Tag Archives: Kollywood

மந்திரவாதியும் மணி ரத்தினமும் – பொன்னியின் செல்வன் இரண்டு

மணி ரத்னம் ஏன் பொன்னியின் செல்வன் எடுக்கிறார்?

ஏற்கனவே பத்து காரணங்களைப் பார்த்து அலுத்து இருப்பீர்கள்.

இருந்தாலும் #PS2 வந்த பிறகு 11வது காரணம்:

டைரக்டர் ஷங்கர் தியாகராஜன் மகன் நடிகர் பிரசாந்த்தை வைத்து ஜீன்ஸ் இயக்குகிறார்.
அது மதுராந்தாகன்.
தகுதி இல்லாதவர்.
பணத்தினால் பதவியை அடைபவர்.
இதுவே மாந்திரீக யதார்த்தம்.

டைரக்டர் மணி ரத்தினம் புகழ்பெற்ற விஜய் சேதுபதியையும் பணம் படைத்த அருண் விஜய்யையும் வைத்து செக்கச் சிவந்த வானம் இயக்குகிறார்.
இது பொன்னியின் செல்வன் – அருண் மொழி – ராஜராஜன்.
இது பணம் படைத்த தயாரிப்பாளர் மகன் ‘ஜெயம்’ ரவி.
இது குறிப்பால் பொருளுணுர்த்துவது.

இத்தனை காலமாய் நான் ஏன் இதை புரிந்து கொண்டு உணரவில்லை… என் போதாமைதான்!

இசையமைப்பாளர் ஏ ஆர் ரெஹ்மான் தன் மச்சான் ரகுமானுக்காக “சங்கமம்” கொடுக்கிறார்.
உறவினரால் வாய்ப்பளிக்கப் படுகிறார் ஒருவர்.
அது மதுராந்தாகன்.
தகுதி இல்லாதவர்.
இதுவே ஒன்றைக் கொண்டு இன்னொன்றைச் சொல்வது.
அதற்கு பெயர் மாந்திரிகம்; எதார்த்தம்.

இது போன்ற சமரசங்களை மேஜிக்கல் ரியலிசமாகக் கொடுப்பதுதான் #பொசெ2 திரைப்படம்.

கொலைவெறியில் உண்மையான ஆதிக்க அரசர் அரக்கராக – ஆதித்த கரிகாலன் உதாரண இயக்குநர்.
அவர் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா போன்றவர்.
அவரிடம் கொடுத்தால் ‘ஓரம் போ’, அல்லது ‘மாடர்ன் லவ்: சென்னை’ போன்ற அசல் பதார்த்தம் வரும்.

உண்மையான சூத்திரதாரி என்பவர் திறைமறைவில் எக்சியூடிவ் ப்ரொடியூசர் ஆக இயங்குபவர்.
அவர் அசல் வாழ்வில் தோல்வியுற்றவர்.
அவர் தனியாக படையெடுத்து போரிட்டால் வெற்றி பெற மாட்டார்.
அந்த ஆள் தன் சொந்தக் காலில் சுய முயற்சியாக படம் எடுத்து படுதோல்வி கண்டிருப்பார்,
அது ‘சிவா’ – “ஓகே காதல் கண்மணி” படத்தின் அண்ணனாக வருவாரே… அவர்.
பொ.செ. கதையில் வல்லவரையன் வந்தியத் தேவன்.

நந்தினி என்பார் ‘ஐஷ்வர்யா ராய்’ என்பாரே தான்.
அவர் அசல் நடிகையாக மதிக்கப் பெறாதவர்.
ஒரு ராதிகா ஆப்தே-விற்கோ. கொன்கொனா சென்-னிற்கோ… அவ்வளவு ஏன் தற்போதைய என்னுடைய நாயகி ‘தேவி’ தபூ-விற்கோ கிடைக்கும் அந்தஸ்து கிடைக்கப் பெறாதவர்.
அதே போல் சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் அரசியாகக் கொண்டாடப் படாதவர்.
அவரை குறித்துணர்த்தத் தான் நந்தினிக்கு அய்ஷ்வர்யா ராயே நடிக்கிறார்.

அவரின் வயதை நேரடியாக மந்தாகினியாக மேக்கப் இல்லாமல், பூச்சுகள் இல்லாமல் உலா வருகிறார்.
டிம்பிள் கபாடியாவிற்கும் கனவுக்கன்னி ஹேமமாலினிக்கும் வயதாகும்.
இருந்தாலும் இளமையாக நினைப்போம். நடிக்கிறோம்.
நாடக மேடை.
அரச சபை.
அரசி என்பவள் நடிகை
அரசன் என்பவன் தந்தையை ரவுடியாகக் கொண்டவன்.
இயக்குநர் என்பவர் ராஜகுரு.
அனிருத்த பிரும்மராயர்.
காதில் ஒதுவார்.
ஒதுவது புரிந்தத்தா?

PS1 | Snap Judgment (snapjudge.blog)

அரசகட்டளையாக பார்த்து வைக்க வேண்டிய பத்து படங்கள் என்ன?

தமிழில் ஒவ்வொரு காலகட்டத்திலும் கட்டாயம் பார்க்க வேண்டிய திரைப்படங்கள் உண்டு.

எழுதப்படாத விதியாக அறிவிக்கப்படாத அரசாணையாக, “அரங்கிற்கு சென்று விட்டீர்களா?” என விசாரிப்பதற்கான முகாந்திரம் கொண்ட பட்டியல் இது.

இந்தப் பட்டியலில் நுழையத்தான் #PS1 எடுத்திருக்கிறார் மணி ரத்தினம். – இது ஐந்தாவது காரணம்.

எனக்கு இவ்வாறு புகட்டப்பட்ட இந்தப் பட்டியலைப் பார்ப்பதற்கு முன் உங்களுக்கு இந்த மாதிரி விதிக்கப்பட்ட இராசநீதி என்ன படங்கள்?

(பட்டியல் எந்த வரிசையிலும் இல்லை)

  1. ஔவையார் / சந்திரலேகா
  2. சம்சாரம் அது மின்சாரம்
  3. கல்யாணப் பரிசு
  4. சிவகவி
  5. சிந்து பைரவி
  6. மனோகரா
  7. உருவங்கள் மாறலாம் / சரணம் ஐயப்பா
  8. திருவிளையாடல் / ஆதிபராசக்தி
  9. திரிசூலம் / ஊட்டி வரை உறவு
  10. பொன்னியின் செல்வன் 1

அவ்வையார் – சாமி படம் என்பதால் ஒரு சாராரும் இலக்கியப் பெருமை என்பதால் தமிழ்ப் பற்றாளர்களும் உதாரண பெண்டிர் என்பதற்காக மற்றொரு குழுவும் அதை குழந்தைகளுக்கு காண்பித்தார்கள். அந்த மாதிரி கட்டாயக் கருத்துத் திணிப்பு என்பதால் சேர்த்துக் கொண்டேன்

திருவிளையாடல் – குறை என்றில்லை. இந்தப் படம் குடும்பத்தோடு பார்க்க வேண்டிய படம். இந்தப் படம் உம்மாச்சி படம். இந்தப் படம் எளிமையாக (புராணங்களை) தத்துவங்களைச் சொல்கிறது. இது போன்ற வலுக்கட்டாயங்கள் கலந்த உத்தமத்தோங்களை விதந்தோந்து பீடத்தில் அமர்த்தி விட்டதால் விமர்சிக்கவும் மேற்

உங்களுக்கு வலிந்து திணிக்கப்பட்ட சினிமாக்களை, ஆறாவடு ஆக மனதில் தோன்றிய படங்களைப் பகிருங்கள்.

சுந்தர சோழராக எவரைப் போட்டிருக்கக் கூடாது?

இரண்டாவது காரணம் சொல்லும் நேரமிது…

இவர்கள் இந்த கதாபாத்திரங்களில் நடித்திருந்தால் பொன்னியின் செல்வன் இன்னும் பயங்கரமாக இருந்திருக்கும்.

பின்னணிக் குரல் – பாக்யராஜ்

பெரிய பழுவேட்டரையர் – சிவகுமார்

சின்ன பழுவேட்டரையர் – விஜயகுமார்

ஆதித்த கரிகாலன் – சத்யராஜ்

நந்தினி – கீர்த்தி சுரேஷ்

மந்தாகினி – மேனகா

அருள்மொழி வர்மன் / பொன்னியின் செல்வன் – மோகன்

வந்தியத்தேவன் – விஜயகாந்த்

குந்தவை – சாய் பல்லவி

ஆழ்வார்க்கடியான் – எஸ். வி. சேகர்

மதுராந்தகன் – பிரசாந்த்

பூங்குழலி – மேகா ஆகாஷ்

வானதி – ஷ்ரத்தா ஸ்ரீநாத்

பூதி விக்கிரமகேசரி – மனோபாலா

திருக்கோவிலூர் மலையமான் – டி ராஜேந்தர்

செம்பியன் மாதேவி – சிம்ரன் (அ) அமலா

மந்திரவாதி ரவிதாசன் (ஆபத்துதவி) – ராகவா லாரன்ஸ்

பார்த்திபேந்திரன் – அர்ஜுன்

சேந்தன் அமுதன் – விஷால்

வீரபாண்டியன் – எஸ் ஜே சூர்யா

அநிருத்த பிரும்மராயர் – பிரசன்னா

கந்தமாறன் – அப்பாஸ்

கடம்பூர் சம்புவரையர் – சேரன்

வாசுகி (நந்தினியின் பணிப்பெண்) – காயத்ரி

கொசுறு (படத்தில் வராத குணச்சித்திரங்கள்):

மணிமேகலை – நஸ்ரியா நசிம்

குடந்தை ஜோதிடர் – ஒய். ஜி. மஹேந்திரன்

புத்த பிஷுக்கள் – சின்னி ஜெயந்த், ஜனகராஜ், மயில்சாமி

#PS1

அவ்வாறு செய்யாத மெட்ராஸ் டாக்கீஸுக்கு நன்றி!

பொன்னியின் செல்வன் திரைப்படத்தை ஏன் எடுத்தார்கள்? இவர்களையெல்லாம் போட்டு டிவி சீரியல் எடுத்துவிடக் கூடாது என்பதற்காக – 2ண்ட் ரீசன்.

பொன்னியின் செல்வன் திரைப்படத்தை ஏன் எடுத்தார்கள்?

பத்து நாளுக்கு தினம் ஒரு காரணம் போட திட்டம். உங்கள் உதவியைக் கோருகிறேன்.

முதல் காரணம் எளிது:

கல்கி கதையின் போதாமைகளைச் சொல்லத்தான் இந்தப் படம் வெளிவந்திருக்கிறது. இதுவரை யானைக்காலாக யாரும் படிக்க முடியாத அளவு பக்கங்களாக பாகங்களாக இருந்ததை திரைப்படமாக்கியதால் இப்போது எல்லோரும், “இந்தக் கதை மொக்கையா இருக்கே!” என ஊர் எல்லாம் அறியும்படி தன் ஆனைக்கால் கொண்டு உதைத்து விட்டார் மணி ரத்னம்.

ஜெயமோகனுக்கு எப்போதுமே தனக்கு மட்டுமே அரியாசனம் வேண்டும். அது சுஜாதா, ஜெயகாந்தன், கல்கி போன்றோரால் சரியாசனமாக இருந்தது. கூடவே மும்மூர்த்திகள் என்று எஸ். ராமகிருஷ்ணன், சாரு நிவேதிதா போன்ற சமகாலத்தவரும் போட்டியில் இருந்தார்கள். விஷ்ணுபுரம் எழுதி ஒருவரை சாய்த்தார் என்றால், விஷ்ணுபுரம் விருது கொடுத்து இன்னொருவரை சாய்க்கிறார்.

இப்பொழுது கல்கியின் போதாமைகளை உணர்த்த வேண்டிய கட்டாயத்திற்குள்ளாகிறார் ஆசான். அதற்கான பிரும்மாஸ்திரம் — பொ.செ.1, 2, 3…

ஆதித்த கரிகாலனுக்கு தோல்வியைக் கண்டு பயம் என்பதை கல்கி உணர்த்துவார். படத்தில் விக்ரம் கதாபாத்திரத்தை பார்த்தால் வடிவேலு மாதிரி சிரிப்பு வருகிறது.

யானை ராணியை மாந்திரீகமாக, மாயாவாதமாக, பூடகமாக கல்கி உலவ விடுவார். இங்கே மேக்கப் இல்லாத ஐஷ்வர்யா என்று கெக்கலிப்பு வருகிறது.

ஆழ்வார்க்கடியான் கதாபாத்திரம் தூணிலும் இருப்பான், தூணாகவும் இருப்பானாக மிளிரும். இங்கே நிஜமாக நகைச்சுவைக்காக உலவுகிறது.

கல்கியைக் கொண்டாட வேண்டுமானால் சமரசங்கள் இல்லாமல் திரைக்குக் கொணர முயன்றிருக்க வேண்டும்.

மஹாபாரதம் எழுதிய போது எவ்வாறு தன் திரைவடிவத்தை ஏற்க மறுத்த சன் டிவியை உதாசீனம் செய்தாரோ… அது மாதிரி!

ஆனால், ”கடல்” போல் உருப்படியாக எடுத்தால் எவ பார்ப்பாள்? எனவே, திருடா… திருடா… பகுதி இரண்டை #PS1 ஆக எடுத்து விட்டார்கள்.

சிவாஜி என்றால் ரஜினியின் படம் என நிறுவியது ஷங்கர்.

பொன்னியின் செல்வன் என்றால் ஜொள்ளுச்சோழர் படம் என நிறுவுவது – 1ஸ்ட் ரீஸன்

#Justice4உதயமானBaby

உதயநிதி ஸ்டாலின் ட்விட்டர் ஓடையில் இருந்து:

செய்தி

தலைப்புக்கேற்ற கீச்சுகள்

உதயநிதி கடந்து வந்த பாதை
மெரினாவுல இடம்
சுபவீ ,வீரமணி
அன்றும் இன்றும் என்றும் திராவிடம்
ஸ்டாலின் பாபு
அப்பா திமுக
தாத்தா எவ்வழி

நக்கீரன்

‘திருமணம் ஆனவருடன் தவறான உறவு வைத்திருந்தேன்’ ஆண்ட்ரியா ஓபன் டாக்! | wrong relationship with married man says andrea | nakkheeran:  பெங்களூரில் நடைபெற்ற கவிதைப் போட்டியில் கலந்து கொண்டுள்ளார் ஆண்ட்ரியா. அப்போது, முறிந்த சிறகுகள் என்ற தலைப்பில் சோகமான கவிதைகளை வாசித்துள்ளார். சோகத்தை பிரதானப்படுத்துவதை போன்று அந்த கவிதை அமைந்திருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது ரசிகர்கள் அதற்கான காரணத்தை கேட்டுள்ளனர். இதைதொடர்ந்து பேசிய ஆண்ட்ரியா, ” நான் திருமணம் ஆன ஒருவரோடு உடல் ரீதியாக தொடர்பில் இருந்தேன். ஆனால் அவர் என்னை மனதளவில் காயப்படுத்தினார். அதில் இருந்து மீள முடியாமல் இருந்த போதுதான் இந்த கவிதையை எழுதினேன்” என்றார். ஆயுர்வேத சிகிச்சைக்கான காரணமும் இதுதான் என்றும் அவர் தெரிவித்தார்.

இன்றைய ஜூனியர் விகடன் கிசுகிசு

ரேடியோபெட்டி – Radiopetti: Tamil Cinema

திரைப்படத்தை முன் வைத்து சில குறிப்புகள்:

1. நெட்ஃப்ளிக்ஸ்: இந்தப் படம் நெட்ஃப்ளிக்ஸ் மூலமாகப் பார்க்கக் கிடைக்கிறது. அரிதான தென்னிந்தியப் படங்கள் வரிசையில் இதை வைத்திருக்கிறார்கள். திதி, நிலா, ஒத்தாள், Revelations, விசாரணை என்று இந்தப் பட்டியலில் வித்தியாசமான கொத்துகளை சேர்த்திருக்கிறார்கள்.

2. சிங்கம்: இயக்குனர் ஹரி எடுத்த சிங்கம் படம் இப்படித்தான் போகும், நல்லதுதான் நடக்கும் என்று தெரியும். இருந்தாலும் பார்ப்போம். இந்தப் படத்திலும் இறுதியில் இப்படித்தான் முடியும் என்பது ஊகிக்க முடிகிறது.

3. குடும்பமா? சுயவிருப்பமா? : ’ரேடியோபெட்டி’ திரைப்படம் அருணாசலம் என்ற முதியவரை பற்றிய கதையாகும். அருணாசலம் தனது கடந்தகாலம் பற்றிய நினைவுகளில் மூழ்கி இருப்பவர். குறிப்பாக தனது அப்பா அளித்த ரேடியோவில் இளமைக்கால மெல்லிசை பாடல்களை கேட்பதில் மகிழ்பவர். தனது குடும்பம், மெல்லிசை ஆகிய இரண்டில் ஒன்றை அவர் தேர்வு செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. இரண்டில் ஒன்றை வாழ்நாள் முழுக்க இழக்க வேண்டும். அவர் எதை தேர்வு செய்வார் என்ற கதை களத்தை அடிப்படையாக கொண்ட திரைப்படமே ’ரேடியோ பெட்டி’.

4. பியூட்டி அண்ட் தி பீஸ்ட்: இந்தியக் குடும்பங்களில் ஆண் என்பவன் என்ன சிரமங்கள் கொடுத்தாலும் பொறுத்துக் கொண்டு போவது மனைவிகளின் கடமை. இதுதான் டிஸ்னியின் கதை. ஒரு ராட்சஸன் இருப்பான்; அவன் இருக்கும் இடமோ அடர்ந்த காடு; மக்களற்ற தீவாந்தரத்தில் வசித்தாலும் அவனின் இல்லத்தரசி அவனுக்கு சமைத்துப் போடுவாள்; சிசுருஷை செய்வாள்; அவளுக்கும் வயதாகி இருந்தாலும் அவனுக்கான தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றுவாள். ரேடியோபொட்டியும் அருணாச்சலம் என்னும் பீஸ்ட் ஒருவரின் கதைதான்.

4. விருது: தென் கொரிய பூஸான் திரைப்பட விழா போட்டி பிரிவிலும், ஸ்பெயின் திரைப்பட விழாவில் சிறந்த இசைக்கான விருதும் வென்ற படம். ரோமானியா திரைப்பட விழா உள்பட பல்வேறு விழாக்களில் பங்கேற்ற படம். பல காலமாக விருதுக்காகவே எடுக்கப்படும் ஹிந்திப் படங்கள், காஞ்சிபுரம், குட்டி போன்ற சமீபத்திய தமிழ்ப் படங்கள் பார்த்து வருகிறேன். இருந்தாலும் இது தமிழகத்தின் அசல் கதை, இந்தியாவில் மட்டுமே எடுக்கக் கூடிய படம் என்று எதுவும் பளிச்சிடவில்லை. இந்த மாதிரி முதியவர்கள் எங்கும் எப்போதும் காணப்படுகிறார்கள். ஒரு ஐம்பதாண்டுகளாக இந்த சப்ஜெக்ட் — பரிதாபமான அனாதரவான பெற்றோர் என்னும் தேய்வழக்கு உலாவருகிறது.

5. சூது கவ்வும்: விஜய் சேதுபதி நடித்து நலன் குமரசாமி எடுத்த இந்தப் படத்தைப் பார்த்திருப்பீர்கள். அதில் ”தாஸ்’ கதாபாத்திரம் தன்னுடன் அழகி ஒருத்தி உரையாடுவதாகக் கற்பனை செய்து உடன் வைத்திருக்கும். அந்த “ஷாலு”வுடன் பேசுவது பைத்தியம் என்று அழைக்க வைத்தாலும் தாஸ் என்பவன் அதை சகஜமாக எடுத்துக் கொள்வான். இங்கே “ரேடியோ பெட்டி”யிலும் அந்த மாதிரி மனச்சிக்கலை மையமாக வைத்து எடுக்கிறார்கள். ஆனால், ”சூது கவ்வும்” இதே போன்ற உளச்சிக்கலை இன்னும் நுட்பமாக ஆழமாகப் பதியுமாறு சர்வ சாதாரணமாகத் திரையில் காட்டிச் சென்றார்கள். ரேடியோபெட்டியில் அதை போட்டுடைத்துச் சொல்கிறார்கள். முன்னது திரைப்படத்திற்கு உகந்த அணுகல். இரண்டாமவது எழுத்திற்கு சாலச் சிறந்தது.

6. பழைய நினைப்புதான் பேராண்டி: நொஸ்டால்ஜியா என்பது சொர்க்கமா அல்லது மீள வேண்டிய நரகமா என்பது உங்களின் அனுபவத்தைப் பொருத்தது. இதில் தன் அப்பா, அவர் உபயோகித்த சின்னச் சின்ன விஷயங்கள், பழைய வேலை, பால்ய காலம், முதலில் பார்த்த வேலை, அந்த வேலையில் நெடுங்காலமாக கூட பயணிக்கும் சக ஊழியன் என்று ‘அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே! நண்பனே! நண்பனே! இந்த நாள் அன்று போல் இன்பமாய் இல்லையே அது ஏன்? ஏன்? ஏன்?

7. பொருள் என்பது பொருளல்ல? : இன்றைய ஐஃபோன், அல்லது செல்பேசியை எடுத்துக் கொள்வோம். இந்தக் கருவியை எங்கும் எடுத்துச் செல்லலாம்; எப்பொழுது வேண்டுமானாலும் நமக்கு என்ன பாட்டு வேண்டுமோ கேட்டுக் கொள்ளலாம். அது ஒரு இருப்பு சார்ந்த பொருள்.

நான் நிரலி எழுதுபவன். அதே செல்பேசியில் உங்களுக்கு இந்தப் பாட்டு பிடித்து இருந்தால், இன்னொரு பாட்டும் பிடிக்கும் என்று பரிந்துரை சொல்லும் மென்கலன் எழுதுவேன். அந்த ஐ-பாட் என்பது பாட்டு கேட்க என்பதில் இருந்து வேறு பல பயன்பாடுகளுக்குத் தகுந்தவாறு மாற்றுவேன். வெறும் பாட்டுப் பெட்டிக்கான கருவி என்றில்லாமல், புகைப்படங்கள் பார்ப்பதற்கோ மற்றொன்றிற்கோ கூட உருமாற்றி உபயோகமாகுமாறு வடிவம் தரவைக்கக் கூடிய பொருள்.

கடைசியாக பொருள் என்பது நம் அபிலாஷைகளுக்கு உருவம் தருகிறது. வினாயகரின் குட்டி விக்கிரகமாக இருக்கலாம், சிலுவையாக இருக்கலாம்; அது உங்களின் நம்பிக்கை சார்ந்தது. இந்தச் சிலுவையை இடியும் மின்னலும் கூடிய சமயத்தில் பிடித்துக் கொண்டால், அறிவியல்பூர்வமாக ஆபத்தாகக் கூட இருக்கலாம். ஆனாலும், ஆழ்மனம் சொன்னால் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு மழையில் இருந்து தப்பிக்க வைத்ததாகச் சொல்வோம். அருணாசலத்திற்கு ரேடியோபெட்டி அந்த மாதிரி உள்விருப்பம் சார்ந்த பொருள்.

என்ன கண்ணுடா இது

ஶ்ரீவித்யா: துயர விழிகளின் தேவதை

சின்ன வயதில் தூர்தர்ஷனில் மட்டும்தான் இந்தப் படங்களைப் பார்த்து இருக்கிறேன்.

  • சாவித்ரி – எனக்குத் தோன்றிய பிம்பம்: எப்போது பார்த்தாலும் அழுகை; மூக்கு சிந்தல்; ஜோடியாக பொருந்தா கதாபாத்திரங்கள் (miscast)
  • சாரதா – அய்யஹோ… துலாபாரம்… இப்பொழுது என் பெண்ணிடம் தனுஷ் நடித்த ‘தங்கமகன்’ பார்க்கச் சொன்னாலே, அரண்டு ஓடுகிறாள்.
  • பானுமதி – bearable; அதுவும் ‘தொட்டு நடிக்கக் கூடாது’ என்னும் பிரஸ்தாபம், பிராண்ட் நன்கு முன் வைக்கப்பட்டதால், கொஞ்சம் போல் intrigue

இந்த சமயத்தில் ஸ்ரீவித்யாவும் அபூர்வ ராகங்களும் நிஜமாகவே கொஞ்சம் ஆசுவாசம் கொடுத்தது. மற்றவர்கள் எல்லாம் சோக சாகரத்தில் மூழ்கடித்து வாழ்க்கையையே எதிர்மறையாக, ஏமாற்றமாக, தோல்விகளாக உணர்த்திய போது, இவரைப் பார்த்தால் புத்துணர்ச்சியும் நம்பிக்கையும் வந்தது. அந்தத் தலைமுறையின் குறியீட்டின் எச்சமாக இந்தக் கட்டுரையைப் பார்க்கிறேன்.

srividya-early-years

விக்கிப்பிடியாவின் பட்டியலை பார்ப்போம்:

  1. அறுபதுகள் – ஜெயலலிதா (சரி… திமுக ஆட்சியில் இருந்தால், யாருக்கு விருது கொடுப்பார்கள்)
  2. எழுபதுகள் – சுஜாதா, லஷ்மி
  3. எண்பதுகள்ஷோபா, சரிதா
  4. 90கள்அர்ச்சனா, ரேவதி

நிறைய பேரை விட்டிருக்கிறேன். இருந்தாலும், டக்கென்று பார்த்தால், இவர்கள் எல்லோருமே மெரில் ஸ்ட்ரீப் போல் உருகி நடிப்பவர்கள். அதாவது, சிரமதசையில் இருக்கும் கதாபாத்திரங்களுக்கு மட்டுமே மதிப்பு. விக்ரம் கண் தெரியாதவராக, சிவாஜி கால் முடியாதவராக நடிப்பது போன்று ஏழை பிச்சைக்காரராக திரையில் தோன்றினால் விருது கிடைக்கும், நல்ல நடிகர் என்று மதிப்பு உயரும். இவர்களுக்கு நடுவில் அச்சுபிச்சுத்தனமாக நடிக்கும் மோகன், துள்ளலாக வந்துபோகும் நதியா போன்றோர செல்லுபடியாவதில்லை.

ஸ்ரீவித்யாவும் அப்படிப்பட்ட ஒருவரோ?

இதையெல்லாம் இந்தக் கட்டுரை சொல்வதில்லை என்றாலும், குறிப்பால் உணர்த்துகிறதோ!

Sri_Vidya_Actress_Tamil_Malayalam

 

சூது கவ்வும் x எதிர் நீச்சல்

மூன்று படங்கள் பார்க்கக் கிடைத்தது. எக்கச்சக்கமாக எல்லோராலும் எதிர்பார்ப்பைக் கிளப்பிய ‘சூது கவ்வும்’ ஏமாற்றியது. ‘நாளைய இயக்குநரில்’ குறும்படம் நிறைய எடுத்திருந்ததால், முதல் பகுதி இயல்பாக அமைந்திருந்தது. இண்டர்வலோடு படத்தை முடித்து அனுப்பி இருக்கலாம். அதன் பிறகு குழப்பமும் சொதப்பலும் திணிப்புகளும் “படத்தை ஏண்டா ஃப்ரீயா போட்டோம்” என்று மனைவியைக் கேட்கவைத்தது.

காரை வேகமாக ஓட்டுவது என்பது குறித்த இலக்கை சுருக்கமான நேரத்தில் கடப்பது. ஆரம்பமும், முடிவும் ஒன்றே என்பதற்காக, அங்கேயே நின்று கொண்டிருந்துவிட்டு, வெற்றியடைந்து விட முடியாது. நம்ப இயலாத கதாபாத்திரங்கள் பிரச்சினையில்லை. நடக்க இயலாத சம்பவங்கள் பிரச்சினையில்லை. லோ பட்ஜெட் பிரச்சினையில்லை. விறிவிறுப்பு என்னும் பேரில் யு டர்ன் மட்டுமே அடித்துக் கொண்டு ஜெர்க் மட்டுமே தருகிறது இரண்டாம் பகுதி.

இதற்கு வசனத்தாலேயே கொன்ற ‘மூன்று பேர்; மூன்று காதல்’ கொஞ்சம் தேவலாம். எதிர்பார்த்த பாதையில் பயணித்து, பாடலுடன் ஊடலும் கொடுத்த ‘எதிர் நீச்சல்’ எவ்வளவோ தேவலாம். வசந்த்திற்கு விஷுவல் மொழி கைகூடாமல் போயிருக்கலாம். தனுஷ் தயாரிப்பு மசாலாவாக இருந்திருக்கலாம். சிவ கார்த்திகேயனுக்கு ஆட்டம் வராமல் இருந்திருக்கலாம். அர்ஜூனுக்கு ஜோதிகாவின் டூப் தேவையாக இருந்திருக்கலாம். ஆனாலும், இரண்டரை மணி நேரத்திற்கு அலுக்காமல் பார்வையாளனை உட்கார வைக்கும் கர்ம்சுத்தத்தைப் பாராட்டலாம்.

நலனின் அடுத்த பிராஜெக்டாவது டெமொ பிராடக்ட் போல் புறத்தே மட்டும் மினுக்காமல், prototype போல் டிரெய்லர் மட்டும் ருசிக்காமல், முழுக்க வேகணும்.

வித்தியாசமாக முயன்றிருக்கிறார். ஒரு மணி நேரத்திற்கு சரக்கு வைத்திருக்கிறார். தமிழ் சினிமா நகைச்சுவையில் இருந்து விலகிச் சென்றிருக்கிறார். எனக்கும் இதெல்லாம் பிடித்திருக்கிறது.

எனக்கு கவுதம் மேனன் படங்கள் மிகவும் பிடிக்கும். ஆனால், ”நடுநிசி நாய்”களை மீண்டும் முழுவதுமாகப் பார் என்றால் வதை கலந்த சலிப்பு எழும். பலாப் பழத்தை வெட்டி உண்பது போல் சூது கவ்வும் சில பகுதிகள் மிக நன்று; சில பகுதிகள் பலாப்பழச்சுளை புதுசு. சிம்பு தேவனின் இம்சை அரசனை நினைவுறுத்தும் பாடல் எல்லாம் கூட போனால் போகிறது, பலாக் கொட்டை என்று சாம்பாராக்கி விட்டு விடலாம். ஆனால், இரண்டாம் பாதியில் ஒட்டிக் கொண்டிருக்கும் சகுனிகளும் குப்பைகளும் களைய மட்டுமே கோருகின்றன.

”மதுபானக் கடை” போல் நேர்மையும் இல்லை. பேசுபொருளை மட்டும் சொல்லிய படம். பாடல் வேண்டும், துரத்தல் காட்சி வேண்டும், இரண்டரை மணி நேரம் வேண்டும், நாயகியின் அரையாடை வேண்டும் என்று எதையும் திணிக்கவில்லை. சூது கவ்வும் புத்திசாலித்தனமான உப்புமா.

Paradesi – FIR: Quick Review

பரதேசி பாலாவின் படம். டிஸ்னி படம், ஜேம்ஸ் பாண்ட் படம், குவெண்டின் டாரெண்டினோ படம் என்று சொல்வது போல் பாலாவின் படம் பார்த்து கொஞ்ச நாளாச்சு.

ஆறு படம்தான் செய்திருப்பவருக்கு டிரேட்மார்க் இருக்குமா?

கடவுள் நம்பிக்கையை வைத்து ஏமாற்றுபவரை நையாண்டி செய்வது; ஒடுக்கப்படுபவர்களின் பரிதாப நிலையை கதைக்களானாக்குவது; புதிய முகங்களை கதாபாத்திரங்களாக்குவது; இளகிய மனம் படைத்தோரையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் சமரசமில்லா காட்சியாக்குவது… இவை இயக்குநர் பாலா பட முத்திரைகள்.

வலிந்து திணிக்கப்பட்ட நகைச்சுவை; சிம்ரன் போன்ற அயிட்டம் பாடல்; இவை எல்லாம் முந்தையவற்றில் துருத்தி நிற்கும்; இங்கே காணோம். ‘பரதேசி’யின் ஒவ்வொரு பாடலையும் திரையில் காண்பித்த விதத்தில் பாலு மகேந்திராவின் கோர்வையும் மணி ரத்னத்தின் செதுக்கலும் ஒருங்கே கிடைக்கின்றன.

எஸ் ராமகிருஷ்ணன் வசனம் எழுதும் படங்களில் சாதாரண தமிழ்ப்பட எழுத்து மட்டுமே தென்படும். ஜெயமோகன் சம்பந்தப்பட்ட படங்களில் மொழி ஆக்கிரமித்து நிற்கும். இரா முருகன் படங்களில் டைட்டிலில் மட்டுமே காணப்படுகிறார். ’பரதேசி’ நாஞ்சில் நாடனோ, “யாருங்க வசனம்” என்று விசாரிக்க வைக்கிறார்.

சமீபத்திய எதிர்பார்ப்புகளான ‘கடல்’ பல கோணங்களில் சென்று அலைபாய்ந்து மூழ்கடித்தும், ‘விஸ்வரூபம்’ சர்ச்சைகளில் மட்டும் பிரமிக்க வைத்தும் ‘நீதானே என் பொன் வசந்தம்’ சாக்லேட் கல்லூரி காதலை மறுஒளிபரப்பியும் குண்டுசட்டி கோடம்பாக்கத்தினுள் ஆமை ஓட்டிய நேரத்தில், உருப்படியான தமிழ் சினிமாவிற்கான அடி பரதேசி.

சஞ்சலம் நீக்க சிறந்த உபாயம்: ரஜினியா? கமலா?

மன அழுத்தம் நீங்க நான் மூன்று உபாயங்களை பின்பற்றுகிறேன். எல்லோரும் சொல்கிற உடற்பயிற்சியை விட வீட்டை சுத்தம் செய்கிற பராமரிப்பு. அமைதியான இசையின் பின்னணியில் தியானம் என்பதை விட நிசப்தமான புத்தக அறையில் பூனையுடன் தஞ்சம். உளவியலாளரிடம் பகிர்வதை விட நாலு ஃபேஸ்புக் கருத்தாளர்களுக்கு கேள்வியாக பதில் போடுவது.

ரஜினி படம் பிடிக்குமா? கமல் படம் பிடிக்குமா? என்னுடைய இடையீடு சுணக்கங்களை களைவதற்குப் பின்னால் இந்தக் காரணமும் இருக்கிறது.

’நான் சிவப்பு மனிதன்’ அதிரடியாக இறங்குவார். ‘ராமன் ஆண்டாலும்’னு வாழ்க்கையை கொண்டாடுவார். ’நல்லவனுக்கு நல்லவ’னாக நிறுவனங்களை வெற்றிகரமாக நடத்துவார். ’பில்லா’ மாதிரி உளவாளியாக சென்றால் கூட ஆக்‌ஷன் இருக்கும்.

அந்த ஜென்மத்திலேயே பழிவாங்காமல் இன்னொருவரை எதிர்நோக்கும் ‘கல்யாணராமன்’. சிம்லா ஸ்பெஷல், உயர்ந்த உள்ளம் எல்லாமே நம்பக்கூடிய முகங்களின் பிரதிபலிப்பு. ’வாழ்வே மாயம்’ போல் உண்மையைப் போட்டு உடைக்க சஞ்சலப்படும் மனிதன். சகல கலா வல்லவன் முதல் விஸ்வரூபம் வரை கமல்ஹாசன் ஒற்றராக செல்வது கூட லாஜிக் நிறைந்ததாக இருக்கும்.

கமல் கதாபாத்திரங்கள் சாதுவானவை. நான் அன்றாடம் எதிர்கொள்கிறவர்கள். தொண்ணூறு சதவிகிதத்தினர் இவ்வாறே தங்கள் குணாதிசயங்கள வைத்திருக்கிறார்கள்.

ரஜினி நட்சத்திரம். கண்டிப்பு நிறைந்தவர். வாட்டத்தைப் போக்க நம்ப இயலாதவற்றை சாதிக்கிறார். என் கலக்கங்களை நீக்க முடியும் என உறுதியான உற்சாகம் தருகிறார்.

நீங்க ரஜினி விசிறியா? கமல் ஃபேனா?