Monthly Archives: பிப்ரவரி 2013

மக்கள் தொடர்பில்லாத தனிமை – மூழ்குதலும் மகிழ்தலும்

டொரொண்டோ / நியூ ஜெர்சி இளையராஜா கச்சேரி முதல் சென்னை கிரிக்கெட் மேட்ச் வரை எதை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். வீட்டில் ஹாயாக இருந்து கொண்டு டிவியில், பல பரிமாணத்தில், கையில் நமக்குப் பிடித்தமான பியருடன், பழக்கமான சோபாவில் சாய்ந்து கொண்டு பார்ப்பது பிடிக்குமா? அல்லது, கூட்டத்தில் முண்டியடித்து, வெப்பமோ, பனியோ பொறுத்துக் கொண்டு ரசிப்பது உங்களுக்கு பிடிக்குமா?

இரண்டாவதுதான் பிடித்திருக்கிறது என்கிறார் யாஹு.காம் தலைவர்.

வீட்டில் இருந்து வேலை பார்க்கக் கூடாது. நான் சொல்லவில்லை. எனக்கு வீட்டில் இருந்து அலுவல் பார்ப்பது பிடிக்கும். கவனச் சிதறல் எல்லாம் இருக்காது. சொல்லப் போனால், அலுவலகம் செல்லாத அன்றுதான் சோறு / தண்ணி மறந்து வேலையில் மூழ்கி இருப்பேன்.

எங்கிருந்தாலும் வேலை என்பதற்கு தடா போட்டவர் யாஹூவின் மெரிஸா மேயர்.

இதற்கு மூன்று காரணங்களை சொல்கிறார்கள். அவர் கூகிள் நிறுவனத்தில் இருந்து மாற்றலாகி யாஹுவிற்கு வந்தவர். கூகிள், மைக்ரோசாஃப்ட், ஆப்பிள், ஃபேஸ்புக் போன்ற கணினி கலாச்சாரத்தில் எப்பொழுதுமே அதிக உழைப்பிற்கு மதிப்பு. எந்நேரமும் ஆபீஸ், எப்பொழுதும் கம்ப்யூட்டர் என்றிருப்பதே கணிப்பொறியாளரின் லட்சணம்.

கூகிள்.காம் ஆரம்பித்தபோது, அங்கிருந்த லாண்டிரி, 24 மணி நேர சாப்பாடு கடை, உறங்குவதற்கான உயர்தர படுக்கைகள் போன்றவை சிலாகித்து கொண்டாடப்பட்டன. அலுவலிலேயே குளித்து, அங்கேயே பல் தேய்த்து, தோய்த்து வாழ்வதை நடைமுறையாக்க கூகுள் நிறையவே சிரமப்பட்டது.

மேற்சொன்ன கூகுல் கலாச்சாரத்திற்கு நேர் எதிராக இரண்டாவது காரணம். மெரிசா மேயர் உங்களுக்கான சொந்த வாழ்க்கையை விரும்புகிறார். வீட்டில் இருந்து வேலை பார்த்தால் சதா சர்வகாலமும் வேலை இடையூறு செய்து கொண்டே இருக்கும். ஆனால், அலுவல் சென்றால் மட்டுமே அலுவல்; வீட்டில் இருக்கும் நேரம் சொந்த விஷயம் என்று வகுத்துக் கொண்டால், நிம்மதி கலந்த உற்சாகம் பிறக்கும்.

கடைசி காரணம் இந்தியா அவுட்சோர்சிங். நீங்கள் அலுவலுக்கு சென்று நேரிடையாக முகத்தைக் காண்பிக்காவிட்டால், எதற்காக அமெரிக்கர்களை வேலைக்கு வைக்க வேண்டும்? எல்லோரையும் பிலிப்பைன்ஸ், கென்யா என்று சல்லிசான தொழிலாளர் கிடைக்கும் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து விடலாம். பணிமனைக்கான கட்டிட செலவும் பராமரிப்பு பட்ஜெட்டும் மின்சாரமும் கிடையாது. எல்லோரும் வீடியோ கான்ஃபெரன்சிங் மூலமாக பேசிக் கொண்டே வேலையை நடத்தி முடிக்கலாமே… எனவே, ஒழுங்கா வந்து சேருங்க என்கிறார் யாஹுவின் மெரிசா மெயர்.

உங்களுக்கு கல்லூரிக்கு சென்று வகுப்பில் அமர்ந்து வாசிக்க விருப்பமா? அல்லது ஆன்லைன் பல்கலைக்கழகங்களில் விழியம் பார்த்து டிகிரி வாங்க விருப்பமா?

Oscars: Academy awards 2013

“‘Zero Dark Thirty’ is an example of a woman’s innate ability to never let anything go.”

இந்த வருட ஆஸ்கார் விருதுகளில் எந்த ஆச்சரியமும் இல்லை. ‘அய்யோ பாவம்’ அனுதாப அலையில் பென் அஃப்லெக்கின் ’ஆர்கோ’ வென்றது. ஜாம்பவான்கள் நிறைந்த துணை நடிகர் பகுதியில் ’ஜாங்கோ அன்செயிண்ட்’ கிறிஸ் வால்ஸ் வென்றார். ‘தி ஹங்கர் கேம்ஸ்’ ஓடுவதற்காக ஜெனிஃபர் லாரென்ஸ்; கதாபாத்திரமாகவே வாழ்வதற்காக டேனியல் டே லூயிஸ்…

இயக்குநரில் மீண்டும் யார் வெல்வார் என்பதில் ’லைஃப் ஆஃப் பை’ ஆங் லீ வென்றது மட்டும் விதிவிலக்கு.

‘நான் முடி வெட்டிக் கொண்டேனாக்கும்’; ‘நான் இருபது கிலோ எடையை குறைத்தேனாக்கும்’; ‘நான் சரிகமபதநிச பாடக் கற்றுக் கொண்டேனாக்கும்’; ‘நான் அழகை கம்மியாக்கி உங்களுக்காக வாழ்ந்தேனாக்கும்’ என்று IIPM அரிந்தம் சவித்ரி போல் சந்தைப்படுத்தியே வென்ற ஆன் ஹாத்வே ஆட்டத்தில் சேர்த்தியில்லை.

விருது வென்றவர்களில் அதிர்ச்சி கலந்த ஆச்சரியம் இருக்காது என்பதால், விழாவைத் தொகுத்தவரை அதிர்ச்சிகள் தர வைத்தார்கள்.

முன்னாள் தொகுப்பாளர்களான ஸ்டீவ் மார்ட்டின் போன்றோர் படு சைவம். தாத்தா/பாட்டியினரை ஆஸ்கார் பார்க்க வரவழைப்பார். ஆனால், பழங்கால தலைமுறையினரால் எதையுமே வாங்க வக்கில்லை. அவர்கள் வேஸ்ட்.

நடுவாந்தரமாக பில்லி கிறிஸ்டலும் ஜான் ஸ்டூவர்ட்டும் தொகுத்து வழங்கலாம். அந்தத் தலைமுறையினர் ஸாம்சங் கேலக்சி எஸ்4 எல்லாம் வாங்குவதில்லை.

குழந்தைகளுக்கான ‘ஹாப்’, ’ஆல்வின் அண்ட் தி சிப்மன்க்ஸ்’ போன்ற படங்களிலும் டிஸ்னியின் இனிப்பான சினிமாக்களிலும் அணிலும் கரடியும் மழலை பேசும். அதே போன்ற பொம்மைக் கரடியை டோப் அடிக்க வைத்தால் எப்படி இருக்கும்? பெரியவர்களின் வசை மொழியும் அலுப்பும் நிறைந்த வாழ்க்கையை சிறுபிள்ளைத்தனமாகவே இருக்கும் பொம்மைக் கரடிக்கு கொடுத்தால் எப்படி இருக்கும்? அதுதான் Ted.

அந்த ‘டெட்’ படத்தை இயக்கி, கரடி பொம்மைக்கு குரல் கொடுத்தவர்தான் இந்த வருட அகாதெமி விருது தொகுப்பாளர்.

பெண்களைக் கிண்டலடிப்பதும், விடலைத்தனமாக ஜொள்ளு விடுவதும், பேசப்பெறாத விவகாரங்களை முகத்திலறைவதும் திரைப்படத்திற்கு பொருந்தும்; ஸ்டாண்ட அப் காமெடியில் பொருந்தும். சுய எள்ளலும் புனிதங்களே அற்ற தன்மையும் பதின்ம வயதினருக்கு எப்பொழுதும் பொருந்தும். எனவே, யூத்திற்கு சேத் மெக்ஃபார்லேன் நகைச்சுவை பிடித்திருக்கும்.

பரிந்துரைப் பட்டியலில் இடம்பிடித்திருந்த பாம்பே ஜெயஸ்ரீ பாடாததை விட இது ஒன்றும் பெரிய குறை அல்ல.

Spread Your Wings and Fly

13 வயது மகள் கறபனை கலந்து எழுதியது

It was a hot, summer afternoon. The house was at pin-drop silence except for my birds chirping. It was never like this when my mom was home because she kept on telling me chores to do. Right now, my mom was at Market Basket. I was as bored as ever just thinking about what to do. I started to poke my finger in my birds’ cage. What I didn’t know was that my birds would do anything to escape their cage and fly out.

I continued poking my finger in and out of the birds’ cage. I realized that the birds were getting excited and they started to pace back and forth in their cage. I thought they enjoyed playing with me, but I was wrong. I started to fidget with the birds’ cage when something unexpected happened. Boom! The cage fell to the ground and my birds escaped. They flew off in all different directions. I tried to run after them, but it was no use. They made acute turns and had efficient hiding spots. I had a real dilemma because I let the birds escape and my mom would be home at any minute. I was scared for sure now.

My fingers started to tremble. I didn’t know what to do. I felt as nervous as a cat in a room full of dogs. Ding dong! Oh no! I thought. My mom was home. I opened the door and let her in. I didn’t know how to tell her. “Uh…mom? I accidentally let the birds escape.”

“You what?” she replied completely shocked.

I told her everything that happened. She barged upstairs and got the birds. Wow! I thought. She’s really good at catching birds. After a moment, I realized that I owed my mom an apology. I told her that I was really sorry and that I would never do that again. I realized that sometimes parents are right and you should listen to them.

2 நாள் அகில இந்திய வேலைநிறுத்தம்: பாரத் பந்த்: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

ஸ்திரமான பென்சன் + ஜாலியான சீட் தேய்ப்பு உத்தியோகம் + வேளா வேலைக்கு கை நிறைய சம்பளம் என்று இருந்தாலும் ஒழுங்காக உழைக்கும் கால் செண்டர்காரர் மேல் பொறாமை + பிசினெஸ் துவங்க இயலாத கையாலாகாத்தனம் + பங்குச்சந்தை விளையாடத் தெரியாத பயம் எல்லாம் இன்னொரு ஸ்டிரைக்கிற்கு கால்கோள் இட்டிருக்கிறது.

இரண்டு நாள் விடுமுறை… அப்படியே வாரயிறுதி! இந்தியா ஒரு கொண்டாட்டம்.

முன்பு எழுதிய பதிவுகளில் இருந்து:

1. நியு யார்க் நகரில்: கார் கண்ணாடி மீது ஓங்கித் தட்டுகிறார்களே, என்று அகஸ்மாத்தாக் கவிழ்ந்த தலை கலவரத்துடன் தூக்கினால், மிக மோசமாக பிறப்பை குறித்துத் திட்டப்படுவீர்கள். ‘உன்னால் என்னை வசை பாடத்தானே முடியும்!‘ என்று அலட்சிய புன்னகை தவழ்ந்த மேலாளர் ஒருவரின் ஹ்யுண்டாய், ‘7-ஜி ரெயின்போ காலனி‘யில் கிழிப்பாரே… அந்த மாதிரி கூரிய கத்தியால் உரசப்பட்டது. யூனியனின் சக்தியை நம்பும் போலிஸ் காரர்களும், உள்ளே இருக்கும் நபரை கிழிக்காதவரை, ‘உனக்கு வேணும்டா‘ என்று பரபிரும்மமாக இருப்பார்.

மேலும்


2. ஃப்ரான்ஸ் அமெரிக்க ஸ்டைல் பொருள்முதல்வாதத்தை முன்னிறுத்துவதில்லை. தொழிலாளர்களுக்கு ‘உறுதியான நிலையான நீடித்த வேலை’ என்று நிறுவனங்களை அச்சுறுத்துவதால், புதியவர்களை வேலைக்கு சேர்த்துக் கொள்ள மேலாளர்கள் தயங்குகிறார்கள்.
தேவையான போது தொழிலாளர்களைக் கூட்டவும், குறைக்கவும் அமெரிக்காவில் இருக்கும் சட்டங்கள் எளிதாக உள்ளன. ஆனால், ·ப்ரான்ஸ் போன்ற ஐரோப்பிய நாடுகளில், இந்த வசதி இல்லாததால், நிறுவனங்களுக்கு கடும் மனத்தடை ஏற்படுகின்றன. பொருளாதாரம் வீழ்ந்தாலும் தொழிலாளர்களை நீக்க முடியாத நிலை. நீக்கினால், நஷ்ட ஈடாக பெரும்பணம் கொடுத்தனுப்பவேண்டிய மொகஞ்சதாரோ காலத்து சட்டதிட்டங்கள்.

மேலும்


3. காலை ஆறு மணிக்கு வந்துவிட வேண்டும். மாலை இரண்டே முக்கால் வரை அங்கேயேதான் இருக்க வேண்டும். மதிய உணவிற்கு 45 நிமிட இடைவேளை மட்டும் உண்டு. மற்றபடி மூச்சா போவதென்றால் கூட மேலாளரின் கடைக்கண் பார்வை வேண்டும்.

இப்படி அனுதினமும் கர்ம சிரத்தையாக என்ன வேலை செய்கிறார்கள்?

ஒன்றும் கிடையாது. கொஞ்சம் சீட்டு; அவ்வப்போது திரைப்படம்; நிறைய அரட்டை.

நான் கணினியில் நிரலி எழுதுபவர்களை சொல்லவில்லை. அமெரிக்க ஆட்டோ தொழிற்சாலையில் வேலை செய்த 15,000 முன்னாள் உழைப்பாளிகளை சொல்கிறேன்.

இப்படி சும்மா கிடப்பதற்கு எவ்வளவு சம்பளம்?

அதிகமில்லை. ஆண்டுதோறும் அமெரிக்க டாலரில் 100,000தான் கிடைக்கிறது.

மேலும்

விரைவு நகரம்: அவசர உணவும் தனிமை வாழ்க்கையும்

மலிவு விலை சிற்றுண்டி கடைகள் சிலப்பதிகார காலத்திலேயே கோலோச்சியதை சாலமன் பாப்பையா முதல் சாரு நிவேதிதா வரை பதவுரை கொடுப்பார்கள். மாநகராட்சி சார்பில் ஒரு ரூபாய்க்கு ஒரு இட்லி வழங்கும் சாப்பாட்டு கடைகளை ஜெயலலிதா இன்று திறந்திருக்கிறார்.

அமெரிக்காவில் ஃபாஸ்ட் ஃபுட் மிகவும் பிரபலம் ஏன்?

* தினக்கூலிக்கு ஓடும் மக்கள் அவசர அவசரமாக வேலைக்கு ஓடுவார்கள். ஒரு நிமிடம் தாமதமாக வந்தால் கூட சம்பளப் பிடிப்பு நிறைந்த வாழ்க்கை. அவதி அவதியென ஏதாவது உண்டு கொண்டே உழைப்பதற்கு ஏற்ற உணவு

* அன்றாடங்காய்ச்சி வீட்டில் அரிசி ஸ்டாக் இருக்காது. காய்கறி, பருப்பு எல்லாம் தினந்தோறும் வாங்கி அறுசுவையாக சமைக்க முடியாது. எனவே, சம்பளம் வந்தால் சோறு

* உடைந்த குடும்பங்கள் நிறைந்த அமெரிக்காவில், இல்லத்தரசி இல்லாத சூழலில், மெக்டொனால்ட்சும் சிபோட்லேவும் சுடச்சுட பரிமாறும்.

* சுவையை விட வயிறு ரொம்புதல் முக்கியம். கொஞ்சமாய் சாப்பிட்டாலும், அடுத்த வேளை வரை பசி எடுக்கக் கூடாது. நடு நடுவே நொறுக்குத் தீனிக்கு எல்லாம் பிரேக் கிடைக்காது. ஃபிரென்சு ஃப்ரைசும் கோழிக்காலும் கொழுப்பு நிறைந்த திருப்தி தரும்.

இந்தியாவில் கே.எஃப்.சி. என்பது நண்பர்கள் கூடும் தலமாகவும், சப்வே என்பது பத்தியக் கட்டுப்பாட்டுக்காரர்களின் விருப்ப உணவகமாகவும் இருப்பதுதான் பாரதீய கலாச்சாரமோ?

போரும் அரசியலும்: ரத்தசரித்திரம்

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மகன் பாலச்சந்திரன் கொல்லப்பட்டிருக்கிறார். உலக வர்த்தக மையத்தை இடித்த தாலிபான் உடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்துகிறது. அப்படியே, சும்மா கொஞ்சம் மகாபாரத புராணக் கதை.

துரோணருக்கு முன்பு பாண்டவர்களுக்கு ஆசிரியராக, குருவாக இருந்தவர் கிருபர். கிருபருடைய சகோதரி கிருபியை, துரோணருக்கு மணம் செய்வித்தார்.

கிருபர், கௌரவர்களின் நன்மதிப்பைப் பெற்றார். துரியோதனனிடம் நன்றியுடன் வாழ்ந்து வந்த அவர், மகாபாரதப் போரில் கௌரவப் படையின் 11 படைத்தலைவர்களுள் ஒருவராகவும் இருந்தார். அர்ஜுனன் மகன் அபிமன்யுவை தீர்த்துக் கட்டியவர்களில் முக்கியாமானவர்.

கிருஷ்ணரின் சதியால் அசுவத்தாமாவை படைத் தளபதியாக நியமிக்கவே இல்லை. மகாபாரதப் போரின் இறுதியில் எஞ்சிய கௌரவர்களுள் கிருபர், கிருதவர்மன், அஸ்வத்தாமா ஆகிய மூவரே. மூவரும் பாண்டவர்கள் அடைந்த வெற்றிக்குப் பிறகு, துரியோதனனின் வீழ்ச்சியால் மனம் கொதித்திருந்தார்கள். அஸ்வத்தாமா, பாண்டவர்களை வேரோடு அழிக்க நினைத்தான்.

கிருபர், அவனுக்குப் பல அறிவுரைகளைக் கூறினார். கிருஷ்ணரின் சகாவான கிருதவர்மா என்ற யாதவ குல மன்னரும் அவ்வாறே கூறினார். ஆனால் கிருபரின் யோசனையை அஸ்வத்தாமா ஏற்கவில்லை. அஸ்வத்தாமா கிருபரின் உடன் பிறந்த கிருபியின் மகன். துரோணருக்கு முன்பே அஸ்வத்தாமன் கருத்தரிப்பு நடந்துவிட்டது.

அஸ்வத்தாமா இரவோடு இரவாக பாண்டவர்களின் பாசறை நோக்கிச் சென்ற போது, கிருபரும், கிருதவர்மனும் உடன் சென்றார்கள். அஸ்வத்தாமா பாசறைக்கு உள்ளே சென்றபோது, கிருபர், கிருதவர்மன் இருவரும் பாசறையின் முன்வாசலில் ஒருவரும், பின்வாசலில் ஒருவருமாக காவலுக்கு நின்றார்கள். பாஞ்சாலியின் புதல்வர்களையும் திருஷ்டத்யும்னனையும் கொன்ற பிறகு, மூவரும் துரியோதனனின் இருப்பிடத்துக்குச் சென்று இந்தச் செய்தியைக் கூறிய பின்பே துரியோதனனின் உயிர் பிரிந்தது.

கிருபர் ஹஸ்தினாபுரத்தில் அனைவராலும் போற்றத்தக்கவராக வாழ்ந்தார். அபிமன்யுவின் புத்திரன் பரிக்ஷித்து இளவரசனுக்கு கிருபரே, ஆசாரியராக இருந்து அஸ்திர வித்தைகளைக் கற்றுத்தந்தார்.

Harvard Education vs Pondycherry Congress: Politicians Cheat

பல ஜனாதிபதிகளையும் செனேட்டர்களையும் ஹார்வார்ட் பல்கலைக்கழகம் உருவாக்குகிறது. டெல்லி ஜே.என்.யூ.வில் படித்தால் இந்தி(ரா)யா கம்யூனிஸ்ட் காங்கிரசில் தஞ்சமடையலாம் என்பார்கள்; ஹார்வார்டில் படித்தால் அமெரிக்க காங்கிரஸில் நுழையலாம்.

அவ்வளவு புகழ்பெற்ற ஹார்வார்டு ‘காங்கிரஸ் 101’க்கு இறுதி பரீட்சை எழுதிய எழுபது மாணவர்களை இடைநீக்கம் செய்திருக்கிறது. அரசாங்கம் குறித்தும் சட்டசபை குறித்தும் அறிமுகம் செய்யும் வகுப்பில் காப்பியடித்த குற்றத்திற்காக அவர்களை சஸ்பெண்ட் செய்துள்ளது.

பாண்டிச்சேரி போல் புத்தகம் பார்க்காமல் எழுதும் தேர்வு அல்ல. வீட்டிற்கே கேள்வித்தாளைக் கொடுத்தனுப்பி விட்டார்கள். இணையத்தைப் பார்த்து எழுதலாம். புத்தகத்தைத் திறந்து வைத்து விடை அளிக்கலாம். நண்பர்களிடம் கலந்தாலோசித்து, சொந்த நடையில் பதில் போடலாம். ஆனால், ஒரே விடைத்தாளை அனைத்து மாணவர்களும் காப்பி பேஸ்ட் செய்ததால் மாட்டிக் கொண்டார்கள்.

புதுச்சேரி அமைச்சர் கல்யாணசுந்தரம் போல் நமது ஊர் காங்கிரஸ்காரர்கள் நிலைமை இன்னும் மோசம். பொதுத் தேர்வு மோசடிக்கு எவ்வளவு முஸ்தீபுகள் தேவையாக இருக்கிறது? பிட் வேண்டும்; ஆள் மாற்றாட்டத்திற்கு சூட்டிகையானவர் வேண்டும்; பள்ளி ஆசிரியர் முதல் பியூன் வரை கவனிக்க வேண்டும்.

என்னவாக இருந்தாலும் அமெரிக்க ஐவி லீக் பல்கலை படிப்பு போல் ஆகாது!

இளையராஜா கச்சேரிகள்: விடாயாற்றி உற்சவம்

இளையராஜாவை இரண்டு மூன்று தடவை பார்த்திருப்பேன். கங்கை அமரன் போல் எல்லா வருடமும் ராஜா வந்ததில்லை.

கபாலீஸ்வரர் கோவில் கச்சேரிகள் மூன்று வகைப்பட்டவை. ஐந்து மணிக்கு சொற்பொழிவு + உபன்யாசம். கிருபானந்த வாரியார்கள், கீரன், திருத்தணி சுவாமிநாதன் என்று பெரியோர் பாடலுடன் உரை கொடுப்பார்கள். ஏழு மணிக்கு மெல்லிசை + பக்தி பாடல்கள். ஐயப்பன் வீரமணி, சூலமங்கலம் சகோதரிகள் போன்றோர் குரல் கொடுப்பார்கள். அதன் பிறகு இரவுக் காட்சிதான் நான் பார்த்தது.

எம்.எஸ். விஸ்வநாதனும் உண்டு. எட்டு மணி கச்சேரியை அவர் கறாராக ஒன்பது மணிக்கெல்லாம் தொடங்கிவிடுவார். பாவலர் பிரதர்ஸுக்கு கெத்து ரொம்ப ஜாஸ்தி. நிகழ்ச்சியைத் துவங்குவதற்கு பத்து மணி கூட ஆகிவிடும். பின்னிரவு ஒரு மணி வரை பேச்சும் அரட்டையும் நக்கலும் கலந்து பாடல் மிக்ஸ்களும் வந்து கொண்டேயிருக்கும்.

விநாயகர் மட்டும்தான் கச்சேரி கேட்பது போல் சன்னிதியை திறந்து வைத்திருப்பார். மற்ற தெய்வங்கள் எல்லாம் நகை நட்டுடன் பத்திரமாக உறங்க சென்றுவிடும்.

ஆர்க்கெஸ்ட்ரா எல்லாம் பிரும்மாண்டமாக இருந்ததில்லை. அந்தப் பக்கம் எட்டடி; இந்தப் பக்கம் பத்தடி என்று இருக்கும் குட்டி மேடைக்குள் கோரஸ், டிரம்ஸ், ஹம்மிங்ஸ் எல்லாம் அடைக்கணும். ஒவ்வொரு வருடமும் சுவாரசியமாக செய்வார்கள். கிளாசிக்ஸ் முதற்கொண்டு அப்பொழுது வந்த புதுப்பாடல் வரை எல்லாமும் கொடுப்பார்கள்.

கோவில் என்பதற்காக சமரசம் செய்து கொள்ளாமல், ‘வாடீ என் கப்பங்கிழங்கே’ என்று கூத்துப்பாடலும் வாழ்வே மாயத்தின் ‘தேவி’ கிண்டல்களும் கிட்டத்தட்ட கற்பகாம்பாள்களைக் குறி வைத்தே அரங்கேறும்.

ஆனால், அந்தக் காலத்தில் இவ்வளவு கற்பழிப்புகள் ஊடகங்களில் பாடல் பெறவில்லை. தனிமனித அக்னிப் பரீட்சையாகவே முடங்கிவிட்டது.

மனைவியை மயக்குவது எப்படி?

ஆண்களுக்கு அழகே வீட்டைக் கலைத்துப் போட்டு வைத்திருப்பதுதான். அவர்களால் தங்கள் இல்லங்களை அருங்காட்சியகம் போல் கலை மிளிர, சமையலறையில் சுத்தம் சோறு போட வைக்க முடியும். பூந்தோட்டம் அமைத்து, வைத்தது வைக்கப் பட வேண்டிய இடங்களில் பொருந்தி வைக்க முடியும்.

ஆனால், இல்லத்தரசிகளுக்கு பொறுப்புணர்வு கூடிய கர்வம் தர விரும்பும் ஒவ்வொரு குடும்பத் தலைவனும், ‘நீ மட்டும் இல்லேன்னா… நான் அதோகதி’ என்று சொல்லி ஏமாற்றி, வெற்றி காண்பான்.

அப்படி ஒரு ‘மௌன ராக’ தருணத்தை மெரினோ லாமினேட்ஸ் விளம்பரம் ஆக்கியிருக்கிறது:

அம்மா கோந்து கணவன், பொறுப்பான புருஷலட்சணமிக்க பராமரிப்பாளனாக மாறுவதை சுட்டுகிறார்கள். இளைய வயதினர் அவசரம் அவசரமாக முடிவெடுப்பதை சுட்டுகிறார்கள். சென்ற தலைமுறையினர் நாலு சுவருக்குள் புனருத்தாரணம் செய்யாத வீட்டிற்குள் குடித்தனம் செய்த காலம் இறந்து போனதை சுட்டுகிறார்கள்.

இப்படி சட் சட்டென்று டைவோர்ஸ் முடிவுகளையும், கண்ணாலம் கட்டிக்கிறியா உறுதிமொழியும் மாற்றி மாற்றி முடிவெடுக்கும் மின்னல் யுகத்தில் இருக்கிறோம்.

Vanji Kottai Vaaliban and Braveheart: Historical Fiction in Movies

ராகா.காம் செய்யும் மிக உத்தமமான காரியம் என்பது நான்-ஸ்டாப் கன்னலில் பாடல்களை தொடர் ஒலிபரப்பாக கோர்ப்பதுதான். ஒரு நாள் சந்திரபாபு, இன்னொரு நாள் இசையமைப்பாளர் வேதா, என்னும் வரிசையில் இன்று கிளாசிக்ஸ் ஓடிக் கொண்டிருந்தது.

அப்பொழுது வஞ்சிக் கோட்டை வாலிபன் படத்தில் கொத்தமங்கலம் சுப்பு எழுதி சீர்காழி கோவிந்தராஜன் பாடிய ‘வெற்றிவேல்… வீரவேல்’ கிடைத்தது.

பல நல்ல புறநானூறு பாடல்களையும் பரணி பாடிய வரலாற்றையும் எழரை நிமிடத்திற்கான நாடகக் காட்சியாக ஒருங்கிணைத்திருக்கிறார்கள். சட்டென்று ‘பிரேவ் ஹார்ட்’ திரைப்படத்தை நினைவிற்கு கொண்டு வந்தது.

ஸ்காட்லாந்து மக்கள் பிரிட்டிஷாருக்கு எதிராக ஏன் சண்டை போட்டார்கள்? போர்களுக்காக வில்லியம் வாலஸ் எவ்வாறு மக்களை சேர்த்தார்? Offence is the best defense என்பதை தற்கால விளையாட்டு பயிற்றுநர்களுக்கு, அக்கால வரலாறு கொண்டு விளக்கிய படம். மெல் கிப்சன் நடித்த ’பிரேவ்ஹார்ட்’டில் சிலந்தியைப் பார்த்து விடாமுயற்சியைக் கற்றுக் கொண்ட ராபர்ட் ப்ரூஸும் இருந்தார்.

இரண்டுமே பிரும்மாண்டமான போர்ப்படங்கள். வில்லன்களாக அரசர்களைக் கொண்டவை. காதல் நிறையவே உண்டு. இரண்டு நாயகிகள் கொண்ட கதை. வீரதீரம் நிறைந்த நாயகன். 1958ல் தமிழில் வெளியான ‘வ.கோ.வா.’ சூப்பர் ஹிட். ப்ரேவ்ஹார்ட்டும் நல்ல வசூல் கொடுத்தது.

மீண்டும் இந்த மாதிரி சரித்திரத்தையும் மசாலாவையும் தேசப்பற்றையும் சரியாக மிக்ஸ் செய்யும் மசாலாக்கள் எப்பொழுது வரும்?