தமிழ் சினிமா பாடல்களில் குளிராடி அணிந்து கொண்டு குத்துப் பாட்டு ஆடுவது எந்த படத்தில் /எந்தப் பாடலில் இருந்து துவங்கியது?
நான் ஏதோ ரஜினி தான் துவக்கி வைத்தார் என்று நினைத்திருந்தேன்.
நீக் படத்தில் கோல்டன் ஸ்பேரோ அதற்கு முன்பே தயாராகி விட்டதோ!
இதற்கெல்லாம் முன்பு அஜித் தன் பாட்டுக்கு ஆடி இருக்கிறார்!
இன்னும் என்னவெல்லாம் தவறவிட்டேனோ?
காஞ்சனா, ஸ்ரீப்ரியா, படாஃபட், ஜெயசித்ரா என்றெல்லாம் யோசிக்காமல் கடந்த 20 ஆண்டுகளுக்குள் எந்தப் பாடலில் எந்த நாயகன் முதன்முதலாக தன் கூட ஆடுபவர்களுக்கு சன் கிளாஸ் 😎 போட்டு விட்டார்?
(பிர் பீ தில் ஹை ஹிந்துஸ்தானி-யின் ஆவியில் — தமிழ் சினிமா ரொக் ஸ்டைல்)
🎬 (Intro — பேசும் கொடி)
வா மச்சா… கேளு இந்த ஒரு வார்த்தை…நாம் யாரு-ன்னு கேக்குறியா?Pause போடு… நெஞ்சு கேக்கட்டும்…
🥁 (Verse 1 — காலை வாசம்) காலையில் ஃபில்டர் காபி, சாயம் ஏறும் கப்பு மாலையில் சாய்க் கடையில் பாலிடிக்ஸ் debate-உப்பு ட்ராஃபிக்-ல horn மேளம், signal-ல சங்கீதம் கோபம் வரும் ஒரு நொடி — அடுத்த நொடி “வாங்க அண்ணாச்சி!”
⚡ (Pre-Chorus — உச்சி நோக்கி) ஆயிரம் குறைகள், ஆயிரம் கனவுகள் வம்பும் நாமே, விருந்தும் நாமே — பாரு பாரு… நெஞ்சு என்ன சொல்லுதுன்னு!
🔥 (Chorus — கூவல்)
என்ன ஆனாலும், எப்படி வந்தாலும்இதயம் இந்தியன் தான்… ஓ டா!எங்கே சென்றாலும், என்ன பேசினாலும்இதயம் இந்தியன் தான்… மச்சா!
🥁 (Verse 2 — தேசம் ஒரு mixtape) பெங்களூரு coding, பாம்பே ஃபேஷன் வேகம் சென்னை மரினா-வில் சூறா மீன் ஓசை-ருசி-மோகம் ரஜினி punch dialogue, ஷாருக் கை விரிப்பு பாஷை வேற இருக்கும் — vibe-ஓ ஒரே குறிப்பு!
🔥 (Chorus repeat — இரட்டிப்பு energy)
என்ன ஆனாலும், எப்படி வந்தாலும்இதயம் இந்தியன் தான்… ஓ டா!
🌍 (Bridge — diaspora ஆத்மா) நியூ ஜெர்சி-யில் பொங்கல், டொராண்டோ-வில் தீபாவளி லண்டன் ட்யூப்-ல “என்ன மச்சி?” — அதே குரல், அதே ஒலி Passport நிறம் வேறு, ஆனா ரத்தம் ஒரே ராகம் காலம் சுழலும் — மண்ணின் வாசம் என்னை விடாத பாகம்!
🎸 (Final Chorus — swag mode unlocked) நாமே வம்பு பேசுவோம், நாமே நாமே சிரிப்போம் வெளியாள் ஒரு வார்த்தை சொன்னா — கூட்டமா நிற்போம்! குறை இருக்கு, சரிதான் — குணமும் ஆழம் கடல்
இதயம் இந்தியன் தான் — இது சத்தியம் ஒரு சத்தியம்!
🎤 (Outro — fade out, but loud)
என்ன ஆனாலும்…எப்படி வந்தாலும்…இதயம் இந்தியன் தான், டா! 🇮🇳
🎧 (Intro — beat drop-க்கு munnadi)
Yo… yo… yo…Listen up da mapla…Mic-ஐ பாரு… mic-ஐ பாரு…Asal sound… Bharath ground…3… 2… 1… GO!
💥 BASS DROP 💥
🎤 VERSE 1 — Street Heat
ரோட்டுல போனா auto-கார horn ஒரு கச்சேரி
கடைல சாயா sip பண்ணா — அது தான் life-கு recharge-ery
Politics, cricket, cinema — ஒரே breath-ல மூணும்
அடுத்த நொடி sambar சாதம் — life-ஓ enna fusion!
Slipper-ஓட bike ஓட்டி, helmet-ஐ கையில் தொங்க
Signal red-ஓ green-ஓ — instinct தான் gang-ka
Rule-கள் suggestion மட்டும் தான் — அப்படி ஒரு swagger
நாமே நாமே சிரிப்போம் — அதே நாமே anchor!
⚡ (Pre-Chorus — temperature ஏறுது)
கேளு… கேளு… கேளு டா…ஆயிரம் குறை, ஆயிரம் சண்டைஆனா ரத்தம் ஒரே வண்ணம் டா…DROP IT!
🚨 HOOK / CHORUS — full volume
என்ன ஆனாலும் — இதயம் இந்தியன் தா!
எங்க போனாலும் — இதயம் இந்தியன் தா!
யாரு கேட்டாலும் — இதயம் இந்தியன் தா!
நெஞ்சு கேட்டுச்சு — இதயம் இந்தியன் தா!
(repeat ×2 — crowd-ஆ கூட்டமா கூவணும்!)
🎤 VERSE 2 — Map of the Madness
பம்பாய் skyline glitter, பெங்களூரு code-ல night-shift
சென்னை marina-ல suntan, கல்கத்தா-ல poetry-fix
பஞ்சாபி dhol beat, கேரளா boat-ஓட drift
ஒவ்வொரு state-ஓ flavour — full plate buffet, no shift!
Hindi, Tamil, Telugu — Tanglish-ஓ free-style
WhatsApp forward உலகம் சுத்தும் — five seconds, single tile
Cricket world cup match-ஓ — country goes psycho mode
பல்லவி : {மக்கமிஷி.. பிரச்சனிய லெஃப்ட் ஹேண்ட்ல ஹேண்டில் பண்ற மைக் லஸ்சி!? நம்ம ஊரு பூமர் டாக்ஸ்!? என்ன ஸ்டாரு!? ரொம்ப பிஸி!? பஸ்-ஸ்டாப்ல பால்மெய்ன் டி ஷர்ட் போட்ட கூட அஸ்சி!? இப்போ ரொம்ப குஷி}
ஆண் : இன்ஸ்டால்மெண்ட் ஹெட்ஃபோன் வாங்க கூட உனக்கு காசு இல்ல!? இன்ஸ்டாகிராம்ல எக்சைட்மெண்ட் பாக்க ஓடி வரன் மாப்பிள
ஆண் : நான் ஸம்மர் டைம்ல, வூலன் கோட் போட்டு சுத்துற புலி!? யப்பா… லேட் நைட்ல வாக்கிங் போய் நாய் கடிச்சு வலி!?
ஆண் : வீட்ல ரொம்ப கண்டிஷன்!? என் பேருல நெரிய பெட்டிஷன்!? நான் ரூல்ஸ ஆ மதிக்கும் மனிஷன்!? நீ பண்ற தப்பெல்லாம் மனிச்சேன்!? நம்ம சிட்டி ஃபுல்ல பாலுஷன்!? செய்யுற வேலைக்கு ஏத்துக்கு கமிஷன்!? நான் கேப்பேன் –> ஏன்னா சிட்டிஸன்!? நம்ம விரல்ல இருக்கு சொல்யூஷன்!?
ஆண் : உள்ளூர் வெயில் ஊறுகாயை நக்கினு… ஆட்டம் பாம்ப சேர்ந்து குடிச்சினு… ஷார்ப்பு புள்ளைங்க… காடிய தட்டிக்கின்னு… வைபுக்கேத்த பாட்ட பாடினு… டாடி காசுல பாடி வெச்சுனு… மாடி மேல லைலா மஜ்னு… நைட் ஃபுல்லா கொசுவ அடிச்சுனு!? லூப்பு மோட்ல லைஃப் ஓடினு
ஆண் : யெப்பா டா டை….குந்துற யெப்பா
ஆண் : மச்சான் இட்ஸ் அ லாங் வே டு கோ… அடிச்சு தூக்கு…
Song Name : Makkamishi Movie : Brother Composed, Arranged & Music Programmed by Harris Jayaraj Singers : Paal Dabba & Dacalty Lyrics : Paal Dabba
ஏன்? – காக்கி சட்டை, மகாநதி, புன்னகை மன்னன் என பல முக்கிய கமல் படங்கள் அவ்வப்போது தெரிந்தாலும், இது புத்தம்புதிய ‘நாயகன்’
முதல் பாதி எப்படி? – உச்சஸ்தாயி. அழுத்தம். பாசாங்கற்ற பளிச்.
இரண்டாம் பாதி? – தக் லைஃப் இரண்டிற்காக பாக்கி வைக்காமல் எடுத்ததற்கு ஷொட்டு
ஏமாற்றிய தருணங்கள் – நாசர் நடிப்பு/கதாபாத்திரம்; நாலு பேரால் நினைவில் வைக்க முடியாத வசனம்; அண்ணன் – தங்கை பாசமலர்
உற்சாக தருணங்கள் – பாலைவனம், பனிவனம், டெல்லிவனம், அலைவனம் என கேமிரா; ரீங்கரிக்கும் பொருத்தமான இசை; நான் எப்பொழுதாவது சொல்வேன் என்று நினைத்திரவே இராத: ‘சிம்பு அவர்களின் நடிப்பு!’
த்ரிஷா – 96 போன்ற குப்பை படங்களில் பொம்மையாக வந்தவர் சும்மா ராணியாக ஜொலிக்கிறார்.
பாடல்கள் – பாதிப் பாடல் மட்டுமே வெள்ளித் திரையில். மீதி அடுத்த அராஜக வாழ்க்கையில்
பிடிக்கவில்லை என்பவர்கள் – நன்றாயிருக்கிறது என்றால் கண்ணியவான் வேசம் போய்விடுமோ என்னும் பயம் கொண்டவர்கள்
மொத்தத்தில் – கமல் ரசிகன் என்றால் கண்ணிலேயே நிற்கும். மணி ரத்னம் விரும்பி என்றால் மனதில் லயிக்கும். பூமர் என்றால் ரசிக்கும்.
தக் லைஃப் – குறியீடுகள்
1. டெல்லி ராஜ்ஜிய போட்டிகள்: – இந்திரா காந்தி x சஞ்சய் காந்தி (கமல் x சிம்பு) – ஐஷ்வர்யா லஷ்மி – ராஜீவ் காந்தி – சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி – ராகுல் காந்தி – அசோக் செல்வன் – ஜெயப்ரகாஷ் நாராயண் – நாசர் – லால் பகதூர் சாஸ்திரி – ஜோஜு ஜார்ஜ் – மொரார்ஜி தேசாய் – மகேஷ் மஞ்சரேகர் – ஜனாதிபதி நிக்சன் – த்ரிஷா – மாருதி சுஸூகி —-
2. ஈடிபஸ் என்கிறார் சுதிர் ஸ்ரீனிவாசன்
3. ஏகலைவன் – சிம்பு உயிர் போன்ற கட்டைவிரலைக் கேட்பார் துரோணர். வளர்ச்சியையும் திறமையையும் கண்டு அச்சம் கலந்த பொறாமை கொள்வார் அர்ச்சுனர் கமல். மாறாப்பற்றைப் போன்ற அடிமைத்தனத்தை எதிர்பார்ப்பார் கமல் என்னும் ஆசான். —-
4. ஒரே பெண்ணை ராமனும் விரும்புகிறார். பத்து தல அசுரனும் நாடுகிறார். அவர் –> த்ரிஷா. ராவணன் என்னும் சிம்பு, சீதையை சிறையெடுக்கிறான்.
5. புராணத்து சீதையை நிஜ வாழ்வில் த்ரிஷா என்னும் நட்சத்திரத்தின் குறியீடு. இது உங்களைக் குழப்பலாம். கமல்தனமாக யோசியுங்கள். விண்ணைத் தாண்டி வந்த மன்மதன் அம்பு எவ்வாறு இரு முரடர்களின் வாழ்க்கையை சின்னாபின்னமாக்கியது? —-
8. மகாபாரதம் என்றாலே வெண்முரசு. ஜெயமோகன் போன்ற இலக்கிய பிதாமகர் பாத்திரத்தில் ரங்கராய சக்திவேல் நாயக்கர்! அவரின் அண்ணன் போன்ற சுந்தர ராமசாமி ஆக நாஸர். அவரின் மகன் போன்ற வழித்தோன்றல்களை நாயக்கரே உருவாக்குகிறார். சதானந்த் போன்ற சாநி… மன்னிக்க… எதிரணிக்காரர்களுக்கும் விஷ்ணுபுரம் விருது கொடுத்து நேசக்கரம் கொடுக்கிறார். நாயக்கரைத் தவிர அவரின் அடிப்பொடியை நாடி, அமரன் பக்கம் வெகுஜனம் சாயும் போது விமர்சன மழையைப் பொழிகிறார். அப்படி என்றால், ‘இந்திராணி’ யார்? – சாகித்ய அகடெமியா? ஞானபீடமா??
9. ரொம்ப யோசிக்காதீங்க – இது நவீன ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’
10. அதுவும் இல்லை – சிலப்பதிகாரம் + மணிமேகலை – கோவலன் – த்ரிஷா – கண்ணகி x மாதவி (கமல் x சிம்பு) – ஐஷ்வர்யா லஷ்மி – கவுந்தி அடிகள் – கருணாநிதி – மணிமேகலை – அட்சய பாத்திரம் – தமிழ் நாடு – நெடுஞ்செழியன் – பார்வையாளர் ஆகிய நீங்கள் – கோப்பெருந்தேவி – வாசிக்கும் தாங்கள் தான்!
1. இது ரஜினி படமா? ஆமாங்க… அப்படித்தாங்க தலைப்பிலும் முன்னோட்டத்திலும் சொல்லிக் கொள்கிறார்கள்
2. அனிருத் இசை எப்படி? ரஜினி படத்துக்கு யார் இசையமைச்சாலும் ஒரே மாதிரிதானே இருக்கும்! தர்பார் மாதிரி, ஜெயிலர் மாதிரி… ஒரே மாதிரி!
3. படம் எப்படி இருக்கு? ரஜினி வெறியர்னா பல முறை பார்க்கலாம். இயக்குநர் ஞானவேல் பிரியர்னா இரண்டு முறை. சினிமா தாகம் கொண்டவர்னா நீலச்சட்டை மாறன் அலுக்கும் வரை.
4. உங்களுக்கு படம் பிடிச்சிருந்ததா? நான் ப்ரியா முதல் லிங்கா வரை எல்லாமே நல்லா இருந்ததா நெனக்கிறவன். அவர் நடிச்சா அது ஆஸ்கார்.
6. வெள்ளித்திரையில் ஓடுமா? தீபாவளிக்கு சன் டிவி. கிறிஸ்துமசுக்கு அமேசான். அதன் பிறகு ஐபிடிவி.
7. இது யாருடைய படம்? ஃபாஹத் ஃபாசில் மீண்டும் மீண்டும் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் பின்னப்படும் என்பதை நிரூபிக்கும் படம்.
8. கதையும் வசனமும்? அதெல்லாம் ரஜினி படத்தில் தேவையா என்ன? இருந்தாலும் ஓரிரண்டு ‘பேட்ட’ போன்ற அரிதாரங்களும் ’உன்னையக் கட்டிப் பிடிச்சுக்குவேன்; இல்லே வெட்டி சரிச்சுடுவேன்’ போன்ற அண்ணாத்த பன்ச்கள் கூட இல்லாதது ஞானவேலின் திமிர் கலந்த அலட்சியம்.
9.படம் உங்களுக்குப் பிடிக்கலையா? இந்தியன் 2 போன்ற ஷங்கர் கொடுமைகளுக்கு இதெல்லாம் கோடி தரம் மேல். மெக்காலே என்பவர் இந்திய நவீனக் கல்வியின் பிதாமகன் என்பதெல்லாம் கோடி தரம் புளித்துப் போன பிரச்சாரம். படம் வேலை செய்வது இந்த இரண்டு துருவ உச்சநிலைகளுக்கு நடுவே எங்கேயோ கேட்ட குரல்.
10. லிங்கா போல்… பாபா போல் இருக்கிறதா? அதெல்லாம் மசாலா. இது தீபாவளி லேகியம்.
1. சினிமாவில் எவ்வாறு செவ்வியல் இசை இடம் பிடிக்கிறது? அருமையான பதில் வந்தது. கூடவே… அது பதில் கேள்வி போட்டு தொக்கி நின்றது:
உங்களுக்குப் பிடித்த படத்தின் பின்னணி இசை, எவ்வாறு செவ்வியல் தாக்கத்துக்கு உள்பட்டது?
2. புகழ் பெற்ற ஹாலிவுட் படங்களையும் அதில் வரும் பாரம்பரிய இசையையும் சொல்லுக: மீண்டும் தகவல்களும் துல்லியமும் கொண்ட விடை. அதன் கேள்வி:
மீளொலி (Leitmotifs) எவ்வாறு திரைப்படங்களில் பயன்படுத்துகிறார்கள் எனத் தெரியுமா?
3. இல்லை. சொல்லேன்… சொன்னது. என்னிடம் சற்றே கடுப்பு எட்டிப் பார்க்கிறது. அதன் மறுவினா:
எளிமையியின் உச்சம் (மினிமலிசம்) எவ்வாறு கதாமாந்தர்களோடும் காட்சியோடும் ஒன்ற வைக்கிறது என்பதை உணர்ந்திருக்கிறீரா?
பிரமிக்க வைக்கும் பிரவாகம்! அசரடிக்கும் அறியாவினாக்கள். எனக்கு ‘கற்றது விரலளவு’ என்று உணரும் தருணம். சாட்ஜிபிடி-யை பார்த்து நகையாட வைத்தது… அது வரை ஆங்கிலம். இனி… கேட்டேன் பார் கேள்வியை – தமிழில்.
4. எனக்கு ராஜாவின் இசையில் தனித்துவம் தெரியும். அவரின் ராஜ்ஜியத்தில் சக்திவாய்ந்த அணுகுமுறை சாத்தியம். அதற்கு உதாரணங்கள் தர வேண்டுகிறேன்
ரொம்ப நேரம் யோசித்தது:
“மூன்றாம் பிறை” படத்தில் “வாழ்வே மாயம்” பாடல் இதற்கு ஒரு உதாரணம்.
இன்றைக்கு கே. என். செந்தில், தமிழினி கோகுல் பிரசாத், முகமூடி ராஜேஷ், வெ. சுரேஷ், போகன், தமிழ்நதி என்று எண்ணற்ற ஃபேஸ்புக் பதிவுகளின் தொடர்ச்சியும் உண்டு.
பிழைத்துக் கிடந்து, கடவுளின் நல்லாசியும் கொண்டு, அத்யந்தமான அனுபங்களும் கிடைத்து, தொடர்ச்சியாக எனக்குக் கிடைத்த விஷயங்களைப் பகிர வேண்டும்.
அதுதான் ”சகுனங்களும் சம்பவங்களும்”.
வெளியிட்ட சொல்வனம் இதழுக்கு நன்றி. படித்துப் பார்த்து உங்கள் எண்ணங்களைப் பகிருங்களேன்!
தலைப்புக் கட்டுரையாக அனுபவப் பகிர்வு – லோகமாதேவி: உண்மை என்பதாலும் அயல்நாடு விஷயத்தினாலும் உணர்ச்சிகரமாக, நெருக்கமாக எழுச்சியுற வைக்கிறது. விஷ்ணுபுரம் விருது நாயகரின் 77ஆம் அத்தியாயம் – மிளகு: இரா. முருகன் என் ஆசிரியர். அவர் ஊக்குவிக்கா விட்டால் எழுதவே வந்திருக்க மாட்டேன்.
இந்த இதழை ஓவியச் சிறப்பிதழ் எனலாம். எஸ் எச் ராஸா வந்த அரா கவிதைகள். மாதுரி தீட்சித் வந்த ‘வருணன் கவிதைகள்’ ஆர் ஸ்ரீனிவாசன் எழுதிய ஓவியர் ஃப்ரான்சிஸ் பேகன் (Francis Bacon) அனுபவம் + ஆராய்ச்சிக் கட்டுரை வெங்கட் ரமணன் வழக்கம் போல் உச்சங்களைத் தொடும் ரெனே மக்ரிட் (René Magritte) – அஞ்சனம் + ஆஞ்சநேயம்
இந்தக் கட்டுரை சொல்வனத்தில் வெளிவருமா! சரியான தளத்தில் தான் இருக்கிறோமா? என சற்றே தொடர்புயர்வுநவிற்சி கொள்ள வைத்த பாகிஸ்தானிய சமூகவியலாளரும், முற்போக்கு எழுத்தாளருமான ரஸா நயீம் எழுதிய சிந்து சமவெளியின் சோஷலிச சூஃபியின் தியாகம் – வாசிக்க வேண்டிய பட்டியலில் காத்திருக்கிறது!
ஆனால், வாசித்து ரசித்த கதை = ஸ்ரீருத் எழுதிய அமானுஷ்யம்: திவ்வியதிருஷ்டியும் மந்திரசித்தியும் உபசுருதி ஏற்றிய கனவு. நான் எழுதுவதை செயற்கை நுண்ணறிவு இன்னும் நன்றாக எழுதுமோ என யோசிக்க வைக்கும் ரவி நடராஜன் புகைப்பட க(வ)லை கட்டுரை – வாசிக்க லகு.
AI Generated
அப்படியெல்லாம் நான் யோசிக்காமல் எழுதிய சகுனங்களும் சம்பவங்களும் – இரண்டாம் பகுதி.
முதலில் பி.ஜி. பகிரப்பா குருபசப்பா ஹலகட்டி (PG Phakirappa Gurubasappa Halakatti) தென்பட்டார். அவரிடம் இருந்து வசன சாஹித்தியம் கிடைத்தது. அடுத்தது பிரபு தேவா நடனம். அவரிடம் இருந்து இடுப்பொடிக்கும் ஆட்டம். எவர் சிறப்பாக ஆடுகிறார் என்னும் போட்டி. கடைசியாக, அந்தாதி போன்று அகமாட்சி – ரேவதி என்னும் நடிகையை வைத்து ஒரு ஆட்டம்.
தான் எழுதுவது மற்றவர்களுக்குப் பிடிக்கிறதா? புரிகிறதா? புதியதாக இருக்கிறதா? என்பது ஒட்டக்கூத்தர் காலத்தில் இருந்து தோன்றும் மனக்கிலேசம்.
மஹராஜ் – அசப்பில் மோடியைச் சொல்கிறார்களோ என்னும் சம்சயம்.
எல்லோருக்கும் குழந்தையைத் தருகிறேன் என்கிறார். தான் மனிதனே அல்ல என நம்புகிறார். தெய்வாம்சம் ஆகவே நடந்து கொள்கிறார். அவரின் சீடர்கள் மகராஜை தெய்வமாகவேப் பார்க்கிறார்கள்.
நல்ல வேளை. கவனமாக எந்த நேரடி ஒப்பிடலோ, மறைமுக வசனமோ, குறிப்பால் உணர்த்தும் காட்சியோ பா.ஜ.க.வையோ பிரதம மந்திரி நரேந்திர மோடியையோச் சொல்லவில்லை.
இரு நூறாண்டுகள் முன்பு நடந்த அசல் சம்பவங்கள். நிஜ நாயகரின் பெயர் கர்சன் தாஸ் முல்ஜி – தயானந்த சரஸ்வதி போல்… ராஜா ராம் கோகன் ராய் போல்…
சமூக சீர்திருத்தவாதிகளைக் குறித்து பள்ளி புத்தகங்களில் படித்தவுடன், இவர்களை ஏன் படமாக எடுக்காமல், தூர்தர்ஷனில் நாடகமாக மட்டுமே போடுகிறார்கள் என்னும் சந்தேகம் கலந்த சோகம் எழுந்ததுண்டு. அப்பொழுது ஆமிர் கான் நடிக்க வந்த காலம்.
இப்பொழுது, ஆமிர் கான் மகனின் முதல் படம். முந்தையத் தலைமுறை நாயகர்கள் எல்லாம் மசாலாப் படங்களில் அறிமுகம் ஆனவர்கள்.
ஃபூல் அவுர் காண்டே – அஜய் தேவ்கன் மைனே பியார் கியா – சல்மான் கான் சான்வரியா – ரன்பீர் கபூர் கஹோ நா பியார் ஹை – ஹ்ரிதிக் ரோஷன் பான்ட் பாஜா பாராத் – ரன்வீர் சிங் பாபி – ரிஷி கபூர் ஹீரோ – ஜாக்கி ஷ்ராஃப் பர்சாத் – பாபி தியோல் கயாமத் ஸே கயாமத் தக் – ஆமிர் கான் தீவானா – ஷாரூக் கான்
எல்லோரும் ஆடலும், பாடலும், காதலும், அடிதடியும் கொண்டு வெள்ளித்திரைக்குக் கொணரப்பட்டவர்கள். ஆனால், ஜுனைத் கான் வேறு மாதிரி களத்தில் இறங்கி இருக்கிறார்.
ஆஸ்காருக்கு பாடுபட்ட ‘டைட்டானிக்’ நாயகர் லியொனார்டோ டிகப்ரியோ வரலாற்று நாயகர்களாக பல படங்களில் நடித்தவர். அவர்களின் சரித்திரங்களையும் சாகசங்களையும் தகிடுதத்தங்களையும் நடித்து அகாதெமி விருது பெற்றவர்.
ஆமிர் பையனுக்கும் அதே ஆசை. ஹாலிவு படங்களில் கொஞ்சம் நியாயம் இருக்கும். வில்லனுடைய பார்வையைச் சொல்வார்கள். சமய, சந்தர்ப்பங்களை விளக்குவார்கள். சூழ்நிலைக் கைதியாவதை உணர்த்துவார்கள்.
மஹாராஜ் – இங்கெல்லாம் சறுக்குகிறது. ஹவேலி ஏன் உருவானது? எவ்வாறு அதன் உறுப்பினர்களைக் கட்டுக்குள் வைத்திருந்தது? பெரிய சமாஜ், சங்கர மடம் போன்றவற்றிற்கு ஏன் அவ்வளவு செல்வாக்கு கிடைத்தது? எப்படி வியாபாரத்தை உள்குழுவிற்குள் வைத்து, செல்வத்தைப் பெருக்கினார்கள்? – இது போன்ற சம்பவங்களைக் கொணர்ந்திருக்க வேண்டும். மகராஜின் இன்னொரு முகத்தைக் காண்பித்திருக்க வேண்டும்.
ஒரு வில்லன்; ஒரு கெட்ட விஷயம்; ஒரு நல்லவன் – எவ்வாறு தன் நாவன்மையாலும் எழுத்துத் திறமையாலும் அதிகாரத்தை வீழ்த்துகிறான் என்பதற்கு ஊறுகாயாக இரண்டு காதலிகளை வைத்து கச்சிதமாகக் கதையை முடித்து இருக்கிறார்கள். சுவாரசியமான, பார்க்க வேண்டிய படம்.
ஜெய்தீப் அலாவத் – வாழ்ந்திருக்கிறார். அடுத்த படத்தில் நவாசுதின் சித்திக்கி மாதிரி ரஜினி கையால் அடி வாங்குமளவு அசத்தியிருக்கிறார்.
ஆமிரும் புத்திரரும் அடுத்து எந்த மதகுருவை கையில் எடுப்பார் என நினைக்கிறீர்கள்?
”லவ்வர்” திரைப்படத்தைக் குறித்து பக்கம் பக்கமாக நண்பர்கள் எழுதி இருக்கிறார்கள்.
பட்டியல் கொஞ்சம் பெரிய பட்டியல்: சுரேஷ் கண்ணன் மட்டும் ஐந்தாறு தடவை; அபிலாஷ் இரண்டு, மூன்று முறை; அரவிந்த் வடசேரி; ச.ந. கண்ணன்; ஹரன் பிரசன்னா கொஞ்சம் காண்டாகி இருக்கிறார்; சுகுணா திவாகர்; தாமிரா ஆதி; அய்யனார் விஸ்வநாத்; விஷ்வக்சேனன்; பிரபு தர்மராஜ்; தமிழினி கோகுல் ப்ரசாத்; பக்கம் பக்கமாக எழுதித் தள்ளும் யமுனா இராஜேந்திரன் (நாலந்து வரிகள்தான்); சௌம்யா ராகவன்; தனுஜா ஜெயராமன்; ப்ரீதம் பீதாம்பரம்; தமிழ்ப்பிரபா; சிவகுமார் வெங்கடாசலம்
இவர்களின் விரிவான பார்வையைத் தாண்டி என்ன புதியதாய் எழுதி விட இயலும்?
முன்னெல்லாம் விகடன் மதிப்பெண் போட்டால் சரியாக இருக்கும் என்பார்கள். இப்பொழுது வெ. சுரேஷோ ஹரன் பிரசன்னாவோ சுரேஷ் கண்னனோ சொன்னால் சரியாக இருக்கும் எனலாம்.
லவ்வர் நல்ல படம். தமிழில் இந்த மாதிரி தரமான சம்பவங்கள் எப்பொழுதாவது மட்டுமே நிகழும். வசனம், கதாபார்த்திரம், இடம், சூழல், என எல்லாம் களை கட்டும் படம்.
எல்லா பிம்பங்களையும் இரு வேறு பார்வையால் உடைக்கும் ஆக்கம்: 1. பெண்கள் பின்னாடி போகும் ஆண் என்றால் அந்தக் காரணம் மட்டுமே. 2. கல்லானாலும் காதலன்; புல்லானாலும் புருஷன் என்பது ஆணுக்கும் பொருந்தும். 3. கல்லூரி காலத்தில் ‘மின்னலே’ என ‘அலைபாயுதே’ மணம் புரிந்து ஐந்தாண்டுகள் ஆனால் என்ன நடக்கும்? 4. தம் அடித்தால் கெத்தாக இருக்கும்; ஆனால், ஜம்மென்று மலையேறுவது எல்லாம் நாக்கு தள்ளும். 5. 96 மாதிரி கல்லூரி மீள் சந்திப்பிற்கு வருவோருக்கு எல்லாம் ஒரே குறிக்கோள்: ‘நீ நல்ல, பெரிய ஆளாயிட்டியா? உன்ன விட எனக்கு சம்பளம் ஜாஸ்தியா?’ 6. அர்ஜுன் ரெட்டி, அனிமல், வரிசையில் படம் எடுத்தால் பெண்களும் ரசிப்பார்கள்
7. படமே ஒரு பெரிய குறியீடு:
அ) மணிகண்டன் – திராவிடக் கட்சிகள்
ஆ) கௌரி ப்ரியா – தமிழக மக்கள் / வாக்காளர்கள்
இ) சாஃப்ட்வேர் நிறுவனத்தில் அவளுடைய மேலாளராக (அல்லது டீம் லீடர்) – அண்ணாமலை
விஜய்காந்த்தை முதன் முதலில் பார்த்தது விவித் பாரதியில். இளையராஜா என்று நினைத்த ‘உள்ளம் எல்லாம் தள்ளாடுதே’ பாடலில். இப்பொழுது பார்த்தால் சலீல் சௌத்ரி!
அசல் ரஜினி இருக்கும்போது இன்னொரு புரட்சியாளரும் ஏழைப் பங்காளரும் எனக்கெதற்கு என்று அவரின் ‘நூறாவது நாள்’ கூட தள்ளிப் போட்டு வந்த எனக்கு, தீபாவளி வந்தது. கூடவே, ‘வைதேகி காத்திருந்தாள்’ படமும் வந்தது.
ராத்திரி ஆனால் பாட்டு பாடுவதை நிறுத்திவிட்டு ரேவதியை கல்யாணம் செய்வானா!? அதை விட்டுவிட்டு வெறுமனே ‘ராசாத்தி… ஒன்ன காணாத நெஞ்சு’னு எவராவது புலம்புவானா? கதாபாத்திரம் நம்பமுடியவில்லை. எனினும், தமிழ் சினிமா. திகிலடையவோ அதிர்ச்சியடையவோ ஏதாவது செய்வார்கள். பத்து வருடத்திற்கு மேல் குடித்தனம் நடத்தி குழந்தைகள் பெற்ற மனைவியை எரியூட்டி விட்டு வரும்போதே, ‘எந்த வீட்டில் எவ வயசுக்கு வந்திருக்கா?’ என்பதை நேரடியாகக் கேட்டும் பார்த்தும் வளர்ந்த எனக்கு இயக்குநர் ஆர். சுந்தர்ராஜனும் மோசமான படைப்பாளி பட்டியலில் இணைந்து கொண்டார்.
அதன் பின்பும் ‘ஒலியும் ஒளியும்’ பாடல்கள் மூலமே விஜய்காந்த் ஈர்த்தார்.
ராதா படங்களைத் தேடித் தேடி பார்த்தபோது, ‘அம்மன் கோவில் கிழக்காலே’ அகப்பட்டது. ’முத்துமணி மாலை… என்னத் தொட்டுத் தொட்டு தாலாட்ட..’விற்காக ”சின்ன கவுண்டர்” கண்ணில் விழுந்தது. அன்றைய (இன்றைக்கும் தான்) தேவதையான பானுப்ரியாவிற்காக ‘சத்ரியன்’ + ‘பரதன்’. இதில், ‘புன்னகையில் மின்சாரம்’ பாடலில் சுவர்களே தெரியாதவாறும் வெறும் வண்ணம் மட்டும் பின்னணியில் வருமாறு உழைத்ததாக சாந்தோம் மாணவர், அந்த நாள் நடன இயக்குநர் பிரபு தேவா சொல்ல, பாட்டின் சிறப்பு சற்றே புலப்பட்டது. ’சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு’ அர்த்தம் புரிந்ததா என்று பொறிப்புரை கொடுத்த விடலை பள்ளித் தோழர்களுக்காக ”பூந்தோட்ட காவல்காரன்”. ’மயங்கினேன்… சொல்லத் தயங்கினேன்!’ குறித்து தமிழ்த்திரை சுப்புடு சுரேஷ் கண்ணன் முதல் மரவண்டு வரை பலரும் மரத்தடி முதல் முகநூல் வரை எழுதி விட்டார்கள்.
விஜய்காந்த் நடித்த முதல் படம் – ‘ஊமை விழிகள்’. விஜய்காந்த் கொடுத்த முதல் ஏ+பி+சி செண்டர் ஹிட் படம் – ‘அம்மன் கோயில் கிழக்காலே’; அவரின் பிற படங்களில் இதே கதாபாத்திரத்தை ஷோபனா, ரேகா என வாந்தியெடுத்தார்,
பிற்காலத்தில், ‘வல்லரசு’, ‘சிம்மாசனம்’, ‘பேரரசு’, ‘தர்மபுரி’ போன்ற படங்கள் இவரை தெலுங்கு மண்ணில் கொடி கட்டி — தம்பி பாலகிருஷ்ணாவுக்கு டஃப் கொடுக்க வேண்டியவர் தமிழ் மண்ணில் பிறந்த நம்மை இன்னும் கொடுமை செய்கிறாரே என மிரள வைத்தது.
எனினும், இன்றும் என் மனதில் நிற்பது, “தமிழில் எனக்குப் பிடிக்காத வார்த்தை! மன்னிப்பு!!”.
விஜயகாந்த் உருவாக்கிய நம்பிக்கைகள் எனக்கு நிஜம். ’இளைய தளபதி” ஆக விஜய் போன்றோர் உருவாக துணை நின்றது நிஜம். சினிமா கல்லூரியில் படித்து விட்டு, வெளியே வந்த புதியவர்களுக்கு துணை நின்றது நிஜம். யேசுவோ, மாரியம்மனோ, ஓரங்க நாடகத்தை ஒளியோவியராக்கிய விசுவோ எவருக்கும் கரிசனம் பார்க்காமல் நடித்து குவித்தது நிஜம். நடிகர் சங்கமோ, கேப்டன் தொலைக்காட்சியோ, சொந்த கட்சியோ நடத்தி, ஜெயித்தது நிஜம். (இது டி ஆர். ராஜேந்தர், பாக்யராஜ் போன்ற ஆளுமைகள் வழுக்கிய இடம்). அவருக்கு என் நெஞ்சில் ஒரு பெக் அடிக்க நினைக்கும் போது, ‘ஒரு மூணு முடிச்சால முட்டாளா போனேன்… கேளு! கேளு!! தம்பீ!!!’ நினைவிற்கு வருவதோ, ’சாமிகளே… சாமிகளே… சொந்தக் கதக் கேளுங்க!!’ என தன் பாட்டுக்கு பாடும்போது என்னுள் ஒளிந்திருக்கும் அந்தக் கருப்புத் தங்கம் வெளிவருவதும் நிஜம்.
* Accept that some days you’re the pigeon, and some days you’re the statue.
* Solitude is independence
* Call no man happy until he is dead - Oedipus
* It is what you read when you don't have to that determines what you will be when you can't help it. - Oscar Wilde
* The difference between literature and journalism is that journalism is unreadable and literature is not read. - Oscar Wilde