Tag Archives: Politics

Harvard Education vs Pondycherry Congress: Politicians Cheat

பல ஜனாதிபதிகளையும் செனேட்டர்களையும் ஹார்வார்ட் பல்கலைக்கழகம் உருவாக்குகிறது. டெல்லி ஜே.என்.யூ.வில் படித்தால் இந்தி(ரா)யா கம்யூனிஸ்ட் காங்கிரசில் தஞ்சமடையலாம் என்பார்கள்; ஹார்வார்டில் படித்தால் அமெரிக்க காங்கிரஸில் நுழையலாம்.

அவ்வளவு புகழ்பெற்ற ஹார்வார்டு ‘காங்கிரஸ் 101’க்கு இறுதி பரீட்சை எழுதிய எழுபது மாணவர்களை இடைநீக்கம் செய்திருக்கிறது. அரசாங்கம் குறித்தும் சட்டசபை குறித்தும் அறிமுகம் செய்யும் வகுப்பில் காப்பியடித்த குற்றத்திற்காக அவர்களை சஸ்பெண்ட் செய்துள்ளது.

பாண்டிச்சேரி போல் புத்தகம் பார்க்காமல் எழுதும் தேர்வு அல்ல. வீட்டிற்கே கேள்வித்தாளைக் கொடுத்தனுப்பி விட்டார்கள். இணையத்தைப் பார்த்து எழுதலாம். புத்தகத்தைத் திறந்து வைத்து விடை அளிக்கலாம். நண்பர்களிடம் கலந்தாலோசித்து, சொந்த நடையில் பதில் போடலாம். ஆனால், ஒரே விடைத்தாளை அனைத்து மாணவர்களும் காப்பி பேஸ்ட் செய்ததால் மாட்டிக் கொண்டார்கள்.

புதுச்சேரி அமைச்சர் கல்யாணசுந்தரம் போல் நமது ஊர் காங்கிரஸ்காரர்கள் நிலைமை இன்னும் மோசம். பொதுத் தேர்வு மோசடிக்கு எவ்வளவு முஸ்தீபுகள் தேவையாக இருக்கிறது? பிட் வேண்டும்; ஆள் மாற்றாட்டத்திற்கு சூட்டிகையானவர் வேண்டும்; பள்ளி ஆசிரியர் முதல் பியூன் வரை கவனிக்க வேண்டும்.

என்னவாக இருந்தாலும் அமெரிக்க ஐவி லீக் பல்கலை படிப்பு போல் ஆகாது!

வாரிசு ஜெகன் மோகன் ரெட்டி அரசியலில் ஜாதியும் லஞ்சமும்

தெலுங்குப் படம் லீடர் பார்த்தேன். ‘முதல்வன்’ திரைப்படத்தின் இறுதி வசனமான ‘என்னையும் அரசியல்வாதி ஆக்கிட்டாங்களே’ கால்கோளாக வைத்து எழுதியிருக்கிறார்கள்.

ஆந்திரா என்றால் இரண்டு ஹீரோயின். இங்கும் உண்டு. ஒருவர் ‘மயக்கம் என்ன’ ரிச்சா கங்கோபாத்யா. புடைவையில் லட்சணமாக ஹீரோவிடம் ஏமாறுகிறார். கொஞ்சம் ஒல்லியாகக் கூட கேமிரா காட்டுகிறது.

சுகாசினிக்கு பெரிய ரோல். கோட்டா ஸ்ரீனிவாசாவும் அலட்டாமல் வந்திருந்தார்.

தமிழில் இப்படி துளி வெளிப்படையாக பேசினால் கூட சத்யராஜ் மட்டுமே நாயகன் கதாபாத்திரத்தை ஏற்று நடிப்பார்.

Indian Cartoonist’s Arrest & Free Speech Debate: Recent picks from Newspapers

Cartoons by Aseem Trivedi

A cartoon depicting Sansad Bhavan, the Indian parliament building in New Delhi, as a toilet. By Aseem Trivedi, from cartoonsagainstcorruption.blogspot.co.uk

A depiction of Ajmal Kasab urinating on the Indian constitution. Kasab was the only member of the Pakistani terrorist group that attaced Mumbai in 2008 to be captured. He is currently in Indian custody, sentenced to death. By Aseem Trivedi, from cartoonsagainstcorruption.blogspot.co.uk

Cartoon depicting the Indian parliament building, which contains the Rajya Sabha (upper house) and Lok Sabha (lower house). By Aseem Trivedi, from cartoonsagainstcorruption.blogspot.co.uk

The cartoon, by Aseem Trivedi, that provoked complaints to the police. From cartoonsagainstcorruption.blogspot.co.uk


Asian Age: Here and Now by Sudhir Tailang


Cartoonist Manjul: Column – Irregular at DNA: Daily News and Analysis


Tamil Newspaper Dinamani (Indian Express group): Adade Mathi


The Hindu: Keshav


Ajit Ninan at TOI: Times of India


Hindustan Times: Shreyas Navare


The Indian Express (original – Delhi): Business As Usual by Unny


Satish Acharya: Mid-Day


Mir Suhail Qadiri: Kashmir Reader


Tehelka

Think. And Be Damned

Drawing a dangerous line

‘The arrest of the cartoonist in Bengal, the Internet control laws — this is all part of a shutdown of democratic freedoms we take for granted,’ says Sudhir Tailang

Free Speech or hate speech?: By Mahmood Mamdani

I empathise with those baffled by the rapidly spiralling controversy around the series of cartoons depicting Prophet Muhammad. The cartoons were first published in the Danish paper, Jyllands-Posten, nearly five months ago, in September. The initial protest was limited to Denmark’s Muslim minority but was brushed off by both government and civil society. This is when some of the ultra-conservative Danish imams took up the matter and set off for Saudi Arabia and Egypt with a dossier containing the inflammatory cartoons. Last week came the diplomatic explosion: Saudi Arabia recalled its ambassador in Denmark and Libya shut its embassy. Then followed the boycott of Danish goods, demonstrations, strikes, flag burning, and now fires set to embassies in Damascus and Beirut.

How to make Badri Seshadri a Tamil Nadu politician?

பத்ரியை பதிவுலகில் அறியாதவர் இலர். அவரை தமிழக அரசியல்வாதி ஆக்குவது எங்ஙனம்?

1. வண்ணச் சொக்காயை விட்டு வெள்ளை சட்டை; அரைக்கால் டவுசரை விட்டு, கரை வேட்டிக்கு மாறவேண்டும்.

2. புதிய தலைமுறை, நீயா நானா போன்ற நிகழ்ச்சிகளுக்கு பதிலாக சன் செய்திகளில் வரவைத்துக் கொள்ள வேண்டும்.

3. அதன் தொடர்ச்சியாக புதிய சேனல் துவங்க வேண்டும்.

4. குஷ்பு போல் புரட்சிகரமான கருத்துகள் சொன்னால் போதாது; திருமா போன்றவர்களிடமிருந்து மிரட்டல்களை வாங்கிக் கொள்ள வேண்டும்.

5. நல்ல தமிழில் பேசுவதிற்கு பதிலாக பக்கா லோக்கல் தமிழில் பண்பாட்டுடன் உரையாட வேண்டும்.

6. அலைக்கற்றை, அயோத்தியா என்று இதுவரை எழுதியவற்றை அழித்துவிடவேண்டும்.

7. அழித்தவுடன், அதன் துணுக்குகளை வெகுசன ஊடகங்களான விகடன், குங்குமத்தில் வரவைக்க வேண்டும்.

8. தமிழ் பேப்பரை மாலை நாளிதழாக்கி மாயவரத்தாரையோ மருதரையோ மாஸ் தலைப்பு தூண்டில் உற்பத்தியாளராக்கி தேநீர் நிலையங்களில் சூடு பறக்க வேண்டும்.

9. ’அரசியல்வாதி ஆவது எப்படி’ என்று புத்தகம் அச்சிடக் கூடாது.

 

Volker Pispers: Sep 11, Iran vs Iraq, Chile Allende, USA & Germany: Read the Subtitle

தமிழகத்தின் ‘நீயா, நானா’ அரட்டை அரங்கங்களில் உணர்ச்சிமிகு வசனங்கள் நிறைந்திருக்கின்றன. அந்த நிகழ்ச்சி பேச்சாளர்களில் ஒரு சிலராவது இவ்வாறு கோர்வையாக ஒரு மணி நேரம் பேசக்கூடியவராக மாற வேண்டும். வரலாற்றுப் பார்வை, கலாச்சார பின்புலம், அரசியல் கோணங்கள், உலகளாவிய நோக்கு என்று சுவாரசியமான ஸ்டாண்டப்.

சிலியின் அலெண்டெ, சதாமின் இரான் போர், குவைத் எண்ணெய்க் கிணறு, அமெரிக்காவை நெருக்கியிருக்கும் இராணுவப் பொருளாதாரம்… பின்னிப் பிணைந்து நகைச்சுவையும் கலந்து உரையாற்றுகிறார்.

தாடி வச்ச தவசிரேஷ்டர்: போஸ்டர்

நானும் ராம் கோபால் வர்மாவும்

நீங்களும் இவ்வாறு ஒப்பிட: Twitterize Yourself: How To Create A Visualization Of Your Twitter Profile [INFOGRAPHIC] – AllTwitter

உங்களுடன் ஒப்பிட சிலர்:

  1. ஏ ஆர் ரெஹ்மான்
  2. சுருதி ஹாஸன்
  3. பிரிட்டிஷ் நந்தி
  4. பர்க்கா தத்
  5. கரன் ஜோஹர்
  6. ஷாரூக் கான்
  7. சசி தரூர்
  8. சேகர் கபூர்
  9. சுசித்ரா
  10. சச்சின் டெண்டுல்கர்

சார்லி ஷீன்: வசைபாடி? தசை நாடி? ஆசை கோடி!

பெயரிலி ட்வீட்:

Charlie Sheen is the best Sufi poet alive today. Why do y’all make fun of him?

சார்லி ஷீன் எப்படி செய்தி ஆனார்?

1. போதைப்பொருள் அதிகமாகியதால் ஜனவரி 27 மருத்துவமனைக்கு சென்றார்.

2. தொலைக்காட்சியில் வாரந்தோறும் வரும் ‘டூ அன்ட் எ ஹாஃப் மென்‘ நகைச்சுவைத் தொடரின் படப்பிடிப்பை சி.பி.எஸ் டிவி தாற்காலிகமாகத் தள்ளிவைக்கிறது.

3. ஒரு வாரத்திற்கு இரண்டு மில்லியன் வீதம் சம்பளம் கிடைத்தாலும், CBS TV தன்னுடைய பெயரினால் மட்டுமே திங்கள்கிழமைகளில் பிழைப்பு நடத்துகிறது என்று பேட்டி கொடுக்கிறார் ஷீன். நான்கு நாளில் நடித்துக் கொடுக்கும் ஒரு நிகழ்ச்சிக்கான ஊதியத்தை மூன்று மில்லியனாக உயர்த்தாவிட்டால், வெளியேறுவேன் எனவும் மிரட்டுகிறார்.

4. ட்விட்டரில் கணக்குத் துவங்கிய இரு நாளுக்குள் ஒன்றரை மில்லியன் பேரை பின் தொடர வைக்கிறார். கின்னஸ் சாதனை.

5. ஏற்கனவே மூன்று முறை விவாகரத்தாகி இருந்தாலும், விலைமாதருடன் தொடர்பு கொண்டிருந்ததும் பல்பெண்டிர் பாலியல் உறவு பரபரப்பு செய்தி ஆகியதும் சமீபத்திய துணைவியாரின் பிரிவுக்கான காரணமாக சொல்லலாம்.

6. தொலைக்காட்சி கேமிராக்கள் சுழல, பத்திரிகையாளர் படம்பிடிக்க, சார்லியின் இரட்டை மகன்கள் அவரின் வீட்டில் இருந்து கொண்டு செல்லப்படுகிறார்கள்.

எழுத்தாளர் ஜெயமோகன் பேச்சில் இருந்து

என்றும் வற்றா ஜீவநதி – இந்திய இலக்கியத்தின் சாரம் என்ன?

மனிதனின் அன்பு கருணை பாசம் தியாகம் அனைத்தையும் திரை விலக்கி நோக்கினால் மனித அகத்தில் நிறைந்திருப்பது அடிப்படை விலங்கியல்புகளே என்ற நம்பிக்கை. மனிதன் சுயநலத்தால், காமத்தால், வன்முறையால், அகங்காரத்தால் ஆனவன் என்ற நம்பிக்கை.
.
.
.
மனித மனத்தை அதன் திரைகளை விலக்கிப் பார்த்தால் தெரிவது காமம் வன்முறை அகங்காரம் ஆகியவைதான். நம் மரபு இதை ‘காம குரோத மோகம்’ என்றது.
.
.
.
இன்பத்திற்காக. ஓயாது ஒழியாது இன்பத்திற்காக தவித்தபடியே இருக்கிறது மனிதமனம். அழியாத இந்த ஆனந்த வேட்கையே மனதின் இயல்பான நிலை.
.
.
.
ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக நாம் கலையின் இலக்கியத்தின் சாரமாகக் கண்டது இதுதான். கலை என்பது ஆனந்தத்தின் வெளிப்பாடு. ஆனந்தத்தை நிகழ்த்துவது.

Two and a Half Men” தொடரும் இதைப் பின்னணியாக வைத்து இயங்குகிறது.

இரு சகோதரர்கள். ஒருவன் வாழ்க்கை மணமுறிவில் முடிந்து, திருமணத்தின் பயனாக இருக்கும் பதின்ம வயது Half Men கொண்டது.

இன்னொரு சகோதரன் கடற்கரையைப் பார்த்த வீட்டில், தினம் ஒரு அழகியோடு சல்லாபமும், காலை எழுந்தவுடன் விஸ்கியும் அருந்தி உல்லாசியாக கழிப்பவன்.

அதாவது ஒருவன் சாதாரண மானிடன். இன்னொருவன் அந்த சாதாரணனின் பார்வையில் பொறாமை கொள்ள வைக்கும் சொகுசுக்காரன்.

நடுத்தரவர்க்க தொலைக்காட்சிப் பார்வையாளனின் வாழ்க்கையில் சார்லி ஷீன் என்பவன், ஹாலிவுட் ஜாலிநாயகன். ஆனந்த தாண்டவன்.

சார்லி ஷீனுக்கும் சாரு நிவேதிதாவுக்கும் உள்ள ஒற்றுமை?

‘நான் கடவுள்’ கொள்கையில் ஸ்திர நம்பிக்கை உடையவர்களை சினிமாத் துறையில் நிறைய காணலாம். ‘இளைய தளபதி’ விஜய் அதிரடி வசனம் சொல்வது; சிறார்கள் சூழ உறங்கும் கோலாகலத்தை வர்ணிக்கும் மைக்கேல் ஜாக்சன்; தந்தையுடன் அரை நிர்வாண கவர் ஸ்டோரி போடும் ஹானா மொன்டானா…

எழுத்துலகில் பிறரைப் படிப்பதால் இவ்வகையினர் அரிதே என்றாலும், சாரு நிவேதிதா போல் தன்னைச் சுற்றியே உலகம் சுற்றுகிறது நம்பிக்கையாளர் கிடைக்கின்றனர். அரசியலில் ஆட்சியில் இருக்கும் வரை ஒளிவட்டமும் சாமரம் வீசும் மேடையும் கிடைக்கிறது.

வசைகளை நாடிச் செல்கிறார்களா? கவனத்தில் இருப்பதை மட்டுமே விரும்புகிறார்களா? மிட் லைஃப் குழப்பமா? வாழ்க்கையின் அர்த்தம் தேடும் போராட்டமா? மிஷ்கின் படத்தில் குத்துப் பாடலில் பாண்டியராஜன் ஆகாத சோகமா?

தன்னைக் கவர்ந்த பிரயோகமாக சார்லி சீன் சொன்னது;

Marlon Brando’s character in Apocalypse Now, “You have the right to kill me, but you do not have the right to judge me.”

தொடர்புள்ள சுட்டி:
Charlie Sheen Quotes As New Yorker Cartoons: Pics, Videos, Links, News

10 Similes between Politician Rahul Gandhi & Actor Rajinikanth

ராகுல் காந்தி ரஜினிகாந்த்
தளபதிக்கு பிரதம மந்திரியாகும் வயசு ஹீராவாக நடிக்கும் வயசு
இத்தாலி நாட்டு குடும்பத்தில் பிறந்தவர் மகாராஷ்டிர குடும்பத்தில் கர்நாடகத்தில் பிறந்தவர்
இந்திய அரசியலை மறுத்து, வெளிநாடு சென்றதாக செய்தி வந்ததுண்டு தமிழ் சினிமாவை வெறுத்து, மருத்துவமனையில் ஓய்வெடுத்ததாக செய்தி உண்டு
சொந்தமாக முனைந்ததில் பிகார் போல் பின்னடைவுகள் எக்கச்சக்கம். சொந்தத் தயாரிப்பில் ‘வள்ளி‘ ஃப்ளாப்
‘கரீபி ஹடாவோ’ கோஷங்கள் ரீமேக் செய்கிறார் அமிதாப் படங்களை தமிழ் சினிமாவுக்கு ரீமேக் செய்தார்
கொள்ளுத் தாத்தாவைப் போல் ரஷியாவின், சீனாவின் நண்பர் ஜாக்கி சானை விட ஜப்பானின் புகழ்பெற்ற நடிகர்
ஞாநி, மாலன் போன்ற அறிவிஜீவிகளின் பழக்கமுண்டு துக்ளக் ‘சோ‘ போன்ற அரசியல்வாதிகளின் சகவாசமுண்டு
ஸ்பெட்ரம் 2ஜி, ஆதர்ஷ், ஐபிஎல் இருந்தாலும் மீடியா திரையில் மிஸ்டர் க்ளீன் இமேஜ் எந்திரனுக்கு ஐம்பது கோடிக்கு மேல் சம்பளம் வாங்கினாலும், கருப்பு பணம் தகர்க்கும் சிவாஜி வெள்ளித்திரை இமேஜ்
ஏழையின் குடிசைக்கு விசிட் அடிப்பார் சாமியாரின் இமயமலைக்கு போய் வருகிறார்
திமுக, அதிமுக – எந்தப் பக்கம் சாய்வார் என்று யாருக்கும் தெரியாது அமலா பால், ஹன்ஸிகா மொட்வானி – எந்த ஹீரோயின் தேர்ந்தெடுப்பார்?

முந்தைய ஒப்புமை:
10 Similes between Writer Charu Nivethitha & Actor Kamalhasan

ஜாதி: தேவையா? வேண்டாமா?

சில பதிவுகள்:

1. jeyamohan.in » Blog Archive » சாதி பேசலாமா?

2. jeyamohan.in » Blog Archive » சாதியுடன் புழங்குதல்…

3. jeyamohan.in » Blog Archive » சாதியை வைத்துக்கொண்டு என்ன செய்வது?

4. திணை இசை சமிக்ஞை: நவீன சமூகமும் இரட்டைநிலையும் – தமிழவன்

சாதி ஏன் வேண்டும்?

  1. தாழ்த்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு தருவதற்கு
  2. மக்கள் தொகை கணக்கெடுப்பில் வாக்கு வங்கி எவ்வளவு பேர் என்று தெரிந்து கொள்வதற்கு
  3. சம்பளம், வேலை போன்ற குறியீடுகளைக் கொண்டு முன்னேறிய வர்க்கங்களை அடையாளம் காட்டுவதற்கு
  4. தொன்றுதொட்டு வரும் இனக் குறியீடுகளையும், குலவழக்கங்களையும் காப்பாற்றி அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வதற்கு
  5. முன்னேறிய நாடான அமெரிக்காவிலேயே வெள்ளை நிறத்தல்லாதவர் மீதம் அண்டை நாட்டில் இருந்து பஞ்சம் பிழைக்க வந்தோரும் ஒடுக்கப்படும் நிலை; இங்கே இப்ப என்ன அவசரம்?
  6. வத்தக்குழம்பு, குழிப்பணியாரம் என்று உணவு ஸ்பெஷாலிடிகளுக்கு சரவண பவன்கள் மட்டும் என்று மாறாதிருப்பதற்கு
  7. ஐஐடி, என்.ஆர்.ஐ., ஆட்டோ ஓட்டுநர் என்று பிரிவுகள் மாறலாம்; சகோதரப் பற்று சாகாது
  8. சாதியை எல்லாம் எப்பொழுதும் ஒழிக்க முடியாது என்று சொல்வதற்கு

ஜாதி ஏன் தேவையில்லை?

  1. சமூகம் என்றால் கலாச்சாரம் என்று அர்த்தப்பட வேண்டும் என்பதால்
  2. இன்றைய நாகரிக உலகு பொருளுடையார், இல்லார் என இரண்டே பிரிவினர் கொண்டதால்
  3. பார்ப்பான், பள்ளன், கள்ளன், செட்டி என்று எல்லாமே வசைச் சொல்லாகிப் போனதால்
  4. மண்டல் போல் அரசியல் கலவரம் ரசிக்காததால்
  5. லாலு, மாயாவதி, முலாயம் என விகித்தாசார லஞ்ச ஒதுக்கீடு மேல் கொண்ட வெறுப்பினால்
  6. அப்படியே விளிம்பு வர்ணம் பார்த்து கட்சி அமைக்கும் பாட்டாளி மக்கள் கட்சி முதல் விடுதலை சிறுத்தைகள் வரை அனைவரும் இந்துத்துவா முதல் தீவிரவாதம் வரை அனைத்து ஒதுக்கப்பட வேண்டியோருக்கும் ஆதரவு நல்குவதால்
  7. க்ளாசிஃபைட் விளம்பரங்களில் கோத்திரம் பார்க்காததால் கொலை செய்யும் மணமுடிக்கும் பழக்கத்திற்கு முற்றுப்புள்ளி வேண்டுவதால்
  8. பிரிவினையை விரும்பாததால்

“A caste-ridden society is not properly secular. When a person’s beliefs become petrified in caste divisions, they affect the social structure of the state and prevent us from realising the idea of equality which we claim to place before all else.” – Jawaharlal Nehru