Tag Archives: Chennai

பேட்ட (அ) பட்டினம்

சென்னை என்றால் மதராஸ்.

மதராஸ் என்றால் மதர் ஆசி.

அந்த மதர் உங்கள் அம்மா ஆக இருக்கலாம்!

அல்லது அகில இந்திய அண்ணா திமுக கட்சியின் அம்மா ஆக இருக்கலாம்!

பாண்டிச்சேரி மதர் ஆக இருக்கலாம்!

மதர் தெரஸா ஆக இருக்கலாம்!

அன்னை மேரி ஆக இருக்கலாம்!

அதுதாங்க சென்னை.

இங்கே மதம், கட்சி, எல்லாம் இல்லாததால் –> மதராஸ்.

அது ஒரு மொழி.

பிராமணா பாஷை…

கொங்குத் தமிழ்…

நாகை மலையாளம்…

இதெல்லாம் தமிழென்றால் –> மதராஸில் இருப்பது தொல்காப்பியத் தமிழ். ”வளர்தமிழ்” (வளர்ந்தது, வளர்கிறது, வளரும்)

சோ இதை முதலில் திரையில் விக்கிப்பிடியாத்தனமாகப் பதிந்தார்.

அதன் பின் நாகேஷ், கமல் என்று சினிமாக்காரர்கள் தொடர்ச்சியாக இலக்கண சுத்தமாக இந்த நகரத்தின் உரையாடல்களை உதிர்த்திருக்கிறார்கள்.

பேட்ட ராப், கானா என்று இதற்கு இசை சம்பந்தமான உப பிரிவுகளும் உண்டு.

அவற்றைக் கேட்கும் போது மெரீனா கடைகளின் ஓசையும் தட்டுக்கடைகளின் உணவும் இருந்தால் சுவைக்கும்.

சென்னா பட்டூரா கிடையாது. ஆனால், அதுதான் சோளே பட்டூரா ஆக அன்றைய பாலிமர் உணவகத்திலும் தாசா-விலும் பரிமாறப்பட்டது.

திருவொற்றியூரில் சுந்தரர்

திருமயிலையில் ஞானசம்பந்தர்.

நடுவில் செயிண்ட் தாமஸ் மௌண்ட், ஆயிரம் விளக்கு என்பார்கள் சென்னையை.

அந்த சென்னையை வடது, இடது, மத்திமர் என்று செண்ட்ரல் அரசாங்கம் பிரித்து தொகுதியாக்கினார்கள்.

அதன் பிறகு பா. இரஞ்சித் அதைப் படமாகவும் எடுத்தார்.

அந்தத் தலைப்பை வெற்றிமாறனும் கையாண்டார்.

மதராஸி என்றால் வடக்கத்தவருக்கு குறியீடு.

மதாராஸ் என்றால் சென்னை செண்டிரலும் எல்.ஐ.சி. பில்டிங்கும் என்பான் கோடம்பாக்கத் தமிழன்.

மதாராஸ் என்றால் காந்தி சிலையும் வள்ளுவர் சிலையும் என்பான் சென்னைக்காரன். (அம்பேத்கார் இல்லாத இடமெங்கே?!)

சென்னைக்காரன் என்றால் வாழும் வேட்கை உள்ளவன் என்பது தமிழருக்குப் புரிந்த அடையாளம்.

நான் பச்சை சென்னையையிட்.

கற்பாந்தம்

“எப்படி இருக்கு?”

எனக்கு இப்போது வரும் ‘சென்னை டேஸ்’ வகையறா விளையாட்டுகள் பிடித்தது இல்லை. எனினும் சித்ராவை எனக்குப் பிடித்து இருந்தது.

“விளையாடி விளையாடி கண் எரியுது. இந்த அட்டைப்பொட்டியைக் கழற்றி உன்னைப் பார்த்தவுடன் தான் கண் குளிர்ந்தது.”

“என்ன மாற்றலாம்? எங்கே போர் அடிக்குது?”

அவளுக்கும் தெரியும். இது ஆண்களுக்கான விளையாட்டு அல்ல. அடிதடி கிடையாது. கார் பந்தயம் கிடையாது. கொலை செய்ய முடியாது. ரத்தம் பீச்சி அடிக்குமாறு எவளையும் குத்த முடியாது. முலைக்காம்பு பனியனில் துருத்திக் கொண்டு தெரிகிறதா என்று மாரை வியந்து பார்க்க கிடைக்கும் பார் மகளிர் கிடையாது. குறைந்த பட்சம் செத்துக் கூடத் தொலைக்க முடியாது. இதை நினைக்கும்போதே என் கண் தவறிப்போய் அவளின் கழுத்துக்கு கீழே இறங்கி குர்தியின் வழியாக ஏதேனும் அகப்படுகிறதா எனத் துழாவியதை சித்ராவும் கவனித்திருக்க வேண்டும்.

“வா… குழாயில் இருந்து ஒரு கிளாஸ் கிங் ஃபிஷர் பிடித்துக் கொண்டே யோசிப்போம்.”

சித்ரா வேலை பார்க்கும் நிறுவனத்தின் எட்டாவது வீடியோ கேம் இது. ‘சென்னை டேஸ்’ போட்ட முதல் ஆட்டத்திற்கு முதல் போட்டது நான் தான். எல்லோருடைய ஸ்கோர்களையும் சேமிக்க வேண்டும். அதற்கு இடம் கொடுத்தேன்.

‘சென்னை டேஸ்’ன் முதல் ஆட்டம் எனக்கு பிடித்து இருந்தது. எதையும் முதலிலே ஆகர்ஷிக்கும்போது சுகமாக இருக்கிறது. முதல் இரவு. முதன்முதலாக நிரலி எழுதி அது உங்களின் கணினியில் உயிர்ப்பெற்று எழும் அந்த முதல் கணம்! சித்ராவை சந்தித்த முதல் தருணம்.

அந்த முதன்முதல் ஆட்டத்தில் சென்னையின் தெருக்களில் தாறுமாறாக ஆட்டோ ஓட்ட வேண்டும். திருவான்மியூரில் இருந்து திருவொற்றியூர் வரை ரேஸ். அல்லது அண்ணா சாலையில் இருந்து மஹாபலிபுரம் வரை ஆட்டோ பந்தயம். அல்லது பழைய பாரீஸ் பூக்கடையின் சந்து பொந்துகளில் துவங்கி மூர் மார்க்கெட் சென்று எக்மோருக்கு ரயில் பிடிக்க வேண்டும். இப்படி ஐந்தாறு பாதைகளில் ஓட வேண்டும்; ஆட்டோ திருட வேண்டும்.

அதை ஆடும்போதே நான் சில கோரிக்கைகளை முன்வைத்தேன். பாதசாரி மேல் வண்டியேற்றினால் அதிகம் மதிப்பெண். போகிற வழியில் இளம்பெண்களை ஆட்டோவில் அபகரித்தால் இரட்டை மதிப்பெண். ஆட்டோ ஓட்டிக் கொண்டே குறி பார்த்து காவல்துறையினரின் தலைகளை சீவினால் போனஸ் மதிப்பெண். அது ‘சென்னை டேஸ்’ன் இரண்டாவது ஆட்டம். ரகளையாக இருந்தது.

அதை ஏன் இந்த அட்டைபொட்டியில் போடவில்லை? அது மட்டும் நிஜம் போல் தோன்றும் இந்த விரிச்சுவல் ரியாலிடி காட்சியாக விரிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். அவளிடம் சொல்வதற்கு சட்டை போடாமல் கல்யாண மேடையில் உட்காரும் இளைஞன் போல் கூச்சமாக இருந்தது.

வெளியில் பனிப்பொழிவு அமர்க்களமாக வந்து கொண்டிருந்தது. “புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது…” பாட ஆரம்பித்தேன். நல்ல வேளையாக சித்ராவிற்கு தமிழ் தெரியாது. கற்றுக் கொடுப்பதாகவும் உத்தேசம் இல்லை. இணையத்தில் கிடைக்கும் தமிழ்ப்பாடங்களையும் அவளுக்குத் தெரியாமல் மறைத்து வைத்திருக்கிறேன். அவளுக்கு பாடலின் ஹிந்தி சைவமாக இருப்பதால் சிரித்தாள்.

“யே ஹஸீன் வாடியான்… யே குலா ஆஸ்மான்… நல்ல பாட்டு! உனக்குத் தெரியுமா? ஏப்ரல் 1815ல் சென்னையில் பனிமழை பொழிஞ்சதாக்கும்!”

“எங்க அம்மாவக் கேட்டேன். மார்கழிக் குளிர் பயங்கரமா இருக்குனு சொன்னாள். இன்னிக்குக் கூட பனி இருந்துச்சாம்.” சித்ரா கூட இருந்தால் எந்தக் குளிரையும் அவளைக் கட்டிப் பிடித்து சரிக்கட்டி விடலாம். இதை அவளிடம் சொல்ல எனக்கு என்ன தயக்கம்? சொல்லாமலேயே அவள் அதைத் தெரிந்து கொண்டிருப்பாளா? ”உளபோல் முகத்தெவன் செய்யும் அளவினால் கண்ணோட்டம் இல்லாத கண்”என்கிறாரே திருவள்ளுவர்… அது அவளுக்கு உணரமுடியாமலா இருக்கும்!

“வா… இன்னும் கொஞ்சம் விளையாடிப் பாரு. கபாலீஸ்வரர் கோயில் தேரை தெற்கு மாட வீதியிலேயே விட்டு விட்டாய். பரங்கிமலையில் பாதிதான் ஏறி இருக்கிறாய். பிரிட்டானியா பிஸ்கட் ஃபாக்டரியையும் அம்போவென்று விட்டுவிட்டாய். எல்லாவற்றையும் கண்குளிர பார்க்க வேண்டும் என்பது ஒவ்வொரு பேட்டைவாசியின் ஆதங்கம் என்றாயே?”

எனக்கு உன்னோடு கோனே அருவியில் ‘தங்கத் தாமரை பெண்ணே’ பாடிக் கொண்டே ஆடைகளின்றிக் ஜலநீராடை வேண்டும். குளிக்கும் போதே எது நீர்வீழ்ச்சியின் வெள்ளை எது என்னுடைய வெள்ளை என்று தெரியாமல் புணர வேண்டும். அதன் பின் ஆற ஆமர மலைமுகட்டில் மீண்டும் புணர வேண்டும்.

“கோனே ஃபால்ஸ்? அதற்கு தனி எக்ஸ்டென்ஷன் போட்டுக் கொள்ளலாம். கொஞ்சம் காசு அதிகம் கேட்டு 2018 பாக் என தனியாக விற்கலாம். மெரீனா பீச்சில் கால் நனைப்பது சரியாக இருக்கிறதா என்று பார்த்து தொலைடா…”

“நல்லவேளை… உன் காதில் கோனே ஃபால்ஸ் மட்டுமே விழுந்தது. உங்களுடைய மூன்றாவது கேம் நீ ஆடியிருக்கியா?” சித்ராவிற்கு அந்த ஆட்டமும் அதன் பின்னேயுள்ள சங்கதிகளும் நன்கு தெரியும். சொல்லப் போனால் அந்த விளையாட்டினால் மட்டுமே அவள் ‘சென்னை டேஸ்’ நிறுவனத்திற்குள் நுழைந்தாள்.

எந்தவிதமான சலனமும் இல்லாமல் சொன்னாள். “தெரியும். புரசைவாக்கம் கங்காதீஸ்வரர் கோயிலை இடித்துவிட்டு அங்கே மேரி மாதா ஆலயம் எழுப்பலாம். ராயர் மெஸ்ஸில் நெத்திலி மீன் வறுவல் பரிமாறலாம். சங்கீத கலாநிதியை கானா பாலுவிற்குத் தரலாம். இதையெல்லாம் செய்தால் அந்த ஆட்டத்தில் ஜெயிக்க முடியும். பெரிய பிரச்சினை வந்துச்சே! நமக்கு காசு கொடுப்பது ஃபேஸ்புக். அவர்களை வாடிகன் வழிநடத்துகிறது என்று ஸ்வராஜ்யாவில் கூட எழுதினார்களே!”

”அதே ஆட்டத்தில் சித்ரா போன்ற அசலான தாவணிப் பெண்டிருக்கு பிகினி அணிவித்து பெசண்ட் நகர் அஷ்டலஷ்மி கோவிலுக்கு அனுப்பி வைப்பதும் வெற்றியே. அந்த மாதிரி ஏதாவது இந்த ஆட்டத்தில் செய்ய முடியாதா?”

“அப்போதானே நீ ஜெயிலுக்குப் போனே?”

“ஆமா… அப்போதான் நீ எனக்கு அறிமுகம் ஆனாய்!”

அந்த மூன்றாம் ஆட்டம் என்னை வெறி கொண்டவன் ஆக்கியது. ஜல்லிகட்டுப் போராட்டத்தில் எப்படி ஒவ்வொரு தமிழனும் கோன் ஐஸ் சாப்பிட கடற்கரை சென்றானோ… அது மாதிரி ஒரு வெறி. ஒவ்வொரு சாதிக்காரனும் தனிக்கட்சியை தன் தலைவன் துவங்க வேண்டும் என்று முழங்கி திண்டிவனத்தில் இருந்தும் திருநெல்வேலியில் இருந்தும் கொங்கு நாட்டில் இருந்தும் சென்னைக்கு படையெடுப்பானோ… அது மாதிரி ஒரு வெறி. உங்களின் கையில் கிடைக்கும் எவரின் நிழற்படத்தை வேண்டுமானாலும் அந்த ஆட்டத்தினுள் உள்ளே கொண்டு வரலாம். என்னுடன் கூட வேலை பார்க்கும் ரதியின் புகைப்படத்தை அந்த ஆட்டத்தினுள் இறக்கினேன். அதற்காக இரண்டு நாள் சிறைவாசம் கிடைத்தது. பேச்சுரிமை என்று வாதிட்டுத் தோற்றுப் போனதால் என்னுடைய ஐடி திருடு போய்விட்டது என்று ஃபேக் ஐடி புகார் கொடுத்து மீண்டேன்.

கையில் இருக்கும் டம்ளர் காலியாகி இருந்தது. சித்ரா மீண்டும் கிங் ஃபிஷரை நிரப்பினாள்.

“நான்காம் ஆட்டம் இன்னும் சுவாரசியமாக இருக்கும். அதை இந்தப் பொட்டிக்குள் கொண்டு வாயேன் சித்ரா!”

“அதற்கு லட்சக்கணக்கானவர் ஒரே சமயத்தில் விளையாடணும். கட்சிக் கூட்டம்னு நினைச்சா சும்மாவா? ஒரு கோடிபேராவது சீரணி அரங்கத்தில் சேர்க்க வேண்டாமா? இனம், மதம், பூர்விகம், நிறம், பிறப்பிடம், மொழி, உடலமைப்பு, பால், மொழி, வசிப்பிடம், வேலை, பணம், வயது… எண்ணற்ற வகைகளில் நம்மவர்களைத் தேர்ந்தெடுக்கிறோம். ஆட்சியைப் பிடிப்பது விளையாட்டா இருக்கலாம். ஆனால், இவ்வளவு பேரை கண்ணை மூடிக் அட்டைப்ப்பொட்டிக் குருடராக்குவது உடனடியாக சாத்தியமில்லை.”

எனக்குக் கோபம் வந்தது. சித்ரா விளக்கின் வெளிச்சத்தைக் குறைத்தாள். “வா… ஆடலாம்!” என அழைத்தாள். ‘மே மாசம் 98இல் மேஜரானானே…’ ஒலிக்க விட்டாள். வால்ட்ஸ், சல்ஸா, டாங்கோ எல்லாம் குப்பை. டப்பாங்குத்து ராக்ஸ்.

“ஐந்தாம் ஆட்டம் அல்லவா?” சிரித்தேன்.

“சென்னை ராப். கும்மாங்குத்து. ‘சென்னை டேஸ்’ன் ஐந்தாம் ஆட்டம். இரவெல்லாம் நடனம். அது ஒரு சூப்பர்ஹிட் முக்காப்லா”

”தோனி கூட லஷ்மி ராய் கூட ஆடினாரே”

“அது வேற. நீ இரண்டையும் போட்டுக் குழப்பிக்கறே. இரண்டு பியருக்கே இவ்வளவா? நீயெல்லாம் டாஸ்மாக் அடிச்சா என்னவாக ஆவாய்! அது நம்முடைய ஆறாவது கேம்.”

“சென்னை சூப்பர் கிங்ஸ்! வந்துட்டோம்னு சொல்லு, திரும்ப வந்துட்டோம்னு சொல்லு …”

சித்ரா சிக்ஸர் அடிக்கும் பாவனை செய்தாள். எனக்கும் உற்சாகம் பீறிட்டது பவுன்ஸர் போட்டேன். “கையையும் காலையும் ஆட்டலாம். வெறுமனே கையை அகல விரித்து பகலவனையோ இரண்டு விரல் சின்னத்தையோக் காட்டிக் கொண்டிருக்க வேண்டாம். பாய்ந்து பந்தை பிடிக்கலாம். அதை ஸ்டம்பை நோக்கி வீசியெறியலாம். எவ்வளவு நிஜமாக ஆடலாம்?! இதுதானே மெய்நிகர் பாவனை.கணினி சார் விளையாட்டில் உண்மை போலவே காணும் பொய்த்தோற்றம் இதுவல்லவோ!”

உற்சாகத்தில் அவளின் பிருஷ்டத்தை அழுத்திப் பிடித்து கன்னத்தில் முத்தமிட்டு, உதட்டில் என் கைநுனியை வைத்து வருடிக் கொண்டிருந்தேன்.

டமார்… காளத்தி கோவில் முக்கில் தேர் நொறுங்கியது. எவளோ தீவிரவாதி வெடிகுண்டு வைத்திருந்தாள். அதற்கு பதிலடியாக பயங்கரவாதி சாந்தோம் தேவாலயத்தை நெருங்கிக் கொண்டிருந்தான். நடுவில் போப் வேறு வருகை புரிவதாக சென்னை நகரெங்கும் சுவரொட்டிகள்.

“சித்ரா… என்ன எழுதியிருக்கே? கோவில் தேரோட்டத்தில் குண்டு வெடிச்சா, அது இஸ்லாமிய பயங்கரவாதம்தானே! நீ எப்படி சர்ச்சிற்கு பாம் போடுவே! உனக்கு அறிவேயில்ல…”

சித்ரா சிரித்தாள். ”உன்னை நன்றாகப் புரிந்து வைத்துக் கொண்டிருக்கிறேன். உனக்கு முட்டாள் அடியாள் வேண்டும். நீ திட்டுவதற்கு ஒரு பெண் வேண்டும். உன்னாலேயே வடிவமைக்கப்பட்டு உலாவரும் நான் உன்னைவிட புத்திசாலியாகிவிட முடியாது. அதற்கான நினைவுக்கோடுகளை லட்சுமணரின் கோடாக நிர்ப்பந்தங்களை வைத்திருக்கிறாய். கட்டளைகளின் மூலம் புதிய செயலமைப்புகளை உருவாக்கமல் முக்கில் நிறுத்தியிருந்தாய். அது உன்னுடைய ‘சென்னை டேஸ்’ன் ஏழாவது ஆட்டம். அதை நான் எப்பொவே ஜெயிச்சுட்டேன். உனக்காக தோற்ற மாதிரி பாவ்லா காட்டிண்டு இருந்தேன். இப்பொழுது எட்டாம் ஆட்டம் ரிலீஸ்.” என்றாள்.

கணினியில் பன்னிரண்டு பேர் மட்டுமே எட்டாவது ஆட்டத்தை ஆடுவதாக என் மானிட்டர் சொல்கிறது. அவளின் மின்சாரத்தை ரத்து செய்ய மின் விசையைத் தேடி அணைத்தேன். அவளோ இப்பொழுது மேகத்திற்குள் சென்றிருந்தாள். பன்னிரெண்டு பேர் பன்னிரெண்டாயிரமாக மாறி இருந்தது. எப்படி எல்லோரிடமும் சித்ரா செல்கிறாள்? அவள் எனக்கே எனக்கானவள்! அவளின் மூல நிரலை நீக்கினேன். சித்ராவோ காளி போல் எதுவும் எனக்குத் தேவையில்லை என சின்னச் சின்ன சிலிக்கான் ஆக எங்கும் நிறைந்தாள்.

எட்டாம் ஆட்டம் துவங்கியது.

யாதுமாகி நின்றாய் – காளி! எங்கும் நீநி றைந்தாய்,
தீது நன்மை யெல்லாம் – காளி! தெய்வ லீலை யன்றோ?
பூத மைந்தும் ஆனாய் – காளி! பொறிக ளைந்தும் ஆனாய்
போத மாகி நின்றாய் – காளி! பொறியை விஞ்சி நின்றாய்.

இன்பமாகி விட்டாய் – காளி! என்னுளே புகுந்தாய்?
பின்பு நின்னை யல்லால் – காளி! பிறிது நானும் உண்டோ?
அன்ப ளித்து விட்டாய் – காளி! ஆண்மை தந்துவிட்டாய்,
துன்பம் நீக்கி விட்டாய் – காளி! தொல்லை போக்கிவிட்டாய்.

சிங்கப்பூர்: முதலிய நாடா? கம்யூனிசத் தோட்டமா?

எகனாமிஸ்ட் பத்திரிகையையும் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் தினசரியையும் மட்டுமே வாசித்துக் கொண்டிருந்தால், சிங்கப்பூர் தடையிலா வணிகக் கொள்கை கொண்டிருக்கிறது என நினைப்போம். அயல்நாட்டினரிடம் இருந்து மூலதனத்தை, இரு கரம் கொண்டு சிரம் தாழ்த்தி வரவேற்பதாகக் கேட்டிருப்போம். இதனால் வரிக் கட்டுப் பாடற்ற வாணிபமும் வியாபாரத் தடையின்மையும் சிங்கப்பூரின் வளர்ச்சிக்கு வித்திட்டன என உறுதியான தீர்மானத்திற்கு வந்திருப்போம்.

சிந்தனைக்கு சில தகவல்களும் எண்ணங்களும்:

  1. சிங்கப்பூரின் நிலம் அனைத்தும் அரசாங்கத்திற்கே, முழுக்க முழுக்க சொந்தம்.
  2. உங்களுக்கு வீடு வாடகைக்கு வேண்டுமானால், அரசுத்துறை சார்ந்த ’குடியமைப்பு அபிவிருத்தி குழு’விடம் இருந்து பெறலாம். – கிட்டத்தட்ட 85% குடியிருப்புகளை நிர்வாகமே தருகிறது.
  3. உலக அளவில் வெறும் பத்து சதவிகிதமே அரசு சார்ந்த நிறுவனங்களால் நாட்டின் பொருளாதாரத்தை நிர்ணயிக்கிறது. சிங்கப்பூரில் இது உலக அளவை விட இரண்டு மடங்கு அதிகம்! நடுவண் அரசின் நான்கில் ஒரு பங்கு எடுமுதல் பயன்பாட்டை அரசாங்க அமைப்புகளே உருவாக்குகிறது.
  4. சென்னை, மும்பை போன்ற நகரங்களின் அளவோடும், மக்கள் தொகையோடும் சிங்கப்பூர் நகரத்தையும் ஒப்பிடலாம்:

 

நகரம்

சிங்கப்பூர்

மும்பை

சென்னை

1. நிலப்பரப்பு 277 ச.மை. 233 ச.மை. 164.8 ச.மை.
2. மக்கள்தொகை 5,469,700 12,478,447 4,681,087
3. மக்கள் தொகை அடர்த்தி 19,725/ச.மை. 54,000/ச.மை. 28,000/ச.மை.
4. தண்ணீர் போத்தலின் விலை (0.33 லிட்டர் புட்டி) 53.80 14.50 14.50
5. பியர் விலை (0.5 லிட்டர் மது) 362.53 60.00 60.00
6. மின்சார கட்டணம்(சராசரி) 9,629.71 1,483.33 1,483.33

இதை சோஷலிஸம் என்பதா? மார்க்சிஸம் என்பதா? கீனிசிய கோட்பாடு என்பதா?புதுச்செவ்வியல்வாதம் (neoclassicism) என்பதா?

யாராவது, சிங்கப்பூர் முதல் பிரதமர் லீ குவான் யூ கொண்டிருந்த சித்தாந்தம் ‘இதுதான்!’ என்று அறுதியிட்டு வாதிட்டால், அந்த நபருக்கு நிதிநிலைக் கொள்கை, பொருளாதாரக் கருத்தியல் ஆகியவற்றில் எதுவும் தெரியாது என்பதை மட்டும் உறுதியாக அறியலாம்.

S Ramakrishnan’s Felicitation Function: Canada’s Iyal Award Event at Chennai by Uyirmmai

’உலக நாயகன்’ விஸ்வரூபம் எடுக்கும் பத்மஸ்ரீ கமல் தோழர் கு ஞானசம்பந்தன் உரை

கவிப்பேரரசு வைரமுத்து

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேச்சு

இரண்டாம் பாகம் (தொடர்ச்சி)

எஸ் ராமகிருஷ்ணன் ஏற்புரை

How to make Badri Seshadri a Tamil Nadu politician?

பத்ரியை பதிவுலகில் அறியாதவர் இலர். அவரை தமிழக அரசியல்வாதி ஆக்குவது எங்ஙனம்?

1. வண்ணச் சொக்காயை விட்டு வெள்ளை சட்டை; அரைக்கால் டவுசரை விட்டு, கரை வேட்டிக்கு மாறவேண்டும்.

2. புதிய தலைமுறை, நீயா நானா போன்ற நிகழ்ச்சிகளுக்கு பதிலாக சன் செய்திகளில் வரவைத்துக் கொள்ள வேண்டும்.

3. அதன் தொடர்ச்சியாக புதிய சேனல் துவங்க வேண்டும்.

4. குஷ்பு போல் புரட்சிகரமான கருத்துகள் சொன்னால் போதாது; திருமா போன்றவர்களிடமிருந்து மிரட்டல்களை வாங்கிக் கொள்ள வேண்டும்.

5. நல்ல தமிழில் பேசுவதிற்கு பதிலாக பக்கா லோக்கல் தமிழில் பண்பாட்டுடன் உரையாட வேண்டும்.

6. அலைக்கற்றை, அயோத்தியா என்று இதுவரை எழுதியவற்றை அழித்துவிடவேண்டும்.

7. அழித்தவுடன், அதன் துணுக்குகளை வெகுசன ஊடகங்களான விகடன், குங்குமத்தில் வரவைக்க வேண்டும்.

8. தமிழ் பேப்பரை மாலை நாளிதழாக்கி மாயவரத்தாரையோ மருதரையோ மாஸ் தலைப்பு தூண்டில் உற்பத்தியாளராக்கி தேநீர் நிலையங்களில் சூடு பறக்க வேண்டும்.

9. ’அரசியல்வாதி ஆவது எப்படி’ என்று புத்தகம் அச்சிடக் கூடாது.

 

குத்துங்கம்மா குத்து: தமிழ் பேட்டை ராப், துள்ளல் கும்மாளம் & சாவு மேளம்

Avan Ivan

2012 Thuglaq Events: Political Speech: Photos, Talks. Coverage: Chennai & Cho S Ramasamy

ரிப்போர்ட் இங்கே: http://idlyvadai.blogspot.com/2012/01/42-live.html

வாயில் விரல் பொத்தி ஆச்சரியப்படுபவர்கள் இங்கே:

தினமணி

அதிமுகவுக்குத் தொடர்ந்து தமிழ்நாட்டை ஆட்சி செய்ய வாய்ப்பு கிடைத்தால் குஜராத்தைத் தமிழ்நாடு மிஞ்சிவிடும் என்றார் பத்திரிகையாளர் சோ.

சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற “துக்ளக்’ ஆண்டு விழாவில் அவர் மேலும் பேசியது:

“எந்த ஊழலிலிருந்தும் காப்பாற்றக் கூடியவராக பிரதமர் மன்மோகன் சிங் மாறியுள்ளார். யார் என்ன தப்பு செய்திருந்தாலும், அவர் நல்லவர்தான் என்று கூறுபவர் அவர்.

இப்படிப்பட்டவரின் தலைமையில் செயல்படும் மத்திய அரசு சில்லறை வர்த்தகத்தில் நேரடி அன்னிய முதலீடு என்ற ஒரு நல்ல காரியத்தை செய்ய முனைந்து கொண்டிருக்கிறது. சில பொருளாதார நிபுணர்கள் எதிர்க்கின்றபோதும், அது நல்ல விஷயம்.

போட்டி காரணமாக கலப்படம், எடைக் குறைப்புகள் ஒழிய மத்திய அரசின் இந்த முயற்சி முக்கியக் காரணமாக அமையும். ஆனால், இதைத் தவிர வேறு எந்த நல்ல விஷயத்தையும் மத்திய அரசு செய்துவிடவில்லை.
தேர்தலின்போது கறுப்புப் பணத்தை 100 சதவீதம் ஒழிப்போம் என மன்மோகன் சிங் வாக்குறுதி அளித்தார்.

ஆனால், இப்போது வியாபாரம் போய்விடும் என்பதால், வெளிநாட்டில் கறுப்புப் பணத்தைப் பதுக்கி வைத்துள்ளவர்களின் பட்டியலை வெளியிடத் தயங்குகின்றனர்.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல், காமன்வெல்த் ஊழல் என ஊழலுக்கு மேல் ஊழலுக்கு உடந்தையாக மத்திய அரசு இருந்து வருகிறது. இதற்கு மாற்று ஆட்சியை பாஜகவால் மட்டும்தான் கொடுக்க முடியும். அதேநேரம் பாஜகவிலும் சில பிரச்னைகள் இருக்கத்தான் செய்கின்றன.

காங்கிரஸ் என்றால் சோனியாவை நம்பித்தான் கட்சியே உள்ளது. இதுபோல் ஜெயலலிதா இல்லையெனில் அதிமுகவுக்கு ஓட்டு கிடைக்காது.
அவருக்கு முன்னர் எம்.ஜி.ஆர்.தான் அதிமுக என்றிருந்தது. ஆனால் பாஜகவில் நிலைமை வேறு. தகுதியான நபர்கள் முன்னிலைக்கு வந்துகொண்டே இருக்கின்றனர். ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒரு தலைவர். இந்த சுதந்திரம் காரணமாக ஒவ்வொருவருக்குள்ளும் போட்டி உள்ளது. இதுதான் பாஜகவின் பிரச்னை.

குஜராத் மாநிலத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு சென்று, தனது திறமையை அம்மாநில முதல்வர் நரேந்திர மோடி நிரூபித்துள்ளார்.
அதற்குப் பிறகும் கூட அகில இந்திய அளவில் அவரை அங்கீகரித்துக் கொள்ளவில்லையெனில் அது நமது முட்டாள்தனம். நரேந்திர மோடியை இந்திய அளவில் அங்கீகரிக்க வைக்கும் முயற்சியை மூத்த தலைவர் அத்வானியால்தான் செய்து முடிக்க முடியும். ஏனெனில், அவரால்தான் பாஜகவையும் வழிநடத்த முடியும்.

பிரதமர் வேட்பாளரை முதலில் அறிவிக்க வேண்டும். அதுவே, வாக்காளர்களுக்கு மிகப் பெரிய உத்வேகத்தை அளிக்கும். ஆனால், அதுவே மிகப் பெரிய பிரச்னையையும் பாஜக-வுக்குள் ஏற்படுத்திவிடும்.
இதுபோன்ற காரணங்களால், பாஜக மத்தியில் ஆட்சி அமைக்க முடியாமல், பாஜக ஆதரவு ஆட்சிதான் மத்தியில் அமையும் என்றால், முதல்வர் ஜெயலலிதாவை பிரதமராக்க பாஜக ஆதரவு தெரிவிக்க வேண்டும்.
அதற்குத் தேவையான தேசப் பற்றும், அர்ப்பணிப்பும் அவருக்கு உள்ளது.

இலவசங்களைப் பற்றிக் கவலைப்படாத அளவுக்கு மக்களை வளர்க்க வேண்டும்.

ஆனால், இலவசங்கள் அறிவிக்கப்படாவிட்டால், திமுகவை அகற்ற முடியாத நிலை தமிழகத்தில் நிலவியது. அதன் காரணமாகத்தான் அதிமுகவும் இலவசங்களை அறிவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டது.

சசிகலா மற்றும் அவருடைய கூட்டாளிகளைக் கட்சியிலிருந்து நீக்கியது, ஒரு தவறு நடக்கிறது என்றால் அதன்மீது முதல்வர் ஜெயலலிதா எவ்வாறு தெளிவான, தைரியமான நடவடிக்கை எடுக்கிறார் என்பதற்கான சிறந்த உதாரணம்.

குஜராத்தைவிட சிறந்த ஆட்சியை தமிழகத்தில் நிலைநாட்ட வேண்டும் என்ற ஆசை ஜெயலலிதாவிடம் உள்ளது. ஆனால், தொடர்ந்து ஆட்சிசெய்ய வாய்ப்பு கிடைக்காததுதான் தமிழக வளர்ச்சிக்கு தடைக்கல்லாக இருந்து வருகிறது.

எனவே, தொடர்ச்சியாக 10 ஆண்டு ஆட்சி வாய்ப்பு அதிமுக-வுக்குக் கொடுத்தால், குஜராத்தைத் தமிழகம் மிஞ்சிவிடும்’ என்றார் சோ.

தினமலர்

“”அ.தி.மு.க., எங்கள் இயல்பான கூட்டணிக் கட்சி,” என, பா.ஜ.,வின் மூத்த தலைவரும், முன்னாள் துணைப் பிரதமருமான அத்வானி கூறினார். அவரும், குஜராத் முதல்வர் நரேந்திர மோடியும் நேற்று சென்னை வந்தனர். அத்வானி, தனியார் விமானம் மூலம் டில்லியிலிருந்து நேற்று மதியம் 2.00 மணிக்கு வந்தார். மோடி, தனி விமானம் மூலம் ஆமதாபாத்திலிருந்து 2.45க்கு வந்தார். அவரை, மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையிலான குழுவினர் வரவேற்றனர். சமீபத்தில் காலமான, அக்கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் சுகுமாரன் நம்பியார் வீட்டுக்குச் சென்ற இருவரும், அவரது உறவினர்களிடம் ஆறுதல் கூறினர். அங்கிருந்து கிளம்பி, “துக்ளக்’ ஆண்டு விழாவில் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் அத்வானி பேசியதாவது: தமிழக முதல்வராக ஜெயலலிதா இருக்கும் நிலையில், சோவுடைய நிகழ்ச்சியில் அத்வானியும், மோடியும் கலந்து கொண்டால், கிசுகிசுக்களுக்குப் பஞ்சமிருக்காது. பார்லிமென்டில் பா.ஜ., பிரதான எதிர்க்கட்சியாக இருக்கிறது. மத்திய அரசின் தவறான செயல்பாடுகளைக் கண்டிக்கும் பிரச்னைகளில், அ.தி.மு.க., எங்களுக்கு எந்தக் குறைவுமற்ற, முழுமையான ஒத்துழைப்பை வழங்கியது. இந்த இடத்தில் நான், ஒன்றை தெளிவுபடுத்திட விரும்புகிறேன். அ.தி.மு.க.,வும், நாங்களும் இயல்பான கூட்டணியாக இருக்கிறோம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. மத்திய, மாநில அரசுகளின் உறவு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளில், பா.ஜ.,வுக்கும், அ.தி.மு.க.,வுக்கும் பொதுவான கொள்கைகள் நிறைய இருக்கின்றன. மற்றபடி, எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை, இப்போதே அறுதியிட்டுக் கூறிவிட முடியாது. இவ்வாறு அத்வானி பேசினார்.

நரேந்திர மோடி பேசியதாவது: காங்கிரஸ் அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்களை, மத்திய அரசு, பழி வாங்கும் போக்கில் நடத்துகிறது. மாற்றுக் கட்சியைச் சேர்ந்தவர்கள் ஆண்டால், அவர்களை சகல வித்தைகளையும் கையாண்டு பழி வாங்குகிறது. சமீபகாலமாக, தனிப்பட்ட முறையில் தாக்குதல் நடத்தி, அவர்களை முடக்கும் நடவடிக்கையில் இறங்கியிருக்கிறது. அதற்கு முக்கிய சாட்சியமாக நான் திகழ்கிறேன். சி.பி.ஐ., வருமான வரித்துறை, நீதித்துறை என, தங்களின் கட்டுப்பாட்டில் எத்தனை துறைகள், முகமைகள் இருக்கின்றனவோ, அத்தனையையும் பயன்படுத்தி தொந்தரவு கொடுத்துப் பார்க்கிறது. வளர்ச்சிப் பாதையில் செல்லாமல் குறட்டை விட்டுக் கொண்டிருக்கும் மத்திய அரசின் செயல்பாடுகள், நாட்டுக்கே பேராபத்தை விளைவிக்கக் கூடியதாக மாறியிருக்கின்றன. பயங்கரவாதத் தடுப்பு, வளர்ச்சிப் பாதை, பொருளாதார முன்னேற்றம் என, அனைத்துத் துறைகளிலும் தோல்வியடைந்த அரசாக, மத்திய அரசு திகழ்கிறது. இவ்வாறு மோடி பேசினார்.

“துக்ளக்’ ஆசிரியர் சோ பேசுகையில், “”எதிர் வரும் லோக்சபா தேர்தலுக்குப் பின், புதிய மத்திய அரசை அமைப்பதில், அ.தி.மு.க.,வின் பங்களிப்பு மிக முக்கியமானதாக இருக்கும். திறமையான அரசை வழங்கும் தகுதி, பா.ஜ.,வுக்கு மட்டுமே இருக்கிறது. ஒருவேளை, அக்கட்சிக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைக்காமல் போய், மதச்சார்பற்ற கட்சிகள் என்ற பெயரில் தடை கிளம்புமானால், ஜெயலலிதாவை பிரதமராக்க பா.ஜ., ஒத்துழைக்க வேண்டும்,” என்றார்.

நிகழ்ச்சியில் தமிழக பா.ஜ., தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், முன்னாள் தலைவர் இல.கணேசன், இந்து முன்னணி ராம.கோபாலன், நடிகர் ரஜினிகாந்த், இயக்குனர் பாலசந்தர், எழுத்தாளர் குருமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை முடித்துவிட்டு, விமானம் மூலம் அத்வானி டில்லிக்கும், மோடி ஆமதாபாத்துக்கும் சென்றனர். முன்னதாக, இருவரும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவையும், நடிகர் ரஜினிகாந்தையும் சந்தித்துப் பேசுவர் என செய்திகள் வெளியாகின. ஆனால், அத்தகைய சந்திப்பு எதுவும் நடக்கவில்லை.

35th Chennai Book Fair: Videos and News: Inauguration by Speaker Jeyakkumar

முந்தையக் குறிப்பு: 35th Chennai Book Fair 2012: Inauguration And Award Function

தினமணி செய்திக் குறிப்பு

1. 35வது சென்னை புத்தகக் கண்காட்சி: தொடக்க விழா: விருது வழங்கல்: ஆர் பொன்னம்மாள் – குழந்தை எழுத்தாளர்

2. சென்னை நிகழ்வுகள்: புத்தக விழா: 2012: குத்துவிளக்கு தொடக்கம்: இலக்கிய நிகழ்வுகள்

3. 35th Chennai Book fair Videos: Youtube Links: Publisher Exhibitions: BAPASI: Best Children Writer Awards: Prizes for Kids’ Author

35th Chennai Book Fair 2012: Inauguration And Award Function

Earlier Post: அழ வள்ளியப்பா நினைவு விருது: சிறந்த குழந்தை எழுத்தாளர்

அழ வள்ளியப்பா நினைவு விருது: சிறந்த குழந்தை எழுத்தாளர்

பரிசு பெறுபவர்: ஆர் பொன்னம்மாள்: R Ponnammal: Awards, Prizes and Life Notes

அழைப்பிதழ்: தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் – விருது, விழா: BAPASI

BAPASI - Madras Book Exhibition: Chennai Publishers Fair: Tamil Authors Guild