Monthly Archives: நவம்பர் 2004

சுவடுகள் – விகடன்.காம்

ஒன்றுமறியா இருளாம் உள்ளம் படைத்தஎனக்கு

என்று கதிவருவது? எந்தாய் பராபரமே!

~ தாயுமானவர்

இது மட்டும் (நன்றி : தினமணி)



ஜூனியர் வி.: திரையுலகத்தினர் நடத்திய விழா மேடையில், ‘வீரப்பன் பற்றி எனக்கு நன்கு தெரியும்’ என்றும் சொல்லியிருக்கிறார். வீரப்பன் ஒரு பயங்கரமான குற்றவாளி, நூற்றுக்கணக்கான கொலைகளைச் செய்தவன். சந்தன மரம், யானைத் தந்தங்களைக் கடத்தியவன். அந்தக் குற்றவாளி பற்றி தனக்குத் தெரிந்தும் அரசுக்குத் தெரிவிக்காமல் மறைத்ததுகூட மிகப் பெரிய குற்றம்தான். அப்படி தெரிந்துவைத்திருந்தால், அவனைப் பிடித்துக் கொடுத்திருக்க வேண்டும். இந்த விஷயங்களை மறைத்ததற்காக அந்த நடிகரை தண்டிக்கலாம். முன்பு என் தலைவர் கலைஞர், அந்த நடிகரை பெருந்தன்மையாக மன்னித்துவிட்டார்” என்றார் சரத்.



நெடுங்குருதி‘ குறித்து எஸ். ராமகிருஷ்ணன்:

‘‘ஒவ்வொரு ஊருக்கும் ஒரு நாக்கு இருக்கிறது போலும். அது தன்னோடு வாழ்ந்தவர்களை ஒரு குறிப்பிட்ட காலத்தின் பின்பாக ஏதோ காரணம் காட்டி வெளியேற்றி விடுகிறது. அவர்களும் எங்கோ தொலைவில் ஊரை மறந்து வாழத் துவங்கியதும் சட்டென அவர்கள் மீது விருப்பம் கொண்டது போல ஊர் திரும்பவும் தன் நாவால் அவர்களைத் தன்னிடம் இழுத்துக்கொள்கிறது. ஒவ்வொரு மனிதனும் தன் உணவில், பேச்சில், செய்கைகளில், நினைவுகளில் தன் ஊரைக் கொண்டிருக்கிறான்.

ஒரு கொய்யாப்பழத்தைச் சாப்பிடும்போது அது விளைந்த மண்ணின், நீரின் ருசியையும் சேர்த்துதான் சாப்பிடுகிறோம். ஆனால், அதை தனித்து அறிவதில்லை. எனில் ஒரு ஊர் அங்கிருக்கும் காய்களில், கனிகளில், வீடுகளில், கனவுகளில் தன் ருசியை உருவாக்கிவிடுகிறது என்பது உண்மைதானே.

ஒரு மச்சத்தைப் போல பிறந்தது முதல் என்னோடு ஒட்டியிருக்கிறது எனது கிராமம். என் பால்யத்தைப் போலவே ஊரின் பால்யமும் வேதனையும், ரகசியமான சந்தோஷங்களும் நிரம்பியது. ‘ஆரோக்ய நிகேதனம்’, ‘நீலகண்டப் பறவையைத் தேடி’ போன்ற சிறந்த இந்திய நாவல்கள் எழுப்பிய கனவைப் போல இந்த நாவலும் ஒரு சிதறடிக்கப்பட்ட கனவைக் கொண்டிருக்கிறது.”



ஏன்? எதற்கு? எப்படி?

  • ‘மனக்கவலையினால் தலையில் நரை விழும்’ என்கிறார்களே… கவலைக்கும் தலைமுடிக்கும் ஏன் முடிச்சு போடுகிறார்கள்?

    ஆரோக்கியம், வம்சம், சூழ்நிலை மூன்றும்தான் நரைப்பதற்குக் காரணம். முடியின் கால்களில் மெலனின் என்னும் சமாசாரம் சப்ளை தீர்ந்துவிடுவதால் நரை வரு கிறது. தலைமுடி சாதாரணமாக இரண்டிலிருந்து நான்கு வருஷம் வளர்கிறது. அதன்பின் இரண்டு, மூன்று மாசம் சும்மாயிருந்துவிட்டு உதிர்கிறது. புது கேசம் வளர்கிறது. இப்படித் தினம் ஐம்பதிலிருந்து நூறு முடிகளை நாம் இழக்கிறோம். பொதுவாக நரைமுடியைக் கறுப்பு மறைத்திருக்கும். ஒரு அதிர்ச்சி தரும் சம்பவம் நிகழும்போது, சிலருக்கு ‘டெலோஜென் எஃப்லுவியம்’ (Telogen Effluvium) என்னும் விளைவினால் சட்டென்று ஒரு நாளைக்கு முந்நூறு முடி கொட்டிவிட, மறைந்திருந்த நரைமுடிகள் எல்லாம் பொசுக்கென்று தெரிய ஆரம்பித்துவிடும்.

  • நான் அரேபிய நாடுகளில் பல வருடங்களாக வேலை செய்திருக்கிறேன். அங்கு குதிரைகளைப் பார்த்ததில்லை. ஆனால், வாட்டசாட்டமான பெண்களை வர்ணிக்கும்போது ‘அரேபிய குதிரை மாதிரி’ என்கிறார்களே… அப்படி என்ன அங்கலட்சணம்?

    வாட்டசாட்டமான பெண்களை வர்ணிக்கின்ற ஒரு ஒப்பீடு இது. காவடிச் சிந்து பாட்டில் ‘மகரத்துவஜன் கோயில் கம்பம்’ என்கிறதும் இதேதான். இம்மாதிரி ஓவர்சைஸ் பெண்களை ‘அமேஸான்கள்’ என்றும் சொல்கிறார்கள்.



    பதில் தெரியுமா

  • அது இரண்டு கார்கள் மட்டுமே கலந்து கொள்ளும் பந்தயம். ஒன்று ரஷ்ய கார். இன்னொன்று அமெரிக்க கார். பந்தயத்தில் அமெரிக்க கார் வெற்றி பெற்றது. இந்த நிகழ்ச்சியைச் செய்தியாக வெளியிட்ட ரஷ்யப் பத்திரிகைகள் நாட்டுப்பற்றின் காரணமாக ரஷ்ய கார் தோற்றுப் போனதையும் அமெரிக்க கார் முதலில் வந்ததையும் குறிப்பிடவில்லை. அதே சமயம் அவர்கள் வெளியிட்டிருந்த செய்தியில் பொய்யான தகவலும் இடம் பெறவில்லை. எப்படி?
  • இரண்டே வார்த்தைகள்தான் என்றாலும் இதில் ஏராளமான ‘லெட்டர்ஸ்’ உண்டு..! அது எது?
  • ஒரு மனிதன் திடமான தரைப்பரப்பில் நின்று கொண்டு ஆறடி உயரத்தில் இருந்து ஒரு தக்காளியைக் கீழே போட்டான். ஆனால், அது உடையவோ, நசுங்கவோ இல்லை. அது சாதாரண தக்காளிதான். அந்த மனிதன் அதை வேகமாக ஆறடி உயரம் கீழே போடத்தான் செய்தான். பிறகெப்படி அது உடையவில்லை?



    விநாடி வினாவிலாவது கேட்பார்களா?

  • லோக் சபையின் இருக்கைகளும் தரை விரிப்புகளும் பச்சை நிறத்தில் இருக்கும்.
  • ஞாயிற்றுக்கிழமையில் தொடங்கி அதே கிழமையில் முடிந்த ஆண்டு 1978. நானூறு ஆண்டுகளுக்கு ஒரு முறை, அதாவது 2379-ம் ஆண்டுதான் மீண்டும் இப்படி வரும்!
  • 14-ம் நூற்றாண்டில் இங்கிலாந்தை ஆண்ட மூன்றாம் எட்வர்ட் ஆட்சியில் ஒருவர் ஒரு நாளில் இரு வேளைக்கு மேல் உணவு உண்டால் அதைத் தண்டிக்கும் வகையில் சட்டம் இருந்தது.



    யோசிங்க

    1. ‘வினையே ஆடவர்க்கு உயிரே’ – இது குறுந்தொகை. ‘உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே’ என்பது எது?

    2. ‘பெண்மை வாழ்கென்று கூத்திடுவோமடா’ என்று பாடியவர் பாரதியார். ‘புதியதோர் உலகு செய்வோம்’ என்று பாடியவர் யார்?

    3. ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா’ என்று பாடியவர் யார். ‘இப்படை தோற்கின் எப்படை வெல்லும்’ – பாடியவர்?

    4. ‘கல்வி கரையில: கற்பவர் நாள் சில’ என்றுரைக்கும் நூல் எது. ‘ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டா’ என்றுரைக்கும் நூல் எது?

    5. ‘அன்பே சிவம்’ என்று சொன்னவர் திருமூலர். ‘ஆருயிர்க்கெல்லாம் அன்பு செயல் வேண்டும்’ என்று பாடியவர் யார்?

    6. ‘உள்ளம் பெருங்கோயில்: ஊனுடம்பு ஆலயம்’ என்று பாடியவர் யார்?

    7. ‘கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள்.. நாமக்கல் கவிஞரின் பாடல். ‘செய்யும் தொழிலே தெய்வம் & அதில் திறமைதான் நமது செல்வம்’ என்று பாடியவர்?

    8. ‘பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்’ & பாடியவர் பாரதியார். ‘மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா’ — பாடியவர் யார்?

    9. ‘நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்’ என்று பாடியவர் திருநாவுக்கரசர். ‘மனித சாதியில் துன்பம் யாவுமே மனதினால் வரும் நோயடா’ என்றவர் யார்?


  • கலைஞரின் பழைய ஆலிவர்ரோடு இல்லத்தில் குடியேறிவிட்டார் ராஜுசுந்தரம்!

  • விஜயகாந்தின் மகன் பிரபாகரன் பள்ளி நாடகத்தில் மேடையேறியிருக்கிறார் — ராமர் வேஷம்!

  • ‘குற்றப்பரம்பரை’ படம் ஆரம்பமாகிறது. பாரதிராஜா ஹீரோவாகிறார்!



    நாணயத்தின் மறுபக்கம்!

    ”நீதி, நேர்மை, நாணயம்னா என்னப்பா?” ”நேத்து நான் வேலை செய்யும் கடைக்கு ஒருவர் வந்து நூறு ரூபாய் கொடுத்து இருபது ரூபாய்க்கான பொருட்களை வாங்கிக் கொண்டு, மறதியாக மீதித் தொகையை வாங்காமலே போய்விட்டார். அந்த எண்பது ரூபாயை மறுநாள் அவர் கடைக்கு வந்தபோது நான் திருப்பித் தந்திருந்தால், அதுதான் நீதி! அப்படி இல்லாமல், அந்தத் தொகையைக் கடைக்கணக்கில் சேர்த்து, என் முதலாளிக்கு லாபம் சேர்த்திருந்தால் அதுதான் நேர்மை!”

    ”அப்போ… நாணயம்னா?”

    ”அந்தத் தொகையை அவருக்கும் திருப்பித் தராமல், கடைக் கணக்கிலும் சேர்க்காமல், பக்கத்தில் நின்று என்னோடு வேலை செய்துகொண்டிருந்த சக ஊழியருடன் சமமாகப் பகிர்ந்துகொண்டேன். அதற்குப் பெயர்தான் நாணயம்!”



    தேசியக் கட்சி ஒன்றின் தமிழகத் தலைவருக்கு ‘அமைதிப்படை சத்யராஜ்’ என்று அடைமொழி கொடுத்திருக்கிறார்கள் அக்கட்சியின் தொண்டர்கள். ”மூத்த தலைவர்களை நேரில் பார்க்கும்போது அப்படியரு பணிவு பவ்யம் காட்டுவார். அவங்க நகர்ந்ததும் அப்படியே கிண்டல் பண்ணுவார். பயங்கரமான ஆளுங்க” என்கிறார்கள்.



    அப்பா என்றால்.. : அப்பா என்ற வார்த்தைக்கான அர்த்தம்: தான் எந்த அளவுக்குப் புத்திசாலியாக இருக்க நினைத்தானோ அந்த அளவுக்குத் தனது பிள்ளைகள் புத்திசாலியாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பவன்.

  • சில பதில்கள் – என். சொக்கன்

    1. தங்களின் வலை அனுபவங்கள்

    வலையில் அப்பவும், இப்பவும் நான் ரொம்ப ரசிப்பது விவாத மன்றங்களைதான் – ஏனோ, மிகவும் வசதியான மின்னஞ்சல் ,அரட்டையைவிட, இவைதான் என்னை ரொம்பக் கவர்கின்றன. காரணம் சொல்லத் தெரியவில்லை.

    அப்படி நான் மிகவும் விரும்பும் / விரும்பிய தளங்கள் – தமிழ்த் திரையிசை விவாதங்களுக்கான டி.எஃப்.எம்.பேஜ் மற்றும் மன்றமையம் – இவற்றில் மன்றமையத்தில் நடைபெறும் விவாதங்களின் தரம் சமீபத்தில் குறைந்துவிட்டது எனக்கு ரொம்பவே வருத்தம். ஆனால் நல்லவேளையாக டிஎஃப்எம் பேஜ் அப்படி இல்லை – தமிழில் எந்தப் புதிய ஆல்பம் வெளிவந்தாலும், அதுபற்றிய விவாதங்களை அடுத்த சில மணி நேரங்களுக்குள் இங்கே படிக்கலாம் – தேர்ந்தெடுத்து வாங்கலாம் – இசை ஞானமுள்ள ரசிகர்களும், என்னைப்போல டண்டனக்கா பார்ட்டிகளும் ஒன்றாகக் கலந்து பழகும் தளம் என்பதால்தானோ என்னவோ, இங்கே எப்போதும் சுவாரஸ்யம் பொங்குகிறது !

    மற்றபடி, மெயிலுக்கு ரீடிஃப், இலக்கியத்துக்கு ராயர் க்ளப், அகத்தியர், சந்த வசந்தம், மரத்தடி, அப்புறம் வழக்கமான இலக்கியப் பத்திரிகைகள், கல்கி, விகடன், குமுதம், அப்பாலே, அவ்வப்போது தொட்டுக்கொள்ள தமிழ் சினிமாச் செய்திகள் – இவ்வளவுதான் என்னுடைய தினசரி வலை உலவல் ஃபார்முலா.

    2. வலைப்பதிவுகளில் மிகவும் விரும்பிப் படிக்கும் ப்ளாகுகள்

    நான் தொடர்ந்து படிக்கும் வலைப்பதிவுகள் என்று பார்த்தால், பாராவின் ‘மனத்துக்கண்’ (ஒரு சுவாரஸ்யமான மிடில் மேகஸின்போன்ற வலைப்பதிவு இது – ஆனா, இப்போ காணாமபோச்சே ஏன் ?), பத்ரியின் எண்ணங்கள் (பல சமயங்களில் 4 தடவை படித்துப் புரிந்துகொள்ளுமளவு கனமான விஷயங்களை, அக்கறையோடும், கவனத்தோடும் விளக்கிச் சொல்கிறார்), உங்களோட ஈதமிழ் (யாரோ இந்த வலைப்பதிவைக் ‘குமுதம்’ன்னு சொன்னாங்கதானே ? அது பாதி தப்பு ;), மீனாக்ஸின் மார்க்கெட்டிங் மற்றும் மேல்கைண்ட் வலைப்பதிவுகள் (இந்த ரெண்டு வலைப்பதிவுகளிலுமே, நல்ல விஷயங்களும், நகைச்சுவையும் கலந்து தருவது அருமையான கலவை !), அருணின் அகரதூரிகை (அழகான நடையில், சுவாரஸ்யமான விஷயங்களைத் தேர்ந்தெடுத்து எழுதுவதால் பிடிக்கும்.)

    இந்த வலைப்பதிவுகளோடு ஒப்பிட்டால், வெங்கடேஷ், எஸ். ராமகிருஷ்ணன், நாகூர் ரூமி ஆகியோர் அடிக்கடி எழுதுவதில்லை, என்றாலும், எழுதும்போது மிஸ் செய்துவிடாமல் படிப்பேன் !

    இவைதவிர, தமிழ் மணம் தளத்தில் உலவும்போது, அவ்வப்போது கண்ணில்படுகிற நல்ல கட்டுரைகளையெல்லாம் தவறாமல் வாசித்துவிடுவேன்.

    3. விரும்பிப் படித்த பதிவுகள்

    அப்படித் தவறவிட்டது சத்யராஜ்குமார், சித்ரன் ஆகியோரின் வலைப்பதிவுகளைதான். அப்புறம், மாலனின் சில வலைப்பூக்கள்.

    4. படிக்காவிட்டால், ஏன் தற்போது படிப்பதில்லை?

    இப்போது அவர்கள் அப்டேட் செய்வதே இல்லை (அப்படிதான் நினைக்கிறேன் !)

    5. எப்பொழுது, எப்படி, எதற்காக உங்களுக்கான வலைப்பதிவு அமைக்க விருப்பம்?

    எனக்கான வலைப்பதிவு இன்னும் இல்லையே என்று பல நண்பர்கள் கேட்டிருக்கிறார்கள் – கூடாது என்றில்லை, வலைப்பதிவுகளின் அதீத சுதந்திரம் எனக்கு ரொம்ப பயமாயிருக்கிறது.

    சாதாரணமாகவே, நான் பெரிய சோம்பேறி. என் கழுத்தில் ரெண்டு, மூன்று கத்திகளை வைத்து, லேசாக அழுத்தினால்தான் எழுத ஆரம்பிப்பேன். இல்லையென்றால், சோபாவில் சாய்ந்துகொண்டு டாம் அண்ட் ஜெர்ரி பார்ப்பதோ, அமர் சித்ரகதா புரட்டுவதோதான் என் விருப்பங்கள்.

    ஆகவே, வலைப் பதிவு என்று ஆரம்பித்துவிட்டு, அதில் எப்போதுவேண்டுமானாலும் எழுதலாம், மாதக்கணக்கில் எழுதாமலும் இருக்கலாம் என்கிற சுதந்திரமெல்லாம் எனக்கு ரொம்ப அதிகம். வாரம் ஒன்று அல்லது, வாரத்துக்கு நாலு அல்லது மாதத்துக்கு ஒன்று எழுதினால்தான் ஆச்சு என்று உறுதியான கெடு வைத்து மிரட்டினால்தான் எனக்குக் கை வளையும் (அல்லது தட்டும் !).

    நீங்கள் இந்த பதிலை ஏற்கமாட்டீர்கள் என்று எனக்குத் தெரியும், ‘வாரம் நாலு என்று வைத்துக்கொண்டு எழுதேன், யார் உன்னைத் தடுக்கிறார்கள் ?’, என்றுதான் பதில் கேள்வி கேட்பீர்கள்.

    ஆனால், நான் முன்பே சொன்னதுபோல், எனக்கு அப்படிப்பட்ட self-management குணமெல்லாம் சுத்தமாகக் கிடையாது. யாரேனும் விடாமல் நச்சரித்துக்கொண்டே இருந்தால்தான் எழுதுவேன்.

    இதெல்லாம் சும்மா சாக்கு, உண்மையான உண்மையைச் சொல்வதானால், எனக்கு வேகமாக எழுதிப் பழக்கமே இல்லை. சிறிய கட்டுரைக்குக்கூட ஒரு வாரத்துக்குமேல் எடுத்துக்கொள்வேன். அப்படி நேரமெடுத்து எழுதுவதற்குள், நான் எழுத நினைத்த விஷயம் பழசு கண்ணா பழசு என்றாகிவிடும் !

    இப்போதைக்கு, எனக்கு வேகமாக எழுதத் தெரிந்த ஒரே விஷயம் – சிறுகதைகளும், வாழ்க்கை வரலாறுகளும்தான். அதையெல்லாம் வலைப்பதிவில் யாரும் படிப்பார்கள் என்று எனக்கு நம்பிக்கை இல்லை !

    இவ்வளவும் சொன்னபின், ஒரு கடைசி விஷயம் – நானும் ஒரு வலைப்பதிவு தொடங்கியிருக்கிறேன் – சொ. மணியன் என்ற பெயரில், வெண்பாவில் உலக நடப்பைச் சொல்வதற்காக ஒரு வலைப்பதிவு அது. ஆனால், நான் களமிறங்கிய ஒன்றிரண்டு நாள்களுக்குள், கிருஷ்ண சைதன்யா என்பவர் என்னைவிட அபாரமாக, இதேவிதமான வெண்பாக்களை எழுதிக் குவித்துவிட்டார். அவருடைய வேகத்துக்குமுன் நம்மால் ஆகாது என்று ஜகா வாங்கிவிட்டேன் 🙂

    6. (பாரா சொன்னது போல்) புதிதாக ஒன்பதே ஒன்பது கட்டளைகள் எழுத நினைத்தால் என்ன சொல்வீர்கள்?

    ஏன் ஸ்வாமி ? நான் ஏதோ நன்றாக இருப்பது பிடிக்கவில்லையா ? 🙂

    சில பதில்கள் – கணேஷ் சந்திரா

    முன்குறிப்பு : கேள்விகளுக்கு சுருக்கமா பதில் எழுத சொன்னார் பாபா. ஆகவே ….

    1. தங்களின் தமிழ் வலை அனுபவங்கள்.

    தமிழ் வலைக்குள் விழுந்தது 2000ம் ஆண்டு – ஆரம்ப நாட்களில் அம்பலம், ஆறாம்திணை, குமுதம் பிடித்த இணையங்கள். இப்பொழுது நிறைய. அன்றும் இன்றும் முரசு அஞ்சலே நம்ம தோழன்.

    2. வலைப்பதிவுகளில் மிகவும் விரும்பிப் படிக்கும் ப்ளாகுகள்

    இப்போ தமிழ்மணம் இருக்கறதால அப்படியே கடைசி பத்து மேட்டரை படிப்பேன். அதுக்கு முன்னே அரசியல், ஜனரஞ்சக சினிமா, நையாண்டி, புத்தக விமர்சனம் இது எங்கே எல்லாம் இருக்கோ தேடிப் படிப்பேன்.

    3. விரும்பிப் படித்த பதிவுகள் ?

    இது ரொம்ப வம்பு பிடிச்ச கேள்வி. ஒரு சிலரோட எழுத்து ஸ்டைல் நம்ம ரசனையோட ஒத்து போகும். அவங்க வலைப்பதிவை கண்டிப்பா படிப்பேன்.

    4. படிக்காவிட்டால், ஏன் தற்போது படிப்பதில்லை ?

    அவங்க எழுதறது இல்லே / அவங்க பதிவே காணோம்னு அர்த்தம்.

    5. எப்பொழுது, எப்படி, எதற்காக உங்களுக்கான வலைப்பதிவு அமைக்க விருப்பம் ?

    எனக்கு சொந்தமாக வலைப்பதிவில் எழுதுவதை விட சொந்தமாக வலைப்பதிவு எழுதவே அதிக விரும்பம்.

    6. (பாரா சொன்னது போல்) புதிதாக ஒன்பதே ஒன்பது கட்டளைகள் எழுத நினைத்தால் என்ன சொல்வீர்கள் ?

    கட்டளைகளா ? கிழிஞ்சுது போங்க. கட்டளைகளுக்கு பதிலா ஆலோசனை வேணா சொல்லறேன்.

  • டிஸ்கி உபயோகிக்கறவங்க யுனிகோடுக்கு வாங்க.
  • இயங்கும் எழுத்துரு உபயோகிங்க.
  • IE /ஃபயர் பாக்ஸ் ல வேலை செய்யுதா பாருங்க.
  • படங்கள் போடும் பொழுது align=left or right

    [ ]

    போடுங்க. அப்போ உங்க படம் கட்டுரையோட சேர்ந்து இருக்கும்.

  • படங்களை photoshop, paint shop pro,gimp போன்ற மென்பொருளை வைத்து சரி பண்ணுங்க. HTML ல height = width = ன்னு மத்தாதீங்க. அது படத்தோட அழகை கெடுத்துடும்.
  • வார்தைக்கு வார்த்தை லிங்க் செய்யாதீங்க. அது கட்டுரையின் கவனத்தை சிதறடிக்கும்.

  • அங்கும் எங்கும்

    தேங்க்ஸ் கொடுக்கல்-வாங்கல தினம்

    சாதாரண அமெரிக்கர்களைப் பொறுத்தவரை நன்றி வழங்குதல் தினம் — நான்கு நாள் தொடர்ச்சியாக விடுமுறை கிடைக்கிறது.

    சின்ன வயதில் பொங்கல் என்றால் நாலு நாள் விடுமுறை, சர்க்கரைப் பொங்கல், கணுப்பொடி வைத்தல், பொங்கல் கட்டுரை எழுதுதல் என்பேன். (இன்றும் அதே நிலைதான்.)

    தேங்க்ஸ்கிவிங் என்றால் வான்கோழி பிடித்து ஓவனில் சமைத்தல், தொட்டுக்க க்ரான்பெர்ரி ஜெல்லி சாஸ், கொஞ்சம் அசட்டு தித்திப்போடு சாம்பார், உருளைக்கிழங்கும் இன்ன பிறவும் போட்ட கறி — இதுதான் சமையல்.

    வான்கோழியை அதிகம் வேக வைக்க கூடாது. குறைந்து வெந்திருந்தாலும் விஷமாகிப் போகும். பார்த்து டைமர் வைத்து விசிலடித்தவுடன் அடுப்பை அணைப்பது முக்கியம். ஃபில்லிங் எனப்படும் மொறு மொறு கறியை கோழி முதல் உருளை வரை வறுத்து செய்யலாம்.

    நண்பர்களையும் உறவினர்களையும் வியாழன் இரவு விருந்துக்கு அழைக்கிறார்கள். அந்தக்காலத்தில் அறுவடை நடந்திருக்கும். தோட்டத்தில் விளைந்த சர்க்கரைப் பூசணிக்காயை கேக்குக்குள் அடைத்து, ஒரு வருடமாக வளர்த்த வான்கோழியை வெட்டி சமைத்துக் கொண்டாடியிருக்கிறார்கள்.

    முன்னும் ஒரு காலத்தில் இக்கால அமெரிக்கர்களை வரவேற்ற, ஐ.எஸ்.ஐ. அமெரிக்கர்களான செவ்விந்தியர்களுக்கு நன்றி வழங்குதலாக தொடங்கியது. இன்று யாருக்கெல்லாம் நன்றி சொல்ல வேண்டுமோ உணவு உண்பதற்கு முன் நவில்கிறார்கள்.

    நிறைய அமெரிக்கப் ஃபுட்பால், வியாழனின் மிச்சம் மீதியை திங்கள் மதியம் மட்டும் வெட்டுதல், உள்ளூர் கலாச்சாரத்தை தெப்பத் திருவிழாவாக தரையில் காட்டும் அணிவகுப்புகள், நத்தார் தின சாண்டா பரிசு வழங்கலுக்கான ஷாப்பிங், என அமெரிக்காவில் கொண்டாடப்படுகிறது.


  • காதல் தீவிரவாதி

    என்னை நீ கைது செய்

    ஆயுள் தண்டனை ஒன்று

    உன் நெஞ்சில் வாங்கி வை


    என்னும் ‘சத்ரபதி’ படத்தின் பாடல் ரொம்பவும் பிடித்திருக்கிறது. எஸ்.ஏ ராஜ்குமாரின் ஒரு படத்தில் ஒரு ஹிட் என்னும் ஃபார்முலா சரிதான். பாடியவர்கள் யார் என்று சொன்னால் தன்யனாவேன்.

    பாடலைக் கேட்க: Music India OnLine – Chatrapathy (2004)

  • All About Blogger Internationalization: தமிழில் எப்பங்க வரப்போகுது?
  • தள்ளுபடி: சிறுகதை என்றால் ‘சொன்ன விதத்தில்’ ஏமாற்றம்.
  • இந்தியா டுடேயின் மதிப்பீட்டின் படி தயாநிதி மாறன் ஏழாவது ரேங்கைப் பிடித்திருக்கிறார். அஞ்சல் நிலையங்கள், தொலைத்தொடர்பு நிறுவனங்களின் சீரமைத்தலையும் பி.எஸ்.என்.எல் – எம்.டி.என்.எல் இணைப்பையும் பாராட்டியிருக்கிறது. மத்திய அமைச்சரவை அமைத்தவுடன் பத்ரி அலசல் கொடுத்தது போல், மீண்டும் ஒரு ரிப்போர்ட் கார்ட் கொடுக்கலாம். (பத்ரியின் வலைப்பதிவில் எப்படி தேடுவது? கூகிள் தேடலும் முடியவில்லை; எல்லோருடைய ப்ளாக்ஸ்பாட் பதிவுகளிலும் வரும் ஒட்டுத் தேடல் பெட்டியும் காணவில்லை!)
  • உள்ளத்தைக் கொள்ளை கொண்ட இன்றைய பதிவு: தூக்குமரத்தின் நிழலிலிருந்து நாம் கற்கும் பாடம்.
  • Scary Snake Stories 

    Scary Snake Stories Posted by Hello

    Snake Playing Kids 

    Snake Playing Kids Posted by Hello

    Tampered Reebok DMX Car 

    Tampered Reebok DMX Car Posted by Hello

    Tampered Reebok DMX 

    Tampered Reebok DMX Posted by Hello

    Reebok actual car 

    Reebok actual car Posted by Hello

    Kids playing with Snake 

    Kids playing with Snake Posted by Hello