Monthly Archives: ஓகஸ்ட் 2005

சிறுகதை – மீகாரம்

முகமூடியின் சிறுகதைப் போட்டிக் கதை.

இந்தக் கதையை எந்த சுட்டியில் இருந்து வேண்டுமானாலும் ஆரம்பிக்கலாம். ஒன்றில் ஆரம்பித்து வரிசையாக ஆரம்பித்தாலும் கிறுக்கல் போலத் தோன்றும். கடைசியில் ஆரம்பித்துப் படித்தாலும் அக்மார்க் அலக்கியம் என்று சிரிப்பு வரும். இணையத்தில் மட்டுமே சாத்தியப்படக்கூடிய சுட்டிகள், படங்கள், சுடச்சுட செய்திகள், சுழற்சி உரல்கள் என்று சிலவற்றை முயன்றேன்.

உங்கள் கருத்துகள், விமர்சனங்கள் என்னை மேம்படுத்தும். முன்கூட்டிய நன்றிகள்.

சிறுகதை :: 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8

சுக்கல்கள்

1. கூகிளுக்கு செல்லுங்கள்
“failure” என்று தட்டச்சுங்கள் (படியெடுத்துக் கொண்டு ஒட்டிக் கொண்டாலும் சரி)
“I’m Feeling Lucky” பொத்தானை அழுத்துங்கள் :-))))

2. the Museum of online museums : அரும்பொருளகத்துக்கெல்லாம் ஒரு இணையத்து அருங்காட்சியகம்

3. மாயாஜால் வித்தைகள்

| |

ரஜினியும் கமலும்

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி ::

ஜெயம் ரவியின் அப்பா எடிட்டர் மோகன், ஆர்.எம்.வீரப்பன், சத்யஜோதி தியாகராஜன், இப்படி, ரஜினியின் அடுத்தப் படத்தை யார் தயாரிக்கப்போகிறார்கள் என்பதில் ஒரு குட்டி பட்டிமன்றமே நடந்தது கோடம்பாக்கத்தில்.

இப்போது அதற்கு முடிவு கட்டிவிட்டார்கள். அவரது அடுத்தப் படத்தைத் தயாரிக்கப்போவது ஏவி.எம் நிறுவனம். ஷங்கர் இயக்க போகிறார். ஏவி.எம், ரஜினியை வைத்து தயாரிக்கும் ஒன்பதாவது படமாம் இது. ஆக்ஷன் கதைகளில் தூள் கிளப்பும் ஷங்கர், ரஜினிக்காக ஆக்ஷன் பிளஸ் சூப்பர் காமெடி கதையை ரெடிபண்ணி வைத்திருக்கிறாராம்.

கமலை இந்தியன் தாத்தாவாக்கிய ஷங்கர், ரஜினியை என்னவாக்கப்போகிறாரோ?

வம்பு: சுஜாதா, எஸ்ரா, ஜெமோவைத் தொடர்ந்து நமக்கு நன்றாக அறிமுகமான மற்றும் ஒரு முன்னணி எழுத்தாளர் இந்தப் படத்தின் மூலம் வெள்ளித்திரைக்கு வசனுவதாக கிசுகிசுக்கிறார்கள்.

Rajinifans.com


பத்து வேடங்களில் கமல் ::

சினிமாவில் பல சாதனைகளைப் பண்ணிவிட்ட கமல், அடுத்ததாக யாரும் பண்ணாத வகையில் பத்து வேடங்களைப் போடப்போகிறார். தசாவதாரம் என்ற பெயரில் வரப்போகும் இந்தப்படத்தை கே,எஸ்,ரவிக்குமார் இயக்கப் போகிறார். ஆஸ்கர் பிலிம்ஸ் தயாரிக்கிறது. நாயகி வேட்டை நடந்து வருகிறதாம். புஷ், ஒஸாமா, சதாம் என்றெல்லாம் நவீன கடவுள்களாக அவருக்கு எத்தனை வேடமோ?

நன்றி: லேஸிகீக் | sify

| | | |

இது ஒரு வினாக் காலம்

1. விடுபெற்ற எழுத்தைக் கண்டுபிடிக்க வேண்டும்.
ச செ செ வெ ஞா பு வெ ( _ ) வி ச செ வி

2. வேலையில் மூழ்கிய காதலனை விட்டுவிட்டு, சொரூபா தீவுகளுக்கு விடுமுறைக்கு வருகிறாள் நமது தோழி. பூர்வகுடிகள் இங்கு பொய்விளம்பிகளாகவும்; நமது தோழியைப் போல் சுற்றுலா வருபவர்கள் அரிச்சந்திரர்களாகவும் – பேசும் அபூர்வ இடம் ‘சொரூபா தீவு’. விடுதிக்கு செல்லும் முன் மூவருக்கு முகமன் சொல்கிறாள்.

மஞ்சத்துண்டு போர்த்தியவர் ‘நாங்கள் எல்லாரும் பூர்வகுடிகள்’ என்கிறார்.
கதம்ப மாலை அணிந்தவர் ‘ஒரேயொருவர் மட்டுமே சுற்றுலாப் பயணி’ என்கிறார்.
பச்சை சட்டை போட்டவன் ‘ஹேய்… நீ ரொம்ப அழகா இருக்கே’ என்கிறான்.

அவள் மெய்யாலுமே புற அழகு நிரம்பியவளா?

|

ஏ. ஆர். ரெஹ்மான் – சமூகப் பார்வை

நன்றி: பத்ரி
உணர்வு: நா. மம்மது / புதிய காற்று
ஆக்கம் : பா. பாலாஜி

ஒரு சண்டைக் கோழி பொழுதில், சின்னச் சின்ன ஆசையில், அந்த அரபிக் கடலோரம், வெண்ணிலாவின் தேரில் ஏறி, திறக்காத காட்டுக்குள்ளே, சின்னச் சின்ன மழைத் துளிகளை நெஞ்சம் எல்லாம் தாழ் திறந்துவிட்டு, என்றென்றும் புன்னகைக்கும் இசையை வழங்கிய ஏ. ஆர். ரெஹ்மானின் வந்தே மாதரம்; ஓபரா வடிவம் தாங்கி நம் செவிகளில் ஒலித்துக் கொண்டிருக்கிற பின்னணியில் இந்த கழுதை ரெஹ்மானின் இசையை, இசை குறித்த அவரது பதிவுகளை மெல்லுகிறது.

டுடூ: இங்கு ஃபாரம்ஹப், கர்னாடிக்ம்யூஸிக்.காம், ராஜாங்கம், தொல்காப்பியம், Tamil Literature Text Search, நடு நடுவே ஓபரா, லார்ட் ஆஃப் தி ரிங்ஸ், பாலிவுட் ட்ரீம்ஸ், இலக்கிய வார்த்தைகள் இட்டு நிரப்ப வேண்டும்.

இப்பொழுது இந்திக்காரப் பேரனின் அங்கீகாரத்திற்காக ‘வந்தே மாதரம்’. ரோஜா, காதலன், மின்சாரக் கனவு, கருத்தம்மா என எத்தனையோ திரைப்படங்களின் பின்னணி இசையிலும் உச்சத்தை அடைந்த உங்களுக்கு வேறு யாரின் அங்கீகாரம் தேவை. எதற்கெடுத்தாலும் வெள்ளையின் அங்கீகாரம். விளையாட்டில் அங்கீகாரத்திற்கு ஒலிம்பிக்ஸ், கலைக்கு டோனி, அறிவுக்கு புலிட்சர் பரிசு, இப்பொழுது இசையில் கிராம்மி அங்கீகாரம். நாம் நாமாக எப்பொழுது இருக்கப் போகிறோம்.

உங்களுக்கு சோறு போட்ட, இந்த மண், வேர் உங்களுக்கு நினைவிருக்கிறதா? தமிழிசை மும்மூர்த்தி, முத்துத் தாண்டவர், மாரிமுத்தாபிள்ளை அருணாச்சலக் கவிராயர் இவர்களின் பெயர்களையாவது தாங்கள் எங்கும் கூறியதாகத் தெரியவில்லையே. தமிழ் இசை வளர்த்த பெரியோர்கள், பாணர்கள், தேவதாசியர், இசைவேளாளர், ஓதுவார்கள் இவர்களை எப்படி மறந்தீர்கள்.

ஏழு எழுத்துக் கொண்டது இசை. அது உலகப் பொது மொழி. அய்ரோப்பிய இசை, தமிழிசை, இந்துஸ்தானி இசை, சீன இசை, அரபிய இசை எல்லாம் ஒன்றுதான். ப்ளூஸ், ராப், கிளாஸிகல், கண்ட்ரி, ஃபோக், ஜாஸ், ஆர் அண்ட் பி, ஹிப் ஹாப், ரெக்கே, ராக், பாப், பாங்ரா, ஹெவி மெடல், டிஸ்கோ, டாங்கோ, காஸ்பெல், டெக்னோ, சம்பா, சல்ஸா, ஜிப்ஸி, எலெக்ட்ரோ, நியு ஏஜ் என அனைத்து இசையும் கேட்க நன்றாகவே இருக்கும். அதில் ரீ-மிக்ஸ் இசை மட்டும் உயர்ந்தது என்கிறீர்கள். எப்படி?

நாகசுரத்தைத் தூக்கிக் கொண்டு வந்து தாவீதின் சங்கீதத்தை இந்திய இசையில் அமைக்கப் போகிறேன்; ஃப்யூஷன் செய்யப் போகிறேன் என்று மிருணாளின் சாராபாயிடமும் கலாஷேத்ராவுக்கும் எண்ணற்ற இன்ன பிற இடங்களுக்கும் வரும் எல்லா மேல்நாட்டானுக்கும் அடிமைபுத்தி இருக்கிறது.

100 கிடார், 100 வயலின் வைத்து இசை அமைத்து பாலிவுட் ட்ரீம்ஸ் பண்ணுவது போல் 100 ஆங்கிலப் பாடகர்களை வைத்து தமிழ்ப்பாட்டு பண்ணுங்கள். அல்லது உதித் நாராயணை 100 தரம் ஒரே தமிழ் பாட்டில் ஒலிக்கவிடுங்கள்.

பாலிவுட் ட்ரீம்ஸ் என்று ஹிந்திப் பட கதாநாயகனாக விழையும் கதையை ஆங்கிலத்தில் இசை அமைக்கிறீர்கள். அதற்கு பதிலாக ஹாலிவுட் பாண்ட் நடிகன் தமிழ்ப் பட கிராமத்து ராசாவாகும் நாடகத்தை ஹிந்தியில் எடுத்திருக்கலாம். ஹாலிவுட்டை கோலிவுட்டுக்கு கூட்டி வந்த மாதிரியும் இருந்திருக்கும். உங்களின் ஹிந்திப் பற்றும் வெளிப்பட்டிருக்கும்.

‘வந்தே மாதரம்’ வெளிவந்தபோது கண்டனம் தெரிவிக்க இயலவில்லை. ஏனென்றால் அப்பொழுது என்னிடம் புதிய காற்று கிடையாது.

நீங்கள் முதன் முதலாக கிடாரையும் கீ போர்டையும் தொட்டவுடனேயே தடுத்தெறிய நீங்கள் புகழ் பெறவும் இல்லை.

‘கண்ணீரே
கண்ணீரே
சந்தோஷக் கண்ணீரே
பேரன்பே
உந்தன் நினைவு
என் கண்ணைச் சுற்றும் கனவு
இது உயிரைத் திருடும் உறவு
உன் துன்பம் என்பது வரவு’

பாடல்: சந்தோஷக் கண்ணீரே / படம்: உயிரே

‘உந்தன் தேசத்தின் குரல்
தொலைதூரத்தில் அதோ
செவியில் விழாதா?
கங்கை உன்னை அழைக்கிறது
யமுனை உன்னை அழைக்கிறது
இமயம் உன்னை அழைக்கிறது
பல சமயம் உன்னை அழைக்கிறது’

பாடல்: உந்தன் தேசத்தின் / படம்: தேசம் (ஸ்வதேஸ்)

நானும் நண்பர்களும் தாங்கள் பாடிய மேற்கண்ட வரிகளைக் கேட்ட போது நெகிழ்ந்து போய் விட்டோம். இந்த எண்ணத்தை அகற்றி விடுங்கள்.

| | |

உலகத் தமிழர் பேரமைப்பு

Ulaga Thamizhar Peramaippu - Pazha Nedumaran with Mu Mehtha, Abdul Rehman

மாநாட்டு உரைகள் | தொடக்கவிழா மாநாட்டு மலர்

திரு.பழ.நெடுமாறன் :: உலகத் தமிழர் பேரமைப்பு இருபது ஆண்டுகளாக எண்ணற்ற அறிஞர்கள் தமிழ் உணர்வாளர்கள் சிந்தனையிலே ஊறித் திளைத்து இன்றைக்கு ஒரு முழுமையான வடிவத்தைப் பெற்றிருக்கிறது என்றால் அது மிகையாகாது. உலகப் பெருந்தமிழர் விருதினைப் பெற்ற முனைவர் கா.பொ.இரத்தினம் அவர்கள் இத்தகைய அமைப்பை நறுவுவதற்கு எடுத்த முயற்சிகளைப் பற்றியெல்லாம் சொன்னார். 1980 ஆம் ஆண்டில் நான் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராக இருந்த போது ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்துப் பேசுகையில் உலகம் முழுவதிலும் இருக்கக்கூடிய தமிழர் அமைப்புகளை முதலமைச்சர் எம்.ஜி.ஆர் ஒன்றுசேர்க்க வேண்டுமென்று வலியுறுத்திச் சொன்னேன். எம்.ஜி.ஆர். அவர்கள் மதுரையிலே ஐந்தாவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடைபெற்ற போது உலகத் தமிழ்ச் சங்கம் அமைப்பது என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவினை வெளியிட்டார். மறைந்த எம்.ஜி.ஆர். உலகத் தமிழ்ச் சங்கத்தை அமைத்தார். பத்து கோடி ரூபாயை ஒதுக்கினார். மதுரையிலே ஒரு இடமும் ஒதுக்கப்பட்டு அதற்கான அதிகாரிகளும் நயமிக்கப்பட்டு வேலைகள் ஆரம்பிக்கப்பட்டன. உலகம் முழுவதிலும் இருந்த தமிழர்கள் அதைக் கண்டு மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் அவருடைய மறைவோடு அது அப்படியே தூங்கிவிட்டது.

மலேசியாவிலுள்ள நம்முடைய நண்பர் டேவிட் அவர்கள் இதற்கான முயற்சி எடுத்தார். உலகத் தமிழ் மாமன்றம் என்ற பெயரில் ஒரு அமைப்பை உருவாக்கினார். ஆனால் துரதிருஷ்டவசமாக அது தொடரவில்லை. அமெரிக்காவிலுள்ள டாக்டர் தணி.சேரன் ஒரு அமைப்பை உருவாக்கினார்.

உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டுக்கு வித்திட்ட பெருமை மறைந்த ஈழத்து தனிநாயக அடிகளைச் சார்ந்தது.

1999 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் சென்னையிலே மறைந்த இர.ந.வீரப்பனார் தலைமையில் உலகத் தமிழ்ப் பண்பாட்டு நறுவனத்தின் வெள்ளிவிழா மாநாடு நடந்தது. அந்த மாநாட்டைத் தொடங்கி வைக்க வேண்டுமென்று அவர் என்னை அழைத்த போது அந்த மாநாட்டில் நான் ஐந்து அம்சத் திட்டம் ஒன்றை வெளியிட்டேன். உலகத் தமிழருக்கு ஒரு குடை அமைப்பு, உலகத் தமிழருக்கு ஒரு கொடி, உலகத் தமிழருக்கு ஒரு தேசியப் பண், உலகத் தமிழருக்கென்று ஒரு வங்கி, உலகத் தமிழருக்கு என்று ஒரு தேசிய உடை வேண்டும் என்று வலியுறுத்தினேன்.

தேசியப் பண்ணினை நம்முடைய உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் சிறப்பாக எழுதிக் கொடுத்தார்கள். அதற்காக அவருக்கு இந்த நேரத்தில் இதயபூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதைப் போல இந்தக் கொடி உலகத் தமிழருக்கான கொடியை வடிவமைத்துக் கொடுத்த ஓவியர் வீர.சந்தானம் அவர்களுக்கு உலகத் தமிழர் சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

உலகத் தமிழர் பேரமைப்பு ஐந்து மீட்புகளை தனது நோக்கமாகக் கொண்டுள்ளது: மொழி மீட்பு. பண்பாடு மீட்பு. வரலாறு மீட்பு. இன மீட்பு. மண் மீட்பு ஆகிய ஐந்து மீட்புகள் உடனடியாக நடைபெற்றாக வேண்டும்.

மாண்புமிகு பி.சந்திரசேகரன், இலங்கை அமைச்சர்
திரு.அ.விநாயகர்த்தி, இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்
திரு. எம். எஸ். செல்லச்சாமி, இலங்கைப் பொது வசதிகள் சபைத் தலைவர்
பேராசிரியர் செ.நெ. தெய்வநாயகம் எப்.ஆர்.சி.பி.
கவிஞர் கா.வேழவேந்தன்

முனைவர் அவ்வை நடராசன்
முனைவர் ப.கோமதிநாயகம்
முனைவர் க.நெடுஞ்செழியன்
முனைவர் மணவை முஸ்தபா
மருத்துவர் பொன்.சத்தியநாதன் (ஆசுதிரேலியா)

முனைவர் இரா.இளவரசு
முனைவர் க.ப.அறவாணன்

தென்னாப்பிரிக்காவில் தமிழ்மொழியும் பண்பாடும் :: முனைவர் வி. கோவிந்தசாமி
மியம்மாவில் (பர்மா) தமிழர் நிலை :: கோ. க. மணிமேகலை
திருக்குறளே இனமீட்சிக்கு வாழ்வியல் நெறியாகட்டும் :: மு. மணி வெள்ளையன் (மலேசியா)
இராவண காவியத்தில் தமிழ்த் தேசியச் சிந்தனை – ஒரு பார்வை :: கி. த. பச்சையப்பன்
மின் வெளியில் நிரந்தரமாகும் தமிழ்மொழி :: நா. கண்ணன் (செருமனி)
தமிழும் தமிழரும் :: பேராசிரியர் அரங்க. முருகையன் (இலண்டன்)
உலகநாடுகளில் தமிழர்
கனவு நனவாகிறது :: பழ. நெடுமாறன்

| |

Ulaga Thamizhar Peramaippu – Pazha Nedumaran with …

Ulaga Thamizhar Peramaippu – Pazha Nedumaran with Mu Mehtha, Abdul Rehman Posted by Picasa

சென்ற பத்து (7)

1. அமதியுஸ்
2. இசைப்புயல்
3. விக்கிபீடியா
4. வினாடி வினா
5. தெறும்
6. மாத்ருபூமி
7. தங்கமணி
8. அபுகா ஹூக்கும்
9. அரசியல்
10. இணையத்தால் ஆய பயன்

| | |

Some calculations – MCP 

Some calculations – MCP Posted by Picasa

சிறுகதை – மீகாரம்

2000 வார்த்தைகளோ ஆகஸ்டு 21ம் தேதி பின்னிரவு 3 மணி EDT வரையிலோ எழுதிப் பதிந்து கொண்டேயிருக்கப் போவதாக எண்ணம். இந்தக் கதையை எப்பொழுது வேண்டுமானாலும் முடிக்கலாம்.

இந்த வலைப்பதிவுக்காரரும் முகமூடியின் சிறுகதைப் போட்டி கச்சேரிக்குப் போகப் போறார்.

சிறுகதை :: 1 | 2 | 3 | 4 | (தொடரும்)