இதழை வாசிக்க: தை இதழ் மூன்று
நன்றி: கலைஞர் மு கருணாநிதி
Posted in Karunanidhi, Literature, Poems, Tamil Blog
குறிச்சொல்லிடப்பட்டது அறிவுமதி, இலக்கியம், கருணாநிதி, கலைஞர், கவிதை, கிளி, தமிழ், தமிழ்வெளி, திரட்டி, தை
சொல்லப்பட்ட பரிந்துரை: தசாவதாரம் ஸ்டோரீஸ்
சொல்லப்பட்ட பரிந்துரை:
சொல்லப்பட்ட பரிந்துரை: எக்கச்சக்கம்! ஆனால், ரஜினி, சிவாஜி இல்லை
கூகிளின் பச்சை துரோகத்தை, தசாவதாரம் தேடுபவர்களை ‘சிவாஜி‘க்கு திசை திருப்புவதை கண்டிக்கிறேன்.
அது எப்படி! கூகிள் மட்டும் கமலைத் தேடினா ரஜினி வரணும் என்று சரியா யோசிக்குது?!
ஆனால்… ‘சிவாஜி‘ என்று தேடினால், தசாவதாரம் வராமல், கமல் முதுகில் குத்தியுள்ளதை கண்டிக்கிறேன். இனி தன்மான கமல் ரசிகர் எவரும் கூகுளை நாடக்கூடாது என்று பெட்டிசன் போட்டால், கையெழுத்து இடுவேன் என்று வாக்குறுதியும் கொடுக்கிறேன்.
குறிப்பிட்ட ‘சிவாஜி’ தேடல் முடிவுகள்:
Posted in Cinema, Dasavadharam, Dasavatharam, Google, Kamal, Kamalahassan, Kamalhasan, KamalHassan, Movies, Search
குறிச்சொல்லிடப்பட்டது ஆல்டாவிஸ்டா, உலகநாயகன், கமல், கூகுள், சினிமா, சூப்பர் ஸ்டார், டாக்பைல், தசாவதாரம், திரைப்படம், தேடல், நடிகர், மொக்கை, யாஹு, ரஜினி
K.N. Rao‘s introduction to the book “Biorhythms of Natal Moon – Panchapakshi Shastram”
http://groups.yahoo.com/group/JyotishGroup/message/5080
http://groups.yahoo.com/group/JyotishGroup/message/5081
http://groups.yahoo.com/group/JyotishGroup/message/5082
http://groups.yahoo.com/group/JyotishGroup/message/5083
http://groups.yahoo.com/group/JyotishGroup/message/5084
http://groups.yahoo.com/group/JyotishGroup/message/5085
http://groups.yahoo.com/group/JyotishGroup/message/5086
http://groups.yahoo.com/group/JyotishGroup/message/5087
சூக்குமம் நமசிவய என்னும் ஐந்தெழுத்தில் உள்ளது.
இவ்வாறே, மானுட இனத்தையும் பிறந்த நட்சேத்திரங்களை அடிப்படையாக வைத்து ஐந்து பிரிவுகளாகப்
பிரித்தனர். ஒவ்வொரு பிரிவையும் அடையாளம்காண ஒரு பறவையின் பெயரைக்கொடுத்தனர். அந்த
நட்சேத்திரத்தில் பிறந்தவனுக்குண்டான குணநலன்களைக் கணக்கில் கொண்டு, அதேவகை குணநலன்களையுடைய பறவையைத் தெரிவுசெய்தனர். அவைகள்:
பறவைகள் உருவகமே.
பறவை அரசாளும் என்றால் அப்பறவை அரசனாகவியலாது. இவ்வைந்து பறவைகளும் பகலில் ஐந்துசெயல்களையும் இரவில் ஐந்துசெயல்களையும் செய்யும். ஆனால், செயல்கள் ஐந்துதான்.
வளர்பிறைக்கும், தேய்பிறைக்கும் தொழில்கள் மாறும். அவையாவன:
இதை,
என்பர்.
இப்பஞ்சபட்சி சாற்றிறத்தில்,
இவ்வாறு பலவற்றை இச்சாற்றிறம் இயம்புகிறது.
அகத்தியரின் பஞ்ச பட்சி சாற்றிறம்
1. உன்னியொருவன் உரைத்த முதலெழுத்தைப்
பன்னிப் பறவையாய்ப் பாவித்து – வன்னி
உதைய திசைப்பட்சி யுண்மை யுரைக்கக்
கதை காவியப் பொருலே காப்பு.
2. துய்யமலருறையுந் தோகா யுன தைம்பொற்
செய்யமலர்ப் பாதஞ் சேவித்தேன் – வையத்
தைந்து வகைப்பட்சி யமையுங் குணமென்றன்
சிந்தை தனினிற்கவே செய்.
3. ஒன்று திசைக்குருவி யொன்றிவரு மோர்தூதன்
நின்றநிலை யாருடத்தில் நேருமே – நன்று
வழுவா துரைதாயும் வல்லவர்கள் சொன்ன
முழுவா கடத்தின் முறை.
முதலதிகாரம்.
1. மொழிக்கு முதலெழுத்தே முன்னுதிக்கு மாமதனைப்
பழித்தவலன் றன்னிலையும் பார்த்து – வழிபெறவே
பேரால் வருவனவும் பேதமறிந் துணர்ந்து
ஆராய்ந்து சொல்வ தறி.
2. அகரமே வல்லூறு ஆந்தை இகரமதாம்
உகரங் கருங்காக முன்னிப் – பகரில்
எகரமது கோழி யெஞ்ஞான்று மஞ்ஞை
ஒகார முயர் மெய்யாந் துரை.
3. ஊணடையரசு நித்திரை மரணம் உயிர்பகலிரவினிலுண்டு
நீணிலத்தரசு செய்துபின் சென்று நெறியுடனடந்து மேயுறங்கும்
பூணுறும்மர பக்க நற்பகலூண் பொன்றியுந் துயின்றரசாகிக்
சேணுறு நடையுண் டுறங்கியே சென்றுஞ் செத்தர சாளுநல்லிரவே.
ஐந்து பட்சிகளும் ஐந்து செய்கைகளை மாறிமாறிச் செய்கின்றன. அவைகளின் முறை:
பூர்வபக்கம்:
பகல்: ஊண், நடை, அரசு, நித்திரை, மரணம்.
இரவு: ஊண், அரசு, மரணம், நடை, நித்திரை.
அமரபக்கம்:
பகல்: ஊண், மரணம், நித்திரை, அரசு, நடை.
இரவு: ஊண், நித்திரை, நடை, மரணம், அரசு.
4. ஒன்றேகா லொன்ரறையீ ரொன்று முக்காலரையும்
நன்றாக விவ்வாறு நாழிகையுங் – குன்றாத
வளர்பிறைக்குந் தேய்பிறைக்கும் வாலாய மாஞ்சூட்ச
வளமுரைத்தார் முன்னோர் வகுத்து.
(இச் சாற்றிறம் அகத்தியர் காலத்திற்கு முன்னமேயே வளர்ந்து வாழ்ந்திருத்தல் வேண்டும்)
5. மறித்து மொருவகையால் வண்கடிகை யாறுந்
தெறித்ததொரு சூக்குமத்தைச் சேரக் – குறித்திடுங்கா
லுண்டு நடந்தாண் டுறங்கி யிறந்திடுமே
வண்டனைய கண்ணாய் மதி.
6. உண்பானுக் கொன்றேகா லொன்றரையிற் றானடக்க
கண்பார்த் தரசிரண்டிற் காண்போமே – பண்பாகத்
தூங்குவது முக்காலாய்த் துஞ்சுவது தானரையாய்ப்
பாங்குடைய பட்சி பலன்.
7. வினவின் முதற்றி தியாறும் பதினொன்று நத்தை
மேலிரண்டேழ் பன்னிரண்டும் விளங்கும் பத்திரையா
மினியதொரு மூன்றெட்டும் பதிமூன்றுஞ் சயையா
மிருத்தை யென்பா னாந்கிலுட நவமி பதினான்கை
புனைகுழலாய்ப் பஞ்சமியும் பத்துமுவரத் தரமும்
பூரணை மென் மறியலவன் கோன் மகரஞ் சரமாந்
தனிவிடை தேள் குடஞ்சிங்கம் நிலைராசி சாகுந்
தனுமிதுனங் கன்னியுமீ னுபய மெனத்தகுமே.
8. ஊர்கோணத்தைக் கதிர்செவ்வாய் அகரமோங் கும்பத்திரையாம்
தேர்கோளருணன் மதி இகரஞ் சயையும்பொன்னும் உகரமதாம்
வேர்கோளிருத்தைப் புகர் எகரம் வெய்யசனிபூரணை ஒகரம்
ஏர்கோளிடையாய் பகற்கடிகை யிவ்வாறிவையூண் சொன்னோமே.
9. சொன்னவகரம் வல்லூறூண் துய்ய இகரமாந்தையிணூண்
முன்னை உகரங் கொடியூணா மொழியிலெகரங் கோழியிணூண்
பன்னுமெகர மஞ்ஞையிணூண் பண்டையடையவே பறவைகளொண்
றுண்ணுமிரண்டு நடைமுடி மூன்றுறக்க நான்குசாவைந்தே.
10.சாய்ந்த அகரங்ககரமுடன் சகரந்தகரந் தந்நகரம்
வாய்ந்தபகர மகரமுடன் வகரமிவை யெட்டெழுத்தாகும்
ஆய்ந்தபருந்து முதல் யோனியிரு நான்கினுக்குமடைவாக
வேய்ந்த பொருத்தம் வெற்றியுடனிதனாற் பறவையியம்பிடுமே.
பகுதி 4
31. வல்லூறு முண்ண மாமயிலுந் தானரசாய்ப்
பொல்லாத கொழியது போயிறக்க – நல்லாய்க்கேள்
காரண்டந் தானடக்கக் கண்டுயிலு மேயாந்தை
சீரண்ட மாலுண்டு சேர்.
32. ஆந்தை யமுதுண்ணும் வல்லூறரசு செயுஞ்
சாந்த மயிலதுவுஞ் செத்துவிழும் – ஏந்திழையீர்
கோழியது நடக்குங் கொம்பார்ந்த காகமது
வீழும் விழிதுயின்று மேல்.
33. திங்கட் சனிமயிலாஞ் சேயருக்கன் கோழியதாம்
பொங்கு புதன்காகம் போசனமா – மங்கையே
அந்தணனுக் காந்தை யணிபுகர்க்கும் வல்லூறு
சந்தமும் பிற் பகற்கே சாற்று.
34. கூறிடுந் திங்களாந்தை குலவுசேய் வல்லூறு
மீறிய வருக்கன் காகம் வெள்ளியும் – புதனுமஞ்ஞை
யேறியசனி வியாழங் கோழியா மியம்புங்காலை
யாறுபத்தாகுங் கன்ன லதிற் சாகும மரபக்கம்.
35. உண்டுடனே செத்து முறங்கிய ரசாண்டும்
விண்டு நடக்கும் விழிமடவீ – ரன்றிரவில்
உண்டு முறங்கு முடனே நடத்திறக்குங்
கண்டரசனாகு மெனக் காண்.
36. வரியார் மயிலுண்ண மாலாகு மாந்தை
திரியாதோ தேசமெலாஞ் சென்று – பெரிய
வாரணமே மண்ணாள வல்லூறு தானுறங்கக்
காரணத்தாற் காக்கை சாங் காண்.
37. கண்டாந்தை யுண்ணக் கருங்கோழி தானடக்க
வண்டாயுண் வல்லூறு மன்னவனாய் – விண்ட
விழிமூடுமே காகம் வீணாக மஞ்ஞை
பழிதேட வேயிறக்கும் பார்.
38. சொற்கோழி யுண்ணத் தொடர்ந்தேகும் வல்லூறு
நற்காக நன்றாக நாடாளும் – பொற்காவின்
மண்ணின் மயிலுறங்க மாலாந்தையே மரணம்
எண் ணுமறிவா லெடு.
39. வந்த பிற் பக்கத்தில் வல்லூறு முண்ணவே
முந்து கருங்காக முடனேகும் – அந்தமயி
லாளுமே பூமியது வாந்தையே கண்டுயிலு
மாளுமே கோழியதே வந்து.
40. தண்காக முண்ணத் தனிமயிலுந் தானடக்க
மண்காவ லாந்தையது வந்தாளப் – பெண்கொடியே
கோழியுறங்கக் குல வலியானே சாக
வாழி புதனுக் கெனவே வை.
41.மந்தன் சோமன் கோழியிணூண் மானேவெள்ளி மயிலுண்ணும்
புந்தியாந்தைப் போசனமாம் பொன்னிற்காக மிரையருந்தும்
சிந்தைமகிழச் சேயிரவி தினத்தேவல்லூ றமுதுசெயும்
அந்தித்தோன்றும் பிற்பக்கத்தடைவே சொன்னோமறி நன்றே.
42.வாரணம் பொன்னேகாரி மயில்புகர் புதனேமிக்கச்
சீரணிகாகம் வெய்யோன் சிறந்தமாமுனி யாந்திங்கள்
பேரணிவலியன் செவ்வாய்ப் பிற்பக்கத் திரவிற்றங்கும்
ஏரணி குழலாயென்று மிடமறிந்தியம் புவாயே.
43.சேவல் புசிக்கத் திரியுமே யாந்தையது
மாவிற் புவியாளு மாமயிலுங் – கூவி
யுறங்குமே காக்கையுடனி றக்குமே வலியன்
கறங்கு மேகக் கலையாய் காண்.
44.அல்லின் மயிலுண்ண வார்ந்து நடக்குங்காகம்
வல்லம் புவியாளும் வாரணமு – மில்லுறங்கு
மாந்தையது சாகுமன்ன நடைக் கன்னன்மொழி
யேந்திழையா யென்னே இடர்.
45.வகுத்த மினியுண்ண மஞ்ஞையது நடக்கச்
செகத்திற் கொடியரசு செய்யவே – நகைத்துத்
தூங்குமே வல்லூறு துஞ்சுமே செஞ்சேவல்
மாங்குயிலே யென்னா மதி.
46.செப்பக் காரண்டந்தான் றின்னநடக்கும் வலியான்
தப்பிலாக்கோழி தரையாளும் – ஒப்பிலா
மாலாந்தை கண்டுயிலும் வாழ்மயிலுஞ் சாவாகும்
சேலார்விழி மடவீர் செப்பு.
47.வல்லூறினிதுண்ண வார்கோழியே நடக்க
நல்லாந்தை வந்திருந்து நாடாளப் – பொல்லாத்
தூக்கமுறு மயிலாஞ் சொல்ல விழுங்காகத்
தாக்கமலைப் பொடியாந் தான்.
48.போசனமாகில் பதிவாழும் போனார்மீள்வார் போங்கவலை
காசினிவாழுமீ மழைபொழியுங் களவுமில்லைக் கதிர்விளையும்
பேசிற்கன்னிப் பேறாகும் பிணியுந்தீரும் பெண்பெறுவள்
வாசிசெழும் பொன்வாணிபமாம் மன்னரைவெல்வாய் மாங்குயிலே.
49.யாத்திரையாகில்லை நிலைகுலையு மொன்னார் வெல்வரிருநீதிபோங்
காத்திரமில்லாக் கதிர்விளையுங் கன்னியர்வாழ்க்கை நன்றாகா
மாத்திரள்செல்லும் பொருள் கூடாவேட்கை தவழ்ந்துமணங்கூடா
சூத்திரஞ் சொன்னபடியாலே சொன்னார்பெரியோர் சுரிகுழலே.
50.அரசேசெய்யிற் புவிப்பேராம் அரசராலே பலனெய்து
முரசுமதிரும் வரிசையுடன்மூண்ட கருமந்தான் விலகும்
பரிசும்பெரியோர் திறலிடுவர் பழையபிணி போம்பயமில்லை
புரைபோங் களவுந்தான் காணும்போக்குமில்லை புரிகுழலே.
51. தூங்குமாகில் நோய்மாறா தூரம்போனார் தாம்மீளார்
ஆங்கேகரும நன்றாகா வரிவைவாழ்க்கைத் தாழ்வாகுந்
தீங்கேயல்லால் மழைபொழியாச் செந்நெல்விளையாச் செய்குறியீர்
ஓங்கிமணமுந் தாராதே யுண்மையாக வுரைத்தோமே.
52. துஞ்சுமாகிற் சாவுசொலுந் துலையாப்பிணியுந் தானெய்தும்
நெஞ்சினினைந்த பொருள்கூடா நிதியுங்காணார் நிலைகுலைவார்
வஞ்சநோயுமிக வுண்டாமனையாள் வெறுக்கிலு றவாகாள்
கஞ்சமலரார் குழலாளே கருத்தாயுரைத்த படியறியே.
53. கெடுதிய்முட நேகாணார் கிளையுடன் வாழ்வுபேறாம்
கடுகிய பிணியுந்தீருங் கலக்கமோ சற்றுமில்லை
அடைமழை பெருகவுண்டா மகமேற நிற்குந்தன்மை
முடுகிய பயணமில்லை மொழிந்தபின் நுண்ணுங்காலை.
54. வெற்றியுஞ்சுகமு முண்டாம் வியாதியும் மாற்றும்பின்பு
பற்றியகருமந் தானும் பயமில்லையக முந்தாழார்
உற்றதோர் கெடுதி காணாருறு மழையுண்டுதூரத்
துற்றவர் வரவுங்கூடச் சொல்லும் பின்னடக்கத்தோன்றில.
55. ஜெயமொடு சுகமுமுண்டு சிறந்ததோர் பயணந்தன்னில்
புயலிடுமழையு மற்பம் புவிதனிற் கலக்கமில்லை
இயம்பினாற் பெறலாம்வெற்றி யிலாபமும் நீடுமாகும்
பயம்விளையாது நாளும் அரசதாம் பறவையாகில்.
56. உன்னிடிற் பிணியுமல்லா லொருபிணி யதிகமாகும்
மண்ணில்மழையே யில்லை வையத்தில் கெடுதிகாணும்
துன்னிய நெஞ்சிற்றோடந் தோன்றிடுங் கருமஞ்செய்யும்
பன்னியே யுதிக்கும் பட்சிபயனுட னுறங்குமாகில்.
57. காவினிற் பயமுமுண்டு கலகமாங் கருமமெல்லாம்
தீவினைபடு மற்றன்றிச் செய்யுநல் வினைகளாகாச்
சாவினில் விழுந்த பட்சி தனித்து வந்துதிப்பதாலே
பூவினிற்சிறந்த மாதே புகன்றனர் பள்ளினூலே.
58. ஓதுகிலோ மாபட்சி யன்றுண்ணு மொன்றுயிர்போம்
ஏதுமிலா வொன்றையிலேகுமே – நீதிபுனை
நன்றி யுடநொன்றறையி நாடறியத் தானுறங்கும்
ஒன்று முதலாள் வதுலகு.
59. போசனத்தில் மூத்தோனும் போய்நடக்கி லிளையோனும்
ஆசனத்தி னெடியோனு மாயவனை – மாசற்றுத்
தூங்குமவன் குள்ளன் றுஞ்சிடுமே யாமாகில்
அங்கி ருவரோ ராண்டறி.
60. உண்கின்றான்பால நுயர்நடை யானே குமரன்
பண்பாமரசனே பாராள்வான் நண்பு பெறு
முற்றுந்துயில் கிழவன் மோனமுடிந்தோன் சாவோன்
பற்றுந் தவத்தின் பலன்.
பகுதி 7
61. ஊணினிலுயர்ந்தோன் வெல்வனுயர் நடைக்குள்ளன் வெல்வன்
காணுறு வெகுரோமத்தன் கடுகராச்சியத்தில் வெல்வன்
தானருந் தூக்கந்தன்னி ளிருவருள் வலுத்தோன் வெல்வன்
வேணுமோர் மரணந்தன்னுளிருவருள் வலுத்தோன் வெல்வன்.
62. ஊணில் நடைவலிது நடையி லரசுறுதி
நாணியுறங்கிடவு நன்றாகப் – பேணி
விலகுகுழலாளே யிறப்பும் பொல்லாதென்
றுலகு புகழவுரை.
63. உண்பா னடப்பானை வெல்வ னடப்பானுந்
தன்பாலரசனையுந் தானழிப்பான் – மன்காத்
திருப்பான் றுயில்வானை வெல்லத் துயில்வோன்
மரிம்மானை வெல்வன் மதி.
64. நல்லூணாகிற் கிழவன்வெல்வ நடையேயாகிலிளவல் வெல்வான்
செல்லத்தூக்கமாமரசிற் சிறந்தோன் மிகவும் வென்றிடுவான்
எல்லாமரசேயாமாகி லிளையோன் வெல்வா னென்நாளும்
பொல்லாச் சாவேயாமாகிற் போனாரிருவர் மீளாரே.
65. உரைத்திடு மிருவர்பேரு மொரு பக்ஷ¢யுண்ணுமாகில்
நரைத்திடுமவனே வெல்வனடையினி னெடியோன் வெல்வன்
கருத்தரசிளை யோன்வெல்வன் கருங்குட்டன் துயிலில்வெல்வன்
மரித்திடச் சரியாமென்றே மாதவருரைத்தார் மாதே.
66. உண்பான டப்பானை யோட்டு மிருவர்களும்
பண்பாம் பதியைப் பரிந்தோட்டும் – பெண்பாவாய்
துஞ்சினோர்க் கஞ்சுந் துயில்வோனை யாவருமே
யஞ்சலென் றழைத்திடு வாராம்.
67. வல்லூறு பொன்னிறமாம் வாழாந்தை வெள்ளியதாம்
செல்லாருங் காகஞ் சிவப்ப்பாகு – நல்லாய்கேள்
கோழியுறு பச்சை குளிர்ந்தமயில் கறுப்பாம்
நாழி மணக்க நவில்.
68. ஆந்தை சிவப்பாம் அணிகாகம் பொன்னிறமாம்
வாய்த்த பச்சை வண்ணமயிலாகும் – ஏந்திழையீர்
வெள்ளையாங்கோழி விளங்கு வரிகறுப்பு
வல்லூறாக் கொண்டு மதி.
69. வல்லூறு பார்ப்பான் வளராந்தை தான்வணிகன்
செல்லாருங் காகஞ் செகத்தரசன் – நல்லாய்க்கேள்
கோழியாம் வேளாளன் கூறுமயில் சண்டாளன்
ஆழியா நூலாய்ந் தறி.
70. பொன்மறையோனும் வலியான் பேராந்தை வேந்தனும்
துன்னுமொழிகாகந் துலை வணிகன் – மன்னும்
உழுகுலத்தோன் கோழியே யோதுங்காண் மஞ்ஞை
இழிகுலத்தோ னென்றே யிசை.
81. வல்லூறு பாலை வளராந்தை வண்குறிஞ்சி
நல்லாருங்காக நடுமருதம் – மெல்லியரே
வாரணமே முல்லை வளருமயி னெய்தல்
ஆரணத்தோர் சொல்லா லறி.
82. வல்லூறு வண்மை வளர்காக நீர்க்காலாம்
நல்ல திறலாந்தையது நாற்காலாம் – சொல்லக்
குறுங்கோழி கொம்பாங் குலவு மயில் பட்சி
பெறுங்கா ணிவையாய்ந்து பேசு.
83. வல்லூறு பொன்னாம் வளராந்தை வெள்ளியதாம்
நெல்லார்ய்ங்காக நிறஞ் செம்பாம் – பொல்லாத
கோழியது வெண்கலமாங் கோலமயிலி ரும்பாம்
வாழி மடவார் வகை.
84. வல்லூறு வருகின்றான் மாமறையோன் தூரவந்தான்
நெல்லிக் கருங்காக நிற்கின்றான் – மெல்லியரே
கோழியே மீண்டான் குலவு மயிலுமரை
நாழிகையிலே வருவா னாடு.
85. மன்னவன் வல்லூறாகின் மனிதர்கைப் புகுந்ததென்க
வெண்ணிய வாந்தையாகி லொண்டொடியெடுத்தாளென்க
உண்ணிடுங்காகமாகி லொருவனே கொண்டா னென்க
வண்ணமார்கோழி யாணும் பூமியின்மயில்தான் பெண்ணே.
86. வல்லூறுகாக மயின் மூன்று மாணாகும்
நல்லதிரவுகோ லுஞ்சொன்னோம் – பொல்லாத
ஆந்தை பொற்கோழி பெண்ணாகுமிதேதோழி
செர்ந்தறிந்து சொல்லுந் திறம்.
87. உரைகிழக்கு வல்லூறு உயிராந்தை தெற்காம்
விரையங் கருங்காக மேற்காம் – புரைதீரக்
கொத்தியிரை விழுங்குங் கோழி வடக்காகு
மத்திபத்தி னிற்கு மயில்.
88. பச்சைமயில் மேற்காம் பாரில் வடக்காந்தையா
மிக்ககிழக்காகும் வல்லூறு – மெச்சு நல்ல
தெற்காகும் காகமது தேனார்விழி மடவாய்
பொற்கோழி மத்திபமாம் போற்று.
89. மத்திபத்தில் வல்லூறு வாழாந்தை தெற்காகும்
உற்றநிதி கிழக்கேயொண் காகம் – சற்றிடமே
தெற்காகுங் கோழி சிறந்தமயின் மேற்காகும்
எக்காலுஞ் சாற்றுதற்கா மீடு.
90. காணு மகாரப் பேரானுடைய கண்டமுதல்
காணுஞ் சிரசாந்தை கைகாகம் – பேணிக்
கோழியுடம்பு மயில் முன்பின்னாகும் வலியான்
தாழுமிரு சரணந்தான் இஉஎஒஅ
ஜூன் ரெண்டாந்தேதி வருதாம்.
அதுவரை, வாலியின் இந்தப் பாடலை உல்டா செஞ்சுண்டிருங்க… நமச்சிவாய வாழ்க!
ஓம் நமோ நாராயணாய
கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது
கடவுள் மட்டும் கண்டால் கல்லடி தெரியாது
எட்டில் ஐந்து எண் கழியும் என்றும்
ஐந்தில் எட்டு எண் அறியாது
அஷ்ட அட்சரம் ஏற்கும் நெஞ்சு
பஞ்ச அட்சரம் பார்க்காது
ஊனக் கண்ணில் பார்த்தால் யாவும் குற்றம்தான்
ஞானக் கண்ணில் பார்த்தால் யாரும் சுற்றம்தான்
(கல்லை மட்டும் கண்டால்)
இல்லை என்று சொன்ன பின்பும் இன்றியமையாது
தொல்லை தந்தபோதும் எங்கள் தில்லை மாறாது
வீரசைவர்கள் முன்னால் எங்கள் வீர வைணவம் தோற்காது
மன்னன் சொல்லுக்கு அஞ்சி என்றும் மேற்கே சூரியன் உதிக்காது
இராஜலஷ்மி ராஜ நாயகன் ஸ்ரீனிவாசன்தான்
ஸ்ரீனிவாசன் சேர் சேய் இந்த விஷ்ணுதாசன்தான்
நாட்டில் உண்டு ஆயிரம் ராஜராஜன்தான்
ராஜனுக்கு ராஜன் இந்த ரங்கராஜன்தான்
(கல்லை மட்டும் கண்டால்)
நீருக்குள்ளே மூழ்கினாலும் நீதி சாகாது
நெஞ்சுக்குள்ளே வாழும் எங்கள் ஜோதி சாகாது
வீசும் காற்று வந்து விளக்கை அணைக்கும்
வெண்ணிலாவை அது அணைத்திடுமா?
கொட்டும் வான்மழை நிலம் நனைக்கும்
அந்த வானம் தன்னை அது நனைத்திடுமா?
சைவம் என்று பார்த்தால தெய்வம் தெரியாது
தெய்வம் என்று பார்த்தால் சமயம் கிடையாது
Posted in Actors, Cinema, Kamalahasan, Kamalahassan, Kamalhasan, KamalHassan, Lyrics, Movies
குறிச்சொல்லிடப்பட்டது இசை, கமல், சினிமா, தசாவதாரம், படம், பாடல், வரி, வாலி, Dasavatharam, Kamal, Lyrics, Music, Song, Vaali, Vaishnavism
இந்த சனிக்கிழமை இரண்டு காட்சிகள்: நாலு மணி; ஏழரை மணி.
சுலேகாவில் மீத விவரங்கள்.
அங்கே…
1. டி.ஆர். பாலுவை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் – ஜெயலலிதா
2. டி.ஆர்.பாலு – 100% guilt, 0% regret !
3. மன்மோகன் சிங் இது நியாயமா?:
தனது மகன் நிறுவனத்துக்கு எரிவாயு ஒதுக்குமாறு டி.ஆர். பாலு எழுதிய கடிதம் பிரதமர் அலுவலகம் வழியாக எரிவாயு நிறுவனத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. பிரதமர் அலுவலகத்திலிருந்து 8 நினைவூட்டல் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன.
இங்கே…
Just the ticket for brokers – The Boston Globe: “They hire an associate of DiMasi, watch scalping bill pass the House”
ரஜினி படம் வெளியான அன்று நூறு ரூபாய் நுழைவுச்சீட்டு, ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படும். அந்த மாதிரி உள்ளூர் விளையாட்டு நிகழ்ச்சிகள் ‘அரங்கு நிறை‘ந்து விட்டால், ப்ளாக்கில் விற்பார்கள். இந்த மாதிரி விற்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
‘மறு-விற்பனைக்கு ஒப்புதல் கிடைக்காது’ என்று அனேகமாக அறுதியிட்டு சொல்லும் நிலையில், சபாநாயகர் திடீரென்று தன் ஆதரவை மாற்றிக் கொண்டு, கள்ளச்சந்தை, கவுண்டரிலேயே சந்தைப்படுத்தல் என்று எல்லாவற்றுக்கும் ஒப்புதல் அளித்துவிட்டார்.
250,000 டாலர் கிடைத்தால் கொள்கையை மாற்றிக் கொள்ள வேண்டாமா?
இந்த மாதிரி வாக்களிப்பது சட்டப்படி குற்றம் கிடையாது. காசுக்காக சட்டமன்ற உறுப்பினர்களை ‘லாபி‘ செய்வதற்கு நடைமுறைகளை வழிவகுத்திருக்கிறார்கள்.
இப்போதைய பிரச்சினை: ஐயாயிரம் அமெரிக்க வெள்ளிக்கு மேல் லாபியிஸ்ட்களிடம் பெற்றுக் கொண்டால், வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். சபாநாயகர் அவ்வாறு செயல்படாமல் 250,000 ‘ஊக்கத்தொகை’ வாங்கிக் கொண்டிருக்கிறார் என்பதுதான் சர்ச்சை கிளப்பியிருக்கிறது.
அவனவன மகனுக்கு மந்திரி பதவி கேட்கும் காலத்தில், டியார் பாலு பெட்ரோல் பங்க் கேட்டது குற்றமா?
இந்த வாரம் முழுக்க சில சுவாரசியமான சமீபத்திய புத்தக (விமர்சனங்கள்) குறித்த பதிவுகள்.
அஹ்மது ஓமர் சயீத் ஷேக் ரொம்ப சமத்து. லண்டன் மின்வண்டி தடத்துக்குள் தடுக்கி விழுந்த முகந்தெரியாத சகபயணியை, குருதிப்புனலில் ட்ரெயினுக்கு முன் கமல் குதிப்பது போல், பாய்ந்து, கை கொடுத்து உயிரைக் காப்பாற்றியவர்.
ஆனால், அவரே 1994- இல் பிணைக்கைதியை பிடித்து, கப்பம் கட்டாவிட்டால் தலையை சீவிடுவேன் என்று யூ ட்யூபியவர்.
மேலே குறிப்பிடப்பட்ட பிணை உயிர் பிழைத்துவிட்டார். ஏஞ்சலினா ஜோலி நாயகியாக நடித்து திரைப்படமும் ஆன டேனியல் பேர்ல் தப்பவில்லை. அவரை கடத்தியவர்களில் முக்கிய குற்றவாளியாக ஒமார் சையது இருக்கிறார்.
சக ஹிருதயருக்காக உயிரைப் பணயம் வைத்தவர்; மேற்கத்திய உலகில் குப்பை கொட்டியவர்; நடுத்தர வர்க்கத்தின் பிரதிநிதி. எங்கே, எப்படி, எவ்வாறு இஸ்லாமிய தீவிரவாதி ஆகிறார்?
‘சாது மிரண்டால்’ என்கிறார் மார்க் சேஜ்மென்.
கலகக்காரர்கள் எப்போதும் ஒத்துழையாமை என்று முழங்கி தலைமைக்குக் கட்டுப்பணியாமல் சிதறுண்டு போகிறார்கள். அகமதுவைப் போல் இலட்சிய நோக்கோடு சட்டத்திற்குக் கட்டுப்பட்டு புத்திசாலித்தனமாக செயல்படுபவர்கள்தான் தீவிரவாத இயக்கங்களுக்குத் தேவை.
இஸ்லாமுக்கு எதிராக உலகமே திரண்டிருக்கிறது என்று எண்ண காரணங்கள் ஸஹஸ் ர கோடி இருக்கிறது.
அல் க்வெய்தாவுக்கு உள்ளே நுழைவதற்கு புனிதப்பலி தேவைப்படுகிறது. தங்கள் உண்மையான நேசவெறியர்கள் என்றுணர்த்த காவு கொடுக்கிறார்கள். தலைவர் யாரென்று தெரியாது. ஆனால், அந்த தெரியாத அரூபத்துக்கு காணிக்கை தேவை.
191 பேரைக் கொன்ற ஸ்பெயினின் மத்ரித் குண்டுவெடிப்பு கூட வெற்று பலிபீடத்தில் உயிர்களை நிரப்பி, நிரூபித்துக் காட்டத்தான் அரங்கேறியிருக்கிறது.
இப்படி சுயம்புவாக, இரத்தபீஜனாக முளைக்கும் அமெச்சூர் அல் க்வெய்தாக்களை நிறுத்துவது எப்படி என்றும் கோடிட்டு காட்டியிருக்கிறார்.
இதெல்லாம் நடக்கிற காரியமா என்கிறார் டைம்ஸ் விமர்சகர்.
ஆனால், ‘ஏன்/எப்படி தீவிரவாதம் வளர்கிறது’ என்பதை புத்தகம் தெளிவாக முன்னிறுத்துகிறதாம்!
மேலும் சில பார்வைகள்:
1. David Ignatius – The Fading Jihadists – washingtonpost.com
2. Jihad and 21st Century Terrorism | The New America Foundation – MP3 பேச்சு & பவர்பாயின்ட் (வழி)
3. Foreign Affairs – The Myth of Grass-Roots Terrorism – Bruce Hoffman: “Leaderless Jihad: Terror Networks in the Twenty-first Century. Marc Sageman. University of Pennsylvania Press, 2008, 208 pp. $24.95.”
குறிச்சொல்லிடப்பட்டது Books, Jihad, Terrorism, Terrorists