Monthly Archives: ஜூலை 2022

ஆயப்பாலை, வட்டப்பாலை, திரிகோணப்பாலை

நாதஸ்வரம் வாசிக்கக்கூடாதா?

புதுமைப்பித்தன் ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் ஒரு வீட்டில் வாழ்ந்து வந்தார். அவர் வீட்டில் ஒரு சமயம் தவில் நாதஸ்வரம் முதலானவை இருந்தன. அதைப் பார்த்துவிட்டு இவை என்ன என்று கேட்டபோது நாதஸ்வரம் வாசிக்கக் பழகிக் கொள்கிறேன் என்று கூறி, ராஜரத்தினம் பிள்ளை கட்டுரை எழுதும் போது நான் ஏன் நாதஸ்வரம் வாசிக்கக்கூடாது என்று கேட்டு விட்டுச் சிரித்தார்.

முல்லை பி எல் முத்தையா எழுதிய புதுமைப்பித்தன் உதிர்த்த முத்துக்கள் நூலில் இருந்து

லலிதா ராம் எழுதிய கட்டுரை எந்த விதம் என்பதை வாசித்து (?!) விட்டு வாருங்கள்

கருத்தில் முதல் பின்னூட்டமாக சுட்டியை அடையலாம்

திமிரி, பாரி என நாகசுரத்தில் இருவகை உண்டு. பாரி என்னும் கருவியே இன்று பெரு வழக்கத்தில் உள்ளது. இது ஆச்சா மரத்தினால் கடைந்து செய்யப்படும். இதில் செருகப்படும் சீவாளி வழி காற்று ஊதப்படும். கருவியிலுள்ள ஏழு துளைகளில் விரல்களால் இசை பெருக்கப்படும். நாகசுர இசைக்கு ஆதார சுருதி வழங்கும் கருவி ‘ஒத்து’ எனப்படும்.

Ante Sundaraniki: அன்டே சுந்தரினிகி (அடடே சுந்தரா)

கலைத்துப் போட்ட மாதிரி போகும் திரைக்கதை;

பிராமண குடும்ப சாஸ்த்ரோப்தங்களைக் கிண்டல் செய்தும் ‘நம்பினால் நடந்துவிடுமோ?’ என சந்தேகிக்கும் கரு;

மலையாளத் திருமணமும், படகு வீட்டில் அந்தி சாயும் வேளையில் பொன்னிற வானத்தை மல்லாந்து பார்த்தபடி நதியோடு மிதக்கும் ஏகாந்தமான காட்சியமைப்பு;

முப்பதாண்டுகள் கழித்து அசப்பில் ‘மௌன ராகம்’ ரேவதியும் கார்த்திக்கும் எட்டிப்பார்க்கும் வசனம்;

கிறித்துவத்தில் கருக்கலைப்பை எவ்வாறு பார்ப்பார்கள் என்று வாழைப்பழத்தில் ஊசி ஏற்றும் உணர்த்தல்;

’அலைகள் ஓய்வதில்லை’ ஆர்ப்பாட்டத்திற்கு எல்லாம் அப்புறம் எவ்வளவு தூரம் வந்திருக்கிறோம் என கடந்து போகும் மதம் பார்க்காத காதல்;

வெறுமனே காதல் கதையாக இல்லாமல், அமெரிக்கா அனுப்பும் கணினி நிறுவனம்; அந்தக் குழுமத்தின் தலைவர்; கூட வேலை பார்க்கும் மேலாளர் ஆக அனுபமா பரமேஸ்வரன் (என்ன லட்சணம்!)

தெலுங்குப் பெயர்களின் நீளம்; விளம்பரத்திற்கு நிதி ஒதுக்காமல் தன் சிப்பந்திகளையே நடிக்க விடும் அலுவல் நுட்பம்; ஹோமங்கள், யக்ஞங்கள், யாகங்கள், பரிகாரங்கள்; தர்ப்பையை நாக்கில் பொசுக்கும் கண்டுபிடிப்புகள்

படத்தில் ஏதோ இருக்கிறது. அந்த இயக்குநர் விவேக் ஆத்ரேயாவின் போன படமும் இப்படித்தான். குழப்படியாக குப்பாச்சுவாக இடியாப்ப லிங்க்வீனி பாஸ்டா சிக்கலாக, புதுமையாக சுவாரசியமாக இருக்கும்.

ஆன்டி  சுந்தரினிகி – வெள்ளித்திரையில் ஏன் ஹிட் ஆகவில்லை?

எண்ணுதற்கு யாவர் வல்லார்? – கிரயம்

சொல்வனம் தளத்தின் சிறப்பு இந்த மாதிரி விநோதமான கதைகளைத் தமிழில் அறிமுகம் செய்வது; வெறுமனே ஆங்கிலத்தில் இருக்கிறது என்று மட்டும் சுட்டாமல், வாசிக்கக் கூடிய தமிழில் உருவாக்கம் செய்வது!

தந்திரக் கை – கசந்த இனிப்பைச் சொல்லும் கதை. குறுவிசனம்.

ஒன்றை இழந்தால் மட்டுமே இன்னொன்றைப் பெற முடியுமா? இதை மேற்குலகில் Faustian offer என்கிறார்கள்.

இளம் பெண் சமீபத்தில் தனது கணவனையும் மகளையும் திடீரென்று சோகமான விபத்தில் இழக்கிறார். துக்கமும், வாழ்க்கையும் இறப்பும் அவை குறித்த நினைவுகளுமாய் கதை எழுகிறது. என்ன பேரம் போட்டார்கள்? எவற்றை விலை பேசினார்கள்? நினைத்தது நின்றதா?

கதையை எழுதியவர் சொல்லியது:

“பால்ய கால நினைவுகளில் இருந்து இந்தக் கதை உருவானது. அப்பொழுதுதான், அந்தத் தாறுமாறான விளம்பரத்தை அதைவிட தாறுமாறான இடத்தில் தற்செயலாக பார்த்தேன். மூளையில் ஏற்பட்ட வீக்கத்திற்காக என் ஒன்றுவிட்ட அக்கா, அறுவை சிகிச்சைக்குள்ளாக இருந்த சமயம் அது. அந்த சமயத்தில் கடுமையான, நிலையான கலக்கத்தில் இருந்தேன். அப்பொழுது பயத்தால் முடங்கி, செய்வதறியாது அவளின் கணவனை, தினசரி இரண்டு தடவை அழைத்து அவளின் நிலையைப் பற்றி கேட்பேன். அறுவை சிகிச்சை முடிந்து, குணமாகி அவள் சகஜநிலையான பிறகு, இதை எழுதத் துவங்கினேன். ”

solvanam வாருங்கள். வாசியுங்கள். உங்கள் கருத்தைப் பகிருங்கள்.

பூர்விகரான புலவர்

எழுத்தாளர் அம்பையைக் குறித்த தமிழ்.விக்கி பதிவை பார்த்தேன். அதன் பிறகு கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவையும் பார்த்தேன்.

இரண்டுமே திருப்தி தரவில்லை. இரண்டிலுமே கணக்கு இருக்கிறது. மாற்றங்களைச் செய்யலாம். அதன் பிறகு அந்தப் பரிந்துரைகளை திருத்துவோரும் ஒப்பளிப்பவரும் சான்றுரைஞரும் தாண்டி வர வேண்டும். வந்தாலும் நிலைக்க வேண்டும்.

அம்பை என்றால் புயல்.

அம்பை என்றால் ஸ்பாரோ.

அம்பை என்றால் காலச்சுவடு பேட்டி.

அம்பை என்றால் இயக்கம், செயல்பாடு, வேகம், பூரணம்.

இதையெல்லாம் முழுமையாக அம்பை ஈடுபடுவது போல் கச்சிதமாக, முழுமையாக எழுதவேண்டும். இதையெல்லாம் நினைத்தால் கூகிளே சிறப்பென தோன்றுகிறது.

தொடர்புள்ள செய்தி: Google and the Internet Archive are the first customers to gain commercial access to Wikipedia content

இன்னொரு உதாரணத்தைப் பார்ப்போம்.

என். ஆர். தாசன் என்பவரைத் தேடுகிறீர்கள். இவருக்கு பெரிய இலக்கிய இடம் இல்லை. கண்ணதாசன் பத்திரிகையில் எழுதிக் குவித்தவர். கே.என்,சிவராமன், பாவை சந்திரன், கோலப்பன், மணா, நா.கதிர்வேலன், கடற்கரய் போல் அந்த நாளில் பரவலாக அறியப்பட்டவர். சிறுபத்திரிகை ஆசிரியர். புத்தக, பத்திரிகை உலகில் தெரிந்திருந்தவர்.

இந்த இதழாளர்களை, எழுதிக் குவிப்பவர்களை, அன்றைய பா. ராகவர்களை நினைக்கும்போது தாமரை மணாளன் நினைவிற்கு வந்தார். அவருக்கும் எந்த விக்கியிலும் இடமில்லை. அசல் விக்கிபிடியாவைத் தேடினேன். அங்குமில்லை; புதிய ஜெயமோகன் விக்கியிலும் இடமில்லை. தாமரைமணாளன் – பொன். பாஸ்கர மார்த்தாண்டன் என்று பக்தி சொட்ட பரணீதரன் ஆக மாறுவார். சுஜாதா மாதிரி ‘கல்கி’ இதழில் சில்லுக்கருப்பட்டி தொடர் எழுதுவார்.

இதெல்லாம் போகட்டும்.

எந்த விக்கியிலும் என் பெயரும் இல்லை சார்.

உன் கத எனக்கெதுக்கு மாமா…

என் சோகக் கதயக் கேளு தாய்க்குலமே!