Monthly Archives: பிப்ரவரி 2011

புதுமைப்பித்தனை புத்தகம் போட்டது யார்? காலச்சுவடு & ஆ.இரா வெங்கடாசலபதி x தமிழினி & வேதசகாயகுமார்

பதிவுகள்:

அ) துவக்கம் இங்கே: புதுமைப் பித்தன் படைப்புகள் செம்பதிப்பு : சில கேள்விகள் – கோபால் ராஜாராம்

1.  புதுமைப்பித்தன் படைப்புகள் -என் ஆய்வின் கதைஎம் வேதசகாய குமார்

2. புதுமைப்பித்தன் – கோபால் ராஜாராமின் கேள்விகளுக்கான பதிலும் இன்னும் பிற குறிப்புகளும் :: கண்ணன் (காலச்சுவடு ஆசிரியர்)

3. ‘அன்னை இட்ட தீ ‘ புத்தகத்தின் முன்னுரை :: ஆ. இரா. வேங்கடாசலபதி

4.  ஜெயகாந்தனின் இந்திய முற்போக்கு அழகியல் -1 | ஜெயமோகன்.in

ஜெயகாந்தன் மீதான இன்றைய நவீனத்துவ நோக்கை சுந்தர ராமசாமியை முன் ஏராகக் கண்டு வேதசகாய குமார் உருவாக்கினார் என்றால் அது மிகை அல்ல. பலகாலமாக வேதசகாய குமார் எழுதிய கட்டுரைகளுக்கு ஆதாரமாக அமைந்த அவரது [முனைவர்பட்ட ]ஆய்வுநூல் ‘புதுமைப்பித்தனும் ஜெயகாந்தனும் ‘ [தமிழினி பதிப்பகம் சென்னை] இக்கருத்துக்களை விரிவாக தொகுத்துக் காட்டுகிறது. அது முழுக்க சுந்தர ராமசாமியின் வரிகள் மேற்கோள்களாக நிரபியிருக்கின்றன.

தமிழின் தேர்ந்த விமரிசகர்களில் ஒருவரான எம்.வேதசகாய குமாரின் ஆய்வு நூல் இவ்வகையில் மிக பிழையான பார்வையை வெளிப்படுத்துகிறது. எந்தவித வரலாற்று போதமும் இல்லாமல் அன்று பிரபலமாக இருந்த வடிவ ஆய்வையே அடிப்படையாகக் கொண்டு துரதிருஷ்டவசமான இறுதி முடிவுகளுக்கு வந்து சேர்கிறது.

5. முதுநிலை ஆய்வுப்பேராசிரியர் கட்டுரையும், சில கேள்விகளும் :: K.ரவி ஸ்ரீநிவாஸ்

வேதசகாய குமாரின் முனைவர் பட்ட ஒட்டு மொத்த ஆய்வில் அவரது சுயமான பங்களிப்பு, அவரது சிந்தனைகளின் பங்கு என்ன என்ற கேள்வி எழுகிறது.அது எத்தனை சதவீதம் என்ற கேள்விக்கு யார் பதில் தரப்போவது யார் – ஜெயமோகனா இல்லை குமாரா ?

6. புதுமைப்பித்தன் இன்று… | jeyamohan.in

7. வேதசகாயகுமாரின் கலைக்களஞ்சியம் | செயமோகன்.in :: Encyclopedia Tamil Criticism

8. விரியும் கருத்துப் புள்ளிகள் :வேதசகாயகுமாரின் பண்பாட்டு விமரிசனங்கள். | [27- 9- 2009 அன்று நாகர்கோயில்வேதசகாயகுமார் 60 கூட்டத்தில் எழுத்தாளர் ஜெய மோகன் ஆற்றிய உரை

9. வேதசகாயகுமார் விழா | ஜெயமோஹன்.in

10. சொல்புதிது பற்றி… | எம்.வேதசகாயகுமார் எழுதிய [எம்.வேதா] நாய்களைப்பற்றிய ஒரு உருவகக் கதை சுந்தர ராமசாமியைப் பற்றியது என்று சொல்லப்பட்டு பெரும் பிரச்சாரம் கிளப்பப்பட்டது. [நாச்சார் மடத்து விவகாரங்கள்]

11. ஒரு முழுப் பூசணிக்காயும், சில சோற்றுப் பருக்கைகளும் :: K. ரவி ஸ்ரீநிவாஸ்

12. எம் வேதசகாயகுமார், ஆர்.எம் .சதக்கத்துல்லா / மற்றும் சொல்புதிது ஆசிரியர் குழு

அன்புள்ள திண்ணை ஆசிரியருக்கு ,

எஸ்.வேதா என்பது எஸ்.வேதசகாயகுமார் என்பதன் சுருக்கம். இப்பெயரில் நான் கதைகள் முன்பு எழுதியதுண்டு. இனியும் எழுதலாம் தனிப்பட்ட முறையில் இன்றைய அரசியல் சூழலைப்பற்றிய என் மனச்சோர்வையும் உயரிய மதிப்பீடுகள் என நான் பலகாலமாக நம்பியவற்றின் வீழ்ச்சியையும் சொல்கின்ற கதை ‘நாச்சார் மடவிவகாரங்கள் ‘ . அந்த வீழ்ச்சியை குறிக்க என் முன் தூலமாக உள்ள சொந்த அனுபவம் சார்ந்த உதாரணம் சுந்தர ராமசாமி .

சுந்தர ராமசாமி மீது நான் கொண்ட குருசீட உறவுக்கு நீண்ட முப்பதுகால வரலாறு உண்டு. அவர் கல்வித்துறை மீது வைத்த கடுமையான விமரிசனங்களை உண்மையென நம்பி கல்வித்துறையுடன் கடுமையாக மோதி பலர்வெறுப்பையும் கோபத்தையும் சம்பாதித்தவன் நான். அதற்காக நான் அடைந்த இழப்புகள் சாதாரணமல்ல . வசந்திதேவியை மாபெரும் கல்வித்துறை சக்தி என்று சித்தரித்து அவர் எழுதிய நூல எனக்கு அதிர்ச்சி அளித்தது . வசந்தி தேவியையும் , சுந்தர ராமசாமி அப்படி எழுதியதற்கான காரணங்களையும் அறிந்த எனக்கு ஏற்பட்டது ஆழமான மனச்சோர்வு .

வசந்தி தேவியே பெரிய கல்வியாளர் என்றால்

  • நெ .து .சுந்தரவடிவேலு
  • வ .செ குழந்தை சாமி
  • வ .சுப மாணிக்கம்

போன்றவர்கள் என்ன குறைந்து விட்டார்கள் ? யாருக்காக இந்த ஆட்டத்தை ஆடினோம் ?

இது ஓர் உதாரணம்தான். வாழ்க்கையின் இந்தக் கட்டத்தில் வெற்றுப்பேச்சுகளால் ஏமாற்றப்பட்டவனாக உணர்கிறேன். அதேபோல நான் நம்பிய அரசியலிலும் என் ஏமாற்றம் பெரிது.

‘நாச்சார் மட விவகாரங்கள் ‘ கதை தொடங்கும் புள்ளி இதுதான். அது ஓர் அங்கதம். அக்கதை கதைகளுக்குரிய வழக்கப்படி வளர்ந்து மேலும் பல இடங்களை தொட்டுசெல்கிறது. இக்கதையை காலச்சுவடு அவர்கள் மீதானவிமரிசனமாக காட்டும் முன்புவரை எவருக்குமே அப்படி படவில்லை என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன் . திண்ணையில் கூட விமரிசனம் வந்ததை படித்தேன்.

நவீனத்துவ மரபைச்சேர்ந்த கதைகளின் அழகியல் கடுமையும் தீவிரமும் கொண்டதுதான். உதாரணமாக சுந்தர ராமசாமியின் நடுநிசி நாய்கள் என்ற தொகுப்பில் உள்ள கவிதைகளையே எடுத்துக் கொள்ளலாம். இந்தக் கதையேகூட ‘வானம் வந்திறங்கியதும் இளைப்பாற ஒரு கட்டில் செய்தேன் ‘ என்ற பசுவய்யா கவிதையின் மறுவடிவம்தான். வந்திறங்கிய வானம் ‘கழிப்பறை எங்கே ? ‘ என்று கேட்பதுதான் அக்கவிதை. என் கதையை வேண்டுமென்றே திரித்து சிக்கல்களை உருவாக்க சிலர் முயல்வது இலக்கியத்துக்கு ஆபத்தானது . அப்படிப் பார்த்தால் சுந்தர ராமசாமி எழுதிய ‘ நடு நிசி நாய்கள் ‘ , ‘நாய்கள் ‘ , ‘ ஆந்தையை பார்த்து நாளாச்சு ‘ போன்ற கவிதைகள் எல்லாம் யாரைப்பற்றியவை என்று நாம் கேட்க வேண்டி வரும். அவை கசடதபற என்ற இலக்கியக் குழுவினரையும் க. நா. சுப்ரமணியத்தையும் குறித்தவை என்று இலக்கிய உலகில் அன்று பேசப்பட்டதுண்டு. ‘ஒரிஜினல் ஆந்தை ‘ என க நா சு பலகாலம் உள்வட்டத்தால் வசைபாடப்பட்டதும் , அவர் மிக மனம் வருந்தி பதினேழு வருடம் சுந்தரராமசாமியின் தொடர்பை துண்டித்திருந்ததும் நடந்தது. இது எனக்கு நன்கு தெரிந்ததே. அப்படி பொருள் கொண்டால் எந்த இலக்கியமும் ஆபத்தானதாக மாறிவிடும்.

படைப்பாளிகள் மீதான வன்முறை பற்றி காலச்சுவடு பேசுகிறது. காலச்சுவடுதான் அவதூறுகளுக்கென்றே ஒரு பகுதியை ஆரம்பித்த முதல் சிற்றிதழ் . அவதூறுகளை தமிழிலேயே அதிகமாக வெளியிட்ட இதழ். நீதிமன்றம் செல்ல வசதியாகவா அதில் அவதூறுகளை வெளியிட்டனர் ? உதாரணமாக ஆர் பி ராஜநாயகம் எழுதிய கட்டுரையையே சொல்லலாம். அதை தொடர்ந்து கண்ணன் எழுதிய குறிப்பில் ‘மற்ற நண்பர் ‘ என்று சொல்லி என் சாதியைப்பற்றி தேரோட்டி என உள்ளர்த்தம் வைத்து நக்கல் செய்து எழுதிய இதழ் அது. தெரியாமல் கேட்கிறேன், சுந்தர ராமசாமியை விமர்சிக்கும்போதுமட்டும்தான் படைப்பு வன்முறையாகிறதா ? கையெழுத்திட்ட மகாஜனங்களில் எத்தனைபேர் இவ்விஷயங்களை கண்டித்தார்கள் ? விஷத்தை நாசூக்காக உமிழ்ந்தால் அது வன்முறை இல்லையா ?

இலக்கியப் படைப்பு நன்றாக வரலாம், சரியாக வராமலும் போகலாம். அது எழுதுபவனின் திறனைப்பொறுத்த விஷயம். அதை இம்மாதிரி கொச்சைப்படுத்துவது நோய்க்கூறான மனநிலை .

தொடர்ச்சி

நான் எழுதிய ‘ நாச்சார்மடம் ‘ உண்மையில் மிக எளிமையான ஒரு கதை. அதில்பெரிதாக வசை ஏதும் இல்லை. அதன் தொடக்கம் என்னவாக இருந்தாலும் கடைசியில் நான் உத்தேசித்தது ராமர்கோவில் விஷயமும் வாஜ்பாயும்தான்.

சுந்தரராமசாமி எழுதிய வசைக்கவிதைகள் கதைகள் ஆகியவை தோண்டி எடுக்கப்பட்டு பேசப்படுகின்றன. புதிய காற்று பத்திரிகையில் சுந்தர ராமசாமி எழுதிய தனிநபர் வசைகளின் ஒரு பட்டியல்தரப்பட்டுள்ளது .

காலச்சுவடு அளித்த கோரிக்கைமனுவுக்கு பதிலாக தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் சார்பில் சுந்தர ராமசாமி நிகழ்த்திய கீழ்த்தரமான தனிநபர் தாக்குதல்களை பட்டியலிட்டு எழுதி காலச்சுவடுக்கு அனுப்பி அது பிரசுரிக்க மறுத்த கடிதத்தின் நகலும் எங்கும் கிடைக்கிறது.

புளியமரத்தின் கதையில் வரும் இசக்கி உண்மையில் நாகர்கோவிலில் உள்ள பி எஸ் மணி என்ற சிறு பத்திரிகையாளர்தான் என்ற செய்தியும், இது அக்காலத்தில்பெரிய பிரச்சினையாகி அடிதடி விளிம்புவரை போய் சக்கைபுளிக்கறி பயத்தால் கைவிடப்பட்டது என்பதும் எனக்கே இப்போதுதான் தெரிந்தது.

அதைவிட முக்கியமான விஷயம் எல்லாருமே ‘நாச்சார்மடம் ‘ என்று சாதாரணமாக சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள் என்பது தான். உண்மையில் எனக்கே வருத்தமாக இருக்கிறது. நான் இதை கண்டிப்பாக உத்தேசிக்கவில்லை. காலச்சுவடு பிரசுரித்த அறிக்கையில் கையெழுத்திட்ட ஒரு எழுத்தாளரே ஒரு கூட்டத்தில் ‘நாச்சார் மட விமரிசனமுறை ‘ என்று சொன்னதாக கேள்விப்பட்டேன். நாகர்கோவிலில் நடந்த ஓர் இலக்கியக் கூட்டத்தில்பல பேச்சாளர்கள் சாதாரணமாக ‘நாச்சார்மடங்களின் பார்வை ‘ என்றெல்லாம் பேசுவதைக் கேட்டேன்.

13. படைப்பின் வன்முறை – எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், வாசகர்களின் கூட்டறிக்கை

சொல்புதிது (ஏப்ரல்-ஜூன், 2003) இதழில் எம். வேதா என்பவர் எழுதியதாகப் பிரசுரிக்கப்பட்டுள்ள ‘நாச்சார் மட விவகாரங்கள்’ என்ற ‘சிறுகதை’ மிக மோசமான தனிமனித அவதூறாக உள்ளது. கீழே கையொப்பமிட்டுள்ள எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், வாசகர்களாகிய நாங்கள் அதைக் கண்டிக்கிறோம்.

14. இயல் விருது சில விவாதங்கள்

ரோஜா முத்தையாச் செட்டியார் எம்.வேதசகாயகுமாருக்கு நெருக்கமானவர். அவருக்கு பல நூல்களை கொடுத்தவர். தன் முனைவர் ஆய்வுநாட்களில் வேதசகாயகுமார் பெரும்பாலும் செட்டியார் வீட்டில்தங்கி ஆய்வுசெய்திருக்கிறார். கையில் காசு இல்லாத குமாருக்கு செட்டியார் சாப்பாடுபோட்டு உதவியிருக்கிறார். தன்னைத்தேடிவந்தவர்களை எல்லாம் உபசரிப்பவர் அவர்.

ரோஜா முத்தையாச் செட்டியார் வாழ்நாளெல்லாம் சேர்த்த நூல்கள் அவர் மரணத்துக்குப் பின்னர் சிகாகோ பல்கலை உதவியுடன் சென்னையில் ஒரு நூலகமாக அமைக்கப்பட்டது. ஒரு கதைக்காக எனக்கு சில பழைய கிறித்தவ வெளியீடுகள் தேவைப்பட்டன. அவற்றை வேதசகாயகுமார் சேர்த்து செட்டியாருக்குக் கொடுத்ததாகச் சொன்னார். ஆகவே நான் ரோஜா முத்தையா செட்டியார் நூலகத்துக்குச் சென்றேன்.’பொதுமக்களுக்கு’ அனுமதி இல்லை என்றார்கள். அங்கே இருந்த நூலகர் சங்கரலிங்கம் என்பவரைச் சந்தித்தேன். அவர் என் முகம் பார்த்தே பேசவில்லை. ஒரு ·பைலை புரட்டியபடி ஏதாவது கல்வி நிறுவன அடையாள அட்டை தேவை என்றார் அவர். நான் ஓர் எழுத்தாளன் என்றேன் – அப்போது விஷ்ணுபுரம் வந்துவிட்டது. ”ஆமா, அப்டி சொல்லிட்டு தினம் ஒருத்தன் வாறான்…”என்று சொல்லி வெளியேபோகும்படி கைகாட்டினார். இந்த ஆசாமி ஒரு புகழ்பெற்ற நூலகர் என்று பிற்பாடு கேள்விப்பட்டேன்.

15. பிரமைகளும், பிரகடனங்களும்-2 :: K.ரவி ஸ்ரீநிவாஸ்

16. அரவிந்தன்

அவதூறு என்ற வார்த்தையைச் சிறுமைப்படுத்தும் அநாகரிகத்தின் உச்சமான இந்தக் கதை சுந்தர ராமசாமி, கண்ணன், மனுஷ்ய புத்திரன் ஆகியோரைப் பெயரிட்டுத் திட்டவில்லை. மற்றபடி வெட்கம், கூச்சம் ஆகியவற்றை முற்றாகத் துறந்த அப்பழுக்கற்ற கேவலமான மொழியில் இவர்கள் மூவரையும் திட்டித் தீர்க்கிறது இந்தக் கதை. சுந்தர ராமசாமியின் வீடு, வீட்டில் வேலை செய்யும் பெண்கள் உள்பட அவர் சம்பந்தப்பட்ட பல அம்சங்களை, செய்திகளை, நபர்களைக் கேவலப்படுத்தியிருக்கும் இந்த ‘எழுத்தாளரை ‘ தமிழுக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறது சொல் புதிது.

இந்தக் கதை எழுதப்பட்டதன் பின்னணியை இங்கு நினைவுபடுத்திக்கொள்வது நல்லது. மு. தளையசிங்கம் குறித்து ‘சொல் புதிது ‘ நடத்திய கருத்தரங்கு பற்றி ராஜநாயஹம் என்பவர் எழுதிய கட்டுரையைக் ‘காலச்சுவடு ‘ சென்ற ஆண்டு பிரசுரித்தது. பலர் அந்தக் கட்டுரையைக் கண்டித்தார்கள். நாஞ்சில் நாடன் போன்ற சிலர் தங்களது கண்டனத்தை எழுத்துபூர்வமாக (காலச்சுவடிலேயே) பதிவு செய்தார்கள். அதையடுத்து அந்தக் கட்டுரை வெளியிடப்பட்டதன் பின்னணியை விளக்கி காலச்சுவடு ஆசிரியர் கண்ணன் ஒரு குறிப்பை எழுதினார். ‘சொல் புதிது ‘ இதழில் ராஜ நாயஹத்தின் கட்டுரையை ஒட்டி ஒரு குறிப்பு வந்திருந்தது. அதில் மனுஷ்ய புத்திரனின் மதத்தைக் குறித்த ஒரு சொற்றொடர் இருந்தது. ‘காலச்சுவடி ‘ன் அடுத்த இதழில் இதற்கான எதிர்வினையை மனுஷ்ய புத்திரன் பதிவுசெய்தார்.

இதுவரையிலும் வெளிப்படையாக நடைபெற்றுவந்த இந்த மோதலை நிழல் யுத்தமாக மாற்ற முயன்றிருக்கிறது ‘சொல் புதிது ‘. எம். வேதா என்ற ‘புத்தம்புதிய ‘ எழுத்தாளர் ஒருவர் ‘காலச்சுவடு ‘, சுந்தர ராமசாமி, மனுஷ்ய புத்திரன், கண்ணன் ஆகிய பெயர்ச்சொற்களை நேரடியாகக் குறிப்பிடாமல் ஆனால் படிப்பவர்களுக்கு இந்தச் சொற்களைத் தவிர வேறு எதுவும் நினைவுக்கு வந்துவிடாத அளவுக்கு வெளிப்படையான குறிப்புகளுடன் ஒரு கதை எழுதுகிறார்.

ஓர் எழுத்தாளனுக்கு இருக்க வேண்டிய ஈரமும் தார்மீக உணர்வும் சிறிதேனும் அவரிடம் எஞ்சியிருக்குமெனில் ‘கால்கள் சூம்பிப்போன நொண்டி நாய் ‘ என்ற தொடரை எழுதியதற்காக அல்லது எழுத அனுமதித்ததற்காக அவர் பல நாள் தூக்கத்தை இழப்பார் என்பதில் சந்தேகமில்லை.

‘நாச்சார் மட விவகாரங்கள்’ சிறுகதையை நான்தான் எழுதினேன் என்கிறார் வே.ச.கு. தனது கூற்றுக்கு வலுசேர்க்க, இதற்கு முன்பும் கதைகள் எழுதியிருக்கிறேன் என்று அறிவிக்கிறார். இனிமேலும் எழுதுவேன் என்று மிரட்டுகிறார். அவர் கூறவது பொய் என்று கூற நான் விரும்பவில்லை. ஆனால் இந்தக் கதையில் – அதன் சகல கீழ்மைகளையும் தாண்டி – வெளிப்பட்டிருக்கும் புனைவு அம்சத்தை அவரால் சாதித்திருக்க முடியும் என்பதற்கான எந்த அடையாளமும் இதுவரை வெளிப்பட்டதில்லை. இதற்கு முன்பும் கதைகளை எழுதியிருக்கிறேன் என்று அடக்கமாகச் கூறிக்கொள்ளும் வே.ச.கு. அதற்கான ஆதாரங்களை வெளியிட வேண்டும் என்று கோருகிறேன்.

  • ஜெயமோகன் காலச்சுவடின் ஆரம்ப இதழ் ஒன்றில் எருமை மாட்டை வைத்து ஒரு கவிதை எழுதியிருந்தார். தமிழக அரசியல்வாதி ஒருவரைப் பற்றிய சித்திரமாக அதைப் பார்க்க முடியும் என்று அவர் என்னிடம் அப்போது கூறினார்.
  • மனுஷ்ய புத்திரனின் ‘அரசி’ கவிதை,
  • எஸ். ராமகிருஷ்ணனின் ‘ராமசாமிகளின் வம்ச சரித்திரம்’ என்ற சிறுகதை,
  • சுராவின் ‘ஜே. ஜே. சில குறிப்புகள்’,
  • நீல. பத்மநாபனின் ‘தேரோடும் வீதியிலே’,
  • சாரு நிவேதிதாவின் ‘ஜீரே டிகிரி’ என்று பல உதாரணங்களை இந்த வகையில் அடுக்கிப் பார்க்கலாம்.
  • புற உலகை அழுத்தமாக நினைவுபடுத்தும் இத்தனை பிரதிகளுக்கு மத்தில் ‘தேரோடும் வீதியிலே’ நாவல் மட்டும் சில எழுத்தாளர்களின் கண்டனத்திற்கு உள்ளானது ஏன் என்பதை யோசித்துப்பார்க்க வேண்டும்.

1. சுராவின் கருத்துக்களை நம்பி மோசம்போனேன் என்று சிறு குழந்தை போல அழும் வே.ச.கு., கல்வித்துறையில் அவர் என்ன செய்தார், அதன் விளைவாக என்னதான் நடந்தது என்பதை பகிரங்கப்படுத்த முன்வருவாரா?

2. ‘ஒரிஜினல் ஆந்தை’ பற்றி இப்போது எழுதும் வே.ச.கு., சுராவைத் தனது குருவாக வரித்திருந்த 30 ஆண்டுகளில் இந்த ஆந்தை பற்றி வாய் திறக்காமல் இருந்தது ஏன்? குருநாதரின் ‘குற்றம்’ அப்போது கண்ணில்படவில்லையா? அல்லது பக்தி விசுவாசம் கையைக் கட்டிப்போட்டு விட்டதா?

3. பு.பி. செம்பதிப்பு தொடர்பாகத் திண்ணை ஆசிரியர் குழு எழுப்பிய கேள்விகளுக்கான பதில்களைக் கண்ணன் முன்வைத்திருந்தார். அதில் அவர் வே.ச.குவுக்கும் சொல்புதிதுக்கும் சில கேள்விகளை எழுப்பியிருந்தார். அதற்கு இன்றுவரை யாரும் பதில் சொல்லவில்லை. பதில் சொல்ல முடியாத கையறு நிலைதான் வன்மமாக வெளிப்படுகிறது என்று நான் எடுத்துக்கொள்வதில் மதிப்பீடுகளின் பிதாமகர் வே.ச.குவுக்கு ஏதேனும் ஆட்சேபணை உண்டா?

17. காலச்சுவடு கண்ணன்

சொல்புதிதின் முன்னாள் ஆசிரியர் குழு உறுப்பினர் திருமதி எஸ். அருண்மொழி நங்கை (ஜெயமோகனின் மனைவி) சொல்புதிதில் ‘என்ன ஆனது இந்த எழுத்தாளர்களுக்கு ? ‘ என்ற கட்டுரையை எழுதியுள்ளார். இதைப் படித்துப் பார்த்து சொல்புதிதுக்கு எழுத்தாளர்கள் மேல் இருக்கும் மரியாதையை அறிந்துகொள்ளலாம். அதிலிருந்து ஒரு வாக்கியம்: ‘வீட்டுக்கு வரும் பெரும்பாலான எழுத்தாளர்கள் அலுப்பூட்டக் கூடியவர்களாக இருக்கிறார்கள். ‘ (சொல்புதிது 11, பக். 7).

18. சூர்யா

அன்று விஷ்ணுபுரம் மிக பரபரப்பாக பேசப்பட்ட ஓர் வருகை. எம் வேதசகாயகுமாரும் எஸ் ராமகிருஷ்ணனும் நாவலை கடுமையாகத் தாக்கிப் பேசினர்.

வேதசகாயகுமார் அன்று காலச்சுவடு அருகில். இருவரும் சொல்லிவைத்தது போல விஷ்ணுபுரத்தை வசைபாடினார்கள். ஜெயமோகனுக்கு இலக்கிய நுண்ணுணர்வே இல்லை என்றார் வேதசகாயகுமார் . எஸ் ராமகிருஷ்ணன் அதை ஓர் ஆர். எஸ் எஸ் பிரச்சாரம், அது ஒரு ஸ்தலபுராணத்தின் உல்டா என்றெல்லாம் சொன்னார்.

அங்கே தேவதேவன் மட்டுமே விஷ்ணுபுரத்தின் காவியத்தன்மையை சுட்டிக்காட்டி பாராட்டிபேசினார்.

19. பதிப்பியல் நோக்கில் புதுமைப்பித்தன் கதைகள் :: ஆ. இரா. வேங்கடாசலபதி

எம். வேதசகாயகுமார், புதுமைப்பித்தனும் ஜெயகாந்தனும், தமிழினி, நூலின் பின்னிணைப் பில் வெளியிட்டுள்ள புதுமைப்பித்தன் கதைகள் அட்டவணைக்கும் நான் பின்னிணைப்பு 3இல் கொடுத்துள்ள தகவல்களுக்குமிடையே உள்ள வேறுபாடுகளை வாசகர்களே ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ளலாம். நான் சேகரித்த மூல ஆவணங்கள் கலைகளுக்கான இந்திய மையத்தின் நல்கையோடு நுண்படச் சுருளிலும் குறுந்தகட்டிலும் பதிவு செய்யப்படு கின்றன. இப்பதிவுகள் சென்னை ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்திலும், காலச்சுவடு அறக்கட்டளை அலுவலகத்திலும் ஆர்வ முள்ளவர்கள் பார்ப்பதற்கு 1 ஜுலை 2001 முதல் வைக்கப்படும். யாரு டைய தகவல்கள் ஆதாரபூர்வமானவை என்பதை வாசகர்களே நேரில் கண்டு தெரிந்துகொள்ளலாம்.

20. புதுமைப்பித்தன் செம்பதிப்பு பற்றிய கேள்விகளுக்கு என் பதில்கள் :: இரா. வேங்கடாசலபதி

இறுதியாக

வேதசகாயகுமார் அல்லது ‘எனக்கு பொறத்தாலே போ பிசாசே!’

(ஆர்வி – புதுமைப்பித்தன் படைப்புகள் – வேதசகாயகுமாரின் ஆய்வின் கதை :: RV)

Software Development & Writers, Bloggers, Authors: Technology & Tamil Net

பத்தாண்டு வலை வாழ்க்கை


அசல்

நகல் – தமிழ் புத்தக ஆசிரியரும் வாசகர் குழாமும்

People offended by “Chola descent” lyrics in Lady Gaga’s Born The Way Lyrics

சோழாவை கிராமியில் பார்த்தவுடன் செல்வராகவனின் ‘ஆயிரத்தில் ஒருவனு‘ம் கிழக்கு பதிப்பக ச ந கண்னனின் ‘இராஜ ராஜ சோழனு‘ம்லேடி காகா -வை உச்சநிலைக்கு எடுத்துச் சென்று அந்த வரியைப் புகுத்தியிருக்கிறதோ என்று பயந்தே போனேன்.

In fact, Lady Gaga came to Chennai Book fair என்று தமிழ் பேப்பரில் பதிவு இருப்பதாக இரும்பூது எய்தினேன்.

சோலோ (Cholo) எங்கிருந்து வருகிறார்?

நீக்ரோ, அரிஜன், பறையன் என்பது போல் இழிவழக்கு. கரெக்டாக சொன்னால், ‘நாயே‘!

சோலோ தற்போதைய மடோனா ஆன, லேடி காகா பாடலில் இடம் பிடிக்கிறார். அமெரிக்காவின் அனைத்து இனத்தவரையும் கவரும் வகையில் பாடல் வரிகள் அமைய வேண்டும். ஏற்கனவே பதின்ம வயது வெள்ளையரைக் கவர்ந்தாயிற்று. ஆடை நீக்கியதால், அனைத்து வயதினரையும் சொக்குப் பொடி போட்டாயிற்று.

தொடர்ச்சியாக ஆப்பிரிக்க அமெரிக்கர், ஸ்பானிஷ் மொழி பேசுவோர், சீனர், ஜப்பானியர், கொரியர், வியட்நாமியர், மங்கோலியர், என்று பழுப்பு/கறுப்பு அனைத்து நிறத்தவரையும் டார்கெட் செய்வதன் விளைவு.

// The Racism in “Born This Way” and Why it Matters: ““cholo” and “chola” is often used to refer to Latino people in gangs and drug culture, who wear certain types of gang attire and prescribe to certain types of gang behavior”

நாம் இடக்கரடக்கல், குழுஊக்குறி விரும்பிகள். சென்ற காலத்தின் கெட்ட வார்த்தைகளை தவிர்க்க புதிய நல்ல வார்த்தைகளைத் தேர்ந்தெடுப்போம். நாள்டைவில் அவை சுடுசொற்களாகத் தோன்றுவதால், அவற்றையும் அல்லன சொற்கள் பட்டியலில் சேர்ப்போம். புதிய சைவ மொழியைத் தோற்றுவிப்போம். :: Our ‘Love Affair’ With Euphemisms : NPR


Mommy’s Little Cholo (Mommy’s Little Monster)

Artist (Band):Manic Hispanic
Lyrics

mommy’s little cholo dropped out of school
drinking 40 ouncers and smoking a dozen bowls
he loves to go out crusing with his homeboys,
he loves to go out and make some noise
he doesn’t wanna be a gardnerer
or a dude diggin’ a ditch
he’s 20 years old never had a job,
and the wellfare pays his rent

look what i did last night. little monsters forever, on the arm that holds my mic.

chola tattoo from shamrock

his brothers in the pinta
and his sisters on parol
his parents say mijo,
we’re praying for your soul

he’s mommy’s little cholo,
he’s mommy’s little cholo,
dont wake him in a fit

mommy’s little chola shoots methadrine,
mommy’s little chola had sex at 15
all the homegirls thinks she’s cool,
shes gonna go out to beauty school
she has no problem with he vatos in the bed
she’s got a homeboy his names little ben,
he knocked her up before he went to jail
and shes got no money for his bail

her eyes were like a racoons
she wasn’t born with a silver spoon,
hair sprayed up to the sky,
teardrop tattoo under her eye

she’s mommy’s little chola,
she’s mommy’s little chola,
dont take her life away

her eyes were like a racoons
she wasn’t born with a silver spoon,
hair sprayed up to the sky,
teardrop tattoo under her eye

she’s mommy’s little chola,
she’s mommy’s little chola,
dont take her life away

she’s mommy’s little chola [x4]


லேடி காகா பாடல் வரிகள்

It doesn’t matter if you love him, or capital h-i-m
Just put your paws up
‘Cause you were born this way, baby

Verse:
My mama told me when I was young
We are all born superstars

She rolled my hair and put my lipstick on
In the glass of her boudoir

“there’s nothin wrong with lovin who you are”
She said, “’cause he made you perfect, babe”

“so hold your head up girl and you’ll go far,
Listen to me when I say”

Chorus:
I’m beautiful in my way
‘Cause god makes no mistakes
I’m on the right track baby
I was born this way

Don’t hide yourself in regret
Just love yourself and you’re set
I’m on the right track baby
I was born this way

Post-chorus:
Ooo there ain’t no other way
Baby I was born this way
Baby I was born this way
Ooo there ain’t no other way
Baby I was born-
I’m on the right track baby
I was born this way

Don’t be a drag -just be a queen
Don’t be a drag -just be a queen
Don’t be a drag -just be a queen
Don’t be!

Verse:
Give yourself prudence
And love your friends
Subway kid, rejoice your truth

In the religion of the insecure
I must be myself, respect my youth

A different lover is not a sin
Believe capital h-i-m (hey hey hey)
I love my life I love this record and
Mi amore vole fe yah (love needs faith)

Repeat chorus + post-chorus
Bridge:

Don’t be a drag, just be a queen
Whether you’re broke or evergreen
You’re black, white, beige, chola descent
You’re lebanese, you’re orient
Whether life’s disabilities
Left you outcast, bullied, or teased
Rejoice and love yourself today
‘Cause baby you were born this way

No matter gay, straight, or bi,
Lesbian, transgendered life
I’m on the right track baby
I was born to survive
No matter black, white or beige
Chola or orient made
I’m on the right track baby
I was born to be brave

Repeat chorus
Outro/refrain:

I was born this way hey!
I was born this way hey!
I’m on the right track baby
I was born this way hey!

I was born this way hey!
I was born this way hey!
I’m on the right track baby
I was born this way hey.

அமெரிக்காவில் எகிப்து வருமா? சூடான் ஆகுமா?

இது ரொம்ப பழைய கதை. நவம்பரில் நடந்து முடிந்த தேர்தல் கதை

ஒரு ஊரில் ஒருத்தி இருந்தாள். அவள் ஒரு கோழியும் ஒரு சேவலும் வளர்த்தாள். அது நாளொரு முட்டையும் இட்டு வந்தது. சிறு சிக்கன் பல பணம் என்பதற்கேற்ப, ஒன்றை இரண்டாக்கி, இரண்டை பன்மடங்காகப் பெருக்கினாள்.

அவளுக்கு பக்கத்து வீடு மாளிகையாக இருந்தது. அதில் இருந்தவளுக்கு பத்து கோழி இருந்தது. தினந்தோறும் ஆறுமுகனின் கைக்கு ஒன்றாக டஜன் ஈண்டது.

திடீரென்று ஒரு நாள் மாளிகைக்காரிக்கு முட்டை வரத்து குறையத் துவங்கியது. அவள் பக்கத்துவீட்டுக்காரியை சந்தேகப்பட்டாள்.

அரசனிடம் முறையிட்டாள். ஒற்றைக் கோழி வைத்திருப்பவளோ ‘நான் எடுக்கவில்லை’ என மறுக்கிறாள்.

‘அவள் ஏழை. அதனால்தான் எடுக்கிறாள்’ என்கிறாள் பணக்காரி.

குழம்பிப்போன ராஜா, அடுத்த நாளுக்கு ஒத்திவைத்து அனுப்பித்துவிட்டான். விடிந்தது. அரண்மனை வாயிலில் சேறும் சகதியும் ஆக்கிவைக்க சொன்னான். வாயிலைக் கடந்ததும் ஒரு சிறிய கப்பும், இரண்டு வாளி நிறைய தண்ணீரும் வைத்தான்.

இருவரும் வந்தார்கள். ஒத்தை கோழிக்காரி ஒரேயொரு குடுவையளவு நீரை வைத்து, இரண்டு கால்களையும் சுத்தமாக அலம்பிக் கொண்டுவிட்டாள்.

பத்து மாட்டுக்காரிக்கு ஒரு வாளி போதவில்லை. பருத்த கால்கள். கவனம் சிதறிய நடை. சறுக்கி விடக் கூடாதென்ற பயம். எல்லாம் சேர்ந்து முட்டி வரை கரை. முன்னவள் பாக்கி வைத்திருந்த வாளித் தண்ணீரையும் தாராளமாக தாரை வார்த்தாள்.

மரியாதைராமன் பார்த்துக் கொண்டிருந்தார். தன் முட்டை போதாதென்று அடுத்தவர் முட்டையையும் சுடும் பழக்கம் கொண்ட பணக்காரியை கண்டித்து, அபராதம் விதித்தார்.

அங்கே சாட்சியம் இல்லை. அமெரிக்காவில் மீடியம் இருந்தாலும் மக்கள் மருண்டதில் ஒபாமாவின் பிடி தளர்ந்து முட்டை சிதறிவிட்டது.

மரியாதைராமன் போல் குடிமகன்களுக்கும் குழப்பம். நிறைய வைத்திருப்பவர் சிரத்தையாக மேய்த்தால், எதற்காக வளர்ச்சியில் பின் தங்க வேண்டும்? ஒழுங்காக கணக்கு போட்டு, கண்ணுங்கருத்துமாக நிர்வகித்தால், ஏழை பக்கத்துவீட்டுக்கார இந்தியா/சீனா போல் நாமும் முன்னேறலாமே?

இப்போதைக்கு அமெரிக்காவின் விஜயகாந்த் ஆன ‘டீ பார்ட்டி‘யிடம் தஞ்சம் புகுந்திருக்கிறார்கள்.

தலைப்புக்கும் இந்தக் கதைக்கும் என்ன சம்பந்தம்?

முதலில் புள்ளிவிவரம்:

கி.பி. 1980: அமெரிக்காவின் மொத்த வருவாயின் பத்து சதவீதத்தை ஒரு சதவீத பெரும்பணக்காரர் ஈட்டுகிறார்கள்.

2007: வெறும் பத்து சதவிகித பெரும்பணக்காரர்கள் 50% (சரி பாதி) வருவாயை வைத்திருக்கிறார்கள்.

2007: நான்கு லட்சம் டாலருக்கு மேல் ஈட்டும் மிகப்பெரும் செல்வந்தர்களிடம் 25% பணம் அடைந்திருக்கிறது.

1973 முதல் இப்போது வரை, பாக்கி 99% சதவிகித சராசரி அமெரிக்கரின் வருவாய் 8.5% உயர்ந்திருக்கிறது.

அதே காலகட்டத்தில் 1% செல்வந்தர்களின் சம்பளம் 190% வளருகிறது.

இப்போது விஜய்காந்த்தின் மதிப்பை உணர்ந்திருப்பீர்கள்.

  • இந்த அநியாயத்தைத் தட்டிக் கேட்க யாருமே இல்லையா?
  • இப்படி பணங்குவிப்பவர்கள் ஆட்சியில் இருக்க வேண்டுமா?
  • எட்டு மில்லியன் அமெரிக்கர்களை வேலையில்லாமல் தவிப்பது குற்றமில்லையா?

முழங்கினார்கள்; ‘தேநீர் கட்சி‘ வென்றது.

இப்பொழுது நிகழ்காலம். முதலில் டுனீசியா; நேற்று எகிப்து; நாளை யேமன்? ஜோர்டான்?

Unrest in Arab countries

Political crisis in Egypt

எங்கெல்லாம் புரட்சி வெடிக்கிறது… எப்படி வெடித்தது! ஏன் உருவானது… இதுதான் ஊடகங்களின் பேசு பொருள்.

1848 -இல் ஃப்ரெஞ்சு போராட்டத்திற்கும் அரபு நாடுகளின் எழுச்சிக்கும் முடிச்சுப் போடுகிறது ‘தி வோர்ல்ட்’.

இந்தோனேஷியாவில் 1998 பொங்கி எழுந்த ஏழை வறியோரின் கோபத்தையும் எகிப்தின் போராட்டமும் ஒரு விதத்தில் சரி நிகர் என்கிறது என்.பி.ஆர்.

1989களில் சோவியத் ருஷியா துண்டாடியதும், செக்கோஸ்லோவேகியா பிரிந்ததும், பில் கிளின்டனின் போஸ்னியா போரும் ஒப்பிடத் தக்கது. – அல் ஜஸீரா.

தலைப்புக்கு நிஜமாகவே வந்து விடலாம்.

இனப் போராட்டத்திற்குள்ளான சூடான் இரண்டாகப் பிரிகிறது. அமெரிக்கா இரண்டாகப் பிரியுமா?

சவூதி அரேபியா போல் இஸ்லாமிய நாடாகவும் பிரஸ்தாபிக்காமல், லெபனான் போல் சுதந்திரமும் புழங்காமல் இருக்கும் எகிப்தில் படித்தவர்கள் போராட்டத்தை முன்வைக்க, வறியோர்கள் பின்னெடுத்து செல்கிறார்கள். அமெரிக்காவிலும் ஜீஸஸ் அருளுடன், வீடற்றோர் பொங்கியெழும் ‘டீ பார்ட்டி’ புரட்சி எழுமா?

இந்தியாவைப் பாருங்கள்… உங்கள் வேலையை எடுத்துக் கொண்டு விட்டார்கள்.
சீனாவைப் பாருங்கள்… நீங்கள் உபயோகிப்பவை அனைத்தும் அங்கேதான் தயாராகிறது.

இந்தியனை… வெளியேற்று; சீனாவை… தூக்கியெறி!

பணக்கார ஆசியர் பி.எ.டபில்யூவிலும் லெக்சசிலும் பவனி வரும்போது, அண்டியிருக்க ஓலைக்குடிசைக்கு கூட வக்கிலாதவர்களுக்கு கோபம் வரும். அதுவும், வேற்று நிறத்தவனாகவும் இருந்துவிட்டால்…

உகாண்டாவில் நடந்தது; ஃபீஜியில் நடக்கும்; ஏன் நடக்காது என்பது இன்னொரு நாளைக்கான மேட்டர்.

தொடர்புள்ள நூல்கள்:

1. The Mendacity of Hope: Barack Obama and the Betrayal of American Liberalism by Roger D. Hodge

2. Ill Fares the Land by Tony Judt

பதின்ம வயதினரின் போதை மருந்துகளும் வாஷிங்டனின் வீடற்றவர்களும்

Three-Minute Fiction : NPR

1. மூன்று நிமிடக் கதைகள்:

அவசர உலகம். பாத்ரூம் போகிற அவசரத்தில் செல்பேசியில் இலக்கியம் படிக்கும் தலைமுறை. மூணே மூணு நிமிஷத்துக்குள் கதை சொல்லுங்க பார்ப்போம்னு போட்டி வைத்திருக்கிறார்கள்.


MTV’s ‘Skins’ Shows A Bit More Than Some Might Like : NPR

2. எம்டிவி-யின் ‘ஸ்கின்ஸ்’: மேற்கத்திய இளைய தலைமுறையினரின் இன்றைய பழக்கவழக்கங்கள் என்ன?

பாத்ரூமுக்குப் போய்விட்டு துர்நாற்றமடிக்கிறதே என்று அங்கலாப்பதையொத்து அமெரிக்காவில் கல்லூரி மாணாக்கர்கள் லூட்டி அடிக்கிறார்களே என்று பயமுறுவது. இது தொலைக்காட்சித் தொடர்.

போதை மருந்து சகஜமாகப் புழங்குவதையும் கூட்டணியாக உடலுறவு வைத்துக் கொள்வதையும் தற்பால் விழைவை புகட்டுவதையும் பதின்ம வயதினரின் போட்டா போட்டி குடியையும் காட்சியாக்கி இருக்கிறது.

எம்.டி.வி. எப்பொழுதுமே அடுத்த கட்டம். மடோனாவின் வெளிப்படையான ஆடை; வீடியோவில் பலான உறவு; ரியாலிடி நாடகங்களில் வன்முறை; என்று தொடர்ச்சியாக அமெரிக்காவை துகிலுரித்து காண்பிப்பதன் அடுத்த கட்டம் இந்த டீனேஜ் சீரியல்.


Meet John and Julie: Holograms Beamed Into The Manchester Airport : The Two-Way

3. விமானப் பணியில் ஹோலோகிராம் அறிவிப்பாளர்கள்

ஏற்கனவே வேலையில்லாத் திண்டாட்டத்தில் தவிக்கும் மேற்கத்திய உலகிற்கு இன்னொரு தலைவலி. நிஜ மனிதர்களை நீக்கிவிட்டு ஹாலாகிராம் உருவங்கள் அவர்களின் இடத்தைப் பிடிக்க ஆரபித்திருக்கின்றன.

24 மணி நேரம் ஆனாலும்… சொன்னதையே சொல்கிறது. எவ்வளவு தடவை கிளிப்பிள்ளை மாதிரி ரிபீட் செய்தாலும், முகஞ்சுளிக்காமல் ஃப்ரெஷ்ஷாக இருக்கிறது. உள்ளே கூட நுழைந்து வரலாம்.


Super Bowl ad considered offensive | Groupon’s ‘Tibet’ Super Bowl Ad: Harmless Fun Or Offensive? : The Two-Way

4. திபெத் விடுதலைப் போராட்டம் சீனாவின் உலகளாவிய அடக்குமுறையும்

புனிதப் பசு என்று ஏதாவது உண்டா? ஜெயமோகனோ சுந்தர ராமசாமியோ ஜாதியைக் குறித்து எழுதினால் பொங்கி எழுவது போல் திபெத் போராட்டத்தை இழிவு செய்கிறார்கள் என்று போர்க்கொடி தூக்கி இருக்கிறார்கள்.




Homeless Camp Puts Down Roots With Seattle’s OK

5. எட்டு மில்லியன் பேர் வேலைநீக்கம் ஆகியுள்ள அமெரிக்காவின் இருப்பிடமற்றோர் நிலை

மிகையும் துரத்த, வெம்பிணியும் துரத்த, வெகுளி ஆனதும் துரத்த,
மிடியும் துரத்த, நரை திரையும் துரத்த, மிகு வேதனைகளும் துரத்தப்,
பகையும் துரத்த, வஞ்சனையும் துரத்தப், பசி என்பதும் துரத்தப்,
பாவம் துரத்தப், பதி மோகம்துரத்தப், பல காரியமும் துரத்த,
நகையும் துரத்த, ஊழ் வினையும் துரத்த, என் நாளும் துரத்த, வெகுவாய்
நா வறண்டு ஓடிக், கால் தளர்ந்திடும் என்றனை நமனும் துரத்துவானோ?
அகில உலகங்கட்கும் ஆதார தெய்வமே! ஆதி கடவூரின் வாழ்வே!
அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி! அருள் வாமி! அபிராமியே!

லத்தீன் அமெரிக்க சாரு நிவேதிதா ஜோக்


Once there was a man who loved baked beans. He would eat up to 5 and sometimes 6 plates at a time, but that always be followed with smelly, loud, stinky gas.

One day he met a beautiful lady and decided to talk to her. They started seeing each other. Since he did not want her to smell his nasty gas after eating beans, he made the sacrifice, and stopped eating them. One year later they were married.

On his birthday, the next year, he was coming home from work, when suddenly his car broke down. He called his wife to tell her what had happened, and also to let her know that he would be home a little late. She said she understood, but to hurry, because she had a surprise for him.

On his way he saw a diner and smelled baked beans cooking inside. Since he had to walk 6 miles to get home, he figured that by the time he got there all the smelly gas would be gone. He went in and ate 7 bowls of baked beans. On his way back home, he was farting nasty and smelly gas.

Finally he got home and on the door his wife had hung a blind fold for him to wear, so he wouldn’t peek. She sat him at the table, when all of a sudden the phone rang. She made him promise he wouldn’t peek until she got back.

Unfortunately, his gas came back and he couldn’t hold it in any longer. Since she was taking so long, he decided to let it go. He picked up his leg and let it rip. It smelled so bad, he had to get a napkin and fan so she wouldn’t smell it. He wanted to fart again, so he once again picked up his leg, but this time it was so loud and smelly, that it shook the windows and killed the flowers.

After a couple of more farts his wife finally got off the phone, so he stopped.

When she took the blind fold off to his surprise, there were 12 guests seated at the table.

வெகு காலம் முன்பு படித்த நகைச்சுவை. இன்றைய சூழலில் பிறமொழிப் படங்கள், பரிந்துரை இலக்கியங்கள், சுவையான மசாலா என கலந்து அடிப்பதால் டக்கென்று அந்த மனிதருக்கு சாரு நிவேதிதா பொருத்தமாகப் பட்டார்.

‘Breaking India: Western Interventions in Dravidian and Dalit Faultlines’ by Rajiv Malhotra and Aravindan Neelakandan

The book focuses on role of US and European churches, academics, government and human rights groups in fostering separation of the identities of Dravidian and Dalit communities from the rest on India.

Publisher: Amaryllis.
Pages: 640.
Price: 695 INR

Rajiv Malhotra
His Infinity Foundation, seeks to foster a better global understanding of Indian civilization. Rajiv’s work argues that the dharma offers a complex and open framework for a genuine dialogue among diverse peoples, rather then a zero sum game. He shows the limitations of globalization when it is a parochial imposition of Western paradigms. He is well known as a speaker and writer for a wide audience and is frequently interviewed and invited to deliver keynote addresses. He serves on the Board of Governors of the India Studies program at the University of Massachusetts, and served as a Chairman for the Asian Studies Education Committee of the State of New Jersey.

Aravindan Neelakandan
Aravindan Neelakandan has worked for the past decade with an NGO in Tamil Nadu serving marginalized rural communities in sustainable agriculture. He was awarded a junior research fellowship in cultural economics by the India’s Ministry of Tourism to research the economic potentials of the neglected ruins in Kanyakumari district, in southern Tamil Nadu. These experiences provided him with in-depth knowledge of the history and sociology of Tamil people. He is also a popular science writer in Tamil and a columnist with UPI-Asia, a leading news portal.

1. எஸ் குருமூர்த்தி, துக்ளக் சோ ராமசாமி, தயானந்த சரஸ்வதி பேசியதை ‘தி ஹிந்து’ தொகுக்கிறது.

2. புத்தக வெளியீட்டு நிகழ்வில் அரவிந்தன் உரை – இங்கே

3. புத்தகத்தின் வலையகம்

4. ராஜீவ் மெஹ்ரோத்ராவின் வலைப்பதிவு

5. 6 Provocations In “Breaking India”

  1. Dravidian Identity Constructed, Exploited & Politicized
  2. Linking Of Dravidian & Dalit Identities
  3. Foreign Nexus Exploits India’s Faultiness
  4. Religion’s Role in the Competition for Soft Power
  5. Interrogating the Term “Minority”
  6. Controlling the Discourse on India

6. Rajiv Malhotra along with Aravindan Neelakandan is going to discuss “Breaking India: Western Interventions in Dravidian and Dalit Faultlines” in New Delhi on Feb 9 at 4:30 pm, on the occassion of the launch of their book by the same name. The venue is Vivekananda International Foundation, 3, San Martin Marg, Chanakya Puri. Web: http://www.vifindia.org

Book launch and keynote address are by Ram Jethmalani. Speakers include B Raman (Director, Institute for Topical Studies), S. Gurumurthi, Vice Admiral (Retd) Raman Puri, and Upendra Baxi (Emeritus Professor of Law, University of Warwick).

7. தமிழ் ஹிந்து அறிவிப்பு

நூல் பற்றிய அறிமுகம்:

இந்தியாவின் ஒருமைப்பாடும் இறையாண்மையும் உலகளாவிய மூன்று பெரும் பகாசுர சக்திகளால் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளன –

  1. அ) பாகிஸ்தானை மையமாகக் கொண்டு இயங்கும் இஸ்லாமிய பயங்கரவாதம்
  2. ஆ) சீனாவை மையமாகக் கொண்டு இயங்கும் மாவோயிஸ்டுகள் மற்றும் இதர மார்க்சிய அமைப்புகள்
  3. இ) மேற்கத்திய நாடுகளால் மனித உரிமை என்ற பெயரில் ஊட்டி வளர்க்கப் படும் திராவிட, தலித் பிரிவினைவாதம்.

இவற்றில் மூன்றாவதைப் பற்றி விரிவான ஆய்வுகளையும், அலசல்களையும் உள்ளடக்கியது இந்த நூல்.

அமெரிக்க, ஐரோப்பிய கிறிஸ்தவ நிறுவனங்களின் பணபலத்துடன் இந்தியாவுக்குள் திராவிட, தலித் பிரிவினைவாதத்தை வளர்க்கக் களமிறக்கப் படும்

  • மனித உரிமை அமைப்புகள்
  • கல்வியாளர்கள்
  • சிந்தனை வட்டங்கள்
  • மத அமைப்புகள்

ஆகியவை நிழலுருவில் செயல்படும் விதம் குறித்து விரிவான ஆய்வுகளை இந்த நூல் அளிக்கிறது. ஆரிய திராவிட இனவாதம் உருவான வரலாறு, புனித தாமஸ் பற்றிய கட்டுக் கதையை மையமாக வைத்து உருவாக்கப் படும் “திராவிட கிறிஸ்தவம்”, தென்னிந்திய வரலாற்றை உள்நோக்கங்களுடன் திரிக்கும் முயற்சிகள் ஆகியவை பற்றியும் இந்த நூல் விரிவாகப் பேசுகிறது.

நூலாசிரியர்கள் இது பற்றி கடந்த ஐந்து ஆண்டு காலமாக தீவிர ஆய்வுகள் மேற்கொண்டனர். அந்த ஆய்வுகளின் தொகுப்பாக இந்த நூல் வெளிவருகிறது.

நெல்லுக்கு மோட்டார்சைக்கிள்

ட்விட்டர் நடைக் குறிப்புகள்:

1. மூதுரையில் ஔவையார்:

நெல்லுக் கிறைத்தநீர் வாய்க்கால் வழியோடிப்
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் – தொல் உலகில்
நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை.

நெல்லுக்கோட்டிய ஸ்கூட்டர் நச்சுப் புகையோடிப்
புல்லுக்கும் ஆங்கே பாய்ஸனாம் – கலி உலகில்
சாருநிவேதிதா ஒருவர் உளறேல் அவர்பொருட்டு
எல்லார்க்கும் அபானமாகும் வாயு.

2. ஆர்கானிக் பயிர் என்பது நேச்சுரல் எத்தனாலில் இயங்கும் ஸ்கூட்டரில் பரப்பியது.

3. வேலை பார்க்கிறவங்க எல்லாம் கால் சென்டருக்குப் போயிட்டா, ரைஸ் மில்லை கவனிக்க யார் இருப்பார் என்று ‘வெற்றி கொடி கட்டு’ சேரன் படம் எடுப்பாரா?

4. மாடு கட்டிப் போரடித் தால் மாளாது செந்நெல் என்று யானை கட்டி போரடித்ததும் போதாத பாளையக்காரர்கள் பாரம்பரியம் இது.

5. இலவச தொலைக்காட்சி, சல்லிசான அரிசி என்று தமிழர் மழுங்கிப் போய் கலைஞர் டிவி பார்த்துக் காலம் தள்ளுவதன் கோலம்.

6. #TNFishermen எல்லோரும் டுனீசீயா, எகிப்து, தமிழ்நாடு மீனவர் #TNFisherWoman டிவிட்டர் போராட்டம்னு போய்ட்டாங்க #tnfisherman

7. மக்கள் தொலைக்காட்சியின் “மலரும் பூமி” இந்த இரு சக்கர இயந்திர உந்து ஊர்தி புரட்சி குறித்து நிகழ்ச்சி நடத்தும்.

8. முடத்தாமக் கண்ணியார் பாடிய பொருநராற்றுப்படையில் ‘சாலி நெல்லின் சிறை கொள் வேலி ஆயிரம் விளை உட்டாக காவிரி புரக்கும் நாடு கிழவோனே’ – அதாவது ஒரு ஹெக்டேருக்கு 12,800 கிலோ நெல். ஏக்கருக்கு 4,886 கிலோ. இவ்வளவையும் இயற்கை வேளாண் விஞ்ஞான முறையில் பயிரிட்டால் விலைவாசி ஏன் ஏறாது? (உணவுப் பொருளின் புரட்சிதானே டூனிசியாவில் வெடித்தது?)

9. உழைப்பாளிகளை அமர்த்தாத இவர் மீது மருதையன் தலைமையில் மாக்சிஸ்ட்களும் கம்யூனிஸ்ட்களும் உண்ணாநோன்பு போராட்டம் துவங்குகின்றனர்.

10. நேற்றுவரை நதிநீருக்காக, பருவமழைக்காக, உரத்துக்காக, இலவச மின்சாரத்துக்காக, பயிர்க்கடனுக்காக, பயிர்க்காப்பீட்டின் இழப்பீட்டுக்காக, மரபணு மாற்று விதை நிறுவனங்களால் விதைக்காகவும் காத்துக் கிடந்த நமது விவசாயிகள், இனி பெட்ரோலுக்காகவும் டீசலூக்காகவும் காத்துக் கிடக்கிற நிலை உருவாகிறதே!

அவலநிலை

சாகரன் – ‘தேன்கூடு’ கல்யாண்

பெப்ருவரி பத்தாம்  தேதிதான் நினைவு நாள். தொலைந்த நண்பரின் கடிதம் நேற்று வந்திருந்தது. அவர் கடிதத்தைப் படித்து முடித்ததும், தொடர்பில்லாமல் சாகரன் நினைவுக்கு வந்தார். அப்பொழுது தொகுத்தது: Thenkoodu Sagaran – Kalyan : Collection of Tamil Bloggers Obits

It is good to have a document. But, still not sure of what to write in memory of a faceless friend, who got acquainted by email and remained that way till his end.

We were returning to our van from a visit to the Thiruchanoor temple, to head back to Chennai. While we were searching for our slippers and was thinking about picking a better pair, the store owner told us that ‘உங்க கூட வந்தவர் மாதிரி இருக்கிற ஒருத்தர், கோவில் வாசலில் திடீரென்று விழுந்துட்டார். அந்த மண்டபத்தில் போட்டிருக்காங்க!’

I wanted it to be somebody else. Not my friend’s relative who has started ahead of us. I 100% believed it would be somebody else. I cannot imagine, somebody well known to us getting into that state of sudden heart attack. I was really confident that it would not be anyone accompanying us. With that callous attitude, I glanced and was shocked to see that it was one from our party.

When Tamiloviam Ganesh Chandra called me to relay the web blogs headlines, I thought it is not Thenkoodu Kalyan. ‘He cannot die. It cannot be him. He will come back with a short email.’

Sakaran will be missed in the Tamil technology industry. Lot of adjectives prop to my mind. Selfless, visionary, true leader, gentle natured, so on. I never got a chance to meet with him.

He was in the frequent emailer list of mine. If I come across some noteworthy or interesting piece of technology, I would have shared it with him. Not many were there in that list. Just him.

He would sincerely reply with his thoughts in a very dignified manner. Being a blogger, I had a natural tendency to project an opinionated arrogance in my few non-consequential sentences. However, his tone in the reply would be subdued, bringing out the applicability of that tech in the Tamil world as well as the implementation considerations.

I would act as a TV reporter. He would turn it into an analyst piece.

I had lengthy list of complaints, masquerading as wish-list, when he kicked off Thenkoodu. If somebody would had given me the same kind of irritating welcome, I would have thought that act as a guile attempt at being stupid and immature with a lack of appreciation for new things. He took a different approach as usual. He welcomed more criticism and nitpicking. I continued.

To appreciate his uniqueness, I have to resort to the comparison of fellow Tamil bloggers.

While many talked about bringing an alternate to the Thamizmanam aggregation service, (nobody with the exception of Mugunth), did anything worthy of notice. With him, there was no empty rhetoric. He simply delivered a much required automatic Tamil Blog reader tool.

I liked Thenkoodu over Thamizhmanam for couple of simple reasons.

I am a linear reader. I am still not yet hooked onto the hyperlinked ADHD presentations. Thenkoodu presented posts in a whole stream of all the blogs on a single page.

It also had simple retrofitting like user ego satisfaction index by listing the most viewed blog posts in a prominent corner. It snubbed 1000, 2000, 3000 countless single letter feedback attention garner artistes to a rightful place.

For a guy who gets puzzled by a Tamil word like ‘ஈச்சமரம்’ it gave an instant English dictionary translation. When you want a synonym for ‘mask’ in Tamil, it was equally handy. Thenkoodu just became a sub-conscious presence.

Going back to the comparison of blogger mentality to Kalyan, he never put himself as the sole soul behind all this nifty creations. Not because of fear of the pointless gun toting warmongers; just because he wanted his actions to speak, instead of some typed up march-past of letter arrays.

Kalyan always had ideas; apart from concepts, he had an execution plan; when things turn awry, he was open to alternate paths; he listened with an open heart; resiliently adopted worthy suggestions.

Kalyan could have easily coordinated the Thenkudu – Tamiloviam competition all by himself. He was selfless in inviting Tamil oviam to the fold. He designed the poll software, actively distributed the prizes, spread the name of variety of Tamil business vendors. He wanted every Tamil domain to be part of the contest by giving prizes from everybody like chennainetwork.com, NilaCharal.

Sakaran took pains to locate worthy juries and when they regretted about their non-availability, he went on to find even better jurors to be part of the contest.

Running the contest was a tough job. There might be TSCII to Unicode issues, jury might have an emergency, the tsunami would have struck down the internet in their country, the losers might start war against the winners, the winners might start war against themselves. He just moved ahead relentlessly.

Running a web site would have been a much tougher job. There will be tons of hacker attacks, defamation posts, addition/deletion/subtraction requests, restless blogger demands and so on. He went on doing it as though it was his duty without the smallest sign of whimper.

When one lives through hell, not many appreciated his efforts. When he passes away, even I want to be part of the ‘in’ crowd.

I sincerely miss him.

In a virtual world, I wish we can institute an honorary recognition accolade to a worthy cause in Thenkuudu Kalyan’s name. Hope, it becomes a reality and an annual event to a person ‘who did stuff’ in a professional as well as an ethical way to Tamil Blogdom.

தமிழக மீனவர் போராட்டமும் அறமும்

டுநீசியாவில் தீக்குளிப்பதால் ட்விட்டர் கூட்டம் நிறைகிறது. பிரதிபலிப்பாக, எகிப்தில் புரட்சி வெடிக்கும் அபாயம் தெரிகிறது. தொடர்ச்சியாக, சூயஸ் கால்வாயில் எண்ணெய்ப் போக்குவரத்து சஞ்சலப்படுவதால், விலைவாசி எகிறுகிறது. அதனால், பெட்ரோல் விலையை விட ஜாஸ்தியான தக்காளி, ஏரோப்ளேனில் உட்காருகிறது. ட்விட்டர் புரட்சியில் சீமானும் தமிழக மீனவருக்காக குதிக்கிறார்.

இதற்கு பட்டாம்பூச்சி விளைவை சந்தேகம் கொள்ள வேண்டாம். கேள்வி இதுதான்:

உங்களுக்கு வாக்களித்து மாற்றம் விளைவதில் நம்பிக்கையா? தன்னார்வலராக தண்டல் எடுத்து கிரியா ஊக்கி செயல்பாட்டில் ஈடுபாடா?

டுனீசியாவில் எகிப்தில் நடப்பது இரண்டாம் வகை. தமிழக மீனவருக்கு நடக்கும் போராட்டம் முதல் வகை. வினவு பதிவு எழுதுவார்; பெயரிலி மறுமொழிக் குரல் எழுப்புவார்; எஸ்.எம்.எஸ் அஞ்சல் மறுஒலிபரப்பு தொடரும்; வைகோ கடிதம் எழுதுவார்; நிருபமா நாவ் சுற்றுலா செல்வார்; பா.ம.க. கூட்டணி வைப்பார் கலைஞர்.

இது நிச்சயமாக பட்டர்ஃப்ளை எஃபக்ட்.

‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ -> எனவே 49 ஓ போடு என்னும் ஞாநியும்; ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு மாற்று அதிமுக ஜெயலலிதா மட்டுமே என்னும் ‘துகளக்’ சோ இராமசாமியும்; அறம் என்பது கூட முதலாளித்துவத்துவத்தின் இசைக்குதான் என்னும் ஜெயமோகனும் சிறு துரும்பைப் போட்டு இருக்கிறார்கள்.

நான் மிகவும் மதிக்கும் அமெரிக்க விழுமியங்களாக
i) Volunteering
ii) Aspiration
iii) Transparency
சொல்வேன்.

ஒளிக்கற்றை பேரத்தில் எவரெல்லாம் ஈடுபட்டார்கள்? யாருக்கு, எப்பொழுது காசு கொடுத்தார்கள்? ஏன் அவ்வாறு முடிவெடுத்தார்கள்? சட்டத்தை எவ்வாறு மாற்றலாம்? மாறுவதை எப்படி தடுக்கலாம்? – இதெல்லாம் அறிய முடிவது வெளிப்படைத்தன்மை.

எம்.எல்.சி.ஆக, உள்ளூரில் வால் – மார்ட் வராமல் வழிசெய்வது தொடங்கி, அரசாங்க பொக்கீடு பற்றாக்குறை நிவர்த்தி செய்வது வழியாக அடுத்த குடியரசுத் தலைவராவது எங்ஙனம் வரை வளர, உயர ஆசைப்பட வைத்து பாதை காட்டுவது பதவியும் பொறுப்பும் கூடிய மேன்மைத்தன விழைதல்.

அரியணையில் அமர பயமா? பணம் செலவழிக்க இயலாமையா? தன்னார்வலராக, செயல் வீரராக பயணத்தைத் துவங்க வைப்பதோடு, நேர்மைத் திறமும், நெஞ்சில் உரமும் கொண்ட சுத்தமான பயணம் மேற்கொள்ளவைக்கும் தொணடர் வழியில் ஆட்டோவும் வராது; அவப்பெயரும் தராது.

தமிழகத்தில் இயங்கும் புகழ்பெற்ற, கவனிப்பும் பெருமளவில் கிடைக்கும் சிந்தனையாளர் எல்லோருமே நிந்தனையாளராகவோ மந்தையாளராகவோ விளங்குவது இருத்தலிய பிரச்சினை. அப்படி இயங்காத, மூன்று சிந்தனையாளர்களை எடுத்துக் கொள்ளலாம்.

ஊன்றுகோல் ஞாநி

கைத்தடியை பெரும்பாலும் எவரும் விரும்புவதில்லை. மேடையேற சிரமப்படும் எண்பது வயது பாலச்சந்தர், இன்னொருவரின் கையைத் துணைக்கழைக்கிறார். நேரடியாக தள்ளுவண்டிக்கு மாறிவிட்டார் கலைஞர். ஞாநியின் பேச்சுக்களை அதிமுகவும் ரசிக்காது; திமுகவும் விரும்பாது.

உடனடி அரசியல் மட்டுமே ஈடுபாடு என்பதால் செய்தித்தாள் விசிறிகளின் ஹீரோ; மேக்ரோ பார்வையில் அறச்சீற்றம் என்பதால் நடுத்தர வர்க்கத்தின் ஆதர்சம்.

வழிகாட்டி சோ

ரஜினி ரசிகர் முதல் அரசியல் தரகர் வரை அறிவுஜீவியாக தோற்றமளிக்கிறார் ‘துக்ளக்’ சோ. நோ சொல்ல வேண்டிய இடத்தில் so…so…வாக மழுப்பிவிடுவதால் சோ என்பது காரணப்பெயர். வேதம் குறித்துப் பேசுவதால் இவரின் எழுத்தை வேதவாக்காக எடுத்துக் கொள்வோர் பலர்.

கலங்கரை விளக்கம் ஜெயமோகன்

ஞாநியின் மதிப்பீடு சின்ன கோடு என்றால், ஜெமோ, பெரிய கோடாக மேக்ரோ பார்வை. சீனாவையும் தொலை நோக்கலாம். அயன் ராண்டையும் இழுக்கலாம்.

உதாரணத்திற்கு அறம் சிறுகதையில் கூட இரு சாராரின் நியாயம் வெளிப்பட்டிருக்கும்.

அ) எழுத்தாளரின் ஊதியமும் பதிப்பாளரின் பற்றாக்குறையும்
ஆ) ஊழியர் கை ஓங்குவதும் பதிலுக்கு நடுத்தெருவில் சத்தியாகிரகமும்
இ) விக்கிரமன் பட உச்சகட்ட காட்சி சுபமஸ்து முடிவு

ஆனால், இன்றும் ‘உரிமை பதிப்பகத்தாருக்கே’ என்று போட்டுக் கொள்வதும், எழுதியவரின் பெயருக்கு பதில் விற்கக்கூடியவரின் பெயரை மாற்றிப் போட்டு பெஸ்ட்செல்லர் ஆக்கிக் கொள்வதும், எழுதிய பிரதி ‘பத்திரமாக இருக்கிறது’ என்று சால்ஜாப்பு சொல்லிவிட்டு, கேட்கும்போது தொலைந்து போனதாக சொல்லி விடுவதையும் நேரடியாக எழுதினால், இன்னும் உக்கிரமாக, ஒருதலை பட்சமாகி விடும் என்பதால்… இரு தரப்பையும் நேர்மையாக அணுகும் தர்க்கமுறை தேவைப்படுவதால், ‘புனைவு’ என்னும் வட்டத்துக்குள் சுருண்டுவிடுகிறார்.

நாகர்கோவிலில் தேவதேவன் கவிதை அரங்கு போல் அமெரிக்காவில் கருத்தாளர்களை ஓய்வாக சந்திக்கும் நிகழ்வில் பங்கு கொள்ள பல்லாயிரம் டாலர் செல்வாகும். அவ்வாறு பணம் கறக்காமல், வெகு சல்லிசாக அணுகக் கூடியவராக இருப்பவர். அப்புறம் ஏன் இதை சக்தியாக (power), கொடையாக (wealth), அறிவியக்கமாக (intellectual) மாற்றவில்லை?

ஒரு காலத்தில் காந்தி வழிகாட்டினார். அப்புறம் உதயமூர்த்தி, டாடா, டெண்டுல்கர், அம்பானி, ராகுல் என்று நெடிய பாரம்பரியம் வந்திருக்கிறது. இன்றைய தலைமுறையின் இலட்சிய புருஷர்கள் எவ்விதம்? நிம்மதியை நாடி எங்கே செல்கிறார்? 9 டு 5 ஜோலிகாரர், தன் சிதறுண்ட கவனத்தையும் தவிக்கும் சிந்தையையும் எவ்வாறு நெறியாள்கிறார்?

1. கார்பரேட்/கமண்டல சாமியார் (நித்தியானந்தா, ஜக்கி, சங்கர மடம்)
2. படைப்புலக கர்த்தா (ஜெய மோகன், சாரு, ‘எந்திரன்’ ஷங்கர், பட்டிமன்ற லியோனி)
3. கேளிக்கை (ஃபேஸ்புக், விளையாட்டு, குடி)

இப்பொழுது தமிழ்நாடு மீனவர் கேப்பிடலிசத்தின் செல்லப்பிள்ளை. வெப்சைட் துவங்கலாம். தமிழக மீனவர் ஃபேஸ்புக் சுயவிரும்பிகளின் இலட்சிய வார்த்தை. கவனிப்பு கோரும் விளையாட்டு. குறிக்கோள் இல்லாத சமுதாயத்தின் அளவுகோல்.

தொடர்புள்ள பதிவுகள்:
1. Ethics – India Calling: An Intimate Portrait of a Nation’s Remaking By Anand Giridharadas
2. தமிழக மீனவர்கள் நடுக்கடலில் கொல்லப்படுதல்