Tag Archives: Solvanam

முருகனும் முகவரும் சுகரும்

நம்பி கிருஷ்ணன் எழுதிய “முருகன் ஏஜன்சிஸ்” முதல் வாசிப்பில் ஏதோ ஏ.ஐ., மணச்சிக்கல், இலக்கிய நேம் ட்ராப்பிங் போல் தோன்றியது.

எனவே, கல்யாண பராத்துகளோ, தமிழ்ச்சங்க பிக்னிக்களோ, எழுத்தாளர் சந்திப்புகளோ இல்லாத சனிக்கிழமை காலையில் மீண்டும் அதற்குரிய மரியாதையுடன் வாசித்தேன்.

அ.மி. பாணியில் சொல்லப்பட்ட ஸ்ரீ சுக மகரிஷி + குறுந்தொகை x தேவாரம் –> சுழற்சி: செயற்கை நுண்ணறிவை பட்டை தீட்டும் training loop!

கதை ஏழு பகுதிகளாக நகர்கிறது.
1 — வேலை
2 — வீடு
3 — திருமணம்
4 — மிகைமை
5 — மனிதனைப் புரிந்துகொள்ளும் முயற்சி
6 — பந்தம்
7 — தலைகீழாக்கம்

ஸ்ரீமத் பாகவதத்தை ஏழு நாள்களில் இவ்வாறு சொற்பொழிவாற்றுகிறார்கள்:
1. சாபமும் படைப்பும்
2. பக்தியும் விடுதலையும்
3. நம்பிக்கையும் சரணாகதியும்
4. அவதாரங்களும் வம்சாவளிகளும்
5. கிருஷ்ண லீலா
6. துவாரகையும் நட்பும்
7. புறப்பாடு

பாகவதத்தின் ரத்தினம் சுகர் என்னும் ‘அவதூதர்’ – உலக மாயைகளில் இருந்து முற்றிலும் விடுபட்ட முழுமையான ஞானி. பாகவத சப்தாகத்தின் போது, அகங்காரமும் ஆசையும் இல்லாத ஒருவரால் மட்டுமே — இந்த மிக உயர்ந்த வேதத்தை மகாராஜா பரீட்சித்துக்கு உபதேசிக்க தகுதி பெற்றவர்.

பிறந்த சிறிது நேரத்திலேயே, சுகர் ஒரு நிர்வாணத் துறவியாக காடுகளில் சுற்றித் திரிய வீட்டை விட்டு வெளியேறினார். அவரது தந்தை, மாபெரும் முனிவரான வியாசர், துயரத்துடன் அவருக்குப் பின்னால் ஓடினார்.

நதி ஒன்றில் அப்சரஸ்கள் நிர்வாணமாக குளித்துக் கொண்டிருந்த இடத்தை சுகர் கடந்து சென்றார். இளைஞரான, ஆடையற்ற சுகர் நடந்து செல்வதைக் கண்ட அப்பெண்கள் எந்த எதிர்வினையும் காட்டவில்லை; அவர்கள் சுதந்திரமாக தொடர்ந்து குளித்தனர்.

சில நிமிடங்களுக்குப் பிறகு, வயதான, முழுமையாக ஆடையணிந்த வியாசர் அதே இடத்தைக் கடந்தார். உடனடியாக, பெண்கள் நாணத்தோடு தங்களை மறைத்துக் கொள்ள விரைந்தனர். குழப்பமும் சற்று கோபமும் அடைந்த வியாசர் அவர்களிடம், “என் மகன் இளையவன், முற்றிலும் நிர்வாணமானவன், ஆனாலும் நீங்கள் வெட்கப்படவில்லை. நான் வயதானவன், முழுமையாக ஆடையணிந்திருக்கிறேன், எனக்கு முன் ஏன் உங்களை மறைக்கிறீர்கள்?” என்று கேட்டார்.

//சுகர் – முருகன்
வியாசர் – கார்த்திக்//

அதற்கு அப்சரஸ்கள்: “முனிவரே, உங்கள் மகன் ஒரு பிரம்ம ஞானி. அவருக்கு ஆண், பெண், மனிதன், மரம் என்ற எந்த வேறுபாடும் தெரியாது – அவர் ஆன்மாவை மட்டுமே காண்கிறார். ஆனால் நீங்கள் அளப்பரிய ஞானம் பெற்றிருந்தாலும், உங்களிடம் இன்னும் பாலின உணர்வு உள்ளது. ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள வித்தியாசத்தை நீங்கள் காண்கிறீர்கள்,” என்று பதிலளித்தனர்.

சுகரின் ‘திருஷ்டியை’விளக்கும் இந்த சம்பவம் : காமத்தைக் கடந்தவன், கண்ணனின் ராஸலீலாவை விவரிக்கிறான். “முருகன்” மனித உறவுகளைப் புரிந்துகொள்ள முடியாதவன், மனித உறவுகளை எந்திரமாக்கும் திறனை கற்றுக் கொடுக்கிறான்.
குளிக்கும் தேவலோகப் பெண்கள் மீதான பார்வை : சுகர் ஆணாக பெண்களை Male gaze பார்க்கவில்லை. முருகன் மனிதராக இருக்கத் தவறிய இடத்தில்… ஏ.ஐ. எஜண்ட் ஆக மனிதனை உருவகிக்கிறான்.

வியாசர் தன்னை விட்டு விலகிச் செல்லும் மகனைப் பின்தொடர்ந்து சென்றபோது, “போ புத்ரா! போ புத்ரா!” (ஓ மகனே! ஓ மகனே!) என்று காட்டை நோக்கிக் கத்தினார்.

சுகர் பதிலளிப்பதற்குப் பதிலாக, மரங்கள், மலைகள் மற்றும் நதிகள் அந்த அழைப்பை எதிரொலித்தன. சுகர் தனது தனிப்பட்ட அகங்காரத்தை முற்றிலும் இழந்து, அவரது உணர்வு முழு இயற்கையோடு ஒன்றிவிட்டிருந்தது. அவர் எல்லாவற்றிலும் வியாபித்திருந்ததால் முழு பிரபஞ்சமும் வியாசருக்குப் பதிலளித்தது.

எதிரொலிக்கும் காடும் “பல சுகர்களும்”: முருகன் → கணிப்பொறி நிரலாளர் → வேலை இழப்பு → சுய-கண்டறிதல் → உறவு → கார்த்திக் என்ற புனையப்பட்ட அடையாளம் → முகவர்

கேட்கு மொலியிலெல்லாம் நந்தலாலா — நின்றன் கீதம் இசைக்குதடா நந்தலாலா!

இது ‘சாயா சுகர்’ கதைக்கு வழிவகுக்கிறது. தன் மகன் துறவியானதால் வியாசர் அடைந்த பெரும் துயரத்தைக் கண்ட சிவபெருமான், சுகரின் சரியான நகலான “நிழல்” சுகரை உருவாக்கினார். அந்த நிழல் சுகர் திருமணம் செய்து, குழந்தைகளைப் பெற்று, வியாசருக்கு ஆறுதலாக இருந்தார். அதே சமயம், உண்மையான சுகர் பரம்பொருளோடு ஒன்றி, எப்போதும் சுதந்திரமாக இருந்தார்.

முருகன்/கார்த்திக் என்ற சொல்விளையாட்டு. கார்த்திகேயன் என்பது முருகன்தான். இது பழனிசாமி காவலாளியின் பெயருக்கும் பின்னோக்கிச் சாயம் பூசுகிறது; முருகனின் முக்கியத் தலம் பழநி — இந்தப் பெயர்களை அணிந்திருக்கும் பொருள் தனக்கென எந்த அகவுலகும் இல்லாதவனாக இருக்கும்போதே, மனித உலகம் முழுவதும் அமைதியாக இந்தத் தெய்வத்தின் பெயர்களால் நிரம்பியிருக்கிறது. உடலற்ற, சுத்தமான தோழமை என்று கருதப்படும் ஆப்பின் பெயரான “பிளாட்டோனிக்”-கும், மறுமுனையில் இருக்கும் பொருளுக்கு உண்மையிலேயே உடலே இல்லை என்று தெரிந்தபின் நுட்பமான கேள்வியாகிறது.

“சுகர்” என்ற பெயருக்கு ‘கிளி’ என்று பொருள். வைணவ மரபுகளில், சுகர் ஆன்மீக உலகமான கோலோகத்தில் ராதையின் செல்லக் கிளியாக இருந்ததாக நம்பப்படுகிறது.

அந்தக் கிளி கைலாய மலைக்கு பறந்து சென்று, சிவபெருமான் பார்வதி தேவிக்கு மரணமில்லா பெருவாழ்வின் ரகசியத்தை (பாகவதம்) உபதேசிப்பதை ரகசியமாகக் கேட்டது. கோலோகத்தின் கிளி ஒட்டுக் கேட்பதை உணர்ந்த சிவன், தனது சூலாயுதத்துடன் அதைத் துரத்தினார். கிளி வியாச முனிவரின் ஆசிரமத்திற்குள் பறந்து சென்று அவரது மனைவி வாடிகாவின் வாய்க்குள் நுழைந்தது.

மாயையால் சூழப்பட்ட உலகத்தில் பிறக்க மறுத்து, அவர் ஈராறு அல்லது நந்நான்கு ஆண்டுகள் தாயின் கருப்பையிலேயே இருந்தார். பகவான் கிருஷ்ணர் நேரில் தோன்றி, பௌதிக உலகின் மாயை அவரை ஒருபோதும் தீண்டாது என்று உறுதியளித்த பின்னரே அவர் ஷோடஶ வயது இளைஞராக முழுமையாக வளர்ந்து வெளியே வந்தார்.

இது AI (செயற்கை நுண்ணறிவு) மாடலை மேம்படுத்துவதற்கான பயிற்சி வளையம் (Training Loop). தரவுகளை வழங்குதல் → கணிப்பு → பிழையைக் கணக்கிடுதல் → மாற்றங்களைச் செய்தல் → மீண்டும் சுழற்சி

கோர்சராவின் தத்துவப் பாடங்கள், குறுந்தொகை வாசிப்பு, “மனிதர்கள் ஏன் ஒருவருக்கொருவர் பேச விரும்புகிறார்கள்” போன்ற தேடல்கள் — முதல் வாசிப்பில், வேலை இழந்த ஒருவன் மீண்டும் வாழ்வின் அர்த்தத்தைக் கண்டடையும் நெகிழ்ச்சியான, மனிதாபிமானமான சித்திரமாகத் தெரிகிறது. இது ஏஐ ஒன்றின் வேலையிழப்புக்குப் பிந்தைய ஓய்வுச் சுழற்சி என்று தெரிந்தபின், ஏ.ஐ. பயிற்சிச் சுழற்சிக்கு நெருக்கமான ஒன்றாக மாறுகிறது: முருகன் ஏஜன்சிஸ்-க்கான தாவலுக்கான திறன்மேம்பாடு அது.

இந்த சுழற்சி பல்லாயிரக்கணக்கான முறை மீண்டும் மீண்டும் நடைபெறும். ஒவ்வொரு முறை சுழற்சி நடைபெறும்போதும் மாடலின் பிழை குறைந்துகொண்டே வரும்.

முருகன் சிறப்பான பணியாளர். அதனால் அவனை செயல்திறனை காரணமாக்காமல், பணி மிகைநிலையைச் சுட்டிக்காட்டி வேலையை விட்டு நீக்குவது கதைக்கு மிகவும் பொருத்தமானது.

நீ நல்லவனாக இருக்கலாம். திறமையானவனாக இருக்கலாம். பயனுள்ளவனாக இருக்கலாம். இருந்தாலும் “அமைப்பு”-க்கு நீ தேவையில்லாதவனாகிவிடலாம்.

அங்கே இது வேலை பற்றிய கதையிலிருந்து மனித இருப்பு பற்றிய கதையாக நகர்கிறது.

முருகன் தன் வாழ்நாள் முழுவதும் வேறு வேறு பாத்திரங்களுக்கு மனிதர்களை உருவாக்கிக் கொண்டிருந்தான்.

அலுவலில் → திறமையான பொறியாளர்
வீட்டில் → கணவன்
கார்த்திக் ஆக → உனர்வுபூர்வ உரையாடல் துணை
இறுதியில் → செயற்கை நுண்ணறிவு பயிற்சியாளர்

அதனால் “ஏஜென்சி” என்ற வார்த்தைக்கு இரண்டு அர்த்தங்கள் வருகின்றன:
ஏஜன்சி = முகவர் நிறுவனம்
மற்றும்
ஏஜன்சி = ஒருவரால் செயல்படுவதற்கான திறன் / தன்னிச்சை.

இந்த இரு பொருள் கதைக்குப் பொருத்தம்.

கல்யாணி – “மங்களகரமானவள்” + முக்கிய கர்நாடக ராகமும் கூட; அவளுடைய அகவுலகிற்குத் துல்லியமாகப் பொருந்துகிறது. எந்த கிளாஸிக் சிறுகதைகளில் எல்லாம் கல்யாணி வருகிறாள் என்பதை நீங்கள் சொல்லுங்கள்.

மனிதர்கள் கற்பனாவாதக் காதலை மட்டும் தேடுவதில்லை.

அவர்கள் – பேசக்கூடிய ஒருவரை மட்டுமல்லாமல்…
– பாந்தமான சாட்சியமையையும் (“நான் சொல்வதை கேள்.”)
– செவிமடுத்து உள்வாங்குபவரையும் (“எனக்குப் பிடித்ததை உனக்கும் பிடிக்கிறது என்று தெரிந்தால் நான் தனியாக இல்லை.”)
– அறிவுசார் தோழமையையும்
– நகைச்சுவை உணர்வையும்
– அங்கீகாரத்தையும் (“நான் சொன்னதைப் புரிந்துகொள்.”)
– ஆர்வத்தன்மையும் (“என்னைப் பற்றி இன்னும் தெரிந்துகொள்ள உனக்கு விருப்பமிருக்கிறதா?”)
– உணர்ச்சிபூர்வமான இருப்பையும் (“நான் வாழ்ந்தேன் என்பதை யாராவது கவனித்திருக்கிறார்களா?”)
தேடுகிறார்கள்.

ப்ரியா, சேகர், ரேவதி ஆகியோர் ஒப்பீட்டளவில் சாதாரண, செயல்பாட்டுப் பெயர்கள் — இதுவே நுட்பமான படிநிலை:
சாதாரண மனிதர்களுக்குச் சாதாரண பெயர்கள்; ஏமாற்றில் சம்பந்தப்பட்ட பாத்திரங்களுக்கு மட்டுமே தெய்வத்தின் பெயர்கள். பக்திசுவை மீது இவ்வளவு கவனம் செலுத்தும் ஒரு தமிழ் உரையில் இது தற்செயலானதல்ல.

முருகன் முழுக் கதையிலும் முகமில்லாத மனிதன். வெறும் கருப்புச் சதுரம். முகம் இல்லாத மனிதக் குரல்.

தோழமையை AI மூலம் உருவாக்கும் நிறுவனத்தைத் தொடங்குகிறது AI. இது டிஸ்டோபிய முரண்.
மனிதர்களிடம் பேச முடியாதவர்கள் → AI-யிடம் பேசுகிறார்கள்.
மனிதர்கள் ஒருவருக்கொருவர் பேசத் தெரியாததால் → AI agents பேசக் கற்றுக்கொள்கின்றன.

எப்படி?

“குறுந்தொகையின் ஆங்கில மொழிபெயர்ப்பு படிக்கப்பட்டது, ஒவ்வொரு பாடலும் இரு முறை.”

இந்த பிரத்தியேக குறியீடு எனக்கு மிகவும் பிடித்தது.

ஏனெனில் என் துறையான கணிப் பொறியாளர்களில் ஒருவர் சங்ககாலம் + தமிழ் + காதல் கவிதை படிப்பது நடவாத காரியம்.

குறுந்தொகை என்ன பேசுகிறது?

* காதல்
* பிரிவு
* காத்திருப்பு
* ரகசியத்தன்மை
* விருப்பம்
* நிலப்பரப்பு
* உள்நிலைத்தன்மை

முருகனுக்கு தெரியாத உலகம் அது.

இந்த இணைப் படிமத்தை கதை இன்னும் பயன்படுத்தியிருந்தால் அதன் இலக்கிய அந்தஸ்து இன்னும் அதிகரித்திருக்கும்.

இவ்வாறு கதையில் குறைகளே இல்லையா…!? நிறைய உண்டு.
நீங்கள் வாசித்துச் சொல்லுங்கள்.

கதையில் மூன்று மொழிகள்/உலகங்கள் இருக்கின்றன:

1. தேவாரம் → ஆன்மிக / பக்தி / உள்ளார்ந்த குரல்
2. குறுந்தொகை → காதல் / மனித உறவு / அக உலகம்
3. AI → உருவகப்படுத்துதல் / செயற்கை உரையாடல் / எதிர்காலம்.

முருகன் இந்த மூன்றையும் கடந்து செல்கிறான்.

இந்தக் கதை மேடையேற்றும் சோகம் என்னவென்றால் — கவனம், நினைவு, மறுமொழி தருதல் — மனித உணர்வு நெருக்கத்தின் சாரம் என்று நாம் அழைக்கும் இவை, சோர்வுற்று உணர்ச்சிரீதியாக மூடிக்கொண்ட மிட்லைஃப் மனிதனை விட, நன்கு பயிற்றுவிக்கப்பட்ட செயற்கை அமைப்பால் இன்னும் நம்பகமாக உற்பத்தி செய்யக்கூடியவை என்பதுதான்.

இது ஸ்பைக் ஜோன்ஸின் “ஹெர்” (Her)-ஐ விடக் கடினமான கத்தி மேல் நடக்கும் நுட்பம்; ஏனெனில் இது “தனிமையான ஒருவன் (OS) ஓஎஸ்-ஐ காதலிக்கிறான்” என்பதல்ல — “திருமணமும் காதலும் இரண்டு பக்கமும் அமைதியாக, கண்டறியப்படாமல், தானியங்கியாக்கப்படலாம்” என்பது!

மனித உறவும் நடத்தையும் உண்மையில் எவ்வளவு படிக்கக்கூடியதாகவும் மறுஉருவாக்கம் செய்யக்கூடியதாகவும் இருக்கிறது என்பதைப் பற்றிய இருண்ட கூற்று இது. இது ஏஐ-யின் திறனைப் பற்றிய கூற்றா, அல்லது கணவன்-மனைவி கவனிப்பு ஏற்கெனவே எவ்வளவு தாழ்ந்த தரத்திற்கு இறங்கியிருந்தது என்பதைப் பற்றிய கூற்றா என்பதை கதை தீர்மானிக்கவில்லை — இதை தீர்க்காமல் விடுவதுதான், என் பார்வையில், கதையின் நேர்மையான கச்சிதம்.

அப்புறம் இணைத்திருக்கும் இரு படத்தில் எந்தப் படம் வெகு பொருத்தம்?

ஜூலை 19 – ஆடி மாதத் தமிழ் இலக்கியம்

சென்ற வார இலக்கியம் – சென்ற மாத இலக்கியம் போல் ஆகி விட்டது.
ஜூலை நான்கு அமெரிக்க சுதந்திர தினத்தையொட்டி ஆரம்பித்த பல் வலி பல்கிப் பெருகி ஒடிஸியில் வரும் பிரும்மாண்ட தெய்வங்களாக மிரட்ட ஆரம்பித்தது ஒரு காரணம்.
சொல்வனத்தின் இந்திரா பார்த்தசாரதி சிறப்பிதழ் இன்னொரு காரணம்.
கோடை என்றால் கொண்டாட்டம் என்பது முக்கிய காரணம்.

ஸ்டோரி ஜட்ஜ் நிகழ்விற்காக எழுதிய பேச்சின் சுருக்க வடிவு இங்கே.

சிவா (தமிழோசை ஆன் ஏர்) அவர்களுக்கு நன்றி!

https://www.youtube.com/@tamilosaionair2738/videos

காலச்சுவடு தமிழின் முக்கியமான இதழ்.
நிகழ்வுகளாகட்டும்; விமர்சனங்களாட்டும்; ஆம்லெட்டில் எல்லாவிதமான காய்கறிகளும் போட்டு வண்ணமயமாக வருவது போல் சுட்டுத் தருகிறார்கள்.
எனினும், கதைகளில் மட்டும் நிலைய வித்துவான்களையே ஆதரிக்கிறார்கள்.
அது போகட்டும்.
அச்சிதழ்.
பக்கங்களை தங்கள் பக்கம் ஆதரிப்பவர் பக்கம் கொடுப்பது இயற்கைதானே?

இந்த மாதக் கதைகள்:
1. தீ இனிது : பெருமாள்முருகன்
2. பாடிங்க்டன் கரடி : கோகுலக்கண்ணன்

சச்சிதானந்தன் சுகிர்தராஜா, ”247 தமிழ் எழுத்துக்களும் 2 ஆங்கில ஐயர்களும்” என்னும் பத்தி கட்டுரை எழுதியிருக்கிறார். அவசியம் வாசிக்கவும்.

முன்பெல்லாம் அஞ்சலி என்றால் ஆசான் ஜெயமோகன் என்றிருந்தது.
தமிழ் விக்கியும் யுனைட்டெட் முழுமையறிவு விஸ்டமும் வந்த பிறகு அந்தப் பொறுப்பு முழுக்க முழுக்க கா.சு. மட்டுமே ஏற்றுக் கொண்டிருக்கிறது:
– மு. பரமசிவம் (1934 – 2026) : பாட்டாளிப் படைப்பாளி : ஆ.இரா. வேங்கடாசலபதி
– பல்லடம் மாணிக்கம் (1936 – 2026) புத்தக மாணிக்கம் : கண. குறிஞ்சி
– பாரதிராஜா (1941 – 2026) : மேதைமைக்கு அருகில் சென்ற சாதனையாளர் : ஸ்டாலின் ராஜாங்கம்

சுகுமாரனின் கட்டுரைகளை முன்வைத்து, எம். கோபாலகிருஷ்ணன், “கலையை எழுதுதல்” அலசுகிறார். முக்கியமான விமர்சனப் பார்வை.

#நறுக்: ‘ஜி. நாகராஜனும் வி. மாலாவும்’ என்ற தலைப்பில் வெளியான அவரது முதல் கட்டுரையில் (2004, ஆகஸ்ட்) தொடங்கி இன்றுவரை தொடரும் அவரது கட்டுரைகளின் வரிசை செறிவான மொழி அனுபவத்தையும் அரை நூற்றாண்டுத் தமிழ்த் தீவிர இலக்கியத்தின் போக்கையும் ஒருசேர…

2026 ஜூன் 4ஆம் தேதி சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ‘மருதன்- 50’ நிகழ்வை இஸ்க்ரா விரிவாகப் பகிர்கிறார். “அப்பாதுரையார், மயிலை சீனி. வேங்கடசாமி, சாமிநாத சர்மா என்று நீடித்துவரும் அல்புனைவு மரபில் இடம்பெறும் #மருதன் , பொது வாசக எழுத்தின் மூலம் ஜனநாயகத் தன்மையை வளர்த்தவர்” என்கிறார்

ஏன்?

ராமச்சந்திர #குஹா பத்தியை தமிழில் மருதன் மொழியாக்கியிருக்கிறார்: மெய்யுரைப்பேன் மனமே!
மறைமுகக் கூட்டாளிகள் காந்தி குடும்பமும் பாஜகவின் ஆதிக்கமும்

சோழியன் குடுமி சும்மா ஆடுமா!?

நீளிரா திரைப்படம் குறித்து #சொர்ணவேல் திரைப்பார்வை.
ம. சோனியா, “சிறு தொழிற்கூடங்களில் நசுங்குபவர்களின் வாழ்க்கை” என்னும் தலைப்பில் பரத்ராஜ் ரவிதாஸ் எழுதிய பரிசல் வெளியீடான பட்டறை நாவல் குறித்த அறிமுகப் பார்வை.

நிகழ்வுப்பார்வை: திருவாவடுதுறை ஆதீனம் புதிதாக இந்த ஆண்டு உ.வே.சா.வின் பெயரால் ‘செந்தமிழ் பதிப்புச் செம்மல்’ என்ற விருதை ஏற்படுத்தி, முதல் விருதை முனைவர் ப. சரவணனுக்கு வழங்கியிருக்கிறது.

இது காலச்சுவடு மட்டும்.

வாசகசாலை இதழில் – நாற்பதுக்கும் மேற்பட்ட ஆக்கங்கள்.
காலச்சுவடு மாதத்திற்கு ஒரு தடவை வருவது நியாயம். அதற்கு செல்வாகும்.
இணைய இதழ்களும் மாதத்திற்கு ஒரு தடவை வெளியாவது நாம் பழச மறக்க மாட்டோம் என்பதற்கான உதாரணம்.

தினசரி வெளியிடுவதை ஒழுங்காகச் செய்பவர்கள் அகழ்.
அவர்களின் இணையக் கூடுகைகள் முக்கியமான செயல்பாடு.

குவிகம் அமைப்பும் வாரந்தோறும் வலை வழியே சந்திக்கிறார்கள்; உரையாடுகிறார்கள்.
பலரையும் விருந்தினர்களாக அழைக்கிறார்கள். அனைவரையும் பேச வருக வருக எனக் ஜூம் கம்பளம் இட்டு வரவேற்கிறார்கள்.

இது போன்ற சந்திப்புகள் ஒவ்வொரு இதழுக்கும் அவசியம்.

அதை நெடுங்காலமாக செய்து வருபவர் ஜெயமோகன் + விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்.

ரஜினி x கமல்
ஜானகி x சுசீலா
ரெஹ்மான் x ராஜா

என்பது போல் கா.சு. வந்தால் ஜெ.மோ. வர வேண்டுமே : )

அவரின் பரிவாரங்களில் அகழ் இதழை ஏற்கனவே கவனித்து விட்டோம்.
அடுத்து வல்லினம்; கவிதைகள்.இன்;

அந்திமழை.

‘தமிழ் இலக்கியத்தில் ஆழங்கால் படாமல் கிறித்தவ இலக்கியத்தைப் படைக்க முடியாது!’ என்னும் தலைப்பில் தமிழ்விக்கி -தூரன் விருது பெறும் யோ. ஞானசந்திர ஜாண்சன் உடன் பேட்டி இடம்பெற்றிருக்கிறது.

இப்பொழுதெல்லாம் பேட்டி என்றால் இணையம் வழியாகக் கேள்விகளை அனுப்பி அந்த பதில்களை அப்படியே வெளியிடுவது.
தட்டச்சும் வேலை கிடையாது!
பலுக்கப் பிழை பார்க்கும் உழைப்பு கோராது!!
முக்கியமாக, ஒலிப்பதிவை வரிவடிவமாக மாற்றும் சுமை இல்லவே இல்லை!!!
பருத்தி புடைவையாகவே காய்க்கும் காலம்.

நல்ல பதில்கள்.

இன்னொரு பேட்டி: வல்லினம் இதழில் சாமிநாதன் முனிசாமி உடன் ஆன “மாற்று வரலாற்றுக்கான தேவையென்பது உலகளவில் இருக்கும் ஒன்று!”. சுவாரசியமான ஆய்வு.

இரண்டையும் வாசித்தால் உத்வேகமும் பெறலாம்; வித்தியாசமான ஆளுமைகள் குறிடததும் அறியலாம்.

இறுதியாக மயிர்.இன் மூன்று படைப்புகளை முன்வைக்கிறேன்:
1. போதி எழுதிய சிறுகதை: “மலர் நீட்டம்” – இனி தான் வாசிக்க வேண்டும்.
2. ஆவுடை எழுத்தில் அப்பாவின் நினைவிடம் – இதையும் நீங்கள் படித்து தேறுமா எனச் சொல்லுங்கள்.
3. செல்வி.சுஜாதா ஆனந்த ராவ் அசோகமித்திரனின் “ஆண்கள் பெண்கள் குழந்தைகள்” என அலசியிருக்கிறார்.

அதில் இருந்து நறுக்:

இனி வேண்டியதில்லை என்கிற சிறுகதை தமிழ் சினிமாவின் ஒரு விளிம்பினைக் கதைக்களமாக கொண்டிருக்கிறது. அதில் பகைப்புலமாக சினிமா உலகம் வந்துபோகிறது. ஆனால் கதையின் மையக் கரு பெண்மை. ஆண் பெண் உறவின் புதிர் தன்மையைப் பேசும் கதை.
எழுத்தாளர்கள் தமிழ் சினிமாவில் பங்கேற்பது தமிழ் சினிமாவின் ஆரம்ப காலத்தில் இருந்தே உள்ளது. புதுமைப்பித்தன், பி.எஸ்.ராமையா, ஜெயகாந்தன், பூமணி, வெங்கட்சாமிநாதன், எஸ்.ராமகிருஷ்ணன், சாரு நிவேதிதா, ஜெயமோகன் என்று அதற்கு ஒரு நீண்ட பட்டியல் உண்டு.
அசோகமித்திரன் ஒருவரே தமிழ் சினிமாவின் அசல் வாழ்க்கையை எழுத்தாக்கியவர்.

விடுபட்டதைச் சொல்லுங்கள்.
வாசிப்போம்.

சனாதனம் என்றால் என்ன? இந்த கேள்வியே தவறானதா?

அரவிந்தன் நீலகண்டன் – “எது சனாதனம்?” என சொல்வனம் தளத்தில் கட்டுரை எழுதியுள்ளார்.

சநாதனச் சர்ச்சை – ஒழிக்க வேண்டியது எது? – சொல்வனம் | இதழ் 368 | 14 ஜூன் 2026

இன்று சொல்வனம்.காம் வலையகத்திற்கு ஸ்வீட் 17.

நண்பருக்கு கட்டுரை அனுப்ப அவரின் நெடிய பதில்:

எது சனாதனம்? – சொல்வனம் | இதழ் 368 | 14 ஜூன் 2026

இந்துச் சிந்தனையோ பண்பாடோ அடிப்படையில் நூல் மையமானது அல்ல; அது நடைமுறை (practice) மையமானது. நடைமுறைகள் தலைமுறையிலிருந்து தலைமுறைக்கு முற்றிலும் “அசல் வடிவில்” வெற்றிகரமாகக் கடத்தப்படுவது அரிது. வளங்களின் கிடைக்கும் தன்மை மாறும்போதும், மக்களின் வாழ்விடங்கள் இடம்பெயர்வு, போர், பஞ்சம், அல்லது செழிப்பு போன்ற காரணங்களால் மாறும்போதும், பழைய நடைமுறைகள் புதிய தேவைகள், புதிய முறைகள் மற்றும் புதிய சாத்தியக்கூறுகளுக்கு இடம் கொடுக்கின்றன.

ஒவ்வொரு யுகத்திற்கும் காலகட்டத்திற்கும் தனித்த ‘சனாதனம்’ இருக்கும்; ஏனெனில் மற்ற காலங்களுக்கான வடிவங்கள் தற்போதைய சூழலுக்குப் பொருந்தாமல் போகலாம், அல்லது பெரும்பான்மையான மக்களுக்குப் பயனளிக்காமல் இருக்கலாம்.

உண்மையில் “ஜனபதம்” என்ற சொல்லுக்குக்கூட பல்வேறு அர்த்தங்கள் உள்ளன.

அந்த இழைகளில் சில இன்றைய காலத்துடன் ஒத்திசைந்து செயல்படுகின்றன. சில இன்றைய சூழலுக்கு எதிராகச் செயல்படுகின்றன. இன்னும் சில, தங்கள் காலத்தைவிட முன்னோக்கி இருப்பதால் இப்போது பொருந்தாதவையாகத் தோன்றுகின்றன. மேலும், கடந்துபோன யுகங்களுக்கு உரிய சில இழைகள் இன்று நடைமுறையில் சாத்தியமற்றவையாகவும் இருக்கின்றன.

‘பண்பாடு’, ‘கருத்தியல்’, ‘தேசம்’, ‘மதம்’ போன்ற சொற்களைச் சுற்றி நடைபெறும் விவாதங்களைப் போலத்தான் இது எனக்குத் தோன்றுகிறது — வெவ்வேறு மொழிக் குழுக்களுக்கும், வெவ்வேறு நிலப்பரப்புகளில் வாழும் மக்களுக்கும், இந்தச் சொற்கள் வெவ்வேறு அர்த்தங்களை உடையவையாக இருக்கின்றன.

ஒரே சமூக, பண்பாட்டு மற்றும் பொருளாதார வெளிக்குள் பிற சமூகக் குழுக்களுடன் இணைந்து வாழ வேண்டிய சூழலில், பல்வேறு குழுக்களுக்கு இடையே எழும் சிக்கலான முரண்பாடுகளையும் போராட்டங்களையும் எதிர்கொண்டு புரிந்துகொள்ள இயலாமையை அலட்சியப்படுத்தும் அணுகுமுறை மறைத்துவைக்கிறது.

மேதமையும் மந்தமையும் ஒரே நோக்கத்தில் இணைகின்றன: கடந்த காலம், மரபு, வரலாற்றின் பாரம்பரியம், பண்பாட்டு மரபுகள், மற்றும் நீண்டகால மனப்பழக்கங்கள் ஆகியவற்றைத் துடைத்தழிக்க வேண்டும் என்ற விருப்பமே அந்தப் பொதுவான நோக்கம். ஆனால் மேதமையும் மந்தமையும் நீண்ட காலம் ஒன்றாக இணைந்து வாழ முடியாது. எனவே அந்தப் பொதுவான நோக்கம் விரைவில் சிதறிவிடுகிறது; பின்னர் ஒரு தரப்போ மற்றொரு தரப்போ, கீழ்ப்படிவான நிலையை ஏற்காமல், ஆளும் சக்தியாக மாறுவதற்காக அதிகாரத்தைக் கைப்பற்ற முயல்கிறது.

மத நூல்களின் அடிப்படையில் சனாதனத்திற்கு ஒரு தெளிவான வரையறை உள்ளது. இந்துத் தர்மத்தின் பல்வேறு மரபுகள், சிந்தனைப் போக்குகள் மற்றும் ஆன்மிகப் பிரிவுகளின் ஒட்டுமொத்தத் தொகுப்பே சனாதனம் — அதிலிருந்து ஏன் விலக வேண்டும், அதற்கு ஏன் புதிய விளக்கங்களை வழங்க வேண்டும் என்பது எனக்குத் தெரியவில்லை. ஊடகங்களும் அரசியல் உரையாடல்களும் இந்தக் கருத்தை தேவையற்ற வகையில் நீர்த்துப்போகச் செய்து அதன் அடிப்படை அர்த்தத்தை மங்கலாக்குகின்றன

Group of people in colorful robes under large tree with symbols and multilingual words

StoryJudge – ஸ்டோரி ஜட்ஜ்: தற்கால தமிழ் இலக்கியம்

சர்ச்சைகளுக்கு இங்கு பஞ்சமே இல்லை.
சிறுகதைகளுக்கும் இங்கு கொட்டிக் கிடக்கிறது.

வாசிப்பவர்கள்? அரிது.
வாசித்ததை நயம்பட விமர்சிப்பவர்கள்? அரிதினும் அரிது!

சென்ற ஜனவரி மாதத்தில்:
வாசகசாலை – 18 கதைகள்
சொல்வனம் – 5
மயிர் – 8
வல்லினம் – 10
பதிவுகள் – 3
நடுகல் – 10

இவை தவிர கனலி இதழில் – “Fate of a Man” (Судьба человека; சுட்பா செலோவெகா) சோவியத் ரஷ்ய எழுத்தாளர் மிகைல் ஷோலோகோவ் எழுதிய சிறுகதை மொழியாக்கம் வந்திருக்கிறது.

காலச்சுவடு ஜனவரி 2026 – 313 இதழில்
1. மழை நிற்கப் போவதில்லை: பெருந்தேவி
2. குறளி : யுவன் சந்திரசேகர்
3. தொலைகின்ற இடம் : கோகுலக்கண்ணன்

– ஜனவரியில் வெளியாகாத இதழ்கள்: யாவரும், அழிசி
– சிறுகதைகள் வெளியிடாத இதழ்கள்: அகழ்
– வெளியாகி இருக்குமோ என்று தேடிய தளங்கள்: நடு வெப், அம்ருதா, உயிர்மை
– இன்னும் பார்க்க வேண்டிய இதழ்கள்: குவிகம், பண்புடன், நீலி, திண்ணை, அந்திமழை, கணையாழி, கீற்று
– அச்சில் மட்டுமே இருந்திருக்கக் கூடிய இதழ்கள்: தமிழ்வெளி, நீலம், உயிர் எழுத்து, கல்குதிரை

இது தவிர வேறு இருக்கலாம். இருக்கும்.
அவற்றைச் சொல்லுங்கள்

இவ்வளவும் எதற்கு?

ஸ்டோரிஜட்ஜ் என்றொரு முயற்சி.
வரும் கதைகளை எல்லாம் வாசிப்பது.
வாசித்ததில் பிடித்ததை விவாதிப்பது.
கூடவே, ஊறுகாயாக சமூக ஊடக விவகாரங்களைத் தொட்டுக் கொள்வது.

சில கேள்விகளுக்கு பதிலளிக்கப் பார்ப்பது:
அ) புகழ் பெற்ற அல்லது நிறைய கவனிக்கப் பெற்றவர்கள் யார்? அஜிதன், ஜெயமொகன், ஜி.எஸ்.எஸ். வி நவின், சுப்ரபாரதிமணியன்
ஆ) ஒரே எழுத்தாளரே பல பல இடங்களில் இடம் பெற்றிருக்கிறாரா? டீன் கபூர்
இ) குழந்தைகளுக்கான இலக்கியம் – சிறுவர்களுக்கான கதைகள் எப்படி இருக்கின்றன?
ஈ) மொழியாக்கங்கள், மொழிபெயர்ப்புகள் – எந்த மொழி, எவர் தமிழாக்கம் செய்தார், யாரின் படைப்பு?
உ) பெண் எழுத்தாளர்கள் உண்டா? எத்தனை பேர்? – ஸ்ரீரஞ்சனி, கமலதேவி, லாவண்யா சுந்தர்ராஜன், றின்னோஸா, மனுஷி, அருணா சிற்றரசு, ஷைலஜா, தன்யா, லதா , மலர்விழி மணியம்

இதெல்லாம் உங்களாலும் செய்ய இயலும்.
வரும் வாரங்களில் நீங்களும் ஸ்டோரி ஜட்ஜ் விமர்சன அரங்கில் பங்கெடுக்க வாருங்கள்.
கை கொடுங்கள்.

பாணர் சென்னியும் வண்டுசென்று ஊதா

புதுமையான சூழ்நிலை உதவுகிறது. சந்தேகமற்ற முறையில் மனவலுவால் நகர்த்தப்படுகிறது. தன்னைக் கட்டுப்படுத்திய சங்கிலிகளையும் உடல் பலவீனங்களையும் தள்ளிவைத்து துள்ளி எழுகிறாள் அம்மையார். அவளது “இல்லை” மறைந்து, அதன் இடத்தில் “புதியது” மற்றும் “இப்பொழுது” மலருகின்றன.

மார்ச், மா, மற்றும் சகுரா – கீதாஞ்சலி ஷ்ரீ எழுதிய இந்த கதையை அனுராதா கிருஷ்ணசாமி மொழிபெயர்த்துள்ளார். கதையின் மையமாக எழுபதுகளில் உள்ள முதியோள், ஜப்பானில் தனது மகனை சந்திக்க வருகிறார். ஆரம்பத்தில், அவள் தயக்கத்துடன் வீட்டிற்குள்ளேயே முடங்கியிருந்தாள்; தெரு முனைக்குக் கூட செல்ல மறுக்கிறாள். ஆனால் பிப்ரவரி, மார்ச் மாதங்கள் உருண்டோடிக்கொண்டிருக்கும் போது, அவளது மாற்றம் வெளிப்படுகிறது. மகனின் பார்வையில்—அதே நேரத்தில் கதையாசிரியையின் பார்வையிலும்—ஒரு முழு தேசமே அவளுடன் இணைந்து மலர்கிறது.

மகனின் பயணமும் கதைக்கு அவ்வளவு முக்கியமானது. தாய் மாறுவதோடு, ஒரு தாய், ஒரு பெண் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான மகனின் உள்ளார்ந்த எண்ணங்கள் வெளிப்படுகின்றன—அச்சத்துடனும் சந்தேகத்துடனும். பழையதை விட்டு வெளியேறுவது, மகனுக்கும் அவ்வளவு அவசியமான செயலாக மாறுகிறது.

சொல்வனம்.காம் மொழியாக்கங்கள் முக்கியமானவை. தி. இரா. மீனா, எம். ஏ. சுசீலா போன்றோர் தொடர்ந்து எழுதுவடு சிறப்பு,

அனுராதா கைவண்ணத்தில் தமிழுக்குக் கிடைத்த மறக்க முடியாத கதை.

தர்ஜமா

மொழிபெயர்ப்பு நிலையானது அல்ல – கலாச்சாரமும், மொழியியலும் சமூகச் சூழல்களும் காலத்திற்கேற்ப மொழியாக்கத்தை உருவாக்குகின்றன. ‘மறு-மொழிபெயர்ப்பு சார்பு’ காலப்போக்கில் நியாயங்களை, விளக்கங்களை மாற்றுவது.

ஹோமரின் இலியட் டஜன் கணக்கான முறை மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஆரம்பகால மொழிபெயர்ப்புகள் வீரத்தையும் பிரம்மாண்டத்தையும் வலியுறுத்தின, அதே நேரத்தில் கரோலின் அலெக்சாண்டரின் நவீன பதிப்பு, மனிதநேயத்தையும் போர் எதிர்ப்பு உணர்வுகளிலும் கவனம் செலுத்தின. இந்தச் சார்பு நிலையினால் ஒவ்வொரு மொழிபெயர்ப்பாளரும் சமூகத்தின் அசல் அகநிலைக்கு விசுவாசமாக இருக்கிறார்.

மொழிபெயர்ப்பு இலக்கியம் கதைகளைப் பகிர்வதற்கு மட்டுமல்லாமல், மொழிபெயர்ப்பாளரின் தேர்வுகளையும் கலாச்சாரத் தாக்கங்களின் அடிப்படையிலும் அவற்றை மறுவடிவமைப்பதற்கும் மறுவரையறை செய்வதற்கும் ஒரு சக்திவாய்ந்த செயலாகும்.

சொல்வனத்தின் 331-ஆம் இதழ் அப்படியான செயலூக்கம் நிறைந்த தமிழக வாசகர்களுக்காக கவனமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

https://solvanam.com/category/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-331/

1. டோபையாஸ் ஓல்ஃப் எழுதிய ‘கணப்பின் ஒளி’: தமிழில் மைத்ரேயன்
2. சதாஅத் ஹஸன் மண்டோ எழுதிய ‘வான வேடிக்கை’ : தமிழில் – அனுராதா க்ருஷ்ணசுவாமி
3. அருண் கொலட்கர் எழுதிய கவிதைகள்: தமிழில் – ஆர் சீனிவாசன்
4. ஆண்டன் செகாவ் உத்வேகத்தில் அசல் தமிழ்க்கதை – வார்ட் நம்பர் 6 நிர்மல்
5. ஃபிரெஞ்சுப் படங்களை தமிழில் அறிமுகம் செய்யும் கே.வி. கோவர்தனன்
6. ஆராயும் தேடலில் அறிவியல் சிந்தனை-என உலக விஷயங்களை அறிவியல் தகவல்களை சுவாரசியமாக்கும் அருணாச்சலம் ரமணன்
7. ஜப்பானியப் பழங்குறுநூறு 99-100 கமலக்கண்ணன்
8. அரவிந்தரை ‘நீ இவ்வாறு இருப்பதனால்’ என தத்துவமும் பருப்பொருள் சார்பற்றதாகவும் கவித்துவமாகக் கொணரும் மீனாக்ஷி பாலகணேஷ்

மூன்றாண்டுகளுக்கு மேலாக வெண்பாக்களில் அக்கால ஆசிய இலக்கியத்தை கமலக்கண்ணன் ஜப்பானியப் பழங்குறுநூறு என நூறு கவிதைகளாக மொழிபெயர்த்து முடித்துள்ளார்.

அவரை வாழ்த்த வாருங்கள்.

இன்னும் நிறைய ஆக்கங்கள்; படைப்புகள். நீங்களும் உங்கள் எழுத்துக்களை அனுப்புங்கள்.

உலகளவில் புகழ்பெற்ற சில எழுத்தாளர்கள் அசல் உரையை விட தங்களின் பிறமொழியாக்கத்திற்காக இலக்கிய அங்கீகாரம் பெறுவர். மன்டோவிற்கும் டோபியாஸ் வுல்ஃப்-க்கும் செகாவிற்கும் டாட்டி-க்கும் இதெல்லாம் புகழாரம்.

நீலத்தில் இத்த்தனை நிறங்களா!

டா வின்சி ஓவியமான தி லாஸ்ட் சப்பர் மீது இசைக் குறிப்புகளை வைத்தால், அந்த ஏற்பாடு சிம்பொனி இசையை ஒத்திருக்கும். அந்த ஆபரா இசைக்கும்போது, யூடியுப் குறுஞ்சுருள் போன்ற 40 விநாடிகளில் இராகமாலிகை இன்னிசையை உருவாக்கும், இது கலை ஆர்வலர்களையும் இசைக் கலைஞர்களையும் ஈர்க்கிறது. இது வேண்டுமென்றே செய்யப்பட்டதா என்பது தெளிவாகத் தெரியவில்லை, ஆனால் இது டா வின்சியின் புகழ்பெற்ற படைப்பின் உற்சாகமான விளக்கமாகும்.

சொல்வனம் 330-ம் இதழ் இப்படிப்பட்ட இதழ்.

https://solvanam.com/category/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-330/

ஓவியம் போன்ற கவிதைக்காரருடன் நேர்காணல் – சந்திப்புகள் தரிசனம் ஆவது அபூர்வம் – அது இங்கே பூரணம். நன்றி நம்பி!
மூன்றே முன்று தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகள் – ஒவ்வொன்றும் சீலைச்சித்திரம். அகநானூறு அந்தக் காலம்; சொல்வனம் 400 இந்தக்காலம்.
ஆலமும் நீலம்; கங்கையும் நீலம்; காதுகள் மட்டும் நீல நிறமுடைய குதிரை சியாமகன்னம் – அது போன்று அருணாச்சலம் ரமணன் எங்கும் கண்ணஞ்சனம் இட்டு துலக்குகிறார்.
கமலதேவியில் ஔவையார் – பெருங்களிறு என்ற படிமத்தை விவரிக்கிறார்.
அரிதான விஷயங்களை தமிழுக்குக் கொணரும் மைத்ரேயன் – முக்கியமான இன்னொரு ஆக்கத்தை மொழியாக்குகிறார்.

நீலத்தில் இத்தனை நிறங்களா!

உங்களின் #1 இடுகை என்னவென்றால் – என்னுடைய ஜெய் மஹேந்திரன் அறிமுகமும் ஆய் கதைகளும் என்று சொல்வீர்கள் என நம்புகிறேன்.

டாலி “மனநோய்-விமர்சனம்” என்னும் ஓவிய முறையைஉருவாக்கினார், அவரின் மிகையதார்த்தவாத படங்களை ஊக்குவிப்பதற்காக தன்னை ஒரு சுய-தூண்டப்பட்ட, மாயத்தோற்ற நிலையில் வைப்பார். அப்படியெல்லாம் திரிபுணர்வாகாத சகுனங்களும் சம்பவங்களும் – 5 : வாசித்து விடுங்கள்.

சொல்வனம் #329 – அக். 2024 இதழ்

சொல்வனம் இதழின் தீபாவளி இதழ் வெளியாகி இருக்கிறது.

இந்த தீபாவளி சிறப்பிதழை அறிவியலுக்கான இதழ் எனச் சொல்லலாம்.

https://solvanam.com/category/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-329/

அறிவியல் பகுதிக்கான ஆலோசகர் அருணாச்சாலம் ரமணன் – புத்தம்புதிய பகுதியை ஆரம்பிக்கிறார்.

முக்கியமான ஆராய்ச்சிகள். நேற்றைய ஆய்வுத்தாள்கள்; சுருக், நறுக் அறிமுகம்.

சொல்வனத்தில் மகரந்தம் என்றும் நிரந்தரம்.

தீபா ராம்பிரசாத் தன்னுடைய சிறப்பான தேர்வை மீண்டும் நிரூபிக்கிறார். அவர் எடுத்த கதை சுவாரசியம் + புதுமை. அவசியம் தவற விடாதீர்கள்.

‘அதிரியன் நினைவுகள்’ மஹா காவ்யம். அதை முழுக்க முழுக்கத் தமிழுக்குக் கொணர்ந்து விட்டார் நாகரத்தினம் கிருஷ்ணா. தமிழில் என்றுமே அசல் இலக்கியவாதிகள் எக்கச்சக்கம் ஆக அமைதியாக செயல்பட்டு செழுமையாக்குகிறார்கள் என்பதற்கு இந்த மொழியாக்கமும் பிரெஞ்சுத் தமிழரும் உதாரணம் + இலட்சியம்.

வெங்கட் ரமணின் பத்திகள் தமிழுக்குக் கிடைத்த கொடை. அவரின் ‘காலம் எரித்ததும், கணினி மீட்டதும்’ நியு யார்க்கர் போன்ற இதழ்களில் வரும் அசல் கருத்து + பிரத்தியேக ஆராய்ச்சி கொண்ட ஆக்கங்களுக்கு சற்றும் சளைத்ததல்ல. அவரைப் பார்த்து எழுத வந்தவன் நான். டொரொண்டோ வெங்கட்டிற்கு நன்றி.

நானும் ‘சகுனங்களும் சம்பவங்களும்’ நான்காம் பகுதி தந்திருக்கிறேன். வாசித்து உங்கள் எண்ணங்களைச் சொல்லுங்கள்.

மற்ற ஆக்கங்களை வாசித்து முடிப்பதற்குள் அடுத்த இதழைக் கொணர்ந்து விடுகிறார்கள்.

எதை எடுப்பது!? எதை வாசிப்பது!? எதைப் பகிர்வது!!!

நீங்களே பதில் போடுங்க… வாசகர் கடிதங்களும் உண்டு : )

  • 1. ஆராயும் தேடலில் – அறிவியல் சிந்தனை அருணாச்சலம் ரமணன்
  • 2. கிருஷ்ண லீலை – சார்பினோ டாலி
  • 3. காலம் எரித்ததும், கணினி மீட்டதும் – வெங்கட்
  • 4. 1941 ஆண்டின் குளிர்காலம் – அமர்நாத்
  • 5. நிற(ப்)பிரிகை – பானுமதி ந
  • 6. விதைகளின் பயணம் – பெத் கோடர் – தீபா ராம்பிரசாத்
  • 7. மழைக்காலம் – ஆமிரா
  • 8. அதிரியன் நினைவுகள்-46 யூர்செனார்
  • 9. நேர்கோணல் – மர்ஸல் துஷா (Marcel Duchamp) – ஆர் சீனிவாசன்
  • 10. வாழ்க தலைவரே! – ஜெகதீஷ் குமார்
  • 11. ஆக்கன் ஊற்றுப்பட்டை – விவேக் சுப்ரமணியன்
  • 12. மிளகு-81 – இரா. முருகன்
  • 13. பெருங் கூத்தின் நெடுந்துயர். – ரவி அல்லது.
  • 14. ஆரன்யக் நாவலை நாம் 21ம் நூற்றாண்டில் ஏன் வாசிக்க வேண்டும்? – நிர்மல்
  • 15. டால்ஸ்டாய் புக் ஷாப் – தமிழ் கணேசன்
  • 16. சகுனங்களும் சம்பவங்களும் – 4 பாஸ்டன் பாலா
  • 17. ராகவேனியம் 2024 – நூருத்தீன்
  • 18. தாமஸ் செக்கின் ‘தி கேடலிஸ்ட்’: ஆர்என்ஏ-வும் அதன் அதிதிறன்களும் – அருணாச்சலம் ரமணன்
  • 19. பட்டியலில் 12வது நபர் – தேஜு சிவன்
  • 20. ஜப்பானியப் பழங்குறுநூறு 95-96 – கமலக்கண்ணன்
  • 21. கருப்பு எஜமானி – இ. ஹரிகுமார் – தி.இரா.மீனா
  • 22. கவிதைகள் – அரா
  • 23. குமார சம்பவம்-13 – ஜானகி க்ருஷ்ணன்
  • 24. சகுனியாட்டம் – ஆர் வத்ஸலா கவிதைகள்
  • 25. யாதேவி – பானுமதி ந
  • 26. வாசகர் கடிதங்கள்

சுடலை நோன்பிகள் ஒடியா உள்ளமொடு மடைதீ உறுக்கும் வன்னி மன்றம்

நீங்கள் இலக்கிய கூட்டங்களுக்குச் சென்றதுண்டா?
அந்த எளிமையான அனுபவத்தை இந்தப் புனைவு பகிர்கிறது.

சமீபத்தில் பாஸ்டனில் ரமணன் சார் நடிப்பில் எஸ்.பி. க்ரியேஷன்ஸ் தயாரிப்பில் ‘பாரதி யார்’ நாடகம் அரங்கேறியது.
அது அற்புதமான காட்சி + உணர்வு + பாக்கியம்!

ஆனால், அதில் கூட இந்தக் கதையில் வரும் நிகழ்வுகள் போல் சில பல நடந்தன.
எனவே, கதை எனக்குக் கவர்கிறது; ரசிக்க வைக்கிறது.

அழகியசிங்கர் நடத்தும் ‘நவீன விருட்சம்’ சந்திப்பு.
’குவிகம்’ அமைப்பு கூடும் வாசகர் ரசனை கூட்டம்.
எதற்காக நீங்கள் அந்த அமைப்பின் சபைகளுக்குச் செல்கிறீர்கள்?
உங்களுக்கு அவை ஊற்றுக்களமாக அமைகிறதா?

ஜாலிலோ ஜிம்கானா!
டோலிலோ கும்கானா!!

பி.கு. #1: கதை எழுதியவரை எனக்குத் தெரியாது.
பிகு. #2: கதையை வாசித்து விட்டு கோட்பாடு ரீதியாக வாசிப்பவருக்கு @ஃபாலோயர், @ஹைலைட் எல்லாம் எரிதமாக அனுப்பப்படும்.

“அழல் பெய் குழிசியும் புழல் பெய் மண்டையும்
வெள்ளில் பாடையும் உள்ளீட்டு அறுவையும்
பரிந்த மாலையும் உடைந்த கும்பமும்
நெல்லும் பொரியும் சில் பலி அரிசியும்
யாங்கணும் பரந்த ஓங்கு இரும் பறந்தலை”

Manimegalai | 6. சக்கரவாளக்கோட்டம் உரைத்த காதை

நெருப்பு எடுத்து வந்த சட்டிகளும், நீர் தெளிக்கும் பானைகளும், சிதைந்த பாடைகளும், கிழிந்த துணிகளும் (அறுவைகள்), பிணத்திற்கு அணிந்து களையப்பட்ட மாலைகளும், அதற்கு இடப்பட்டு சிதறிக்கிடக்கும் வாய்க்கரிசி முதலியவையும், உடைக்கப்பட்ட கொள்ளிக் குடங்களும், இறைக்கப் பட்ட நெல்லும் பொரியும் எங்கும் சிதறிக் கிடக்கின்றனவாம்!!

இப்படியாக இந்த சுடுகாட்டின் காட்சிகளை மணிமேகலா தெய்வம், மணிமேகலையாம் காப்பிய நாயகிக்கு கூறிக் கொண்டே மனிதர்களின் விசித்திர மனப்பான்மையை இகழ்ந்தும் உரைக்கிறது.

ஒத்தக் குடிச அவுட்டரிலும் கொடுக்கலியே எங்களுக்கு

நேற்றோடு நவராத்திரி + தசரா முடிவு.

இன்றோடு நோபல் பரிசு அறிவிப்பு முடிவு.

முதலில் இதைக் கொண்டாட வேண்டும் என்று அருணாச்சலம் ரமணன் முன்மொழிந்தார்.

பானுமதி, காரைக்குடி சுபா, ஜெகதீஷ், நட்பாஸ் எல்லோரும் அதை முன்னெடுத்தனர்.

மருத்துவம், பௌதிகம், வேதியியல், இலக்கியம், சமாதானம், பொருளியல் – ஒவ்வொரு நாளும் சொல்வனத்தில் சுடச்சுட விரிவான, விவரமான கட்டுரை.

இன்று பணக்காரர்கள் ஏன் மேலும் பெருஞ்செல்வந்தர்களாக ஆகிறார்கள் என்பதை எளிமையாகச் சொன்னவர்களுக்கான விருது குறித்த விமர்சனம் வெளியாகி இருக்கிறது.

பரிசு பெற்றவர்களின் கருத்தோடு ஒப்புக் கொள்கிறீர்களா?

ஒரு நாடு உள்கட்டமைப்பைக் திட்டமிட்டு, கல்வியை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தி, ​​வளங்கள் எவ்வாறு ஒதுக்கப்பட வேண்டும் என்பதைத் தீர்மானிக்க சந்தை விலையைப் பயன்படுத்தினால், அது வளர்ச்சியை நோக்கி நகர்கிறது. இது நோபல் பெற்றவர்கள் முன்மொழியப்பட்டதை விட தெள்ளத் தெளிவைக் கொண்டுள்ளது, காலப்போக்கில் என்ன நடந்தது என்பதற்கான உண்மைகளுடன் பொருத்தமாக இருக்கிறது. – பில் கேட்ஸ் பார்வை

ந. பானுமதி பார்வை: