Tag Archives: History

ஆத்தி… இது வாத்துக் கூட்டம்!

கோழி மிதித்து குஞ்சு சாகுமா?

சாகும்.

முந்தாநாள் பார்த்தபோது ஆறு வாத்துக்குட்டிகள் இருந்தன.
நேற்று ஐவரானது.
இன்று நால்வர் மட்டுமே காணக் கிடைத்தனர்.

சாட்ஜிபிடி இடம் ஏன் இப்படி என்று கேட்டால்,

  1. இங்கே நிறைய குள்ளநரிகளும் பெருச்சாளிகளும் பருந்துகளும் உண்டு. அவை வேட்டையாடுகின்றன
  2. குழந்தையாக இருப்பதால் நோய்க்கு எளிதில் உள்ளாகும். அந்த உடல்நல பாதிப்பால் இறக்கின்றன
  3. பாஸ்டன் பக்கம் திடீரென்று பூஜ்யம் டிகிரிக்குச் சென்று குளிரும். நாலு நாளாக நல்ல மழை. அந்த தட்பவெட்ப மாற்றங்களினால் மரணமடைகின்றன
  4. தந்தை வாத்திற்கு தன் குழந்தைதானா என்று சந்தேகம் வந்தால் குட்டிகளைக் கொன்றுவிடுகின்றன

அது சரி, சாட்ஜிபிடியிடம் ஆதித்த கரிகாலன் எப்படி இறந்தார் என கேட்டால் அது மணி ரத்தினத்தை உதிர்க்கிறது.

பாஸ்டன்: பெயர்க் காரணம்

நான் இருக்கும் ஊரின் பெயர் பாஸ்டன். இங்கிலாந்தில் இருந்து இந்தப் பெயர் வந்திருக்கிறது.

அமெரிக்காவில் பரங்கியர்கள் எங்கெல்லாம் குடியேறினார்களோ, அந்த இடத்திற்கெல்லாம், தங்களின் சொந்த ஊரின் பெயரையே நாமகரணமிட்டார்கள். இங்கிலாந்தில் உள்ள லண்டன், யார்க், க்ளூஸ்டர், வூர்ஸ்டர் போல், இந்தப் பகுதியிலும் நியு லண்டன், நியு யார்க் என குக்கிராமங்களை அழைத்துக் கொண்டார்கள். இவற்றில் சில ஊர்கள் மூலகர்த்தாவை விட அதிகப் பெயரும் புகழும் பெற்றது. லண்டனில் இருந்து இரண்டரை மணி நேரம் வடக்கில் இருக்கும் அசலை விட அதிகம் பேர் புழங்கும் இடமாக பாஸ்டன் ஆகி இருக்கிறது.

அந்த அசல் பாஸ்டன் பெயர் எப்படி வந்தது?

செயிண்ட் போடாஃல்ப் நகரம் என்பதுதான் மருவி பாஸ்டன் ஆகி இருக்கிறது. பால்டாஃப் டவுன் (அ) பால்டாஃப் ஸ்டோன் என்பது நாக்கை சுளுக்கெடுக்க, பால் ஸ்டோன் என சுருண்டு, அதுவே… நாளடைவில் பாஸ்தன் என பெயர் பெற்றது.

“ஒரு கல்; ஒரு கண்ணாடி” என்னும் பிரயோகம் கூட இந்த நகரத்தில் இருந்து வந்திருக்கிறது. ஏழாம் நூற்றாண்டில் துறவி பால்டாஃப் வைத்தது ஒரு கல். அதைச் சுற்றி வசித்தவர்களால் பாஸ்டன் நகரம் உருவானது. நடுநடுவே போர்ச்சுகீசியர்கள் குடிபுகுந்தார்கள். அப்படி வந்தேறியவர்களை 21ஆம் நூற்றாண்டில் கால்பந்தில் இங்கிலாந்து தோற்றவுடன் பால்டாஃப் stone (கல்) கொண்டு மண்ணின் மைந்தர்கள் விரட்டினார்கள்.

அமெரிக்காவின் பாஸ்டனில் இருந்த ஆதிகுடி என்ன பெயர் கொண்டு அழைத்தது என்பதை ஆராய்ச்சியாளர்கள் இன்னும் கண்டுபிடிக்கவில்லை.

Changing the World: One Picture at a Time

பிரபாகரன் பையன் படம் வெளியான பிறகுதான் தமிழ் போராட்டங்களுக்கு எழுச்சி கிடைத்தது என்கிறார்கள். அந்த மாதிரி அந்தக் காலத்தில் எந்த நிழற்படம் அறியாமை நிறைந்தவர்களின் உணர்ச்சியை தட்டி எழுப்பியது என்று யோசித்தவுடன் இந்தப் புகைப்படம் நினைவிற்கு வந்தது

அறுவடை பொய்த்துவிட்டது. விவசாயத்தை நம்புவது ஆபத்தானது. தொழில் நுட்பமும் போர்களும் மட்டுமே நிலைத்து நீடிக்கக் கூடிய சுபிட்சத்தைக் கொடுக்கும். இந்த இரண்டையும் இரு கண்களாக அமெரிக்கா வைத்துக்கொள்ள தொடக்கப்புள்ளி எப்பொழுதோ ஆரம்பித்திருக்கும். இரண்டாம் உலகப் போரில் இணைந்து கொள்ள பல காரணங்கள். இந்தப் படத்தை காட்டியும் உள்ளூரில் அனுதாபம் சேர்க்கலாம். பிரபாகரன் பையன் படத்தைக் காட்டி அனுதாப அலை அடிப்பது போல்…

ஒரு புகைப்படம் சரித்திரத்தின் பாதையை மாற்றியமைக்குமா?

டொரொதியா லாஞ்ச் அப்படித்தான் நினைத்திருக்கிறார். அமெரிக்காவில் வறுமையும் பசியும் பஞ்சமும் தாண்டவமாடிய 1930களின் முகங்களை படம் பிடித்தவர். தன்னுடைய ஃபோட்டோ ஸ்டூடியோவிற்கு எதிரே இருந்த தான சத்திரத்தின் முன் நின்ற யாசக வரிசையை படம் பிடிக்க ஆரம்பித்தார்.

migrant_motherபிச்சை எடுப்பதற்கு கூட்டமாக நிற்பவர்களைப் பார்த்தால், ‘இத்தனை பேர் கஷ்டத்தில் இருக்கிறார்களே!’ என்ற பரிதாப நினைப்பிற்கு பதில், ‘நிறைய பேர் வேலை செய்யாமல் சுணங்குகிறார்கள்!’ என்னும் அலட்சியப் போக்குதான் தலைதூக்குகிறது. இதைப் புரிந்து கொண்ட லாஞ்சே ஒவ்வொருவரின் முகத்தையும் அவர்களின் சுருக்கம் நிறைந்த கவலை பாவத்தையும் வெளிக்கொணர்ந்தார்.

உலகின் மிகப் பெரிய சக்தியாக ஜெர்மனி விளங்கிய காலம். மும்மாரி மழை பொய்த்த அமெரிக்காவிலோ ’Dust Bowl’ என்றழைக்கப்பட்ட வறட்சி காலம். ஹிட்லருக்கோ ஏற்றுமதியும் தொழில் நுட்பமும் பொங்குகிறது. ஃபிராங்க்ளின் ரூஸ்வெல்ட்டுக்கோ கருகிப் போன கதிர்களும் வீழ்ச்சியும் மட்டுமே காணக்கிடைக்கிறது.

இரண்டாம் உலகப் போரில் சேர்கிறார். குண்டு போடுகிறார். வீழ்ந்த தேசத்தின் புகைப்படம் கொண்டு அமெரிக்கா வீறு கொண்டு எழுகிறது.

வரலாற்றை மட்டும் புகைப்படம் மாற்றுவதில்லை. போர்களையும் மூட்டுகிறது.

Dorothea Lange – “The camera is an instrument that teaches people how to see without a camera.”

Vanji Kottai Vaaliban and Braveheart: Historical Fiction in Movies

ராகா.காம் செய்யும் மிக உத்தமமான காரியம் என்பது நான்-ஸ்டாப் கன்னலில் பாடல்களை தொடர் ஒலிபரப்பாக கோர்ப்பதுதான். ஒரு நாள் சந்திரபாபு, இன்னொரு நாள் இசையமைப்பாளர் வேதா, என்னும் வரிசையில் இன்று கிளாசிக்ஸ் ஓடிக் கொண்டிருந்தது.

அப்பொழுது வஞ்சிக் கோட்டை வாலிபன் படத்தில் கொத்தமங்கலம் சுப்பு எழுதி சீர்காழி கோவிந்தராஜன் பாடிய ‘வெற்றிவேல்… வீரவேல்’ கிடைத்தது.

பல நல்ல புறநானூறு பாடல்களையும் பரணி பாடிய வரலாற்றையும் எழரை நிமிடத்திற்கான நாடகக் காட்சியாக ஒருங்கிணைத்திருக்கிறார்கள். சட்டென்று ‘பிரேவ் ஹார்ட்’ திரைப்படத்தை நினைவிற்கு கொண்டு வந்தது.

ஸ்காட்லாந்து மக்கள் பிரிட்டிஷாருக்கு எதிராக ஏன் சண்டை போட்டார்கள்? போர்களுக்காக வில்லியம் வாலஸ் எவ்வாறு மக்களை சேர்த்தார்? Offence is the best defense என்பதை தற்கால விளையாட்டு பயிற்றுநர்களுக்கு, அக்கால வரலாறு கொண்டு விளக்கிய படம். மெல் கிப்சன் நடித்த ’பிரேவ்ஹார்ட்’டில் சிலந்தியைப் பார்த்து விடாமுயற்சியைக் கற்றுக் கொண்ட ராபர்ட் ப்ரூஸும் இருந்தார்.

இரண்டுமே பிரும்மாண்டமான போர்ப்படங்கள். வில்லன்களாக அரசர்களைக் கொண்டவை. காதல் நிறையவே உண்டு. இரண்டு நாயகிகள் கொண்ட கதை. வீரதீரம் நிறைந்த நாயகன். 1958ல் தமிழில் வெளியான ‘வ.கோ.வா.’ சூப்பர் ஹிட். ப்ரேவ்ஹார்ட்டும் நல்ல வசூல் கொடுத்தது.

மீண்டும் இந்த மாதிரி சரித்திரத்தையும் மசாலாவையும் தேசப்பற்றையும் சரியாக மிக்ஸ் செய்யும் மசாலாக்கள் எப்பொழுது வரும்?

லாரென்ஸ் கீயாட் (1939-2012)

Lawrence_Guyot_Civil_Rights_Activist_Leaders_Voting_Rights_Mississippi_MS_Citizens_USA_Obamaஇன்றைக்கு ஒபாமாவை நினைத்தால் நிறைவாக இருக்கிறது. நிற ஒற்றுமையை எண்ணி மகிழ இயலுகிறது. சமத்துவத்தை இயல்பாக கொண்டாட முடிகிறது.

ஐம்பதாண்டுகள் முன்பு வரை இந்த நிலையா? அமெரிக்காவில் கறுப்பு நிறத் தோல் கொண்டவர்களும் வெள்ளையர்களும் சரிசமமாக புழங்கினார்களா?

நாம் பிறப்பதற்கு முன் நமக்காக போராடினவர்களில் லாரன்ஸ் கீயாட் முக்கியமானவர். கடந்த வாரம் இயற்கை எய்தினார். நிற வெறி மிக மோசமாக இருந்த மிஸிசிப்பி மாநிலத்தில் சமூக நீதிக்காக கொடி உயர்த்தியவர். கருப்பர்களுக்கு வாக்குரிமை கிடைப்பதற்காக உழைத்தவர். தற்போது பராக் ஒபாமா தலைவராக இருக்கும் டெமொகிராடிக் கட்சியில் விளங்கிய இன வேறுபாடுகளை நீக்குவதற்காக முனைந்து செயல்பட்டவர்.

லாரன்சின் துணிச்சலுக்கும் கறுப்பின விடுதலைக்கான செயல்பாட்டுக்கும் பல நிகழ்வுகளையும் போராட்டங்களையும் உதாரணமாக சொல்லலாம். ஃபேனி லூ ஹேமரும் ஹேமரின் இரண்டு கூட்டாளிகளும் கைதானவுடன் நடந்த நிகழ்ச்சியை நியு யார்க் டைம்ஸ் ஆவணப்படுத்தி இருக்கிறது.

Lawrence_Young_Mississippi_MS_Deep_South_MLK_guyot

1963ஆம் ஆண்டின் ஜூன் மாதம். வெள்ளையர்களுக்கு ஒரு வாயில்; கறுப்பர்களுக்கு எந்த நுழைவாயிலும் இல்லை என்னும் நிலை. அமெரிக்காவின் தெற்கு மாநிலங்களில் மிகக் கடுமையான இனப் பாகுபாடு விளங்கிய காலகட்டம். மிசிசிப்பி பேருந்து நிலையத்தை வெள்ளைத் தோல் நிறத்தவர்கள் மட்டுமே பயன்படுத்தலாம். அப்போது ஹேமரும் அவரது நண்பர்களும் தடையை மீறி, பிரவேசம் செய்ய முயல்கிறார்கள். கைதாகிறார்கள்.

அவர்களை ஜாமீனில் எடுக்க கீயாட் செல்கிறார். ஹேமரும் அவர் கூட வந்தவர்களும் மோசமாக கையாளப் பட்டிருந்தார்கள். கைது செய்வதே சட்டமீறல் எனினும், குற்றஞ்சாட்டப்பட்டவர்களை நடத்திய விதம் கொடூரமாக இருந்ததைக் குறித்து தட்டிக் கேட்கிறார் கீயாட்.

‘நீ யாருடா சொல்ல வந்துட்டே’ என்னும் தொனியில் அபிமன்யு கீயாட்டை ஒன்பது காவலர்கள் சூழ்கிறார்கள். தங்கள் துப்பாக்கியை வைத்து அச்சுறுத்துகிறார்கள். கிடைத்த ஆயுதங்களைக் கொண்டு சராமாரியாகத் தாக்குகிறார்கள். துளி ஆடை கூட இல்லாமல் அம்மணமாக்கி அசிங்கப்படுத்தியதாகக் கொக்கரிகிறார்கள். அவரின் ஆண்குறியை நசுக்கி விட எத்தனிக்கிறார்கள்.

குற்றுயிரும் கொலையுயிருமாக கீயாட் இருப்பதைப் பார்த்து அஞ்சிய மருத்துவர்கள், சித்திரவதையை நிறுத்துமாறு இறைஞ்சினார்கள். சித்திரவதையைத் தொடர கீயாட்டையும் கைது செய்து ஜெயிலில் அடைக்கிறார்கள். காவலர்களின் உடல்வதை நீடிக்கிறது.

பெயில் எடுக்க வந்த கீயாட்டை முட்டிக்கு முட்டி தட்டுகிறார்கள். அப்படியானால் அவருக்கு யார் பிணை கொடுப்பார்கள்? எப்படி வெளியே வர முடியும்? எவ்வாறு ஹேமரும் கீயாட்டும் தங்கள் அனுபவங்களை பிறருக்கு சொல்ல முடியும்?

இந்த நிலையில் வேண்டுமென்றே ஜெயில் கதவை பூட்டாமல் திறந்து வைத்து, கூடவே கத்தியையும் போட்டு வைக்கிறார்கள். தூண்டிலில் மீன் மாட்டினால், குரல்வளையை அழுத்து துண்டம் போட்டு, உலகிற்கு தங்கள் பக்க கட்டுக்கதையை விற்று விடலாம். ஆனால், கீயாட் மாட்டவில்லை.

ஹோவெல் ரெயின்ஸ் எழுதிய My Soul Is Rested: The Story of the Civil Rights Movement in the Deep South (1977) புத்தகத்தில் இந்த கொடூரத்தை பகிர்ந்து இருக்கிறார் கீயாட்.

மிஸிஸிப்பியின் ஜாக்ஸன் நகரத்தில் கீயாட்டின் தோழரான மெட்கர் எவர்ஸ் கொலை செய்யப்படுகிறார். அதன் பின், கீயாட்டும் உடனடியாக மரணமடைந்தால், கலவரம் மூளும் என்று அஞ்சிய காவல்துறை கீயாட்டை விடுவித்தது.

அடுத்த வருடமே கீயாட் மீண்டும் சிறைக் கைதியாகிறார். காவல்துறையினர் கருப்பினருக்கு நிகழ்த்தும் அட்டூழியங்களை நடுவண் அரசான வாஷிங்டன் பார்வைக்கு கொண்டு செல்ல பதினேழு நாள் உண்ணாவிரத நோன்பு மேற்கொள்கிறார். ஐம்பது கிலோ எடை இழந்தாலும் உணர்வும் எழுச்சியும் உறுதியும் இழக்காமல், சக கறுப்பர்களையும் மீட்கிறார்.

”அடுத்தவர் உன் மீது ஆக்கிரமிப்பு செய்யலாம். ஆனால், நாம் அடங்கிப் போவது நம் கையில் இருக்கிறது” என்று அந்த சத்தியாகிரகத்தை நினைவு கூர்கிறார்.

1939ஆம் ஆண்டு ஜூலை பதினேழாம் தேதி மிஸிஸிப்பியில் பிறந்தார் கியாட். அவருடைய அப்பா கூலித் தொழிலாளியாக வேலை பார்த்தார். டூகலூ கல்லூரியில் இருந்து 1963ல் வேதியியலிலும் உயிரியலிலும் பட்டம் பெற்றார். அகிம்சாவழி மாணவர்களின் குழு சார்பாக பல்கலைக்கழகத்தில் படித்த காலத்திலேயே மிசிசிப்பி முழுக்க பயணம் மேற்கொண்டு சமூகநீதி பட்டறைகளை முனைப்போடு ஒருங்கிணத்தார்.

அமெரிக்க குடிமகன்கள் எல்லோரும் ஓட்டளிக்க வேண்டும் என்பதில் குறியாக இருந்தார். இனப்பிரிவிற்கு எதிராக போராடிய மார்ட்டின் லூதர் கிங் போன்றோர் எங்கும் எதிலும் வெள்ளையர்களுக்கு சமமான உரிமைக்காக குரலெழுப்பிய தருணங்களில், கீயாட் வாக்குப்பெட்டியை மட்டும் குறிவைத்து இயங்கினார். கருப்பர்கள் வாக்கு போட்டு தங்களுக்கு உவப்பானவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அதன் மூலம் அமெரிக்கா முழுக்க கருப்பின சமத்துவ உரிமையை அடையலாம் என்று நம்பினார். வெள்ளையரிடம் இருந்து இன உரிமை பெறுவதற்கு பதில், ஜனநாயகத்தின் பேரிலும் தேர்தல் வெற்றி மூலமாகவும் சட்டதிருத்தங்களையும் சமூக சீர்திருத்தங்களையும் அடையும் வழிக்காக விழிப்புணர்வை புகட்டினார்.

1971இல் சட்டப் படிப்பில் முதுகலை பட்டத்தை முடித்தார். அதன் பின் வாஷிங்டன் நகரத்தில் பணியாற்றினார்.

தற்பால்விரும்பிகளுக்கான போராட்டத்தை ஆதரிக்கும்போது அவர் சொன்ன மேற்கோள் நமக்கு நல்ல வழிகாட்டியாக இருக்கும்: “நமக்கு முக்கியம்னு படறதுக்காக உயிரைப் பணயம் வைத்து போராடறதுக்கு ஈடா இந்த உலகத்தில் எதுவுமே கிடையாது. லிங்கன் சொன்னது போல் சுடறவன் கிட்ட இருந்து தப்பிச்சுட்டு அவன் முன்னாடி சாதிக்கறது தனி சுகம்!”

அஞ்சலிகள்.

வாழ்க்கைக் குறிப்பு

108 Divya Desangal: R Ponnammal Books

The Hindu Book Intro

108 Divya Desangal - Tamil Books


Kumudham Jothidam

108 Thiviya Thesangal

அம்பேத்கார் கார்ட்டூன் – வரைபடங்களும் பாடப்புத்தகங்களும்

ஒரு கார்ட்டூன். மாணவர்களுக்கு அந்தக் கால சூழலை எளிதில் உணர்த்துவதற்காக பாடப்புத்தகத்தில் இருக்கிறது. அதற்கு எதிர்ப்பு.

புத்தகத்தை புரட்டியிருப்பார்களா என்பது சந்தேகம். அந்தப் பக்கத்தையாவது பார்த்திருப்பார்களா என்பது அதனினும் சந்தேகம். இவர்களுக்கு இடஞ்சுட்டிப் பொருள் விளக்கம் கற்றுக் கொடுக்கும் பொறுப்பு யாரைச் சேரும்?

இந்த மாதிரி கவன ஈர்ப்பு கட்சி எம்.எல்.ஏ., எம்பி.க்களுக்கு ஆழமாக ஆராய, முழுவதுமாக வாசித்து கருத்து சொல்ல எப்பொழுது நேரமும் பொறுமையும் தன்னடக்கமும் கிட்டும்?

சரித்திரத்தை சுவாரசியமாக்குவது பிடிக்கவில்லையா? சமகால சினிமா மூலமாக சிந்திக்க வைப்பதை விரும்பவில்லையா? வரலாற்று நூலை வாசித்து யோசிக்குமாறு அமைத்திருப்பது ரசிக்கவில்லையா?

செய்தி

The school textbook cartoon of BR Ambedkar which created a furore in parliament on Friday was sketched by cartoonist Keshav Shankar Pillai in the 1950s while the Constitution was being framed, said a human resource development ministry official.

The cartoon depicts Nehru as asking Ambedkar to speed up the work on the Constitution.

The issue was raised by Dalit activist Thol Thirumavalavan, the Lok Sabha MP who heads the Viduthalai Chiruthaigal Katchi of Tamil Nadu, where protests were staged over the row.

Shankar, as he was popularly called, later founded the publishing house, Children’s Book Trust, in 1957. He made cartoons for newspapers and his magazine, Shankar’s Weekly, started in 1948. The government of India honoured him with Padma Shri in 1956, Padma Bhushan in 1966 and Padma Vibhushan in 1976.

The controversial cartoon was probably first published in 1948 and has been a part of NCERT’s (National Council Of Educational Research And Training) Class XI textbook in Tamil Nadu since 2006. The cartoon is credited to Children’s Book Trust.

It shows Ambedkar, a Dalit leader and creator of the Indian Constitution, seated on a snail with ‘Constitution’ written on it and India’s first prime minister, Jawaharlal Nehru, whipping the snail. In the background is a crowd.

காந்தியும் பாரத மாதவும் – ஓம் – இந்துத்வா கோஷம்

இந்தக் கார்ட்டூன் அடுத்து கண்டனத்திற்கு உள்ளாகலாம்

Pictures like this reveal how Mahatma Gandhi was perceived by people and represented in popular prints Within the tree of nationalism, Mahatma Gandhi appears as the looming central figure surrounded by small images of other leaders and sages.

அரசியல் பாடம்

பாடத்தை எப்படி விளக்குகிறார்கள்?

எவ்வாறு எளிமையாக்குகிறார்கள்?

செய்தித்தாள் வாசிக்காதே

ஆர் கே லஷ்மண் கார்ட்டூன்கள் இடம் பிடித்திருக்கின்றன:

கருத்துப்படம்

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமை நக்கல் அடிக்கிறார்கள் எனலாம்.

படேல்

நேருவின் பேரன்களும் பேத்திகளும் அரியணையில் அம்ர்ந்திருப்பதால், சர்தார் வல்லபாய் படேல் நக்கலடிக்கப் படுவதை கண்டு கொள்ளவில்லை என்று பாரதீய ஜனதா கட்சி சொல்ல வேண்டும்.

இந்திரா காந்தி

போராட்டமும் வளர்ச்சியும் – முரண்

’அமெரிக்கா’ உதயகுமார் கூடங்குளத்தில் நடத்தும் வியாபாரப் போராட்டத்தை குறிப்பால் உணர்த்தி இருப்பதால், அந்த கேலி சித்திரத்தையும் நீக்கும் வரை உண்ணாவிரதப் போராட்டம்:

இந்தி எதிர்ப்பு கிளர்ச்சி – இராஜாஜி

கவிதை

Namdeo Dhasal

Turning their backs to the sun, they journeyed through centuries.
Now, now we must refuse to be pilgrims of darkness.
That one, our father, carrying, carrying the darkness is now bent;
Now, now we must lift the burden from his back.
Our blood was spilled for this glorious city
And what we got was the right to eat stones
Now, now we must explode the building that kisses the sky!
After a thousand years we were blessed with sunflower giving fakir;
Now, now, we must like sunflowers turn our faces to the sun.

English translation by Jayant Karve and Eleanor Zelliot of Namdeo Dhasal’s Marathi poem in Golpitha.

கவுண்டமணி – செந்தில்

நகைச்சுவை காமெடி ஜோக்குகள் இடம் பெற்றிருக்கின்றன

A Communist Party bureaucrat drives down from Moscow to a collective farm to register a potato harvest.
“Comrade farmer, how has the harvest been this year?” the official asks.

“Oh, by the grace of God, we had mountains of potatoes,” answers the farmer.

“But there is no God,” counters the official.

“Huh”, says the farmer, “And there are no mountains of potatoes either.”

ஈழம் & இலங்கைப் பிரச்சினை

அடுத்ததாக தொல் திருமா போன்ற தமிழின உணர்வுத்தூண்டிகள் விடுதலைப் புலிகள் குறித்து தி ஹிந்து கார்ட்டூன் எடுத்துக் கொள்வார்கள் என நம்பலாம்

காங்கிரசு அல்லாத பிரதம மந்திரிகள்

ஜனதா கட்சியை தாழ்த்துகிறார்கள் என முழங்க வேண்டும். ‘நிலையான ஆட்சி’ தாரக மந்திரத்தை ஓதும் சாத்தான் படம்!

பத்திரிகை முகப்பு

ஏன் இல்லுஸ்டிரேடட் வீக்லி, சண்டே, சண்டே இந்தியன், தி வீக், போன்றவை இடம் பிடிக்க வில்லை?

அமுல்

விளம்பரம் போடுகிறார்கள். மற்ற பாலாடை கம்பெனிகளும் பட்டர் நிறுவனங்களும் போர்க்கொடி தூக்கலாம்.

ஏன் கார்ட்டூன் தேவை?

சில பகீர் கார்ட்டூன்கள் முடிந்த பின் சிந்தனையைத் தூண்டும் கேள்விகளும் கீழ்க்காணும் வினாக்களும் இருக்கின்றன

1. Suppose you are the Secretary of State in the US (their equivalent of our Minister of External Affairs). How would you react in a press conference to these cartoons?

2. Drawn by well known Indian cartoonist Kutty, these two cartoons depict an Indian view of the Cold War.

3. If you were to draw this, who would you show as waiting in the wings?

4. Why does the cartoonist use the image of the ship Titanic to represent EU?

5. The two cartoons, one from India and the other from Pakistan, interpret the role of two key players who are also interested in the region. Do you notice any commonality between their perspectives?

6. How should the world address issues shown here?

7. Do you agree with this perspective?

இட ஒதுக்கீடு

சமூக நீதியை எப்படி சுருக்கமாக சொல்வது?

சமமாக மக்களை நடத்த வேண்டியதை எவ்வாறு மனதில் நிலைநிறுத்துவது?

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் அவர்களுக்காக பாபாசாஹேப் அம்பேத்கார் மேற்கோள்:

ஆசாரக்கோவை கதைகள் 1 – ஆசார வித்து

தூரத்தில் விமானம் தெரிந்தது. அதில் அப்பா வருவார். தூங்குவதற்கு முன் கட்டியணைத்துப் போர்த்திவிட்டு ‘குட் நைட்’ சொல்வார். நாளைக்கு சனிக்கிழமை. வந்துவிடுவார்.

இப்பொழுது விமானம் நெருங்குகிறது. அல்ல… கலிஃபோர்னியா கான்டோர் வந்து இறங்கியது.

“நீ அழிந்து கொண்டிருக்கிறாயாமே”

“சேச்சே! உன் அப்பாவ கிட்டக்கயே வச்சுக்கணும்னு நீ கேட்ட இல்லியா! அதுக்காக வந்திருக்கேன்.”

“கருடன் மேல் பெருமாள் பறப்பது போல் நீதான் எங்கப்பாவ கூட்டிகிட்டு வரப்போறியா?”

“இல்ல… நான் படைச்ச மக்களையெல்லாம் அழிக்கணும்.”

“என்னது?”

“உனக்கு தெரியுமில்லியா? நாந்தான் இந்த உலகத்தை சிருஷ்டிச்சேன். முன்னுமொரு தினத்தில் மேலேயிருந்த முதியவர் பிரளயத்தை உண்டுசெஞ்சார். வாக்கு சாதுர்யம் இல்லாதவங்க எல்லாரும் அம்பேல். நான் மச்சாவதாரம் எடுத்து ஏட்டுச் சுரைக்காய்களைக் காப்பாற்றினேன். இப்பொழுதும் அந்த மாதிரி செய்யணும்”

“எனக்கு ஆசாரக்கோவை ஞாபகத்துக்கு வருது. உனக்கு நன்றி சொல்லணும்.”

நன்றி யறிதல் பொறையுடைமை இன்சொல்லோடு
இன்னாத எவ்வுயிர்க்கும் செய்யாமை கல்வியோடு
ஒப்புரவு ஆற்ற அறிதல் அறிவுடைமை
நல்லினத் தாரோடு நட்டல் இவைஎட்டும்
சொல்லிய ஆசார வித்து

“இருக்கட்டும். உங்கப்பாவை அமெரிக்க ஜனாதிபதி ஆக்கட்டுமா? டைம்ஸ் பத்திரிகையின் ஆண்டுநாயகர் ஆக்கட்டுமா? முதலாவதாக ஆனால் உலக வெம்மையினால் பனிக்கட்டி உருகி, பூமிச்சூட்டினால் சுனாமி கொணர்ந்த கோபன்ஹேகான் நாயகர் என்று புராணம் பாடலாம். இரண்டாமவர் ஆனால், பணமுதலைகளுக்கு டாலர் மாலை தொடுக்கும் கஜேந்திர யானை என்று வரலாறு போடலாம்.”

“இது இட்லி-வடையில் வரும் முனி கடிதம் போல் விஷயக்கோர்வை ஆகிறது. எனக்குப் புரிகிற மாதிரி சொல்லு.”

“ரொம்ப சிம்பிள். கூடிய சீக்கிரமே ஹைதியில் பூகம்பம் வரப்போகிறது. அதற்கு முன் கடவுளுக்கு பலிகடா தேவை. உங்கப்பன் மேல் பழியைப் போடலாம் என்று யோசிக்கிறோம். போதிய பஞ்சப்படியும் பதவியும் கொடுத்து விடுவோம். ரெடியா?”

விக்கிக் குறிப்பு: The Wiyot tribe of California say that the condor recreated mankind after Above Old Man wiped humanity out with a flood.[49] However, other tribes, like California’s Mono, viewed the condor as a destroyer, not a creator. They say that Condor seized humans, cut off their heads, and drained their blood so that it would flood Ground Squirrel‘s home. Condor then seized Ground Squirrel after he fled, but Ground Squirrel managed to cut off Condor’s head when Condor paused to take a drink of the blood.

கைசிக புராண நாடகம்

ஒளிப்படங்கள், விழியம்: Kaisika Purana Nadagam: Nambaduvaan Sarithiram by Prof. Ramanujam

திருக்குறுங்குடி திரு வடிவழகிய நம்பித் திருக்கோவில் கைங்கர்யமான

கைசிக புராண நாடகம்

பிறவித்துயரிலிருந்து ஈடேற எளிதான வழி எது எனப் பூமாதேவி கேட்க, இசைத்தொண்டே வழி என்று ஸ்ரீவராகப் பெருமான் திருவாய் மலர்ந்தருளியது கைசிக புராணம். இதைக் கேட்ட பூமாதேவி ஆண்டாளாக அவதரித்து பூமாலையுடன் பாமாலையும் சூட்டி திரு அரங்கனை மணந்தார்.

ஸ்ரீ வராக புராணத்தில் உள்ள இந்த புராணத்தை கார்த்திகை மாதம் சுக்லபட்ச கைசிக ஏகாதசி முடிந்த துவாதசி காலையில் வைணவக் கோயில்களில் ஸ்ரீ பராசர பட்டர் வியாக்கியானத்துடன் பாராயணம் செய்து வருகிறார்கள். கைசிக ராகத்தின் பலனைச் சிறப்பித்துக் கூறுவதால் கைசிக புராணம் என்று பெயர் பெற்றது.

திருநெல்வேலி மாவட்டத்தில் நாங்குநேரிக்கு 10 கி.மீ. தொலைவில் உள்ள மகேந்திர கிரி அடிவாரத்திலுள்ள திருக்குறுங்குடியில் நம்படுவான் சரிதம் நடைபெற்றதால் அப்பதியிலுள்ள வடிவழகிய நம்பி சன்னதியில் கைசிக ஏகாதசியன்று இந்நாடகம் நடித்துக்காட்டும் கைங்கர்யமாக நடைபெற்று வருகிறது.

மீட்டுருவாக்க முயற்சி

ஐநூறுக்கும் மேலான ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த நாடகம் அதன் முழுவலிமையையும் இழந்து நின்றது. சங்கரக்கம்பர், நாராயணன், குறுங்குடி காந்தம்மாள், நம்பி போன்ற பாரம்பரியக் கலைஞர்களின் கைங்கர்ய உள்ளம் ஓரளவேனும் நடைபெறும் அளவில் இம்மரபைக் காத்து வந்தது.

திருக்குறுங்குடி நம்பி திருக்கோவில் பொறுப்பில் டிவியெஸ் (TVS) குடும்பத்தினர் பங்கேற்றதும் அக்குடும்பத்தில் ஒருவரான நாட்டிய வல்லுநர் திருமதி. அனிதா ரத்னம் அவர்களது உதவியும், முயற்சியும் இந்நாடகத்துக்கு மீண்டும் புத்துயிர் கொடுத்தது.

திரு நாராயண அய்யங்காரின் தத்துவார்த்த ஆலோசனை, பேராசிரியர் சே இராமானுஜத்தின் ஆய்வு மற்றும் வழிகாட்டல், கலைமாமணி பா. ஹேரம்பநாதனின் வடிவாக்கம் ஆகியவை நம்பி திருக்கோவிலில் பத்து ஆண்டுகளாக இத்திருசேவையைத் தொடர வழி செய்துள்ளன.

நம்படுவான் சரிதம்

பாணர் குலத்தில் பிறந்த சிறந்த வைணவ பக்தரான நம்படுவான் தினசரி இரவில் திருக்குறுங்குடி நம்பியை இசையால் பாடிப் புகழ்வதை தமது கைங்கர்யமாகக் கொண்டவர்.

கார்த்திகை மாதம் சுக்கில பட்சம் கைசிக ஏகாதசியன்று நம்படுவான் உண்ணாது உறங்காது விரதங்காத்துப் பெருமாளை சேவிக்க இரவில் வரும்போது, பிரம்ம ராக்ஷசன் ஒருவனால் வழி மறிக்கப்படுகிறார்.

கொன்று தின்று பசி தீர்த்துக் கொள்ள வந்த அந்த ராஷசனிடம், தான் பெருமாளை சேவித்து விட்டுத் திரும்பி வருவதாகப் பல சத்தியங்கள் சொல்லியும் ஏற்காதபோது, பெருமாள் மீதே சத்தியம் செய்து அனுமதி பெறுகிறார்.

பெருமாளைப் பாடி பிரியாவிடை பெற்றுத் திரும்பும் போது வடிவழகிய நம்பியே கிழவராக வந்து சோதிக்க எண்ணி, இராட்சனிடம் திரும்பிப் போகாமல் தப்பித்துச் செல்லும்படி நம்படுவானிடம் கூறுகிறார். ஆனால் நம்படுவானோ சத்தியம் தவறாமல் இராஷஸனிடமே மீண்டும் வருகிறார்.

ஆனால் ராக்ஷஸன் அவரை உண்பதற்குப் பதில் அவரது புண்ணியத்தில் குறிப்பாக கைசிக ராகத்தில் பெருமாளைப் பாடிக் கிடைத்த புண்ணியத்தில் எள்ளளவாவது தருமாறு கெஞ்சுகிறான். அந்தணர் காலத்தில் சோம சர்மாவாக பிறந்த அந்த இராக்கதன் அகந்தையால் யாகத்தில் மந்திரத்தைத் தவறாகச் சொன்னதால் இராட்சனாக சபிக்கப்பட்டான்.

சாப விமோசந்த்திற்காக நம்படுவானின் கைசிக ராகப் புண்ணியத்தைப் பெறக் காத்திருப்பதாகக் கூறி நம்படுவானின் அடிகளில் விழுந்து வணங்குகிறான். நம்படுவானும் இரக்கப்பட்டு தனது பாட்டின் பலனைத் தந்து அவனுக்கு விமோசனம் கொடுத்து நம்பியின் திருவடிகளை அடையச் செய்தார்.

மீட்டுருவாக்கத் திருத்தொண்டும் பங்கேற்பும்

அரங்கில்
நம்படுவான் கைவாரம்: கலைமாமணி குரு பி ஹேரம்பநாதன்
நம்படுவான்: முனைவர் சுமதி சுந்தர்
திருமதி எம் ராஜகுமாரி
பிரம்மராட்சஷன்: திரு எஸ். கோபி
நம்பிக்கிழவர்: குமாரி எம்.ஏ. அருணோதயம்
துணைப்பாத்திரங்கள்: குமாரி. தமிழ்மதி, குமாரி ஜோதி

இசையில்
நட்டுவாங்கம்: திரு எச் ஹரிஹரன்
பாட்டு: திருமதி எஸ் லலிதா
திருமதி எஸ் பானுமதி
குழல்: திரு என் கிரீஷ்குமார்
மிருதங்கம்: திரு என் ஆர் மணிகண்ட தீட்சிதர்
நாதஸ்வரம்: திரு அருண்குமார்
தவில், சுத்தமத்தளம்: திரு டி செந்தில்குமார்

வல்லுநர் ஆலோசனையில்
தத்துவம்: திரு உ.வே திருநாராயண ஐயங்கார்
அரங்க இயல்: கலைமாமணி நா முத்துசாமி
பனுவல்: முனைவர் ம வேலுசாமி
இசை: பேராசிரியர் ம வைத்தியலிங்கம்
முனைவர் அரிமளம் பத்மனாபன்

ஆவணப்படுத்துதலில்
முனைவர் கு. முருகேசன்
திரு எஸ் ஏ கன்னையா

நிர்வாக ஒருங்கிணைப்பு: திரு ஆர் நாகராஜன்
திரு ஜி ராஜமாணிக்கம்
உதவி: திரு ஜி விஜயகுமார்

வடிவமைப்பு: கலைமாமணி பி ஹேரம்பநாதன்

வழி நடத்துநர்: பேராசிரியர் சே இராமானுஜம்

கலையாக்க ஆலோசகர் மற்றும் தாளாளர்: கலைமாமணி திருமதி அனிதா ரத்னம்

தாளாண்மை: ‘அரங்கம்’ அறக்கட்டளை, சென்னை.

அமெரிக்க தேர்தல் 2008 ஒரு பார்வை – ச. திருமலை

நன்றி: விஜயபாரதம்

கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக கடுமையாக நடந்த தேர்தல் ஒரு முடிவுக்கு வந்து பராக் ஹுசைன் ஒபாமா அமெரிக்காவின் 44வது அதிபராகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.

கென்யா நாட்டைச் சேர்ந்த ஆப்பிரிக்க இனத் தந்தைக்கும், அமெரிக்காவைச் சேர்ந்த வெள்ளை இனத் தாய்க்கும் மகனாக அமெரிக்காவின் ஹவாய் மாநிலத்தில் 1961ம் ஆண்டு பிறந்த கலப்பினத்தவரான பராக் ஒபாமா உலகமே வியக்கும் இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

அமெரிக்காவில் ஒரு வெள்ளையர் மட்டுமே ஜனாதிபதியாக வர முடியும் என்று உலக மக்களிடம் நிலவிய எண்ணத்தைப் போக்கி அமெரிக்கா என்பது தகுதியையும் திறமையையும் மதிக்கும் ஒரு நாடு என்பதை காண்பித்துள்ளார். திறமையுள்ள எவருமே அவ்ருக்குத் தகுதியான பதவியை அடைய நிறம், இனம் எதுவும் தடையாக இருக்க முடியாது என்பதை அவரது வெற்றி காட்டியுள்ளது.

47 வயதாகும் பராக் ஒபாமா உலகப் புகழ் பெற்ற ஹார்வார்ட் பல்கலையில் சட்டம் பயின்ற ஒரு புத்திசாலியான வழக்கறிஞர். அவரது மனைவி மிச்சயில் ஒபாமாவும் அந்தப் பல்க்லையில் சட்டம் பயின்றவரே. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள்.

சட்டம் பயின்று பல லட்சம் சம்பள வருமானம் வரும் வாய்ப்பு இருந்தாலும் தன்னை சமூக சேவையில் ஈடுபடுத்திக் கொண்டு அரசியலில் நுழைந்து இல்லினாய்ஸ் மாகாணத்தில் இருந்து செனட்டராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார். தொடர்ந்து தனது அபாரமான பேச்சாற்றலாலும், கூர்மையான மதியினாலும், தெளிவான சிந்தனையினாலும் மக்கள் மற்றும் தனது கட்சியினரின் ஆதரவையும் பெரு மதிப்பையும் பெற்று வந்து 8 ஆண்டுகளுக்குள் நாட்டின் மிக உச்சமான பதவியை அடைந்து சாதனை படைத்திருக்கிறார்.

அமெரிக்க வரலாற்றிலேயே முதன் முதலாக ஒரு சிறுபான்மை இனத்தவர் ஜனாதிபதி பதவியை அடைந்திருக்கிறார். அமெரிக்க மக்களின் இந்தத் தேர்வு உலக நாடுகளிடையிலும் அமெரிக்கா மீதான ஒரு நம்பிக்கையும், நன் மதிப்பையும் ஈட்டியிருக்கிறது.

ஒரு இருபது ஆண்டுகளுக்கு முன்பாகக் கூட யாரும் நினைத்துப் பார்த்திருக்க இயலாத ஒரு கனவு நனவாகி இருக்கிறது.

அமெரிக்கத் தேர்தல் அமைப்பு சற்று சிக்கலான தேர்தல் அமைப்பு. இந்தியாவில் மக்கள் பாராளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.

ப்ராளுமன்ற உறுப்பினர்களில் அதிக இடங்கள் பெற்ற கட்சியானது தங்களுக்குள் ஒரு பாராளுமன்ற உறுப்பினரை பிரதமராகத் தேர்ந்தெடுக்கிறது. அவர் அந்த பாராளுமன்ற உறுப்பினர்களிடமிருந்தே தனது மந்திரி சபையைத் தேர்வு செய்து அமைத்துக் கொள்கிறார். இந்தியாவின் ஜனாதிபதி பதவி பெரும்பாலும் ஆளுங்கட்சிக்குக் கட்டுப்பட்ட ஒரு ரப்பர் ஸ்டாம்ப் பதவியாகவே நின்று விடுகிறது.

அமெரிக்காவில் மூன்று விதமான அரசியல் நிர்ணய அமைப்புக்கள் உள்ளன.

ஜனாதிபதியும் அவரது அமைச்சர்களும் நிர்வாகத் தூணாகவும், காங்கிரஸ் எனப்படும் பாராளுமன்றம் மற்றொரு தூணாகவும், நீதி மன்றங்கள் மூன்றாவது தூணாகவும் இருந்து அமெரிக்காவை ஆட்சி செய்கின்றன, சட்டட்ங்களை உருவாக்கி அமுல் படுத்துகின்றன.

இதில் ஜனாதிபதியை நேரடியாக மக்கள் ஓட்டுப் போட்டுத் தேர்ந்தெடுக்கிறார்கள்.

ஒவ்வொரு மாநிலத்திற்கும் இத்தனை உறுப்பினர்களின் ஓட்டு என்ற கணக்கில் ஒவ்வொரு மாநிலத்த்திலும் எந்த வேட்பாளர் ஜெயிக்கிறாரோ அவருக்கு அந்த எண்ணிக்கை வழங்கப் பட்டு இறுதியில் அதிக பிரதிநிதித்துவ எண்ணிக்கப் பெறும் வேட்பாளர் வெல்கிறார். ஒட்டு மொத்தமாக அமெரிக்கா முழுவதும் அதிக ஓட்டுக்கள் வாங்கியிருந்தாலும் கூட மாநில அளவிலான எண்ணிக்கையைப் பொறுத்த்து ஒரு வேட்பாளர் தோல்வி அடையவும் கூடும்.

கலிஃபோர்னியா மாகாணத்தில் யார் ஜெய்க்கிறார்களோ அவர்களுக்கு 55 ஓட்டுக்கள், ஃப்ளோரிடா மாநிலத்தில் ஜெயிப்பவருக்கு 27 வாக்குகள் என்று மொத்தம் யார் 270 வாக்குகளை மாநிலவாரியாகப் பெற்ற வெற்றியின் அடிப்படையில் பெறுகிறார்களோ அவரே வெற்றி பெற்றதாக அறிவிக்க்ப் படுகிறார்கள்.

அப்படி பல மாநிலங்களில் அதிக ஓட்டுக்கள் பெற்று மொத்தம் 364 எலக்டோரல் காலேஜ் எனப்படும் பிரதிநித்துவ வாக்குகள் பெற்று மாபெரும் வெற்றியை பெற்றிருக்கிறார் ஒபாமா.

மேலும் ஒட்டு மொத்த மக்கள் அளித்த வாக்குகளின் அடிப்படையிலும் 52 சதவிகிதம் பெற்று சாதனை படைத்து ஒரு மெஜாரிட்டி ஆதரவு பெற்ற ஜனாதிபதியாக வெற்றி பெற்றிருக்கிறார். வெற்றி பெற்றவர் தனது மந்திரி சபையைத் தேர்ந்தெடுக் கொள்வார்.

மந்திரிகள் பாராளுமனற உறுப்பினர்களாக இருக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. தகுதியும் திறமையும், அனுபவமும் உள்ள எந்தக் குடிமகனாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஜனாதிபதி தேர்ந்தெடுக்கும் மந்திரிகளை செனட் உறுப்பினர்கள் கேள்விகள் கேட்டு பரிசோதனை செய்து ஒப்புதல் அளித்த பின் அவர்கள் மந்திரியாகச் செயல் படுவார்கள்.

காங்கிரஸ் என்பதில் செனட், ஹவுஸ் ஆஃப் ரெப்ரசெண்டேடிவ்ஸ் எனப்படும் பிரதிநிதிகள் சபை என்று இரண்டு சபைகள் உள்ளன. செனட்டில் மொத்தம் 100 உறுப்பினர்கள். செனட் உறுப்பினரின் பதவிக் காலம் 6 வருடங்கள். ஒரு மாநிலத்திற்கு இரண்டு உறுப்பினர் வீதம் மொத்தம் 100 செனட்டர்கள் தேர்ந்தெடுக்கப் படுவார்கள்.

இதற்கு நமது பாராளுமன்றம் போல ஒட்டு மொத்தத் தேர்தல் இருக்காது, நமது ராஜ்ய சபை போல பதவி முடிய முடிய தேர்வுகள் இருக்கும். பிரதிநிதிகள் சபையில் 435 உறுப்பினர்கள் அவர்களின் பதவிக்காலம் 2 வருடம், ஒவ்வொரு இரண்டு வருடத்திலும் 435 இடங்களுக்கும் தேர்தல் நடக்கும்.

செனட்டில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர்கள் 57 இடங்களையும், பிரதிநிதிகள் சபையில் 251 இடங்களையும் பெற்று ஏறக்குறையப் பெரும்பான்மை பெற்ற கட்சியாக இருக்கிறார்கள்.

ஜனாதிபதியும் ஜனாநாயக் கட்சியின் வேட்பாளரே. தனது கட்சியினரே பெரும்பான்மையாக இருப்பதால் தான் நினைக்கும் திட்டங்களுக்கு காங்கிரஸின் ஒப்புதல் வாங்குவது ஓரளவுக்கு ஒபாமாவுக்கு வசதியாக இருக்கும் என்பது அவருக்கு அனுகூலமான ஒரு நிலைமையாகும்.

அமெரிக்காவில் ரிபப்ளிக்கன் கட்சி, டெமாக்ரடிக் கட்சி என்ற இரு பெரும் கட்சிகள் இருக்கின்றன. இவை போக ஒரு சில சிறு கட்சிகளும் உள்ளன. அவர்களுக்கு ஒரிரு சதவிகித ஆதரவு மட்டுமே உள்ளது.

டெமாக்ரடிக் கட்சியின் சார்பில் பராக் ஒபாமாவும், ரிபப்ளிக்கன் கட்சியின் சார்பில் ஜான் மெக்கெயின் என்பவரும் போட்டியிட்டார்கள். இந்த ஜனாதிபதி தேர்தலுக்கான முஸ்தீபுகள் ஒரு வருடத்திற்கு முன்பாகவே தொடங்கி விடுகின்றன.

இரண்டு கட்சியிலும் ஜனாதிபதிக்குப் போட்டியிட விருப்பம் உள்ள அனைவரும் அவர்களது உள்கட்சி தேர்தலில் கட்சி உறுப்பினர்களின் ஆதரவைப் பெற வேண்டும். ஒரு சில இடங்களில் பொது மக்களும் கலந்து கொண்டு ஓட்டளிக்கலாம்.

அப்படி இரண்டு கட்சிகளிலும் யார் அதிக வாக்குகள் பெற்று ஜெயிக்கிறார்களோ அவர்கள் அந்தந்தக் கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப் படுகிறார்கள். ஆகவே திறமையும். தகுதியும், ஆளுமையும், ஆதரவும் செயல் திட்டங்களும், பிரச்சாரத்திற்கான பண பலமும் உடையவர்களே இறுதி வரை போட்டியிட்டு வேட்பாளருக்கான தகுதியை அடைந்து அந்தந்தக் கட்சிகளால் தங்களது அதிகாரபூர்வமான வேட்பாளர்களாக நிறுத்தப் படுகிறார்கள்.

ஒரு பெரிய மாநாட்டை நடத்தி இரண்டு கட்சிகளும் தங்களது அதிகாரபூர்வமான வேட்பாளரை அறிவிக்கின்றன. அந்த மாநாட்டின் பொழுது ஜனாதிபதிப் பதவிக்கான வேட்பாளர் தனது துணை ஜனாதிபதி வேட்பாளரைத் தேர்வு செய்து அறிவிக்கிறார். அதன் பிறகு இரண்டு கட்சியின் வேட்ப்பாளர்களும் மக்களிடம் சென்று, மாநிலம் மாநிலமாகச் சென்று தங்களது கொள்கைகளையும் திட்டங்களையும் அறிவித்து ஆதரவு கேட்க்கிறார்கள்.

மக்களும் அவர்களது தகுதி, திறமை, கொள்கைகள் ஆகியவற்றை அலசி ஆராய்ந்து, தத்தம் சார்புள்ள கட்சி ரீதியாகவோ அல்லது யார் சிறந்த வேட்பாளர் என்பதை பகுத்தறிந்தோ தங்கள் ஓட்டுக்களை அளிக்கின்றனர்.

ஜான் மெக்க்யின் சார்ந்துள்ள ரிபப்ளிக்கன் கட்சி தீவிரமான கிறிஸ்துவர்களின் ஆதரவினைப் பெற்ற மத ரீதியான கொள்கைகளைக் கொண்ட கட்சி.

ஒபாமா சார்ந்துள்ள டெமாக்ரடிக் கட்சி சற்று ப்ரந்த மனமுள்ள லிபரல் கட்சி. ரிபப்ளிக்கன் கட்சியானது கருக்கலைப்புக்கு எதிரானது,. உலகத்தை ஆண்டவன் மட்டுமே படைத்தான் என்பதில் நம்பிக்கையுள்ளது. ஓரினத் திருமணத்தை எதிர்ப்பது. வெள்ளை அமெரிக்கர்களால் பெரிதும் ஆதரிக்கப் படுவது. சர்ச்சுக்களின் ஆதரவினைப் பெற்ற கட்சி.

டெமாக்ரடிக் கட்சி லேசான இடதுசாரி கட்சி எனலாம். தொழிற்சங்கத் தொழிலாளர்கள், வெள்ளையரல்லாத இனத்தவர்கள் போன்ற பரவலான ஆதரவைப் பெற்றக் கட்சி. கருக்கலைப்பு செய்வது அவரவர் தேர்வு என்பதும், ஓரினத் திருமணத்தைச் சட்டப் படி தடை செய்யத் தேவையில்லை என்றும் சற்றே லிபரலான கொள்கைகள் உடைய கட்சி.

ரிபப்ளிக்கன் கட்சிக்கு பெரும்பாலான மத்திய, தெற்குப் பகுதிகளில் பலத்த ஆதரவு உள்ளது. டெமாக்ரடிக் கட்சியினருக்கு கடற்கரையோர கிழக்கு, மேற்கு மாகாணங்களில் பலத்த ஆதரவு உள்ளது.

இவை போக இரண்டு கட்சியினருக்கும் பொருளாதாரக் கொள்கைகளை வகுப்பதிலும் பலத்த வேறு பாடுகள் உள்ளன.

பொருளாதாரக் கொள்கையில் ரிபப்ளிக்கன் கட்சி அரசாங்கத்தின் செலவுகளும், வரிகளும் குறைந்து இருக்க வேண்டும் என்ற கொள்கை உடையது,டெமாக்ரடிக் கட்சியோ பணக்காரர்களிடம் அதிக வரி விதித்து ஏழைகளுக்கு உதவ வேண்டும் என்ற கொள்கையும், கட்டுப்பாடுகள் அதிகம் இருக்க வேண்டும் என்ற கொள்கையும் உடையது.

இந்த முறை வெளியுறவுக் கொள்கையிலும் இரண்டு கட்சிக்கும் வேறுபாடுகள் இருந்தன.

ஈராக்கில் இன்னும் அதிக ஆண்டுகள் தொடர்ந்து அமெரிக்க ராணுவம் இருக்க வேண்டும் என்பதும், ஈரானுடன் அடுத்துப் போருக்குப் போய் அடக்க வேண்டும் என்றும் ஜான் மெக்கெயின் மற்றும் அவரது ரிபப்ளிக்கன் கட்சி உறுதியாக நின்றது. ஒபாமா ஈராக்கில் இருந்து அமெரிக்க ராணுவம் வெளியேற வேண்டும் என்பதிலும், ஆப்கானிஸ்தானில் வளர்ந்து வரும் தாலிபான்களை ஒடுக்க வேண்டும் என்பதிலும், பாக்கிஸ்தானிற்குள் நுழைந்து அங்கிருக்கும் தாலிபான்களையும் பின்லாடனையும் ஒழிக்க வேண்டும் என்றும் உறுதியாக இருந்தார்.

கல்வி, மருத்துவம் ஆகிய துறைகளிலும், சுற்றுச் சூழல் விஷயங்களிலும் இரு வேட்பாளர்களும் பெரிதும் வேறு பட்டனர்.

அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் தோண்டி எண்ணெய் எடுக்க வேண்டும் என்பது மெக்கெயின், பெல்லன் நிலைப்பாடாகவும், மரபுசாரா மாற்று எரிபொருள் ஆராய்ச்சியில் அதிக முதலீடு செலுத்தி பெட்ரோலுக்கு மாற்று எரிபொருள் கண்டு பிடித்து அதன் மூலம் அரேபிய நாடுகள் மீதான அமெரிக்காவின் சார்பு நிலையைப் போக்குவேன் என்பது ஒபாமாவின் நிலைப்பாடாகவும் இருந்தது.

ஜான் மெக்யென் தன் துணை ஜனாதிபதி வேட்பாளராக சாரப் பெல்லன் எனப்படும் அலாஸ்கா மாநிலத்து கவ்ர்னரையும் (நமது முதல்வர் போன்ற பதவி) ஒபாமா தன் துணை வேட்பாளராக ஜோ பைடன் என்னும் செனட்ட்ரும் வெளியுறவுக் கொள்கையில் ப்ழுத்த அனுபவம் உள்ளவரையும் தேர்ந்தெடுத்திருந்தனர்.

சாராப் பெல்லன் ஒரு மாநிலத்தின் கவர்னராக இருந்தும் கூட அவரது அனுபவின்மையும், பொது அறிவின்மையும் அவரது பேட்டிகளில் வெளிப்பட்டு அவ்ர் ஒரு மோசமான தேர்வு என்ற செய்தி மக்களிடம் பரவி விட்டது. பெல்லனின் தேர்வு மெக்கெயினின் வெற்றியை மேலும் பாதித்தது.

இரண்டு கட்சியினரின் மாநாடுகளும் பிரமாண்டமாக நடை பெற்றன. டெமாக்ரடிக் கட்சி மாநாட்டில் பல தரப்பட்ட மக்களும் கலந்து கொண்டனர். ஆப்பிரிக்க இன அமெரிக்கர்களும், தென்னமரிக்கர்களும், சீனர்களும் அதிக அளவில் காணப் பட்டனர். இளைஞர்களும் முதல் முறை ஒட்டுப் போடுபவர்களும் அதிக அளவில் காணப் பட்டனர்.

மாநாட்டுக் கூட்டம் பல இனங்களும் கலந்த ஒரு வண்ணக் கலவையாக இருந்தது. மேடையிலும் நிறைய ஆப்பிரிக்க அமேரிக்கர்களும், லத்தீன் அமெரிக்கர்களும் பேசினார்கள். இது எல்லா தரப்பினரையும் கவர்ந்த ஒரு கட்சி என்பது நிரூபணமாகியது.

மாறாக ரிபப்ளிக்கன் கட்சி மாநாட்டில் ஆப்பிரிக்க அமெரிக்கர்களையோ, லத்தீன் அமெரிக்கர்களையோ லென்ஸ் வைத்துத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டி இருந்தது. பன்முகத்தன்மையின்றி சுத்தமாக இல்லாமல் தூய வெள்ளையாக மட்டுமே காட்சியளித்தது.

மாநாட்டில் கூடிய கூட்டம் தவிர இரண்டு ம்நாட்டுக்களையும் பல மில்லியன் மக்கள்
டெலிவிஷனில் கண்டிருக்கிறார்கள்.

இந்தியாவில் அரசியல் கட்சி மாநாடுகள் பொது தொலைக்காட்சிகளில் (கட்சி சார்பு டி விக்களில் அல்ல) முழு நிகழ்ச்சிகளும் காண்பிக்கப் படுவது இல்லை. அப்படியே காண்பிக்கப் பட்டாலும் இத்தனை லட்சம் மக்கள் ஆர்வத்துடன் கண்டிருக்க வாய்ப்பும் இல்லை என்பது ஒரு முக்கியமான வேறுபாடாகும். அமெரிக்கத் தேர்தலில் பங்கு பெறும் ஆர்வமுள்ள கட்சி சாராத நடுநிலை மக்கள் அனைவரும் டி வி யில் நடக்கும் அரசியல் விவாதங்கள், டி வி யில் கான்பிக்கப் படும் பேச்சுக்ள் ஆகியவற்றை வைத்தே தங்கள் தேர்வை முடிவு செய்கிறார்கள்.

சார்பு நிலைகள் இருந்தாலும் டி வி க்கள் அமெரிக்க ஜன்நாயகத்தில் முக்கிய பங்கு ஆற்றுகின்றன. மாநாட்டுப் பேச்சு, டெலிவிஷன் விவாதம், நேரடியாக மக்களைச் சந்த்தித்து ஓட்டுச் சேகரித்தல் ஆகிய பிரச்சார உத்திகளை இரு வேட்பாளர்களும் பின்பற்றினார்கள். இருந்தாலும் பராக் ஒபாமா தனது தேர்தல் பிரச்சார உத்திகளிலும் பெரும் மாறுதலைக் கொண்டு வந்திருந்தார். இணையத்தையும், ஃபேஸ் புக், பாட்காஸ்ட், டெக்ஸ்ட் செய்திகள், டிவ்ட்டர் செய்திகள், ப்ளாகுகள், யூட்யூப் போன்ற பல்வேறு தொழில் நுட்பங்களை மிகத் திறமையாக தன் வெற்றிக்கு ஒபாமா பயன் படுத்திக் கொண்டது அவரது திட்டமிடலையும், நுட்பத்தையும் காட்டுகின்றன.

தொழில்நுடபத்தைத் தன் தேர்தலுக்கு மிக வலிமையாகப் பயன் படுத்திக் கொண்டதன் மூலம், இணையம் மூலமாகவே கிட்டத்தட்ட அரை பில்லியன் டாலர் நிதி குவிக்க முடிந்திருக்கிறது. அதைக் கொண்டு லட்சக்கணக்கான டெலிவிஷன் விளம்பரங்களைத் தொடர்ந்து கொடுத்து மக்களுடன் தொடர்ந்து தொடர்பு கொண்டிருந்தார்.

மேலும் அமெரிக்க வரலாற்றிலேயே முன் எப்பொழுதும் இருந்திராத அளவுக்கு இளைஞர்களையும், மாணவர்களையும் தன் தொண்டர்களாகச் சேர்த்து அவர்களை ஒருங்கிணைத்துத் தேர்தல் நாள் அன்று ஓட்டுச் சாவடிக்கு மக்களைக் கொண்டு சேர்ப்பதில் பெரும் வெற்றி பெற்றார்.

அவரது வெற்றிக்கு முதன் முறை வாக்காளர்களும், இளைஞர்களும் ஒரு முக்கிய காரணியாக இருந்தனர். அவர்களை மிகத் திறமையாகப் பயன் படுத்திக் கொண்டு அவர்களுடன் நெருக்கமான உறவையும் நட்பையும் வளர்த்துக் கொண்டது ஒபாமாவின் அபரிதமான வெற்றிக்கு ஒரு முக்கிய காரணமாக இருந்தது. அமெரிக்காவின் வழக்கத்துக்கு மாறாக இந்த முறை 64 சதவிகித வாக்காளர்கள் ஓட்டளித்தது குறிப்பிடத்தக்கது.

டெமாக்ரடிக் கட்சியின் வேட்பாளர் ஒபாமாவின் பேச்சுக்கள் அனைத்துமே அபாரமாக இருந்தது. இந்த இளம் வயதில் இந்த இடத்தை இவர் எப்படி எட்டினார் என்பதன் ரகசியம் அவரது அற்புதமான பேச்சாற்றலில் இருப்பது புரிந்தது. அவரது பேச்சில் தான் ஆட்சிக்கு வந்தால் என்னென்ன செய்வேன் என்பதை பட்டியலிட்டார்.

ஈராக்கில் இருந்து படைகளை விலக்கி ஆப்கானிஸ்தானத்திற்கு படைகளை அனுப்புவேன், பாக்கிஸ்தானிற்குள் ஒளீந்திருக்கும் பின்லாடன் குழுவினரை அழிப்பேன். ஈரானுடன் முதலில் பேச்சு வார்த்தை நடத்துவேன். இன்னும் பத்தாண்டுகளில் சுத்தமாக மிடில் ஈஸ்டின் எண்ணெய்க்காக காத்திருக்கும் நிலையை மாற்றுவேன், அமெரிக்காவில் மாற்று எரிபொருள் கண்டுபிடிப்புக்கான ஆராய்ச்சித் தொகையை அதிகரித்து கண்டு பிடிப்புகள் மூலமாக எரிபொருள் தன்னிறைவை ஏற்படுத்துவேன், புஷ்ஷினால் இன்று ஏற்பட்டிருக்கும் கடுமையான நிதி நெருக்கடியைப் போக்குவேன் என்று தான் செய்யப் போவதைப் பட்டியலிட்ட ஒபாமா, புஷ்ஷின் மோசமான ஆட்சியினால் அமெரிக்கா இன்றிருக்கும் நிலமையை விளக்கினார்.

எட்டு வருட ஆட்சி போதும் அது இனியும் வேற்று ரூபத்தில் தொடர வேண்டாம் எயிட் இஸ் எனஃப் என்ற கோஷத்தினை எழுப்பினார்.

பேசிய அனைவரும் எதிர் கட்சி வேட்பாளரான ஜான் மெக்கயினுக்கு மிகுந்த மரியாதை கொடுத்தார்கள். அவரது ராணுவ அனுபவத்தையும், தியாகத்தையும் வெகுவாகப் போற்றினார்கள். அனைவரும் அவரை மிகவும் மரியாதைக்குரிய நண்பர் என்றே விளித்தார்கள். அப்பேர்ப்பட்ட நல்ல மனிதர் புஷ்ஷின் மடத்தனமான ஆட்சிக்கு ஆதரவு அளித்ததையும் 90% புஷ்ஷின் தீர்மானங்களை மெக்கயின் ஆதரித்ததினால் அவர் ஒரு புஷ்ஷின் நீட்சியே ஆகவே அவருக்கு ஓட்டளிப்பதும் புஷ்ஷின் ஆட்சியைத் தொடர வைப்பதும் ஒன்றே என்ற ஒரே குற்றசாட்டை மட்டும் மீண்டும் மீண்டும் அனைத்துப் பேச்சாளர்களும் பேசினார்கள்.

ரிபப்ளிக்கன் கட்சி கூட்டங்களில் ஒபாமா மீது அவரது நடுப் பெயரை வைத்து சந்தேகங்கள் கிளப்பட்டன. அவருக்கு இருந்த ஒரு சில அறிமுகங்களை வைத்து அவர் மீது தீவீரவாதச் சந்தேகமும் வீசப் பட்டன. ஏராளமான தனி நபர் தாக்குதலுக்கு உள்ளானாலும் கூட அவற்றையெல்லாம் மிக அமைதியான புன்னகை தவழும் முகத்துடனும், தீர்க்கத்துடனும், மன உறுதியுடனும் பொறுமையுடனும் ஆத்திரப் படாமல் எதிர் கொண்டது அவர் மீது மக்களுக்குப் பெருத்த மரியாதையை உருவாக்கி அவரது வெற்றிக்கு வித்திட்டது.

இந்திய அரசியல்வாதிகள் பேச்சுக்கும் அமெரிக்க அரசியல்வாதிகள் பேச்சுக்கும் உள்ள ஒரே ஒற்றுமை தங்கள் வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றப் போகிறோம் என்பது குறித்த தெளிவின்மை. அவை பற்றிய அக்கறையின்மையும் எப்படியாவது மக்களைத் தங்கள் வசீகரமான பேச்சுக்களால் கவர்ந்தால் மட்டும் போதுமானது என்ற அலட்சியமும் பொதுவான அம்சமாக விளங்குகிறது.

ரிபப்ளிக்கன் கட்சி மாநாட்டில் முக்கியமாக தவிர்க்க விரும்பிய இரண்டு பெயர்கள் புஷ் மற்றும் சென்னி. அவர்கள் மாநாட்டுப் பக்கம் எட்டிப் பார்க்காமல் இருக்க வேண்டுமே என்று ஆண்டவனை வேண்டிக் கொண்டு இருந்தனர். அந்த அளவுக்கு கெட்ட பெயரைச் சம்பாதித்துக் கொடுத்த ஜனாதிபதியையும் துணை ஜனாதிபதியையும் தவிர்க்க முடிவு செய்தனர்.

ரிபப்ளிக்கன் கட்சியில் பேசிய அனைவரும் மீண்டும் மீண்டும் மெக்கெயின் வியட்நாம் போரில் சிறைப் பிடிக்கப் பட்டதையும் அவர் அங்கு அனுபவித்த சித்ரவதைகளையும் அவரது மன உறுதியையும் பற்றியே மீண்டும் மீண்டும் பேசிப் போரடித்தார்கள். சொன்னதையே பல விதங்களில் திருப்பித் திருப்பிச் சொன்னார்கள்.

ரிபப்ளிக்கன் கட்சியின் இரண்டு வேபாளர்களும் திறமையாக, அலங்காரமாக,கவர்ச்சியாகப் பேசினார்கள் பெரும் வரவேற்பை பெற்றார்கள். ஆனால் மக்களை வாட்டும் எந்தப் பிரச்சினையைப் பற்றியும் பேசத் துணியவில்லை.

அவர்கள் குறி அமெரிக்காவில் எண்ணெய் தோண்டுவதிலும், வரி விலக்குக் கொடுப்போம் என்பதிலும், ஒரீன திருமணத்தைத் தடுப்போம், அபார்ஷனைத் தடுப்போம் என்பதில் மட்டுமே இருந்தன. வேலையின்மை, ரிசஷன், டாலர் மதிப்பிழப்பு, வீடுகள் மதிப்பிழந்து உருகும் மிக அபாயகரமான நிலமை, பண வீக்கம் போன்ற எதையுமே பேசத் தயாராக இல்லை. மெக்கெயின் மீண்டும் ஈராக்கில் ஆக்கிரமிப்பைத் தொடருவோம் என்றே பேசிக் கொண்டிருந்தார். அவரது துணை ஜனாதிபதி வேட்பாளரான பெண்மணியோ அபார்ஷனை ஒழிப்பேன் அலாஸ்காவில் எண்ணெய் தோண்டுவேன் என்றார்..

மாநாடுகளைத் தொடர்ந்து இரு வேட்பாளர்களும் நேருக்கு நேரான விவாதங்களில் மூன்று முறை கலந்து கொண்டு உள்நாட்டுப் பிரச்சினைகள், பொருளாதாரப் பிரச்சினைகள்,வெளிநாட்டுக் கொள்கைகள், மருத்துவ நலன், கல்வி, வேலை வாய்ப்பு ஆகியவை குறித்து விவாதித்தனர். இவை தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பப் பட்டன.

மூன்று விவாதங்களிலுமே ஒபாமா தன் தெளிவான பேச்சாற்றலாலும், திட்டங்களை எடுத்துச் சொல்லும் திறத்தினாலும் தனிநபர் தாக்குதல்களில் ஈடுபடாமலும் மிக அமைதியாக ஆனால் வலுவாக தன் நிலையை எடுத்த்து வைத்ததினால் விவாதங்களின் பொழுதே நடுநிலை வாக்களர்களின் மனக்களையும் கவர்ந்து அவர்களின் ஆதரவினைப் பெற்றார்.

மெக்க்யின் தனது கோபத்தைக் காண்பித்தது மூலமாகவும், மீண்டும் மீண்டும் போர் போர் என்று மக்களின் பிரச்சினைகளைப் பற்றி போசாததினாலும், புஷ் ஏற்படுத்திய கெட்ட பெயரினாலும், மிக மோசமான பொருளாதார நிலைக்கு அவர் கட்சியைச் சார்ந்த ஜனாதிபதி புஷ்ஷின் திறமையின்மை காரணமாகக் கருதப் பட்ட்தாலும் விவாதங்களின் பொழுதும், பிரச்சாரங்களின் பொழுதும் மக்களைக் கவராமல் போய் தொடர்ந்து பிண்டடைந்தே இருந்தார்.

இறுதியில் ஒபாமாவின் செயல் திடங்களும், பேச்சாற்றலும், கண்னியமான தன்மையும், அறிவும், அவருக்கு அப்ரிதமான வெற்றியைப் பெற்றுத் தந்தன. மெக்கெயினின் தெளிவில்லாத கொள்கைகளும், திறமையில்லாத அவரது துணை ஜனாதிபதி தேர்வும், அவரது கட்சியின் ஆட்சியில் நேர்ந்த பொருளாதாரத் தேக்கமும் அவருக்குக் கடும் தோல்வியை ஏற்படுத்தின.

பரபரப்பான தேர்தல் முடிந்து, மகத்தான வெற்றி பெற்று வரும் ஜனவரி 20 அன்று பொறுப்பேற்க ஒபாமா காத்திருக்கிறார். இடைப் பட்டக் காலத்தில் அவரது மந்திரி சபையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பொருளாதாரச் சிக்கல்களுக்குத் தீர்வுகளைக் கண்டு வைத்து ஆட்சி பொறுப்பேற்றவுடன் அவசர கால அடிப்படையில் நிலமை மேலும் மோசமாவதற்குள் தீர்வுகள் கொடுக்க வேண்டும்.

ஒபாமாவின் வெற்றியினால் அமெரிக்க இந்திய உறவில் பெருத்த மாறுதல்கள் இருக்காது என்றே தோன்றுகிறது. ஒபாமா தன் தேர்தல் பிரச்சாரங்களின் பொழுது இந்தியாவின் பிரச்சினைகளை நன்கு அறிந்தவர்காகவே தெரிந்தார். நம் அரசியல்வாதிகள் கூட அனுதாபம் தெரிவிக்க மறந்த ஃபீல்டு மார்ஷல் மானெக்‌ஷாவின் மறைவுக்கு ஒபாமா அனுதாபம் தெரிவித்தார்.

நம் அரசியல்வாதிகள் கூட வாழ்த்துத் தெரிவிக்க மறுக்கும் தீபாவளிப் பண்டிகைக்கு முதல் ஆளாக வாழ்த்துத் தெரிவித்திருந்தார். ராசியின் மேல் உள்ள நம்பிக்கையின் காரணமாக ஒரு சிறிய அனுமன் உருவத்தை தன்னுடனே எப்பொழுதும் வைத்திருந்தார். தனக்கு ஆன்ம பலமும் தன்னம்பிக்கையும் அந்த அனுமன் உருவம் வழங்குவதாக நம்பிக்கைக் கொண்டிருந்தார். பாக்கிஸ்தானுக்கு அமெரிக்கா அளிக்கும் நிதிய்தவியைத் துர்பிரயோகம் செய்து இந்தியாவின் மீது தீவீரவாதத் தாக்குதல் நடத்தப் பய்ன் படுத்துவதாக பாக்கிஸ்தானை வெளிப்படையாகக் கண்டனம் செய்திருந்தா.

ஆனால் தான் ஆட்சிக்கு வந்தால் அமெரிக்காவின் வேலைகள் வெளியேற்றம் செய்யப் படுவதைத் தடுக்க உள்நாட்டில் வேலை வாய்ய்பு ஏற்படுத்தும் நிறுவங்களுக்கு வரிச்சலுகை அளிக்கப் போவதாகக் கூறியுள்ளார். இதன் காரணமாக இந்தியாவின் பி பி ஓ மற்றும் ஐ டி நிறுவனங்களுக்கு லேசான பாதிப்பு ஏற்படலாம். ஆனால் மிகுந்த அளவிலான பாதிப்பாக அவை இருக்காது. மற்றபடி இந்திய அமெரிக்க நல்லுறவு தொடரவே வாய்ப்புகள் உள்ளன.

அமெரிககவின் மிக மோசமான பொருளாதார நிலமையும், தொடர்ந்து அதிகரித்து வரும் வேலை இழப்புக்க்களும், முழுகிக் கொண்டிருக்கும் நிதி நிறுவனங்களும், மதிப்பை இழந்து வரும் பங்குச் சந்தையும் மிகவும் கடுமையான சவாலான ஒரு நிலைமையை ஏற்படுத்தியுள்ளன. புதிதாக பதவியேற்கவிருக்கும் ஒபாமாவிற்கு இது மிகவும் சோதனையான பணி காத்திருக்கின்றது.

உலக அளவிலும் ஈரானின் அணு ஆயுதத் தாயாரிப்பு, ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு முயற்சிகள். ஆப்கானிஸ்தானில் தாலிபான்களின் அட்டூழியங்கள். ஈராக்கிலிருந்து வெளியேற வேண்டிய நிலைமை என்று மிகவும் சிக்கலான சவால்கள் அவருக்குக் காத்திருக்கின்றன. பொருளாதாரத் தேக்கத்தில் இருந்து அமெரிக்காவை மீட்டெடுக்கும் உடனடியான அவசர பணி அவரை எதிர் நோக்கியுள்ளது. எப்படி இத்தனை பிரச்சினைகளையும் தீர்க்கப் போகிறார் என்று அமெரிக்கா மட்டும் அல்லாமல் உலகமே அயர்ச்சியுடனும் ஆர்வத்துடனும் எதிர் நோக்கியுள்ளது.

அமெரிக்காவின் வரலாற்றுத் திருப்பு முனைத் தேர்தல் இந்தத் தேர்தல். 50 வருடங்களுக்கு முன்பாகக் கூட வாக்களிக்கும் உரிமை கூட இல்லாமல் இருந்த அடிமை இனத்தில் பிறந்த ஒருவரால் தன் திறமை, அறிவு, ஆற்றல் மட்டுமே வைத்துக்கொண்டு ஜனாதிபதியாக முடிந்திருக்கும் அற்புதம் நிகழ்ந்திருக்கிறது அமெரிக்காவில்.

ஐந்து வருடங்களுக்கு முன்பாகக் கூட அடையாளம் தெரியாமல் இருந்த ஒரு கருப்பின சமூக சேவகர் இன்று உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார். ஆம், மாற்றம் வந்தே விட்டது. ஆப்பிரிக்க அமெரிக்கர்களுக்கு ஓட்டு உரிமை கொடுக்கப் பட்ட பொழுது அவர்களது அடிமை விலங்கு சட்ட ரீதியாக மட்டுமே விலக்கப் பட்டிருந்தது.

ஆனால் இன்றோ மனோ ரீதியாகவும் கூட தலைக்கு மேலே இருந்த கண்ணாடிக் கூரை நொறுங்கி, இடம் விட்டு, வானம் ஒன்றே எல்லை என்று வழி விட்டிருக்கிறது. இது எழுச்சி மிக்க ஒரு மாறுதலே. அவர் மீது ஒட்டு மொத்த அமெரிக்காவும், நிற வேற்றுமை, இன வேற்றுமை மத வேற்றுமை இன்றி நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்.

இந்த அபரிதமான நம்பிக்கையை அவர் எவ்வளவு தூரம் நிறைவேற்றப் போகிறார் என்பது பொருத்திருந்து காண வேண்டிய ஒன்று. ஆனால் இந்த மாற்றம் மக்களிடையே குறிப்பாக ஆப்பிரிக்க அமெரிக்க மக்களிடமும், வெள்ளையர் அல்லாத பிற மக்களிடமும் ஏற்படுத்தி இருக்கும் எழுச்சியும், நம்பிக்கையும், எதிர்காலம் குறித்த தன்னம்பிக்கையும் மகத்தானது. அந்த நம்பிக்கையே இந்த அதிபர் தேர்தல் ஏற்படுத்திய மிக முக்கியமான மாறுதல்.

ஒபாமாவினால் அவர் வாக்குறுதி அளித்திருக்கும் பொருளாதார மாற்றத்தைக் கொணர முடியாமல் போகலாம் ஆனால் அவரது தேர்வு மக்களிடையே எழுப்பி இருக்கும் மன எழுச்சியும் நம்பிக்கையுமே அவர் கொணர்ந்த முக்கியமான மாற்றம். அந்த மாபெரும் மாற்றத்தை உலகமே வியந்து வரவேற்கிறது அமெரிக்கா மீது உலக மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் ஒரு வித கசப்பையும், அவநம்பிக்கையையும், அச்சத்தையும் கூட இந்த மாற்றம் ஓரளவுக்குப் போக்கக் கூடும் என்னும் பொழுது இது உலக அளவிலும் கூட ஒரு வரவேற்கத்தக்க மாற்றமே..

நம்மைப் போன்ற ஒரு சாதரணர் அமெரிக்காவின் தலைமைப் பதவிக்கு வர முடியும் என்ற நம்பிக்கையை ஒவ்வொரு மத்ய வர்க்க அமெரிக்கர் மனதிலும் உருவாக்கியுள்ளது இவரது வெற்றி. குறிப்பாக ஆப்பிரிக்க அமெரிக்க இனத்திற்கு இவரது வெற்றி மாபெரும் தன்னம்பிக்கையும், உற்சாகத்தையும் அளித்துள்ளது.

தனது நிறத்தை முன் வைத்து இவர் எந்த விதப் பிரச்சாரமும் செய்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தன் ஆற்றலையும் திறமையையும் மட்டுமே முன் வைத்து பிரச்சாரம் செய்தார். இவரது வெற்றியின் மூலம் அமெரிக்காவின் நிற வேற்றுமை ஒரே இரவில் மாயமாக மறைந்து போய் விடாது. இருந்தாலும் அமெரிக்கர்கள் நேற்றை விட இன்று சற்றே நிறத்தை மறந்து நெருக்கமாக வந்திருக்கிறார்கள் என்பதையே இந்த மாற்றம் உணர்த்துகிறது.

தனது திறமையினாலும், புத்தி கூர்மையினாலும், தான் தேர்வு செய்துள்ள அனுபமிக்க மந்திரிகளினாலும், திறமையான நிர்வாகத்தினாலும் மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து ஒரு மாற்றமுள்ள அனைத்துத் தரபபாரின் ஆதரவையும் நன் மதிப்பையும் பெற்ற ஒரு அமெரிக்காவையும் அதன் மூலம் உலக அமைதியையும் நல்லிணத்தையும் ஏற்படுத்துவார் என்று நம்புவோம். அதற்கான சக்தியை அவருக்கு ஆண்டவன் அளிக்க வாழ்த்துகிறேன்.