Tag Archives: Audio

மயில்சாமி – அஞ்சலி

முதன் முதலாக அந்த கேசட்டை கேட்டபோது “இப்படித்தானே நகைச்சுவை இருக்க வேண்டும்! சுருளிராஜனும் தேங்காய் சீனிவாசனும் உசிலை மணியும் பக்கோடா காதரும் ஏன் இப்படி பாடாய் படுத்துகிறார்கள்?” எனத் தோன்றியது.

அது “சிரிப்போ சிரிப்பு”

மயில்சாமி என்னும் மிமிக்ரி கலைஞரும் லட்சுமணன் என்பவரும் இணைந்து அன்றைய பிரபலங்களை கிண்டல் அடித்து இருப்பார்கள்.

ஆளுங்கட்சி எம்.ஜி.ஆர். எதிர்க்கட்சி கருணாநிதி. ஆன்மீகச் செம்மல் கிருபானந்த வாரியார். சூப்பர் ஸ்டார் ரஜினி – எல்லோரையும் வைத்து ரசனையாக செய்திருப்பார்.

அதில் கடி ஜோக் ஒரு வகை – அது (சுருதி) லட்சுமணன் வகை – அந்த வகை இன்றும், என்றும், எங்கும், எப்பொழுதும் கடிக்கலாம். அவற்றுக்கு ரொம்ப யோசிக்க வேண்டாம். ஆனந்த விகடனில் வெ. சீதாராமன் நகைச்சுவை மாதிரி. கொஞ்சம் பழைய நினைப்பு + நிறைய கேலி + நிச்சயம் உல்டா. ஜாலியாக இருக்கும். மனதில் நிலைக்காது. மறந்து விடும்.

ஆனால், குரல் மாற்றிப் பேசும் மைல்சாமி குரல் – அந்தந்த கதாபாத்திரமாகவே மாறிவிடும். புரட்சித் தலைவர் என்றால் அவரின் பாணி. கலைஞர் என்றால் சொற்சிலம்பம், நெடுங்கவிதை புராணம். ரஜினிக்கேற்ற டயலாக், டி ராஜேந்தருக்கு ஏற்ற எதுகை மோனை வசனம்.

குறிப்பாக, ‘நிலா அது வானத்து மேல’ பாட்டிற்கு வாரியார் சொல்லும் சொற்பொழிவு. அது எனக்கு எந்தப் பாடலை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் உயர்த்தி வைக்கலாம்; எந்தக் கருத்தையும் நைச்சியமாக விமர்சனமாக உள்ளே வைக்கலாம்; எந்தக் குப்பை சரக்கையும் நம் வசதிக்கேற்ப மாற்றலாம் – என்னும் நுட்பத்தை செய்முறையாக முதன் முறையாக விளக்குவார் மயில்சாமி.

ஸ்டாண்ட்-அப் என்கிறோம்; பகிடி என்கிறோம்; கலாய்த்தல் என்கிறோம்; டிஜே ஒருங்கிணைப்பு; விஜே வர்ணனை; சந்தானம், சிவ கார்த்திகேயன், மா.க.பா, ரோபோ சங்கர் எல்லோருக்கும் முன்னோடி.

ராஹுல் காந்தியை தங்கபாலு அவர்கள் மொழிபெயர்த்ததற்கு முன்னோடியாக இயக்குநர் விசுவும் கிஷ்மு அவர்களும் ஒரு நிகழ்ச்சியில் அன்றே செய்திருப்பார்கள். அதன் தொடர்ச்சியாக கொஞ்சம் காலம் கழித்து ஈழத்து தமிழை மொழிபெயர்ப்பவராக திரைப்படம் ஒன்றில் மயில்சாமியைப் பார்த்தேன்.

அந்த ஒலிப்பேழையை மீண்டும் மீண்டும் கேட்க வைத்தது அவர்(களின்) சாதனை. அதை சாடர்டே நைட் லைவ் போல் ஒரு இயக்கமாக மாற்றியது தற்செயல் பிறவிப்பயன். எங்காவது பாக்கியராஜையோ சந்திரசேகரையோ ஜனகராஜையோ கேட்டால் மயில்சாமி நினைவில் வருவது மெய்க்கீர்த்தி!

சொல்வனம் ஒளிவனம் மற்றும் ஒலிவனம்

வீடியோ என்பது டிக்டாக் பார்வையாளர்க்கானதாக மாறிப் போய் கொஞ்ச காலம் ஆகி விட்டது. இணையத்து நேரத்துப் படி கணக்கிட்டால், பல்லாயிரம் ஆண்டுகள் என்றுகூட சொல்லலாம்.

முப்பது நொடிகளுக்கு மேல் எதையும் ஒருமித்துப் பார்க்க மாட்டார்கள். ஒரு நிமிடத்திற்கு மேல் எதையும் கவனமாகக் கேட்க மாட்டார்கள். நித்தியானந்தா, டப்ஸ்மாஷ், ஸ்ம்யூல் என்றால் இன்னும் கொஞ்சம் பொறுமையாக இருப்பார்கள்.

இந்த காலகட்டத்தில் சொல்வனம் யூடியுப் கன்னலும் #solvanam ஸ்பாடிஃபை ஒலிப்பதிவுகளும் நவம்பர் 28, 2020 அன்று துவங்கப்பட்டன. சரஸ்வதி தியாகராஜன், அனுராதா கிருஷ்ணஸ்வாமி, வித்யா சுபாஷ், விஜயலஷ்மி, ஸ்ரீரஞ்சனி என்று பலரும் தோள் கொடுத்து முன்னெடுத்தனர்.

விளம்பரங்கள் இல்லாமல், கூகுள் ஆட்சென்ஸ் முன்னெடுப்புகள் இல்லாமல், சமூக ஊடகத்தின் தொடர்ச்சியான கவர்ச்சிகள் இல்லாமல், இன்றைய புள்ளி விவரங்கள்:

  • சந்தாதாரர்கள் – 105
  • பார்வையாளர்கள் – 4,381
  • மொத்த பார்வை நேரம் – 148.1 மணி நேரம்
  • அதிகம் பேர் பார்த்த விழியம் – எழுத்தாளர் தி.ஜானகிராமன்
  • பாட்காஸ்டிங்: ஸ்பாடிஃபை / ஆன்கர் எஃப்.எம் கேட்டவர்கள்: 4,449
  • அதிகம் பேர் கேட்ட கதை: கமல தேவியின் “அமுதம்” சிறுகதை – 3,467
  • பெரும்பாலானோர் ஒலிப்பதிவை கேட்டதில் அடுத்த இடம் பிடித்தது: கிருத்திகாவின்“மணப்பு” – 509
  • மொத்த பதிவுகள் – 195

தொடர்புள்ள பதிவு:

நவம்பர் 28, 2020ல் துவங்கினாலும் ஜூலை 18, 2021 அன்று இந்த வேகம் சூடு பிடிக்க ஆரம்பித்தது. அதற்கு ஒரே காரணம் Saraswathi Thiagarajan.

கிட்டத்தட்ட ஒரு எந்திரம் போன்ற தயாரிப்பு நேர்த்தி. ஒரு அன்னையைப் போன்ற பாசத்துடன் எழுதியவர்களுடன் உரையாடல். ஒரு தேர்ந்த தொழில்நுட்ப ஜாலகர் போல் உருவாக்க நேர்த்தி. ஒரு சம்பளத்தை எதிர்நோக்கி நம்பியிருக்கும் ஊழியர் போன்ற தினசரி தயாரிப்பு. ஒரு குழந்தையைப் போன்ற ஆர்வம். ஒரு வித்தகர் போன்ற சிரத்தையும் உருவாக்கமும் ஒருங்கிணைப்பும் #சொல்வனம் வழங்கும் ஒளிவனம் படைப்புகளை கொண்டு வந்திருக்கின்றன.

அவருக்கு என்னுடைய சிரம் கூப்பிய நன்றிகளும் வாழ்த்துகளும்.

இந்த ஒலிப்பதிவுகளில் நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள்?

  1. – பவா செல்லத்துரை போல் எளிமையான கதை சொல்லல்
  2. – நேர்காணல்கள், பேட்டிகள், சந்திப்புகள், உரையாடல்கள்
  3. – அன்றாட சம்பவங்களை ஒட்டிய பேச்சுகள், விளக்கங்கள்
  4. – சுருக்கமான, கவர்ச்சியான ஒளிவடிவங்கள்: கதைக்கான முன்னோட்டங்கள்; நாவல் சுருக்கங்கள்; இலக்கிய விமர்சனங்க்ள்
  5. – அதெல்லாம் வேஸ்ட்: இலக்கிய வம்புகள், பத்திரிகையாளரின் கிசுகிசுக்கள், அரட்டை
  6. – வாட்ஸாப், இன்ஸ்டாகிராம் ஸ்டோரி போன்ற வடிவங்கள்
  7. – என்.எஃப்.டி. கொடுத்து உரிமம் வாங்குதல்

அது சரி…

தமிழில் ஒளிப்பதிவுகள், வெப்3, மெடாவேர்ஸ் எல்லாம் எப்படி இருக்கிறது?

இசையை, ஓவியத்தை, படைப்பை உருவாக்குவோர் இடைத்தரகர் இல்லாமல் டிஜிட்டல் சேகரிப்புகளை விற்று கல்லா கட்ட ஆரம்பித்து விட்டார்களா?

தொடர்புள்ள செய்திகள்

Spotify draws up plans to join NFT digital collectibles craze: Job ads fuel excitement in crypto and music industries over potential of NFTs to boost artists’ earnings

https://www.ft.com/content/9e77bf41-5814-4c18-96f6-f800f6b41216

Spotify is drawing up plans to add blockchain technology and non-fungible tokens to its streaming service, fuelling excitement in the crypto and music industries about the potential of NFTs to boost artists’ earnings.

Facebook founder Mark Zuckerberg confirmed a Financial Times report earlier this year that Instagram would soon start to support NFTs. Other social media companies, including Twitter and Reddit, are also working to build new features for displaying or trading NFTs. Highlight text NFTs use blockchain technology to certify ownership of digital assets. The vast majority of the $17.7bn worth of NFTs traded last year were for visual artworks, games and collectibles,

Chennai and Crypto art

https://www.thehindu.com/sci-tech/technology/internet/nft-madras-week-madras-musings-event-krish-ashok-twobadour-laya-mathikshara/article36135468.ece

“We are amidst a renaissance — the crypto space is a convergence of technology, financial instruments that is driven by culture for the first time,” said Venkateswaran. “The Bitcoin, Altcoin, ICO boom and bust, etc, were driven by financial instruments, whereas NFTs are fed by culture. Now, there is a place for artists and musicians like us, which is why the work created here becomes valuable. You don’t see a lot of traditional art buyers – people who buy crypto art get the concept and are bankrolling the renaissance,” he added at the event organised by Madras Musings .

Mathikshara, who sold her first NFT in May for 0.39 ETH (approximately ₹90,500) on the platform Foundation, sees art as something you collect without any financial benefit. The conversation that explored everything from bitcoins and crypto art to digital tools and the ever expanding metaverse, also addressed the future of art galleries. “An NFT is a digital certificate of ownership of an asset — art, virtual land, wearable, etc. Unlike any other certificate, it cannot be destroyed and it completely does away with the middleman. We don’t need to depend on art galleries or curators now,” explained Twobadour, adding how NFTs are the most useful way to get into crypto space.

Vijay & Anushka in Vettiakkaaran: Karikalan Kaala Pola

கரிகாலன் கால போல கறுத்திருக்குது குழலு
குழல் இல்ல குழல் இல்ல தாஜ்மகால் நிழலு

சேவலோட கொண்டை போல செவந்திருக்குது உதடு
உதடு இல்ல உதடு இல்ல மந்திருச்ச தகடு

ஏய் பருத்தி பூவ போல பதியுது உன் பாதம்
பாதம் இல்ல பாதம் இல்ல பச்சரிசி சாதம்

ஏய் வலம்புரி சங்க போல வழுக்குது உன் கழுத்து
கழுத்து இல்ல கழுத்து இல்ல கண்ணதாசன் எழுத்து

ஏய் பாதை வளைவு போல உள்ளதடி மூக்கு
மூக்கு இல்ல மூக்கு இல்ல முந்திரி முந்திரி கேக்

ஊதி வச்ச பலூன் போல உப்பிருக்கு கண்ணம்
கண்ணம் இல்ல கண்ணம் இல்ல வெள்ளி வெள்ளி கிண்ணம்

மருதாணி கோலம் போட்டு மயக்குது தேகம்
தேகம் இல்ல தேகம் இல்ல தீ புடிச்ச மேகம்

மாராப்பு பந்தலிலே மறச்சி வெச்ச சோலை
சோலை இல்ல சோலை இல்ல ஜல்லிக்கட்டு காளை

கரிகாலன் கால போல கறுத்திருக்குது குழலு

கண்ட உடன் வெட்டுதடி கத்திரிக்கோலு கண்ணு
கண்ணு இல்ல கண்ணு இல்ல கிறங்கடிக்கிற ஜீன்னு

பத்த வெச்ச மத்தாப்பு போல மினுமினுக்குது பல்லு
பல்லு இல்ல பல்லு இல்ல பதிச்ச வைர கல்லு

சுறுக்கு பைய போல இருக்கு இடுப்பு
இடுப்புல இடுப்பு இல்ல எந்திர மடிப்பு

கண்ணு பட போகுதுன்னு கண்ணத்துல மச்சம்
மச்சம் இல்ல மச்சம் இல்ல நீ விட்டு வச்ச மிச்சம்

Vijay’s Vettaikaaran: Nan Adicha Thanga mata

நான் அடிச்சா தாங்க மாட்ட
நாலு மாசம் தூங்க மாட்ட
மோதி பாரு வீடு போய் சேர மாட்ட

நான் புடிச்சா உடும்புப் புடி
நான் சிரிச்சா வான வெடி
நான் பாடும் பாட்டுக்கு தோள் பறை நீ

ஏய் வாழு வாழு வாழ விடு
வாழும் போதே வானைத் தொடு

வம்பு பண்ணா வாளை எடு
வணங்கி நின்னா தோளைக் கூடு

உணவு உடை இருப்பிடம்
உழவனுக்கும் கிடைக்கணும்
அவன் அனுபவிச்ச மிச்சம் தான் ஆண்டவனுக்கு படைக்கணும்

ஆலமர பள்ளிக்கூடம் ஆக்ஸ்போர்டா மாறனும்
நீ தாய் மொழியில் கல்வி கற்று தமிழ்நாட்டை உயர்த்தனும்

வாய் மூடி வாழாதே
வீண் பேச்சு பேசாதே

காலம் கடந்து போச்சுதுன்னு கவலை பட்டு ஏங்காதே
கனவு ஜெயிக்க வேணுமுனா கண்ணை மூடி தூங்காதே

குத்துங்கடா குத்து என் கூட சேர்ந்து குத்து

வரட்டி தட்டும் செவத்துல வேட்பாளர் முகமடா
காத்திருந்து ஓட்டு போட்டு கறுத்து போச்சு நகமடா

புள்ள தூங்குது இடுப்புல
பூனை தூங்குது அடுப்புல
நம்ம நாட்டு நடப்புல யாரும் இத தடுக்கல

தாய் பேச்சை மீறாதே
தீயோர் சொல் கேட்காதே

ஏதோ நானும் சொல்லிப்புட்டேன்
ஏத்துக்கிட்டா ஏத்துக்கோ
சொன்னதெல்லாம் உண்மையினா உன்ன நீயே மாத்திக்கோ

En Uchi Mandaila: விஜய் & அனுஷ்கா – வேட்டைக்காரன்

என் உச்சி மண்டையில சுர்ங்குது
உன்ன நான் பாக்கையில கிர்ங்குது
கிட்ட நீ வந்தாலே விர்ங்குது
டர்ங்குது
டர்ர்ர்ர்ர்ர்ர்

கை தொடும் தூரம் காச்சவளே
சக்கரையால செஞ்சவளே
என் பசி தீர்க்க வந்தவளே
சுந்தரியே

தாவணி தாண்டி பாத்தவனே
கண்ணால என்ன சாச்சவனே
ராத்திரி தூக்கம் கெடுத்தவனே
சந்திரனே

என் உச்சி மண்டையில சுர்ருங்குது
உன்ன நான் பாக்கையில கிர்ருங்குது
கிட்ட நீ வந்தாலே விர்ருங்குது
டர்ருங்குது
டர்ர்ர்ர்ர்ர்ர்ரு

மீயா மீயா பூனை
நான் மீசை வச்ச யானை
கள்ளு கடை பானை
நீ மயக்குற மச்சான

வில்லு கட்ட மீசை
என் மேல பட்டு கூச
ஆட்டுக்குட்டி ஆசை
உன் கிட்ட வந்து பேச

மந்திரக்காரி மாய மந்திரக்காரி
காகிதமா நீ இருந்தா
பேனா போல நான் இருப்பேன்
ஒவியமா உன் உருவம் வரைஞ்சிடுவனே

உள்ளங்கையா நீ இருந்தா
ரேகையாக நான் இருப்பேன்
ஆயிலுக்கும் உன் கூட இணைஞ்சிருப்பனே

என்னுச்சி மண்டையில் சுர்ர்ர்ர்ர்ர்ர்
உன்னை நான் பார்க்கையில கிர்ர்ர்ர்ர்ர்
கிட்ட நீ வந்தால் விர்ர்ர்ர்ர்ர்
டர்ர்ர்ர்ர்ர்ர்

அஞ்சு மணி பஸ்
நான் அதை உட்டா மிஸ்
நான் ஆத்தா வுட்ட புஸ்
ஒரே ஒரு கிஸ்
நீ ஒத்துக்கிட்டா யெஸ்

கம்மாங்கரை காடு
நீ சுட்ட கருவாடு
பந்திய நீ போடு
நான் வாரேன் பசியோடு

மந்திரக்காரா மாய மந்திரக்காரா
ஏய் அப்பாவியா மூஞ்சிய வெச்சு
அங்க இங்க கைய வச்சு
நீயும் என்னை பிச்சு தின்ன கேக்கரியேடா

துப்பாக்கியா மூக்கை வச்சு
தோட்டா போல மூச்ச விட்டு
நீய்ம் என்னை சுட்டு தள்ள பாக்கரியேடி

Puli Urumudhu: Vijay’s Vettai Kaaran

புலி உறுமுது புலி உறுமுது
இடி இடிக்குது இடி இடிக்குது

கொடி பறக்குது கொடி பறக்குது
வேட்டக்காரன் வரதப் பாத்து

கொல நடுங்குது குல நடுங்குது
துடிதுடிக்குது துடிதுடிக்குது

நில குலையுது நெல குலையுது
வேட்டைக்காரன் வரதைப் பார்த்து

பட்ட கத்தி பளபளக்க
பட்டி தொட்டி கலகலக்க

பறந்து வரான் வேட்டைக்காரன்
பாமரனின் கூட்டுக்காரன்

நிக்காம ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு
ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு

வரான் பாரு வேட்டைக்காரன்

யார் இவன் யார் இவன் யாரிவன்
அந்த அய்யனார் ஆயுதம் போல் கூர் இவன்

இருபது நகங்களும் கழுகுடா
இவன் இருப்பதே உலகுக்கு அழகுடா

அடங்க மறுத்தா உன்ன அழிச்சிடுவான்
இவன் தமிழதான் மொண்டு தினம் குளிச்சிடுவான்

இவனோட நியாயம் தனி நியாயம்
அட இவனால அடங்கும் அநியாயம்

போடு அடியப்போடு போடு அடிய போடு
டக்கரு டங்கரு டக்கரு டக்கர்னா
போடு டக்கரு டங்கரு டக்கரு டக்கர் னா

யார் இவன் யார் இவன் யார் இவன்
ஒத்தையாக நடந்து வரும் ஊர் இவன்

சினத்துக்கு திறந்திட்ட சிவனடா
அட இவனுக்கு இணை இங்கு எவனடா

இவனுக்கு இல்லடா கடிவாளம்
இவன் வரலாற்ற மாற்றிடும் வருங்காலம்

திரும்பும் திசையெல்லாம் இவன் இருப்பான்
இவன் திமிறுக்கு முன்னால எவன் இருப்பான்

போடு அடிய போடு போடு அடிய போடு

ஸ்ருதிஹாசன் இசை: உன்னைப் போல் ஒருவன்: ஒலி அனுபவம்

முந்தைய பதிவுகள்:

1. Unnai Pol Oruvan: Music Reviews: Twitter, Tamil Blogs

2. உன்னைப் போல் ஒருவன் :: முன்னோட்டம்
Unnai-Pol-Oruvan-Covers-Wrappers-CD-Music-Listing
முதலிலேயே சொல்லி விடுகிறேன். இந்த விமர்சனம் எழுதுவதற்கு மூன்று காரணம்.

  1. வாரிசு: இரா முருகனோ மனுஷ்யபுத்திரனோ இன்னாரின் மகன் என்பதால் வசனம் எழுதும் வாய்ப்பையோ, தயாரிப்பாளரின் வழித்தோன்றல் என்பதால் பாடலை கவிதையாக்கும் இடத்தையோ அடையவில்லை. கார்த்திக்ராஜாவால் கூட முடியலியே!
  2. சுரேஷ் கண்ணன்: ரகுமானின் ‘ரோஜா’ திரைப்படத்தின் பாடல்களை கேட்ட போது எனக்குள் எழுந்த அதே மாதிரியான ஒரு புத்துணர்ச்சியான இசையைக் கேட்கும் உணர்வு இந்த ஆல்பத்தைக் கேட்கும் போது எனக்குள் எழுந்தது. அப்படியா 😯
  3. முதன்முதலாக: ஹிந்தியில் நாயகி வேடம். தமிழ் & தெலுங்கில் இசையமைப்பாளர் என்று அறிமுகமாகும் சுருதிஹாசனுக்கு வரவேற்பு.

Recession காரணமா என்று தெரியல. இந்த ஆல்பம் மனநிலையை சோகமுறச் செய்கிறது. இளையராஜாவிற்குப் பிறகு ஏ ஆர் ரெஹ்மானின் மலரோடு மலரின்று மரித்தாளும் (அல்லது மலரோடு மலரிங்கு மகிழ்ந்தாளும் போது – மணி ரத்னத்தின் மும்பை) போன்றவற்றிற்கு பிறகு நெகிழ்ச்சியுற மட்டும் வைக்காமல், யூத்துக்குப் பிடித்த புத்திசையாக வந்திருக்கிறது.

டைட்டில் சாங்கான ‘உன்னைப் போல் ஒருவன்’ எல்லாம் இசைத்தட்டு கொண்டு நல்ல 50,000 டாலர் ஸ்பீக்கர்+ஆம்ப் சங்கதி கொண்ட சவுண்ட்ப்ரூஃப் வீட்டில் கேட்கவேண்டும். கணினியில் மின்னஞ்சலுக்கு ஒரு காது, காதில் கேட்கும் கமல் குரலுக்கு இன்னொரு காது என்பது ஆகாது. ஆனால், அப்படிக் கேட்டால் போரடிக்கிறது.

சோறு தின்ற பிறகு ஊக்கமுற கடைசியாக ரிப்பீட்டில் ஓட்டியது ‘ஜெகடம் ஜெகடம் ஜெகடம் ஜெகட ஜெகட ஜெகட ஜெகடம்’. நாடோடிகள் அலுத்த பிறகு கமலின் ‘அல்லா ஜானே’ இப்போது கை கொடுக்கிறார். அதுவும் பாடலின் இறுதில் ஓலமிட்டு அழும் குரல்களின் சங்கமிப்பில், புரியாத ஸ்பெக்கை நாலு முறை திட்டிக் கொண்டே, உரத்தப் படித்தால் மண்டையில் ஏறுவது சிறப்பம்சம். மொத்தத்தில் எது #1 என்றால், அது கமல்தான்.

கம்பேர் செய்தே பழக்கமாகியதால் பெண்குரலில் வரும் அல்லா ஜானே காதிலேயே விழமாட்டேங்குது. இருவத்திமூன்று முறை முழுக்க பாடியதாக playcount சொன்னாலும் விண்டோஸ் மீடியா ப்ளேயர் பழுதோ என்று யோசிக்க வைக்கிறது.

வரிகள் எல்லாம் தனித்து, துருத்தி நிற்காதவாறு இசை மேலோங்கியிருப்பது மேற்கத்திய நாகரிகம். சொல்லப் போனால், பாதி (என்பது பொய்; அனைத்து ஆங்கில) பாப் பாடல்களிலும் கவிதையை இதுகாறும் நான் கவனித்ததில்லை. ஷநாயா ட்வெயினோலானிஸ் மாரிசட்டோ… என்ன மாதிரி ஆடை போட்டிருக்கிறார், ஒரே வரியே மீண்டும் மீண்டும் திரும்ப திரும்ப வருகிறதா என்பது மட்டுமே என் லட்சியம். இந்த டெக்னிக்கை ஓரளவு விஜய் ஆன்டனி செய்து வருகிறார். அவர் வாழ்க.

மும்பை (இல்லே… பாம்பே) ஜெயஸ்ரீ அனைத்துப் பாடல்களும் ஒரே மாதிரி பாடுகிறார் என்று குற்றம் சொல்லும் தொனியில் சில ‘உன்னைப் போல் ஒருவன்’ திரையிசை விமர்சனம் படித்தேன். அதே போல், கமல்ஹாஸன், நாகூர் ஹனீஃபா மாதிரி தேவையின்றி குரல் மாற்றிப் பாடியிருக்கிறார் என்று ‘ஏன் இந்த வீண் ஆசை? எவ்வாறு இன்னொரு ஸ்டைலில் போடலாம்?’ என்னும் வேறு இசை ரிவ்யூக்களும் கண்ணில் பட்டது.

ஒரே மாதிரி பாடுவது ரொம்ப சிரமம். இப்போ சம்பந்தமில்லாம உவமை போட்டுக்கலாம். டென்டுல்கர் அதே சென்சுரியத்தான் ஒவ்வொரு தடவையும் அடிக்கிறார். அதற்காக, போன சதம் மாதிரியே எதற்கு மீண்டும் சதம்? இந்த வாட்டி திலீப் தோஷி மாதிரி சூனியம் போடுங்க என்றா சொல்ல முடியும்?

டூயட் இல்லை. ஆதவனின் ‘டமக்கு தமக்கு’, நினைத்தாலே இனிக்கும் ‘அல்லா’, கண்டேன் காதலை ‘சுத்துது சுத்துது’ போன்ற குத்து கூட மிஸ்ஸிங். ஆனால், ராப் உண்டு. சுருதியை ‘வானம் எல்லை என்பது இன்று இல்லை’ இனிமையை நினைத்து மகிழ, ப்ளேஸி நடுவே புகுந்து கலாய்க்கிறார்.

அந்தக் காலத்தில் பாடல் திருடு போயிடுமோ என்று பயந்து குருகுக போன்ற முத்திரைப் பெயர்களை உள்ளே போட்டு பாடல் எழுதினார்கள். ப்லேசியும் அந்தப் பாரம்பரியத்தில் நாலு வார்த்தையில் மூன்று வார்த்தை தன் பெயர்ச்சொல்லை ஏற்ற இறக்கமில்லாமல் உச்சரித்து நிலை நாட்டுகிறார். வேண்டிய பாடலை மட்டும் தரவிறக்குவது வசதி. வேண்டிய பாட்டில் வேண்டாத இடங்களை எடிட் செய்யும் வசதியும் நாளடைவில் சுளுவானால் அதை விட வசதி.

ப்ளேசியைக் கேட்பதற்கு மனத்தடை உள்ளவர்களுக்காக பம்பாய் ஜெயஸ்ரீயுடன் கமல். ‘நிலை வருமா’ ரொம்ப நாளுக்கு டிஸ்டர்ப் செய்யக்கூடியது. எது என்றும் இனியது என்றால், அது இதுதான்.

சாரு நிவேதிதாவின் ‘ராஸ லீலா‘வை விமர்சிக்க வேண்டுமென்றால் கூட காசு கொடுத்து புத்தகம் வாங்கித்தான் குப்பை என்றோ, புரியலை பட்டயமோ தரவேண்டும் என்பது திண்ணம். அப்படியிருக்க ஓரளவு மீண்டும் மீண்டும் கேட்கக் கூடிய பாடல் கொடுத்தவருக்கு பாராட்டுகள் மட்டுமே சொல்லி செல்ல வேண்டும்.

தொடர்புடைய பதிவு: Song of the Day: allah jaanE from unnai pol oruvan.

Unnai Pol Oruvan: Music Reviews: Twitter, Tamil Blogs

முந்தைய பதிவு: Kamal’s ‘உன்னைப் போல் ஒருவன்’: Preview « Snap Judgment

  • donion: Shruti Haasan is a great environmentalist; heavy reuse and recycling in songs of unnai pOl oruvanView Tweet
  • milliblog: Shruti’s music is amateurish, while masquerading as polished. Milliblog music review of Unnaipol Oruvan: http://j.mp/k2T9
  • orupakkam: உன்னைப் போல் ஒருவன் இசை – Didnt fail. Kamal & Bombay Jayshree’s number is the pick of the lot. இது ஒரு குடும்ப இசை ஆல்பம் 🙂View Tweet
  • ursmusically: As a composer, Shruthi Haasan makes quite a promising debut in ‘Unnai Pol Oruvan’. She has tried something diff in limited space.View Tweet

writercsk:

  1. shruthi has that spark..about 14 hours ago from web
  2. unnai pol oruvan – nilai varuma song is good..about 14 hours ago from web
viswaa88: Unnai Pol Oruvan songs literally rocking!!! \m/View Tweet
chanduji: UNNAI POL ORUVAN – songs not so great for the first hearing! may be will get used to it soon!!!View Tweet
girsubra: Allah Jaane .. from the album-Unnai pol Oruvan is awesome.I think ,kamal Hassan -the singer doesnt always get the credit he deservesView Tweet
graja: Hearing song Nilai varuma sung by kamal & bombay jayasree from #Unnai pol oruvan… Music by Shruthi hassan— Nice #MelodyView Tweet

Vanthiyathevan: என் உளறல்கள்: Exclusive : உன்னைப்போல் ஒருவன் இசை விமர்சனம்

Suresh Kannan: பிச்சைப்பாத்திரம்: உன்னைப் போல் ஒருவன் இசைப் பாடல்கள் – ஒரு பார்வை..

Mugil: கமலஹாசனின் குடும்பப் பாடல்!

டக்ளஸ் :: உன்னைப்போல் ஒருவன்- பாடல்கள் ♠ ராஜு ♠

  • srikanthvaradan: Shruti hasan has done a neat job in unnai pol oruvan…. pick of the album is Nilai varuma…. sung by kamal and bombay jayashree… —  View Tweet
  • dvimal24: Unnai Pol Oruvan” songs are really good – seems to be a promising entry for Shruthi Hasaan!!!View Tweet
  • boo3dmax: unnai pol oruvan – not very bad; raghav identity – seems good #musicView Tweet
  • ramnaganat: Heard Unnai pol oruvan songs…not good…but heard most of these songs will not be in the movie…this one’s good…View Tweet
  • ram_zone: Unnai Pol Oruvan – My Pick, Nilai Varuma…View Tweet
svgan_in: Sorry. I dont like Unnaipol oruvan‘s music 😦View Tweet
rahultwitz: Gud peppy numbers from Shurti Hassan..Unnaipol Oruvan!!.hope she wud turn sth big..View Tweet
sridharv86: Not impressed with ‘Unnaipol Oruvan‘. Except for a couple of songs.View Tweet
ajaybharathi: I don find the music for “Unai pol Oruvan” that impressiveView Tweet
RinjuRajan: a day of surprises! 🙂 unnaipol oruvan music rocks!View Tweet
charanftp3: Giving the composing job to Shruti was indeed a big move,but she makes a terrible mess of the Unnaipol Oruvan soundtrack-Disappointing!View Tweet
shrinivassg: Unnaipol Oruvan Audio .. Very disappointing stuff !View Tweet
  • Listened to Unnaipol Oruvan atleast 10 times.. Listen to the album with open mind and the songs are apt for the plot very intriguing lyricsView Tweet
  • Kamal’s rational taught all over the unnaipol oruvan lyrics listened to all the songs atleast 10 times good stuffView Tweet

கந்தசாமி: பாடல்

Related Song Lyrics from Kandhasamy: Kandasamy: Ithellaam Dooppu; Kanthasamythaan Taappu

மியாவ் மியாவ் பூனை
அட…
மீசை இல்லா பூனை
திருடித் திங்கப் பார்க்கறியே
திம்சுக்கட்ட மீனை?

Araleya-Cats-Dogs-Lick-Flickr-Images-Cleanமில்க்கை தேடும் பூனை
சீ…போ‘ன்னு விரட்ட மாட்டேன்
உங்கப்பா மேல ஆணை!

1. நம் இதயம் ஒண்ணு
2. நம் உடல்தான் ரெண்டு
3. நாம் ஒண்ணா சேர்ந்தா ஆவோம் மூணு

1. உன் பார்வை ஒண்ணு
2. அதில் அர்த்தம் இரண்டு
3. அது சொல்லத் தூண்டும் வார்த்தை மூணு

~oOo~

வேகத்துக்கு நான் பழசு
வெட்கத்துக்கு நான் புதுசு

மோதலுக்கு நான் பழசு
காதலுக்கு நான் புதுசு

1. நம் மெத்தை ஒண்ணு
2. அதில் தூக்கம் ரெண்டு
3. அதில் நித்தம் வேணும் யுத்தம் மூணு

1. உன் இடுப்பு ஒண்ணு
2. அதில் உடுப்பு ரெண்டு
3. அதில் வேணும் கடிச்ச தடிப்பு மூனு

~oOo~

கூச்சத்துக்கு லீவு கொடு
தேகத்துக்கு நோவு கொடு

ஆடைகளை தூர விடு
ஆசைகளை சேர விடு

1. நம் முத்தம் ஒண்ணு
2. அதில் எச்சில் ரெண்டு
3. அந்த போதையில் மறக்கும் காலம் மூன்று

1. உன் மேனி ஒண்ணு
2. அதில் தேனீ ரெண்டு
3. கொட்டும் நானே ஹனி மூணு


இந்தப் பாட்டை மாற. உல்டாப்பா குழந்தைகளுக்கு பாடினால்:

vivetmart_Flickr-Yokviv_Photos-Cats-Dogs-Bulldogலொள் லொள் நாய்
அட…
லொடக்கு இல்லா நாய்
காவல் காக்க நிக்கறியே
காலங்கார்த்தால டோய்

எலும்பைத் தேடும் நாய்
சீ…போ‘ன்னு விரட்ட மாட்டேன்
ஓநாய் மேல பொய்!

1. நம் மூக்கு ஒண்ணு
2. நம் மோப்பம்தான் ரெண்டு
3. நாம் ஒண்ணா சேர்ந்தா பிடிப்போம் தாணு

1. உன் முகரை ஒண்ணு
2. அதில் கண்ணு இரண்டு
3. அது கவனிக்காட்டா ஆகும் காலு மூணு

~oOo~

திட்டலுக்கு நான் பழசு
இலக்கியத்துக்கு நான் புதுசு

பொட்டைக்கு நான் பழசு
கொட்டைக்கு நான் புதுசு

1. நம் வண்ணம் ஒண்ணு
2. அதில் காந்தல் ரெண்டு
3. அதில் நித்தம் வேணும் முகப்பூச்சு மூனு

1. உன் வாலு ஒண்ணு
2. அதில் கருத்து ரெண்டு
3. அதில் பேப்பர் போட்டா அர்த்தம் ஆகும் மூன்று

~oOo~

ரேபிஸுக்கு லீவு கொடு
ரேப்பிஸ்ட்டுக்கு நோவு கொடு

போகரை தூர விடு
சேகரோடு சேர விடு

1. நான் வளர்ப்பது ஒண்ணு
2. அதில் லாபம் ரெண்டு
3. பசிச்சா வாய்க்குள் பறந்துபோகும் காணு

1. உன் மேனி ஒண்ணு
2. அதில் சேஷ்டை ரெண்டு
3. கொட்டும் பேஷ்டை மூணு

~oOo~

Kandasamy: Ithellaam Dooppu; Kanthasamythaan Taappu

நன்றி: விவசாயி

கூழு, சுண்டலு, வேர்கடலை, வத்தகறி, வடுமாங்கா, சுண்ட கஞ்சி,சுட்ட வாழை, மக்காச்சோளம், நீர்மோரு, பேட்டரித்தண்ணி, இளநீ, இராத்தொக்கு, உப்புகண்டம், பழைய சோறு, டிகிரி காப்பி, இஞ்சி மரப்பா, கடலை முட்டாய், கமர்கட்டு, வெள்ளரிக்காய், எளந்தப்பழம், குச்சி ஐசு, கோலி சோடா, முறுக்கு, பஞ்சு முட்டாய், கரும்பு சாறு, மொளகா பஜ்ஜி, எள்ளு வடை, பொரி உருண்டை, ஜிகிருதண்டா, ஜீராத் தண்ணி, ஜவ்வு மிட்டாய், கீர வடை, கிர்ணிபழம், அவிச்ச முட்டை, ஆஃபாயில்,பள்ளிமுட்டாய், பப்பாளி, பொகையில, போதைபாக்கு, புண்ணாக்கு..

இதெல்லாம் டூப்பு, பிட்சாதான் டாப்பு ஏஏஏ
இதெல்லாம் டூப்பு, பிட்சாதான் டாப்பு

அண்ணன், அண்ணி, நாத்தனாரு, மாமியாரு, மாமனாரு, ஓரகத்தி, சக்காளத்தி, தம்பிகாரன், தங்கச்சி, சித்தப்பன், பெரியப்பன், பாட்டன், முப்பாட்டன், பேத்தி, கொள்ளுப்பேத்தி, பேரன், கொள்ளுப்பேரன், பொண்டாட்டி, வெப்பாட்டி, நல்ல புருசன், கள்ளப்புருசன், மச்சினிச்சி, மாமனாரு, கொழுந்தனாரு,கொழுந்தியா, மூதாரு, பாட்டி, போட்டி, அக்காப்பொண்ணு, அத்தைப் பொண்ணு, காதலன், காதலி, டாவு, டைம்பாஸு, தாய்மாமன், பங்காளி, தம்பிபுள்ள, தத்துபுள்ள, சகல,சம்பந்தி, முறை மாமன், முறைப் பொண்ணு, தலைச்சன் புள்ளை, இளைய புள்ளை,மூத்த தாரம், இளையதாரம், தொடுப்பு, ஒன்னு விட்டது, ரெண்டு விட்டது, ரத்த சொந்தம், மத்த சொந்தம், ஜாதிக்காரன், பொண்ணு எடுத்தவன், பொண்ணு தந்தவன்…

இதெல்லாம் டூப்பு, நண்பந்தான் டாப்பு.. ஏஏஏ
இதெல்லாம் டூப்பு, நண்பந்தான் டாப்பு

சோகம், அழுகை, சோம்பல், காதல் தோல்வி, கடுப்பு, எக்ஸாம் பெயிலியர், எரிச்சல், வெறுப்பு, வேதனை, கோபம், பிரிவு, நஷ்டம், பட படப்பு,பழிவாங்கல், பாவம், போட்டுக்கொடுத்தல், பொறாமை, கிண்டலு, எளப்பம், எச்ச புத்தி, இறுமாப்பு, சகுனி வேலை, சதிச்செயல் ,கோல்மூட்டல், குறுக்குப்புத்தி, ஒட்டுக்கேட்டல், ஓரவஞ்சனை, பொய், புளுகுமூட்டை, டகுல் வேலை, டப்பாங்குத்து, அரக்கத்தனம், பீலா, பில்டப்பு, பிசாத்து,கொள்ளிக்கண்ணு, குசும்பு, சின்னத்தனம், சிண்டுமுடி, அல்லக்கை, அல்பம், டேருமாரு, டிமிக்கி, ஊள உதார், ஒப்பாரி, ஜால்ரா, ஜக்கடித்தல்,திருட்டுத்தனம், தில்லுமுல்லு, சண்டித்தனம்..

இதெல்லாம் டூப்பு, ஜாலிதான் டாப்பு.. ஏஏஏ
இதெல்லாம் டூப்பு, ஜாலிதான் டாப்பு

குப்புசாமி, கோவிந்தசாமி, முன்சாமி, முத்துசாமி, கிருஷ்ணசாமி, மாடசாமி, மயில்சாமி, வேலுசாமி, வீராசாமி, கண்ணுசாமி, கருப்பசாமி, மலைச்சாமி, பழனிசாமி, குருசாமி, கோட்டசாமி, சின்னசாமி, பெரியசாமி, ஆறுசாமி, அழகுசாமி, அப்பாசாமி, கொண்டசாமி, வேட்டசாமி, வெங்கடசாமி, தங்கசாமி, பெருமாள்சாமி, நாரயணசாமி, சிவசாமி, சீனுசாமி, சடையசாமி, சந்திராசாமி, வெள்ளசாமி, குயில்சாமி, குமாரசாமி, கோதண்டசாமி, அங்குசாமி, துரைசாமி, பொன்னுசாமி, அய்யாசாமி, அண்ணசாமி, நல்ல சாமி..

இதெல்லாம் டூப்பு, கந்தசாமி டாப்பு.. ஏஏஏ
இதெல்லாம் டூப்பு, கந்தசாமிதான் டாப்பு