Tag Archives: பார்வை

சொல்வனம் ஒளிவனம் மற்றும் ஒலிவனம்

வீடியோ என்பது டிக்டாக் பார்வையாளர்க்கானதாக மாறிப் போய் கொஞ்ச காலம் ஆகி விட்டது. இணையத்து நேரத்துப் படி கணக்கிட்டால், பல்லாயிரம் ஆண்டுகள் என்றுகூட சொல்லலாம்.

முப்பது நொடிகளுக்கு மேல் எதையும் ஒருமித்துப் பார்க்க மாட்டார்கள். ஒரு நிமிடத்திற்கு மேல் எதையும் கவனமாகக் கேட்க மாட்டார்கள். நித்தியானந்தா, டப்ஸ்மாஷ், ஸ்ம்யூல் என்றால் இன்னும் கொஞ்சம் பொறுமையாக இருப்பார்கள்.

இந்த காலகட்டத்தில் சொல்வனம் யூடியுப் கன்னலும் #solvanam ஸ்பாடிஃபை ஒலிப்பதிவுகளும் நவம்பர் 28, 2020 அன்று துவங்கப்பட்டன. சரஸ்வதி தியாகராஜன், அனுராதா கிருஷ்ணஸ்வாமி, வித்யா சுபாஷ், விஜயலஷ்மி, ஸ்ரீரஞ்சனி என்று பலரும் தோள் கொடுத்து முன்னெடுத்தனர்.

விளம்பரங்கள் இல்லாமல், கூகுள் ஆட்சென்ஸ் முன்னெடுப்புகள் இல்லாமல், சமூக ஊடகத்தின் தொடர்ச்சியான கவர்ச்சிகள் இல்லாமல், இன்றைய புள்ளி விவரங்கள்:

  • சந்தாதாரர்கள் – 105
  • பார்வையாளர்கள் – 4,381
  • மொத்த பார்வை நேரம் – 148.1 மணி நேரம்
  • அதிகம் பேர் பார்த்த விழியம் – எழுத்தாளர் தி.ஜானகிராமன்
  • பாட்காஸ்டிங்: ஸ்பாடிஃபை / ஆன்கர் எஃப்.எம் கேட்டவர்கள்: 4,449
  • அதிகம் பேர் கேட்ட கதை: கமல தேவியின் “அமுதம்” சிறுகதை – 3,467
  • பெரும்பாலானோர் ஒலிப்பதிவை கேட்டதில் அடுத்த இடம் பிடித்தது: கிருத்திகாவின்“மணப்பு” – 509
  • மொத்த பதிவுகள் – 195

தொடர்புள்ள பதிவு:

நவம்பர் 28, 2020ல் துவங்கினாலும் ஜூலை 18, 2021 அன்று இந்த வேகம் சூடு பிடிக்க ஆரம்பித்தது. அதற்கு ஒரே காரணம் Saraswathi Thiagarajan.

கிட்டத்தட்ட ஒரு எந்திரம் போன்ற தயாரிப்பு நேர்த்தி. ஒரு அன்னையைப் போன்ற பாசத்துடன் எழுதியவர்களுடன் உரையாடல். ஒரு தேர்ந்த தொழில்நுட்ப ஜாலகர் போல் உருவாக்க நேர்த்தி. ஒரு சம்பளத்தை எதிர்நோக்கி நம்பியிருக்கும் ஊழியர் போன்ற தினசரி தயாரிப்பு. ஒரு குழந்தையைப் போன்ற ஆர்வம். ஒரு வித்தகர் போன்ற சிரத்தையும் உருவாக்கமும் ஒருங்கிணைப்பும் #சொல்வனம் வழங்கும் ஒளிவனம் படைப்புகளை கொண்டு வந்திருக்கின்றன.

அவருக்கு என்னுடைய சிரம் கூப்பிய நன்றிகளும் வாழ்த்துகளும்.

இந்த ஒலிப்பதிவுகளில் நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள்?

  1. – பவா செல்லத்துரை போல் எளிமையான கதை சொல்லல்
  2. – நேர்காணல்கள், பேட்டிகள், சந்திப்புகள், உரையாடல்கள்
  3. – அன்றாட சம்பவங்களை ஒட்டிய பேச்சுகள், விளக்கங்கள்
  4. – சுருக்கமான, கவர்ச்சியான ஒளிவடிவங்கள்: கதைக்கான முன்னோட்டங்கள்; நாவல் சுருக்கங்கள்; இலக்கிய விமர்சனங்க்ள்
  5. – அதெல்லாம் வேஸ்ட்: இலக்கிய வம்புகள், பத்திரிகையாளரின் கிசுகிசுக்கள், அரட்டை
  6. – வாட்ஸாப், இன்ஸ்டாகிராம் ஸ்டோரி போன்ற வடிவங்கள்
  7. – என்.எஃப்.டி. கொடுத்து உரிமம் வாங்குதல்

அது சரி…

தமிழில் ஒளிப்பதிவுகள், வெப்3, மெடாவேர்ஸ் எல்லாம் எப்படி இருக்கிறது?

இசையை, ஓவியத்தை, படைப்பை உருவாக்குவோர் இடைத்தரகர் இல்லாமல் டிஜிட்டல் சேகரிப்புகளை விற்று கல்லா கட்ட ஆரம்பித்து விட்டார்களா?

தொடர்புள்ள செய்திகள்

Spotify draws up plans to join NFT digital collectibles craze: Job ads fuel excitement in crypto and music industries over potential of NFTs to boost artists’ earnings

https://www.ft.com/content/9e77bf41-5814-4c18-96f6-f800f6b41216

Spotify is drawing up plans to add blockchain technology and non-fungible tokens to its streaming service, fuelling excitement in the crypto and music industries about the potential of NFTs to boost artists’ earnings.

Facebook founder Mark Zuckerberg confirmed a Financial Times report earlier this year that Instagram would soon start to support NFTs. Other social media companies, including Twitter and Reddit, are also working to build new features for displaying or trading NFTs. Highlight text NFTs use blockchain technology to certify ownership of digital assets. The vast majority of the $17.7bn worth of NFTs traded last year were for visual artworks, games and collectibles,

Chennai and Crypto art

https://www.thehindu.com/sci-tech/technology/internet/nft-madras-week-madras-musings-event-krish-ashok-twobadour-laya-mathikshara/article36135468.ece

“We are amidst a renaissance — the crypto space is a convergence of technology, financial instruments that is driven by culture for the first time,” said Venkateswaran. “The Bitcoin, Altcoin, ICO boom and bust, etc, were driven by financial instruments, whereas NFTs are fed by culture. Now, there is a place for artists and musicians like us, which is why the work created here becomes valuable. You don’t see a lot of traditional art buyers – people who buy crypto art get the concept and are bankrolling the renaissance,” he added at the event organised by Madras Musings .

Mathikshara, who sold her first NFT in May for 0.39 ETH (approximately ₹90,500) on the platform Foundation, sees art as something you collect without any financial benefit. The conversation that explored everything from bitcoins and crypto art to digital tools and the ever expanding metaverse, also addressed the future of art galleries. “An NFT is a digital certificate of ownership of an asset — art, virtual land, wearable, etc. Unlike any other certificate, it cannot be destroyed and it completely does away with the middleman. We don’t need to depend on art galleries or curators now,” explained Twobadour, adding how NFTs are the most useful way to get into crypto space.

கம்யூனிஸம் பேசுகிறாரா அமெரிக்க ஜனாதிபதி?

சென்னையில் மருந்தகங்களே மருத்துவராக மாறி நோயை குணப்படுத்துவார்கள். மேற்கத்திய உலகில் சட்டங்களும் திட்டங்களும் அதிகம். தெருமுக்கில் ஒற்றை அறையில் உங்களை நாடி பிடித்து குணப்படுத்தும் நம்பகமான ஐந்து ரூபாய் டாக்டர் கிடையாது.

அவசர அவசரமாக உடனடியாக சிகிச்சை பெற வேண்டுமானால் உயர்தரமான சேமநல காப்பீடு வேண்டும். அந்த மாதிரி முன் ஜாக்கிரதையாக இன்ஷூரன்ஸ் எடுக்காதவர்களுக்கு உடம்பு சரியில்லாமல் போனால் சொத்தையே எழுதி வைக்க வேண்டும்.

இதற்கெல்லாம் மாற்றாக ஒபாமா-கேர் வரப் பார்த்தது. மாஸசூஸட்ஸ் மாநிலத்தை முன் மாதிரியாக வைத்து உருவான சகலருக்குமான காப்புறுதி திட்டம் அது. பராக் ஒபாமாவின் காலத்திலேயே அது நீர்த்துப் போய் பேருக்கு காப்புறுதி கொடுத்தது. டொனால்டு டிரம்ப் வந்து அந்த ஹெல்த்-கேர் திட்டங்களை இன்னும் காலாவதியாக்கினார்.

அதில் விட்டதையும் தொட்டதையும் தற்போதைய அதிபர் பைடன் சட்டமாக்கப் பார்க்கிறார். எக்கச்சக்க விலை கொடுத்து வாங்க வேண்டிய மருந்துகளை சகாயமாக அணுகக் கூடிய விலையில் தர முயல்கிறார்.

அது சோஷலிசமா?

சமத்துவமா?

கம்யூனிஸம் பேசுகிறாரா அமெரிக்க ஜனாதிபதி?

லதா குப்பாவின் #சொல்வனம் கட்டுரையை வாசியுங்கள்.

This May Be Democrats’ Best Chance to Lower Drug Prices | Democrats Add Drug Cost Curbs to Social Policy Plan, Pushing for Vote #solvanam

Review of Vikramadithyan Documentary | Vishnupuram Awards 2021

Vikramadithyan Documentary | Vishnupuram Awards 2021: ‘வீடும் வீதிகளும்’, 2021ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது பெறும் கவிஞர் விக்ரமாதித்யன் அவர்களைப் பற்றிய ஆவணப்படம் பார்த்தேன்.

சில எண்ணங்கள்:

1. துணையெழுத்து இல்லாமை: தமிழ்க் கவிஞரைப் பற்றிய அறிமுகப் படத்தில் வரும் உரையாடலை, உரையாடற் மொழியிலோ பிற வேற்று மொழியிலோ எழுத்து வடிவில் காட்டப்படும் உரை; ஆங்கிலத்தில் துணையுரை இல்லாமல் இருப்பது ஏமாற்றம் அளிக்கிறது.

2. அரை மணி நேரத்தில் முடிக்க வேண்டும் என்று அவசர கதியில் மிச்சம் மீதியைப் போட்டு செய்யும் வடகறி கொத்து பரோட்டா போல் வந்திருக்கிறது. வடகறி சுவையாக இருக்கும். ஆனால், இங்கே சாஸ்திரோப்தமான சூப், சிற்றுண்டி பலகாரம், தலைவாழை இலை சாப்பாடு, பீடா எல்லாம் எதிர்பார்க்கிறேன்.

3. இந்தப் படங்கள் எவரைக் குறிவைத்து எடுக்கப்படுகின்றன?

அ) தமிழ்க் கவிஞர்களை அதிகம் அறியாத தமிழ் தெரிந்தோர்

ஆ) விக்கிரமாதித்தனை நன்கு அறிந்தோர்

இ) தமிழ் இலக்கியத்தில் நிறைய பரிச்சயம் இருந்தாலும் விக்கிரமாதித்தனை அறியாதோர்

ஈ) தமிழ் புரிந்தாலும் எழுத/வாசிக்கத் தெரியாத தலைமுறை

உ) விஷ்ணுபுரம் வாசகர் வட்டம்

என்னை (இ) பிரிவில் வைத்திருக்கிறேன். என் மனைவியை (அ) பிரிவில் வைக்கிறேன். எங்கள் குழந்தைகளை (ஈ) பிரிவில் வைக்கலாம். இந்த மூவருக்குமே இந்தப் படம் எதையும் கொண்டு சேர்க்கவில்லை.

4. நான் எதை எதிர்பார்த்தேன் – இந்தப் படத்தில்?

i) தமிழ்க் கவிஞர்கள் – சுருக்கமான பாரம்பரியம்; எந்த இடத்தில் விக்கிரமாதித்தன் வருகிறார்?

ii) விக்கிரமாதித்தன் தோற்றமும் வளர்ச்சியும் – எவ்வாறு அந்தக் கவியாளுமை உருவானது?

iii) சமகால கவிஞர்களை எவ்வாறு அவர் ஊடுருவுகிறார்? அவரின் நெடிய இலக்கிய பயணத்தில் என்னென்ன மாற்றங்கள் தோன்றின?

iv) கவிஞரை வாசித்ததால் அவரவருக்கு என்ன கிடைத்தது? போகன் சங்கர், லஷ்மி மணிவண்ணன், வண்ணதாசன் – சுய அனுபவம் / நேர்மையான தன்மை நிலைப் பார்வை / அகப் பகிர்வு – இது இல்லாமல் பீடத்தில் இருந்து கொண்டு சொற்பொழிவாற்றுவது ‘ராஜாதி ராஜ ராஜ கவிராய ராஜ மார்த்தாண்ட ராஜ கம்பீர விக்கிரமாதித்தாய நமஹ!’ என அலறுகிறது.

5. அறிமுகமாக அந்த வீணை இசை மெல்லிய அபாரம். படம் முழுக்கவே சத்தமாக, “நான் இருக்கிறேன்!” என்று கத்தாமல், படத்தோடு இயைபான இசை.

6. ஏன் பேசுபவர்களின் பெயர்களை ஆங்கிலத்தில் போடுகிறார்கள்? பேசுபவர் யார், எங்கிருக்கிறார், என்ன எழுதியிருக்கிறார், ஏன் பேசத் தகுதியானவர் என்றெல்லாம் போட வேண்டும்.

7. கவிஞரைக் குறித்த ஜெயமோகனின் அறிமுகம் முகஞ்சுளிக்க வைத்தது. இன்னாரைப் பாராட்டி சீராட்டும் தருணத்தில் “சட்டையில்லாமல் வந்தார்! சண்டைக்காரராக முன்வந்தார்!!” என்று சொல்லிவிட்டு, “நான் எழுதியதுதான் அவரைப் பற்றிய முதல் கட்டுரை!” என்று ஜம்பமும் தட்டிக் கொள்வது உவ்வேக். கொஞ்சம் தன்னடக்கத்தோடு உரையாடியிருக்கலாம்.

8. இறுதியில் போடப்படும் பெயர் பட்டியல் – அகர வரிசைப்படி இருக்க வேண்டும். இது ஏதோ இலக்கிய அந்தஸ்து பீடம் போல் வயதை வைத்து போடப்பட்டிருக்கிறது.

9. ஒரே ஒரு பெண்ணாக சுபஸ்ரீ வந்து போகிறார். நன்றாகப் பேசினார்.

10. விக்கிரமாதித்தன் உரையாடலை இன்னும் தீவிரமாக ஆழமாக நடத்தியிருக்க வேண்டும். குடியோடு என்றால் குடியோடு. ஏழெட்டு நாள்கள் என்றால் அத்தனை பொறுமையோடு. அதன் பின் கத்திரி போட்டு ஆங்காங்கே கிடைத்த நறுக்குகளைக் கொண்டு அவரின் பேச்சு வந்திருக்க வேண்டும். இப்பொழுது ஏதோ தாதா சாகேப் பால்கே விருது பெற்ற ரஜினிகாந்த்தை வைத்து பொம்மை கோச்சடையான் எடுத்த மாதிரி தீட்டியிருக்கிறார்கள்.

கொஞ்சம் தாகூர்; கொஞ்சம் வங்காளம்; மற்றும் நிறைய மயக்கும் பெண்டிர்

நெட்ஃப்ளிக்சில் “ரவீந்திரநாத் தாகூரின் கதைகள்” பார்த்தேன். அனுராக் பாசுஇயக்கியது. கதைகளில் மிகவும் குறிப்பிடத்தக்க பகுதி என்னவென்றால், பெரும்பாலான கதைகளில் பெண் கதாபாத்திரங்கள் துன்பத்தில் இல்லை.

  1. சோகர் பாலி
  2. மான்பஞ்சன்
  3. உடைந்த கூடு
  4. எறும்பு அரம்பு (“சமப்தி” அடிப்படையில்)
  5. தண்டனை (‘சாஸ்தி’ அடிப்படையில்)
  6. டுய் பான் (இரண்டு சகோதரிகள்)
  7. மிருனால் கி சித்தி
  8. அதிதி
  9. காபூலிவாலா

The stories by themselves may not read great (now).

Assume for a second (hypothetically), a well-trained person who is good in literal translation brings it to Tamil – It will be verbatim and plain.

but, The screen adaptation, the sets (art director), time machine going to the 19th century, beautiful costumes, coloring, photography, rustic scenery – all add magic to the short stories/fiction.

Did I say, the women in this series are just nostalgic and beautiful? The same actresses in other films were never showed them in this light.

It is relaxing, enjoyable, and pleasant. When I am in tough times (job loss, covid, other sad events), I like to watch feel-good films. When life is good (promotion, arrival of newborns, good events), I like to watch depressing movies, dystopian sci-fi.

So, I liked this Tagore series on Netflix.

via interweb

“துன்பத்தில் ஒரு பெண் இல்லை” – ரவீந்திரநாத் தாகூரின் கதைகள் சக்திவாய்ந்த பெண்களை சித்தரிக்கின்றன

By ராஜ் தீபால பாண்டே

தாகூர் எழுதிய கதைகள்

நோபல் பரிசு பெற்ற ரவீந்திரநாத் தாகூர் முற்போக்கான, தைரியமான, மற்றும் அவர்களின் காலத்திற்கு முன்னால் இருந்த கதைகளுக்கு பெயர் பெற்றவர். இந்த கதைகளின் தொகுப்பானது ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் “ரவீந்திரநாத் தாகூரின் கதைகள்” என்ற பெயரில் அனுராக் பாசு இயக்கியது. இது EPICசேனலில் ஒளிபரப்பப்பட்டது, மேலும் இது பார்வையாளர்களிடமிருந்தும் விமர்சகர்களிடமிருந்தும் பாராட்டுக்களைப் பெற்றது. இந்த நிகழ்ச்சி தற்போது நெட்ஃபிக்ஸ் இல் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது. அனுராக் பாசு வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து தனது தனித்துவமான தொடர்பைக் கொடுத்தார், மேலும் நடிகர்கள் தங்கள் பங்கை மிகச்சிறப்பாக நடித்து இந்த கதைகளை உயிர்ப்பிக்க வைத்தனர். கதைகளில் மிகவும் குறிப்பிடத்தக்க பகுதி என்னவென்றால், பெரும்பாலான கதைகளில் பெண் கதாபாத்திரங்கள் துன்பத்தில் இல்லை. தாகூரால் நெய்யப்பட்ட பெண் கதாபாத்திரங்கள் பெண்கள் பலவீனமானவர்களாகவும் சார்புடையவர்களாகவும் கருதப்பட்டு ஆணாதிக்க வங்காள சமுதாயத்தால் ஒடுக்குமுறைக்கு ஆளான காலங்களில் தைரியமாக இருந்தன. ரவீந்திரநாத் தாகூரின் சில கதைகளின் பட்டியல் இங்கே, பெண் கதாபாத்திரங்கள் அவற்றின் காலத்திற்கு முன்னால் இருந்தன, தங்களுக்குள் புரட்சிகரமாக இருந்தன.

1. சோகர் பாலி

சோக்கர் பாலி

ஆதாரம்: தாசா புதுப்பிப்புகள்

சோகர் பாலி என்பது ஒரு பெங்காலி சொல், அதாவது ‘கண்ணில் மணல்’ அல்லது ‘கண்ணில் உள்ள துகள் தொடர்ந்து எரிச்சலை ஏற்படுத்துகிறது’. இந்த சொல் தனிநபர்களுக்கிடையேயான உறவுகளின் சிக்கலான வலையை மிகச்சரியாக விவரிக்கிறது, குறிப்பாக இந்த வார்த்தை ஒரே மனிதனை விரும்பும் இரண்டு பெண்களுக்கு இடையிலான பொறாமையை விவரிக்கிறது. ராதிகா ஆப்டே, ஆரம்பத்தில் விதவை பெற்ற பினோதினி என்ற பெண்ணின் கதாபாத்திரத்தில் நடித்தவர், ஆஷலதாவை திருமணம் செய்து கொண்ட மகேந்திராவின் மீது கண்களைக் கொண்ட ஒரு பெண்மணியாக சித்தரிக்கப்படுகிறார். பினோடினி ஒரு விதவை, இது சமூகத்தின் ஒடுக்கப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட பிரிவாக கருதப்பட்டது. மகேந்திராவை அவளது சிற்றின்பத்தால் கவர்ந்திழுக்க முயற்சிக்கையில், அவளது பாலுணர்வை ஆராய அவளுக்கு ஒரு வெறி இருந்தது. இது காமம் மற்றும் பொறாமை ஆகியவற்றின் கலவையாக இருந்தது, ஏனென்றால் பினோடினியை கூட பார்க்காமல் திருமணம் செய்து கொள்ளும் திட்டத்தை மகேந்திர நிராகரித்தார், மேலும் அழகான ஆனால் படிக்காத பெண்ணாக இருந்த ஆஷலதாவை மணந்தார். தனது வாழ்க்கையில் எந்த விதியை எதிர்கொண்டாலும் அது மகேந்திரா மற்றும் அஷலதா தான் என்று பினோடினியின் இதயத்தில் ஆழ்ந்த மனக்கசப்பு இருந்தது, மேலும் அவர் அவருக்கு ஒரு சிறந்த போட்டி என்று அவர் நம்பினார். அவள் ஆஷலதாவுடன் நட்பு கொண்டிருந்தாள், இது மகேந்திராவை நெருங்குவதற்கான வாய்ப்பாகக் கண்டாள்.

    பினோடினியின் விதவை அவளது பாலியல் ஆசைகளை அடக்கச் செய்யவில்லை. அவர் ஒரு வாம்பாக சித்தரிக்கப்படுகிறார் என்றாலும், அவர் சூழ்நிலைகளுக்கு பலியானார் என்ற உண்மையை மறுப்பதற்கில்லை. மகிழ்ச்சியான வாழ்க்கைக்கான அவளுடைய உரிமை அவளுடைய விதியால் பறிக்கப்பட்டது. அவர் ஒரு துறவி அல்ல, ஆனால் ஒரு பெண், அதன் செயல்கள் அன்பு, காமம் மற்றும் பொறாமை ஆகியவற்றால் நகர்த்தப்பட்டன, அது அதிக உயிர்களை நாசமாக்கியது மற்றும் அவளுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை என்பதை உணராமல். பல்துறை நடிகையாக ராதிகா ஆப்தே பினோடினியின் பாத்திரத்திற்கு நியாயம் செய்தார், இது தாகூரின் கதைகளில் மிகவும் சக்திவாய்ந்த மற்றும் புத்திசாலித்தனமான கதாபாத்திரங்களில் ஒன்றாக மாறியது.

2. Maanbhanjan

Maanbhanjan

source: instagram

ஒரு அழகான மற்றும் திறமையான பெண்மணியான கிரிபாலாவைச் சுற்றி கதை சுழல்கிறது, அவர் ஒரு பணக்கார ஆனால் மோசமான நில உரிமையாளரான கோபிநாத்தை மணந்தார். அவர் மீதான காதல் இழந்து அவர் ஒரு நாடக நடிகை லத்திகாவைப் பார்க்கத் தொடங்கினார். ஒருமுறை, கிரிபாலா தனது கணவர் தன்னைப் பற்றிய அலட்சியத்தின் மூலத்தைக் காண ரகசியமாக தியேட்டருக்குச் சென்றார். லத்திகா நடித்த லைலா மஜ்னுவின் நாடகத்தைப் பார்த்த அவர், மயக்கமடைந்தார். கணவனை மீண்டும் வெல்ல நாடக நடிகையின் அழகை ஏற்றுக்கொள்ள முடிவு செய்தார். அவரது அழகு மற்றும் பல முயற்சிகள் இருந்தபோதிலும், கோபிநாத் ஒதுங்கி இருந்தார். அவன் ஒரு முறை அவளை மோசமாகத் தூக்கி லத்திகாவுடன் ஓடிவிட்டான். லத்திகா கணிசமான காலத்திற்கு தியேட்டரில் இல்லாததால், அவருக்கு பதிலாக ஒரு புதிய நடிகை வந்தார் என்ற செய்தியைக் கேட்டார். அவர் ஏமாற்றமடைந்து, அவருக்கு பதிலாக யார் என்று கண்டுபிடிக்க கோபிநாத்தை தியேட்டருக்கு அழைத்துச் செல்லுமாறு வலியுறுத்தினார். பாராட்டுக்களைப் பெற்ற புதிய நடிகை வேறு யாருமல்ல, அவரது சொந்த மனைவி கிரிபாலா அல்ல என்பதைக் கண்ட கோபிநாத், அதிர்ச்சியடைந்தார்.

    கிரிபாலா தனது கணவரை மீண்டும் கவர்ந்திழுக்க ஒரு நாடகக் கலைஞராக ஆனார் என்று சில பார்வையாளர்கள் கருதினாலும், ஒரு முறை அவர் தியேட்டரில் சேர்ந்து புகழ்பெற்ற முகமாக மாறினார் என்ற விளக்கத்தை நான் கண்டேன், அது அவளிடமிருந்து எடுக்கப்பட்ட சரியான பழிவாங்கல் வேறொரு நாடக நடிகைக்காக அவரை விட்டு வெளியேறிய கோபிநாத். கணவனால் துஷ்பிரயோகம் செய்யப்படும் ஒரு திருமணமான பெண்ணின் அவலநிலையை இந்தக் கதை காட்டுகிறது, அதே நேரத்தில் தனக்கு ஒரு பெயரை உருவாக்க தனது துக்கங்களுக்கு மேலே உயர்ந்த அதே பெண்ணின் வலிமையையும் இது காட்டுகிறது.

3. உடைந்த கூடு (நாஷ்டானீர்)

உடைக்கப்பட-நெஸ்ட்-Nashtanirh

Thanks: pinterest

ஒரு தனிமையான இல்லத்தரசி தனது திருமணத்திற்கு வெளியே உருவாகும் ஒரு உணர்ச்சி ரீதியான இணைப்பை மையமாகக் கொண்டு, கதையின் தலைப்பு சரியானது, இது ஒரு திட்டமிடப்படாத காதல் முக்கோணத்தின் காரணமாக ஒரு திருமண உறவு எவ்வாறு சிதைந்து போகிறது என்பதைக் காட்டுகிறது. செய்தித்தாள் ஆசிரியரான பூபதி தனது பணியில் மிகவும் ஈடுபாடு கொண்டிருந்தார், அவரது மனைவி சாருலதா, அழகான, திறமையான மற்றும் படித்த பெண்மணிக்கு இசையில் ஆர்வம் கொண்டவர். அவர் தனது உறவினர் அமோல் என்ற சட்ட மாணவரை அவர்களுடன் வாழ அழைக்கிறார், இதனால் அவர் சாருலதாவுக்கு நிறுவனம் கொடுக்க முடியும். அமோல், தனது நகைச்சுவையான தன்மையுடன், அவளுக்கு ஒரு சிறந்த நிறுவனமாக மாறிவிடுகிறார், அதே நேரத்தில் அவளுக்கு இசை பாடங்களையும் தருகிறார். தேவர்-பாபி இரட்டையர்கள் இசை, கவிதை மற்றும் இயற்கையின் மீது பிணைப்பைத் தொடங்கினர். படிப்படியாக, சாருலதா தனது கணவரைப் புறக்கணிக்கும்போது அமோலுக்கு ஒரு பாசத்தை வளர்த்துக் கொண்டார். அமோல் இதை உணர்ந்து, அவளிடமிருந்து தன்னை விலக்கிக் கொள்ள முடிவுசெய்து, ஒரு திருமண கூட்டணியை ஏற்றுக்கொண்டார். சாருலதா அவனை தங்குமாறு கெஞ்சினாலும் அவர் அவ்வாறு செய்யவில்லை. க்ரெஸ்ட்ஃபாலன், அவள் மீண்டும் தனிமையாகி, அமோல் வெளியேறியவுடன் இசை மற்றும் கவிதை மீதான அனைத்து ஆர்வத்தையும் இழந்தாள். தனக்கு ஒரே ஆதரவாக இருந்த மனைவி, தனது தம்பியின் எண்ணங்களில் தொலைந்து போயிருப்பதை அறிந்த பூபதி மனம் உடைந்தாள். மைசூரில் ஒரு வேலையை எடுக்க அவர் நகரத்தை விட்டு வெளியேறினார், சாருலதாவிடம் தன்னுடன் இருந்தால் மட்டுமே அவளை தன்னுடன் அழைத்துச் செல்வேன் என்று கூறி அவளது சோகத்தையும் தனிமையையும் முடிவுக்குக் கொண்டுவந்தான். அவள் உண்மையாக இருக்க முடிவுசெய்து, இந்த திருமணத்தில் எந்தவிதமான உணர்ச்சிகரமான தொடர்பும் இல்லை என்பதை அறிந்த அவனுடன் செல்ல மறுத்துவிட்டாள்.

   ஒரு வழக்கமான உலகத்தைப் பொறுத்தவரை, திருமணமான ஒரு பெண் மற்றொரு ஆணுக்கு விழுவது ஒரு முழுமையான பாவமாகத் தோன்றலாம். ஆனால் சாகுலதா கறுப்பு நிறத்தை வரைவதற்கு தாகூர் தைரியமாக இருந்தார். இந்த நிகழ்ச்சி ஒரு பெண்ணின் தனிமை, அவரது துக்கம், வாழ்க்கையின் அனைத்து சிறிய விஷயங்களிலும் அவருடன் சேர்ந்து கொள்ள வேண்டும் என்ற ஆசை, சாருலதா இழந்த அனைத்தையும் மிக அழகாக சித்தரிக்கிறது. சாருலதா கதாபாத்திரத்தில் நடிக்கும் அமிர்தா பூரி பார்வையாளர்களை தனது ஒளி வீசுவதால் மெய்மறக்கச் செய்து கதையை உணர்ச்சிவசப்பட வைக்கிறது.

4. எறும்பு அரம்பு (“சமப்தி” அடிப்படையில்)

எறும்பு aarambh சார்ந்த மீது Samapti

Courtesy: pinterest

இது இரண்டு துருவ எதிர் நபர்களுக்கு இடையிலான காதல் கதை. அபூர்பா, ஒரு பணக்கார குடும்பத்தைச் சேர்ந்தவர், படித்தவர், தனது விதவை தாயிடம் கீழ்ப்படிதல் கொண்டவர், ஒரு தாழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த டோம்பாய்ஷ் பெண்ணான மிருன்மொயீயைக் காதலிக்கிறார். ஒரு மருமகள் மற்றும் ஒரு பாரம்பரிய வீட்டில் பொருத்தமாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்திற்கு அவள் வெறுப்படைந்தாள். அபூர்பாவின் தாயும் மிருன்மொயீயை ஒப்புக் கொள்ளவில்லை, ஆனால் இறுதியாக தனது மகனின் ஒரே விருப்பத்திற்கு அடிபணிந்து, அவர்களை திருமணம் செய்து கொண்டார். மிருன்மோய் அபூர்பாவிடம் தன்னை நேசிக்கவில்லை என்று தெளிவாகக் கூறுகிறார், மேலும் ஒரு மரபுவழி குடும்பத்தின் மருமகளின் தரத்துடன் பொருந்த முயற்சித்ததில்லை. ஆனால் அபூர்பாவின் கனிவான இதயமும், அவர்மீது அவர் கொண்டிருந்த அன்பும், அவருக்காக அவளை வீழ்த்தியது, அதே நேரத்தில் அவளும் மாமியார் மீது ஒரு பாசத்தை வளர்த்துக் கொண்டாள், அவளுடைய பாசத்தை வென்றாள்.

     ஒரு ஆண் தன்னை காதலிக்க வைப்பதற்கு பெண்ணின் தன்மை, நேர்த்தியானது அல்லது கருணை போன்ற சமூக விதிமுறைகளுக்கு ஒரு பெண் பொருந்த வேண்டியதில்லை என்ற கதை ஒரு செய்தியை அனுப்புகிறது. அவள் அவளாகவே இருக்க முடியும், அவளுடைய எல்லா குறைபாடுகளையும் மீறி சரியான மனிதன் அவளை நேசிப்பான். இங்கே, திருமணத்திற்குப் பிறகு ஒரு பெண்ணின் வாழ்க்கை ஏன் கடுமையாக மாறுகிறது என்பதை மிருன்மோயியால் புரிந்து கொள்ள முடியவில்லை, அதே நேரத்தில் ஒரு பையனின் வாழ்க்கை அப்படியே உள்ளது. இந்த நிகழ்ச்சி ஒரு பெண்ணாக இருந்து ஒரு பெண்ணாக இருக்கும் பயணத்தின் பாரம்பரிய யோசனையையும், இந்த யோசனைகளுக்கு எதிராக நிற்கும் கதாநாயகன் பற்றியும் ஆராய்கிறது.

5. தண்டனை (‘சாஸ்தி’ அடிப்படையில்)தண்டனை அடிப்படையிலான மீது Shastiஆதாரம்: எழுத்தாளரின் கஷாயம்

“நான் என் மனைவியை இழந்தால் இன்னொருவரைப் பெற முடியும், ஆனால் நான் என் சகோதரனை இழந்தால் நான் எப்படி மற்றொரு சகோதரனைப் பெறுவது?” கதையில் ஒரு கதாபாத்திரத்தால் கூறப்பட்ட இந்த வரிகள் பெண்களை மனித நேயமயமாக்குவதன் வேதனையான யதார்த்தத்தை வெளிப்படுத்துகின்றன, குறிப்பாக ஒரு மனைவி மற்றும் மருமகளின். பெண்கள் வெறுமனே சமூகத்தில் மலிவான, மாற்றக்கூடிய பொருட்களாக கருதப்படுகிறார்கள். ஒரு திருமண வீடு ஒரு பெண்ணின் உண்மையான வீடாகக் கருதப்படுகிறது, ஆனால் அவள் காட்டிக் கொடுக்கப்பட்டு மாற்றக்கூடிய விஷயமாகக் கருதப்பட்டால் என்ன செய்வது? தாகூரின் ‘சாஸ்தி’யை அடிப்படையாகக் கொண்ட’ தண்டனை ‘என்பது ஒரு கதை, அங்கு மினி என்ற இளம் பெண் தனது பெற்றோர் வீட்டில் நேசிக்கப்படுகிறாள், அவளது புதிய வீட்டில் சரிசெய்ய முயற்சிக்கிறாள். அவரது மூத்த மைத்துனர் ஒரு மோசமான பெண்மணி, அவர் எப்போதும் வேலை செய்வதைக் கண்டித்தார், அதே நேரத்தில் அவரது கணவர் உபேந்திரா ஒரு அன்பான மனிதர், வீட்டில் அவரது ஒரே தனிமை. ஒரு அதிர்ஷ்டமான தேதியில், அவரது மைத்துனருக்கும் அவரது மனைவிக்கும் இடையே ஒரு சூடான வாக்குவாதம் நடந்தது, அந்த தருணத்தின் வெப்பத்தில், அவர் அவளைக் கொன்றார். காவல்துறையினர் வந்ததும், இதனால் முற்றிலும் அதிர்ச்சியடைந்த அப்பாவி மினி மீதான குற்றச்சாட்டுகளை உபேந்திரா மாற்றினார். இரண்டு பெண்களுக்கு இடையே சண்டை ஏற்பட்டதாக அவர் போலீசாரிடம் கூறினார், மினி தற்செயலாக ராதாவின் தலையில் ஒரு குவளை அடித்தார். மினி எல்லா வழிகளிலும் அமைதியாக இருந்தார். அவள் மறுக்கவில்லை. கீழ்ப்படிதலுள்ள மனைவியின் கடமையை நிறைவேற்ற வேண்டும் என்ற தந்தையின் வார்த்தைகளை அவள் நினைவில் வைத்தாள். உபேந்திரா குற்றத்தை இனி தாங்க முடியாதபோது, ​​அவர் தான் குற்றவாளி என்று திறந்த நீதிமன்றத்தில் கூறினார். தனது சகோதரனின் தியாகத்தைப் பார்த்ததும், மூத்த சகோதரர் தேவேந்திரர் கடைசியாக தனது மனைவியைக் கொன்றது என்று ஒப்புக்கொண்டார். இந்த குழப்பத்தில், மினி பின்வாங்கவில்லை, முன்பு அவர் மட்டுமே என்று கூறப்பட்டதால், அவர் நீதிமன்றத்தால் தூக்கு மேடைக்கு அனுப்பப்பட்டார்.

    வெளிப்புறமாக, மினி தனது கணவனையும் அவரது சகோதரரையும் காப்பாற்றும் ஒரு நல்ல மனைவியின் கடமையை நிறைவேற்றுவதாகத் தோன்றலாம். ஆனால் உண்மையில், அது அவளுடைய அமைதியான கிளர்ச்சி. தனது நம்பிக்கையை காட்டிக்கொடுத்து சிறைக்கு அனுப்பிய கணவருக்கு எதிரான கிளர்ச்சி. அவர் தனது தரையில் நின்று, தனது கணவரை பாரிய குற்ற உணர்ச்சி, தனிமை மற்றும் வருத்தத்தின் ஆயுள் தண்டனைக்கு அனுப்ப இறக்க தயாராக இருந்தார். தன்னை பின்னுக்குத் தள்ளிய கணவனை விட தூக்கு மேடைக்கு தன் உயிரைக் கொடுக்க அவள் தயாராக இருந்தாள். சோதனை முழுவதும் மினியின் ம silence னம் மற்றும் இறுதி வரை கதையின் மிக சக்திவாய்ந்த, இதயத்தைத் தூண்டும் பேச்சு என்பதை நிரூபித்தது.

6. டுய் பான் (இரண்டு சகோதரிகள்)டுய் பான் (இரண்டு சகோதரிகள்)ஆதாரம்: ரைட்டர்ஸ் ப்ரூ

கதாநாயகர்களின் பாலின மாற்றத்துடன் கதை தி ப்ரோக்கன் நெஸ்ட்டைப் போன்றது. இங்கே ஒரு மனிதன் தன் மனைவியின் சகோதரியை காதலிக்கிறான். கதை ஒரு பெண்ணின் இரண்டு வடிவங்களை சித்தரிக்கிறது. ஒன்று அன்பானவர் – மகிழ்ச்சியான, கட்டுப்பாடற்ற மற்றும் சுதந்திரமான, காமவெறி, மற்றும் உற்சாகம் நிறைந்தவர். மற்றொன்று தாய்மார் அன்பின் ஒரு வடிவம் – பாசம், கவனிப்பு மற்றும் பாதுகாப்பு நிறைந்தவை. ஒரு மனிதன் எப்போதுமே இந்த இரண்டு வடிவங்களையும் தனது வாழ்க்கைத் துணையில் விரும்புகிறான், ஆனால் எப்போதாவது எந்தவொரு பெண்ணும் இந்த எல்லா பண்புகளையும் பெற்றிருக்கிறாள். ஆகவே, மனிதன் தனது வாழ்க்கையில் காணாமல் போன விஷயங்களில் ஈர்க்கப்பட்டு, குழப்பத்தில் இருக்கிறான். தாய்மைப் பண்புகள் அனைத்தையும் பெற்ற மூத்த சகோதரியான ஷர்மிலாவின் கணவர் ஷஷாங்க். ஆனால் அவள் அவனுக்கு மிகவும் பாதுகாப்பானவள், மேலும் அவன் அவளை ஒரு கூண்டில் வசிப்பதைப் போல உணரவைக்கிறான், அவன் அவளை மிகவும் நேசிக்கிறான். ஷர்மிலாவின் தந்தையிடமிருந்தும் அவர் பெரும் உதவிகளைக் கொடுத்தார், எனவே அவர் அவர்களிடம் நன்றியுணர்வை உணர்ந்தார், மேலும் அவரது உணர்வுகளை அவளிடம் ஒருபோதும் திறக்க முடியவில்லை. மருந்துகள் படித்து வரும் ஷர்மிலாவின் தங்கை உர்மி, ஷர்மிளாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் போகும்போது அவர்களுடன் வாழ வருகிறார். நோய்வாய்ப்பட்ட தனது மனைவிக்கு நேரமில்லை, ஒரு வேலையாள் ஷாஷாங்க், இப்போது பெரும்பாலான நேரத்தை வீட்டிலேயே செலவிட்டார். அவரும் உர்மியும் நட்பு மற்றும் வசதியான உறவுகளைப் பகிர்ந்து கொண்டனர், டென்னிஸில் பொதுவான ஆர்வம் கொண்டிருந்தனர், மேலும் பெரும்பாலும் மனம் கவர்ந்த தருணங்களை ஒன்றாகக் கழித்தனர். அவர் தனது வேலையை புறக்கணிக்கத் தொடங்கினார், இதனால் அவரது வணிகத்திற்கு இழப்பு ஏற்பட்டது, அதில் ஷர்மிளாவுக்குத் தெரிந்தது. கடனை அடைப்பதற்கும், புதிதாக வியாபாரத்தைத் தொடங்குவதற்கும் அவள் நகைகளை அடமானம் வைத்தாள், ஷாஷாங்க் அதைப் பற்றி தெரிந்து கொள்ளவில்லை என்பதை உறுதிசெய்தாள். விரைவில் சஷாங்கும் உர்மியும் ஒருவரையொருவர் காதலித்தார்கள். இந்த நெருக்கம் பற்றி ஷர்மிளாவுக்கு நன்றாகவே தெரியும், அவளுடைய உடல்நிலை மோசமடைந்து கொண்டே இருந்தது, அவளுடைய காதல் அவளிடமிருந்து விலகிச் சென்றது, ஆனாலும் அவள் கணவனின் மகிழ்ச்சிக்காக அமைதியாக இருந்தாள். தனக்கு மிகக் குறுகிய ஆயுட்காலம் இருப்பதை அவள் உணர்ந்தாள். எனவே அவள் ஷஷாங்கையும் உர்மியையும் அழைத்து எப்போதும் நிரந்தரமாக இருக்கச் சொன்னாள். இதற்கிடையில், ஷர்மிலா நகைகளை அடமானம் வைத்திருப்பது குறித்து ஷஷாங்கிற்கு தெரிய வந்தது. ஒரு குற்றப் பயணம் அவரைத் தாக்குகிறது, அவர் தனது அன்பான மற்றும் அக்கறையுள்ள மனைவியை தனது சுயநலத்திற்காக காட்டிக் கொடுத்தார் என்ற உணர்வு. அவர் திருத்தங்களைச் செய்ய முடிவுசெய்து, உர்மியுடன் பிரிந்து செல்வதாக ஷர்மிலாவிடம் கூறுகிறார், அது ஒரு தவறு என்பதால். இதற்கிடையில், அவர்கள் இருவரும் ஏற்கனவே தங்கள் இடத்தை விட்டு வெளியேறிய உர்மியிடமிருந்து ஒரு கடிதத்தைப் பெறுகிறார்கள், மேலும் படிப்புக்காக வெளிநாடு சென்று கொண்டிருந்தனர். கடிதத்தில் ஷர்மிளாவுக்கு இவ்வளவு வேதனையை ஏற்படுத்திய இந்த முறைகேடான உறவுக்கு சகோதரியிடம் மன்னிப்பு கேட்டார்.

     ஒரு ஆணின் வேறொரு பெண்ணிடம் செல்வதைத் தடுக்க, ஒரு மனைவி அவனை மகிழ்ச்சியாக வைத்திருக்க தன்னால் முடிந்ததைச் செய்ய வேண்டும் என்று அடிக்கடி கூறப்படுகிறது. கணவருக்காக ஒரு மனைவி செய்த தியாகங்களை கதை சித்தரிக்கிறது, அவர் இன்னும் திணறடிக்கப்பட்டு தனது சகோதரிக்காக விழுந்தார். இது ஒரு பெண்ணின் தைரியத்தின் கதையைச் சொல்கிறது, அவர் தனது கணவரும் அவரது சகோதரியும் அவருக்கு மிகவும் தேவைப்படும்போது நெருங்கி வருவதைக் கண்டார், இன்னும் அவரது மகிழ்ச்சிக்காக அமைதியாக இருந்தார். ஒரு பெண்ணின் விருப்ப சக்தியைப் பற்றியும் இது கூறுகிறது, அவளுடைய இணைப்பு மற்றும் வலுவான உணர்வுகள் இருந்தபோதிலும், சரியான பாதையில் செல்லவும், சட்டவிரோத உறவிலிருந்து தனது படிகளை பின்வாங்கவும் தைரியம் இருந்தது, அவளுடைய சகோதரியின் மகிழ்ச்சிக்காக.

7. மிருனால் கி சித்தி (‘ஸ்ட்ரியர் போட்ரோ’ அடிப்படையில்)ஸ்ட்ரியர் போட்ரோவை அடிப்படையாகக் கொண்ட மிருனால் கி சித்திமூல: Pinterest

கதை ஒரு அழகான, புத்திசாலித்தனமான பெண், எழுதுவதில் விருப்பம், ஒரு ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர், ஒரு பணக்கார குடும்பத்தினரால் திருமணத்திற்காக நல்ல தோற்றத்தின் அடிப்படையில் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டார். இது ஒரு பழமைவாத குடும்பமாக இருந்தது, அங்கு பெண்களின் வாழ்க்கை சமையலறையில் மட்டுமே இருந்தது. அவளுடைய இருண்ட நிறத்திற்காக எப்போதும் அவதூறாக இருந்த அவளுடைய மூத்த சகோதரி, எந்த கேள்வியும் இல்லாமல் விதிமுறைகளை ஏற்றுக்கொண்டாள். ஆனால் மிருனால் வித்தியாசமாக இருந்தார், எப்போதும் பாலியல் பற்றி கேள்வி எழுப்பினார். அவளுடைய மூத்த சகோதரியின் தூரத்து சகோதரி பிந்து, ஒரு சிறுமி அவர்களுடன் வாழ வந்தபோது, ​​எல்லோரும் அவளை ஒரு ஊதியம் பெறாத ஊழியரைப் போலவே நடத்தினார்கள், மிருனால் மட்டுமே அவள் பக்கத்தில் நின்றாள். பிந்துவின் சுமையிலிருந்து விடுபட, அவர்கள் அவளுக்காக ஒரு திருமணத்தை ஏற்பாடு செய்தனர். மிருனாலுக்கு அவளுடைய அச்சங்கள் இருந்தபோதிலும், பிந்து தனது புதிய வீட்டில் மகிழ்ச்சியாக இருப்பார் என்ற நம்பிக்கை அவளுக்கு இருந்தது. திருமணத்திற்குப் பிறகு பிந்துவின் கணவர் ஒரு பைத்தியக்காரர், அவரது குடும்பத்தினர் அவளை உடல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்தனர். மிருனால் பிந்துவை மீண்டும் அழைத்து வர முயன்றார், ஆனால் அவரது குடும்பத்தினர் அவரை எதிர்த்தனர். பூரிக்கு யாத்திரை என்ற போலிக்காரணத்தில் வீட்டை விட்டு வெளியேறி, பிந்துவை வீட்டிலிருந்து அழைத்துச் செல்ல அவள் தீர்மானிக்கிறாள். ஆனால் பிந்து தன்னை தீ வைத்துக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார் என்ற துயரமான செய்தி அவளுக்கு கிடைத்தது. உடைந்து நொறுங்கி, அவள் தன் கணவருக்கு ஒரு கடிதம் எழுதுகிறாள், மேலும் பெண்களுக்கு மரியாதை இல்லாத தனது வீட்டிற்கு ஒருபோதும் திரும்பி வரக்கூடாது என்ற தனது தீர்மானத்தை அவனிடம் கூறுகிறாள்.

    கதை மிகவும் தொடுகின்றது மற்றும் இதயம் உடைக்கும் ஒன்று. ஒரு பெண் மட்டும் சமுதாயத்தின் ஆணாதிக்க விதிமுறைகளை சவால் செய்கிறாள், கணவனின் கட்டளைகளுக்கு அடிபணிய மறுக்கிறாள், ஒரு சிறுமி அனுபவிக்கும் அட்டூழியங்களுக்கு எதிராக போராடுகிறாள், அவளுக்கு ஆதரவாக யாரும் இல்லை. பிந்து இறந்துவிட்டார், ஆனால் அவரது மரணம் மிருனாலுக்குள் சுயமரியாதையின் தீப்பிடித்தது, அவர் இப்போது தனது குடும்பத்தை விட்டு வெளியேறி, தனது நிபந்தனைகளுக்கு ஏற்ப தனது வாழ்க்கையை வாழ தயாராக இருந்தார். வாழ்க்கையில் செய்ய வேண்டியது நிறைய இருப்பதை அவள் உணர்ந்தாள், அந்த வீட்டின் மருமகளாக இருப்பதன் மூலம் அவளால் சாதிக்க முடியவில்லை. அமிர்தா பாக்சி நடித்த மிருனாலின் கதாபாத்திரம் அப்பாவி மற்றும் அமைதியானதாகத் தோன்றுகிறது, ஆனால் குருதேவ் செதுக்கிய வலிமையான மற்றும் கடுமையான பெண் கதாநாயகர்களில் ஒருவர்.

      அந்தக் காலத்து பெண்கள் தங்கள் குரல் சமூகத்தில் கேட்கப்படுவதை உறுதிசெய்ய இன்னமும் சிரமப்பட்டுக் கொண்டிருந்தாலும், குருதேவ் எழுதிய இந்த சக்திவாய்ந்த பெண் கதாபாத்திரங்கள் கதையின் மற்ற கதாபாத்திரங்களை மறைத்துவிட்டன.

கொஞ்சம் இடைவெளி: கொரோனா கதைகள்

முதலில் கதையைப் படித்து விடுங்கள்:

https://www.newyorker.com/magazine/2020/03/23/out-there

“Out There,” by Kate Folk | The New Yorker: Fiction by Kate Folk: “The early blots had been easy to identify. They were too handsome, for one thing.”

ப்ளாட் என்பது என்ன? பாட் போல் அதுவும் கணினியில் மட்டும் இயங்குவது.

நம் துணைவர் எப்படி இருக்க வேண்டும்? என்னுடைய விஷயத்தில் அக்கறை எடுப்பார். தும்மினால், இருமினால் என்னாச்சு என்பார். எவனாவது இணையத்தில் தாக்கினால் குரல் கொடுப்பார். நான் செய்யும் அச்சுபிச்சுகளைப் பொறுப்பார். ப்ரூ காபி விளம்பரம் போல் எதிர்பாராததை செய்வார். வெறுமனே காமத்திற்கு மட்டும் என்னை உபயோகிக்க மாட்டார்.

மாடு பிடிப்பது போல் ஆணைத் தேடும் சமூகம். சந்தை போல் குவிந்திருக்கிறார்கள். அதில் பாதி பேர் போலி. கொஞ்ச காலம் துணையாக நடிப்பார்கள். பார்ப்பதற்கு கவர்ச்சியாக இருப்பவர்கள் சட்டென்று இன்னொரு பெண்ணின் பின் சென்று விடுகிறார்கள். கரிசனத்துடன் விசாரிப்பவர்கள் பின்னொரு நோக்கத்தோடு வேறொரு பாதையில் போய் விடுகிறார்கள்.

இந்த நிலைமையில் எப்படி பொருத்தம் பார்ப்பது? யோனி, ரஜ்ஜு எல்லாம் போதுமா? பழக வேண்டும். ஆணின் உண்மையான குணாதிசயம் தெரிய வேண்டும். அந்தரங்கம் வெளிப்பட வேண்டும். ஆத்மார்த்தமான அன்பு உணரப்பட வேண்டும்.

இதைத் தற்காலத்திற்கேற்ப இந்தக் கதை சொல்கிறது.

கதாநாயகிக்கு நிறைய பிரச்சினைகள். முன்னாள் குடிப்பழக்கம்; தனிமை; அனாதரவாக விட்ட தந்தை; புதிய நகர வாசம்.

இருந்தாலும் நாயகி உயர்வாக உணர்கிறாள். சத்தான பழரசம்; பாவப்பட்ட ஜென்மம்; வஞ்சிக்கப்பட்டவள்.

This piece has some things in common with the recent one in The New Yorker, “Kid Positive” by Adam Levin (interrogation of our backstories, notions of real vs. fake and where the lines blur), as well as Elvia Wilk’s 2019 novel Oval, Ishiguro’s neo-classic Never Let Me Go, Jonathan Lethem’s novel from a few years back A Gambler’s Anatomy, and the stories of Aimee Bender (நன்றி: Kate Folk: “Out There” – The Mookse and the Gripes)

இயந்திரத்தனமாக நடப்பதை விரும்பாதவரின் கதை இது. நாயகியும் எந்திரத்தனமாகும் கதை இது. வேண்டுவதை செய்யும் கணவனை எதிர்பார்க்கிறோம். எப்போதும் ஒரே மாதிரி செயல்படும் புருஷனை எதிர்பார்க்கிறோம். இது சலிப்பூட்டும். எது வேண்டுகிறோமோ, அதுவே கிடைத்துவிட்டால், இடைவெளியை கோருகிறோம்.

மேலும்…

Kate Folk on Discerning Reality on the Internet | The New Yorker: The author discusses “Out There,” her story from this week’s issue of the magazine.

உடன்வந்தி அருநிழல்

தெளிவு, உறுதி, இறுதி, உண்மை போன்றவற்றையும் மையம், நிர்ணயம், முழுமை என்பவற்றையும் ஓயாமல் வலியுறுத்தும் ஆதிக்க கருத்தியல்களுக்கும் கேள்விகள் இன்றி ஒப்படைப்பையும் முழு நம்பிக்கையைம் கொண்டியங்கும் பொதுக்கள மதிப்பீடுகளுக்கும் இடையில் உள்ள நுண் இணைப்புகள் கேள்வி மறுப்பு, ஆய்வு மறுப்பு என்பவற்றின் மூலமே உறுதிப்படுத்தப்படுகின்றன. இந்த நுண் இணைப்புகளைத் துண்டித்து கேள்விகளைப் பெருக்கும் சொல்லாடல், கதையாடல், எடுத்துரைப்பு என்பவற்றை உருவாக்கும் செயல்தான் சமூகத்தை அறம்சார் அரசியல் நோக்கி நகர்த்தக் கூடியது.
: பிரேம் – ரமேஷ்
16-03-2006

அமெரிக்கக்காரி சிறுகதையை முன்வைத்து

புழல் சிறையில் சிறைக்கம்பிகளை எண்ணும்போதுதான் அந்த ஈ அவன் கண்ணில் பட்டது. அதற்கு மெள்ள பயிற்சி தர ஆரம்பித்தான் அந்தக் கைதி. கயிற்றில் மேல் நடப்பது, ஒற்றைச் சக்கர வண்டியை கயிற்றின் மேல் விடுவது, சாதத்தில் கல் பொறுக்குவது போன்றவற்றை அந்த ஈ கற்றுக்கொண்டது. நாளடைவில் இளையராஜாவின் எல்லாப் பாடல்களையும் ஹம்மிங் கொடுக்கவும் தெரிந்துகொண்டது. “நான் இன்னும் ஒரு வாரத்தில் ரிலீஸ் ஆயிடுவேன். நாம் இரண்டு பேரும் இந்த ஜெயிலை விட்டு வெளியே போனப்புறம் உன்னை வைத்து வித்தை காட்டப் போகிறேன். இருவரும் பெரும் புகழடைவோம்.” என்று அதனிடம் சொல்லி வைத்திருந்தான். விடுதலையும் ஆனான். ஈயை ஒரு வத்திப் பெட்டியில் பத்திரமாக வைத்து, சட்டைப்பையில் கீழே விழாதபடிப் பார்த்துக் கொண்டு வெளியுலகை அடைந்தான். டாஸ்மாக் வளாகத்தில் ஈயை திறந்து விட்டு, ‘அந்த நிலாவத்தான் நான் கையிலப் புடிச்சேன்…’ பாடலைப் பாட வைத்தான். “பார்த்தியா அந்த ஈய?!” என்று சக குடிகாரரிடம் சொல்லவும் அவர் தி இந்து நாளிதழை வைத்து அந்த ஈயைப் பட்டென்றுக் கொல்வதற்கும் சரியாக இருந்தது.

இந்த நகைச்சுவை உங்களுக்கு ஏற்கனவே தெரியுமென்றால், நான் ஈ + சிறை எனத் துவங்கியவுடனே என்னை அடித்து நிறுத்தி சிரித்துக் கடந்துவிடுவீர்கள். ஏனென்றால், தெரிந்ததை எதற்கு மறுபடி சொல்லிக் கொண்டிருப்பானேன் – என்பது எண்ணமாக இருக்கும். இதற்கு நாளடைவில் ஜோக் #73 என்று எண் கூட கொடுத்து வெறும் எண்ணைச் சொல்லி நாமிருவரும் சிரித்துக் கொண்டிருக்கலாம். அ. முத்துலிங்கம் எழுதும் சிறுகதைகளைக் கூட இப்படி தடாலடியாக தட்டையாக விமர்சிக்கலாம் என கோகுல் பிரசாத் பதிவு மூலம் தோன்றியது.

அ முத்துலிங்கத்தின் எழுத்துகளிடையே ஆறு வித்தியாசங்களை கண்டுபிடிக்க முடியாது. இலக்கிய உலகில் இந்த மாதிரி நூறு ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் நிகழும். எதனிலிருந்தும் விலகி நிற்க வேண்டும் எனும் தத்துவத்தை அ முத்துலிங்கம் தவறாக புரிந்து கொண்டு விட்டார் என நினைக்கிறேன்.

அமெரிக்கக்காரி சிறுகதையை நான் இங்கே சுருக்கித் தரப் போவதில்லை. அது மே 2009 காலச்சுவடு இதழில் வெளியாகி இருக்கிறது. அங்கேயே வாசிக்கலாம்.

அந்தக் கதை எங்கே என் வாழ்வை உணரவைத்தது என்றும் எவ்வாறு இன்றைய அமெரிக்காவின் குறுக்குவெட்டுத் தோற்றத்தை ஓவியமாகத் தீட்டுகிறது என்பதையும் அ. முத்துலிங்கம் என்னும் மனிதர் எவ்வாறு இந்தப் புனைவில் தெரிகிறார் என்றும் பதிந்து வைக்கிறேன்.

~oOo~

காதலில் கூச்சங்கள் கிடையாது

confidence_confession

ஒப்புதல் வாக்குமூலம் கொடுப்பது ஒரு வகை. உங்களை நம்பகமானவராக நினைத்து என்னுடைய அத்யந்த ரகசியங்களை தனிமையில் சொல்வது என்பது விசுவாசம் கலந்த துறவுநிலை. இந்த இரண்டு நிலைகளும் வெவ்வேறாகத் தோன்றினாலும் சொல்லும் விதத்திலும் நிபந்தனையற்ற விதிகளில்லா திறந்தவெளிகளை உருவாக்கிக் கொடுப்பதிலும் நேரெதிர் நிலைப்பாடுகளை உருவாக்குபவை. முத்துலிங்கத்தின் ‘அமெரிக்காகாரி’ கதை இதில் இரண்டாம் வகையைச் சேர்ந்த வகை. உங்களிடம் நம்பிக்கை வைத்து சினேக மனோபாவத்தோடு விஷயத்தைச் சொல்கிறார்.

அமெரிக்கா வந்த புதிதில் அந்தச் சிக்கல் என்னிடம் இருப்பதே எனக்குத் தெரியவில்லை. பெரிய பெரிய புலமையான வார்த்தைகளான rationale என்பதில் ஆரம்பித்து Amazon நிறுவனம் வரை எல்லாவற்றையும் அமெரிக்கர்களிடம் சொல்வேன். அவர்களுக்குப் புரியாது. நாலைந்து முறை சொன்னால்தான் விளங்கும். இப்போது இந்த சிக்கல் என் பேச்சோடு இருப்பது என நான் அறிந்திருக்கிறேன். நிறுத்தி நிதானமாகச் சொல்லப் பார்க்கிறேன். இந்த மாதிரி குழப்பங்களை கதைப் போக்கில் சொல்லிச் செல்லும்போது, ‘அட… மதி என்பவளைப் பார்த்தால் என்னைப் பார்ப்பது போலவே இருக்கிறது!’ என்னும் அன்னியோன்யம் எழ வைக்கும் லாவகம் அனாயசமாக வந்து போகிறது.

இந்த மாதிரி விஷயங்களை எழுதும்போது தன்னிரக்கம், தவிப்பு, சலிப்பு, துக்கம் எல்லாம் மேலிட்டு விடலாம். புரிந்து கொள்ளாத சமூகத்தின் மேல் அறச்சீற்றம் கூட எழலாம். இப்படி சிதைவுக்குள்ளாக்குகிறார்களே எனக் கோபம் தோன்ற வைக்கலாம். அது ஒப்புதல் வாக்குமூல எழுத்து. அதில் முத்துலிங்கத்திற்கு நம்பிக்கை கிடையாது. உங்களை கொம்பு சீவி விட்டு, உணர்ச்சிகளைத் தூண்டுவது அவர் நோக்கமல்ல. ”இந்த மாதிரி எனக்கு நடந்தது… ஏன் அப்படி நடந்தது தெரியுமா?’ என்று நமக்கு நன்கு அறிமுகமானவர்களின் ரகசியங்களை கிசுகிசுவாக இல்லாமல் விசுவாசமாகப் பகிர்கிறார். பாவ மன்னிப்பு வேண்டாம்; புரிந்து கொண்டால் போதும் என்பது அவரின் உத்தி.

~oOo~

a-shadow-on-the-cloud-is-the-shadow-of-this-very-same-plane-on-the-picture-taken-on-a-flight-from-4

உடன்வந்தி அருநிழல்

இதே சிறுகதை குறித்த விமர்சன அறிமுகத்தில் ரா. கிரிதரன் இவ்வாறு எழுதுகிறார்:

கதையில் இலங்கைக்காரி தனது அமெரிக்கக்காரியை வென்று எடுக்கும் இடமாக இப்பகுதி அமைந்துள்ளது.

யுத்தம் நடந்து கொண்டிருக்கும் நகரத்தில் பஸ் பிடித்துச் சென்று அமெரிக்காவுக்குத் தொலைபேசும் தாயார் என்ன குழந்தை, பெயர் என்ன எனப் பெரும் இரைச்சலுக்கு நடுவே கேட்கிறாள். இவள் சொல்வதெல்லாம் குழந்தை ஒரு அமெரிக்கக்காரி என்பதுதான். ஆம், இவளைப் போல் இல்லாமல், அமெரிக்கா எதுவோ அதிலெல்லாம் இயல்பாய் பொருந்திப் போகும் அமெரிக்கக்காரியாக அவள் வளர்வாள்.

விமானப் பயணங்களின் போது நீங்கள் அந்த விமானத்தின் கூடவே பயணிக்கும் நிழலை கவனித்து இருக்கலாம். அ முத்துலிங்கத்தின் எழுத்தும் அது போல் நம்முடன் எப்போதும் வரும். அது நம்மைப் பற்றி சொன்னாலும், நாமே அதில் இருந்தாலும் கூட, விண்ணில் நாம் பறந்து திரிந்தாலும் அதை மண்வாசனையோடு தரையில் கொணர்ந்து நம் பயணத்தை பிரதிபலிக்கும். அதில் நம்முடைய வாழ்க்கையின் சாயல் இருக்கும்; ஆனால், அதற்காக கண்ணாடியைப் போல் பிரதிபலிக்காது. உங்கள் வயதிற்கேற்ப, அனுபவத்திற்கேற்ப, பிரபஞ்ச ஞானத்திற்கேற்ப அது சில சமயம் விரிவடையும்; சில சமயம் சுருங்கும்; சில சமயம் காணாமலே கூட போகும். விமானத்தினுள் பெருச்சாளி ஓடுகிறதா என்பதில் அசட்டையாக தூங்கிவிட்டு, அ முத்துலிங்கம் என்னும் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தால் புதிய தரிசனங்கள் கிட்டிக் கொண்டேயிருக்கும்.

அமெரிக்காகாரிக்கும் இந்தியக்காரிக்கும் இலங்கைக்காரிக்கும் என்ன வித்தியாசம்?

நிழலைப் பார்த்தால் மனிதர் தெரிவார். நிஜத்தைப் பார்த்தால் என் தலைமுடியின் வண்ணம் தெரியும். அது பிறந்த தேசத்தையும் வயதின் ரேகையையும் உணர்த்தும். தோலின் நிறம் காட்டிக் கொடுக்கும். குரல் எடுத்து பேசினால் இங்கிலாந்தா ஆப்பிரிக்காவா ஆசியாவில் சீனாவா ஜப்பானா என்று அறியலாம். உங்களின் மொழி, உடை எல்லாமே உங்களைக் குறித்த பிம்பங்களை உணர்த்தும். தெற்காசியரா… இப்படித்தான் பேசுவார்; இன்ன தொழில் செய்வார். ஆப்பிரிக்க அமெரிக்கரா… கொண்டாட்டத்தில் திளைப்பவராக இருக்கக் கூடும் என்று முன்முடிவுகளை நீங்கள் ஒரு வார்த்தை சொல்வதற்கு முன் அடுத்தவரை ஒருதலைப்பாடான பாதைக்கு இட்டுச் செல்லும்.

இதில் நிழலைப் பார்த்தால் எப்படி அமெரிக்காகாரி, எவர் இலங்கைக்காரி என்று கண்டறிவோம்? இருவரும் வீடு வாங்க பணம் சேமிக்கிறார்கள். இருசாராரும் தங்களின் கணவர்களைத் தேர்ந்தெடுக்க சில பொதுவான சித்தாந்தங்களை வைத்திருக்கிறார்கள். ஒருவர் வேகமாக முடிமெடுப்பவர், இன்னொருவர் பந்தத்திற்காக எதையும் செய்பவர் என்றெல்லாம் பிரிக்கலாம். அதற்குத் தகுந்த வினா எழுப்பி, ஒவ்வொருவரின் குணாதிசயங்களைக் கண்டடையலாம். அது சாத்தியம். ஆனால், அமெரிக்காகாரி இப்படித்தான் நடந்துப்பாள் என்றும் இலங்கைக்காரி அப்படித்தான் செய்வாள் என்பதும் சொல்லமுடியாது. அதை இப்படி போட்டுடைத்த மாதிரி சொல்லாமல் பூடகமாக உணர்த்துவது எப்படி?

அ முத்துலிங்கத்தின் கதையைப் படியுங்கள். உங்களுக்கும் சூட்சுமமாக விளங்கலாம்.

டால்ஸ்டாயின் அன்னா கரீனினாவின் தொடக்க வாசகம் புகழ்பெற்றது. ‘மகிழ்ச்சியான எல்லா குடும்பங்களும் ஒரேமாதிரியாக இருக்கின்றன, துயரமான குடும்பங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் துயரப்படுகின்றன’. அதை இந்தக் கதையில் இவ்வாறு வருவதாக சொல்லலாம்: “மனிதர்களின் அடையாளங்கள் எல்லா நாடுகளிலும் ஒரேமாதிரியாக இருக்கின்றன. அவர்களின் குணங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் வசப்படுகின்றன.”

~oOo~

உண்மை கலந்த நாட்குறிப்புகள்

‘உண்மை கலந்த நாட்குறிப்புகள்’ என்னும் முத்துலிங்கம் எழுதிய நாவலின் முன்னுரையில் இவ்வாறு எழுதுகிறார்:

டேவிட் பெனியோவ் என்ற புகழ்பெற்ற அமெரிக்க எழுத்தாளர் ஒரு நாவல் எழுதினார். 1942ல் ஜேர்மன் படைகள் ரஸ்யாவின் லெனின்கிராட் நகரத்தை முற்றுகையிடுவதுதான் நாவலின் பின்னணி. பதினெட்டு வயது இளைஞராக அப்போஉது இருந்த அவருடைய தாத்தா, டேவிட்டுக்கு அந்த சம்பவங்களை விவரிக்கிறார். எவ்வளவு விவரித்தாலும் டேவிட்டுக்கு அவை நாவல் எழுதும் அளவுக்கு போதுமானவையாக இருக்கவில்லை. ‘அன்று காலநிலை என்ன? ஆகாயம் எந்த நிறத்தில் இருந்தது? அந்தப் பெண்ணின் தலைமுடி குட்டையானதா, நீளமானதா?’ என்று தாத்தாவை கேள்விகளால் திணறடித்தார். அதற்கு தாத்தா சொன்ன பதில், ‘டேவிட், நீதானே நாவலாசிரியர். இட்டு நிரப்பு. அதுதானே உன் வேலை.’

டேவிட்டுக்கு அவர் தாத்தா சொன்ன புத்திமதிகள், நினைவலைகள் எழுதும் எவருக்கும் தேவை என்றாலும், வாசகருக்கும் தேவை.

உதாரணத்திற்கு லியோ டால்ஸ்டாய் எழுதிய அன்னா கரேனினா நாவலை எடுத்துக் கொள்வோம். அது லெவ் நிக்கலாயெவிச் டால்ஸ்டாயைப் பற்றியது அல்ல. ஆனால், அவரைப் போன்ற மனிதர்களைப் பற்றிய சித்தரிப்பு அந்த நாவல். அல்லது, தான் எப்படிப்பட்ட மனிதராக இருந்திருக்க வேண்டும் என நினைத்தாரோ அதன் பிரதிபலிப்பாக அந்தக் கதைமாந்தர்கள் இருக்கிறார்கள். அந்தக் கதாமாந்தர்கள் சில சமயம் உங்களுக்கு அசூயை தரலாம்; அல்லது உத்வேகம் தரலாம். இரண்டுமே நாவலாசிரியரின் வெற்றியே.

முத்துலிங்கம் குறித்து வாழ்க்கை வரலாறு எழுதுபவர்கள் சீக்கிரமே சலித்துவிடுவார்கள். அன்றாடம் என்ன செய்தார், எந்த ஊரில் தங்கினார், எவருடன் உரையாடினார், என்ன கோப்புகளை முன்னெடுத்தார், எவ்வாறு பழகினார், எதைக் குறித்து கதைத்தார், எப்பொழுது உண்டார் என்பதெல்லாம் வெகு எளிதாக கண்டுபிடிக்கலாம்; பதிவு செய்யலாம். அவர் எதைக் குறித்து யோசித்தார் என்பதும் இருபது புத்தகங்களுக்கு மேல் அச்சில் வெளிவந்து அனைவருக்கும் ஏற்கனவே வாசிக்கக் கிடைக்கிறது. அப்படியானால் விமர்சகரின் கடமை என்பது ’அமெரிக்காகாரி’ சிறுகதையோ, நாவல் விமர்சனமோ, கதாசிரியரின் கருத்தொட்டி, தொக்கி நிற்கும் ஆசிரியரை புனைவில் இருந்து விடுவித்து பொருள்காணுதல் என்பதேயாகும்.

சுதந்திரம் அடையாத சிலோனில் பிறந்தவர். பதின்ம வயதில் இலங்கை விடுதலை அடைவதைப் பார்க்கிறார். மின்சாரம் இல்லாத கிராமத்தில் வாழ்க்கையைத் துவங்கியவர். பெரிய குடும்பம் – ஏழு பிள்ளைகளில் ஐந்தாவது ஆவார். அங்கிருந்து உலகெலாம் பயணிக்கிறார். நவீன வசதிகளின் கண்டுபிடிப்பையும் அதன் பயன்பாடையும் பார்க்கிறார். அவருடைய வார்த்தைகளிலேயே சொல்ல வேண்டும் என்றால், ‘தென்னம் பொச்சில் நெருப்பை வைத்து மூட்டி ஒரு வீட்டிலிருந்து இன்னொரு வீட்டுக்கு நெருப்பை எடுத்துச் சென்று, ஒரு குச்சி நெருப்பு ஒரு கிராமம் முழுவதற்கும் போதுமானதாக இருந்ததில்’ வாழ்க்கையைத் துவங்கி, ஒரு நொடி இணையம் இல்லாவிட்டால் வாழ்க்கை சலித்து அபலையாய்த் தவிக்கும் நகர சமூகத்திற்கு குடிபெயர்ந்தவர்.

roulette-wheel

சூதாட்ட மையங்களில் ரூலே சக்கரத்தைப் பார்த்திருப்பீர்கள். அந்தச் சக்கரத்தில் பல்வேறு எண்கள் தாறுமாறாக கலைந்து கிடக்கும்; சிவப்பு, கருப்பு நிறம் இருக்கும். சக்கரத்தை சுழலவிட்டு பந்தை அதன் தலையில் போடுவார்கள். பந்தோ எங்கும் நிற்காமல் குதித்து, தாவி ஓடும். எந்த எண்ணில் பந்து நில்லாமல் ஓடாமல் இறுதியில் நிலைத்திருக்கிறதோ, அந்த எண்ணில் பந்தயம் கட்டியவருக்கு வெற்றி. அன்றைய சிலோன் இதைப் போன்ற சூதாட்டக் களம் என்றால், சுதந்திரம், விடுதலைப் புலி, டொனால்ட் டிரம்ப் என்று எந்தக் காலகட்டத்தை வேண்டுமானாலும் இதே போன்ற நிலையற்ற சுழல்பந்தின் குதியோட்டத்தோடு தொடர்பாக்கலாம். ஆனால், அ. முத்துலிங்கம் தன் ஒவ்வொரு கதையிலும் சுழலுகிறார். மாணவன், அசட்டைப் பேர்வழி, மோசடி பிரகிருதி, போர்வீரன், வாத்திய வாசிப்பாளர், எல்லாம் தெரிந்தவர், சூதாட்டக்காரர், துப்பறியும் சாம்பு, நிருபர், ஆசிரியர், தந்தை, தாயுமானவன், பண்டிட், இயற்கையை நேசிப்பவர், போராளி, நம்பிக்கைவாதி – உங்களுக்கு இதில் எத்தனை பேர் இந்தக் கதையில் தெரிகிறார்கள்?

தசாப்தம்

“Our incomes are like our shoes; if too small, they gall and pinch us; but if too large, they cause us to stumble and to trip.”
Philosopher John Locke

கடந்த பத்தாண்டுகள் எப்படி இருந்தது?

இன்டர்வ்யூக்களில் கேள்வி கேட்கத் தெரியாதவரிடம் மாட்டிக் கொண்டால் ‘Where do you see yourself 5 years from now?’னு பட்டவர்த்தனமாய்க் கேட்பார். ரொம்பவே லட்சியவாதியாக பொய் சொல்லாமல், அதே சமயம் உண்மை விளம்பியாக ‘உங்க சீட்டுதான் மேடம்’ என்று உளறாமல் அரை விண்டோவில் ட்விட்டர் பக்கம் திறந்து படிக்கும் சர்க்கஸ் சாகசமாய் பதில் சொல்லவேண்டும்.

சொல்லியிருப்பீர்கள். அப்பொழுது சொல்ல நினைத்த இடத்தை இப்பொழுது நீங்கள் பிடித்தாகி விட்டதா?

சுயநலம்

எனக்காக யோசித்தேன்.

2000த்தில் எங்கே மட்டிக் கொண்டிருந்தேனோ, 10லும் அதே கதவிடுக்கில் சிக்கிய நிலை. ‘வேலயில்லாதவன்தான்; வேல தெரிஞ்சவன்தான்’ என்பதாக ரஜினி பாடிய அளவு மோசமில்லை. டாக்டர் பட்டம் பெறுவதற்காக ‘எட்டாண்டுகளுக்குப் பிறகு இரண்டாண்டுகள் சரியும் பொருளாதாரம்’ தலைப்பை தேர்ந்தெடுத்து விளக்கும் சூட்சுமம் அறிந்திருந்தும், பட்டமும் பெறாமல், தெரிந்த சூத்திரத்தை வருமுன் காப்போனாக விலக்கவும் அறியாத நிலை.

க்ளின்டன் ஆட்சியின் கடைசி ஆண்டில் துவங்கிய சரிவு, ஆல் கோருக்கு ஆப்படித்து, ஆப்கானிஸ்தானில் ஆப்படித் துவங்கியபின் நிமிர்ந்தது. புஷ் இறுதியாண்டில் அடுத்த கட்ட பொருளாதார பொலபொல; ஒபாமாவும் இரானிலோ யேமனிலோ போர் தொடுக்காமல் நிற்காது போலிருக்கிறது.

இக்கரைக்கு அக்கரை பச்சை

இதற்கு இந்தியா நேர்மார். ஆட்சி கைமாறினாலும் நடுத்தர மக்களின் வளர்ச்சியில் தொய்வில்லை. குட்டி கார், பெரிய டிவி, அடுக்கு மாடியில் ஒரு வீடு, ஆளுக்கொரு செல்போன். சாய்நாத் போல் வறியோர் – வட்டிகொண்டோர் இடையே உள்ள ஏற்றத்தாழ்வை புள்ளிவிவரமாக்கா விட்டால், அபார பாய்ச்சல். மேல்தட்டு இமாலயத்தைத் தொட்டுப் பார்க்கிறது. மிடில் கிளாஸ் ஆனைமுடியைத் தாண்டிவிட்டது.

கல்லூரி முடிந்தவுடன் தொடரும் பருவமும் இலக்கும் எளிமையானவை. கை நிறைய சம்பளம் கொடுக்கும் வேலை; வேளாவேளைக்கு வடித்துக் கொட்ட மனைவி; அவளின் என்டெர்டெயின்மென்டுக்கு குழந்தை; பெற்றோரை விட்டு போதிய தூரம்; கோல்ஃப் ஆடி தண்ணியடிக்கவோ, தண்ணியடித்து பௌலிங் போடவோ நான்கு நண்பர்கள்.

எளிமையான கனவு கண்டால், கனிவாக சித்திக்கும் பத்தாண்டுக் காலம். அதற்கு அடுத்த பத்தாண்டுகள்?

நாற்பது வயதில் நாய்க்குணம்

Peer pressureஐ வெளிக்காட்டாத ஆசாமியானால், ஐபிஓ பார்த்த கல்லூரித் தோழனையோ, சிக்யூஓ ஆகிவிட்ட நண்பனின் மனைவியையோ, இந்தியா திரும்பி ஆஃப்ஷோரிங்கை நிரூபித்த நபரையோ உதாரண புருஷராக நினைக்காமல், 9 டு 5 சாகரத்தில் சங்கமமே விருப்பமாக சொல்லிவிடுவார்.

கொஞ்சம் ஹைப்பர் பேர்வழியானால், தலை 5 (இப்ப மீந்திருப்பது நான்கா/மூன்றா) கான்ட்ராக்ட் வேலையில் மூழ்கி பார்ட்னராகும் பாதை பக்கம் பேபி ஸ்டெப்ஸ் வைத்திருப்பார்.

Contractors as Prostitutes vs Marriage as Full Time Employment

நிரந்தர வேலைக்காரரை மனைவி எனவும், குந்துரத்தரை வரைவின் மகளிர் எனவும் ஒப்புநோக்கலாம்.

மனைவிக்கு விவாகரத்து தர ஜீவனாம்சம் அழவேண்டும். முழு நேர உழைப்பாளியை நீக்கினால் severance pay தரவேண்டும். சிஎன்என் தலைப்புச் செய்தி போல் நிமிடந்தோறும் மாறும் தொழில்நுட்பங்களை குந்துரத்தர் கரைத்துக் குடித்திருக்க வேண்டும். கீப் எனப்படுபவள் அதே போல் தன் தோற்றத்தை சிக்கென்று வைத்திருக்க வேண்டும்.

இன்ஷூரன்ஸ், பென்சன் மாதந்தோறும் பற்றுக் கணக்கு போல், மனைவியோடு இலவச இணைப்பாக மாமனார், மாமியார் தொகையறா செலவுகள் எக்கச்சக்கம். ரேட்டு நிறைய என்றாலும், குந்துரத்தரோடு ஒரு மணி நேரத்திற்கு ‘இத்தினி ரேட்டு’ என்று பேசிவிட்டால், முடிந்தது காரியம்.

மத்தியமரில் இத்தனை வகையா?

தாலி கட்டிய பத்தாண்டுகளுக்குப் பிறகு வாழ்க்கைப் பாதை எவ்விதம் அமைக்க விருப்பம்?

1. காலாகாலத்திற்கும் சம்பளம்; கவர்ன்மென்ட்டு உத்தியோகம் போல் வால் ஸ்ட்ரீட் இருக்கை.
2. கான்ட்ராக்டர் -> கன்சல்டன்ட் -> பார்ட்னர் -> சொந்த நிறுவனம்
3. புத்தம்புது ஐடியா + ஏமாந்த முதலீட்டாளர் = மாறிக் கொண்டேயிருக்கும் நிறுவன ஸ்தாபனர்

அமெரிக்கரை மேற்கண்ட மூன்று வட்டத்துள் சுருக்கினால், இந்தியரை எவ்விதம் அடக்கலாம்?

வளர்ச்சியை மட்டுமே கண்டிருக்கும் தலைமுறையை இப்படி பாகுபடுத்துவது இயலாது. கடந்த இருபதாண்டுகளாக பொருளாதாரத்தில் தேக்க நிலையைக் கண்டிராத சமூகம்.

பொறியிழந்த விழியினாய் போ போ போ

அமெரிக்காவைப் போல் போரை நம்பி பிழைக்காத நிதிநிலை. ரஷியாவைப் போல் அரசாங்க செலவை மட்டுமே நம்பியிராத நிலை. எமிரேட்ஸைப் போல் எண்ணெயைத் தலைக்கோசரம் வைத்து உறங்காத வளம்.

இத்தகைய நாட்டின் இளைய தலைமுறையையும், கொஞ்சம் தலை நரைத்த தலைமுறையும் பொருளாதாரச் சரிவை எதிர்கொள்ளுமா? அப்படி மாபெரும் வீழ்ச்சி வந்தால் எப்படி சமாளிக்கும்?

சத்யம் தந்த சாம்பிள் போல் தற்கொலையும், அமெரிக்க இந்தியர் சிலர் மேற்கொண்ட மரணங்களும் அன்றாட பெட்டிச் செய்திகளாகி விடும்.

Call center ஆப்பிரிக்காவிற்கும் தென்கிழக்காசியாவிற்கும் இடம்பெயர்ந்தால் transferable skill ஆக எதைக் கொண்ட ஜெனரேஷன் இந்தியாவில் இருக்கிறது?

லட்சக்கணக்கில் இளநிலைப் பொறியாளரை உருவாக்கிவிடும் பல்கலைக்கழகங்களும் கல்லூரிகளும், பட்டதாரிகளை தொழில் முனைவோராகவும், சுயசிந்தனையாளர்களாகவும், வாக்குஜால வித்தர்களாகவும் மாற்றுவது எக்காலம்?

நகரத்தில் எல்லோரும் பேராசைக்காரர்; கிராமத்தோர் நிறைமனதுக்காரர்; போன்ற வார்ப்புரு தேய்ந்தாலும், பொன் செய்யும் மருந்து மனத்திற்கும் எதிர்நீச்சல் வெறிக்கும் பேலன்ஸ் கிடைப்பது எங்ஙனம்?

அடுத்த தசாப்தத்திலும் பொங்கும் மங்களம் எங்கும் தங்க, காங்கிரஸ் + பாஜக அரசியல்வாதிகளிடம் திட்டம் இருக்க எல்லாம் வல்ல இறைவரை வேண்டுகிறேன்.

சரியா? தவறா? – ஆசிரியர் நீச்சலுடை அணியலாமா? கூடாதா?

Tiffany Shepherd

செய்தி: ABC News: Bikini Mate Biology Teacher Cut Loose: “School District Says Unexcused Absences, Not Racy Second Job, Prompted Her Release”

சமீபத்தில் விவாகரத்தானவர். மூன்று குழந்தைகளுக்கு தாய். வாரயிறுதியிலும் வேலைக்கு செல்லவேண்டிய நிர்ப்பந்தம். குறைந்த பட்ச ஊதியமே கிடைக்கும் பள்ளி வேலைக்கு கொசுறாகா, சனி, ஞாயிறுகளில் இன்னொரு ஊழியத்துக்கு சேர்ந்திருக்கிறார்.

மீன்பிடி படகில் எடுக்கப்பட்ட புகைப்படத்தினால் சர்ச்சைக்குள்ளாகி வேலையை இழந்திருக்கிறார். (வழி: Poll: Tiffany Shepherd, a high school teacher, was fired after these pictures surfaced online – sex survey)

தற்போது கீழே இருக்கும் மாயத்தோற்றத்தை பார்க்கவும்:


Whales vs Couple in Intimate Love Position - Sexually Explicit Images

Double Picture Illusion – Optical Illusions Picture: “research has shown that young children cannot identify the intimate couple because they do not have prior memory associated with such a scenario. What they will see, however, is nine (small & black) dolphins in the picture!”

Hannah Montana & Kamal: Father – Daughter photos

கமல் – சுருதிஹாசன் புகைப்படம் குறித்த விவாதம் அறியாதவர்கள் முதலில் இதை வாசிக்கவும்:
என் பார்வையில்.. – Johan-Paris: கமல் இதைத் தவிர்த்திருக்கலாம்…

இப்போது அமெரிக்காவில் புகழ் பெற்ற ஹானா மொன்டானாநாயகி மிலி சைரஸின் சமீபத்திய அப்பா-பெண் புகைப்படம்:
Kamalahasan - Daughter & Father Issues

அது குறித்த சர்ச்சை: Photo no-no controversy – BostonHerald.com

அதே பத்திரிகையில் வெளியாகிய இன்னொரு கலைப்படம்:
miley cyrus Howard Stern

பத்திரிகை பத்தியை வாசிக்க: Miley Knows Best: Entertainment & Culture: vanityfair.com: “Between sold-out concerts, multi-platinum records, and a hit TV series, Hannah Montana star Miley Cyrus has some serious business riding on her 15-year-old shoulders—not to mention paparazzi on her tail and tabloid editors praying for her to pull a Britney.”

சுருக்கமான பின்னணி:

  • ஹானா மொன்டானா‘ பார்த்திரா விட்டால், பள்ளியில் புழு போல் பார்க்கப்படுவதாக என்னுடைய எட்டு வயது மகள் பயப்படும் அளவு புகழ்பெற்ற பதின்ம வயதினருக்கான தொடர்.
  • வழக்கம் போல் இனக்கவர்ச்சி (டேட்டிங்), பாடல் ரசனை, ஆசிரியர் ரகளை என்று டிஸ்னித்தனமாக இருக்கும். அதாவது, தமிழ் கதாநாயகி பாஷையில் சொன்னால், ‘கவர்ச்சிக்கும் புணர்ச்சிக்கும் இடையே உள்ள லஷ்மண் ரேகா’வைத் தாண்டாமல் தொட்டுச் செல்லும்.
  • விஜய் தொலைக்காட்சியின் ‘நீயா… நானா‘ போலும் இல்லாமல், சன் தொலைக்காட்சியின் ஜோடிப் பெருத்தம் போலும் இல்லாமல், அதையும் தாண்டி குடும்ப அடிதடிகளை அரங்கேற்றி தற்கொலைகள், மன நல பாதிப்புகள் வரை சம்பந்தப்பட்டவரை இட்டுச் செல்லும் ருசிகரமான நிஜ நாடக நிகழ்ச்சியைத் தொகுத்தளிப்பவர் ‘ஹோவர்ட் ஸ்டெர்ன்‘ (Howard Stern).
  • “The picture disturbs me. It looks like his daughter is his girlfriend. He’s trying to be hot” என்று திருபாட்காஸ்ட் மலர்ந்தருளி இருக்கிறார்.

சிந்தனைவயப்படும் நேரம்:

  • அப்பாவையும் பொண்ணையும் ஃப்ராய்ட்தனமாக பார்ப்பது உலகளாவியது.
  • மகள் நட்சத்திரமாகி விட்டால், ஆதுரமாக புகைப்படம் எடுப்பது உகந்தது அல்ல.
  • புகழ் பெற்றவரை shadenfraude-ஆக குரலெழுப்பினால், பதிவிட சங்கதி கிடைக்கும்.

Cartoons Comics

    கண்ணை நம்பாதே… உன்னை ஏமாற்றும்!

    ஏப்ரல் 1 வாழ்த்துகள் 

    voices-philosophy-head-dog-belief-eye-rationale-cartoon-new-yorker.gif

    கருத்துப்படம்: தி நியூ யார்க்கர் Cartoons from the Issue of April 7th, 2008: Issue Cartoons: The New Yorker

    நகைச்சுவைத்துவம்:

    ஜனார்தனுக்கு வேலை சீக்கிரமே முடிந்துவிட, மூன்று இருபது 12சி -யைப் பிடித்து வீடு திரும்பி விடுகிறார். கிராண்ட் ஸ்வீட்ஸ் அல்வாவும் கையுமாக இல்லத்தரசிக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க நுழைந்தால், போர்வைக்குள் பப்பி ஷேமாக மாடி வீட்டு மாதவனுடன் மனைவி இருக்கிறாள்.

    ஜனார்தன் வாயைத் திறப்பதற்கு முன், படுக்கையில் இருந்து துள்ளி குதித்து மாதவன் கேட்கிறார்:

    “இருபதாண்டு கால உன் நண்பன் நான் சொல்வதை நம்பப் போகிறாயா அல்லது உன் கண்ணால் கண்டதையா?”