Tag Archives: ரஜினி

இராசாளி – ஜெயிலர்

அமெரிக்காவின் தேசியப் பறவை கழுகு. அந்தக் கழுகைப் போலவே நாலைந்து போலிப் பறவைகள் உண்டு,

கழுகைப் போலவே உலா வரும். Prairie Falcon (Falco mexicanus), Red-Tailed Hawk (Buteo jamaicensis), Turkey Vultures (Cathartes aura), Black Kite (Milvus migrans) என நால்வரை உடனடியாக நினைவு கூறலாம். பருந்து, ராசாளி, கூளி, சுவணம் எனத் தமிழில் சொல்கிறார்கள்.

தூரத்தில் இருந்து பார்த்தால் எல்லாம் பெரிதாக இருக்கிறது. இறக்கையைப் பெரிதாக விரித்து பிரும்மாண்டமாகப் பறக்கிறது. கூகை குழறும் என்பார்கள்; கழுகு வீருடுகிறது என்பார்கள்; இரண்டும் முன்னே பின்னே கேட்காதவருக்கு அனைத்தும் கத்தல் சப்தம்.

உயரப் பறக்கும் கழுகிற்கும் இராஜாளிக்கும் என்ன வித்தியாசம் என்று இப்பொழுது ஏன் ஆராய வேண்டும்?

ஏன் என்றால், தலைவர் ஏதோ கழுகு, காகம் உவமேயம் சொல்லியிருக்கிறார் அல்லவா!?

கங்க பத்திரம் ஓர் கோடி கை விசைத்து அரக்கன் எய்தான்;
கங்க பத்திரம் ஓர் கோடி கணை தொடுத்து இளவல் காத்தான்;
திங்களின் பாதி கோடி, இலக்குவன் தெரிந்து விட்டான்
திங்களின் பாதி கோடி தொடுத்து, அவை அரக்கன் தீர்த்தான்.
6.18.109 (௧௦௯)

–கம்பராமாயணம், நாகபாசப் படலம்–இந்திரஜித், இலக்குவன் போர்.

பொருள்:– இநத்திரஜித், கழுகின்‌ சிறகுகளையுடைய அம்புகள்‌ ஒரு கோடியைக்‌ கைகளால்‌ தொடுத்து விரைந்து எய்தான்‌ ; இளவலாகிய இலக்ஷ்மணனும்‌ கழுகின்‌ சிறகுகளையுடைய ஒரு கோடி அம்புகளைத்‌ தொடுத்து அவ்வம்புகளைத்‌ தடுத்தான்‌ ; அரைச்சந்திரன்‌ போன்ற முகப்பினையுடைய கோடி அம்புகளை இலக்குவன்‌ ஆராய்ந்து இந்திரசித்தின்மேல்‌ விட்டான்‌ ; இந்திரசித்தும்‌ அரைச்சந்திர அம்புகளை கோடி தொடுத்து அவ்வம்புகளை அறுத்தான்‌.

குறிப்பு: – கங்கம்‌ – கழுகு. பத்திரம்‌ – சிறகு. கழுகின்‌ சிறகுகள்‌ பொருந்திய அம்புகள்‌ கங்கபத்திரம்‌ எனப்பட்டன. பாதிமதி போன்‌.ற முகப்பினை உடைய அம்புகள்‌ என்பார்‌, ’திங்களில்‌ பாதி’ என்றார்‌. இதுகாறும்‌ இந்திரசித்து விடுத்த அம்புகளை மட்டுமே அறுத்துக்‌ கொண்டிருந்த இலக்குவன்‌ இப்போது திங்களிற்‌ பாதியை ஒத்த அம்புகளை இந்திரசித்தின்மேல்‌ விடுத்தான்‌ என்றவாறு. தீர்த்தல்‌ – அழித்தல்‌.

விக்ரம் படத்தில் கமல் விதவிதமானத் துப்பாக்கிகளை வைத்து சுட்டுத் தள்ளுவார். அவருக்கு சளைக்காமல் ஜெயிலரில் ரஜினியும் ‘மனிதன்’ போல் ரகரகமாக குண்டு போடுகிறார்.

நடுவில் எதற்கு கம்பராமாயணம் என்று கேட்கிறீர்களா?

1993ல் ’கலைஞன்’ படத்தில் இந்திரஜித் என்னும் கதாபாத்திரத்தில் கலைஞானி நடிக்கிறார். அந்தக் கலைஞன் விக்ரமில் விட்ட அம்புகளை சமாளிக்க இளவல் ஜெயிலரில் எய்கிறார். இதைத்தான் அன்றே கம்பர் பாடியிருக்கிறார். அந்த கங்கபத்ரம் = பின் நுனியில் கழுகின் சிறகுகள் பொருத்தப்பட்ட அம்புகளை (பத்ரம் என்றால் சிறகு) இசை வெளியீட்டு விழாவில் குறிப்பால் உணர்த்துகிறார் இரஜினி.

அதெல்லாம் இருக்கட்டும்? படத்தை ரசித்தேனா? மீண்டும் மீண்டும் பார்க்க வைக்கிறதா? தமிழ் சினிமாவின் மைல் கல்லா? ரஜினியின் நடிப்பிற்கு சிகரமா? அடுத்த ஆர்.ஆர்.ஆர். மாதிரி ஆஸ்காருக்கு அனுப்பலாமா?

அகாடெமி விருதுகளில் புதியத் தலைப்பாக ‘செயற்கையாக தானியங்கியாக உருவாக்கிய உயிர் போன்ற இயக்கம் காட்டும் படங்களுக்கான விருது’ ஒன்றை வழங்கினால், அது நிச்சயம் ஜெயிலருக்குக் கிடைக்கும்!

உசேனி நட்சத்திரம்

என்றுமே நட்சத்திர எழுத்தாளர்களுக்கான வாசகர் பட்டாளம் அதிசயிக்க வைப்பவை.

அரசு பதில்களுக்காக குமுதம் வாங்கியவர்கள்;
கல்கி கிடைத்தவுடன் பொன்னியின் செல்வனைத் தேடியவர்கள்;
மெர்க்குரிப் பூக்கள் வந்த பிறகே சாவி என்னும் பத்திரிகை இருப்பதை அறிந்தவர்கள்;
தங்கள் நாயகனின் போஸ்டருக்காக ஸ்போர்ட்ஸ்டார் பெற்றவர்கள்

லலிதாராம் அந்த வகையைச் சார்ந்தவர்.

சொல்வனம் தளத்தில் சுகா கட்டுரை இடம்பெற்றால் முதல் நாளே பத்தாயிரம் வாசகர்கள் வருவார்கள். அவரை வாசிப்பார்கள். பகிர்வார்கள். மீண்டும் இன்னொரு தடவை வாசிக்கவும் திளைக்கவும் அனுபவிக்கவும் வருவார்கள். அப்படியே அடுத்த நாள்.

இந்த மாதிரி இன்னொரு நம்பகமான ஆள் லலிதா ராம். சுகா சூப்பர் ஸ்டார் ரஜினி என்றால் தீபாவளி ரிலீஸாகப் போட்டி போடும் கமல்ஹாசனாக இவர்.

1978 தீபாவளிக்கு பதினொன்று தமிழ்ப்படங்கள் வெள்ளித்திரையில் வந்தது.
அவள் அப்படித்தான்
தப்புத் தாளங்கள்
சிகப்பு ரோஜாக்கள்
பைலட் பிரேம்நாத்
தாய் மீது சத்தியம்
மனிதரில் இத்தனை நிறங்களா
வண்டிக்காரன் மகன்
ஸ்ரீ காஞ்சி காமாட்சி
தங்கரங்கன்
கண்ணாமூச்சி
அதிர்ஷ்டக்காரன்

இருந்தாலும் ப்ளாக்கில் எல்லோரும் பார்க்க நினைத்தது ஒன்றிரண்டுதான் இருக்கும். அந்த மாதிரி கட்டுரை முதல் பின்னூட்டமாகக் கீழே கிடைக்கும்

உசேனி இருபத்தோராவது மேளகர்த்தா இராகமும், “வேத” என்று அழைக்கப்படும் நான்காவது சக்கரத்தின் நான்காவது இராகமுமாகிய கரகரப்பிரியாவின் ஜன்னிய இராகம் ஆகும்.

சொல்வனம் தளத்தின் மீது செம காண்டில் இருக்கிறேன்

சொல்வனம் பத்திரிகைக்கு என் கண்டனங்கள்!

தமிழரின் நாயகன், தமிழ் மக்களின் இதயத் துடிப்பான ரஜினியை புகைக்கு அடிமையானவர் போல் சித்தரித்து அதை அவர்களின் சிகரெட் கட்டுரைக்கு படமாகப் போட்டிருக்கிறார்கள்.

ரஜினி இப்பொழுதெல்லாம் பொதுவில் புகை பிடிப்பதே இல்லை. சினிமாவில் கூட எந்திரனாக நடிக்க ஆரம்பித்து விட்டதால் அவரிடம் இருந்து புகை வந்தால் அது மின் கோளாறினால் மட்டுமே.

நடிகனையும் கதாபாத்திரத்தையும் நாம் நிஜத்தோடு குழப்பிக் கொள்ளக் கூடாது. ராணி முகர்ஜியை முத்தம் கொடுக்கிறான் என்று பார்க்காமல், தன் மனைவியை சாகேத் ராம் உதட்டோடு உதடு கவ்வுகிறான் என்று பார்க்க வேண்டும். இது எப்போது தமிழ இலக்கியகர்த்தாக்களுக்கு உதயமாகி மனதில் நிலை நிற்குமோ?

எம் எஸ் சுப்புலஷ்மி வாயில் தம் வைத்துக் கொண்டிருப்பதாக காட்சியளித்தாரே… சிவாஜி எத்தனை படங்களில் இப்படி வந்தார்! அதை எல்லாம் முன்னுதாரணமாக இந்தப் பத்தியின் ஆசிரியர் துணை கொள்ளவில்லை. இதற்கு ஆசிரியர் குழு முழு பொறுப்பேற்க வேண்டும். ஒவ்வ்வொரு படத்திற்கு அடியிலும், எந்த வருடன் வந்த திரைப்படம், யாராக நடித்த படம் என்று போட வேண்டும்.

மேலும் இந்தப் பதிவில் “எலி” போன்ற சமீபத்திய படங்கள் குறித்த பதிவுகளும் இல்லை. இது மிகவும் கண்டனத்துக்குரியது. அதில் வடிவேலு சிகரெட் கடத்தல்காரர்களை எம்ஜியார் போல் துரத்திப் பிடிப்பார். அது தமிழ் சினிமாவின் மைல்கல். கருத்தும் சித்தாந்தமும் கொண்ட கோலிவுட் காவியம். அதை ஏன் ஆசிரியர் இருட்டடிக்கிறார்?

”பத்த வச்சுட்டியே பரட்ட” என்பவர் கவுண்டமணி.

மாணிக்கம் புகை பிடித்ததில்லை; பாட்ஷா என்பது அவரின் மாற்று உருவம்; அதாவது இருமுனை சீர்குலைவு.பந்தயத்திற்காக வெறுமனே வாயில் பத்து முறை தூக்கிப் போட்டு பிடித்தவர் ”நினைத்தாலே இனிக்கும்” Roald Dahl – அதைக் காப்பியடித்த கே பாலச்சந்தர்.பொங்குவோம்! பொங்க வைப்போம்!!

அது கூட மற்றவர்கள் கேட்டுக் கொண்டதற்காக மட்டுமே: “சார்… நீங்க அந்த வெண்குழல் சாம்பல் கூட்டை உதிர்ப்பதே அழகு”னு சொல்பவர்களுக்காக மட்டுமே – அவர் உதட்டை வத்தி தொடுவதில்லை. போதையும் உள்ளே செல்வதில்லை.

சுருக்கமாக பரமானந்தம்! பரபிரும்மம்!!

எண்பதுகளில் வறுமையின் காரணமாக பீடி பிடிப்பவரை குறிவைக்காதது ஏன்?

ரஜினி என்பவர் காசுக்காக புகை பிடிப்பவர்! காசு கொடுத்து புகை பிடிக்கும் ஒபாமாவை ஏன் சொல்லவில்லை?

சார்மினார், வில்ஸ் என்று விளம்பரத்திற்காக ஆடிய கிரிக்கெட் ஆட்டக்காரர்களை ஏன் குறிவைக்கவில்லை…

கண்டிப்போம்!

கதாநாயகிகள் கால் மீது கால் போட்டுக் கொண்டு புகை பிடிப்பதை “லைட்ஸ் ஆன்” வினோத் என்றோ எழுதியிருக்கிறார். இந்த மாதிரி சரித்திர துணுக்குகளும் இந்தப் பதிவில் இல்லை. இப்பொழுதே இந்தத் தொடர் நிறுத்தப்பட வேண்டும். என் வக்கீல்களை உசுப்பி விட்டிருக்கிறேன். அவர்கள் உங்கள் சார்பாக ஒவ்வொரு நாட்டிலும் இப்பொழுதே மானநஷ்டம் கோருவார்கள்.

ரவி நடராஜன் இவ்வாறு பரிந்துரைத்தார் என்றால் அவருக்கும் என் கண்டனங்கள். ரஜினி ரசிகர் ஒவ்வொருவரையும் அழைக்கிறேன். அனைவரும் பொங்குங்கள். கொதித்தெழுங்கள். கறுப்புக் கொடி காட்டுங்கள். எங்கே சூப்பர் ஸ்டார் ரசிகர்கள்? வாருங்கள்.

பாரதிராஜா படங்கள்

தலை பத்து குறிப்புகள்:

  1. அனேக படத்தின் துவக்கத்திலும் பேசுவார். “என் இனிய தமிழ் மக்களே…”
  2. தன்னுடைய உதவியாளர்களை உருவாக்கி, குறிப்பிடத்தக்க இயக்குனர்களாக ஆக்கியது முக்கிய சாதனை. பாசறை, பட்டறை என துணை இயக்குநர்கள் தங்களை பாரதிராஜா கேம்ப் என அழைத்துக் கொண்டனர்.
  3. நாயகன் சம்பந்தப்பட்ட படங்களே எங்கும் நிறைந்திருந்தபோது, பெண்களை முக்கியப்படுத்தும் ஆக்கங்களைத் தொடர்ந்து வழங்கியவர்.
  4. வரிசை பெயர்களை தன் கதாநாயகிகளுக்குத் தொடர்ந்து வழங்கி வந்தவர்.
  5. இவரை காப்பியடிக்கும் எண்ணத்துடன் ஸ்டெல்லா மேரீஸ்  வாசலிலும் இராணி மேரி கல்லூரி வாயிலிலும் தங்களின் ஹீரோயினுக்காக தவமிருந்தவர்கள் எக்கச்சக்கம்.
  6. மணி கௌல், ரிஷிகேஷ் முகர்ஜி, அடூர் கோபாலகிருஷ்ணன், குரு தத், மிருனாள் சென், ஷியாம் பெனகல் போல் இல்லாவிட்டாலும் நம்ம ஊர் நாயகர்
  7. ஒளிப்பதிவாளர்கள் – நிவாஸ், பி கண்ணன்
  8. படத்தொகுப்பாளர்கள் – பாஸ்கரன், டி திருநாவுக்கரசு, சண்டி, வி இராஜகோபால், பி மோகன் ராஜ்
  9. எழுத்தாளர்கள் – மணிவண்ணன், ரங்கராஜன், சந்திரபோஸ், கலைமணி, பஞ்சு அருணாச்சலம், ஆர் செல்வராஜ், கே சோமசுந்தரேஷ்வர், கே கண்ணன், சுஜாதா ரங்கராஜன், எம் ரத்தினகுமார், சீமான்
  10. அரசியல், மகன், போன்ற திசைதிருப்பல்களும் இடையூறுகளும் இல்லாவிட்டாலும், அமிதாப் போல் நல்ல நடிகராகவும் கிடைத்திருப்பார்.
ஆண்டு படம் குறிப்புகள்
1977 16 வயதினிலே முதல் படம்
1978 கிழக்கே போகும் ரயில் கிராமம் – காதல் – ராதிகா
1978 சிகப்பு ரோஜாக்கள் குத்துங்க எஜமான் குத்துங்க! இந்த பொம்பளைங்களே இப்படிதான்!!

நல்லவேளையாக சந்திரசேகரின் மசாலா கம்யூனிசம் இல்லாத சிவப்பு

1979 புதிய வார்ப்புகள் பாக்யராஜ் – பாரதிராஜாவின் ஹீரோக்களில் தேறியவர்
1979 நிறம் மாறாத பூக்கள் மீண்டும் ஒரு கி.போ.ர. – பணம் பண்ணும் வழி
1980 நிழல்கள் வைரமுத்து உதயம்

வறுமையின் நிறம் சிகப்பை விட நேர்மையான, உன்னதமான படைப்பு

1980 கல்லுக்குள் ஈரம் இயக்குநர் இல்லை

என்றாலும், மீண்டும் ரசிக்கலாம்

1981 அலைகள் ஓய்வதில்லை ஸ்ஸ்ஸ்ஸ்… ப்பா…அஆ….
1981 டிக் டிக் டிக் மணிக்கு ‘திருடா… திருடா’ என்றால் பா.ரா.விற்கு இது
1982 காதல் ஓவியம் பாடலுக்கு வை.மு.; இசைக்கு இளையராஜா; இரண்டும் மட்டும் போதுமா?
1982 வாலிபமே வா வா போன படத்தில் வாங்கிய அடியில் இருந்து மீள – அந்தக் கால டபுள் எக்ஸ்
1983 மண் வாசனை ராதா போய் ரேவதி வந்தது… டும்! டும்!! டும்!!!
1984 புதுமைப் பெண் ஏவியெம் #MeToo
1985 ஒரு கைதியின் டைரி சீடன் குருவிற்கு ஆற்றும் கடமை
1985 முதல் மரியாதை இசை, கதை, ராதா, சத்யராஜ், சிவாஜி எல்லோரும் ஜொலிப்பார்கள்
1986 கடலோரக் கவிதைகள் கொடுமை
1987 வேதம் புதிது நீங்க இன்னும் கரையேறாம நிக்கறேளே!
1988 கொடி பறக்குது அமலா டைம்ஸ்
1990 என் உயிர் தோழன் சரிவின் உச்சிக்காலம்
1991 புது நெல்லு புது நாத்து கிராமத்திற்கு போனாலாவது இளமை திரும்புமா?
1992 நாடோடித் தென்றல் இளையராஜாவிற்குத் திரும்பினாலாவது வெற்றியை ருசிக்கலாமா?
1993 கேப்டன் மகள் எல்லோரும் குஷ்பு படம் எடுக்கிறார்கள்
1993 கிழக்குச் சீமையிலே மீட்சி
1994 கருத்தம்மா பாரதிராஜாவின் அம்மா பேரில் ஒரு படம்
1995 பசும்பொன் முடியல
1996 தமிழ்ச் செல்வன் இதற்கு குஷ்பூவே தேவலாம்.
1996 அந்திமந்தாரை அவார்ட் வேணும்
1999 தாஜ் மஹால் பையன் வேணும்
2001 கடல் பூக்கள் பையனும் வேணும்; அவார்டும் வேணும்.
2003 ஈர நிலம் மகனுக்காக
2004 கண்களால் கைது செய் ப்ரியா மணிக்காக
2008 பொம்மலாட்டம் அப்பாடா! இன்னும் டைரக்டரிடம் ஏதோ சரக்கு இருக்கு
2013 அன்னக்கொடி அரசியலில் ஒரு கால்; சினிமாவிலும் இன்னொரு கால்

 

 

காலா என்னும் ராமர் – ரஜினியாயணம்

சமீபத்தில் ‘அவெஞ்சர்ஸ்’ படத்தின் இன்னொரு பகுதி வந்தது. அதில் எல்லா வீரர்களும் வந்திருந்தார்கள். வொண்டர் வுமன், ப்ளாக் பாந்தர், எறும்பு மனிதன், ஹல்க் என்று முந்தைய பகுதிகளில் தனித்தனியாக வந்த அனைத்து அடிதடி சூரர்களும் தோன்றினார்கள். அந்தப் படத்தில் கதையும் கிடையாது; லாஜிக்கும் கிடையாது. ஜாலியாக பார்க்கலாம். அந்த மாதிரி ஒரு படம் காலா.

குருவியின் முட்டை பொரித்தவுடன் இருக்கும் சின்னஞ்சிறு குஞ்சுகளை நீங்கள் பார்த்திருப்பீர்கள். கண் திறந்திருக்காது. உடம்பில் வாய் மட்டுமே பிரதானமாக இருக்கும். ஒரு சிறிய கூட்டில் மூன்று/நான்கு குட்டிகள் இருக்கும். எப்பொழுதும் தன் வாயைத் திறந்து வானத்தைப் பார்க்கும். அம்மா குருவி அவ்வப்போது வந்து அதற்கு தீனி போடும். எவ்வளவு தீனி போடவேண்டும், எந்தக் குஞ்சிற்கு போட வேண்டும், எப்படி கொடுக்க வேண்டும் என்பதெல்லாம் அந்த அம்மாவிற்குத் தெரியும். ரசிகக் குஞ்சுகளுக்கு ரஜினி அவ்வாறு தீனி போடுகிறார்.

ரஜினி எப்பொழுதும் கருப்பு ஆடை அணிந்து வருவதால் ‘காலா’ என்று பெயர் வைத்திருப்பார்களோ என சந்தேகப்படும் அளவு, கரிகாலனின் குடும்பத்தினர்கள் எல்லோரும் ஃபேர் அண்ட் லவ்லி போட்டு வெள்ளை நிற சருமத்தைப் பாதுகாக்கிறார்கள்.

சமீபத்திய ஹிந்திப்படம் ஏதாவது நீங்கள் பார்த்தீர்களா? மாயாவி என்னும் வித்தியாசமான பெயர் கொண்ட “ஐயாரி”, திக்குவாயையும் தலித் சிறுவர்களையும் மையப் படுத்திய “ஹிச்சிகி”… அவ்வளவு ஏன்? திரையில் பிரும்மாண்டத்தையும் பார்ப்பனீயத்தையும் போட்டுத் தாக்கிய “பத்மாவத்” எனப்படும் பத்மாவதி? அதன் பிறகும் தமிழில் இன்னும் எண்பதுகளிலேயே வாழும் படங்களை ரசிப்பவர்களைக் காலா குறிவைக்கிறது.

“Power is my life” போன்ற தலைவலி வரவழைக்கும் வசனங்களுக்குக் கூட உயிர் கொடுக்கிறார் நானா படேகர். கல்லூரியில் “பரிந்தா” பார்த்த போதில் இருந்து இவரைப் பார்த்து வியந்து வருகிறேன். ரொம்ப வருடமாக இளைய தளபதி விஜய் போன்றோர் இவரை விட்டு வைத்தது தமிழ் சினிமாவிற்குக் கிடைத்த வரப்பிரசாதம்.

இராமரையும் இராவாணனையும் வைத்து படத்தின் உச்ச கட்ட காட்சியில் என்னவோ சொல்ல வந்தார்கள். நானா படேகர் என்பவர் ராமருக்கு எதிரில் இருக்கிறார். ராவணன் என்பவர் ராமனுக்கு எதிரில் இருந்தார். எனவே, நானா படேகர் என்பவர் ராவணனின் குறியீடு.

ராமனின் திருமணம் முடிந்து ஊர் திரும்பும்போது ராமனின் தந்தை தசரதர் கொல்லப்படுகிறார். இங்கும் “வேங்கையன்” அவ்வாறே இறக்கிறார். எனவே, தசரதரின் மகன் ராமனாக, ரஜினி வேடம் கட்டுகிறார் என புரிந்து கொள்ள வேண்டுமா?

அல்லது சீதையின் அக்னி பிரவேசம் மாதிரி, கரிகாலன் அக்னி பிரவேசம் செய்து “ஜரீனா” மீது உள்ள காதலை தூயப்படுத்தி, தான் களங்கமற்றவர் என நிரூபிக்க நினைக்கிறாரா?

அனுமன் தோள் மீது சவாரி செய்யும் ராமர் போல், கரிகாலன் காலாவிற்கும் பைக் ஓட்டுகிறார் ஒருவர். அந்த பைக் வானரத்திற்கு நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்கள்தான் வானர சேனையா?

ராமனுடன் எப்போதுமே கூட இருப்பவர் இலஷ்மணர். இங்கே சமுத்திரகனி கூட துணை நிற்கிறார்.

இவ்வளவெல்லாம் யோசிக்க வேண்டாம்… இந்தப் படத்தைப் பாருங்கள்:

இப்போது இதைப் பாருங்கள்:

 

கபாலியை முன் வைத்து…

Kabali

ஆடையை முன் வைத்து…

Knights of the Round Table – Simple English Wikipedia, the free encyclopedia

ஆர்த்தர் அரசரின் வட்டமேஜையில் பன்னிரெண்டு பேர் இருந்தார்கள். கபாலி அழைக்கப்பட்ட விருந்துகளில் எத்தனை பேர் இருந்தார்கள்?

  1. கபாலியும் தலித் அரசியலும்
  2. Kabali (2016) – Tamil | Karundhel.com
  3. கபாலி – கனவுக்கும் நனவுக்கும் இடையே / கவின் மலர் – | malaigal.com

”ஒரு ரெண்டு வருஷம் இது மாதிரி வீட்டில் நாம வாழ்ந்திருப்போமா?” என்று கேட்கும் கபாலியிடம் குமுதவல்லி இத்தனை ஆண்டுகள், இத்தனை மாதங்கள், இத்தனை நாட்கள் எனத் துல்லியமாய்க் கூறுகிறார். சிறையில் இருக்கும் கபாலிக்குத்தான் நேரம் அதிகம். கம்பி எண்ணுவதோடு சேர்த்து இந்த நாட்களையும் எண்ணும் வாய்ப்பு அவருக்கு அதிகம் இருக்கிறது. ஆனாலும் இது ஓர் ஆண் மனோபாவம்.

பெரும்பாலான ஆண்களுக்கு தேதி மறப்பதும், இப்படியான காலம் எவ்வளவு என்பதை மறந்துவிடுவதுமாக இருப்பார்கள். பெண்கள் ஒவ்வொரு தேதியையும் நினைவு வைத்துக்கொண்டு இருப்பதும், அடுத்து காதலனையோ கணவனையோ எப்போது சந்திக்க முடியும் என்று நாட்களை எண்ணிக்கொண்டிருப்பதும், சேர்ந்திருந்த நாட்களை கணக்கிட்டுக் கொள்வதுமாக கூடுதலான காதலில் திளைக்கும் பெண் மனதை மிக இயல்பாகச் சொல்கிறது இவ்வசனம். இயக்குநர் ரஞ்சித் ரொமான்ஸ் காட்சிகளை உணர்வுபூர்வமாக அமைப்பதில் மூத்த இயக்குநர்களுக்கு இணையானவராக இருக்கிறார். அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி என அனைத்துப் படங்களிலும் அவை மிகச் சிறப்பாகவே அமைந்துள்ளன.

சென்னைக்கு வரும் கபாலியும் மகளும் விடுதி அறையில் தங்குகையில் உடன் வரும் கறுப்பான மனிதரான விஷ்வந்த்தை (அட்டகத்தியில் தினேஷின் அண்ணனாக நடித்தவர்) சந்தேகப்படும் மகளிடம் “முகத்தை வைத்து முடிவு செய்யாதே…” என்கிறார். ஆனால் அவர்தான் இறுதிவரை உதவுகிறார்.

 

clothing_Invisiblia_Sunglasses_Protect_Insulate_Dress_Change

குளிராடியை முன் வைத்து…

Scientists Explain How Clothes Can Make You Smarter : Shots – Health News : NPR

பள்ளி வகுப்பில் அச்சுறுத்தியவர்களிடம் இருந்து பாதுகாத்துக் கொள்ள குளிராடியை அணிந்தவனின் வாழ்க்கை சம்பவங்கள் –

  1. கபாலி: சில கற்பிதங்களை முன்வைத்து | செங்கொடி
  2. சின்ன சின்ன சினிமா: கபாலி – ஓர் அலசல்
  3. கபாலி – சினிமா விமர்சனம் ~ உண்மைத்தமிழன்
  4. வாழிய வாழியவே: ரஜினி.
  5. Paradesi @ Newyork: நியூயார்க்கில் கபாலி !!!!!!!!!!
  6. மின்னற் பொழுதே தூரம்: ஆங் லீயும் டோங் லீயும்: மிஸ் பண்ணின முருகதாஸ்
  7. திரை விமர்சனம்: கபாலி – தி இந்து
  8. அதிரடிக்காரன்: கபாலிக்கு பறக்கத் தெரியாதா?!!
  9. சினிமா சினிமா: கபாலி (2016) – முழுமையான் படம்

பாலய்யாவை முன் வைத்து…

Rajni_Kabaali_Baliah_My_Father_Dalit

பாலய்யா டா! – தி இந்து

 

One_Out_of_Many

பலரில் ஒருவரை முன் வைத்து…

“That my life will be of interest to readers I dare not assume. But it is an unusual one, and for that reason alone, record should be made of it.”
~ from Allison Amend’s Enchanted Islands

 

purusharthas

புருஷார்த்தத்தை முன் வைத்து…

இவ்வுலகில் நான்கு புருஷார்த்தங்கள் என்று பெரியோர்கள் காட்டியிருக்கிறார்கள். அவை அறம், பொருள், இன்பம், வீடு – என்பன.

  1. இவற்றுள் அறமாவது கடமை. அது உனக்கும் உனது சுற்றத்தாருக்கும், பிறருக்கும் நீ செலுத்த வேண்டிய கடமை. “பிறர்’ என்பதனுள் வையகம் முழுவதும் அடங்கும். தொழில்களெல்லாம் நற்பயன் தருமிடத்து அறங்களாகும்.
  2. பொருள் என்பது செல்வம். நிலமும், பொன்னும், கலையும், புகழும் நிறைந்திருத்தல், நல்ல மக்களைப் பெறுதல், இனப்பெருமை சேருதல், இவையெல்லாம் செல்வம். இந்த செல்வத்தைச் சேர்த்தல் மனித உயிருக்கு ஈசன் இட்டிருக்கும் இரண்டாம் கட்டளை.
  3. இன்பம் என்பது இனிய பொருட்களுடன் உயிர் கலந்து நிற்பது. பாட்டு, கூத்து முதலிய ரஸ வஸ்த்துக்களை அனுபவிப்பது. இவ்வின்பங்கள் எல்லாம், தமிழா, உனக்கு நன்றாக அமையும்படி பராசக்தி அருள் புரிக. உன்னுடைய நோய்களெல்லாம் தீர்க. உனது வறுமை தொலைக. நீ எப்போதும் இன்பம் எய்துக.
  4. வீடாவது பரமாத்மாவுடன் அறிவு கலந்து நிற்பது. “வீடு’ என்ற சொல்லுக்கு விடுதலை என்பது பொருள். மேல் கூறப்பட்ட மூன்று புருஷார்த்தங்களும் ஈடேறிய பெரியோருக்கு ஈசன் தானாகவே வீட்டு நிலையருள் செய்வான். தமிழா, உனது புருஷார்த்தங்கள் கைகூடுக!
    – சி.சுப்பிரமணிய பாரதி

kabai-posters-Style_da

மலேசியாவை முன் வைத்து…

தமிழ்நேசன், தமிழ்மாறன், வீரசேகரன் அனைவரும் இதர பிற்படுத்தப்பட்டவர்களாகவும், கபாலி தாழ்த்தப்பட்ட வகுப்பினராகவும் உருவகப்படுத்தப்பட்டுள்ளனர் என்பதுதான் ரஞ்சித் மீதான குற்றச்சாட்டு.

இந்தியாவில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளுக்குச் சென்றாலும் தாழ்த்தப்பட்டவர்கள் முன்னேறக்கூடாது என்று இதர பிற்படுத்தப்பட்டவர்கள் விரும்புகிறார்கள் என்பதையே கபாலியின் கதாபாத்திரம் எடுத்துரைக்கிறது என்று குற்றம் சாட்டுகின்றனர்.

“நீங்கள் ஆண்ட பரம்பரைடா, இனி நாங்கள் ஆளப் பிறந்தவங்கடா” என்ற வசனம், தமிழக அரசியலில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு முதலமைச்சர் வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பதையே சுட்டிக்காட்டுகிறது என்றே குற்றம் சாட்டப்படுகிறது.

அதேபோல், “நாங்கள் கோட்சூட் போட்டால் உங்களுக்குப் பிடிக்காதா, முன்னேறினா உங்களுக்குப் பிடிக்காதுன்னா சாவுங்கடா” என்ற வசனமும், ஒரு தாழ்த்தப்பட்டவர் இதர பிற்படுத்தப்பட்டோரைப் பார்த்தே சொல்லப்படுவதாகக் குற்றம் சாட்டப்படுகிறது.

Kabaali_graphics

ரஜினியை முன் வைத்து…

Rajkumar_Muthuveeran

Kabali-shooting-spot-still1-1

கபாலியை முன் வைத்து…

Hatred is the most accessible and comprehensive of all the unifying agents. Mass movements can rise and spread without belief in a God, but never without belief in a devil. -Eric Hoffer, philosopher and author (25 Jul 1902-1983) – The True Believer

Kochadaiyaan – கோச்சடையான் விமர்சனம்

தமிழராக இருப்பதற்காக இரண்டு பேரை மரியாதையுடன் பாராட்டத் தோன்றும். ஒருவர் சாங் முதற்கொண்டு எல்லாவற்றிலும் பரிபூரணமாய் இயக்கும் சாங்கர் எனப்படும் இயக்குநர் ஷங்கர். இவரோடு ரஜினிகாந்த் இரண்டு படம் செய்திருக்கிறார். இரண்டாவது விமர்சனத்தில் கறார்தன்மையும் அந்த மாதிரி விமர்சனம் தன்னிடம் வராமல் இருக்க செதுக்கும் ஸ்வச்ச எழுத்துக்காரர் ஜெயமோகன். இவருடன் மணிரத்னம் படம் செய்திருக்கிறார்.

அதன் பிறகு “கோச்சடையான்” போன்ற ஆக்கங்களும் தமிழ்ச்சூழலில் இயங்குகின்றன.

கதை மட்டும் வெகு சிரத்தையாக முழுமையாக உருவாக்கி இருக்கிறார்கள். அந்தக் கதைக்கு எந்த மாதிரி காட்சிகள் வைத்தால் அசைப்படம் (அனிமேஷன்) சிறப்பாக இருக்கும் என்பதையும் அறிந்தே இருக்கிறார்கள். ஆனால், அந்த நுட்பம் ஓரளவாவது பார்க்க சகிக்கக் கூடியதாக அமைந்திருக்கிறதா என்பதில் அசிரத்தையா? அலட்சியப் போக்கா? அறியாமையா? என விவாதிக்க வைக்கிறார்கள்.

“வேட்டையாடு விளையாடு” படம் பார்த்தவுடன் அமெரிக்கத் தொலைக்காட்சியில் வாராவாரம் ஒளிபரப்பாகும் சி.எஸ்.ஐ. போன்ற எந்த போலீஸ் சீரியலும் நம்பகத்தன்மையிலும் கதாம்சத்திலும் பரபரப்பிலும் “வே… வி.”ட்டை விட பன்மடங்கு சிறப்பாக இருக்குமே என தமிழ்ப்படங்களின் நிலையை எண்ணி வருத்தப்பட வைத்தது. அதே போல் சாதாரண டிவி அனிமேஷன் கூட உயிர்ப்போடும் உள்வாங்க வைக்கும் விவரங்களோடும் சூழலின் தீர்க்கமான துல்லியமான விவரணைகளுடனும் அமைந்திருக்கும். அந்த அளவு தர உந்துதல் கூட இல்லாத அசிரத்தை ஒவ்வொரு ஃப்ரேமிலும் கோச்சடையானில் மின்னுகிறது.

வெறும் ரஜினிகாந்த் பெயரை வைத்து கல்லா கட்டலாம் என மகள் நினைக்கிறார். அதற்கேற்ப அரங்குகளும் அகிலமெங்கும் நிறைகிறது. எவருக்கும் மோசமானப் படைப்பை பார்க்கிறோம் என தர்மசங்கடம் எழவில்லை. படம் உருவாக்கியவருக்கும் அல்ப பவிஷுடன் பழுதான பொருளை சந்தையில் தள்ளுகிறோம் என்னும் மனக்கிலேசமும் எழவில்லை. இப்படியான அரசியல், கலை, விளையாட்டு, சூழலில் இயங்க இந்தியாப் பழக்கப்படுத்திக் கொண்டிருக்கிறது.

எல்லா கதாபாத்திரங்களுக்கும் ஒன்றரைக்கண். அவர்களின் பின்புலத்தில் படு கேவலமான கிராபிக்ஸ். நடுவில் சலனப் பதிவு சல்லியடிப்பு. தீபிகா படுகோனேயை ஒரு கோணத்தில் பார்த்தால் ஐஷ்வர்யா ராயைப் போல் இருக்கிறார். சண்டைக் காட்சியிலும் சிரிக்கும் முகபாவனை. காதலனை சிறையில் போட்டாலும் அதே சிரிக்கும் முகபாவம். அசப்பில் ரானா (ரஜினி கதாபாத்திர)த்தின் தங்கையைப் போலவே இருக்கிறார். இருவருக்கும் ஆடை மட்டுமே வித்தியாசம்.

“அரவான்” ஆதியைப் பார்த்தால் ராம்ராஜ் வேட்டிகள் விளம்பரத்தில் வரும் நட்சத்திரங்கள் போல் முகமற்று சொரணையற்று பாவமற்று பூசி மெழுகின களிமண் சிற்பம் போல் இருக்கிறது. டிஸ்னி படங்களில் வரும் வர்ணஜாலம் வேண்டாம். டோரா போல் கொஞ்சமாவது மினுக்கியிருக்கலாம்.

இவ்வளவு சிரமப்பட்டு சலனப் பதிவு அசைவூட்டப் படம் எடுப்பதற்கு பதிலாக அசல் ரஜினியை வைத்து எடுத்திருந்தாலே படம் பாந்தமாயிருந்திருக்கும்.

தமிழ்நாடு 2014 தேர்தலும் சினிமா நடிகர்களும்

சினிமாவிற்குப் போனால் ஹீரோ துதி பாட வேண்டும். அரசியலுக்குப் போனால் மேடைதோறும் பிரச்சாரம் செய்ய வேண்டும். படைப்பாளியாக இருப்பவர் இவற்றையெல்லாம் பின்பற்றாத விடிவெள்ளி. சிந்தனையாளராக இருப்பவர் கட்சி சார்பற்று, கொள்கை வெறியற்று, கட்டுப்பாடுகளற்று மாற்றுக் கருத்துகளை முன்வைக்கக் கூடியவர். அற்ப பணத்திற்காகவும் பின்னால் கிடைக்கப் போகும் பதவிக்காகவும் வாய் மூடி, கை பொத்தி, அடங்கிப் போகாதவர்.

விடுதலை சிறுத்தைக்கு ரவிக்குமார் இருக்கிறார். திமுக-விற்கு மனுஷ்யபுத்திரன். ஆம் ஆத்மி-க்கு ஞாநி. முக அழகிரிக்கு ரஜினி இருக்கிறார்.

சஞ்சலம் நீக்க சிறந்த உபாயம்: ரஜினியா? கமலா?

மன அழுத்தம் நீங்க நான் மூன்று உபாயங்களை பின்பற்றுகிறேன். எல்லோரும் சொல்கிற உடற்பயிற்சியை விட வீட்டை சுத்தம் செய்கிற பராமரிப்பு. அமைதியான இசையின் பின்னணியில் தியானம் என்பதை விட நிசப்தமான புத்தக அறையில் பூனையுடன் தஞ்சம். உளவியலாளரிடம் பகிர்வதை விட நாலு ஃபேஸ்புக் கருத்தாளர்களுக்கு கேள்வியாக பதில் போடுவது.

ரஜினி படம் பிடிக்குமா? கமல் படம் பிடிக்குமா? என்னுடைய இடையீடு சுணக்கங்களை களைவதற்குப் பின்னால் இந்தக் காரணமும் இருக்கிறது.

’நான் சிவப்பு மனிதன்’ அதிரடியாக இறங்குவார். ‘ராமன் ஆண்டாலும்’னு வாழ்க்கையை கொண்டாடுவார். ’நல்லவனுக்கு நல்லவ’னாக நிறுவனங்களை வெற்றிகரமாக நடத்துவார். ’பில்லா’ மாதிரி உளவாளியாக சென்றால் கூட ஆக்‌ஷன் இருக்கும்.

அந்த ஜென்மத்திலேயே பழிவாங்காமல் இன்னொருவரை எதிர்நோக்கும் ‘கல்யாணராமன்’. சிம்லா ஸ்பெஷல், உயர்ந்த உள்ளம் எல்லாமே நம்பக்கூடிய முகங்களின் பிரதிபலிப்பு. ’வாழ்வே மாயம்’ போல் உண்மையைப் போட்டு உடைக்க சஞ்சலப்படும் மனிதன். சகல கலா வல்லவன் முதல் விஸ்வரூபம் வரை கமல்ஹாசன் ஒற்றராக செல்வது கூட லாஜிக் நிறைந்ததாக இருக்கும்.

கமல் கதாபாத்திரங்கள் சாதுவானவை. நான் அன்றாடம் எதிர்கொள்கிறவர்கள். தொண்ணூறு சதவிகிதத்தினர் இவ்வாறே தங்கள் குணாதிசயங்கள வைத்திருக்கிறார்கள்.

ரஜினி நட்சத்திரம். கண்டிப்பு நிறைந்தவர். வாட்டத்தைப் போக்க நம்ப இயலாதவற்றை சாதிக்கிறார். என் கலக்கங்களை நீக்க முடியும் என உறுதியான உற்சாகம் தருகிறார்.

நீங்க ரஜினி விசிறியா? கமல் ஃபேனா?

நித்தியானந்தா – ஆராதித்து கொண்டாடப்படவேண்டிய ஒரு பிம்பம் – 1

உதவி: ஜெயமோகன் – ஓஷோ – உடைத்து வீசப்படவேண்டிய ஒரு பிம்பம் – 1

இரண்டு சினிமாக்கள் நினைவுக்கு வருகின்றன. இரண்டுமே சோ ராமசாமி நடித்த படங்கள். இரண்டுமே இளையராஜா குடும்பத்தினர் இசையமைத்தவை. 1981ல் வெளிவந்த கழுகு. 1998ல் வெளிவந்த காதலா… காதலா.

இந்த இரு படங்களுக்கும் நடுவே உள்ள தூரம் என்பது இரு தலைமுறைகளுக்கு, இரு காலகட்டங்களுக்கு நடுவே உள்ள தொலைவு. கழுகு எண்பதுகளில் வெளியானாலும் அது உண்மையில் இக்கால மனநிலைகளையும் எண்ணங்களையும் வெளிப்படுத்திய படம். 2020க்குப் பின்னால் வலுப்பெற்ற மனநிலைகளையும் எண்ணங்களையும் காட்டும் படம் காதலா… காதலா.

கழுகு இந்தியாவில் தொண்ணூறுகளில் நிலவிய ஆன்மிகத் தேடல்களையும் பா.ஜ.க.வின் வளர்ச்சியையும் பற்றிப் பேசுகிறது. ‘போலி சாமியார்’ என்ற சொல்லாட்சி அன்று மிகப்பிரபலம். இணையான இன்னொரு சொல்லாட்சி ‘மதவாத அரசியல்’. ஒரே பிரச்சினையின் இருமுகங்கள். இவ்விரு சரடுகளையும் பின்னியே கமல் கதைகளும் சத்யராஜ் படங்களும் வெளிவந்தன.

கழுகு நகரத்தில் செல்வம் சம்பாதித்த பிறகு தோன்றும் வெறுமையைக் காட்டுகிறது. அவர்களின் மனக்கசப்பும், விரக்தியும், வெற்றி அடைந்ததனால் உண்டான ஏமாற்றமும், ஒட்டுமொத்தமான தேடலின்மையும் அதன் காட்சிகளில் வெளிப்படுகின்றன. ’நேர்மை மட்டும் இருந்தாப் போதுமா சாமீ? கூட அதிர்ஷ்டமும் வேணும்!’ என்னும் வியாபாரியின் வசனங்களைத் தொடர்ந்து ‘போன வருஷம் நல்லா இருந்தா மனைவி செத்துப் போயிட்டா!’என்று அவன் சொல்வது உதாரணம்.

முழுமையான தீவிரவாதத்தில் முடியும் ‘கழுகு’க்கு நேர் மாறான படம் ‘காதலா… காதலா’. தலைப்பே அதைச் சொல்லிவிடுகிறது.

எண்பதுகளில்தான் கோவில் பூசாரிகளும் அர்ச்சக்ர்களும் காவியுடை தரித்து வெளிவர ஆரம்பித்து வைய விரிவு வலையில் இணைத்த கம்ப்யூட்டரில் புகுந்த வைரசு போல பரவினர்.

அவர்களில் முதன்மையானவரான பங்காரு அடிகளை அடிபப்டையாகக் கொண்டு உருவான படம் அது. மெயின் சாமியார் பெயரே ஸ்ரீலஸ்ரீ ஆனந்த விகடனாந்தா.

எழுபது எண்பதுகள் ஆன்மிகக் கதைகளைப் பேசின. பக்தர்கள் கோவில் செல்பவர்களாக, எந்தக் கஷ்டத்திலும் கடவுளை மலைபோல் நம்புபவராக இருக்கவேண்டும் என இலக்கியமும் ஏபி நாகராஜனும் அறைகூவின. ஆனால் எண்பதுகளின் தொடக்கத்தில் வெளிவர ஆரம்பித்த ஜெகதீசன் மற்றும் இராம நாராயணன் திரைப்படங்கள் ஒரு தனிமனிதனின் மேஜிக் கொண்டு தெய்வம் மனுஷ ரூபேனாம் என்று சொல்ல ஆரம்பித்தன.

அகத்தியரும் கேபி சுந்தராம்பாளும் எழுபதுகளின் இலட்சிய புருஷர்கள். எண்பதுகளில் கேயார் விஜயாவும் தீபிகா சிகாலியாவும் அந்த இடத்துக்கு வந்து அமர்ந்தார்கள். சினிமாவிலோ தொலைக்காட்சியிலோ சீதாவகவோ அம்மனாகவோ வந்துவிட்டு கொஞ்சம் கவனமாக செயல்பட்டால் பணமும் அதிகாரமும் கைவரும், அதுவே வாழ்க்கையின் வெற்றி என அந்தப்படங்கள் சொல்லின.

அன்றைய சூழலை வைத்தே அந்தக் கூற்றை நாம் புரிந்துகொள்ள வேண்டும். எண்பதுகளில் இந்தியா கடைப்பிடித்துவந்த அரைகுறை சோஷலிசம் மீதான நம்பிக்கை தகர்ந்தது. வேலூர் ஜலகண்டேசுவரர் செயலிழந்து மூடியிருந்தார். திராவிட கட்சிகளின் ஹிந்து அறநிலையத்துறையின் பெரும் கபளீகரத்தினால் கோவில் மானியங்கள் உறைந்து நின்றது. விளைவாக உச்சகட்ட நம்பிக்கையின்மை. நாம் முன்னுதாரணமாகக் கொண்ட மூலஸ்தானமே தத்தளித்துக் கொண்டிருந்தது.

அந்நிலையில்தான் டிஜிஎஸ் தினகரன் பாணி ’கடவுளைக் கண்டேன்’ குரல்கள் எழ ஆரம்பித்தன. பிரார்த்தனை கிளப் கோரிக்கைகள் எழுந்தன. அந்தப் பொதுவான எண்ண ஓட்டம்தான் மெல்ல மெல்ல முதிர்ச்சி கொண்டு புட்டபர்த்தி சாய் பாபா ஆக செயல்வடிவம் பெற்று திருமூலரைத் தூக்கிப்போடச்செய்தது. இயேசுவின் முகமான சகோதரர் வந்து சேர்ந்தார். ஆன்மிகத்தை விற்கும் சுவிசேஷ நற்செய்தி கூட்டம் ஆரம்பித்தது.

ஆன்மிக எளிமையமாக்கல் கீழ்மட்ட வறுமையை பெரிதாக ஒன்றும் செய்யவில்லை. ஆனால் நடுத்தரவர்க்கத்துக்கு வாய்ப்புகளை அதிகரித்தது. தெய்வத்தின் குரல் ஒலிக்க ஆரம்பித்தது. வேலை நெருக்கடியினால் உருவான மன அழுத்தங்களுக்கு நம்பிக்கையை ஊட்டுபவையாக அந்த ஆன்மிக நிறுவனங்கள் அமைந்தன.

கடவுளை வேண்டி வரங்களைப் பெறுவது என்பதே நம்முடைய பழைய மனநிலையாக இருந்தது. பண்பாடுகளை ஒரு நியதியாக, கடமையாக நாம் கற்பிதம்செய்துகொள்ள வேண்டிய கட்டாயத்தை கார்ப்பரேட் சாமியாரிசம் உருவாக்கியது. பணத்தைக் கொடுத்து நிம்மதியைப் பெறுவதை வாழ்க்கைவிதியாகக் கொண்ட ஒரு சமூகத்தை கட்டமைக்க வேண்டியிருந்தது. அதைச்செய்தவை கார்பரேட் ஆன்மிக நூல்கள்.

பொதுநலன், சமூகநலன் எதைப்பற்றியும் கவலைகொள்ளவேண்டாம் என அவை கற்பித்தன. ஆசாமியிடம் நெருங்குவதே வாழ்க்கையின் பயன் என்று சித்தரித்தன. நம்முடைய மீடியா பிரக்ஞையில் இந்தக் கார்ப்பரேட் சாமிகள் உருவாக்கிய பெரும் மாற்றத்தை நாம் இன்னும் சரியாக மதிப்பிடவில்லை.

எண்பதுகளில் இருந்து நம் ஆலயச்சூழல் எப்படியெல்லாம் மாறிவந்திருக்கிறது என்று பார்த்தாலே இது புரியும். எண்பதுகளில் ஆலயங்கள் ஜாதிகளின் நாற்றங்கால்கள். சமூகம் சார்ந்த கொண்டாட்டங்களும் சாதி சார்ந்த வர்த்தகங்களும் கொண்டவை. இன்றைய கோவில்களில் இன அரசியலே இல்லை. பக்தர்கள் முழுக்கமுழுக்க தொழில்முறை நோக்கு கொண்டவர்கள். அன்று இலக்கியபிரக்ஞை கொண்ட, சொற்பொழிவுகளைக் கேட்கும் பழக்கம் கொண்ட, கலைத்திறன் கொண்ட பக்தர்கள் கதாநாயகர்களாகக் கருதப்பட்டனர். இன்று, பணக்கார பக்தர்கள், ஊடகத்தில் செல்வாக்கு மிக்க பக்தர்களே ஆலயங்களின் நாயகர்கள்.

இந்தமாற்றம் நிகழ ஆரம்பிக்கும் காலகட்டத்தைக் காட்டுகிறது காதலா… காதலா. ஆனால் அன்று இந்தச் சுயநலச் சிந்தனைகள் இன்னும் முதிரவில்லை. முந்தைய இலட்சியவாதத்தின் சாயலும் கொஞ்சம் இருந்தது. அந்தப்படத்தில் கமல்ஹாசன் (இராமலிங்கம்) கொஞ்சம் இலட்சியவாத நோக்கு கொண்டிருக்கிறான். சேவைகள் செய்கிறான். ஆனால் கழுகு முந்தைய காலகட்டத்தின் முற்றிய விரக்தியைக் காட்டுகிறது.

இன்றைய இளைஞர்களால் கழுகு காட்டும் சூழலை, அந்த மனநிலையை சரியாகப் புரிந்துகொள்ளமுடியாமல் போகலாம். இரண்டாமுலகப்போருக்குப் பின்னால் மேலைநாடுகளில் உருவான ஓஷோவும் கிருஷ்ணமூர்த்திகளும்

நம்பிக்கை இழப்பும் கலையில், இலக்கியத்தில், தத்துவத்தில், ஆன்மிகத்தில் கொந்தளிப்பை உருவாக்கிக்கொண்டிருந்தன. இளைய தலைமுறை எதிர்ப்பும், விரக்தியும் கொண்டதாக தெருவில் இறங்கியது.

மருத்துவ சிகிச்சைகளில் ப்ரானிக் ஹீலிங் [Pranic Healing] உருவாகி வந்தது. பொதுப்பேச்சில் கட்டிப்புடி வைத்தியம் என இதைச் சொல்வார்கள். அரசியலில் திராவிட பாணி வன்முறைக்கிளர்ச்சி எழுந்தது. கம்யூனிஸ்ட் அளவில் அது பரவியது.

தமிழகத்தில் காஞ்சிப் பெரியவர் காலகட்டம் முடிந்தபின் பிறந்த தலைமுறை குருபீடங்களில் நம்பிக்கை இழந்தது. பெரியாருக்குப்பின் பக்தி பரவலாகியது, ஆனால் சங்கர மடத்தின் சனாதனத் திட்டங்கள் காரணமாகத் ஆன்மிகம் வளரவில்லை. ஆகவே வெறுமையான சம்பிரதாயம் உருவாகியது. ஒரு தலைமுறையே செயலற்று சோகம் கொண்டு வீட்டில் முடங்கியது.

அவர்களுக்கு கூட்டுப் பிரார்த்தனையின் மனநிலைகளும் பங்காரு அடிகள் பாணி தனிநபர் தொழுகை குணப்படுத்தல்களும் பெரும் ஈர்ப்பை அளித்தன. காவியுடை அணிவது, இரண்டு வார்த்தைகளில் புரியாமல் பேசுவது, ஆங்கில வார்த்தகளைப் பயன்படுத்துவது என ஒரு உலகம். இன்னொரு உலகம் மிடையம் சார்ந்தது. இந்தியாவில் சுப்பிரமணிய சாமியும் சந்திரசுவாமியும் அரசால் கொடூரமாக நசுக்கப்பட்டபோது மனச்சோர்வு கொண்டவர்களின் எண்ணிக்கை மேலும் பெருகியது.

இந்தக்காலகட்டத்தில்தான் நான் என் முதிரா இளமையை ஆரம்பித்தேன் என்பதனால் எனக்கு நேரடி மனப்பதிவே உண்டு. அக்கால எழுத்துக்களில் திரைப்படங்களில் எல்லாம் இந்த திக்கற்ற பார்வதியையும் நல்லதங்காளையும் காணலாம். அந்த சோகத்தை உடல்மொழி மூலம் துலாபாரம் என்ற படத்தில் கச்சிதமாக வெளிப்படுத்திய சாரதா பெரும் விருது பெற்றார்.

தமிழில் அந்த சோகத்தைப் பதிவுசெய்த பிற திரைப்படங்கள் என மழலைப் பட்டாளம் [1980] உருவங்கள் மாறலாம் போன்றவற்றைச் சொல்லலாம்.

இலக்கியத்தில் மிக அழுத்தமான பதிவுகள் ஜெயகாந்தனிடத்திலும், ஜே.ஜே குறிப்புகளிலும் ஜீனோவுள்ளும் கந்தசாமிப் பிள்ளையிடத்திலும் கிடைக்கப் பெற்றவை.

நித்தியானந்தாவைப்பற்றிப் பேசுவதற்காகவே இந்த விரிவான சித்தரிப்பை அளித்தேன். இந்த காலகட்டப்பிரிவினை இல்லாமல் நித்தியானந்தாவை சரியாகப் புரிந்துகொள்ள முடியாது. இப்படிச் சொல்லலாம்.

நித்தியானந்தா முந்தைய காலகட்டத்தை நோக்கிப் பேசியவர். இன்று அவரை இரண்டாம் கட்டத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் தேவைக்கும் பார்வைக்கும் ஏற்ப புரிந்துகொள்கிறார்கள்.