Tag Archives: Environment

முடங்கிய கடல் நீரும் எல்லைகளில்லா அலைகளும்

கார்ஸன் கழிமுகம் கவிதையை பார்க்கும்போதே கடற்கரையைப் பார்ப்பது போல் இருக்கும். சில சமயம் ஜோராகத் தெரிகிறது. சில சமயம் காணாமல் போய் விடுகிறது. கண்ணில் பார்க்கும் எல்லாவற்றையும் விவரிக்கிறார்.

பார்ப்பதை புரிந்துகொள்வதுதானே மூளையின் வேலை? மனிதரின் மனதில் உதிக்கும் எண்ணங்களும் இயற்கையோடு உறவாடும் சிந்தனைகளும் எங்கு ஒருங்கிணைகின்றன? இந்தப் படைப்பே இயற்கையின் படைப்பா அல்லது அறிவால் உதித்த கற்பனையா?

இயற்கை என்றால் இயற்கை எய்துவதும் இயற்கையின் பங்குதானே… எப்போது மரணம் வரும் என்று சொல்ல முடியாதபடி சடாரென்று மரணம் நிகழும். அதுபோல் சுற்றுப்புறச் சூழலும் பாதிப்படைந்து மரணம் அடையுமா? அல்லது மெல்ல மெல்ல நச்சுப்பொருள் போட்டு உடலில் பாதகம் வருவது போல் இயற்கையும் மெதுவாகத்தான் இறக்கிறதா?

பார்ப்பதையெல்லாம் எவ்வளவு தூரம் உணர்ந்து அறிந்து வைத்திருக்கிறோம்?

இந்த ஆக்கத்தை தேர்ந்தெடுத்தவருக்கும், மொழியாக்கம் செய்தவரும் நன்றிகள்.

கும்கி: பார்க்கலாமா? போரா?

பத்து நிமிடத்தில் எடுக்க வேண்டியதை முழு நீளப் படமாக்கினால் எப்படி எடுக்கக் கூடாது என்பதற்கு ‘கும்கி’ நல்ல உதாரணம்.

ஹிட் ஆன பாடல்கள். ஓவர் ஆக்டிங்கில் சீனியர் சிவாஜியாக மிளிரும் தம்பி ராமையா. முறைப்பும் உடற்பயிற்சியும் ஆகிய இரண்டு பாவங்கள் மட்டுமே அறிந்த ஜூனியர் சிவாஜியாக விக்ரம் பிரபு.

எருமையைக் கண்டு யானை பின்வாங்குவது படத்தின் ஹைலைட். யானைகளுக்கும் லைசன்ஸ் பேப்பர் வேண்டும் என்றறிய வைத்தார்கள். இவ்வளவு மரங்கள் நிறைந்த காடுகளுக்கு தப்பிச் செல்லாமல் போயிட்டோமே என்று வீரப்பன் & கோ வருந்தியிருப்பார்கள்.

என்னதான் செல்லப் பிராணி வளர்த்தாலும், காதலின் முன் அது தூசு என்பது படத்தின் நீதி. அடிதடியை விட பாசமும் ப்ளாக்மெயிலும் காதலை உடைக்க கை கொடுக்கும் என்பது கொசுறு மெஸேஜ்.

ஒரு படமோ, இரண்டு படமோ நன்றாக இயக்கிவிட்டு, அதன் பிறகு, அசிஸ்டெண்ட் இயக்குநர்களுக்கு வாய்ப்பு கொடுத்து தயாரிப்பில் இறங்கி, பிறரின் படங்களை மெருகேற்றுவதுதான் இப்போதைய டிரெண்ட். பிரபு சாலமனும் அவ்வாறே ஷோ யானையாக மாறி கும்கிகளை அடையாளம் காட்டணும்.

விவாத சங்கதி: பேசுவதற்கான சமாசாரங்கள்

விவாதிப்பதற்கான விஷயங்கள் உலகெங்கும் எக்கச்சக்கம். ஒரு பட்டியல்.

  1. அன்னா அசாரே: தேர்தல் சீரமைப்பு – எவர் போட்டியிடலாம்? எவ்வளவு செலவழிக்கலாம்?
  2. ஆப்கானிஸ்தான் போர்
  3. ஆர்க்டிக் பிரதேசத்தில் இருந்து எண்ணெய் எடுக்கலாமா? சவூதி கிணறுகளே போதுமானதா?
  4. கார்பன் குறைவாக கக்கும் நாடுகள் கரிமம் அதிகம் உபயோகிப்பவர்களிடமிருந்து பணம் மட்டும் பெற்றுக் கொள்ளலாமா? உலகமே உமிழ்வுகளை ஒட்டுமொத்தமாக குறைக்கவேண்டுமா?
  5. எச்.ஐ.வி (அ) எயிட்ஸ்
  6. எல்லையில் சுவரெழுப்பி பாதுகாப்பதா? உலகமே இணையத்தாலும் பொருளாதாரத்தாலும் சுருங்கிய நிலையில் திறந்தவெளியாக குடிபுகலை அனுமதிப்பதா?
  7. வங்கிகளை திவாலாக்குவதா? மீட்டெடுப்பதா?
  8. வலைப்பதிவுகள்
  9. லட்சாதிபதிகள் கோடீஸ்வரர்கள் ஆவது: பெரு நிறுவனங்களில் முதன்மையான்வர்களின் சம்பளம் பன்மடங்கு அதிகரிப்பது
  10. துப்பாக்கி தோட்டா கட்டுப்படுத்தல்: நுகர்வோர் சந்தையாக அனைவரும் பாதுகாப்புக்கு வைத்திருக்கலாமா? காவல்துறைக்கு மட்டுமே சொந்தமா?
  11. இஸ்ரேலும் இரானும் பாலஸ்தீனமும்
  12. கல்வியறிவு: வாழ்க்கைக்குத் தேவையான படிப்பும் வருவாய்க்கும் உபயோகமான கல்லூரி வாழ்க்கையும்
  13. உடல்நல காப்பீடு: எகிறும் மருத்துவ செலவும் ஏறும் வயோதிகர் மக்கள்தொகையும்
  14. வட கொரியா: போக்கிரி நாடுகளின் கையில் இராணுவ பலம்
  15. அணு ஆயுதம்: மாற்று சக்தி
  16. உடல் பருமன்: மாறும் உணவு கலாச்சாரம்
  17. கடற்கொள்ளையர்: சோமாலியாவை மேற்கத்திய நாடுகள் ஊக்குவிக்கிறதா?
  18. கலவிக் கல்வி: இந்திய நாகரிகம் காமசூத்ராவை கோவிலிலேயே கொண்டிருந்தாலும், வைய விரிவு வலையெங்கும் மிக அதிகமான பலான தேடல் கொண்டிருப்பதன் சூட்சுமம்
  19. அறிவியல் ஆராய்ச்சி: எவாஞ்சலிகல் கிறித்துவத்தின் கட்டுப்பெட்டித் தன்மைகளை எவ்வாறு தடுத்து, ஸ்டெம் செல் போன்ற துறைகளில் மருத்துவத்தை முன்னேற்றலாம்?
  20. தீவிரவாதம்: போரிட்டு அடக்க முடியுமா?
  21. உலக வெம்மையாக்கம்
  22. பள்ளிக்கூட மாணவர் பிரச்சினைகள்: சோசியல் மீடியா அச்சுற்றுத்தல்
  23. மாற்று எரிசக்தி
  24. பொக்கீடுகள்: வரிச்சுமை, பட்ஜெட்
  25. அரிதாகிப் போன ஜீவராசிகள் குறித்து அஞ்ச வேண்டுமா? டைனோசார் போல் போனால் போட்டுமா?

நீயா? நானா 🙂

அணு உலைகளை ஏன் அமெரிக்கா உதயகுமார் எதிர்க்கிறார்?

வைகலும் வெண்ணெய்
கைகலந்து உண்டான்
பொய் கலவாது என்
மெய் கலந்தானே.
(திருவாய்மொழி – 1.8.5)
உட்பொருள்
அயல் மனைகளில் தினமும் புகுந்து, மிகுந்த விருப்போடு தன் கைகளால் கிடைத்ததை அளைந்து, கைகளில் அகப்பட்டதை மகிழ்ச்சியுடன் உண்ட அமெரிக்கா, சிறிதும் சந்தேகத்திற்கு இடமில்லாமல் இன்று நம்மில் கலந்தான்.
அராபியர் கடைந்த எண்ணெய் எவ்வளவு விருப்பமோ அதே அளவிற்கு உலகின் அணுகலன்களும் அமெரிக்காவிற்கு விருப்பமானதாயிற்று என்பது உரை.

அமெரிக்காவிற்கு மூன்று கவலைகள்:

1. தங்களை விட பராக்கிரமத்துடன் இன்னொரு இடம் வளர்ந்துவிட்டதாக உலகம் நினைக்கத் துவங்கிவிடுமோ?

2. தங்களுக்கான காரியங்களை சாதிக்கக் கூடிய குறைவான செலவில் நிறைவான லாபம் தரும் ஸ்தலங்கள் குறைந்துவிடுமோ!

3. தங்களின் முதல் மரியாதையான இந்திர பதவி போன்ற ஸ்திரதன்மைக்கு இந்தியா போன்ற குடியரசு வல்லரசு கோருமோ?

இந்த அச்சங்களை நீக்க அமெரிக்கா பல உபாயங்களைக் கையாளுகிறது. அதில் ஒரு அஸ்திரம் திரு உதயக்குமார்.

உலகெங்கும் உள்ள அணு உலைகள் அமெரிக்காவின் ஆதிக்கத்திற்கு பங்கம் விளைவிக்கிறது. முன்னும் ஒரு காலத்தில் இரண்டே இரண்டு நாடுகள் மட்டுமே அணு உலை வைத்திருந்தது. ஒன்று அமெரிக்கா; இன்னொன்று ருசியா.

கொஞ்ச நாள்போக்கில் நட்பு நாடுகளான இங்கிலாந்திற்கும் பிரான்ஸிற்கும் அமெரிக்கா அணுப் பொருட்களைக் கொடுத்தது. சீனாவும் அணுகுண்டு வெடிக்கும் நாடாக வளர்ந்தது.

பாரதீய ஜனதா ஆட்சிக்கு வந்ததும் இந்தியா அணு சோதனை செய்து பறைசாற்ற, இராவோடு ராவாக பாகிஸ்தானும் இந்த ஐவரோடு இணைந்து எழுவரானது.

இன்றைய அளவில் இஸ்ரேல் – நம்பர் எட்டு.

வட கொரியாவால் தம்மாத்துண்டு வெடியாவது போட முடியும் – ஒன்பது.

இரான் கடும் பிரயத்தனத்தில் இருப்பதால் – #10.

இப்படியே போனால், சங்கரன்கோவில் வாக்காளர் எல்லோருக்கும் யுரேனியம் தருவதாக ஜெயலலிதா அறிவிக்கும் நாள் தூரத்தில் இல்லை.

இந்த மாதிரி உலகெங்கும் அதிகாரமும் அணுவும் சிதறி இருப்பதை அமெரிக்கா விரும்பவில்லை. இருப்பதை எல்லாம் தன்னிடம் கொண்டு வரவேண்டும். இனிமேல் எவருக்கும் தாரை வார்க்கக் கூடாது என்பது ஒபாமா சித்தாந்தம்.

இதில் பையன் ஜார்ஜ் புஷ் வேறு ரகம். நல்ல நாடாக இருந்தால் அவர்களிடமும் கொஞ்சம் கொடுத்து வைப்பதில் தவறில்லை என்று பார்ப்பது ரிபப்ளிகன் கட்சி. உற்ற தோழனாக இருந்தாலும், நாம் படியளந்தால் மட்டுமே பாக்கெட் மணி என்று கெட்டியாக இருப்பது டெமொக்ரடிக் கட்சி.

அமெரிக்க அரசியல் நினைவுக்கு வந்தது.

அதிகாரத்தைக் கையில் எடுக்கும் குழுவை அமெரிக்காவில் டெமொக்ரட்ஸ் என்கிறார்கள். ஒபாமா கட்சி. மக்களுக்கு நல்லது கெட்டது தெரியாது என்று எண்ணுபவர்கள் இவர்கள் பக்கம். மக்களிடமே நல்லது கெட்டதை விட்டுவிட்டால், சுயநலமாக இருப்பார்கள்; எனவே, அதிகாரம்தான் பொதுவுடைமையாக இயங்க வேண்டும் என்று கருதுபவர்களும் இவர்கள் பக்கம்.

பொறுப்பைக் கையில் எடுக்கும் குழுவை ரிபப்ளிகன் கட்சி என்கிறார்கள். மிட் ராம்னியின் கட்சி. இன்னொருத்தருக்கு என்னுடைய கஷ்ட நஷ்டங்கள் தெரியாது என்று நினைப்பவர்கள் இவர்கள் பக்கம். தூண்டி விட வேண்டிய திரியாக இருப்பதை விட மெழுகுவர்த்தியாக எரிய விரும்புபவர்கள்.

இந்தியாவில் தன்னிறைவு வரக்கூடாது. மின் உற்பத்தி இடைஞ்சல் செய்ய வேண்டும். இதனால் அயல் முதலீட்டாளர்களுக்கும் கவலை பிறக்கும். எவனோ, எவளோ…. எப்போது பார்த்தாலும் எதற்காவது செங்கொடி தூக்கி வேலை நிறுத்த போராட்டம் செய்யும் நாடு என்னும் பிம்பம் எழும்…

இது பங்குச்சந்தையைக் கவிழ்ப்பதற்கு நல்லது.

அணு மின்சாரம் என்றால் ஏதோ நாக பாணம் போல் சயனைட் குப்பி பயம் எழுப்புவதால் உள் கட்டுமானங்களில் சுணக்கம் விழும். நம்பகமான நாடு அல்ல என்னும் பிம்பத்தை சுமத்தலாம்.

டாலர் கீழே படுத்திருக்கும் இந்த நிலையில் இது பேஷ்.

கிடைத்தார் உதயகுமார். குருஷேத்திரமாகிறது கூடங்குளம்.

Situation Hopeless… But Not Serious

தொடர்புள்ள சுட்டிகள்:

1. NNSA HEU removal featured on The Rachel Maddow Show | National Nuclear Security Administration

2. The Koodankulam Struggle and the ‘Foreign Hand’ @ EPW by S P Udayakumar

3. அழிவிற் சிறந்தது :: ஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.

4. பத்ரி சேஷாத்ரி: எந்த மின்சாரம் ‘நல்லது’?

5. பத்ரி சேஷாத்ரி: கூடங்குளம் போராட்டம்

6. கூடங்குளமும் தி.நகரும் « நேசமுடன்

7. கூடு :: இலக்கியம் :: குறும்படம்: “குமுதம் தீராநதி ஜனவரி மாத இதழில் வெளிவந்த சு.ப. உதயகுமார் அவர்களின் நேர்காணல் – சந்திப்பு: லட்சுமி மணிவண்ணன், கிருஷ்ணகோபால்.”

8. தமிழ்ஹிந்து – கூடங்குளம் அணு மின் நிலையம்: சர்ச்சைகளும், தீர்வுகளும் – 1 & விஸ்வாமித்ரா

9. அணு மின்சக்தி நமது அத்தியாவசியத் தேவை | ஆர்.பாலாஜி

10. எஸ்.குருமூர்த்தி  » கூடங்குளம் போராட்டம்- திரைக்குப் பின்னால் யார்?

பாட்டாவின் நதி – ஜெயமோகன்

ஜெய மோகன் மருதையப்பாட்டா என்றதும், அவர் கணையாழியில் எழுதிய கவிதை நினைவுக்கு வந்தது.

வெளியான இதழ்: மே, 1987

இந்த வழியாகத்தான்
எங்கள் பழைய நதி ஓடியதாம்
முன்பு
ரொம்ப காலத்துக்கு முன்பு.

பெரிய நதி அது.
எங்கள் தாத்தா அதில்தான்
குளிப்பாராம்
அவரோடு பெரிய யானையும்.

அப்புறம் எப்படியோ
நதி நின்று போச்சாம்.
அந்த இடமெல்லாம் மணலாச்சு.
மணல் மேலே
எங்கப்பா வீடுகட்டிக் குடிவந்தார்.
இப்பக்கூட
எங்க கொல்லைப்புறத்தைத்
தோண்டி பார்த்தால்
மீன் முட்கள்
கிடைக்கின்றன.

எங்கள் பெரிய நதியோட
நினைவாகத்தான்
நாங்கள்
சனிக்கிழமைதோறும்
குளிக்கறதில்லை.

ஆசாரக்கோவை கதைகள் 1 – ஆசார வித்து

தூரத்தில் விமானம் தெரிந்தது. அதில் அப்பா வருவார். தூங்குவதற்கு முன் கட்டியணைத்துப் போர்த்திவிட்டு ‘குட் நைட்’ சொல்வார். நாளைக்கு சனிக்கிழமை. வந்துவிடுவார்.

இப்பொழுது விமானம் நெருங்குகிறது. அல்ல… கலிஃபோர்னியா கான்டோர் வந்து இறங்கியது.

“நீ அழிந்து கொண்டிருக்கிறாயாமே”

“சேச்சே! உன் அப்பாவ கிட்டக்கயே வச்சுக்கணும்னு நீ கேட்ட இல்லியா! அதுக்காக வந்திருக்கேன்.”

“கருடன் மேல் பெருமாள் பறப்பது போல் நீதான் எங்கப்பாவ கூட்டிகிட்டு வரப்போறியா?”

“இல்ல… நான் படைச்ச மக்களையெல்லாம் அழிக்கணும்.”

“என்னது?”

“உனக்கு தெரியுமில்லியா? நாந்தான் இந்த உலகத்தை சிருஷ்டிச்சேன். முன்னுமொரு தினத்தில் மேலேயிருந்த முதியவர் பிரளயத்தை உண்டுசெஞ்சார். வாக்கு சாதுர்யம் இல்லாதவங்க எல்லாரும் அம்பேல். நான் மச்சாவதாரம் எடுத்து ஏட்டுச் சுரைக்காய்களைக் காப்பாற்றினேன். இப்பொழுதும் அந்த மாதிரி செய்யணும்”

“எனக்கு ஆசாரக்கோவை ஞாபகத்துக்கு வருது. உனக்கு நன்றி சொல்லணும்.”

நன்றி யறிதல் பொறையுடைமை இன்சொல்லோடு
இன்னாத எவ்வுயிர்க்கும் செய்யாமை கல்வியோடு
ஒப்புரவு ஆற்ற அறிதல் அறிவுடைமை
நல்லினத் தாரோடு நட்டல் இவைஎட்டும்
சொல்லிய ஆசார வித்து

“இருக்கட்டும். உங்கப்பாவை அமெரிக்க ஜனாதிபதி ஆக்கட்டுமா? டைம்ஸ் பத்திரிகையின் ஆண்டுநாயகர் ஆக்கட்டுமா? முதலாவதாக ஆனால் உலக வெம்மையினால் பனிக்கட்டி உருகி, பூமிச்சூட்டினால் சுனாமி கொணர்ந்த கோபன்ஹேகான் நாயகர் என்று புராணம் பாடலாம். இரண்டாமவர் ஆனால், பணமுதலைகளுக்கு டாலர் மாலை தொடுக்கும் கஜேந்திர யானை என்று வரலாறு போடலாம்.”

“இது இட்லி-வடையில் வரும் முனி கடிதம் போல் விஷயக்கோர்வை ஆகிறது. எனக்குப் புரிகிற மாதிரி சொல்லு.”

“ரொம்ப சிம்பிள். கூடிய சீக்கிரமே ஹைதியில் பூகம்பம் வரப்போகிறது. அதற்கு முன் கடவுளுக்கு பலிகடா தேவை. உங்கப்பன் மேல் பழியைப் போடலாம் என்று யோசிக்கிறோம். போதிய பஞ்சப்படியும் பதவியும் கொடுத்து விடுவோம். ரெடியா?”

விக்கிக் குறிப்பு: The Wiyot tribe of California say that the condor recreated mankind after Above Old Man wiped humanity out with a flood.[49] However, other tribes, like California’s Mono, viewed the condor as a destroyer, not a creator. They say that Condor seized humans, cut off their heads, and drained their blood so that it would flood Ground Squirrel‘s home. Condor then seized Ground Squirrel after he fled, but Ground Squirrel managed to cut off Condor’s head when Condor paused to take a drink of the blood.

ஐ.நாவின் உடற் கழிவு வாயு

இது முதல் செய்தி: Water in Moon: India’s Chandrayaan-1 mission :: நீர் நிரம்பிய நிலவு

biopact_biogas_pipeline_UN-Indiaஇரண்டாவது: UN offsets balance CO2 emissions | Marketplace From American Public Media

உலக அதிபர்கள் அனைவரும் ஐக்கிய நாடுகள் அமைப்பு சந்திப்புக்காக நியு யார்க் வந்திருக்கிறார்கள். ஒவ்வொரு தலைவருக்கும் இரு மந்திரிகள். ஒவ்வொரு மந்திரிக்கும் நான்கு அதிகாரிகள். ஒவ்வொரு அதிகாரிக்கும் ஒரு மனைவி. ஒவ்வொரு மனைவிக்கும் இரு மெய்காப்பாளர்கள்.

Bio-gas-recycle-solar-photo-synthetic-electricity-utilityஇந்த மாதிரி கூட்டிப் பார்த்து, அதற்கான கார்பன் கழிவுகளை இந்தியாவிடம் விற்று விட்டது ஐ.நா.

லிபியாவின் அரசர் கடாஃபி மாதிரி கூடாரம் அடித்தவர்களின் சிக்கன நடவடிக்கையை எடுத்துக் கொண்டதா என்று தெரியவில்லை.

மொத்தமாக வெளியாகும் நச்சுப் பொருள் எவ்வளவு என்று கணக்குப் municipal_solid_waste_generation_for_selected_large_cities_in_asiaபோட்டார்கள். அவ்வளவுக்கும் ஈடுகட்டும் விதமாக, பயோகாஸ் முறையில் அடுப்புகள் வாங்கிக் கொடுத்து விட்டார்கள். மரங்களை வெட்டி, விறகடுப்பில் சமைக்க வேண்டாம். சிக்கனத்திற்கு சிக்கனம். புகை, கரியமில வாயு போன்ற சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு பாதுகாப்பு.

காலங்காலமாக மாட்டுச் சாணத்திலிருந்து வறட்டி, காலைக் கடனாக கழிகளை உரமாக்குவது போன்றவற்றின் பரிணாம மற்றும் அறிவியல் வளர்ச்சி.

biogas_lifecycle2025க்குள் ஒன்பது லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் மாபெரும் தொழில்துறையாக பயோ கேஸ் அமையும். மற்றொரு மாற்று எரிசக்தியான சூரியக்கதிர்கள் மூலம் அமைந்த மின்கலத்துறையில் ஒரு லட்சம் பேர் பயனடைவார்கள்.

பெரும்பாலும் கிராமப்புறங்களில் இந்த வளர்ச்சி அமைந்திருக்கும். அங்கிருக்கும் மைக்ரோ க்ரெடிட் நிறுவனங்களுக்கும், அதன் மூலம் குறுங்கடன் பெறுபவர்களுக்கும் சென்றடைந்து, பெண்களுக்கும் தன்னிறைவு தரும் திட்டம்.biogasn-India-Cooking-stove-plants-alt-energy-fuel

India Together: Compact biogas plant making waves – 10 July 2006: “Biogas plants are not new, but their size, relative unwieldyness and reliance on large quantities of cattle dung have held back their potential attractiveness for the domestic cooking sector. That may change soon, thanks to the ingenuity of Dr Anand Karve. Vinita Deshmukh reports about Karve’s new award-winning compact plant.”

India: 100 Days of Sonia + Manmohan Singh Congress Government

1. Hits and misses of UPA's first 100 days – SiliconIndia: “‘If you ask me ministry-wise, I feel home and finance ministries have been the best performers in terms of quick action and implementation,’ said industrialist Rajeev Chandrasekhar, who is also a member of the upper house of parliament.

‘The road and transport ministry has also shown focus,’ Chandrasekhar added.

Amit Mitra, secretary general of the Federation of Indian Chambers of Commerce and Industry (FICCI), specifically mentioned the direct tax code, the budget, the Right to Education Act and the railway budget as areas where the government has shown it means serious business.

On the flip side, experts found little movement in areas like telecom where the policy on spectrum for third generation telephone services was decided only Friday. Even in the power sector, they felt strategy needed fine-tuning to get more capital.”

HT-Manmohan-100-days-hits-miss-synopsis-Congress-sonia-government

2. Price rise, food insecurity mar UPA II's 100 days- Politics/Nation-News-The Economic Times: “Food security has become elusive. An unprecedented rise in the prices of essential commodities, including rice and pulses, has smashed the class divide, making even daal-roti a luxury for many.

“I will count you the targets they (the government) themselves set for the first 100 days. Women’s Reservation Bill, right to education, food security act, judges’ assets bill, plus a plethora of other infrastructure building promises. And then look what we have achieved,””

100-days-agenda-UPA-Congress-Achieve-Score-graphs

3. The wind of the 100 days – Views – livemint.com: “Pressing issues such as managing the drought and reviving a slowing economy have received only ad hoc attention. There are other matters of great importance for the long-term future of the country that have not been addressed. How to initiate the next round of economic reforms? How to arrive at a meaningful consensus on climate change in the country? How to deal effectively with Pakistan and China?”

4. The Pioneer > Online Edition : >> At the end of 100 days: “The President listed 24 things the UPA Government would do in its first 100 days in office. They included internal security and preservation of communal harmony and stepping up of economic growth, particularly in agriculture, manufacturing and services. The President also mentioned consolidation of the existing flagship programmes for employment, education, health and rural infrastructure besides introduction of new food security and skill development programmes. Women empowerment, including early passage of the Women’s Reservation Bill, and constitutional amendment to provide 50 per cent reservation for women in panchayats and urban local bodies were also mentioned. Action for welfare of weaker sections and minorities besides disabled and senior citizens and governance reform were the other points covered in the President’s address. The other important areas were prudent fiscal management and energy security.

the biggest setback for the Government plans on economy came from the failure of the monsoon, resulting in 171 districts declared as drought hit and the agriculture ministry battling with the drought. The kharif crops are lost and the only hope is the rabi crop for which the Government has hiked the minimum support price. ”

5. UPA's 100 days and a 100 lies later…: Rediff.com news: “Anupam Trivedi, a member of the Bharatiya Janata Party”

Top Polluting Cities in India: Environment & Global Warming: Carbon footprint with Gold

நன்றி: ஹிந்துஸ்தான் டைம்ஸ் :: இ-பேப்பர்

Murder case in Nigeria: Ken Saro Wiwa and 8 Ogoni people Executed: Blood on Shell’s hands

“Corporations have neither bodies to be punished, nor souls to be condemned, they therefore do as they like”
Edward, First Baron Thurlow 1731-1806

  • நர்மதாவுக்கு மேதா பட்கர் கிடைத்த மாதிரி நைசீரியாவின் ஒகொனி பழங்குடியினருக்கு இராணுவ அரசு இழைக்கும் அராஜகங்களைத் தட்டி கேட்கிறார் கென்.
  • நைஜீரியாவின் எண்ணெய் பிரச்சினைகளை சுட்டிக் காட்டி கென் சாரோ விவா பத்திரிகையில் எழுதுகிறார்.
    1. ஒகோனி பூர்வகுடியினருக்கும் நில உரிமைதாரர்களுக்கும் போதிய நஷ்ட ஈடு கிடைக்காமை: சொந்த வீட்டை விட்டு துரத்தப்படுதல்
    2. உடலுக்கு தீங்கு விளைவிக்கும் நச்சுப் பொருள்களை கையாளும் வேலை: மாசு கலந்த பணியினால் இளவயது மரணங்கள்.
    3. எண்ணெய்க் கசிவுகள்
    4. விலை உயர்ந்த பெட்ரோலையும் டீசலையும் மட்டும் எடுத்துக் கொண்டு இயற்கை வாயுவை அப்படியே காற்றில் கலப்பது
    5. சுற்றுச்சூழல் நாசம்: மீன் இறப்பு; கடல்வாழ் உயிரினங்களுக்கு குந்தகம்

Wiwa v Shell: the day of truth? | Kevin Smith | Comment is free | guardian.co.uk: “When oil is extracted, there is often a certain amount of natural gas as well. Instead of pumping this gas back underground or using it to meet the energy needs of local communities, it is cheaper to simply burn off this gas. Although Shell has repeatedly said that it intends to stop burning off gas, the flares are toxic and harmful, which is why they are strictly regulated in countries such as the US or the UK. Such flaring is only cheap when environmental and human costs are not taken into consideration.

According to a recent report by an energy journalist, the amount of gas that is being wastefully flared by oil companies in the Niger Delta is equivalent to one third of the North Sea’s annual gas production. Gas flaring has technically been illegal in Nigeria since 1984, but oil companies including Shell continue this polluting practice with impunity.

The cases aim to hold Shell accountable for human rights violations in Nigeria, including

  1. complicity in summary execution,
  2. crimes against humanity,
  3. torture,
  4. arbitrary arrest and
  5. detention as well as
  6. for requesting, financing and assisting the Nigerian military – which used deadly force to repress opposition to Shell.”

பாஸ்டன் க்ளோப் தலையங்கம்: Ending a Shell game – The Boston Globe

  • பெட்ரோல் நிலங்களை குத்தகை எடுத்திருக்கும் ஷெல் நிறுவனத்திற்கு இவ்விதமான அம்பலப்படுத்தல்கள் ரசிக்கவில்லை.
  • இவற்றைக் குறித்து குரல் கொடுக்கும் சரோ விவா மீது பொய்வழக்கு தொடுக்கிறது மிலிடரி ராஜாங்கம்.
  • இராணுவ அடக்குமுறையில் ஒகோனியர் கொல்லப்படுகிறார்கள்; இவ்வாறான தீர்த்துக்கட்டல்களுக்கு ஷெல் பெட்ரோலியம் காசு தந்து குஷியாக வைத்துக் கொள்கிறது.
  • ஓகோனிஒயர் குறித்து உலக நாளேடுகளுக்கு செய்தி வழங்கிய கென் சாரொ விவாவிற்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது.
  • அவரது தூக்கு தண்டனையை ரத்து செய்வதற்கு பர்த்தியாக, போராட்டங்களைக் கைவிடுமாறு ஷெல் கார்பரேஷன் பேரம் பேசுகிறது.
  • ஷெல் ஆயில் நிறுவனத்தின் கட்டளைக்கு அடிபணியாததால், மூன்று நாள் பட்டினி போட்டு, முடிவில் கென்னும் அவரின் எட்டு சகாக்களும் இராணுவ அரசினால் கொல்லப்படுகிறார்கள்.
Port Harcourt, the oil capital of Africa is a crowded city plagued by crime where most people live on mud streets without electricity, running water or sewer. Despite producing 2.26 million barrels of oil a day, 60 percent of Nigerians live below the poverty line.

Port Harcourt, the oil capital of Africa is a crowded cityplagued by crime where most people live on mud streets without electricity, running water or sewer. Despite producing 2.26 million barrels of oil a day, 60 percent of Nigerians live below the poverty line.

மேலும் விவரங்களுக்கு: Ken Saro-Wiwa v Shell oil unfurls: how the Guardian covered it | World news | guardian.co.uk

இந்தக் குற்றத்திற்கு பிராயச்சித்தமாக பதினைந்தரை மில்லியன் ($15.5m – £9.6m) டாலர்களை தற்போது ஷெல் நஷ்ட ஈடாக வழங்கவுள்ளது. செய்தி: Shell agrees to pay compensation for execution of Saro-Wiwa and Ogoni protesters | World news | guardian.co.uk

சிகரெட் பிடித்து புற்றுநோய் வந்தவருக்கே பில்லியன் டாலர் அள்ளித் தரும் நாட்டில் 15.5 மில்லியன் மிகவும் குறைந்த தொகை. ஆனால், மேற்கத்திய நிறுவனம் ஆப்பிரிக்க நாட்டில் இழைத்த அநீதிக்கு, அமெரிக்க நீதிமன்றங்களில் வளர்ந்த நாட்டின் தீர்ப்புகள் கொடுக்கலாம் என்பதற்கு முதல் உதாரணமாக இருப்பதால் முக்கியத்துவம் பெறுகிறது.

Shell settlement with Ogoni people stops short of full justice | John Vidal | Environment | guardian.co.uk: “There are thousands more Ogoni who will now want to bring their case to the west to see justice done, as well as other Niger Delta tribes like the Ijaw, the Igbo, the Ibibio and the Itsekiri who also want justice. There have been more than 500 pollution cases against Shell in Nigeria, but few reach court and the company has been able to use the appeal system to delay those that do for many years.

Now the lesson is that justice and reparation can be obtained abroad. A Dutch court will soon hear a case brought against Shell by other Niger Delta villagers following a major oil spill years ago. Meanwhile, in Ecuador, Chevron is about to hear its fate in a massive pollution case that has been going on for nearly 10 years. It’s quite possible the company will be fined more than $4bn.”

போபால் கசிவை எடுத்துக் கொள்வோம். இன்னும் அந்த நிறுவனம் ஜோராக உலக நாடுகளில் செயல்பட்டு வருகிறது. இந்தியாவிலோ, உயிரின் மதிப்பு சில்லறை செல்லாக்காசு. எட்டணாக்களை விட்டெறிந்து விட்டு புதிய பேட்டரி தயாரிக்கப் போய் விட்டார்கள். ஆனால், இந்த ஷெல் நிறுவன நஷ்ட ஈடு, இந்த மாதிரி சரிக்கட்டல் செய்த பழம் பெருச்சாளிகள் வயிற்றில் புளி பேஸ்ட்டை கரைக்க வைத்திருக்கிறது.

பழைய கேஸை தூசு தட்டி எடுக்கலாம். எத்தனை பேருக்கு கண்ணு கப்ஸா ஆனது; எவ்வளவு பேருக்கு காலு போச்சு; எம்புட்டு குழந்தைகள் குறைபாடுகளோடு வாழ்க்கையை தொலைத்து நிற்கின்றன என்று கணக்கு போட்டு, அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு போடலாம். இதுவரை ‘நிற்காமல் ஓடுவதற்காக புகழ்பெற்ற மின்கலம்’ போன்ற சொற்றொடர்கள் காணாமல் போய் டௌ கார்ப்போரேஷன் மேல் குற்றப்பத்திரிகையை மக்கள் உயிரை மதிக்கும் நீதிபதிகளிடம் முன் வைக்கலாம்.

அந்த விதத்தில் ஷெல் வழக்கு முக்கிய மைல்கல்.

நிறுவனங்களை சட்டையைப் பிடித்து கேள்வி கேட்பது நல்ல விஷயம். ஆனால், சிலியின் பினாச்சே, இலங்கையின் ராஜபக்சே ஆகியோருக்கு தர்மதேவதையின் கடைக்கண் பார்வை கிடைக்க இன்னும் எத்தனை காலம் எடுக்குமோ?

இந்த மாதிரி தலைவர்களைக் கூட விட்டுவிடலாம். இராஜீவ் காந்தி மாதிரி எப்படியாவது வன்மம் தீர்க்கப்பட்டு, ஹிட்லர் மாதிரி சுட்டுக் கொண்டு, மிலோபதான் மாதிரி அனுபவித்து நியாயம் எட்டியாவது பார்க்கலாம்.

ஆனால், இருபதாண்டு முன்பு ஷெல் பங்குதாரராக இருந்து கொண்டு கோடி டாலரை ஊக்கத்தொகையாக பெற்ற CEO யார்? அவருக்கு எடுபிடியாக இருந்து கொண்டு முடிவுகளை சிரமேற்கொண்டு நிறைவேற்றிய தலைவர்கள் எவர்? ஷேர் ஏற்வதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டிருந்த போர்ட் ஆஃப் டைரக்டர்ஸ் பரம சௌக்கியமாக கோல்ஃப் விளையாடிக்கொண்டு, சூதாடி காலத்தைக் கழிப்பதை விட்டு விட்டார்களே!

இந்த மாதிரி தொண்டரடி ஆபீசர்களை பொது மேடையில் அரங்கேற்றி, பேஸ்புக் பக்கத்தை அலங்கரித்து, ட்விட்டரில் புரட்சி ஏற்படுத்தும் வரை இரானும் ட்விட்டரும், ஒபாமாவும் இணையமும் என்று அமெரிக்கா குண்டுச்சட்டியில் வலை மேயும்.