Tag Archives: Gulf

Free Speech, Religion Clash Over ‘Innocence of Muslims’ Film: Cartoon: Movie critics – Dan Wasserman

Thanks: cartoon from Dan Wasserman of the Boston Globe

Volker Pispers: Sep 11, Iran vs Iraq, Chile Allende, USA & Germany: Read the Subtitle

தமிழகத்தின் ‘நீயா, நானா’ அரட்டை அரங்கங்களில் உணர்ச்சிமிகு வசனங்கள் நிறைந்திருக்கின்றன. அந்த நிகழ்ச்சி பேச்சாளர்களில் ஒரு சிலராவது இவ்வாறு கோர்வையாக ஒரு மணி நேரம் பேசக்கூடியவராக மாற வேண்டும். வரலாற்றுப் பார்வை, கலாச்சார பின்புலம், அரசியல் கோணங்கள், உலகளாவிய நோக்கு என்று சுவாரசியமான ஸ்டாண்டப்.

சிலியின் அலெண்டெ, சதாமின் இரான் போர், குவைத் எண்ணெய்க் கிணறு, அமெரிக்காவை நெருக்கியிருக்கும் இராணுவப் பொருளாதாரம்… பின்னிப் பிணைந்து நகைச்சுவையும் கலந்து உரையாற்றுகிறார்.

ராஜேஷ் சந்திரா: அமெரிக்காவும் அயல்நாடுகளும் – வளைகுடா நாடுகளுடனான உறவு

முந்தைய இடுகையின் தொடர்ச்சி:

3. லெபனான், பாலஸ்தீனம்: சுதந்திரம், விடுதலை போன்றவை ஹெஸ்பொல்லா, ஹமாஸ் என்று மொழியாக்கப்பட்ட நிலையை அமெரிக்கா தோற்றுவித்திருக்கிறது. நல்லதா/கெட்டதா? அடுத்து எங்கே ராஜா கவிழ்ந்து மக்கள் ராச்சியம் உதிக்கும்? உதிக்க வேண்டுமா?

லெபனான், பாலஸ்தீனத்தில் அமெரிக்கா எப்போதுமே முற்றும் கோணல். இஸ்ரேல் பேச்சையும், அராஃபத்தையும் நம்பி இழந்தவை ஏராளம். ஹமாஸை தீவிரவாத இயக்கமாகவே பார்த்து அதை மேலும் வளர்த்தது இதில் அடங்கும். அராஃபத்தை விட கட்டுக்கோப்பானவர்கள் ஹமாஸ். அரசியலிலும், பாலஸ்தீனிய அகதிகள் முகாம்களில் மக்கள் தேவையைக் கவனிப்பதில் ஹமாஸ் முதலிடம்.

அராஃபத்தும் அவருடைய ஜால்ராக்களும் பணத்தை வாங்கி தங்களை வளப்படுத்திக் கொண்டது மட்டும் மிச்சம் (இதில் மூன்றாம் உலக நாடுகளில் அராஃபத்துக்குக் கிடைத்த கதாநாயக அந்தஸ்து மிகவும் நகை முரணானது).

இஸ்ரேலுக்கும் அராஃபத்தை அமெரிக்கா ஆதரிப்பது வசதியாக இருந்தது. விலைப் போகக் கூடியவர். ஹமாஸ் தலைவர்களை ஒழிப்பது இந்த வகையில் சாத்தியமாக இருந்தது.

ஹமாஸ் தீவிரவாததிற்கு ஒன்றும் குறைந்ததில்லை. ஆனால் அவர்களை ஜனநாயகத்திற்குத் திருப்பாதது இன்றும் அமெரிக்கா மத்தியக் கிழக்கில் கொடுக்கும் விலை.

ஹமாஸ் இலங்கை விடுதலைப் புலிகளைப் போன்றவர்கள்.

ஹெஸ்பொல்லா என்னைப் பொறுத்தவரை எடுப்பார் கைப்பிள்ளை. இன்று இரான், நாளை சிரியா என ஆடை மாற்றிக் கொண்டிருக்கும். ஆனாலும் இஸ்ரேலை லெபனானில் மண் கவ்வ வைத்ததில் இவர்கள் பங்கு அதிகம்.

மேற்சொன்ன இரண்டும் அமெரிக்காவைப் பற்றி நல்லதாக நினைக்கப் போவதில்லை. அதற்கு சரித்திரமே 1900-க்குப் பிறகு திருப்பி எழுதினால்தான் உண்டு. மாற்றம் கொண்டு வரவேண்டியவர்கள் மிதவாத மக்கள். சோகமான விஷயம் என்னவெனில் பொது மக்களும் அரசியல் நிலையாமையில் மிகுந்த கசப்பில் இருக்கிறார்கள்.

மத்தியக் கிழக்கு நாடுகளைப் பொறுத்த வரை மக்களாட்சி என்பது அங்கே எண்ணை கிடைக்கும் வரை வராது (எண்ணெய் தீர்ந்தவுடன் அங்கே ஆட்சி செய்ய ஒன்றும் இருக்காது). Pseudo மக்களாட்சி நடக்க வாய்ப்புண்டு. ஒமான் போன்ற நாடுகள் சும்மா ஒப்புக்கு சப்பாணியாக பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கிறார்கள். அதிகாரம் முழுக்க ராஜா கையில். ஆனாலும் அது ஒரு விதத்தில் நல்லதுதான். இதன் தொடர்ச்சி மேலும் மக்களுக்கு அதிகாரங்களைக் கொடுக்கும்.

4. இஸ்ரேல்: யூதர்களின் தேர்தல் நிதி காணிக்கை; ஊடக ஆதிக்கம்; ஆளுமை நிறைந்த பதவிகள் — இவற்றை தாண்டி மஹ்மூத் அகமதிநிஜாதுடன் அமெரிக்க அதிபர் உரையாடுவதால் மட்டும் இங்கே என்ன மாற்றம் விளைந்துவிடும்? புஷ், க்ளின்டன்கள் எவ்வாறு இந்த பிரச்சினை நாட்டை கையாண்டார்கள்?

1979-ல் ஷா வெளியேறியதிலிருந்து அமெரிக்கா இரானை ஜென்ம விரோதியாகத்தான் பார்க்கிறது. இதில் இஸ்ரேலின் பங்கு தேவைப்படவில்லை. அகமதிநிஜாத் தன்னை ஒரு தைரியமான தலைவராகக் காட்டிக் கொள்ள தடாலடி வேலைகளைச் செய்து கொண்டிருக்கிறார்.

  • யூதப் படுகொலைகளை ஆராயும் மாநாடு,
  • இஸ்ரேலை ஐரோப்பாவிற்கு விரட்டுவது

என கானல் நீர் கனவில் அரபு மக்களைத் திருப்தி படுத்தும் வரை இவரோடு அமெரிக்கா பேச்சு வார்த்தை நடத்தப் போவதில்லை.

இவரின் ஒரு நேர்காணலை கொஞ்ச நாட்கள் முன் தொலைக் காட்சியில் காண நேர்ந்தது. அபத்தமான பதில்கள், முன்னுக்குப் பின் முரணாக பேசுவது என்று அரசியல் கோமாளியாகக் காட்சி அளித்தார்.

ஒரு வேடிக்கை என்னவென்றால் இராக்-இரான் யுத்தத்தில் அமெரிக்காவின் ஆயுதங்கள் இஸ்ரேல் மூலமாக இரானுக்கு அனுப்பப்பட்டது. எல்லாம் சகஜம்.

மற்ற நாடுகளை தன் வான் படையைக் கொண்டு மிரட்டும் அமெரிக்கா இதுவரை இரானுடன் மோதுவதில் பெரிதும் தயக்கம் காட்டுகிறது.

புஷ், கிளிண்டன்களின் இரான் கொள்கை ரேகனின் அடியொற்றி எடுக்கப்பட்டவை. அதாவது சும்மா சலம்புவது, பின் இரானிடமிருந்து எண்ணையை வாங்கிக் கொள்வது.

5. கல்வியை முன்னிறுத்தும் கத்தார், பஹ்ரைன் போன்ற மேற்கத்திய குடாநாடுகள்; நட்பு கொஞ்சமும் எண்ணெய் நிறையவும் கொண்ட சவூதி அரேபியா, குவைத் போன்றவர்கள்; முதலாளித்துவத்தை முன்னிறுத்தி வியாபாரத்தை கவனிக்கும் அமீரகம் – அடுத்த அமெரிக்கா இங்கே ஒளிந்திருக்கிறதா? அல்லது USSR பதுங்கி இருக்கிறதா? இரண்டும் இல்லாமல் ஐரோப்பிய ஒன்றியம் போன்ற ஆனால் பன்மடங்கு பலம் வாய்ந்த புலி நித்திரை கலைக்குமா?

கல்வியை முன்னிறுத்தினாலும் மக்களின் சமூக வாழ்க்கை முன்னேறியுள்ளதா என்பது கேள்விக்குறியே. உதாரணமாக எனக்குத் தெரிந்தவரை, பெண்கள் அங்கே தேர்தலில் போட்டியிட முடியாத சூழல் இருக்கிறது. நகரங்கள் முன்னேறிய முகம் காட்டினாலும் சிறு கிராமங்களை இந்த வளர்ச்சிகள் அடைகின்றதா என்பதே சந்தேகம்.

நீங்கள் குறிப்பிட்ட நாடுகள் ஏற்கெனவே OPEC மூலமாக இனந்திருக்கின்றன. ஆனால் ஒன்றியமாக இணைய அனவரையும் கவர்ந்த ஒரு தலைவர் வேண்டும் (நாசர் போல). ஆனால் இந்த குறு மன்னர்கள் அதை யோசிக்கவில்லை. தேவையும் இல்லை என நினக்கிறார்கள். எண்ணை, மதம் இவர்களை இணைத்தாலும் மத உட்பிரிவுகளை (ஷியா, சுன்னி மற்றும் வஹாபி) இவர்களால் வெல்ல முடியவில்லை (வெல்ல வேண்டுமா என்பது வேறு). அது நடக்கும் வரை ஒன்றினைந்த மாகாணங்களாக ஆக இயலாது.

அமெரிக்கா என்று எதைக் குறிப்பிடுகிறீர்கள்?

பொருளாதாரம்? நிச்சயமாக இல்லை. முன்பே சொன்னது போல் எண்ணை இல்லையெனில் பொருளாதாரம் இல்லை.

படைபலம்? இல்லை. இயற்கை வளம்? கேள்விக் குறிதான்.

அரசியல் பலம்? குரான் வழி ஆட்சி நடப்பதால் இவைகள் இணைய வாய்ப்பு உண்டு. ஆனால் அரசியல் முதிர்ச்சி அடைய மத வழி அரசியல் மட்டும் போதாது.

பி.கு.: ஒரு கேள்வி தோன்றியது…ஏன் மேற்கத்திய ஊடகங்கள் மத்தியக் கிழக்கு நாடுகளை இன்னும் அலாவிதீன், அலிபாபா காலத்திலேயே பார்க்கின்றன என்று…பின் யோசித்ததில் அந்தக் கோணத்தில் படிக்க வேண்டியது நிறைய, இந்த வலைப் பக்கத்திற்கு பொருந்தாது மற்றும் அது சக நண்பர்களோடு விவாதிக்கப் பட வேண்டிய ஒன்று.

ராஜேஷ் சந்திரா

இன்று இரவு மெகயின் ஏன் ஜெயிக்கக் கூடும்?

முதலில் வீடியோ பார்த்துவிடவும்: (இறுதி வரை பார்க்கவும்)

அமெரிக்காவில் ஈகோ முக்கியம். தோல்வி என்பது அகராதியில் கூடாது. இராக்கில் பின்வாங்கும் ஒபாமாவுக்கு வாக்கா? அல்லது வெற்றித் திருமகன் ஜான் மெகயினா?

போரில் சிறைபிடிக்கப்பட்டாலும் உள்ளந்தளராத உத்தமர் மெகயின் என்பது முதற் காரணம்.


அடுத்த வீடியோவும் அமெரிக்கர்களின் மனவோட்டத்தை சொல்கிறது:

நீங்கள் சம்பாதிக்கும் ஓரணாவில் இருந்து அரையணாவைப் பிடுங்கி, பிச்சையெடுப்பவருக்கு தரும் ஒபாமாவுக்கு ஓட்டா? அள்ளது சோம்பேறிகளை உழைத்து சம்பாதித்து முன்னேறச் சொல்லும் ஜான் மெகயினா?

கிடைக்கிற சம்பளத்தை சுளையாக வீட்டுக்கு எடுத்துப் போக சொல்பவரா? ஈட்டிக்கடைகாரராக பாதி பிடுங்கிக் கொள்பவரா?

மெகயின் வருமான வரிவிலக்கு தருவார் என்பது இரண்டாவது காரணம்.


தொடர்புள்ள இடுகைகள்:

1. அசலாக சொன்ன பத்து காரணங்கள்: ஏன் மெகயின்?

2. அமெரிக்க தேர்தல் களம், பாஸ்கர் – உயிரோசை:

மெகைனின் திட்டத்தைப் பொறுத்த வரை கார்ப்பரேட் நிறுவனங்களின் வரியை 35% இல் இருந்து 25% குறைப்பது, புஷ் தற்காலிகமாக அறிமுகப்படுத்திய வரிக் குறைப்பை நிரந்தரமாக்குவது, முக்கியமாக அரசாங்கத்தின் செலவைக் குறைப்பது முதலானவை பிரதான அம்சங்கள். ஈராக்கில் உள்ள ராணுவத்தை இப்போதைக்கு, திரும்ப அழைக்க முடியாது என்ற நிலைப்பாட்டைக் கொண்டுள்ளார் மெகைன்.

அமெரிக்க தேர்தல்: வெளியுறவுக் கொள்கை

ராஜேஷ் சந்திரா:

1. இராக்: ஒபாமா வந்தாலும் உடனடியாக வாபஸ் ஆரம்பித்துவிடுமா? அங்கு நிலை எப்படி இருக்கிறது? குர்துக்கள் தனி நாடாக்கிக் கொள்வார்களா? மெகயின் அதிபரானால் ஒபாமாவின் நிலையில் இருந்து எவ்வாறு சூழல் மாறுபடும்? ஆருடம் ப்ளீஸ்!

1a) ஒபமா வந்தால் : வாபஸ் ஆரம்பிக்காது. பிரச்சாரத்தில் இதுவரை ஒபாமா தெளிவாகத் தன் நிலையை விளக்கவில்லை. விரைவில் வெளியேறுவோம் என முழங்கி தென் மாகாணங்களை அவர் இழக்கத் தயாராக இல்லை (முக்கியமாக இராணுவத் தலைமையை).

1983-ல் லெபனானை விட்டு வெளியெறுவதற்கு ஒரு குண்டு வெடிப்பு போதுமானதாக இருந்தது. இராக்கில் அது இயலாது. காரணம்: எண்ணை வளம். அருகாமையில் இரான். அமெரிக்கப் ப்டைகள் வெளியேறினால் நிச்சயம் அந்தப் பிராந்தியம் 1800-களுக்குச் செல்லும் வாய்ப்புகள் நிறைய. பிரிட்டன் இரண்டாம் உலகப் போருக்குப் பின் செய்தத் தவறை அமெரிக்கா செய்யாது. இப்பொதைக்கு அமெரிக்கா அங்கே ஆப்பசைத்தக் குரங்கு.

ஒபாமா என்ன செய்ய வேண்டும்: செனட்டில் இருப்பது வேறு, ஜனாதிபதியாக இருப்பது வேறு என்று ஒபாமாவிற்கு முதல் நாளே தெரிந்து விடும் (இதுவரை தெரியாமல் இருந்தால்). எனவே வறட்டு ‘ராம்போ’ வசனங்களை எல்லாம் மூட்டைக் கட்டி வைத்து விட்டு இராக்கிய மித வாதிகளைக் கண்டறிய வேண்டும். அவர்களை இராக் மக்களிடையே கொண்டு செல்ல வேண்டும்.

இராக் நாடு மதப்பிரிவுகளில் மிகுந்த அக்கறை காட்டும் நாடு. இதனால் அனைத்துப் பிரிவினரயும் உள்ளடக்கிய ஒரு குழு பதவியில் இல்லாமல் மக்களை அணுக வேண்டும். தேவைப்பட்டால், முக்தாதா அல் சதர் போன்ற உக்கிரமான மதத் தலைவர்களையும் அந்தக் குழுவில் இடம் பெறச் செய்யவேண்டும். வரும் வன்முறைகளுக்கு அந்த மதத் தலைவர்கள் பொறுப்பு என சுட்ட வேண்டும். இதையும் மீறி அந்த மதத் தலைவர்களின் ஆட்கள் வன்முறையில் இறங்கினால் மக்களே புறக்கணிப்பார்கள். இவை அனைத்தும் பின்புலத்தில் நடக்க வேண்டும்.

தற்போதைய அரசாங்கம் சதாமிற்கு ஒரு மாற்றுதானே தவிர மக்கள் இன்னும் அதை ‘வரதராஜ பெருமாள்’ அரசாகத்தான் பார்க்கிறார்கள்.

அமெரிக்க அரசாங்கம் (அரசியல் செயல்களில்) முண்ணனியில் இருப்பதாகக் காண்பித்துக் கொண்டால் பிரிவினை/தீவிர வாதிகள் நிச்சயம் விரும்பமாட்டார்கள். இதன் பின் அமெரிக்கத் துருப்புகள் விலகல் ஆரம்பித்தால் நல்லது. நிச்சயம் இன்னும் இரண்டு வருடங்களாவது ஆகும்.

1b) அங்குள்ள நிலை: சதாம் இருந்த வரை செய்திகள் கசிந்தன. இப்போதைய அரசில் (?!) வெளி வருகின்றன. மற்றபடி ஆட்சி முறை அப்ப்டியே தான் இருக்கிறது. ஷியா, சுன்னி பிரிவினரிடயே ‘அமெரிக்கா எப்போ ஒதுங்குவான், நம்ம அடித்துக்கொண்டு சாகலாம்’ என்று காத்திருக்கிறார்கள். ஆட்சியாளர்கள் ‘இதெல்லாம் இருக்கட்டும், வடக்கே குர்துக்களின் தலையை எப்படி எடுக்கலாம்’ என்று யோசித்துக் கொண்டிருக்கிறார்கள்.

மற்றபடி, பணத்துக்கு விலை போதல், இரு குழுக்களிடையே மோதல் உண்டாக்கி குளிர் காய்தல், வருங்காலத்தைப் பற்றி யோசிக்காமல் முட்டாள்களாகவே இருத்தல் என்ற typical அராபிய ஆட்சி முறை ஜோராக நடக்கிறது.

1c) குர்துக்கள் தனிநாடு பெறுவது இராக்கை விட துருக்கியின் கைகளில் தான் இருக்கிறது. துருக்கி இராணுவம் பலமானது (மற்ற அரபு நாடுகளோடு ஒப்பிடும் போது). இவர்களை மீறி வடக்கே இராக்கில் மட்டும் குர்துக்கள் தனி நாடு பெற முடியாது. துருக்கி நேட்டோவில் இருப்பதால் மேற்கத்திய வல்லரசுகள் சும்மா முனகிவிட்டு பேசாமல் போய்விடும்.

காஷ்மீரைப் போன்றது இந்தப் பிரச்சினை.

1d) மெக்கெய்ன் அதிபரானால்: ஆரம்பத்தில் மெக்கய்னிடம் இருந்த நம்பிக்கை போகப் போக நீர்த்து விட்டது. இராக் பிரச்சினக்கு, இவர் ஆட்சிக்கு வருவதும், டிக் செய்னி வருவதும் ஒன்றுதான். இயல்பாகவே மெக்கெய்ன் இராணுவ வீரர். இவரால் விட்டுக் கொடுத்து தொலை நோக்குப் பார்வையோடு இராக் மிதவாதத் தலைவர்களை அணுக முடியாது,

2. Africom: ஆப்பிரிக்காவில் மூக்கை நுழைப்பது ஜெர்மனி/ஜப்பானில் இருக்கும் நிரந்தர அமெரிக்க படை போல் சாதுவாக சமாதானமாக அமையுமா? அல்லது சவூதியில் புகுந்த அமீனாவாக இன்னும் சில குவைத்களையும் இராக்குகளையும் குட்டி போட்டு குழப்பத்திற்கு இட்டு செல்லுமா?

மத்தியக் கிழக்கு நாடுகளில் பட்ட சூட்டில் ஆப்பிர்க்காவில் அமெரிக்கா சர்வ ஜாக்கிரதையாகத்தான் இருப்பதாகக் கருதுகிறேன் (இதைப் பற்றி சொற்பமாகப் படித்த வரையில்). சொமாலியா மற்றும் சூடான் தவிர்த்து மிகப் பெரியப் பிரச்சினை இதுவரை இல்லை. எகிப்து அமெரிக்காவின் செல்லப் பிள்ளை.

லிபியா, சதாமுக்கு நடந்த மண்டகப்படியில் அரண்டுப் போய் கிடக்கிறது. மற்ற ஆப்பிரிக்க மக்கள் தங்களின் அன்றாடத் தேவைகளிலும் தங்கள் இனத்திலேயே அடைந்துக் கிடப்பதாலும், அமெரிக்காவைப் பற்றி கவலைக் கொள்ளவில்லை.

3. லெபனான், பாலஸ்தீனம்: சுதந்திரம், விடுதலை போன்றவை ஹெஸ்பொல்லா, ஹமாஸ் என்று மொழியாக்கப்பட்ட நிலையை அமெரிக்கா தோற்றுவித்திருக்கிறது. நல்லதா/கெட்டதா? அடுத்து எங்கே ராஜா கவிழ்ந்து மக்கள் ராச்சியம் உதிக்கும்? உதிக்க வேண்டுமா?

மாலன்: பராக் ஒபாமா: கனவுகளுக்கும் நிஜங்களுக்கும் இடையில்…

கறுப்பின அமெரிக்கர் ஒருவர் வெள்ளை மாளிகையில் குடியேறும் வாய்ப்பினைப் பெற்றார் என்ற ஒற்றைச் சரித்திர வரி ஒரு புள்ளி விபரமாக முடிந்துவிடுமா? அல்லது அமெரிக்காவிற்கும், உலகிற்கும் கூட, தேவைப்படும் ஒரு திருப்புமுனையாக மாறுமா?

ஒபாமாவினுடைய தேர்தல் வெற்றியை கறுப்பினத்தைச் சேர்ந்த ஒருவருக்குக் கிடைத்த வெற்றியாகத்தான் ஊடகங்கள், முக்கியமாக இந்திய ஊடகங்கள், சித்தரிக்க விரும்புகின்றன. அங்கீகரிக்கப்பட்ட அடிமைத்தனம், பாரபட்சம், இனத்தைத் ‘தூய்மைப்படுத்தல்’ போன்ற இழைகள் கொண்ட அமெரிக்க வராலாற்றின் பின்னணியில் பார்த்தால் ஒபாமாவின் வெற்றி சிறப்பு மிக்கதுதான்.

அமெரிக்கக் கறுப்பினத்தவர்கள் இன ஒதுக்கலை எதிர்த்து மார்ட்டின் லூதர் கிங் போன்றவர்கள் போராடியது ஏதோ நீண்ட நெடுங்காலத்திற்கு முன்பல்ல, ஒரு தலைமுறைக்கு முன்னர்தான். இன்றும் கூட சிறையில் இருப்பவர்களின் எண்ணிக்கை உலக அளவில் மிக அதிகமாக (2.3 மில்லியன்) இருக்கும் நாடு அமெரிக்கா; அதில் 40 சதவீதம் பேர் கறுப்பினத்தவர்கள்.

ஆனால் ஒபாமாவின் வெற்றி முற்றிலும் இன ரீதியாக ஈட்டிய வெற்றியல்ல. அது ஒரு வகையில் அமெரிக்க நடுத்தர வர்கத்தின் ஆசைகள் விழைவுகள் ஆகியவற்றின் பிரதிபலிப்பாக அமைந்த வெற்றி. அதிபரை மையமாகக் கொண்ட அமெரிக்க அரசிய்ல் அமைப்பு பெருமள்விற்கு அங்குள்ள வணிக நிறுவனங்களின் பொருளுதவியைச் சார்ந்த அரசிய்ல் அமைப்பு. Corporate Funded) என்பது உலகறிந்த ரகசியம்.

இந்தப் பின்னணியில் மத்தியதர வர்க்கத்தின் குரலில் பேசும் ஒபாமாவின் வெற்றி முக்கியத்துவம் வாய்ந்தது. இதன் காரணமாகவே அதிபர் ஒபாமாவின் முன் நிற்கும் சவால்கள் வேட்பாளர் ஒபாமாவின் முன்னிருந்த சவாலகளைவிடக் கடுமையானவை. அவரே அவரது பிராசரத்தின் போது சொன்னதைப் போல, புஷ் இருந்த இடத்தில் ஒரு ஜனநாயகக் கட்சி வேட்பாளரை அமர்த்திவிடுவதன் மூலம் மட்டுமே தேவையான மாற்றங்களை ஏற்படுத்திவிடமுடியாது.

“உலகமயமான பொருளாதாரத்தில் சிலர் கற்பனைக்கும் எட்டாத அளவிற்கு வளம் அடைந்திருக்கும் அதே வேளையில் மத்திய வர்க்க அமெரிக்கர்களது, மத்தியவர்க்கத்தை எட்டிவிட வேண்டும் எனக் கடுமையாக உழைத்துக் கொண்டிருப்பவர்களது அமெரிக்கக் கனவு மேலும் மேலும் நழுவிப் போய்க் கொண்டிருக்கிறது” (“While some have prospered beyond imagination in this global economy, middle-class Americans — as well as those working hard to become middle class — are seeing the American dream slip further and further away,”) இவை அயோவா மாநிலத்தில் பிரசராத்தின் போது ஒபாமா சொன்ன வார்த்தைகள்.

ஒரு நிலைக்கு மேல் வளர்ச்சி அடையமுடியாமல் பல ஆண்டுகளாகத் தேங்கிக் கிடக்கும் நடுத்தர வர்க்கத்தின் இந்த யதார்த்தத்தை ஒபாமா நன்றாக அறிந்திருக்கிறார். இதற்கான தீர்வு என்ன என்பதையும் அவர் சிந்தித்திருக்கிறார்:

இந்த “முன்னேற்றத்திற்குக் குறுக்கே நிற்கும் வணிக நிறுவனத் தரகர்களுக்கு எதிராக நாம் எழாதவரை நாம் அந்தக் கனவை மீட்டெடுக்கப் போவதில்லை.மக்கள் எதைக் கேட்கவிரும்புகிறார்களோ அதை அல்ல, அவர்கள் என்ன அறிந்து கொள்ள வேண்டுமோ அதைச் சொல்கிற தலைமை ஏற்படாதவரை நாம் அந்தக் கனவை மீட்டெடுக்கப் போவதில்லை.” (“We’re not going to reclaim that dream unless we stand up to the corporate lobbyists that have stood in the way of progress. Unless we have leadership that doesn’t just tell people what they want to hear but tells everyone what they need to know.”)

இன்று அமெரிக்கப் பொருளாதாரம் இருக்கும் நிலையில் ஓபாமாவால் ‘ முன்னேற்றத்திற்குக் குறுக்கே நிற்கும் வணிக நிறுவனத் தரகர்களு’க்கு எதிராக எவ்வளவு தூரம் ஓபாமாவால் செயல்பட முடியும்?அப்படி செயல்பட ஆரம்பித்தால் அவரால் எத்தனை நாளைக்குத் தாக்குப் பிடிக்க முடியும்? முதலீட்டை முதன்மையாகக் கொண்ட (Captalist) பொருளாதார அமைப்பில் ‘கார்ப்போரேட்’களை எதிர்த்து – எதிர்க்கக் கூட் வேண்டாம், புறக்கணித்து விட்டு- செயல்படுவது சாத்தியமா? சாத்தியமில்லை என்றால், ‘கை நழுவிப் போன கனவை’ மீட்டெடுப்பது எப்படி?

இரண்டாண்டுகளுக்கு முன்பு ஒபாமா தன் பிராசாரத்தைத் துவக்கியபோது, இராக் போருக்கு எதிரான மனநிலை அமெரிக்க மத்தியதர வர்க்கத்திடம் விரவிக் கிடந்தது. அதிலும் தங்கள் பிள்ளைகளை போர்முனைக்கு அனுப்பிவிட்டு நெருப்பின் மேல் நின்று கொண்டிருந்த தாய்மார்களின் நம்பிக்கை ஒபாமா பக்கம் நின்றது.

இன்று, பொருளாதாரம் உருகி ஓடும் நிலையில், இராக் யுத்தம் நாளிதழ்களில் காணாமல் போய்விட்டது. 16ம் பக்கத்தில் ஆறாம் பத்தியில் 10 செ.மீ செய்தியாகக் கூட இடம் பெறுவதில்லை. ஆனால் அந்த யுத்தம் மக்கள் மனதில் இப்போதும் இருக்கிறது. அந்தத் தாய்மார்கள் நெஞ்சில் அந்த நெருப்பு இப்போதும் கனன்று கொண்டிருக்கிறது. ஆரம்ப நாள்களில் தனது பிரசாரத்தின் போது இராக் யுத்தத்தை வன்மையாகக் கண்டித்துப் பேசி வந்தார். ‘இந்த யுத்தத்தை முதலில் இருந்தே எதிர்த்து வந்திருக்கிறேன்’ என்ற ரீதியில் அவரது பேச்சுகள் இருந்து வந்தன. ஆனால் அண்மைக்காலமாக பேச்சின் தொனி மாறி வருகிறது.

‘தாக்குதல் நடத்தும் படைகள் மெல்ல மெல்ல 16 மாத காலத்தில் மெல்ல மெல்ல விலக்கிக் கொள்ளப்படும்’ என்று சொல்லும் அவர் அதே மூச்சில், ‘எனினும் பயங்கரவதத்திற்கு எதிரான பாசறைகள்’ (bases against counter terror) அங்கே தொடர்ந்து நீடிக்கும் எனறும் சொல்கிறார். அதை விடத் திடுக்கிட வைக்கும் விஷயம், ஆப்கானிஸ்தானிலும், பாகிஸ்தானலும் யுத்தத்தை அதிகரிப்பேன் அவை ‘பயங்கரவாதத்திற்கு எதிரான மையமான புள்ளியாக’ விளங்கும் என்ற அவரது அறிவிப்பு.

இவற்றைக் கொண்டு பார்க்கும் போது அதிபர் ஒபாமா ஆட்சிப் பொறுப்பேற்றதும் சில அறிவிப்புக்களை – குவான்டநாமோ கொடுஞ்சிறையை மூடுவது, இராக்கிலிருந்து படைகளைத் திரும்பப் பெறுவது போன்ற அறிவிப்புக்களை வெளியிடுவார். ஆனால் வெறும் அடையாள அறிவிப்புக்களாகவே (Tokenism)இருக்கும்.

பயங்கரவாதத்திற்கு எதிரான போர்’ வேறு ஏதோ ஒரு தேசத்தில் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.உலகில் உள்ள 195 நாடுகளில் 130 நாடுகளில் தன் ராணுவத்தை நிறுத்தி வைத்திருக்கும் நாடு அமெரிக்கா என்பதை நினைவில் கொண்டால் எந்த அமெரிக்க அதிபரும் சமாதானப் புறாவாக சிறகு விரிக்க முடியாது, பிணந்தின்னிக் கழுகாவே வட்டமுடியும் என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

ஒபாமா தனது ஆரம்ப நாட்களின் அடையாள அறிவிப்புகளுக்குப் பின் பொருளாதாரத்தின் பக்கம் தன் கவனத்தைத் திருப்புவார். வேலை வாய்ப்புக்களை அதிகரிக்கும் முயற்சிகளில் ஆர்வம் காட்டுவார். வசதிபடைத்தவர்களுக்கு அதிக வரி, மாணவர்களுக்குக் கல்விக் கட்டணத்தில் சலுகை, பணியிலிருந்து ஓய்வு பெறுபவர்களின் சேமிப்பைப் பாதுகாக்கும் நடவடிக்கைகள், பலருக்கு மருத்துவக் காப்பீடு போன்ற சில திட்டங்களை அறிவிக்கலாம்.

ஆனால் அவற்றிற்கு அப்பால் பெரும் அற்புதங்கள் நடந்துவிடும் என நான் எதிர்பார்க்கவில்லை.

அற்புதங்கள் நிகழ்த்த அமெரிக்க அரசியல், அதன் அடிஆழத்தில் சுழித்தோடும் நீரோட்டங்கள் இடமளிக்காது. உலகெங்கும் உள்ள மத்தியதர வர்க்கத்து மனிதர்களைப் போல தனது கனவுகளுக்கும், யதார்த்தங்களுக்கும் இடையே ஒரு சம்ன்பாட்டைக் காணுவதிலேயே தனது ஆற்றல்களை செலவிட வேண்டிய ஒருவராகவே அதிபர் ஒபாமா ஆகக்கூடும்.

மாலன்

ஆப்கானிஸ்தானில் பராக் ஒபாமா

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் சார்பில் போட்டியிடும் பராக் ஒபாமா ஆப்கானிஸ்தானுக்கு சென்றுள்ளார். அங்கு அவர் அதிபர் ஹமீது கர்சாய் மற்றும் இராணுவ அதிகாரிகள் சந்திக்கவுள்ளார்.

தலிபான்களின் கிளர்ச்சியை கட்டுப்படுத்த முடியாமல் கூட்டுப்படைகள் தடுமாறி கொண்டிருக்கும் நிலையில் பராக் ஒபாமாவின் முதல் விஜயம் இடம்பெற்றுள்ளது.

ஆப்கானிஸ்தானின் சீர்கெட்டு வரும் நிலையினால் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டு இருப்பதாக பராக் ஒபாமா ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இராக்கில் இருக்கின்ற துருப்புகள் ஆப்கானிஸ்தானுக்கு திரும்ப அனுப்படவேண்டும் என்றும் அவர் கூறியிருக்கின்றார்.

நன்றி: பிபிசி