Tag Archives: Srilanka

தமிழக மீனவர் போராட்டமும் அறமும்

டுநீசியாவில் தீக்குளிப்பதால் ட்விட்டர் கூட்டம் நிறைகிறது. பிரதிபலிப்பாக, எகிப்தில் புரட்சி வெடிக்கும் அபாயம் தெரிகிறது. தொடர்ச்சியாக, சூயஸ் கால்வாயில் எண்ணெய்ப் போக்குவரத்து சஞ்சலப்படுவதால், விலைவாசி எகிறுகிறது. அதனால், பெட்ரோல் விலையை விட ஜாஸ்தியான தக்காளி, ஏரோப்ளேனில் உட்காருகிறது. ட்விட்டர் புரட்சியில் சீமானும் தமிழக மீனவருக்காக குதிக்கிறார்.

இதற்கு பட்டாம்பூச்சி விளைவை சந்தேகம் கொள்ள வேண்டாம். கேள்வி இதுதான்:

உங்களுக்கு வாக்களித்து மாற்றம் விளைவதில் நம்பிக்கையா? தன்னார்வலராக தண்டல் எடுத்து கிரியா ஊக்கி செயல்பாட்டில் ஈடுபாடா?

டுனீசியாவில் எகிப்தில் நடப்பது இரண்டாம் வகை. தமிழக மீனவருக்கு நடக்கும் போராட்டம் முதல் வகை. வினவு பதிவு எழுதுவார்; பெயரிலி மறுமொழிக் குரல் எழுப்புவார்; எஸ்.எம்.எஸ் அஞ்சல் மறுஒலிபரப்பு தொடரும்; வைகோ கடிதம் எழுதுவார்; நிருபமா நாவ் சுற்றுலா செல்வார்; பா.ம.க. கூட்டணி வைப்பார் கலைஞர்.

இது நிச்சயமாக பட்டர்ஃப்ளை எஃபக்ட்.

‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ -> எனவே 49 ஓ போடு என்னும் ஞாநியும்; ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு மாற்று அதிமுக ஜெயலலிதா மட்டுமே என்னும் ‘துகளக்’ சோ இராமசாமியும்; அறம் என்பது கூட முதலாளித்துவத்துவத்தின் இசைக்குதான் என்னும் ஜெயமோகனும் சிறு துரும்பைப் போட்டு இருக்கிறார்கள்.

நான் மிகவும் மதிக்கும் அமெரிக்க விழுமியங்களாக
i) Volunteering
ii) Aspiration
iii) Transparency
சொல்வேன்.

ஒளிக்கற்றை பேரத்தில் எவரெல்லாம் ஈடுபட்டார்கள்? யாருக்கு, எப்பொழுது காசு கொடுத்தார்கள்? ஏன் அவ்வாறு முடிவெடுத்தார்கள்? சட்டத்தை எவ்வாறு மாற்றலாம்? மாறுவதை எப்படி தடுக்கலாம்? – இதெல்லாம் அறிய முடிவது வெளிப்படைத்தன்மை.

எம்.எல்.சி.ஆக, உள்ளூரில் வால் – மார்ட் வராமல் வழிசெய்வது தொடங்கி, அரசாங்க பொக்கீடு பற்றாக்குறை நிவர்த்தி செய்வது வழியாக அடுத்த குடியரசுத் தலைவராவது எங்ஙனம் வரை வளர, உயர ஆசைப்பட வைத்து பாதை காட்டுவது பதவியும் பொறுப்பும் கூடிய மேன்மைத்தன விழைதல்.

அரியணையில் அமர பயமா? பணம் செலவழிக்க இயலாமையா? தன்னார்வலராக, செயல் வீரராக பயணத்தைத் துவங்க வைப்பதோடு, நேர்மைத் திறமும், நெஞ்சில் உரமும் கொண்ட சுத்தமான பயணம் மேற்கொள்ளவைக்கும் தொணடர் வழியில் ஆட்டோவும் வராது; அவப்பெயரும் தராது.

தமிழகத்தில் இயங்கும் புகழ்பெற்ற, கவனிப்பும் பெருமளவில் கிடைக்கும் சிந்தனையாளர் எல்லோருமே நிந்தனையாளராகவோ மந்தையாளராகவோ விளங்குவது இருத்தலிய பிரச்சினை. அப்படி இயங்காத, மூன்று சிந்தனையாளர்களை எடுத்துக் கொள்ளலாம்.

ஊன்றுகோல் ஞாநி

கைத்தடியை பெரும்பாலும் எவரும் விரும்புவதில்லை. மேடையேற சிரமப்படும் எண்பது வயது பாலச்சந்தர், இன்னொருவரின் கையைத் துணைக்கழைக்கிறார். நேரடியாக தள்ளுவண்டிக்கு மாறிவிட்டார் கலைஞர். ஞாநியின் பேச்சுக்களை அதிமுகவும் ரசிக்காது; திமுகவும் விரும்பாது.

உடனடி அரசியல் மட்டுமே ஈடுபாடு என்பதால் செய்தித்தாள் விசிறிகளின் ஹீரோ; மேக்ரோ பார்வையில் அறச்சீற்றம் என்பதால் நடுத்தர வர்க்கத்தின் ஆதர்சம்.

வழிகாட்டி சோ

ரஜினி ரசிகர் முதல் அரசியல் தரகர் வரை அறிவுஜீவியாக தோற்றமளிக்கிறார் ‘துக்ளக்’ சோ. நோ சொல்ல வேண்டிய இடத்தில் so…so…வாக மழுப்பிவிடுவதால் சோ என்பது காரணப்பெயர். வேதம் குறித்துப் பேசுவதால் இவரின் எழுத்தை வேதவாக்காக எடுத்துக் கொள்வோர் பலர்.

கலங்கரை விளக்கம் ஜெயமோகன்

ஞாநியின் மதிப்பீடு சின்ன கோடு என்றால், ஜெமோ, பெரிய கோடாக மேக்ரோ பார்வை. சீனாவையும் தொலை நோக்கலாம். அயன் ராண்டையும் இழுக்கலாம்.

உதாரணத்திற்கு அறம் சிறுகதையில் கூட இரு சாராரின் நியாயம் வெளிப்பட்டிருக்கும்.

அ) எழுத்தாளரின் ஊதியமும் பதிப்பாளரின் பற்றாக்குறையும்
ஆ) ஊழியர் கை ஓங்குவதும் பதிலுக்கு நடுத்தெருவில் சத்தியாகிரகமும்
இ) விக்கிரமன் பட உச்சகட்ட காட்சி சுபமஸ்து முடிவு

ஆனால், இன்றும் ‘உரிமை பதிப்பகத்தாருக்கே’ என்று போட்டுக் கொள்வதும், எழுதியவரின் பெயருக்கு பதில் விற்கக்கூடியவரின் பெயரை மாற்றிப் போட்டு பெஸ்ட்செல்லர் ஆக்கிக் கொள்வதும், எழுதிய பிரதி ‘பத்திரமாக இருக்கிறது’ என்று சால்ஜாப்பு சொல்லிவிட்டு, கேட்கும்போது தொலைந்து போனதாக சொல்லி விடுவதையும் நேரடியாக எழுதினால், இன்னும் உக்கிரமாக, ஒருதலை பட்சமாகி விடும் என்பதால்… இரு தரப்பையும் நேர்மையாக அணுகும் தர்க்கமுறை தேவைப்படுவதால், ‘புனைவு’ என்னும் வட்டத்துக்குள் சுருண்டுவிடுகிறார்.

நாகர்கோவிலில் தேவதேவன் கவிதை அரங்கு போல் அமெரிக்காவில் கருத்தாளர்களை ஓய்வாக சந்திக்கும் நிகழ்வில் பங்கு கொள்ள பல்லாயிரம் டாலர் செல்வாகும். அவ்வாறு பணம் கறக்காமல், வெகு சல்லிசாக அணுகக் கூடியவராக இருப்பவர். அப்புறம் ஏன் இதை சக்தியாக (power), கொடையாக (wealth), அறிவியக்கமாக (intellectual) மாற்றவில்லை?

ஒரு காலத்தில் காந்தி வழிகாட்டினார். அப்புறம் உதயமூர்த்தி, டாடா, டெண்டுல்கர், அம்பானி, ராகுல் என்று நெடிய பாரம்பரியம் வந்திருக்கிறது. இன்றைய தலைமுறையின் இலட்சிய புருஷர்கள் எவ்விதம்? நிம்மதியை நாடி எங்கே செல்கிறார்? 9 டு 5 ஜோலிகாரர், தன் சிதறுண்ட கவனத்தையும் தவிக்கும் சிந்தையையும் எவ்வாறு நெறியாள்கிறார்?

1. கார்பரேட்/கமண்டல சாமியார் (நித்தியானந்தா, ஜக்கி, சங்கர மடம்)
2. படைப்புலக கர்த்தா (ஜெய மோகன், சாரு, ‘எந்திரன்’ ஷங்கர், பட்டிமன்ற லியோனி)
3. கேளிக்கை (ஃபேஸ்புக், விளையாட்டு, குடி)

இப்பொழுது தமிழ்நாடு மீனவர் கேப்பிடலிசத்தின் செல்லப்பிள்ளை. வெப்சைட் துவங்கலாம். தமிழக மீனவர் ஃபேஸ்புக் சுயவிரும்பிகளின் இலட்சிய வார்த்தை. கவனிப்பு கோரும் விளையாட்டு. குறிக்கோள் இல்லாத சமுதாயத்தின் அளவுகோல்.

தொடர்புள்ள பதிவுகள்:
1. Ethics – India Calling: An Intimate Portrait of a Nation’s Remaking By Anand Giridharadas
2. தமிழக மீனவர்கள் நடுக்கடலில் கொல்லப்படுதல்

‘அச்சடிக்க காசு கொடுக்கிறவன் கேக்கிறபடிதான் எழுதணும்’

The ‘un-interfering publisher’ is one of journalism’s great myths

பத்திரிகை வெளியிடுபவர், தன்னுடைய இதழின் உள்ளடக்கத்தில் கைவைக்கமாட்டார் என்பது மிகப் பெரிய பொய்.

தலைப்பில் வந்திருக்கும் கருத்தை வழிமொழிந்தவர்: இந்து என் ராம்: http://twitter.com/nramind/status/2508349650

மீடியாவில் இருப்போரின் தரப்பட்டியலையும் தலை பத்து வரிசையையும் http://www.mediaite.com/ வலையகம் வெளியிடுகிறது. இதைத் துவங்கியவர் MSNBC சேனலலின் வழக்கறிஞர். மேலும், ஊடகத் தொடர்பாக ஆலோசனை வழங்கும் நிறுவனத்தை நிர்வகிப்பவர்.

தொடர்புள்ள தள உரிமையாளரின் பேட்டி: Q&A: Mediaite’s Colby Hall And Rachel Sklar – The Web site’s managing editor and editor at large discuss what all the fuss is about

Detractors were quick to point out that site founder Dan Abrams serves in some respects as a publicist, a journalist and a businessman–roles that work best when separate–as CEO of a media consultancy firm and legal analyst for MSNBC in addition to his role at Mediaite.

அதாகப்பட்டது, தன்னுடைய கன்ஸல்டிங்கை காசு கொடுத்து பெறுபவர்களின் ரேட்டிங்கை — மீடீயேட்.காம் உயர்த்திக் காட்டும்.

தொடர்புள்ள ஸ்லேட் கட்டுரை: The fledgling media Web site leaves an acrid aftertaste

This statement combines media hypocrisy, a gaffe, a bit of self-righteousness, and a dollop of stupidity all in one short sentence. The “un-interfering publisher” is one of journalism’s great myths. Every publisher who has the power to hire and fire makes his wishes known, either overtly or covertly. When his signals are ignored or disobeyed, the promised editorial independence always vanishes. Always. Mediaite will be no exception.

தமிழில் இருக்கும் பத்தி எழுத்தாளர்களுக்கும் தொலைக்காட்சி தொகுப்பாளர்களுக்கும் செய்தி ஆசிரியர்களுக்கும் மீட்டர் போடும் வெப்சைட் ஆரம்பித்தால் நன்றாகத்தான் இருக்கும்.

Matt-Bors-Idiot-box-Future-of-Journalism-Media-MSM-Cartoons

தற்போது வெளியாகும் சிறுபத்திரிகை பத்திக் கட்டுரைகள், கருத்துத் தொடர்கள், அனுபவச் சிதறல்கள், இதழ்தோறும் இடம்பெறுபவர்கள்:

அ) காலச்சுவடு

  1. பெருமாள்முருகன்
  2. ஸ்டாலின் ராஜாங்கம்
  3. கவிதா
  4. சச்சிதானந்தன் சுகிர்தராஜா
  5. சக்கரியா
  6. திவாகர் ரங்கநாதன்
  7. ஆ. சிவசுப்பிரமணியன்
  8. ரவிக்குமார்
  9. அ. ராமசாமி

ஆ) உயிர்மை

  1. சாரு நிவேதிதா
  2. எஸ்.ராமகிருஷ்ணன்
  3. ஷாஜி
  4. பிரபஞ்சன்
  5. பிரபஞ்சன்
  6. சு.தியடோர் பாஸ்கரன்
  7. இளைய அப்துல்லாஹ்
  8. மாயா
  9. ஆர்.அபிலாஷ்
  10. அ.முத்துலிங்கம்
  11. எஸ்.வி.ராமகிருஷ்ணன்
  12. யமுனா ராஜேந்திரன்
  13. சுகுமாரன்
  14. அழகிய பெரியவன்
  15. அ.ராமசாமி
  16. ச.தமிழ்ச் செல்வன்
  17. இந்திரா பார்த்தசாரதி
  18. பாரதி மணி
  19. அ.முத்துக்கிருஷ்ணன்
  20. வெங்கடேஷ் சக்கரவர்த்தி

இ) யுகமாயினி

  1. இரா. முருகன்
  2. சுப்ரபாரதி மணியன்
  3. அழகிய பெரியவன்
  4. நவீன்குமார்
  5. சந்திரசேகரன் கிருஷ்ணன்
  6. த அகிலன்
  7. பாவண்ணன்
  8. செங்கை ஆழியான்
  9. நா கண்ணன்
  10. நாகரத்தினம் கிருஷ்ணா
  11. எஸ் வைதீஸ்வரன்
  12. திருப்பூர் கிருஷ்ணன்
  13. இ.பா அம்சப்ரியா
  14. கே பாலமுருகன்
  15. கோவி லெனின்
  16. புதிய மாதவி
  17. சந்திரவதனா செல்வகுமாரன்
  18. ரவி சுப்ரமணியன்
  19. சோலை சுந்தரபெருமாள்

ஈ) புதுவிசை

  1. எஸ்.வி.ராஜதுரை
  2. அழகிய பெரியவன்
  3. டி.அருள் எழிலன்

உ) வார்த்தை

  1. இரா. முருகன்
  2. வ. ஸ்ரீநிவாசன்
  3. சுகா
  4. கே.எம். விஜயன்
  5. நரேந்திரன்
  6. எஸ். ஜெயஸ்ரீ
  7. பி.ச. குப்புசாமி

ஊ) உன்னதம்

  1. கலையரசன்
  2. யமுனா ராஜேந்திரன்
  3. எச்.பீர்முஹம்மது
  4. குட்டிரேவதி

Murder case in Nigeria: Ken Saro Wiwa and 8 Ogoni people Executed: Blood on Shell’s hands

“Corporations have neither bodies to be punished, nor souls to be condemned, they therefore do as they like”
Edward, First Baron Thurlow 1731-1806

  • நர்மதாவுக்கு மேதா பட்கர் கிடைத்த மாதிரி நைசீரியாவின் ஒகொனி பழங்குடியினருக்கு இராணுவ அரசு இழைக்கும் அராஜகங்களைத் தட்டி கேட்கிறார் கென்.
  • நைஜீரியாவின் எண்ணெய் பிரச்சினைகளை சுட்டிக் காட்டி கென் சாரோ விவா பத்திரிகையில் எழுதுகிறார்.
    1. ஒகோனி பூர்வகுடியினருக்கும் நில உரிமைதாரர்களுக்கும் போதிய நஷ்ட ஈடு கிடைக்காமை: சொந்த வீட்டை விட்டு துரத்தப்படுதல்
    2. உடலுக்கு தீங்கு விளைவிக்கும் நச்சுப் பொருள்களை கையாளும் வேலை: மாசு கலந்த பணியினால் இளவயது மரணங்கள்.
    3. எண்ணெய்க் கசிவுகள்
    4. விலை உயர்ந்த பெட்ரோலையும் டீசலையும் மட்டும் எடுத்துக் கொண்டு இயற்கை வாயுவை அப்படியே காற்றில் கலப்பது
    5. சுற்றுச்சூழல் நாசம்: மீன் இறப்பு; கடல்வாழ் உயிரினங்களுக்கு குந்தகம்

Wiwa v Shell: the day of truth? | Kevin Smith | Comment is free | guardian.co.uk: “When oil is extracted, there is often a certain amount of natural gas as well. Instead of pumping this gas back underground or using it to meet the energy needs of local communities, it is cheaper to simply burn off this gas. Although Shell has repeatedly said that it intends to stop burning off gas, the flares are toxic and harmful, which is why they are strictly regulated in countries such as the US or the UK. Such flaring is only cheap when environmental and human costs are not taken into consideration.

According to a recent report by an energy journalist, the amount of gas that is being wastefully flared by oil companies in the Niger Delta is equivalent to one third of the North Sea’s annual gas production. Gas flaring has technically been illegal in Nigeria since 1984, but oil companies including Shell continue this polluting practice with impunity.

The cases aim to hold Shell accountable for human rights violations in Nigeria, including

  1. complicity in summary execution,
  2. crimes against humanity,
  3. torture,
  4. arbitrary arrest and
  5. detention as well as
  6. for requesting, financing and assisting the Nigerian military – which used deadly force to repress opposition to Shell.”

பாஸ்டன் க்ளோப் தலையங்கம்: Ending a Shell game – The Boston Globe

  • பெட்ரோல் நிலங்களை குத்தகை எடுத்திருக்கும் ஷெல் நிறுவனத்திற்கு இவ்விதமான அம்பலப்படுத்தல்கள் ரசிக்கவில்லை.
  • இவற்றைக் குறித்து குரல் கொடுக்கும் சரோ விவா மீது பொய்வழக்கு தொடுக்கிறது மிலிடரி ராஜாங்கம்.
  • இராணுவ அடக்குமுறையில் ஒகோனியர் கொல்லப்படுகிறார்கள்; இவ்வாறான தீர்த்துக்கட்டல்களுக்கு ஷெல் பெட்ரோலியம் காசு தந்து குஷியாக வைத்துக் கொள்கிறது.
  • ஓகோனிஒயர் குறித்து உலக நாளேடுகளுக்கு செய்தி வழங்கிய கென் சாரொ விவாவிற்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது.
  • அவரது தூக்கு தண்டனையை ரத்து செய்வதற்கு பர்த்தியாக, போராட்டங்களைக் கைவிடுமாறு ஷெல் கார்பரேஷன் பேரம் பேசுகிறது.
  • ஷெல் ஆயில் நிறுவனத்தின் கட்டளைக்கு அடிபணியாததால், மூன்று நாள் பட்டினி போட்டு, முடிவில் கென்னும் அவரின் எட்டு சகாக்களும் இராணுவ அரசினால் கொல்லப்படுகிறார்கள்.
Port Harcourt, the oil capital of Africa is a crowded city plagued by crime where most people live on mud streets without electricity, running water or sewer. Despite producing 2.26 million barrels of oil a day, 60 percent of Nigerians live below the poverty line.

Port Harcourt, the oil capital of Africa is a crowded cityplagued by crime where most people live on mud streets without electricity, running water or sewer. Despite producing 2.26 million barrels of oil a day, 60 percent of Nigerians live below the poverty line.

மேலும் விவரங்களுக்கு: Ken Saro-Wiwa v Shell oil unfurls: how the Guardian covered it | World news | guardian.co.uk

இந்தக் குற்றத்திற்கு பிராயச்சித்தமாக பதினைந்தரை மில்லியன் ($15.5m – £9.6m) டாலர்களை தற்போது ஷெல் நஷ்ட ஈடாக வழங்கவுள்ளது. செய்தி: Shell agrees to pay compensation for execution of Saro-Wiwa and Ogoni protesters | World news | guardian.co.uk

சிகரெட் பிடித்து புற்றுநோய் வந்தவருக்கே பில்லியன் டாலர் அள்ளித் தரும் நாட்டில் 15.5 மில்லியன் மிகவும் குறைந்த தொகை. ஆனால், மேற்கத்திய நிறுவனம் ஆப்பிரிக்க நாட்டில் இழைத்த அநீதிக்கு, அமெரிக்க நீதிமன்றங்களில் வளர்ந்த நாட்டின் தீர்ப்புகள் கொடுக்கலாம் என்பதற்கு முதல் உதாரணமாக இருப்பதால் முக்கியத்துவம் பெறுகிறது.

Shell settlement with Ogoni people stops short of full justice | John Vidal | Environment | guardian.co.uk: “There are thousands more Ogoni who will now want to bring their case to the west to see justice done, as well as other Niger Delta tribes like the Ijaw, the Igbo, the Ibibio and the Itsekiri who also want justice. There have been more than 500 pollution cases against Shell in Nigeria, but few reach court and the company has been able to use the appeal system to delay those that do for many years.

Now the lesson is that justice and reparation can be obtained abroad. A Dutch court will soon hear a case brought against Shell by other Niger Delta villagers following a major oil spill years ago. Meanwhile, in Ecuador, Chevron is about to hear its fate in a massive pollution case that has been going on for nearly 10 years. It’s quite possible the company will be fined more than $4bn.”

போபால் கசிவை எடுத்துக் கொள்வோம். இன்னும் அந்த நிறுவனம் ஜோராக உலக நாடுகளில் செயல்பட்டு வருகிறது. இந்தியாவிலோ, உயிரின் மதிப்பு சில்லறை செல்லாக்காசு. எட்டணாக்களை விட்டெறிந்து விட்டு புதிய பேட்டரி தயாரிக்கப் போய் விட்டார்கள். ஆனால், இந்த ஷெல் நிறுவன நஷ்ட ஈடு, இந்த மாதிரி சரிக்கட்டல் செய்த பழம் பெருச்சாளிகள் வயிற்றில் புளி பேஸ்ட்டை கரைக்க வைத்திருக்கிறது.

பழைய கேஸை தூசு தட்டி எடுக்கலாம். எத்தனை பேருக்கு கண்ணு கப்ஸா ஆனது; எவ்வளவு பேருக்கு காலு போச்சு; எம்புட்டு குழந்தைகள் குறைபாடுகளோடு வாழ்க்கையை தொலைத்து நிற்கின்றன என்று கணக்கு போட்டு, அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு போடலாம். இதுவரை ‘நிற்காமல் ஓடுவதற்காக புகழ்பெற்ற மின்கலம்’ போன்ற சொற்றொடர்கள் காணாமல் போய் டௌ கார்ப்போரேஷன் மேல் குற்றப்பத்திரிகையை மக்கள் உயிரை மதிக்கும் நீதிபதிகளிடம் முன் வைக்கலாம்.

அந்த விதத்தில் ஷெல் வழக்கு முக்கிய மைல்கல்.

நிறுவனங்களை சட்டையைப் பிடித்து கேள்வி கேட்பது நல்ல விஷயம். ஆனால், சிலியின் பினாச்சே, இலங்கையின் ராஜபக்சே ஆகியோருக்கு தர்மதேவதையின் கடைக்கண் பார்வை கிடைக்க இன்னும் எத்தனை காலம் எடுக்குமோ?

இந்த மாதிரி தலைவர்களைக் கூட விட்டுவிடலாம். இராஜீவ் காந்தி மாதிரி எப்படியாவது வன்மம் தீர்க்கப்பட்டு, ஹிட்லர் மாதிரி சுட்டுக் கொண்டு, மிலோபதான் மாதிரி அனுபவித்து நியாயம் எட்டியாவது பார்க்கலாம்.

ஆனால், இருபதாண்டு முன்பு ஷெல் பங்குதாரராக இருந்து கொண்டு கோடி டாலரை ஊக்கத்தொகையாக பெற்ற CEO யார்? அவருக்கு எடுபிடியாக இருந்து கொண்டு முடிவுகளை சிரமேற்கொண்டு நிறைவேற்றிய தலைவர்கள் எவர்? ஷேர் ஏற்வதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டிருந்த போர்ட் ஆஃப் டைரக்டர்ஸ் பரம சௌக்கியமாக கோல்ஃப் விளையாடிக்கொண்டு, சூதாடி காலத்தைக் கழிப்பதை விட்டு விட்டார்களே!

இந்த மாதிரி தொண்டரடி ஆபீசர்களை பொது மேடையில் அரங்கேற்றி, பேஸ்புக் பக்கத்தை அலங்கரித்து, ட்விட்டரில் புரட்சி ஏற்படுத்தும் வரை இரானும் ட்விட்டரும், ஒபாமாவும் இணையமும் என்று அமெரிக்கா குண்டுச்சட்டியில் வலை மேயும்.

பிரபாகரன்: 1954-2009

நன்றி :: சத்தியக் கடதாசி » Napoleon

பிள்ளைகாள்
வேலுப்பிள்ளை பிரபாகரன் எப்போது பிறந்தான்
என்று கேட்கிறார் ஆசிரியர்
ஆயிரம் ஆண்டுகள் முன்பு என்றனர் பிள்ளைகள்
நூறு ஆண்டுகள் முன்பு என்றனர் பிள்ளைகள்
சென்ற ஆண்டு என்றனர் பிள்ளைகள்
எவருமே அறியார்

பிள்ளைகாள்
வேலுப்பிள்ளை பிரபாகரன் என்ன செய்தான்
என்று கேட்கிறார் ஆசிரியர்
ஒரு போரை வென்றான் என்றனர் பிள்ளைகள்
ஒரு போரைத் தோற்றான் என்றனர் பிள்ளைகள்
எவருமே அறியார்

எங்கள் கசாப்புக் கடைக்காரனிடம்
பிரபாகரன் என்றொரு நாய் இருந்தது
கசாப்புக் கடைக்காரர் அதை அடிப்பார்
ஒரு ஆண்டு முன்னர் அது பட்டினியாற் செத்தது
என்றான் சதீஷ்

இப்போது எல்லாப் பிள்ளைகளும்
பிரபாகரனுக்காக வருந்துகின்றனர்.

மிரோஸ்லாவ் ஹொலுப்
மூன்றாங்கையாகத் தமிழில் தழுவல்: சுகன்
(கறுப்பு:2002)
Velupillai-Prabhakaran-LTTE-Tamil-Tigers


Napoleon by Miroslav Holub

Children, when was
Napoleon Bonaparte born,
asks the teacher.

Thousand years ago, the children say.
Hundred years ago, the children say.
Last year, the children say.
Nobody knows.

Children, what did
Napoleon Bonaparte do,
asks the teacher.

He won a battle, the children say.
He lost a battle, the children say.
Nobody knows.

At us the butcher had a dog
František says,
he was called Napoleon.

The butcher used to beat him, and the dog died
of hunger
last year.

And now all the children feel sorry
for Napoleon.
(1960)

சென்னை ராஜாங்கம்

துக்ளக் சோவிற்கு மிகவும் பிடித்தமான மயிலை ஸ்ரீனிவாசர் கோவிலுக்கு பெருமாள் அழைத்திருந்தார். பிரும்மோத்ஸவ அழைப்பிதழும் கொடுத்தார். புழு, பூச்சிக்கும் அடைக்கலம் உண்டென்பதை, நரசிம்மர் மேல் கரப்பான் பூச்சி(கள்?) ஊர்வதை வைத்து உணர்த்தினார்.

முன்னுமொரு காலத்தில் ஏர் இந்தியாவில் பயணம் சென்றபோது நட்ட நடுவில் ஒரேயொரு வெள்ளித்திரை. அதில் ஒரேயொரு படம். அந்தப் படத்தில் டயான் லேன் (Diane Lane) முயங்குவதைப் பார்த்து, பக்கத்து இருக்கை பாப்பா ‘அங்கிளும் ஆன்ட்டியும் ஏன் அம்மணத்தோண்டியா சண்ட போடறாங்க?’ என்று கேட்க வைத்தார்கள்.

தோஹாவில் இருந்து கிளம்பிய கத்தார் விமானத்தில் வந்த ‘வாரணமாயிரம்’ மகா சைவம். ‘அஞ்சல… அஞ்சல’ பாட்டுக்கு கூட கத்திரி. ஒழுக்கசீலராக்குவதில் வளைகுடாவை விஞ்ச இன்னொரு குடா இருக்கிறதா என்ன?

நியு யார்க்கில் இருந்து கிளம்பிய விமானம் ஏ1 தரம். ஆயிரம் படங்கள்; ஆயிரத்தொரு விளையாட்டுகள்; ஆயிரத்திரண்டு பொழுதுபோக்கு வைத்து அசத்தி இருந்தது கத்தார் வான்வழி. அதில் ‘லாடம்’ படத்தின் ஆங்கிலப் பதிப்பான ‘Lucky Number Slevin’ கொஞ்சமும், நடுத்தர வர்க்க நடு வயது இந்தியரின் வாழ்க்கைக்கு பொருத்தமான ‘Revolutionary Road’ கொஞ்சமும், ‘Seven Pounds’ முழுதுமாக தரிசனம் கிடைத்தது.

வந்த சூட்டோடு வலையுலக முன்னாள் பதிவர் சிலரோடு சந்திப்பும் இனிதே நடந்தேறியது. பிரபாகரன் எங்கே இருக்கிறார், தமிழக முக, சாரு, ஜெயமோகன் என்று மைய நீரோட்டத்தை விட்டு விலகாத உரையாடல்.

தானி ஓட்டுநர்களுடன் பேச்சுத் தொடுத்ததில் ஜெயலலிதாவின் அலம்பலை நாடி பிடித்து வைத்திருக்கிறார்கள். ‘தனி ஈழ அறைகூவல் எல்லாம் டுபாக்கூர்’ என்றார். ‘அவங்க நாடு; அவங்க பிரச்னை’ என்றார்.

இன்னொருவர் ‘பிரபாகரனும் ராஜபக்சேவும் டீலு போட்டாங்க. பிரபாகரன எங்காவது கண்காணாத ஊருக்கு அனுப்பிவைச்சுட்டு, அவன சுட்டுட்டதா கத கட்டிவிட்டுட்டு, நம்ம மக்கள சாவடிக்கிறான் சிங்களக்காரன்’ என்று முடித்தார்.

சென்னையில் ஒரு பேனர் கண்ணில் படவில்லை. சுவரொட்டியும் காணக் கிடைக்கவில்லை. தோரணம், வண்ணவரைபடம் எல்லாமே மாயம். அந்தக் காலத்தில்… ஹ்ம்ம்ம்…

குருவாரம். ஷீர்டி சாய்பாபா சின்னத்தில் தேர்தலில் நின்றால் நிச்சயம் வெற்றி. ஆனால், இந்தியா என்ன ஐரோப்பாவிலா இருக்கிறது? தமிழக பொதுசனம் ஆன்மிகத்தையும் அரசியலையும் என்றும் கலந்து பார்த்து வாக்களிப்பதில்லையே!

இந்தியா இறங்கியவுடன் ப்ளாக்பெரி உயிர் கிடைத்தது. கையளவு அமெரிக்க செல்பேசியில் சகலமும் உடனடியாக தெரிகிறது. அமெரிக்காவில் கூட தொழில்நுட்பம் இம்புட்டு முன்னேறி இருக்குமா? இந்த தடவை இந்தியா வந்தாலும் கூட இணைபிரியாத இணையம்.

மை நேம் இஸ்: பிரபாகரன் பாடினார் – நேரடி வலைபரப்பு

Rajni-Kanth-Super-star-rowdy-criminals-billa-cinema-tamil-nadu
மை நேம் இஸ் பிரபாகரன்

வாழ்க்கை எல்லாம்
நானும் தாக்காத சேக்காளி இல்லே
ஓடாத ஊரில்லே ஐயா

நல்ல நண்பன் இல்லையென்றால்
எங்கு போனாலும் விடமாட்டேன்
நானாகத் தொடமாட்டேன் ஐயா

பூப்போன்ற பெண்ணோடு ஆட்டம்
ஆனாலும் சிலர் மீது நோட்டம்
என் வாழ்க்கை அழகான தோட்டம்
இன்பங்கள் என்றாலே மாற்றம்

பொன்னோடும் பொருளோடும் எப்போதும் நண்பர்கள் கூட்டம்
என் மீது பாய்வோர்கள் யாராக இருந்தாலும் (நான்) ஓட்டம்
பொன்னோடும் பொருளோடும் எப்போதும் (தமிழ்நாட்டு) நண்பர்கள் கூட்டம்
என் மீது பாய்வோர்கள் யாராக இருந்தாலும் (நான்) ஓட்டம்

மை நேம் இஸ் பிரபாகரன்

நீரோட்டம் போலெந்தன் ஆசை
தேரோட்டம் போலெந்தன் வாழ்க்கை
போராட்டம் இல்லாத பாதை
எல்லாமே சுகமான போதை

நான் கொண்டு வந்தேனா நீ கொண்டு வந்தாயா செல்வம்
நாளென்ன பொழுதென்ன நாள்தோறும் விளையாடி வாழ்வோம்
நான் கொண்டு வந்தேனா நீ கொண்டு வந்தாயா செல்வம்
நாளென்ன பொழுதென்ன நாள்தோறும் விளையாடி வாழ்வோம்

மை நேம் இஸ் பிரபாகரன் வாழ்க்கை எல்லாம்
நானும் தாக்காத தொண்டன் இல்லே
போடாத தலைவர் இல்லே ஐயா

நல்ல நண்பன் இல்லையென்றால்
எங்கு போனாலும் விடமாட்டேன்
நானாகத் தொடமாட்டேன் ஐயா

LTTE-Prabakaran-Sri-Lanka-Tamils-Dead-Billa

Peace March in USA/Washington DC to bring attention to the Tamils Genocide in Sri Lanka: Tamil Eelam

இலங்கைத் தமிழரின் நிலை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வாஷிங்டனில் கவனஈர்ப்பு பேரணி

Purpose of Rally: Stop the Genocide of Tamils in Sri Lanka

Venue: Opposite to White House, Washington DC

When: Friday, Feb 20, 2009
11 to 4 PM

Where: The Ellipse in front of the White House

Contact: savethamils@gmail.com
416.644.7259
905.266.1103
514.787.9486
613.800.0555

tamil-eelam-sri-lanka-washington-america-usa-dc-flyer

Background

Violence in Sri Lanka has been on the rise since December 2005 and, according to the United Nations Human Rights Council, three million citizens have been affected, 500,000 forced out of their homes and over 4,000 killed in the past 12 months. The toll has added to the 100,000 deaths, mostly Tamil civilians, in more than two decades of sectarian strife since the early 1980s. Massive military operations in the Tamil homeland by the Sri Lanka government forces have displaced half-a-million war and tsunami devastated Tamil civilians. Their lands were appropriated to form High Security Zones. The Tamils living in the capitol Colombo were arrested and deported to the Tamil Northeast. Sri Lanka is thus engaged in systematic Ethnic Cleansing of Tamils. In the past year, more journalists and aid workers were killed with government complicity in Sri Lanka than anywhere else in the world. US military aid is on the increase to a government tainted by an abominable record of human rights violations.

Tamil Americans will urge the United States government and the international community to help end the occupation of Tamil homeland, and restore peace, justice and democracy

Links

ஈழமும் திமுகவும்: ‘அடடே’ மதி: தினமணி கருத்துப்படங்கள்

பழைய கார்ட்டூனும் இன்றைய செய்தியும்

Rajiv Gandhi’s statue desecrated

adade-mathy-statue-rajeev-ambedkar-protect-deface

Statue desecration sparks violence: “Violence broke out here on Monday and the police had to resort to lathicharging as activists of the Viduthalai Chiruthigal Katchi and the Congress clashed over the desecration of Rajiv Gandhi’s statue.”

burn-effigy-bus-protest-tamil-nadu-culture-activism

ChennaiOnline News : VCK denies hand in statue desecration: “Unit Deputy Secretary Arasu Vanangamudi alleged Congress volunteers had made provocative speeches against VCK leader Thol Tirumavalavan during the demonstration at Orleanpet.

He demanded registration of cases under the Scheduled Castes and Tribes (Prevention of Atrocities) Act against Congressmen who had spoken at the demonstration ‘maligning’ the reputation of Tirumavalavan and Dr B R Ambedkar.”

ஈழப் படுகொலை: முத்துக்குமார் பத்திரிகை ஊழியர் தீக்குளித்து தற்கொலை: பதிவுத் தொகுப்பு

-/பெயரிலி.
அவர்களின் நல்லெண்ணத்துக்கு மதிப்பளித்தாலும், தம்மைத்தாமே கொளுத்திக்கொள்வது பயங்கரமான மடமைத்தனம்.

தம்மைத்தாமே கொன்று கொல்வது ஒரு பரபரப்பை ஏற்படுத்தும். அதற்குப் பின்னால், எல்லாப்பரபரப்பும் மடிந்தபின்னால், சார்ந்திருக்கும் குடும்பத்தினை ஒரு நாயும் அணுகிப் பார்க்காது.

ஈழத்திலே எத்தனையோ இவர்களின் வயதினை ஒத்தவர்கள் உயிர்வாழ இன்னொரு வழிமுறை கிட்டாதா என்று எறிகணைவீச்சிலே செத்துப்போக, இத்தனை வழிமுறைகளிருக்கும் இவர்கள் இப்படியாக இங்கே செத்துப்போவது அநியாயம்.

தமிழகத்திலே கொளுத்திக்கொள்ளவேண்டியவர்களும் முத்துக்குமாரர்களல்ல; கொளுத்திக்கொல்லவேண்டியவர்களும் முத்துக்குமாரர்களல்ல.

நடைவண்டி: ‍‍இலங்கைத் தமிழர் பிரச்னைக்காக‌ இன்னொரு இளைஞர் தீக்குளிப்பு.: ஆழியூரான்

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே பள்ளப்பட்டியைச் சேர்ந்த ரவி என்ற 30 வயது கூலித் தொழிலாளி இன்று காலை இலங்கைத் தமிழர் பிரச்னைக்காக தீக்குளித்துள்ளார். அவர் விடுதலை சிறுத்தைகள் அமைப்பைச் சேர்ந்தவர் என்றும், தமிழர் தேசிய இயக்கத்தைச் சேர்ந்தவர் என்றும் இருவிதமாகவும் சொல்லப்படுகின்றன.


தீக்குளிக்கும் முன்னர் முத்துகுமாரின் இறுதி அறிக்கை!
வந்தாரை வாழ வைக்கும் செந்தமிழ் நாட்டில் சேட்டு என்றும், சேட்டனென்றும் வந்தவனெல்லாம் வாழ, சொந்த ரத்தம் ஈழத்தில் சாகிறது.
:::
பட்டினிப் போராட்டத்தின் மூலம் களம் இறங்கியிருக்கும் சட்டக்கல்லூரி மாணவர்களே… உங்கள் போராட்டம் வெற்றிபெற சகதமிழனாக நின்று வாழ்த்துகிறேன். உங்களோடு களம் இறங்க முடியாமைக்கும் வருந்துகிறேன். தமிழ்நாட்டிற்காதவரான போராட்டம் எதுவாக இருந்தாலும் சரி, முதலில் களம் காண்பவர்கள் நீங்கள், வழக்கறிஞர்களும்தான். இந்த முறையும் நான்கு மாதங்களுக்கு முன்பாகவே களத்தில் இறங்கியவர்கள் இந்த இரண்டு தரப்பும்தான். உங்களுடைய இந்த உணர்வை மழுங்கடிக்கவே திட்டமிட்டு இந்திய உளவுத்துறை ஜாதிய உணர்வைத் தூண்டிவிட்டு, அம்பேத்கர் சட்டக்கல்லூரி அனர்த்தத்திற்கு வழிவகுத்திருக்கலாம் என்பது என் சந்தேகம்.
:::
ஆயுத தளபாடங்களும், உளவு விமானங்களும்தான் இலங்கை போகின்றனவே தவிர, இந்தியாவால் அனுப்பப்பட்ட ஒரு பாராசெட்டமால் மாத்திரையைக் காட்டச் சொல்லுங்கள் பார்க்கலாம்.

விதியே விதியே என்செய் நினைத்திட்டாய் என் தமிழ் சாதியை…
அன்பார்ந்த உழைக்கும் தமிழ்மக்களே…


நர்சிம்
என்ன எழுதுவது?
நெகிழ்ச்சியாக இருக்கிறது என்று எழுதினால் நான் கோழை.. ஏனெனில் நான் நெகிழும் நிகழ்வில் உடன்கட்டை ஏறியிருக்க வேண்டும்
மகிழ்ச்சியாக உணர்கிறேன் என்றால்.. நான் ஒரு சாடிஸ்ட்.. உன் முடிவில் என்ன மகிழ்ச்சி?
:::
14 பக்க கடிதம் எழுதும் அளவு அவகாசம் இருந்த உனக்கு ஒரு நிமிடம் சிந்திக்க கிடைக்காததை எண்ணித்தான் வருத்தமாக இருக்கிறது.
யார் யாது சொன்னாலும் இது வீரம் அல்ல முத்துக்குமார்.
:::
உன் மரணச்செய்திகள் இன்னும் 3 நாட்களுக்கு உன் உடலை எரித்த தீயை விட பலமடங்கு எரியும்..அதற்கு பிறகு உன் அஸ்தியை போல இந்த நிகழ்வும் கரைந்து மறைந்து மறந்து போகும். என்ன பலன்?
யாவரும் கேளிர்!!…


இட்லிவடை
இவ்வளவு வாய்கிழிய பேசும் தமிழக தலைவர்கள் திருமங்கலம் இடைத்தேர்தலில் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவு பற்றி ஏன் ஒரு வார்த்தை கூட பேசவில்லை ?
:::
இலங்கையில் விடுதலைப்புலிகள் வீழ்ச்சி அடைந்தால் தான் இவர்களுக்கு ஈழ தமிழர்கள் மீது பரிவு ஏற்படுமா ? இரண்டு வருஷம் முன்பு எங்கே போனது இந்த பாசம் ?

நடிகர் சத்யராஜ், இயக்குநர் ஆர்.கே.செல்வமணி, போன்றவர்கள் செங்கல்பட்டு மணவர்களின் உண்ணாவிரத பந்தலில் மாணவர்களை உசுப்பிவிடுகிறார்கள். ஏன் இவர் பையன் “ஸ்டுடண்ட் நம்பர் ஒன்” சிபி இதில் கலந்துக்கொள்ள கூடாது ?
முத்துக்குமரன் தீக்குளிக்க யார் காரணம்?


உண்மைத் தமிழன்
“செத்தாவது தொலைவோம்.. அப்போதாவது இந்தப் பிரச்சினை விஸ்வரூபமெடுக்கிறதா என்று பார்ப்போம்..” என்று அவர் நினைத்து அதனையே செயல்படுத்தியிருக்கிறார்.
:::
இதில் அசிங்கப்படுத்தும்விதமாக சரத்குமார் ஏதோ ஒரு கல்யாண வீட்டில் கையெடுத்துக் கும்பிடுவதைப் போன்ற போஸில் ஒரு தட்டியை அவரது கட்சிக்காரர்கள் வைத்து கொடுமைப்படுத்தியிருக்கிறார்கள்.
:::
அஞ்சலி செலுத்த வந்தவர்கள் அனைவருமே அந்த இடத்தில் அங்கிருப்பவர்களிடம் “முத்துக்குமார் செய்தது சரியானது அல்ல.” என்று சொன்னால் திரும்பி உயிருடன் போவார்களா என்பது சந்தேகமே. அந்த அளவுக்கு கூடியிருக்கும் இளையோர் பட்டாளம் கொதிப்புடன் காட்சியளிக்கிறது.
:::
மதியம்வரைக்கும் இது தமிழ் உணர்வாளர்களுக்கான போராட்டமாக சென்று கொண்டிருந்தது. மதியத்திற்குப் பிறகு முழுக்க, முழுக்க அரசியலாக மாறிவிட்டது. மாலையில் தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆதரவுக் கூட்டமாக மாறிவிட்டது. மாலையில் வைகோ தனது பேச்சை முடித்தபோது “பிரபாகரன் வாழ்க..” என்று முழுக்கமிட..
:::
ஜெயா டிவி செய்திகளில் மதியம்வரை முதல் விளம்பரம் முடிந்து அடுத்த segment-ல் முத்துக்குமார் விஷயத்தைச் சொன்னார்கள். மதியத்திற்கு மேல் சட்டமன்ற உறுப்பினர் பாபு தாக்கப்பட்ட சம்பவத்திற்குப் பின்பு இது ஒன்றையே திரும்பத் திரும்ப இப்போதுவரையிலும் காட்டி வருகிறார்கள்.

மதுரையில் தங்களது அலுவலகம் தாக்கப்பட்டபோது அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்துவிட்டு ரவுடி பட்டம் சூட்டி பரபரப்பை ஏற்படுத்திய சன் டிவி போனால் போகிறதென்று நினைத்து பத்தோடு பதினோறாவது செய்தியாக இதனைச் சொன்னார்கள்.

கலைஞர் டிவியில் நேற்றே ஒரு கொடுமை நடந்தது. பத்திரிகையாளர் என்ற செய்தியைக்கூட போடாமல் “ஈழப் பிரச்சினைக்காக சென்னையில் ஒருவர் தீக்குளிப்பு..” என்று ஒரு வரி செய்தியை மட்டுமே ஓடவிட்டார்கள். பத்திரிகையாளர் என்பதையும், ஈழப் பிரச்சினைக்காக என்பதையும் செய்திகளில் அதிகம் இடம் பெறாமல் கவனமாகப் பார்த்துக் கொண்டார்கள் இதன் செய்திப் பிரிவு ஆசிரியர்கள்.

மக்கள் டிவியில் ராமதாஸ் மாலை போடுவதை மட்டுமே திரும்பத் திரும்ப காட்டி அதனை சாதாரணமான ஒரு அஞ்சலி செய்தியாக்கி தன்னைக் காப்பாற்றிக் கொண்டுவிட்டார்.
முத்துக்குமார் எதிர்பார்த்தது நடக்கிறதா..?


கொழுவி
எத்தனை ஈழத் தமிழருக்கு 95 இல் யாழ்பாண இடப்பெயர்வின் போது தீக்குளித்து மாண்ட தமிழக உறவின் பெயர் தெரியும்?
முத்துகுமரன்கள் வேண்டாம்


superlinks
த‌ற்கொலைகள் செய்துகொள்வது கோழைத்தனமான முடிவா ?
ஈழ‌த்தில் இந்திய‌ ப‌ய‌ங்க‌ர‌வாத‌ அர‌சு ந‌ட‌த்தும் இன‌ப்ப‌டுகொலை போர்


அசுரன்:
“என்னைவிட புத்திசாலியான குழந்தைகள், சிறுவர்கள், வாலிபர்கள், பெண்கள் அனைவரும் இலங்கையில் கொல்லப்படுகிறார்கள். போர் முனையில் சிக்கித் தவிக்கிறார்கள். அவர்களை காப்பாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்திதான் நான் தீக்குளித்தேன்” என முத்துக்குமரன் தெரிவித்தார்.
நக்கீரன்: உயிரை கொடுத்து உணர்வை வளர்த்தாய், நீ இட்ட தீ எரிந்து சமைக்கும் முத்துக்குமரா!!


நாக.இளங்கோவன்
வெறுமனே, “எனக்கு இதில் உடன்பாடு இல்லை, நான் தற்கொலையை வெறுக்கிறேன் – இது கோழைத்தனம்…” என்றெல்லாம் நினைப்பதை விட்டு விட்டு, அவன் உணர்வினைப் போற்றவேண்டும். அதனை மதிக்க வேண்டும். நாமும் உணர்வு கொள்ள வேண்டும். அதுவே அந்த ஆன்மாவுக்கு நாம் செய்ய வேண்டிய மரியாதை.
நயனம் – nayanam: முத்துக்குமரனின் தீக்குளிப்பும் சில கருத்துகளும்!


வினவு
வேலைக்காக தட்டச்சு செய்து வாழும் முத்துக்குமாரின் கைகள் தனது 2000 வார்த்தைகள் அடங்கிய மரண சாசனத்தை ஒரு அரசியல்
கட்டுரையாக நிதானம் தவறாமல் அடித்திருக்கிறது. முத்துக்குமாருக்கு பல தலைவர்கள் அஞ்சலி செலுத்தியிருந்தாலும் அவர் இந்த தலைவர்களின் மோசடி நாடகத்தை புரிந்தே எழுதுகிறார். குறிப்பாக தி.மு.கவின் உணர்ச்சிப் பசப்பல்கள் வடிவேலு காமடியைவிட கீழாக இருப்பதாக கேலி செய்கிறார்
ஈழமும் முத்துக்குமாரின் தியாகமும் – நமது கடமை என்ன?


வினவு
முத்துக்குமார் எனும் வீரனின் உயிரைத் துறக்கத் துணிந்த தியாகம் கொழும்பில் இந்திய- இலங்கை கிரிக்கெட் ஆட்டத்தை ரசிக்கும் அற்பங்களின் இழிவை எள்ளி நகையாடட்டும். முத்துக்குமார் எனும் இளைஞனின் தியாகம் ஈழத்தில் கொத்துக் கொத்தாய் செத்து விழும் ஈழத்தமிழனின் பிணங்களைக் கண்டு உவகை கொள்ளும் சுப்பிரமணிய சுவாமி, ஜெயலலிதா, இந்து ராம், தமிழக காங்கிரசு நரிகள் முதலான ஒநாய்களின் வெறியை தமிழக மக்கள் அறுப்பதற்கு உதவட்டும். முத்துக்குமார் எனும் அந்தத் தொழிலாளியின் மரணம் புலம்பெயர்ந்த நாடுகளில் வில்லு படத்தை ரசித்துக் கொண்டிருக்கும் ஈழத்தமிழனின் மரத்துப் போன சுரணையை மீட்டுக் கொண்டு வரட்டும். முத்துக்குமாரின் தீக்குளிப்பு பதிவுலகில் அக்கப்போரையும், அரட்டையையும், வாடிக்கையாகக் கொண்டிருக்கும் சில பதிவர்களுக்கு சமூக அக்கறை என்றால் என்ன என்பதைக் கற்றுக் கொடுக்கட்டும். முத்துக்குமார் எனும் அந்த வார்த்தை இதுவரை ஈழத்திற்காக இது வரை ஒரு துரும்பையும் எடுத்துப் போடாதவர்களின் மனச்சாட்சியை கிளறி எழுப்பட்டும்.
ஈழம்: முத்துக்குமாரை கொன்ற தீ சுரணையற்ற மனங்களை சுடட்டும்!


வத்திராயிருப்பு தெ. சு. கவுதமன்
குடியரசு தினத்தன்று, இந்திய அரசுக்கெதிரான ஆர்ப்பாட்டம் என்பதால் பரபரப்புடன் வந்திருந்த காவல்துறையினர், தோழர் கோவனின் இனஉணர்வுமிகுந்த, கணீரென்ற பாடல்களுக்கு மெய்மறந்து நின்றதைக் காணமுடிந்தது.
அங்கூ…. அங்கூ…: ஈழத்திற்காக ஓர் ஆர்ப்பாட்டம்…


பி.இரயாகரன்
புலிப்பாசிசம் எப்படி தனிநபர் பயங்கரவாதத்தை அடிப்படையாக கொண்டு, சமூகத்தை தனக்கு எதிராக நிறுத்தி சீரழிந்து அரசியல் ரீதியாக தற்கொலை செய்கின்றதோ, அப்படித்தான் தனிநபர் தற்கொலையும்;. இந்த வகையில் முத்துக்குமாரனின் தற்கொலையும், புலியிச அரசியல் எல்லைக்கு உட்பட்டதுடன், அதுஎதான் வழிகாட்டியுள்ளது. மக்கள் விடுதலைக்கு வழிகாட்டாத புலிப்போராட்டமோ, தற்கொலையை தேர்ந்தெடுத்தது. அதையே தன் தோல்வியிலும் மற்றவர்களுக்கும் வழிகாட்டுகின்றது.

சமூகத்தின் மீது நம்பிக்கை இழந்து, அவர்களைச் சார்ந்து போராட முடியாது போன நிலையில் தான், புலியிசம் மனித அவலத்தை தன் அரசியலாக உற்பத்தி செய்கின்றது.
முத்துக்குமாரன் தற்கொலையும், தனிநபர் பயங்கரவாதமும்


கலகம் / தமிழ் அரங்கம்
உண்ணாவிரதங்களும் ஆர்ப்பாட்டங்களும் தொடர்கின்றன, இவற்றுக்கு சளைக்காமல் திரையரங்குகளில் படங்களோ வெற்றிகளை குவித்து ஓடிக்கொண்டிருக்கின்றன. டாஸ்மாக்கில் கூட்டம் அலை மோதுகிறது,மெரினாவில் சுற்றிபார்க்க வருபவர்களும், தீம் பார்க்கில் கூத்தடிக்க போவோரின் எண்ணிக்கையும் குறையவில்லை. தங்க கடற்கரையில் சிலு சிலு காத்து வாங்க கூட்டமோ முண்டியடிக்கிறது.
சுடாத நெருப்பும்,சுடுகிற கண்ணீரும்


வாசு
நிஜமாகவே இலங்கை தமிழருக்காக தற்கொலை செய்து கொண்டாரா அல்லது பணம் கொடுத்து அரசியல் கட்சிகள் எதாவது இதை செய்ய சொன்னதா என்று தெரியவில்லை. எதுவாக இருந்தாலும் முத்துக்குமார் எடுத்த முடிவு பைத்தியக்காரத்தனமானது.
Our Thoughts: உயிர் இத்தனை மலிவா?


சக்கடத்தார் சக்(ங்)கடத்தார்
எங்கட பாசத்திற்குரிய உறவுகளே! உங்கள் உள்ளத்தில் இருக்கும் ஆதரவு எங்களுக்கு நன்றாகத் தெரியும். உங்கள் ஆட்சியாளர்கள் எலும்புத் துண்டுக்காக வாலாட்டுவதற்கு நீங்கள் ஏன் இப்படியான வழியில் உங்கள் உயிரை மாய்க்க வேண்டும்?? உங்கள் ஆதரவை, உங்கள் உணர்வைப் புரிந்து கொண்டவராய்த் தானே நாங்கள் இருக்கின்றோம்.. பிறகு ஏன் உறவுகளே இப்படியான வழி முறைகளைக் கைக் கொள்ள வேண்டும்?? இனிமேல் இப்படியான உயிரை மாய்க்கின்ற வேலைகளில் ஈடுபட வேண்டாம் எம் அன்புக்குரிய உறவுகளே??
கிழவனின் கிறுக்கல்கள்…: தீ கொழுத்தத் தணல் கொடுக்கும் நாட்டில் தீக் குளிப்பா???


சுபானு
நாள்தோறும் வருகின்ற வன்னிச் செய்திகளின் கனதி இங்கே மனங்களில் உறுத்தலைக் கூட்டிக் கொண்டிருக்கின்றது. அதைவிடவும் எதுவும் செய்ய முடியவில்லையே என்ற ஆதங்கம் இருக்கின்றதே அது அதைவிடக் கொடுமை. ஒரு இரும்புக் கூட்டுக்குள் விலங்கிடப்பட்டு உணர்வுகளைக் கூட சுதந்திரமாக வெளியிடக் கூட முடியாத மனித மனங்களைக் கொண்டு வாழ வேண்டிய கட்டாயம்.

அதைவிட வருத்தம் என்னவென்றால் எனக்கேன் இந்த வேண்டாப் பொல்லாப்பு என்று என் பல்கலைக்கழக நண்பர்கள் சிலபேர் மனம் விட்டுக் கதைக்கூட பயப்பட்டு ஓடுகின்றார்களே அவர்களை என்னவென்று சொல்வது. வெறுமனே நண்பர் வட்டாரங்களுக்கிடையில் தமது வீரவசனம் பேசிக்கொண்டும், சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் காதல் கதைகளில் தம்மை ஈடுபடுத்திக் கதைத்துக் கொண்டும், நாம் உண்டு எம் வேலையுண்டு என்னும் என இருக்கும் நாம் எங்கே, ஈழத்தமிழர்க்காக தன் இன்னுயிரை தமிழர்க்காக அர்ப்பணித்த அந்த முத்துக்குமார் எனும் இளைஞர் எங்கே.

சின்னத் தீச் சுடர் ஒன்று கையில் பட்டாலே வலியில் துடித்துப் போய்விடுவோம். ஆனால் முத்துக்குமார் தன் உடலையே மண்ணெண்னையூற்றித் ஈழத் தழிழர்களுக்காக தீக்கிரையாக்கினான்
ஊஞ்சல் – Unchal: கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம்


யுவகிருஷ்ணா
கடந்த வாரம் பெண்ணே நீ அலுவலகத்துக்கு சென்றபோது கூட முத்துக்குமாரை சந்திக்க நேர்ந்தது. அவர் கூகிளில் தேடிப்பார்க்கும் விஷயங்கள் வித்தியாசமானதாக இருக்கும். நான் சென்றபோது..
மடிப்பாக்கம் லக்கிலுக்: ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு


Stop the Vanni Genocide / படுகொலைகளை நிறுத்து
எனது பெயர் முத்துக்குமார், எனது சொந்த ஊர் திருச்செந்தூர் அருகில் உள்ள ஆத்தூர் கொழுவை நல்லூர் ஆகும். எனது தந்தை தாம்பரத்தில் பழைய இரும்புக்கடை வைத்துள்ளார். எனக்கும் அவருக்கும் பேச்சுவார்த்தை கிடையாது.
முத்துக்குமாருக்கு அஞ்சலிகள்


மணிகண்டன்
முத்துகுமரனின் இந்த செயல் அசாதாரணமானது. மக்களின் மெத்தனபோக்கை சற்றே மாற்றும் அளவிற்கு சக்தி வாய்ந்தது. இந்த சூழ்நிலையில் அவரின் மையக்கருத்தான “ஈழ மக்களின் துயர் துடைப்போம்” என்பதே முன்னிறுத்த படவேண்டும். அவரது முழு அறிக்கை தமிழகத்தில் உள்ள ஒருமித்த கருத்துள்ள கட்சிகளையும் ஒன்று சேரவிடாது. முத்துகுமரன் உணர்ச்சி கொந்தளிப்பில் எழுதப்பட்ட / பேசப்பட்ட கருத்தை எல்லாம் நம்பிய நல்ல மனிதர்.

பான் கி மூன் சீனர் என்றும், ராஜிவ் காந்தியின் கொலை இன்டெர்போல் விசாரணைக்கு செல்ல வேண்டும் என்று அவர் கூறிய கருத்தை முன்னிறுத்த வேண்டிய அவசியம் இல்லை.


தமிழ் சசி / Tamil SASI

தீக்குளிப்பு போன்றவற்றை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. தமிழகத்தில் இது போன்ற செயல்களுக்கு எந்த அர்த்தமும் இல்லை. இன்று பேசி விட்டு நாளை எல்லோரும் அவரவர் வேலைகளை பார்க்க சென்று விடுவார்கள். ஆனால் “நீண்ட” துன்பத்தில் சிக்க போவது அந்த இளைஞரை நம்பி இருக்கும் குடும்பம் தான்.

இத்தகைய போராட்டங்கள் தவிர்க்கப்பட வேண்டும்

இனி பல முத்துகுமரன்கள் உருவாகுவார்கள் போன்ற அரசியல்வாதிகளின் பேச்சு பொறுப்பில்லதது. ஒரு முத்துகுமார் போதும்.

ஹிந்தி திணிப்பிற்காக இது போன்று பல இளைஞர்கள் தீக்குளித்த சாம்பலில் இருந்து தான் திமுக ஆட்சியை பிடித்தது. அப்படி ஆட்சியை பிடித்த திமுகவின் இன்றைய தலைவர் திருக்குவளை முத்துவேல் கருணாநிதி தன்னுடைய வாரிசுகளை தான் ஆட்சியில் அமர்த்த முயலுகிறார். நடுவண் அரசில் அவர் கட்சியின் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் தமிழக நெடுஞ்சாலைகளில் ஹிந்தி எழுத்துக்களை நிறுவிய பொழுது அதனை அவரால் தடுக்க முடியாமல் போனது. இது தான் வரலாற்று நிகழ்வு. இதனை இளைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

தீக்குளிப்பு போன்ற அர்த்தமற்ற செயல்களை தவிர்க்க வேண்டும்.


முத்து தமிழினி
கருணாநிதி இலங்கை பிரச்சினையினால் ஆட்சியை இழந்ததே இல்லை என்று லேட்டஸ்ட்டாக வரும் தகவல்கள் நல்ல காமெடி.1989 ஆட்சி எதனால் போச்சு என்று யாராவது சொன்னால் தேவலை.எனக்கு தெரிந்த அரைகுறை அரசியலும் மறந்து விட்டது.

நம்மால் எதுவும் செய்ய முடியவில்லை. இருக்கவே இருக்கார் கலைஞர் என்று நாமெல்லாம் அவரை கும்முவதாக சில காலம் முன்பு சொல்லியிருந்தேன்.அதே தான் இப்பவும். கலைஞர் ராஜினாமா செய்தால் ஈழம் மலருமா? கருணாநிதியும் இதை நாசூக்காக கேட்டார். யாரும் கண்டுக்கலை.
ஒரு தமிழனின் பார்வை:ஈழ பிரச்சினை – கருணாநிதியை கும்முவது தீர்வாகாது


வெற்றி

அது தெற்காசிய பேட்டை தாதா என்ற கோதாவில் இந்தியா எடுத்துள்ள நிலை. எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் இதுதான் நடக்கும்

முத்து, நீங்கள் மேற்கூறியுள்ள கருத்துடன் எனக்கு உடன்பாடில்லை. காரணம், பாரதிய ஜனதாக் கட்சி ஆட்சியில் இருந்த போது காங்கிரசுக் கட்சி போல கண்மூடித்தனமாக தமிழின அழிப்புக்குத் துணை போகவில்லை.

2000ம் ஆண்டில் நோர்வே மூலம் முன்னெடுக்கப்பட்ட சமாதான முயற்சிகளில் பாரதிய ஜனாதாக் கட்சி மறைமுகமாக பெரும் பங்காற்றி இருந்தது என நான் அறிந்தேன்.

அதுமட்டுமல்ல, அடல் பிகாரி வாஜ்பாய் அவர்கள் ஈழ விடயத்தில் தமிழக மக்களினதும் தமிழகத் தலைவர்களினதும் கருத்துக்கும் உணர்வுகளுக்கும் ஓரளவுக்கேனும் மதிப்பளித்துச் செயற்பட்டார்.

பா.ஜ.க தனித் தமிழீழத்தை ஆதரிக்கவில்லையெனினும், ஈழத்தமிழர்களின் சிக்கல் பேச்சுவார்த்தை மூலம் தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்வை நோக்கியே இருந்தது.

ஆனால் காங்கிரசுக் கட்சி, தமிழின அழிப்புக்கு சிங்கள அரசுக்கு உதவியளித்து வருகிறது.


We The People

நம்மால் எதுவும் செய்ய முடியவில்லை. இருக்கவே இருக்கார் கலைஞர் என்று நாமெல்லாம் அவரை கும்முவதாக சில காலம் முன்பு சொல்லியிருந்தேன்.அதே தான் இப்பவும். கலைஞர் ராஜினாமா செய்தால் ஈழம் மலருமா? கருணாநிதியும் இதை நாசூக்காக கேட்டார்.யாரும் கண்டுக்கலை.

அப்புறம் எதுக்கு உண்ணாவிரதம், மனிதசங்கிலி, எம்.பிக்கள் ராஜினாமா என்று டெய்லி நாடகம் போட்டார் என்று அவரிடமோ! இல்லை நீங்களாவோ சொன்னால் தேவலை??!!

1989 தி.மு.க ஆட்சி போனதுக்கு காரணம் ஜெ-ராஜீவ் கூட்டணியே தான் அது தான் அரசியல், நீங்க சொல்லறத பார்த்தா 1980 எம்.ஜி.ஆர் ஆட்சி கலைப்பு ஈழப்பிரச்சனைக்காக என்று சொல்லுவீங்க போல… என்னங்க உங்கள ஒரு அரசியல் புலின்னு நினைச்சா, இப்படி காமெடி பண்ணறீங்க!!?


ராஜ நடராஜன்
கருணா, அனந்தசங்கரி, பிள்ளையான் போன்றவர்கள் இடம் மாறியும் கூட உங்களை புதுப்பித்துக் காட்டும் மக்களுக்கு நம்பிக்கையூட்டும் நிகழ்வுகளை நீங்கள் உருவாக்காததே தமிழக தமிழர்களின் நம்பிக்கையின்மைக்கான காரணமும், இருப்பதை உறுதியாகப் பற்றிக் கொண்டாவது சுய கவுரவத்துடன் வாழலாம் என்ற நம்பிக்கைதான் ஈழத்தமிழனுக்கு இத்தனை அவலங்களுக்கும் மத்தியிலும் இன்னும் மக்களை விடுதலைப்புலிகளின் பக்கம் இழுக்கிறதெனலாம்.

இலங்கை அரசு புலம் பெயர்ந்த தமிழனை மீண்டும் சம உரிமையோடு அணைத்துக்கொள்வதும், அல்லது இரண்டாம்தரக் குடிமகனாக வரவேற்பதும்,அல்லது அகதியாக உலகம் முழுவதும் ஊர்சுற்றவிடுவதும் போன்ற முக்கியமான நிகழ்வுகள் எதிர்காலத்தில் காத்துக் கிடக்கின்றன.மண்வாசனை காரணமாகவோ இயலாமையினாலேயோ தன் மண்ணை விட்டு நகராத உயிரோடிக்கும் உண்மை தமிழர்களின் எதிர்காலம் நிலைக்கவேண்டும்.
பார்வையில்: தமிழகம்,ஈழம், இலங்கை-ஓர் பார்வை


பத்ரி சேஷாத்ரி
விடுதலைப் புலிகளை இலங்கை ராணுவத்தால் அழித்தொழிக்க முடியும் என்று நான் நம்பவில்லை. அப்படியே அது நடந்தாலும், அதையொட்டி, ராஜபக்‌ஷேவும் இலங்கை அரசும் தமிழர்களுக்கு எதையும் அள்ளிக்கொடுத்துவிடப் போவதில்லை. தமிழர்களின் நிலை இப்போது இருப்பதைவிட மிக மோசமாகத்தான் போகும்.

விடுதலைப் புலிகள் அமைப்பால் இலங்கையைத் துண்டாக்கி, தனி ஈழத்தைப் பெறுவது சாத்தியம் என்றும் எனக்குத் தோன்றவில்லை.
எண்ணங்கள்: இலங்கைப் பிரச்னையும் தீக்குளித்தலும்


யட்சன்
தமிழுணர்வாளர்களின் வெறும் வாய்க்கு அவலாய் போனதை தவிர அந்த இளைஞனால் எதை சாதிக்கமுடிந்ததென தெரியவில்லை. இயலாமையின் உச்சத்தில் கவன ஈர்ப்பாய் செய்ததை தியாகமென சொல்வதை காட்டிலும் தற்கொலையென்றே வரையறுக்கலாம்.
:::
விடுதலைப்புலிகளின் செயல்களையெல்லாம் கண்ணை மூடிக்கொண்டு நியாயப்படுத்தும் போக்கினை யார் துவங்கினார்களென தெரியவில்லை.
:::
விமர்சனங்களை தாங்கிக்கொள்ளும் பக்குவமில்லாதவர்களின் எதிர்வினைக்கு பயந்து முப்பது வருடங்களுக்கு மேலாய் புனிதபதாகையினை புலிகளுக்கு தந்த என் தமிழினமும் குற்றவாளிதான்.
முட்டாள் குமரனும் சில முழு பூசனிக்காய்களும்….


மாலன்
இந்த நெருப்பை மீண்டும் ஊடகங்கள் ஊதிப் பெரிதாக்கி அது இன்னும் பல தற்கொலைகளுக்கு இட்டுச் செல்லக் கூடாதே என்பதுதான். மண்டல் கமிஷன் பரிந்துரைகளை ஏற்பதாக வெளியான அறிவிப்பை அடுத்து ராஜீவ் கோஸ்வாமி தீக்குளித்த போது ஊடகங்கள் அதைப் பற்றி எழுதி விசிறிவிட விளம்பர வெளிச்சத்திற்கு ஆசைப்பட்டு 18லிருந்து 24 வயதுள்ள 159 இளைஞர்கள் தீக்குளித்தார்கள்.(அன்று தொலைகாட்சி இந்தளவிற்கு பரவியிருக்கவில்லை, கடவுளுக்கு நன்றி )
:::
விடுதலைப் புலிகள், சிங்கள அரசு இரண்டுமே தங்களது அதிகார எல்லைகளை விரிவுபடுத்திக் கொள்ள, விரிவுபடுத்திக் கொண்ட எல்லைகளைத் தக்க வைத்துக் கொள்ள மோதுகின்றன. இதற்கான வழி போர் என அவை தேர்ந்தெடுத்திருக்கின்றன. கடந்த 30 ஆண்டுகளாக நடைபெற்று வரும் போரில் இந்த இரண்டு தரப்புமே நிரந்தரமான வெற்றிகளைப் பெற்றதில்லை என்று அறிந்தும் அவை இந்த வழியைத் தேர்ந்தெடுத்திருக்கின்றன.
:::
இலங்கைத் தமிழர்கள் அதிகாரம் பெற வேண்டும் என்பதுதான் அவர்களது இலட்சியமாக இருந்திருக்குமானால், அவர்கள் ராஜீவ் – ஜெயவர்த்தன ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டிருப்பார்கள். (அது உறுதியளித்த மாநிலக் கவுன்சில்களின் அதிகாரத்தைப் பின், இந்தப் 18 ஆண்டுகளில், மாநில சுயாட்சிப் போராட்டங்கள் போன்ற அரசியல் விவாதங்கள் (political discourse) நடவடிக்கைகள் (political processes) மூலம் விரிவுபடுத்தியிருக்கமுடியும்.அதை அவர்கள் ஏற்க மறுத்ததற்குக் காரணம் ராஜீவ் – ஜெயவர்த்தன திட்டத்தில் (scheme) தங்களுக்கு முக்கியத்துவம் இல்லை என்பதே. பின்னர் ரணில் விக்ரமசிங்கேயோடு ‘தேனிலவு’ கொண்டாடிய நாட்களில் கூட அவர்கள் ஓர் அதிகாரப் பகிர்வினை எட்டியிருக்க முடியும். ஆனால் விடுதலைப் புலிகளின் இலட்சியம் தமிழர்கள் அதிகாரம் பெற வேண்டும் என்பது அல்ல;

தாங்கள் அதிகாரம் பெற வேண்டும் என்பதே.
என் ஜன்னலுக்கு வெளியே…: முத்துக்குமார்