Monthly Archives: ஜனவரி 2006

‘ஆஸ்கரை அவமதிப்போம்’

செய்தி ::

‘பஹேலி’ திரைப்படத்திற்கு ஆஸ்கர் விருதுகளின் பரிந்துரை கிடைக்கவில்லை. சிறந்த அயல்நாட்டுத் திரைப்படத்துக்கான போட்டியில் இத்தாலி, ஃப்ரென்சு, பலாஸ்தீன, ஜெர்மன், தென்னாப்பிரிக்க மொழிப் படங்களே உள்ளன.

இதைக் கேள்விப்பட்ட முன்னாள் பாரதீய ஜனதா கட்சித் தலைவர் உமாபாரதி பொங்கியெழுந்தார்.

“கடந்த பல வருடங்களாக ஆஸ்கரின் கடைக்கண் கூட இந்தியப் படங்களின் மேல் விழுவதில்லை. பரங்கியனை அவமானப்படுத்தும் ‘லகான்’ அல்லது நம்மை உரித்துக்காட்டும் ‘பார்ன் இன்டு ப்ராத்தல்ஸ்’ போன்ற படங்களையே ஆஸ்கார் மீண்டும் மீண்டும் ஆதரிக்கிறது. நான் இதை வன்மையாகக் கண்டிக்கிறேன்” என்று அறிக்கை விடுத்துள்ளார்.

பா.ஜ.க.வின் முன்னணி சிந்தனையாளர்களுள் ஒருவரான கோவிந்தாச்சாரியாவும், வலைப்பதிவாளர்களை சந்திப்பதில்லை என்று உறுதியை உடைத்துவிட்டு, உமாபாரதியுடன் காணப்பட்டார்.

சந்திப்பில் பேசிய கோவிந்தாச்சாரியா, “இந்தப் படத்தைக் குறித்து அமோல் பலேகருடன் பேசும்போதே நான் சொன்னதுதான். உமா பாரதியார் வைஷ்னோ தேவி பயணிப்பதை திரைக்கதையாக்கும்படி உபதேசித்திருந்தேன். ஆனால் அவரோ ஷாரூக் கான் கால்ஷீட் இருக்கிறதே என்று பஹேலி எடுத்துவிட்டார். நான் சொன்ன கதைக்கு மட்டும் காஷ்மீர் போராளியாக ஷாரூக் நடித்திருந்தால், இந்நேரம் ஆஸ்கர் பரிந்துரை என்ன… விருதே நமக்குத்தான் கிடைத்திருக்கும். குறைந்த பட்சம் ‘தேச நல்லிணக்கத்திற்காக நர்கீஸ் தத்’ விருதாவது கொடுத்திருப்பார்கள்” என்று கருத்து தெரிவித்தார்.

சென்னையில் இந்த வலைப்பதிவை படித்த ரிச்சி ஸ்ட்ரீட் வணிகையாளர் ஆஸ்கார் விருதுகளைத் தான் பெரிதும் வரவேற்பதாக சொன்னார். மேலும், “பொங்கல் படங்கள் எதுவுமே மக்களுக்குப் பிடிக்கலை. விசிடி பிஸினஸ் படுத்துடுமோ என்று நாங்க பயந்தபோதுதான் இப்படி ஒரு அறிக்கைய அகாதெமி வெளியிட்டிருக்காங்க. கிங் காங், ஹாரி பாட்டர் என்று ஜல்லியடிச்ச நாங்க இனிமே ‘அகாடெமி புகழ் பெற்ற… திரைக்கு வந்து சில மாதங்களே ஆன’ என்று சொல்லி நிறைய வெரைட்டி காட்டலாம் சார்” என்று மகிழ்வுடன் பகிர்ந்து கொண்டார்.

போபாலில் இருந்து பொப்பிலி ராஜாவும் மவுண்ட் ரோடில் இருந்து மதியழகனும் இந்த செய்தியறிக்கையில் பங்களித்தார்கள்.

குறிப்பு: இந்தப் பதிவை நிஜம் என்று நம்பவைக்கும் அளவு ரியாலிடி இருப்பதற்கு இதை எழுதியவர் பொறுப்பாக மாட்டார்.


| |

தலைவர் கைது இல்லை

Stalin, hundreds of DMK men removed :: Chennai Online News Service

‘சார். நாளைக்கு எனக்கு லீவு கிடைக்குமா?’

‘ஏன் திடீர் என்று விடுமுறை கேட்கறீங்க?’

‘நாளைக்கு க்ளிண்டனை impeach செய்யப் போறாங்களாமே! ஆபீஸ் வருவதற்கு பயமா இருக்கிறது. ட்ரெயின் எல்லாம் ஓடுமா என்று தெரியலை. நான் இப்பத்தான் புது கார் வாங்கியிருக்கேன். சாலை மறியல் எல்லாம் நடக்குமே. காரை கிழிச்சுடுவாங்க சார். இன்ஷூரன்ஸ் ஜாஸ்தி செஞ்சிடுவாங்க.’

‘நீங்க என்ன சொல்றீங்கன்னு புரியலை பாலாஜி!’

‘எங்க ஊரில் க்ளிண்டன் மாதிரி கட்சித் தலைவருக்கு எதிராக இந்த மாதிரி மசோதா கொண்டு வந்தால், ஊரே ரணகளமாயிடும். பந்த் என்பார்கள். ஜாலியாக வீட்டில் உட்கார்ந்துண்டு கிரிக்கெட் மாட்ச் பார்க்கலாம். சன் டீவியில் ‘ஸ்பெஷல் ப்ரொகிராம்’ என்று புத்தம்புதிய இளைய தளபதி திரைப்படம் கூட காட்டுவாங்க சார். ஆனால், ஹோட்டல் எல்லாம் திறந்து இருக்காது. ஷாப்பிங் போக முடியாது’

‘அப்படியா? நீங்க ‘நியூட் கிங்ரிச்‘ பதவி விலக்கப்பட்டப்பக் கூட இங்கதானே இருந்தீங்க… ரிபப்ளிகன் கட்சித் தொண்டர்களே பேசாமத்தானே இருந்தாங்க. அப்பவே ஒண்ணும் நடக்கலியே! இப்பொழுதும் அந்த மாதிரி எதுவும் இருக்காதுங்க. நாளை மற்றொரு நாளே.’

‘சரிங்க’

முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டு கல் எறிதல்களும், சாலைத் தடுப்புகளும், பந்த்களும் இல்லாத ஊரில், வேலைக்கு இருப்பதை நினைத்து, மனம் நொந்தபடியே இருக்கைக்குத் திரும்புகிறான்.

இணையத்தில் தமிழ்நாட்டு செய்திகள் வழக்கம் போல் மிளிர்ந்தது:

Activists, thinking that their leader has been arrested, tried to block roads in various parts of the state. A metro report said 70 party volunteers, including MLA and functionaries of the local transport Corporation, were removed for blocking road traffic. In another regional hub, about 250 party workers were removed by the police when they blocked road traffic. Similar demonstrations were reported from City A, City B, City C, City D and other parts of the state.


| |

"இஸ்லாமிய தீவிரவாதம்"

Foreign Policy: Think Again: Islamist Terrorism: ‘ஃபாரின் பாலிசி’யில் படித்த கட்டுரையில் இருந்து…

  • இஸ்ரேல் – பாலஸ்தீனப் பிரச்சினையை தீர்த்துவிட்டால் தீவிரவாதம் குறைந்துவிடுமா?
  • வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம், கல்வியின்மை ஆகியவையே திவிரவாதிகளை உருவாக்குகிறதா?
  • படிக்காத இளைஞர்கள்தான் தீவிரவாதி ஆகிறார்களா?
  • தீவிரவாதிகளை உண்டாக்கும் தொழிற்சாலையாக மதராஸாக்கள் விளங்குகிறதா?
  • வசதி இல்லாததனால்தான் பொதுமக்கள் தீவிரவாதத்தை ஆதரிக்கிறார்களா?
  • இஸ்லாம் எதிர்நோக்கும் ஆபத்தினால்தான் தீவிரவாதத்துக்கு ஆதரவு பெருகிறதா?
  • வாழ்க்கையில் வெறுப்படைந்த கோபமும் துடிப்பும் நிறைந்த மேற்கத்திய முஸ்லீம்கள்தான் புதிய தலைமுறை தீவிரவாதிகளா?

    காந்தி, ஜின்னா, விடுதலைப் புலிகள் என்று பலரைத் துணைக்கு அழைத்துக் கொண்டு, காஷ்மீர், பஞ்சாப் முதல் அல்ஜீரியா வரை அலசி, பல்வேறு கருத்துக் கணிப்புகளின் மூலம் தங்கள் புரிதல்களை எளிதாக முன்வைக்கிறார்கள்.


    |

  • சிறுவர் பாடல்

    William Brighty Rands’s ‘Godfrey Gordon Gustavus Gore’ from Oldpoetry.com:

    “Godfrey Gordon Gustavus Gore —
    No doubt you have heard the name before —
    Was a boy who never would shut a door!

    The wind might whistle, the wind might roar,
    And teeth be aching and throats be sore,
    But still he never would shut the door.

    His father would beg, his mother implore,
    “Godfrey Gordon Gustavus Gore,
    We really do wish you would shut the door!”

    Their hands they wrung, their hair they tore;
    But Godfrey Gordon Gustavus Gore
    Was deaf as the buoy out at the Nore.

    When he walked forth the folks would roar,
    “Godfrey Gordon Gustavus Gore,
    Why don’t you think to shut the door?”

    They rigged up a Shutter with sail and oar,
    And threatened to pack off Gustavus Gore
    On a voyage of penance to Singapore.

    But he begged for mercy and said, “No more!
    Pray do not send me to Singapore
    On a Shutter, and then I will shut the door!”

    “You will?” said his parents; “then keep on shore!
    But mind you do! For the plague is sore
    Of a fellow that never will shut the door,
    Godfrey Gordon Gustavus Gore!”


    |

    தமிழகத்தில் கூட்டணி ஆட்சி ஒத்து வருமா?

    உலக தமிழர்களின் ஒப்பற்ற தலைவர் கருணாநிதி நேற்று பத்திரிகையாளரின் கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போது: ‘ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் உள்ள கூட்டணி கட்சிகளே கூட்டணி ஆட்சியை விரும்பவில்லை’ என்று பதில் கூறியுள்ளார்.

    இதுதான் கருணாநிதி!

    சரி! தமிழகத்தில் கூட்டணி ஆட்சி வேண்டுமா? வேண்டாமா? இது குறித்து தமிழக மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது குறித்து கருணாநிதிக்கோ அல்லது ஜ.மு.கூ. கட்சிகளுக்கோ ஏதாவது தெரியுமா?

    மத்தியில் 45 ஆண்டுகளுக்கும் மேலாக ஒற்றை கட்சி ஆட்சிதான் – குறிப்பாக காங்கிர° கட்சியின் ஆட்சிதான் நடைபெற்று வந்தது. ஆனால், இன்றைக்கு நிலைமை என்ன? பா.ஜ.க.வாக இருந்தாலும், காங்கிரசாக இருந்தாலும் யாருடைய தயவிலாவதுதான் கூட்டணி ஆட்சியில் இருக்க வேண்டும் என்ற நிலைமையல்லவா!

    ஏன் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி கூடாது? தமிழகத்திற்கு பல நலன்களை செய்த கருணாநிதி ஏன் கூட்டணி ஆட்சி என்ற கூட்டாட்சி தத்துவத்திற்கு மகுடம் சூட்டக்கூடாது! இது அவருக்கு பெரும் புகழைத் தரக்கூடியதுதானே!

    ஒரு வேளை தன்னுடைய கட்சியே மெஜாரிட்டி வரும் என்ற நம்பிக்கையா? இது இந்த தேர்தலில் நடக்குமா என்பதை பொருத்திருந்து பார்ப்போம்!

    ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் இருக்கிற இடதுசாரிகள் மேற்கு வங்கத்திலும் – கேரளத்திலும் – திரிபுராவிலும் ஆரம்பம் முதல் இன்று வரைக்கும் கூட்டணி ஆட்சிதானே நடத்தி வருகிறார்கள்! மேற்குவங்கத்தில் 27 வருடமாக கூட்டணி ஆட்சி குழப்பம் இல்லாமல் நடைபெறுவதாக கூறுகிறார்களே! ஜனநாயகத்தில் கூட்டணி ஆட்சி என்றால் கசப்பான விஷயமா என்ன!

    மத்தியில் கூட்டணி ஆட்சியும் – இடதுசாரிகளின் ஆதரவும் இருப்பதால்தான் குறைந்தபட்சம் மத்திய அரசை சில விஷயங்களிலாவது கடிவாளம் போட்டு நிறுத்த முடிகிறது என்பது அனுபவமில்லையா?

    இல்லையென்றால் ஜெயலலிதா மாதிரி ஏகபோக சர்வாதிகார ஆட்சியாக அல்லவா இருக்கும். தமிழகத்தில் அம்மாவின் சொல்லுக்கு மறு சொல்லை பேச முடியுமா?

    இது திமுகவாக இருந்தாலும் அதிமுகாவாக இருந்தாலும் கடந்த 30 ஆண்டுகளாக உங்கள் இருவரின் ஆட்சிதானே நடைபெற்றது. கூட்டணி ஆட்சி என்ற சோதனையை தமிழகத்தில் ஏன் பரிட்சித்து பார்க்க கூடாது! பழுத்த பண்பான அரசியல்வாதியான கருணாநிதி இதை செய்வாரா?

    பதில் : வாக்காளர்கள் கையில்தான்… வாழ்க ஜனநாயகம்… வளர்க விழிப்புணர்வு…

    கூட்டணி – ம.தி.மு.க. : வைகோ பதில்

    தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க. நீடிக்குமா?- வைகோ பதில்

    சங்கரன்கோவில், ஜன.30-

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ சங்கரன் கோவிலில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

    அதன் விவரம் வருமாறு:-

    கேள்வி: ம.தி.மு.க.வின் தற்போதைய அரசியல் நிலைபாடு என்ன?

    பதில்: ம.தி.மு.க. ஏற்கனவே உள்ள நிலைபாட்டில் எந்த மாறுதலும் இல்லை. 2004-ல் சிறைச்சாலையை விட்டு வெளியே வந்த போது இருந்த ம.தி.மு.க.வின் அதே அரசியல் நிலைபாடுதான் தொடர்கிறது.

    கேள்வி: ம.தி.மு.க.வின் பெரும்பாலான தொண்டர் கள் மத்தியில் மாற்றுக்கட்சி கூட்டணியை எதிர்பார்ப்பது போல தெரிகிறதே?

    பதில்: ம.தி.மு.க.வின் உயிர் சக்தியே தொண்டர்கள்தான்.ம.தி.மு.க.வின் கடுமையான தோல்வியிலும், துன்பத்திலும் தங்களின் நலன் என்று எதையும் கருதாது இயக்கத் தின் நலனுக்காக தங்களை அர்ப்பணிக்கும் வகையில் தொண்டர்கள் இருக்கிறார்கள். அவர்களின் மனம் பல சந்தர்ப்பங்களில் காயப்பட்டிருக்கிறது. 19 மாத சிறைவாசத்தின்போதும் அவர் கள் உள்ளம் ரத்தக்கண்ணீர் வடித்ததும் உண்மை.

    ம.தி.மு.க.வின் கவுரமான அந்தஸ்தும் மரியாதையும் பாதுகாக்கப்படவேண்டும் என் பதுதான் தொண்டர்களின் நோக்கம்.

    மேலும் இந்த இயக்கத்தின் எதிர்காலத்தையும், நிரந்தர மதிப்பையும் தொண்டர்களின் நலனையும் காப்பதில் நான் கவனமாக இருக்கிறேன்.

    கேள்வி:கூட்டணி எதுவாக இருந்தாலும் எத்தனை தொகுதிகள் கேட்பீர்கள்?

    பதில்:கூட்டணி எதுவாக இருந்தாலும் என்ற வார்த் தையே தவறு.

    கேள்வி:வரும் தேர்தலில் எந்த தொகுதியில் போட்டியிட இருக்கிறீர்கள்?

    பதில்:தேர்தலில் நிற்கும் போது உங்களிடம் சொல் கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது ம.தி.மு.க. மருத்துவர் அணி மாநிலச் செயலாளர் சுப்புராஜ், மாவட்ட செயலாளர் சரவணன், துணைச்செயலாளர் மாரியப்பன், நகரச்செயலாளர் பிச்சையா உள்பட பலர் இருந்தனர்.

    Source: http://www.maalaimalar.com/asp/news/dis_news_article.asp?artid=103339
    http://www.maalaimalar.com

    உடைகிறதா ம.தி.மு.க. ? – ஜூ.வி

    இந்த நிமிடம் வரை சஸ்பென்ஸ் நாயகனாக வலம் வந்து கொண்டிருப்பவர் வை.கோ.தான். தி.மு.க., கூட்டணியில் வைகோ தொடர்ந்து நீடிஞூபபாரா, அல்லது அதிமுக., பக்கம் சாய்ந்து விடுவாரா என்ற கேள்வி தொடர்ந்து நீடித்தபடியே இருக்க… அதையொட்டி பல்வேறு யூகங்கள் சுழன்றடித்துக் கொண்டிருந்தன. அந்த நிலை…. தற்போது அடுத்த கட்டத்தை எட்டியிருக்கிறது. தேர்தல் கூட்டணி குறித்து அக்கட்சித் தலைவர்களிடையே வேறுபட்ட அபிப்பிராயங்கள் எழுந்துள்ளதை அடுத்து, மதிமுக., வில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் உலாவரத் துவங்கிவிட்டன.

    கடந்த டிசம்பர் மாதம் வரையில், தமிழகத்தின் அடுத்த முதல்வராகக் கலைஞரை அரியணையில் அமரவைப்பதுதான் என் வேலை என்று பேசிவந்த வைகோ, இப்போது அதுகுறித்து தீவிரமாகப் பேசாமலிருப்பதால் ம.தி.மு.க.,வின் இரண்டாம் கட்டத் தலைவர்களிலிருந்து கடைசித் தொண்டன் வரைக்குமுஞூஇருவேறுபட்ட மனநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அதிமுக.,வுடன் தான் போக வேண்டும் என்று ஒரு தரப்பும்…. தி.மு.க.,வுடன் தான் போகவேண்டும் என்று இன்னொரு தரப்பும் கச்சைக்கட்ட கட்சிக்குள் கலகம் வெடிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

    ம.தி.மு.க.,வினரின் இந்த இரு வேறுபட்ட மன ஓட்டம் குறித்து நம்மிடம் பேசினார். கட்சியின் நிர்வாகி ஒருவர். இவர் அதிமுக., சார்பு நிலையிலிருப்பவர். எம்.பி.க்கள் ரெண்டு பேர் எக்காரணம் கொண்டும் தி.மு.க., கூட்டணியை விட்டுப் போயிடக்கூடாதுனு பிடிவாதமா இருக்காங்க. அதுக்காக அவங்க ஏதோ கட்சியைப் பத்திக் கவலைப்பட்டுதான் அப்படி சொல்றாங்கனு நினைச்சிட வேண்டாம். ரெண்டுபேரும் அமைச்சராகிற கனவுல இருக்காங்க. எலெக்ஷன் முடிஞ்சதும் அவங்களுக்கு மத்தியில் அமைச்சர் பதவி வாங்கித் தந்துடறதா தி.மு.க.,வுல சொல்லியிருக்காங்க. அதனாலதான் தி.மு.க., கூட்டணியில இருந்து விலகுறதுக்கு ஆயிரம் நியாயமான காரணங்கள் இருந்தாலும் விலகச் சம்மதிக்காம அடம்புடிக்கிறாங்க. ஒருவேளை, தி.மு.க., கூட்டணியிலிருந்து விலகிடுறதா கட்சி முடிவெடுத்துட்டா, கட்சியை உடைச்சி போட்டி இயக்கம் நடத்தியாவது அமைச்சராயிடறதுனு முடிவா இருக்காங்க.

    அந்த ரெண்டு பேர்ல ஒருத்தர் ரெண்டு மூணு நாளைக்கு முன்னாடி தலைவர் வை.கோவைச் சந்திக்க தாயகத்துக்கு வர்றதாச் சொல்லியிருந்தாரு. அதுக்காக தலைவர் வந்து அரைமணி நேரமா வெயிட் பண்ணியும் அவர் வரவேயில்லை. போன் பண்ணிக் கேட்டதுக்கு அவரு குளிச்சிக்கிட்டு இருக்கிறதா சொல்லியிருக்காங்க. பாத்தாரு தலைவரு டக்குனு கிளம்பி அந்த எம்.பி.யோட இருப்பிடத்துக்கே போயிட்டார. அதுக்குப்பிறகு ரெண்டு பேரும் ரெண்டு மணி நேரம்பேசியிருக்காங்க. ஆனாலும் கூட்டணி விஷயத்துல அந்த எம்.பி.யை சமாதானப்படுத்த முடியாமலே திரும்பிட்டாரு வைகோ.அதனால கட்சி உடைஞ்சிடுமோனு பயந்து இதுவரைக்கும் எந்த முடிவும் எடுக்கமுடியாம தலைவரு தத்தளிச்சிக்கிட்டு இருக்காரு என்றார் அந்த நிர்வாகி.

    தி.முக., கூட்டணியில் இருப்பதுதான் பலம் என்று நினைக்கக்கூடிய மணம் பரப்பும் பெயரைக் கொண்ட மாவட்டச் செயலாளர் ஒருவர், வைகோ அதிமுக., பக்கம் போய்விட்டால் திமுக.வில் இணைந்துவிடுவது என்ற எண்ணத்தில் இருக்கிறார். ஏற்கெனவே தான் மட்டும் திமுக.,வில் இணைவதற்கு ஆர்வம் தெரிவித்தாராம் இவர்.ஆனால் கூட்டணி இருப்பதால் இப்போது வேண்டாம் என்று திமுக., சார்பில் சொல்லப்பட்டதாம். ஒரு காலத்தில் கொடிகட்டிப் பறந்த இவருக்கு, மதிமுக.,வுக்கு வந்த பின்னர் எம்.எல்.ஏ., எம்.பி. யாகும் வாய்ப்பு தரப்படவில்லை என்ற ஆதங்கம் நீண்ட நாட்களாக இருந்து வருகிறதாம்.

    சட்டசபைத் தேர்தல் நேரத்தில் ஏதாவது ஒரு தவறான முடிவை எடுத்து, தங்களுக்குப் பதவி வாய்ப்பு இல்லாமல் செய்துவிடுகிறார் வைகோ. இம்முறையும் அப்படி ஏதாவது ஒரு மடிவை அவர் எடுத்தால் இரண்டில் ஒன்று பார்த்துவிட தயாராகத்தான் இருக்கிறேன் என்று தன் சகாக்களிடம் சொல்லிக் கொண்டிருக்கிறாராம். இப்போது தனக்கு ஆதரவாகப் பேசக்கூடியவர்கள் யார் யார் என்பதை பல்ஸ், பார்க்கவும் ஆரம்பித்திருக்கும் இவர், அவர்கள் அனைவரையும் ஒன்று சேர்த்துக் கொண்டு தாய் கழகத்தில் ஐக்கியமாவதா, அல்லது தனி அணியாகச் செயல்பட்டு வைகோவுக்கு டார்ச்சர் கொடுப்பதா என்ற யோசனையில் இருக்கிறாராம். இவருக்குப் பக்கபலமாக இருப்பது, வடமாவட்டத்தைச் சேர்ந்த இன்னொரு தலைவராம்.

    அந்த வடமாட்டத் தலைவருக்கும் கட்சியில் ஏகப்பட்ட வருத்தங்கள்தான். தன்னை நம்பி அரசியலுக்கு வந்த யாருக்கும் எதுவும்செய்ய முடியவில்லை என்ற ஆதங்கத்தில் இருக்கிறாராம். தன்னுடைய மாவட்டத்தில் தன்னை ஓரம் கட்டும்விதமாக சில காரியங்களை கட்சி மேலிடம் செய்வது அவருக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லையாம்.ஏöன்ன்றால் கட்சியை ஆரம்பித்தபோது வந்த மூத்த தலைவர் அவர், சில நேரங்களில் அவரை நோக்கிக் கேள்விகள் கேட்கப்படுவதை அவர் விரும்புவதில்லையாம். அவரைக் கட்டுப்படுத்தும் வகையில் சிலரைக் கட்சியில் வளர்த்துவிடுவதற்கான முயற்சிகள் நடந்துவருவதாக ஏற்கெனவே புழுக்கத்தில் இருக்கிறாராம். குறிப்பாக அமைச்சராக முடியாத வருத்தம் அவருக்கு நிறையவே இருக்கிறது. எனவே அவரும் தன்னுடைய ஆதரவாளர்களுடன் தீவிரமாக ஆலோசனை நடத்திக் கொண்டிருக்கிறார்.

    அதேபோல் வைகோவுடன் சிறையில் இருந்த தலைவர் ஒருவருக்கு எம்.பி. ஸீட் கிடைக்கவில்லை என்ற வருத்தம் ஏற்கெனவே இருந்து வருகிறது. இப்பொழுது அதிமுக.,.வுடன் கூட்டணி அமைத்தால், அவர் கட்சியில் இருந்தே விலகிவிடுவார் அல்லது போட்டி இயக்கத்தில் ஐக்கியமாகிவிடுவார் என்று அவருடைய ஆதரவாளர்கள் சொல்கிறார்கள். அதுமட்டுமின்றி பொட சிறை சென்ற ஏழு பேர்களுடைய குடும்பத்தினரும் அவரைச் சந்தித்து அதிமுக.,வுடன் செல்ல வேண்டாம் என்று வைகோவிடம் எடுத்துச் சொல்லும்படிக் கேட்டிருக்கிறார்களாம். வைகோ அதை ஏற்கவில்லை என்றால், போட்டி இயக்கம் நடத்த முழு ஆதரவு அளிப்பதாகவும் கூறியிருக்கிறார்களாம். அதுமட்டுமின்றி சிறையிலிருந்த இந்தத் தலைவருடன் செல்வதற்கு மூத்த பெண் நிர்வாகி ஒருவர் தயாராகி வருகிறாராம்.

    வை.கோவை சிறையில் அடைத்த ஆட்சியை அகற்றாமல் ஓயமாட்டேன் என்று சபதம் போட்டிருக்கும் நிர்வாகி சமீபகாலமாக திமுக. நிர்வாகிகளிடம் அடிக்கடி பேசி வருகிறாராம். எப்படியாவது திமுக. கூட்டணியில் தக்கவைத்துக் கொள்ளுங்கள் இல்லையென்றால் எங்களையாவது சேர்த்து கொள்ளுங்கள் என்று சொல்லி வருகிறாராம். இந்த அதிருப்தியாளர்கள் அனைவரும் தனியாக அவ்வப்போது சந்தித்துப் பேசி வருவதாகவும் செய்திகள் வருகின்றன.

    ஆளும் கட்சியைப் பொறுத்தவரை, திமுக., கூட்டணியில் இருக்கும் கட்சிகளில் மதிமுக.வை மட்டுமே முழுமையாக தங்கள் பக்கம் இழுக்க முடியும் என்று உறுதியாக நம்புகிறார்கள். காங்கிரஸ், பா.ம.க, ஆகியவற்றில் உள்ள ஒரு சில அதிருப்தியாளர்களை மட்டுமே இழுக்க முடியுமே தவிர, கட்சியையே தங்கள் பக்கம் இழுக்க முடியாது என்பது அதிமுக.வுக்கு நன்றாகவே தெரியும். அதனாலேயே இம்முறை கூட்டணியை உடைத்து மதிமுக.,வை இழுத்துவிடுவதில் உறுதியாக இருக்கிறார்கள். அதற்கு அவர்கள் வைத்திருக்கும் மந்திரச்சொல் ஸ்டாலின் ஸ்டாலின் இருக்கும் வரை உங்களை வளரவே விடமாட்டார்கள் என்று சொல்லியே வைகோவை வளைக்கத் திட்டமிட்டிருக்கிறார்கள்.

    ஒருவேளை திமுக. கூட்டணியில்உள்ள கட்சிகளை உடைக்க முடியாவிட்டால் திமுக.,வுக்குத் தனி மெஜாரிட்டி கிடைக்கவிடாமல் செய்துவிடுவதில் உறுதியாக இருக்கிறார்கள். ஆளுங்கட்சியினர் தனி மெஜாரிட்டி கிடைக்காவிட்டால் கூட்டணி ஆட்சி தவிர்க்க முடியாததாகிவிடும். அந்த சமயத்தில் குதிரை பேரங்கள் நடத்திஆட்சியைப் பிடிக்க முயற்சிக்கலாம் என்று ஆளுங்கட்சி கணக்குப் போடுவதாகக் கூறப்படுகிறது.

    இப்படி சர்ச்சைகள் றெக்கை கட்டி மறந்து கொண்டிருக்கும் நிலையில் குடியரசு தினத்தன்று திடீர் சந்திப்பாக கருணாநிதியை வீடு தேடிப்போய் பார்த்தார் வைகோ. கூட்டணிக் குழப்ப செய்திகளுக்கு ஒரு முடிவு கட்டி விடுவார்கள் என்ற எதிர்பார்ப்போடு கருணாநிதியின் கோபாலபுரம் வீடு நோக்கி படையெடுத்தனர் பத்திரிகையாளர்கள். சுமார் முக்காமல்மி நேரம் நடந்து முடிந்த அந்தச் சந்திப்பின் முடிவில் கருணாநிதி, வைகோ இருவருமே பத்திரிகையாளர்களிடம் எதுவும் பேசாமல் போய்விட்டனர். இருவரின் முகங்களும் ஒருவித இறுக்கத்துடனேயே காணப்பட்டன.

    என்னதான் பேசினார்கள்? என்று இரு கட்சி வட்டாரங்களிலும் விசாரித்தபோது, மதிமுக.,வின் நிலை பற்றி சமீபகாலமாக பத்திரிகைகளில் வரும் செய்திகள் பற்றி வைகோவிடம் கேட்டிருக்கிறார் கருணாநிதி. அதற்கு வைகோ நீண்ட விளக்கம் கொடுத்தும், கருணாநிதிக்கு திருப்தி ஏற்படவில்லை. அதனாலலேயே இருவரும் உடனடியாகப் பத்திரிகையாளர்களைச் சந்திக்கவில்லை என்று சொன்னார்கள்.

    அதேசமயம் அன்று மாலை, பத்திரிகையாளர்களைச் சந்தித்த கருணாநிதி தி.மு.க., கூட்டணி அப்படியே நீடிக்கிறது. உளவுத்துறையினர்தான் கூட்டணியில் குழப்பம் இருப்பதாக செய்தி பரப்புகிறார்கள். இன்று நானும் வைகோவும் சந்தித்ததைப் பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள் என்று சொன்னார்.

    ஆனால் வைகோ தன் தரப்பு என்ன என்பது பற்றி சொல்லாமல், மர்மதேச பாணியைக் கடைபிடிப்பதுதான் பலரையும் யோசிக்க வைத்திருக்கிறது!

    ஜூ.வி. தேர்தல் டீம்
    ————————–
    நன்றி: ஜூனியர் விகடன் (மற்றும் தினமலர்)


    http://www.dinamalar.com/2006jan30/juniorvik.asp

    Courtesy: http://www.juniorvikatan.com

    வனதேவதை

    வனதேவதை க(வி)தையைப் படித்தவுடன் சமீபத்தில் கேட்ட உல்டா கதை ஞாபகம் வந்தது.

    மரம் வெட்டிக்கொண்டிருந்தான். கோடரி தவறிப் போய் ஆற்றில் விழுந்தது. தேவதையை வேண்டிகொண்டான். தேவதையும் தோன்றினாள்.

    தங்க கோடாரியை காட்டினாள்; இல்லையென்றான்.

    வெள்ளிக் கோடாரியை காட்டினாள்; அதுவும் இல்லையென்றான்.

    இரும்புக் கோடாரியை காட்டினாள்; ஆமாம் யென்றான் வியாபாரி.

    மூன்றையும் கொடுத்துவிட்டு சென்றுவிட்டாள்.

    இன்னொரு நாள் குளிக்கும்போது தவறிப்போய் மனைவி மூழ்கி விட்டாள். தேவதையை வேண்டிகொண்டான். தேவதையும் தோன்றினாள்.

    முதலில் ஐஷ்வர்யா ராயைத் தூக்கிக் கொண்டு வந்தாள். ஆம் என்றான் மரவெட்டி.

    அதிர்ந்து போனாள் தேவதை.

    ‘நீங்க முதலில் ஐஷ்வர்யா ராய்; அதற்கப்புறம் பிபாஷா பாசு என்று கொண்டு வருவீங்க… அப்புறமா மூன்று பேரையும் வச்சுக்கோ என்று கொடுத்துருவீங்க. ஒண்ணை மட்டும் வைத்துக் கொண்டே படும்பாடு தாங்கலை. அதான் முதலில் ஒருத்தி வந்தவுடனேயே தலையாட்டிட்டேன்’ என்றான் மரவெட்டி.


    |

    அடிமைத்தனம்

    நாவுக்கு அடிமை நான் ஆறு வயசில
    பூவுக்கு அடிமை பதினாறு வயசில
    நோவுக்கு அடுமைதான் பாதி வயசில
    சாவுக்கு அடிமை அட நூறு வயசில

    வாழ்க்கை சக்கரம்

    ‘மக்கள் என் பக்கம்’ பாடலில் தவறவிட்ட அடிமைத்தனம்:


    |

    பிஸினஸ் மாடல்கள்

    எனக்கு ஐடியா கொடுக்கத்தான் தெரியும். செயல்படுத்த அறியேன். தோன்றியதில் சில

    1. ஃபீட் லவுன்ஜ் போன்ற தளங்கள் தமிழ்மணம்/தேன்கூடு போன்ற சேவைகளுக்கு மாதந்தோறும் ஐந்து அமெரிக்க வெள்ளிகளை சந்தாவாகக் கட்ட சொல்கிறார்கள். படிப்பதற்கு காசு கேட்டால் தமிழ் வாசகர்கள் (விகடன் போன்ற பெத்த பெயராக இல்லாவிட்டால்) கொடுக்கமாட்டார்கள்.

    படிக்க வைப்பதற்கு பணம் கேட்கலாம். ஒரு மாதத்திற்கு உங்களுடைய வலைப்பதிவை தமிழ் வலைவாசலில் காட்டுவதற்கு ஐந்து டாலர் (அல்லது 250 ரூபாய்) கட்டணமாக வசூலிக்கலாம். வருட சந்தா என்றால் தள்ளுபடியாக ஐம்பது டாலர் கேட்கலாம்.

    2. பின்னூட்டங்களில் வரும் அல்லாத வார்த்தைகளை நீக்குவதற்கான நிரலியை விற்கலாம். ஆங்கிலத்தில் இது போன்ற வார்த்தைகளைத் தவிர்ப்பதற்கான செயலிகள் இருக்கிறது. அதே போல் தமிழிலும் கொண்டு வரலாம். வோர்ட்பிரெஸ் போன்றவற்றில் டேஞ்சரான சொற்களை நாமே தட்டச்சி இவை வந்தால் தடுத்துவிடவும் என்று சொன்னால், அவை வரும் மறுமொழிகள் நிராகரிக்கப்படும்.

    நிரலியை நிறுவியவுடன் ஆட்டோமேடிக்காக புகழ்பெற்ற வசைப்பாடுகள் பின்னூட்டங்களில் தேடப்படும். அவசியம் என்றால் நாமே அதிகப்படியான அல்லது விடுபட்ட வன்சொற்களை நிரலிக்குக் கற்றுக் கொடுக்கலாம். ப்ளாக்ஸ்பாட்டுடன் எளிதில் இணைந்து செயல்படுவது அவசியம்.

    3. தமிழில் தேட வேண்டும் என்றால் ரோமனைஸ்ட் ஆங்கிலத்தில் அடித்தால் போதுமானது என்று சொல்லுமாறு தேடுபொறி அமைக்கலாம். ரா ஷுகர் போன்ற niche தேடுபொறிகளின் காலம் இது.

    அந்த நிரலியே கொடுக்கப்பட்ட சொற்றொடருடன் தேவையான விகுதிகளை சேர்த்துக் கொள்ளும். எடுத்துக்காட்டாக, ‘ஐஸ்வர்யா’ என்று தேடினால் ‘ஐஷ்வர்யா’, ‘ஐஸ்வரியா’, ‘ஐஸ்வர்யாவின்’ போன்ற உபரிகளையும் கொண்டு வர வேண்டும். உலக அழகியா அல்லது லஷ்மியின் மகளா அல்லது அஷ்டலஷ்மிகளில் ஒருவரா அல்லது ரஜினிகாந்தா என்று வினவாமல், அனைத்து முடிவுகளையும் க்ளஸ்டி போல் தொகுத்துக் கொடுக்க வேண்டும்.

    பாமினி, டிஸ்கி, யூனிகோட், டாப்/டாம் என்று பல எழுத்துருக்களில் மாற்றிக் கொண்டு தேடி, அனைத்து முடிவுகளையும் ஒருங்கிணைத்துத் தரும். மின்-மடலாடற் குழுமங்கள், வலைப்பதிவுகள் என்று பொருத்தமானதைத் தேர்ந்தெடுக்கும் advanaced options-ஐயும் சேர்த்துக் கொள்ளலாம்.

    4. தமிழில் குறும்படங்களும் விவரணப்படங்களும் பெருமளவில் வெளிவருவதாக ‘நிழல்’ போன்ற பத்திரிகைகள் சொல்கிறது. ஆங்கிலத்துக்கு ‘இண்டி’ சர்க்யூட் இருப்பது போல் இவற்றுக்கு வலையில் பெரும் வரவேற்பு இருக்கும். மாத சந்தாவைக் கட்டினால் எத்தனை படம் வேண்டுமானால் பார்க்கலாம் என்னும் ஏற்பாட்டின் மூலம் பட ஆர்வலர்களையும் புதுப்பட முயற்சிகளையும் கைகோர்க்க வைக்கலாம்.

    குறைந்த நேரங்களே ஓடும் படங்கள் என்பதினால் அகலபாட்டை, 56 கேபிபிஎஸ் போன்ற பிரச்சினைகள் பெரிதும் தலைதூக்காது. திருட்டுப் விசிடியையும் ஒரே முகவரியையே பலரும் பயன்படுத்துவதையும் தடுக்க, ஐ-ட்யூன்ஸ் போன்ற தொழில்நுட்பத்தை செயல்படுத்த வேண்டும்.

    5. சூடாக அலசவேண்டிய, உலகளாவிய மற்றும் துறைசார்ந்த விஷயங்கள் இருந்தாலும், எழுத்தில் கொண்டுவரக் கூடியவர்களைக் காணவில்லை என்று பத்திரிகைகள் அங்கலாய்க்கும். எழுத்தாளர்கள் கிடைத்தாலும் புத்தகங்களாக முழுவீச்சோடு முடிப்பதில்லை என்று பதிப்பகங்கள் அலுத்துக் கொள்ளும்.

    வலைப்பதிவுகளிலும், இணையப் பத்திரிகைகளிலும் இதுவரை வெளியிட்ட அத்தனை கட்டுரை, கதை, கவிதை என்று எல்லா மேட்டர்களையும் ஒருங்கிணைத்து டேட்டாபேஸ் உருவாக்கலாம். எவர் எதை எழுதினால் சிறப்பாக இருக்கும் என்பதை அனுமாணித்து, பதிப்பாளர்களுக்கும் படைப்பாளிகளுக்கும் பாலமாக செயல்படலாம்.

    இரு பக்கத்திலும் நெருக்கமான தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டு அச்சுத் தேவையையும் எழுதும் தாகத்தையும் பொருத்தி விட்டு இடைத்தரகராக விளங்கலாம்.


    | |