Monthly Archives: செப்ரெம்பர் 2006

சுருக் + சறுக் + நறுக் <> பகீர் (5)

Learn Tamil in 30 Daysஜெகத்ரட்சகனுக்கு பிரான்ஸ் கம்பன் கழக விருது:

ஆழ்வார்கள் ஆய்வு மைய நிறுவனச் செயலர் டாக்டர் எஸ். ஜெகத்ரட்சகனுக்கு இலக்கியப் பணிக்காக இவ்விருது வழங்கப்படுகிறது. விழாவில் கலந்து கொண்ட நிருபர், ஆர்.எம்.வீரப்பனைக் குறித்து கம்பன் பாடவில்லையே என்று ஜெகத்ரட்சகனார் நெக்குருகி நின்றதை மனமுருகி வர்ணித்தார்.

The Holy Bookமேலும், ‘வள்ளுவர் கோட்டம்’ என்பது எதுகையும் இல்லாமல் மோனையும் இல்லாமல் மொண்ணையாக இருப்பதால், ‘கம்பன் கோட்டம்‘ என்று ஒன்றை அமைப்பதை டாக்டர் கலைஞரிடம் கோரிக்கை வைத்திருப்பதை உணர்ச்சிகரமாக பேசியிருக்கிறார். ‘அகில உலக கம்பன் கழக விருது’ கொடுத்தால் கலைஞர் கருணாநிதியிடம் மனு வைக்க முடியும் என்று முழக்கத்தை முடித்துக் கொண்டிருக்கிறார்.

நன்றி: திண்ணை


| |

Pakistan ‘role in Mumbai attacks’

செய்தி: பிபிசி

மும்பை குண்டுவெடிப்புகளைத் துப்பறிந்த இந்திய காவல்துறை, 186 மக்கள் இறந்த சதிக்கு பாகிஸ்தானின் உளவுத்துறையே காரணம் என்று கண்டுபிடித்துள்ளது. பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. திட்டமிட்டு, லாஷ்கர்-இ-தொய்பா (Lashkar-e-Toiba) நிறைவேற்றியிருக்கிறது. சிமி (Students’ Islamic Movement of India)யும் நாசவேலைக்கு உடந்தையாக இருந்திருக்கிறார்கள்.

பாகிஸ்தானில் பயிற்சியும் பெற்றிருப்பது தெரியவந்துள்ளது.

பாகிஸ்தானின் தகவல்துறை அமைச்சர் இந்த துப்பு துலக்கின் முடிவுகளை நிராகரித்துள்ளார். ஆதாரமற்ற குற்றச்சாட்டை இந்தியா முன்வைத்துள்ளதாக தாரிக் ஆஸிம் கான் (Tariq Azim Khan) பிபிசியிடம் சொன்னார். பாகிஸ்தானின் மதிப்பை இந்தியா தொடர்ந்து பாழ்படுத்துவதன் நோக்கத்தின் ஓர் அங்கமே இந்த முடிவுகள் என்று முடித்துக் கொண்டார்.

  • இந்தியா எந்தவிதமான ஆதாரங்களைக் கொடுத்துள்ளது என்பது இன்னும் தெரியவில்லை.
  • பாகிஸ்தான் நேரடியாக சம்பந்தப்பட்டிருந்த பிற விஷயங்களுக்குப் புத்தகம் போட்டு பணம் பண்ணும் முஷாரஃப் இந்த அத்தியாயத்தை இரண்டாம் பதிப்பில் இணைப்பதற்காக சுறுசுறுப்பாக எழுதுவதாக தெரிகிறது.
  • புதிய வெளியுறவு அமைச்சராக (தினமணி: External Affairs Minstry – Conundrum for Prime Minister « Tamil News: யார், புதிய வெளியுறவு அமைச்சர் – நீரஜா சௌத்ரி :: தமிழில்: லியோ ரொட்ரிகோ) எவரும் இல்லாத நிலையில் நட்வர் சிங்காவது ஜஸ்வந்த்தாக புத்தகம் எழுதுவாரா என்பது தெரியவில்லை.
  • ஆஃப்கானிஸ்தானில் தலிபான் தலைகள் மறைந்திருப்பதாக தெரிந்தவுடன் தாக்கிய அமெரிக்கா போல், இந்தியா பாகிஸ்தானை தாக்க முடியாத நாடாக இருக்கிறது என்பது தெரிகிறது.
  • பாகிஸ்தானின் கைவரிசையுடன் கூடிய அப்பாவி இந்திய மக்கள் இறக்கும் அடுத்த குண்டுவெடிப்பு வரை பாகிஸ்தானை கண்டித்து பதிவு வெளிவிடுவேனா என்பது தெரியவில்லை.

    முந்தைய பதிவுகள்
    1. Train Stories

    2. Attacks continue in India: இந்தியாவில் தீவிரவாதம் & மும்பை குண்டுவெடிப்புகள்


    | |

  • சுருக் + சறுக் + நறுக் <> பகீர் (4)

    Kallu Shap menuகள் குடித்தால் 10 கிலோ அரிசி இலவசம்: கள்ளுக்கடையில் நூதன அறிவிப்பு:

    சிக்குன் குனியாவால் குடிக்க காசு கிடைக்காமல் வீட்டிலேயே கூலித் தொழிலாளர்கள் முடங்கி விட்டார்கள். வியாபாரம் படுத்து விட்டது. அதன் பின் இன்று,

    ‘கல்லாப்பெட்டி பொங்கி வழியுமாறு மாறியதன் ரகசியம் என்ன?’

    என்பதை அறிந்து கொள்ள கள்ளுக்கடை அதிபரை தொலைபேசியில் தொடர்பு கொண்டேன்.

    in a toddy (local palm wine) shop.....Keralaவந்தாரை வாழவைக்கும் தமிழகத்தில் சாயா கடை போடலாமா என்று கள்ளுக்கடை யோசித்தபோது தமிழக அரசியல் இவருக்கு கை கொடுத்ததாக தெரிகிறது. தேர்தல் சமயத்தில் இலவச அரிசி வாக்குறுதி போல், சாராயம் ஊற்றிக் கொள்ள வருபவர்களுக்கு பத்து கிலோ அரிசி தருவதாக அறிவித்தவுடன் ஆட்சியைப் பிடித்த கட்சியாக கூட்டம் அலைமோதுகிறது.

    நன்றி: திண்ணை


    | |

    சுருக் + சறுக் + நறுக் <> பகீர் (3)

    Google finally in Cairo!தமிழகத்தில் ஆன்லைன் வர்த்தகத்தால் பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களின் விலை கடுமையாக உயர்வு:

    இணையத்தினாலும் உலகமயமாக்கலினாலும் நிகழும் சாபக்கேடாக பணவீக்கம், நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக, சூடு மீட்டர் பொருத்திய ஆட்டோவாக எகிறுகிறது. ஆன்லைன் வர்த்தகத்தால் நமது நாட்டில் தங்கம் மற்றும் வைரம் போன்ற ஆடம்பர பொருள்களில் விலைகள் மட்டும் உயர்ந்து வந்தது.

    தற்போது மக்களின் அத்தியாவசிய பொருள்களின் விலையும் உயரத் தொடங்கி இருப்பதை Sacks of lentilsவலைவாசிகளிடம் விசாரித்தேன். ‘

    இணையத்தில் இப்போது தமிழில் மிகப் பலர் எழுத ஆரம்பித்திருக்கிறோம். அதன் நேரடிப் பலனாக விகடன் வாசகர் வட்டம் அதிகரித்துள்ளது. இந்தியாவிலேயே #1 ஆனார்கள். குங்குமமோ போட்டி போட்டுக் கொண்டு சோப்பு, சீப்பு கொடுத்தாலும் சல்லிசாக இதழ் நடத்துகிறது. விற்பனையில் சாதனை புரிகிறது. இதெல்லாம் கூட வலையின் வீச்சினால்தான் சாத்தியப்படுகிறது. படிப்பவர்கள் பதிவுகளைப் படிப்பதற்கு பயந்து, ப்ரிண்ட் புத்தகத்தை படிப்பதற்கு ஓடுவது சாதகமான உபாதைதானே!’

    என்று எதிர் கேள்வி எழுப்பி முடித்துக் கொண்டார்.

    நன்றி: திண்ணை


    | |

    Who will be the Next Mayor of Chennai?

    Dinamani.com – Chennai Page

    சென்னை மாநகராட்சி அடுத்த மேயர் யார்?

    சென்னை, செப். 29: சென்னை மாநகராட்சித் தேர்தலில் வெற்றிபெற வாய்ப்புள்ள வேட்பாளர்கள் அடிப்படையில், மேயர் பதவிக்கு யார் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்பது குறித்து பல்வேறு யூகங்கள் உருவாகியுள்ளன.

    புதுப்பேட்டை பகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் நா. பாலகங்கா, சைதாப்பேட்டை பகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மா. சுப்பிரமணியன், கிண்டி பகுதியில் போட்டியிடும் கா. தனசேகரன் ஆகியோரிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

    சென்னை மாநகராட்சி கவுன்சிலர் தேர்தலில் அதிக இடங்களில் தி.மு.க. வெற்றி பெற்றால், மேயர் பதவிக்கு திமுக சார்பில் போட்டியிடும் மா. சுப்பிரமணியன், கா. தனசேகரன் ஆகியோரில் ஒருவர் பெயர் முன்மொழியப்படும் என எதிர்பார்கப்படுகிறது.

    1996-ம் ஆண்டு மு.க. ஸ்டாலின் மேயராக இருந்தபோது மா. சுப்பிரமணியன் கவுன்சிலராக வெற்றிபெற்று பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி சிறந்த கவுன்சிலர் விருது பெற்றார்.

    2001-ம் ஆண்டு கவுன்சிலராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு எதிர்க்கட்சி வரிசையில் இருந்தபோதும் பல்வேறு விவாதங்களில் பங்கேற்றவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    2005-ம் ஆண்டு சென்னை எம்.ஜி.ஆர் நகரில் வெள்ள நிவாரண விநியோக மையத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழக்கக் காரணம் என்று கூறி கைது செய்யப்பட்டவர் தனசேகரன். பின்னர் இவர் மீதான வழக்கில் எவ்வித ஆதாரமும் இல்லை என்று கூறி நீதிமன்றம் இவரை விடுவித்தது.

    அதே வேளையில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் அதிக எண்ணிக்கையில் வெற்றி பெற்றால், மேயர் பதவிக்கு தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய முன்னாள் தலைவர் நா. பாலகங்காவின் பெயர் முன் மொழியப்படும் எனத் தெரிகிறது.

    2001-ம் ஆண்டு மேயர் பதவிக்கு நடைபெற்ற நேரடித் தேர்தலில் பாலகங்கா போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. எது எப்படியோ 155 கவுன்சிலர்களில் ஒருவர்தான் மேயராக முடியும் என்பதால் மேயர் தேர்தலுக்கான முக்கியத்துவம் இந்த முறை கவுன்சிலர் தேர்தலுக்குக் கிடைத்துள்ளது.

    சுருக் + சறுக் + நறுக் <> பகீர் (2)

    ‘திரை உலகுக்கு கருணாநிதி அளித்த பரிசுகளை யாரும் பறிக்க விடாதீர்கள்’ பாராட்டு விழாவில் ரஜினிகாந்த் பேச்சு:

    Tamil Nadu - e-LECTIONS 2006இவரை அடுத்து இனி ஆட்சிக்கு யார் வந்தாலும் 2006-ல் திரையுலகுக்கு கலைஞர் அளித்த பரிசுகளை யாரும் பறிக்க விடாதீர்கள். அதற்காக நானும் துணை நிற்பேன்.” என்று ரஜினி பேசியதாக பத்திரிகை செய்திகள் தெரிவித்தது. சிவாஜி பட ஷூட்டிங்கில் இடுப்பு வளையாததால் ஷங்கரிடம் திட்டு வாங்கி கடுப்பில் இருந்த சூப்பர் ஸ்டாரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.

    ss‘கேயெஸ் ரவிக்குமாரா இருந்தால் விரலை மட்டும் “விஷ்க் விஷ்க்” என்று அசைக்க சொல்வான். இவன் ரொம்பப் படுத்தறான்’ என்று உடம்பின் நோவைப் பகிர்ந்தார். தொடர்ந்து, ‘நான் பேசியதை மாற்றி விட்டார்கள். கருணாநிதிக்கு இஸ்லாமிய இலக்கிய கழகம் கொடுத்த உமறுப்புலவர் விருது கிடைத்திருக்கிறது. மேலும் ஆழ்வார், ஆரெம்வீ என்று பலரும் பல பரிசுகளையும் பட்டங்களையும் கொடுக்கிறார்கள். ‘கருணாநிதிக்கு அளித்த பரிசுகளை யாரும் பறிக்க விடாதீர்கள்’ என்று சொல்ல வேண்டியது, ஷங்கர்ஜி கொடுத்த டார்ச்சரில் நாகுழறி விட்டது’ என்றார்.


    | |

    சுருக் + சறுக் + நறுக் <> பகீர் (1)

    musharraf_book

    Manmohan-Musharraf-NY-25-10-2004பாகிஸ்தான் அதிபர் முஷாரப் :: நெருப்புக் கோட்டினில்: ஒரு நினைவுக் குறிப்பு:

    ஜேம்ஸ் ஃப்ரே (James Frey) என்று ஒருவர் இருக்கிறார். “A Million Little Pieces” என்னும் நனவோடை எழுதினார். பால்ய காலத்தின் பாலியல் கொடுமைகளை புத்தகமாக்கினார். இணைய ஆய்வாளர்கள் அது அவருடைய சொந்தக் கதை அல்ல என்பதை பிட்டு வைத்தவுடன் ‘கண்டு / கேட்டு / தீர விசாரித்து’ கட்டியதை சொன்னவுடன், கட்டுரை பகுதியில் இருந்த புத்தகத்தை, ‘புனைவு’ என்று வகை செய்து மாற்றினார்கள்.

    Times of India cartoonபாகிஸ்தான் அதிபர் பர்வீஸ் முஷாரப் எழுதி உள்ள புத்தகத்தில் கூறியருப்பதை சரிபார்க்க கூகிள் வழியாக ‘நியூக்ளியர்’ என்று இஸ்லாமாபத்தில் தேடியவர்களைக் கண்டுபிடித்து என் விசாரணையைத் துவக்கினேன். பாகிஸ்தான் நுட்பங்களை காப்பி அடித்து இந்திய அணுவிசை திட்டங்கள் உருவாக்கப்பட்டது என்பது கட்டுக்கதை என்பதை பாகிஸ்தானின் தொழில்நுட்பியலாளர் அப்போது தெரிவித்தார். மேலும் ‘கூகிள் அந்தக் காலத்தில் இல்லை’ என்று நினைவூட்டி ‘லெக்சிஸ்-நெக்சிஸ்’க்கு யுரேனியம் செறிவூட்டல் ப்ராஜெக்ட் நன்றிக்கடன் பட்டிருப்பதாக முடித்துக் கொண்டார்.


    | |

    Bottlencks in electing Dalits as Local Body Leader – Theni : Okkaraipatti

    Dinamani.com – TamilNadu Page

    தலைவர் பதவி தாழ்த்தப்பட்டோருக்கு ஒதுக்கீடு: உறுப்பினர்கள் பதவிக்கு போட்டியிடாமல் புறக்கணிப்பு

    தேனி, செப். 28: தேனி மாவட்டம் ஒக்கரைப்பட்டி ஊராட்சிமன்ற தலைவர் பதவி சுழற்சி முறையில் தாழ்த்தப்பட்டோருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டதால், இவ் ஊராட்சியின் வார்டு உறுப்பினர்கள் பதவிக்கு போட்டியிடாமல் இவ்வூர் மக்கள் புறக்கணிப்பு செய்துள்ளனர்.

    இந்த ஊராட்சியின் தலைவராக 1965-ம் ஆண்டிலிருந்து அங்கு பெரும்பான்மையாக வசிக்கும் நாயுடு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தலைவராக பதவி வகித்து வந்துள்ளனர்.

    இந்நிலையில் சுழற்சி முறையில் ஊராட்சித் தலைவர் பதவி, இத்தேர்தலில் தாழ்த்தப்பட்டோருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, தலைவர் பதவிக்கு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த 4 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர். ஆனால் 6 வார்டு உறுப்பினர் பதவிகளில் 4 பேர் பொதுப் பிரிவிற்கும், 2 பேர் தாழ்த்தப்பட்டோருக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    ஊராட்சிமன்றத் தலைவர் பதவியை தாழ்த்தப்பட்டோருக்கு ஒதுக்கீடு செய்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து, இந்த ஊராட்சி மக்கள் வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு மனுத்தாக்கல் செய்யவில்லை.

    இதனால் ஊராட்சித் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், வளர்ச்சித் திட்டப்பணிகளை நிறைவேற்ற முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

    வேட்புமனு வாபஸ்?: ஊராட்சிமன்ற வார்டு உறுப்பினர் பதவிக்கு கிராம மக்கள் மனுத்தாக்கல் செய்யாமல் புறக்கணித்துள்ளதால், தலைவர் பதவிக்கு மனுத்தாக்கல் செய்துள்ள 4 பேரும் தங்களது வேட்புமனுக்களை வாபஸ் பெறக்கூடும் என்ற கருத்து நிலவுகிறது. இல்லையெனில் அங்குள்ள பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த கிராம மக்கள் வாக்களிக்காமல் தேர்தல் புறக்கணிப்புச் செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிய வருகிறது.

    Pappapatty & Keeripatty gets Electoral candidates after 10 Years

    Dinamani.com – TamilNadu Page

    10 ஆண்டுகளுக்குப் பின்னர் கீரிப்பட்டி ஊராட்சிக்கு மனு தாக்கல்

    உசிலம்பட்டி, செப். 28: தலித்துகளுக்கு ஒதுக்கப்பட்டதால் 10 ஆண்டுகளாகத் தேர்தல் நடைபெறாமல் இருந்த மதுரை மாவட்டம், கீரிப்பட்டி ஊராட்சித் தலைவர் பதவிக்கு தற்போது வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    இதேபோன்று பாப்பாபட்டி, நாட்டார்மங்கலம் ஊராட்சித் தலைவர் பதவிகளுக்கும் வேட்புமனுக்கள் ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

    இந்த கிராமங்களில் ஜனநாயக நடைமுறையை மலரச் செய்ய மாவட்ட ஆட்சியர் த. உதயசந்திரன் மேற்கொண்ட முயற்சிகளுக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது.

    கீரிப்பட்டி பஞ்சாயத்துத் தலைவர் பதவிக்கு பால்ச்சாமி, எஸ்.பரமன், ஏ.சுப்பன் ஆகியோர் புதன்கிழமை மனு தாக்கல் செய்தனர்.

    கீரிப்பட்டி 1-வது வார்டுக்கு காசிமாயன், பழனியம்மாள். 2-வது வார்டுக்கு சுப்பையா, தவசித்தேவர், 3-வது வார்டுக்கு சுப்பன், நாகஜோதி ஆகியோர் மனு தாக்கல் செய்துள்ளனர்.

    பாப்பாபட்டி: பாப்பாபட்டி ஊராட்சித் தலைவர் பதவிக்கு பேச்சியம்மாள், பெரியகருப்பன், ஜெயக்கண்ணன் ஆகியோர் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

    பாப்பாபட்டி 1-வது வார்டுக்கு தேவராஜ், பாண்டி, ராஜேஸ்வரன், தவமணி, சின்னத்தாய், முருகன் ஆகியோர் மனுச் செய்தனர்.

    2-வது வார்டுக்கு மொக்கராஜ், ராஜப்பன், அலமு, மாயன், பேச்சியம்மாள், மோளத்தேவர் ஆகியோர் உதவித் தேர்தல் அதிகாரி தர்மராஜிடம் மனு தாக்கல் செய்தனர்.

    நாட்டார்மங்கலம்:நாட்டாமங்கலம் 1-வது வார்டுக்கு கென்டியான் மகன் பெருமாள், ராஜா மனைவி வசந்தா, 2-வது வார்டுக்கு பூசாரி சிங்கம் மனைவி பவுன்தாய் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

    உசிலம்பட்டி நகராட்சி: உசிலம்பட்டி நகராட்சி 5-வது வார்டுக்கு மதிமுக சார்பில் அடைக்கலம், 19-வது வார்டுக்கு ஜே.டி.குமார், 9-வது வார்டு (ஊராட்சி) பழனித்துரை, 3-வது வார்டுக்கு சிவனம்மாள் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர்.

    One More Papparapatti, Keeripatti in the Making

    Dinamani.com – TamilNadu Page

    கூத்தப்பார் பேரூராட்சித் தலைவர் பதவி: ஒருவர்கூட மனுச் செய்யவில்லை

    திருச்சி, செப். 28: திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகேயுள்ள கூத்தப்பார் பேரூராட்சித் தலைவர் பதவிக்கு ஒருவர்கூட மனு தாக்கல் செய்யவில்லை.

    18 வார்டுகளைக் கொண்டது கூத்தப்பார் பேரூராட்சி. திருச்சி மாநகருக்கு அருகிலுள்ள இப்பேரூராட்சித் தலைவர் பதவி சென்ற தேர்தல் வரை பொதுத் தொகுதியாக இருந்தது. இதுவரை கிராமத்தினர் ஒன்றுகூடி தலைவர் மற்றும் உறுப்பினர்களை ஒருமனதாகத் தேர்வு செய்துள்ளனர்.

    சுழற்சிமுறையில் ஏற்பட்ட மாற்றத்தில் கூத்தப்பார் பேரூராட்சித் தலைவர் பதவி, எஸ்சி-எஸ்டி வகுப்பினருக்கான தொகுதியாக ஒதுக்கப்பட்டது. இதையடுத்து தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதல் கூத்தப்பார் பேரூராட்சி அலுவலகத்தில் வேட்பு மனுக்களும் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

    22-ம் தேதி 7 மனுக்களும், 23-ம் தேதி 1, 25-ம் தேதி 1, 26-ம் தேதி 21, 27-ம் தேதி 11 என 41 மனுக்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் கடைசிவரை ஒருவர்கூட வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. இதுகுறித்து பேரூராட்சியின் செயல் அலுவலரும் தேர்தல் அலுவலருமான பி. அழகிரிசாமி கூறியது:

    மனுக்களை வாங்கிச் சென்றவர்களும்கூட மனு தாக்கல் செய்யவில்லை. இது தொடர்பாக ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் விளக்கமளித்து விட்டேன்’ என்றார்.

    இதுவரை ஊர்க் கூட்டத்தில் தலைவர் மற்றும் உறுப்பினர்களை ஒருமனதாகத் தேர்வு செய்து வந்த பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தற்போது எஸ்சி தொகுதியாகத் தலைவர் பதவி ஒதுக்கப்பட்டதையடுத்துப் புதிய தலைவரைத் தேர்வு செய்வதில் திணறியதாகக் கூறப்படுகிறது.

    திமுக, அதிமுக உள்ளிட்ட எந்தப் பெரிய கட்சியும் வேட்பாளர்கள் தேர்வுப் பட்டியலிலும் கூத்தப்பாரைக் குறிப்பிடவில்லை.