Monthly Archives: ஜூன் 2005

அன்னியன் தேவை (2)

Indians pay Rs 21,068 cr per year as bribe- The Times of India ::

ஆர். கே. லஷ்மண் சித்திரங்களில் வரும் ‘common man’ போன்றவர்கள் லஞ்சமாக இருபத்தோராயிரத்து அறுபத்தியெட்டு கோடிகள் கொடுத்ததாக Transparency International அறிவித்திருக்கிறது.

  • கருத்து கணிப்பில் பங்கேற்றவர்களில் 62 சதவீதம் லஞ்சம் கொடுத்ததாக ஒப்புக் கொண்டுள்ளனர்.
  • போன வருடத்தை விட இந்த வருடம் ஊழல் அதிகரித்துள்ளதாக மூன்றில் ஒருவர் சொல்லியிருக்கிறார்கள்.
  • முதலிடம்: காவல் துறை
    2: உள்ளூர் நீதிமன்றங்கள்
    3. நில நிர்வாகம்

    (முதலிரண்டைப் பார்க்கும்போது, மக்கள் சட்டத்துக்கு ரொம்பவே பயப்படுகிறார்கள்.)

  • நீர்வள நிர்வாகம்தான் குறைந்த அளவில் லஞ்ச ஊழலில் ஈடுபட்டுள்ளது. (தண்ணீர் இன்னும் குழாயில் வருகிறதா?)
  • கேரளாவில்தான் லஞ்சம் மிகவும் குறைச்சல். தலை பத்தில் தமிழ்நாடு இடம்பிடித்திருக்கிறது.
  • 1. பீஹார்
    2. ஜம்மு காஷ்மீர்
    3. மத்திய பிரதேசம்
    4. கர்னாடகா,
    5. ராஜஸ்தான்,
    6. அஸ்ஸாம்,
    7. ஜார்கண்ட்,
    8. ஹரியானா
    9. தமிழ்நாடு
    ….
    11. டெல்லி
    ….
    16. மஹாராஷ்டிரா
    17. ஆந்திர பிரதேஷ்
    18. குஜராத்
    19. ஹிமாசல் பிரதேஷ்
    20. கேரளா

    அன்னியன் தேவை (1)

  • போட்டி

    குருபாலும் தனபாலும் கார் பந்தயம் வைத்துக் கொள்கிறார்கள். ஐந்து கி.மீ. ரேஸில் தனபால் மணிக்கு 22 கி.மீ. வேகத்தில் செல்கிறான்.

    தனபால் 3/5 கி.மீ. கடந்தபின் மூன்று விநாடிகள் காத்திருந்த பிறகு குருபால் வண்டியை எடுக்கிறான். ஒவ்வொரு x-ஆவது கி.மீ.யையும், மணிக்கு 5/2*3-x வேகத்தில் கடக்கிறான்

    யார் ஜெயித்தார்கள்? எப்படி?

    கேட்டவர்: mindsport

    ஷரபோவாடன்

    டென்னிஸ் விளையாட சில துப்புகள்

    1. ‘ஆ’, ‘ஊ’, ‘ஏ’, ‘ஈ’, ‘ஓ’ என்று கத்த சண்டைக் காட்சி இயக்குநர்களிடம் கற்றுக் கொள்ள வேண்டும்.

    2. ஒரு புள்ளிக்கும் அடுத்த புள்ளிக்குமான இடைவெளியில் ராக்கெட்டில் உள்ள சதுரங்களை எண்ணுவதற்காக சகுந்தலா தேவியைத் தொடர்பு கொள்ள வேண்டும்.

    3. ஓரமாய் உட்கார்ந்திருக்கும் நடுவர்களை அனல் கக்கி முறையிட ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களை அணுக வேண்டும்.

    4. தலையில் துண்டு போட்டு வெயிலைத் தணிக்க, தோற்றுப் போன அரசியல்வாதிகளிடம் முக்காடிடுவது எப்படி என்று தெரிந்து கொள்ள வேண்டும்.

    5. சின்ன சின்ன விளம்பரங்களை சட்டையில் தைத்துக் கொள்ள ஆறு புள்ளி எழுத்துருவில் மறுப்புகூறை முன்வைக்கும் மென்பொருளாளர்களிடமிருந்து பார்த்துக் கொள்ள வேண்டும்.

    6. நான்கு பந்துகளை ஒரே சமயத்தில் வைத்துக் கொள்ள, நாலு தமிழக காங்கிரஸ் தலைவர்களை ஒரே சமயத்தில் மேய்க்கும் சோனியாவிடம் அறிய வேண்டும்.

    7. போன முறை ஜெயித்த பந்தையே மீண்டும் கண்டுபிடித்துப் பெற, இரும்புக் கோடரியை நதியிடமிருந்து திரும்பப் பெற்றவனிடம் கேட்க வேண்டும்.

    8. நெட்டில் பட்டு திருடிய பாயிண்டுக்கு ‘சாரி’ கேட்க, ஜார்ஜ் புஷ்ஷிடம் அறிய வேண்டும்.

    9. ஒரு செட் தோற்றாலும், மீண்டு வந்து வெல்வதற்கு தமிழ்ப்பட ஹீரோயிஸக் கதைகளைக் கண்ணுற வேண்டும்.

    10. காலில் கோடி டாலருக்கு காலணி அணிந்தாலும், பந்தில் மட்டுமே குறியாக இருப்பதை, பங்குவிலை எவ்வளவு ஏறினாலும் அசராமல் அடுத்த தொழில்நுட்பத்தை நோக்கும் கூகிளிடம் நோக்க வேண்டும்.

    போன வருட ஷரபோவா பதிவு.

    பிடித்த 10 படங்கள்

    ரீடிஃப் – சுஜாதா ::

  • மதர் இந்தியா
  • லகான்
  • சலாம் பாம்பே
  • சிதம்பரம்
  • முதல் மரியாதை
  • பதேர் பாஞ்சாலி
  • நாயகன்
  • முள்ளும் மலரும்
  • 36, சௌரிங்இ லேன்
  • கரீஜ்

    தியோடார் பாஸ்கரன், ரவி கே சந்திரன், பி. சி. ஸ்ரீராம், அடூர் கோபாலகிருஷ்ணன், மோஹன்லால், ராம் கோபால் வர்மா, சாபு சிரில், அமோல் பலேகர், கிரீஷ் காஸரவள்ளி போன்ற பிறரின் பட்டியலையும் பார்த்துவிட்டு, உங்க ‘தலை பத்தை’ சொல்லலாம். (வழி: teakada: Sujatha’s 10 Best Indian Movies)

  • கோவில் 1 கடத்தல் 2 காசு ?

    BBC NEWS | South Asia | ‘Held captive by the Tamil Tigers’ ::

    கோயம்பத்தூர் அருகே பதீஸ்வரர் கோவில் பேரூரில் இருக்கிறது. ஈழப் பதீஸ்வரர் கோவில் லண்டனில் இருக்கிறது.

    கோவில் என்றாலே நரியை பரியாக்கிய மாணிக்கவாசகர் முதல் இன்றைய முத்தையா ஸ்தபதி வரை ஏதாவது விவகாரம் இருந்து கொண்டேதான் இருக்கிறது.

    (கழுகு விகடன்: “இந்து சமய அறநிலையத் துறை தொடர்பான கோயில் வேலைகளை யாருக்குக் கொடுப்பது என்று முடிவெடுக்க வேண்டியது ஸ்தபதியின் வேலைதான். பல கோடி ரூபாய் கான்ட்ராக்ட் தொடர்பான விஷயம் அது. இந்தப் பதவியில் இருப்பவர்கள் நினைத்தால், பினாமி பெயர்களில் கான்ட்ராக்ட்களை எடுத்துக்கொண்டு கொழிக்கலாம்.”)

    சுனாமி நிதி தருவதற்காக இலங்கைப் பக்கம் சென்ற ராசிங்கம் ஜெயதேவனை விடுதலைப் புலிகள் பிணைக்கைதியாக வைத்திருந்திருக்கிறார்கள்.

    எல்.டி.டி.ஈ. இந்த குற்றச்சாட்டை மறுத்திருக்கிறது.

    விவேகானந்தனும் ஜெயதேவனுடன் கூட சென்றிருக்கிறார். லண்டன் வாழ் தமிழர்களிடம் சுனாமி நிதி திரட்டுவதற்கான பேச்சுவார்த்தைக்காக இருவரும் புலிகளைப் பார்க்கப் போயிருக்கிறார்கள்.

    சிவயோகம் டிரஸ்ட்டுக்கு லண்டன் வெம்ப்ளி கோவிலை எழுதி கொடுப்பதற்காக 42 நாள் கழித்து விவேகானந்தன் விடுவிக்கப்பட்டிருக்கிறார். திரைப்படத்தில் பிணைக்கைதியை பிடித்து வைத்திருப்பது போல், கையெழுத்தாவதற்காக, மேலும் இருபது நாள்களுக்கு ஜெயதேவன் சிறையில் இருந்திருக்கிறார்.

    கோவிலை அடிப்படையாகக் கொண்டு பணம் திரட்டுவதே இந்தக் கடத்தலின் நோக்கமாக ஜெயதேவன் நினைக்கிறார். கோவிலை கட்டுக்குள் கொண்டுவந்தபின் இங்கிலாந்தின் இன்ன பிற தமிழ் அமைப்புகளையும் அடைவதே குறிக்கோளாக இருந்திருக்கும் என சொல்லியுள்ளார்.

    விடுதலைப் புலிகளுக்கு பணம் போவதாக சொல்வதை சிவயோகம் ட்ரஸ்ட்டை நடத்தும் என். சீவரத்தினம் மறுத்திருக்கிறார். தான் புலிகளின் ஆதரவாளராக இருந்தபோதும் நிதி விநியோகத்தை வெளிப்படையாக நடத்துவாக சொல்லியிருக்கிறார். திரட்டப்படும் நிதி அனைத்தும் ஏழைகளுக்கும் அனாதைகளுக்கும் மட்டுமே செல்வதாக குறிப்பிடுகிறார்.

    ஆளுங்கட்சியின் தலையீட்டினாலும் நீதிமன்ற உத்தரவின் பேரிலும் கோவில் மீண்டும் பழைய நிர்வாகத்திடமே ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.

    எவ்வளவு பணம் கைமாறியது, 2001-இல் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகளுக்கு இந்த கடத்தலில் சம்பந்தமிருக்கிறதா, ஜெயதேவனை பிணைக்கைதியாக வைத்தது யார் என்பதை ஸ்காட்லாண்ட் யார்ட் விசாரிக்காவிட்டாலும், உள்ளூர் போலீஸ் விசாரித்து வருகிறது.

    அன்னியன் தேவை

    வி.விவேகா : Junior Vikatan.com :: மதுரை பஸ் ஸ்டாண்டு…

    பஸ்ஸுக்காக காத்திருந்தேன். என்னை நோக்கி ஒரு ஆள் வந்தான். அவன் கையில் ஒரு துணிப்பை. சுற்றுமுற்றும் பார்த்தபடி என்னிடம் பேச ஆரம்பித்தான். நானும் அவனை ஒருவித சந்தேகத்துடன் கவனித்தேன். அவனிடமிருந்த பையை பிரித்து என்னிடம் காட்டினான். அதில் புத்தம் புதிய புடவைகள்.

    “நான் ஒரு ஜவுளிக்கடையில வேலை பார்க்குறேன். ஜவுளி பார்சல்களை லாரிகளில் இருந்து இறக்கி வெச்சதால கூலியா கிடைச்சது. இந்த மூணு புடவைகளையும் எடுத்துக்கங்க! இருநூறு ரூபாய் மட்டும் கொடுத்தா போதும்” என்று திடீர் வியாபாரம் பேசினான். அந்தப் புடவைகளின் மதிப்பு நிச்சயம் ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமாக இருக்கும். என்னதான் இலவசமாகக் கிடைத்தாலும், இவ்வளவு விலை குறைச்சலாக யாரும் விற்க மாட்டார்கள்! ‘எங்கேயாவது திருடின புடவையாக இருக்கும்’ என்று நினைத்து, ‘வேண்டாம்பா’ என்று கட் அண்ட் ரைட்டாக சொல்லி ஒதுங்கிக் கொண்டேன்.

    இருந்தாலும் விடாப்பிடியாக என்னைத் துரத்திய அந்த ஆள், ஐம்பது ரூபாய்க்கு இறங்கி வந்துவிட்டான். அப்போதும் நான் மசியவில்லை. ஒருகட்டத்தில், “நீங்க சந்தேகப்படுறீங்கனு நினைக்கிறேன். அது சரிதான்! திருட்டுப் புடவைங்கதான் சார். ஆனா, புது புடவை. என்னால தினமும் தண்ணிப் போடாம இருக்க முடியாது. அதுக்காகத்தான் திருடினேன். காசுக்காக விக்கிறேன்” என்று கெஞ்ச ஆரம்பித்தான். நான் அவனைத் திட்டிவிட்டு அங்கிருந்து நகர்ந்தேன்.

    ஆனால், எனக்கு பின்னால் வந்த ஒரு நபர், அதே புடவைகளை நூறு ரூபாய் கொடுத்து வாங்கிச் சென்று விட்டார். அந்தப் பணத்தை எண்ணிப் பார்த்துக்கொண்டு, அந்த ஆள், அருகில் இருந்த ஒயின்ஷாப் பக்கம் ஒதுங்கியதை பார்த்தேன். இந்தமாதிரி திருடர்களை நாம் புறக்கணிக்காதவரையில் அவர்கள் திருட்டுத் தொழிலை எந்நாளும் விடமாட்டார்கள். பொருள் வந்தவிதத்தைப் பார்க்காமல், திருடர்களை ஊக்குவிக்கும் இந்தமாதிரியான நபர்களும் திருடர்கள்தான் என்பதை உணர்வார்களா?

    இவரா… இவருடனா… இப்படியா

    விடை கொடு எங்கள் நாடே:

    List of Displaced Numbers

    இந்திரா காந்தியை சூனியக்காரி என்று சொன்னது டூ மச் நிக்ஸன் சார்:

    Richard Nixon - Wax Museum

    படத்தில் என் கூட நிற்பவர் யார் என்று சொல்லுங்கள் பார்க்கலாம்:

    Correctly say who it is... U R a true civil rights champ  - Wax Museum

    கும்புடறேன் சாமீயோவ்:

    Pope (Not the Benedict) John Paul - Indian Style  - Wax Museum

    ஆசை தோசை அப்பளம் வடை:

    Nenapputhaan

    Statue of Liberty 

    Statue of Liberty Posted by Hello

    List of Emigrants and Immigrants – Numbers 

    List of Emigrants and Immigrants – Numbers Posted by Hello

    Jersey City towers 

    Jersey City towers Posted by Hello