Monthly Archives: மார்ச் 2016

என்ன கண்ணுடா இது

ஶ்ரீவித்யா: துயர விழிகளின் தேவதை

சின்ன வயதில் தூர்தர்ஷனில் மட்டும்தான் இந்தப் படங்களைப் பார்த்து இருக்கிறேன்.

  • சாவித்ரி – எனக்குத் தோன்றிய பிம்பம்: எப்போது பார்த்தாலும் அழுகை; மூக்கு சிந்தல்; ஜோடியாக பொருந்தா கதாபாத்திரங்கள் (miscast)
  • சாரதா – அய்யஹோ… துலாபாரம்… இப்பொழுது என் பெண்ணிடம் தனுஷ் நடித்த ‘தங்கமகன்’ பார்க்கச் சொன்னாலே, அரண்டு ஓடுகிறாள்.
  • பானுமதி – bearable; அதுவும் ‘தொட்டு நடிக்கக் கூடாது’ என்னும் பிரஸ்தாபம், பிராண்ட் நன்கு முன் வைக்கப்பட்டதால், கொஞ்சம் போல் intrigue

இந்த சமயத்தில் ஸ்ரீவித்யாவும் அபூர்வ ராகங்களும் நிஜமாகவே கொஞ்சம் ஆசுவாசம் கொடுத்தது. மற்றவர்கள் எல்லாம் சோக சாகரத்தில் மூழ்கடித்து வாழ்க்கையையே எதிர்மறையாக, ஏமாற்றமாக, தோல்விகளாக உணர்த்திய போது, இவரைப் பார்த்தால் புத்துணர்ச்சியும் நம்பிக்கையும் வந்தது. அந்தத் தலைமுறையின் குறியீட்டின் எச்சமாக இந்தக் கட்டுரையைப் பார்க்கிறேன்.

srividya-early-years

விக்கிப்பிடியாவின் பட்டியலை பார்ப்போம்:

  1. அறுபதுகள் – ஜெயலலிதா (சரி… திமுக ஆட்சியில் இருந்தால், யாருக்கு விருது கொடுப்பார்கள்)
  2. எழுபதுகள் – சுஜாதா, லஷ்மி
  3. எண்பதுகள்ஷோபா, சரிதா
  4. 90கள்அர்ச்சனா, ரேவதி

நிறைய பேரை விட்டிருக்கிறேன். இருந்தாலும், டக்கென்று பார்த்தால், இவர்கள் எல்லோருமே மெரில் ஸ்ட்ரீப் போல் உருகி நடிப்பவர்கள். அதாவது, சிரமதசையில் இருக்கும் கதாபாத்திரங்களுக்கு மட்டுமே மதிப்பு. விக்ரம் கண் தெரியாதவராக, சிவாஜி கால் முடியாதவராக நடிப்பது போன்று ஏழை பிச்சைக்காரராக திரையில் தோன்றினால் விருது கிடைக்கும், நல்ல நடிகர் என்று மதிப்பு உயரும். இவர்களுக்கு நடுவில் அச்சுபிச்சுத்தனமாக நடிக்கும் மோகன், துள்ளலாக வந்துபோகும் நதியா போன்றோர செல்லுபடியாவதில்லை.

ஸ்ரீவித்யாவும் அப்படிப்பட்ட ஒருவரோ?

இதையெல்லாம் இந்தக் கட்டுரை சொல்வதில்லை என்றாலும், குறிப்பால் உணர்த்துகிறதோ!

Sri_Vidya_Actress_Tamil_Malayalam

 

ஸ்ரீமத் ராமானுஜ வைபவம்: ஆர்.பொன்னம்மாள்

Srimadh_Ramanuja_Vaibhavam_R_Ponnammal_Cover

Via Senkottai Sriram

வானதி பதிப்பகத்தின் சார்பில் நூலாகியுள்ளது. ஆர்.பொன்னம்மாள் எழுதியுள்ளார். ஸ்ரீமத் ராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டு திருநட்சத்திரத்தை ஒட்டி வெளியிடப்பெற்றுள்ள தொகுப்பு!

வழக்கமாக தற்போது நடைபெறும் புத்தக வெளியீடுகள் போல் அல்லாது, வித்தியாசமாக யோசித்தார் வானதியின் பெயரன் சரவணன்.

ஒருநாள் காலை… கைபேசியில் அழைத்தார். அண்ணா, ஸ்ரீமத் ராமானுஜர் புத்தகம் போடுகிறோம்.. என்று சொல்லி, நூல் தலைப்பு, உள்ளடக்க குறிப்பு தொடர்பாக சில விளக்கங்களைக் கேட்டார். சொன்னேன். அடுத்த சில நாட்களில் மீண்டும் அழைத்தார். அண்ணா… நாம ஸ்ரீபெரும்புதூர் போய், அங்கேயே உடையவர் சந்நிதியில் நூலை வெளியிட்டு உடையவர் பாதத்தில் வைத்து வந்துடலாம். நீங்கதான் வெளியிட வரணும். உங்க கையால் வெளியீடு. ராமானுஜ நூற்றந்தாதி பாடிய உஷா பத்மநாபன் அம்மாவ அழைச்சிண்டு வரேன். அவர் முதல் பிரதியை வாங்கிப்பார் என்றார்.

மறுக்கவில்லை. சரியாக நேற்று திருவாதிரை. எம்பெருமானார் திருநட்சத்திரம். காலை அடியேன் பொத்தேரியில் இருந்து வண்டியில் ஸ்ரீபெரும்புதூருக்கு சென்றுவிட்டேன். அவர்களும் வந்தார்கள். சந்நிதிக்குச் சென்று பெருமாளை, உடையவரை ஸேவித்தோம். பாதத்தில் புத்தகக் கட்டை வைத்து ஆசி பெற்றோம். அப்போது நம் எம்பார் ஜீயர் நினைவுக்கு வர, சரவணனிடம் சொன்னேன்…. நம் ஜீயர் ஸ்வாமிதான் புத்தகத்தை வெளியிட சிறப்பானவர். அவர் திருமாளிகைக்குப் போய், அவர் கையாலேயே வெளியிட்டுவிடுவோம் என்றேன்.

Senkottai_Sengottai_Sriram_Book_Release_Ramanujar_Ponamal_Vaishnaivism

அவ்வாறே சென்றோம். ஜீயர் ஸ்வாமி திருமாளிகையில் அன்று அன்பர் குழாம் அதிகம்! அதோடு அதாக, ஜீயர் ஸ்வாமி புன்னகையுடன் நூலை வெளியிட்டு, பிரதியை உஷா பத்மநாபனுக்கும் அடியேனுக்கும் வழங்கினார்.

பின்னர், அப்படியே எல்லாரும் அமருங்கள். பிரசாதம் சாப்டுட்டு போயிடலாம் என்றார் ஸ்வாமி. அருமையான கதம்ப சாதம், தயிர் சாதம்..! பக்கத்தில் உள்ள மதுரமங்கலம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த சிஷ்ய கோடிகள் பாகவத சிரோமணிகள் வழக்கமாக திருவாதிரை நட்சத்திரத்தில் கோயிலுக்கு வந்துவிட்டு ஸ்வாமி சந்நிதிக்கு வந்து மதியம் சாப்பிட்டு விட்டுச் செல்வார்களாம். அதனால் ஒரே தடபுடல்!

பரம திருப்தியுடன் எளிய, ஆனால் ஆத்மார்த்தமான ஒரு நிகழ்வுடன் அங்கிருந்தே அலுவலகம் விரைந்தேன்.

பின் இணைப்பு:
புத்தகம் குறித்து பலரும் விசாரிப்பதால், வானதி பதிப்பக எண் தருகிறேன்… போனில் விசாரித்துக் கொள்ளுங்கள்..
VANATHI PATHIPPAKAM
23,Deenadayalu street,T.nagar, Chennai-17
Ph-no: 044 – 2434 2810 / 2431 0769

செங்கோட்டை ஸ்ரீராம்

Srimadh_Ramanuja_Vaibhavam_R_Ponnammal_Back_Cover_Book

நூலின் முன்னுரையில் சுதா சேஷய்யன் எழுதியதில் இருந்து சில பகுதிகள்:

(இந்த நூலின்) சிறப்பு, நூலின் எழுத்தமைப்பால் ஏற்படுகிறது. பன்னெடுங்காலமாகப் புழக்கத்தில் உள்ள செய்திகளை, அதுவும் மரபும், சமயமும் சார்ந்த செய்திகள, எடுத்துரைக்கும்போது, அவ்வாறான நூலின் மொழி நடை, பாரம்பரியமும், பரிபாஷையும் சார்ந்ததாக அமைந்துவிடும் வாய்ப்பு உண்டு. மிகுதியான பரிபாஷைச் சொற்களும் வடமொழி மணிப்ரவாளச் சொற்களும் கலந்துவிடுமானால், வாசகர்கள் பால்ர் ஒதுங்கிவிடுவார்கள். குறிப்பாக இளைய தலைமுறை வாசகர்கள் அத்தகைய நூலைக் கையிலெடுக்கவே தயக்கம் காட்டுவார்கள்.

Srimadh_Ramanuja_Vaibhavam_R_Ponnammal_Sudha_Seshayyan_1

நூலின் மூன்றாவது சிறப்பு, கருப்பொருளுக்கு முன்னாலும், பின்னாலும் உள்ள வரலாற்றுக் குறிப்புகளைத் தக்க இடங்களில், தக்க முறைகளில் அமைத்திருக்கும் பாங்கு. …

Srimadh_Ramanuja_Vaibhavam_R_Ponnammal_Sudha_Seshayyan_2_Munnurai_Preface

… வைணவ குரு பரம்பரையின் பிரபாவத்தை வாசகனுக்குக் கொடுக்க வேண்டும் என்பதை உணர்ந்த நூலாசிரியர், அதற்கான தகவல்களை, திருமலை நம்பி – ராமானுஜர் ஆகியோரின் உரையாடல்களில் பொதித்துக் கொடுப்பது மிகச் சிறந்த யுத்தி.

வைணவ உரைகளில் ‘ஈடுகள்’ முக்கிய இடம் பெறுகின்றன. ஈடு என்பது என்ன, எதைக் கொண்ட ஈட்டுக் கணக்கு வருகிறது போன்ற தகவல்களையும் நூலாசிரியர் போகிற போக்கில் விளக்கியுள்ளார்.
Srimadh_Ramanuja_Vaibhavam_R_Ponnammal_Sudha_Seshayyan_3

சாந்தோம் பள்ளியும் பிரபு தேவாவும் நானும்

Santhome_High_Scholl_Four_4_Class_Grade_Prabhu_Deva

இந்தப் புகைப்படங்களில் நான் எங்கே இருக்கிறேன்? சிவப்பு வட்டத்திற்குள் இருப்பவர் பிரபுதேவா.

நடிகர் + இயக்குநர் பிரபு தேவா தி ஹிந்துவில் வாரந்தோறும் பத்தி எழுதுகிறார். அதில் கிடைத்தவை இவை இரண்டும்:

1. இதுதான் நான் 12: அழுதா அழுவாங்க… சிரிச்சா சிரிப்பாங்க!

சென்னையில் நான் படிச்ச சாந்தோம் ஸ்கூலுக்கும், அதுக்கு பக்கத்துல இருந்த செயின்ட் பீட்ஸ் ஸ்கூலுக்கும் இடையிலதான் ரோஸரி கேர்ள்ஸ் ஸ்கூல் இருக்கு. பாய்ஸ் ஸ்கூலுக்குப் பக்கத்துல ஒரு கேர்ள்ஸ் ஸ்கூல் இருந்தா, அந்த வயசுல மனசுக்கு ஜாலியா இருக்கத்தானே செய்யும்! அதுக்கும் போட்டியா ஒரு பாய்ஸ் ஸ்கூல் எதிர்ல இருந்தா எப்படி? அதுமட்டுமல்ல; நாங்க கிரிக்கெட்ல பெஸ்ட் காட்டினா, செயின்ட் பீட்ஸ் பசங்க ஃபுட்பாலில் சாமர்த்தியம் காட்டுவாங்க. நாங்க தமிழ் பேசுவோம். அவங்க இங்கிலீஷ் பேசுவாங்க.

இப்படி சின்னச் சின்ன எதிரெதிர் விஷயங்கள் இருந்தன. அதனாலேயே ரெண்டு ஸ்கூல் பசங்களுக்கும் எப்பவும் ஒரு கேப் இருக்கும். இதையெல்லாம் ஒருத்தரோட ஒருத்தர் பார்வைகள்ல காட்டுறதோட சரி. எப்பவுமே சண்டை போட்டுக்கிட்டதே இல்லை.

2. இதுதான் நான் 13: 12பி பஸ்ஸும் 5 பைசா வெல்லமும்

சாந்தோம் ஸ்கூல் கிரவுண்ட் ரொம் பவும் பெருசு. அப்போ ஃபுட்பால்தான் என் விருப்பம். கிரவுண்ட்ல ஒரே நேரத்துல 800 பேர் விளையாடலாம். பதினோறு பதினோறு பேராப் பிரிஞ்சி விளையாடு வோம். எந்த பந்து எங்களோடதுன்னு சரியா கண்டுபிடிச்சு விளையாடுவோம். பெரும்பாலும் கையில சிலிப்பரை வெச்சிக்கிட்டேதான் விளையாடுவோம். அதை யாராவது எடுத்துட்டு போய்டு வாங்களோன்னுதான்.

Santhome_High_Scholl_Six_6_Class_Grade_Prabhu_Deva

இப்பொழுது இந்தப் புகைப்படங்களில் நான் எங்கே இருக்கிறேன் எனத் தேடினேன். சில விஷயங்கள் புலப்பட்டது.

அ) எனக்கு எப்போதும் தரை டிக்கெட்டோ அல்லது ஓரத்தில் ஒரு இடமோ ஒதுக்கப்பட்டிருக்கிறது. நண்பர்களின் நடுவில் நிற்க வைத்துக் கொள்ளும் சாமர்த்தியம் போதவில்லை. மண்ணில் உட்காருவதை பெரும்பாலானோர் கௌரவமாக உணராததால், அது மட்டுமே எடுத்துக் கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறேன்.

தொடர்புள்ள பதிவு: Shut Up and Sit Down – The New Yorker

ஆ) என்னை நானே அடையாளம் தெரிந்து கொள்ளுமளவுக்கு சுய ப்ரேமை இன்றி இருந்திருக்கிறேன். கண்ணாடியில் அடிக்கடி முகம் பார்ப்பது; சின்ன வயதில் நிறைய நிழற்படம் எடுத்து ஒப்புமைக்காக சரி பார்த்து, பள்ளி க்ரூப் போட்டோவில் தெரிந்து கொள்வது எல்லாம் சாத்தியம் இல்லை.

தொடர்புள்ள பதிவு: The Freedom of Young Photographers – The New Yorker

இ) ஜெயலலிதா எங்கே உட்கார்ந்து இருந்தாரோ, அங்கேதான் அமர்ந்து இருக்கிறேன்.

Jayalalitha_Child_kid_JJ_School_Group_Photo_Bishop+Cotton_Bangalore

உ) பிரபுதேவாவினால் நிறைய விஷயங்களைச் சொல்ல இயலவில்லை. ‘ஒரு நாள் இரவில்’ போல் திரைப்படமாக எடுத்தாலோ அல்லது புனைவினாலே மட்டும் சாத்தியப்படக்கூடிய விஷயங்கள் நிறைய இருக்கிறது. அவர் நன்றாகப் படிக்கக் கூடிய மாணவர். பத்தாம் வகுப்பிற்குப் பிறகு எங்களுக்கு கால்பந்து ஆர்வம் போய் வேறு விஷயங்களில் நாட்டம் வந்து சுற்றுலா சென்றது என்று நிறைய சங்கதிகளை எழுதினால், ’இவன் தான் பாலா’ ஆகக்கூடிய அபாயங்களைத் தவிர்த்துவிடுகிறார்.

Naan Than Bala