மொரார்ஜி பிரதமராக இருந்தபோது சுஜாதா எழுதிய வெண்பா –
‘மீசா’ மறைந்து ‘எமர்ஜென்ஸி’ விட்டுப்போய்த்
தேசாயின் ஆட்சியில் சந்தோஷம் – பேசாமல்
பாத்திரம் ஒன்றை எடுத்துக்கொண் டெல்லாரும்
………….. குடிக்க வாரும்.
மொரார்ஜி பிரதமராக இருந்தபோது சுஜாதா எழுதிய வெண்பா –
‘மீசா’ மறைந்து ‘எமர்ஜென்ஸி’ விட்டுப்போய்த்
தேசாயின் ஆட்சியில் சந்தோஷம் – பேசாமல்
பாத்திரம் ஒன்றை எடுத்துக்கொண் டெல்லாரும்
………….. குடிக்க வாரும்.
1. சிறுகதை: நாடக தினம் | காலச்சுவடு: அசோகமித்திரன்
இதே கதையை வேறு எவராவது எழுதியிருந்தால், புது எழுத்தாளர் கொடுத்திருந்தால், வலைப்பதிவர் மின்னஞ்சலாக அனுப்பியிருந்தால் எவரும் பிரசுரித்திருக்க மாட்டார்கள்.
ஃப்ரோசன் பரோட்டாவை மைக்ரோவேவில் வைத்து கொடுத்த மாதிரி வந்திருக்கும் இந்தப் புனைவில், அப்படி என்ன உள்ளே பொதிந்து உள்ளது என்று விளக்கினால், மறைபொருளை வெளிப்படுத்தினால் காலாகாலத்திற்கும் நன்றி சொல்வேன்.
~oOo~
2. உபதேசியார்: எஸ் ராமகிருஷ்ணன் – தி சன்டே இந்தியன்
முதல் தடவை வாசித்தால் எளிமையான செய்தியை எழுதியது போல் புரிகிறது.
கதையாக நினைத்து மீண்டும் படித்தால் என்னென்ன புரிகிறது என்று விலாவாரியாக சொல்லமுடியவில்லை. அவசியம் வாசிக்கவேண்டிய வெகு நேர்த்தியான ஆக்கம்.
பிரசங்கி. பெயர் எம். சிறுவர்களுக்கு சாத்தான். இரு வான்கோழி நைவேத்தியம். மகள்களின் மெழுகுவர்த்தி உற்பத்தி. பிச்சைக்கார கடவுள். கனவு நரகம்.
~oOo~
3. ஹரன்பிரசன்னா – வடக்கு வாசல் – “அங்குமிங்குமெங்கும்”
முஸ்தீபு படு ஜோர். முடிவு படு திராபை.
பதிவு எழுதும்போது பாதியில் ‘limit exceeded’ என்று கழுத்து நெறிப்பது போல் அசௌகரியமான மென்னிப் பிடித்து திருகி விட்டுச் சென்றுவிட்டார்.
வித்தியாசமான நாயகர். பழக்கமான குடும்பம். இலயிக்க வைக்கும் விவரிப்பு. இவ்வளவு இருந்தும் க்ளைமேக்ஸ் கொடுக்கத் தெரியாத பாரதிராஜா படம்.
Posted in Authors
குறிச்சொல்லிடப்பட்டது Asokamithran, கதை, விமர்சனம், EssRaa, Fiction, Kaalachuvadu, Quick, Ramakrishnan, Reviews, Story, TSI
ஸ்வீட் ஷா(ரூ)க்! – சுஜாதா (கற்றதும் பெற்றதும்: ஆனந்த விகடன்)
1லிருந்து 100 வரை எத்தனை முறை 9 வரும்?
எஸ்ஆர்கே-யின் கேபிசி-யில் அமிதாபுடன் ஒப்பிடுவதிலிருந்து தப்பிக்க முயற்சிக்கிறார் ஷாரூக்கான். ‘பவுஜ்’ என்ற தொலைக்காட்சித் தொடரில் முதலில் தலையைக் காட்டி, சினிமாவுக்குப்போய் வென்று முழுவட்டமாக மறுபடி தொலைக்காட்சிக்கு ஒரு சூப்பர் ஸ்டாராக வந்திருக்கிறார். அடிக்கடி கட்டிக்கொள்கிறார்; கண்ணடிக்கிறார்; உம்மா கொடுக்கிறார்; ஜோக் அடிக்கிறார்.
அது சிலருக்கு உவப்பதில்லை. குறிப்பாக, சென்ற வாரம் ஒரு பள்ளி ஆசிரியை ஆள் காட்டி விரல் காட்டி அதட்டியே சொல்லிவிட்டார், ‘என்னைக் கட்டிக் கொண்டால் அடிப்பேன்’ என்று. ஆனால், ஷாரூக் அசரவில்லை. ஆசிரியையின் அம்மாவைக் போய்க் கட்டிக்கொண்டு, செக்கை அவரிடம் கொடுத்தார்.
ஷாரூக் செய்த சில காரியங்கள் இன்ப அதிர்ச்சிகளை ஏற்படுத்தியிருக்கும். ஒண்ணேகால் லட்சம் வரை ஜெயித்து விட்டு, ஒரு தப்பான பதிலால் இருபதாயிரத்துக்குச் சரிந்து விட்டவருக்கு ஆறுதலாகத் தன் கைக் கடிகாரத்தைக் கழற்றிக் கொடுத்தார்.
‘‘உனக்குக் கல்யாணமானாலும் பரவாயில்லை; உன்னைக் கல்யாணம் செய்துகொள்ள விரும்பு கிறேன்’’ என்று சொன்ன இளம் பெண்ணிடம், ‘‘என் மனைவியிடம் கேட்டேன். யாராவது என் கஷ்டத்தைப் பகிர்ந்து கொண்டால் சரி என்றாள்’’ என்றார்.
வெல்டன் ஷாரூக்!
(‘கோன் பனேகா குரோர்பதியில் கேட்ட கேள்விக்கு விடை 20)
இலங்கைத் தமிழரின் நிலை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வாஷிங்டனில் கவனஈர்ப்பு பேரணி
Purpose of Rally: Stop the Genocide of Tamils in Sri Lanka
Venue: Opposite to White House, Washington DC
When: Friday, Feb 20, 2009
11 to 4 PM
Where: The Ellipse in front of the White House
Contact: savethamils@gmail.com
416.644.7259
905.266.1103
514.787.9486
613.800.0555
Violence in Sri Lanka has been on the rise since December 2005 and, according to the United Nations Human Rights Council, three million citizens have been affected, 500,000 forced out of their homes and over 4,000 killed in the past 12 months. The toll has added to the 100,000 deaths, mostly Tamil civilians, in more than two decades of sectarian strife since the early 1980s. Massive military operations in the Tamil homeland by the Sri Lanka government forces have displaced half-a-million war and tsunami devastated Tamil civilians. Their lands were appropriated to form High Security Zones. The Tamils living in the capitol Colombo were arrested and deported to the Tamil Northeast. Sri Lanka is thus engaged in systematic Ethnic Cleansing of Tamils. In the past year, more journalists and aid workers were killed with government complicity in Sri Lanka than anywhere else in the world. US military aid is on the increase to a government tainted by an abominable record of human rights violations.
Tamil Americans will urge the United States government and the international community to help end the occupation of Tamil homeland, and restore peace, justice and democracy
Posted in Pictures, Politicians, Politics
Harry Lewis: “Blown to Bits: Your Life, Liberty, and Happiness After the Digital Explosion.”
Almost everything we now do on a regular basis, from sending emails, taking photographs, writing text messages, calling on our cell phones, downloading music, typing on our computers, and using our credit and ATM cards, all of it generates information. And every single day the endless information generated by our ever-expanding digital footprints is recorded, tracked, searched through, sold, analyzed, and saved forever.
Some might call this hyper-networked digital explosion and its potential for collaboration and innovation a kind of utopia. But others warn that it also raises important concerns about privacy, identity, freedom of expression, accountability, and the future of democracy.
1. செல்பேசியை அணைத்து விட்டாலும் ஒட்டு கேட்கலாம்.
அந்தக் காலத்தில் வீட்டுக்குள் புகுந்து, வேவு பார்க்கும் கருவியை நிறுவினார்கள். ஆனால், இன்றோ, மிகவும் சுளுவாக சாஃப்ட்வேரை உங்களின் செல்பேசிக்கு அனுப்பி விடுகிறார்கள்.
அதன் பிறகு உங்களின் ஒவ்வொரு பேச்சையும் ஒட்டுக் கேட்கலாம்.
இந்த தொழில்நுட்பத்தைக் கொண்டு மாஃபியா தலைவர்களின் குற்றத்தை நிரூபித்து இருக்கிறார்கள்.
எஸ்.வி சேகருக்கு குளிராடி போட்டது நதியா காலம். எஃப்.பி.ஐ. செல்பேசி மூலம் உங்களைப் பார்ப்பது இந்தக்காலம்!
~oOo~
2. தான்யா ரைடரின் சம்பவம்:
மனைவியைக் காணவில்லை என்று கணவன் போலீசை நாடுகிறார். காவல்துறையோ, ‘உங்கள் மனைவி சுதந்திரத்தை நாடி, பிறிதொரு துணையைத் தேடி சென்றிருக்கலாம். எனவே, அவரைத் தேட மாட்டோம். தேடவும் கூடாது!’ என்று மறுத்து திருப்பியனுப்பி விடுகிறது.
ஒரு வாரம் கழிகிறது.
ஒரு வேளை கணவனே, தன் மனைவியைத் தீர்த்துக் கட்டியிருப்பாரோ என்று காவலர்களுக்கு சந்தேகம் வருகிறது. அதனால் அவரை குற்றஞ்சாட்டுவதற்காக தான்யாவைத் தேடத் துவங்கினார்கள்.
கார் விபத்தில் சிக்கிய தான்யா குற்றுயிரும் குலையுயிருமாக ஒரு வாரப் பட்டினியில் சேதமடைந்த காரில் மயக்க நிலையில் கண்டுபிடிக்கப் பட்டார்.
பெண் சுதந்திரம் வேண்டுந்தான்! குடும்ப வன்முறையிலிருந்து தப்பிக்க வேண்டுந்தான்!!
அதற்காக, கணவன் புகார் தந்தால் எஃப்.ஐ.ஆர். போட மறுக்கலாமா?
~oOo~
3. நீங்கள் நல்ல தந்தையா? பொறுப்பான தாய்?
இது விவாகரத்து கேஸ்.
கடுமையாக உழைக்கும் மனைவி சொல்கிறாள், ‘நான் என் குழந்தையை மிக சிறப்பாக கவனித்துக் கொள்வேன்’.
கணவனின் வக்கீல் தன் பக்க சாட்சியாக சுங்கச்சாவடிகளில் கட்டும் வரி ரசீதுகளை கொண்டு வரலாம். முன்னாளில் நீங்கள் எப்பொழுது அலுவலில் இருந்து வீட்டுக்கு வந்தீர்கள், எத்தனை நேரம் குழந்தையோடு செலவழித்தீர்கள் என்றெல்லாம் கண்டுபிடிக்க இயலாது.
ஆனால், இன்றோ, நாற்சக்கர சாலைகளில் இருக்கும் toll boothகளைக் கொண்டு ஒன்பது மணிக்கு வீட்டுக்கு வருவதை சொல்லி, மகளை தன்னிடம் ஒப்படைக்குமாறு வாதிட்டு வென்றும் விடலாம்.
சௌகரியமாக இருக்கிறது என்பதற்காக EZ-Pass போட்டு வைக்கிறோம். அதைக் கொண்டு, எங்கே, எப்போது, எத்தனை மணி நேரம் செலவழிக்கிறோம் என்பதை நாம் விரும்பாமலே உலகுக்கு சொல்கிறோம்.
~oOo~
4. வாடிக்கையாளர் அட்டை
ஷாப்-ரைட் ஆரம்பித்து சிவியெஸ் வரை எல்லோரும் தங்களின் நுகர்வோருக்கு ‘தள்ளுபடிக்கான அடையாள அட்டை’ தருகிறார்கள்.
என்ன சரக்கு அடிப்பீர்கள், அந்த சரக்கு அடித்தால் என்ன நோய் வருகிறது, நோய் வந்தால் என்ன வாங்குவீர்கள் என்றெல்லாம் இதன் மூலம் அறிய முடியும்.
~oOo~
5. விமான நிலையத்தில் CLEAR முறை
ஒசாமா பின் லாடனின் வேலையை அமெரிக்கா எளிதாக்கி இருக்கிறது. தீவிரவாதி விமானத்திற்குள் நுழைய வேண்டுமா?
வெறும் 80 டாலர் போதும் ஜென்டில்மேன்.
உங்களுக்கு சோதனையில் இருந்து விலக்குத் தரப்படும். பாதுகாப்பாக நீங்கள் ‘பாதுகாப்பு சோதனை’யை தவிர்க்கலாம்.
ஆல் க்ளியர்!
~oOo~
6. கூகிள் சக்தி
உடம்பு சரியில்லை என்றால் என்ன செய்கிறீர்கள்?
“மூக்கொழுகல் AND காதடைப்பு” என்று கூகிள் செய்வோம். உங்களை மாதிரியே பக்கத்து தெரு பங்கஜம், அதே பேட்டையில் வசிக்கும் பேட்ரிக் என்று பன்மடங்காக ஒரே மாதிரியான தேடல் வர ஆரம்பிக்கிறது.
மருத்துவமனைக்கு செல்வதற்கு முன், அரசாங்கத்திற்கு தகவல் போவதற்கு முன், இன்டெலிஜென்ஸ் அறிந்துகொள்வதற்கு முன் கூகிளுக்கு ‘இந்த நோய், இப்படிப்பட்ட இடத்தில்’ பரவ ஆரம்பித்துள்ளது.
நோய் சரியாகாத படசத்தில் ஓரிரண்டு நாள் கழித்துதான் டாக்டரை நாடுவோம். ஆனால், எல்லா தகவலையும் அதற்கு பல மணி நேரம் முன்பே கூகிள் கணித்துவிடுகிறது.
இன்ஃபோர்மேசன் இஸ் பவர்!
Posted in Private, Software, Solutions
குறிச்சொல்லிடப்பட்டது Abuse, America, அமெரிக்கா, கணினி, சட்டம், சுயம், செல்பேசி, சொவ்வறை, ட்விட்டர், பதிவு, ப்ளாகர், மின்கலன், மென்பொருள், Data, Democracy, Digital, DN, Facebook, Footprints, Google, Husband, Identity, Invasion, Law, Microsoft, Order, Personal, Privacy, SMS, Twitter, US, USA, Wife
1: தற்கொலை குறித்து உங்கள் கருத்தென்ன?
2. உயரிய லட்சியங்களுக்காக தன்னை வருத்திக் கொள்வதும், தற்கொலை செய்து கொள்வதும் அதற்கு வீரவணக்கம் செய்வதும் பாராட்டுக்குரிய செயலா?
3. அடைய வேண்டிய இலக்கிற்காக வழிமுறையில் சில சமரசங்களை செய்து கொள்ளலாமா?
4. கணவன் இறந்தவுடன் மனைவியையும் தீக்குளிக்க வைப்பது சரிதானா?
5. வாழ்க்கையின் பாரத்தைத் தாங்க இயலாதவர்கள் தற்கொலை மேற்கொள்கிறார்களா?
6. மற்றவர் மேல் எல்லா சுமையையும் போட்டுவிட்டு, தான் தீக்குளித்து விடுதலைப் பெற்றுக் கொள்கிறார்களா?
7. கிறித்துவத்தில் பாவமன்னிப்பு; பௌத்தத்தில் கர்மா; இஸ்லாமின் சொர்க்கம் போல் இல்லாமல் இந்து மதத்தில் மறுபிறவி போன்ற கருத்தாக்கங்கள்தான் தியாகத்தின் சின்னமாக அர்ப்பணிக்க வைக்கிறதா?
8. உயரிய இடங்களை அடைய முடியாதவர், மற்றவரைக் கண்டு பொறாமைப்படுபவர், அடுத்தவரின் மதிப்பிற்கு ஆசைப்படுபவர்களை எல்லாம், இந்த வீரவணக்க நிகழ்வுகள் உயர்வு நவிற்சிக்கு வித்திட வைத்து, தீக்குளிப்புகளை ஊக்கப்படுத்துகிறதா?
9. வீரம் என்றால் கத்தி கொண்டு போரிட்டு சண்டையில் எதிரியை வீழ்த்துவதா?
10. தற்கொலையும் கூடாது; உண்ணாவிரதத்திலும் பயனில்லை; அப்படியானால் அறப்போராட்டங்களைத் துவக்கி, பெருமளவில் மக்களிடம் கொண்டு சென்று, ஆட்சியார்களிடம் மாற்றத்தை எவ்வாறு உருவாக்குவது?
11. ஒபாமா போல் பெரிய அளவில் துவக்க கால பணசேமிப்பு இல்லாமல், சுய ஆர்வத்தை வித்தாக வைத்து, பலரை ஈர்த்து, மாற்றங்களுக்கு கால்கோள் இடுவது எங்ஙனம்?
12. திருவிழா கொண்டாட்டம் போல் வீரவணக்கமும் குழுவாகக் கூடி கூத்து போட்டு, கும்பலாக ஒன்றுசேர்ந்து, கூட்டம் பார்த்து பிரமித்து, மகிழ்ச்சியைப் பகிரும் தருணங்கள்தானா?
குறிச்சொல்லிடப்பட்டது achievements, Activism, காந்தி, கேள்வி, சுதந்திரம், போராட்டம், முத்துக்குமார், Campaigns, Celebrations, Communism, Dead, Death, Escape, Events, Family, Fun, Gang, Gatherings, Goals, God, Greed, Hindu, Hinduism, Life, Mob, Money, Muthukumar, Party, Path, Politics, Power, Protests, Questions, Religion, Sacrifice, Self-Immolation, Suicide, Underachievers, Unions
Inequality kills by Peter Wilby :: Politicians take heed: social injustice is, literally, deadly – New Statesman: The WHO report (Closing the Gap in a Generation)
“We traditionally assume that health improvement is delivered by medical advances, better hospitals, more doctors and more spending on health services. Most political argument is about how to achieve these ends, with the role of preventative health – improved lifestyles – now adding a further dimension.
The WHO report is saying something quite different: health is political in the broadest sense because it is influenced by the distribution of power, income, goods and services.
Here are some more facts. US blacks are rich by world standards but, in a highly unequal country, most are very poor by local standards. People from Tunisia, Jamaica, Panama, Libya, Lebanon and Cuba all have higher life expectancies than the US black population.
If black mortality rates were the same as those for US whites 886,202 deaths would have been averted between 1991 and 2000. Over the same period, 176,633 lives were saved by medical advances.”
அசமத்துவம் என்பதை ஒரு தத்துவ, அரசியல், பொருளாதார, அற, பண்பாட்டு ஆய்வுக் கூறாக எடுத்துப் பார்த்து அதோடு சண்டை போடவும், அதே நேரம் அழிக்க முடியாத ஒரு நிரந்தர அம்சமாக, இயற்கையின் தவிர்க்கவியலாத விதியாக அதைப் பார்க்கத் தேவை என்ன என்பதை நிறுவவும் பெருமுயற்சி தேவை என்பது எனக்குத் தெரியும்.
அதைச் செய்யத் தேவையான ஆசை மட்டுமே எனக்கு இருக்கிறது. திறமை இருக்கலாம். முயற்சி இல்லை. அதனால் அரைகுறையாக இதை உங்களிடம் தள்ளுகிறேன்.
Inequality என்கிற இந்த சொற்பிரயோகத்துடன் எனக்கு நிறைய ஜகடா உண்டு. தன்னளவிலேயே தன்னை மோசமாகக் காட்டும் சில சொற்களில் இதுவும் ஒன்று.
ஆங்கிலம் புரிந்த எந்த நாட்டிலும் அனேகமாக எல்லா மனிதரிடமும் இந்தச் சொல்லுக்கு ஒரு இழிவான பார்வைதான் கிட்டும். ஏதோ எல்லா மனிதருக்கும் தாம் மிக நல்லவர் என்று ஒரு எண்ணம்.
நடத்தையிலும், நம்பிக்கையிலும் எத்தனை அசமத்துவத்தை தினமும் அவர்கள் நிறுவிக் கொண்டிருந்தாலும், கருத்தளவில் அசமத்துவத்தைக் கறாராகவும், முழுமூச்சோடும் தாம் எதிர்ப்பவராகவும், சமத்துவத்தை அடைவதுதான் தம், மேலும் மொத்த மனித குலத்தின் குறிக்கோள் எனவும் அபத்தமாக நம்பாத மனிதரை நான் இன்னும் பார்க்கவே இல்லை.
அப்படி யாராவது என் கண்ணில் பட்டிருந்தால், அவரை நான் ஒரு அபத்த மனிதராகவோ, அல்லது கிறுக்கராகவோ, அல்லது அதிகார வெறியராகவோ – அதாவது நார்மல்சி என்பதில் இருந்து விலகிய ஒரு அதீத கோணல் மனிதராகவே நானும் பார்த்திருப்பேன்.
அவர் ஒருவரே முழு எதார்த்த வாதி என்று அவரைப் பார்க்க இத்தனை வருடம் கழித்துச் சமீப வருடங்களில்தான் எனக்கு சாத்தியமாகி இருக்கிறது. உங்களுக்கு நான் சொல்வது புரியும் என்று கூட எனக்குத் தோன்றவில்லை.
ஏன் சமத்துவம் என்பது ஒரு மாரீச மான் மட்டுமல்ல, அதை அடைந்தால் மனித குலம் அந்த மான் ஒரு பேரரக்கன் என்பதை அறியும் என்பதையும் பேசலாம்.
இப்போதைக்கு சில அறிவிப்புகளை மட்டும் தருகிறேன்.
அசமத்துவம் என்பதை எடுக்க முடியாது, அழிக்க முடியாது, அது இருப்பதுதான் மனித படைப்பு சக்திக்கே உந்து சக்தி என்று கருதுபவன் நான். அதற்காக நான் விமானத்தில் போக வேண்டும் வேறு மக்கள் தெருவில் குப்பை அள்ள வேண்டும் என்று நான் சொல்கிறேன் என்று என் மீது ஈட்டி வீச யாரும் தயாராக வேண்டாம்.
ஒரு அளவுக்கு மேல் inequality அசமத்துவம் என்பதைக் குறைக்க முடியாது.
ஸ்காண்டிநேவிய நாடுகளில் சாதாரணமாக 1:4 என்ற விகிதத்தில் அசமத்துவம் இருப்பதாகச் சொல்வார்கள். இதையும் குறைக்க முடியலாம்.
எல்லா மனிதருக்கும் ஒரே சம்பளம் என்றும் அனைவருக்கும் ஒரே தொகைதான் வருடத்துக்கு என்று ஆக்கினாலும் அசமத்துவத்தைக் குறைக்க முடியாது. அப்படிக் குறைத்தால் வேலை செய்ய வருபவர்கள் மிகக் குறைவாகவும், வந்தாலும் துலக்கமாகச் செய்பவர்கள் குறைவாகவும், துலக்கமாகச் செய்தாலும் புது உத்திகள், முன்னேற்றத்துக்கான கண்டு பிடிப்புகள் ஆகியனவற்றிற்காக தம் அனைத்தையும் கொடுப்பவர்கள் மிகக் குறைவாகவும் ஆவர் என்பது என் ஒரு ஊகம்.
எதிர்மறையாக எல்லாரும் அசாதாரண ஊக்கத்துடன் சமூகம் முன்னேற என்று உழைக்கத் துவங்கினால் எனக்கு அதில் எந்த எதிர்ப்பும் இல்லை.
இது வெறும் உழைப்பு அதற்கான ஊதியம் என்ற ஒரு குறுகிய தளத்தை மட்டும் கருதிப் பேசியது. இதைப் பெருக்கினால் ஏதேதோ விளைவுகள் நம் கண்ணுக்குப் புலப்படும்.
குறிச்சொல்லிடப்பட்டது மைத்ரேயன், Capitalism, Education, Equality, Growth, Health, Healthcare, injustice, Maithreyan, Maitreyan, Medical, Policy, WHO