Monthly Archives: ஜனவரி 2011

After 2000 – தமிழ் நாவல்: Shortlist

காலச்சுவடு க்ளாசிக் வரிசை வருகிறது. Vanity publishing எனப்படும் தனக்குத் தானே திட்டத்தினால் கூட உயிர்மை போன்ற பதிப்பகங்களின், பிரான்ட் வேல்யூ குறைந்ததாக தெரியாத காலம். கிழக்கு, உயிர்மை, தமிழினி மூலம் வெளியாகும் கதைகள் பரவலான கவனிப்பு பெறுபவையாக இருக்கின்றன.

முக்கியமோ/முகாந்திரமில்லையோ… தெரியாது; எனினும் சாரு நிவேதிதா, ஜெயமோகன், எஸ் ராமகிருஷ்ணன் புனைவுகள் பெருமளவில் விற்கின்றன.

அப்படி பரவலான கவனிப்பைப் பெறாத, ஆனால் நான் மதிக்கும் சிலரால் (புத்தக விமர்சனங்கள், திண்ணையில் பாவண்ணன், நேசமுடன் வெங்கடேஷ் மின் மடல், தனி அரட்டையில் மெத்தப் படிக்கும் நண்பர்கள்) பரிந்துரைக்கப்பட்ட தமிழ் நாவல்களின் தொகுப்பு இது.

மூன்றாக லிஸ்ட்டை பிரிக்கலாம்.

1) நான் படித்தவை – நிச்சயம் முக்கியமானவை; விருது கோரும் ஆக்கம்: முழுநேரப் பதிவராய் பரபரப்பை கிளப்பாததால் மட்டுமே அதிகம் கவனிப்பு கிட்டாத புனைவுகள்.
2) நான் புரட்டியவை – வாசித்து முடிக்கவில்லை (சுவாரசியம் கிடைக்காததாலோ, பக்க அளவினாலோ அல்லது நண்பராக இல்லாததாலோ); இலக்கியத்தரமானவை

3) விஷ்லிஸ்ட்

படித்ததில் முக்கியமானவை

  • மரகதத் தீவு – காஞ்சனா தாமோதரன் – உயிர்மை
  • வெட்டுப் புலி – தமிழ்மகன் – உயிர்மை
  • காக்டெயில் & ஆஸ்பத்திரி – சுதேசமித்திரன்
  • கொசு – பா ராகவன்
  • அலகிலா விளையாட்டு – பா ராகவன்
  • அவன் – அது = அவள் :: யெஸ் பாலபாரதி
  • மனப்பிரிகை :: ஜெயந்தி சங்கர்
  • சல்மா – இரண்டாம் ஜாமங்களின் கதை
  • உமா மகேஸ்வரி – யாரும் யாருடனும் இல்லை

புரட்டியதில் தரமானவை

  • கரைதேடும் ஓடங்கள் – உஷா ராமசந்திரன் – சந்தியா
  • நட்டுமை – ஆர்.எம்.நெளஸாத் – காலச்சுவடு
  • கீரனூர் ஜாகிர்ராஜா – துருக்கித்தொப்பி & வடக்கேமுறி அலிமா
  • வளவ. துரையன் – மலைச்சாமி – மருதா
  • வட்டத்துள்:வத்சலா
  • பாபுஜியின் மரணம்: நிஜந்தன்
  • நான் காணாமல் போகும் கதை (குறுநாவல்): ஆனந்த்
  • அம்மன் நெசவு: சூத்ரதாரி
  • வா.மு.கோமுவின் – கள்ளி
  • க.சீ. சிவக்குமார் – நாற்று
  • சோ. தருமன் – வலைகள்
  • பாலமுருகன் – சோளகர் தொட்டி

ரிடையர்மென்ட் விஷ்லிஸ்ட்

  • காதில் மெல்ல காதல் சொல்ல – ஏ.ஏ.ஹெச்.கே.கோரி – சந்தியா
  • குவியம் – ஜெயந்தி சங்கர்
  • நாடு விட்டு நாடு – முத்தம்மாள் பழனிசாமி – தமிழினி
  • தலையணை மந்திரோபதேசம் – நடேச சாஸ்திரி – தமிழினி
  • மூன்றாம் சிலுவை – உமா வரதராஜன் – காலச்சுவடு
  • கானல் வரி – தமிழ்நதி – உயிர்மை
  • சாந்தாமணியும் இன்ன பிற காதல் கதைகளும் – வா.மு.கோமு – உயிர்மை
  • அவளது கூரையின் மீது நிலா ஒளிந்திருக்கிறது – வ.ஐ.ச.ஜெயபாலன் – உயிர்மை
  • கண்ணகி: சு.தமிழ்ச்செல்வி – உயிர்மை
  • க.வை.பழனிசாமி – ஆதிரை
  • மனோஜ்குமார் – பால்
  • எஸ். செந்திகுமாரின் – ஜீ. செளந்தர ராஜனின் கதை
  • நாகம்மாள் – ஆர்.சண்முகசுந்தரம்
  • பாலிதீன் பைகள் – இரா நடராசன்
  • லங்காட் நதிக்கரை – அ. ரெங்கசாமி; தமிழினி
  • சிறீதர கணேசன் – சந்தி
  • தளவாய் சுந்தரம் – ஹிம்சை
  • கோகுலக்கண்ணன் – பாம்பும் பிற கனவுகளும்
  • பவா செல்லத்துரை – வேட்டை
  • லட்சுமிமணிவண்ணன் – பூனை
  • குமாரசெல்வா – உக்கிலு
  • பாப்லோ அறிவுக்குயில் – இருள்தின்னி
  • சி.எம். முத்து – வேரடி மண்
  • செந்தூரம் ஜெகதீஷ் – கிடங்குத் தெரு
  • மில் :: ம காமுத்துரை

தூக்கம் வர சிரமதசை சாய்ஸ்

  • பா. வெங்கடேசன் – மழையின் நிறம் தனிமை
  • காவல் கோட்டம் (சு. வெங்கடேசன்)
  • மஞ்சள் வெயில் : யூமா.வாசுகி
  • மாயினி – எஸ்.பொன்னுத்துரை
  • எம்.ஜி. சுரேஷ் – 37

முந்தைய பதிவு: தமிழ் நூல் பரிந்துரை – 2010

பிரசன்னா ராமஸ்வாமி @ சென்னை சங்கமம்: ‘வானம் வசப்படும்’ நாடகம்

ஜூலி கணபதியும் நந்தலாலாவும் தோஷமில்லை. தோற்றுவாய் தெரிந்துவிடும். ஆனால், உலக சினிமா குறித்து எஸ் ராமகிருஷ்ணன் எழுதினால் கபர்தார். ‘துணையெழுத்து‘ விகடன் வாசகரும் வெளிறுவார்; ‘வெயிலைக் கொண்டு வாருங்கள்’ இலக்கிய ஆர்வலரும் பிளிறுவார்.

சோ ராமசாமி நாடகம் போட்டால் தோஷமில்லை. இலக்கியவிரும்பியும் மாற்றுப்பிரதி பிரகடனவாதியுமான பிரசன்னா ராமசுவாமி நாடகம் போட்டால்?

நேரடியாக நிகழ்ச்சியைப் பார்த்தால் மட்டுமே இந்த மாதிரி நாடகத்தை விமர்சிக்கலாம். கிடைப்பதோ கலைஞர் டிவி ஒளிபரப்பு மட்டுமே… அதை வைத்து மதிப்பீடு செய்யலாம்.

1. டிவி பார்வையாளர்: அழகிக்கு ஃபோகஸ் கொடுப்பது சரியே. ஆனால், அவ்வப்போது பிக்சர் இன் பிக்சர் மாதிரி மொத்த திரையும் காமிங்கப்ப்பா…

2. பரத நாட்டிய சுப்புடு: முன்னாடி பத்மா சுப்ரமணியம் பாட்டி வருவார்; இப்பொழுது அவர் இடத்தில் அனிதா ரத்னம். தமிழச்சி தங்கபாண்டியனுக்கு சான்ஸ் கொடுங்கப்பா…

3. கலைவிழா வித்தகர் கருணாநிதி: சையா…ச்சய்யா… பாடல் சரி. தொப்புள் தெரியற டான்ஸ் கோரிப்பாளையம் குழுவினரின் டான்ஸ் எங்கப்பா….

கேள்வி நேரம்

  • தாலிபான் பாணி கொடூரச் செயலாலகக் கருதப்படும் கெளரவக் கொலைகள் (Honor Killings) என்பது இஸ்லாமிய நாடுகளில்தான் மிகுதியாக இருக்கிறது. முஸ்லீம்களை இந்த நாடகம் இழிவு செய்கிறதா?
  • மூன்று பேர் நடுவில் வரும் ஒப்பாரியில் இடம்பிடிக்கிறார்கள். அவர்கள் மு.க. அழகிரி, ஸ்டாலின், கனிமொழியின் குறியீடா?
  • ஒலிப்பேழையில் சினிமாப் பாடல், பேக்ட்ராப் பவர்பாயின்ட் ஸ்லைடுகள், ‘மானாட மயிலாட’ குத்தாட்டம், ப்ரொஜஷன் ஸ்க்ரீனில் ஃப்ளிக்கர் ஒளிப்படம் – இவை எல்லாம் இருந்தால் நவீன நாடகம் தயார்?

அதிகாரபூர்வ செய்திக் குறிப்பு

ThatsTamil
ஐந்தாவது சென்னை சங்கமம் கலை விழா பிரமாதமான இசை நாடகத்துடன் கோலாகலமாக தொடங்கியது.

சென்னை தீவுத் திடலில் நேற்று மாலை 5வது சென்னை சங்கமம் கலை நிகழ்ச்சி தொடங்கியது. முதல்வர் கருணாநிதி இதைத் தொடங்கி வைத்தார்.

கலை விழாவின் தலை விழாவாக பிரசன்னா ராமசாமியின் வானம் வசப்படும் என்ற இசை நாடக நிகழ்ச்சி நடந்தது. கெளரவக் கொலைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நாடகமாக இது அமைந்தது. அனைவரையும் கவரும் வகையிலான இந்த நாடகத்தில் இடம் பெற்ற வலுவான சமுதாயச் செய்தி அனைவரையும் நெகிழ வைத்தது.

ஒரு எளிய கதையை எடுத்துக் கொண்டு அதை இசை வடிவில் பிரமாதமாக அமைத்திருந்தனர். ஒரு கிராமத்து இளைஞன், வேலை தேடி நகரத்திற்கு வருகிறான். வந்த இடத்தில் காதல் மலர்கிறது. காதலியுடன் தனது ஊருக்குத் திரும்பிச் செல்கிறான். இருவரும் வேறு வேறு சாதியினர்.

இதனால் இளைஞனின் ஊரில் பிரளயம் ஏற்படுகிறது. ஊர்ப் பஞ்சாயத்துக் கூட்டி இந்தக் காதலைப் பிரிக்க உத்தரவிடப்படுகிறது. ஊரில் கலவரம் வெடிக்கிறது. இரண்டாக பிரிந்த கிராமம், சண்டையில் ஈடுபடுகிறது. யார் பெரியவர் என்ற இந்த மோதலால் அந்த இளைஞன் மற்றும் பெண்ணின் காதல் ஸ்தம்பித்துப் போகிறது. இறுதியில் நடப்பது மனதை உருக்குகிறது.

இந்த நாடகத்தின் தொடக்கத்தில் இரண்டு திருநங்கைகளின் அழகான நடனம் அனைவரையும் வியக்க வைப்பதாக இருந்தது. அதேபோல மாற்றுத் திறனாளி ஒருவரின் ஏரோபிக் நடனமும் அனைவரையும் கவர்ந்தது.

200க்கும் மேற்பட்ட கலைஞர்கள் இந்த இசை நாடகத்தில் கலந்து கொண்டு நடித்து, நடனமாடினர். இசையும், கதையைச் சொல்லிய விதமும், நடனமும் இணைந்து கண் கவர் விருந்தாகவும், மனதுக்கு நல்ல செய்தியைத் தருவதாகவும் நாடகம் அமைந்திருந்நதது.

கிராமிய நடனங்கள், பாரதியாரின் பாடல்கள், தமிழ் சினிமாப் பாடல்கள் என வெரைட்டியான இசை வடிவங்களை இழையோட வைத்திருந்த விதம் அருமை. அதிலும் 3 பெண்கள் இணைந்து பாடிய அந்த ஒப்பாரிப் பாடல், கண்களை நனைக்கத் தவறவில்லை.

முத்து மாரியம்மன் வேடத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடனக் கலைஞர் அனிதா ரத்னம் பங்கேற்றார். வெறுமனே வேடிக்கை பார்த்து விட்டு போய் விடும் வகையிலான நாடகமாக இல்லாமல், சமூகத்திற்குத் தேவையான அருமையான செய்தியை சொன்ன இந்த நாடகத்தைப் பாராட்டதவர்களே கிடையாது.


பிரளயன் பேட்டியில் பிரசன்னா ராமஸ்வாமி

சமகால தமிழ் நாடகம் தொடர்பா ஒரு ஏழு நிமிடத்திற்கு ஒரு சின்ன டாக்குமெண்ட்டரி செய்யவேண்டியிருந்தது. அப்படி செய்யும்போது பிரசன்னா ராமசாமியை ஒரு பேட்டி எடுத்தேன். அதில் அவர் ரொம்ப சரியாகச் சொன்னார். தென்னிந்திய நாடகங்களோடு சமகால தமிழ் நாடகங்களை ஒப்பிடும்போது ஒன்றைக் கவனிக்கவேண்டும்.

மலையாள-கர்நாடகா நாடக உலகில் பெரிய சாதனைப் படைப்புகள் பல வந்திருக்கு. காவலம் நாராயண பணிக்கர், சங்கரப்பிள்ளை, அப்புறம் பி.வி.கரந்த், கிரிஷ்கர்னாட், பிரசன்னா என்று பெரிய ஆளுமைகள் உண்டு. அடுத்த தலைமுறையினர் நாடகம் தயாரிக்கிறபோது இந்த பெரிய ஆளுமைகளின் பாதிப்பு அந்த பாணி முற்றிலும் மாறாமல் அப்படியே இருக்கும்.

ஆனா தமிழ் நாடகம் அப்படி இல்ல. பன்முகத் தன்மையோடு இருக்கு.

எங்கள் சென்னைக்கலைக்குழுவுக்கு ஒரு பாணி. கூத்துப்பட்டறைக்கு வேறு பாணி. பரிக்ஷா ஞாநிக்கு இன்னொன்று. அப்புறம் மங்கையோட மௌனக்குரல், மேஜிக் லேண்டர்ன், மு.ராமசாமி, ராஜீ, ஆறுமுகம், கே.ஏ.குணசேகரன், வேலுசரவணன், முருகபூபதி இப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பாணி. எல்லோருக்கும் முன்னோடியான ராமானுஜம் சாருக்கு தனித்த பாணி. இந்த பன்முகத் தன்மைதான் தமிழ் நாடகத்தோட சிறப்பு.

இது கேரளாவிலும் இல்ல. கர்னாடகாவிலும் இல்ல. இது உண்மைதான். ஆனா இந்த ஆற்றல்களையெல்லாம் கொண்டு தமிழ் நாடகத்தின் உண்மையான சவால்களை நாம் சந்திக்க தவறுகிறோம்.


கெளரவக் கொலைகளைத் தொடர்ந்து தற்கொலைகளும் தமிழகத்தில் அதிகரிப்பு

மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் தொகுதியான சிவகங்கையில் ஒருகிராமத்தில் பெண்கள் தற்கொலை செய்வது அதிகரித்து வருகிறது. கடந்த 2008 முதல் ஜூன் 2010 வரை மட்டும் இங்கு 39 பெண்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

அதேபோல அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் தொகுதியான ஆண்டிப்பட்டி இடம்பெற்றுள்ள தேனி மாவட்டத்தில் இதே காலகட்டத்தில் 82 பெண்கள் தற்கொலை செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் 90 பேரும், தூத்துக்குடியில் 136 பேரும் தற்கொலை செய்துள்ளனர்.

இவற்றில் பெரும்பாலானோர் குடும்பப் பிரச்சினைகள், ஜாதி விட்டு காதலித்ததால் ஏற்பட்ட காதல் பிரச்சினைகள் தொடர்பாக தற்கொலை செய்து கொண்டவர்கள்.மேலும் ஜாதிக்காக தற்கொலை செய்தவர்களும் கணிசமாக உள்ளனராம். அதாவது கெளரவ கொலைகளைப் போல கெளரவ தற்கொலைகளாக இவை வர்ணிக்கப்படுகின்றன.

எவிடென்ஸ் என்ற மதுரையைச்சேர்ந்த என்ஜிஓ அமைப்பு ஆர்டிஐ மூலம் இந்தத் தகவல்களைப் பெற்று வெளியிட்டுள்ளது.

மகள்

உலகத்தரமும் இந்திய மசாலாவும்

தீபாவளிக்கு வெடி வெடிப்பது போல்… கிறிஸ்துமசுக்கு பரிசு பரிமாற்றம் போல்… ரஜினி சினிமாவை முதல் நாள் பார்ப்பது போல்… சனிக்கிழமைதோறும் கிளாசிக் திரைப்படம் போடுவது வழக்கம். மகளுக்கு உலக சினிமா பரிச்சயத்தை விட, தமிழ் கலாச்சாரத்தை திரைப்படம் மூலமாகவே சொல்லிவிடுவது என சபதம்.

‘அன்பே சிவம்’ ஓடுகிறது. குலத்தில் கல்லெறிகிறார். பாலா வருகிறார். மகள் உடனே கேட்கிறாள்: ‘இவளை கல்யாணம் செய்து கொள்ளத்தான் மாதவன் செல்கிறாரா?’

தமிழ் சினிமா இவ்வளவு எளிமையான புரிதலுடன் இயங்குகிறது என்பதை அறிந்து கொண்ட மகிழ்ச்சி அதிர்ச்சியா? அல்லது தென்னகத்தின் ஆஸ்கார் நாயகன் ஆக்கமே ஸ்டீரியோடைப் வார்ப்புருவில் அடைபட்டதை தெரிவித்த வருத்தமா?

“பேசாமல் படம் பாரு”


வீட்டிலிருந்தே வேலை

பி.பி.எஸ். நிகழ்ச்சியின் முன்னோட்டம் டிவியில் ஓடுகிறது. எனக்குப் பிடித்த ஃப்ரன்ட்லைன். அவளுக்குப் பிடிக்காத போஸ்ட் மார்ட்டம்.

டாக்டர் பற்றாக்குறை அறிந்த தகவல். Forensic pathologist கிடைக்காமல் இருப்பது புதிய தகவல்.

‘கம்ப்யூட்டரைக் கட்டிக் கொண்டு மாரடிப்பதற்கு பதில் இந்த மாதிரி தொழில் மாத்திக்க ஏதாவது கத்துக்கலாம். புதுசாகத் தெரிஞ்சுக்கற ஆர்வமும் இருக்கும்; நிலையான சம்பாத்தியமும் வரும்போலத் தோணுது.”

“என்ன வேணா செய் அப்பா… Snow Dayன்னு சொல்லிட்டு, வீட்டுக்கு மட்டும் பொணத்த எடுத்துண்டு வந்துடாதே!”


முந்தைய பதிவு: அமெரிக்காவில் தமிழ் வாத்தியாரும் தேஸி மாணவரும்

போதையில் அமிழும் சீனாவும் வேலையில்லா திண்டாட்டம் நிறை கியூபாவும்

1. Self-immolation as protest

உடன்கட்டை ஏறின ‘சதி’ காலம் முதல் தீக்குளிப்பது இந்திய கலாச்சாரம். ஈழத் தமிழருக்காக முத்துக்குமாரின் அர்ப்பணிப்பு வீணாகியது. ஆனால், டுனீசியாவில் ஜனாதிபதி போய், பிரதம மந்திரி ஆட்சி பிடித்துள்ளார்.

இந்தக் கட்டுரை ஹங்கேரி, தென் கொரியா, ஜப்பான் நாடுகளிலும் நடக்கும் தீக்குளிப்பை கேள்வி கேட்கிறது. நியாயமான கோரிக்கைக்காக தற்கொலை செய்து கொள்வது அறமா?


2. Cuba Issues Thousands Of Self-Employment Licenses

தமிழ்நாட்டில் ஆட்சி மாறி அதிமுக அரியணை ஏறினால், அரசு ஊழியருக்கு கெடுபிடி அதிகமாகும். ஆனால், காஸ்ட்ரோ ஆட்சி மாறாவிட்டாலும் கியூபாவில் ஐந்து லட்சம் அரசு ஊழியர்களை வேலைநீக்கம் செய்கிறது சோஷலிஸம்.

கவர்ன்மென்ட் பணிநீக்கத்தை ஈடுகட்டுவதற்காக 75,000 புதிய தொழில் முனைவர்களுக்கான உரிமங்களைக் கொடுக்கிறது கம்யூனிச க்யூபா. ஏற்கனவே, கள்ளச்சந்தையில் அதிகாரபூர்வமற்று செயல்பட்டவருக்கே, அத்தனை லைசன்சும் சென்று விட்டது. அதனால், அரசுக்கு வரி கட்டவேண்டும் என்பது தவிர, புதிதாய் பிசினஸ் முளைக்காது.

திடீரென்று பத்து சதவிகித பாட்டாளிகள் ரோடுக்கு அனுப்பப்பட்டால் என்னவித விளைவுகள் நேரும்?


3. Trash hotel

குப்பையை வைத்து உருவாக்கிய பொருட்களை ‘பாய்ஸ்’ படப் பாடல் ‘பூம் பூம்’ போல் உதவாக்கரை விஷயங்களை வகித்தே உருவான ஹோட்டல்.


4. Cameroon battles brain drain

80களில் படித்த இந்தியாவின் பெருங்கவலைகளில், ‘ப்ரெயின் ட்ரெயின்’ முக்கிய இடம் பிடித்தது. இன்று அமெரிக்காவே அவுட்சோர்சிங் பேதியும் கணினி ஏற்றுமதி பீதியிலும் அல்லலுறுகிறது. ஆனால், கேமரூனின் பதினைந்து சாலர் சம்பளத்தை விட்டுவிட்டு, மருத்துவர் கப்பலேறிப் போய்விடுகிறார்களாம்.


5. Drug use growing in China

வளர்ந்த நாட்டுக்கான அறிகுறி என்ன?
அ) 1.76 லட்சம் கோடி ஊழல்
ஆ) போதை ஏற்றுமதி பிரச்சினையை விட இறக்குமதி விசுவரூபம் எடுப்பது
இ) அமைதிக்கான நோபல் பரிசு பெறுவதை விரும்பாதது


6. A 2000-year-old business

நாடி ஜோசியம், ஏடு பார்த்தல் வரிசையில் தாயாதி முறை, செட்டியார் ஒன்பது வீடு தொடர்ச்சியாக தங்களின் 72 குடும்பத்தினரின் கிளைகளை யேசு கிறிஸ்து பிறந்த காலத்தில் இருந்து பாதுகாத்து, மெயின்டெயின் செய்து வருபவர்களின் கதையை சொன்னார்கள்.


விகடன் விருதுகள் – 2010

விகடன் அவார்ட்ஸ் 2008

துவக்கத்தில் கணையாழி கடைசிப் பக்க எஸ்.ஆர். கொடுத்து வந்தார். அப்புறம் கற்றதும் பெற்றதும் சுஜாதா கொடுத்தார். இப்பொழுது ஆனந்த விகடனே வழங்குகிறது. உயிர்மையும் ‘சுஜாதா விருது’ கொடுக்கிறது.

அவற்றில் சில:

1. சிறந்த கதை – வசந்தபாலன் :: அங்காடித் தெரு

2. சிறந்த வசனம் – சற்குணம் :: களவாணி

3. சிறந்த சிறுகதைத் தொகுப்பு – தேவதைகளின் தீட்டுத்துணி :: யோ கர்ணன்

யோ.கர்ணனின் ‘தேவதைகளின் தீட்டுத்துணி’ சிறுகதைத் தொகுதிக்கான அறிமுகத்தை நிழ்த்தும் எஸ்.எழில்வேந்தன்

முள்ளிவாய்க்கால் கால வன்னியில் துயருற்றுழன்ற இறுதிப்போரின் காலகட்டம்

சிறந்த கவிதைத் தொகுப்பு – அதீதத்தின் ருசி :: மனுஷ்யபுத்திரன்

4. சிறந்த நாவல் – மில் :: ம காமுத்துரை (உயிர்மை பதிப்பகமும் சுஜாதா அறக்கட்டளையும் இணைந்து அறிவித்த சுஜாதா 2010 விருதும் வாங்கியது; தேர்வு: வாஸந்தி)

5. சிறந்த கட்டுரைத் தொகுப்பு – கலாப்ரியா :: நினைவின் தாழ்வாரங்கள் (உயிர்மை சுஜாதா 2010 விருதும் வாங்கியது; தேர்வு: பிரபஞ்சன்)

6. சிறந்த சிற்றிதழ் (சிறு பத்திரிகை) – Dr.G.சிவராமன் :: பூவுலகு  (சுஜாதா 2010 விருதும் வாங்கியது; தேர்வு: திலீப் குமார்)

7. சிறந்த மொழிபெயர்ப்பு – ரெட் சன் :: நக்சல் பகுதிகளில் ஒரு பயணம் – சுதீப் சக்கரவர்த்தி :: அ இந்திரா காந்தி – எதிர் வெளியீடு (RED SUN Travels in Naxalite Country By Sudeep Chakravarti – Penguin/Viking, Pages: 352; Price: Rs 495)

உலகத்தின் மிக வலுவான ஆயுதம் தாங்கிய தீவிர இடதுசாரி மக்கள் இயக்கம், மத்திய இந்தியாவின் தண்டகாரண்யா காடுகளில் இயங்கும் மாவோயிஸ்ட்டுகள்தான். அடர்ந்த காடுகளைத் தலைமை இடமாகக்கொண்டு இயங்கும் மாவோயிஸ்ட்டுகளின் நோக்கம், இந்தியாவைத் துண்டாடுவது அல்ல. மக்களை நேசிக்கும் ஓர் அரசைக் கொண்டுவருவதே. இந்தியாவில் புரட்சி என ஒன்று நடக்குமானால் அதற்குத் தலைமை ஏற்பது தண்டகாரண்யாதான். இவற்றை நேரடியாக தண்டகாரண்யா காடுகளுக்குச் சென்று தன் பயண அனுபவத்தின் மூலமாகக் கண்டறிந்து ‘ரெட் சன்’ என நூலாக எழுதி இருக்கிறார் பத்திரிகையாளர் சுதீப் சக்கரவர்த்தி.

பத்திரிகையாளரான நூலாசிரியர் மாவோயிஸ்டுகளின் ஆதிக்கம் உள்ளதாகக் கூறப்படும் பகுதிகளில் பயணம் செய்து பலரைச் சந்தித்து, அங்குள்ள நிலைமைகளை நேரில் கண்டு எழுதப்பட்ட நூல். மாவோயிஸ்டுகளின் தோற்றத்தையும், வளர்ச்சியையும், அவர்களின் இன்றைய நிலையையும் மிகத் துல்லியமாக நூல் படம்பிடித்துக் காட்டுகிறது. “மாவோயிசம் நமது நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்பை அச்சுறுத்தும் மிகப் பெரிய பிரச்னை அல்ல; மாறாக ஏழ்மை, சரியான ஆட்சியின்மை, மோசமான நீதி மற்றும் ஊழல்தான் நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்பிற்கான அச்சுறுத்தல்கள் ஆகும். ஒருநாடாக, இந்திய அரசு செய்வதற்குத் தவறியவற்றைப் பிரதிபலிக்கும் வெறும் கண்ணாடி மட்டும் இந்திய மாவோயிஸ்ட்கள்’ என்ற அடிப்படையில் பல விவரங்களை நூல் தருகிறது. சமகாலத்தில் நாம் எதிர்கொண்டிருக்கும் மிக முக்கியமான ஒரு பிரச்னை பற்றிய விரிவான ஆய்வாக, தகவல் களஞ்சியமாகத் திகழும் குறிப்பிடத்தக்க நூல்.

8. சிறந்த வெளியீடு – தமிழினப் படுகொலைகள்: 1956-2008 :: மனிதம் வெளியீட்டாளர் (வலை | புத்தக பிடிஎஃப்)

9. சிறந்த பின்னணிப் பாடகர்: பென்னி தயாள் (ஓமணப் பெண்ணே – விண்ணைத் தாண்டி வருவாயா)

10 Similes between Politician Rahul Gandhi & Actor Rajinikanth

ராகுல் காந்தி ரஜினிகாந்த்
தளபதிக்கு பிரதம மந்திரியாகும் வயசு ஹீராவாக நடிக்கும் வயசு
இத்தாலி நாட்டு குடும்பத்தில் பிறந்தவர் மகாராஷ்டிர குடும்பத்தில் கர்நாடகத்தில் பிறந்தவர்
இந்திய அரசியலை மறுத்து, வெளிநாடு சென்றதாக செய்தி வந்ததுண்டு தமிழ் சினிமாவை வெறுத்து, மருத்துவமனையில் ஓய்வெடுத்ததாக செய்தி உண்டு
சொந்தமாக முனைந்ததில் பிகார் போல் பின்னடைவுகள் எக்கச்சக்கம். சொந்தத் தயாரிப்பில் ‘வள்ளி‘ ஃப்ளாப்
‘கரீபி ஹடாவோ’ கோஷங்கள் ரீமேக் செய்கிறார் அமிதாப் படங்களை தமிழ் சினிமாவுக்கு ரீமேக் செய்தார்
கொள்ளுத் தாத்தாவைப் போல் ரஷியாவின், சீனாவின் நண்பர் ஜாக்கி சானை விட ஜப்பானின் புகழ்பெற்ற நடிகர்
ஞாநி, மாலன் போன்ற அறிவிஜீவிகளின் பழக்கமுண்டு துக்ளக் ‘சோ‘ போன்ற அரசியல்வாதிகளின் சகவாசமுண்டு
ஸ்பெட்ரம் 2ஜி, ஆதர்ஷ், ஐபிஎல் இருந்தாலும் மீடியா திரையில் மிஸ்டர் க்ளீன் இமேஜ் எந்திரனுக்கு ஐம்பது கோடிக்கு மேல் சம்பளம் வாங்கினாலும், கருப்பு பணம் தகர்க்கும் சிவாஜி வெள்ளித்திரை இமேஜ்
ஏழையின் குடிசைக்கு விசிட் அடிப்பார் சாமியாரின் இமயமலைக்கு போய் வருகிறார்
திமுக, அதிமுக – எந்தப் பக்கம் சாய்வார் என்று யாருக்கும் தெரியாது அமலா பால், ஹன்ஸிகா மொட்வானி – எந்த ஹீரோயின் தேர்ந்தெடுப்பார்?

முந்தைய ஒப்புமை:
10 Similes between Writer Charu Nivethitha & Actor Kamalhasan

அமெரிக்காவில் தமிழ் வாத்தியாரும் தேஸி மாணவரும்

தலைப்பை விட சிறிய பதிவு. மகளுக்கு தமிழ் கற்றுக் கொடுக்கிறேன். அவள் எழுதிய கடிதத்தின் முதல் வரி:

நான் பெபொ த்த டம்ர்ல பனன் ர்கன்

அவள் படித்துக் காட்டியது:

நான் இப்பொழுது இதைத் தமிழில் பண்ணி இருக்கிறேன்.

முந்தைய பதிவுகள்:
1. சூப்பர் ஸ்டார் யாருன்னு கேட்டா?
2. இந்தியாவைப் பற்றி வரைக
3. வெற்றிகரமான நூறாவது நாள்
4. ஔவையார் வேஷம்: நியு இங்கிலாந்து தமிழ் சங்கம்
5. Dasavatharam – Eight Year old’s Take

மீண்டும் இகாரஸ் பிரகாஷ்

குமுதம் விகடனில் முக்கியமானவர் சுஜாதா; ஆனால், சூட்சுமகர்த்தா ரா கி ரங்கராஜன். காலச்சுவடு உயிர்மைகளில் சுந்தர ராமசாமியும் மனுஷ்யபுத்திரனும். இணையத்தில் ரோசாவசந்த் அண்ட் பிரகாஷ்.

கருநீலப் புடவை. கழுத்திலே சாஃப்ட்வேர் தாலி எழுதி ரி-என்ட்ரி தந்திருக்கிறார் ஐகாரஸ்.

நண்பரை சந்திச்சப்ப சொன்ன விஷயமும் நினைவுக்கு வந்தது.

‘முன்ன எல்லாம் பஸ் ஸ்டாண்டில் பொண்ணப் பார்த்தா “லட்சணமா இருக்காளே”ன்னு தோணும், அன்னிக்கு ராத்திரி ஒன்பது மணிக்கு நிக்கிறப்போ, “இவ வீடு எங்கே இருக்கோ? பத்திரமா போய் விடுவாளா?”ன்னு தோணிச்சு. கொஞ்சம் பெருமையாகவும் உடனே இருந்துச்சு. நமக்கும் வயசுக்குரிய சிந்தனை வருது. சாரு மாதிரி இன்னும் இளமையா மைனர் லுக் விடலியேன்னு ஏக்கமும் வந்தது’

‘கல்கி வளர்த்த தமிழ்’ படிக்கிறேன். அதில் வரும் கவலைகளும் நிகழ்வுகளும் சிந்தனைகளும் இன்றும் பொருந்துகின்றன. நமக்கு பல்லவன்; அவருக்கு டிராம்.

சிறுகதை மாதிரி எழுத முயன்றதாலோ; அல்லது ஒரு வருட அஞ்ஞாதவாசமோ அவரின் துள்ளல் நடை மிஸ்ஸிங்.

ஒரெயொரு பொதுப்படையான அபிப்பிராயம்:
‘என்பது’, ‘என்று’ – என்பது கெட்ட வார்த்தை; நாம் நிறைய போடுகிறோம். தவிர்க்கலாம்.

வாழ்த்துகள்.

இகாரஸ் குறித்த முந்தைய சில:
1. Chat Meet – Icarus Prakash
2. குணச்சித்திரம் : ஐ(இ)காரஸ் பிரகாஷ்
3. Icarus Prakash Notes from RKK – Rayar Kaapi Klub
4. குழுமங்களிலும் வலைப்பதிவுகளிலும் என்ன எழுதலாம்?

அகவை – உடல்நலமும் தேடல்வயமும்

“அம்மாவிற்கு உடம்பு சரியில்லை.”

“எவ்வளவு வயாதாகிறது?”

வயோதிகத்தை சொல்வதற்கு வயது பயன்படும்.

விருது கிடைத்தால் ‘எத்தனை காக்கா பிடித்தீர்கள்?’ கேட்போம். ஐ-பாட் பழுதடைந்துவிட்டால், ‘எத்தனை ஆண்டுகள் பழையது?’ வினவுவோம். புத்தகத்தின் பக்க எண்ணிக்கை போல், ட்விட்டரின் ஃபாலோயர்ஸ் தொகை போல், சீக்காளிக்கு முடிந்துவிட்ட ஆண்டுத்தொகை, மன அமைதியைத் தருகிறது.

“இன்னாருக்கு மேலுக்கு முடியவில்லை” என்று சொல்லிப் பாருங்கள். மூத்திரக்குழியில் இருந்து விலகிவிட்ட சிறுநீரை அவசர அவசரமாக மீண்டும் குறி பார்த்து அடிக்கும் வேகத்துடன் அடுத்த கேள்வி வந்து விழும்.

“எம்புட்டு வயசு?”

கேள்வியை சாமர்த்தியமாக் திசை திருப்ப முயற்சிக்கலாம். பலனில்லை…

“எங்கப்பாவிற்கு எழுபத்திரண்டாகிறது. தினசரி காலங்கார்த்தாலே ஆறரை மணிக்கு நாகேஸ்வரா பார்க்கில் வாக்கிங். அதுவே மாமனாருக்கு அறுப்பதிஏழுதான். வாயு பிரிவதற்காக நாட்டு மருந்து போட்டுக் கொள்கிறார். ப்ரெஷருக்கு பத்து மணிக்கொண்ணு; சாயங்காலம் ஆறு மணிக்கொண்ணு முழுங்கறார். அதனாலதான் கேட்கிறேன். எவ்வளவு ஆகுது?”

விட மாட்டார். அதுவரைக்கும் எப்பொழுது பிறந்தநாள், எத்தனாவது பிராயத்தில் அமெரிக்க பிரயாணம் எதுவும் எழாது. டெமோ கொடுக்கும்போது சங்கடப்படுத்தும் சாஃப்ட்வேர் போல், நமது சங்கடத்தை சொன்னவுடன் மட்டுமே ஒப்பிடுவதற்காகவோ, ஆற்றுபடுத்துவதற்காகவோ விடாக்கண்ட வினாத் தொடரும்.

சம்பந்தப்பட்டவரின் அகவை, அறுபதைத் தாண்டிவிட்டால் லைஃப் எக்ஸ்பெக்டன்சி அளவுகோலைத் தொட்டு விட்ட திருப்தி கிடைத்து விடுகிறது.

உண்மையை சொல்லும்போதெல்லாம் நம்மை நல்லவர்களாக உணரச்செய்யுமளவுக்குக் கொடூரமானதாக உள்ளது இந்த வாழ்க்கை.
– ஜெயமோகன், வாழ்வினிலே ஒரு முறை

இயக்குநர் கே பாலச்சந்தருக்கு விழா மேடை ஏறுவதற்கு உதவி தேவையா? ‘விக்கியைத் தேடு; பிறந்த வருடம் கண்டுபிடி!’ ஆணையிடுகிறது மனது.

எனக்கு மட்டுமல்ல… தமிழருக்கே உரித்தானதுமல்ல… “Oh, well he lived a long life.” சொல்லி முத்தாய்ப்பு வைப்பதற்கான விருப்பம்.

Separated at Birth: Venkat spl.

இன்றைய இரட்டையர்களை காட்டிக் கொடுத்தவர்: வெங்கட்

அ) நடிகை த்ரிஷா & கேமரான் டயஸ்


ஆ) பட்டிமன்ற பேச்சாளர் ராஜா & மனோபாலா


இ) எழுத்தாளர்கள் விமலாதித்த மாமல்லன் & திலீப் குமார்


முந்தைய பதிவு: தமிழ் சினிமா | நடிகைகள் | வலைப்பதிவு | தொலைக்காட்சி | இலக்கியம் | வில்லன் | இயக்குனர் | அரசியல் | Thx to Blogeswari