Monthly Archives: ஜூன் 2008

சங்கமம், கூடல்+வாய், பயினி & சமுசு

1. மதுரைக்கு காலை நேர ரயில். மாட்டியவர்கள் எல்லோரிடமும் குலம், கோத்திரம் தவிர பாக்கி குறுக்கு விசாரணை நடந்தேறின. ‘ரெட்டை வால் குருவி’ திரைப்படத்தில் விகே ராமசாமியுடன் பேசிக்கொண்டே மோகன் சமாளிப்பது போல் அலுவல் தொலைபேசி, நேர்காணல் தொலைபேசி இரண்டையும் கொடுத்துக் கொண்டே வாய் கொடுத்தவர் ‘BPO’ நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். இரண்டாண்டு அனுபவத்தில் புதிய இடத்திற்கான முயற்சியில் மேலாளர் ஆக விண்ணப்பித்திருக்கிறார். வீடு வாங்கியாச்சு. எம்.பி.ஏ.வும் கூடிய சீக்கிரமே சேர்ந்துவிடுவார்.

2. இவர் SAP குந்துரத்தர். சம்பாதிப்பதே தொழிலில் முதலீடு செய்யத்தான். மாடர்ன் மேட்ரிமனியல் நடத்துகிறார். முதற்பக்கத்தில் தமிழ் கலாச்சாரத்துடன் இருக்கும் பெண்ணைப் பார்த்தாலே, மாபெரும் வெற்றியைப் பெறப் போகும் வலையகம் என்பது உறுதியாகும்.

3. விதவிதமான ஹோட்டல்களைக் கொண்டு வருவது இவரது கனவு. தற்போதைய வேலையில் போதிய அளவு சேமித்ததும், நண்பர்களுடன் பெங்களுருவுக்கு ஓர் உணவகம் (மூன்று நட்சத்திர பாணியில் கையேந்தி பவன் + சாலோயோர செட்டப் கொண்ட உயர்தர அமைப்பு), சென்னைக்கு சாலட் பஃபே (வித விதமான காய்கறி + ஆர்கானிக் + நேச்சுரல் முன்னிறுத்தப்படும் உணவு) என்றெல்லாம் வாய்ப்பந்தல் போடாமல், கணக்கு போட்டு, திட்டத்தை தெளிவாக வைத்திருக்கிறார்.

4. ‘தோழா… தோழா… தோள்கொடு தோழா’ என்று பாடிய பாண்டவர் பூமி நாயகியை ‘சிவசக்தி‘ ஆக்கிய பாரா மாட்டினார். ஒரு குழாயைத் திறந்தால் எக்ஸ்பிரெசோ காபி, அடுத்த பொத்தானைத் தட்டினால் சாக்லேட் மில்க், இன்னொன்றைத் தொட்டால் கோக் என்பது போல் அடுத்த கரண் படத்திற்கு எப்படி வசன வேலை நடக்கிறது, குமுதத்தில் ஆயில் ரேகை எவ்வாறு விரிவடையப் போகிறது, சிவசக்தி எவ்வாறு சீரியல் விரும்பிகளை ஈர்க்கப் போகிறது என்று ஊற்றாக கிளை மாறினாலும் எல்லாவற்றுக்கும் சூட்சுமமான புத்திசாலித்தனமாகிய மின்சாரத்தை ஷாக் அடிக்காமல் அரட்டை அடித்துக் கொண்டிருந்தார்.

5. அடுத்து மாட்டியவர் ‘கிழக்குபத்ரி. ‘என்.எச்.எம் ரைட்டர் இலவசமாகக் கொடுப்பது ஏன்?’, ‘நாளைக்கே கூகிள் போன்ற பெத்தராயுடு வந்து இந்த மாதிரி சிறுசுகளை முழுங்கி விட்டால் என்னாவது?’, ‘அடுத்து புத்தகம் போட சப்ஜெக்ட் பாக்கி இருக்கா?’, Competitive intelligence, proprietary information போன்றவற்றுக்கு கவலைப்படாமல் இப்படி போட்டியாளரும் வந்து வியாபார சூட்சுமத்தை பார்த்து விற்பனை தந்திரங்களை அறிந்து கொள்ளுமாறு இயங்குவது இந்தியாவிற்கு ஒத்து வருமா?’ போன்ற என் கேள்விகளுக்கு புத்தியில் பச்சை குத்துவது போன்ற விளக்கங்களுடன் நம்பிக்கையுடன் பதிலளித்தார்.

6. மதுரை தருமி, மலேசியா டிபிசிடி, வலைச்சரம் சீனா, உண்மைத்திராவிடர் ஜாலிஜம்பருடன் மதுரை சந்திப்பு அமர்க்களமாக நடந்தேறியது. ‘எந்த புதிய பதிவுகள் தங்களைக் கவர்கின்றன?’, ‘எவரின் இடுகைகளுக்கு க்ளிக் கொடுப்பதில்லை?’, போன்ற சங்கடமான நேரடி வினாக்களுடனும் அமெரிக்காவும் இந்தியாவும், தமிழில் பதிவெழுத வந்த கதை என்று நெருக்கமான சந்திப்புக்கு உரிய சுவாரசியங்களுடன் மகிழ்வாகப் பறந்தது.

7. மிக்சர், காராசேவு, முறுக்குடன் ஆஜர் ஆன டுபுக்கு சந்திப்பில் நீண்ட காலமாக சந்திக்க நினைத்த செந்தில், அவ்யுக்தாவுடன், ‘எத்தனை சுண்டல் வாங்குவது?’, ‘சுண்டல் ஏன் பேப்பரில் கொடுக்கப்படுகிறது?’, ‘ஆங்கிலப் பதிவர்களுக்கு தமிழ் தெரிந்தால் தமிழ்ப் பதிவர்களா, தமிழ் சினிமா குறித்து எழுதினாலே போதுமா அல்லது அவ்வப்போது தமிழ் எழுத்துருக்கள் வெளியானால் தமிங்கிலப் பதிவர் என்ப்படுவார்களா?’ என்பன மிக தீவிரமாக கொசுக்கடிகளுடன் காந்தி சிலைக்கடியில் எட்டு பேரால் அலசப்பட்டது.

8. வளர்மதி, ஜ்யோவ்ராம் சுந்தர், அதிஷா, முரளிகண்ணன், மக்கள் சட்டம், ப்ருனோ, கென் என்று பார்க்காத பல முகங்களை பாலபாரதியும் லக்கிலுக்கும் அறிகம் செய்துவைத்தார்கள். ‘டுபுக்கு சந்திப்பு மெகா மொக்கையா, இந்த சந்திப்பு அதனை மிஞ்சுமா?’ என்று விவாதித்தோம். மழைக்குக் கூட காவல் நிலையம் ஒதுங்கியது கிடையாது என்னும் கூற்றைப் பொய்யாக்கும் விதத்தில் அனைவரும் ‘உள்ளே’ இருந்தார்கள். ‘மேகம் கொட்டட்டும்; செல்பேசி நனையட்டும்; கூட்டம் உண்டு’ என்று (அசல்) பாபா தம் போட்டு காற்றை அனுப்பி, மேகங்களைக் கலைக்கும் கூட்டம்; இருக்கைகளை கால்சட்டை கொண்டு காயவைக்கும் கூட்டம்; சுகுணா திவாகர்+ஆழியூரான் சிறப்புக் கூட்டம் என்று உள்ளரங்குகளுடன் களைகட்டியது.

9. கிளம்பும் அன்று சென்னைக் கச்சேரி தேவ் & இளா சங்கமித்தனர். பலூன் தவறவிட்ட சிறுமி ஒன்றுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லி விழுந்ததை, எடுத்துக் கொடுக்க, அவளோ ‘கிம்மி எ ப்ரேக்’ பார்வை ஒன்றை வீசியதை விசாவதாரத்திற்குப் புகைப்படம் எடுத்தது போன்ற பல முக்கியமான தருணங்கள் நிறைந்த சந்திப்பு இது.

ஜூன் போனால் சென்னைக் காற்றே

1. சென்னையில் டூ வீலர்கள் எல்லாரும் தலையில் எதாவதுக் கட்டிக்கொண்டிருக்கிறார்கள். முன்ஜாக்கிரதை முத்தண்ணாக்களுக்கு ஹெல்மெட். ‘சென்னை-600 028’ விஜயலஷ்மிகளுக்கு துப்பட்டா. இஸ்லாமியர்களுக்கு தொப்பி.

2. பதிவர் சந்திப்புகள் பல சிட்டி சென்டரில் நடக்கிறது. இரைச்சலுக்கு மத்தியில் வாகாக இல்லை. சீட்டு பிடிப்பது தமிழ்மணத்தில் பின்னூட்டம் இட்டு இடம் தக்கவைத்துக் கொள்வது போன்ற நச்சுப்பிடிச்ச வேலை. மழை பெய்தாலும் ஒதுங்க இடம் தரும் திறந்த வெளி வுட்லண்ட்ஸுக்கு மாற்று கிடைக்க வேண்டும்.

3. குறைந்த நிறுத்தங்களில் நிற்கும் பேருந்து, சாதா பல்லவன் என்று இரண்டு வகை மட்டுமே அறிந்த எனக்கு, ஏசி, வெறும் சி, சி இல்லாத ஏ என்று குழப்பமான மாநகரப் போக்குவரத்து. ஒவ்வொரு வண்டியிலும் ஏறியவுடன் நடத்துநர் ‘மினிமம் இருபது ரூபா’ என்று ஆட்டோ ஓட்டுநரை ஒத்து மிரட்டுகிறார்கள்.

4. நுகர்வோருக்கானப் பொருட்காட்சியில் உள்ளே செல்வதற்கு ஐம்பது ரூபாய் கட்டணம் வசூலிக்கிறார்கள். நண்பர் முன்பு எப்போதோ சொன்னதுதான் நினைவிலாடியது: ‘வெளிநாடு போகிறவர்கள், எந்த நிலையில் சென்றார்களோ, அப்படியே தேங்கிப் போயிடறாங்க! தமிழ்நாட்டுக்காரங்க தற்காலத்துக்கு ஏத்தபடி அட்ஜஸ்ட் பண்ணி மாத்திக் கொண்டேயிருக்காங்க.’

5. சென்னை சிடி சென்ட்டரை விட ஸ்பென்சர்ஸில் நவநாகரிக யுவதிகள் வசந்த்களுடன் சுஜாதாவின் எழுத்தை நிஜமாக்கிக் கொண்டிருந்தார்கள்.

6. தசாவதரத்தை காலை ஆறு மணியில் இருந்து இரவு பதினொன்று வரை 15 காட்சிகள் ஐநாக்ஸில் திரையிட்டிருந்தார்கள். எல்லா அரங்குமே நிறைந்து விட்டிருந்தது. ‘சந்தோஷ் சுப்பிரமணியம்’ செல்லலாம் என்று திரையரங்கைப் பார்க்கும் ஆசையில் சென்றால், ‘பேட்டரியை குப்பைத் தொட்டியில் போடுவோம்’, ‘செல்பேசிக்கு தடை’ என்று ஜபர்தஸ்து செய்து கொள்கிறார்கள்.

7. மேலேக் குறிப்பிட்ட ‘ச.சு.’ முதற்கொண்டு இன்டியானா ஜோன்ஸ் வரை துணையெழுத்துகளுடன் பாரிமுனையில் டிவிடியில் இருபது ரூபாய்க்கு லோல்படுகிறது. தசாவதாரமும்தான்.

8. கபாலி கோவிலை பிரதோஷ காலத்திற்காகவாவது எக்ஸ்டென்சன் செய்ய வேண்டும். ‘நந்தா’ பார்த்தபிறகு எல்லோருக்கும் திரயோதசி மகிமை தெரிந்துவிட்டிருக்கிறது.

9. அகலபாட்டை இணையம் சுறுசுறுப்பாக பறக்கிறது. இந்த வேகத்தில் வலை கிடைத்தால், இந்தியாவில் டாரென்ட் இறக்கம் புகழ்பெறும்.

10. இத்தனை மணிக்கு வண்டி வரும் என்பதை 21ஜி, இருவுள் விரைவு வண்டி நிறுத்தங்களில் போட்டிருக்கிறார்கள். இந்தியாவில் சட்டம் இயற்றப்பட்டாலும் கண்டுகொள்ளாமல் இருப்பது போல், இந்த நேரவிவரங்களையும் கணக்கில் எடுத்து கர்மசிரத்தையாக கடிகாரத்தைப் பார்க்க கூடாது.

ஒரு டஜன் காதல் என்பது?

1. காதல் என்பது போதி மரம் (ஈ)

2. காதல் என்பது பொதுவுடைமை (பாலைவன ரோஜாக்கள்)

3. காதல் என்பது கடவுள் அல்லவா! (ஒரு கல்லூரியின் கதை)

4. காதல் என்பது தூங்கும் மிருகம் (என்னவளே)

5. காதல் என்பது கற்பனையோ காவியமோ கண் வரைந்த ஓவியமோ (ஆறிலிருந்து அறுபது வரை)

6. காதல் என்பதா? காமம் என்பதா?! (ஜெமினி)

7. இதுதான் காதல் என்பதா? (புதிய முகம்)

8. காதல் என்பது வன்முறையா (பாலா)

9. காதல் என்பது இரு மணமுடிச்சு (குஷி)

10. காதல் என்பது உன் நெஞ்சில் உள்ளது (சின்னத்தம்பி பெரியதம்பி)

11. காதல் என்பது உணர்வின் கவசம் (அகரம்)

12. காதல் என்பது காவியமானால் கதாநாயகன் வேண்டும் :: நாளை நமதே

முனியாண்டி, விலங்கியல் மூன்றாமாண்டு: பாடல் வரிகள்

இசை: வித்யாசாகர்

பாடலாசிரியர்: வைரமுத்து

இயக்கம்: திருமுருகன்

ஆண்:
கட்டிப்பிடிக்கும் கரடிய நம்புங்க
எட்டிமிதிக்கும் யானைய நம்புங்க

ஸ்டிக்கர் பொட்டுக்காரிகள நம்பாதீங்க
அப்புறம் சீரழிஞ்சு பிஞ்சிலேயே வெம்பாதீங்க

கண்ணால காதல் கொடுப்பா
ஒரு நேரம் வந்தா காதலுக்கே கடுக்கா கொடுப்பா

முந்தான தந்தியடிப்பா
நீ கிட்ட வந்தா மூஞ்சியிலே எட்டியுதைப்பா

பெண்:
ஒட்டிக் கெடக்கும் செங்கல நம்புங்க
…???… கூரைய நம்புங்க

கட்சி மாறும் ஆம்புளைய நம்பாதீங்க
பிறகு கத்திரியில் …???… வெம்பாதீங்க

சீனி முட்டா வாங்கிக் கொடுப்பான்
அத முடிச்சதுமே சீமத்தண்ணி ஊத்தியடிப்பான்

ராமனப் போல் நல்லா நடிப்பான்
உன்ன ஒறங்கவிட்டு காமனுக்கு தந்தியடிப்பான்

ஆண்:
கொளத்துல மீனிருந்தா
கொத்தவரும் கொக்கு வரும்

வெக்கயில தண்ணி கொறஞ்சா
கொளத்த மாத்தி றெக்கையடிக்கும்

பொம்பளையும் கொக்கு
இதப் புரிஞ்சுக்காதவன் மக்கு

பெண்:
பொட்டிபணம் உள்ளவரைக்கும்
பொம்பளயக் காலப்பிடிப்பான்

ரொக்கமுள்ள முண்டச்சி கண்டா
வெக்கம் விட்டு சீலத் துவைப்பான்

ஆம்பளதான் பொறுக்கி
இத அறியாதவ சிறுக்கி

ஆண்:
சத்தியமும் செஞ்சு கொடுப்பா
சமயம் பாத்து சாமத்துல கழுத்த அறுப்பா

சட்டிப்பானை எல்லாம் மறைப்பா
ஒன்ன உறங்கவிட்டு தாந்தின்னியா தின்னு தீர்ப்பா

பெண்:
தாலி தந்த பொம்பளையோட
தலகாணியில் ஒட்டிக் கெடப்பான்

கோழி கூவும் சாமத்துல
கொழுந்தியாளக் கட்டிப் பிடிப்பான்

கொரங்கு மனசுக்காரன்
அவன் குடிகெடுப்பதில் சூரன்

ஆண்:
கடலெல்லாம் பொங்கி வரட்டும்
காதல் மட்டும் மூழ்காதப்பா

பெத்தவுங்க கண்ணீர் சொட்டில்
மொத்தத்தையும் மூழ்கடிப்பா

பெரிய நடிப்புக்காரி
அவ பேச்சில்லாத லாரி

பெண்:
ஆம்பளைக்கு வருத்தமெல்லாம் …???…
பொம்பளைக்கு வருத்தமெல்லாம் இந்த மண்ணவிட்டு போகுற காலம்வரைக்கும்

பாடலைக் கேட்க: Kattipidikkum Karadiya :: Muniyandi Vilangiyal Moondramandu

ஒத்த முந்தைய பாடல்: மண்வாசனை :: பாட்டுக்கு பாட்டெடுத்தேன்

தொடர்புள்ள எசப்பாட்டு இடுகை: வே.சபாநாயகம் :: புதுமைப்பித்தன், ஒட்டக்கூத்தர், கம்பர், ஔவை

முதல் தடவையாக ஓபாமா & ஹில்லாரி ஒரே குரலில்

ஓபாமா ஹிலாரி ஒன்றாகமுதல் தடவையாக ஒபாமாவிற்கு திருமதி. கிளின்டன் தன் ஆதரவை பொதுவில் தெரிவித்துள்ளார். இதன் போது ஒபாமாவை மிகவும் பாராட்டிப் பேசினார் உதாரணத்திற்கு சில வரிகள்.

“If you think we need a new course, a new agenda, then vote for Barack Obama and you will get the change you need,” she told the cheering crowd.

“He will work for you, he will fight for you and he will stand up for you every day in the White House.”

இதேவேளை ஒபாமா, கிளின்டனின் முன்னய தேர்தல் பிரச்சார கடன்களையும் அடைத்துள்ளார்.

இதன் மூலம் ப்ரைமரியில் பிரிந்திருந்த டெமொகிரட்டிக் ஆதரவாளர்கள் ஒரு குடையின் கீழ் வரும் சாத்தியம் ஏற்பட்டுள்ளது.

ஜான் மெகெயின் கருத்துப் படங்கள்: பாஸ்டன் க்ளோப்

நன்றி: Boston.com – Opinion – Globe: “Daniel Wasserman :: Globe cartoonist”

ஒபாமாவின் iPodல் என்ன இருக்கிறது?

அமெரிக்கத் தேர்தல் களத்தில் சூடு தணிந்து விட்டது. ஒபாமா, ஹில்லரி நாடகம் எதிர்பார்த்த இறுதிக் கட்ட காட்சிகளுடன் முடிந்து ஹில்லரி மீண்டும் தன் முழு நேர செனெட்டர் பணிக்குத் திரும்பி விட்டிருக்கிறார். என்னதான் சூடு தணிந்தாலும் தேர்தல் களங்களில் எப்போதும் ஏதேனும் சுவாரஸ்யம் இருந்துகொண்டே இருக்கும்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுபவர்களின் தேர்தல், பிரச்சார செலவுகளை அரசு ஏற்றுக்கொள்ளும் திட்டம் 1976ல் கொண்டுவரப்பட்டது. அமெரிக்காவின் மிகப் பிரபலமான ‘வாட்டர்கேட்’ சதித்திட்டங்கள் அம்பலமான பின்பு வேட்பாளர்களின் தேர்தல் செலவுகளை கண்காணிக்கவும் கட்டுக்குள் கொண்டுவரவும் இத்திட்டம் உருவாக்கப்பட்டது. இதன்படி அதிபர் தேர்தலில் போட்டியிடும் தகுதியுள்ள வேட்பாளர்களுக்கு அரசு பண உதவி செய்யும். அப்படி அரசு நிதி உதவியைப் பெறுபவர்கள் ஒரு குறிப்பிட்ட தொகையை மட்டுமே செலவிட முடியும். தாங்கள் தனியே திரட்டிய நிதியை திருப்பித் தந்துவிடவும் வேண்டும்.

ஒபாமா உட்கட்சி தேர்தல் பிரச்சாரத்தின்போது வேட்பாளர்களுக்கிடையேயான விவாதமொன்றில் ‘யாரெல்லாம் அரசின் பிரச்சார பண உதவியைப் பெறப் போகிறீர்கள்?’ எனும் கேள்விக்கு கையைத் தூக்கினார். அண்மையில் அரசின் உதவியை நாடப் போவதில்லை என அறிவித்து தன் முந்தைய நிலையிலிருந்து மாறிவிட்டார்.

ஒபாமாவின் இந்த மனமாற்றத்திற்கு காரணமாக அவர் கூறியிருப்பது மெக் கெயினுக்கு இருக்கும் 527 குழுக்களின் ஆதரவுகள். 527 குழுக்கள் ஒரு வேட்பாளரின் பிரச்சார அமைப்புடன் நேரடித் தொடர்பில்லாதவை ஆனால் அந்த வேட்பாளருக்கு ஆதரவாகத் தன்முனைப்பில் பிரச்சாரம் செய்பவை. அமெரிக்க வரி விதிப்பு சட்டத்தின் 527ஆம் பகுதியில் இத்தகைய குழுக்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. பரவலாக இவை ‘லாபியிஸ்ட்’களால் நடத்தப்படுகின்றன. லாபியிஸ்ட்டுகள் தங்களுக்கு சாதகமான அரசியல் முடிவுகளைப் பெற அரசியல் வட்டங்களில் முயற்சி செய்பவர்கள். ஒபாமாவின் முக்கிய தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாக வாஷிங்டன்னில் லாபியிஸ்ட்டுகளின் தாக்கத்தை குறைப்பதும் உள்ளது. ஒபாமா பரிந்துரைக்கும் புதிய அரசியலின் முக்கிய பாகம் இது.

குடியரசுக் கட்சிக்கு லாபியிஸ்ட்களின் ஆதரவு அதிகம் உள்ளது. குறிப்பாக மெக் கெய்னின் பிரச்சாரக் குழுவில் முக்கிய பங்குவகிப்பவர்கள் சிலர் முன்னாள் லாபியிஸ்ட்டுகள். ஒபாமா இத்தகைய லாபியிஸ்ட்டுகளின் தலையீட்டல் 527 குழுக்கள் தனக்கெதிராக பிரச்சாரங்களை – ஊடக விளம்பரங்கள் மூலம்- கிளப்பிவிடும் எனப் பயப்படுவதால் பொதுத் தேர்தல் நிதியிலிருந்து பணம் பெறப் போவதில்லை என அறிவித்துள்ளார். அதாவது 527 குழுக்களை எதிர்த்து பிரச்சாரம் செய்ய தனக்கு அரசு நிதி தரும் $85மில்லியன்கள் போதாது என்கிறார்.

மிகச்சாதாரண அரசியல் முடிவாகத் தோன்றும் இந்த முடிவு ஒபாமாவுக்கு பாதகமான முடிவாக அமைந்துள்ளது.

முதலில் முன்பு பொதுத் தேர்தல் நிதியை பயன்படுத்தப் போவதாக அறிவித்துவிட்டு தற்போது தன் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டது அவரின் நேர்மையை சந்தேகிக்கச் செய்துள்ளது.

இரண்டாவதாக ஒபாமாவின் பணம் காய்க்கும் மரம் பூத்துக் குலுங்கிக் கொண்டிருக்கிறது. 2007 ஜனவரி துவங்கி இன்று வரை ஒபாமாவின் பிரச்சாரத்திற்கு $272 மில்லியன்கள் நன்கொடை கிடைத்துள்ளது.- இதில் கணிசமான தொகை இணையத் தளம் வழியே பெறப்பட்டது. – எனவே ஒபாமா தன் பிரச்சாரத்தின் உறுதியற்ற துவக்க நிலையில் பொது நிதியை பெற சம்மதித்தும் தன் நிலை உறுதிப்பட்டதும் நிலையை மாற்றிக்கொண்டும் ஒரு ‘சாதாரண அரசியல்வாதியாகவே’ காணப்படுகிறார் என்றும் அவரிடம் இருப்பதாகக் கூறப்படும் ‘புதிய அரசியல்’ என்பது பொய்யானது என்றும் பார்க்கப்படுகிறது. ஜான் மெக்கெய்ன் இதுவரை மொத்தம் $100 மில்லியன்தான் நன்கொடை பெற்றுள்ளார்.
மூன்றாவதாக 527 குழுக்கள் எதுவுமே இதுவரை ஒபாமாவுக்கு எதிராக பிரச்சாரம் ஆரம்பித்துவிடவில்லை. ஆனால் Moveon.org போன்ற இடதுசாரி குழுக்கள் மெக் கெய்னுக்கு எதிராக விளம்ப்பரங்களை வெளியிட்டுள்ளன. – ஒபாமா இத்தகைய விளம்பரங்களை மறுதலிக்க வேண்டும் எனும் கோரிக்கையும் எழுந்துள்ளது.- ஆக எதிர்காலத்தில் நடைபெறலாம் எனும் யூகத்தின் பேரில் ஒபாமாவின் முடிவு இருப்பதால் நம்பகத்தன்மை குறைகிறது.

1976ல் தேர்தல் பொது நிதி உருவாக்கப்பட்டபின்பு அதை வேண்டாம் எனத் தள்ளும் முதல் முக்கிய வேட்பாளர் ஒபாமா மட்டுமே.

மெக்கெய்னுக்கு இந்த வாரத் தலைவலி அவரது பிரச்சாரக் குழுவின் முக்கியஸ்தர் ஒருவர் பேட்டி ஒன்றில் பொதுத் தேர்தலுக்கு முன்பு அமெரிக்கா தீவிரவாத தாக்குதலுக்குள்ளானால் மெக் கெய்ன் வெல்வது உறுதி எனக் கூறியது. மக்களை பயமுறுத்தி அரசியல் செய்யப் பார்க்கிறார்கள் என எதிரணி அறிக்கை விட மெக் கெய்ன் ‘அவர் அப்படி சொல்லியிருந்தாரானால் நான் அதை முற்றிலும் மறுக்கிறேன்’ என்று மறுதலித்துவிட்டார். ஜான் கெரிக்கும் ஜார்ஜ் புஷ்ஷுக்குமிடையேயான போட்டியின்போது பின் லாடனின் வீடியோ செய்தி ஒன்று வெளியானது புஷ்ஷுக்கு ஆதரவாக அமைந்ததை நினைவுகூறும் ஊடகங்கள் இந்த வருடமும் அது போன்ற அக்டோபர் அதிர்ச்சி (Ocrober Surprize) வரலாம் என எதிர்பார்க்கின்றன.

அடுத்த கட்ட சுவாரஸ்யம் துணை அதிபர் வேட்பாளர்களை அறிவிக்கையில் வரலாம். ஒபாமா ஹில்லரியை நிராகரித்துவிட்டார் என்பதை ஊடகங்கள் கணித்துள்ளன. ஒபாமா தன் துணை அதிபர் வேட்பாளரின் பிரச்சார நடவடிக்கைகளை கவனிக்க ஹில்லரி முன்பு வெளியேற்றிய நபரை நியமித்துள்ளது இதற்கான முகாந்திரத்தை அமைத்துள்ளது.
இப்படி சில சுவாரஸ்யங்கள் இருந்தாலும் தேர்தல் களம் சூடில்லாமல் இருப்பதை ஒபாமாவின் ஐபாடில் என்ன பாடல்கள் இருக்கின்றன என்பதுபோன்ற செய்திகளும் மிச்செல் ஒபாமாவிற்கும் சிண்டி மெக்கெய்னுக்கும் முக்கியத்துவம் தரும் செய்திகளும் ஊடகங்களின் ‘அரசியல்’ பக்கங்களை நிரப்புவதே சொல்லிச் செல்கின்றன.

பின் குறிப்பு: ஒபாமாவின் ஐபாடில் பாப் டிலன், யோ-யோ மா, ஷெரில் க்ரோ, ஜே-ஜ்சீ, ப்ரூஸ் ஸ்ப்ரிங்ஸ்டீன், எல்டன் ஜான், ஸ்டீவி வொண்டர்ஸ் ஆகியோரின் பாடல்கள் உள்ளன.

=====
நன்றி: தமிழோவியம்

Dasavatharam – Eight Year old’s Take

XKCD - Butterfly EffectHi Daddy,

I saw Dasavatharam. It was good but for the fights, monkey scene, villian dying and the tsunami, I closed my eyes. I liked all the different Kamal roles. I had a doubt if the japanese guy was a Kamal. I did’nt really like it because I closed my eyes most of the times. Now, I know what a tsunami is.

You were right. 10A did go fast. Mostly there was only the normal Kamal named Govindaraj. I liked the first song in the movie. I know the first line in the first song. 10A is not made for kids!!!!!!!!!!!!!!!

கார்ட்டூன்: xkcd – A webcomic of romance, sarcasm, math, and language – By Randall Munroe

Dasavatharam, தசாவதாரம்: FAQ – வழக்கமாக கேட்கப்படும் கேள்விகள்

Bio Data of Kamal - Dasavatharam Special by Kumudham

படம் பெயர் என்ன? தசாவதாரம்

என்று பிறந்த நாள்? ஜூன் 12, 2008, வியாழன்

எத்தனை மணி நேரம்? மூன்று மணி 15 நிமிடங்கள் அல்லது 166 மணித்துளிகள்

என்ன வகை? மசாலா (சண்டை + காமெடி – டிராமா – காதல்)

குழந்தைகளுக்கு உகந்ததா? நடு விரலும், ‘ஷிட்’ பிரயோகங்களும், மல்லிகாவின் லேப் டான்சும், கழுத்தை அறுக்கும் கொலையும், கழுத்தில் குத்தும் கொலையும் உண்டு என்பதால் பதின்ம வயதினருக்கு மேல் பொருத்தமானது. ஆனால், ‘வேட்டையாடு… விளையாடு’ அளவு வன்முறை கிடையாது.

பெரியவர்களுக்குப் பிடிக்குமா? நிச்சயம் பிடிக்கும்

உலகில் யாருமே ஒரே படத்தில் பத்துக்கு மேல் வேடம் தரித்ததில்லையா? எட்டி மர்ஃபி மட்டுமே ஞாபகம் வந்தாலும், 1913- இலேயே 27 வேடம் கட்டியவர் இருந்திருக்கிறார்.

இரட்டை வேட அசின் எப்படி? விஜய் படத்திலேயே இதை விட பெட்டர் ரோல் கிடைக்கும் என்னும் மறக்கக்கூடிய நிலை.

அப்படியானால், மல்லிகா ஷெராவத்? சடாரென்று வந்து அரங்க ஆட்டத்திற்குரிய சாமுத்ரிகா லட்சணங்களைக் காட்டி. ஒய்யார நடை பயின்று இன்னும் கொஞ்ச நேரம் இருந்தால் கமல் இருட்டடிக்கப் படுவார் என்பதாக துள்ளுகிறார்.

அமெரிக்காவை விட்டு வெளியேற ‘டிபார்ட்மென்ட் ஆஃப் ஹோம்லான்ட் செக்யூரிட்டி’ செல்ல வேண்டுமா? விசாவில் வந்தாலும் சரி; பச்சை அட்டை வைத்திருந்தாலும் சரி; குடிமகனாக இருந்தாலும் சரி. தேவையில்லை. ஆனால், மல்லிகா ஷெராவத்துக்கு (ஜாஸ்மின் கதாபாத்திரம்) க்யூவில் நிற்கிறாள். புதிதாக கமல்ஹாசன் (அதாவது, ஜார்ஜ் புஷ் குணச்சித்திரம்) உருவாக்கி இருக்கலாம்.

லாஜிக்? மூளைக்கு வேலை உண்டா? படம் பார்த்து களிக்க சிரமப்படத் தேவையில்லை. விஜய்காந்த், விஜய் போன்றவர்கள் நாயகர்களாக வரும் சினிமா போலவே இதுவும் ஜாலியாக ரசிக்க வேண்டியது.

அப்படியானால் ‘வண்ணாத்திப்பூச்சி விளைவு’ & ‘கசாகூளக் கோட்பாடு’ எல்லாம்?

திரைப்படத்தின் இசை, பாடல்கள்? வெளியாகுவதற்கு முன்பு ‘உலக நாயகனே’ & ‘கல்லை மட்டும் கண்டால்’ ரசித்தது. படத்தில் மல்லிகா ஷெராவத்தின் காபரே தவிர எந்தப் பாட்டுமே ஒட்டவில்லை. குறிப்பாக, அலகிட்டு அந்தரத்தில் தொங்கும்போது அரற்றத்தான் இயலுமே தவிர வாயசைக்க கூட முடியாது என்பது போல் உறுத்தலான இடையூறுகள்.

எத்தனை பாடல் ஒட்டுமாங்கனிகள்? ‘கல்லை மட்டும் கண்டால்’ குறித்து ஏற்கனவே பலர் சொல்லிவிட்டார்கள். படத்தின் இறுதியில் வரும் ‘உலக நாயகனே’ கூட ‘தில் மாங்கே மோர்’ ஹிந்திப்படத்திற்காக ஹிமேஷ் ரேஷமையா ஏற்கனவே இட்டதை திருப்பி சுட்டதுதான். தசாவதாரத்தில் பாடல்களே தேவையில்லை என்பது வேறு விஷயம்.

சரி… எங்கே உருப்படியான விமர்சனம்? பிரசன்னா :: நிழல்கள்: தசாவதாரம் – ஒட்டாத முகங்கள்

அந்த பத்து பெருமாள் அவதாரங்களுக்கும் கமல் வரும் தோற்றங்களுக்கும் ஆன தொடர்பு? புருனோ :: பயணங்கள்: மகாவிஷ்னுவின் பத்து வேடங்களும் – ஒப்பீடு / ஒற்றுமை / வேற்றுமை

டி20 ஆட்டம் தொலைக்காட்சியில் காட்டுறாங்க; டி10 போக கூப்பிடுறாங்க! என்ன செய்யலாம்? டி20 பாருங்க. கடைசி ஒவர் வரைக்கும் விறுவிறுப்பாக இருக்கும். யாரு மேட்ச் – ஃபிக்சிங் செஞ்சிருப்பாங்கன்னு தெரியாது. இங்கே கமல் சாகமாட்டார் என்பது கோலிவுட் நியதி.

அந்த முதல் பதினைந்து நிமிடம்? ‘பள்ளிகளில் நாடகம் நடத்தும் போது கடல் காட்சி இருந்தால் நீல நிற புடவையை ஆட்டி கடல் உணர்வை ஏற்படுத்துவார்கள்‘ என்று மாதவன் சொல்வது போல்; சீரீயஸ் காட்சிகளில் கமல் அழுது காமெடியாக்குவது போல் பல்லிளித்திருக்கிறது.

அப்படியானால் கிராஃபிக்ஸ்? தீவிரவாத குண்டுவெடிப்பு நடக்காமல் தடுப்பதில்தான் ‘உளவுத்துறை’யின் சூட்சுமம் என்பதாக கலக்கல் மேக்கப், சூப்பர் கிராஃபிக்ஸ் என்று சிலாகிக்காமல் இருப்பதில்தான் அந்தந்தத் துறையின் வெற்றி இருக்கிறது. பல்ராம் நாயுடுவும் கோயிந்துவும் பேசும் காட்சிகளில் கண்ணாடி பிரதிபலிப்பு, இறுதிச் சண்டை என்று பல இடங்களில் இருப்பதே தெரியல.

பத்தில் ஒட்டாதது எவர்? ஹீரோயிச கோவிந்த் இராமசாமி

பத்தில் நம்பமுடியாதவர் எவர்? ரொம்பவே அப்பாவியாக விபத்தை உண்டாக்கியவர் எவர் என்று கூட பார்க்காத கலிபுல்லா கான்

வெறுப்பேற்றுபவர்? ‘செத்துத் தொலையேண்டா’ என்று அவஸ்தைப்பட்டு, தமிழ் பேசத் தெரியாதது போல் சரளமாக அளவளாவும் அவ்தார் சிங்

தோற்றத்தில் பின்னி பெடலெடுப்பவர்? ஜப்பானியர். நடை, உடை, சண்டை எல்லாம் தூள். ஆங்கிலம் & தமிழ் பேசும் இடங்களில் மட்டுமே கமல் தலைதூக்குகிறார். மற்ற இடங்களில் ஏதோ ஒரு சப்பானிய வீரர் மட்டுமே இருக்கிறார்.

அசத்தல் மன்னர்? க்றிஸ்டியன் ஃப்ளெட்சர். கமல் எட்டிக் கூட பார்க்காமல் தூர நிற்கும் அமெரிக்க டாலருக்கு டஜன் கொலைகாரர்.

படம் பொலிடிகலி கரெக்டா? இறை மறுப்பாளர்களும் குற்றம் காண்கிறார்கள். நம்பிக்கையாளர்களும் ‘சூ’ கொட்டுகிறார்கள். அப்படியானால் நிச்சயம் ‘pc’.

சின்னத் திரையில் வரும்வரை காத்திருக்கலாமா? வேண்டாம். அத்தனை விளம்பரங்களுக்கு, கலைஞர் தொலைக்காட்சியில் கீழே ஓடும் துணுக்குகளுக்கு நடுவே பார்ப்பது தண்டனை. எனினும், குறுவட்டு வரும் வரை காத்திருக்கவும். அவசியம் 70 எம்.எம்.மில் பார்க்கும் நிர்ப்பந்திக்கத்தக்க பிரும்மாண்டம் இல்லை என்றாலும், வெள்ளித்திரையில் பார்த்தால் கொட்டாவி வராது.

படம் பார்ப்பதற்கு முன் காபியா? ஜாக் டேனியல்ஸ் சிறந்ததா? காது குளிக்குமளவு வசனமழை பொழிவதால் காபி சிறந்தது; ஆனால், அதன் மூலம் மூளை சுறுசுறுப்படைந்து ஓட்டைகள் விகாரமாகும் என்பதால் ஒரு பெக் ஜாக் டேனியல்ஸ் உகந்தது. சுருக்கமாக ஜாக் டேனியல்ஸ் அடித்துப் போனால் அவ்தார் சிங் அழும்போது சிரிக்கலாம்; காப்பி அடித்துப் போனால் அடுத்த கேள்விக்கான பதில் வரும்.

படத்தில் கமல் தவிர குறிப்பிடத்தகுந்தவர்? அலுவல் சகாவாக வந்து கோவிந்தை வீட்டில் வைத்துக் காட்டிக் கொடுக்கும் சுரேஷ். கை கால் ஆட்டி, முகத்தில் அஷ்ட கோணல்களையும் கொணர்ந்து சிறந்த மேடை நாடகத்திற்கான கூறுகளை விளக்கியிருக்கிறார்.

இந்த மாதிரி பதிவுகளை ‘திரைப்படங்கள் வந்ததுமே இணையத்தில் அவற்றை நாராகக் கிழிப்பவர்கள் எழுதுவது எனக்குப் பெரும்பாலும் புரிவதில்லை’ என்றிருக்கிறாரே ஜெயமோகன்? எனக்கு தமிழ் இலக்கிய விருதுகள் குறித்த ஞானம் மிக மிகக் குறைவு.

ஞானக்குழந்தை தெரிகிறதா? தெரிகிறது

அசின் தொப்புள்? 😀 😛

வசனம்? நிறைய

கதை? அது எதற்கு

மொத்தத்தில்? ட்விட்டரில் கதைத்ததுதான்

அவ்தார் சிங்கும் ஏமி வைன்ஹவுசும்: Kamal is a Visionary – Sridhar Narayan

கமல் வருங்காலத்தை புட்டு பிட்டு வைக்கிறார் என்கிறார் ச்றீதர் நாராயன்.

நிஜ செய்தி: BBC NEWS | Entertainment | Singer Winehouse has lung disease

தொடர்புள்ள விமர்சன பின்னூட்டம் #1: Sridhar Narayanan said…:

தொண்டையில் வளர்ந்திருக்கும் புற்று நோயை துப்பாக்கி தோட்டா துளைத்து சரி செய்து விட்டதாக கூட ஒரு காட்சி வருகிறது. There is no magic bullet for cancer என்று புற்றுநோய் மருத்துவர்கள் சாடலாம். அப்படி ஒன்று இருந்தால் எப்படி இருக்கும் என்று கற்பனையை விரிவாக்கலாம்.

தொடர்புள்ள அறிவியல் ஆராய்ச்சி #2: Sridhar Narayanan said…: ஒரு Magic Bullet-னால் பாடகர் அவ்தார் சிங்கின் கேன்சர் குணமாகிறது.

தொடர்புள்ள ஆன்மிக சொற்பொழிவு மறுமொழி #3: Sridhar Narayanan said…: மனைவியின் மேல் மாறாப்பாசம் வைத்திருக்கும் அவ்தாரின் தொண்டை கேன்சரை ‘magic bullet’னால் சரி செய்கிறார்.

அவ்தார் சிங்கும் பாடகர்; ஏமி வைன்ஹவுஸும் பாடகர்!
Aவ்தார் சிங் முதலெழுத்தும் ஏ; Aமி வைன்ஹவுசுக்கும் ஏ!!
அங்கும் உடல்நிலை சரியில்லாவிட்டாலும் மேடையேறும் வித்தகர்; இங்கும் அரங்கேறுகிறார் ஏமி!!!

வாவ்!!!!

எமக்கு பிரத்தியேகமாக அளித்த பேட்டியில் ‘கமலின் தொலைநோக்கு பார்வைக்கு இது ஒரு எடுத்துக்காட்டு’ என்கிறார் ஸ்ரீதர் நாராயண்.