Monthly Archives: நவம்பர் 2008

இதுவரை உளறியது

நன்றி: உளறல்

தெரியல’ என்பதற்கு இரண்டு அர்த்தங்கள்: விளங்கவில்லை (அல்லது) பார்க்க முடியவில்லை

நான் சட்ட அமைச்சரானால்:

1. மந்திரியாக பதவியேற்பதற்கு குறைந்தபட்சம் இரண்டாண்டுகளாவது லோக் சபா எம்.பி. ஆக இருத்தல் அவசியம்

2. எம்.எல்.ஏ, எம்.பி.க்கள் இரு முறைகளுக்கு மேல் ஒரே தொகுதியில் இருந்து தேர்தலில் நிற்க முடியாது.

3. இருபது ஆண்டுகளுக்கு மேல் தொடர்ச்சியாக மந்திரி பதவி/எம்.எல்.ஏ/எம்.பி ஆக இருக்க முடியாது. கட்டாய ஓய்வு தரப்படும்.

ஆகிய சட்டங்கள் அமலாக்கப்படும்.


மின்னஞ்சலில் கிடைத்த விவாதக் கருத்து:

“புரட்சி என்று நாடுபவர்கள் கருத்தளவிலும், அமைப்பளவிலும் செயல் திறன் போதாத மக்கள்.

பல கோடி மக்களின் வாழ்வில் நெருப்பைக் கொட்டி கருக அடித்த ஒரு பெரும் செயலை — புரட்சி என்று கொண்டாடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றன.

நம் தனிமனித இயலாமைகளை மக்கள் திரள் இயலாமையாக மாற்றி நம்மை அடியோடு திருத்தினால்தான் நம் வாழ்வு மாறும் என்ற நிலை போலவே சமுதாயமும் என்று கருதும் ஒரு வித கிட்டப் பார்வை இது (myopia).

உடோபியாவுக்குக் கடும் எதிரி மயோபியா. 🙂

அதே நேரம் உடோபியக் கனவுக்கு மக்கள் பலியாகாமல் தவிர்த்துப் பாதுகாப்பதும் மக்களின் மயோபியாதான்.”


  1. நண்பரின் நக்கல் நறுக் :: எல்லாருக்கும் ஏதோ குருட்டுத்தனம் இருக்கும், இவருக்கு இடது கண்ணில் ஒரு பக்கம் பார்வை தெரியாது என்று வைத்துக் கொள்வோம் என்று விட்டு விட்டேன். அவர் கண், அவருக்குக் குருட்டுத்தனம், நமக்கென்ன? அதைக் கட்டுரையாக எழுதி நம் மேல் திணித்தால், படிக்காமல் இருந்து விட்டால் போகிறது.
  2. “The bloody massacre in Bangladesh quickly covered over the memory of the Russian invasion of Czechoslovakia, the assassination of Allende drowned out the groans of Bangladesh, the war in the Sinai Desert made people forget Allende, the Cambodian massacre made people forget Sinai, and so on and so forth until ultimately everyone lets everything be forgotten.”
    – Kundera
  3. டவுன்லோடிட்டு பார்த்த திரைப்படத்தை விமர்சிப்பது, நண்பனின் டாவுக்கு மார்க் போடுவதற்கு ஒப்பாகும் என்றார் ஃபிகரின் அப்பாவாகிய விநியோகஸ்தர்.

பா ராகவன் :: (குதிரைகளின் கதை தொகுப்பு)

1. யுவர்ஸ் ஒபீடியன்ட்லி

இருக்கும் வரை எட்டிப் பார்க்காத அக்கறைகளும் அனுதாபங்களும், இறந்தபின் எல்லோருக்கும் எப்படியோ வந்துவிடுகிறது. மரணம் ஒரு நல்ல மருந்து. உயிரோடு இருக்கும் பலரின் மனநோய்களை அது சட்டென்று குணப்படுத்திவிடுகிறது

2. மூன்று காதல்கள்

அரச மரத்தடியில் கொண்டு வைத்த பிள்ளையார் சிலை போல், மாற்றங்களற்றுப் போனது வாழ்க்கை. எப்போதாவது சில்லறை விழும். சிலர் வணக்கிப் போவார்கள். பிழைப்பில் கலவரம் ஏற்பட்டால் தூக்கி, நீரற்ற கிணற்றில் போட்டு விடுவார்கள்.

3. ஆயில் ரேகை

“புத்திசாலி நவீன இலக்கியவாதிகள் தமிழ் சினிமாவுக்கு டயலாக் எழுதப் போகும்போது ஒரு மாதிரி பட்டும் படாமலும் ஸ்டேட்மெண்ட் விடுவார்கள் இல்லியா? அந்த மாதிரி. நான் உலக உத்தமன்தான். அவன் அயோக்கியன்தான். ஆனால், நானும் அவனும் சேரும் இந்த ஒரு விஷயம் மட்டும் புனிதப் பசுவின் பாலிலிருந்து தயாரிக்கப்பட்டது என்பது மாதிரி.”

4. பனங்கள், தென்னங்கள், கன்னங்கள் என்று எதிலெல்லாம் மெல்லிய கிக் கிடைக்கிறதோ, அதிலெல்லாம் ஈத்தைல் ஆல்கஹால் இருக்கிறதென்று அர்த்தம். (கன்னங்கள்? சந்தேகப்படாதீர்கள். நம் கண்ணுக்குத் தெரியும் மாபெரும் ஹைட்ரோகார்பன் ப்ராடக்ட், மனித உடல்தான்.)


இரண்டே அறைகள் கொண்ட வீடு :: யுவன் சந்திரசேகர்

தற்காலத் தமிழிலக்கியத்தில் வந்து சேர்ந்திருக்கும் புதிய போக்குகள், எழுத்தாளர்களெல்லாம் பத்தியாளர்களாக உருமாறிக் கொண்டிருக்கும் ரசவாதம், கவிதைகளில் பெரும் தேக்கம் வந்து சேர்ந்திருப்பது, புத்தகங்கள் மிக அதிக எண்ணிக்கையில் பிரசுரமாவதும் அவற்றைப் பற்றி மிகையான கூறுகளில் விளம்பரங்களும் மதிப்புரைகளும் வெளியாகி, அப்பாவி வாசகனைக் கடுமையான ஏமாற்றத்துக்குள்ளாக்குவதும், ஜனநாயகமயமாகும் எல்லாத்துறையிலும் இயல்பாகவே பதர்கள் அதிகரித்துவிடுவது என்று அலைந்து கொண்டிருந்தது பேச்சு.

இசைத்துறையும் விதிவிலக்கில்லை என்றும் சாஸ்திரிய சங்கீதமும் திரைப்பட பாடல்களும் கூட இந்த ஸ்திதிக்கு வந்து சேர்ந்துவிட்டன என்றும் நாங்கள் இருவரும் சேர்ந்து கண்டுபிடித்தோம்.

(வார்த்தை – ஜூன் 2008)

என்னை விட்டு ஓடிப் போக முடியுமா?

joseph-m-pallipurath-church-dead-killer-india-wifeபள்ளிபுரத் ஜோசப் ஏழு மலை கடந்து இரண்டு கடல்களைக் கடந்து கஷ்டப்பட்டு இந்தியா சென்றடைந்து மனைவியைக் கண்டுபிடித்தார். மூன்று மாத காலமாக மனைவியை வாட்டியெடுத்து நரகத்தில் தள்ளினார். சாய்ந்து கொள்வதற்கு மாமியாரும் இல்லாத வீட்டில் இருந்து, இவரின் கொடுமையில் இருந்து தப்பியோடி நியுஜெர்சியில் தஞ்சம் புகுந்தார் மனைவி ரேஷ்மா.

இந்தியா சென்று இல்லத்தரசியைக் கண்டுபிடித்தது போல் மீன்டும் கஷ்டப்பட்டு தேடிக் கண்டுபிடித்து அதே மனைவியை சுட்டுத் தள்ளியும்விட்டார்.

nijith-kurian-st-thomas-syrian-orthodox-knanaya-churchஜோஜப்பை விட்டுப் பிரிந்த ரேஷ்மா ஜேம்ஸ் நியு ஜெர்சியில் இருக்கும் கசினுடன் ஒதுங்கி வாழ்ந்து வந்தார். கலிபோர்னியாவின் சாக்ரமென்டோவில் கிளம்பிய ஜோசப், நியூ ஜெர்சியின் க்ளிஃப்டனில் ஞாயிறு காலை தேவாலயத்திற்கு வந்த மனைவியை அடையாளம் கண்டுகொண்டு நெற்றிப் பொட்டில் சுட்டுத் தள்ளினார்.

பக்கத்தில் இருந்த சிலருக்கும் குறிதவறி குண்டு பாய்ந்துள்ளது.ரேஷ்மாவின் கசின் சில்வி பெரிஞ்செரிலுக்கும் பலத்த காயம். ரேஷ்மாவைக் காப்பாற்ற முனைந்த இருபத்தாறு வயது கூட நிரம்பாத மலோசெரிலும் மரணமடைந்தார்.

ஜியார்ஜியாவுக்கு தப்பியோடிய ஜோசப்பை உறவினர்களின் வீட்டில் வைத்து பிடித்துவிட்டார்கள்.

reshma-kunnaserry-thoompanakkunnel-pazhoothuruthu-kaduthuruthyமேலும் விவரங்களுக்கு:

1. The Associated Press: NJ church killings shake up close-knit community: “The shootings at the St. Thomas Syrian Orthodox Knanaya Church in Clifton have reverberated throughout the Knanaya faith, a close-knit Christian minority in India”

2. Authorities nab California man accused of fatally shooting estranged wife, another man in Clifton, N.J., church – Lehigh Valley News, Easton News, Nazareth News, Bethlehem News, Phillipsburg: “Pallipurath, of Sacramento, is suspected of shooting and killing 24-year-old Reshma James, and Dennis John Mallosseril inside the St. Thomas Syrian Orthodox Knanaya Church in Clifton”

3. Kaduthuruthy shocked: “Reshma, the only daughter of James and Mercy, had got married on August 25, 2007, to Joseph Sanish Pallipurath, 27, son of Pallipurathu Mathew from Nilambur”

இந்தியாவிற்கு அமெரிக்காவின் காஷ்மீர் தீர்வு? அகண்ட ஆஃப்கானிஸ்தானும் பங்கிடப்பட்ட பாகிஸ்தானும்

தாலிபானுக்கு நிதி எங்கே இருந்து வருகிறது தெரியுமா? அமெரிக்காதான் ஒசாமாவையும் அல் கெயிதாவையும் ஆதரித்து வளர்த்துக் கொண்டிருக்கிறது.

ஏன்?

பாகிஸ்தான் இராணுவத்தை இவ்விதமாக திசைதிருப்பி, பாகிஸ்தானில் இருக்கும் அணு ஆயுதத்தைக் கைப்பற்றுவதற்காக இந்த மாதிரி ஏற்பாடு என்றார்கள்.

Memo From Islamabad – Ringed by Foes, Pakistanis Fear the U.S., Too – News Analysis – NYTimes.com By JANE PERLEZ (NYT): There is an increasing belief among some Pakistanis that what the U.S. really wants is the breakup of Pakistan.

A Controversial Imagining of Borders

Graphic: A Controversial Imagining of Borders

தொடர்புள்ள இடுகை:

1. Its A Thin Line – The Lede – Breaking News – New York Times Blog

2. ARMED FORCES JOURNAL – Blood borders – June 2006: “How a better Middle East would look”

3. ARMED FORCES JOURNAL – A model for modern insurgency – August 2008: “Anbar, properly adapted, offers lessons for quelling Pakistan’s tribal regions”

கிருஷ்ணா! கிருஷ்ணா!

மலந்துடைக்க தாள்களை கடகடவென பறித்த சமயம் திரௌபதியை துச்சாதனன் துகிலுரிந்தது நினைவுக்கு வருகிறது.
10:33 AM Nov 20th

அதே போன்ற இன்னொரு மலங்கழிக்கும் இடம். ஆத்மார்த்தமாக தியானித்து நச்சுகளை வெளியேற்றுகையில் கிருஷ்ணனே வந்துசேர்ந்தார்.

‘என்னடா! நீ ‘ஒன்லி விமல்’ சூட்டிங், ஷர்ட்டிங் பார்த்தது இல்லையாடா?’

‘ஏஞ்சாமி?’

‘அங்கே கூட இப்படி துணிக்கட்டுகளை பண்டில் பண்டிலாக அடுக்கி வைத்திருப்பார்கள். எண்பதுகளின் தமிழ்நாட்டு கோ ஆப்டெக்ஸில் இதைப் பார்த்தவன் நீ. இருந்தும் ஏன்டா என்னோட இன்சிடென்ட்டை வம்புக்கு இழுத்தாய்?’

‘உங்கள எங்க சாமி உள்ளே இழுத்தேன்? நான் துச்சாதனன். வெள்ளைப் புடைவையாக பேப்பர். கொடுத்தது காஸ்ட்கோ; வாங்கி வைத்தது நான்; தயாரித்தது ஸ்காட் கம்பெனியாம்’.

த்வைதம் பேசுகிறாயா? டாய்லெட் பேப்பருக்காக மரத்தை வெட்டியது தவறு என்பாய். அங்கு மீண்டும் பச்சை தழைக்காவிட்டால் க்ரீன்பீஸ் கொண்டு போராட்டம் நடத்துவாய். தண்ணீரைக் கொட்டி ஃப்ளஷ் செய்யாதே என்றும், அதை அப்படியே வைத்திருந்து உரமாக்கலாம் என்றும் பேதம் பாராட்டுவாய்!’

‘சாமீ! ரொம்ப விக்கிப்பீடியா பக்கம் போகாதீங்க. அப்படியே டெமொக்ரசி நௌ எல்லாம் வேணாம்.’

‘அது இருக்கட்டும். மீண்டும் கேட்கிறேன். அள்ள அள்ளக் கொடுத்தவன் கிருஷ்ணன். பத்து தடவை பீ பெய்தால் தீர்ந்து போகும் உருளையோடு ஒப்பிடலாமா?’

‘முதல்ல இதுக்கு பதில் சொல்லுங்க சாமீயோவ். கிறித்துவம், இஸ்லாம் போன்ற மதங்கள் த்வைதத்தின் அடிப்படையிலும் புத்தம், ஜெயினம் எல்லாம் கடவுள் அபவாதம் என்னும் அத்வைதம் போதிக்குதா?’

‘முதலில் பிரபத்தியை அணுகு மகனே. சர்வமும் சித்திக்கும்’

‘யூ மீன் பாப்பாத்தி?’

‘பிரபத்தி என்றால் பரிபூரண சரணாகதி அப்பா’.

‘எது எப்படியோ. பிரபத்தி பேர் நல்லாருக்கு. அடுத்த தமிழ் ஹீரோயினுக்கு வெச்சுக்கலாம். அதற்கப்புறம் அவளை சரணாகதி அடைஞ்சா மோட்சம் வருமே.’

‘எனக்கு மீராபாய்தான் சரி. நான் ஜூட்.’

காதல் கடிதம் எழுதினேன்; கொலையானேன்

பெயர்: மனிஷ் குமார்

வயது: 15

வசிப்பிடம்: கோரார் கிராமம், கைமுர் மாவட்டம், பிகார்

சாதி: ரவிதாஸ் (தலித்)

விரும்பியது: தோட்டி மகள் (தலித்)

முதல் குற்றம்: மூன்று மாதம் முன்பு காதல் கடிதம் எழுதியது

இரண்டாம் குற்றம்: விரும்பியவளின் விருப்பத்துடன் நேசித்தது

தண்டனை: ரயிலுக்கு அடியில் தள்ளி மரணம்

பார்வையாளர்: மனீஷ்குமாரின் தாயார்

தண்டனை கொடுத்த இடம்: துர்காவதி கிராம காவல் நிலையம்

காவல்துறை: உடந்தையாக இருந்ததற்காக சப்-இன்ஸ்பெக்டர் இடைநீக்கப்பட்டிருக்கிறார்.

மேலும் விவரங்களுக்கு:

1. Teenager murdered for writing love letter to girl of higher caste – Times Online: “Prakash Louis, a sociologist based in Bihar, said ∑ “Caste-based atrocities are common here: rapes, murders, beatings. The privileged prey on the weak,” said Uday Kumar, a director of the Bihar-based Dalit Association for Social and Human Rights Awareness. Similar abuses are reported regularly across India. Alamelu, the leader of a group of Dalit women in the southern state of Tamil Nadu, said:”

2. Boy thrown in front of train for falling in love – India – The Times of India: “Lalita Devi alleged that cops had told her to settle the dispute ‘outside the police station’ when she, along with her son, went to them for help after the boy was tonsured and paraded around the market. She said the accused assaulted her and her son outside the police station and dragged them to a railway track. Despite her repeated pleas for her son’s life, the killers threw the boy in front of a train on the Gaya-Mughalsarai section.”

படித்தவை

1. People liked McCain because they thought him more honorable than other politicians.

John McCain’s choices by David Grann :: The Campaign Trail: The Fall: Reporting & Essays: The New Yorker: “February, 2000, during his first bid for the White House, when he was challenging George W. Bush for the Republican nomination in the South Carolina primary. McCain had recently upset Bush in New Hampshire and was in a buoyant mood,”

2. World Politics Review | With U.S. Attention Elsewhere, Iran Extends Latin American Influence: By: Christina L. Madden

Brazilian Foreign Minister Celso Amorim met last week with his Iranian counterpart in Tehran, where the two diplomats discussed expanding bilateral economic ties. Trade between Iran and Brazil quadrupled between 2002 and 2007, and if Iran gets its way, it will further increase as much as five-fold, from $2 billion to $10 billion annually.

“The move reflects the fact that while Washington’s attention has been focused in recent years on Iraq and the War on Terror, Iran’s influence in Latin America has quietly but steadily grown. In addition to Brazil, Iran has signed dozens of economic agreements with Bolivia, Cuba, Ecuador, Nicaragua, and Venezuela.

In Nicaragua, Iran and Venezuela have agreed to invest $350 million in building a deepwater seaport off the Caribbean coast, in addition to a cross-country system of pipelines, rails and highways.”

Iran in Latin America: Threat or Axis of Annoyance?

Era of U.S. Hegemony in Latin America is Over, Says CFR Task Force – Council on Foreign Relations: “The report, U.S.-Latin America Relations: A New Direction for a New Reality”

3. Racism Rears Its Head in European Remarks on Obama:

“Some Public Figures Display Open Scorn”

4. Can underprivileged outsiders have an advantage? – gladwell dot com – the uses of adversity:

We know that teacher feedback is a big component in learning. So why wouldn’t learning be enhanced by lower teacher: student ratios? One answer might be that large classes are a disadvantage with advantages: that in coping with the difficulty of competing for teacher attention, kids learn something more important–namely self-reliance.

This might also explain why the highest achieving schools–those in places like Japan and Korea–tend to have much larger classes than in the United States.

5. India Sri Lanka Relations: New Twist in the Tale

Anjali Sharma :: Analysis: “The attitude of Indian Tamils towards their ethnic brothers in Sri Lanka thus, determined by this very pattern. Their sentiments are entwined in a way that they began to boil whenever there is an escalation in fighting in Sri Lanka and the resultant refugee influx in the states of Tamil Nadu and Kerala. After Rajiv Gandhi assassination…”

6. India: Limited options in Sri LankaIndia: Limited options in Sri Lanka / ISN: By: Ravi Prasad | ISN Security Watch

As Sri Lanka makes headway against Tamil Tiger rebels, Tamil lawmakers urge India to intervene in the name of Tamil civilians caught in the crossfire, but New Delhi feels its hands are tied.

7. Final Cut: The Selection Process for Break, Blow, Burn by CAMILLE PAGLIA – Paglia 16-2.pdf (application/pdf Object):

“BREAK, BLOW, BURN, my collection of close readings of forty-three poems, took five years to write. The first year was devoted to a search for material in public and academic libraries as well as bookstores. I was looking for poems in English from the last four centuries that I could wholeheartedly recommend to general readers, especially those who may not have read a poem since college.

On my two book tours (for the Pantheon hardback in 2005 and the Vintage paperback in 2006), I was constantly asked by readers or interviewers why this or that famous poet was not included in Break, Blow, Burn, which begins with Shakespeare and ends with Joni Mitchell.

8. Is Kashmir key to Afghan peace? | csmonitor.com: By: Mark Sappenfield and Shahan Mufti | The Christian Science Monitor

Barack Obama says resolving the Indian-Pakistani dispute over Kashmir will be a goal of his presidency, ending eight years of silence on the issue.

9. The rise and fall of Rachida Dati | World news | The Guardian:

“Born to a poor immigrant Muslim family, France‘s justice minister has had an astonishing political ascent, appearing in glamorous magazine shoots and holidaying with the Sarkozys. But now pregnant with a child whose father she refuses to name, and facing a rebellion by the country’s judges over her ‘incoherent policies’, her future looks uncertain. Angelique Chrisafis reports”

10. Unhappy People Watch TV, Happy People Read/Socialize :: University Communications Newsdesk, University of Maryland:

“Unhappy people were also more likely to feel that they have unwanted extra time on their hands (51 percent) compared to very happy people (19 percent) and to feel rushed for time (35 percent vs. 23 percent). Having too much time and no clear way to fill it was the bigger burden of the two.”

சமீபத்தில் கவர்ந்த ட்விட்கள்

வை. கபிலன்

nchokkan 60களில்தான் கம்ப்யூட்டர் மவுஸ் கண்டறியப்பட்டதாம், ஆனால் நீயோ 60 வருடமாக மவுஸோடு இருக்கும் கம்ப்யூட்டர் … யார் யாரைப் புகழ்ந்தது, guess 😉
writerpara இன்னும் கொஞ்சம் இம்சை: நீ ஒரு கணினி, இலக்கியம் உன் மென்பொருள், அரசியல் உன் வன்பொருள். [அதே வை.கபிலன்]
nchokkan வை. கபிலன்(?) எழுதிய இன்னொண்ணு – கலைஞர் கல் எடுத்துக் கொடுத்தது டைடல் பூங்கா, சொல் எடுத்துக் கொடுத்தது தொல்காப்பியப் பூங்கா
writerpara ஸ்டாலினுக்கு: த்ரிஷா காணும் தமிழரிடையே மிசா கண்ட நாயகனே!

nchokkan கனிமொழி: சேலை கட்டிய இலக்கியமே, டெல்லி சென்ற தமிழகமே … ஓகேயா?

writerpara கனிமொழிக்கு: கவிதை உனக்குக் கைக்குட்டை. சிந்தித்தாலும் அழகு. சிந்தினாலும் அழகு.
nchokkan விஜய்காந்துக்கோ, நாளை விஜய் அரசியலுக்கு வந்தால் அவருக்கோ பொருத்தமாக ஒரு டூஇன்ஒன் கவிதை – புள்ளிவிவரப் புலி நீ, சொல்லி அடிக்கும் கில்லி நீ
writerpara கனிமொழிக்கு: கவிதை உனக்குக் கைக்குட்டை. சிந்தித்தாலும் அழகு. சிந்தினாலும் அழகு.
nchokkan உதயநிதி ஸ்டாலின்: காக்கா பிடிக்கும் தமிழர் மத்தியில், குருவி பிடித்த குணக் குன்றே, தாத்தாவின் பெயர் காக்கும் தமிழ்க் கன்றே … 😉
writerpara வடிவேலு: அடிமகனே!நல்ல தமிழ்க் குடிமகனே! தமிழுக்கு விடிவெள்ளியாய் முளைத்த கடிமகனே, விஜயகாந்துக்கு வெடி வைக்கும் திருமகனே வாழி.
writerpara @nchokkan வைரமுத்துவின் மகன் கலைஞரைப் பற்றி;-)
nchokkan கரெக்ட், அப்பாவுக்குத் தப்பாத மகன்

பொய் சொல்லப் போறோம்

vickydotin நான் சொன்னது ஒரே பொய்தான். அது தாய் பொய். மத்ததெல்லாம் அது போட்ட குட்டிப்பொய். அண்ணன் தம்பிங்க மாதிரி !!

KishoreK சிலம்பாட்டம் பட ட்ரெய்லர், ம்யூட் செய்து பார்க்கும்போது ஜிம்னாஸ்டிக்ஸ் போல தெரிகின்றது


writerpara காலை 8.45க்கு வெங்கட்ரமணா போளி ஸ்டாலில் அதிரசம் வாங்கி, நின்றபடியே சாப்பிட்டுக்கொண்டிருப்போருக்கு எவ்வளவு ஷுகர் இருக்கும்?
writerpara 83 வயது ரெஹ்மான் ரஹி என்கிற காஷ்மீரக் கவிஞர் ஞானபீட விருது பெற்றிருக்கிறார். பீடம் ஏறும் முதல் காஷ்மீரி இவரே. கேள்விப்பட்டிருக்கிறோமா?
writerpara ஜிக்மே நம்கியல் வேங்க்சுக் என்கிற 28 வயதுப் பையன் பூடானின் மன்னராகியிருக்கிறான். ட்விட்டருக்கு இது தெரியுமா?
writerpara யுவராஜ் சிங் என்பவர் மன்மோகன் சிங்குக்கு உறவா?
writerpara அலுவலகம் முழுதும் க்ரிகின்ஃபோ தளத்து ஸ்கோர் போர்டிலேயே வசிக்கிறது. எரிச்சலாக இருக்கிறது. கிரிக்கெட்டை ஒழிக்க என்ன செய்யலாம்?
penathal அது கோல் இல்லைங்க.. செட், கேம்னு சொல்லுவாங்க. இங்கிலாந்து 10 செட்லே 240 கேம்!
elavasam தேன்மொழி இதைச் செஞ்ச பொழுது அதில் அவ முடி இருந்திச்சாம். அப்போ யாரோ என்னதுன்னு கேட்க நம்ம ஆளு தேன்குழல்ன்னு சொல்லி இருக்கான். ok?


ஹிட்டாகுமா?

hotdogsladies The new frontier in web metrics will involve quantifying how often we check stats.

அஞ்சலி இடுகை

anbudan_BALA சாதனையாளர்கள் ஒவ்வொருவராக நம்மை விட்டு பிரியும் காலமிது-ஜெமினி,சுஜாதா,பூர்ணம்,குன்னக்குடி,ஸ்ரீதர், Kசங்கர்,நம்பியார். இது தான் இயற்கை நியதி


சட்டம் என் கையில்

srikan2 சட்டக்கல்லூரி மாணவர்கள் வன்முறையில் ஈடுபட்டார்கள் என்பதன் அதிர்ச்சியை விட, போலீசார் செயலிழந்து பார்த்துக்கொண்டிருந்தனர்..என்பதன் அதிர்ச்சி மிகப் பெரிதாக இருப்பதாக (anecdotally) நினைக்கிறேன். இதற்கு எந்த சாதி/சாதியற்ற பார்வையும் தேவையில்லை. contd

உங்கள் பொன்னான வாக்கை ரகசியமாகப் போடுங்க

mohandoss அன்புள்ள ஐயா அம்மாக்களே உங்கள் விமர்சனங்களை மீறியும் படம் பார்ப்பவர்கள் இருப்பார்கள், உங்கள் விமர்சனங்களை தனியாகப் போட்டுத் தொலைக்கலாமே! டிவிட்டரில் தேவையில்லாமல் கண்ணில் படுகிறதே! விமர்சனம்னு போட்டு பதிவில் போட்டிக்கிட்டு லிங்க் அடிக்கலாம் தேவையில்லாதவர்கள் படிக்க மாட்டார்கள்


ajinomotto RP ராஜநாயஹம் என்ன தொழில் தான் பண்றார்? சினிமா, சாராயக்கடை, எழுத்தாளர், வாத்தியார்? பலபேரோட வாழ்க்கைய தெரிஞ்ச ஏகம்பரமா எழுதுறார் அதான் கே …
ilavanji ப்ரட் ஆம்லெட்டுக்கு அப்பறம் காபி குடிச்சா ஏங்க கொமட்டிக்கிட்டே இருக்கு!? 😦


ஈழம்

suratha முதன் முதலாக தமிழ் ப்ளொக்கர் ஒருவர் கைது செய்யபபட்டுள்ளார்.என்ன பண்ணலாம்.ஒண்ணும் பண்ணமுடியாது.
suratha புலிகள் உண்மையில் தோற்கிறார்களா அல்லது தோற்பது போல் நடிக்கிறார்களா? மில்லியன் டாலர் கேள்வி
suratha பிரபாகரன், அமெரிக்க, இந்திய அரசு மாற்றங்களை எதிர்பார்த்து காத்திருக்கின்றார். -அனிதா பிரதாப் – ஞாபகத்திற்கு வந்த பழைய செய்தி ஒன்று
rozavasanth கலைஞர், ஜெ, ராமதாஸ், சோனியா, லாலு, மாயாவதிகளை விட பிரபாகரன் பலமடங்கு சுயநலமில்லாத மனிதர் என்பதில் எனக்குத் துளியும் சந்தேகமில்லை -ஞாநி
rozavasanth ஒரு அதிர்ச்சிக்காவாவது ராமேஸ்வர மீன்வர் சமூகங்கள் இந்தியாவில் இருந்து பிரிந்து குடியரசாவதாக அறிவிக்க வேண்டும்.
solitaryreaper 1.Attacks on The Hindu 2.Rajiv Gandhi statue Damaged 3.Srilankan Mission stoned 4. Swamy office vandalized 5.Two Rail Bogies set on fire ..


இலக்கணம் மாறுதோ?

SridharNarayana >இல் பொருள் உவமையணி< in short டுபாக்கூர் அணி :))

nchokkan //Laptop bag compatible with PC & Mac// ’இங்கு எல்லா மொழிகளிலும் ஃபேக்ஸ் அனுப்பப்படும்’ன்னு ஒருத்தன் எழுதிவெச்சதா சுஜாதா சொன்னாரே

nchokkan தோனி இன்னிக்கு பேட் செய்யப் போகும்போது பாக்கெட்லயே D-L Calculation Sheet வெச்சிருந்தாராம், Impressive


bseshadri International investors have already pulled out 1,00,000 crore Rs. in the last year out of Indian stock market. Which is the main reason behind 1 USD = 50+ INR

rarunach Stephen Colbert:”Arguing that regulation is not required because banks have self-interest is like arguing traffic signals are not required.”

rselvaraj I was NOT worried until the banks+401Ks started sending mail not to worry!

nchokkan ஒரு டிஷர்ட்டில் பார்த்தது: Prove Me That Money Doesn’t Bring Happiness


ajinomotto நான் எழுதிய warehouse job ஓடியது ஓடியது செர்வரின் எல்லைக்கே ஓடியது.ஓடுவதை பார்த்த எல்லோரும் என்னை கும்மி எடுக்கின்றனர்.

ajinomotto டெவலப்மெண்ட்ல நீ எவ்ளோ பெரிய smart ass -ஆ இருந்தாலும் UAT -ல உனக்கு ஆப்பு நிச்சயம்.

ajinomotto ஆத்து நிறைய தண்ணி போனாலும் நாய் நக்கி தான் குடிக்கும். செர்வர் நிறைய CPU இருந்தாலும் பழைய ப்ரோகிராம் ஒரு CPU-ல தான் ஓடும்


anathai Icon_red_lock What is right? – Dogmatic, preserve status co, exclusive, less govt, for corporate, believe birth, survival of fittest, believe subjucation
anathai Icon_red_lock what is left? – Free, equaletarian, liberal, progressive, inclusive, for govt , anti corporate, green, believe nurture, support powerless

vikrambkumar I met an african-american who voted for McCain yesterday and a Microsoft corp strategist using gmail/ipod today. Will I see an elf 2mro?

தலித் அரசியல்

rozavasanth அவர்களை துப்புரவு தொழிலாளர்களாக நிரந்தரப்படுத்துவதை சாதனை பட்டியலில் மாயவதி அடுக்குவது தலித் அரசியலுக்கான மிக பெரிய துரோகம்.(என் கருத்து)

தமிழக அரசியல்

nchokkan இன்று அண்ணாவின் 100வது பிறந்தநாள், தினசரி காலண்டரில் அவருடைய ஓவியம் பார்த்தேன், அவர் முதுகில் குத்தி மார்பு வழியே ஓர் ஆணி வெளிவந்திருந்தது

சினிமா அரசியல்

mohandoss “மதுர எரியுது அணைங்கடா” – நாக்க முக்க பாட்டு வரிகள் தான் மாறன் ‘காதலில் விழுந்தேன்’ படத்தை வாங்க காரணமா?

இலக்கிய அரசியல்

marudhan ராஜம் கிருஷ்ணன் இடது சாரி சிந்தனையாளர்னு இப்போதான் தெரிஞ்சுது

நிதி அரசியல்

nchokkan நண்பர் சொன்ன ஜோக்(?): ஃபயர் அலார்ம் வாங்க வசதியில்லாதவன், விட்டத்தில் ஒரு ரெடிமேட் பாப்கார்ன் பொட்டலத்தைக் கட்டித் தொங்கவிட்டானாம் 😉


அறிவியல் ஆராய்ச்சி கண்டுபிடிப்பு

Aravindank தமிழக டிவிட்டர்கள் ஆங்கிலத்திலும் அமெரிக்க டிவிட்டர்கள் தமிழிலும் டிவிட்டுவது அதிகரித்துள்ளதே…என்ன காரணம்..?

ajinomotto DB Psychlgy:லைஃபில் கமிட்மெண்ட் இல்லாதவன் SQL ஓட்டிய பிறகு கமிட் செய்வதே இல்லை.Auto Commit-ஐ நம்பி வாழ்க்கையை ஓட்டுபவன் நிறைய கஷ்டப்படுவான்


elavasam அங்க துகிலுரிந்ததால் கண்ணன் மும்மலம் துடைத்தான். நீர் உம்மலம் துடைச்சீரு!! 🙂 in reply to snapjudge
elavasam வித்தாரம் – விக்காட்டி ஜின்?
ev Email: “Your domain name (twitter.com) has been found online. Please let us know your price.” (And people say we can’t make money!)
ev Dear coffee shops of America: Let’s just assume no one needs a receipt, unless we’re told otherwise.


நகைச்சுவை

gchandra A Tamilian call up sardar and asks ” tamil therima??” Sardar got mad, angrily replied…. “Hindi tera baap!!!”

கவிதை

arunsundar It rains & my friend asks an old lady if she needs an umbrella. She smiles & replies “Thanks honey, I can walk between the rain drops!”
neotamizhan பெட்ரோமாக்ஸ் லைட் கொளுத்து ஃபங்ஷன் மூடு கெடைக்குண்டா… மெழுகுவத்திய ஏத்தி வையி பர்த்டே போல இருக்குண்டா! ஜுவியில் ”பவர் கட்” கவிதை. 🙂
solitaryreaper I reiterate that Chess Positions are like poetry. When u understand them, you get the same ecstacy as understanding the sub-text of a poetry


பயணங்கள் முடிவதில்லை

rozavasanth முன்பு பெங்களூரில் இறங்கி குளிர்காற்றில் நடப்பது பிரிந்த காதலியை அணைப்பது போல்;இன்று ஆட்டோ புகை, ட்ராஃபிக் ஜாம் வெப்பத்தில் நகர்ந்தது நரகம்.

மடப்பள்ளி

nithyas Falling in love with Brazilian coffee and drinking several cups every dayy.
nithyas I got a recommendation for a brand called Cafe du Pont to buy.


சொந்தக் கதை

solitaryreaper As soon as I returned from gym,I sat on the couch&requested my wife 2 bring dinner&water saying I cant walk.Consequence of exercising:-))
chenthil Play school fees – Rs. 7500.00 admission fee and Rs. 5500.00 term fees for a 9.00 AM-12.00 PM Montessory school. Need a loan for school fees


கிசுகிசு

gchandra Vettaiyadu Kamal peyar konda ‘theevira’ vaatha ezhuthalar, sontha kathai adikadi ezhudhararae.. ‘kanaga vel’ avarai ‘kakka’ varaliya. ippadi

வாரணம் ஆயிரம்: ச்சும்மா அதிருதுல்ல! (இரண்டாம் பாகம்)

முந்தைய விமர்சனத் தொகுப்பு

கோவில் மடப்பள்ளியின் அருகே கை கழுவ குழாய் போட்டிருப்பார்கள். பிரசாதம் வாங்கி சாப்பிட்ட பிற்பாடு அங்கு கை நனைத்துக் கொள்வது தாத்பர்யம். அந்தக் குழாய் மித்தத்திலேயே பக்தகோடிகளின் குழந்தைகள் வாந்திபேதி முதல் நான்கு மாதம் முன்பு அனுமனுக்கு சாத்திய வெண்ணெய் முதற்கொண்டு எல்லாமும் மிதக்கும். கற்பூர வாசமும் கமழ, திருவாதிரைக் களியும் கிடைக்க, விறுவிறு துளசியும் கிடைக்கும் சன்னிதானத்தில் இறை மணத்திற்கு குறைவே கிடையாது.

வாரணம் ஆயிரமும் மணக்கிறது.

கற்பூர அரூபமாக தந்தையின் பேரன் பாசம். திருவாதிரைக் களி தரும் அசட்டு தித்திப்புடன் குளிர் தென்றலாகிய பக்கத்து வீட்டு சினேகிதி கம் மனைவியின் பாசம். புதினா போன்ற காரசார சுவையும் இல்லாமல் கருவேப்பிலை போல் லோக்கல் சரக்காகவும் இறங்காத இதமான துளசியாக காதலி. மசாலா அதிகமாகி கடமுடா செய்த குழந்தைத்தனமாக புது தில்லி பயணங்கள்.

திரைப்படமோ, எழுத்தோ, ஓவியமோ! எப்பொழுது நிறைவுறுகிறது?

எனக்கு வீட்டுப்பாடம் செய்கின்ற மகள் அதை முடித்துவிட்டால், இந்தப் பதிவின் இறுதி வாக்கியமும் எழுதப்பட்டிருக்கும். நடிகருக்கு அடுத்த படம் வரை. இயக்குநருக்கு தயாரிப்பாளரின் நிதிநிலை.

வாரணமாயிரத்தில் கவுதமிற்கு நிறைய பட்ஜெட் இருந்திருக்க வேண்டும். இழைப்பதற்கு பதில் இறைத்திருக்கிறார்.

கதாபாத்திரங்கள் எவ்வாறு பார்வையாளனுக்குள் உருவாகிறது?

சம்பவங்களால் நிறைந்தது வாழ்க்கை. திரைப்படம் முடிந்தவுடன் எந்த காட்சிகள் தங்கிப் போகின்றன? பேரனுக்கு கதை சொல்ல முடியாத தாத்தா தெரிகிறார்.

சிம்ரனிடம் வலியுறுத்தப்பட்ட ‘கிருஷ்ணனுக்கு உங்களைப் பிடிச்சிருக்காம்’ நிற்கிறதா?

Movies enact rituals; we know the form; watch 4 variations. Gr8 is the one with free will; சப் குச் சலேகா. but, don’t say that is realistic. – ஸ்னாப்ஜட்ஜ்

திரைப்படங்களில் எனக்குப் பிடித்ததாக மூன்று குணாதிசயங்களை சொல்லலாம்:

  1. அமைதியாக, ஆர்பாட்டமில்லாத மென் நகர்வு
  2. நளினமான நடை, கீறல் விழாத வசனம்
  3. குழப்பமான சங்கதி; ஏன் பிடித்திருக்கிறது என்பதை விளக்க முடியாத விவரிப்பு.

ஓக்லஹோமா குண்டுவெடிப்பு மிகச் சரியான அதிர்ச்சியை (#3) கொடுக்கிறது.

கல்லூரி சகாவிற்கு தினசரி காலை எட்டு மணிக்கு சந்திப்பு உண்டு. உலக வர்த்தக மையத்தின் எண்பதாவது மாடி அலுவலில் போய் உட்காராவிட்டால் சிரச்சேதம் செய்துவிடுவார்கள் என்பான். விதிக்கப்பட்ட 9/11 அன்று மட்டும் வாசற்படித் தடுக்கி விழுந்து விடுகிறான். சிராய்த்த இடத்தில் பேன்ட்டை அவிழ்த்து பேண்ட் – எயிட் போட்டு முதலுதவி முடித்து, மீட்டிங்கைத் தவறவிட்டு போய் சேர்ந்தால், மீட்டீங்கில் இருந்தவர்கள் போய் சேர்ந்திருக்கிறார்கள்.

அன்று மட்டும்! நம்பமுடியவில்லை. நிஜ வாழ்க்கை. விதி?

நளினமான நடை, கீறல் விழாத வசனம் நிறையவே உண்டு. ஆங்காங்கே ஆங்கிலம் கலந்த பி சென்டர், சி சென்டர் என்று பிரித்தாளாத சூழ்ச்சி.

இறுக்கமான உள்பொதிந்த திரைக்கதையாகிய #1 மட்டும் மொத்தமாக சறுக்கி சிவாஜியின் சத்தத்தோடு தமிழ்ப்படமாக அரங்கேறுகிறது. அஞ்சல ஆட்டமாகட்டும்; வெறுமனே காதலர் ஆகி உல்லாசபுரியில் சல்லாசம் ஆகட்டும்; இராணுவ வீரனாக வெற்றி வாகை குவிப்பது ஆகட்டும்; வாசனைக்கு மசாலா அல்ல -> மசாலாவிற்கு நடுவில் பருக்கைகளாக சம்பவங்கள்.

டிஸ்னிவோர்ல்டில் மட்டுமே சாத்தியமாகும் இவ்வாறான கனவுலக நிகழ்வுகள் திரையில் அரங்கேற்றுவது ஸ்லம்டாக் மில்லியனராகும் இந்திய சினிமாவில் மட்டுமே சாத்தியம். எனவே விட்டுவிடுவோம்.

பராக் ஒபாமாவின் தாரக மந்திரம் போல் அப்பா கிருஷ்ணன் நம்பிக்கையாக காலந்தள்ளுகிறார். பில் க்ளின்டன் போல் சகலமும் தெரிந்த அப்பாவின் நிழலில் ஹில்லரியாக மகன் சூர்யா. சூர்யா உணர்ச்சிவசப்படுபவன். அப்பா பற்றற்ற ஞானியாக முன்னேறி செல்பவர். பையனோ கவிஞனை ஒத்த மனநிலையில் துடிப்பானவன்; செயல் வீரன். தந்தை அரசு உத்தியோகமாக காலத்தை ஓட்டுபவர். பிள்ளை ஜார்ஜ் புஷ்ஷின் அமெரிக்காவாக கடன் வாங்கி, முதுவலி அஜீத்தாக ஸ்போர்ட்ஸ் கார் ஓட்டுபவன்.

ஸ்டாக்ஹோம் சின்ட்ரோம் தெரிந்திருக்கும். கூண்டுக்குள் அடைத்த கிரிமினலையே காதலிக்க ஆரம்பிப்பது. அமெரிக்கா வந்த தொணதொணப்பு சூர்யாவின் தொண்ணூறு நாள் சிறையில் மேக்னா மாட்டிக் கொள்ள காதல் ஆரம்பிக்கிறது.

இதன் உல்டா ‘ரிவர்ஸ் ஸ்டாக்ஹோம் சின்ட்ரோம்’. சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருப்பவர் மேல் சிறைக் காவலாளிக்கு அனுதாபக் காதல் தோன்றுவது. இது ப்ரியாவின் நிலை. போதை, குறிக்கோளின்மை என்று இலக்கற்ற வலைப்பதிவனாய் வீடெனும் சிறையில் தனியனாய் ஆன சூர்யாவை பக்கத்து வீட்டு ப்ரியா பச்சாதாப காதல் கொள்கிறார்.

  • மக்கள் மாறுகிறார்களா? இல்லை.
  • உலகம் மாறி விடுமா? ஆம்.

கல்லூரியில் சூர்யாவை சேர்த்துவிட்டு பிரியாவிடை கோரும் தந்தை கிருஷ்ணனுக்கும் போர்முனைக்கு செல்லும் சூர்யாவிற்கு வாழ்த்து சொல்லி அனுப்பும் தாத்தா கிருஷ்ணனுக்கும் வித்தியாசம் உண்டா? கிடையாது. இதெல்லாம் எப்போது உணர முடிகிறது?

கௌதம் மேனன் என்னும் கிருஷ்ணன் → சூர்யா எனப்படும் ‘வாரணமாயிர’த்தை ் → கல்லூரியாகிய திரையரங்கில் விட்டிருக்கிறார். அது எப்படி வளர்கிறது என்பது ‘வாரணம் ஆயிரம்’ கையில் கிடையாது. உலகம் என்னும் உங்களின் அனுபவப் பருக்கையில்தான் எங்கோ ஒட்டியிருக்க வேண்டும்.

‘ஒழுங்காப் படிச்சுடுவான்’ என்னும் நம்பிக்கை, ‘சரியா செஞ்சுடுவான்’ என்று இராணுவத்திலும் தொடர்கிறது. பையன் சூர்யாவும் அதே நம்பிக்கையில்தான் ‘அன்பு வெல்லும்’ என்று மேக்னாவை துரத்தினான். ‘நான் என்னை மீட்டெடுப்பேன்’ என்று மாற்றிக் கொள்ளும் முயற்சியாக ப்ரியாவை கரம்பிடிக்கிறான்.

‘இதைத்தான் செய்யவேண்டும்’ என்பது போன தலைமுறை உபதேசம். ‘மனதிற்கு விருப்பமான லட்சியத்தை எவருக்கும் உபத்திரவமில்லாமல் எப்படியாகினும் செய்து காட்டு’ என்பது இந்தக்கால தாரக மந்திரம்.

மேலும் சில பார்வைகளின் நறுக்குகள்

நடிகர் நம்பியாரா இப்படி செய்தார்? – வதந்தி

முன்னுமொரு காலத்தில் நடிகை சரோஜா தேவி அளித்த பேட்டியில் படித்தது:

“இயக்குநர் ‘கட்’ என்ற பின்பும் நம்பியார் நிறுத்தவில்லை.

முதல் முறை ‘என்ன சார்! நிஜத்திலும் வில்லன் ஆயிடுவீங்க போல?’ என்றேன். சுதாரித்து சுயநிலைக்கு வந்தவர், அடுத்த அடுத்த டேக்கில் மேலும் எல்லைமீறினார்.

கோபம் வந்து எல்லோர் முன்பும் பொரிந்து தள்ளினேன். மன்னிப்பு கேட்ட பின்தான் விட்டேன். அதற்குப் பரிகாரமாகத்தான் அவர் மாலை போட்டு விரதம் செய்கிறார்.”

பைண்ட் செய்யப்பட்ட தொடர்கதையில் பிட் நியூஸாக படித்தது மட்டுமே தங்கிப்போக; எந்தப் படத்தில், எப்போது, எந்தப் பத்திரிகையில் வந்தது என்பது எல்லாம் மறந்துவிட்டது.

இப்பொழுது போல் கத்திரித்து ஒட்டுவதும் அன்றைய வண்ணத்திரை காலத்தில் எனக்கு இல்லாததால் அச்சு ஆதாரம் தற்போது இல்லை.

சாருநிவேதிதா – ராஸலீலா

அங்கே வரும் பெண்களைப் பார்க்கவே வாரத்தில் இரண்டு முறை அங்கு செல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறான் பெருமாள். நிச்சயமாக அந்தப் பெண்கள் யாரும் தமிழ்ப் பெண்கள் அல்ல. தமிழர்களுக்கு பழம் சாப்பிடும் வழக்கம் இல்லையோ என்னவோ.

பெருமாளுக்கு அதைப் பற்றியெல்லாம் அக்கறையில்லை. அவன் கவலை அவன் மூலம்.

அப்பர் மிடில் க்ளாஸ் மற்றும் அப்பர் க்ளாஸைச் சேர்ந்த தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் வட இந்திய முகங்களையே அங்கு காண முடிந்தது. தமிழ் இரண்டு சதவிகிதம் இருக்கலாம். இப்படி இது ஒரு பூர்ஷ்வா கடையாக இருந்தாலும் விலை என்னவோ மற்ற இடங்களை விட மலிவுதான்.

மேலும் இந்தக் கடையில் பெருமாள் அவதானித்த ஒரு முக்கிய விஷயம் என்னவென்றால் இங்குள்ள பணிப்பெண்கள் யாவருக்கும் முலைகளே இல்லை என்பது. தய்வுசெய்து இதைப் பாலியல் பிரச்சினை ஆக்காதீர்கள். இது முழுக்க முழுக்க வர்க்க முரண்பாடுகள் சம்பந்தப்பட்ட பிரச்சினை.

அந்தப் பணிப்பெண்கள் ஏன் இப்படி நறுங்கிப் போய் கிடக்கிறார்கள் என்பதை Communist Manifestoவையும் மக்ஸீம் கார்க்கியின் தாயையும் படித்துவிட்டு யோசியுங்கள்.

அந்தக் கடையின் அண்ணா நகர் பிராஞ்ச்சில் மட்டும் அப்படியில்லை. மைலாப்பூர் பிராஞ்ச்சிலும் இதே நிலைமைதான். ஆனால் இந்தக் கடையில் பழங்களும் காய்கறிகளும் வாங்க வரும்பெண்களுக்கோ முலைகள் கறவை மாட்டு மடிகளைப் போல் இருக்க காரணம் என்ன?

அவர்களைப் பார்க்கும்போதெல்லாம் பெருமாளுக்கு ரோஜா படத்தில் மனீஷா கொய்ராலா அர்விந்த் சாமியைப் பார்க்க ஓடி வருவாளே அந்த ஸீன்தான் ஞாபகம் வந்து தொலைக்கிறது. பெர்க்மெனையும் ஃபெலினியையும் கோதாரையும் பார்த்து என்ன ரோஜாவில் அந்த ஸீனில் மனீஷா கொய்ராலா ஓடி வரும்போது தியேட்டரில் விசில் சத்தம் காதைப் பிளக்கிறதே…

அந்த ரசிகர்களுக்கும் தனக்கும் என்ன வித்தியாசம் என்று ஒருகணம் நினைத்துப் பார்ப்பான் பெருமாள்.

மறுகணமே கலையைக் காமம்வென்றுவிடும். காமமும் கலைதானே என்கிறீர்களா? அப்படியானால் இப்படி மாற்றிக் கொள்ளலாம். கலையை ஆபாசம் வென்றுவிடும்.

நன்றி: Rasa Leela :: Chaaru Nivedhitha