Tag Archives: கிறித்துவம்

குன்றின் மீது அமர்ந்த குமரன்

அரூ: கனவுருப்புனைவு காலாண்டிதழ் – அறிவியல் சிறுகதைப் போட்டி முடிவுகளை முன்வைத்து சில அறிமுகக் குறிப்புகள

இன்று அடுத்த கதை: நகுல்வசன் எழுதிய கடவுளும் கேண்டியும்

“பரிசுத்தமானதை நாய்களுக்குக் கொடுக்காதீர்கள்; உங்களிடமுள்ள முத்துக்களைப் பன்றிகளுக்கு முன்னால் போடாதீர்கள்” என்று இயேசு சொல்கிறார். (மத்தேயு 7:6)

“பூமிக்கு நீங்கள் உப்பாக இருக்கிறீர்கள். தன் சுவையை உப்பு இழந்தால் மீண்டும் அதை உப்பாக மாற்றவோ, வேறு எதற்கும் பயன்படுத்தவோ முடியாது. அது தெருவில் எறியப்பட்டு மக்களால் மிதிக்கப்படும்.

“உலகுக்கு ஒளித்தரும் விளக்கு நீங்களே. ஒரு குன்றின் மேல் அமைந்த பட்டணம் மறைந்திருக்க முடியாது. மக்கள் எரிகின்ற விளக்கைக் குடத்தின் கீழ் வைத்து மறைப்பதில்லை. மாறாக, அதை மக்கள் விளக்குத் தண்டின் மீது வைக்கிறார்கள். அப்பொழுது தான் விளக்கு வீட்டிலுள்ள அனைவருக்கும் வெளிச்சம் தருகிறது. ( மத்தேயு 5 )

“நான் சொன்ன இந்த விஷயங்களைக் கேட்டு, இவற்றின்படி நடக்கிறவன் பாறைமேல் தன் வீட்டைக் கட்டிய புத்தியுள்ள மனுஷனைப் போல் இருக்கிறான். கனமழை பெய்து, வெள்ளம் வந்து, பயங்கர காற்றடித்து, அந்த வீட்டின் மேல் மோதியபோதும், அது இடிந்து விழவில்லை. ஏனென்றால், அது பாறைமேல் அஸ்திவாரம் போடப்பட்டிருந்தது” என்று இயேசு சொல்கிறார். (மத்தேயு 7:24, 25) இந்த வீடு ஏன் இடிந்து விழவில்லை? ஏனென்றால் அந்த மனுஷன், ‘ஆழமாகத் தோண்டி, பாறைமேல் அஸ்திவாரம் போட்டிருந்தான்.’ (லூக்கா 6:48) இதிலிருந்து, இயேசுவின் வார்த்தைகளை வெறுமனே கேட்டால் மட்டும் போதாது, அவற்றின்படி ‘நடக்க’ நாம் தீவிரமாக முயற்சி செய்ய வேண்டும் என்று தெரிந்துகொள்கிறோம்.

பிரச்சாரம் போதும். பிரசங்கத்தை நிறுத்திக் கொள்கிறேன். கிறித்துவின் மலைப் பிரசங்கத்தை ஏன் இந்தக் கதைக்கு எடுத்துக் கொள்கிறேன்?

  1. யேசு ஒன்றும் புதிய விஷயத்தைச் சொல்லிவிடவில்லை. கிறித்துவ கடவுள் அபவாதம் பேசவில்லை. அது முழுக்க முழுக்க கிறித்துவ கடவுளின் வார்த்தை. ஒத்துக் கொள்கிறேன். யூதர்களைப் பொருத்தவரை யேசு ஒரு தேவதூதர். அரூ போட்டியைப் பொருத்தவரை நகுல்வசன் எழுதியது அறிவியல் கற்பனை. அதே சமயம் சாமானியரை பொருத்தவரை, கடவுளும் கேண்டியும் இலக்கிய பாரம்பரியத்தின் தொடர்ச்சி. கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும் என்று புதுமைப்பித்தன் எழுதினார். அதை நகுல்வசன் சற்றே தொட்டுக் கொண்டு நவீனமாக்கி புதுமையாகத் தந்திருக்கிறார்.
  2. கடவுள் நேரில் வருவாரா? யேசு எப்படி தன்னிடம் கடவுள் சொன்னதை மலைமேல் பிரசங்கமாகப் பொழிந்தார்? யேசு இந்தியாவுக்கு வந்து புத்தமதத்தின் தத்துவங்களைக் கற்றுக் கொண்டு, அதன் பின் வளைகுடா நாட்டிற்குச் சென்று கிறித்துவமாக மாற்றிச் சொன்னாரா? இந்த மாதிரி வித விதமாக இந்தப் புனைவையும் அணுகலாம்.
  3. கிறிஸ்து சொன்ன கருத்தில் தெளிவு இருந்தது; குரலில் தீர்க்கம் இருந்தது; சொற்பொழிவில் கோர்வையான சிந்தனை தெரிந்தது; அதே சமயம் சுவாரசியமாகவும் கவர்ந்திழுக்கும் தன்மையுடனும் நம்பிக்கையும் அன்பும் கொடுக்கும் கருத்துக்களை முன்வைக்கிறார். அதெல்லாம் இந்தக் கதையில் கிடைக்கிறது.

கதையில் இருந்து…

கடவுள் ஹெட்செட்டைப் பொருத்திக்கொண்டார். திரையில் தெரிந்த நினைவுப் பட்டியலிலிருந்து அவர் நினைவுகளிலேயே மிகப் புராதன ஒன்றைத் தேர்ந்தெடுத்தார்.

இருப்பு இல்லாமை இரண்டுமற்ற இருளை இருள் சூழ்ந்திருந்த வெளி.

இரவு பகல்கள் அற்று திசைகளின்றி வேறுபடுத்தலில்லாத வெறுமையால் போர்த்தப்பட்டிருக்கும் வெளி!. அப்படிப்பட்ட ஒரு வெளியில் வெப்பத்தின் திண்மையிலிருந்து அவர் உயர்த்தெழுகிறார். ஒருமையின் தனிமையால் அவருள் விழைவு ஊடுறுவுவதை அவரால் உணர முடிந்தது, அவ்விழைவின் அதிகரிப்பில் ஒர் உச்சம். அதன் தகிப்பில் பீஜம். அதன்பின், அதன்பின்… திரையில் இருள் கவிந்தது.

“End of selected memory” என்ற அறிவுப்பு திரையில் ஓடியது

கதையின் சவால்கள்

  1. துவக்கத்தில் வரும் பாஸ்டன் சமாச்சாரங்கள் பச்சைத்தமிழனை அன்னியமாக்கும்
  2. அந்தத் தத்துவப் பகுதிகள் கனவுகளில் வருவது தெளிவாக வெளிப்பட்டிருந்தாலும், இன்னும் சற்றே தத்வமசியை விவரித்து வாசக இடைவெளியைக் குறைத்திருக்கலாம்
  3. மனதில் பதியும் ஆக்கம் என்றாலும் இவ்வளவு ஜாலியான கதையின் முடிவில் “எல்லாமே நிராவிடம் தானோ?” என்ற எண்ணத்தை நிரப்பியிருக்கலாம்.

சென்ற பதிவு: குக்குரன்

மேரி என்றால் மன்னிப்பு; மேற்கு என்றால் ஆக்கிரமிப்பு

பிரித்தாளும் சூழ்ச்சி என்பதை பிரித்தானியர் இன்றளவும் விடவில்லை என்பதற்கு நல்ல உதாரணம் வடக்கு அயர்லாந்து.

பெல்ஃபாஸ்ட் நகரின் கத்தோலிக்கர்களுக்கும் புரோட்டஸ்டண்டுகளுக்கும் நடுவே சுவர் எழுப்புவதை சரித்திர பின்னணியில் விவரிக்கிறது: The American Scholar: Belfast: City of Walls – Robin Kirk

இங்கிலாந்தின் அங்கமாக இருப்பதை கத்தோலிக்கர்கள் விரும்பவில்லை. அரசி ஆளும் யுனைடெட் கிங்டம் கீழே இருப்பதை ப்ரோட்டஸ்டண்ட்டுகள் விரும்புகிறார்கள். இரு சாராரும் அடித்துக் கொண்டு சாகாமல் இருப்பதற்காக பெரிய தடுப்பு அரண்களைக் கட்டிக் கொண்டே இருக்கிறார்கள்.

எல்லாம் இரண்டு மயம். பக்கத்து பக்கத்து தெருக்களில் தனித் தனி மருத்துவமனை. ஒரே சாலையின் இரு புறங்களில் இரண்டு பாடசாலைகள். காசு விரயம் ஆகிறதே என்று இங்கிலாந்து மாளிகையின் அரச குடும்பம் லண்டனில் இருந்து கவலை கொண்டிருக்கிறது.

1984ன் ஞாயிறு காலை. தேவாலயத்தின் வாசல். திருப்பலி முடிந்து வெளியே வருகிறார் அரசு மெஜிஸ்திரேட்டின் மகள். எதிர் அணிக்கு அப்பா வேலை செய்ததற்காக கொலை செய்கிறார் மேரி மெகார்டில். குற்றம் நிரூபிக்கப்பட்டு ஆயுள் தண்டனைக்கு சிறை செல்கிறார் மேரி. சில வருடம் முன்பு அமைதி ஒப்பந்தத்தின் மூலம் அரசாங்கத்தின் உயர் பதவியில் அமர்கிறார் மேரி. அந்தக் கொலையை கேட்டால் ‘துன்பியல் நிகழ்வு’ என்கிறார் மேரி.

கிறித்துவ மதப் பிரச்சாரகருக்கான வினாக்கள்

கோடை காலத்தின் மதியங்களில் வீடு வீடாகப் போய் பைபிளோடோ அல்லது சைக்கிளோடோ வந்து பிரச்சாரம் செய்பவர்கள் இங்கே அதிகம். அழைப்பு மணி அடித்தால், திறந்து பார்த்தால், ‘உங்களை நல்வழிப்படுத்தறேன்.’ என்று மென்மையாகவும், ‘எல்லாக் கேள்விகளுக்கும் விடை வைத்திருக்கிறேன்’ என்று அறிவுபூர்வமாகவும், ‘சோகம் அனைத்தும் நீங்கி புத்துணர்ச்சி கிடைக்கும்’ என்று பூஸ்ட் ஆகவும் கிறித்துவத்திற்கு அழைக்கிறார்கள்.

இந்தியாவில் எத்தனை சாதி என்று எண்ணிவிடலாம். கிறித்துவத்தில் எத்தனை உட்பிரிவு என்று அளவிடுவது இறைவரால் மட்டுமே இயலும். ஒவ்வொரு பிரிவினருக்கும் கேட்க சில கேள்விகள் இருக்கின்றன.

“ஜனநாயகத்தில் நம்பிக்கை உண்டா? போப் தேர்தலில் நான் வாக்களித்து தேர்தல் நடக்குமா?”

“ஸ்பெயின் இன்க்விஸிஷன் குறித்து பாவ மன்னிப்பு கோரியாச்சா?”

“நான் நிச்சயம் உங்கள் புத்தகத்தை அடுத்த வாரத்திற்குள் படித்து முடிக்கிறேன். எனக்காக நீங்களும் குரானோ பகவத் கீதையோ வாசித்து விடுகிறீர்களா?

“ஆதாமும் ஏவாளும் குரங்கு என்று என்னுடைய வேதநூல் சொல்கிறதே? அதைப் பற்றி பேசலாமா?”

ஸ்தோத்திரம்

What does the Bible say about snake handling? Should we be handling snakes in church?:

I said, ‘I don’t think you are qualified to speak to me about Jesus‘. They looked very astonished and asked, ‘Why not’? ‘Because’, I said, ‘you have no faith’. ‘Our faith in Jesus is as strong as a rock’ they insisted. ‘I don’t think it is’ I said with a smile. ‘Please open your Bible and read the Gospel of Mark, chapter 16, verse 16, 17 and 18′ I said and while they flicked through their Bibles I went quickly inside and came out again.

One of them found the passage and I asked him to read it out loud. It said, ‘He who believes and is baptized will be saved but he who does not believe shall be condemned. And these signs will follow those who believe in my name. They shall cast out devils, they shall speak in tongues, they will handle snakes and if they drink poison it will not hurt them and they will lay hands on the sick and they will recover’.

When he finished I said, ‘In that passage Jesus says that if you have real faith you will be able to drink poison and not die’. I took a bottle of Lankem from behind my back, held it up and said, ‘Here is some poison. Demonstrate to me the strength of your faith and I will listen to anything you have to say about Jesus’.

You should have seen the looks on their faces! They didn’t know what to say. ‘What’s the problem’? I asked. ‘Is your faith not strong enough’? They hesitated for a few moments and then one of them replied, ‘The Bible also says that we must not test God‘. ‘I’m not testing God’, I said, ‘I’m testing you. You love to witness for Jesus and now is your big opportunity’.

It is describing something that will occur, not commanding that something should occur. An example of this is the Apostle Paul inActs 28:3-5: “Paul gathered a pile of brushwood and, as he put it on the fire, a viper, driven out by the heat, fastened itself on his hand … But Paul shook the snake off into the fire and suffered no ill effects.” Notice that Paul did not seek out to handle a snake. The snake bit Paul, but God protected Paul from the effects of the snake bite. Mark 16:17-18 is saying that if you are faithfully serving God in the spread of the gospel, He can protect you from anything that may cross your path.

 

பெண்ணுரிமையும் சட்டங்களும்: சொந்த முடிவுகளை சுதந்திரமாக தேர்ந்தெடுத்தல்

ஜெயமோகனுக்கு எழுதிய கடிதம்: http://www.jeyamohan.in/?p=29188

கருக்கலைப்பு-ஒரு கடிதம் வாசிக்கக் கிடைத்தது.

இந்த நிகழ்ச்சியைப்பற்றிப் பேசுவதற்கு முன் சில விஷயங்களைத் தெளிவுபடுத்த வேண்டியுள்ளது [இலக்கிய இடக்கரடக்கல்கள்]

//அது ஒரு கொலையல்ல என்று பார்ப்பது எப்படி… நம் மனைவியின் மாதவிடாய் தள்ளிப்போகிறது என்றதிலிருந்தே நம் உறவு ஆரம்பமாகிறது அல்லவா…//

கட்சிக்கு ஆள் சேர்ப்பது போல்…
கூட்டத்தைப் பெருக்க குடும்பத்தினரை கூட்டுவது போல்…
மதத்தை முன்னேற்ற எண்ணிக்கை அதிகரிப்பது போல்…
குழந்தைகளை நிறைய ஈன்றெடுங்கள் என்பது அந்தக் காலம்.

ஒன்றோ, இரண்டோ… ஒழுங்காய் வளர்த்தால் சிறப்பு என்பது இந்தக் காலம்.

இதில் எங்கே கொலை வருகிறது?

இந்தியாவில் கர்ப்பம் கலைப்பு என்றாலே பெண் குழந்தை என்றளவிலும், மேற்கில் (குறிப்பாக கிறித்துவ பெரும்பான்மையினர் கொண்ட நாடுகளில்) கருக்கலைப்பு என்றாலே தெய்வக்குத்தம் என்றளவிலும் எளிமையாக்க முடிகிறது.

அமெரிக்கா வந்த புதிதில் நான் தங்கியிருந்த வீட்டிற்கு வெகு அருகில் ‘Planned Parenthood’ என்னும் வசதி வாய்ப்பற்றோருக்கான உதவி ஸ்தாபனம் இயங்கி வந்தது. தினசரி காலை ஏழு மணிக்கு சிலுவை தாங்கியவர்களும் உள்ளே ஆலோசனைக்குச் செல்பவர்களைக் கடுமையாகத் திட்டும் பதாகைகள் தாங்கியவர்களும் வந்து விடுவார்கள். அந்தத்  தன்னார்வ நிறுவனம் மூடும் எட்டு மணி வரை உள்ளே செல்வோரையும், வெளியே வருவோரையும் மிக மோசமாக வைவார்கள். கேட்கவே பயமாகவும், அருவருப்பாகவும், அசிங்கமாகவும் இருக்கும். ஒருவரைக் குறி வைத்துப் பத்துப் பதினைந்து பேர் சூழ்வார்கள்.

அதைக் கேட்போர் ஏற்கனவே நோய்க்கு உள்ளானவர்கள்; அல்லது பதின்ம வயதிலேயே, பள்ளிப் படிப்பு முடிக்காமலேயே கரு தாங்கியவர்கள்; மிக முக்கியமாக ஏழைகள். அவர்கள் இந்த அர்ச்சனையைக் கேட்கும் போது எவ்வளவு மன உளைச்சலுக்கு உள்ளாவார்கள் என நான் நினைக்கும் கையாலாகாத்தனத்தை எண்ணி வருந்தியதுண்டு.

ஏற்கனவே கிடைத்த பதிவுகளில் சில:

அ) பாலா – ஒப்ரா வின்ஃப்ரேயும் அமீர்கானும்

பெண் சிசுக் கொலை என்னும் தலைப்பில் அந்த 1.30 மணி ஆவணம், பெண் சிசுக் கொலை என்னும் தலைப்பை நன்றாக ஆராய்ந்து, அதன் காரணங்களை, அது பற்றிய தவறான எண்ணங்களை அகற்றி, பாதிக்கப் பட்டவர்களுடன் உரையாடி, அது சம்பந்தமாக மேலே செய்ய வேண்டிய காரியங்களைக் குறிப்பிட்டு நேயர்களையும் அதில் ஈடுபட அழைத்து –

ஆ) சிறில் அலெக்ஸ்கத்தோலிக்க மதம்-ஒரு கடிதம்

இ) பெருஞ்சுவர் சூழ்ந்த பெண்

ஈ) மறைக்கப்பட்ட பைபிள் :தோமையர் எழுதிய சுவிசேஷம்

முலைப்பால் குடிக்கும் சிசுக்களைக் கண்ட யேசு தன் சீடர்களிடம் “முலைகுடிக்கும் இந்தக் குழந்தைகள் சொர்க்கத்தில் நுழைபவர்களைப்போல “என்று சொன்னார் .

சீடர்கள் அவரிடம் “அப்படியானால் நாங்கள் குழந்தைகளாக மாறி சொர்க்கத்திற்குள் பிரவேசிக்கலாமா?” என்றார்கள் .

யேசு அவர்களிடம் “எப்போது நீங்கள் இரண்டை ஒன்றாக்குகிறீர்களோ ,எப்போது நீங்கள் அகம் புறம் போலவும் , புறம் அகம் போலவும் , மேலே இருப்பது கீழே இருப்பது போலவும் ஆகிறீர்களோ , எப்போது நீங்கள் ஆண் ஆணும் பெண் பெண்ணும் அல்லாமலாகும்படி ஆணையும் பெண்ணையும் ஒன்றாக ஆக்கிக் கொள்கிறீர்களோ எப்போது நீங்கள் ஒரு கண்ணுக்குப் பதிலாகப் பல கண்களும் , ஒரு கைக்குப் பதிலாக இன்னொரு கையும் ஒரு பாதத்துக்கு பதிலாக இன்னொரு பாதமும் ஒரு சமானத்தன்மைக்கு பதிலாக இன்னொரு சமானத்தன்மையும் உள்ளவர்களாகிறீர்களோ அப்போது நீங்கள் சொர்க்க ராஜ்யத்துக்குள் பிரவேசிப்பீர்கள்” என்றார் .

கடமை, கண்ணியம், கட்டுப்பாடு

பாதிரியாரும் ஆயரும்

கிராமத்திற்கு புதிதாக வந்திருந்த இளம் பாதிரியாரை விருந்துக்கு அழைக்கிறார் மறை மாவட்ட ஆயர். ஃபேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் பார்க்கும்போது பக்கத்தில் வரும் பரிந்துரைகள் கவனத்தை சிதறடிப்பது போல், உணவின் ருசியுடன் உணவை செய்த வீட்டு வேலைக்காரியின் மீதும் பாதிரியாருக்கு கண் அலை பாய்கிறது. இவ்வளவு லட்சணமான பெண்ணை சும்மாவா பிஷப் வைத்திருப்பார் என்று சிந்திக்க வைக்கிறது.

பிஷப் நாடி பிடித்து விடுகிறார். “நீ நெனக்கிற மாதிரி எதுவும் இல்ல… அவ எனக்கு சமைச்சுப் போடறதுக்கும் துணி தோய்க்கிறதுக்கும் மட்டுமே துணையா இருக்கா!”

ஒரு வாரம் போன பின் வேலைக்காரி பிஷப்பிடம் சொல்கிறாள். “யாராவது ஸ்பெஷலா வந்தால் மட்டுமே அந்த வெள்ளிக் கரண்டி பயன்படுத்துவேன். அருட் தந்தை வந்துட்டுப் போனப்புறமா அதைக் காணவில்லை. அவர் எடுத்திருக்க மாட்டார்… இல்லியா?”

“ஆவர் எடுத்திருப்பார்னு தோணல. இருந்தாலும் கடுதாசு போடறேன்”னு சொன்ன ஆயர் எழுதினார்: “நீங்கள் வெள்ளிப் பாத்திரங்களை எனது இல்லத்தில் இருந்து எடுத்ததாக நான் சொல்லவில்லை. ஆனால், உண்மை என்னவென்றால் தாங்கள் இரவு உணவிற்கு வந்த நாளில் இருந்து அந்த சாமானைக் காணவில்லை!”

கொஞ்ச நாள் கழித்து பாதிரியிடம் இருந்து பதில் வந்திருந்தது: “மேன்மை பொருந்திய ஆயர் அவர்களுக்கு, நீங்கள் பணிப்பெண்ணுடன் படுப்பதாக நான் சொல்லவில்லை. ஆனால், நிஜத்தை சொல்லவேண்டுமென்றால், உங்கள் படுக்கையில் நீங்கள் உறங்கிக் கொண்டிருந்தால், அங்கே உள்ள அந்த வெள்ளிக் முட்கரண்டி உங்களை உறுத்தியிருக்கும்.”

ஆஃபீஸ்ஸ்பேஸ்

அலுவல் மீட்டிங்குகளும் இப்படித்தான்… எதையோ நினைப்போம். சொல்ல மாட்டோம். அவர்களாகவே ஏதோ புரிந்து கொள்வார்கள். பின்னணியில் அரசியல் சூழ்ச்சி திட்டம் நடக்கும். உள்ளடி வேலை இருக்கும். சின்னச் சின்ன குழுவாக சந்திப்புகள் அரங்கேறும். மின் மடலில் காய் நகர்த்தப்படும்.

அதை வால் ஸ்ட்ரீட் ஜர்னல் சொல்கிறது:

The Quiet Plotter

Deadly Meetings in the Workplace – WSJ.com:
CRIME: Practices passive-aggressive insubordination.
MODUS OPERANDI: Remains quiet at meetings; later undermines bosses and decisions.
LEVEL: First degree nuisance

இந்த மாதிரி பெயர்கள் எல்லாம் எங்கிருந்து கிடைக்கின்றது? எப்படி முத்திரை குத்துகிறார்கள்?

  • The Multitasker?
  • The Jokester?
  • The Dominator
  • The Rambler?
  • Placater
  • Decimator
  • Detonator
  • Naysayer


விவாத விளையாட்டு

எல்லாமே கம்ப்யூட்டர் விளையாட்டுகளில் புழக்கத்தில் இருப்பவை. சொல்லப் போனால், ரோல் ப்ளே எனப்படும் இன்னின்னார் இப்படி இப்படி செய்வதில் வல்லவர் என உருமாறும் ஆட்டங்கள்.

சிலர் இதில் உருப்படியானவர்கள். காரியத்தை முடிக்க உதவுபவர்கள். முன்னேற்றத்திற்கு வழிகோல்பவர்கள். ப்ராஜெக்ட்டையும் கம்பெனியையும் அடுத்த கட்டத்திற்கு நகர்த்துபவர்கள். செயல்வீர்ர்கள். அப்படிப்பட்டவர்களின் பங்குகளை இப்படி பிரிக்கலாம்:

  • கல்வியாளர் (பயிற்றுனர்)
  • சமரச மார்க்கவியலாளர் (Compromiser)
  • க்ரியா ஊக்கி (Encourager)
  • தகவல் தேடி (Seeker of Information)
  • சந்தேகாஸ்தபமானதை கேள்விக்குள்ளாக்குபவர் (Questioner of dubious Assertions)
  • சரிபார்ப்பவர் (Validator)
  • பொறுமையாக காது கொடுப்பவர் (Attentive Listener)
  • பிணக்குகளை ஊடல்களாக்கி கொசுவாக்குபவர் (Diffuser of Tension)

மேலும் விரிவாக மேற்கண்ட ரோல் மாடல்களைப் படிக்க: Social Work Practice: A Critical Thinker’s Guide By Eileen D. Gambrill


The life of man upon earth is a warfare
– Job 7:1

முதலாம் வாசக முன்னுரை: வாசகம் ஜாப் 7:1-4,6-7
மனிதனுடைய வாழ்வு போரட்டம் நிறைந்ததாகத்தான் இருக்கின்றது.

முதல் வாசகம்

ஜோப் நூலிலிருந்து வாசகம் 7: 1-4,6-7

யோபு கூறியது: மண்ணில் வாழ்வது மனிதருக்குப் போராட்டந்தானே? அவர்களின் நாள்கள் கூலியாள்களின் நாள்களைப் போன்றவைதாமே? நிழலுக்கு ஏங்கும் அடிமை போலவும், கூலிக்குக் காத்திருக்கும் வேலையாள் போலவும், வெறுமையான திங்கள்கள் எனக்கு வாய்த்தன; இன்னல்மிகு இரவுகள் எனக்குப் பங்காயின. படுக்கும்போது எப்போது எழலாம் என்பேன்! இரவோ நீண்டிருக்கும்; விடியும்வரை புரண்டு உழல்வேன். என் நாள்கள் தறியின் ஓடுகட்டையினும் விரைந்தோடுகின்றன; அவை நம்பிக்கையின்றி முடிவடைகின்றன.


Abraham Lincoln

First Inaugural Address: Monday, March 4, 1861

This country, with its institutions, belongs to the people who inhabit it. Whenever they shall grow weary of the existing Government, they can exercise their constitutional right of amending it or their revolutionary right to dismember or overthrow it.


ஏர் உழுவைத் திருப்பிப் போட்டது போல் கேள்விக்குறி இருப்பது தற்செயல் அல்ல! பழைய மண்ணாக இருக்கும் மூடநம்பிக்கைகளை உடைக்கவும் அடுத்து விதைகள் வளர்ந்து பூத்துக் குலுங்க புத்துணர்வாக்கவும் வினாக்குறி ஏர்.

Saul Alinsky

‘Breaking India: Western Interventions in Dravidian and Dalit Faultlines’ by Rajiv Malhotra and Aravindan Neelakandan

The book focuses on role of US and European churches, academics, government and human rights groups in fostering separation of the identities of Dravidian and Dalit communities from the rest on India.

Publisher: Amaryllis.
Pages: 640.
Price: 695 INR

Rajiv Malhotra
His Infinity Foundation, seeks to foster a better global understanding of Indian civilization. Rajiv’s work argues that the dharma offers a complex and open framework for a genuine dialogue among diverse peoples, rather then a zero sum game. He shows the limitations of globalization when it is a parochial imposition of Western paradigms. He is well known as a speaker and writer for a wide audience and is frequently interviewed and invited to deliver keynote addresses. He serves on the Board of Governors of the India Studies program at the University of Massachusetts, and served as a Chairman for the Asian Studies Education Committee of the State of New Jersey.

Aravindan Neelakandan
Aravindan Neelakandan has worked for the past decade with an NGO in Tamil Nadu serving marginalized rural communities in sustainable agriculture. He was awarded a junior research fellowship in cultural economics by the India’s Ministry of Tourism to research the economic potentials of the neglected ruins in Kanyakumari district, in southern Tamil Nadu. These experiences provided him with in-depth knowledge of the history and sociology of Tamil people. He is also a popular science writer in Tamil and a columnist with UPI-Asia, a leading news portal.

1. எஸ் குருமூர்த்தி, துக்ளக் சோ ராமசாமி, தயானந்த சரஸ்வதி பேசியதை ‘தி ஹிந்து’ தொகுக்கிறது.

2. புத்தக வெளியீட்டு நிகழ்வில் அரவிந்தன் உரை – இங்கே

3. புத்தகத்தின் வலையகம்

4. ராஜீவ் மெஹ்ரோத்ராவின் வலைப்பதிவு

5. 6 Provocations In “Breaking India”

  1. Dravidian Identity Constructed, Exploited & Politicized
  2. Linking Of Dravidian & Dalit Identities
  3. Foreign Nexus Exploits India’s Faultiness
  4. Religion’s Role in the Competition for Soft Power
  5. Interrogating the Term “Minority”
  6. Controlling the Discourse on India

6. Rajiv Malhotra along with Aravindan Neelakandan is going to discuss “Breaking India: Western Interventions in Dravidian and Dalit Faultlines” in New Delhi on Feb 9 at 4:30 pm, on the occassion of the launch of their book by the same name. The venue is Vivekananda International Foundation, 3, San Martin Marg, Chanakya Puri. Web: http://www.vifindia.org

Book launch and keynote address are by Ram Jethmalani. Speakers include B Raman (Director, Institute for Topical Studies), S. Gurumurthi, Vice Admiral (Retd) Raman Puri, and Upendra Baxi (Emeritus Professor of Law, University of Warwick).

7. தமிழ் ஹிந்து அறிவிப்பு

நூல் பற்றிய அறிமுகம்:

இந்தியாவின் ஒருமைப்பாடும் இறையாண்மையும் உலகளாவிய மூன்று பெரும் பகாசுர சக்திகளால் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளன –

  1. அ) பாகிஸ்தானை மையமாகக் கொண்டு இயங்கும் இஸ்லாமிய பயங்கரவாதம்
  2. ஆ) சீனாவை மையமாகக் கொண்டு இயங்கும் மாவோயிஸ்டுகள் மற்றும் இதர மார்க்சிய அமைப்புகள்
  3. இ) மேற்கத்திய நாடுகளால் மனித உரிமை என்ற பெயரில் ஊட்டி வளர்க்கப் படும் திராவிட, தலித் பிரிவினைவாதம்.

இவற்றில் மூன்றாவதைப் பற்றி விரிவான ஆய்வுகளையும், அலசல்களையும் உள்ளடக்கியது இந்த நூல்.

அமெரிக்க, ஐரோப்பிய கிறிஸ்தவ நிறுவனங்களின் பணபலத்துடன் இந்தியாவுக்குள் திராவிட, தலித் பிரிவினைவாதத்தை வளர்க்கக் களமிறக்கப் படும்

  • மனித உரிமை அமைப்புகள்
  • கல்வியாளர்கள்
  • சிந்தனை வட்டங்கள்
  • மத அமைப்புகள்

ஆகியவை நிழலுருவில் செயல்படும் விதம் குறித்து விரிவான ஆய்வுகளை இந்த நூல் அளிக்கிறது. ஆரிய திராவிட இனவாதம் உருவான வரலாறு, புனித தாமஸ் பற்றிய கட்டுக் கதையை மையமாக வைத்து உருவாக்கப் படும் “திராவிட கிறிஸ்தவம்”, தென்னிந்திய வரலாற்றை உள்நோக்கங்களுடன் திரிக்கும் முயற்சிகள் ஆகியவை பற்றியும் இந்த நூல் விரிவாகப் பேசுகிறது.

நூலாசிரியர்கள் இது பற்றி கடந்த ஐந்து ஆண்டு காலமாக தீவிர ஆய்வுகள் மேற்கொண்டனர். அந்த ஆய்வுகளின் தொகுப்பாக இந்த நூல் வெளிவருகிறது.

Njaani – DMK Movie Production Company & Pondycherry Churches

கற்பிதங்கள் என்றால் என்ன? மூட நம்பிக்கைதான்.

ஜெயலலிதா ரொம்ப பிரில்லியண்ட்டானவர். அசாத்திய அறிவுக் கூர்மையுடையவர் என்பது ஒரு கற்பிதம். இதை கேள்வி கேட்காமல் நிறையப் பேர் ஏற்றுக் கொள்கிறார்கள். அவ்வளவு பெரிய புத்திசாலி, பிரில்லியண்ட் நபர் எப்படி தன் முழு அரசியலையும் வாழ்க்கையையும் ஏதோ ஒரு சாதாரண பின்னணியில் இருந்து வந்த சசிகலா குடும்பத்திடம் ஒப்படைத்துவிட்டு இருக்கிறார் என்ற கேள்விக்கு யாரிடமும் பதில் கிடையாது.

கருணாநிதி பற்றியும் இது போன்ற கற்பிதங்கள் உள்ளன. அவர் ஒரு பகுத்தறிவாளர், ஜனநாயகவாதி என்பதெல்லாம் அப்படிப்பட்ட கற்பிதம்தான்.

இந்த வார குட்டு

கிறிஸ்துவ மதத்துக்குள் தலித் கிறிஸ்துவர்களுக்கும் வன்னிய கிறிஸ்துவர்களுக்கும் இடையே ஆலய வழிபாட்டில் ஜாதி வேறுபாடுகள் காட்டப்படுவதை நீக்காமல் இரு பிரிவினருக்கும் இடையே மோதல்கள் நடக்கக் காரணமாக இருந்து வரும் புதுச்சேரி மறைமாவட்டப் பேராய நிர்வாகிகளுக்கு

இந்த வார கேள்வி

தமிழில் பெயர் வைத்தால்தான் வரிவிலக்கு என்ற சலுகைக்காக படத்துக்கு தமிழ்ப் பெயர் வைத்துவிட்டு, தயாரிப்பு நிறுவனத்துக்கு மட்டும் ஆங்கிலப் பெயர் வைத்துக் கொள்ளும் சினிமா உலகத் தந்திரத்தை ‘முத்தமிழ் அறிஞரின்’ பேரன் உதயநிதியும் (ரெட்ஜெயண்ட் மூவீஸ்) பின்பற்றுவது முறையா ?

முழுவதும் வாசிக்க: தமிழ்2000: ஓ பக்கங்கள் – 7

Mike Huckabee as a Hindu Fundamentalist – Ted Rall

நன்றி: Ted Rall online

Host unlimited photos at slide.com for FREE!