திருதாலும், கதையை நம்பி கதாநாயக பிம்பங்களை உதறிய படம் என்ற வகையில் நல்ல படம்.
  9. குசேலன் வடிவேலுவை மட்டும் நீக்கிவிட்டால் படம் சூப்பர்.
  10. ஆயுதம் செய்வோம் – ‘எனக்கு நடிக்க வராது; நடனம் தெரியாது; கையையும் காலையும் சுத்துவேன்; நல்ல நகைச்சுவை ட்ராக்கை படம் நெடுக்க வைப்பேன்’ என்று சத்தியப் பிரமாணம் எடுத்து இருக்கும் சுந்தர் சியை மறப்பவர்களுக்கு ஈரேழு பிறப்பிலும் நற்கதி கிடைக்காது.

விமர்சனத்திலும் பார்க்காத ஐந்து:

  1. அபியும் நானும் – இன்னொரு வாரணம் ஆயிரம் இல்லியே?
  2. சில நேரங்களில் – நல்லா இருந்ததாம். வின்சென்ட் அசோகன் எப்படி இருக்கார்?
  3. சாது மிரண்டா – எப்படி இருக்கு?
  4. நேபாளி – மோசமில்லை என்கிறார்கள்; இனிமேல்தான் சன் டிவியில் தர்ம தரிசனம் ஆவணும்
  5. காதலில் விழுந்தேன் – சன் டிவி சந்தைப்படுத்தல் மட்டும்தான் USPஓ?

உங்க படம் இங்கே இடம்பிடித்திருக்கிறதா?

Writer Dilip Kumar Meet

திலீப்குமார் பாஸ்டன் பக்கம் எட்டிப்பார்த்து பல மாதம் ஆகிவிட்டது. நினைவில் இருப்பதை சேமித்து வைக்கும் முயற்சி.

  • தமிழ் எழுத்தாளன் வெளிநாட்டுக்கு சென்ற சம்பவம்: நடுவராகப் பணியாற்ற அயல்நாடு அழைத்திருக்கிறார்கள். நள்ளிரவில் கிளம்பும் விமானத்தில் பயணம். இரவு பத்து மணிக்கு வரும் தண்ணீர் லாரியில் இரு குடம் நிரப்பி மூன்று மாடிப்படி ஏறி வீட்டில் வைத்துவிட்டுக் கிளம்புவதாக திட்டம். வழக்கம் போல் அரை மணி நேரம் தாமதமாக வராமல் கால் மணிநேரம் மட்டுமே தாமதமாக தண்ணீர் கொடுக்கப்பட்டதால் விமானத்தைப் பிடிக்க முடிந்தது.
  • ஆசான் மௌனி? : நன்றி – (மெளனியின் படைப்புக்களின் இலக்கிய இடம்: ஜெயமோகன்) மெளனி மீதான முதல் முக்கிய விமரிசனம் இலக்கிய சிந்தனை அமைப்புக்காக திலீப் குமாரால் எழுதப்பட்டு அன்னம் விடுதூது இதழில் அச்சான கட்டுரைதான். அது பிறகு ‘மெளனியுடன் கொஞ்ச தூரம்’ என்றபேரில் நூலாக வானதி வெளியீடாக வந்தது. மெளனியை மிதமிஞ்சி பாராட்டுபவர்களையும் அவரை முற்றாக நிராகரிப்பவர்களையும் நிராகரிக்கும் திலீப்குமார்:

‘என்னைப்பொறுத்தவரை ஒரு தேர்ந்த வாசகன் இலக்கியத்தை அணுகும்போது பரபரப்புக்கோ புல்லரிப்புக்கோ ஆளாகமாட்டன் என்றே நம்புகிறேன். மாறாக இலக்கியத்தின் வரையறைகளையும் வாழ்க்கைக்கும் இலக்கியத்துக்குமான இடைவெளியையும் உணர்ந்தவனாகவே அவன் இருப்பான்’.

  • நண்பன் அசோகமித்திரன்: தான் பார்த்த அன்றாட விஷயத்தை அ.மி. எப்படி மாற்றுப்பார்வை என்னும் நுண்ணிய கவனிப்பு கொண்டு தன் கருத்தை, தன்னுடைய ஆதங்கத்தை, சமூக கோபத்தை கனல் கக்காமல்; அதே சமயம் வீரியம் குறையாமல்; சத்தமாக மட்டும் பேசி அனல் அடிக்காத பேச்சுநடையில் பகிர்ந்த நிகழ்வுகளை சொன்னார். கசப்பு இருக்கும்; ஆனால் கசண்டு போகாத பார்வை.
  • பால்யகாலம்: கரடுமுரடான இளமை அமையாதவர்கள் நல்ல படைப்பாளியாக முடியாது என்னும் என் நம்பிக்கையை திலீப் உறுதி செய்கிறார். பெரும்பணத்தையும் ஏழ்மையையும் சடாரென்று சட்சட்டென்று உடனடியாக அனுபவித்தது; அணா அணாவாக சேர்த்து ஜெயகாந்தனின் ‘ஞானரதம்’ படிக்கும் இலக்கிய தாகம்.
  • திலீப் குமாரின் கோயமுத்தூர்: ஏதோ பேசிய ஞாபகம் இருக்கிறது. சொந்த விஷயமாக இருக்கும்.
  • கணையாழி: கணையாழியில் முதல் கதை வெளியான குதூகலம்; கைக்கு கிட்டிய சன்மானம், வாய்க்கு கிடைக்காத அவஸ்தைகள்; தொகுப்பது, இதழ்களை சேமிப்பது, பிடித்ததை பாதுகாப்பது என்று தொடரும் தமிழ் சேவை என நிறைய பகிர்ந்தார்.
  • ‘க்ரியா’ பதிப்பகமும் ஜி நாகராஜனும்: பேராசிரியர் நாகராஜனின் மதுரைக் காலம், கதை எழுதும் விதம், நாவன்மை, பேச்சு சாமர்த்தியம், சென்னை விஜயங்கள்.
  • நாடகத்தில் அசோக மித்திரன்: அந்த நாடகத்தில் அவரும் துக்கினியூண்டு கதாபாத்திரமாக இருந்திருக்கிறார். ‘பரீக்சா’ குழு நாடகம் முடிந்த அடுத்த நாள் ‘போஸ்ட் மார்ட்டம்’ என்னும் தலைப்பில் அலசல் நடத்தும். பேருந்து நிலையத்தில் அமி.யைப் பார்த்த சகநடிகர், ‘நாளைக்கு போஸ்ட் மார்ட்டம் இருக்கு. வந்துடுங்க!” என்கிறார். ‘நாடகம் இறந்தால், செஞ்சுத்தானே ஆகணும்’, என்று துளிக்கூட சிரிப்பு வராத நகைச்சுவை.
  • ‘மறுப்பதற்கு தைரியம் வேண்டும்’: ‘எதையும் ஒப்புக் கொள்வது சுலபமானது. “பேச வருகிறாயா?” என்றழைத்தவுடன் பிகு செய்து பின் வந்துவிடுவது; “எழுத இயலுமா?” என்றவுடன் கேட்டதை ஆக்கித் தந்துவிடுவது என்பது இயல்பு. கடினமான காரியமல்ல! ஆனால், “செய்ய மாட்டேன்!” என்று புறக்கணித்து ஒதுங்கிவிடுவது அனைவராலும் இயலாது’ என்றார்.
  • கவிதைக்கும் கதைக்கும் உள்ள வித்தியாசம்: தன்னுடைய அனுபவத்தை அப்படியே கொடுப்பது கவிதை என்று சொன்னதாக நினைவு. (சந்திப்பு முடிந்தவுடனேயே எழுதியிருக்க வேண்டும் 😦
  • மொழிபெயர்ப்பு பற்றாக்குறை: ‘தமிழில் வெளியாகியுள்ளதை ஆங்கிலத்தில் மொழியாக்குவது மிக மிகக் குறைவு. இல்லவே இல்லை என்று கூட சொல்லலாம். நோபல் போன்ற பரிசு இருக்கட்டும். குறைந்தபட்ச கவனிப்பு கிடைக்கவாவது நல்ல மொழிபெயர்ப்புகள் ஆயிரக்கணக்கில் செய்யவேண்டும். எத்தனையோ பொக்கிஷங்களும் எழுத்தாளர்களும் தமிழிலக்கியமும் வெளியே தெரியாமல் இருப்பதற்கு இதுதான் காரணம்’.
  • தேடல், அடுத்த புத்தகம், தொடரும் பயணம்: பாரதியாருக்கு முன் எவ்வகையான சிறுகதைகள் தமிழில் வெளியாகியுள்ளன என்னும் தேடலில் பல புனைவுகளை நூலகம் நூலகமாகத் தேடி கண்டுபிடித்து மொழிபெயர்த்து வருகிறார். 1800களில் துவங்கி இன்று வரையில் தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடத்தக்க நூறு சிறுகதைகளைத் தேர்ந்தெடுப்பதற்காக பல்வேறு எழுத்தாளர்களின் ஆக்கங்களை மீண்டும் வாசித்து தொகுத்துவருகிறார். அவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து தற்காலத் தமிழ் இலக்கியங்களின் வளர்ச்சியை ஆங்கில வாசகர்களுக்குக் கொண்டு செல்லும் பணியில் தற்பொழுது மும்முரமாக இயங்கி வருகிறார்.

தொடர்புள்ள பதிவுகள்:

1. எழுத்தாளர் திலீப்குமார் ஓர் இலக்கியச் சந்திப்பு: பாகிரதி சேஷப்பன்

2. திலீப் குமார்மதுசூதனன் தெ.

3. புத்தக விமர்சனம்: கடவு – திலீப் குமார்: மனுபாரதி

4. அ) சிறுகதை: கடிதம் – திலீப் குமார்

ஆ) கண்ணாடி Thinnai: திலீப் குமார்

5. செய்தி: Thinnai: “திலீப் குமாருக்கு விருது: எஸ். அருண்மொழிநங்கை

6. SAWNET: Book Review: A Place to Live – Contemporary Tamil Short Fiction: “Edited by Dilip Kumar; Penguin India — Review by Vaijayanti Gupta”

7. Book Reviews: The Hindu : Contemporary concerns: “These stories take you on an exciting journey, and you traverse a whole gamut of human experience and emotions that reflect the changing Tamil milieu.'”

8. Buy Dilip’s book: Bagchee.com: A Place to Live: Contemporary Tamil Short Fiction: Books: Dilip Kumar (ed.)Vasantha Surya (tr.): Innumerable strands of ethnic, regional and universal experiences are woven together in this collection of fine short fiction spanning four decades – 1960-1990-in which the short story emerged as the definitive genre of modern Tamil literature. Twenty-nine famous names are represented here-from Rajanarayanan to Paavannan and many others who have encapsulated the joys, sorrows, and peculiar challenges of life in Tamil Nadu.

9. Interview with Dilipkumar:

திலிப் குமார் (47) தீவிர வாசிப்பில் தொடர்ந்து ஈடுபட்டு வருபவர். எழுத்து முயற்சிகளில் அசுர வேகம் கொண்டவரல்லர். ஆனால், துவரை ‘மூங்கில் குருத்து’ (1985), ‘மெளனியுடன் கொஞ்ச தூரம்’ (1992), ‘தற்காலத் தமிழ்ச் சிறுகதை’ (ஆங்கிலம்), ‘மொழி பெயர்ப்பு சிறுகதைகள்’ (பதிப்பாசிரியர்) போன்ற தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்.

என் குடும்ப சூழ்நிலை காரணமாகக் கல்வி வாய்ப்பை 14 வயதிலேயே இழந்தவன். எனக்கு தமிழ், குஜராத்தி, ஆங்கிலம் ஆகிய எந்த ஒரு மொழியிலும் சரியான தேர்ச்சி இருக்கவில்லை. வறுமை காரணமாக அடித்தட்டு தமிழ் மக்களோடு நெருங்கிப் பழகும் வாய்ப்பு, தமிழ்மொழி, தமிழ் கலாசாரம் இவற்றின் மீது என்னை ஈடுபாடு கொள்ள வைத்திருக்கிறது. மூன்றாம் வகுப்பு வரை தமிழ் படிக்க நேர்ந்தது. எனது சுய முயற்சியால் தமிழ் மொழியைக் கற்க முற்பட்டேன். ஆனால், எனக்கு சரியான வழிகாட்டுதல் இல்லை.

பின்னர் நவீன தமிழ் இலக்கியத்தில் படிப்படியாகப் பரிச்சயம் கொள்ள நேர்ந்தது என்பது ஒரு புதிர் மிகுந்த தற்செயல் நிகழ்வுதான். மொழி அறிவு சார்ந்த என் குறைபாடுகளையும் மீறி நான் எழுதுவதற்கு உந்தப்பட்டேன். எனது மிகக் கடினமான வாழ்க்கைச் சூழலில் புதுமைப்பித்தன், ஜெயகாந்தன் ஆகியோரது கதைகளை அன்று முதன்முதலாக படித்த பொழுது மிகப் பெரிய பாதிப்புக்கு உள்ளானேன். என் அனுபவ உலகத்திற்கும் இவர்கள் தங்கள் கதைகளில் பிரதிபலித்த உலகத்துக்கும் மிகப் பெரிய ஒற்றுமை இருப்பதாக நான் உணர்ந்தேன்.

நான் எழுதத் துணிந்தமைக்கு இன்னொரு காரணமும் உண்டு. பொருளாதார காரணங்களினால் எங்கள் சமூகத்தினரிடையே எங்கள் குடும்பத்திற்கு ஏற்பட்டிருந்த ஒதுக்கம், கல்வி இழப்பு, என் தனிப்பட்ட குறைபாடுகள் இவற்றால் எனக்குள் தோன்றியிருந்த தாழ்வு மனப்பான்மை இந்தப் பின்புலத்திற்கு எதிர்வினையாக என் தனித்துவத்தை அடையாளப்படுத்தக் கூடிய சாதிக்கக் கூடிய ஒரு நடவடிக்கையாகவும் எழுத்தை நான் மேற்கொண்டேன்.

ஒரு எழுத்தாளனுக்குத் தேவையான தகுதிகள் பல என்னிடம் இல்லை என்பதை நான் உணர்ந்திருந்தேன் என்றாலும் சக மனிதர்கள் மீது உண்மையான பரிவு, தமிழ் வாழ்க்கையின் அன்றைய யதார்த்தங்கள் பற்றிய புரிதல், மனித இயல்பின் வினோதங்கள் குறித்த ஏற்புடைமை, நகைச்சுவை உணர்வு இவற்றின் கலவையான ஒரு பண்பு என்னிடம் இருந்தது. இதைக் கொண்டே நான் என் இலக்கிய முயற்சிகளை மேற்கொண்டேன். மற்றபடி எந்த இலக்கியக் கொள்கையோடும் என்னை நான் இணைத்துக் கொண்டு செயல்பட்டதில்லை.

10. ஜெயமோகன் என்ன சொல்கிறார்:

பல்வேறு வடிவங்களில் எழுதிய, பல்வேறு சூழல்களை சித்தரித்த, பல்வேறு தத்துவ நோக்கை வெளிப்படுத்திய படைப்பாளிகளை ஒரேசமயம் நம்மால் பொதுவாக ஏற்கவும் ரசிக்கவும் முடிவது ஏன் என்று வினவும் திலீப் குமார் ‘இவர்களுடைய இலக்கியசெயல்பாடுகளுக்கு பின்னிருந்து இயக்கிய் ஓர் அற இயல்புதான் அது ‘ என்று அதை அடையாளம் காண்கிறார். அதேசமயம் அந்த அற இயல்பு ‘தன்னளவில் தன்மையற்றது ‘ என்று சொல்லி அது அவ்வெழுத்தாளன் செயல்பட்டகாலம் அவனது நோக்கு அவனது படைப்பியல்பு ஆகியவற்றுக்கு ஏற்ப அவனுள் முளைப்பது என்றும் சொல்கிறார்.

இப்பார்வையினால்தான் ஒரு மார்க்ஸிய எழுத்தாளனும் மார்க்ஸிய எதிர்ப்பு எழுத்தாளனும் தன்னை ஒரேசமயம் வசீகரிப்பதை புரிந்துகொள்ளமுடியும் என்கிறார்.

11. ஞாநி:

எழுத்தாளர் திலீப்குமாருடன் சில மாதங்கள் முன்பு மதிப்பீிடுகள் பற்றிய மிக அந்தரங்கமான நெகிழ்ச்சியான உரையாடலில் ஈடுபட்டிருந்தபோது சுமார் பதினைந்தாண்டுகள் முன்னர் நிகழ்ந்த ஒரு நிகழ்ச்சியை அவர் நினைவு கூர்ந்தார்.

அவருக்குத் தெரிந்த ஒரு பதிப்பாளர் மிகுந்த பொருட் செலவுடன் வெளியிட்டிருந்த ஒரு வ்ிசேடமான நூலுக்கு தமிழக அரசின் ஒரு துறையிலிருந்து ஆயிரக்கணக்கான பிரதிகளுக்கு ஆர்டர் கிடைக்கிற தருணத்தில், துறை அதிகாரி பதிப்பாளரின் பிரதிநிதியிடம் ஆர்டர் மதிப்பில் பத்து சதவ்ிகிதம் லஞ்சமாக வேண்டும் என்றும், அந்தத்தொகையைக் கொடுத்து விட்டால், மறு கையில் அரசின் காசோலையைப் பெற்றுச் செல்லலாம் என்றும் கூறுக்ிறார்.

பிரதிநிதி தயங்குகிறார். அதிகாரி வியப்படைகிறார். சென்று முதலாளியிடம் சொல்லிக் கேட்டுக் கொண்டு வரச் சொல்கிறார். பிரதிநிதி தன் முதலாளியான பதிப்பாளரிடம் தெரிவிக்கிறார். கடுமையான நிதி நெருக்கடியிலும், அன்புக்குரிய நண்பரின் உடல் நிலைப் பிரச்சினையாலும் துயரப்பட்டுக் கொண்டிருந்த அந்த பதிப்பாளர் அரசுஅதிகாரியின் பேரத்தை மறுத்து விட்டார். பேரத்தை ஏற்றிருந்தால் அத்தனை ஆண்டுகளாக அந்தப் பதிப்பகத்துக்கு ஏற்பட்டிருந்த மொத்தக் கடனும் தீர்ந்துபோய் கணிசமான லாபம் கிட்டியிருக்கும். லட்சக்கணக்கான ரூபாய்கள் இழப்பு.

அந்த இழப்பை அந்தப் பதிப்பாளர் பொருட்படுத்தவில்லை. காரணம் தன் பதிப்புத் தொழிலில் தான் வெளியிடும் படைப்புகளின் மதிப்பீடுகளுக்கு விரோதமான வாழ்க்கையை அவர் வாழ விரும்பவில்லை என்பதுதான். இந்த நிகழ்ச்சியை திலீப் குமார் சொல்லும்போதே எங்கள் இருவர் கண்களும் கசிந்தன.

எனவே எது இலக்கியம் ? யார் இலக்கியவாதி ?

12. Tamil Archives: திலீப்குமார்: “கதாவிலாசம்: எஸ்.ராமகிருஷ்ணன் – மாநகர கோடை”

13. கோகுலகண்ணன் (கலிபோர்னியா):

RayarKaapiKlub : Message: Dilip Kumar and Gopi Krishnan திலீப்குமாரின் ‘ஒரு குமாஸ்தாவின் கதை’ (தீம்தரிகிட)

இருவருக்கும் பொதுவான களன்: லோ மிடில் க்ளாஸ் வாழ்க்கையின் முரண்கள், நெருக்கடிகள், ஏமாற்றங்கள், கேள்விகள்.

தீம்தரிகிடவில் வெளிவந்த திலீப்பின் கதை மிகவும் முக்கியமானது.

குறிப்பாக இந்து முஸ்லிம் பிரச்சினைகள் பிரம்மாண்டமான பரிமாணம் பெற்றிருக்கையில் இந்தக் கதை வாசகனுக்குள் ஏற்படுத்தும் அதிர்ச்சி சிறிது அல்ல. காரணங்களும், தருக்கங்களும் சிதறி வாழ்க்கை படும் அல்லகோலம், மனிதவாழ்வு எதிர்கொள்ள வேண்டிய நெருக்கடிகள், வெறுமையும் அபத்தமும் கண்முன் தரிசனமாகி கலங்கச்செய்யும் தருணங்கள் – படைப்பாளி இவற்றை கோடிட்டுக் காட்டிவிட்டு போகிறான்.

அவனுடைய எழுத்தின் இறுதிப்புள்ளி வாசகன் மனதில் நிதரிசனமும் புனைவும் சந்தித்து மயங்கி கொந்தளிப்பும் கேள்விகளும் உருவாகும் ஆரம்ப புள்ளியாக உருமாறுகிறது.

ஒரு குமாஸ்தாவின் கதையில் வாழ்வின் அடிப்படைத் தேவைகளையே தீர்க்கமுடியாத நெருக்கடிகளாய் கொண்ட நடுத்தரவயது முஸ்லிம் குமாஸ்தா (வயதான தாய், கால்கள் சூம்பிப்போன தங்கையின் மகன்) அரை டிராயர் அணிந்த ஆரோக்கியமான மதவெறியர்களால் அடித்துக்கொல்லப்படுகிறான்.

14. கடவு (சிறுகதைத் தொகுப்பு):

பவா. செல்லதுரை

சிறு பத்திரிகை உலகத்தில் எல்லோருக்கும் தெரிந்த பெயர் திலீப்குமார். குறைந்தது 20 வருடங்களாக எழுதிக் கொண்டிருக்கிற சிறுகதைகள் அவ்வளவு எளிதில் யாருக்கும் வாய்க்காதவை. தமிழ் வாழ்வு, அது சார்ந்த சிக்கல்கள், தமிழக கிராமங்கள் என்று வாசித்துக் கொண்டிருக்கிற ஒரு வாசகனுக்கு திலீப்குமார், குஜராத்தில் இருந்து சென்னையில் வந்து வாழும் குஜராத்திகள், மார்வாடிகள், செளகார்பேட்டை இதெல்லாம் படிக்க ரொம்பப் புதுசாக இருக்கிறது.

படைப்புகளில் வரும் பெயர்கள்கூட சாரதா பெஹ்ன், ப்ரான் ஜீவன்லால், த்ரம்பக், நட்டு, ஹன்ஸ்ராஜ் என்று நாம் அதிகம் படித்திராத பெயர்கள். ஆனால் சிறுகதைகளில் திலீப்குமார் வேறு வேறு விதமான மன உலகங்களை, மனித துக்கங்களை யாரும் போக அஞ்சும் ஆழங்களுக்குச் சென்று கிண்டலும், கேலியுமாய் நம் கைக்குக் கொண்டு வந்து தருகிறார். பார்க்கிற எவரும் உணரலாம். இது கடலின் ஆழத்தில் இருந்து எடுக்கப்பட்ட முத்துக்கள் என்று.

அவ்வப்போது சிறு பத்திரிகைகளில் படித்த கதைகளை மொத்தமாகப் படிக்க வாய்க்கிறபோது இன்னொரு புது அனுபவம் கூடுகிறது. இத் தொகுப்பிலேயே எனக்கு மிகப் பிடித்த கதையாக நிகழ மறுத்த அற்புதம் என்ற கதையைச் சொல்வேன்.

‘மீண்டும் மீண்டும் மனப்பிரதேசங்களில் இருந்து அகல மறுத்து அலறுகிறார்கள் திருமதி ஜேம்ஸ்சும், திரு. ஜேம்ஸ்சும்’ கதை இப்படி ஆரம்பிக்கிறது.

‘திருமதி. ஜேம்ஸ் தன் சிறிய பெட்டியுடன் கிளம்பினாள். நான் போகிறேன் என்றாள்.’

‘சிறிது நேரமாக அவளையே கவனித்துக் கொண்டிருந்த ஜேம்ஸ், என்ன அவ்வளவுதானா? நிஜமாகவா? என்னை விட்டுப் பிரியும்போது உனக்கு சொல்ல வேறு ஒன்றும் இல்லையா என்று கேட்டார்’.

நமக்குப் புரிகிறது. ஒரு கணவனும், மனைவியும் பிரிகிறார்கள். பிரிவு என்கிற ஒரு வார்த்தைக்குள் எத்தனை எத்தனை, துக்கமும், கண்ணீரும், தழும்புகளும், காயங்களும்…

இக்கதை வாசிப்பு எனக்கு உடலெங்கும் தந்த மின்சார அதிர்வுகள், இன்னும் நடுங்குகிறது. வாழ்வு குறித்து பெரும் பயமும், உறவுகள், நண்பர்கள் அற்ற மனித வாழ்வு எத்தனை வெறுமையானது என்றும்… யோசிக்க யோசிக்க… அந் நினைவுக் கயிறுகளை அறுத்துக் கொண்டு பாதுகாப்பான வெளிநோக்கி ஓடிக் கொண்டிருக்கிறேன்.

கதை முழுக்க ஜேம்ஸ் மட்டுமே பேசுகிறார். கதை முடிகிற வரை திருமதி ஜேம்ஸ் ஒன்றும் பேசாமல் மௌனமாக மட்டுமே இருக்கிறாள்.

’25 ஆண்டுகளாக நீடித்த நம் வாழ்க்கையையும், பிணைப்பையும் பொருளற்றதாக்கி விடாதே.

உனக்கு நினைவிருக்கிறதா? திருமணமான மூன்று மாதத்தில் நீ படுத்த படுக்கையாகி விட்டாய். உன் வயிற்றில் அந்தக் கொடூரமான கட்டி வளர்ந்திருந்தது. கோழையும், குருதியும் திரண்டு ஒரு அருவருப்பான பெரிய அழுகிய முட்டையைப்போல்…

உனக்கு தெரியுமோ என்னவோ… அறுவை சிகிச்சைக்கு முன்பாக எத்தனை இரவுகளை நான் உறக்கமின்றிக் கழித்திருக்கிறேன் என்பது… அப்போது நீ என் அருகில் ஒரு குழந்தையைப் போல் கவலையற்று அமைதியாக உறங்கிக் கொண்டிருப்பாய். அறுவை சிகிச்சைக்குப் பின் மூன்று வருடங்கள் நாம் உடலுறவு கொள்ள இயலவில்லை. உன் அருகே நான் விரகத்திலும் அதிருப்தியிலும் உறைந்து ஒரு எ·குத் துண்டைப் போல் கிடப்பேன்.’

இப்படிப் போகும் உரையாடல்களை எளிதாகக் கடக்க முடியவில்லை. 25 வருட வாழ்வில் நடந்தவைகள் ஒவ்வொன்றும் கவித்துவமும், தத்துவமுமாய் எழுதப்பட்டுள்ளது.

அவர்கள் இருவரும் கணவன், மனைவியானாலும், அவர்களின் உலகம் வெவ்வேறானது. அவள் உலகம் முதிர்ந்த மலர்களாலும், ஈரக் காக்கைகளாலும், சுண்டெலிகளின் திருட்டுப்பார்வைகளாலும், கர்ப்பிணிப் பல்லிகளாலும் ஆனது.

ஆனால், ஜேம்ஸின் உலகம் இவற்றிற்கெல்லாம் வெகு அப்பால் வேதனையும், தள்ளாட்டமும், ஏமாற்றமும் நிறைந்தது. கதையின் மையம் காலத்திரைக்குப் பின்னால் புதைந்து கிடக்கும் வெறுமையில் விழுந்து விடாதே, வயோதிகம் எல்லா அன்பையும் உலர்த்தி விடக்கூடியது என்பதுதான்.

வாழ்வின் ருசியில் ஊறிப் போயிருப்பவர்களுக்குக் கூட இக்கதை வாழ்வின் இன்னொரு கோரப்பற்கள் முளைத்த குரூர முகத்தை ஞாபகப்படுத்துகிறது. அவனை விட்டுப் பிரிய மனமின்றி திருமதி. ஜேம்ஸ் பெட்டியைக் கீழே போடும்போதுதான் நான் ஆசுவாசம் அடைந்தேன்.

‘கடவு’ என்றொரு நீண்ட சிறுகதை. கங்கு பாட்டிதான் இக்கதையின் மைய அச்சு. ஒவ்வொரு முறையும் மரணத்தின் நுழைவாயில் வரை சென்று சாமர்த்தியமாகத் திரும்பி விடுவாள். அந்தக் குடியிருப்பில் அவள் பேசும் கெட்ட வார்த்தை வண்டை வண்டையாக, அழுக்குப் படிந்துதான் வெளிவரும். அதன் பின்னணி நம் மனதை அலற விடுகிறது. குடியிருப்பில் உள்ள ஒரு இளம்பெண் ஒரு நாள் கங்குப் பாட்டியிடம் சொல்கிறாள்.

‘நீ துக்கிரி முண்டையாம், உன் உடம்பும் அழுக்கு, மனசும் அழுக்கு என்கிறாள் என் மாமியார்.’

கங்குப் பாட்டி சொல்கிறாள், ‘என் உடம்பு அழுக்குப் படிந்த உடம்புதான். இந்தியாவில் உள்ள எல்லா ஜாதி நாய்களும் என்னைத் துவம்சம் செய்திருக்கிறார்கள். ஏன் வெள்ளைக்காரன் கூட என் மேல் படுத்திருக்கிறான். மற்றபடி என் மனசைப் பற்றி அவளுக்கு என்ன தெரியும்? மடி, ஆசாரம் பார்த்த இந்த வைஷ்ணவ முண்டையின் வாயில் கதறக் கதற ரம்மும், பிரியாணியும் திணித்துத் திணித்து நாள் கணக்கில் அம்மணக் குண்டியாகவே படுக்க வைத்து…

அக்ரகாரத்தில் பாதுகாப்பாக உடம்பெல்லாம் புடவை சுற்றிக் கொண்டு புருஷனுக்குக் கூட அளவாய்த் திறந்து காட்டிய உன் மாமியாருக்கு எங்கேடி தெரியும், என் மனசைப் பற்றி.’

வெளிப்படுத்துகிற வக்கிரத்தை விட தேக்கி வைக்கிற வக்கிரம்தான் அபாயமானது. கங்குப் பாட்டி தன் இறந்த கால ஒவ்வொரு நிமிட துயரத்தையும் வக்கிரங்களாக வெளிப்படுத்திக்கொண்டே செத்துப் போகிறாள்.

‘மனம் எனும் தோணி பற்றி’ என்றொரு காதல் கதை. இப்படி ஒரு வார்த்தையில் அடக்குவதை சகல விதத்திலும் மீறும் கதை. கதையின் துவக்கமே உன்னதக் கவிஞன் ஒருவன் தற்கொலை செய்து கொள்ளக் கடற்கரையில் உட்கார்ந்திருக்கிறான். ”கடல் எத்தனை பிரம்மாண்டமும், அழகும், கொந்தளிப்பும் உள்ளடக்கியதாக இருப்பினும் அவனுக்கு இறுதியில் மரணத்தையே நினைவூட்டுகிறது” என்று ஆரம்பிக்கும் கதையில் துளிர்க்கும் ஒவ்வொரு வரியிலும் கிண்டலும், துயரமும் மாறி மாறி வருகிறது. இப்படியான எழுத்து அவ்வளவு எளிதில் யாருக்கும் வாய்ப்பதில்லை.

அந்தக் கவிஞனின் பெயர் ராகுல் கே.நாயக். அவன் ஒரு குஜராத்திக் கவிஞன். வறுமையின் தோழமையை 13 வயதில் இருந்தே அனுபவித்து வருபவன். காலியான வயிற்றில் சுண்டெலி ஓடி அட்டகாசம் செய்வதைப் போல் துவங்கும் பசியின் உக்கிரமான சீண்டலால் சென்னைக்குப் பஸ் ஏறியவன். வழக்கம் போல் நம் சமூகம் உன்னதக் கலைஞர்களுக்குத் தரும் 300 ரூபாய் சம்பளத்துக்கு ஒரு ரெடிமேட் ஜவுளிக்கடையில் விற்பனை குமாஸ்தா வேலையில் சுருங்க மறுக்கிறது அவன் விரிந்த கவிதை உலகம். அக்கடையில் இன்னொரு சேல்ஸ் கேர்ள் ராஜகுமாரி, திடீரென்று அவனைக் காதலிப்பதாகச் சொல்கிறாள். இவன் 300 ரூபாய் சம்பளத்தில் அல்லாடினாலும், இவன் உலகம் உன்னதமில்லையா? இவன் பேசுகிறான்

”இதோ பார் ராஜகுமாரி, என் உலகம் வேறு, உன் உலகம் வேறு. நீ ஒரு சாதாரண பெண். நானோ கவிஞன். எனக்குக் காதலில் அப்படி ஒன்றும் நாட்டமில்லை. ஏதோ விதி வசத்தால் நான் இப்படி ஜவுளிக்கடையில் சீரழிகிறேனே தவிர, வாழ்வு பற்றி நான் கொண்டிருக்கும் லட்சியங்கள் மிக உயர்ந்தவை. சிகரங்களை நோக்கிய என் பாய்ச்சலின்போது காதல் என்பது எனக்கு ஒரு சுமையாக மட்டுமே இருக்க முடியும்.”

தவிர உன்னைக் காதலிப்பதில் இன்னொரு சங்கடமும் இருக்கிறது. உனக்கு பயங்கரமாக வியர்க்கிறது. உன் மேல் இருந்து வீசும் வியர்வையில் பூண்டு நாற்றமடிக்கிறது. யாரையாவது காதலிக்கும் முன் வியர்வை நாற்றம் போக்க நீ ஏதாவது ஒரு மருந்து சாப்பிட்டுக் கொள்.’

நீங்கள் இவனுக்காக சிரிப்பீர்களா? அனுதாபப்படுவீர்களா? பெரிய லட்சியங்களை, உன்னதங்களைத் தேக்கி வைத்துக் கொண்டு சினிமா தயாரிப்பாளர்களின் கார் கழுவிக் கொண்டு, பெரிய நடிகனுக்குத் தலைசீவி விட்டுக் கொண்டு, நடிகைக்கு மேக்கப் போட்டு விட்டுக் கொண்டிருக்கும் எண்ணற்ற உன்னதக் கலைஞர்களின் உலகம் வேறு நண்பர்களே… அதைத் திறந்து பார்க்கிற சாவிகள் வலிமையானவை, கிடைப்பதற்கரியவை.

ஏழு கடல் தாண்டி, ஏழு மலை தாண்டி, மந்திரவாதியின் கழுத்தில் தொங்கக்கூடியவை. திலீப்குமாரின் பயணம் ஏழு கடல் தாண்டி, ஏழு மலை தாண்டி போய் சாவி எடுத்து வந்து அவ்வுலகக் கதவை திறந்து விட்டுத் தன் சக மனிதனுக்குக் காட்டுகிறது. அவ்வுலகம் நமக்கு உன்னதமாகவோ, உருப்படியற்றோ, கசப்பானதாகவோ, வாழ்வின் மொத்த சாரத்தையும் உறிஞ்சி விடக்கூடியதாகவோ இருக்கலாம். அது அவரவருக்கு இந்த வாழ்வு தந்திருக்கும் பிச்சைகளைப் பொறுத்தது.

15. Rumi article – அன்புடன் | Grupos de Google:

தமிழில் மொழிபெயர்ப்புக் கவிதைகள் – நாகூர் ரூமி

உதயன் வாஜ்பாயின் 16 ஹிந்தி கவிதைகளை திலீப்குமார் தமிழில் தந்துள்ளார் (மீட்சி, 32, 1990). காதல் கவிதைகள். நம்முடைய காதல் கவிஞர்கள் கற்றுக்கொள்ள நிறைய உள்ளது. தூய ரொமான்டிசிஸம் என்பதிலிருந்து எப்படி விடுபடுவது என்று இவை கற்றுக்கொடுக்கின்றன.

சிலிர்க்கும் அவளது தேகத்தில்
அனேக ஸ்பரிசங்களை விதைத்துச் செல்கிறான் அவன்

அந்த இருட்டின் அறைக்குள்
அவள் மெல்ல எழுந்து தேடுகிறாள்
தவறவிட்ட ஒரு காதணியை

ஹிந்தியில் என்ன வார்த்தை பயன்படுத்தப்பட்டிருந்தது என்று அறிந்துகொள்ளும் ஆவலை ஏற்படுத்தும் எளிமையான அதேசமயம் வலிமையான தமிழாக்கம். திலீப்குமாரினதைத் தவிர வேறு மொழிபெயர்ப்புகள் கிடைக்கவில்லை.

16. பிரமிட் சாய்மீரா தியேட்டர்:

“என் சினிமா கனவுகள்!” – எழுத்தாளர் ஞாநி

பத்து நிமிடங்களும் பேசிக்கொண்டே இருக்கும் கணவனாக நீல்சன். ஒரு வார்த்தையும் பேசாத மனைவி பாத்திரத்தில் ரோஹிணி. இந்த மூவரைத் தவிர மற்ற எல்லாருக்கும் – கதாசிரியர் திலீப் குமார், எடிட்டர் சிவமதி, இசையமைப்பாளர் அனில், இயக்குநராகிய நான் என எல்லாருக்கும் இது முதல் படம்.

– ஆனந்த விகடன் டிசம்பர் 26, 2007

World math and science test results

மாஸசூஸட்ஸ் கலக்கிடுச்சுபா!

Trends in International Mathematics and Science Study (TIMSS)ல் இந்தியாவை கணக்கில் சேர்த்துக்கல 😦

So-called third world countries that have a higher literacy rate than the U.S., like Costa Rica, and others that contribute a significant number of U.S. advance degreed immigrants, like India , were not part of this study; therefore, the results in terms of world competition are worse than portrayed in these charts.

அ) நான்காம் வகுப்பு கணிதம்:

  1. Hong Kong, score: 607
  2. Singapore, score: 599
  3. Taiwan, score: 576
  4. Massachusetts, US, score: 572
  5. Japan, score: 568
  6. Minnesota, US, score: 554
  7. Kazakhstan, score: 549
  8. Russia, score: 544
  9. England, score: 541
  10. Lithuania, score: 530
  11. United States, score: 529
  12. Germany, score: 525
  13. Denmark, score: 523
  14. Quebec, Canada, score: 519
  15. Australia, score: 516
  16. Ontario, Canada, score: 512

ஆ) நான்காம் வகுப்பு அறிவியல்:

  1. Singapore, score: 587
  2. Massachusetts, US, score: 571
  3. Taiwan, score: 557
  4. Hong Kong, score: 554
  5. Minnesota, US, score: 551
  6. Japan, score: 548
  7. Russia, score: 546
  8. Alberta, Canada, score: 543
  9. England, score: 542
  10. United States, score: 539
  11. British Columbia, Canada, score: 537
  12. Hungary, score: 536
  13. Ontario, Canada, score: 536
  14. Italy, score: 535
  15. Kazakhstan, score: 533
  16. Germany, score: 528
  17. Australia, score: 527

இ) எட்டாம் வகுப்பு கணிதம்:

  1. Taiwan, score: 598
  2. Korea, Rep. of, score: 597
  3. Singapore, score: 593
  4. Hong Kong, score: 572
  5. Japan, score: 570
  6. Massachusetts, US, score: 547
  7. Minnesota, US, score: 532
  8. Quebec, Canada, score: 528
  9. Ontario, Canada, score: 517
  10. Hungary, score: 517
  11. England, score: 513
  12. Russia, score: 512
  13. British Columbia, Canada, score: 509
  14. United States, score: 508
  15. Lithuania, score: 506
  16. Czech, score: 504
  17. Slovenia, score: 501
  18. Armenia, score: 499
  19. Basque Country, Spain, score: 499
  20. Australia, score: 496
  21. Sweden, score: 491

ஈ) எட்டாம் வகுப்பு அறிவியல்:

  1. Singapore, score: 567
  2. Taiwan, score: 561
  3. Massachusetts, US, score: 556
  4. Japan, score: 554
  5. Korea, Rep. of, score: 553
  6. England, score: 542
  7. Hungary, score: 539
  8. Minnesota, US, score: 539
  9. Czech, score: 539
  10. Slovenia, score: 538
  11. Hong Kong, score: 530
  12. Russia, score: 530
  13. Ontario, Canada, score: 526
  14. British Columbia, Canada, score: 526
  15. United States, score: 520
  16. Lithuania, score: 519
  17. Australia, score: 515
  18. Sweden, score: 511
  19. Quebec, Canada, score: 507

முழு விவரங்கள்:

1. Survey: Highlights From TIMSS 2007 (pdf)

2. Math Gains Reported for U.S. Students – NYTimes.com

3. U.S. Students Make Gains in Math Scores – WSJ.com

4. Mass. pupils’ math-science test scores near top internationally – The Boston Globe

5. The progress of school education in India by Geeta Gandhi Kingdon :: March 2007

இந்தியாவும் பள்ளிப்படிப்பும்: குறிப்புகள்

1. None of the South Asian countries nor China participated in the international studies of learning achievement such as the .Trends in International Mathematics and Science. Study (TIMSS 2003) in which 46 countries participated, or in the .Progress in International Reading Literacy Study. (PIRLS 2001) in which 35 countries participated.

Moreover, South Asia does not have the equivalent of the SACMEQ study, which is a regional inter-country comparative study of achievement levels in 14 African countries. However, World Bank (2006) applied the TIMSS questions to secondary school students in the Indian states of Rajasthan and Orissa, with permission of the Indian Ministry of Human Resource Development.

The findings show that international mean achievement in maths test was 52 percent for grade 8 students but the average scores of Rajasthan and Orissa students on the same test were 34 and 37 percent respectively. Similarly, the international mean of achievement was 57 percent for Grade 12 students but the corresponding scores for Indian students were 44 and 38 percent in Rajasthan and Orissa respectively.

However, the high international average percentage mark from the 46 TIMSS countries included both high and low income countries. When India did participate in international studies of learning achievement in early 1970s, the performance of Indian children was poor relative to most participating developing countries, according to the International Association for the Evaluation of Educational Achievement (IEA).

2. International comparison of achievement among school-going 14 year olds across 25 high and low-income countries, using IEA data collected in early 1970s, showed that the mean science test score of Indian students was the second lowest.

Iran was behind India by a small margin. Mean scores of students in Bolivia, Thailand, Colombia, Peru, Mexico, Brazil, Chile and Paraguay were all higher than those of Indian students; the mean score of Japanese students was twice as high as that of Indian students.

The results were similar in (own language) reading comprehension: median reading score was 26 points, Chile’s mean was 14 points, Iran’s 8 points and India’s the lowest at 5 points.

இளையராஜா பாடி இசையமைத்ததில் பிடித்தவை

ட்விட்டரில் ரோசா சொன்னதில் இருந்து:

1. உனக்கெனத்தானே இன்னேரமா
2. மெட்டி ஒலி காற்றோடு
3. தென்றல் வந்து தீண்டும் போது
4. எங்கே செல்லும் இந்த பாதை
5. தாழம்பூ தலையோடு (படம்:ஆல்பம்)

ட்விட்டரில் உ.வெங்காயம் சொன்னதில் இருந்து:

6. நிலா அது வானத்து மேல
7. காட்டுவழி போற புள்ள
8. ஜனனி, ஜனனி
9. சாமக்கேழி ஏ கூவுதம்மா
10. தரிசனம் கிடைக்காதா

ட்விட்டரில் ரோசா சொன்னதில் இருந்து:

11. உதய கீதம் பாடுவேன்
12. நான் தேடும் செவ்வந்தி பூ
13. உன் குத்தமா என் குத்தமா
14. நம்ம காட்டுல
15. பறவையே எங்கு இருக்கிறாய்.

16. ஒரு ஜீவன்
17. அறியாத வயசு
18. நிலா அது வானத்து மேலே (ரிப்பீட்டு)
19. நல்லதோர் வீணை
20. சந்தரரும் சூரியரும்

21. காதலென்பது பொதுவுடம
22. குண்டுமணி குலுங்குதடி
23. தோள்மேல தோள்மேல
24. பூ மாலையே
25. இந்தப் பூங்காற்று தாலாட்ட

26. ஒரு மஞ்சக் குருவி
27. அம்மன் கொயில் கிழக்காலே
28. என்ன பாட்டு பாட
29. கண்ணியிலே சிக்காதடி
30 கண்ணம்மா காதலெனும்

31. எங்கஊரூ பாட்டுகாரன்
32. காடெல்லாம் பிச்சிப்பூ
33. கண்மலர்களின் அழைப்பிதழ்
34. பொன்னோவியம் கண்டேனம்மா..
35. நில்..நில்..நில்.. பதில் சொல்..சொல்..சொல்.. எனை வாட்டாதே!

36. போடய்யா ஒரு கடிதாசு
37. வீட்டுக்கு வீடு வாசப்படி
38. ஆத்தாடி பாவாடை காத்தாட
39. நின்னை சரணடைந்தேன்
40. உன் குத்தமா என் குத்தமா

ட்விட்டரில் உ.வெங்காயம் சொன்னதில் இருந்து:

41. எடுத்து நான் விடவா (எஸ்.பி.பியுடன்)
42 தென்னமரத்துல தென்றலடிக்குது
43. தரிசனம் கிடைக்காதா (ரிப்பீட்டு)
44. ஆறு அது ஆழமில்ல
45. சந்தத்தில் பாடாத கவிதை

ட்விட்டரில் ரோசா சொன்னதில் இருந்து:

46. ஊரோரமா ஆத்துப்பக்கம்
47. காதல் ஓவியம்
48. அடி ஆத்தாடி
49. நேத்து ஒருத்தர ஒருத்தர பாத்தோம்
50. அந்த நிலாவத்தான்

ட்விட்டரில் உ.வெங்காயம் சொன்னதில் இருந்து:

51. செவ்வரளி தோட்டத்துல
52. புன்னகையில் மின்சாரம்
53. வெளக்கு வச்ச நேரத்துல
54. நான் தேடும் செவ்வந்திப்பூவிது (ரிப்பீட்டு)
55. தாஸ் தாஸ் சின்னப்ப

ட்விட்டரில் ரோசா சொன்னதில் இருந்து:

56. வாட வாட்டுது (சக்களத்தி)
57. சிறு பொன்மணி
58. துள்ளி எழுந்தது காற்று
59. சொர்கமே என்றாலும்
60. யாரோ யாரோ (உல்லாசம்)

61. ரசிகனே என் அருகில் வா
62. வீட்டுக்கு ஒரு மகனை
63. மலரே பேசு
64. திண்டாடுதே ரெண்டு கிளியே
65. வீணைக்கு வீணை

66. சோளம் விதைக்கையிலே
67. அம்மா எனும் வார்த்தைதான்
68. மருதாணி அரைச்சேனே
69. ஆலமரத்துக் குயிலே
70. தோட்டம் கொண்ட ராசாவே

71. தாலாட்டு மாறிப்போனதோ
72. ஒரு கணம் ஒரு யுகமாக
73. ஏப்ரல் மேயில
74. எம்பாட்டு எம்பாட்டு.(பூமணி)
75. தென்பாண்டி சீமையிலே

76. மைனா மைனா மாமன் புடிச்ச
77. இந்த மான் உன் சொந்த
78. சின்னமணிக்காக சேத்துவச்சேன் பாரு
79. அரிதாரத்தை பூசிக்
80.அப்பனென்றும் அம்மையென்றும் (குணா)

81. மச்சி மன்னாரு
82. திண்டாடுதே (ஆனந்தகும்மி)
83. கலயா நிஜமா (கூலி#1)
84. காதல் கசக்குதையா
85.உன்னோட உலகம் வேறு

86. என்ன பாடுவது .. பாட்டெல்லாம் எனக்கு படத்தெரியாது
87. காட்டு வழி கால் நடையா போற..(அது ஒரு கனா காலம்)
88. என்ன மறந்தாலும் (காதல் சாதி )
89. பாட்டாலே புத்தி சொன்னார்
90. தேவதை படத்தில் கவிதா கி.மூர்த்தியுடன் பாடியது

91. தென்ன மரத்துல தென்றல் அடிக்குது
92. காதல் கசக்குதய்யா
93. இந்திரன் வந்ததும்
94. கத கேளு (மை.ம.கா.ரா)

95.காட்டு வழி போற(ம.மம்ப)
96. கத போலத் தோணும், இது கதையும் இல்ல
97. சோழர் குல குந்தவை போல் – உடன்பிறப்பு
98. பாளையம் பண்ணப்புர சின்னத்தாயி பெத்த மகன் எரிய வராண்டா… ஓரம்போ, ஓரம்போ
99. கண்ணே என் கார்முகிலே

101. பொன்ன போல ஆத்தா என்னை பெத்து பொட்டா
102. ராஜா..ராஜாதி
103. எங்க ஊரு காதலை பத்தி – புதுப்பாட்டு
104. உள்ளங்கள் இன்பத்தில் ஆடட்டும் – கவரிமான்
105. அய்யா வூடு தொறந்துதான் கிடக்கு

106. மரத்த வச்சவன்
107. ஊரு உறங்கும் நேரத்தில் (கண்ணா உனை தேடுகிறேன்)
108. அந்த காண்டாமணி
109. வழி விடு வழி விடு என் தேவி வருகிறாள்


கொசுறு:

icarusprakash

  1. தாலாட்டு மாறிப்போனதே – உன்னை நான் சந்தித்தேன்
  2. ஒரு கணம் ஒரு யுகமாக – நாடோடித் தென்றல்
  3. உள்ளங்கள் இன்பத்தில் ஆடட்டும் – கவரிமான்
  4. சிறு பொன்மணி – கல்லுக்குள் ஈரம்
  5. கண்ணே என் கார்முகிலே -வா :: தங்கமான ராசா.
  6. மெட்டி மெட்டி இராகம் எங்கேயோ – மெட்டி
  7. துப்பாக்கி கையிலெடுத்து, ரெண்டு தோட்டாவு பையிலெடுத்து
  8. பொன்னோவியம், சங்கீதமாம் எங்கெங்கும் – கழுகு

kabishraj

  1. திண்டாடுதே ரெண்டு கிளியே – ஆனந்தக் கும்மி
  2. வீணைக்கு வீணை – வீரத்தாலாட்டு
  3. அம்மா என்னும் வார்த்தைதான் – தாலாட்டு கேட்குதம்மா
  4. மருதாணி அரச்சேனே – ராஜா கைய வச்சா
  5. வாடி என் கப்பக்கிழங்கே

Aravindank

  1. பொன்ன போல ஆத்தா என்னை பெத்து பொட்டா.. :: தேடி வந்த ராசா

nchokkan

  1. கத போலத் தோணும், இது கதையும் இல்ல … (வீரத் தாலாட்டு)
  2. ‘இந்திரன் வந்ததும் சந்திரன் வந்ததும் இந்த சினிமாதான்’