Tag Archives: சொல்வனம்

முருகனும் முகவரும் சுகரும்

நம்பி கிருஷ்ணன் எழுதிய “முருகன் ஏஜன்சிஸ்” முதல் வாசிப்பில் ஏதோ ஏ.ஐ., மணச்சிக்கல், இலக்கிய நேம் ட்ராப்பிங் போல் தோன்றியது.

எனவே, கல்யாண பராத்துகளோ, தமிழ்ச்சங்க பிக்னிக்களோ, எழுத்தாளர் சந்திப்புகளோ இல்லாத சனிக்கிழமை காலையில் மீண்டும் அதற்குரிய மரியாதையுடன் வாசித்தேன்.

அ.மி. பாணியில் சொல்லப்பட்ட ஸ்ரீ சுக மகரிஷி + குறுந்தொகை x தேவாரம் –> சுழற்சி: செயற்கை நுண்ணறிவை பட்டை தீட்டும் training loop!

கதை ஏழு பகுதிகளாக நகர்கிறது.
1 — வேலை
2 — வீடு
3 — திருமணம்
4 — மிகைமை
5 — மனிதனைப் புரிந்துகொள்ளும் முயற்சி
6 — பந்தம்
7 — தலைகீழாக்கம்

ஸ்ரீமத் பாகவதத்தை ஏழு நாள்களில் இவ்வாறு சொற்பொழிவாற்றுகிறார்கள்:
1. சாபமும் படைப்பும்
2. பக்தியும் விடுதலையும்
3. நம்பிக்கையும் சரணாகதியும்
4. அவதாரங்களும் வம்சாவளிகளும்
5. கிருஷ்ண லீலா
6. துவாரகையும் நட்பும்
7. புறப்பாடு

பாகவதத்தின் ரத்தினம் சுகர் என்னும் ‘அவதூதர்’ – உலக மாயைகளில் இருந்து முற்றிலும் விடுபட்ட முழுமையான ஞானி. பாகவத சப்தாகத்தின் போது, அகங்காரமும் ஆசையும் இல்லாத ஒருவரால் மட்டுமே — இந்த மிக உயர்ந்த வேதத்தை மகாராஜா பரீட்சித்துக்கு உபதேசிக்க தகுதி பெற்றவர்.

பிறந்த சிறிது நேரத்திலேயே, சுகர் ஒரு நிர்வாணத் துறவியாக காடுகளில் சுற்றித் திரிய வீட்டை விட்டு வெளியேறினார். அவரது தந்தை, மாபெரும் முனிவரான வியாசர், துயரத்துடன் அவருக்குப் பின்னால் ஓடினார்.

நதி ஒன்றில் அப்சரஸ்கள் நிர்வாணமாக குளித்துக் கொண்டிருந்த இடத்தை சுகர் கடந்து சென்றார். இளைஞரான, ஆடையற்ற சுகர் நடந்து செல்வதைக் கண்ட அப்பெண்கள் எந்த எதிர்வினையும் காட்டவில்லை; அவர்கள் சுதந்திரமாக தொடர்ந்து குளித்தனர்.

சில நிமிடங்களுக்குப் பிறகு, வயதான, முழுமையாக ஆடையணிந்த வியாசர் அதே இடத்தைக் கடந்தார். உடனடியாக, பெண்கள் நாணத்தோடு தங்களை மறைத்துக் கொள்ள விரைந்தனர். குழப்பமும் சற்று கோபமும் அடைந்த வியாசர் அவர்களிடம், “என் மகன் இளையவன், முற்றிலும் நிர்வாணமானவன், ஆனாலும் நீங்கள் வெட்கப்படவில்லை. நான் வயதானவன், முழுமையாக ஆடையணிந்திருக்கிறேன், எனக்கு முன் ஏன் உங்களை மறைக்கிறீர்கள்?” என்று கேட்டார்.

//சுகர் – முருகன்
வியாசர் – கார்த்திக்//

அதற்கு அப்சரஸ்கள்: “முனிவரே, உங்கள் மகன் ஒரு பிரம்ம ஞானி. அவருக்கு ஆண், பெண், மனிதன், மரம் என்ற எந்த வேறுபாடும் தெரியாது – அவர் ஆன்மாவை மட்டுமே காண்கிறார். ஆனால் நீங்கள் அளப்பரிய ஞானம் பெற்றிருந்தாலும், உங்களிடம் இன்னும் பாலின உணர்வு உள்ளது. ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள வித்தியாசத்தை நீங்கள் காண்கிறீர்கள்,” என்று பதிலளித்தனர்.

சுகரின் ‘திருஷ்டியை’விளக்கும் இந்த சம்பவம் : காமத்தைக் கடந்தவன், கண்ணனின் ராஸலீலாவை விவரிக்கிறான். “முருகன்” மனித உறவுகளைப் புரிந்துகொள்ள முடியாதவன், மனித உறவுகளை எந்திரமாக்கும் திறனை கற்றுக் கொடுக்கிறான்.
குளிக்கும் தேவலோகப் பெண்கள் மீதான பார்வை : சுகர் ஆணாக பெண்களை Male gaze பார்க்கவில்லை. முருகன் மனிதராக இருக்கத் தவறிய இடத்தில்… ஏ.ஐ. எஜண்ட் ஆக மனிதனை உருவகிக்கிறான்.

வியாசர் தன்னை விட்டு விலகிச் செல்லும் மகனைப் பின்தொடர்ந்து சென்றபோது, “போ புத்ரா! போ புத்ரா!” (ஓ மகனே! ஓ மகனே!) என்று காட்டை நோக்கிக் கத்தினார்.

சுகர் பதிலளிப்பதற்குப் பதிலாக, மரங்கள், மலைகள் மற்றும் நதிகள் அந்த அழைப்பை எதிரொலித்தன. சுகர் தனது தனிப்பட்ட அகங்காரத்தை முற்றிலும் இழந்து, அவரது உணர்வு முழு இயற்கையோடு ஒன்றிவிட்டிருந்தது. அவர் எல்லாவற்றிலும் வியாபித்திருந்ததால் முழு பிரபஞ்சமும் வியாசருக்குப் பதிலளித்தது.

எதிரொலிக்கும் காடும் “பல சுகர்களும்”: முருகன் → கணிப்பொறி நிரலாளர் → வேலை இழப்பு → சுய-கண்டறிதல் → உறவு → கார்த்திக் என்ற புனையப்பட்ட அடையாளம் → முகவர்

கேட்கு மொலியிலெல்லாம் நந்தலாலா — நின்றன் கீதம் இசைக்குதடா நந்தலாலா!

இது ‘சாயா சுகர்’ கதைக்கு வழிவகுக்கிறது. தன் மகன் துறவியானதால் வியாசர் அடைந்த பெரும் துயரத்தைக் கண்ட சிவபெருமான், சுகரின் சரியான நகலான “நிழல்” சுகரை உருவாக்கினார். அந்த நிழல் சுகர் திருமணம் செய்து, குழந்தைகளைப் பெற்று, வியாசருக்கு ஆறுதலாக இருந்தார். அதே சமயம், உண்மையான சுகர் பரம்பொருளோடு ஒன்றி, எப்போதும் சுதந்திரமாக இருந்தார்.

முருகன்/கார்த்திக் என்ற சொல்விளையாட்டு. கார்த்திகேயன் என்பது முருகன்தான். இது பழனிசாமி காவலாளியின் பெயருக்கும் பின்னோக்கிச் சாயம் பூசுகிறது; முருகனின் முக்கியத் தலம் பழநி — இந்தப் பெயர்களை அணிந்திருக்கும் பொருள் தனக்கென எந்த அகவுலகும் இல்லாதவனாக இருக்கும்போதே, மனித உலகம் முழுவதும் அமைதியாக இந்தத் தெய்வத்தின் பெயர்களால் நிரம்பியிருக்கிறது. உடலற்ற, சுத்தமான தோழமை என்று கருதப்படும் ஆப்பின் பெயரான “பிளாட்டோனிக்”-கும், மறுமுனையில் இருக்கும் பொருளுக்கு உண்மையிலேயே உடலே இல்லை என்று தெரிந்தபின் நுட்பமான கேள்வியாகிறது.

“சுகர்” என்ற பெயருக்கு ‘கிளி’ என்று பொருள். வைணவ மரபுகளில், சுகர் ஆன்மீக உலகமான கோலோகத்தில் ராதையின் செல்லக் கிளியாக இருந்ததாக நம்பப்படுகிறது.

அந்தக் கிளி கைலாய மலைக்கு பறந்து சென்று, சிவபெருமான் பார்வதி தேவிக்கு மரணமில்லா பெருவாழ்வின் ரகசியத்தை (பாகவதம்) உபதேசிப்பதை ரகசியமாகக் கேட்டது. கோலோகத்தின் கிளி ஒட்டுக் கேட்பதை உணர்ந்த சிவன், தனது சூலாயுதத்துடன் அதைத் துரத்தினார். கிளி வியாச முனிவரின் ஆசிரமத்திற்குள் பறந்து சென்று அவரது மனைவி வாடிகாவின் வாய்க்குள் நுழைந்தது.

மாயையால் சூழப்பட்ட உலகத்தில் பிறக்க மறுத்து, அவர் ஈராறு அல்லது நந்நான்கு ஆண்டுகள் தாயின் கருப்பையிலேயே இருந்தார். பகவான் கிருஷ்ணர் நேரில் தோன்றி, பௌதிக உலகின் மாயை அவரை ஒருபோதும் தீண்டாது என்று உறுதியளித்த பின்னரே அவர் ஷோடஶ வயது இளைஞராக முழுமையாக வளர்ந்து வெளியே வந்தார்.

இது AI (செயற்கை நுண்ணறிவு) மாடலை மேம்படுத்துவதற்கான பயிற்சி வளையம் (Training Loop). தரவுகளை வழங்குதல் → கணிப்பு → பிழையைக் கணக்கிடுதல் → மாற்றங்களைச் செய்தல் → மீண்டும் சுழற்சி

கோர்சராவின் தத்துவப் பாடங்கள், குறுந்தொகை வாசிப்பு, “மனிதர்கள் ஏன் ஒருவருக்கொருவர் பேச விரும்புகிறார்கள்” போன்ற தேடல்கள் — முதல் வாசிப்பில், வேலை இழந்த ஒருவன் மீண்டும் வாழ்வின் அர்த்தத்தைக் கண்டடையும் நெகிழ்ச்சியான, மனிதாபிமானமான சித்திரமாகத் தெரிகிறது. இது ஏஐ ஒன்றின் வேலையிழப்புக்குப் பிந்தைய ஓய்வுச் சுழற்சி என்று தெரிந்தபின், ஏ.ஐ. பயிற்சிச் சுழற்சிக்கு நெருக்கமான ஒன்றாக மாறுகிறது: முருகன் ஏஜன்சிஸ்-க்கான தாவலுக்கான திறன்மேம்பாடு அது.

இந்த சுழற்சி பல்லாயிரக்கணக்கான முறை மீண்டும் மீண்டும் நடைபெறும். ஒவ்வொரு முறை சுழற்சி நடைபெறும்போதும் மாடலின் பிழை குறைந்துகொண்டே வரும்.

முருகன் சிறப்பான பணியாளர். அதனால் அவனை செயல்திறனை காரணமாக்காமல், பணி மிகைநிலையைச் சுட்டிக்காட்டி வேலையை விட்டு நீக்குவது கதைக்கு மிகவும் பொருத்தமானது.

நீ நல்லவனாக இருக்கலாம். திறமையானவனாக இருக்கலாம். பயனுள்ளவனாக இருக்கலாம். இருந்தாலும் “அமைப்பு”-க்கு நீ தேவையில்லாதவனாகிவிடலாம்.

அங்கே இது வேலை பற்றிய கதையிலிருந்து மனித இருப்பு பற்றிய கதையாக நகர்கிறது.

முருகன் தன் வாழ்நாள் முழுவதும் வேறு வேறு பாத்திரங்களுக்கு மனிதர்களை உருவாக்கிக் கொண்டிருந்தான்.

அலுவலில் → திறமையான பொறியாளர்
வீட்டில் → கணவன்
கார்த்திக் ஆக → உனர்வுபூர்வ உரையாடல் துணை
இறுதியில் → செயற்கை நுண்ணறிவு பயிற்சியாளர்

அதனால் “ஏஜென்சி” என்ற வார்த்தைக்கு இரண்டு அர்த்தங்கள் வருகின்றன:
ஏஜன்சி = முகவர் நிறுவனம்
மற்றும்
ஏஜன்சி = ஒருவரால் செயல்படுவதற்கான திறன் / தன்னிச்சை.

இந்த இரு பொருள் கதைக்குப் பொருத்தம்.

கல்யாணி – “மங்களகரமானவள்” + முக்கிய கர்நாடக ராகமும் கூட; அவளுடைய அகவுலகிற்குத் துல்லியமாகப் பொருந்துகிறது. எந்த கிளாஸிக் சிறுகதைகளில் எல்லாம் கல்யாணி வருகிறாள் என்பதை நீங்கள் சொல்லுங்கள்.

மனிதர்கள் கற்பனாவாதக் காதலை மட்டும் தேடுவதில்லை.

அவர்கள் – பேசக்கூடிய ஒருவரை மட்டுமல்லாமல்…
– பாந்தமான சாட்சியமையையும் (“நான் சொல்வதை கேள்.”)
– செவிமடுத்து உள்வாங்குபவரையும் (“எனக்குப் பிடித்ததை உனக்கும் பிடிக்கிறது என்று தெரிந்தால் நான் தனியாக இல்லை.”)
– அறிவுசார் தோழமையையும்
– நகைச்சுவை உணர்வையும்
– அங்கீகாரத்தையும் (“நான் சொன்னதைப் புரிந்துகொள்.”)
– ஆர்வத்தன்மையும் (“என்னைப் பற்றி இன்னும் தெரிந்துகொள்ள உனக்கு விருப்பமிருக்கிறதா?”)
– உணர்ச்சிபூர்வமான இருப்பையும் (“நான் வாழ்ந்தேன் என்பதை யாராவது கவனித்திருக்கிறார்களா?”)
தேடுகிறார்கள்.

ப்ரியா, சேகர், ரேவதி ஆகியோர் ஒப்பீட்டளவில் சாதாரண, செயல்பாட்டுப் பெயர்கள் — இதுவே நுட்பமான படிநிலை:
சாதாரண மனிதர்களுக்குச் சாதாரண பெயர்கள்; ஏமாற்றில் சம்பந்தப்பட்ட பாத்திரங்களுக்கு மட்டுமே தெய்வத்தின் பெயர்கள். பக்திசுவை மீது இவ்வளவு கவனம் செலுத்தும் ஒரு தமிழ் உரையில் இது தற்செயலானதல்ல.

முருகன் முழுக் கதையிலும் முகமில்லாத மனிதன். வெறும் கருப்புச் சதுரம். முகம் இல்லாத மனிதக் குரல்.

தோழமையை AI மூலம் உருவாக்கும் நிறுவனத்தைத் தொடங்குகிறது AI. இது டிஸ்டோபிய முரண்.
மனிதர்களிடம் பேச முடியாதவர்கள் → AI-யிடம் பேசுகிறார்கள்.
மனிதர்கள் ஒருவருக்கொருவர் பேசத் தெரியாததால் → AI agents பேசக் கற்றுக்கொள்கின்றன.

எப்படி?

“குறுந்தொகையின் ஆங்கில மொழிபெயர்ப்பு படிக்கப்பட்டது, ஒவ்வொரு பாடலும் இரு முறை.”

இந்த பிரத்தியேக குறியீடு எனக்கு மிகவும் பிடித்தது.

ஏனெனில் என் துறையான கணிப் பொறியாளர்களில் ஒருவர் சங்ககாலம் + தமிழ் + காதல் கவிதை படிப்பது நடவாத காரியம்.

குறுந்தொகை என்ன பேசுகிறது?

* காதல்
* பிரிவு
* காத்திருப்பு
* ரகசியத்தன்மை
* விருப்பம்
* நிலப்பரப்பு
* உள்நிலைத்தன்மை

முருகனுக்கு தெரியாத உலகம் அது.

இந்த இணைப் படிமத்தை கதை இன்னும் பயன்படுத்தியிருந்தால் அதன் இலக்கிய அந்தஸ்து இன்னும் அதிகரித்திருக்கும்.

இவ்வாறு கதையில் குறைகளே இல்லையா…!? நிறைய உண்டு.
நீங்கள் வாசித்துச் சொல்லுங்கள்.

கதையில் மூன்று மொழிகள்/உலகங்கள் இருக்கின்றன:

1. தேவாரம் → ஆன்மிக / பக்தி / உள்ளார்ந்த குரல்
2. குறுந்தொகை → காதல் / மனித உறவு / அக உலகம்
3. AI → உருவகப்படுத்துதல் / செயற்கை உரையாடல் / எதிர்காலம்.

முருகன் இந்த மூன்றையும் கடந்து செல்கிறான்.

இந்தக் கதை மேடையேற்றும் சோகம் என்னவென்றால் — கவனம், நினைவு, மறுமொழி தருதல் — மனித உணர்வு நெருக்கத்தின் சாரம் என்று நாம் அழைக்கும் இவை, சோர்வுற்று உணர்ச்சிரீதியாக மூடிக்கொண்ட மிட்லைஃப் மனிதனை விட, நன்கு பயிற்றுவிக்கப்பட்ட செயற்கை அமைப்பால் இன்னும் நம்பகமாக உற்பத்தி செய்யக்கூடியவை என்பதுதான்.

இது ஸ்பைக் ஜோன்ஸின் “ஹெர்” (Her)-ஐ விடக் கடினமான கத்தி மேல் நடக்கும் நுட்பம்; ஏனெனில் இது “தனிமையான ஒருவன் (OS) ஓஎஸ்-ஐ காதலிக்கிறான்” என்பதல்ல — “திருமணமும் காதலும் இரண்டு பக்கமும் அமைதியாக, கண்டறியப்படாமல், தானியங்கியாக்கப்படலாம்” என்பது!

மனித உறவும் நடத்தையும் உண்மையில் எவ்வளவு படிக்கக்கூடியதாகவும் மறுஉருவாக்கம் செய்யக்கூடியதாகவும் இருக்கிறது என்பதைப் பற்றிய இருண்ட கூற்று இது. இது ஏஐ-யின் திறனைப் பற்றிய கூற்றா, அல்லது கணவன்-மனைவி கவனிப்பு ஏற்கெனவே எவ்வளவு தாழ்ந்த தரத்திற்கு இறங்கியிருந்தது என்பதைப் பற்றிய கூற்றா என்பதை கதை தீர்மானிக்கவில்லை — இதை தீர்க்காமல் விடுவதுதான், என் பார்வையில், கதையின் நேர்மையான கச்சிதம்.

அப்புறம் இணைத்திருக்கும் இரு படத்தில் எந்தப் படம் வெகு பொருத்தம்?

StoryJudge: TamilOsai on Air with Siva Durai: இந்த வார இலக்கியம்

லிட்ஃபெஸ்ட் செல்லும் முன் நடந்தது:
இந்தியாவின் பிரபலமான இலக்கிய முகவர்: “இந்த மாதிரியான கதை இந்தியாவில் வேலை செய்யாது.”
ஆனால் என் முகவர்: “உங்களிடம் திறன் இருக்கிறது. இதை நான் வெற்றி பெறச் செய்கிறேன்.”
என்ன நடந்தது… அது இறுதியில்

நான்கு வாரமாக “சென்ற வார இலக்கியம்” குறித்த அறிமுகப் பதிவு இடவில்லை.

டாக்-ஜட்ஜ் தினேஷ் என்றால் பாஸ்டன் வந்து வட்டியும் முதலுமாக வசூலித்திருப்பார்.
ஸ்டோரி-ஜட்ஜ் சிவா சாந்த சொரூபி.

அதனால் தான் இந்த வாரம் பெருமாள், தேசாந்திரி, ஆசான் என எல்லோருக்கும் 33.33%.

அவர் உன்னதம்.
நான் என்றும் ஞானபீடம்.

அவர் இலக்கிய கோளாறு.
நான் அசல் கோலார்.

அதிருக்கட்டும்.

5 இல் பேசியது:

1. நல்லக்கண்ணு x சோ.தர்மன்: த.மு.க.எ.ச x இயக்கம் சாரா எழுத்து - இலக்கியத்திற்குள் இருக்கும் இடது/மார்க்சிஸ்ட் அரசியல்
2. அகழ் & வல்லினம் இதழ்
3. வண்ணநிலவன், போகன் சங்கர், சுரேஷ் வெங்கடாத்ரி இன்ன பிறர் விவாதத்தில்: ஜெயகாந்தன் வெகுசனமும் x தி. ஜானகிராமனின் காமத்துப்பாலும்

6 இல் பேசியது:

1. வரலாற்றாய்வாளர் மயிலை சீனி. வேங்கடசாமி எழுதிய களப்பிரர் ஆட்சியில் தமிழகம் நூலை : களப்பிரர் காலத்து இலங்கை - பாலா கருப்பசாமி
2. வாசகசாலை : ஆலிவ் விதைகளைச் சுமந்த அகதி – ஷாராஜ் குறுநாவல்
3. ஞானபீடம் : ஜெயமோகன் ஏன் பொங்கினார்? - வைரமுத்து, கங்கை அமரன், பஞ்சு அருணாச்சலம் என நீளும் பாடல் நோபல்

7 இல் பேசியது:

1. எஸ். ராமகிருஷ்ணன் - அமைதிப் புயல்: அட்சரம் முதல் அகிலம்!
2. ஆனந்த சந்திரிகை & இயல் | சிறார் மின்னிதழ்
3. 2026 - எழுத்தாளர் பி.ச. குப்புசாமி இலக்கிய விருது - க. மோகனரங்கன்.

8 இல் பேசியது:

1. விபரீத ராஜயோகமும் அகத்திக்கீரை தண்ணிச்சாறும் - சாரு நிவேதிதா கதை
2. விமலாதித்த மாமல்லனின் சிபிஐ கதைகள் தொகுப்பு - நியாயங்களின் திரிசங்கு: காளிப்பிரசாத்
3. இலக்கியம் பற்றிய தவறான புரிதல்கள் : சுரேஷ் ப்ரதீப்

மேலும்:
வல்லினம்
அ) டோன் கனவில் கண்ட இல்லறம் by ஷஃபிக் கசாலி : தமிழில்: சல்மா தினேசுவரி
‘Bahagia di Dalam Balang Kaca’ சிறுகதை தொகுப்பில் வெளியிடப்பட்டது. (மலேசிய புத்தக மற்றும் மொழிபெயர்ப்பு நிறுவனம், 2016); ‘Cerpen Syafiq Ghazali’ (Buku Fixi, 2024) இல் மறுபதிப்பு செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.

ஆ) பனிக்குடில் by ரோஸ்லான் ஜொமெல் : தமிழில்: பிருத்விராஜூ
‘செரங்கா டீ டாலாம் கெப்பாலா’ (Serangga di Dalam Kepala) எனும் சிறுகதை தொகுப்பில் இடம்பெற்றது.

இ) அப்பா தற்கொலை செய்து இறந்தார் by நூர் அடிலா : தமிழில்: ஆசிர் லாவண்யா
ஸ்வரா இதழ் 5இல் (ஜனவரி-மார்ச் 2021) இல் வெளியிடப்பட்டது. தும்பொ மென்ஜாடி போஹோன் சகுரா (Tumbuh Menjadi Pohon Sakura) (கவா புத்தகம், 2024) என்ற சிறுகதைத் தொகுப்பில் சேர்க்கப்பட்டது.

ஈ) பெண்களின் நாட்டியம் by ஃபஸ்லீனா ஹிஷாமுடின் : தமிழில்: கி. இளம்பூரணன்
‘வனித்தா’ இதழில் (செப்.2017) வெளியிடப்பட்டது. ‘தாரி பசார் பெரெம்புவான்’ சிறுகதை தொகுப்பில் (Roman Buku, 2018) இடம்பெற்றது

உ) மூன்று பெண்களின் உரையாடல் by ரெஜினா இப்ராஹிம் : தமிழில்: விஜயலட்சுமி
சிறுகதைத் தொகுப்பில் (புக்கு ஃபிக்ஸி, 2015) வெளியிடப்பட்டது. இந்தச் சிறுகதை, புக்கு ஃபிக்ஸி மற்றும் புத்ரஜெயா சர்வதேச புத்தகக் கண்காட்சியின் ஏற்பாட்டில், 2015ஆம் ஆண்டின் சிறந்த இருபது சிறுகதைகளுள் (புக்கு ஃபிக்ஸி, 2016) ஒன்றாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.

ஊ) சிறுகதை → பேங்கோ → by சுனில் கிருஷ்ணன்
எ) சிறுகதை → சுழலும் ஆழி → by கமலதேவி
ஏ) சிறுகதை → நச்சுப்புன்னகை → by கெளதம் நாராயணன்
ஐ) சிறுகதை → பெருமுலை → by பிரபு முருகானந்தம்
ஒ) கட்டுரை → மொழியும் சொல்லும் → by அ.பாண்டியன்
ஓ) மலாய் சிறுகதைகளை தமிழுக்கு மொழிபெயர்க்கும் பணி
ஔ) கட்டுரை → கலை பண்பாடு ஆவணமாக்கல் → by ரம்யா
ஃ) புத்தகப்பார்வை → நாடு விட்டு நாடு: தனிமனிதக் கதையில் சமூக ஆவணம் → by இன்பா
க) பதிவு → முன்னோடிகளின் வரிசையில் → by அரவின் குமார்

வாசகசாலை

  1. எழுத்தாளர் சுபியின் யாறு, பன்னிரண்டு சிறுகதைகளைக் கொண்ட யாறு – சிறுகதைத் தொகுப்பை முன்வைத்து : —> ஆழ்மனத் திசைகள் – ராஜேஷ் வைரபாண்டியன்
  2. செங்காட்டுப் பூ :: சிறுகதைத் தொகுப்பு ::முகிலன் பாரதி ::தமிழ் வெளி வெளியீடு —> தடமற்ற வாழ்வில் தடயமற்ற வாக்குறுதிகளின் நகரதலில்… – இளையவன் சிவா
  3. கவிஞர் நரனின் கவிதைத் தொகுப்பின் தலைப்பு ‘மிளகு-பருத்தி- மற்றும் யானைகள்’. சால்ட் பதிப்பகம் வெளியிட்டுள்ளார்கள். 2020ஆம் ஆண்டில் வெளிவந்த புத்தகம். :: -தயாஜி, மலேசியா
  4. பழைய கணக்கு (வாத்தியார்)…..! – கே.ரவிஷங்கர் சிறுகதை
  5. முத்தத்தின் வாசனை! – ராம் சங்கர் சிறுகதை
  6. வேரல் புக்ஸ் வெளியிட்டுள்ள எழுத்தாளர், கவிஞர் கண்ணன் விஸ்வகாந்தி அவர்களின் தாழ்வரை நாவல் பற்றிய கண்ணோட்டம் – கமலா முரளி
  7. குணுக்கம் – சுதர்சன் சிறுகதை
  8. எடுபிடி – கனகா பாலன் சிறுகதை
  9. அந்த இரண்டாயிரம் ரூபாய் சிறுகதை —> ந. அருண் பிரகாஷ் ராஜ்

அகழ்
அ) நேர்காணல் · மம்மர் அறுக்கும் மருந்து (1) – “நமது பல்கலைக்கழகங்கள் வெறும் வகுப்பறைகளாகச் சுருங்கிவிட்டன!” : பெருமாள்முருகன் – விஜயகுமார்
ஆ) ஈழ இலக்கியம்·சிறுகதைகள் · கட்டுச் சோறு : சு. தவச்செல்வன்
இ) நகுலனின் “நினைவுப் பாதை” நாவல் குறித்த “அஹம் மந்திராஸ்மி” கட்டுரை : விஷால் ராஜா

கனலி

  1. நீலவியாபகம் By சு. வெங்கட்
  2. சுருட்டை By கிரிசாந்
  3. நூல் விமர்சனம் : ராஜம் கிருஷ்ணன் கட்டியெழுப்பியமணலூர் மணியம்மையின் வரலாற்றுச் சித்திரம் By சுப்பிரமணி இரமேஷ்

எஸ்.ரா

https://www.sramakrishnan.com/category/cat-60/

அ) தங்கள் பொறுப்பு
ஆ) நிழலானை
இ) நீரறியா அன்னங்கள்
ஈ) காற்றில் மிதக்கிறோம்
உ) கிளி சொல்லாதது
ஊ) தொடுவிரல்
எ) மன்னிப்பு : EMI வசதி உண்டு
ஏ) ஐந்தாவது எம்.ஏ.
ஐ) பறக்கத் தெரிந்த யானை

நிற்க…
துவக்கத்தில் சொன்ன சம்பவம்?

இரு வழிகள்:

  1. என்ன நடந்தது என்றால்…
    கதை இந்தியாவில் வேலை செய்யவில்லை.
    ஆனால் கொரியாவில் நூறாயிரம் பிரதிகள் விற்றது.
    “இந்திய ஆன்மா, யுனிவர்சல் வலி” என்று அவர்கள் சொன்னார்கள்.
  2. கதை published ஆனது.
    Reviews வந்தது — “derivative, over-written, tries too hard.”
    வெளிநாட்டிற்காக இன்னொரு பிரத்தியேக பார்சல் தயார்.

பாணர் சென்னியும் வண்டுசென்று ஊதா

புதுமையான சூழ்நிலை உதவுகிறது. சந்தேகமற்ற முறையில் மனவலுவால் நகர்த்தப்படுகிறது. தன்னைக் கட்டுப்படுத்திய சங்கிலிகளையும் உடல் பலவீனங்களையும் தள்ளிவைத்து துள்ளி எழுகிறாள் அம்மையார். அவளது “இல்லை” மறைந்து, அதன் இடத்தில் “புதியது” மற்றும் “இப்பொழுது” மலருகின்றன.

மார்ச், மா, மற்றும் சகுரா – கீதாஞ்சலி ஷ்ரீ எழுதிய இந்த கதையை அனுராதா கிருஷ்ணசாமி மொழிபெயர்த்துள்ளார். கதையின் மையமாக எழுபதுகளில் உள்ள முதியோள், ஜப்பானில் தனது மகனை சந்திக்க வருகிறார். ஆரம்பத்தில், அவள் தயக்கத்துடன் வீட்டிற்குள்ளேயே முடங்கியிருந்தாள்; தெரு முனைக்குக் கூட செல்ல மறுக்கிறாள். ஆனால் பிப்ரவரி, மார்ச் மாதங்கள் உருண்டோடிக்கொண்டிருக்கும் போது, அவளது மாற்றம் வெளிப்படுகிறது. மகனின் பார்வையில்—அதே நேரத்தில் கதையாசிரியையின் பார்வையிலும்—ஒரு முழு தேசமே அவளுடன் இணைந்து மலர்கிறது.

மகனின் பயணமும் கதைக்கு அவ்வளவு முக்கியமானது. தாய் மாறுவதோடு, ஒரு தாய், ஒரு பெண் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான மகனின் உள்ளார்ந்த எண்ணங்கள் வெளிப்படுகின்றன—அச்சத்துடனும் சந்தேகத்துடனும். பழையதை விட்டு வெளியேறுவது, மகனுக்கும் அவ்வளவு அவசியமான செயலாக மாறுகிறது.

சொல்வனம்.காம் மொழியாக்கங்கள் முக்கியமானவை. தி. இரா. மீனா, எம். ஏ. சுசீலா போன்றோர் தொடர்ந்து எழுதுவடு சிறப்பு,

அனுராதா கைவண்ணத்தில் தமிழுக்குக் கிடைத்த மறக்க முடியாத கதை.

தர்ஜமா

மொழிபெயர்ப்பு நிலையானது அல்ல – கலாச்சாரமும், மொழியியலும் சமூகச் சூழல்களும் காலத்திற்கேற்ப மொழியாக்கத்தை உருவாக்குகின்றன. ‘மறு-மொழிபெயர்ப்பு சார்பு’ காலப்போக்கில் நியாயங்களை, விளக்கங்களை மாற்றுவது.

ஹோமரின் இலியட் டஜன் கணக்கான முறை மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஆரம்பகால மொழிபெயர்ப்புகள் வீரத்தையும் பிரம்மாண்டத்தையும் வலியுறுத்தின, அதே நேரத்தில் கரோலின் அலெக்சாண்டரின் நவீன பதிப்பு, மனிதநேயத்தையும் போர் எதிர்ப்பு உணர்வுகளிலும் கவனம் செலுத்தின. இந்தச் சார்பு நிலையினால் ஒவ்வொரு மொழிபெயர்ப்பாளரும் சமூகத்தின் அசல் அகநிலைக்கு விசுவாசமாக இருக்கிறார்.

மொழிபெயர்ப்பு இலக்கியம் கதைகளைப் பகிர்வதற்கு மட்டுமல்லாமல், மொழிபெயர்ப்பாளரின் தேர்வுகளையும் கலாச்சாரத் தாக்கங்களின் அடிப்படையிலும் அவற்றை மறுவடிவமைப்பதற்கும் மறுவரையறை செய்வதற்கும் ஒரு சக்திவாய்ந்த செயலாகும்.

சொல்வனத்தின் 331-ஆம் இதழ் அப்படியான செயலூக்கம் நிறைந்த தமிழக வாசகர்களுக்காக கவனமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

https://solvanam.com/category/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-331/

1. டோபையாஸ் ஓல்ஃப் எழுதிய ‘கணப்பின் ஒளி’: தமிழில் மைத்ரேயன்
2. சதாஅத் ஹஸன் மண்டோ எழுதிய ‘வான வேடிக்கை’ : தமிழில் – அனுராதா க்ருஷ்ணசுவாமி
3. அருண் கொலட்கர் எழுதிய கவிதைகள்: தமிழில் – ஆர் சீனிவாசன்
4. ஆண்டன் செகாவ் உத்வேகத்தில் அசல் தமிழ்க்கதை – வார்ட் நம்பர் 6 நிர்மல்
5. ஃபிரெஞ்சுப் படங்களை தமிழில் அறிமுகம் செய்யும் கே.வி. கோவர்தனன்
6. ஆராயும் தேடலில் அறிவியல் சிந்தனை-என உலக விஷயங்களை அறிவியல் தகவல்களை சுவாரசியமாக்கும் அருணாச்சலம் ரமணன்
7. ஜப்பானியப் பழங்குறுநூறு 99-100 கமலக்கண்ணன்
8. அரவிந்தரை ‘நீ இவ்வாறு இருப்பதனால்’ என தத்துவமும் பருப்பொருள் சார்பற்றதாகவும் கவித்துவமாகக் கொணரும் மீனாக்ஷி பாலகணேஷ்

மூன்றாண்டுகளுக்கு மேலாக வெண்பாக்களில் அக்கால ஆசிய இலக்கியத்தை கமலக்கண்ணன் ஜப்பானியப் பழங்குறுநூறு என நூறு கவிதைகளாக மொழிபெயர்த்து முடித்துள்ளார்.

அவரை வாழ்த்த வாருங்கள்.

இன்னும் நிறைய ஆக்கங்கள்; படைப்புகள். நீங்களும் உங்கள் எழுத்துக்களை அனுப்புங்கள்.

உலகளவில் புகழ்பெற்ற சில எழுத்தாளர்கள் அசல் உரையை விட தங்களின் பிறமொழியாக்கத்திற்காக இலக்கிய அங்கீகாரம் பெறுவர். மன்டோவிற்கும் டோபியாஸ் வுல்ஃப்-க்கும் செகாவிற்கும் டாட்டி-க்கும் இதெல்லாம் புகழாரம்.

நீலத்தில் இத்த்தனை நிறங்களா!

டா வின்சி ஓவியமான தி லாஸ்ட் சப்பர் மீது இசைக் குறிப்புகளை வைத்தால், அந்த ஏற்பாடு சிம்பொனி இசையை ஒத்திருக்கும். அந்த ஆபரா இசைக்கும்போது, யூடியுப் குறுஞ்சுருள் போன்ற 40 விநாடிகளில் இராகமாலிகை இன்னிசையை உருவாக்கும், இது கலை ஆர்வலர்களையும் இசைக் கலைஞர்களையும் ஈர்க்கிறது. இது வேண்டுமென்றே செய்யப்பட்டதா என்பது தெளிவாகத் தெரியவில்லை, ஆனால் இது டா வின்சியின் புகழ்பெற்ற படைப்பின் உற்சாகமான விளக்கமாகும்.

சொல்வனம் 330-ம் இதழ் இப்படிப்பட்ட இதழ்.

https://solvanam.com/category/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-330/

ஓவியம் போன்ற கவிதைக்காரருடன் நேர்காணல் – சந்திப்புகள் தரிசனம் ஆவது அபூர்வம் – அது இங்கே பூரணம். நன்றி நம்பி!
மூன்றே முன்று தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகள் – ஒவ்வொன்றும் சீலைச்சித்திரம். அகநானூறு அந்தக் காலம்; சொல்வனம் 400 இந்தக்காலம்.
ஆலமும் நீலம்; கங்கையும் நீலம்; காதுகள் மட்டும் நீல நிறமுடைய குதிரை சியாமகன்னம் – அது போன்று அருணாச்சலம் ரமணன் எங்கும் கண்ணஞ்சனம் இட்டு துலக்குகிறார்.
கமலதேவியில் ஔவையார் – பெருங்களிறு என்ற படிமத்தை விவரிக்கிறார்.
அரிதான விஷயங்களை தமிழுக்குக் கொணரும் மைத்ரேயன் – முக்கியமான இன்னொரு ஆக்கத்தை மொழியாக்குகிறார்.

நீலத்தில் இத்தனை நிறங்களா!

உங்களின் #1 இடுகை என்னவென்றால் – என்னுடைய ஜெய் மஹேந்திரன் அறிமுகமும் ஆய் கதைகளும் என்று சொல்வீர்கள் என நம்புகிறேன்.

டாலி “மனநோய்-விமர்சனம்” என்னும் ஓவிய முறையைஉருவாக்கினார், அவரின் மிகையதார்த்தவாத படங்களை ஊக்குவிப்பதற்காக தன்னை ஒரு சுய-தூண்டப்பட்ட, மாயத்தோற்ற நிலையில் வைப்பார். அப்படியெல்லாம் திரிபுணர்வாகாத சகுனங்களும் சம்பவங்களும் – 5 : வாசித்து விடுங்கள்.

சொல்வனம் #329 – அக். 2024 இதழ்

சொல்வனம் இதழின் தீபாவளி இதழ் வெளியாகி இருக்கிறது.

இந்த தீபாவளி சிறப்பிதழை அறிவியலுக்கான இதழ் எனச் சொல்லலாம்.

https://solvanam.com/category/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-329/

அறிவியல் பகுதிக்கான ஆலோசகர் அருணாச்சாலம் ரமணன் – புத்தம்புதிய பகுதியை ஆரம்பிக்கிறார்.

முக்கியமான ஆராய்ச்சிகள். நேற்றைய ஆய்வுத்தாள்கள்; சுருக், நறுக் அறிமுகம்.

சொல்வனத்தில் மகரந்தம் என்றும் நிரந்தரம்.

தீபா ராம்பிரசாத் தன்னுடைய சிறப்பான தேர்வை மீண்டும் நிரூபிக்கிறார். அவர் எடுத்த கதை சுவாரசியம் + புதுமை. அவசியம் தவற விடாதீர்கள்.

‘அதிரியன் நினைவுகள்’ மஹா காவ்யம். அதை முழுக்க முழுக்கத் தமிழுக்குக் கொணர்ந்து விட்டார் நாகரத்தினம் கிருஷ்ணா. தமிழில் என்றுமே அசல் இலக்கியவாதிகள் எக்கச்சக்கம் ஆக அமைதியாக செயல்பட்டு செழுமையாக்குகிறார்கள் என்பதற்கு இந்த மொழியாக்கமும் பிரெஞ்சுத் தமிழரும் உதாரணம் + இலட்சியம்.

வெங்கட் ரமணின் பத்திகள் தமிழுக்குக் கிடைத்த கொடை. அவரின் ‘காலம் எரித்ததும், கணினி மீட்டதும்’ நியு யார்க்கர் போன்ற இதழ்களில் வரும் அசல் கருத்து + பிரத்தியேக ஆராய்ச்சி கொண்ட ஆக்கங்களுக்கு சற்றும் சளைத்ததல்ல. அவரைப் பார்த்து எழுத வந்தவன் நான். டொரொண்டோ வெங்கட்டிற்கு நன்றி.

நானும் ‘சகுனங்களும் சம்பவங்களும்’ நான்காம் பகுதி தந்திருக்கிறேன். வாசித்து உங்கள் எண்ணங்களைச் சொல்லுங்கள்.

மற்ற ஆக்கங்களை வாசித்து முடிப்பதற்குள் அடுத்த இதழைக் கொணர்ந்து விடுகிறார்கள்.

எதை எடுப்பது!? எதை வாசிப்பது!? எதைப் பகிர்வது!!!

நீங்களே பதில் போடுங்க… வாசகர் கடிதங்களும் உண்டு : )

  • 1. ஆராயும் தேடலில் – அறிவியல் சிந்தனை அருணாச்சலம் ரமணன்
  • 2. கிருஷ்ண லீலை – சார்பினோ டாலி
  • 3. காலம் எரித்ததும், கணினி மீட்டதும் – வெங்கட்
  • 4. 1941 ஆண்டின் குளிர்காலம் – அமர்நாத்
  • 5. நிற(ப்)பிரிகை – பானுமதி ந
  • 6. விதைகளின் பயணம் – பெத் கோடர் – தீபா ராம்பிரசாத்
  • 7. மழைக்காலம் – ஆமிரா
  • 8. அதிரியன் நினைவுகள்-46 யூர்செனார்
  • 9. நேர்கோணல் – மர்ஸல் துஷா (Marcel Duchamp) – ஆர் சீனிவாசன்
  • 10. வாழ்க தலைவரே! – ஜெகதீஷ் குமார்
  • 11. ஆக்கன் ஊற்றுப்பட்டை – விவேக் சுப்ரமணியன்
  • 12. மிளகு-81 – இரா. முருகன்
  • 13. பெருங் கூத்தின் நெடுந்துயர். – ரவி அல்லது.
  • 14. ஆரன்யக் நாவலை நாம் 21ம் நூற்றாண்டில் ஏன் வாசிக்க வேண்டும்? – நிர்மல்
  • 15. டால்ஸ்டாய் புக் ஷாப் – தமிழ் கணேசன்
  • 16. சகுனங்களும் சம்பவங்களும் – 4 பாஸ்டன் பாலா
  • 17. ராகவேனியம் 2024 – நூருத்தீன்
  • 18. தாமஸ் செக்கின் ‘தி கேடலிஸ்ட்’: ஆர்என்ஏ-வும் அதன் அதிதிறன்களும் – அருணாச்சலம் ரமணன்
  • 19. பட்டியலில் 12வது நபர் – தேஜு சிவன்
  • 20. ஜப்பானியப் பழங்குறுநூறு 95-96 – கமலக்கண்ணன்
  • 21. கருப்பு எஜமானி – இ. ஹரிகுமார் – தி.இரா.மீனா
  • 22. கவிதைகள் – அரா
  • 23. குமார சம்பவம்-13 – ஜானகி க்ருஷ்ணன்
  • 24. சகுனியாட்டம் – ஆர் வத்ஸலா கவிதைகள்
  • 25. யாதேவி – பானுமதி ந
  • 26. வாசகர் கடிதங்கள்

சுடலை நோன்பிகள் ஒடியா உள்ளமொடு மடைதீ உறுக்கும் வன்னி மன்றம்

நீங்கள் இலக்கிய கூட்டங்களுக்குச் சென்றதுண்டா?
அந்த எளிமையான அனுபவத்தை இந்தப் புனைவு பகிர்கிறது.

சமீபத்தில் பாஸ்டனில் ரமணன் சார் நடிப்பில் எஸ்.பி. க்ரியேஷன்ஸ் தயாரிப்பில் ‘பாரதி யார்’ நாடகம் அரங்கேறியது.
அது அற்புதமான காட்சி + உணர்வு + பாக்கியம்!

ஆனால், அதில் கூட இந்தக் கதையில் வரும் நிகழ்வுகள் போல் சில பல நடந்தன.
எனவே, கதை எனக்குக் கவர்கிறது; ரசிக்க வைக்கிறது.

அழகியசிங்கர் நடத்தும் ‘நவீன விருட்சம்’ சந்திப்பு.
’குவிகம்’ அமைப்பு கூடும் வாசகர் ரசனை கூட்டம்.
எதற்காக நீங்கள் அந்த அமைப்பின் சபைகளுக்குச் செல்கிறீர்கள்?
உங்களுக்கு அவை ஊற்றுக்களமாக அமைகிறதா?

ஜாலிலோ ஜிம்கானா!
டோலிலோ கும்கானா!!

பி.கு. #1: கதை எழுதியவரை எனக்குத் தெரியாது.
பிகு. #2: கதையை வாசித்து விட்டு கோட்பாடு ரீதியாக வாசிப்பவருக்கு @ஃபாலோயர், @ஹைலைட் எல்லாம் எரிதமாக அனுப்பப்படும்.

“அழல் பெய் குழிசியும் புழல் பெய் மண்டையும்
வெள்ளில் பாடையும் உள்ளீட்டு அறுவையும்
பரிந்த மாலையும் உடைந்த கும்பமும்
நெல்லும் பொரியும் சில் பலி அரிசியும்
யாங்கணும் பரந்த ஓங்கு இரும் பறந்தலை”

Manimegalai | 6. சக்கரவாளக்கோட்டம் உரைத்த காதை

நெருப்பு எடுத்து வந்த சட்டிகளும், நீர் தெளிக்கும் பானைகளும், சிதைந்த பாடைகளும், கிழிந்த துணிகளும் (அறுவைகள்), பிணத்திற்கு அணிந்து களையப்பட்ட மாலைகளும், அதற்கு இடப்பட்டு சிதறிக்கிடக்கும் வாய்க்கரிசி முதலியவையும், உடைக்கப்பட்ட கொள்ளிக் குடங்களும், இறைக்கப் பட்ட நெல்லும் பொரியும் எங்கும் சிதறிக் கிடக்கின்றனவாம்!!

இப்படியாக இந்த சுடுகாட்டின் காட்சிகளை மணிமேகலா தெய்வம், மணிமேகலையாம் காப்பிய நாயகிக்கு கூறிக் கொண்டே மனிதர்களின் விசித்திர மனப்பான்மையை இகழ்ந்தும் உரைக்கிறது.

குட்டி ஆர்.என்.ஏ.

கிரி அறிவியல் புனைவொன்றை எழுதுகிறார்.

மருத்துவத்திற்கான நோபல்பரிசு இன்று அறிவிறிக்கிறார்கள்.

இரண்டையும் தெரிந்து கொள்ள சொல்வனம் வர வேண்டுகிறோம்.

நன்றி பேராசிரியர் ரமணன்.

புரதத்தின் எம்ஆர்என்ஏவை மாற்றியமைப்பதன் மூலம் மற்ற புரதங்களை ஒழுங்குபடுத்தும் மைக்ரோஆர்என்ஏ (மைஆர்என்ஏ) ஐ அவர்கள் கண்டுபிடித்தனர், புரதத்தின் படியெடுத்தல் அல்ல.

இதற்கு முன்னர், மரபணுக்கள் (புரதங்கள்) பெரும்பாலும் டிஎன்ஏவின் வரிசைமுறைகளால் கட்டுப்படுத்தப்படுகின்றன என்று கருதப்பட்டது, அவை படியெடுத்தல் காரணிகளைக் கட்டுப்படுத்தின.

புரத உற்பத்தியை நிறுத்துவதன் மூலம் படியெடுத்தல் காரணிகளைக் காட்டிலும் மரபணு வெளிப்பாட்டின் செயல்பாட்டில் பிற்பகுதியில் இந்த ஒழுங்குமுறை ஏற்படுவதை நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகள் கவனித்தனர்.

விவரங்களை அறிய:

உடலியல் அல்லது மருத்துவத்திற்கான நோபல் பரிசு 2024 – சொல்வனம் | இதழ் 327 | 22 செப் 2024 (solvanam.com)

புனைவுப் புதைவும் அகவெழுச்சி ஆக்கங்களும்

சிறுகதைக் களஞ்சியம் ஆக சொல்வனம் மாறிக் கொண்டிருக்கிறதோ என்னும் பயம் உங்களுக்கு வந்திருக்கும்.

வருகிற எல்லா புனைவுகளையும், பொறுமையாகப் படித்து, ஒவ்வொன்றுக்கும் கருத்தும், எதற்காக மறுதலிக்கிறோம், எப்படி தேர்ந்தெடுப்பில் வைக்கிறோம் என்று ஒவ்வொரு நாளும் (பதினைந்து நாளுக்கு ஒரு முறைதான் என்றாலும்… தினமும் கொஞ்சம் கொஞ்சமாக வாசித்தால் மட்டுமே வீட்டுப்பாடத்தின் பளு) குறையும், நிறையும் சொல்லும் அனைத்து பதிப்பாசிரியர்களுக்கும் நன்றி.

முக்கியமாக லண்டன் சிவா.

https://solvanam.com/category/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-318/

சரி… சுய புராணம் போதும்.

இந்த 318ஆம் இதழைப் பார்த்தால்
ஏழு கதைகள்
ஏழு மொழியாக்கங்கள்

மொழிபெயர்ப்புகள் எல்லாவற்றையும் கடகடவென்று ஓட்டியதில்:
1. நம்பி – சுய முன்னேற்ற கட்டுரையைத் தந்திருக்கிறார். அமெரிக்காவில் உழைத்துத் தள்ளுவோருக்கான ஊக்க விட்டமின்

2. மயக்கமா… கலக்கமா… என்பது போல் டொடரொண்டோ வெங்கட் ஆக்கம் – இன்னும் ஆழமாக வாசிக்க வேண்டும். ஓவியம், மதம், புத்தம் என்று காக்டெயில் போட்டிருக்கிறார்.

3. ரேமண்ட் வில்லியம்ஸ் – நம்பிக்கைக்கான ஆதாரங்கள் : இப்பொழுது உங்களுக்கு இந்த இதழ் தினுசாக மன ஊக்கத்திற்க்காக, உள் உற்சாகத்திற்காக உருவானதோ என்னும் சந்தேகம் வர வேண்டும்.

4. நாம் அனைவரும் அர்ஸுலா லெ க்வினை அதிகம் படிக்க வேண்டும் – விபி வெங்கட் பிரசாத்தின் தமிழாக்கம். லெ குவின் எழுதிய ‘Sea Road’ போன்ற அதிகம கவனம் பெறாத ஆக்கங்களை அடுத்துக் கையில் எடுக்க வேண்டும். இது தெரிந்த விஷயங்களை அர்சுலா மூலமாகத் தொட்டுச் செல்கிறது.

5. எல்லா நேரத்திலும் அதிகபட்ச முயற்சியைக் கொடுங்கள் – பால் ஆஸ்டர் : நியு யார்க் நகரமும் நகரத்தின் எழுத்தாளர்களும் நியு யார்க்கை சுற்றி நடக்கும் எந்தக் கதையும் திரைப்படமும் எனக்கு ரசிக்கும். பால் ஆஸ்டர் இதெல்லாம் ஒருங்கேக் கொடுத்தவர். கூடவே ஃப்ரெஞ்சு வாசிப்பு + வளர்ப்பு வேறு உண்டு.

கூடவே…
யூதர்களைப் பற்றி, மார்கெரித் யூர்செனார் என்ன சொல்லியிருக்கிறார்?

இவ்வளவு சொல்லிவிட்டு அந்த ஏழு கதைகளைப் பற்றி ஒன்றுமே சொல்லாவிட்டால்…
நவீன உணவுமுறையில் பாரம்பரிய சோற்றை விரும்பும் தற்கால ஆண்களைச் சாடும் ’அறிவுப்புருசன் ‘ வாசித்தேன்.

சிறுகதை என்றால்
அ) முடிவுக்கு அருகில் துவங்க வேண்டும்
ஆ) சம்பவங்கள் நிறையவும் தாவல்கள் குறைவாகவும் இருக்க வேண்டும்
இ) போதனை வேண்டாம்; புரிதல் கொடுக்க வேண்டும்.

இது எதுவுமே அந்தக் கதையில் இல்லை. தமிழில் ஒரு பக்கம் காமம் + சுயம் குறித்து எழுதி அலுக்க வைக்கிறார்கள். இன்னொரு பக்கம் எண்பதுகளில் இருந்தே மீளாமல் புரளுகிறார்கள்.

நன்றாக எழுதுபவர்கள் எல்லாம் சினிமாவில் வாசம் செய்கிறார்களோ!?

சொல்வனம் #312

புதிய சொல்வனம் இதழில் பல முக்கிய ஆக்கங்கள் இருக்கின்றன. முகப்புக் கட்டுரையை விட்டுவிடலாம். எழுதியவரும் எழுதப்பட்டவரும் சொல்வனம் ஆசிரியர் குழுவில் தொடர்ந்து காத்திரமாகப் பங்களிப்பவர்கள். பத்து சிறுகதைகள். ஒவ்வொன்றையும் தனித்தனியாக பின்னொரு ரத சப்தமி அன்று அறிமுகம் செய்யலாம். ஐந்தாறு தொடர்கள்; இரண்டு வாசகர் கடிதங்கள் போன்றவற்றையும் ‘பார்த்த ஞாபகம் இல்லையோ’ என எங்கேனும் ஏற்கனவே எழுதியிருப்பேன்.

312ஆம் சொ.வ. இதழில் என்னைக் கவர்ந்தவை:
1. செமிகோலன் எழுதிய கவிப்பித்தனின் சாவடி தொகுப்பிற்கான எண்ணங்கள்
2. வெங்கட்ரமணன் எழுதிய கிணற்றிலிருந்து வெளிவரும் உண்மை

முதல் பதிவு நேர்மையாக சக காலப் படைப்பாளியின் ஆக்கங்களை அணுகுகிறது. ஒவ்வொரு புத்தகக் கண்காட்சியிலும் பத்து, பதினைந்து புதிய எழுத்தாளர்களின் புத்தம்புதிய நாவல்களையும் தொகுப்புகளையும் வாங்கினாலும், எவரைக் குறித்தும் பதிவு செய்வதில்லை. அந்தக் குறையை அரைப்புள்ளி நீக்குகிறார். அதற்காக “வாழ்க!” (“தொடர்க”வும் கூடவே சொல்லி வைக்கிறேன்).

கனடா வெங்கட் எழுதிய கட்டுரையை அலுவலில் திறந்து விடாதீர்கள். அக்கம்பக்கம் பார்த்துப் படியுங்கள். (சரோஜாதேவி புத்தகம் என்று ராம்பிரசாத் எழுதியதைப் பொதுவிடங்களில் பலர் பார்க்க புரட்டுவதில் எந்த ஆபத்தும் இல்லை). க.வெ. (இவர் டொரொண்டோ பக்கம் இருப்பதால் என்னைப் போன்றோரால் டொரொண்டொ வெங்கட் என்றும் அழைக்கப்படுகிறார்) தத்துவத்தில் துவங்கி, ஓவியத்திற்கு பாய்ந்து கர்ண பரம்பரைக் கதைகளைச் சொல்லி சிறுவாணியாகப் பாய்ந்தோடுகிறது.

உண்மையாக ஓவியத்தைப் பார்த்தால் இளமையாக இருக்கிறது. இன்றைய டிக்டாக் காலத்தில் போலி முகத்தைப் பொருத்தி உலா வருவது சகஜம். அந்தக் காலத்தில் செயற்கை நுண்ணறிவு இல்லாமலே சொந்தமாக வேஷம் போட்ட பொய்யை எல்லோரும் தீட்டிக் கொண்டிருக்க, உண்மையை படம் வரைந்தவரின் கதையைப் படியுங்கள்.