Tag Archives: Awards

Review of Vikramadithyan Documentary | Vishnupuram Awards 2021

Vikramadithyan Documentary | Vishnupuram Awards 2021: ‘வீடும் வீதிகளும்’, 2021ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது பெறும் கவிஞர் விக்ரமாதித்யன் அவர்களைப் பற்றிய ஆவணப்படம் பார்த்தேன்.

சில எண்ணங்கள்:

1. துணையெழுத்து இல்லாமை: தமிழ்க் கவிஞரைப் பற்றிய அறிமுகப் படத்தில் வரும் உரையாடலை, உரையாடற் மொழியிலோ பிற வேற்று மொழியிலோ எழுத்து வடிவில் காட்டப்படும் உரை; ஆங்கிலத்தில் துணையுரை இல்லாமல் இருப்பது ஏமாற்றம் அளிக்கிறது.

2. அரை மணி நேரத்தில் முடிக்க வேண்டும் என்று அவசர கதியில் மிச்சம் மீதியைப் போட்டு செய்யும் வடகறி கொத்து பரோட்டா போல் வந்திருக்கிறது. வடகறி சுவையாக இருக்கும். ஆனால், இங்கே சாஸ்திரோப்தமான சூப், சிற்றுண்டி பலகாரம், தலைவாழை இலை சாப்பாடு, பீடா எல்லாம் எதிர்பார்க்கிறேன்.

3. இந்தப் படங்கள் எவரைக் குறிவைத்து எடுக்கப்படுகின்றன?

அ) தமிழ்க் கவிஞர்களை அதிகம் அறியாத தமிழ் தெரிந்தோர்

ஆ) விக்கிரமாதித்தனை நன்கு அறிந்தோர்

இ) தமிழ் இலக்கியத்தில் நிறைய பரிச்சயம் இருந்தாலும் விக்கிரமாதித்தனை அறியாதோர்

ஈ) தமிழ் புரிந்தாலும் எழுத/வாசிக்கத் தெரியாத தலைமுறை

உ) விஷ்ணுபுரம் வாசகர் வட்டம்

என்னை (இ) பிரிவில் வைத்திருக்கிறேன். என் மனைவியை (அ) பிரிவில் வைக்கிறேன். எங்கள் குழந்தைகளை (ஈ) பிரிவில் வைக்கலாம். இந்த மூவருக்குமே இந்தப் படம் எதையும் கொண்டு சேர்க்கவில்லை.

4. நான் எதை எதிர்பார்த்தேன் – இந்தப் படத்தில்?

i) தமிழ்க் கவிஞர்கள் – சுருக்கமான பாரம்பரியம்; எந்த இடத்தில் விக்கிரமாதித்தன் வருகிறார்?

ii) விக்கிரமாதித்தன் தோற்றமும் வளர்ச்சியும் – எவ்வாறு அந்தக் கவியாளுமை உருவானது?

iii) சமகால கவிஞர்களை எவ்வாறு அவர் ஊடுருவுகிறார்? அவரின் நெடிய இலக்கிய பயணத்தில் என்னென்ன மாற்றங்கள் தோன்றின?

iv) கவிஞரை வாசித்ததால் அவரவருக்கு என்ன கிடைத்தது? போகன் சங்கர், லஷ்மி மணிவண்ணன், வண்ணதாசன் – சுய அனுபவம் / நேர்மையான தன்மை நிலைப் பார்வை / அகப் பகிர்வு – இது இல்லாமல் பீடத்தில் இருந்து கொண்டு சொற்பொழிவாற்றுவது ‘ராஜாதி ராஜ ராஜ கவிராய ராஜ மார்த்தாண்ட ராஜ கம்பீர விக்கிரமாதித்தாய நமஹ!’ என அலறுகிறது.

5. அறிமுகமாக அந்த வீணை இசை மெல்லிய அபாரம். படம் முழுக்கவே சத்தமாக, “நான் இருக்கிறேன்!” என்று கத்தாமல், படத்தோடு இயைபான இசை.

6. ஏன் பேசுபவர்களின் பெயர்களை ஆங்கிலத்தில் போடுகிறார்கள்? பேசுபவர் யார், எங்கிருக்கிறார், என்ன எழுதியிருக்கிறார், ஏன் பேசத் தகுதியானவர் என்றெல்லாம் போட வேண்டும்.

7. கவிஞரைக் குறித்த ஜெயமோகனின் அறிமுகம் முகஞ்சுளிக்க வைத்தது. இன்னாரைப் பாராட்டி சீராட்டும் தருணத்தில் “சட்டையில்லாமல் வந்தார்! சண்டைக்காரராக முன்வந்தார்!!” என்று சொல்லிவிட்டு, “நான் எழுதியதுதான் அவரைப் பற்றிய முதல் கட்டுரை!” என்று ஜம்பமும் தட்டிக் கொள்வது உவ்வேக். கொஞ்சம் தன்னடக்கத்தோடு உரையாடியிருக்கலாம்.

8. இறுதியில் போடப்படும் பெயர் பட்டியல் – அகர வரிசைப்படி இருக்க வேண்டும். இது ஏதோ இலக்கிய அந்தஸ்து பீடம் போல் வயதை வைத்து போடப்பட்டிருக்கிறது.

9. ஒரே ஒரு பெண்ணாக சுபஸ்ரீ வந்து போகிறார். நன்றாகப் பேசினார்.

10. விக்கிரமாதித்தன் உரையாடலை இன்னும் தீவிரமாக ஆழமாக நடத்தியிருக்க வேண்டும். குடியோடு என்றால் குடியோடு. ஏழெட்டு நாள்கள் என்றால் அத்தனை பொறுமையோடு. அதன் பின் கத்திரி போட்டு ஆங்காங்கே கிடைத்த நறுக்குகளைக் கொண்டு அவரின் பேச்சு வந்திருக்க வேண்டும். இப்பொழுது ஏதோ தாதா சாகேப் பால்கே விருது பெற்ற ரஜினிகாந்த்தை வைத்து பொம்மை கோச்சடையான் எடுத்த மாதிரி தீட்டியிருக்கிறார்கள்.

ரேடியோபெட்டி – Radiopetti: Tamil Cinema

திரைப்படத்தை முன் வைத்து சில குறிப்புகள்:

1. நெட்ஃப்ளிக்ஸ்: இந்தப் படம் நெட்ஃப்ளிக்ஸ் மூலமாகப் பார்க்கக் கிடைக்கிறது. அரிதான தென்னிந்தியப் படங்கள் வரிசையில் இதை வைத்திருக்கிறார்கள். திதி, நிலா, ஒத்தாள், Revelations, விசாரணை என்று இந்தப் பட்டியலில் வித்தியாசமான கொத்துகளை சேர்த்திருக்கிறார்கள்.

2. சிங்கம்: இயக்குனர் ஹரி எடுத்த சிங்கம் படம் இப்படித்தான் போகும், நல்லதுதான் நடக்கும் என்று தெரியும். இருந்தாலும் பார்ப்போம். இந்தப் படத்திலும் இறுதியில் இப்படித்தான் முடியும் என்பது ஊகிக்க முடிகிறது.

3. குடும்பமா? சுயவிருப்பமா? : ’ரேடியோபெட்டி’ திரைப்படம் அருணாசலம் என்ற முதியவரை பற்றிய கதையாகும். அருணாசலம் தனது கடந்தகாலம் பற்றிய நினைவுகளில் மூழ்கி இருப்பவர். குறிப்பாக தனது அப்பா அளித்த ரேடியோவில் இளமைக்கால மெல்லிசை பாடல்களை கேட்பதில் மகிழ்பவர். தனது குடும்பம், மெல்லிசை ஆகிய இரண்டில் ஒன்றை அவர் தேர்வு செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. இரண்டில் ஒன்றை வாழ்நாள் முழுக்க இழக்க வேண்டும். அவர் எதை தேர்வு செய்வார் என்ற கதை களத்தை அடிப்படையாக கொண்ட திரைப்படமே ’ரேடியோ பெட்டி’.

4. பியூட்டி அண்ட் தி பீஸ்ட்: இந்தியக் குடும்பங்களில் ஆண் என்பவன் என்ன சிரமங்கள் கொடுத்தாலும் பொறுத்துக் கொண்டு போவது மனைவிகளின் கடமை. இதுதான் டிஸ்னியின் கதை. ஒரு ராட்சஸன் இருப்பான்; அவன் இருக்கும் இடமோ அடர்ந்த காடு; மக்களற்ற தீவாந்தரத்தில் வசித்தாலும் அவனின் இல்லத்தரசி அவனுக்கு சமைத்துப் போடுவாள்; சிசுருஷை செய்வாள்; அவளுக்கும் வயதாகி இருந்தாலும் அவனுக்கான தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றுவாள். ரேடியோபொட்டியும் அருணாச்சலம் என்னும் பீஸ்ட் ஒருவரின் கதைதான்.

4. விருது: தென் கொரிய பூஸான் திரைப்பட விழா போட்டி பிரிவிலும், ஸ்பெயின் திரைப்பட விழாவில் சிறந்த இசைக்கான விருதும் வென்ற படம். ரோமானியா திரைப்பட விழா உள்பட பல்வேறு விழாக்களில் பங்கேற்ற படம். பல காலமாக விருதுக்காகவே எடுக்கப்படும் ஹிந்திப் படங்கள், காஞ்சிபுரம், குட்டி போன்ற சமீபத்திய தமிழ்ப் படங்கள் பார்த்து வருகிறேன். இருந்தாலும் இது தமிழகத்தின் அசல் கதை, இந்தியாவில் மட்டுமே எடுக்கக் கூடிய படம் என்று எதுவும் பளிச்சிடவில்லை. இந்த மாதிரி முதியவர்கள் எங்கும் எப்போதும் காணப்படுகிறார்கள். ஒரு ஐம்பதாண்டுகளாக இந்த சப்ஜெக்ட் — பரிதாபமான அனாதரவான பெற்றோர் என்னும் தேய்வழக்கு உலாவருகிறது.

5. சூது கவ்வும்: விஜய் சேதுபதி நடித்து நலன் குமரசாமி எடுத்த இந்தப் படத்தைப் பார்த்திருப்பீர்கள். அதில் ”தாஸ்’ கதாபாத்திரம் தன்னுடன் அழகி ஒருத்தி உரையாடுவதாகக் கற்பனை செய்து உடன் வைத்திருக்கும். அந்த “ஷாலு”வுடன் பேசுவது பைத்தியம் என்று அழைக்க வைத்தாலும் தாஸ் என்பவன் அதை சகஜமாக எடுத்துக் கொள்வான். இங்கே “ரேடியோ பெட்டி”யிலும் அந்த மாதிரி மனச்சிக்கலை மையமாக வைத்து எடுக்கிறார்கள். ஆனால், ”சூது கவ்வும்” இதே போன்ற உளச்சிக்கலை இன்னும் நுட்பமாக ஆழமாகப் பதியுமாறு சர்வ சாதாரணமாகத் திரையில் காட்டிச் சென்றார்கள். ரேடியோபெட்டியில் அதை போட்டுடைத்துச் சொல்கிறார்கள். முன்னது திரைப்படத்திற்கு உகந்த அணுகல். இரண்டாமவது எழுத்திற்கு சாலச் சிறந்தது.

6. பழைய நினைப்புதான் பேராண்டி: நொஸ்டால்ஜியா என்பது சொர்க்கமா அல்லது மீள வேண்டிய நரகமா என்பது உங்களின் அனுபவத்தைப் பொருத்தது. இதில் தன் அப்பா, அவர் உபயோகித்த சின்னச் சின்ன விஷயங்கள், பழைய வேலை, பால்ய காலம், முதலில் பார்த்த வேலை, அந்த வேலையில் நெடுங்காலமாக கூட பயணிக்கும் சக ஊழியன் என்று ‘அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே! நண்பனே! நண்பனே! இந்த நாள் அன்று போல் இன்பமாய் இல்லையே அது ஏன்? ஏன்? ஏன்?

7. பொருள் என்பது பொருளல்ல? : இன்றைய ஐஃபோன், அல்லது செல்பேசியை எடுத்துக் கொள்வோம். இந்தக் கருவியை எங்கும் எடுத்துச் செல்லலாம்; எப்பொழுது வேண்டுமானாலும் நமக்கு என்ன பாட்டு வேண்டுமோ கேட்டுக் கொள்ளலாம். அது ஒரு இருப்பு சார்ந்த பொருள்.

நான் நிரலி எழுதுபவன். அதே செல்பேசியில் உங்களுக்கு இந்தப் பாட்டு பிடித்து இருந்தால், இன்னொரு பாட்டும் பிடிக்கும் என்று பரிந்துரை சொல்லும் மென்கலன் எழுதுவேன். அந்த ஐ-பாட் என்பது பாட்டு கேட்க என்பதில் இருந்து வேறு பல பயன்பாடுகளுக்குத் தகுந்தவாறு மாற்றுவேன். வெறும் பாட்டுப் பெட்டிக்கான கருவி என்றில்லாமல், புகைப்படங்கள் பார்ப்பதற்கோ மற்றொன்றிற்கோ கூட உருமாற்றி உபயோகமாகுமாறு வடிவம் தரவைக்கக் கூடிய பொருள்.

கடைசியாக பொருள் என்பது நம் அபிலாஷைகளுக்கு உருவம் தருகிறது. வினாயகரின் குட்டி விக்கிரகமாக இருக்கலாம், சிலுவையாக இருக்கலாம்; அது உங்களின் நம்பிக்கை சார்ந்தது. இந்தச் சிலுவையை இடியும் மின்னலும் கூடிய சமயத்தில் பிடித்துக் கொண்டால், அறிவியல்பூர்வமாக ஆபத்தாகக் கூட இருக்கலாம். ஆனாலும், ஆழ்மனம் சொன்னால் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு மழையில் இருந்து தப்பிக்க வைத்ததாகச் சொல்வோம். அருணாசலத்திற்கு ரேடியோபெட்டி அந்த மாதிரி உள்விருப்பம் சார்ந்த பொருள்.

இயல் விருது – 2015: கனடா தமிழ் இலக்கியத் தோட்டம்

ரவிச்சந்திரிகா

Jeyamohan_Writers_A_Muttulingam_Iyal_Awards_Tamil_Literary_Garden

கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் பதினைந்தாவது இயல் விருது விழா வழமைபோல ரொறொன்ரோவில் யூன் 13ம் தேதி ராடிஸன் ஹொட்டலில் நடைபெற்றது. இவ்விழாவுக்கு கனடிய எழுத்தாளரும் திரைப்பட இயக்குனருமான திரு டேவிட் பெஸ்மொஸ்கிஸ் கலந்து கொண்டு சிறப்பித்தார். இம்முறை வாழ்நாள் இலக்கிய சாதனைக்கான இயல் விருது பா. ஜெயமோகன் அவர்களுக்கு வழங்கப்பட்டது. நவீனத் தமிழின் முக்கிய அடையாளங்களில் ஒருவராகத் திகழும் திரு ஜெயமோகன் அவர்கள் நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள் விமர்சனங்கள், நாடகங்கள், சினிமா என பல தளங்களில் இயங்கிக் கொண்டிருக்கிறார்.

திரு ஜெயமோகன் தன்னைத் தீவிரமாகப் பாதித்த தனது பெற்றோர்களின் மரணங்களை நினவு கூர்ந்து, அதில் இருந்து தனது உரையை “வாழ்க்கையை ஒரு கணமேனும் வீணாக்காது வாழ்வது எப்படி?” என்று விரித்தெடுத்து பேசினார்.

கடுமையான மனக் கொந்தளிப்புக்கு ஆளாகி, தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்துடன் ரயில் தண்டவாளங்களில் நடந்து செல்கிறார். அற்புதமான சூரிய ஒளி பரவுகிறது. புதர்களில் ஒரு புழுவைக் காண்கிறார். ஒளி ஊடுருவும் உடல் கொண்ட புழு அது. அந்தத் தருணம் அதன் முழு உடலே ஒளியாக அதன் உச்சத்தை அவர் அறிகிறார். “உச்சகட்ட நெருக்கடியில் இயற்கை புன்னகைக்கும்” என்றுணர்ந்து “இனி ஒருபோதும் வாழ்வில் சோர்வடைவதில்லை. ஒரு கணத்தையேனும் வீணாக்குவதில்லை.” என்று அந்த நிமிடம் முடிவெடுக்கிறார். இன்று வரை பயணமும் எழுதுவதுமாக என் வாழ்க்கையை சோர்வின்றி வாழ்கிறேன் என்று குறிப்பிட்டார்.

. 1981 இல் உயர்கல்வியைப் பாதியில் நிறுத்தி இரண்டு வருடங்கள் துறவியாக அலைந்ததைக் கூறினார். காசியில் இருந்து டேராடூன் செல்லும் ரயிலில் தூங்கிக் கொண்டிருந்தபோது யாத்ரீகர்கள் பத்துப் பேர் ஏறுகிறார்கள். ஏறின கணம் தொடக்கம் கிருஷ்ணனைப் பாடுகிறார்கள். ரிஷிகேஷ் சென்று அடையும் வரை பாடிக் கொண்டே இருக்கிறார்கள்.

அவர்கள் அனைவரும் தம்மை ராதைகளாக உணர்கிறார்கள் என்று இவர் புரிந்து கொள்கிறார். எப்போதும் ஆடலும் பாடலும் கொண்டாட்டமுமாக இருக்கிறது அவர்கள் வாழ்க்கை. “தங்கத் தட்டில்தானே கிருஷ்ணமதுரம் வைக்க முடியும்” என்று அவர்கள் சொல்வது இவரிடம் ஒரு பெரிய மாற்றத்தை உண்டாக்கியதாக கூறினார். அன்றிலிருந்து சோர்வில்லாத, துக்கமில்லாத வாழ்க்கையை வாழுகிறேன். எப்போதும் பயணம் செய்வதும், எழுதுவதுமான வாழ்க்கை என்னுடையது என்று கூறினார்.

இயல் விருதைத் தொடர்ந்து மற்றைய விருதுகளும் வழங்கப்பட்டன:

  • புனைவு இலக்கியப் பிரிவில் “கனவுச்சிறை” நாவலுக்காக தேவகாந்தனுக்கும்
  • “நஞ்சுண்டகாடு” நாவலுக்காக குணா கவியழகனுக்கும்
    அபுனைவு இலக்கியப் பிரிவில் ‘கூலித்தமிழ்” நூலுக்காக முத்தையா நித்தியானந்தனுக்கும்,
  • “ஜாதியற்றவளின் குரல்” நூலுக்காக ஜெயராணிக்கும் விருதுகள் வழங்கப் பட்டன.
  • சிறந்த கவிதைத் தொகுப்புக்கான விருதை “மெசியாவுக்கு மூன்று மச்சங்கள்” நூலுக்காக கதிர்பாரதி பெற்றுக் கொண்டார்.
  • மொழிபெயர்ப்பு பிரிவில் “யாருக்கும் வேண்டாத கண்” நூலை மலையாளத்தில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பு செய்த கே வி சைலஜாவும்,
  • “Madras Studios – Narrative Genre and Idelogy in Tamil Cinema” நூலுக்காக சுவர்ணவேல் ஈஸ்வரன் பிள்ளையும் விருதுகள் பெற்றனர்.
  • மாணவர் கட்டுரைப் போட்டியில் சிறந்த கட்டுரைகள் இரண்டு தேர்ந்தெடுக்கப் பட்டு, வாசுகி கைலாசம், யுகேந்திரா ரகுநாதன் விருது பெற்றார்கள்.
  • சுந்தர ராமசாமி நினைவாக நிறுவப்பட்ட ’கணிமை விருது’ முத்தையா அண்ணாமலைக்கு வழங்கப் பட்டது.

இந்த விழாவுக்கு பல நாடுகளில் இருந்து எழுத்தாளர்களும், கல்வியாளர்களும் ஆர்வலர்களும் வருகை தந்து சிறப்பித்தார்கள். திருமதி உஷா மதிவாணனின் நன்றியுரையைத் தொடர்ந்து இனிய சிற்றுண்டி வழங்கப் பட்டு அந்தச் சனிக்கிழமை மாலை இனிதே நிறைவடைந்தது.

Jeyamohan_Writers_Author_Event_Iyal_Awards_Tamil_Literary_Garden


B. Jeyamohan who has made significant contributions in the last 28 years. He has written 13 novels, 11 short story collections and 50 essay collections. He has also penned scripts for Tamil and Malaiyalam movies Kasthoori Maan, Angaadith Theru, Naan Kadavul, Neer Paravai, Aaru Melukuvarththikal, Kadal, Kaaviya Thalaivan, Ozhimuri, Kaanchi, that were well received. The award was presented by Mr. David Bezmozgis. The award was sponsored by Bala Cumaresan and Vaithehi from the very inception of the organization.

In addition to the Lifetime Achievement Award, the following awards were also presented. Fiction awards went to Devakanthan for his novel ‘Kanavuchirai” and to Kuna Kaviyalakan for “Nachundakadu”. Nonfiction awards were given to Muthiah Nithiyananthan for his book ‘Kooliththamil” and Jeyarani for “Jaathiyatravalin Kural.” The Poetry award was given to Kathirbharathi for his collection of poems ‘Mesiyavukku moondru machangal”

Award for ‘Information Technology in Tamil’ given in honour of Sundara Ramaswamy was awarded to Muthiah Annamalai and the student essay contest awards were shared by Vasuki Kailasam and Yugendra Ragunathan. The translation awards were given to K. V. Shylaja for ‘Yaarukkum vendatha kan” translated from Malaiyalam to Tamil and Swarnavel Eswaran Pillai for his book “Madras Studios – Narrative Genre and Ideology in Tamil Cinema.”

Oscars 2015

Oscars
அக்டோபர் மாதம். முதல் தேதி. 2009ஆம் வருடம். சீனாவின் தலைநகரில் தேசிய தினம் கொண்டாடுகிறார்கள். என்னுடைய கல்லூரித் தோழன் பீஜிங் நகரத்து அடுக்கு மாடி விடுதியில் செப்டம்பர் மாதக் கடைசியில் இருந்தான். அப்பொழுதே ஒத்திகைகளை ஆரம்பித்து விட்டார்கள். விடுதியின் உப்பரிகையில் இருந்து ’வீடியோ அரட்டை செய்யலாமா’ எனக் கேட்டேன். அவன் பதிலோ, அதிர்ச்சி கலந்த பயத்துடன் ‘வேண்டாம்டா… சுட்டாலும் சுட்டுடுவாங்க!’ என்பதாக இருந்தது.

பீஜிங் நகரத்தில் இருந்த புறாக்கள் எல்லாவற்றையும், ஒன்று கூட விடாமல் கூண்டில் அடைத்து வைத்து இருந்தார்கள். பட்டம் பறப்பதற்கு அதிகாரபூர்வமாகத் தடை விதித்து இருந்தார்கள். தேசிய தினத்தன்று இந்தப் பக்கம் இரண்டு ஃபர்லாங்; அந்தப் பக்கம் இரண்டு ஃபர்லாங்கும் மூடி இருந்தது.

இந்த விழாவும் பவனியும் இன்றோ நேற்றோ உண்டானதல்ல. சிங் (Qing) வம்சாவழியினர் ஆண்ட 1644 முதல் 1912 வரை போர்களில் பெற்ற வெற்றி விழா ஊர்வலமாக இருந்தது. அதன் பிறகு கம்யூனிஸப் புரட்சியின் புண்ணியத்தில் தொலைக்காட்சிக்கு ஏற்றவாறு உலா நடத்துகிறார்கள்.

விழாவிற்கென்றே பிரத்தியேகமாக அழைக்கப்பட்டிருந்த, விவிஐபிக்களும், நிருபர்களும் மட்டுமே அணிவகுப்பை நேரடியாகப் பார்க்க முடியும். உள்ளுர்வாசிகள் எவரும் திருவிழா தேரோட்டத்தைப் பார்க்க இயலாது. தொலைக்காட்சியில் மட்டுமே ஒளிபரப்பாகும். சீன டிவி என்ன காட்ட விரும்புகிறதோ, அதை மட்டுமே பார்க்க இயலும். 1984ல் நடந்த விழாவில் ‘ஹலோ டங் ஷாவ்பிங் (Deng Xiaoping)’ என்னும் பதாகையை படம் பிடிக்குமாறு அறிவுறுத்தப் படாததால், தொலைக்காட்சிக் குழுவினர் தவிர்த்துவிட்டனர். கட்சித்தலைமை, அந்தப் பதாகையை வைத்திருந்தவர்களை வெட்டி ஒட்டி சேர்த்துக் கொள்ளுங்கள் என்றவுடன், தனியாக படம் பிடித்து, நடுவே கோர்த்து ஒளிபரப்பிவிட்டார்கள்.

2009ல் நடந்த தேசிய விழாவின் சிறப்பசம் என்னவென்றால் ’பீஜிங் பெண்கள் படை’ நடத்திய நேர்த்தியான அணிவகுப்பு ஆகும். முட்டியைத் தொடாத சிக்கென்ற சிவப்பு குட்டிப் பாவாடைகள்; முட்டி வரை நீளும் வெள்ளை சப்பாத்துகள். ”இராணுவத்தில் இத்தனை பதின்ம வயது பதுமைகளா!” என சீனாவிற்கு குடிபெயர நினைக்க வைக்கும் வார்ப்புருத் தோற்றம் கொண்டவர்கள். கொஞ்சம் நாள் தீவிரமாக ஆராய்ந்ததில் அத்தனை பேரும் மாடல் நடிகர்கள் எனத் தெரிய வந்தது.

இவ்வளவு கோலாகலத்திற்கும் நடுவே கோட்டு சூட்டு போட்ட ஜூ ஜின்டாவ் (Hu Jintao) பந்தாவான படகுக் காரில் வந்தார்.

ஆஸ்காரும் இதே போல்தான். கோட்டு சூட்டு போட்டு நீல் பாட்ரிக் ஹாரிஸ் வந்தார். நிறைய பேர் நடனம் ஆடினார்கள். பாடினார்கள். கௌரவிக்கப்பட்டார்கள். நான் டால்பி தியேட்டருக்கு செல்லவில்லை. லாஸ் ஏஞ்சலீஸ் பக்கத்தில் கூட வசிக்கவில்லை. தொலைக்காட்சியில் என்ன காண்பிக்கப்பட்டதோ அதைப் பார்த்தேன். அந்த ஆஸ்கார் நிகழ்வுகள் எல்லாமே கடும் ஒத்திகைக்கு உட்பட்டது. சொதப்பல்கள் கூட நேர்த்தியான நடிப்புகளோ என எண்ணவைக்குமளவு இயல்பாக அரங்கேறும் நிகழ்வைப் பற்றிய குறிப்புகள்:

”எப்பொருள் யார் யார் வாய் எங்கெங்குக் கேட்பினும் அப்பொருளை தரவாக்கி ஆராய்வது அறிவு” என்னும் வள்ளுவப் பெருந்தகையின் குறளுக்கேற்ப, ஹார்வார்டு மாணவன் பென் (@BensOscarMath) யார் வெற்றி பெறுவார்கள் என்பதை ஆருடம் சொல்லியிருந்தார். அவர் சொன்னதற்கேற்பவே அனைத்து விருதுகளும் (ஓரிரண்டைத் தவிர) அமைந்தும் இருந்தன.

எனவே, ஆஸ்கார் பரிசை வென்றவர்களில் பெரிய ஆச்சரியங்கள் காத்திருக்கவில்லை.

ஆஸ்கார் பரிசுக்கான பரிந்துரைப் பட்டியலில் இடம்பெறுவதெற்கென்று சில சாமுத்ரிகா இலட்சணங்கள் இருக்கின்றன. முதலாவது அமெரிக்க பாசம். நீங்கள் எடுக்கும் படம் அமெரிக்கரின் நேர்மையையும் தேசத்தையும் அறத்தையும் பாட வேண்டும். இரண்டாவது நகைச்சுவை கேளிக்கைப் படமாக இருக்கக் கூடாது. சொல்லும் விஷயத்தை உருக்கமாக, சோகமாக, கோபமாக சொல்ல வேண்டும். கடைசியாக நிஜத்தில் நடந்ததைத் தழுவி, உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தால் இன்னும் அதிக வாய்ப்பு.

இது பரிந்துரைப் பட்டியலில் வருவதற்கான முஸ்தீபுகள். பரிந்துரையில் ஐந்து அல்லது ஆறு பேர் இடம்பிடிக்கிறார்கள். அவர்களில் இருந்து விருது பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும்?

முதலில் வாக்களிக்கும் அகாடெமி உறுப்பினர்களை நன்கு கவனிக்க வேண்டும். அவர்களுக்கு, உங்கள் படத்தின் அருமை பெருமைகளை விளக்கமாகச் சொல்ல வேண்டும். ஒவ்வொரு காட்சிக்கும் எவ்வளவு உழைப்பு தேவைப்பட்டது என்பதை விலாவாரியாக ஊடகங்களில் பேட்டியாகத் தர வேண்டும். எல்லா பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளிலும் அலசல்களும், ஆராய்ச்சிகளும் இடம்பெற வைக்க வேண்டும். பிரச்சாரமும் அன்பளிப்பும் எவ்வளவு வலுவாக இருக்கிறதோ, எத்தனைக்கு எத்தனை பரவலாக கொடுக்கப்படுகிறதோ, அத்தனைக்கு அத்தனை வெற்றி வாய்ப்பு அதிகரிக்கிறது. (மேலும் வாசிக்க: The Average Oscar Campaign Costs $10 Million, And Other Oscar Facts)

இரண்டாவதாக உங்களின் வயது. சாகப்போகிற வயதில் உங்களுக்கு பரிந்துரை கிடைத்தால், ஆஸ்கார் விருது நிச்சயமாகக் கிடைத்துவிடும். இனிமேல், உங்களுக்கு இன்னொரு நல்ல படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்குமோ என்னும் பயம் ஒரு பக்கம் இருக்கும்; இன்னொரு பக்கம், இத்தனை ஆண்டுகளாக நடித்தும் ஆஸ்கார் வாங்காமல் இறந்துபோனாரே என்னும் பழி வரும் என்னும் நாணமும் அகாதெமி வாக்காளருக்குத் தோன்றும். எனவே, உங்களுக்கு அறுபதைத் தாண்டிவிட்டால், வெற்றி வாய்ப்பு பிரகாசம் ஆகும்.

கடைசியாக உங்களுக்கு ஏற்கனவே விருது தராமல் தவறவிட்டதற்கான பிராயசித்தம். ’மூன்றாம் பிறை’ எடுத்தபொழுது ”சிறந்த இயக்குந”ராக பாலு மஹேந்திராவைச் சொல்ல முடியவில்லையா? அதனால் என்ன… ”நீங்கள் கேட்டவை” எடுக்கும்போது கொடுத்துவிடுவோம் என்று முன்பு செய்த பிழைகளை நீக்கிக் கொள்வதற்கான பரிசாக சில சமயம் அமையும்.

heros_journey_cambell

Hero’s journey chart from Wikipedia

பார்த்தவுடன் அனுபவித்து ரசித்த பாய்ஹுட் திரைப்படத்திற்கு ஒரேயொரு விருது மட்டுமே கிடைத்தது. நமக்குத் தெரிந்த தூரத்து மாமா பையனுக்கு ஐஐடியில் இடம் கிடைக்காதது போல் லேசாக வருத்தமாக இருந்தது.

இந்த மாதிரி விருதுகளைத் தவறவிட்டவர்களுக்கு சிறந்த இயக்குநருக்காக ஆஸ்காரை வென்ற அலெக்ஸாண்ட்ரோ (Alejandro González Iñárritu) பேச்சு மருந்தாக அமைந்திருக்கும். “இன்று நீங்கள் விருதுகளாகக் கொடுத்து என்னையும் என் படத்தையும் கௌரவித்தீர்கள். நன்றி. உங்கள் அன்பிற்கு தலைவணங்குகிறேன். இன்று நிறைய விருதுகளைப் பெறும் படம் புகழ்பெறலாம்… பெறாமலும் போகலாம். காலம் மட்டுமே ஒரு படைப்பின் நீதிபதி. எந்தப் படம் செல்வாக்குடன் இருக்கிறது என்பதை இருபதாண்டுகள் கழித்து, கொஞ்சம் நாள் கழித்துப் பார்த்தால் மட்டுமே தெரிகிறது.”

இண்டெர்ஸ்டெல்லார் திரைப்படத்திற்கு ஆஸ்காரில் இடம் கிடைக்காத வருத்தத்தை, ‘பர்ட் மேன்’ (Bird Man) படப் பேச்சு நிவர்த்தி செய்தது. சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த படத்தொகுப்பு என எந்த முக்கிய விருதுக்கான ஓட்டத்திலும் இன்டெர்ஸ்டெல்லர் இடம்பெறவில்லை. தந்திரக் காட்சிகள், அரங்க அமைப்பு, இசை, இசைக்கலவை என ஆறுதல் பரிசு போல் சிலவற்றில் தூவி இருந்தார்கள். (சொல்வனம் இதழில் ஜாவா குமார் இந்தப் படத்தைக் குறித்து எழுதிய கட்டுரை)

ஆஸ்கார் பட்டியலில் இடம் பெறாவிட்டால் என்ன… டிசம்பர் மாதத்திற்கான ’வயர்ட்’ (Wired) இதழ் இன்டெர்ஸ்டெல்லர் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலனை வைத்து தங்கள் இதழைத் தயாரித்து இருந்தார்கள். நோலன் இடது கைக்காரர். எல்லாப் பத்திரிகையையும் கடைசியில் இருந்துதான் படிக்க ஆரம்பிப்பார். அப்பொழுதுதான் சடசடெவென்று பக்கங்களை இடது கை கொண்டு புரட்ட முடியும். அந்த எண்ணத்தின் நீட்சியாகத்தான் ‘மெமண்டோ’ திரைப்படத்தை இறுதியில் இருந்து துவக்கினேன் என்பதில் பத்திரிகையைத் துவங்கி இருந்தார்.

இண்டெர்ஸ்டெல்லர் திரைப்படத்தை எடுக்க எட்வின் ஏ ஆபட் (Edwin A Abbott) எழுதிய தட்டையுலகம் (Flatland) நாவல் உந்துதலாக அமைந்து இருக்கிறது. அந்தக் கதையில் முப்பரிமாணத்தில் இயங்கும் விலங்கு ஒன்று இரட்டைப் பரிமாண உலகிற்குள் நுழைகிறது. டிவியில் பார்ப்பது இரட்டைப் பரிமாணம். முக்கோணம், வட்டம், சதுரம், மனித உடல் போன்ற அமைப்பு என்னும் வடிவங்கள் உண்டு. ஆனால், அந்த உலகில் இருப்பவருக்கு எப்படி முப்பரிமாணத்தை, கனசதுரத்தையும் உருளை உலகையும் விளக்குவீர்கள்? இதே போன்ற சிக்கலை நான்கு/ஐந்து பரிமாணமாக யோசிக்க வைப்பதே இண்டெர்ஸ்டெல்லர் கரு.

திரைப்படத்தில் முக்கிய பங்கு வகிக்கும் அந்த புத்தக அலமாரியில் ஒவ்வொரு புத்தகமும் கவனமாக பொறுக்கி எடுக்கப்பட்டிருக்கிறது. அவர் விரும்பிய நூல்கள்:

1. The Wasp Factory – Iain Banks
2. Selected Poems – TS Eliot
3. The Stand – Stephen King
4. Gravity’s Rainbow – Thomas Pynchon
5. Emma – Jane Austen
6. A Wrinkle in Time – Madeleine L’Engle
7. Labyrinths – Jorge Luis Borges

நிஜ மனிதர்களைக் கூட கணினி மூலமாக வரைபடமாக அசைவூட்டம் கொடுத்து கோச்சடையான் ஆக்கி விடும் தொழில்நுட்ப பிரும்மாண்டத்தின் நடுவில் இண்டெர்ஸ்டெல்லர் வந்து இருக்கிறது. இந்தப் படத்தில் வரும் ரோபாட்டுகள், விண்கலன்கள், ஆராய்ச்சி மையங்களின் ராட்சஸ எந்திரங்கள் போன்றவற்றை கணினி கொண்டு வரையாமல், மெய்யாக உருவாக்கி இருக்கிறார்கள். ரோபாட் இருப்பதாக நினைத்துக் கொண்டு பேசுவதை விட, இயந்திர மனிதன் உள்ள அறையில் அதனுடன் உரையாடுவது மேலும் நடிகரை மெருகேற்றும் என்கிறார் நோலன். திரைப்படத்தில் பிரளயம் வரும். கடுமையான பனிப் பிரதேசம் வரும். செங்குத்தான அதல பாதாளம் கூட தெரியாத வேற்றுகிரகங்கள் தோன்றும். அவை எல்லாம் கண்டுபிடிக்க எரிமலை வெடிக்கும் இடங்களையும் கண்டு அஞ்சாமல் பயணித்த கதையும் சுவாரசியமானது. ஆய்லரின் தேற்றம் என்று தீவிரமான அறிவியலும் உண்டு; இறந்தவர்களுடன் உரையாடல் என்று அமானுஷ்யங்களும் உண்டு.

அதெல்லாம் இருக்கட்டும். ஆஸ்கார் விருதுகள் குறித்து பேச வந்துவிட்டு இண்டெர்ஸ்டெல்லர் குறித்து ஏன் கதை அளக்க வேண்டும்? சிறந்த படத்திற்கான பட்டியலில் இண்டெர்ஸ்டெல்லர் இல்லை. இங்காவது கவனிப்போமே என்னும் நல்லெண்ணம் மட்டுமே காரணம் ஆகும்.

இண்டெர்ஸ்டெல்லர் படத்தைக் குறித்து கருந்தேள் ராஜேஷ் சிறப்பான கட்டுரைகள் எழுதி இருக்கிறார்.

அப்படியானால் யார் எல்லாம் சிறந்த ஹாலிவுட் படத்திற்கான போட்டியில் இருந்தார்கள்?

அ) அமெரிக்கன் ஸ்னைப்பர் – இது க்ளிண்ட் ஈஸ்ட்வுட் எடுத்த படம். தியேட்டர்களில் சக்கை போடு போட்டு மிகப் பெரிய வெற்றியும், மற்ற எல்லா ஆஸ்கார் படங்களும் சேர்த்தால் கிடைத்த லாபத்தை விட இரு மடங்கு பண வரவுக் கொழிப்பும், அவை எல்லாவற்றையும் விட சர்ச்சைகளையும் பெற்று இருக்கிறது. அப்படி என்ன சர்ச்சை? தொலைதூரத்தில் இருந்து, நூற்றி அறுபது இராக்கியர்களை, புறமுதுகில் சுட்டுக் கொன்றவரின் நிஜக்கதையை அடிப்படையாகக் கொண்ட திரைப்படம் இது.

ஆ) பர்ட்மேன் – பல ஆஸ்கார்களை வென்று குவித்த படம். சூப்பர் ஸ்டாராக உலா வந்த ஒரு புகழ்பெற்ற நடிகன், தன்னுடைய மதிப்பு வீழ்ந்த பிறகு எப்படி நடக்கிறான் என்பதை உளவியல் ரீதியாக ஆராய்கிறது.

இ) பாய்ஹுட் – இந்தப் படம் குறித்து நான் எழுதிய விமர்சனம்.

ஈ) தி கிராண்ட் புடாபெஸ்ட் ஹோட்டல் – வித்தியாசமான படம். இரண்டாம் உலகப் போர் காலத்து விநோத பழக்கவழக்கங்களும், விடுதி சிப்பந்திகளின் குணாதிசயங்களும், கொண்ட கொள்கையில் உறுதியாக இருப்பவர்களின் நேர்மையும் – துப்பறியும் த்ரில்லராக வந்திருக்கிறது.

உ) தி இமிடேஷன் கேம் – இரண்டாம் உலகப் போரில் ஆலன் டூரிங் ஆற்றிய பங்கை இந்தப் படம் சொல்கிறது. கூடவே, அவருக்கு இருந்த தற்பால் விழைவை முன்னிலையாக்கி, அதனால் அவர் சந்தித்த இடர்களைப் பேசுகிறது. ஒருவரின் வாழ்க்கையைச் சொல்லும் திரைப்படங்கள், அந்த நபரின் சம்பவங்களை நேர்மையாகச் சொல்ல வேண்டும். ஆனால், இந்தப் படம் கற்பனையாக ஜோடிக்கிறது என்று கடுமையான விமர்சனத்திற்குள்ளானது. (மேலும் வாசிக்க: Saving Alan Turing from His Friends by Christian Caryl | The New York Review of Books)

ஊ) செல்மா – கொஞ்சமே கொஞ்சம் லிண்டன் ஜான்ஸனை மனிதத்தன்மையுள்ள சாதாரணராகக் காட்டிவிட்டார்கள் என்பதற்காக மற்ற எல்லா விருதுகளிலும் இருந்து ஓரங்கட்டப் பட்ட படம். வெள்ளையர் வழிநடத்தல் இல்லாமல், மார்டின் லூதர் கிங் மட்டுமே முன்னிறுத்தப்படுவதால் சிறந்த இயக்குனர்/நடிகர் என எதிலுமே இடம் கிடைக்கவில்லை. ஆப்பிரிக்க-அமெரிக்கர்களை இரத்தம் வழிய அடித்ததை எல்லாம் அப்படியே காட்டுவதால் அசூயை வேறு எழுகிறது என விமர்சனத்திற்குள்ளானது.

எ) தி தியரி ஆஃப் எவரிதிங் – அறிவியலாளர் ஸ்டீஃபன் ஹாகிங் குறித்த படம். அமெரிக்கர்களுக்கு இது போன்ற எழுச்சிப் படங்கள் எப்பொழுதுமே பிடிக்கும். ஒரு மாமாங்கம் முன்பு நாஷ் என்னும் பொருளாதார மேதையையும் அவரின் உடலியல் சிக்கல்களையும் மீறி நோபல் பரிசு வென்றதையும் படமாக்கிய ‘A Beautiful Mind’ நிறைய பரிசுகளை வென்றது. அதே போல் இரண்டு வருடமே வாழ முடியும் என சொல்லப்பட்ட பின் ஐம்பதாண்டுகளாக ஆராய்ச்சியில் திளைக்கும் ஹாக்கிங் குறித்த திரைப்படம். அறிவியல் விஷயங்களைப் பற்றி இரண்டே இரண்டு காட்சிகளில் பேசிவிட்டு, அவரின் குடும்ப வாழ்க்கையை நிறையப் பேசி இருந்தார்கள். அவருக்கு எத்தனை குழந்தை பிறந்தது, உடல் ஊனமான பிறகும் எவ்வாறு குழந்தை பிறந்தது, அவரின் மனைவி இப்பொழுது எவருடன் வாழ்கிறார் என்பதை விலாவாரியாக காண்பித்து இருந்தார்கள். சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் பரிசை வென்றது.

ஏ) விப்லாஷ் – குறும்படத்தில் இருந்து உருவான படம். மூன்று பரிசுகளை தட்டிச் சென்றது.

சாதாரணமாக இத்தனை பேரின் சரித்திரங்கள் திரைப்படமாக வெளியானால், அந்த ஆஸ்கார் விழாவின் துவக்கம் சிறப்பாக இருக்கும். அத்தனை படங்களையும் ஒருங்கிணைத்து ஆடலும் பாடலுமாகத் துவங்கும். விழாவைத் தொகுப்பவரே ஆலன் ட்யூரிங் ஆக வருவார்; அடுத்த நிமிடம் ஸ்டீஃபன் ஹாக்கிங் போல் சக்கரவண்டியில் தோன்றுவார்; துள்ளி எழுந்து மார்ட்டின் லூதர் கிங் போல் சொற்பொழிவாற்றுவார். இந்த தடவை விழாவை ஒருங்கிணைத்த நீல் பாட்ரிக் ஹாரிஸ் அவ்வாறெல்லாம் வித்தியாசப்படுத்தவில்லை. தனக்கு இடப்பட்ட காரியத்தை செவ்வனே நிறைவேற்றினார். மொத்தமாக சொன்ன நாற்பத்தியெட்டு ஜோக்குகளில் ஓரிரண்டுக்கு சிரிப்பு கூட எட்டிப் பார்த்தது.

சிரிப்பை விட கண்ணீர் அதிகம் தென்பட்ட ஆஸ்கார் ஆக 2015 விழா அமைந்து இருந்தது. ‘செல்மா’ படத்தின் பாடலை ஜான் லெஜண்ட் (John Legend) என்பாரும் காமன் (Common) என்பவரும் பாடியது உருக்கமாக இருந்தது. தற்கால நிகழ்வுகளான ஃபெர்கூஸன் போன்ற செய்திகளையும் ஒருங்கிணைத்து பாடினார்கள். (மேலும் வாசிக்க: தொடரும் பன்னிரண்டாண்டுகள் – 12 Years a Slave, திரைக்கு அப்பால்)

இந்தப் பாடலின் போது க்ரிஸ் பைன் (Chris Pine) அழுததை வைத்துக் கொண்டு வெள்ளையினத்தவரின் இரக்கத்தையும் நல்லுள்ளத்தையும் ஊடகங்கள் பெரிதுபடுத்தியதா அல்லது செல்மாவில் மார்டின் லூதர் கிங் ஆக நடித்த டேவிட் (David Oyelowo) கண்களில் இருந்து கண்ணீர் கசிந்ததை தொலைக்காட்சி அதிக நேரம் காட்டியதா என்பதை ஸ்டார் விஜய் டிவியில் சாந்தலிங்க ராமசாமி அடிகளார் தலைமையில் பட்டிமன்றம் நடக்கும் என விஷயமறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அசைவூட்ட புகைப்படங்களுக்கு The 27 Most Important Moments From The Oscars
மேற்பட்ட வருணணைகளுக்குOscars 2015: All the winners, speeches, and best moments – Vox

யுவ புரஸ்கார் விருது பெற்ற பின்வினைப் பயன் என்ன?

Yuva_Puraskar_Natarjan_Abilash_Chandran_Sahitya_Academy_2014_Awards_Prizes_Tamil_Authors_Writers_Literature_Story_Fiction_Kids
எழுத்துத் துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கான சிறுவர் இலக்கியத்திற்காக ஆண்டுதோறும் வழங்கப்படும் பால சாகித்ய விருது, தமிழகத்தைச் சேர்ந்த விஞ்ஞான விக்ரமாதித்தன் கதைகள் என்ற படைப்பை எழுதிய இரா. நடராஜனுக்கும், 35 வயதுக்குள்பட்ட இளம் படைப்பாளிகளுக்கான ’யுவ புரஸ்கார்’ விருதுக்கு கால்கள் என்ற படைப்புக்காக, எழுத்தாளர் ஆர். அபிலாஷ் சந்திரனுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இருவருக்கும் வாழ்த்துகள்.

யுவ புரஸ்கார் விருதிற்கும் கணிதத்துறையில் சிறந்து விளங்குபவர்களுக்காக வழங்கப்படும் ஃபீல்ட்ஸ் மெடலுக்கும் ஒரு முக்கிய ஒற்றுமை உண்டு. கணித ஆராய்ச்சி பரிசு பெறுவதற்கு நாற்பது வயதிற்குள் இருக்க வேண்டும். சாகித்ய அகாதெமியின் இளவயது விருது பெற முப்பத்தைந்திற்குள் இருக்க வேண்டும். ஃபீல்ட்ஸ் மெடல் பெற்றால் ஒரு மில்லியன் அமெரிக்க டாலராவது கைவசம் கிட்டும். யுவ புரஸ்கார் கிடைத்தால் இருபத்தைந்தாயிரம் ரூபாய்கள் கிடைக்கிறது.

இரண்டு விருதுகளுமே தத்தம் துறைகளில் செயல்படுபவர்களை மேலும் ஆர்வத்துடன் இயக்கும் நோக்கத்தோடு உருவாக்கப்பட்டது. கணிதத்தில் என்ன உட்பிரிவில் விருப்பமோ, அந்தப் பகுதியில் பணத்தட்டுப்பாடின்றி ஆராயவும் நேரஞ்செலவழிக்கவும் ஃபீல்ட்ஸ் பதக்கம் தருகிறார்கள். பல்கலைக்கழகத்திடம் கையேந்த வேண்டாம். பெருநிறுவனத்தின் ஆமையும் முயலும் பந்தயங்களில் கலந்துகொண்டு நேரத்தை வீணடிக்க வேண்டாம். ஊர் ஊராகச் சென்று நிதி கேட்டு புரவலர்களை எதிர்நோக்க வேண்டாம். கணித மேதைகள் தேர்ந்தெடுத்து சாதித்த துறையில் மேலும் தீவிரமாக ஆராயவும், புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கவும் இந்த மில்லியன் டாலர் பரிசு உதவும்.

ஆனால், நடப்பது என்ன?

ஃபீல்ட்ஸ் பதக்கத்தை வெல்லாதவர்கள், இன்னும் ஆழமாக, புதியதாக, வித்தியாசமாக ஆய்வுகளையும் ஆராய்ச்சிகளையும் வெளியிடுகிறார்கள். ஃபீல்ட்ஸ் பதக்கத்தை வென்றவர்கள் வெளியிடும் ஆராய்ச்சிகளை விட கிடைக்காதவர்களின் ஆய்வேடுகள் எண்ணிக்கை அளவில் அதிகம் என்கிறார்கள். இது வரை பதக்கம் வென்றவர்கள் வெளியிட்டதையும் பதக்கம் வெல்லாதவர்கள் நாற்பது வயதிற்கு பிறகு வெளியிட்டதையும் Kirk Doran at Notre Dame and George Borjas at Harvard அலசினார்கள்.

பரிசு வென்றவர்கள் தங்களின் மூல ஆராய்ச்சியை விட்டு ஒதுங்கிவிட்டார்கள். தங்களின் திறமையை வேறு துறைக்கு கொண்டு செல்கிறார்கள். ஆனால், இந்தப் புதிய துறையில் புத்தம்புதியதாகக் கற்றுக் கொள்ளவும் புரிந்து கொள்ளவும் நிறைய நாளாகி இருக்கிறது. அதனால், அவர்களால், அதிக அளவு ஆழமான ஆராய்ச்சிகளை செய்யமுடிவதில்லை. பரிசு வெல்லாதவர்களோ, பண ஆதாரம் இல்லாத நிலையில், தங்களின் முதல் துறையிலேயே கவனமாக ஆராய்ச்சிகளைத் தொடர்ந்து இருக்கிறார்கள். அதனால், மென்மேலும் பல்வித புதிய எழுத்துகளை ஊக்கத்துடனும் புதிய தரிசனங்களுடனும் உண்டாக்க முடிந்திருக்கிறது.

இந்தியப் புனைவுலகில் ஒரு கதை எழுதியவுடனேயே ஒருவர் இலக்கிய விமர்சகராகவும் சமூக சிந்தனையாளராகவும் பீடம் போட்டுக் கொள்வதால், ‘யுவ புரஸ்கா’ருக்கு இந்த அபாயம் இருப்பதாகத் தெரியவில்லை.

Paradesi – FIR: Quick Review

பரதேசி பாலாவின் படம். டிஸ்னி படம், ஜேம்ஸ் பாண்ட் படம், குவெண்டின் டாரெண்டினோ படம் என்று சொல்வது போல் பாலாவின் படம் பார்த்து கொஞ்ச நாளாச்சு.

ஆறு படம்தான் செய்திருப்பவருக்கு டிரேட்மார்க் இருக்குமா?

கடவுள் நம்பிக்கையை வைத்து ஏமாற்றுபவரை நையாண்டி செய்வது; ஒடுக்கப்படுபவர்களின் பரிதாப நிலையை கதைக்களானாக்குவது; புதிய முகங்களை கதாபாத்திரங்களாக்குவது; இளகிய மனம் படைத்தோரையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் சமரசமில்லா காட்சியாக்குவது… இவை இயக்குநர் பாலா பட முத்திரைகள்.

வலிந்து திணிக்கப்பட்ட நகைச்சுவை; சிம்ரன் போன்ற அயிட்டம் பாடல்; இவை எல்லாம் முந்தையவற்றில் துருத்தி நிற்கும்; இங்கே காணோம். ‘பரதேசி’யின் ஒவ்வொரு பாடலையும் திரையில் காண்பித்த விதத்தில் பாலு மகேந்திராவின் கோர்வையும் மணி ரத்னத்தின் செதுக்கலும் ஒருங்கே கிடைக்கின்றன.

எஸ் ராமகிருஷ்ணன் வசனம் எழுதும் படங்களில் சாதாரண தமிழ்ப்பட எழுத்து மட்டுமே தென்படும். ஜெயமோகன் சம்பந்தப்பட்ட படங்களில் மொழி ஆக்கிரமித்து நிற்கும். இரா முருகன் படங்களில் டைட்டிலில் மட்டுமே காணப்படுகிறார். ’பரதேசி’ நாஞ்சில் நாடனோ, “யாருங்க வசனம்” என்று விசாரிக்க வைக்கிறார்.

சமீபத்திய எதிர்பார்ப்புகளான ‘கடல்’ பல கோணங்களில் சென்று அலைபாய்ந்து மூழ்கடித்தும், ‘விஸ்வரூபம்’ சர்ச்சைகளில் மட்டும் பிரமிக்க வைத்தும் ‘நீதானே என் பொன் வசந்தம்’ சாக்லேட் கல்லூரி காதலை மறுஒளிபரப்பியும் குண்டுசட்டி கோடம்பாக்கத்தினுள் ஆமை ஓட்டிய நேரத்தில், உருப்படியான தமிழ் சினிமாவிற்கான அடி பரதேசி.

Oscars: Academy awards 2013

“‘Zero Dark Thirty’ is an example of a woman’s innate ability to never let anything go.”

இந்த வருட ஆஸ்கார் விருதுகளில் எந்த ஆச்சரியமும் இல்லை. ‘அய்யோ பாவம்’ அனுதாப அலையில் பென் அஃப்லெக்கின் ’ஆர்கோ’ வென்றது. ஜாம்பவான்கள் நிறைந்த துணை நடிகர் பகுதியில் ’ஜாங்கோ அன்செயிண்ட்’ கிறிஸ் வால்ஸ் வென்றார். ‘தி ஹங்கர் கேம்ஸ்’ ஓடுவதற்காக ஜெனிஃபர் லாரென்ஸ்; கதாபாத்திரமாகவே வாழ்வதற்காக டேனியல் டே லூயிஸ்…

இயக்குநரில் மீண்டும் யார் வெல்வார் என்பதில் ’லைஃப் ஆஃப் பை’ ஆங் லீ வென்றது மட்டும் விதிவிலக்கு.

‘நான் முடி வெட்டிக் கொண்டேனாக்கும்’; ‘நான் இருபது கிலோ எடையை குறைத்தேனாக்கும்’; ‘நான் சரிகமபதநிச பாடக் கற்றுக் கொண்டேனாக்கும்’; ‘நான் அழகை கம்மியாக்கி உங்களுக்காக வாழ்ந்தேனாக்கும்’ என்று IIPM அரிந்தம் சவித்ரி போல் சந்தைப்படுத்தியே வென்ற ஆன் ஹாத்வே ஆட்டத்தில் சேர்த்தியில்லை.

விருது வென்றவர்களில் அதிர்ச்சி கலந்த ஆச்சரியம் இருக்காது என்பதால், விழாவைத் தொகுத்தவரை அதிர்ச்சிகள் தர வைத்தார்கள்.

முன்னாள் தொகுப்பாளர்களான ஸ்டீவ் மார்ட்டின் போன்றோர் படு சைவம். தாத்தா/பாட்டியினரை ஆஸ்கார் பார்க்க வரவழைப்பார். ஆனால், பழங்கால தலைமுறையினரால் எதையுமே வாங்க வக்கில்லை. அவர்கள் வேஸ்ட்.

நடுவாந்தரமாக பில்லி கிறிஸ்டலும் ஜான் ஸ்டூவர்ட்டும் தொகுத்து வழங்கலாம். அந்தத் தலைமுறையினர் ஸாம்சங் கேலக்சி எஸ்4 எல்லாம் வாங்குவதில்லை.

குழந்தைகளுக்கான ‘ஹாப்’, ’ஆல்வின் அண்ட் தி சிப்மன்க்ஸ்’ போன்ற படங்களிலும் டிஸ்னியின் இனிப்பான சினிமாக்களிலும் அணிலும் கரடியும் மழலை பேசும். அதே போன்ற பொம்மைக் கரடியை டோப் அடிக்க வைத்தால் எப்படி இருக்கும்? பெரியவர்களின் வசை மொழியும் அலுப்பும் நிறைந்த வாழ்க்கையை சிறுபிள்ளைத்தனமாகவே இருக்கும் பொம்மைக் கரடிக்கு கொடுத்தால் எப்படி இருக்கும்? அதுதான் Ted.

அந்த ‘டெட்’ படத்தை இயக்கி, கரடி பொம்மைக்கு குரல் கொடுத்தவர்தான் இந்த வருட அகாதெமி விருது தொகுப்பாளர்.

பெண்களைக் கிண்டலடிப்பதும், விடலைத்தனமாக ஜொள்ளு விடுவதும், பேசப்பெறாத விவகாரங்களை முகத்திலறைவதும் திரைப்படத்திற்கு பொருந்தும்; ஸ்டாண்ட அப் காமெடியில் பொருந்தும். சுய எள்ளலும் புனிதங்களே அற்ற தன்மையும் பதின்ம வயதினருக்கு எப்பொழுதும் பொருந்தும். எனவே, யூத்திற்கு சேத் மெக்ஃபார்லேன் நகைச்சுவை பிடித்திருக்கும்.

பரிந்துரைப் பட்டியலில் இடம்பிடித்திருந்த பாம்பே ஜெயஸ்ரீ பாடாததை விட இது ஒன்றும் பெரிய குறை அல்ல.

July 14 S Ramakrishnan Event at Toronto: Kaalam Magazine Invite

கனடாவில் கதாசிரியர் ஜெயமோகன் உரை: தமிழ் சினிமாவும் ஹாலிவுட் திரைப்படங்களும்

பேசியவரின் பதிவு: திரைப்பட விழா » எழுத்தாளர் ஜெயமோகன்

உரையில் சொன்ன நான்கு மையக்கருத்துக்கள்.

1. தமிழ் வணிகசினிமா பற்றிய ஒரு இளக்காரமான பார்வை பொதுவாக அறிவுஜீவிகளிடம் உள்ளது. என்னிடமும் இருந்தது. ஆனால் உலகமெங்கும் உள்ள வட்டாரசினிமாக்களை ஹாலிவுட் சினிமா முற்றாக அழித்து அம்மக்கள் தங்களுக்குள் பேசிக்கொள்ளும் வெகுஜன ஊடகமாக சினிமா அமையாமல் ஆக்கிவிட்டிருக்கிறது. அந்த அபாயத்தை சமாளித்து இங்கே தமிழ் வணிகச்சினிமா வெற்றிகரமாக இருப்பதே ஒரு பண்பாட்டுச்சாதனை. அது,தொடர்ச்சியான ஃபீட் பேக் மெக்கானிசம் மூலம் உருவாக்கப்பட்டது. ஆகவே தமிழ்ச்சமூகத்தின் சராசரியால் உருவாக்கப்பட்டது அதன் தரம்.

2 இக்காரணத்தால் தமிழில் சராசரிக்கு மேலான ஒரு தளத்தில் படங்கள் வரமுடியவில்லை. அப்படி ஒரு படத்தை உருவாக்கும் முயற்சிகள் பல நடக்கின்றன. அதன்விளைவாக உருவான ஒன்றே குறும்பட இயக்கம். அதற்குப் பொருளியல் சுமை இல்லை என்பதனால் அது சுதந்திரமாக இயங்க முடியும் என்ற நிலை இருந்தது. ஆனால் நடைமுறையில் அது வெற்றியா என்ற தயக்கம் இருக்கிறது. ஆரம்பத்தில் குறும்படங்கள் மீது இருந்த எதிர்பார்ப்பு இல்லை இப்போது.

3 . காரணங்கள் இரண்டு. இந்தப் படங்களிலேயே அவை தெரிகின்றன. ஒன்று இலக்கியவாசிப்போ, அறிமுகமோ இல்லாதவர்களால் இப்படங்கள் எடுக்கப்படுகின்றன. ஆகவே கதைக்கருவிலும் வாழ்க்கை அவதானிப்புகளிலும் ஒரு முதிர்ச்சி இல்லை மிகச் சாதாரணமான கதைகளைச் சாதாரணமாக எடுக்கிறாகள். இந்தக்குறும்படங்களின் கதைகளைக் குமுதம் கூட வெளியிடுமா என்பது சந்தேகமே. பெரும் சிறுகதைச்சாதனைகள் நிகழ்ந்த ஒரு மொழியில் இத்தகைய படங்கள் வருவதை நாம் ஒரு சரிவு என்றே நினைக்கவேண்டும். இரண்டாவதாக இப்படங்கள் குறைந்த நேர அளவுள்ள, சிறிய சட்டகம் கொண்ட படங்கள். இதற்கான ஒரு திரைமொழி , திரைக்கதை வடிவம் உருவாக்கப்படவேண்டும். ஆனால் பெரிய படங்களின் அதே திரைமொழி, அதே திரைக்கதை உத்தியில் இவை எடுக்கப்படும்போது பார்வையனுபவம் சிறப்பாக அமைவதில்லை.


ஏறத்தாழ முப்பது பேர் பார்வையாளர்கள். மூன்று நபர்கள் கொண்ட ஜூரி.

தமிழ் வணிக சினிமாவை நிராகரித்துப் பேச முடியாது. தமிழ்ப்படங்கள் என்பது ஒரு பண்பாட்டு உரையாடல். அவை சராசரி மனிதர்களுடன் பேசக்கூடியவை. ஆவரேஜ் ஆளுக்காகத்தான் படமெடுக்க முடியும். எதிர்காலத்தில் கலைப்படங்கள் காலூன்றலாம். ஆனால், இன்றைக்கு அந்த நிலை கிடையாது.

பகுதி ஒன்று

* உணவு: பெரிய சாப்பாட்டு மேஜை. அயிரம் பேர் உண்ணக் கூடிய விருந்து போன்ற அயிட்டங்கள் காட்டப்பட வேண்டும். பார்வையாளனுக்கு பசியாக இருக்கலாம். கல்யாண சாப்பாடு தேவையிருக்கலாம். அதைத் தீர்க்க வேண்டும்.

* ஆடை, அணிகலன்: நாயகி தன்னுடைய டிரெஸரைத் திறந்து நூற்றுக்கணக்கான புடைவையை அலசுவாள். அவற்றில் இருந்து ஒன்றைத் தேர்ந்தெடுப்பாள். சினிமா பார்ப்பவனுக்கு அத்தனை புடவை எடுத்து தர முடியாது. பார்ப்பவளுக்கு இந்த மாதிரி சாய்ஸ் இருப்பது போல் கற்பனை தருவதற்கு சரோஜாதேவியும் ஜெயலலிதாவும் இவ்வ்வாறு செலக்சன் செய்ய வேண்டும்.

* இடம், லொக்கேஷன்: ஒவ்வொரு ஊரில் ஒவ்வொரு கலாச்சாரம். அனைத்து ஊர்களிலும் பிடிக்குமாறு புரியுமாறு எடுக்க வேண்டிய தேவை இருக்கிறது. சென்னையில், சின்னாளப்பட்டியில், சிகாகோவில், ஸ்கார்பரோவில் என்று எல்லா இடத்திற்கான சராசரி விருப்பங்களை உள்ளடக்கி எடுக்கிறார்கள்.

* ரிலாக்ஸேஷன்: இரண்டே கால் மணி நேரம் படம் ஓட வேண்டும். சினிமாவிற்கு கிளம்புவதற்கு பெரிய விஷயம். அந்தளவு சிரமப்பட்டு வருபவர்கள், டக்கென்று எண்பது மணித்துளிகளில் முடித்து அனுப்ப முடியாது.

* வணிக சினிமா: காதல் இல்லாத தமிழ் சினிமா எடுபடாது; எடுக்கணும்னு அவசியம் இல்ல. தமிழகச் சூழலில் காதல் செய்யும் வாய்ப்பு இல்லாததால் ஈடேற்றம் செய்வதற்கு இளமையும் காதலும் சினிமாவில் நிறைவேற்றுகிறது.

பகுதி இரண்டு

* சிறு பத்திரிகைக்காரன்: நா பார்த்தசாரதி, அகிலன், கல்கி எல்லாம் வணிக எழுத்தாளர்கள். அவர்கள் மட்டுமே புகழ் பெற்று விளங்கிய காலம் உண்டு. இன்று வெகுசன இலக்கியம் அல்லாதவர்கள்தான் புகழ் பெற்றவர்களாக இருக்கிறார்கள். நான் சிறுபத்திரிகைக்காரன். இன்று மைய எழுத்தாக விளங்குகிறேன். அது போல் குறும்படக்காரர்களும் மெயின் நீரோட்டத்தை நிர்ணயிப்பவர்களாக ஆகலாம்.

* இலக்கிய வாசிப்பு: கதைகளை தேர்தெடுக்கும்போது எண்ணங்களை மையமாக வைக்காமல், சிறப்பான சிறுகதைகளை எடுத்துக் கொள்ளலாம்.

தொடர்புள்ள தற்கால செய்தி: Manushyaputhiran vs Arivumathy on S Ramakrishnan vs Kamalahasan: Marketing Kaliyugam Movie Songs

கலியுகம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் முதலில் பேசிய கவிஞர் அறிவுமதி, மனுஷ்யபுத்திரன் குங்குமத்தில் வழக்கு எண் படத்தை துவைத்து காயப்போட்டுவிட்டதாக குறைபட்டுக் கொண்டார். இதுபோல் மனுஷ் போன்ற இலக்கியவாதிகளே செய்தால், அடுத்து வரும் தயாரிப்பாளர்களும் வர மாட்டார்கள்.. இது தமிழ்ச் சினிமா துறையின் வளர்ச்சியையே பாதிக்கும். அது மிக அருமையான படம் என்று சொன்னார்.

Acceptance speech by EssRaa at Canada: Tamil Literary Garden Iyal Virudhu: Award Meeting for S Ramakrishnan

முந்தைய விழாவும் வீடியோவும்:
S Ramakrishnan’s Felicitation Function: Canada’s Iyal Award Event at Chennai by Uyirmmai

நன்றி சொல்லப்பட்டவர்கள்

1. கவிஞர் தேவதச்சன் – ஆசான்

2. யுவன் சந்திரசேகர்

3. பெருமாள் முருகன்

4. தோழர் எஸ் ஏ பெருமாள்

5. முதல் வகுப்பு ஆசிரியை சுப்புலட்சுமி

6. முழு சுதந்திரம் தந்திருக்கும் மனைவி – ”வீட்டின் சுமையை தன் மீது சுமத்தாதவர். எழுத்தாளனாக இரு என்று திருமணத்திற்கு முன் சொல்வது சுலபம்; ஆனால், அதை பதினேழு ஆண்டுகளாக செயலாக்குபவர்.”

7. மகன்கள்

8. நண்பர்கள் – ”என் கிட்ட பணம் இல்ல… என்ன பண்ணுவ? என்று கேட்ட ஒரு மணி நேரத்திற்குள் என் வங்கிக் கணக்கில் ஒரு லட்சம் டெபாசிட் செய்தவர்கள் இருக்கிறார்கள். ’ஒரு எழுத்தாளனாக நீ வாழும்போது பொருளாதாரக் காரணங்களுக்காக நீ எழுதமுடியாமப் போயிட்டா, நாங்கள்ளாம் உன் நண்பர்களாக இருந்து பிரயோசனமேயில்ல!’ என்னுடைய பர்ஸில் எனக்குத் தெரியாமல் தன்னுடைய கிரெடிட் கார்டை சொருகி, ’உலகில் எங்கு போனாலும், அவனுக்குத் தேவையானதை வாங்கிக்கட்டும்’ என்று மனைவியிடம் சொல்லிச் செல்பவர்கள் இருக்கிறார்கள்”

9. வாசகர்கள்

10. அ முத்துலிங்கம்

11. தமிழ் இலக்கியத் தோட்டம்

கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2011க்கான வாழ்நாள் தமிழ் இலக்கிய சாதனை விருது பெற்ற எஸ்.ராமகிருஷ்ணன் ஆற்றிய ஏற்பு உரை:

ஏற்புரை பேச்சில் நான் கவனித்தவை

* வாழ்ந்த கதையச் சொல்லவா? வீழ்ந்த கதையை சொல்ல்வா? தெரிஞ்ச கதையை சொல்ல்வா? தெரியாத கதையை சொல்ல்வா? நாம ஜெயிச்ச கதையை சொல்ல்வா? தோத்த கதையை சொல்ல்வா… எந்தக் கதையை சொல்ல! என்பார்கள்.

* நான் பாணர்களோட வரிசையை சேர்ந்தவனாகத்தான் நினைக்கிறேன்.

* ருட்யார்ட் கிப்ளிங் என்னும் யானை டாக்டர்

* (கனடியத் தமிழர்?) மொழி தெரிந்தவரின் அணுக்கம்: நம்முடைய அடையாளம் நம் மொழி – தமிழ் தெரிந்தவரை தேடும் ஏக்கம்.

* (ஈழம்?) திரும்பி பார்க்க முடியாத இடம்: உப்பு பாறை – அனைவருமே மீண்டும் மீண்டும் சொந்த ஊரையும் இறந்த வாழ்க்கையையும் கடைசியாக திரும்பித் திரும்பி பார்க்கிறோம்: Lot’s wife looked back, and she became a pillar of salt.

* அறம்: உணவகம் தயாரிப்பவர் எவ்வாறு கொள்கைப் பிடிப்புடன் இருக்கிறார்?

* பிரிவு: வீட்டில் இருந்து வெளியேறுகிறார்கள்; ஆனால், மீண்டும் ஊர் சென்று ஒன்று கூடுகிறார். உணர்ச்சியைக் கட்டுப்படுத்த, வேதனையை மட்டுப்படுத்த இனிப்பையும் உணவையும் கொண்டாடுகிறார்கள். இலக்கியத்திலும் இந்தத் துயரம் பிரதிபலிக்கிறது.

* மறைந்து வாழும் காலகட்டம்: அர்ச்சுனன் கூட பேடியாக ஒரு வருடம் வாழ்ந்திருக்கிறான். மிகப் பெரிய வீரன் கூட ஒளிந்திருந்து அமைதி காத்த கதை அது.

* தன் சீடர் கூட்டத்துடன் இரவு தங்குவதற்கு இடம் தேடி ஜென் துறவி சத்திரத்திற்கு வருகிறார். அந்த இடத்தின் காப்பாளனோ, இவர்களைப் பார்த்தவுடன் ஒரு கோப்பை நிறைய பாலுடன் வருகிறான். அதைப் பார்த்த சன்னியாசி, சிரித்துவிட்டு, அந்த பாலின் மீது ஒரு இலையைப் போடுகிறார். இதைப் பார்த்து சத்திரத்து இன் சார்ஜ் இடம் கொடுத்து விடுகிறார்.

என்ன நடந்தது அங்கே?

சத்திரம் ஹவுஸ்ஃபுல். அங்கே இருப்பவர்கள் குடித்திருக்கிறார்கள். அதை பால் நிரம்பிய கோப்பை குறிப்பிடுகிறது. அதன் மீது ஒரு இலை போடுவதன் மூலம், ஒரு மூலையில் ஒதுங்கிக் கொள்வதாக சாது சொல்கிறார்.

Tamil Literary Garden of Toronto, Canada has Honored Tamil Writer S. RAMAKRISHNAN with ‘Lifetime Literary Achievement Award‘ in Tamil for the year 2011, “IYAL VIRUDHU” as pronounced in Tamil, for his life time achievement in literary contribution to the Tamil Literature.

Profile

S. Ramakrishnan is an influentially important writer of modern Tamil literature.

He is a full-time writer who has been active over the last 25 years in diverse areas of Tamil literature like short stories, novels, plays, children’s literature and translations.

Born in 1966, he is a native of Mallankinar village of Virudhunagar district of Tamilnadu. He has travelled all over India and having experience of living in its different parts of the country.

His short stories are noted for their modern story-telling style in Tamil. He had, as Editor, brought out the literary publication, Atcharam for five long years. Now, his web site http://www.sramakrishnan.com serves as a serious literary movement for young readers since it has become an important web site where contemporary literary innovations, world literature and world cinema congregate in a fertile ambience. An inspiring aspect of this site is that it has secured 23 lakh visits from readers all over the world. His short stories and articles have been translated and published in English, Malayalam, Hindi, Bengali, Telugu, Kannada and French.

A great story-teller, he has organized over thirty story-telling camps for school children, all over Tamilnadu. He has authored four books for children. He has organized a special story-telling camp for children with dyslexia-related learning disabilities. He has also organized screenplay writing camps for short film directors and students of cinema creation in important cities like Chennai, Coimbatore, etc.

His novel Upa Paandavam, written after a deep research into Mahabharata, was not only selected as the best novel in Tamil, it was widely well received by the readers. The novel Nedum Kuruthi, which spoke of the dark and tragic existential experiences of the tribe of oppressed people cruelly stamped as criminal tribe by the British, secured the Ghanavaani award for the Best Novel. His novel Yaamam, written with Chennai city’s three hundred years history as back drop, is another widely appreciated creation. His Urrupasi is a novel that conveys the stirring mental agonies of a young man who was unemployed because he took his degree majoring in Tamil language.

He became a celebrated author to lakhs of readers through his series of articles like Thunai Ezhuthu, Desanthari, Kathavilaasam, Kelvikurri and Chiridhu Vellicham which appeared in the highly circulated Tamil weekly, Ananda Vikatan. He is the first writer in Tamil to have created a broad circle of readers for his columns. The compilation book of the articles, Thunai Ezhuthu, has created a new history by selling almost a lakh of copies.

A connoisseur of world cinema, he has compiled an introductory compendium on world cinema with thousand pages called Ulaga Cinema. He has written four important books on cinema viz. Ayal Cinema, Pather Panchali, Chithirangalin Vichithirangal and Paesa Therindha Nizhalgal.

The short film Karna Motcham with his screenplay won the National Award for Best Short Film and went on to win, so far, 27 important awards in Indian and International Film Festivals. Another short film Matraval has won three coveted awards as the best Tamil Short Film.

He has worked as Screenplay and Dialogue writer in Tamil films like

* Baba,
* Album,
* Chandaikkozhi,
* Unnale Unnale,
* Bhima,
* Dhaam Dhoom,
* Chikku Bukku
* Yuvan Yuvathi
* Modhi Vilaiyadu ,
* Avan Ivan

with over ten films to his credit. Some of these films have successfully crossed 100 days of continuous screening in theatres.

He has written and published five novels, ten collections of short stories, 24 collections of articles, four books for children, three books of translation and nine plays. He also has a collection of interviews to his credit.

Among the many important awards won by him are Tagore Litearay Award for his novel Yamam. Sangeetha Nataka Academy Award for Best Young playwright, Iyal Award from Canada, Award for Best Novel from Government of Tamilnadu, Award of Literary Thoughts, CKK Literary Award, Best Novel Award of Progressive Writers’ Union, Jnanavaani Award and Young Achiever Award, Periyar Award. Salem Tamil Sangam award and also the winner of Kannadasn Award.

Three Doctorates and 13 M.Phil. Degrees have been awarded to scholars for researching into his writings. His books have been prescribed as part of syllabi of 2 Universities and 9 Autonomous Colleges.

S. Ramakrishnan lives in Chennai with wife Chandra Prabha and sons Hariprasad and Aakash.