Tag Archives: Kalainjar

#Justice4உதயமானBaby

உதயநிதி ஸ்டாலின் ட்விட்டர் ஓடையில் இருந்து:

செய்தி

தலைப்புக்கேற்ற கீச்சுகள்

உதயநிதி கடந்து வந்த பாதை
மெரினாவுல இடம்
சுபவீ ,வீரமணி
அன்றும் இன்றும் என்றும் திராவிடம்
ஸ்டாலின் பாபு
அப்பா திமுக
தாத்தா எவ்வழி

நக்கீரன்

‘திருமணம் ஆனவருடன் தவறான உறவு வைத்திருந்தேன்’ ஆண்ட்ரியா ஓபன் டாக்! | wrong relationship with married man says andrea | nakkheeran:  பெங்களூரில் நடைபெற்ற கவிதைப் போட்டியில் கலந்து கொண்டுள்ளார் ஆண்ட்ரியா. அப்போது, முறிந்த சிறகுகள் என்ற தலைப்பில் சோகமான கவிதைகளை வாசித்துள்ளார். சோகத்தை பிரதானப்படுத்துவதை போன்று அந்த கவிதை அமைந்திருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது ரசிகர்கள் அதற்கான காரணத்தை கேட்டுள்ளனர். இதைதொடர்ந்து பேசிய ஆண்ட்ரியா, ” நான் திருமணம் ஆன ஒருவரோடு உடல் ரீதியாக தொடர்பில் இருந்தேன். ஆனால் அவர் என்னை மனதளவில் காயப்படுத்தினார். அதில் இருந்து மீள முடியாமல் இருந்த போதுதான் இந்த கவிதையை எழுதினேன்” என்றார். ஆயுர்வேத சிகிச்சைக்கான காரணமும் இதுதான் என்றும் அவர் தெரிவித்தார்.

இன்றைய ஜூனியர் விகடன் கிசுகிசு

All Politics is Local


அறிவா உள்ளுணர்வா?  | திண்ணை

இறந்து போன எழுத்தாளர்களைப் பற்றிய குறிப்புக்கள் பற்றிச் சில குறிப்புக்கள் | திண்ணை: ஸிந்துஜா

திண்ணைப் பேச்சு – கனிமொழி, சின்னக் குத்தூசி பற்றி ஜெயமோகன் பற்றி பி கே சிவகுமார் பற்றி ஸிந்துஜா | திண்ணை :: கோபால் ராஜாராம்

தொலைக்காட்சி – சீரியத்துவம்

முந்தைய ட்வீட்ஸ்: நியு யார்க் நகரத்துவம்

நெருப்பிலாமல் புகையுமா?

செய்தி: Blaze destroys Khalsa Mahal; 1 fireman dead

The fire broke out in the offices of Commissioner and Director of Industries and Commerce and Director of Social Welfare. (தொழில் வணிக வரி அலுவலகம்)

Believing that the fire was fully doused, a team led by Divisional Fire Officer, Central Chennai, Priya Ravichandran, entered the building around 1:30 am and suddenly the roof caved in. K.Anbazhagan (55), leading fireman at Teynampet station, died on the spot.

சென்னை எழிலகத்தில் தீ: வணிகவரி- சமூகநலத்துறை ஆவணங்கள் சாம்பல்; சதியா ?

இந்த அலுவலகத்தில் இருந்த முக்கிய ஆவணங்கள் அனைத்தும் எரிந்து சாம்பலாயின. பொங்கல் திருநாளை முன்னிட்டு அரசு அலுவலகத்திற்கு தொடர் விடுமுறை என்பதால் சென்னையில் உள்ள அனைத்து தலைமை அலுவலகங்களும் வெறிச்சோடி காணப்பட்டன.


ஏன்? சில துப்பறியும் எண்ணங்கள்

1. அமைச்சர் எத்தனை அமைச்சரடி: சமூக நலத்துறை அமைச்சராக பதவி வகித்த செல்வி ராமஜெயத்தை அமைச்சர் பதவியிலிருந்து முதல்வர் ஜெயலலிதா நீக்கம் செய்தார். புதிய சமூச நலத்துறை அமைச்சராக வளர்மதியையும் நியமித்துள்ளார். சென்ற வருடம் – திமுக: சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன்.

2. ஆட்சியர் ஊழல்: Directorates of Social Welfare, and Industries and Commerceஇல் இருந்து எத்தனை ஆணையர்கள் (தற்போதைய இயக்குநர் ஜோதி நிர்மலா) சம்பந்தப் பட்டிருக்கிறார்கள் என்பதைக் கண்டுபிடிப்பவருக்கு ‘பரத் – சுசிலா விருது’ வழங்கப் போவதாக அறிவிப்பு.

3. தயார் நிலை: பொங்கல் நேரத்தில் தீயணைப்பு வீரர்கள் சொந்த ஊருக்கு செல்கிறார்களா அல்லது சென்னையிலேயே இருக்கிறார்களா என்று சோதனை செய்தார்கள்

4. ஸ்மோக் அலாரம் வணிகம் / தீயோலம் வர்த்தகம்: புகை எழுந்தாலே சத்தம் எழுப்பும் கருவிகளை விற்பவர்களின் சதிச்செயல் இது.

5. புதிய கட்டிடம் எழுப்ப திட்டம்: இருக்கும் எழிலகத்தை இடிக்கச் சொன்னால், புராதனம், கலாச்சாரம், பாரம்பரியம், வரலாற்றுச் சின்னம் என்றெல்லாம் புயல் கிளப்புவார்கள். மதராஸ் மியூசிங்ஸ், தியடோர் பாஸ்கரன், இல கணேசன் எல்லோரும் எழுதத் தொடங்குவார்கள். இப்படி இடித்தால் மல்டிப்ளெக்ஸ் மாடி அமைக்கலாம்.

6. அப்பாவி அன்பழகன் கொலை: நாலு குழந்தைகளுக்கு அப்பாவான நடுத்தர வர்க்கத்தை நடுத் தெருவிற்கு கொண்டு வந்தால் எப்படி சர்வைவ் ஆவார்கள் என்று வேடிக்கை பார்க்கும் ரியாலிடி டிவியின் சூழ்ச்சி. 😦

பிரசன்னா ராமஸ்வாமி @ சென்னை சங்கமம்: ‘வானம் வசப்படும்’ நாடகம்

ஜூலி கணபதியும் நந்தலாலாவும் தோஷமில்லை. தோற்றுவாய் தெரிந்துவிடும். ஆனால், உலக சினிமா குறித்து எஸ் ராமகிருஷ்ணன் எழுதினால் கபர்தார். ‘துணையெழுத்து‘ விகடன் வாசகரும் வெளிறுவார்; ‘வெயிலைக் கொண்டு வாருங்கள்’ இலக்கிய ஆர்வலரும் பிளிறுவார்.

சோ ராமசாமி நாடகம் போட்டால் தோஷமில்லை. இலக்கியவிரும்பியும் மாற்றுப்பிரதி பிரகடனவாதியுமான பிரசன்னா ராமசுவாமி நாடகம் போட்டால்?

நேரடியாக நிகழ்ச்சியைப் பார்த்தால் மட்டுமே இந்த மாதிரி நாடகத்தை விமர்சிக்கலாம். கிடைப்பதோ கலைஞர் டிவி ஒளிபரப்பு மட்டுமே… அதை வைத்து மதிப்பீடு செய்யலாம்.

1. டிவி பார்வையாளர்: அழகிக்கு ஃபோகஸ் கொடுப்பது சரியே. ஆனால், அவ்வப்போது பிக்சர் இன் பிக்சர் மாதிரி மொத்த திரையும் காமிங்கப்ப்பா…

2. பரத நாட்டிய சுப்புடு: முன்னாடி பத்மா சுப்ரமணியம் பாட்டி வருவார்; இப்பொழுது அவர் இடத்தில் அனிதா ரத்னம். தமிழச்சி தங்கபாண்டியனுக்கு சான்ஸ் கொடுங்கப்பா…

3. கலைவிழா வித்தகர் கருணாநிதி: சையா…ச்சய்யா… பாடல் சரி. தொப்புள் தெரியற டான்ஸ் கோரிப்பாளையம் குழுவினரின் டான்ஸ் எங்கப்பா….

கேள்வி நேரம்

  • தாலிபான் பாணி கொடூரச் செயலாலகக் கருதப்படும் கெளரவக் கொலைகள் (Honor Killings) என்பது இஸ்லாமிய நாடுகளில்தான் மிகுதியாக இருக்கிறது. முஸ்லீம்களை இந்த நாடகம் இழிவு செய்கிறதா?
  • மூன்று பேர் நடுவில் வரும் ஒப்பாரியில் இடம்பிடிக்கிறார்கள். அவர்கள் மு.க. அழகிரி, ஸ்டாலின், கனிமொழியின் குறியீடா?
  • ஒலிப்பேழையில் சினிமாப் பாடல், பேக்ட்ராப் பவர்பாயின்ட் ஸ்லைடுகள், ‘மானாட மயிலாட’ குத்தாட்டம், ப்ரொஜஷன் ஸ்க்ரீனில் ஃப்ளிக்கர் ஒளிப்படம் – இவை எல்லாம் இருந்தால் நவீன நாடகம் தயார்?

அதிகாரபூர்வ செய்திக் குறிப்பு

ThatsTamil
ஐந்தாவது சென்னை சங்கமம் கலை விழா பிரமாதமான இசை நாடகத்துடன் கோலாகலமாக தொடங்கியது.

சென்னை தீவுத் திடலில் நேற்று மாலை 5வது சென்னை சங்கமம் கலை நிகழ்ச்சி தொடங்கியது. முதல்வர் கருணாநிதி இதைத் தொடங்கி வைத்தார்.

கலை விழாவின் தலை விழாவாக பிரசன்னா ராமசாமியின் வானம் வசப்படும் என்ற இசை நாடக நிகழ்ச்சி நடந்தது. கெளரவக் கொலைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நாடகமாக இது அமைந்தது. அனைவரையும் கவரும் வகையிலான இந்த நாடகத்தில் இடம் பெற்ற வலுவான சமுதாயச் செய்தி அனைவரையும் நெகிழ வைத்தது.

ஒரு எளிய கதையை எடுத்துக் கொண்டு அதை இசை வடிவில் பிரமாதமாக அமைத்திருந்தனர். ஒரு கிராமத்து இளைஞன், வேலை தேடி நகரத்திற்கு வருகிறான். வந்த இடத்தில் காதல் மலர்கிறது. காதலியுடன் தனது ஊருக்குத் திரும்பிச் செல்கிறான். இருவரும் வேறு வேறு சாதியினர்.

இதனால் இளைஞனின் ஊரில் பிரளயம் ஏற்படுகிறது. ஊர்ப் பஞ்சாயத்துக் கூட்டி இந்தக் காதலைப் பிரிக்க உத்தரவிடப்படுகிறது. ஊரில் கலவரம் வெடிக்கிறது. இரண்டாக பிரிந்த கிராமம், சண்டையில் ஈடுபடுகிறது. யார் பெரியவர் என்ற இந்த மோதலால் அந்த இளைஞன் மற்றும் பெண்ணின் காதல் ஸ்தம்பித்துப் போகிறது. இறுதியில் நடப்பது மனதை உருக்குகிறது.

இந்த நாடகத்தின் தொடக்கத்தில் இரண்டு திருநங்கைகளின் அழகான நடனம் அனைவரையும் வியக்க வைப்பதாக இருந்தது. அதேபோல மாற்றுத் திறனாளி ஒருவரின் ஏரோபிக் நடனமும் அனைவரையும் கவர்ந்தது.

200க்கும் மேற்பட்ட கலைஞர்கள் இந்த இசை நாடகத்தில் கலந்து கொண்டு நடித்து, நடனமாடினர். இசையும், கதையைச் சொல்லிய விதமும், நடனமும் இணைந்து கண் கவர் விருந்தாகவும், மனதுக்கு நல்ல செய்தியைத் தருவதாகவும் நாடகம் அமைந்திருந்நதது.

கிராமிய நடனங்கள், பாரதியாரின் பாடல்கள், தமிழ் சினிமாப் பாடல்கள் என வெரைட்டியான இசை வடிவங்களை இழையோட வைத்திருந்த விதம் அருமை. அதிலும் 3 பெண்கள் இணைந்து பாடிய அந்த ஒப்பாரிப் பாடல், கண்களை நனைக்கத் தவறவில்லை.

முத்து மாரியம்மன் வேடத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடனக் கலைஞர் அனிதா ரத்னம் பங்கேற்றார். வெறுமனே வேடிக்கை பார்த்து விட்டு போய் விடும் வகையிலான நாடகமாக இல்லாமல், சமூகத்திற்குத் தேவையான அருமையான செய்தியை சொன்ன இந்த நாடகத்தைப் பாராட்டதவர்களே கிடையாது.


பிரளயன் பேட்டியில் பிரசன்னா ராமஸ்வாமி

சமகால தமிழ் நாடகம் தொடர்பா ஒரு ஏழு நிமிடத்திற்கு ஒரு சின்ன டாக்குமெண்ட்டரி செய்யவேண்டியிருந்தது. அப்படி செய்யும்போது பிரசன்னா ராமசாமியை ஒரு பேட்டி எடுத்தேன். அதில் அவர் ரொம்ப சரியாகச் சொன்னார். தென்னிந்திய நாடகங்களோடு சமகால தமிழ் நாடகங்களை ஒப்பிடும்போது ஒன்றைக் கவனிக்கவேண்டும்.

மலையாள-கர்நாடகா நாடக உலகில் பெரிய சாதனைப் படைப்புகள் பல வந்திருக்கு. காவலம் நாராயண பணிக்கர், சங்கரப்பிள்ளை, அப்புறம் பி.வி.கரந்த், கிரிஷ்கர்னாட், பிரசன்னா என்று பெரிய ஆளுமைகள் உண்டு. அடுத்த தலைமுறையினர் நாடகம் தயாரிக்கிறபோது இந்த பெரிய ஆளுமைகளின் பாதிப்பு அந்த பாணி முற்றிலும் மாறாமல் அப்படியே இருக்கும்.

ஆனா தமிழ் நாடகம் அப்படி இல்ல. பன்முகத் தன்மையோடு இருக்கு.

எங்கள் சென்னைக்கலைக்குழுவுக்கு ஒரு பாணி. கூத்துப்பட்டறைக்கு வேறு பாணி. பரிக்ஷா ஞாநிக்கு இன்னொன்று. அப்புறம் மங்கையோட மௌனக்குரல், மேஜிக் லேண்டர்ன், மு.ராமசாமி, ராஜீ, ஆறுமுகம், கே.ஏ.குணசேகரன், வேலுசரவணன், முருகபூபதி இப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பாணி. எல்லோருக்கும் முன்னோடியான ராமானுஜம் சாருக்கு தனித்த பாணி. இந்த பன்முகத் தன்மைதான் தமிழ் நாடகத்தோட சிறப்பு.

இது கேரளாவிலும் இல்ல. கர்னாடகாவிலும் இல்ல. இது உண்மைதான். ஆனா இந்த ஆற்றல்களையெல்லாம் கொண்டு தமிழ் நாடகத்தின் உண்மையான சவால்களை நாம் சந்திக்க தவறுகிறோம்.


கெளரவக் கொலைகளைத் தொடர்ந்து தற்கொலைகளும் தமிழகத்தில் அதிகரிப்பு

மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் தொகுதியான சிவகங்கையில் ஒருகிராமத்தில் பெண்கள் தற்கொலை செய்வது அதிகரித்து வருகிறது. கடந்த 2008 முதல் ஜூன் 2010 வரை மட்டும் இங்கு 39 பெண்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

அதேபோல அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் தொகுதியான ஆண்டிப்பட்டி இடம்பெற்றுள்ள தேனி மாவட்டத்தில் இதே காலகட்டத்தில் 82 பெண்கள் தற்கொலை செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் 90 பேரும், தூத்துக்குடியில் 136 பேரும் தற்கொலை செய்துள்ளனர்.

இவற்றில் பெரும்பாலானோர் குடும்பப் பிரச்சினைகள், ஜாதி விட்டு காதலித்ததால் ஏற்பட்ட காதல் பிரச்சினைகள் தொடர்பாக தற்கொலை செய்து கொண்டவர்கள்.மேலும் ஜாதிக்காக தற்கொலை செய்தவர்களும் கணிசமாக உள்ளனராம். அதாவது கெளரவ கொலைகளைப் போல கெளரவ தற்கொலைகளாக இவை வர்ணிக்கப்படுகின்றன.

எவிடென்ஸ் என்ற மதுரையைச்சேர்ந்த என்ஜிஓ அமைப்பு ஆர்டிஐ மூலம் இந்தத் தகவல்களைப் பெற்று வெளியிட்டுள்ளது.

கலைஞர் மு கருணாநிதியும் தர்மதுரை ரஜினிகாந்த்தும்

Original

கலைஞர் கருணாநிதி, ஆ. ராசா, தயாநிதி மாறன், அழகிரி, ஸ்டாலின், கனிமொழி (2010)

ஆணென்ன பெண்ணென்ன நீயென்ன நானென்ன எல்லாம் ஓரினம் தான்
அட நாடென்ன வீடென்ன காடென்ன மேடென்ன எல்லாம் நம் நிலம் தான்
நீயும் பத்து மாசம் நானும் பத்து மாசம் மாறும் இந்த வேஷம்

ஒண்ணுக்கொண்ணு ஆதரவு உள்ளத்திலே ஏன் பிரிவு
கண்ணுக்குள்ள பேதம் இல்ல பார்ப்பதிலே ஏன் பிரிவு
பொன்னு பொருள் போகும் வரும்
ஆசை மட்டும் போவதில்லை
அடிக்கும் பணம் ஓடிவிடும் பதவி விட்டுப் போவதில்லை

மேடைக்கும் மாலைக்கும் கோடிக்கும் ஆசைப்பட்டு
வெட்டுக்கள் குத்துக்கள் ரத்தங்கள் போவதென்ன
இதை புரிஞ்சும் உண்மை தெரிஞ்சும் இன்னும் மயக்கமா?

சொந்தம் பந்தம் சேர்ந்திருந்தாலும் சொத்து சுகம் தேவையிங்கே
ஆட்சி விட்டுப் போச்சுதுன்னா வாழ்வதிலே லாபம் இல்லே
பா.ம.க. மட்டும் சேர்ந்திருந்தா இன்றும் என்றும் சோகம் இல்லே
கன்றை விட்டுத் தாய் பிரிஞ்சாலும் நாற்காலி சுகம் போல் ஏதுமில்லே

ஊருக்கும் பேருக்கும் காருக்கும் இஷ்டப்பட்டு
வாழ்கின்ற வாழ்க்கைக்கு என்றென்றும் அர்த்தமுண்டு
இதை புரிஞ்சும் உண்மை தெரிஞ்சும் இன்னும் மயக்கமா?

 

Top Polluting Cities in India: Environment & Global Warming: Carbon footprint with Gold

நன்றி: ஹிந்துஸ்தான் டைம்ஸ் :: இ-பேப்பர்

அரசியல்: முலாயம் சிங் யாதவ் பையன்

வாசிப்புப் பழக்கம், எழுதும் ஆற்றல், ஆங்கில அறிவு உடையவர்களை தேர்ந்தெடுத்து டெல்லிக்கு எம்..பிகளாக அனுப்பி தங்கள் கொள்கைகளுக்காக திறமையாக வாதாடக் கூடிய நபர்களை - அண்ணா, சம்பத், நாஞ்சில் மனோகரன் , இரா செழியன்,முரசொலி மாறன், டாக்டர் கலாநிதி, வைகோ போன்றோரை -- அனுப்பும் கட்சியாக இருந்த திமு.க இன்று எப்படிப்பட்டவர்களை அனுப்புகிறது ?

வாசிப்புப் பழக்கம், எழுதும் ஆற்றல், ஆங்கில அறிவு உடையவர்களை தேர்ந்தெடுத்து டெல்லிக்கு எம்..பிகளாக அனுப்பி தங்கள் கொள்கைகளுக்காக திறமையாக வாதாடக் கூடிய நபர்களை - அண்ணா, சம்பத், நாஞ்சில் மனோகரன் , இரா செழியன்,முரசொலி மாறன், டாக்டர் கலாநிதி, வைகோ போன்றோரை -- அனுப்பும் கட்சியாக இருந்த திமு.க இன்று எப்படிப்பட்டவர்களை அனுப்புகிறது ?

Mulayam appoints son as UP unit chief- Hindustan Times: “The Samajwadi Party president Mulayam Singh Yadav on Wednesday appointed his son Akhilesh Yadav, 36, as chief of the party’s UP unit. The post was so far held by Yadav’s younger brother Shivpal Singh Yadav, who is also leader of Opposition in state assembly.”

Thuglaq-Cho-Family-Eezham-Sri-Lanka-Govt-Ministers

துக்ளக் கருத்துப்படம்: விஜய்காந்த் வெற்றி

DMK-Thuglaq-Cho-satya-DMDK-Kalainjar-Vijaikanth-Cartoons

தேர்தல்: கருத்தில் கவர்ந்தது

பா ராகவன் :: Pa. Raghavan | writerpara.com » தேர்தல் 2009 – என்ன சொல்கிறது? | இந்தியத் தேர்தல் 2009 – தமிழகம் என்ன சொல்கிறது?

இலங்கைப் பிரச்னை, விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்குச் சீர்குலைவின் விளைவான வன்முறைச் சம்பவங்கள், வாரிசு அரசியல் ஆகியவை திமுகவுக்கு முற்றிலும் எதிரான தீர்வைத் தரக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பாதி எதிர் மட்டுமே.

அடித்தட்டு வாக்காளர்களுக்கு ஒரு ரூபாய் அரிசி, கலர் டிவி போன்ற கவர்ச்சித் திட்டங்கள் பிடித்திருக்கின்றன. நல்ல சாலைகள், பாலங்கள், போக்குவரத்து வசதிகள், வேலை வாய்ப்புகள், வேலை நியமனங்கள், பொதுவில் – மாநில அளவில் பெரிய பிரச்னைகள் இல்லாமல் இருப்பது ஆகியவையே முக்கியமாகப் பட்டிருக்கின்றன.

அதிமுகவுக்கு அவசியம் வாக்களித்தே தீரவேண்டும் என்பதற்கான நியாயமான காரணங்கள் ஏதும் பாமர மக்களுக்கு இல்லை.

வைகோ தோற்றிருப்பது, இலங்கைப் பிரச்னையை மக்கள், வாக்களிக்கையில் யோசிக்க வேண்டிய விஷயமாகப் பார்க்கவில்லை என்பதை எடுத்துக்காட்டுகிறது.

சீமான், பாரதிராஜா போன்றவர்களின் பேச்சுகளை ரசித்தவர்கள், அதையும் திரைப்படக் காட்சிகளாகவே எடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.

மீண்டும் மன்மோகன் சிங்கின் பெயரால் சோனியா ஆள்வார்.


மா சிவகுமார் :: எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்: தேர்தல் முடிவுகள் – சில குறிப்புகள்

மதவாதக் கட்சிகளின் பிரச்சாரம் எடுபடாமல் போனாலும்,

* கர்நாடகா, குஜராத், இமாச்சல பிரதேச மாநிலங்களில் உறுதியான வெற்றியையும்,
* மத்தியபிரதேசம், ஜார்கண்டு, உத்தரபிரதேசம், மகாராஷ்டிரம் போன்ற மாநிலங்களில் போட்டி போடும் வலிமையுடனும்,
* பீகார் மாநிலத்தில் கூட்டணி ஆதரவிலும்
இன்னும் தளைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

மாயாவதியின் அகில இந்திய கனவு பொய்த்துப் போய் விட்டது. அகில இந்திய அளவில் ஒத்த நோக்குடைய கட்சிகளுடன் கூட்டணி வைத்துக் கொள்ளவும் இறங்கி வர வேண்டும்.

பாமகவை எப்படியாவது தோற்கடித்தே தீருவது என்று செயல்பட்ட திமுக பணபலத்தின் முடிவாக பாமக 6 தொகுதிகளிலும் மண்ணைக் கவ்விய நல்லது நடந்திருக்கிறது. இரண்டு தீய சக்திகள் மோதிக் கொண்டால் குறைந்தது ஒன்று ஒழிந்து விடுகிறது.

குடும்ப அரசியல், பணத் திமிர் என்று செயல்பட்ட திமுகவின் அலட்டல் இன்னும் அதிகமாகும்.

அனைத்து மதங்களையும் அணைத்துச் செல்ல வேண்டும் என்ற இந்திய கோட்பாட்டுக்குக் கிடைத்த வெற்றி தேர்தல் முடிவுகள். உபியில் மாயாவதி, ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு, தமிழ்நாட்டில் செயலலிதா மூவருமே வாய்ப்பு கிடைத்தால் பிஜேபியுடன் சேர்ந்து கொள்வார்கள் என்ற எண்ணம் பரவலாக இருப்பதால் சிறுபான்மை மதத்தினர் வாக்களிக்க விரும்பவில்லை.

கன்னியாகுமரி தொகுதியில் திமுகவின் ஹெலன் டேவிட்சனுக்கு வாக்களிக்குமாறு முடிவெடுத்தார்களாம். கம்யூனிஸ்டுகளை ஒதுக்குவது என்று கேரளா முடிவெடுத்த பிரதிபலிப்பு கன்னியாகுமரியிலும்


அனானியார் சொன்னது:

பாஜக மேல் கட்சிகளுக்கு ஒருவித மனத்தடை உருவாகி இருக்கிறது. ஆனால் இதில் ஊடகங்களால் உருவாக்கி விட்ட பொய் செய்திகள் அதிக அளவில் பங்கு வகிக்கிறது.

தமிழகத்தில் அதிமுக / பாஜக கூட்டணி இருந்திருந்தால் மொத்த காங்கிரஸ் எதிர்ப்பு / திமுக எதிர்ப்பு ஓட்டுக்களும் ஒரே இடத்தில் குவிந்திருக்க வாய்ப்பு அதிகமாக இருந்திருக்கும். அது நடக்கவில்லை.

ஜனதா தள் / பகுஜன் சமாஜ் போன்ற கட்சிகள் பிராந்தியத்தில் நல்ல செல்வாக்குடன் இருந்தாலும் இன்னமும் தேசிய அளவில் வளர்ச்சி பெறவில்லை என்பது உண்மை.

பகுஜனின் தலைமையின் ஊழல் மற்றும் சாதிய பிரதிநித்துவ போக்கு நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை.

கம்யூனிஸ்ட்களுக்கு பிராந்திய கட்சிகள் அளவிற்குதான் வீச்சு இருக்கிறது.

ஆகவே இன்றும் காங்கிரஸிற்கு மாற்றாக ஒரு தேசியக் கட்சி என்ற முறையில் பாஜகதான் இருக்கிறது. தொடர்ந்து இருக்கும் என்பதும் தெரிகிறது.

பாஜக மதசார்பற்ற முத்திரை பெறுவதற்காக சங்கத்திடமிருந்து துண்டித்துக் கொள்ள நினைக்கலாம். அது வெறும் கண்துடைப்பாகத்தான் இருக்க முடியும். கோயில் போன்ற விவகாரங்களை விட்டுவிட்டு… அடிப்படை பிரச்சினைகளை முதன்மைப் படுத்தி வளர்ச்சி முறையில் நிறைய நல்ல முயற்சிகளை செய்ய முன் வந்தால் வரும் தேர்தல்களில் வளரலாம்.


Krish :: பதிவுகள்: தேர்தல் 2009 – ஒரு பார்வை

தோழர்கள் பிடிவாதமாக “பல” கொள்கைகளை எதித்தனர். கேரளாவும், மேற்கு வங்கமும் தொழில் துறையில் மற்ற மாநிலங்களை விட பின் தங்கி இருப்பது அந்த மக்களை சிந்திக்க வைத்துள்ளது.

தங்கள் சுய நலத்துக்காக அடிக்கடி அணிமாறியும், அரசை மிரட்டி தனக்கு வேண்டிய காரியங்களை சாதித்து வந்தவர்களையும் மக்கள் இனம் கண்டு கொண்டு விட்டனர். லல்லு, முலாயம், பஸ்வான், மாயாவதி, ராமதாஸ் போன்றோர் இனி திருந்தினால் நன்று.

இந்த தேர்தலில் கரும் புள்ளியாக இருப்பது பணநாயகம். தென்னிந்தியாவில், குறிப்பாக தமிழ் நாட்டில் பணம் பல வெற்றிகளை தீர்மானித்திருப்பது ஜனநாயகத்திற்கு பெரிய சவால். இதனால் பதவி காலத்தில் என்ன தவறு செய்தலும், கடைசியாக பணம் கொடுத்து வெற்றி பெற்றுக் கொள்ளலாம் என்ற எண்ணம் மேலோங்கும்.


தேர்தல் சொல்லும் செய்தி… « அனாதி என்ற குடிகாரன்:

தங்கபாலுவுக்கு மெகா டிவி இருக்கிறது.

சமக, கார்த்திக் : மேடையில் இடையிடையே வந்து சிரிப்புக் காட்டி விட்டு செல்லும் அசத்தப் போவது யார் குழுவினர்.


கார்க்கி :: சாளரம்: தமிழக தேர்தல் காமெடிகள்

தேநீர். அல்லது. பந்து (டீ.ஆர்.பாலுன்னு எதுக்கு இங்லீஷல சொல்லிகிட்டு) வருவதாக இருந்ததால் கூட்டம் அதிகமாக இருந்தது. காரில் சென்ற நான் ஹார்ன் அடித்துக் கொண்டே கடக்க முயன்றேன்.

“அப்படி சுத்திக்கிட்டு போங்க சார்.வோட்டு கேட்க வ்ர்றாங்க” என்றார் ஒரு உடன்பிறப்பு.

எனக்கு வழிவிட்டா எங்க வீட்டுல இருக்கிற அஞ்சு ஓட்டு கிடைக்கும் என்றேன் கண்ணாடியை கீழே இறக்கி. அதற்குள் அங்கு வந்த ஒரு வட்டமோ சதுரமோ, நகருங்கப்பா. டிராஃபிக் ஆவுதுன்னு களத்தில் இறங்கினார். கூட இருந்த அல்லக்கை ஒன்று “இதையே அதிமுக காரன் கிட்ட சொல்ல முடியுமா? என்றார்.

அவங்க கலாட்டா நமக்கு தெரியாதா பாஸ். மோசமானவங்க என்று சிரித்தேன். அவரும் சிரித்தார். இதுதான் நேரம் என்று நீங்க அதிமுகன்னு அழகிரி திமுகவைத்தானே சொல்றீங்க என்றபடி நேரா செகண்ட் கியர் போட்டேன். தன்னை மறந்து சிரித்துக் கொண்டிருந்தார் அந்த அல்லக்கை. அவரது தலைவர் ஸ்டாலினா தயாநிதி மாறனா என்றுத் தெரியவில்லை.


ஜாக்கி சேகர் :: பிருந்தாவனமும் , நொந்தகுமாரனும் தேர்தல் முடிவுகள் சொல்லும் சேதி….

எந்த தேர்தலிலும் இல்லாது இந்த தேர்தலில் இளைஞர் கூட்டம் பெரும் அளவில் வாக்கு அளித்தது.

சீமான், தாமரை, பாரதிராஜா போன்றவர்களின் ஆவேச பேச்சு, ஜெவின் தனி ஈழம், ராமதாசின் தைலாபுர பிரஸ்மீட், வைகோ போன்றவர்களின் எழுச்சியான பேச்சு இவைகளையும் மீறி இந்த வெற்றி என்கிற போது யோசிக்க வேண்டிய விஷயம்.

தொலைக்காட்சியில் சீமான் பேச்சும் ஈழ மக்கள் பிரச்சனைகளும் திரும்ப திரும்ப ஒளிபரப்பியது ஆனால் அது ஒரு இடத்தில் கூட வரவில்லை. வெளிப்படையாக ஆயுதம் கொடுத்தது காங்கிரஸ் கட்சி என்று மக்களுக்கு தெரிந்தும் 9 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்று இருக்கிறது.


குசும்பன் :: குசும்பு: வெற்றி தோல்வி பற்றி ந�

கேள்வி: பா.ம.க தலைவர் இது பணத்தால் வாங்கப்பட்ட வெற்றி, பணம் விளையாடி இருக்கு என்று சொல்லி இருக்கிறாரே, அதோடு பீனிக்ஸ் பறவை போல் மீண்டு வருவோம் என்று சொல்லி இருக்கிறாரே அது பற்றி?

பதில்: முதலில் அவர் பா.ஜ.கவையும் லாலுவையும் பார்த்து கற்றுக்கொள்ளவேண்டியது நிறைய இருக்கு, தோல்வியை ஒப்புக்கொண்டு அதற்கான காரணத்தை கண்டுபிடிப்போம் என்று சொல்லும் ராஜ்நாத் சிங்கும், காங்கிரஸோடு கூட்டணி வைக்காமல் மத்தியில் ஆட்சியை பிடிக்கலாம் என்று நினைத்த எங்களுக்கு மக்கள் பாடம் புகட்டிவிட்டனர் என்று சொல்லும் லாலுவிடம் இருந்தும் அந்த பக்குவத்தை பெறவேண்டும்.


மூக்கு சுந்தர் :: My Nose: தேர்தல் 2009 முடிவுகள்

எம்.ஜி.ஆர் பாணியில் கலைஞரின் இலவச அரசியல் அடித்தட்டு மக்களை வசீகரித்து இருக்கிறது. கலைஞரின் அரசியல் மத்தியமரிடமிருந்து அடித்தட்டு மக்களை குறிவைத்து மாறியதற்கு பொன்மனச் செம்மலே காரணம்.


IdlyVadai – இட்லிவடை: விஜயகாந்த் அடுத்து என்ன செய்ய வேண்டும் ?


அசுரன்: இந்த தேர்தலில் மக்கள் யாருக்கு பாடம் கற்றுக் கொடுத்தார்கள்?

எந்த அயோக்கியன் வந்தாலும் இதைத்தான் செய்யப் போகிறான் எனும் போது, மாற்று வழி எதுவும் புலப்படவில்லை எனும் போது, யார் அதிக பணம் கொடுக்கிறானோ, யார் நம்ம சாதிக்காரனோ, யார் வெற்றி பெறுவார்களோ அவர்களுக்கு வோட்டு போட்டு விட்டு போய்விடுவோம் என்பதைத்தான் மக்கள் இந்த தேர்தலில் வெளிப்படுத்தியுள்ளனர்.


CableSankar: காங்- திமுக கூட்டணி வெற்றி பெற்றது எப்படி?

பாமகவின் தோல்விக்கு இன்னொரு முக்கிய காரணம் அவர்கள் வெற்றி பெற்றால் மதுவிலக்கு வந்துவிடுமோ என்ற பயத்தில் ஏற்கனவே பலபேர் நாட்டு பிரச்சனை, ரிசஷன், வீட்டு பிரச்சனையையெல்லாம் கட்டிங்க் அடித்தும், புகைவிட்டும் ஆத்தி கொண்டிருப்பதை இவர்கள் கெடுத்து விடுவார்கள் என்று யோசித்து ஆண் வாக்காளர்கள் எல்லாம் வரிந்து கட்டி கொண்டு பமகவுக்கு எதிராய் ஓட்டு போட்டிருக்கிறார்கள் என்று உளவு துறை செய்தி ஒன்று தெரிவிக்கிறது.


சென்னைக் கச்சேரி: மொத்தமாக வென்றது அதிமுக தான்

வட தமிழ்நாட்டில் குறிப்பாக திமுகவின் கோட்டையாம் தென்சென்னையில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் திமு கழக வேட்பாளர் மண்ணைக் கவ்வியது போலவோ…திருவள்ளூரில் திமு கழகம் வீழ்ந்தது போலவோ… கொங்கு மண்டலத்தின் கரூரில் முக்கிய வேட்பாளர் தோல்வி கண்டதைப் போலவோ தென்மண்டலத்தில் திமுக எங்கும் மூக்கு உடைபடவில்லை…


ட்விட்டர்:

narain: நல்ல வேளை. ஏ.சி. சண்முகம் இன்னமும் அறிக்கை விடலை.முதலியார்கள் ஆதரவினால் தான் திமுக அமோக வெற்றின்னு

~o0o~
காசி

Anyone trying to link this election with Eelam are living in some imagnary world, or in monitor and keyboard (and maybe in siRRithazs) – 2:11 PM May 16

1,48,300; 1,35,942; 1,10,037; 1,09,796; 99,083; 91,772; 25,036: Any guess what are these numbers?

Those are the victory margins by which the PMK lost. The largest ~1.5 lakh where Kaduvetti Guru contested.

akaasi

In spite of sincere Pro-Tamil, Pro-downtrodden agenda, and reasonably good track record of ministers, why PMK is drubbed so badly?1:44 AM May 17th from web

~o0o~

kabishraj :: பாமக அடுத்து என்ன செய்யும்? இருக்கவே இருக்கு திமுக. “அண்ணா” என்றால் கருணாநிதி நெஞ்சம் இனித்து, கண்கள் பணித்து சேர்த்துக் கொள்வார். about 16 hours ago from web

~o0o~

ksnagarajan :: இந்த தேர்தலில் தமிழக மக்கள் மிகத் தெளிவாக வாக்களித்திருக்கிறார்கள். அவர்கள் Pro-LTTE(PMK, MDMK) மற்றும் Anti-Eelam(Congress) ஆகிய இரு துருவங்களையும் ஒதுக்குயிருக்கிறார்கள்

~o0o~

athisha: சென்னை முழுக்க கடும் மின்வெட்டு.. விஷமிகள் சில்மிஷம் – சன்டிவி \ திமுக மின்னணு இயந்திரங்களில் முறைகேடு செய்ய சதி – ஜெயாடிவி

~o0o~

பத்ரி சேஷாத்ரி

bseshadri :: I am told, the final TN voting percentage is 70+, though yet to see the EC data. 10% votes “polled” during the last one hour.12:39 AM May 15

Paying voters is one thing. Paying polling officials is yet another thing altogether.

(1) Paying voters directly. We have all heard them. From Rs. 500 per head to Rs. 2,500 and so on.

(2) Paying polling booth officials and polling agents of opposite parties to cast bulk votes between 4-5 in several polling booths.

(3) Paying presiding officers (I heard numbers like Rs. 2 lakh!) to fix votes for them in the dying hours.

~o0o~

srikan2 :: Manmohan Singh the first person to return to power after a full-term as PM since, guess what, since one Mr J.Nehru!!11:06 AM May 16th f