Monthly Archives: ஜூலை 2006

Colorful Rices: Red (hot) like this Lady?

Dinamani.com – TamilNadu Page

பெண் அதிகாரியின் அழகை வர்ணித்த அமைச்சரின் “அட்வைஸ்’ தேவையில்லை: ஜெ

சட்டப் பேரவையில் நிதி நிலை அறிக்கை மீதான விவாதத்தில் திங்கள்கிழமை ஜெயலலிதா பங்கேற்றுப் பேசினார். அப்போது அவர் கூறிய ஒவ்வொரு தகவலுக்கும் அமைச்சர்கள் குறுக்கீடு செய்து பதில் அளித்தனர். இதற்கு பேரவைத் தலைவரைப் பார்த்து அமைச்சர்கள் அதிகம் குறுக்கீடு செய்வதாக ஜெயலலிதா குறிப்பிட்டார்.

அப்போது பேசிய உணவுத் துறை அமைச்சர் வேலு, இதே சட்டப் பேரவையில் கடந்த ஆட்சிக் காலத்தில் ஆளும் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள், உறுப்பினர்கள் குறுக்கீடு செய்யாத அளவுக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுவதற்குக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டனர். அதை இப்போது எதிர்க்கட்சித் தலைவராக உள்ள ஜெயலலிதா பின்பற்றலாமே என்றார்.

அப்போது குறுக்கிட்ட ஜெயலலிதா, “பெண் அதிகாரியை வர்ணித்த அமைச்சரின் அட்வைஸ் எனக்குத் தேவையில்லை’ என்றார்.

அமைச்சர் அன்பழகன்:

ரேஷன் அரிசி கருப்பு நிறத்திலும் சில சிவப்பு நிறத்திலும் உள்ளதாகக் கூறப்பட்டதற்கு அமைச்சர், சில மாநிலங்களிலிருந்து வரும் அரிசி அவரைப் போல கருப்பாக இருக்கிறது என்றும், சில மாநிலத்திலிருந்து வரும் அரிசி பெண் அதிகாரியைப்போல சிவப்பாக இருக்கிறது என்றும் உவமையாகச் சொன்னாரே அன்றி அது வர்ணனை அல்ல. வர்ணிக்கும் வயதில் அவர் இல்லை.

Find the Faces

கண்கள் இங்கே
முகம் எங்கே?

புகழ்பெற்றவர்களின் பெயர் சொல்லுங்க பார்க்கலாம்

  1. இந்த பதிவிற்கு விக்னேஷுக்குத்தான் (தண்டோரா – இது கண்டதை சொல்லும் – » கண்ணோடு காண்பது யார்??) நன்றியை நவில வேண்டும்

  2. ஆரம்பத்திலேயே சோதனையா?

  3. இவருக்கெல்லாம் எந்த துப்புமே வேண்டாமே…

  4. அக்மார்க் குமுதம் போட்டிகள் இப்படித்தான் இருக்கும்

  5. பழைய நினைப்புதான் பேராண்டி

  6. கண்களை எங்கே பார்க்கிறாங்க

  7. திருப்பதியில் சிலை இருக்கிறதாமே?

  8. நேதாஜியிடம் தோற்றவர்

  9. ஒன்றாவது கஷ்டமாக இருக்க வேண்டாமா?

  10. ஒன்றாவது எளிதாக இருக்க வேண்டாமா?

  11. தாஜ் மஹால் தேவையில்லை


| |

Classic Arts – PAK’s Appreciation Series (1)

மேற்கத்திய ஓவியங்கள்- ஒரு எளிய அறிமுகம்
பி. ஏ. கிருஷ்ணன்
I

ஓவியம் என்றால் என்ன?
மூன்று பரிமாணங்களில் பார்த்ததை (சமயங்களில் பரிமாணங்களைக் கடந்து நினைத்ததை அல்லது உணர்ந்ததை) இரு பரிமாணங்களில் மரம், துணி, சுவர், காகிதம் போன்ற பரப்புகளில் வரைவது. வரைந்தது நம்மை எங்கே இட்டுச் செல்கிறது என்பதே ஒரு ஓவியம் காலத்தை வென்றதா இல்லையா என்பதை வரையறுக்கிறது. காலத்தின் கைகளிலிருந்து மீட்கப் பட்ட கணக்கில்லாத ஓவியங்கள் உலகெங்கும் அருங்காட்சியகங்களில் இருக்கின்றன. இவற்றை கடந்து நாள்தோறும் பலர் செல்கிறார்கள். னால் அருங்காட்சியகங்களில் வைக்கப்பட்ட எல்லா ஓவியங்களும் காலத்தை வென்றதாக அடையாளப் படுத்தப் படவில்லை. அழியாது இருப்பதே வெற்றியாகி விட முடியாது. மிகச் சில ஓவியங்களே தலைமுறை தலைமுறைகளாக திரும்பத் திரும்பக் கவனிக்கப் படுகின்றன. திரும்பத் திரும்ப பொருள் கோள் (interpretation) செய்யப் படுகின்றன. இந்த மிகச் சிலவற்றில் ஒரு சிலவற்றை பற்றியும் இவற்றை வரைந்த ஓவியர்களைப் பற்றியும் இந்தத் தொடர் பேச இருக்கிறது.

பேசு முன் சிலவற்றைத் தெளிவு படுத்தி விடுகிறேன். நான் ஒரு ஓவியன் அல்ல. ஒரு திறனாய்வாளனும் அல்ல. நான் பார்த்து பிரமித்தவன். மனிதனால் இத்தனை உச்சங்களை எட்ட முடியுமா என்று மலைத்தவன். உச்சங்களை எட்டிய கலைஞர்களைப் பற்றியும் அவர்கள் படைப்புகளைப் பற்றியும் ஓரளவு படித்தவன். படித்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் முயற்சியே இந்தத் தொடர். தமிழ் மட்டுமே தெரிந்தவர்கள் மேற்கத்திய ஓவியங்களைப் பற்றி ஓரளவு தெரிந்து கொள்ள இந்தத் தொடர் சிறிது உதவி செய்யும் என்று நம்புகிறேன்.

II

சென்ற வருடம் பாஸ்டன் நுண்கலை அருங்காட்சியகத்திற்கு நண்பர் பாலாஜியோடு சென்றிருந்தேன். பல ஓவியங்களைப் பார்த்து பார்த்து கண்கள் பஞ்சடைவோம் என்று பயமுறுத்திக் கொண்டிருந்தன. பசி வேறு. உணவகத்திற்குச் செல்லலாம் என்று நினைத்துக்கொண்டே நடக்கும் போது மிகத் தொலைவில் ஒளி பாய்ச்சப் பட்ட ஓவியம் ஒன்று தெரிந்தது. என்னை அறியாமலே சொன்னேன், ‘பாலாஜி, அது ஜான் ஸிங்கில்டன் காப்லியின் ஓவியம். வாட்ஸனும் சுறாமீனும் என்பது ஓவியத்தின் தலைப்பு என்று நினைக்கிறேன்’. பாலாஜி அருகே சென்று பார்த்தார். நான் சொன்னது சரிதான் என்று உறுதி செய்தார்.

எனக்கே ஒன்றும் புரியவில்லை.

காப்லியின் இந்த ஓவியத்தின் பிரதியைப் நான் பார்த்து ஒரு நாற்பது வருடங்களாவது இருக்கும். என்னுடைய தந்தையின் நண்பர் கோபால பிள்ளை எனக்கு மேற்கத்திய ஓவியங்களை அறிமுகம் செய்தவர். அவர் எனக்குப் பார்க்கக் கொடுத்த புத்தங்களில் ஒன்று “Great Painters and Great Paintings”. Reader’s Digest வெளியீடு. அந்தப் புத்தகத்தில் பேசப் பட்ட பல ஓவியர்களையும் அவர்கள் வரைந்த ஓவியங்களின் பெயர்களையும் ஒரு நோட்டுப் புத்தகத்தில் எழுதி வைத்துக் கொண்டேன். எழுதப் பட்ட பெயர்களில் காப்லியின் இந்த ஓவியமும் ஒன்று. எழுதும் போது படித்தது நினைவில் ஒட்டிக் கொண்டு நாற்பது வருடங்கள் கழித்து உதிர்ந்திருக்கிறது. இத்தகைய உதிர்வுகள் காலம் காலமாக நடந்து வந்து கொண்டிருக்கின்றன. இத்தகைய உதிர்வுகளுக்காகவே ஓவியர்கள் தங்கள் வாழ்நாட்கள் முழுவதும் உழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

காப்லியின் இந்த ஓவியத்தின் ஈர்ப்புத் தன்மையின் காரணம் என்ன? சுறாமீனின் திறந்த, கூரிய பற்கள் நிறைந்த வாயும் அதனிடமிருந்து தப்ப வழியின்றி மல்லாந்து மிதக்கும் சிறுவனும் என்னுள்ளே இத்தனை ண்டுகள் இருந்திருக்கிறார்கள். யார் இந்தச் சிறுவன்? தில்லிக்கு வந்ததும் இந்த ஓவியத்தைப் பற்றிப் படித்துப் பார்த்தேன். 1749 ம் ண்டு க்யூபாவிற்கு அருகே நடந்த சம்பவம் இது. கரையருகே நீச்சலடித்துக் கொண்டிருந்த வாட்ஸன் என்ற சிறுவனை சுறாமீன் ஒன்று தாக்கியது. அந்தத் தருணத்தை ஓவியமாக காப்லி வடித்திருக்கிறார்.

சுறா வாட்ஸனை மூன்று முறை தாக்கியது. இந்தப் ஓவியம் மூன்றாவது தாக்குதலுக்கு முந்திய தருணத்தை சித்தரிக்கிறது. சுறாமீனின் வாயில் மெல்லிய சிவப்பு; சிறுவனின் முகத்தில் உறைந்த பயம்; அவனைக் கையைப் பிடித்து தூக்குபவர்களின் முகங்களில் இறுக்கம், கவலை அதிர்ச்சி; சுறாவைத் தாக்குபவரின் வேகம்; இவை எல்லாவற்றையும் ஓவியத்தில் கொணர காப்லியால் முடிந்திருக்கிறது. சிறுவன் காப்பாற்றப் பட்டானா இல்லையா என்பதை அறிந்து கொள்ள இந்த ஓவியம் நம்மைத் துடிக்க வைக்கிறது.

சிறுவன் தனது வலது காலைச் சுறாவிற்குக் கொடுக்க நேர்ந்தது. னால் பிழைத்துக் கொண்டான். பின்னால் பெரும் வணிகனாக உயர்ந்து லண்டன் நகரத்து மேயராக ன வாட்ஸன் தன் கதையை காப்லியிடம் சொல்லி அவர் வரைந்த ஓவியம் இது. இந்த ஓவியத்தின் மீது காப்லிக்கு மிகப் பெருமை. அதனால் அதை இன்னொரு முறை வரைந்து தன்னுடைய ஸ்டூடியோவிலேயே வைத்துக் கொண்டிருந்தார். இந்த ஓவியம்தான் பாஸ்டன் அருங்காட்சியகத்தில் இருக்கிறது.

III

மனிதன் எழுதுவதற்கு வெகுகாலம் முன்பே வரைய ரம்பித்து விட்டான். மேற்கத்திய ஓவியங்களின் கதை ஸ்பெயின், பிரான்ஸ் நாடுகளில் உள்ள குகை ஓவியங்களிலிருந்து ரம்பிக்கிறது. இந்த ஓவியங்கள் பதினைந்தாயிரம் ண்டுகளுக்கு முந்தியவை. மஞ்சட் காவி (ochre) கரி போன்றவைகளைக் கொண்டு வரைந்தவை. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் ஸ்பெயின் நாட்டு குகை ஒன்றில் இத்தகைய ஓவியங்கள் முதன் முதலாகக் கண்டு பிடிக்கப் பட்ட போது விமரிசகர்கள் இவற்றை போலிகள் என்று நிராகரித்து விட்டார்கள். பழைய கற்கால மனிதன் இத்தகைய ஓவியங்களை வரைந்திருக்க முடியும் என்று அவர்கள் நம்பத் தயராக இல்லை. இன்று உலகெங்கும் பழைய கற்கால மனிதனின் கலைத் திறனுக்குச் சான்றாக பல குகை ஓவியங்கள் கண்டு பிடிக்கப் பட்டு விட்டன.

இந்த ஓவியங்களில் எனக்கு மிகப் பிடித்தது லாஸ்கோ (Lascaux) குகை ஓவியங்கள். இந்த பிரெஞ்ச் ஓவியங்கள் 1940ம் ண்டு நான்கு சிறுவர்களால் கண்டு பிடிக்கப் பட்டன. லாஸ்கோ காட்டில் ஒரு பைன் மரம் இருந்த இடத்தின் கீழே ஒரு குறுகிய வழி இருப்பதை இவர்கள் பார்த்தார்கள். அந்த வழியாக இறங்கி ஒரு குகையை வந்தடைந்தார்கள். இந்தக் குகையின் சுவர்களில்தான் பல மிருங்களின் உருவங்கள் -எருதுகள், பசுக்கள் குதிரைகள், மான்கள் போன்றவைகளின் – தீட்டப் பட்டிருந்தன. மனிதனும் மிகச் சில கோடுகளால் தானும் தீட்டப் பட்டு விட்டேன் என்று அறிவித்துக் கொண்டிருந்தான். இந்த குகையை சென்றடைவது மிகக் கடினமாக இருந்ததால் இந்த ஓவியங்கள் பதினைந்தாயிரம் வருடங்கள் தாக்குப் பிடித்து விட்டன. னால் 1940ல் இருந்து 1955 வரை இந்த ஓவியங்களைப் பார்க்க ஏகப் பட்ட கூட்டம். மனிதன் கொண்டு வந்த கரியமிலக் காற்று பதினைந்தே வருடங்களில் ஓவியங்களை ஒரு கை பார்த்து விட்டது. இனி மனிதர்கள் குகைக்குள் வந்தால் மிஞ்சுவது மனிதர்கள் மட்டுமே என்பதை பிரஞ்சு அரசு உணர்ந்து இந்தக் குகைக்கு பார்வையாளர்கள் வருவதற்கு தடை விதித்தது. ஓவியங்களின் பிரதிகள் லாஸ்கோவிலேயே இன்னொரு குகை நிர்மாணிக்கப் பட்டு அதன் சுவர்களில் வரையப் பட்டன. இந்தப் பிரதிகளைத் தான் இன்று நாம் பார்க்க முடியும்.

இந்த ஓவியங்களில் புகழ் பெற்றது ‘காயமுண்ட எருதால் தாக்கப் படும் மனிதன்’ என்ற ஓவியம். இருண்ட குகையில் கல் விளக்கில் மிருகக் கொழுப்பை (அல்லது எலும்பு மஜ்ஜையை)எரித்து வெளிச்சம் வர வழைத்து வரையப் பட்ட ஓவியம் இது. சிலிர்த்துக் கொண்டு, வாலைச் சுழற்றிக் கொண்டு மனிதனைக் குறி வைத்துக் கொண்டு பாயத் தயாராக நிற்கிறது எருது. ஒரு மிருகத்தின் இயக்கத்தை இவ்வளவு துல்லியமாக சித்தரித்த இவன் நிச்சயமாக ஒரு மகத்தான கலைஞன். மனிதனை அவன் இத்தனை துல்லியமாக வரைவதற்குத் தகுதியானவனாக நினைக்கவில்லை. னாலும் அவனைக் குறியிடும் கோடுகள் அவனுடைய பேரச்சத்தையும், அவன் கால்கள் இடறுவதையும் வியக்கத் தக்க வகையில் நம் முன்னால் கொண்டு வந்து விடுகின்றன. மனிதனுக்குக் கீழே ஒரு பறவை. ஒரு கோலின் மீது நிற்கிறது.

இவ்வளவு உழைத்து யாருமே வர முடியாத ஓர் இடத்தில் இருபது அடிக்கும் மேற்பட்ட துவாரத்தின் அடியில் இந்த ஓவியங்களைத் தீட்டியதின் காரணம் என்ன? சில விமரிசகர்கள் இப்படி இயற்கையாக மிருகங்களின் உருவங்களைத் தீட்டினால் மனிதன் அவைகளின் பலத்தையும் திடத்தையும் தான் அடைய முடியும் என்று நினைத்திருக்கலாம் என்று கருதுகிறார்கள். சிலர் இவை பூசாரிகளால் மந்திர வேலைகளுக்காக வரையப் பட்டிருக்கலாம் என நினைக்கிறார்கள். மற்றும் சிலர் நரம்புசார் உளவியல் முறையில் இந்த ஓவியங்களை ராய்ந்து கிறக்கம் தரும் விதைகளையோ அல்லது இலைகளையோ உண்டதனால் மனதில் தோன்றும் வடிவங்களை ஓவியங்களாக வடிக்கும் முயற்சியாக இவை இருக்கலாம் எனக் கூறுகிறார்கள். நமக்கு இந்தகைய ராய்ச்சிகள் தேவையில்லை என்று எனக்குத் தோன்றுகிறது. மனிதனுக்கும் கலைக்கும் உள்ள உறவு பதினைந்தாயிரம் ண்டுகளுக்கு மேற்பட்டது என்று நினைப்பதே நமக்கு நிறைவைத் தந்து விடுகிறது. இந்த நிறைவு காலங்களையும் நாடுகளையும் மொழிகளையும் கடந்தது.

IV

இவ்வாறு இருண்ட குகைகளில் துவங்கிய ஓவியக்கலையின் வரலாற்றின் அடுத்த குறிப்பிடத் தக்க காலம் எகிப்தில் தொடங்குகிறது. அன்றைய எகிப்தியர் வாழ்க்கை மரணத்திற்கு அப்புறமும் வாழப்படுகிறது என நம்பினார்கள். அது வாழப் படும் இடமும் உலகமும் வேறு. அவ்வளவுதான். அவர்கள் இறந்தவர்கள் சிறப்போடு வாழ வேண்டும் என்று நிர்மாணித்த பல கலைச் சின்னங்கள் இன்றும் நம்மை வியக்க வைக்கின்றன. அவர்கள் மிகவும் விரும்பியவை கட்டிடக் கலையும் சிற்பக் கலையும்தான். ஓவியங்கள் அவர்களுக்கு இரண்டாம் பட்சம். னால் ஓவியங்களை வரைவதற்கு அதிகச் செலவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. எனவே அவர்கள் கல்லறைச் சுவர்களை அழகு செய்வதற்கு ஓவியங்களைத் தேர்ந்தெடுத்தார்கள். பணக்கார எகிப்தியர்கள் தங்கள் வீட்டுச் சுவர்களிலும் ஓவியங்களை வரையச் செய்தனர். னால் அவற்றில் தப்பியவை மிகச் சிலவே.

எகிப்திய ஓவியங்களில் பெரும்பாலானவை Fresco Secco என்ற முறையில் வரையப் பட்டிருக்கின்றன. இந்த முறையில் ஓவியம் தண்ணீரில் கலந்த வண்ணக் கலவை கொண்டு சுண்ணாம்பு பூசி நன்றாக உலர்ந்த சுவரில் தீட்டப் படுகிறது.

எகிப்தியர்கள் மனிதர்களை வரைந்தார்கள். அவர்கள் அணிந்திருந்த அணிகலன்களையும் டைகளையும் மிகச் சிறப்பாக வரைந்தார்கள். எகிப்திய ஓவியக் கண்கள் நம்மை எப்போதும் நேராகப் பார்க்கின்றன-முகங்கள் பக்கவாட்டில் வரையப் பட்டிருந்த போதிலும். இந்த ஓவியங்கள் காட்சியின் ‘உயிர்’ என்று எதை நினைக்கின்றனவோ அதை வலியுறுத்துகின்றன. உதாரணமாக ‘அழுகின்ற பெண்கள்’ என்ற ஓவியத்தில் அதன் உயிர் பெண்களின் கண்ணீர். எனவே ஓவியத்தில் இருக்கும் எல்லாப் பெண்கள் கண்களிலிருந்தும் மூன்று அல்லது நான்கு தாரைகளில் கண்ணீர் வெளிவந்து அவர்கள் கன்னங்களில் மூன்று அல்லது ஐந்து துளிகளாக இறங்குகிறது.

எகிப்தியர்கள் பறவைகளையும் மிருகங்களையும் வரைந்திருக்கும் விதம் அசதாரணமானது. நெபாமன் கல்லறையில் வரையப் பட்டிருக்கும் பறவை வேட்டைக் காட்சியில் வேட்டையாடும் மனிதனும் அவனது மனைவியும் மகளும் விரைத்து நிற்பது போல நமக்குத் தோன்றுகிறது. னால் அதே ஓவியத்தில் பாய்ந்து பறவையைப் பிடிக்க முயலும் பூனை உயிருள்ளது. பறவைகளும் வண்ணத்துப் பூச்சியும் பறப்பது என்றால் என்ன என்பதை மூவாயிரம்ண்டுகளுக்குப் பின்னும் நமக்கு விளக்குபவை.

பி. ஏ. கிருஷ்ணன்

The paintings are available in the following sites:
1. Lascoux
2. Watson and the shark
3. Fowling Scene


| |

Name the Novel & the Author

புகழ் பெற்ற நாவல்களின் கடைசி பத்திகள். (ஒரு மாறுதலுக்காகத்தான் 🙂 இந்த ஐந்துடன் இந்தப் பதிவுத்தொடர் நிறைவுறுகிறது. மறுமொழிந்து ஆதரவளித்த நண்பர்களுக்கு நன்றியும் மகிழ்ச்சியும்.

என்ன கதை, யார் எழுதியது என்று தெரிகிறதா?

#1. ஜானின் கடுகடுப்பான பார்வை இன்னும் அதிக கடுகடுப்பாக மாறியது. ஒரு செத்த முகத்தின் தோலின் தடிப்பு அவன் முகத்தில் ஏறியது. பல சிலந்திகள் அதில் கூடு கட்டி ஊர்ந்தபடி இருந்தன உடைந்த கதவுகளுக்கிடையில் பலரின் பழமைப் பற்று எலியாய் ஊர்ந்து ஓடிக் கொண்டிருந்தது. தப்பி ஓடும் மனிதர்களின் அவசரங்கள் கூட அவர்களின் மனதிலிருந்து வெளியில் தப்பி வந்து அடிபட்ட தவளைகள் போல் பின்னங்கால்கள் இழுபட நகர்ந்து நிழலுக்குள் பாதுகாப்பாய்ப் போனதைக் காணப் பரிதாபமாக இருந்தது.

பலரது கடைசி அபயக்குரல் இன்னும் சுவர்களில் ஒட்டியபடி சப்தமெழுப்பிக் கொண்டிருக்கையில், மனிதர்களின் முகங்களிலிருந்து வழியும் அவர்களின் புராதனக் கனவுகளை மிகக் கவனமாக உற்றுப் பார்த்தபடி பால், நடுங்கும் தம் கரங்களில் ஒரு புத்தகத்தைப் பிடித்தபடி நடந்தான். நிமிர்ந்து நின்ற போது, அவனுடைய கண்கள், உடைந்த தொடைகளையும், தரைப் புழுதியில் குப்புறக் கிடந்த மனித மனங்களின் ஆசைகள் என்ற குப்பைக் கூளங்களையும் பார்த்தன. இதழ்களில் லேசாக நகை தோன்றி மறைந்தது.

மீண்டும் இரவு வந்த மறுநாளில் புராதனக் குடிப் பெருமை காயங்களுடன் மறுபடி மறுபடி த்ரையில் விழுந்தது. அப்போது பாலின் முகத்தில் வேதனையுணர்வுகளின் வேர் ஓட, அவன் மனக் குகைக்குள் மறதியும், வௌவால்களும், துப்பாக்கிகளின் மருந்து நெடியும் எழுந்து சஞ்சாரமிட்டன. சிநேகபுரத்தின் புராதனக்குடியினர் கூடும் ஊர் சத்திரத்தின் இடிந்த மணிக் கூண்டில் ஏறி நின்று ஊரைப் பார்த்தான் பால்.

புராதன வார்த்தைகளையும் கதைகளையும் நேசித்த மனிதர்களும் அவர்களுடன் கடந்த காலங்களும் தூரத்தில் செத்துப் போய்க் கிடந்தன. அக்காட்சி, பாலின் மனதில் கொடூர நினைவுகளை எழுப்பின. ஆனாலும் எதிர்காலத்தின் குமாரனான பால் அதற்காய் பச்சாதாபப்படவில்லை.

அப்போது அவ்வூரை விட்டு அதன் எல்லையை நோக்கிச் சிலுவையுடன் புறப்பட்ட வெள்ளைக் கொடி மனிதர்கள் ஊர்வலமாக செல்கையில் அவனைக் கவனித்தனர். அவர்கள் ஏனோ அவனைத் திரும்பிப் பார்த்ததை அவன் தூரத்தில் மணிக்கூண்டில் நின்று கவனித்துக் கொண்டிருந்தான்.

நேயர்களே, இக்கதையை ஒருவர் படித்தாலும், படித்ததைக் கேட்டாலும், ஒருவர் படிக்க இன்னொருவர் கேட்டாலும், நவக்கிரகங்களின் கொடுமைக்கு ஆளாக மாட்டார்கள். அந்த அளவு பழமை கொண்டிருக்கிறது இக்கதை. இத்தகைய பழமை ஞாபகங்களில் சிக்கிய * * * கதை, இங்ஙனம் முற்றும்.


#2. அருகே கோவில் மணியோசை கேட்கிறது! துக்கத்திலிருந்து விடுபட்டு ‘இங்கே வா’ என்று குறிஞ்சி ஆண்ட்வனாகிய முருகனே அவளை அழைக்கிறானா! கனவில் எழுந்து நடப்பது போல் தட்டுத்தடுமாறித் தயங்கி நடந்து முருகன் சந்நிதிக்குமுன் போய் நின்றாள் அவள்.

அர்ச்சகர் கற்பூர சோதியை முருகன் முகத்தருகே தூக்கிக் காண்பிக்கிறார். பூரணிக்கு மெய்சிலிர்க்கிறது. தன் கண்கள் காண்பது மெய்யா? பொய்யா? என்று விழியகல மீண்டும் பார்க்கிறாள். முருகனுடைய முகமே அரவிந்தனின் முகமாகத் தெரிகிறது அவளுக்கு. சிறிய கற்பூரச்சோதியே பெரிய சோதியாக மாறி அரவிந்தனின் முகமாகி அழகாய் நகைக்கிறது. ‘துக்கத்திலிருந்து விடுபட்டு இங்கே வா’ என்ற பொருளா அந்தச் சிரிப்புக்கு? “அரவிந்தன்! உங்களுடைய சிரிப்பில் அமுதம் இருக்கிறது, அமுதம் உயிரை வளர்க்கும் ஆற்றலுடையது” என்று பித்துப் பிடித்தவள் போல் முனகிக் கொள்கிறாள் அவள். அவளுடைய இதயத்தில் சோகம் நிறைந்திருந்த இடமெல்லாம் அரவிந்தனின் சிரிப்பு நிறைந்து ஒலி பரப்புகிறது.

“பிறவாமை வேண்டும்!
மீண்டும் பிறப்பு உண்டேல்
உன்னை மறவாமை வேண்டும்!”

….

வழியின் இருபுறமும் வெள்ளம் போல் நிறைந்து விளங்கும் குறிஞ்சிப் பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன. மாலைப்போது வீறுகுன்றி இருள் வீறுகொள்ளத் தொடங்குகிறது. பூரணி மெல்ல நடந்து கொண்டிருக்கிறாள். பிரபஞ்சப் பூச்செடியில் மறுபடியும் ஒரு நாள் மலர் வாடி உதிர்கிறது.


#3. 2. எனது பாத்திரங்களிலேயே மிக அதிகமாக எனது சாயலைக் கொண்டு உருவானவன் செல்லப்பா. எனக்கும் பிரியமானவன்.

1. விசுவம்?

2. செல்லப்பாவைப் போலவே விசுவமும் எனது சில அம்சங்களைக் கொண்டு படைக்கப்பட்டவன் தான். நான் ஒரு ‘இரண்டு கட்சி’ ஆசாமி. எனக்கு உணர்ச்சிகளின் நுட்பமான, எளிதில் பிடிபடாத, நெளிவு சுளிவுகள் எப்படி இஷ்டமோ அப்படியே அறிவுபூர்வமான சர்ச்சையும் ஆய்வும் இஷ்டம். இது ஒரு முரண்பாடு என்றால் இதன் இரு எல்லைகளின் பிரதிபலிப்புகளே செல்லப்பாவும் விசுவமும். செல்லப்பா உணர்ச்சியே வடிவானவன். விசுவம் அறிவே வடிவானவன். இது ஒரு தோராயமான விளக்கம்தான், யாரும் முழுதும் உணர்ச்சிப் பிண்டமும் இல்லை, முழுதும் அறிவுச்சுடருமில்லை.

1. அப்படியானால் பத்ரி man of action?

2. ஆமாம், செயல் வீரன். அறிவும் உணர்ச்சியும், (உடனடி பாதிப்புகளை ஏற்படுத்துகிற) செயலும் ஓரிடத்தில் இணைந்திருப்பதில்லையென்பதே வாழ்க்கையின் irony?

1. ஸோ, இந்த irony ‘* *’ ஆதாரச் சரடா?

2. இல்லை, முழுதும் அப்படியில்லை. நாவலில் ஒரு நம்பிக்கைச் சரடு இழையோடுகிறது. அதே சமயத்தில் அது எளிமைப்படுத்தப்பட்ட வகையினதாக இல்லாமல் இன்றைய தலைமுறையினர் அரவணைத்துக் கொள்ளும் விதமாக அமைக்க முயன்றிருக்கிறேன்… இந்தத் தன்மை – credibility – ரொம்ப முக்கியம். இன்றைய சூழ்நிலையில் தர்மம் அதர்மத்தை வென்று விடுவதாக நாவலில் எழுதுதல் ஒரு வெகுளித்தனம், அல்லது போலித்தனம்; சிலர் அந்தரங்க ஈடுபாடின்றி சிரார்த்தமும் சந்தியாவந்தனமும் செய்வது போல (இத்தகையவர்களை இந்நாவல் மெல்லிய புன்னகையுடன் சீண்டுகிறது) வாழ்க்கையின் தர்மத்தையும் நாவலின் தர்மத்தையும் சிலர் குழப்பிக் கொள்கிறார்கள். நாவலின் தர்மம் கலையுடன் இலக்கிய நேர்மையுடன், தொடர்புடையது. இந்நாவலின் moral centre எனப்படுகிற தார்மீக மையம் பாஸிடிவ்வாகவே இருப்பதை நுட்பமான வாசகன் புரிந்துகொள்வான்; ஆக்க பூர்வமான கவலையையும் (சமூக) சிரத்தையும் பொறுப்புகளையும் கிளர்ந்தெழச் செய்யும் வண்ணம் அதன் ஒட்டு மொத்தமான கட்டமைப்பு அமைந்துள்ளதை உணர்வான்.
…..
இயற்கை என்பதே சாந்தத்தின், ஸத்வ குணங்களின் குறியீடாக…

1. ஆமாம். செல்லப்பா இவ்விதத்தில் ஒரு நவீன போதிஸத்துவன். தத்தம் ‘தனித்துவங்களை’ முடமாக்கிக் கொண்டு ஒரே திசையில் தத்தித் தத்திச் செல்லும் மனிதர்களிடையே…

2. (தொண்டையைக் கனைத்துக் கொண்டு) கடைசியாக, எனக்கு அதிருப்தியளித்த ஒரு விஷயம் பற்றி. செல்லப்பாவின் அம்மாவின் மரணம்… அது அவசியந்தானா?

1. அவள் தன் மருமகளை புதிய தலைமுறைப் பெண்மை பற்றிய ஒரு கொச்சையான ‘பூர்ண விடுதலை’ பிம்பத்தில் பொருத்தி, அந்த பிம்பத்துடன் ஓட்டி போட முயலுகிறாள். ஆனால், ஒரு முக்கிய கட்டத்தில் தான் கடைசியில் தன் அம்மா, பாட்டி ஆகியவர்களைக் கட்டுப்படுத்திய ஒழுக்க நெறிகளுக்குக் கட்டுப்பட்டவள்தான் என்பதை உணருகிறாள். இது அவளைச் சிதற அடித்து விடுகிறது… moment of truth.

2. நாமெல்லாருமே, ஒரு விதத்தில், சரியோ தவறோ, வெவ்வேறு உருவகங்களின் கைதிகள்தான்; இல்லையா?

1. வெவ்வேறு ‘வேடங்களின்’ கைதிகள். அரசியல் தலைவர்கள், mob psychology வேண்டுகிற கொச்சையான படிமங்களின் கைதிகள். அதிகாரிகள், ‘நடக்கிறபடி நடக்கட்டும், நமக்கேன் வம்பு?’ என்ற play safe மனப்பாங்கின் கைதிகள். அறிவு ஜீவிகள், அந்தந்த நேரத்தில் நாகரிகமான, அதிகச் செலவாணி உள்ளதாக உள்ள சில சார்புகளை அபிநயித்துக் கொண்டு, சில ‘தியரிகளை’ உச்சாடனம் செய்து கொண்டு, ‘உஞ்ச விருத்தி’ செய்கிற பிராமண பிம்பத்தின் கைதிகள். பெண்கள், ஆண்ன் ‘அடிமை’, ‘மகிழ்வூட்டும் கருவி’ – அல்லது இந்தப் பிம்பளுக்கெதிராகப் புரட்சி செய்கிறவள் – என்கிற பிம்பங்களின் கைதிகள். இளைஞர்கள், வயதையும், ‘வேடங்கள்’ அணியும் திறனையும் ஒட்டியே வாய்ப்புகள் வழங்குகிற ஒரு அமைப்பில் நிரந்தரமான ஒரு insecurityயின், ஒரு alienationனின், கைதிகள். இத்தகைய பல கைதிகளையே ‘* *’ அறிமுகம் செய்கிறது.


#4. அன்று சாவடிக்குப்பம் ஒரே குதூகலமாயிருந்தது. “சாஸ்திரி ஐயாவும் சாருவும் திரும்பி வந்துட்டாங்க” என்னும் செய்தி சாவடிக் குப்பத்து ஜனங்களுக்கு அளவிலாத மகிழ்ச்சியை அளித்தது. அன்றைய தினமே பஜனை ஆரம்பித்துவிட வேண்டுமென்று நல்லான் வற்புறுத்தினான். சாயங்காலம் பஜனை ஆரம்பிக்க வேண்டிய சமயத்தில் ஜனங்கள் ஏராளமாக வந்து கூடி விட்டார்கள். குப்பத்து ஜனங்கள் மாத்திரம்ன்றி, வ்க்கீல் ஆபத்சகாயமய்யர், சாருவின் பழைய வாத்தியாரம்மா முதலியோரும் வந்திருந்தார்கள். கூட்டம் அதிகமாயிருந்தபடியால், குப்பத்துத் தெருவில் திறந்த வெளியிலேயே பஜனை நடத்த வேண்டியதாயிற்று.

ஆனால், அன்று பஜனையில் சம்பு சாஸ்திரியினால் பாடவே முடியவில்லை. உணர்ச்சி மிகுதியால் அவருக்குத் தொண்டையை அடிக்கடி அடைத்துக் கொண்டது. மற்றவர்கள்தான் பாடினார்கள். காந்தி மகானுக்குப் பிரியமான கீதம் என்று பிரசித்தமான “வைஷ்ணவ ஜனதோ” என்ற பாட்டைச் சம்பு சாஸ்திரி பஜனையில் அடிக்கடி பாடுவதுண்டு. அதை மற்றவர்களுக்கும் கற்பித்திருந்தார். அந்தக் கீதம் இன்று பஜனையில் பாடப்பட்டபோது, சாஸ்திரி மெய்மறந்து கேட்டுக் கொண்டிருந்தார்.

“எவன் பிறருடைய துக்கத்தை தன்னுடைய துக்கமாகக் கருதுவானோ, கஷ்டப்படுகிறவர்களுக்கு உதவி புரிந்துவிட்டு அதைப்பற்றி மனத்தில் கர்வம் கொள்ளாமலும் இருப்பானோ, அவனே உண்மையான வைஷ்ணவன்.

“எவன் உலகில் பிறந்தோர் அனைவரையும் வணங்குவானோ, யாரையும் நிந்தனை செய்யமாட்டானோ, மனோவாக்குக் காயங்களைப் பரிசுத்தமாக வைத்துக் கொண்டிருப்பானோ, அப்படிப்பட்டவனுடைய தாயே தன்யையாவாள்.

“எவன் (விரோதியையும் நண்பனும்) சமதிருஷ்டியுடன் நோக்குவானோ, எவன் பரஸ்திரீயைத் தன் தாயாகக் கருதுவானோ, எவன் தன் நாவால் ஒரு போதும் பொய் பேச மாட்டானோ, எவன் பிறருடைய பொருளைக் கையால் தொடவும் மாட்டானோ, அவனே வைஷ்ணவன்.

“எவனை மோகமோ மாயையோ அண்டாதோ, எவனுடைய மனத்தில் திடவைராக்கியம் குடிகொண்டிருக்குமோ, எவன் ஸ்ரீராம நாமத்தைக் கேட்டதுமே அதில் ஆழ்ந்து மெய்மறந்து விடுவானோ, அவனுடைய சரீரம் எல்லாப் புண்ணிய தீர்த்தங்களுக்கும் இருப்பிடமாகும்.

“எவன் லோபமும் கபடமும் இல்லாதானோ, எவன் காமத்தையும் குரோதத்தையும் விட்டொழித்தவனோ, அப்படிப்பட்ட உத்தமனைத் தரிசிப்பவனது எழுபத்தொரு தலைமுறையும் கரையேறிவிடும்”

இந்தக் கீதத்தைக் கேட்டு வருகையில் சம்பு சாஸ்திரிக்கு இன்றுதான் அதனுடைய உண்மையான பொருளைத் தாம் உணர்வதாகத் தோன்றியது. ‘ஆகா! இந்தப் பாட்டில் சொல்லியபடி உண்மை வைஷ்ணவனாக நாம் என்று ஆகப் போகிறோம்? இந்த ஜன்மத்தில் அத்தகைய பேற்றை நாம் அடைவோமா! அம்பிகே! தாயே! இந்தக் கீதத்தில் வர்ணித்திருக்கும் குணங்களில் நூறில் ஒரு பங்காவது எனக்கு அருளமாட்டாயா?’ என்று தமது இருதய அந்தரங்கத்தில் பிரார்த்தனை செய்தார்.


#5. கடலைத் தாத்தா தேர்தலில் அமோக வெற்றிய்டைந்தார்.

முதல் நாள் அவர் நகரசபைக் கூட்டத்திற்குச் சென்ற காட்சியைப் பெண்கள் எல்லோரும் வாசல் திண்ணையில் நின்றபடி பார்த்து ரசித்தனர். குழந்தைகள் சிமிண்ட் ரோடு வரையிலும் சென்று வழியனுப்பித்துவிட்டு வந்தன.

அன்று கிழவர் போட்டுக் கொண்டு சென்ற புதுச்சொக்காயும் புதுவேட்டியும் ஒரு வார காலத்தில் அழுக்காகிவிட்டன. அவற்றை இரவோடு இரவாகத் தோய்த்துப் போட்டு மறுநாள் காலையில் அவற்றையே மீண்டும் அணிந்துகொண்டு நகரசபைக் கூட்டத்திற்குச் சென்றார்.

தேர்தல் மூலம் அவர் கையில் மிஞ்சிய காசு ஒன்றிரண்டு மாதங்களிலேயே கரைந்துபோய் விட்டது. ஆனால் அந்த ஒன்றிரண்டு மாதங்களில் அவரும் சரி, அவருடைய குடும்பத்தினரும் சரி, வாழ்க்கையை செம்மையாக அனுபவித்தனர் என்றுதான் சொல்ல வேண்டும்.

அந்நாட்களில் அவருடைய பேரக் குழந்தைகள் நல்ல நேர்த்தியான உடை அணிந்திருந்தனர். பையன் அன்றாடம் மீன் சந்தைக்குப் போய்வந்தான். கைக்குழந்தைகளை உத்தேசித்து இரண்டு ஆடுகள் வாங்கப்பட்டன. வீட்டிற்கு அவசியமான பாத்திரங்களும் வாங்கப்பட்டன. கிழவர் பீடியை மறந்து சுருட்டுக் குடித்தார்.

வாழ்வில் இன்பகரமான நாட்கள் மிகக் குறைந்த நாட்கள்தானே! வேகமாக மறைந்துவிடும் நாட்களும் அவைதானே!

அவருடைய புதுச் சொக்காய் அன்றாடம் துவைத்துக் துவைத்துப் போட்டுக் கொண்டதாலோ என்னமோ வெகுவிரைவில் நைந்து விட்டது. இரட்டை வேஷ்டியிலும் பொட்டுப்பொட்டாகத் துவாரங்கள். வீட்டுச் செலவுக்காகச் சில பாத்திரங்கள் அடகு வைக்கப்பட்டன. நகரசபைக் கூட்டம் முடிந்து கிழவர் வீட்டுக்கு வருகிறபோது குழந்தைகளின் பசி அழுகை அவர் காதை அடைத்தது.

ஒருநாள் காலை கிழவர் தன்னுடைய பழைய மிட்டாய்ப் பெட்டியைக் கண்டெடுத்து அதைத் தூசி போக நன்றாகத் துடைத்துச் சுத்தம் செய்தார்.

மறுநாள் காலை சட்டை அணியாத வெற்றுடம்புடனும், இடது கையில் மணியுடனும், முண்டாசு சுற்றிய தலைமீது மிட்டாய்ப் பெட்டியுடனும் அவர் குர்ரான் பள்ளிக்கூட வாசலை அடைந்த போது, ‘கடலைத் தாத்தா வந்துட்டாரு டோய்!’ என்று கத்திக் கொண்டே குழந்தைகள் அவரை வட்டமாக சூழந்து கொண்டன.

கடலைத் தாத்தா குழந்தைகள் முகத்தையெல்லாம் பார்த்து வெறித்தார். அவர் முகம் மலர்ந்தது. அவர் கண்கள் கலங்கின.

கண்டுபிடித்தவர்கள் பின்னூட்டமிடவும்.


| |

Author & the Novel

புகழ் பெற்ற நாவல்களின் தொடக்கங்கள்.

என்ன கதை, யார் எழுதியது என்று தெரிகிறதா?

1. “தோஸ்த், ஆஜ் நெட் பிராக்டிஸ் ஹை. ஜரூர் ஆஜாநா”, என்று நாஸிர் அலிகான் சொல்லிட்டுப் போனான். அந்த ஆண்டு கல்லூரி கிரிக்கெட் கோஷ்டிக்கு நாஸிர் அலிகானைத் தலைவனாக அறிவித்திருந்தார்கள். நாஸிர் அலிகான் ஒரு மொயினுத்தவுலா கோப்பை ஆட்டத்தில் பழம்பெரும் ஆட்டக்காரர்கள் மத்தியில் இடம்பெற்றுப் பத்தாவது நபராக மட்டையடிக்கச் சென்றாலும் பத்து நிமிஷத்திற்குள் முப்பத்தி மூன்று ஓட்டங்கள் எடுத்து இறுதியில் ஆட்டமிழக்காமல் இருந்தான். நானூறு மாணவர்கள் படித்து வந்த அந்தக் கல்லூரியில் நாற்பது பேர் தைரியமாக கிரிக்கெட் ஆடவருவார்கள். அந்த ஆண்டு என்றில்லை, இன்னும் பல ஆண்டுகளுக்கு நாஸிர் அலிகான் காப்டனாக இருப்பான் என்பதில் ஆருக்கும் சந்தேகம் கிடையாது. மாலையில் ஆட்டம் பழகிக் கொள்ளும் போதுகூட சில்க் ஷர்ட்டும் ஃப்ளானல் பாண்ட்டுமாக வரும் நாஸிர் அலிகான் இதற்கு முன்னர் சந்திரசேகரனுடைய ஆட்டத்தைப் பற்றி ஒன்றும் தெரியச் சந்தர்ப்பமில்லாதிருந்தும் அன்று அவனைக் கல்லூரி நெட் ப்ராக்டிஸுக்குக் கூப்பிட்டிருக்கிறான். நாஸிர் அலிகான் அவனிடம் சொல்லிவிட்டுப் போனபின் சந்திரசேகரன் சைக்கிளின் சக்கரங்களை அழுத்திப் பார்த்தான். நல்ல வேளையாக இரு சக்கரங்களிலும் காற்று இருந்தது.

2. அது வேறு உலகம். பூமிப் பரப்பில் இன்னொரு கிரகம். மேகங்களால் நிராகரிக்கப்பட்டு இயற்கையால் சபிக்கப்பட்டு கடக்கும்போது தேவதைகள் கண்மூடிக் கொள்ளும் வறண்ட நிலம்.

கருவேலமரம், பொத்தக்கள்ளி, கிலுவை, கற்றாழை, சப்பாத்திக் கள்ளி, இலந்தை, நெருஞ்சி, சில்லி, பிரண்டை, இண்டஞ்செடி, சூராள்கொடி முதலான வானத்துக்குக் கோரிக்கை வைக்காத தாவரங்களும் –

நரி, ஓணான், அரணை, ஓந்தி, பூரான், பாம்பு முதலான விலங்கினங்களும் – கழுகு, பருந்து, காடை, கௌதாரி, சிட்டு, உள்ளான், வல்லூறு முதலிய பறவை இனங்களும் மற்றும் மனிதர்களும் வாழும் மண் மண்டலம்.

கரும்பாறையிலும் – சரளையிலும் – சுக்கான் கல்லிலும் முள் மண்டிய நிலங்களிலும் தொலைந்துபோன வாழ்வை மீட்டெடுக்கும் போராட்டம்தான் அவர்களின் பொழப்பு”.

3. வெளிச்சம் இன்னும் சற்று நேரத்தில் வந்துவிடும்.

வாசலைப் பார்த்தார் ஆனந்தரங்கர். இருட்டைப் பிசைந்து நீர் ஊற்றி மெழுகியது போல கருத்திருந்தது வாசல். உள்ளே வலப்பக்கத்து பூஜை அறையிலிருந்து, மெல்லிசாக வெள்ளை மஸ்லின் துணி விரித்தாற் போல, சாம்பிராணிப் புகை பரவிக் கூடத்துக்கு வந்த்து. அத்துடன் முத்துக்கொட்டை, வேம்பு, எண்ணெய், கடலை எண்ணெய், நெய் கலந்து எரித்த விளக்கிலிருந்து எழுந்த நெய் மணம் சுகமாய்ப் பரவியது. பிரான்சிலிருந்து தருவிக்கப்பட்ட ஆளுயரக் கடிகாரத்தில் மணி நாலு ஐம்பது ஆகியிருந்தது. ஆனந்தரங்கர் ஸ்நானம் முடித்து பூஜை புனஸ்கார நியமங்களையும் முடித்து வர்த்தகர்களுக்குரிய நீண்ட வெள்ளை அங்கியும், இடைக் கச்சையில் செருகப்பட்ட வாளும், தலைப்பாகையும் அணிந்து கூடத்து ஊஞ்சலின் மேல் மான் தோல் விரித்து அமர்ந்திருந்தார்.

மங்கைத்தாயம்மாள், பின்கட்டையும் கூடத்தையும் இணைக்கும் கதவை ஒட்டி நின்று தலையை நீட்டிக் கணவரை அவதானித்தாள். அவள் அதற்குள் ஸ்நானம் முடித்திருந்ததைத் தோளில் புரண்டு விழுந்த ஈரக் கூந்தலும், அதன் காரணமாய் நனைந்திருந்த ரவிக்கையும் உணர்த்துமாயிருந்தன. அக்னி நாக்கு மாதிரி நெற்றியில் மெல்லிய சூர்ணம் இட்டிருந்தாள். மாலை ஆகாச நிறத்தில் ரவிக்கையும் அணிந்திருந்தாள். தொண்டையைச் செருமிக்கொண்டு அம்மாள் சொன்னாள்.

“புது கவர்னரை வரவேற்கப் போக வேணும் என்று வார்த்தை வந்ததே!”

4. இந்தச் சின்ன ‘டாய்லெட்டில்’ உட்காரும் போதுதான் இந்த வீடு பெரிதாகத் தெரிகிறது.

ஒன்றையொன்றுடன் ஒப்பிடும் வகையில்தான், குளிக்கும் தொட்டியிலிருந்து, விஞ்ஞான உண்மை, நிர்வாணமாக வெளிவந்திருக்கிறது.

மரத்தடியில் இளைப்பாறும்போது, அதுவே ஆப்பிளாக விழுந்து, தன்னை அறிவித்துக் கொண்டிருக்கிறது. மரத்தடியில், தத்துவ த்ரிசனமும் நிகழ்ந்திருக்கிறது.

ஆனால்,

இது போன்ற சின்ன டாய்லெட்டிலிருந்தவாறு, யாரேனும் ஒரு புதிய சிந்தனையை உலகத்தோடு பகிர்ந்து கொண்டதாக சரித்திரம் உண்டோ?

‘க்ளாஸ்டர் போஃபியா’ ஏற்படமாலிருந்தால் சரிதான். நான் வார்ஸாவுக்கு வந்த புதிதில், வீட்டைப் பற்றிய ஏமாற்றம் என் முகத்தில் தெரிந்தபோது, ‘சோஷல்பிரோ’ விலிருந்த அந்த அழகான பெண், முகத்தை சற்று சாய்த்து, புன்னகை ஒளிர சொன்னாள் – ‘விசிட்டிங் ப்ரொஃபஸர்’களுக்கு, அவர்கள் கிழக்கோ, மேற்கோ, எங்கிருந்து ‘விசிட்’ செய்தாலும் சரி, வெளி நாட்டினர்களுக்கு கொடுக்கப்படும் வீடுகளில், என் வீடுதான் பெரிது என்று.

மேஜையின் இழுப்பறையிலிருந்து ஓர் ஆப்பிளை எடுத்துக் கடித்துக் கொண்டு அவள் இன்னுமொன்றும் சொன்னாள். ‘இது உங்களுக்குச் சிறிய வீடாகத் தோன்றினால் வார்ஸா பல்கலைக்கழகப் போலிஷ் ப்ரொஃபஸர்க்ளுடைய வீடுகளைப் போய்ப் பாருங்கள். உங்கள் வீடு, எவ்வளவு பெரிதென்று உங்களுக்குத் தெரியும்!’

5. குளிக்கும்போது எல்லோரும் பார்க்கிறார்கள்.

ராணி சொன்னாள்.

ராஜா பல்லாங்குழிப் பலகையில் சோழிகளை நிறைத்தபடி நிமிர்ந்து பார்த்தார்.

அழகான ராணி. இளவயசு கடந்து கொண்டிருக்கிறது. முலைகள் இறுக்கம் தளர்ந்து தொங்க ஆரம்பித்து விட்டன. அரைக்கட்டு பெருத்துக் கொண்டு வருகிறது.

ஆனாலும் ராணி. ஐம்பதுகளின் அந்தப் பக்கம் இருக்கும் தன்னோடு ஒப்பிட்டால் இன்னும் சின்னஞ் சிறிசு தான்.

அவள் குளிக்கும்போது ஏன் பார்க்க வேண்டும் ?

தான் இதுவரை அவளைக் குளியலறையில் கதவைத் திறந்து போய் ஒரு தடவை கூடப் பார்த்தது இல்லை என்பது நினைவுக்கு வரச் சோழிகளைத் தரையில் பரத்தி வைத்தார் ராஜா.

அதில் ஒன்று உருண்டு வாசலுக்கு ஓட ஆரம்பித்தது.

முன்னோர்கள் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். சோழிக்குள் அவர்களில் யாரோதான்.

ராஜாவுக்கு இந்தக் குறுக்கீடு கொஞ்சமும் பிடிக்கவில்லை. அந்தரங்கமாகப் புருஷனும் பெண்சாதியும் கதைத்துக் கொண்டிருக்கும்போது முன்னோர்கள், பின்னோர்கள், அரண்மனை ஜோசியன், மிளகாய்மண்டிக்காரன், சேடிப்பெண் யாரும் வருவது முறையானதில்லை.

பின்னோர்கள் சொன்னால் கேட்பார்கள். உடனே புரிந்து கொண்டு அவர்கள் காலத்துக்குத் திரும்பிப் போய்விடுவார்கள்.

முன்னோர்கள் விஷயத்தில் இது எடுபடாது. அவர்கள் மரியாதையை எதிர்பார்ப்பவர்கள். எந்த நிமிடமும் எங்கேயும் நுழைந்து அதிகாரமாக ஆலோசனை சொல்லி, பயமுறுத்தி, நம்பிக்கை அளித்து வழி நடத்திப் போக வேண்டும் என்று நினைப்பவர்கள்.

ராணி குளிப்பதை யாரோ பார்த்தாலும் அவர்களுக்கு ஒன்றும் இல்லை. ஏதோ தலை போகிற விஷயம் இருப்பதாக வெள்ளைச் சோழியில் புகுந்துகொண்டு அறிவிக்கிறார்கள்.

கண்டுபிடித்தவர்கள் பின்னூட்டமிடவும்.


| |

Cartoons on Middle-East Situation – Israel vs Hezbolla in Lebanon

கார்ட்டூன்களுக்கு விளக்கம் எழுதுவது நல்ல கவிதைகளுக்கு பதவுரை எழுதுவது ஒப்பானது. கவிஞன் சொல்ல நினைத்ததை தவறாகப் புரிந்து கொள்வதால் படைப்பாளிக்கும், தனக்குப் புரிந்தற்கேற்ப வளைத்துக் கொள்வதால் வாசகருக்கும், அனுபவிக்க வேண்டிய காபியின் தன்மையை எழுத்தில் கொணருவதால் ஏற்படும் சிதைவால் பொறிப்புரையாளருக்கும் முறையே கோபமும், ஆதங்கமும், அயர்ச்சியும் தரவல்லது. இருந்தாலும், ‘தமிழ்ப்பதிவுகள்’ என்னும் இடுகுறிப்பெயருக்கேற்ப, சில உப-தலைப்புகள்.

  • அகிலமெங்கும் சுதந்திரக் காற்று வீசச் செய்வதுதான் என் தாரக மந்திரம் என்றவர், பாலஸ்தீனம், லெபனான் போன்ற தேர்தல் நடத்தும் நாடுகளையும் பாகிஸ்தான், ஜோர்டான் போன்ற சர்வாதிகார தேசங்களையும் பார்த்து குழம்புகிறார்.

  • ரூபிக் க்யூப் தெரியுமா?

  • ஹெஸ்பொலாவின் நிலை

  • லெபனானின் நிலை

  • இஸ்ரேலின் நிலை.

  • நாலு அமெரிக்கர்களுக்கு ஆபத்து என்றால் அணுகுண்டும் போடலாம். (அமெரிக்காவின் நிலை)

  • நிஜ நிலை.

  • ஈரானின் நிலை

  • ஐ.நா.வின் நிலை.

  • சன்னி நாடுகளின் நிலை

  • அடுத்த தலைமுறையின் நிலை

  • இரண்டு கழுகுகள் யார் என்பதுதான் எல்லா விவாதங்களின் மையபுள்ளி (அல் க்வெய்தாவும் ஈரானும் (அல்லது) அமெரிக்காவும் இங்கிலாந்தும்)

  • இது ஒரு சக்கரம் அய்யா… இதைத் தடுக்க முடியாதய்யா!? பூக்களைப் பறிக்காதீர்கள்.


    | |

  • Pros & Cons – Politics behind the Panchayath Board Conversions

    Dinamalar.com

    கட்சி சார்ந்த தேர்தல் “பேரூராட்சிகள், மூன்றாம் நிலை நகராட்சிகளில் “புரமோஷன்’ பின்னணி அம்பலம்” – தினமலர்

    சமீபத்தில் மாற்றப்பட்ட பேரூராட்சிகள் மற்றும் மூன்றாம் நிலை நகராட்சிகளுக்கும் கட்சி அடிப்படையில் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட் டுள்ளது. இதன்மூலம் கிராம பஞ்சாயத்துகளை பேரூராட்சிகளாக மீண்டும் மாற்றியதற் கான காரணம் வெளிப் பட்டுள்ளது.

    தமிழகத்தில் 611 பேரூராட்சிகள் இருந்தன (டவுன் பஞ்சாயத்துகள்). பெரும்பாலான மாநிலங்களில் பேரூராட்சிகளே கிடையாது. மத்திய அரசு கிராம மேம்பாட் டுக்காக வழங்கும் பல்வேறு திட்டங்களுக்கான பயன்கள் தமிழகத்தில் உள்ள பேரூராட் சிகளுக்கு கிடைக்காமல் இருந் தன. இதனால் மத்திய அரசின் திட்டங்கள் மூலம் நிதியை பெறுவதற்காக முந்தைய அ.தி.மு.க., அரசு 50 பேரூராட்சிகளை மூன்றாம் நிலை நகராட்சிகளாகவும், 561 பேரூராட்சிகளை, சிறப்பு ஊராட்சிகளாகவும் மாற்றி உத்தரவிட்டது. எனினும் பேரூராட்சிகளில் முன்பு இருந்த அதே நிர்வாக முறை மற்றும் உள்ளாட்சி உறுப்பினர்கள் முறை மாற்றப்படவில்லை.

    தற்போது தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வந்த பின், இம்மாத துவக்கத்தில் ஒரு அவசர சட்டம் பிறப்பிக்கப் பட்டது. இதன்மூலம் 561 சிறப்பு ஊராட்சிகளையும் மீண்டும் பேரூராட்சிகளாக மாற்றி உத்தரவிடப்பட்டது. இவ்வாறு மாற்றியதற்கு காரணம், விரைவில் நடக்கவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் கட்சி சார்பில் வேட்பாளர்களை நிறுத்துவதற்காக தான் என்று பேசப்பட்டது. இதுதவிர, மாநகராட்சிகளில் மேயர் மற்றும் நகராட்சிகளில் தலைவர்களை நேரடியாக தேர்வு செய்ய தேர்தல் நடத்துவதற்கு பதிலாக கவுன்சிலர்களே தேர்ந் தெடுக்கும் வகையில் மற்றொரு அவசரச் சட்டமும் பிறப்பிக்கப்பட்டது.

    இந்நிலையில், தற்போது மாநில தேர்தல் ஆணையம் அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், டவுன் பஞ்சாயத்துகள், மூன்றாம் நிலை நகராட்சிகள் மற்றும் இதர நகராட்சிகளுக்கான கவுன்சிலர்கள், மாநகராட்சி கவுன்சிலர்கள் தேர்தல் கட்சி அடிப்படையில் நடத்தப்படுமென தெரிவிக்கப் பட்டுள்ளது.

    இதற்கு முன் 2001ம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலின் போதும் பேரூராட்சிகளுக்கு கட்சி அடிப்படையில் தான் தேர்தல் நடத்தப்பட்டது.

    ஆனால், அதன்பின் 2004ம் ஆண்டு தான் பேரூராட்சிகள் சிறப்பு ஊராட்சிகளாக மாற் றப்பட்டன. எனவே இந்த ஆண்டு அக்டோபரில் நடக்க உள்ள உள்ளாட்சித் தேர்தலின் போது கட்சி அடிப்படையில் இந்த சிறப்பு ஊராட்சிகளில் வேட்பாளர்களை நிறுத்த முடியாத நிலை ஏற்பட்டது.

    ஊராட்சிகளுக்கு மற்றும் கிராம பஞ்சாயத்துகளுக்கு கட்சி அடிப்படையில் இல்லாமல் கட்சி சின்னம் இல்லாமல் சுயேச்சையாக தான் போட்டியிட முடியும். அவ்வாறு சிறப்பு ஊராட்சிகளில் சுயேச்சைகளாக கட்சியினர் போட்டியிட்டால், ஒரே கட்சியினருக் குள்ளும், கூட்டணி கட்சியினருக்கு இடையேயும் பல்வேறு பகுதிகளில் மோதல் உருவாகும் என கருதப்பட்டது. அதுமட்டுமன்றி, ஆளும் கூட்டணியில் அதிக கட்சிகள் இருப்பதால் தமிழகத்தில் உள்ள ஆறு மாநகராட்சிகள் மற்றும் 150 நகராட்சி, மூன்றாம் நிலை நகராட்சிகளில் மட்டும் தான் பொறுப்புகளை பகிர்ந்து கொள்ள முடியும்.

    இதனால் கூட்டணி கட்சிகளுக்கு இடையே உள்ளாட்சிகளை பிரித்துக் கொள்வதில் அதிருப்திகள் உருவாகும். மேலும் பல பகுதிகளில் பதவிக்காக காத்திருக்கும் கட்சியினரை திருப்திபடுத்த முடியாமல் போகும்.

    எனவே தான் 561 சிறப்பு ஊராட்சிகளை பேரூராட்சிகளாக மாற்றி, அங்கு கட்சி அடிப்படையில் உள்ளாட்சித் தேர்தலும் நடத்த அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    இத்துடன் உள்ளாட்சித் தேர்தலுக்கு ஓட்டுச்சாவடிகள் மற்றும் வாக்காளர் பட்டியல் தயாரிப்பதற்கான அறிவுரைகள் கொண்ட கையேடும் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தயாரிக்கப்படும் ஓட்டுச்சாவடி மற்றும் வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அதிகாரி, மாவட்ட பஞ்சாயத்து அலுவலகம், பஞ்சாயத்து யூனியன் அலுவலகம், கிராம பஞ்சாயத்து அலுவலகம் மற்றும் தேர்தல் அதிகாரி முக்கியமானதாக கருதும் இடங்களில் வெளியிடப்படும். வாக்காளர் பட்டியலின் இரண்டு பிரதிகள் அரசியல் கட்சிகளுக்கு இலவசமாக வழங்கப்பட வேண்டும்.

    ஒவ்வொரு வார்டுக்கும் நூறு பிரதிகளை அச்சிடுமாறு மாநில தேர்தல் கமிஷனின் செயலர் தங்கசாமி பிறப் பித்துள்ள அரசாணையில் தெரிவித்துள்ளார்.

    Chidambaram Temple & Thiruvasagam – Coverage by BBC

    BBCTamil.com

    சிதம்பரம் ஆலயத்தில் தமிழில் பாட தடை குறித்த சர்ச்சை

    தமிழ் நாட்டில் புகழ் பெற்ற சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் பொற்சபையிலிருந்து தமிழ் பக்தி பாடல்களான, தேவாரம் , திருவாசகம் போன்றவற்றை பக்தர்கள் பாட, கோவிலை நிர்வகித்து வரும் பொது தீட்சிதர்கள் அனுமதிக்கவேண்டும் என்ற கோரிக்கை குறித்து எழுந்துள்ள சர்ச்சைக்கு, இரு தரப்புகளும் கலந்தோலோசித்து ஒரு தீர்வு காண்பதே சரியானதாக இருக்கும் என்று பொது தீட்சிதர்கள் சங்கத்தின் சட்ட ஆலோசகரும் வழக்குரைஞருமான ஏ.சம்பந்தம் தெரிவித்துள்ளார்.

    தமிழோசைக்கு அளித்த ஒரு பேட்டியில், சம்பந்தம் அவர்கள் இந்த கோவிலில் 1987ம் ஆண்டில், தமிழ் ஆர்வலர்களின் கோரிக்கையை ஏற்று, தீட்சிதர்களே ஆறு கால பூஜைகளின் போது , வேத மந்திரங்களுடன் தேவார திருவாசகப் பாடல்களை பாடிவருவதாகக் கூறினார். ஆனால் இந்த முறை , பக்தர்களும் ஓதுவார்களும் பொற்சபையிலிருந்து தாங்களே இந்த பாடல்களை பாடி இறைவனை வழிபட அனுமதிக்கப்படவேண்டும் என்று கோருவதாலேயே, இந்தப் பிரச்சினை எழுந்துள்ளதாக அவர் கூறினார்.

    இது குறித்து தமிழக அரசின் இந்து அறநிலையத் துறை அதிகாரி இரண்டாண்டுகளுக்கு முன்னரே அளித்த உத்தரவில், தீட்சிதர்கள் பொற்சபையிலிருந்து தேவார, திருவாசகப் பாடல்களைப் பாடலாம் என்றும் மற்றவர்கள் பொற்சபையின் முன்னுள்ள பிரகாரத்திலிருந்து அந்த பாடல்களை பாடலாம் என்றும் கூறப்பட்டிருப்பதாகவும் கூறிய சம்பந்தம், இந்த உத்தரவைத் தாண்டி புதிய முடிவு எடுக்கப்படுமானால் அதன் சட்டபூர்வ தன்மை குறித்து நீதி மன்றங்கள்தான் முடிவு எடுக்க முடியும் என்றார்.

    TV Serials should be Censored – Ramadoss

    Webulagam : TV Serials also forward the Sencor Board-Ramadoss

    டிவி தொடர்களையும் தணிக்கை செய்ய வேண்டும்-ராமதாஸ்!

  • ஆரம்பக் கல்வி தரமாக இருக்க பள்ளி கல்வியில் சீர்திருத்தம் கொண்டு வர வேண்டும்.
  • ஆரம்ப கல்விக்கு என்று தனி அமைச்சர் நியமிக்கப்பட வேண்டும்.
  • அனைத்துத் தனியார் பள்ளிகளிலும், ஏழை மாணவர்களுக்கு 25 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். அந்த மாணவர்களிடம் இருந்து ஒரு ரூபாய் கூட கல்விக் கட்டணம் வசூலிக்கக் கூடாது.
  • விழுப்புரம், சேலம், கோவை, வேலீர் ஆகிய மாவட்டங்களையும் இரண்டாக பிரிக்க வேண்டும். தற்போதுள்ள 31 மாவட்டங்களை 39 மாவட்டங்களாக உயர்த்த வேண்டும்.
  • பொது இடங்களில் அரசியல் உள்ளிட்ட சுவர் விளம்பரங்களுக்கு தடை விதிக்க வேண்டும்.
  • சினிமாவில் பெயர் மட்டும் தமிழில் இருந்தால் போதாது. படம் முழுவதும் ஆங்கில கலப்பு இல்லாமல் இருக்க வேண்டும். தமிழ் பெயருக்கு மட்டும் மக்கள் வரிப்பணத்தை பரிசாக கொடுப்பதை ஏற்க முடியாது.
  • அண்ணி உறவை கொச்சைப்படுத்தல் போன்ற பண்பாட்டு சீரழிவு காட்சிகள் சினிமாவில் இடம்பெறுகிறது. டிவி தொடர்களிலும் கலாச்சார சீரழிவுகளே அதிகமாக உள்ளன. எனவே டிவி தொடர்களையும் தணிக்கை செய்ய வேண்டும்.
  • Continuing School Mishaps and Kumbakonam Inaction

    Dinamani.com – Editorial Page

    தரமான, பாதுகாப்பான கல்வி :: எஸ்.எஸ். இராஜகோபாலன்

    ஜூலை 16 – தமிழகப் பள்ளிக் குழந்தைகள் வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும் நாள். இரண்டாண்டுகட்கு முன்னர் இதேநாளில்தான், கும்பகோணம் கிருஷ்ணா பள்ளி வளாகத்தில் தீயில் வெந்து கருகி 94 குழந்தைகள் மாண்டனர். கல்வி கற்க வேண்டும் என்ற உந்துதலில் அக் குழந்தைகள் பள்ளி நாடி தொலைதூரத்தினின்று வந்தனர். சமுதாயத்தின் அடித்தள மக்களைச் சார்ந்தவர்களாகவே அக் குழந்தைகள் இருந்தனர்.

    ஏன் அவர்கள் கும்பகோணம் பள்ளியை நாடினர் என்ற வினாவிற்கு விடை காண முற்படாது, பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த ஓலை வேய்ந்த கூரையே விபத்திற்குக் காரணம்

    என்று மக்கள் கவனம் திசைதிருப்பப்பட்டது.

    அனைத்துப் பள்ளிகளிலும் ஓலை வேய்ந்த கூரைகள் நீக்கப்பட வேண்டுமென்று முதலமைச்சர் ஆணையிட 24 மணி நேரத்தில் எல்லாப் பள்ளிகளிலும் ஓலைக்கூரைகள் நீக்கப்பட்டன. மாற்றுக் கூரைகள் பல பள்ளிகளில் போடப்படாத நிலையில், மாணவர் திறந்த வெளியில் வெய்யிலையும் மழையையும் பொருள்படுத்தாது கற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். பல அரசுப் பள்ளிகளில் மாணவரிடமிருந்தே கட்டாய வசூல் செய்யப்பட்டு மாற்றுக் கூரைகள் போடப்பட்டன. அரசு எவ்வித நிதி ஒதுக்கீடும் செய்யவில்லை.

    தீ விபத்திற்குக் காரணத்தைக் கண்டு தவிர்ப்பு நடவடிக்கைகள் பற்றிய அறிவுரை வழங்க நீதிபதி சம்பத் தலைமையில் ஒரு நபர் குழு நியமிக்கப்பட்டது. மூன்று மாதத்தில் அறிக்கை கொடுக்க வேண்டுமென்றிருந்தும், அவர் விபத்து நடந்து ஓராண்டு முடிவதற்கு முதல் வாரத்திலேயே அறிக்கை கொடுத்தார். பட்டிதொட்டியெல்லாம் சென்று பள்ளிகளைப் பார்வையிட்டார்.

    மாற்றங்களைப் பெரும் பொருள்செலவில் செய்ய பள்ளிகள் நிர்பந்திக்கப்பட்டனர். ஓராண்டாகியும் அவர் அறிக்கை வெளியிடப்படவில்லை. அறிக்கையில் கூறப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றி யாரும் அறிய மாட்டார். எனவே சம்பத் கமிஷன் சம்பிரதாயத்திற்கு அமைக்கப்பட்ட கண் துடைப்பு பணியே என்று அறியலாம். குழந்தைகள் பாதுகாப்பு மீது உண்மையான அக்கறை இருந்தால், விரைவாக அறிக்கை பெற்று உரிய நடவடிக்கைகள் எடுத்திருக்க வேண்டும்.

    கடந்த முப்பதாண்டுகாலமாக கடைப்பிடிக்கப்பட்டுவரும் இலவச, தரமான கல்வி மறுப்பே கும்பகோணம் விபத்திற்குக் காரணம். விபத்தில் இறந்த 13 குழந்தைகள் வாழ்ந்த நத்தம் கிராமத்தில் பள்ளி கிடையாது. கும்பகோணம் அங்கிருந்து ஏறக்குறைய 7 கி.மீ. எனவே 1 கி.மீ தூரத்தில் பள்ளி அமைத்திருக்கிறோம் என்ற அரசின் அறிவிப்புகள் உண்மையல்ல என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு. ஒரு கட்டடத்தில் ஒரு பள்ளிதான் இருக்க வேண்டும். கிருஷ்ணா பள்ளி வளாகத்தில் மூன்று பள்ளிகள் செயல்பட்டன. ஒன்று அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி, மற்றொன்று ஆங்கில வழிப் பள்ளி. அரசுப்பள்ளிகளும், அரசு உதவி பெறும் பள்ளிகளும் போதுமான ஆசிரியர்களின்றி இயங்குவதால், பெற்றோர் கட்டணப் பள்ளிகளை நாடும் கட்டாயம் ஏற்பட்டதன் விளைவே கிருஷ்ணா பள்ளியைப் பெற்றோர் நாடக் காரணம். மேலும் ஆங்கில வழிக் கல்வி உயர்தரமானது என்ற மாயை தமிழகத்தில் பல ஆண்டுகளாக வளர்த்து விடப்பட்டுள்ளது. தரமான இலவசக்கல்வியை வீட்டிற்கருகில் அரசு அளித்திருந்தால், குழந்தைகள் கிருஷ்ணா பள்ளியை நாடியிருக்க மாட்டார்கள். எனவே விபத்திற்கு ஒட்டுமொத்த பொறுப்பேற்க வேண்டியது அரசே ஆகும்.

    ஜூலை 16 ஆம் நாளை “”குழந்தைகள் பாதுகாப்பு நாள்” என்று அறிவிக்கவும், இறந்துபட்ட குழந்தைகளின் நினைவை நிறுத்த ஒரு நினைவுத்தூண் நிறுவ வேண்டுமென்றும்” விடப்பட்ட வேண்டுகோள்களை அரசு நிறைவேற்றவில்லை. இறந்து பட்டவர் ஏழை எளிய குடும்பத்தைச் சார்ந்தவர் என்பது காரணமோ!

    கும்பகோணம் விபத்து தரும் முதல் பாடம் அரசு தரமான கல்வியை ஒவ்வொரு குழந்தைக்கும் தர வேண்டுமென்பதே. வீட்டிற்கருகில் பள்ளிகள் இருக்க வேண்டும். இம்மாதம் ஒரே வாரத்தில் ஆறு விபத்துகளில் பள்ளிக் குழந்தைகள் இறந்திருக்கின்றனர். பள்ளி தண்ணீர்த் தொட்டியில் விழுந்தும், மின்சாரம் தாக்கியும் குழந்தைகள் பள்ளிகளிலேயே இறந்துள்ளதும் வரலாறு. பள்ளிகள் பாதுகாப்பான இடங்களாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

    உயர்கல்வியும் தமிழ்வழியில் கற்பிக்க வகை செய்வது ஆங்கில வழிக் கல்வியின் மீதுள்ள மோகத்தைக் குறைக்கும். கலை அறிவியல் கல்லூரிகளில் முன்னர் வழங்கி வந்த தமிழ்வழி வகுப்புகளைப் புதுப்பித்தும், விரிவுபடுத்தியும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். அதேபோல, அரசின் பொறுப்பிலுள்ள ஒரு பொறியியல் கல்லூரி, ஒரு மருத்துவக் கல்லூரியிலும் தமிழ்வழி வகுப்புகள் பரீட்சார்த்தமாகத் தொடங்க வேண்டும். தமிழ் வழியில் பயிலும் பெரும்பான்மையான மாணவர் நம்பிக்கையோடு உயர் கல்வி தொடர உதவுவதுடன், தமிழ் மொழியும் அறிவை அள்ளித் தரும் மொழியாக உருவாகும்.

    தமிழகத்தில் தற்போதைய அரசு கல்வித்துறையில் வரவேற்கத்தக்க சீர்திருத்தங்களைக் கொண்டு வந்துள்ளது. நான்கு கல்வி வாரியங்களை இணைத்து ஒரே வாரியம் அமைத்து, பொதுவான கலைத்திட்டம், தேர்வு முறை கொண்டு வர முடிவு செய்திருப்பது கல்வியாளர்கள் நெடுநாள்களாகக் கோரி வந்த ஒரு மாற்றம்.

    அதுபோலவே, தமிழினைக் கட்டாய முதன்மொழியாக அறிவித்ததும், பள்ளிகள் நன்கொடைகளைத் தடை செய்ததும், ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கைகள் எடுப்பதும், தொகுப்பூதிய ஆசிரியர்களை முறைப்படுத்தியதும் நல்ல கல்வி அளிப்பதில் அரசின் அக்கறையை எடுத்துக்காட்டுகின்றன. இதுபோலவே பள்ளிக்கல்வியில் மேலும் பல சீர்திருத்தங்கள் தேவைப்படுகின்றன.

    அரசுப் பள்ளிகளின் நம்பிக்கையைப் பெறும்வகையில் அவற்றின் செயல்பாடுகளை மேம்படுத்த வேண்டும். கும்பகோணம் பள்ளிக் குழந்தைகளின் உயிர்த் தியாகம் நல்ல கல்வி அனைத்துக் குழந்தைகளுக்கும் கிடைக்க வழி செய்வதன் மூலமே ஈடுகட்ட முடியும்.