Tag Archives: Charu

Tamil Thinkers Identity: Generalization vs Speculation: Inventing the Brand

அப்பாவை டிவி பார்ப்பவர் என்று சுருக்கலாம். அம்மா வெறும் சமையற்காரி. மகளோ மூளை வளர்ச்சி பெறாதவள். மனைவி பாலியல் தொழிலாளி.

இப்படி அடைமொழிக்குள்ளும் உருவகங்களுக்கும் நடுவே நிஜ வாழ்க்கை சிக்கிக் கொள்வதில்லை. ஆனால், பெரும்பாலான கலை வடிவங்களின் தமிழ் விமர்சனங்கள் அடைபட்டிருக்கிறது.

ஜெயமோகன் இந்துத்வாவாதி. சாரு நிவேதிதா திருடர். எஸ் ராமகிருஷ்ணன் தேய்வழக்கு. காலச்சுவடு கண்ணன் பிசினஸ்மேன். ’அட்டகத்தி’ தலித் காவியம்; உயிர்மை இலக்கிய பத்திரிகை; மக்கள் தொலைக்காட்சி தமிழை வாழவைக்கிறது.

சிக்குண்டவர்களே புதியவர்களை வலைக்குள் நிறுத்து வைப்பது உப வழக்கம். பெருநிதிக் கிழார், டூரிஸ்ட் இலக்கியவாதி என்று பட்டங்கள் கொடுத்து முடக்குவதும் வாடிக்கை.

திரைப்படத்திற்கு சாயம் பூசுதல், எழுத்தாளர்களை தொலைக்காட்சி சவுண்ட் பைட் பார்ட்டி ஆக்குவது, போன்றவை சந்தைப்படுத்தலின் அங்கம். கருணாநிதி மோதிரம் வாங்கி அண்ணா கையால் போட்டுக் கொண்டது போல் தன் ஆக்கங்களை தானே பிராண்டிங் செய்வது எல்லாமே மார்க்கெடிங்கில் நியாயம்.

மோஸ்தர்களை மட்டுமே முன்னிறுத்தும் தமிழக சூழலுக்கு, போதிய அளவு மாற்று சிந்தனையாளர்கள் இல்லாதது முதல் காரணம். எதிர்கருத்து சொல்பவர்களுக்கு ஆங்கில எழுத்துகள் சோறு போடுகிறது என்பது முக்கிய காரணம்.

Tamil Books Wishlist – 2012 தமிழ்ப் புத்தகங்கள்: ஆலோசனை (aka) விழைப்பட்டியல்

சமீபத்திய புத்தகங்களில் எதை வாங்க வேண்டும் என்று ஆசை பிறக்கிறது?

என்னிடம் இருக்கிறது தவிர, எந்த நூல்களை தருவிக்க ஆர்வம் கிடைக்கிறது?

இணையத்தில் உள்ள புத்தகக் கடைகளில் மேய்ந்தால் எவை ‘என்னை வாங்கு’ என்று அழைக்கிறது?

இதில் பிரபலமான எழுத்தாளர்கள் நிச்சயம் இருப்பார்கள்; தவிரக்க வேண்டிய நூலாசிரியர்கள் தவற விடப் பட்டிருப்பார்கள்.

பட்டியல்களுக்கேயுரிய விடுபடுதல்களும் இருக்கலாம்.

உங்கள் பரிந்துரையில் சமீபத்திய நூல் வரவுகளில் முக்கியமானவை எவை?

முதலில் நூலகம் தொடர்பான சில வலையகங்கள்:

  1. நியூ ஹொரைசன் மீடியா – கிழக்கு – காமதேனு – https://www.nhm.in/shop/home.php
  2. சென்னை ஷாப்பிங் – http://www.chennaishopping.com
  3. உடுமலை –http://www.udumalai.com/
  4. தினமலர் புத்தக விமர்சனம் + அறிமுகம்: http://books.dinamalar.com/index.asp
  5. நம்ம கோடம்பாக்கம்: http://600024.com/store/books/
  6. நூல் உலகம்.காம் – http://www.noolulagam.com/
  7. டிஸ்கவரி புக் பேலஸ்: http://discoverybookpalace.com/
  8. நியு புக் லான்ட்ஸ் – http://www.newbooklands.com/new/home.php
  9. தமிழ் புக்ஸ் ஆன்லைன்: http://www.tamilbooksonline.in/booklist1.php
  10. கன்னிமரா பப்ளிக் லைப்ரரி – http://connemara.tnopac.gov.in/cgi-bin/koha/opac-main.pl
  11. சிங்கப்பூர் நூலகம் –http://catalogue.nlb.gov.sg/

இப்பொழுது என்னுடைய பரிந்துரை புத்தக லிஸ்ட்:

1. என்னைத் தீண்டிய கடல் By வறீதையா — வகை : கட்டுரைகள்
2. கவிதை என்னும் வாள்வீச்சு By ஆனந்த் — வகை : கட்டுரைகள்
3. கரை தேடும் ஓடங்கள் By ராமச்சந்திரன் உஷா
4. நாமார்க்கும் குடியல்லோம் By கரு.ஆறுமுகத்தமிழன்
5. எங்கள் நினைவில் சு.ரா. (குடும்பத்தாரின் நினைவுகள்)
6. தாயார் சன்னதி By சுகா
7. தோள்சீலைக் கலகம் : தெரிந்த பொய்கள் தெரியாத உண்மைகள் By கணேசன்
8. சினிமா அனுபவம் (அடூர் கோபாலகிருஷ்ணன்) By அடூர் கோபாலகிருஷ்ணன்
9. கடிகாரம் அமைதியாக எண்ணிக்கொண்டிருக்கிறது By அ.முத்துலிங்கம்
10. ஒன்றுக்கும் உதவாதவன் By அ.முத்துலிங்கம்
11. நளிர் — நாகார்ஜுனன்
12. சொல்லாததும் உண்மை (பிரகாஷ்ராஜ்)
13. முக்குவர்: வரலாறு, வாழ்வியல், எதிர்காலம் By வறீதையா கான்ஸ்தந்தின்
14. மயிலிறகு குட்டி போட்டது By பிரபஞ்சன்
15. எழுத்தென்னும் நிழலடியில் By பாவண்ணன்
16. அமெரிக்காவில் மூன்று வாரம் By ம.பொ.சிவஞானம்
17. இலக்கிய ஆராய்ச்சி காலாண்டு இதழ் ( பாகம் – 1 ) By இந்திரஜித்
18. பிறக்கும் ஒரு புது அழகு By காலச்சுவடு கண்ணன்
19. காலத்தைச் செரிக்கும் வித்தை By குட்டி ரேவதி
20. ஓவியம் கூறுகளும் கொள்கைகளும் By புகழேந்தி
21. புனைவின் நிழல் By மனோஜ்
22. நான் கண்ட ரஷ்யா By அகிலன்
23. பல நேரங்களில் பல மனிதர்கள் By பாரதி மணி
24. அடடே! By மதி கார்ட்டூன்கள்
25. உவன் இவன் அவன் By சந்ரு
26. ஆதி திராவிடன் இதழ்த் தொகுப்பு
27. அக்கிரகாரத்தில் பெரியார் By பி.ஏ.கிருஷ்ணன்
28. நம் தந்தையரைக் கொல்வதெப்படி By மாலதி மைத்ரி
29. இருப்பும் விருப்பும் By கி.பி. அரவிந்தன்
30. கர்ப்பமாய் பெற்ற கன்னிகள் By அ.கா.பெருமாள்
31. கிருஷ்ணன் நம்பி ஆக்கங்கள் By தொகுப்பாசிரியர்: ராஜமார்த்தாண்டன்.
32. அம்மாவின் ரகசியம் By சுநேத்ரா ராஜகருணாநாயகதமிழில் :- எம். ரிஷான் ஷெரீப்
33. அனுபவங்களின் நிழல் பாதை By ரெங்கையா முருகன் ,வி .ஹரி சரவணன் — வகை : குறுநாவல்கள்
34. நஞ்சையில நாலு மா By சுந்தரபுத்தன்
35. விழா மாலைப் போதில் By அசோகமித்திரன்
36. குருதியில் நனையும் காலம் By ஆளுர் ஷாநவாஸ் (முன்னுரை: ஆ.மார்க்ஸ்)
37. எழுதுவதெல்லாம் எழுத்தல்ல By பாமரன்
38. ப்ளீஸ்! இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க! By கோபிநாத்
39. சினிமாவின் மூன்று முகங்கள் By சுதேசமித்திரன்
40. எசப்பாட்டு By இந்தியா டுடெ தமிழ்ப் பதிப்பின் எக்ஸிக்யூட்டிவ் எடிட்டர் ஆனந்த் நடராஜன்
41. கலி புராணம் By மு.தளையசிங்கம்
42. இராசேந்திரசோழன் குறுநாவல்கள்
43. பேய்க்கரும்பு By பாதசாரி
44. சனங்களின் சாமிகள் கதை By அ.கா.பெருமாள்
45. தெரிந்த கோவை தெரியாத கதை By கவியன்பன்.கே.ஆர்.பாபு
46. இவன்தான் பாலா By பாலா
47. சுண்ணாம்பு கேட்ட இசக்கி By அ.கா.பெருமாள்
48. நான் நீ மீன் By கலாப்ரியா (கவிதை)
49. முதல் 74 கவிதைகள் By யுவன் சந்திரசேகர்
50. சூரியன் தகித்த நிறம் By பிரமிள்
51. மேன்ஷன் கவிதைகள் By பவுத்த அய்யனார்
52. எனது மதுக்குடுவை By மாலதி மைத்ரி
53. திரும்பிச் சென்ற தருணம் By பி.ஏ.கிருஷ்ணன்
54. பலார்ஷாவிலிருந்தும் நாக்பூருக்கு By தெலுங்கில் ஸ்ரீ விரிஞ்சி (தமிழில் :- கெளரி கிருபானந்தன்.)
55. களவு போகும் புரவிகள் By வேணுகோபால்
56. பூரணி பொற்கலை By கண்மணி குணசேகரன்
57. தஞ்சை ப்ரகாஷ் கதைகள் By காவ்யா சண்முகசுந்தரம்
58. மரணத்தின் வாசனை By அகிலன்
59. மயில்வாகனன் மற்றும் கதைகள் By அஜயன் பாலா
60. மிதமான காற்றும் இசைவான கடலலையும் By தமிழ்ச்செல்வன்
61. லீலை By சுகுமாரன்
62. பிரமிள் படைப்புகள் (முழுத் தொகுப்பு)
63. வெள்ளி விரல் By ஆர்.எம்.நெளஸாத்
64. நான் கொலை செய்யும் பெண்கள் By லதா (காலச்சுவடு)
65. நகரத்தில் மிதக்கும் அழியா பித்தம் By ம.தவசி
66. பதுங்குகுழி By பொ.கருணாகரமூர்த்தி
67. ஒரு பனங்காட்டுக் கிராமம் By மு.சுயம்புலிங்கம்
68. இலட்சுமணப்பெருமாள் கதைகள்
69. கருப்பாயி என்கிற நூர்ஜஹான் By அன்வர் பாலசிங்கம்
70. தொலைகடல் By உமா மகேஸ்வரி
71. லயோலா என்ற பெரும்பாம்பின் கதை By சுகுமாரன்
72. கனவுகளுடன் பகடையாடுபவர்கள் By ஜி.குப்புசாமி (மொழிப்பெயர்ப்பு )
73. என் தாத்தாவுக்கொருதூண்டில் கழி By ஜெயந்தி சங்கர்
74. அப்பாஸ்பாய் தோப்பு By எஸ்.அர்ஷியா
75. லண்டன் டயரி By இரா.முருகன்
76. ஆறா வடு By சயந்தன்
77. எட்றா வண்டியெ By வா.மு.கோமு
78. ராஜூ ஜோக்ஸ் (கார்டூன் நகைச்சுவை)
79. இதழாசிரியர்கள் மூவர் By விக்கிரமன்
80. அதிமனிதர்களும் எதிர்மனிதர்களும் By பிரேம்
81. கரித்தாள் தெரியவில்லையா தம்பீ… By பெருமாள் முருகன்
82. உடைந்த மனோரதங்கள் By பெருமாள் முருகன் (கு.ப.ரா. பற்றிய விமர்சனக் கட்டுரைகளின் தொகுப்பு)
83. சிலுவையின் பெயரால் By ஜெயமோகன்
84. கர்நாடக சங்கீதம் : ஓர் எளிய அறிமுகம் By மகாதேவன் ரமேஷ்
85. சுபமங்களா மொழிப்பெயர்ப்புக் கதைகள்
86. சங்க இலக்கியத்தில் பொது மக்கள் By முனைவர் கு.ராச ரத்தினம்
87. கோப்பை தேநீரும் கொஞ்சம் கவிதையும் By ஹரி கிருஷ்ணன்
88. டயலாக் By ஜூனியர் விகடன்
89. தமிழர் சமயம் தமிழர் வேதம் தமிழகத்துக் கோயில்கள் By யு.சுப்ரமணியன்
90. மதன் ஜோக்ஸ்
91. காவல் தெய்வங்கள் ( காலங்களை கடந்தும் நிக்கிற கிராம தேவதைகள் வழிபாடு ) By பி.சுவாமிநாதன்
92. சுதந்திரப் போரில் தமிழ் சினிமா By அறந்தை நாராயணன்
93. நான் எப்படிக் கம்யூனிஸ்ட் ஆனேன்?..வி.பி.சிந்தன் (இளையபாரதி )
94. :நேரு வழக்குகள் – ஆசிரியர் : ஞாலன் சுப்பிரமணியன்
95. சகுனம் By எஸ்.வி.ராமகிருஷ்ணன்
96. ஆ மாதவன் கதைகள்
97. ஒரு புகைப்பட நிருபரின் அனுபவங்கள். : ஆசிரியர்: மதுரை எஸ்.எஸ். ராமகிருஷ்ணன்
98. சூப்பர் ஸ்டார் சொன்ன சூப்பர் கதைகள் : ஆசிரியர் : சபீதா ஜோஸப்
99. சில நேரங்களில் சில அனுபவங்கள் (பாகம் 1,2) : ஆசிரியர் : பாக்கியம் ராமசாமி
100. உரையாடலினி By   அய்யனார் விஸ்வநாத்
101. கு.அழகிரிசாமி கடிதங்கள் (கி.ரா.வுக்கு எழுதியது) By கி. ராஜநாராயணன்.
102. தொலைக்காட்சி விளம்பரத்தின் உள்முகங்கள் By கழனியூரன்
103. ஆறுமுகசாமியின் ஆடுகள் By சா.கந்தசாமி
104. புதுமொழி 500 – ரவிபிரகாஷ் (விகடன் பிரசுரம்)
105. மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள் – தொகுப்பு: பி.இ.பாலகிருஷ்ணன்
106. விட்டில் – சமகால அரசியல் பகுப்பாய்வு By இராகவன் (காலச்சுவடு பதிப்பகம்)
107. ஈழத்து நாட்டார் பாடல்கள் By ஈழவாணி
108. தமிழினி ஒரு வருட உள்நாட்டு சந்தா

இப்பொழுது உங்களுக்கான வினாக்கள்:

2012-ல் என்ன வாங்கினீர்கள்?

முக்கியமாக புனைவுகளில் சுவாரசியமானவை எவை?

புதிய புத்தகங்களில் தங்களைக் கவர்ந்த கதாசிரியர் யார்?

நித்தியானந்தா குறி – சாருத்துவம்

முந்தைய ட்வீட்ஸ்: பாரதம் – அருந்ததித்துவம்

10 Similes between Writer Charu Nivethitha & Actor Kamalhasan

சாரு நிவேதிதா கமல்ஹாசன்
வயது 56 என்று சொல்லிக் கொள்கிறார் தெளிவாகவே 56 எனப் பகிர்ந்துள்ளார்
பார்த்தது, படித்தது, நண்பருடன் பேசியது, நண்பர் எழுதியது எல்லாவற்றையும் படைக்கிறார். பார்த்தது, படித்தது, நண்பருடன் பேசியதன் கலவையாக படைக்கிறார்.
35 ஆண்டுகளாக எழுதுகிறார் 50 ஆண்டுகளாக கலைச்சேவை
எங்கிருந்து எடுத்தார் என்பது ஆபீதின் மாதிரி பலர் முயன்று தெரிவித்தாலும் தெரியவருவது துர்லபம். சுட்ட ஒரிஜினலை கண்டுபிடிப்பது இவரிடம் எளிது.
சாரு நிவேதிதாவிற்கு கடிதங்கள் எழுதும் தேவதைளில் அனேகர் ரஷ்மி, தீபிகா போல் மூன்றெழுத்து கனவுக்கன்னி. அவ்வப்போது நேஹாவும் உதயமாகிறார். ஸ்ரீதேவி, சினேகா, அசின், த்ரிஷா
சாரு ‘கமினே‘ பார்த்ததாக எழுதினார். கமல் ‘ஜெயமோகன்‘ பிடித்ததாக மேடையில் பேசினார்.
மனதில் தோன்றியதை வரையும் சர்ரியலிசம், குழப்பினாலும் கவர்கிறது; சாரு claim செய்யும் எழுத்துவகை சறுக்கியலிசம் ஆகி விடுகிறது ஆஸ்கார் படங்கள் புரிந்து மனதில் நிலைக்கிறது; ஹே ராமும் ஆளவந்தானும் சறுக்கியலிஸம்
அமரந்தா, அவந்திகா வாணி, சரிகா
நடிகர் திரைப்பட நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர், திரைக்கதையாசிரியர், பாடலாசிரியர், பின்னணிப் பாடகர், கவிஞர்
சாகித்ய அகாடெமி, ஞானபீடம், இலக்கிய நோபெல், கலைமாமணி கிடைக்கக் கூடிய நாவல் எழுதிக் கொண்டிருப்பார். மருதநாயகம் வெளியாக நிறைய வாய்ப்புண்டு.

சாரு நிவேதிதா சந்திப்பு

பத்தாண்டுகளுக்குப் பிறகு உறவினர்கள் சந்தித்துக் கொண்டால், கோவிலில் வைத்துப் பார்த்துக் கொள்ள வேண்டும். பத்து மாதங்கள் கழித்து சந்திக்கும் சிறுவர்கள் பூங்காவின் விளையாட்டரங்கத்தில் ஆடத் துவங்க வேண்டும். பத்து புத்தகங்களை வாசித்தபிறகு, எழுதியவரை எங்கு சந்திக்க வேண்டும்?

எல்லாவிதமான கேள்விகளுக்கும் உலகப்பொதுவிடை: ‘It depends!’

வருடாவருடம் சென்னைக்கு ஒரு முறை எட்டிப் பார்ப்பதுண்டு. கிழக்கின் மொட்டை மாடிக் கூட்டம், ஞாநியின் கேணி, தமிழ் ஸ்டூடியோவின் முழுநிலா இரவுப்படக்காட்சி எல்லாம் நடக்காத சமயமாக தோன்றுவது வழக்கம். பாலபாரதியின் பீச் பதிவர் சந்திப்பு, ரோசா வசந்த்துடன் மேன்ஹட்டன் பார்வை என்று முடிந்து போகும்.

அப்போதெல்லாம் லக்கிலுக், அதிஷா போன்ற சென்ன தாதா பதிவர்களிடம் ‘சாரு நிவேதிதாவோடு ஒரு நைட் அரேஞ்ச் செய்து தர முடியுமா?’ கேட்டதுடன் சரி.

‘ரேட் அதிகம்’ என்பது போல் ஏதோ பதிலொன்றை உதிர்த்து அவர்களும் நழுவி விடுவார்கள்.

நிறைய எழுதுபவர் பேச்சில் கெட்டிக்காரராக இருப்பார். இடையே ஒரு கண்ணாடிச் சுவர் இருக்கும். அதை உடைத்துவிட்டால், சம்பாஷணை சுவாரசியம் அளவிட முடியாதது. சிலர் துவக்கத்திலேயே அவற்றை கிள்ளி எறிவர்; ஆத்மார்த்தமான உரையாடல் நிலையை போதை இல்லாமலேயே ஊட்டுவர். சிலரோ தங்களின் புத்தகங்களின் நீட்சியாக சொற்பொழிவை அமைத்துக் கொள்வர். எப்படியாக இருப்பினும் மாலை நேரத்து மீட்டிங் சுகம் தரும்.

சாருவின் எழுத்தை மேலோட்டமாக படிப்பவருக்கே அவர் மேல் அச்சம் கலந்த குழப்பம் நேரிடும். எந்திரன் விமர்சனம் வாசித்தவுடன் நண்பர் சொன்ன மதிப்பீடு நினைவில் தோன்றியதைத் தவிர்க்கமுடியவில்லை.

‘சுஜாதா யாரையாவது திட்டினால், அது அந்தாளுக்கு அழைப்பு விடுவதாக அர்த்தமாக்கும். ஒரே வருடத்தில் ரெண்டு படம் வருது. ஒண்ணு புது வசந்தம்; இன்னொண்ணு அஞ்சலி. எந்தப் படத்த சுஜாதா “ஆஹா… ஓஹோ…”ன்னு பாராட்டினார்? எதத் தாளிச்சு அதகளமாக்கினார்னு நெனக்கிறீங்க? – “அஞ்சலி திரைப்படம் தமிழ் சினிமா வரலாற்றின் மோசமான மைல்கல்” என்றார் சுஜாதா. விக்ரமன் படத்தை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறார். அடுத்த வருஷம் மணிரத்தினத்துடன் இணைந்து விட்டார்’.

சாரு நிவேதிதாவும் கமலைத் திட்டுகிறார். இளையராஜாவைத் தாக்குகிறார். ரஜினி, ஷங்கர் படங்களையும் விட்டுவைக்கவில்லை. நாமும் நிறையவே விமர்சித்திருக்கிறோம். ராசலீலாவை கிழிக்கிறோம். சாரு மடலில் தந்த கவிதை கிவிதையாக்குகிறோம். நானும் கூட்டு சேர நிறையவே சங்கேதம் விட்டுப் பார்த்தாகிவிட்டது.

‘உங்கொப்புரான் சத்தியமா நான் குடிகாரன் இல்ல’ என்று சாரு ஆனந்த விகடனிலும் அவரின் பதிவிலும் தொடர்ச்சியாக எழுதி வந்த காலகட்டம் அது. அப்படியானால் சந்திக்க உகந்த இடம் மதுவகமே என முடிவானது. நித்யானந்தா மாதிரியே குடிப்பழக்கத்திற்கும் ஏதாவது பதில் வைத்திருப்பார் என்று தோன்றாமல் போனது வேறு பிரச்சினை.

சாருவிற்கு மின்மடலிட்டேன். தொலைபேசி தந்தார். அழைத்தேன். பேசினோம். ஒரேயொரு சந்தேகம் கேட்டார்.

“பாலா, ஆனந்த விகடன் கட்டுரை எழுதுகிறேன். இந்த பிராமணர்கள் எல்லாம் பூணூல் மாற்றிக் கொள்வார்களே… அந்த நாள் எந்த மாதத்தில் எப்பொழுது வரும் என்று  தெரியவில்லை; திண்டாடுகிறேன். கூகிள் கைவசம் இல்லை. உங்களுக்குத் தெரியுமா?”

இதற்கு மேல் சாரு நிவேதிதாவுடன் ஆன சந்திப்பு குறித்து குறிப்பிடத்தக்க விஷயம் எதிவும் கிட்டாததால், இந்தக் கட்டுரை இத்துடன் நிறைவடைகிறது.

Manushyaputhiran & Uyirmmai’s Uyirosai 1st Anniversary

அறிவிப்புகள்:

உயிர்மை.காம் வழங்கும் வார இணைய இதழ்: “இது உயிரோசையின் 50ஆவது இதழ் :: மனுஷ்ய புத்திரன்எழுதியதில் இருந்து:

  • நமது பண்பாட்டு வேர்கள், கலை, இலக்கியம், தத்துவம், சமூகம், அரசியல், சர்வதேச விவகாரங்கள், சினிமா என ஏராளமான துறை சார்ந்த எண்ணற்ற கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன.
  • 1500க்கும் மேற்பட்ட படைப்புகள் பல்லாயிரம் பக்கங்களுடன் மிக அரிதான பிழைகளுடன் பதிவேற்றம்.
  • எதையும் எழுதலாம் என்ற எழுத்து சுதந்திரத்தையோ இணைய சுதந்திரத்தையோ சிறிதும் ஏற்கவில்லை.
  • ஓராண்டாக உயிரோசை கடும் பொருட் செலவுடன் — ஓராண்டில் கிட்டத்தட்ட 3 லட்சம் ரூபாய்.
  • உயிரோசைக்கு ஒரு சிறிய அளவிலான சந்தா தொகை

Uyirmai.com & Manushyaputhran in Uyirosai.com: “உயிரோசை ஓராண்டு நிறைவு விழா: இணைய எழுத்துக்கள் இன்றும் நாளையும்: உயிரோசையை முன் வைத்து — சிறப்புரைகள்: சாருநிவேதிதா & எஸ்.ராமகிருஷ்ணன்

என்னுரை

உயிர்மை போன்ற பத்திரிகை நடத்துமிடத்தில், உயிரோசை போன்ற இணையத்தில் மட்டும் வெளியாகும் வார இதழ் நடத்துவது வெகு சுலபம்.

மாத இதழ். அதுவும் அச்சில் வெளியாகும் இதழ். ஒல்லியாக விளம்பரம் இன்ன பிறவெல்லாம் கழித்தால் 150 ஒருங்குறி கிலோபைட்டுக்குள் அடங்கும் இதழ். அதற்குள் எல்லோரையும் திருப்தி செய்ய இயலாது.

அதை விட புத்தகமாக்கல் லாபகரமானது. ஜூன் 2009 உயிர்மையை வாங்கமாட்டீர்கள். ஆனால், ஜூன் 2000த்தில் வெளியான புத்தகத்தை பத்தாண்டு கழித்தாலும் வாங்குவீர்கள். விமர்சிப்பீர்கள். வாசிக்கக் கூட செய்துவிடுவீர்கள்.

ஆகவே,

  1. புத்தகத்திற்கு ஆள் பிடிப்பது எப்படி? எழுதவும் ஆள் வேண்டும்; படிக்கவும் கூட்ட வேண்டும்.
  2. பத்திரிகையில் விற்பனையாகாத பெயரை எப்படி சந்தைப்படுத்துவது?
  3. அச்சில் கழித்துக் கட்டப்பட்டதை, மனம் புண்படாமல், தேர்வானதாக சொல்வது எப்படி?
  4. துணை ஆசிரியர் கவிதைகளையும், வளரும் உதவி ஆசிரியர் தலையங்கங்களையும் வெளிவரச் செய்யும் வழி எது?
  5. ப்ராண்ட் அம்பாசடர்களை உருவாக்குவது எப்படி?
  6. அறுபது பக்கத்திற்குள் இடங்கொடுக்க முடியாதவருக்கு, மனதில் மட்டுமல்லாமல், பாலம் அமைத்து, இடங்கொடுப்பது எப்படி?
  7. மூத்த தலைமுறையினருக்கு அறிமுகமானவர்களை வைத்து உயிர்மை பதிப்பகத்திற்கு ரெகுலர் விளம்பரம் பெறுவது எப்படி?
  8. சாரு.ஆன்லைன், ஜெயமோகன். இன், எஸ். ராமகிருஷ்ணன்.காம் போன்ற தனி மனிதர்களே புகழைத் தட்டிச் செல்லாமல், அவரின் வெளியீட்டாளரும் எப்படி தன்னை நிலை நிறுத்திக்கொள்வது?
  9. இணையம் வந்தபிறகு இலக்கியச்சண்டை என்பது நொடிக்கு நொடி பதிவிடுவது. அதற்கு ஈடுகொடுக்க வாரம்தோறுமாவது வெளியாவது.
  10. வாரப் பத்திரிகை குமுதம், மாதமொருமுறை இலக்கியம் சமைக்க ‘தீராநதி‘ ஆகும்போது, மாதாந்தரி சிற்றிலக்கிய சிற்றேடு, வாராந்தரி ஆகக் கூடாதா? கூடுமா?

What did Uyirosai achieve? உயிரோசை என்ன சாதித்தது?

1. தமிழ் சினிமா குறித்த சுவாரசியங்கள் இலக்கியமாகா என்பதை தமிழ்மகன் கொண்டு முறியடித்தது.

2. தனிவலை இல்லாத சுகுமாரன், வாஸந்தி, இந்திரா பார்த்தசாரதி, தமிழவன் போன்ற மூத்த இலக்கியவாதிகளை தொடர்ச்சியாக எழுதவைத்தது.

3. சொந்த வலையகமாக இருந்தால் அமிதாப் பச்சன் போல் ‘என்னை எல்லாரும் திட்டறாங்க’ என்று அழுதோ, மறுமொழிகளை மறைத்து/பின் திறந்து/மீண்டும் மட்டுறுத்தி என்று சுழற்சிக்குள் சிக்கியோ காணாமல் போகும் அபாயத்தை தவிர்த்தது.

3. சுதேசமித்திரனின் potentialல் துளி ஆளுமையாவது வெளிக்கொணர்ந்தது.

4. இந்திரஜித் பத்தி நிஜமாகவே தவறவிட முடியாததாக இருப்பது.

5. Lack of consistency in மனோஜ், மாயா, சஞ்சித், அபிலாஷ் என்பதைக் குறையாக சொல்ல வந்தாலும், அவர்கள் எல்லாம், புது எழுத்தாளர்களாமே!?!

6. இலக்கியவிருதுகள் குறித்து பன்முக விமர்சனம் வராவிட்டாலும், முழுமையான ஆளுமை சித்திரம் கிடைக்காவிட்டாலும், பின்னணியும் அரசியலும் அறியச்செய்திரா விட்டாலும், இன்னின்னாருக்கு இப்படி என்று செய்தியாக்கியது.

7. ‘உரையாடல்‘ மாதிரி போட்டி இல்லாவிட்டாலும், இதழுக்கு ஒரு சிறுகதையாவது வெளியிடுவது. (கவிதைகளும் வருகிறது. எவராவது வாசித்ததுண்டா?)

8. எழுத்தாளருக்குத் தேவை அங்கீகாரம். படைப்பை ‘நல்லாருக்கு!’ என்று குறிப்பால் உணர்த்தி, உயிர்மை வெளியீட்டீல் இடங்கொடுத்து, பீடத்தில் ஏற்றி அமரவைப்பது.

9. தமிழகத் தொலைக்காட்சி நிகழ்ச்சி குறித்து தொடர் எழுதாமல் இருந்தது.

10. ஒரு வருடம்; 50 இதழ் என்பது லேசுப்பட்ட சமாச்சாரம் இல்லை. அதுவும் இணையத்தில். முணுக்கென்றால் வோர்ட்பிரெஸ், சட்டென்று ப்ளாக்ஸ்பாட் நிலவும் சூழலில், நாலு குதிரை, மூன்று மாடு, ஓரிரு கழுதை, என்று animal farmஐ கட்டி மேய்த்திருப்பது.

How Uyirosai could have done better? உயிரோசை எவ்வாறு மேலும் பரிமளித்திருக்கலாம்?

1. பாபுஜியின் கருத்துப் படம்

2. உயிரோசையின் வடிவமைப்பு

வலையில் உள்ள சில வண்ணங்கள் கண்களுக்கு உறுத்தலாக இருப்பதைச் சரி செய்தால் படிப்பவர்களை அசதியுறாமல் இருக்கச் செய்யும். புகைப்படங்களும் மிகவும் சிதறிப்போன ஒரு தோற்றத்தை அளிக்கின்றன. – வெங்கடாசலம் / சிங்கப்பூர்

3. தமிழ்ப் பெயர்ப்பு

மொழிகளினூடான பயணத்தில், கவித்துவம் பின்தங்கிவிடுகிறதோ என்ற ஐயம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. – மெ.உலகநாதன் / சென்னை

4. புது நூல்கள் அறிமுகம் (அல்லது) புது புத்தக விளம்பரம்தானே?

5. குறுந்திரைப்படங்கள் விமர்சனம் + பார்வை

6. பெண் படைப்பாளிகளின் பங்களிப்பு

7. ஓவியங்கள், சிற்பம், நுண்கலை

8. அரசியல் சப்தங்களுக்கு பதில் அனுபவங்களின் பகிர்வு

9. ஈழம், இலங்கை கவனிப்பு

10. பாலியல், பொருளாதாரம்/வர்த்தகம்/நிதிநிலை போன்ற பேசப்படாத & தட்டையான தமிழ் ஊடகப் பார்வை பெறும் தலைப்புகள்.

Where did Uyirosai mimic other websites? உயிரோசை எங்ஙனம் பிற வலையக செயல்பாடுகளை பிரதிபலித்தது?

1. வெட்டி, ஒட்டும் Ctrl+C வகையறா → ஹைக்கூ தொடர், முல்லா கதைகள், சூஃபி கதைகள்

2. திண்ணை

3. சொல்வனம் போல் வாசகர் கருத்துகளைத் தடை செய்தல்

4. கீற்று போல் விளம்பரங்கள்

5. அந்திமழை போல் ஆதிகால வெப்1.0 தோற்றம்

6. தமிழோவியம் போல் அ.ராமசாமி போல் சில எழுத்தாளர்களுக்கு நிழற்படம்; பாவண்ணன் போல் வேறு சிலருக்கு எந்த ஒளிப்படமும் mastheadம் இடாமை.

7. இஷா (ஈசா?) யோகம் மாதிரி பக்கத்திற்குப் பக்கம் திரு. மனுஷ்யபுத்திரன் அவர்களின் திருவுருவப்படம்.

8. பதிவுகள் மாதிரி marquee scrolling செய்தி ஓடவிடுவது.

9. தமிழ்மணத்தில் இருக்கும் தனிப் பதிவரின் இடுகை போல் ஒற்றைப் பார்வையை மட்டும் தருவது. பத்திரிகைக்கு அழகு பல்நோக்கில் பல்லூடகமாக வருவது.

10. ஆறாம்திணை கொஞ்ச நாள் கழித்து தென்றலானது. அது போல்?

சாரு நிவேதிதா – ராஸ லீலா: புத்தக விமர்சனம்

எங்கேயோ, எப்பொழுதோ, ஃப்ரீயாக கிடைப்பதால் பினாயில் குடிக்கும் தமிழன் ஆகாமல், இரப்பவருக்கு இடவேண்டிய தட்சிணையாக புத்தகத்தை வாங்கிவிட வேண்டும் என்று வாசித்த நினைவு. கருத்தை சொன்னவர் இவராக இருக்கலாம்.

சாருவின் எழுத்து இலவசமாகக் கிடைக்கிறது. அதற்காகவே சாருநிவேதிதாவின் ராஸலீலா வாங்கினேன்.

சாருவின் புதிய புத்தகங்கள் குறித்த அறிவிப்பு பார்த்தவுடன், படித்து முடித்த ராஸ லீலா பற்றி, சமீபத்தில் மிகவும் பிரயத்தனப்பட்டு கொணர்ந்த இரண்டு வரி:

பாத்ரூமில் வைத்திருந்த சாருவின் ‘ராஸ லீலா’, சுத்தம் செய்ய பேப்பர் கிழிக்கும் அவசரத்தில் தவறுதலாக குப்பைத் தொட்டியில் விழுந்துவிட்டது. – Mar 5

இவ்வளவு சிறிய விமர்சனம் ஆகாது என்றால், கொஞ்சம் பெரிய அலசல்: வார்த்தைகளின் விளிம்பில்: Rasa Leela review

நானூறு ரூபாயை சாருவிற்கு தர விருப்பமிருந்தால், நேரடியாக டிடி எடுத்து அனுப்பி விடவும். ராச லீலாவிற்கு செலவழிப்பதை புத்தகம் வாயிலாக ஆசிரியர் வார்த்தையில் சொல்வதானால்: (பக்கம் 286)

‘நான் இப்போது ஒரு நம்பிக்கை துரோகம் செய்து கொண்டிருக்கிறேன்.’

சாருநிவேதிதா – ராஸலீலா

அங்கே வரும் பெண்களைப் பார்க்கவே வாரத்தில் இரண்டு முறை அங்கு செல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறான் பெருமாள். நிச்சயமாக அந்தப் பெண்கள் யாரும் தமிழ்ப் பெண்கள் அல்ல. தமிழர்களுக்கு பழம் சாப்பிடும் வழக்கம் இல்லையோ என்னவோ.

பெருமாளுக்கு அதைப் பற்றியெல்லாம் அக்கறையில்லை. அவன் கவலை அவன் மூலம்.

அப்பர் மிடில் க்ளாஸ் மற்றும் அப்பர் க்ளாஸைச் சேர்ந்த தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் வட இந்திய முகங்களையே அங்கு காண முடிந்தது. தமிழ் இரண்டு சதவிகிதம் இருக்கலாம். இப்படி இது ஒரு பூர்ஷ்வா கடையாக இருந்தாலும் விலை என்னவோ மற்ற இடங்களை விட மலிவுதான்.

மேலும் இந்தக் கடையில் பெருமாள் அவதானித்த ஒரு முக்கிய விஷயம் என்னவென்றால் இங்குள்ள பணிப்பெண்கள் யாவருக்கும் முலைகளே இல்லை என்பது. தய்வுசெய்து இதைப் பாலியல் பிரச்சினை ஆக்காதீர்கள். இது முழுக்க முழுக்க வர்க்க முரண்பாடுகள் சம்பந்தப்பட்ட பிரச்சினை.

அந்தப் பணிப்பெண்கள் ஏன் இப்படி நறுங்கிப் போய் கிடக்கிறார்கள் என்பதை Communist Manifestoவையும் மக்ஸீம் கார்க்கியின் தாயையும் படித்துவிட்டு யோசியுங்கள்.

அந்தக் கடையின் அண்ணா நகர் பிராஞ்ச்சில் மட்டும் அப்படியில்லை. மைலாப்பூர் பிராஞ்ச்சிலும் இதே நிலைமைதான். ஆனால் இந்தக் கடையில் பழங்களும் காய்கறிகளும் வாங்க வரும்பெண்களுக்கோ முலைகள் கறவை மாட்டு மடிகளைப் போல் இருக்க காரணம் என்ன?

அவர்களைப் பார்க்கும்போதெல்லாம் பெருமாளுக்கு ரோஜா படத்தில் மனீஷா கொய்ராலா அர்விந்த் சாமியைப் பார்க்க ஓடி வருவாளே அந்த ஸீன்தான் ஞாபகம் வந்து தொலைக்கிறது. பெர்க்மெனையும் ஃபெலினியையும் கோதாரையும் பார்த்து என்ன ரோஜாவில் அந்த ஸீனில் மனீஷா கொய்ராலா ஓடி வரும்போது தியேட்டரில் விசில் சத்தம் காதைப் பிளக்கிறதே…

அந்த ரசிகர்களுக்கும் தனக்கும் என்ன வித்தியாசம் என்று ஒருகணம் நினைத்துப் பார்ப்பான் பெருமாள்.

மறுகணமே கலையைக் காமம்வென்றுவிடும். காமமும் கலைதானே என்கிறீர்களா? அப்படியானால் இப்படி மாற்றிக் கொள்ளலாம். கலையை ஆபாசம் வென்றுவிடும்.

நன்றி: Rasa Leela :: Chaaru Nivedhitha