Tag Archives: Bloggers

All Politics is Local


அறிவா உள்ளுணர்வா?  | திண்ணை

இறந்து போன எழுத்தாளர்களைப் பற்றிய குறிப்புக்கள் பற்றிச் சில குறிப்புக்கள் | திண்ணை: ஸிந்துஜா

திண்ணைப் பேச்சு – கனிமொழி, சின்னக் குத்தூசி பற்றி ஜெயமோகன் பற்றி பி கே சிவகுமார் பற்றி ஸிந்துஜா | திண்ணை :: கோபால் ராஜாராம்

அனுராகமாலை எடுத்தேற்றம்

மேலாளர் கனவில் வருவது அவ்வளவு சிலாக்கியமில்லை. எனினும் வந்திருந்தார்.

“போன ப்ராஜெக்ட் நன்றாக செய்திருக்கிறாய்!”

“இறந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் கலக்கிறீர்கள். இலவசகொத்தனார் பார்த்தால் பிலுபிலுவென்று ஆடி மாச சாமியாடுவார் சார்!”

”உனக்கு அடுத்த வேலை தயார். நம் தலைநகரமாம் வாஷிங்டன் டிசி செல்கிறாய். அங்கே படு ரகசியமான அடுத்தகட்ட ஆளில்லா விமானத்திற்கு நீதான் பொறுப்பு.”

காட்சி அப்படியே கட் ஆகிறது. நாலு பேர் தீவிரமான கலந்தாலோசனையில் இருக்கிறோம். ஒருத்தரைப் பார்த்தால் திருவள்ளுவர் போல் குருலட்சணம். இன்னும் இருவர் சிவகார்த்திகேயனின் நாயகிக்கான தேர்ந்தெடுப்பிற்காக வந்தவர்கள் போல் துள்ளலாக விளம்பர அழகி போல் காணப்படுகிறார்கள். கிட்டத்தட்ட வடிவமைப்பை முடித்து விட்டோம். பரிசோதனைக்குத் தயார்நிலையில் இருக்கிறோம்.

பணிகளைத்தான் எவ்வளவு சீக்கிரமாக கனவு முடித்துக் காட்டுகிறது. இதைத்தான் ’கனவு காணச்சொனார்!’ கலாம்.

செய்தவற்றை சொல்லிக்காட்ட மேலிடத்திடம் செல்கிறோம். அவர்களோ, சோதனை மாந்தர்களாக எங்களையேத் தேர்ந்தெடுத்து தானியங்கி விமானிகளை ஏவுகிறார்கள். சைதாப்பேட்டை கொசுவிடமிருந்தும் மந்தைவெளி மாடுகளிடமிருந்தும் ஓடி ஒளிந்தவனுக்கு drone எம்மாத்திரம். விமானியில்லா விமானத்திற்கு மாற்றாக ஏவுகணைகளை அனுப்புகிறேன். பயனில்லை. திடீரென்று எட்வர்டு ஸ்னோடென் கூட பறந்து பறந்து தாக்குகிறார். பின்னர் அவரும் எங்கோ ஓடி ஒளிந்துவிட்டார்.

“நியாயமாப் பார்த்தா என்னை பார்த்துதான் இந்த டிரோன் அனுப்பிவைக்கப்பட்டிருக்கணும்!” என்று சாரு நிவேதிதா சொல்கிறார். “நீங்க லத்தீன் அமெரிக்க கதைதானே மொழிபெயர்க்கறீங்க! இனிமேல் இரானிய கட்டுரைகளை கொண்டாங்கனு” சொல்லிட்டு அவரிடமிருந்து தப்பிக்கிறேன்.

“நீங்க இப்போ கண்விழிக்கலாம்! உங்க சாதனம் ஒழுங்கா வேலை செய்யுது. எல்லாவிதமான இடர்களிடமிருந்தும் அதற்கு தப்பிக்கத் தெரிஞ்சிருக்கு! ஆனா”.

”தமிழ்ல எனக்குப் பிடிக்காத வார்த்தை… ’ஆனா’”.

“சரி… அபப்டினா, But போட்டுக்கறேன். உங்களுக்கு உடற்பயிற்சி போதாது. உங்க விமானம் ஓடற மாதிரி நீங்க ஓட மாட்டேங்கறீங்க. உங்களுக்கு இந்த காண்டிராக்ட் கிடையாது.”

இதைத்தான் Rice Ceiling என்கிறார்களா!?

நேற்றைய கதைக்கு செம வரவேற்பு.

சொல்புதிது குழுமத்தினர் Show, don’t tell என்றார்கள். இதை ஒட்டுக் கேட்டுக் கொண்டிருந்த யுவகிருஷ்ணா “அப்படியானால், உங்க கூட வேலை செஞ்ச அந்த இளம்பெண்களின் கவர்ச்சிப் படங்களை ப்ளோ-அப் ஆக போட்டிருக்கணும்.” என்றார்.

“மழையில் நனையலாம். அணைக்கட்டில் தண்ணீர் தேக்கி வைப்பதை போல் காட்ட முடியாத சொல்லில் வடிக்க முடியாத அனுபவம். அது போல் கனவு தேவதை ஸ்டரக்சரா ஆப்ஜெக்டா என்பதை C# தான் சொல்லணும்.”

நக்கீரர் எட்டிப் பார்த்தார். “உமக்கு நேர்ந்த அனுபவத்தை மட்டுமே நீங்கள் எழுத முடியும். அது மட்டுமே அகத்திறப்பை தரும். உங்களுக்கு டிரோன் உண்டா? அது துரத்தியதா? எப்படி பிழைத்தீர்கள்? என்பது இல்லாத பதிவு பொருட்குற்றம் கொண்டது!”

“ஏன்யா… உம்மை கொசு கடிச்சதே இல்லியா? எண்பது கோடி ஆண்டுகள் முன்பே கல் தோன்றி முன் தோன்றா தமிழகத்தில் டிரோன் கொண்டு சோழனும் பாண்டியனும் சண்டையிட்டது சரித்திரம்!”

இப்பொழுது ஹரிகிருஷ்ணன் முறை. “என்ன ஹரியண்ணான்னு சொன்னால் போதும். ’இலங்கு வெஞ்சினத்து அம்சிறை எறுழ்வலிக் கலுழன் உலங்கின் மேல் உருத்தன்ன நீ குரங்கின் மேல் உருத்தால்’ என்கிறான் கம்பன். இதன் தாத்பர்யமாவது என்னவென்றால், பட்டாம்பூச்சி விளைவைக் கண்டு பயப்பட்டு தோட்டத்தையே உருவாக்காமல் விடக்கூடாது. மைரோசாஃப்ட் முதல் அப்பிள் வரை பிழை இல்லாத மென்பொருளை உருவாக்குவதில்லை. உலங்கைக் கண்டு அஞ்சேல்!”

“இதுதான் இன்றைய தமிழ் உலகமா?” என்றபடி இராம.கி அய்யா புகுகிறார். “Malinga என்பதில் இருந்து வந்ததுதான் உலங்கு. மளிங்கா தலைமுடியில் கொசு மாட்டிக் கொண்டுவிடும். உள்ளங்கையில் அடிப்பதால் உலங்கு என்றும் ஆனதாக சொல்வோர் உண்டு. அது பிழையான கருத்து. எல்லோரும் கொசு வந்தால் ’மளிங்க’ என விளித்தனர். இது மளிங்க > அடிங்க் > உலங்கு என்றானது.”

தமிழ் என்றவுடன் ஃபெட்னா நச்சுநிரல் விழித்து தானியங்கியாக பதிலிடத் துவங்கியது. ”அமெரிக்காவில் தமிழ் உலகம் என்றால் ஃபெட்னா. நாங்கள் கோத்திரம் பார்த்து செவ்வாய் தோஷம் நீக்கி ஒரே சாதியில் ஜாதகக பரிவர்த்தனத்தை வருடா வருடம் ஜூலை நான்கு நடத்துகிறோம். எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது. ‘நாம் தமிழர்’. நியு யார்க்கில் கொசுத் தொல்லை அதிகம். பிரகாஷ் எம் சுவாமி என்னும் கொசு எங்களைக் கடித்ததுண்டு.”

ஆட்டத்தை தவறவிடாத மனுஷ்யபுத்திரன், “அமெரிக்கரின் காதல் என்பது சிற்றோடை போன்றது. சமயத்திற்கேற்ப, தேவைக்கேற்ப, பருவத்திற்கேற்ப, முக்கியத்துவத்திற்கேற்ப மாறிக்கொண்டே இருக்கும். தமிழனின் காதல் என்பது காவிரி போல… கர்னாடகா திறந்தால் மட்டுமே வளரும். தமிழச்சியின் காதல் என்பது பாக்கெட் தண்ணீர் போல் காசு கொடுத்தால் மட்டுமே கிடைக்கும்.”

சொம்படி சித்தர் விடுவாரா… “அமெரிக்கரின் காதல் என்பது RAM போன்றது. சமயத்திற்கேற்ப, தேவைக்கேற்ப, பருவத்திற்கேற்ப, முக்கியத்துவத்திற்கேற்ப மாறிக்கொண்டே இருக்கும். தமிழனின் காதல் என்பது hard disk போல. சூடாகும்… தமிழச்சியின் காதல் என்பது cloud storage போல் எவருக்கு வேண்டுமானாலும் திறக்கும்.”

நொந்து போன வேல்முருகன் சொன்னார். “இதற்கு பெயரிலி சமஸ்தானமே பெட்டர் அப்பா!”

Idly Vadai 9 Year Greetings

இட்லி வடை ஆரம்பித்து பத்தாவது ஆண்டு துவங்கப் போகிறது.

பத்தாண்டுகளாக தமிழ்ப்பதிவுகள் எப்படி இருக்கிறது என்று ரிப்போர்ட் கார்ட் போடலாம். பேருந்து விபத்தில் சென்னை நகரத்தின் பள்ளி சிறுவர்கள் இறப்பது போல் அது அடிக்கடி நடப்பது.

பத்தாண்டுகளில் இட்லி வடை எழுதியதில் பெஸ்ட் எது என்று பார்க்கலாம். டெண்டுல்கர் சதம் அடிப்பது போல் ஆயிரக்கணக்கான பதிவுகளில் நூறு திக்கி திணறி தேறலாம்.

சமகால ஜாம்பவான்களான பேயோன், மனுஷ்யபுத்திரன் போன்ற புனைப்பெயர்களோடு ஒப்பிட்டு அலசலாம். கோகுலாஷ்டமிக்கு கிருஷ்ணர் வேடம் அணிவது பொருத்தம் என்பது போல் இட்லி வடையில் அசுரர்களுக்கு இடம் இல்லை.

அப்படியானால் என்ன செய்யலாம்?

நீங்களும் இட்லி வடையாக ஒன்பது யோசனைகள் கொடுக்கலாம்:

1. தற்பெருமை, சுய அங்கீகாரத்தின் வெளிப்பாடாக அகங்காரம், தவறு செய்தாலும் மன்னிப்பு கேட்காத தன்மை, காதல் மன்னர்களின் வசீகரம் என்று அரசியல்வாதிக்கும் வலைப்பதிவருக்கும் உள்ள ஒற்றுமைகள் நிறைய. ஆனால், அரசியலில் வாக்கு கேட்டு வெற்றி பெற்றால்தான் மதிப்பு. வலையில் எழுதினாலே குவியும் வாக்கு.

2. இட்லி-வடை என்பது வாரிசு அரசியல் மாதிரி. முன்னுமொரு மூதாதையர் காலத்தில் இருந்து தியாகி பென்சன் பெற தகுதி பெற்றவர். நேற்றைய பினாமி பாலிடிக்சில் மில்லியனரானது போல் புதிதாக முளைத்தவர் இந்த பூமியில் காலூன்றுவது எப்படி? திண்ணை, சொல்வனம், உயிரோசை எதையும் விட வேண்டாம். ட்விட்டர், பேஸ்புக், பிண்டெரஸ்ட் எங்கும் தோன்றவும்.

3. எனக்கு ரொம்ப பிடித்தமான வினா: ‘எல்லோரும் இப்படி செஞ்சா என்ன ஆகும்?’ – அஞ்சு பைசா அன்னியன் ஆகட்டும்; எனக்கு காரியம் ஆனால் போதும் என்று கூடங்குளத்தை மூடச்சொல்லும் உதயகுமார் ஆகட்டும். உலகில் உள்ள அனைவரும் எனக்கு மட்டும் இது நடந்தால் போதும் என்று நம்பும் மனநிலையை உடைக்கலாம்.

4. எனக்கு நிரலி எழுதத் தெரியும். ஆனால், கணினி ப்ரொகிராமிங் குறித்து எழுதியது ரொம்பக் குறைவு. மொத்தம் ஏழெட்டு பதிவுகளில் இரண்டாயிரம் வார்த்தைகளை தாண்டாது. இந்த மாதிரி நம் துறை சார்ந்து எழுதலாம்.

5. சுவைக்காக தண்ணியடிப்பது ஒரு ரகம். பழக்கத்திற்காக சரக்கடிப்பது ஒரு ரகம். தூக்கத்திற்காக குவார்ட்டர் அடிப்பது இன்னொரு ரகம். எப்பொழுதாவது கம்பெனிக்காக குடிப்பது என் ரகம். நீங்கள் பதிவதில் எந்த ரகம்?

6. சண்டைக் காட்சிகளில் வாத்தியார் மூன்று அடி வாங்கிய பிறகுதான் நிமிர்ந்து திரும்பக் கொடுப்பார். பாவப்பட்ட ஹீரோவிற்கு மவுசு அதிகம். சிண்ட்ரெல்லாவிற்குத்தான் அனுதாப அலை அடிக்கும். எனவே, அவ்வப்போது உங்களை மனிதராக காட்டிக் கொள்ளுங்கள். அடக்கம் அமரருள் உய்க்கும்

7. ஒரே விஷயத்தையே கட்டி அழாதீர்கள். சங்க இலக்கியமாக இருக்கட்டும்; அரசியல் குழாயடிகளாக இருக்கட்டும். கொஞ்சம் உலகம்; நிறைய உள்நாடு; அப்படியே உங்களால் மட்டுமே எழுதக்கூடிய தனியாள் அனுபவங்கள். எல்லாம் கலந்து கட்டி அவியல் மணக்கட்டும்.

8. நாய் என்றால் கரண்ட் கம்பம் பார்த்து ஒன்றுக்கிருக்கும். வலைப்பதிவர் என்றால் மூக்கை நுழைத்து சண்டை போடுவார்.

9. என் மூளை ஔவையார் மூளை. இடது சாரியாக எல்லாவற்றையும் ஒன்று, இரண்டு, மூன்று என பட்டியல் போட்டு அழகு பார்க்கும். ஆனால், இலக்கியவாதிகளுக்கு வலப்பக்க மூளை புனைந்து கவி பாடும். வைரமுத்துவாக இரண்டையும் நன்றாக குழைத்து கருப்பு மை போட்டு வாழ்க! வளர்க!!

வலைப்பதிவு – அட்டென்ஷத்துவம்

முந்தைய ட்வீட்ஸ் தொகுப்பு: கோடிங் – நிரலித்துவம்

அப்பாடக்கர்: Tamil Short Film by Ila

குறும்படம்:

நடிப்பு:

  • பாஸ்டன் ஸ்ரீராம்
  • ஜெயவேலன்
  • மாஸ்டர் சூர்யா

வசனம்: தேவ்

உணர்வும் ஆக்கமும்: இளா

Statutory Warning: இதற்கு மேல் ஸ்பாயிலர்கள் நிறைய இருக்கின்றன.

பின்னணி

1. ஃபேக் போடுவது

நகைச்சுவையான குறும்படம் போல் தென்பட்டாலும் இந்தப் படத்தின் கருப்பொருள் விவகாரமான விஷயம். சொவ்வறைக்காரர்கள் பொய் சொல்வது சகஜம். வானிலை படித்தவர்கள் தவறாக கணித்தால் தப்பில்லை. ஆனால், சாஃப்ட்வேரில் தெரியாததை தெரிந்ததாக சொன்னால் மாட்டிக் கொள்வேன்.

ஃபார்ச்சூன் 100 நிறுவனங்கள் முதல் உள்ளூர் கூடுவாஞ்சேரி கன்சல்ட்டிங் வரை இல்லாததையும் செய்யாததையும் இட்டு நிரப்பி காரியத்தை சாதித்துக் கொள்வதை பாடுபொருளாக ஆக்கியதற்கு பாராட்டுகள்.

2. பாஸ்டனில் கொழிஞ்சிக்காட்டூர்

பிரும்மச்சாரி ரூம் எப்படி இருக்கும்? தமிழக கிராம செட்டிங் மலை, குளம் எல்லாம் அமெரிக்காவில் எங்கே இருக்கும்? அவுட் டோர் சென்றாலும் முண்டா பனியன், கைலி சகிதமாக செல்வது சரிப்படுமா?

இது போன்ற நிதர்சன பிரச்சினைகளை லாவகமாக, பார்வையாளருக்கு துளிக்கூட சந்தேகம் வராத காட்சியமைப்பு. சிணுங்கும் தொலைபேசி முதல் நாயருக்கு டீ சொல்லும் பாங்கு வரை சிரத்தையான நுணுக்கங்கள். ’கலைஞர் டிவி’யின் நாளைய இயக்குநரின் சென்னைக்கார குருப்கள் கூட இப்படி பார்த்து பார்த்து செதுக்குவதில்லை.

3. இளா

இரண்டே நடிகர்கள். அவர்களை சட்டென்று இரண்டே நிமிடத்திற்குள் பதிய வைக்கும் குணச்சித்திரமாக்கம்.

எவ்வாறு என்பதை சுமாரான திரைக்கதை சொல்லிச் செல்லும். ஏன் என்பதை சுவாரசியமான கதைகள் சொல்லும். எப்படி என்பதை நகர்படங்களாக குறிப்பிடத்தகுந்த படங்கள் சொல்லிச் செல்லும். எதற்கு என்பதையும் முடிச்சுக்களோடு குறும்படத்தில் நிகழ்த்திக் காட்டி இருக்கிறார் இளா.

நாடகத்தன்மை எட்டிப் பார்க்காதது; பந்தா செட் போடாதது; பாடல் போட்டு நேரத்தை ரொப்பாதது; கால் மணி நேர குறும்படத்தின் கேரக்டர்களையும் ஆழப் பதிய வைப்பது. பலே… இளா!

ஷொட்டு

  • வசனம்: சில்லற இல்லாதவன் தாண்டா சிட்டிக்கெல்லாம் வருவான்!
  • ‘திங்க் பிக்’ என்னும் போஸ்டர் ரூம் நெடுக, கதாபாத்திரங்களின் லட்சியங்களை பிரதிபலிக்கிறது.
  • கணினிக்காரர்கள் புத்தகம் புத்தகமாக அடுக்கி வைத்து அழகு பார்ப்பதையும்; தலை மேல் துண்டு போல் மேலோட்டமாக வாசிப்பதையும் சொல்வது அழகு.
  • இது போல் ரசனைமிக்க காட்சிகள் நிறைய உண்டு. சாம்பிளுக்கு, ‘நோ ஆட்டோ ஃபார் ஃப்ரெஷர்ஸ்’ சொல்லலாம்.

சந்தேகங்கள்

  • யோசிப்பதற்காக மோவாய்க்கட்டை தேய்க்கும் தேய்வழக்காக நடிக்கும் ‘சாம்’ – தமிழ்ப்படங்களை நக்கல் விடுவதற்கா?
  • கம்ப்யூட்டரை விட ஜோதிகா பிரதானமாகத் தெரிவது, மங்களகரத்தின் சிம்பாலிக் ஷாட்டா?
  • ஜோக் தெரிய வேண்டும் என்னும் இடத்திற்காக ‘டெய்ங்’ என்று சத்தமாக வந்து விழும் இசைத் துணுக்கு, வெண்ணிறாடை மூர்த்தி சீரியல்களை கிண்டலடிக்கிறதா?
  • கோலிவுட்டை நினைவூட்டும் விதமான ‘சம்போ… சிவ சம்போ’ போன்ற பிட்டுகளின் உள்ளீடு என்ன?
  • நடுநடுவே கடிகாரத்தின் டிக் டாக் பின்னணியில் வருவது நேரம் உருண்டோடுவதன் குறியீடா?
  • பெங்களூரு, டே-1 எல்லாம் ஆங்கிலம்; சேலம் மாவட்டம் மட்டும் தமிழ் துணையெழுத்தில் வருவதன் ஊடுபிரதி மொழிச்சிக்கல்களைக் கையாள்கிறதா?

தொடர்புள்ள பதிவுகள்:

1. Notable Tamil Short Films: பார்க்கத் தகுந்த தமிழ் குறும்படங்கள்

2. நிமித்தகாரன்: குறும்படம்

3. நாளைய இயக்குநர்: கலைஞர் டிவி

நிமித்தகாரன்: குறும்படம்

இணைய நண்பர்கள் இணைந்து எடுத்த படம். புக் கிரிக்கெட் மட்டுமே விளையாடிக் கொண்டிருக்கும் புத்தகப்புழுக்கள் களமிறங்கி இருக்கிறது.

‘ஏதாவது செய்யணும் பாஸ்’ என்னும் பாலாஜி மனோகரன். தமிழோவியம்.காம் எடிட்டர், வலையக நிர்வாகம், அரங்கேற்றங்களுக்கு கேமிரா படப்பிடிப்பு என்றிருந்த கணேஷ் சந்திரா. ஒரு கை விரலுக்குள் அடங்கும் எண்ணிக்கை கொண்ட திறன்மிக்க இணைய கதாசிரியர்களுள் துள்ளலும் தனித்துவமும் நிறைந்த புனைவுகளைப் பதிவில் இடும் ஒருபக்கம் ஸ்ரீதர். நியூ ஜெர்சி டிராமா குழு மேடையேற்றும் எல்லா நாடகத்திலும் முக்கிய கதாபத்திரமோ, முக்கால் நிமிட வேடமோ… நினைவில் நிற்க வைக்கும் மோகன்.

முதலில் பிடித்தவை

  • கனவு காண்பவரின் உச்சரிப்பு; இயல்பான முகசேஷ்டை
  • இம்புட்டு பெரிய கதையை ஒப்பிப்பது போல் இல்லாமல், சுவாரசியமாக்கிய நிமித்தகாரன்
  • மிரட்சியும் மிளிர்வும் கொண்ட கனவு தேவதை
  • நேர்த்தியான எடிட்டிங்
  • அந்தப் பழைய ஓலைச்சுவடி போன்ற புத்தகம்
  • ஒளிப்படங்களை வைத்து யட்சிணியைக் காட்சியாக்கிய விதம்
  • குழப்பமில்லாத, எளிதில் புரியக்கூடிய சிம்பிளான படமாக்கம்

சில ஒப்பீடு

  • ஓவியம் என்டெர்டெயின்மென்ட்ஸ் குழுவினர், கலைஞர் டிவி ‘நாளைய இயக்குநர்‘ பார்க்கலாம்.
  • இன்செப்சன்‘ படம் வெளியாவதற்கு முன்பு எழுதப்பட்ட கதை! இம்ப்ரெசிவ்
  • ராமேஸ்வரம் கோவில் மண்டபம் போன்ற புகழ்பெற்ற புகைப்படத்திற்கு பதிலாக அரிதான படம் போட்டிருக்கலாம்.

கடைசியாக குறை

  • த்ரில்லருக்கு இசை அதிர வேண்டியதுதான். மோகனின் வசனத்தையும் கேட்க விட்டிருக்கலாம்.
  • Show but Not Tell என்போம். அதற்கு இன்னும் பெரிய பட்ஜெட் தேவையாக இருக்கலாம். இது விஷுவல் கம்யூனிகேசன் அல்லவா?

கதை வசனகர்த்தா: Post by ஸ்ரீதர் நாராயணன் from ஒரு பக்கம்

விமர்சகர் அவுரங்கசீப்: முயற்சிக்கு வாழ்த்து. நாஞ்சில் சம்பத் சொற்பொழிவுக்கு நிகரான நீளம் கொண்ட வசனங்கள் மட்டும் சற்று பிரச்னையாக உள்ளன. கதையை அப்படியே படமாக்கியதுபோல் உள்ளது. இடையே திரைக்கதை என்று ஒன்று உள்ளதை நினைவில் இருத்தியிருக்கலாம். இயக்குநர் இந்தியா வந்தால் சின்னத்திரைகளில் நல்ல எதிர்காலம் இருக்கும் என்று தோன்றுகிறது.

எழுத்தாளர் என் சொக்கன்: இந்தக் கதையை ஏற்கெனவே படித்தேனா என்பது நினைவில்லை, ஆனால் படமாகப் பார்க்க நன்றாக இருந்தது.

12 நிமிடப் படத்தில் 11 நிமிடங்கள் ஒரே ரூம், வெறும் டயலாக், அதைச் சுவாரஸ்யமாகக் காட்டுவது சுலபமில்லை, அதை நன்றாகச் செய்திருக்கிறார்கள்.

கடைசி நிமிட ட்விஸ்ட்மட்டும் கொஞ்சம் குமுதம் ஒரு பக்கச் சிறுகதைபோலப் புரிந்துகொள்ளப்பட்டுவிடுகிற சாத்தியம் உள்ளது 🙂

அதேபோல், அந்தக் கடைசி நிமிடத்தில் பேசும் பெண்ணுக்கு டப்பிங் வேறு யாராவது பேசியிருக்கலாம். உணர்ச்சியே இல்லாத குரல்.

சாகரன் – ‘தேன்கூடு’ கல்யாண்

பெப்ருவரி பத்தாம்  தேதிதான் நினைவு நாள். தொலைந்த நண்பரின் கடிதம் நேற்று வந்திருந்தது. அவர் கடிதத்தைப் படித்து முடித்ததும், தொடர்பில்லாமல் சாகரன் நினைவுக்கு வந்தார். அப்பொழுது தொகுத்தது: Thenkoodu Sagaran – Kalyan : Collection of Tamil Bloggers Obits

It is good to have a document. But, still not sure of what to write in memory of a faceless friend, who got acquainted by email and remained that way till his end.

We were returning to our van from a visit to the Thiruchanoor temple, to head back to Chennai. While we were searching for our slippers and was thinking about picking a better pair, the store owner told us that ‘உங்க கூட வந்தவர் மாதிரி இருக்கிற ஒருத்தர், கோவில் வாசலில் திடீரென்று விழுந்துட்டார். அந்த மண்டபத்தில் போட்டிருக்காங்க!’

I wanted it to be somebody else. Not my friend’s relative who has started ahead of us. I 100% believed it would be somebody else. I cannot imagine, somebody well known to us getting into that state of sudden heart attack. I was really confident that it would not be anyone accompanying us. With that callous attitude, I glanced and was shocked to see that it was one from our party.

When Tamiloviam Ganesh Chandra called me to relay the web blogs headlines, I thought it is not Thenkoodu Kalyan. ‘He cannot die. It cannot be him. He will come back with a short email.’

Sakaran will be missed in the Tamil technology industry. Lot of adjectives prop to my mind. Selfless, visionary, true leader, gentle natured, so on. I never got a chance to meet with him.

He was in the frequent emailer list of mine. If I come across some noteworthy or interesting piece of technology, I would have shared it with him. Not many were there in that list. Just him.

He would sincerely reply with his thoughts in a very dignified manner. Being a blogger, I had a natural tendency to project an opinionated arrogance in my few non-consequential sentences. However, his tone in the reply would be subdued, bringing out the applicability of that tech in the Tamil world as well as the implementation considerations.

I would act as a TV reporter. He would turn it into an analyst piece.

I had lengthy list of complaints, masquerading as wish-list, when he kicked off Thenkoodu. If somebody would had given me the same kind of irritating welcome, I would have thought that act as a guile attempt at being stupid and immature with a lack of appreciation for new things. He took a different approach as usual. He welcomed more criticism and nitpicking. I continued.

To appreciate his uniqueness, I have to resort to the comparison of fellow Tamil bloggers.

While many talked about bringing an alternate to the Thamizmanam aggregation service, (nobody with the exception of Mugunth), did anything worthy of notice. With him, there was no empty rhetoric. He simply delivered a much required automatic Tamil Blog reader tool.

I liked Thenkoodu over Thamizhmanam for couple of simple reasons.

I am a linear reader. I am still not yet hooked onto the hyperlinked ADHD presentations. Thenkoodu presented posts in a whole stream of all the blogs on a single page.

It also had simple retrofitting like user ego satisfaction index by listing the most viewed blog posts in a prominent corner. It snubbed 1000, 2000, 3000 countless single letter feedback attention garner artistes to a rightful place.

For a guy who gets puzzled by a Tamil word like ‘ஈச்சமரம்’ it gave an instant English dictionary translation. When you want a synonym for ‘mask’ in Tamil, it was equally handy. Thenkoodu just became a sub-conscious presence.

Going back to the comparison of blogger mentality to Kalyan, he never put himself as the sole soul behind all this nifty creations. Not because of fear of the pointless gun toting warmongers; just because he wanted his actions to speak, instead of some typed up march-past of letter arrays.

Kalyan always had ideas; apart from concepts, he had an execution plan; when things turn awry, he was open to alternate paths; he listened with an open heart; resiliently adopted worthy suggestions.

Kalyan could have easily coordinated the Thenkudu – Tamiloviam competition all by himself. He was selfless in inviting Tamil oviam to the fold. He designed the poll software, actively distributed the prizes, spread the name of variety of Tamil business vendors. He wanted every Tamil domain to be part of the contest by giving prizes from everybody like chennainetwork.com, NilaCharal.

Sakaran took pains to locate worthy juries and when they regretted about their non-availability, he went on to find even better jurors to be part of the contest.

Running the contest was a tough job. There might be TSCII to Unicode issues, jury might have an emergency, the tsunami would have struck down the internet in their country, the losers might start war against the winners, the winners might start war against themselves. He just moved ahead relentlessly.

Running a web site would have been a much tougher job. There will be tons of hacker attacks, defamation posts, addition/deletion/subtraction requests, restless blogger demands and so on. He went on doing it as though it was his duty without the smallest sign of whimper.

When one lives through hell, not many appreciated his efforts. When he passes away, even I want to be part of the ‘in’ crowd.

I sincerely miss him.

In a virtual world, I wish we can institute an honorary recognition accolade to a worthy cause in Thenkuudu Kalyan’s name. Hope, it becomes a reality and an annual event to a person ‘who did stuff’ in a professional as well as an ethical way to Tamil Blogdom.

மீண்டும் இகாரஸ் பிரகாஷ்

குமுதம் விகடனில் முக்கியமானவர் சுஜாதா; ஆனால், சூட்சுமகர்த்தா ரா கி ரங்கராஜன். காலச்சுவடு உயிர்மைகளில் சுந்தர ராமசாமியும் மனுஷ்யபுத்திரனும். இணையத்தில் ரோசாவசந்த் அண்ட் பிரகாஷ்.

கருநீலப் புடவை. கழுத்திலே சாஃப்ட்வேர் தாலி எழுதி ரி-என்ட்ரி தந்திருக்கிறார் ஐகாரஸ்.

நண்பரை சந்திச்சப்ப சொன்ன விஷயமும் நினைவுக்கு வந்தது.

‘முன்ன எல்லாம் பஸ் ஸ்டாண்டில் பொண்ணப் பார்த்தா “லட்சணமா இருக்காளே”ன்னு தோணும், அன்னிக்கு ராத்திரி ஒன்பது மணிக்கு நிக்கிறப்போ, “இவ வீடு எங்கே இருக்கோ? பத்திரமா போய் விடுவாளா?”ன்னு தோணிச்சு. கொஞ்சம் பெருமையாகவும் உடனே இருந்துச்சு. நமக்கும் வயசுக்குரிய சிந்தனை வருது. சாரு மாதிரி இன்னும் இளமையா மைனர் லுக் விடலியேன்னு ஏக்கமும் வந்தது’

‘கல்கி வளர்த்த தமிழ்’ படிக்கிறேன். அதில் வரும் கவலைகளும் நிகழ்வுகளும் சிந்தனைகளும் இன்றும் பொருந்துகின்றன. நமக்கு பல்லவன்; அவருக்கு டிராம்.

சிறுகதை மாதிரி எழுத முயன்றதாலோ; அல்லது ஒரு வருட அஞ்ஞாதவாசமோ அவரின் துள்ளல் நடை மிஸ்ஸிங்.

ஒரெயொரு பொதுப்படையான அபிப்பிராயம்:
‘என்பது’, ‘என்று’ – என்பது கெட்ட வார்த்தை; நாம் நிறைய போடுகிறோம். தவிர்க்கலாம்.

வாழ்த்துகள்.

இகாரஸ் குறித்த முந்தைய சில:
1. Chat Meet – Icarus Prakash
2. குணச்சித்திரம் : ஐ(இ)காரஸ் பிரகாஷ்
3. Icarus Prakash Notes from RKK – Rayar Kaapi Klub
4. குழுமங்களிலும் வலைப்பதிவுகளிலும் என்ன எழுதலாம்?

Separated at Birth: Venkat spl.

இன்றைய இரட்டையர்களை காட்டிக் கொடுத்தவர்: வெங்கட்

அ) நடிகை த்ரிஷா & கேமரான் டயஸ்


ஆ) பட்டிமன்ற பேச்சாளர் ராஜா & மனோபாலா


இ) எழுத்தாளர்கள் விமலாதித்த மாமல்லன் & திலீப் குமார்


முந்தைய பதிவு: தமிழ் சினிமா | நடிகைகள் | வலைப்பதிவு | தொலைக்காட்சி | இலக்கியம் | வில்லன் | இயக்குனர் | அரசியல் | Thx to Blogeswari

Tamilmanam

‘தமிழ்மணம்’ காசி உரையாடல்

1. இணையத்தில் தமிழ் உள்ளடக்கங்கள் தேவையான அளவுக்கு உள்ளன என்று எண்ணுகிறீர்களா?

எதைத் தேடினாலும் கிடைக்கிறது. எப்படித் தேட வேண்டும்

  • (ஒருங்குறி எழுத்துக்களை அடிப்பது,
  • தூய தமிழ்ப்பதங்கள் x ஒத்த தமிங்கிலம்,
  • ஆங்கிலத்தில் தட்டச்சினால் தமிழில் வரும் முடிவுகள்)

போன்றவற்றில் சிக்கல் இருந்தாலும், தமிழிணையத்தில் இல்லாத தலைப்பு என்பது அரிதாகவே அமைகிறது.

கணினியும் இணையமும் கிடைக்க வசதியுள்ள தமிழர் இன்னும் இவற்றில் அதிகமாகத் தமிழில் புழங்கவேண்டுமானால் என்னவெல்லாம்
செய்யவேண்டும்?

கணினிக் கிடைக்கப் பெற்றவர்களை

  1. அயலகத் தமிழர்,
  2. தமிழ்நாட்டினர்

என்று இரண்டாகப் பிரிக்கலாம். முந்தையவருக்கு இணைய நேரம் அதிகம்.

தமிழகத்தில் இருந்து உபயோகிப்போருக்கு தொலைக்காட்சி, பத்திரிகை தாண்டி கேளிக்கைக்கு செலவிட இணைய நேரம் குறைச்சல்.

இவர்களை மூன்று குழுக்களாக வைத்துக் கொள்ளலாம்.

  1. ஓய்வுபெற்றவர்களுக்கான குழுமங்கள் (mello.in போல்) பிரபலமாக வேண்டும்.
  2. நடுத்தரவயதினர் தட்டுத் தடுமாறி வெப்2.0 நுட்பங்களைப் பிடித்து, வலைப்பதிவு குழாம்களுக்குள் வெற்றிகரமாக நுழைந்து விடுகிறார்கள்.
  3. இளசுகளுக்கு ட்விட்டர், ஃபேஸ்புக் போன்றவற்றில் அறிமுகம் அதிகம். இவர்கள் வலைப்பதிவுகளுக்குள் இருக்கும் பெருசுகளின் உட்குழுக்கள் பக்கம் தலைவைத்தும் படுப்பதில்லை.

Digital divide போக்க ஊர்ப்புற கிராமங்களுக்கு குறைந்த விலை கணினியும் வலையும் எளிதில் சாத்தியப்ப்பட வேண்டும். நாட்டாமை குடும்பம் தவிர கடைநிலை குடும்பங்களுக்கும் அது, செல்பேசி போல் சென்றடைய வேண்டும். அதில் தமிழ் இடைமுகம், தட்டச்சு போன்ற சமாச்சாரங்கள் தொடக்கம் முதலே அறிமுகமாக வேண்டும். அது மட்டுமே முக்கியம்.

2. தகவல்-நுட்பப் புரட்சியின் முழுப் பயனையும் தமிழர் சமூகம் அனுபவிக்கிறதா? உ.ம். ஊடாடுதல் (மின்னஞ்சல், குறுஞ்செய்தி, மின்னரட்டை போன்றவை தமிழ் மூலமாக); மின்வணிகம் (வங்கி, இணையக்கடை, கட்டணம் செலுத்தல் போன்றவை தமிழில்); அரசாளுமை (வரிவிதிப்பு, அரசாணை, அரசின் அங்கங்களிடம் தமிழில் சேவை பெறுதல்) இதழ்கள் (செய்தி,இலக்கியம் வாசித்தல், வலைப்பதிவு, குறும்பதிவு, போன்ற வெப் 2.0 ஊடகங்கள் தமிழில்).

நான் அஸ்காவும் க்ரௌனிங் க்ளோரியும் வாங்கிய அண்ணாச்சி கடையில் துண்டு சீட்டில் ரசீது கொடுத்தல் வழக்கம். (வணிகம்)

மின் கட்டணத்திற்கு ஆங்கிலம் உபயோகித்த சென்னை வாசம். (அரசாளுமை)

பள்ளியில் ஊடாடியதெல்லாம் கிரிக்கெட்டின் மிட் ஆன், சில்லி பாயின்ட்ஸ்; கல்லூரியில் அரட்டை அடித்தால் க்ரூப் டிஸ்கசனுக்கு உதவும் ஆங்கிலம்.

நல்ல கேள்வி. தவறான ஆளிடம் கேட்கப்பட்டுவிட்டது.

3. தன்னார்வலர்களின் பங்களிப்பும் விக்கிப்பீடியா போன்ற குழுக்களின் பங்களிப்பும் இணையத்தில், கணினியில், தமிழின் பயன்பாடு அதிகரிக்க எந்த அளவுக்கு உதவியுள்ளன? உங்கள் பார்வையில் முக்கியமானவை, மேலும் முன்னெடுத்துச் செல்லவேண்டியவை என எவற்றைக்குறிப்பிடுவீர்கள்?

விஜய்காந்த்துக்கு தொலைபேசி இருக்கலாம். லியாகத் அலி கானிடம் கேட்டாவது என்னுடைய கீழ்க்கண்ட கேள்விகளுக்கு பதில் தந்திருப்பார்.

தமிழகத்தில் எத்தனை பல்கலைக்கழகங்கள் இருக்கு? இந்தியாவின் செம்மொழிக்கு எத்தனை நகரங்களில் துறை இருக்கு? உலகம் முழுக்க எவ்வளவு கல்லூரிகளில் தமிழ் கற்பிக்கப்படுகிறது? என்றெல்லாம் புள்ளிவிவரம் அடுக்கியிருப்பார்.

அவர்களில் பயிலும் எம்.ஃபில்களும் முதுகலைகளும் முனைவர் பட்டதாரிகளும் தங்கள் ஆய்வை இணையத்தி(லும்) வெளியாகும் peer reviewed journalஇல் சமர்ப்பித்து (பின்னூட்டங்களுக்கும்) பதிலளித்தால் மட்டும் டிகிரி கிடைக்க வைக்கலாம்.

காப்பியடித்து டாக்டரேட் வாங்கும் கனவான்களும், காசு கொடுத்து கரெக்ட் செய்யும் பேராசிரியர்களுக்கு கொடுக்கும் சம்பளத்திற்கு வேலை வாங்க முடியும்.

இந்தியாவில் எங்கு சென்றாலும் மாடு இருக்கும்; அடி பம்பு காற்று வாங்கும்; கணேசர்ருள்பாலிப்பார் என்பதெல்லாம் so 1950கள். செல்பேசிகள் நீக்கமற இரண்டு கைகளிலும் குடியிருக்கும் ஒளிர்காலம் இது. எளிய முறையில், செல்பேசியில் தமிழ் கொண்டு புழங்குவது எங்ஙனம்?

பேசுவதை தானியங்கியாக தமிழில் தட்டச்சி (முடிந்தால் ஆங்கில மொழிபெயர்ப்பும்) மைக்ரோசாஃப்ட் வோர்ட் கோப்பாக சேமிப்பது; ‘தேங்கா மண்டி ராசேந்திரனை வீட்டில கூப்புடு’ என்றால் உடனடியாக அழைப்பது; ‘ப்ரெசில் மிளகா நேத்து என்ன விலை’ என்று கேட்டால் விடை கொடுப்பது — சாத்தியம் ஏராளம்.

4. நாளையே அரசின் தகவல்-நுட்பத்துறைக்கு உங்களைத் தலைமையேற்கச் சொன்னால் மேற்சொன்னவகையிலான தமிழ்ப் பயன்பாட்டு விரிவாக்கத்துக்கான செயல்களாக எவற்றை உடனடியாக மேற்கொள்வீர்கள்?

அ) தமிழக கிராமங்களில் நூலகத்தில் இலவச கணினி மையமும், இணைய வசதியும் கிடைக்க செய்வது. அங்கு வருவோருக்கான தேவைகளை அறிந்து பூர்த்து செய்ய, சிறப்பு பயிற்சி அளிப்பது.

ஆ) ஆங்கில நிரலி ஏதாவது போட்டால் கண்டுபிடிக்கும் ‘கிருமி’ கொண்ட, தமிழில் மட்டும் ஊடாடும் வசதி கொண்ட செல்பேசிக்கு வரிவிலக்கு தருவது.

இ) சிறப்பான முறையில், திறமூல மென்பொருளாக தமிழ் OCR செய்பவருக்கு உரிய மானியத் தொகை தரப்படும் என்னும் தண்டோரா.

5. தமிழ் வலைப்பதிவுகளை பற்றிய உங்கள் பொதுவான கருத்து என்ன? புதிதாக வலைப்பதிக்க வருவோருக்கான யோசனைகளாக எவற்றைக் கூறுவீர்கள்?

தமிழ்ப்பதிவுகள் ஜோராக இருக்கின்றன. எதிர்பார்த்த விதத்தில், அபரிமிதமான வளர்ச்சி அடைந்திருக்கிறது. குறிப்பிட்ட வகையினரே (கல்லூரி முடித்து முப்ப்பத்தைந்து வயதுக்குள்ளான கணினி வல்லுநர்) பெரும்பாலும் நிறைந்திருப்பது காலப்போகில் சமனாகும்.

புதிய பதிவர்களுக்கு சில துப்புகள்:

அ) தமிழ்மணம், தமிலீஷ், திரட்டி, ப்ளாகுட், தமிழ்வெளி போன்ற எந்தத் திரட்டியும் விட வேண்டாம். எல்லாவற்றிலும் இணைந்துவிடுங்கள்.

ஆ) திண்ணை, தமிழோவியம், நிலாச்சாரல், அந்திமழை, சொல்வனம், தமிழ் ஹிந்து, கீற்று, என எல்லா இணைய சஞ்சிகைக்கும் உங்கள் ஆக்கங்களை அனுப்புங்கள். ஒவ்வொன்றுக்கும் எல்லாவற்றையும் அனுப்பாமல், ஒருவருக்கு அனுப்பியதையே இன்னொருத்தருக்கும் மீண்டும் பார்சல் செய்யாமல், அனுப்பிப் பாருங்கள். அவர்கள் அங்கீகரித்தால், உங்கள் எழுத்துக்கு பலம் கூடும்.

இ) குறிச்சொல் (லேபிள் அல்லது tag) நிறைய கொடுங்கள். ஓரிரண்டு பகுப்பு (category) வைத்துக் கொள்ளுங்கள். கவர்ச்சியான தலைப்பை விட பொருத்தமான தலைப்பாக வைக்கவும். தடித்த எழுத்துக்களை ஆங்காங்கே பயன்படுத்தவும். சம்பந்தமுள்ள புகைப்படம் ஒன்றாவது இடம்பெறுமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

கடைசியாக, அவியல், குவியல், மிக்சர் என்று எல்லாவற்றையும் கலந்து கட்டி அடிக்காமல், ஒரு விஷயத்தைக் குறித்து மட்டும் ஒரு பதிவு இடவும். கூகிளுக்கு அதுதான் பிடிக்கும். நான்கு மேட்டரை ஒன்றாக குவிக்காமல், one thing at a time என்று எழுதுவது நிறைய பதிவுகளை, எண்ணிக்கையையும் தரும்.

கட்டாங்கடைசியாக, உங்கள் பதிவு ஒவ்வொன்றிலும், நீங்களே self referenceஆக சுட்டி தரவேண்டும்:

1. பதிவர் டிப்ஸ்

2. புதிதாய் பதிபவர்களுக்கு வழிகாட்டிகள்

6. தமிழ்மணம் வரும் ஆகஸ்ட் 23ஆம் நாள் தன் சேவையின் ஐந்து ஆண்டுகளை நிறைவுசெய்கிறது. இந்த 5 ஆண்டுகளில் தமிழ்மணத்தின் சேவையைப் பற்றிய உங்கள் கருத்துகள் என்ன? வரும் ஆண்டுகளில் தமிழ்மணம் செய்யவேண்டியவை எவை?

ட்விட்டரைக் குறித்து நக்கலடிப்பவர்கள், குறை சொல்லுபவர்கள் எல்லோருமே, ட்விட்டருக்குள் இருந்துகொண்டேதான் அதை செய்து வந்திருக்கிறார்கள். தமிழ்மணமும் அதே போல் அதனை விமர்சித்தவர்களையும், சேறு அப்பினவர்களையும், DDoS செய்தவர்களையும் வைத்துக் கொண்டே இயங்கி வந்திருக்கிறது; இயங்குகிறது; இயங்கும்!

ஈழப்பிரச்சினை குறித்த தகவல்களையும் கட்டுரைகளையும் முன்னிறுத்தியது வேறு எந்த தமிழ் ஊடகமும் செய்யாத விஷயம். அதற்காக சிறப்பு நன்றிகள்.

ஆலோசனை சொல்வது எளிது என்பதை அறிவேன். எனவே, இன்று போல் என்றும் தமிழ்மணம் தொடர்ந்தாலே போதுமானது என்றாலும்…

1) சூடான இடுகைகள் இல்லாத தமிழ்மணம், பாடல் இல்லாத படம் போல் சோபிக்கவில்லை. பாட்டு ஹிட்டானால்தான், படம் ஜெயிக்கும் என்றில்லைதான். இருந்தாலும், ஆடலுடன் பாடலைக் கேட்டு ரசிப்பதிலேதான் சுகம். அதிகம் சுட்டப்பட்ட பதிவுகள் மீண்டும் வேண்டும்.

2) அகரவரிசைப்படி அழைக்கும் வகுப்பு போல், நேரப்படி காட்டும் முறை மாற்றியமைக்க வேண்டும். வாசகர் பரிந்துரை பெரிதாக்கப்பட்டு, முகப்பில் இன்னும் பிரதானமாக்கலாம். அந்தக்கால ‘பூங்கா’ போல் தமிழ்மண ஆசிரியர் குழுவினரின் ‘பெட்டக’த் தெரிவுகளும் முன்வைக்கலாம்.

3) சாரு, எஸ் ராமகிருஷ்ணன், பா ராகவன், ஜெயமோகன் என்று பெரிய எழுத்தாளர் கும்பலே இருக்கிறது. இந்த மாதிரி செய்தியோடை வழங்குபவர்களை தமிழ்மணத்தின் ஓரத்திலாவது தொடுப்பு காட்டுவது, காலத்தின் கட்டாயம்.

4) விளம்பரம். என் பதிவுக்கு நான் காசு தந்து 24 மணி நேரம் முகப்பில் வைத்திருக்க தயார் என்றால், அதற்கு திரட்டி இடம் கொடுக்கலாம். புத்தக விளம்பரங்களுக்கு காலச்சுவடு முதல் வார்த்தை போன்ற பத்திரிகைகள் வரை 50% தள்ளுபடி தரும். அந்த மாதிரி, விளம்பரப் பதிவுகளுக்கு ஆடித் தள்ளுபடி கொடுக்கலாம்.

5) ‘அண்மையில் இணைக்கப்பட்ட பதிவுகள்’, ‘நீங்கள் உறங்கியபோது எழுதப்பட்ட பதிவுகள்’, ‘நேற்று சூடான இடுகைகள்’ என்றெல்லாம் கலந்துகட்டி ஆங்காங்கே தூவப்பட்டோ, தனியாக tabஇடப் பட்டோ வந்தால் சுவாரசியம் அதிகரிக்கும். இப்பொழுது செத்தவன் கையில் வெத்தலை பாக்காக, ரொம்ப சைவமாக இருக்கிறது.

இளையராஜா போல் ‘உலகம் இப்போ எங்கோ போவுது; எனக்கு இந்த சொந்த நாடு போதும்!’ என்றில்லாமல், திக்கெட்டும் சென்று பன்மொழிகளிலும் கால் பதித்து, மேன்மேலும் உயரும். அடிச்சு தூள் கெளப்புங்க!