- அடுத்த வருடத்தில் இருந்து இருபதாயிரம் ரூபாய்க்கு மேல், பட்டுப்புடவை வாங்கினால், பட்டுவாடா வரி என்று ப.சிதம்பரம் விதிக்கப் போகிறார்… பாருங்கள்
- கொஞ்ச நாள் பொறுங்கள். இதனுடைய நகல்கள் ரெங்கநாதன் தெருவில் கிடைக்க ஆரம்பித்துவிடும். பூதக் கண்ணாடி வைத்து 54,600 வண்ணங்களும், தராசைக் கொண்டு 1.30 கிலோ கிராமும் இருக்கிறதா என்று ஆராயவா முடியும்!
- இதை ஒரு கோணத்தில் இருந்து பார்த்தால் என்னுடையா சங்கு மார்க் லுங்கி மாதிரியே இருக்கிறது.
- நல்ல வேளை… இந்தப் புடைவை இரண்டு மாதம் தாமதித்து வந்திருக்கிறது. இல்லையென்றால் 54,600 எக்ஸ்ட்ராக்களுடன் ‘ஆரெம்கேவி பொடவ நோக்கியாகாரி’ என்று ஷங்கர் ஆட விட்டிருப்பார்.
- 25 லட்ச ரூபாய் பெறுமானமுள்ள சேலையை ஐம்பத்தாறாயிரம் ரூபாய்க்கு வாங்கினால், வங்கி காப்பகத்தில் வைத்துதான் பாதுகாக்க வேண்டும்.
- வாங்க இயலாவிட்டால் இப்படித்தான் காரணங்கள் தோன்றும்
தொடர்புள்ள பதிவுகள் : காரணங்கள் அடுக்கியவர் | வலைப்பதிவு | The hindu | ஆரெம்கேவீ















