Tag Archives: Church

பெண்ணுரிமையும் சட்டங்களும்: சொந்த முடிவுகளை சுதந்திரமாக தேர்ந்தெடுத்தல்

ஜெயமோகனுக்கு எழுதிய கடிதம்: http://www.jeyamohan.in/?p=29188

கருக்கலைப்பு-ஒரு கடிதம் வாசிக்கக் கிடைத்தது.

இந்த நிகழ்ச்சியைப்பற்றிப் பேசுவதற்கு முன் சில விஷயங்களைத் தெளிவுபடுத்த வேண்டியுள்ளது [இலக்கிய இடக்கரடக்கல்கள்]

//அது ஒரு கொலையல்ல என்று பார்ப்பது எப்படி… நம் மனைவியின் மாதவிடாய் தள்ளிப்போகிறது என்றதிலிருந்தே நம் உறவு ஆரம்பமாகிறது அல்லவா…//

கட்சிக்கு ஆள் சேர்ப்பது போல்…
கூட்டத்தைப் பெருக்க குடும்பத்தினரை கூட்டுவது போல்…
மதத்தை முன்னேற்ற எண்ணிக்கை அதிகரிப்பது போல்…
குழந்தைகளை நிறைய ஈன்றெடுங்கள் என்பது அந்தக் காலம்.

ஒன்றோ, இரண்டோ… ஒழுங்காய் வளர்த்தால் சிறப்பு என்பது இந்தக் காலம்.

இதில் எங்கே கொலை வருகிறது?

இந்தியாவில் கர்ப்பம் கலைப்பு என்றாலே பெண் குழந்தை என்றளவிலும், மேற்கில் (குறிப்பாக கிறித்துவ பெரும்பான்மையினர் கொண்ட நாடுகளில்) கருக்கலைப்பு என்றாலே தெய்வக்குத்தம் என்றளவிலும் எளிமையாக்க முடிகிறது.

அமெரிக்கா வந்த புதிதில் நான் தங்கியிருந்த வீட்டிற்கு வெகு அருகில் ‘Planned Parenthood’ என்னும் வசதி வாய்ப்பற்றோருக்கான உதவி ஸ்தாபனம் இயங்கி வந்தது. தினசரி காலை ஏழு மணிக்கு சிலுவை தாங்கியவர்களும் உள்ளே ஆலோசனைக்குச் செல்பவர்களைக் கடுமையாகத் திட்டும் பதாகைகள் தாங்கியவர்களும் வந்து விடுவார்கள். அந்தத்  தன்னார்வ நிறுவனம் மூடும் எட்டு மணி வரை உள்ளே செல்வோரையும், வெளியே வருவோரையும் மிக மோசமாக வைவார்கள். கேட்கவே பயமாகவும், அருவருப்பாகவும், அசிங்கமாகவும் இருக்கும். ஒருவரைக் குறி வைத்துப் பத்துப் பதினைந்து பேர் சூழ்வார்கள்.

அதைக் கேட்போர் ஏற்கனவே நோய்க்கு உள்ளானவர்கள்; அல்லது பதின்ம வயதிலேயே, பள்ளிப் படிப்பு முடிக்காமலேயே கரு தாங்கியவர்கள்; மிக முக்கியமாக ஏழைகள். அவர்கள் இந்த அர்ச்சனையைக் கேட்கும் போது எவ்வளவு மன உளைச்சலுக்கு உள்ளாவார்கள் என நான் நினைக்கும் கையாலாகாத்தனத்தை எண்ணி வருந்தியதுண்டு.

ஏற்கனவே கிடைத்த பதிவுகளில் சில:

அ) பாலா – ஒப்ரா வின்ஃப்ரேயும் அமீர்கானும்

பெண் சிசுக் கொலை என்னும் தலைப்பில் அந்த 1.30 மணி ஆவணம், பெண் சிசுக் கொலை என்னும் தலைப்பை நன்றாக ஆராய்ந்து, அதன் காரணங்களை, அது பற்றிய தவறான எண்ணங்களை அகற்றி, பாதிக்கப் பட்டவர்களுடன் உரையாடி, அது சம்பந்தமாக மேலே செய்ய வேண்டிய காரியங்களைக் குறிப்பிட்டு நேயர்களையும் அதில் ஈடுபட அழைத்து –

ஆ) சிறில் அலெக்ஸ்கத்தோலிக்க மதம்-ஒரு கடிதம்

இ) பெருஞ்சுவர் சூழ்ந்த பெண்

ஈ) மறைக்கப்பட்ட பைபிள் :தோமையர் எழுதிய சுவிசேஷம்

முலைப்பால் குடிக்கும் சிசுக்களைக் கண்ட யேசு தன் சீடர்களிடம் “முலைகுடிக்கும் இந்தக் குழந்தைகள் சொர்க்கத்தில் நுழைபவர்களைப்போல “என்று சொன்னார் .

சீடர்கள் அவரிடம் “அப்படியானால் நாங்கள் குழந்தைகளாக மாறி சொர்க்கத்திற்குள் பிரவேசிக்கலாமா?” என்றார்கள் .

யேசு அவர்களிடம் “எப்போது நீங்கள் இரண்டை ஒன்றாக்குகிறீர்களோ ,எப்போது நீங்கள் அகம் புறம் போலவும் , புறம் அகம் போலவும் , மேலே இருப்பது கீழே இருப்பது போலவும் ஆகிறீர்களோ , எப்போது நீங்கள் ஆண் ஆணும் பெண் பெண்ணும் அல்லாமலாகும்படி ஆணையும் பெண்ணையும் ஒன்றாக ஆக்கிக் கொள்கிறீர்களோ எப்போது நீங்கள் ஒரு கண்ணுக்குப் பதிலாகப் பல கண்களும் , ஒரு கைக்குப் பதிலாக இன்னொரு கையும் ஒரு பாதத்துக்கு பதிலாக இன்னொரு பாதமும் ஒரு சமானத்தன்மைக்கு பதிலாக இன்னொரு சமானத்தன்மையும் உள்ளவர்களாகிறீர்களோ அப்போது நீங்கள் சொர்க்க ராஜ்யத்துக்குள் பிரவேசிப்பீர்கள்” என்றார் .

‘Breaking India: Western Interventions in Dravidian and Dalit Faultlines’ by Rajiv Malhotra and Aravindan Neelakandan

The book focuses on role of US and European churches, academics, government and human rights groups in fostering separation of the identities of Dravidian and Dalit communities from the rest on India.

Publisher: Amaryllis.
Pages: 640.
Price: 695 INR

Rajiv Malhotra
His Infinity Foundation, seeks to foster a better global understanding of Indian civilization. Rajiv’s work argues that the dharma offers a complex and open framework for a genuine dialogue among diverse peoples, rather then a zero sum game. He shows the limitations of globalization when it is a parochial imposition of Western paradigms. He is well known as a speaker and writer for a wide audience and is frequently interviewed and invited to deliver keynote addresses. He serves on the Board of Governors of the India Studies program at the University of Massachusetts, and served as a Chairman for the Asian Studies Education Committee of the State of New Jersey.

Aravindan Neelakandan
Aravindan Neelakandan has worked for the past decade with an NGO in Tamil Nadu serving marginalized rural communities in sustainable agriculture. He was awarded a junior research fellowship in cultural economics by the India’s Ministry of Tourism to research the economic potentials of the neglected ruins in Kanyakumari district, in southern Tamil Nadu. These experiences provided him with in-depth knowledge of the history and sociology of Tamil people. He is also a popular science writer in Tamil and a columnist with UPI-Asia, a leading news portal.

1. எஸ் குருமூர்த்தி, துக்ளக் சோ ராமசாமி, தயானந்த சரஸ்வதி பேசியதை ‘தி ஹிந்து’ தொகுக்கிறது.

2. புத்தக வெளியீட்டு நிகழ்வில் அரவிந்தன் உரை – இங்கே

3. புத்தகத்தின் வலையகம்

4. ராஜீவ் மெஹ்ரோத்ராவின் வலைப்பதிவு

5. 6 Provocations In “Breaking India”

  1. Dravidian Identity Constructed, Exploited & Politicized
  2. Linking Of Dravidian & Dalit Identities
  3. Foreign Nexus Exploits India’s Faultiness
  4. Religion’s Role in the Competition for Soft Power
  5. Interrogating the Term “Minority”
  6. Controlling the Discourse on India

6. Rajiv Malhotra along with Aravindan Neelakandan is going to discuss “Breaking India: Western Interventions in Dravidian and Dalit Faultlines” in New Delhi on Feb 9 at 4:30 pm, on the occassion of the launch of their book by the same name. The venue is Vivekananda International Foundation, 3, San Martin Marg, Chanakya Puri. Web: http://www.vifindia.org

Book launch and keynote address are by Ram Jethmalani. Speakers include B Raman (Director, Institute for Topical Studies), S. Gurumurthi, Vice Admiral (Retd) Raman Puri, and Upendra Baxi (Emeritus Professor of Law, University of Warwick).

7. தமிழ் ஹிந்து அறிவிப்பு

நூல் பற்றிய அறிமுகம்:

இந்தியாவின் ஒருமைப்பாடும் இறையாண்மையும் உலகளாவிய மூன்று பெரும் பகாசுர சக்திகளால் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளன –

  1. அ) பாகிஸ்தானை மையமாகக் கொண்டு இயங்கும் இஸ்லாமிய பயங்கரவாதம்
  2. ஆ) சீனாவை மையமாகக் கொண்டு இயங்கும் மாவோயிஸ்டுகள் மற்றும் இதர மார்க்சிய அமைப்புகள்
  3. இ) மேற்கத்திய நாடுகளால் மனித உரிமை என்ற பெயரில் ஊட்டி வளர்க்கப் படும் திராவிட, தலித் பிரிவினைவாதம்.

இவற்றில் மூன்றாவதைப் பற்றி விரிவான ஆய்வுகளையும், அலசல்களையும் உள்ளடக்கியது இந்த நூல்.

அமெரிக்க, ஐரோப்பிய கிறிஸ்தவ நிறுவனங்களின் பணபலத்துடன் இந்தியாவுக்குள் திராவிட, தலித் பிரிவினைவாதத்தை வளர்க்கக் களமிறக்கப் படும்

  • மனித உரிமை அமைப்புகள்
  • கல்வியாளர்கள்
  • சிந்தனை வட்டங்கள்
  • மத அமைப்புகள்

ஆகியவை நிழலுருவில் செயல்படும் விதம் குறித்து விரிவான ஆய்வுகளை இந்த நூல் அளிக்கிறது. ஆரிய திராவிட இனவாதம் உருவான வரலாறு, புனித தாமஸ் பற்றிய கட்டுக் கதையை மையமாக வைத்து உருவாக்கப் படும் “திராவிட கிறிஸ்தவம்”, தென்னிந்திய வரலாற்றை உள்நோக்கங்களுடன் திரிக்கும் முயற்சிகள் ஆகியவை பற்றியும் இந்த நூல் விரிவாகப் பேசுகிறது.

நூலாசிரியர்கள் இது பற்றி கடந்த ஐந்து ஆண்டு காலமாக தீவிர ஆய்வுகள் மேற்கொண்டனர். அந்த ஆய்வுகளின் தொகுப்பாக இந்த நூல் வெளிவருகிறது.