Monthly Archives: திசெம்பர் 2020

அமெரிக்கா உண்மையில் உலகில் எவ்வளவு நல்லது செய்திருக்கிறது?

தழுவல் / மூலம்: How much good has the United States really done in the world? – The Boston Globe – By Stephen Kinzer

சமீபத்தில் எனக்கொரு கடிதம் வந்திருந்தது. கோவிட்-19 காலத்தில் கடிதத்தைப் பிரிக்க பயப்பட வேண்டும். அமெரிக்காவின் ஜனாதிபதி வேறு – போலிகள் மடல் வாக்குகளாகப் போட்டு நிரப்புகிறார்கள்; எனவே ஜாக்கிரதை என்று முழங்கிக் கொண்டிருக்கும் காலம் இது. இருந்தாலும் பிரித்தேன். அந்தக் கடிதம் சர்ச்சைக்குரிய சிந்தனையைத் தூண்டும் கேள்வியைக் கொண்டிருந்தது:

“உங்களின் நீண்டகால பரந்துபட்ட அனுபவத்தின்படி பார்த்தால், உங்களின் ஆயுட்காலத்தில், நம் அமெரிக்க எல்லைகளுக்கு அப்பால், ஏதாவது ஒரு ஒழுக்கமானதோ, கவுரவமானதோ, அல்லது நல்ல நோக்கத்துடனோ – ஏதேனும் ஒரு செயலை இதுவரை மேற்கொண்டது அமெரிக்கா எடுத்தது என்று சொல்ல இயலுமா?”

இது ஒரு சுவாரஸ்யமான சவால். தற்போதைய “மாநில செயலாளர்”, (இந்தப் பதவி இந்தியாவின் உள்துறை+வெளியுறவு மந்திரி போன்று சக்தி வாய்ந்த அமைச்சகம்) மைக் பாம்பேயோ, இவ்வாறு வலியுறுத்தி கூறுகிறார்: “நாம் செல்லும் ஒவ்வொரு இடத்திலும், அமெரிக்கா நன்மைக்கான பலம் தரும் சக்தியாகும்”.

எப்போது நீங்கள் துல்லியமாக மாறுபடுவீர்கள்? ஒரு ஈரானியராக, அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளினால், உணவுப் பொருட்களையும் மருந்துகளையும் வாங்க முடியாதவராக இருந்தால்; ஒரு சிரிய நாட்டினராக, அமெரிக்காவினால் முன்னெடுக்கப்பட்ட உள்நாட்டுப் போரில் இருந்து தப்பிக்க முயற்சிப்பவராக இருந்தால்; அமெரிக்காவின் ஆசீர்வாதத்துடன் கொடுங்கோல் நாட்டின், சவுதி அரேபியா, ஹொண்டூராஸ் போன்ற அடக்குமுறை ஆட்சியின் கீழ் வாழ்பவராக இருந்தால்; யேமன் நாட்டில், அமெரிக்க ஏவுகணை உங்களின் வீட்டை நள்ளிரவில் தாக்கி சின்னாபின்னமாக்குமோ என்னும் அச்சத்தில் வசிப்பவராக இருந்தால்…

மிகைப்படுத்தலை விட்டுவிட்டுப் பார்த்தால் கடந்த சில தலைமுறைகளில் உலகிற்காக அமெரிக்கா சாதித்தவற்றை, நியாயமான பெருமையோடு சுட்டலாம்.

1961ல் அப்போதைய ஜனாதிபதி ஜான் எஃப் கென்னடி, “அமைதி அணி”யை ஸ்தாபிக்கிறார். ஒத்துக் கொள்கிறேன். அது பனிப் போர் காலகட்டத்தில் சோவியத் ரஷியாவின் செல்வாக்கை வளரும் நாடுகளில் இருந்து தடுக்க என்பதற்காகவும் வெள்ளையின மனிதனின் சுமையை குறைப்பதற்காகவும் துவக்கப்பட்டது. எனினும், இளம் அமெரிக்கர்களின் ஆதர்சக் கொளகைகளை நேர்மையாகவும் பெரிய அளவிலும் நிரூபிக்க நெடுந்தொலைவில் உள்ள ஏழை மக்களுக்கு உதவ கைகொடுத்தது.

மனித உரிமைகளுக்கான அமைச்சகத்தை 1977ல் ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர் அமைக்கிறார். அதுவரை அதற்கென் தனி மந்திரி பதவி கிடையாது. வெளியுறவுக் கொள்கைகளைத் தீட்டும்போது மனித உரிமைப் பிரச்சினைகளையும் கணக்கில் கொள்ளவேண்டும் என்கிறார் கார்ட்டர். ஒத்துக் கொள்கிறேன். அந்த அமைச்சரவைத் துவங்கிய பிறகு, சிற்சில காலகட்டங்களில், ஆக்கிரமிப்புகளுக்காக அது பாசாங்குத்தனமாக நியாயங்கற்பிக்க உபயோகப்படுத்தப்பட்டிருக்கிறது. எனினும், மந்திரி சபையில் ஒரு அங்கமாக மனித உரிமைகள் பிரச்சினைகளும் கண்காணிப்புகளும் குரல் எழுப்ப சந்தர்ப்பம் கிடைத்ததால் பல எண்ணற்ற உயிர்களை அர்ஜெண்டினா முதல் ஃபிலிப்பைன்ஸ் வரை காப்பாற்ற முடிந்தது.

அதன் அடுத்த தலைமுறையில், ஜனாதிபதி பில் க்ளிண்டன் வடக்கு அயர்லாந்து பிரதேசத்திற்கு தன் தூதுவரை அனுப்புகிறார். அயர்லாந்துக்கும் இங்கிலாந்து நாட்டிற்கும் இடையே நிலவிய குறுங்குழுவாத வன்முறையை சமாதானம் பேச முன்னாள் செனேட்டர் ஜார்ஜ் மிட்சேல் என்பவரை 1995ல் பிரத்தியேகமாக நியமிக்கிறார். பல தசாப்தங்களாக நிலவிய சுதந்திரப் பிரகடன சண்டையை மூன்றாண்டுகளில் அமைதி ஒப்பந்தம் உருவாக்க அது வழிவகுக்கிறது. கத்தோலிக்க கிறித்துவர்களும் கத்தோலிக்க கொள்கையை மறுத்துப் பிரிந்து சென்று போப்பாண்டவரின் ஆட்சிக்கு எதிரான கொள்கையைப் பின்பற்றுகிற பிராட்டஸ்ட்டண்டுகளும் உடன்படிக்கையில் கையெழுத்திடுகிறார்கள். குண்டுவெடிப்புகளும் தீவிரவாத அச்சுறுத்தல்களும் மறைந்து அரசியல் போட்டி உருவாகிறது.

அவரின் வழித்தோன்றல் ஜார்ஜ் டபிள்யூ புஷ் (மகன் புஷ்). அவர் 2003ல் எயிட்ஸ் நிவாரணத்திற்காக, ஜனாதிபதியின் அவசர திட்டத்தை (President’s Emergency Plan for AIDS Relief – PEPFAR) முன்வைக்கிறார். பதினைந்து நாடுகளில் பதினைந்து பில்லியன் உதவித்தொகை ஒதுக்கி துவக்கப்பட்ட இந்தத் திட்டம் இப்போது ஐம்பது உலகநாடுகளில் எண்பது பில்லியன் டாலர் நிதி கொண்டு இயக்கப்படுகிறது. கோடிக்கணக்கானவரின் உயிரைக் காப்பது மட்டுமல்லாமல், நவீனகாலத்தின் மாந்தநேயமிக்க திட்டமாக இருக்கிறது.

அவருக்கு அடுத்தபடியாக ஜனாதிபதி ஆகுபவர் பராக் ஒபாமா. இவர் கியூபா நாட்டின் மேல் இருந்த பொருளாதாரத் தடைகளை தளர்த்துகிறார். அதன் மூலம் சிறு முதலீட்டு வர்த்தகம் பெருகுகிறது. ஒபாமாவும் கியுபாவின் ஹவானா நகருக்கு வரலாற்றுத் தருண வருகை புரிகிறார். அதன் பிறகு இரான் நாட்டுடன் ஒப்பந்தம் கையெழுத்திடுகிறது அமெரிக்கா. அணு ஆயுதம் உற்பத்தி செய்யாததை நிரூபித்து, அந்த அணுத்திறன் ஆற்றலை விட்டுவிட்டால், வர்த்தக்த் தடைகளை மெல்ல மெல்ல நீக்கும் சமாதான உடன்படிக்கையை பேசி ஒப்புக் கொள்ளவைக்கிறது ஒபாமா நிர்வாகம். ஒத்துக் கொள்கிறேன். இந்த இரண்டு உடன்படிக்கைகளுமே ஒபாமா பதவி விலகிய பிறகு வந்த ஆட்சியின் கீழ் குப்பையில் போடப்பட்டுவிட்டது. எனினும், நீண்ட காலமாக எதிரிகளாகக் கருதிய நாடுகளுடன் நல்லிணக்கத்தைத் தொடரும் அமெரிக்க திறனுக்கு இவை முக்கியமான எடுத்துக்காட்டுகள்.

செயல்பட மறுப்பதன் மூலம் சில சமயம் அமெரிக்கா சமாதானத்தை நிலைநாட்டுகிறது. லெபனான் நாட்டில் 1983ல் அமெரிக்க சிறப்புப் படையினர் தங்கும் இடத்தில் குண்டு வெடித்து இருநூறுக்கும் மேற்பட்டோர் இறந்தனர். ஜனாதிபதி ரொனால்டு ரீகன் பழிக்குப் பழி வாங்குவேன் என சூளூரைக்கிறார். எனினும், அந்தப் போரில் ஈடுபட்டால் முடிவில்லா உள்நாட்டுப் போரில் அமெரிக்க போர்வீரர்கள் மாட்டிக் கொள்வார்கள் என்பதை உணர்கிறார். எனவே, முடிவை மாற்றி பின்வாங்கி விடுகிறர்.

அதே போல், அவரின் பின் வந்த ஜனாதிபதி ஹார்ஜ் எச். டபிள்யு. புஷ் (தந்தை புஷ், ரேகனின் துணை ஜனாதிபதியாக இருந்தவர்) உணர்ச்சியை விட சிந்தனை சார்ந்த காரணங்களைக் கொண்டு முடிவெடுத்தார். 1989ல் பெய்ஜிங்கின் தியானன்மென் சதுக்கத்தில் நடந்த ஜனநாயக ஆதரவு மாணவர் போராட்டங்களை நசுக்க சீனா தனது ராணுவ வல்லமையை பயன்படுத்தியதைக் கண்டு கொதித்ததை வெளிப்படுத்துகிறார். எனினும் இரு நாட்டிற்கும் இடையே இருந்த அரும்பும் நல்லுறவை பலப்படுத்தினார்.

இந்த நடவடிக்கைகள் நமக்கு அமெரிக்காவை, நாம் நம்ப விரும்பும்படி காட்டின: உலகளாவிய ஸ்திரத்தன்மை மற்றும் அமைதிக்கான ஒரு சக்தி. இந்தப் பிரலாபங்கள், அந்தப் பக்க பேரேடுக் கணக்கை துடைத்து சுத்தமாக்கவில்லை.

Kennedy ordered the Bay of Pigs invasion of Cuba and began military escalation in Vietnam. Carter responded to the Soviet invasion of Afghanistan by leading the United States into a quagmire there from which we have still not emerged. Reagan unleashed the dogs of war in Central America, invaded Grenada, and embraced murderous dictators. Clinton pushed nuclear-armed NATO forces onto Russia’s doorstep and plunged into civil war in Somalia, culminating in the ill-conceived “Black Hawk Down” mission that cost the lives of 19 servicemen. George H.W. Bush invaded Panama and opened US military bases in Saudi Arabia — a decision that Osama bin Laden later cited as the reason he ordered attacks on the United States. Bush’s son responded to those attacks by invading Iraq and declaring a “global war on terror” that has since cost $6.4 trillion, led to over a million deaths, and forced an estimated 37 million people to flee their homes. Obama bombed seven countries, launched more than 500 drone attacks in which nearly 4,000 people were killed, and helped lead the fire-and-fury campaign that plunged once-prosperous Libya into chaos and misery.

அமெரிக்கா உலகிற்கு மிகவும் உன்னதத்தைக் கொண்டு வந்துள்ளது. அதே சமயம் சொல்லொண்ணா அழிவையும் ஏற்படுத்தியுள்ளது. எது மற்றதை விட அதிகமாக உள்ளது? நாம் ஒவ்வொருவரும் நமது சொந்த அளவுகோலுக்கும் மதிப்புகளுக்கும் ஏற்ப பதிலளிக்க வேண்டிய கேள்வி. வருங்கால ஜனாதிபதிகள் எந்த பாதையை தேர்வு செய்தாலும், அவர்கள் பக்கத்தில் ஏராளமான வரலாறு உள்ளது.

எழுத்தாளர் ரா கிரிதரன் உடன் பேட்டி – சொல்வனம் நேர்காணல்கள்

ஒவ்வொருவரைப் பற்றியும் அறிமுகக் குறிப்பு வேண்டும். ஒவ்வொரு படைப்பாளியுடனும் உசாவ வேண்டும். அனைத்து சமகால இலக்கியகர்த்தாக்களுடனும் விசாரணை மேற்கொள்ள வேண்டும்.

அருங்காட்சியகங்கள் சென்றிருப்பீர்கள். அதில் ஒவ்வொரு ஓவியத்தின் பக்கத்திலும் ஒரு குறிப்பு இருக்கும். எந்த வருடம் வரையப்பட்டது; எவர் வரைந்தார்; எந்த மாதிரிச் சூழலில் வரைந்தார்; அதற்கு முன் அவருடைய முக்கிய படைப்புகள் என்னென்ன? அதற்குப் பின் அவருடைய ஆக்கங்கள் எவ்வாறு உருமாறின? யாரைப் பற்றி அல்லது எதைப் பற்றி இந்த ஓவியத்தைப் படைத்தார்?

இன்னும் கொஞ்சம் ஆராய்ந்தால், அந்தத் தளத்தின் ஈசானிய மூலையில், அந்தத் தளத்தில் இடம் பெற்ற ஓவியர்களைக் குறித்தும் கண்டெடுக்கப்பட்ட காலகட்டங்களைக் குறித்தும் அரும்பொருட்களைக் குறித்தும் விரிவான வெளியீடு இருக்கும். அதில் ஓவியரின் பேட்டிகள், தற்கால ஆய்வாளர்களின் விமர்சனங்கள், முந்தைய ஆய்வுகள் குறித்த மேற்கோள்கள் – இன்ன பிற தாங்கிய நூலோ புத்தகமோக் காணக்கிடைக்கும்.

பேட்டிகளும் நேர்காணல்களும் முக்கியமானவை. முன்னுமொரு காலத்தில் காலச்சுவட்டின் ஒவ்வொரு இதழிலும் பாரிஸ் ரிவ்யூ போல் விரிவான சந்திப்புகள் காணக்கிடைத்தன. இன்றையச் சூழலில் படைப்பாளிகளும் இலக்கிய ஆளுமைகளும் பெருகி விட்ட காலத்தில் இந்த மாதிரி ஆழமான உரையாடல்கள் பன்மடங்கு அதிகரித்திருக்க வேண்டும். இதை இக்காலத்தில் அருண்பிரசாத் சற்றே சமரசங்களுடன் செய்கிறார். ஹிந்து நாளிதழின் தமிழ்ப் பதிப்பில் வெளியாவதால், அச்சுப் பதிப்புகளுக்கே உரித்தான இட நெருக்கடியுடன் அவர் செயல்படுகிறார்.

நேர்காணல்கள் வரலாறு – வாசிப்பு – அறிவியல்

ஆனால், இப்பொழுது இந்த மாதிரி தீவிர வாசிப்பும் அதன் தொடர்ச்சியான விரிவான பேச்சும், அதன் இறுதியில் அவற்றை வரிவடிவத்தில் பதிவாக்குவதும் அருகியேக் காணப்படுகிறது.

இருபதாண்டுகள் முன்பு நண்பர் பா ராகவனும் நேசமுடன் / கல்கி ஆர் வெங்கடேஷும் எனக்கொரு ஆலோசனையை முன்வைத்தார்கள். ஒருவரின் எல்லாப் புத்தகங்களையும் எடுங்கள். தி ஜானகிராமனோ அகிலனோ ஃபிலிப் ராத்தோ – அவரின் ஆக்கங்கள் அனைத்தையும் வாசியுங்கள். எதையும் விடாதீர்கள். கட்டுரைகள், துணுக்குகள், வாழ்க்கை வரலாறுகள், நினைவுக் குறிப்புகள், சண்டைகள், சச்சரவுக் கடிதங்கள், அறிவியல் புனைவுகள், துப்பறியும் கதைகள், சமூகக் கதைகள், அபுனைவுகள், ஓவியங்கள், கிறுக்கல்கள், கவிதைகள், மொழியாக்கங்கள், புனைப்பெயரில் எழுதியவை, அவர் எழுதியிருக்கக் கூடியதாக நம்பப்படும் கர்ண பரம்பரைக் கட்டுக்கதைகள் – எல்லாமும், எதையும் வாசியுங்கள்.

ஒரு வாரமோ / ஒரு மாதமோ கெடு வைத்துக் கொள்ளவும். அதன் பின் அவற்றைப் பற்றி நீங்கள் எடுத்தக் குறிப்புகளைத் தொகுங்கள். அவரிடம் என்ன கேள்வி கேட்க வேண்டுமோ, அவரின் படைப்பு குறித்த சந்தேகங்களைப் பற்றியோ, அவர் எழுத்து குறித்த விமர்சனங்களை முன் வையுங்கள். சும்மா, ஒரேயொரு சிறுகதையையோ, ஓரிரு நாவலையோ வாசித்துவிட்டு – எந்தக் கேள்வியையும் முன்வைக்காதீர்கள்.

நான் வி எஸ் நைபாலை கையில் எடுத்தேன். நான் கேள்விகளைத் தொகுப்பதற்குள் அவர் போய் சேர்ந்துவிட்டார்.

எனவே, இனிமேலும் இவ்வாறு முழுக்கக் காத்திருக்கப் போவதில்லை. ஒருவரின் அனைத்துப் படைப்புகளையும் முழுக்க வாசித்து, ஜீரணமான பின்பே – அவரிடம் கேள்விகளைக் கேட்கப் போவதில்லை. அந்த முடிவின் தொடக்கமாக கிரிதரன் அவர்களை #சொல்வனம் இதழுக்காக பேட்டி கண்டேன்.

அதை #solvanam இதழில் வாசிக்கலாம்.