Tag Archives: Birds

ஆத்தி… இது வாத்துக் கூட்டம்!

கோழி மிதித்து குஞ்சு சாகுமா?

சாகும்.

முந்தாநாள் பார்த்தபோது ஆறு வாத்துக்குட்டிகள் இருந்தன.
நேற்று ஐவரானது.
இன்று நால்வர் மட்டுமே காணக் கிடைத்தனர்.

சாட்ஜிபிடி இடம் ஏன் இப்படி என்று கேட்டால்,

  1. இங்கே நிறைய குள்ளநரிகளும் பெருச்சாளிகளும் பருந்துகளும் உண்டு. அவை வேட்டையாடுகின்றன
  2. குழந்தையாக இருப்பதால் நோய்க்கு எளிதில் உள்ளாகும். அந்த உடல்நல பாதிப்பால் இறக்கின்றன
  3. பாஸ்டன் பக்கம் திடீரென்று பூஜ்யம் டிகிரிக்குச் சென்று குளிரும். நாலு நாளாக நல்ல மழை. அந்த தட்பவெட்ப மாற்றங்களினால் மரணமடைகின்றன
  4. தந்தை வாத்திற்கு தன் குழந்தைதானா என்று சந்தேகம் வந்தால் குட்டிகளைக் கொன்றுவிடுகின்றன

அது சரி, சாட்ஜிபிடியிடம் ஆதித்த கரிகாலன் எப்படி இறந்தார் என கேட்டால் அது மணி ரத்தினத்தை உதிர்க்கிறது.

Geese – வாத்துகள்

முந்தைய இடுகை: Rabbit – முயல் :: சசவிசாடம்

ஹம்ஸகமனம்

அகராதி: ஹம்ஸகமனம் hamsa-kamaṉam, n. < haṃsagamana. Gait of a swan or goose; அன்னநடை.

Geese

பேரவை அரங்கு நிரம்பி இருந்தது. வருடா வருடம் ஒவ்வொரு நகரமாகத் தேர்ந்தெடுத்து, அந்த நகரத்தில் கூட்டம் போடுவது வழக்கம் ஆகும். 2014ல் வாஷிங்டன் டிசி தலைநகரில் கூடினோம். 2015ல் டல்லாஸ் மாநகரத்தில் கூட்டம் போட்டோம். இந்த வருடம் முதல் முறையாக எல்லோரையும் வைய விரிவு வலை மூலமாக இணையம் கொண்டு ஒன்று சேர்க்கிறோம்.

எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. விமானச் செலவு அதிகம் என்று ஏமாற்றம் கொள்ளத் தேவையில்லை. விடுமுறை கிடைக்கவில்லை என்று ஒத்திப் போட வேண்டியதில்லை.

இந்த தடவை வைஜெயந்திமாலா பாலி நடனம் ஆடுகிறார். நீங்கள் கேட்பது எனக்குப் புரிகிறது. அதெப்படி எழுபத்தியெட்டு வயதில் அவரால் நாட்டியம் புரிய இயலும்? தள்ளாத வயதில் விமானம் ஏறி பேரவை மேடை ஏறினாலும், எப்படி அவரால் ஆட்டம் கட்ட முடியும்? அங்கேதான் நான் நுழைகிறேன்.

‘ஜீன்ஸ்’ படத்தில் பிரபு தேவாவின் தம்பி ராஜு சுந்தரம் செய்வாரே… அந்த மாதிரி விஷயத்தை நிஜமாகவே அரங்கில் செய்யப் போகிறேன். அந்தக் கால ‘யாரடி நீ மோகினி’ பாடலில் வரும் வைஜயந்தி மாலா முகத்தை வைத்து, இந்தக் கால ‘மெர்சலாயிட்டேன்’ பாடலுக்கு ஆட வைக்கப் போகிறேன். நேயர் விருப்பமாக, எந்தப் பாடலுக்கு வேண்டுமானாலும் ஆட வைக்கலாம். சொல்லப் போனால் கேட்டி பெர்ரியின் ‘baby, you’re a firework’ பாடலுக்குக் கூட வைஜெயந்தி ஆடுகிறார்.

நீங்கள் குழம்புவது புரிகிறது. கூடுவதோ, ‘தமிழ்ப் பேரவை’. ஆனால், அதில் எப்படி காத்தி பெர்ரி என்னும் ஆங்கிலச்சியின் பாடல் என்று சிந்தை தடுமாறுகிறீர்கள். ஜூலை நான்கிற்கு அமெரிக்காவில், தமிழர்கள் பலரும் ஒன்று கூடி வெடி வெடிப்போம். இந்த தடவை, அந்த வெடிகள் எல்லாம், சிவகாசியில் இருந்து இறக்குமதியானவை. சென்ற ஆண்டில் சீனத் தயாரிப்புகள் வாங்கிவிட்டோம் என்று சிலர் பிரச்சினை செய்தார்கள். அதனால் இந்த தடவை வாத்து மார்க் பட்டாசுகள் வாங்கி இருக்கிறோம்.

(வாத்து கருத்து: கதையின் தலைப்பு மேலே இருக்கும் வாசகத்தில் வெளிவந்துவிட்டது)

நடிகர் தனுஷ் எழுதும் பாடல்களை விட, கவிஞர் வாலி எழுதிய திரைகானங்களை விட கேத்தி பெர்ரியின் பாடலில் நிறைய தமிழ் வார்த்தைகள் இருக்கின்றன என்று தற்போதைய தமிழ்ச் சங்கத் தலைவர் தெரிவித்தார். ஃபீலு, பிளாஸ்டிக், ஸ்டார்ட்டு, பேப்பர், சிக்ஸு, லைட்டு, ஜூலை, நைட்டு, கலரு, அரிகேன், ஹேர்ட்டு (வாத்து கருத்து: இவர் பேர்க்லி தமிழ்ப் பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட் அல்ல) என பல உன்னத தமிழ்ச் சொற்களை காத்தி பெர்ரி தன் பாடலில் பயன்படுத்தி இருப்பதாக தற்போதைய தமிழ்ச் சங்கத் தலைவர் யூடியுப் விழியத்தில் பேட்டியாக விளக்கி இருக்கிறார்.

”தற்போதைய தமிழ்ச் சங்கம்” எவ்வாறு உருவானது என்பதையும் அந்தப் பேட்டியில் அவர் சொல்கிறார். முதலில் தமிழ்ச் சங்கம் மட்டும் இருந்ததாம். அது இன்னொருவர் வந்தவுடன் ‘ஒரு தமிழ்ச் சங்கம்’ என ஆனதாம். மூவர் நுழைந்தவுடன் ‘புது தமிழ்ச் சங்கம்’ வந்ததாம். இது பலுக்கல் பிழை என்பதால் நான்காவதாக ‘புதுத்தமிழ்ச் சங்கம்’ உருவானதாம். அதற்குப் போட்டியாக ‘பழையத் தமிழ்ச் சங்கம்’ தோன்றி இருக்கிறது. இவை எல்லாம் போதை இல்லாததால் ”தற்போதைய தமிழ்ச் சங்கம்” உருவானது.

வைஜெயந்திமாலாவின் ஆடலை அமெரிக்காவிற்குக் கொணர ‘புதுத்தமிழ்ச் சங்கம்’ முன்னெடுத்திருக்கிறது. காத்தி பெர்ரியின் ஃபையர் வொர்க் பாடலை அதற்கு வைத்துக் கொள்ள எல்லோரும் ஒருமித்த கருத்தொற்றுமையில் இருக்கிறார்கள். ஹோலாகிராம் மூலம் வைஜெய்ந்தியை உங்களின் வீட்டில் தோன்ற வைப்பது என் வேலை.

ஏற்கனவே வாத்து கதாபத்திரத்தை நான் பல முறை இந்தப் புனைவில் உலவ விட்டிருக்கிறேன். என்றாலும், தமிழ்ப் பேரவைக்கும் வாத்துகளுக்கும் என்ன சம்பந்தம் என்பதை உங்களுக்குச் சொல்ல நான் கடமைப்பட்டிருக்கிறேன்.

’பூப்பூக்கும் மாசம்… தை மாசம்’ என்று குஷ்பூ பாடினாலும், அமெரிக்காவில் வசந்த காலமாக, ஏப்ரலும் மே மாதமும் விளங்குகிறது. அந்த நேரத்தில், ஒவ்வொரு ஏரிக்கரையிலும் இரு வாத்துகள் குடிபுகும். இப்படித்தான் பன்னெடுங்காலமாக என் வீட்டின் வாயிலில் இருக்கும் ஏரியிலும் வாத்துகள் வந்து கொண்டிருந்தன.

என்னுடைய வீடு கட்டப்படும்வரை எனக்கொரு பிரச்சினையும் இல்லை. அந்தப் பிரதேசம் முழுக்கக் காடாகக் கிடந்தது. அங்கே நரியும், மான்களும், வான்கோழிகளும், வாத்துகளும், ஆமைகளும், பாம்புகளும் சகஜமாகக் கொஞ்சிக் குலாவித் திரிந்தன. அந்தக் காட்டை சீர்திருத்தி (வாத்து கருத்து: இங்கே சீர்திருத்தம் என்பது கம்யூனிஸம் போல் பொலிடிகலி கரெக்ட் ஆகத் தெரிகிறது. அதற்கு பதிலாக ‘அழித்து’ என்னும் வார்த்தையை உபயோகிக்கவும்.), என் வீட்டைக் கட்டிக் கொண்டேன். வீடு வந்தவுடன் ஓநாய்களும், நரிகளும் ஓடி விட்டன.

ஆனால், வருடந்தோறும் இரு வாத்துகள் ஏப்ரல் மாதத்தில் வரும். மே மாதத்தில் முட்டை இடும். ஜூன் மாதத்தில் குஞ்சு பொறிக்கும். ஜூலை மாதத்தில் குட்டிகள் எல்லாம் அப்பா, அம்மாவை விடப் பெரியதாகி இருக்கும். ஆகஸ்ட் மாதத்தில் என் தோட்டத்தையும் என்னுடைய புல்வெளியையும் கபளீகரம் செய்யும். சாப்பிட்டதை, என் வீட்டு முற்றத்தில் பீ பொழியும். வீடு, கிட்டத்தட்ட காடாகி விடும்.

இந்த வாத்துக்களை பயமுறுத்துவதற்காகவே, ஹாலோகிராம் நுட்பத்தை சுய ஆர்வலராகக் கற்றுக் கொண்டேன். எழுத்தாளர் சுஜாதாவைப் படித்து விட்டு, இந்த வார்த்தையைத் தெரிந்து வைத்திருந்தாலும், நிஜத்தில் முப்பரிமாணமாக்கி ஒரு நரியை உலவ விடுவதுதான் என் நோக்கம். பழங்காலத்தில் காக்கா வந்து வயல்வெளியை மேயாமல் இருக்க சோளக் கொல்லை பொம்மை வைத்திருப்பார்கள். அது போல், நரியின் உருவம், என்னுடைய புல்வெளியில் உலவ வேண்டும். வாத்துகள் தெரிந்தால், அவற்றில் இருந்து ஊளையிடும் சத்தம் வர வேண்டும். அவர்கள் நெருங்குவதற்கு முன், நரியின் திண்மத் தோற்றங்காட்டி, அவர்களைத் துரத்த வேண்டும். நரியைப் பார்த்தால், வாத்துகள், தங்களுடைய இல்லத்தை என்னுடைய கொல்லைப்புறத்தில் அமைத்துக் கொள்ளாது. இதற்கு ’நிம்பி’ என்று பெயர் சூட்டினேன்.

நிம்பி என்பது நம்பி என்பதன் மரூஊ. “Not In My Back Yard” என்பதன் சுருக்கம்.

வாத்துக்களைத் துரத்துவது தமிழ்ப் பேரவையின் கவனத்தை ஈர்த்தது. அப்படித்தான் வைஜெயந்தி ப்ராஜெக்ட் எனக்குக் கிடைத்தது. நரியின் பருநோக்கியை உலவவிட்டது போல் வைஜெயந்தியை உலவவிடச் சொல்லி இருக்கிறார்கள்.

வைஜெயந்தி மாலா என்னும் பெயருக்குத்தான் என்ன ஒரு சக்தி? அந்தப் பெயரைக் கேட்டவுடனேயே நுழைவுச்சீட்டுகள் எல்லாம் விற்றுவிட்டன. ஆனால், எவராலும் நேரில் வர இயலாது. அவர்களுக்காகத்தான் ’வாஸ்து’ என்று பெயரிட்ட இந்த app நிரலி தயாரித்து இருக்கிறேன். (வாத்து கருத்து: என் பெயருக்கு பங்கம் விளைவிக்குமாறு, வாத்து என்பதில் ஒரேழுத்தை மாற்றி, வாஸ்து என்று விற்பதற்காக காப்புரிமை வழக்குப் போடப் போகிறேன்.)

’வாஸ்து’ ஆப்பு மட்டுமே இந்த வருடப் பேரவை. அதாவது உங்களின் இல்லத்தின் புழைக்கடையிலேயே வைஜெயந்திமாலாவைத் தோற்றுவிக்கலாம். நான் நரிகளைக் கொண்டு வாத்துகளைத் துரத்தினேன். வைஜெயந்திமாலாவை வைத்து பேரவை வாத்துகளைத் துரத்துகிறது.

ஆக்கிரமிப்பு – அணில் – அழகு

Squirrel_Eating_Bird_Feeder

வீட்டின் கொல்லைப்புறத்தில் நிறைய மரங்கள். அப்படியே கொஞ்சம் பின்னோக்கி பார்த்தால் நீர்நிலை. அற்ற குளமாக இல்லாததால் அறுநீர்ப் பறவைகள் எக்கச்சக்கம். குயில், வாத்து, வாலாடி என்று கலவையாக என்னுடைய முற்றத்தில் எட்டிப் பார்க்கும். பழுப்பு நிறத்தில் மரத்தோடு மரமாக கலந்திருக்கும் முன்றிலை அடர் சிவப்பிலும் வெளிர் நீலத்திலும் வண்ணமயமாக்கும். எங்கள் இடத்தில் வீடு அமைத்திருப்பதற்கு பரோபகராமாக கொஞ்சமாவது தானியம் இடலாமே என்று கேட்பது போல் கீச்சிடும்.

நானும் காஸ்கோ சென்று இருப்பதற்குள் பெரிய மூட்டையாக பறவை உணவு வாங்கி வந்தேன். அதை நாள்தோறும் இட்டு வந்தேன். இப்பொழுது புதிய விருந்தினர்கள் வந்தார்கள். மொட்டைச் சுவரில் போவோர் வருவோரை வம்புக்கு இழுக்கும் வேலையற்ற தமிழக இளைஞர்கள் போல் அணில்கள் அமர்ந்திருந்தன. மூன்று பேர் திண்ணைப் பரணில் உட்கார்ந்து கொண்டு கிட்ட நெருங்கும் தேன்சிட்டுகளையும் நாகணவாய்களையும் விரட்டி விட்டு, சூரியகாந்தி விதைகளை மொக்கிக் கொண்டிருந்தன.

இந்த அணில்களின் முதுகில் இராமர் போட்ட கோடுகள் இல்லை. சேதுத் திட்டத்திற்கு உதவாததால் கோடுகள் இல்லாத பெரிய இராட்சதர்கள். கிட்டப் போனால் ஓடி விடும். தள்ளிப் போனபின், தீனிக் கலத்தில் குடி கொள்ளும். எனவே, பறவைகளுக்கு… மன்னிக்க அணிற்குஞ்சுகளுக்கு சாப்பாடு போடுவதை நிறுத்தி வைத்தேன்.

அந்தப் பெரிய பை நிறைய பறவை தானியம் அம்போவென்று கார் நிறுத்தும் கொட்டகையில் இறுக்கிக் கட்டப்பட்டு தூங்கிக் கொண்டிருந்தது. பட்சிகளுக்காக நல்லதொரு கலயம் கிடைக்கும்வரை, அணிற்பிள்ளைகள் திருடமுடியாத கலயம் கிடைக்கும்வரை, தானியத்தை அங்கேயே வைத்திருப்பதாக திட்டம்.

நேற்று காரை நிறுத்த கொட்டகைக்குள் நுழையும்போது அணிலை பார்த்த மாதிரி சம்சயம். நடுநிசியில் கண்ணாடி பார்த்தால் ஆவி தெரிவது போல், மனைவியின் கைப்பக்குவத்தில் ருசி தெரிவது போல், நிரலி சரிபார்ப்பவருக்கு பிழை தெரிவது போல், இதுவும் இல்லாத ஒன்று. நம் மனப்பிரமை என ஒதுக்கினேன்.

மனம் ஒப்பவில்லை. தீவிர ஆராய்ந்ததில், மூலத்தையே கண்டுபிடித்து விட்டிருந்தது அணில்கள். ஆதார மூட்டைக்குள்ளேயே சென்று சாப்பிட்டு திரும்ப ஆரம்பித்திருக்கின்றன. கார் கொட்டகை திறக்கும்போது நுழைவது; அதன் பின் இரண்டு காரும் செல்வதற்குள் தப்பிச் செல்வது. முழு தானியங்களும் கிட்டத்தட்ட அம்பேல்.

மனிதனுக்கு ஆறறிவு என்று கண்டுபிடித்த தமிழர், அணிலுக்கு எத்தனை அறிவு என்று அறிந்திருக்கிறார்கள்?

அமெரிக்காவால்/அமெரிக்காவினால்/அமெரிக்காவில் ஏவியன் ஃப்ளூ?

அதிகாரபூர்வ அமெரிக்கா செய்தி:

Feds apologize but insist birds had to be poisoned – NJ.com: Hundreds of birds that dropped dead on Somerset County cars, porches and snow-covered lawns, alarming residents over the weekend, were all of a rather foul breed of fowl — the notorious European starling, which the United States Department of Agriculture killed on purpose.

Everything from Avian influenza to West Nile disease, both bird-killing ailments that also affect humans, was feared. But no humans or pets were ever at risk, said the USDA, contending the pesticide, known as DRC-1339, is inert once it is eaten by the birds and becomes metabolized.


கனடா செய்தி: 60,000 B.C. turkeys culled in avian flu outbreak:

“The mass destruction of thousands of turkeys on a farm near Abbotsford, B.C., began Monday after the Canadian Food Inspection Agency (CFIA) confirmed a positive test result for avian flu over the weekend.

‘Today the Canadian Food Inspection Agency has started the humane destruction of approximately 60,000 birds on the infected premises in British Columbia where H5 avian influenza has been confirmed,’ said Sandra Stephens, a CFIA disease control specialist.”


இந்தியா செய்தி:

பறவைக் காய்ச்சல்: கோழிகள் அழிப்பு தொடர்கிறது: இரு கிராமங்களிலும் நேற்று 2ஆவது நாளாக சுமார் 7 ஆயிரம் கோழிகள் அழிக்கப்பட்டதாகவும், மால்டாவில் 600 கோழிகள் பறவைக்காய்ச்சலாம் உயிரிழந்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

45 ஆயிரம் கோழிகளை அழிப்பதற்கு கூடுதல் காலம் தேவைப்படுதால், 32 குழுக்களாக பிரிந்து அழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.


அமெரிக்காவில் என்ன நடக்கிறது?

சீனாவில் பறவைக்காய்ச்சல் என்று நிருபணம் ஆன பின், நியு ஜெர்சியில் விஷம் கலந்த மாத்திரைகளை கொடுத்து பறவைகளை கொல்ல சொல்லி உத்தரவு.

நியுஜெர்சி வீடுகளில் பறவைகளாக செத்து விழுந்திருக்கிறது. ஒரு சில வீட்டு கூரைகளில் நாற்பதுக்கும் மேலாக கொத்தாக பொத்தென்று மரணம் எய்திருக்கின்றன. அவற்றை அகற்றுவது வீட்டு சொந்தக்காரரின் கடமை எனவும் சொல்லப்பட்டுவிட்டது.

நியு ஜெர்ஸி நாளிதழில் செய்தி வந்திருக்கிறது. ஆனால், இதுகுறித்து எதுவும் எழுதக்கூடாது சொல்லவும் கூடாது என்று கட்டளை இட்டது போல் இராட்சச விநியோக இதழ்களில் கப்சிப்.

அதிக பறவைத்தொகை, அதனால் கொன்று விட்டோம் என்பது மேல் துடைப்பு.

அப்படி இருந்தால் வழக்கம் போல வேட்டைக்கு அனுமதி தந்திருப்பார்கள். இதே போல் பொது நலத்துறை மூலமாக ஒரு முறை வாத்து முட்டைக்குள் விஷம் ஊசி மூல நிரப்பினார்கள்.

இதன் தொடர்பாக ஆப்கானிஸ்தானில் சிலர் பரிசோதித்துக் கொண்டிருக்கும் போது பாதிக்கப்பட்டு பிளேக்கால் இறந்தனர். இதை உளவுத்துறை மிக இரகசியமாக வைத்திருக்கிறது. ஆக ஸ்ட்ரெயின் தயார்.


தொடர்புள்ள சில செய்திக் குறிப்பு:

1. AFP: Japan suspends imports of French foie gras, poultry

2. Bird flu strikes Cooch Behar – Kolkata – Cities – The Times of India: After Malda and Darjeeling, bird flu has now spread to Cooch Behar.

3. The Ecologist – 10 things you didn’t know about bird flu: The biblical concept of ‘dominion over the fish of the sea and over the birds of heaven; and every living thing that moved upon the earth’ has populated a veritable Pandora’s box full of humankind’s greatest killers. Scourges such as smallpox and measles, which have claimed hundreds of millions of lives in recent centuries, were birthed in the barnyard about 10,000 years ago.

Smallpox likely came from camelpox and measles from the rinderpest virus of cattle. Before the domestication of ducks, there was likely no such thing as the human flu or influenza pandemics. Domesticated pigs probably gave us whooping cough, and water buffalo, leprosy. Horses likely gave us the common cold.