Tag Archives: Tips

Idly Vadai 9 Year Greetings

இட்லி வடை ஆரம்பித்து பத்தாவது ஆண்டு துவங்கப் போகிறது.

பத்தாண்டுகளாக தமிழ்ப்பதிவுகள் எப்படி இருக்கிறது என்று ரிப்போர்ட் கார்ட் போடலாம். பேருந்து விபத்தில் சென்னை நகரத்தின் பள்ளி சிறுவர்கள் இறப்பது போல் அது அடிக்கடி நடப்பது.

பத்தாண்டுகளில் இட்லி வடை எழுதியதில் பெஸ்ட் எது என்று பார்க்கலாம். டெண்டுல்கர் சதம் அடிப்பது போல் ஆயிரக்கணக்கான பதிவுகளில் நூறு திக்கி திணறி தேறலாம்.

சமகால ஜாம்பவான்களான பேயோன், மனுஷ்யபுத்திரன் போன்ற புனைப்பெயர்களோடு ஒப்பிட்டு அலசலாம். கோகுலாஷ்டமிக்கு கிருஷ்ணர் வேடம் அணிவது பொருத்தம் என்பது போல் இட்லி வடையில் அசுரர்களுக்கு இடம் இல்லை.

அப்படியானால் என்ன செய்யலாம்?

நீங்களும் இட்லி வடையாக ஒன்பது யோசனைகள் கொடுக்கலாம்:

1. தற்பெருமை, சுய அங்கீகாரத்தின் வெளிப்பாடாக அகங்காரம், தவறு செய்தாலும் மன்னிப்பு கேட்காத தன்மை, காதல் மன்னர்களின் வசீகரம் என்று அரசியல்வாதிக்கும் வலைப்பதிவருக்கும் உள்ள ஒற்றுமைகள் நிறைய. ஆனால், அரசியலில் வாக்கு கேட்டு வெற்றி பெற்றால்தான் மதிப்பு. வலையில் எழுதினாலே குவியும் வாக்கு.

2. இட்லி-வடை என்பது வாரிசு அரசியல் மாதிரி. முன்னுமொரு மூதாதையர் காலத்தில் இருந்து தியாகி பென்சன் பெற தகுதி பெற்றவர். நேற்றைய பினாமி பாலிடிக்சில் மில்லியனரானது போல் புதிதாக முளைத்தவர் இந்த பூமியில் காலூன்றுவது எப்படி? திண்ணை, சொல்வனம், உயிரோசை எதையும் விட வேண்டாம். ட்விட்டர், பேஸ்புக், பிண்டெரஸ்ட் எங்கும் தோன்றவும்.

3. எனக்கு ரொம்ப பிடித்தமான வினா: ‘எல்லோரும் இப்படி செஞ்சா என்ன ஆகும்?’ – அஞ்சு பைசா அன்னியன் ஆகட்டும்; எனக்கு காரியம் ஆனால் போதும் என்று கூடங்குளத்தை மூடச்சொல்லும் உதயகுமார் ஆகட்டும். உலகில் உள்ள அனைவரும் எனக்கு மட்டும் இது நடந்தால் போதும் என்று நம்பும் மனநிலையை உடைக்கலாம்.

4. எனக்கு நிரலி எழுதத் தெரியும். ஆனால், கணினி ப்ரொகிராமிங் குறித்து எழுதியது ரொம்பக் குறைவு. மொத்தம் ஏழெட்டு பதிவுகளில் இரண்டாயிரம் வார்த்தைகளை தாண்டாது. இந்த மாதிரி நம் துறை சார்ந்து எழுதலாம்.

5. சுவைக்காக தண்ணியடிப்பது ஒரு ரகம். பழக்கத்திற்காக சரக்கடிப்பது ஒரு ரகம். தூக்கத்திற்காக குவார்ட்டர் அடிப்பது இன்னொரு ரகம். எப்பொழுதாவது கம்பெனிக்காக குடிப்பது என் ரகம். நீங்கள் பதிவதில் எந்த ரகம்?

6. சண்டைக் காட்சிகளில் வாத்தியார் மூன்று அடி வாங்கிய பிறகுதான் நிமிர்ந்து திரும்பக் கொடுப்பார். பாவப்பட்ட ஹீரோவிற்கு மவுசு அதிகம். சிண்ட்ரெல்லாவிற்குத்தான் அனுதாப அலை அடிக்கும். எனவே, அவ்வப்போது உங்களை மனிதராக காட்டிக் கொள்ளுங்கள். அடக்கம் அமரருள் உய்க்கும்

7. ஒரே விஷயத்தையே கட்டி அழாதீர்கள். சங்க இலக்கியமாக இருக்கட்டும்; அரசியல் குழாயடிகளாக இருக்கட்டும். கொஞ்சம் உலகம்; நிறைய உள்நாடு; அப்படியே உங்களால் மட்டுமே எழுதக்கூடிய தனியாள் அனுபவங்கள். எல்லாம் கலந்து கட்டி அவியல் மணக்கட்டும்.

8. நாய் என்றால் கரண்ட் கம்பம் பார்த்து ஒன்றுக்கிருக்கும். வலைப்பதிவர் என்றால் மூக்கை நுழைத்து சண்டை போடுவார்.

9. என் மூளை ஔவையார் மூளை. இடது சாரியாக எல்லாவற்றையும் ஒன்று, இரண்டு, மூன்று என பட்டியல் போட்டு அழகு பார்க்கும். ஆனால், இலக்கியவாதிகளுக்கு வலப்பக்க மூளை புனைந்து கவி பாடும். வைரமுத்துவாக இரண்டையும் நன்றாக குழைத்து கருப்பு மை போட்டு வாழ்க! வளர்க!!

சமூக வலைப்பின்னல் தளங்களில் தனிமனிதர்கள் தங்கள் பொறுப்பினை உணர்ந்து செயல்படுவதற்கான வழிகாட்டுதல்கள்

புதிய தலைமுறை இதழுக்காக எழுதியது:

விவகாரம் இல்லாமல் விவகாரத்தை முன்னிறுத்துவது எப்படி?

தமிழில் மிகவும் புகழ்பெற்ற பழமொழி இருக்கிறது. ‘அரசன் எவ்வழி; மக்கள் அவ்வழி!’ இது பாஸ்டனுக்கும் பொருந்தும். பம்பாய்க்கும் பொருந்தும்.

வேகமாக வண்டியை ஓட்டினால் மாட்டிக்குவோம். அரை அங்குலாம் அதிகமாக வீட்டைக் கட்டினால் தரைமட்டமாக்கப் படுவோம் என்று பயந்து வாழ்க்கையை சட்டதிட்டத்திற்கு உட்பட்டு அமெரிக்காவில் வாழ்கிறேன். அஞ்சி அஞ்சி வாழும் வாழ்வு இந்தியாவில் கிடையாது. இணையத்தில் அந்த அச்சம் சுத்தமாக நீங்கி, டார்ஜான் போல் சுதந்திரமாக சுற்றித் திரிய முடிகிறது.

என்னுடைய வாழ்க்கையே இணையத்தில் என்றாகி விட்டது. உன் நண்பர்களைச் சொல்… உன்னைப் பற்றி சொல்கிறேன் என்பது அந்தக் காலம். உன் மின்னஞ்சல் முகவரியைச் சொல்… உன் சரித்திரத்தை அப்பட்டமாக்குகிறேன் என்பது இந்தக் காலம்.

இப்பொழுதெல்லாம் நேர்காணலுக்குச் சென்றால், ‘உங்கள் பொழுதுபோக்கு என்ன?’ என்றெல்லாம் கேட்பதில்லை. நமது ஃபேஸ்புக், டுவிட்டர் பழக்க வழக்கத்தை உளவு கண்டு அவர்களே அறிந்து வைத்திருக்கிறார்கள். ரொம்ப நேர்மையாக ‘நமக்கு அந்த மாதிரி சமூகத்தளங்களில் எல்லாம் ஐடி கிடையாதுங்க’ என்றால் அதை விட மிகப் பெரிய பிரச்சினை. எல்லாக் குரங்கும் நான்கு கால் கொண்டு தாவும்பொழுது, நாம் மட்டும் இரண்டு கால் கொண்டு நடந்தால்… பிரச்சினைதான். எனவே, சமூக வலைத்தளங்களில் நம் முகவரியும் இருக்க வேண்டும். இயங்கவும் வேண்டும். அதே சமயம் உங்களின் உண்மையான விருப்பங்களில் ஈடுபாட்டோடு செயல்பட வேண்டும்.

ஹிண்டுவில் ‘லெட்டர்ஸ் டு தி எடிட்டர்’ எழுதி நான்கு நாள் தேவுடு காத்து, அதன் பின் அது வெளியாகாத கோபத்தில் ஹிந்து மீது கோபம் கொண்டு திட்டுவது எல்லாம் மலையேறிப் போயாச்சு. சன் டிவியிலோ, குமுதத்திலோ தவறான தகவல் வந்தால், அதை உடனுக்குடன் கிழித்துத் தொங்க விட்டு, நண்பர்களைக் கொண்டு பரபரப்பாக்கி, அந்தந்த மீடியாவின் போட்டியாளர்களின் பார்வைக்கு கொண்டு செல்கிறார்கள். நாளடைவில் இந்தப் பிழை அப்படியே அமுங்கிப் போகாமல், கவனத்தில் இருக்குமாறு வைத்திருக்கிறார்கள்.

இதே போன்ற சுமைதாங்கியை எந்த வலைப்பதிவர் மீதும் சாத்தலாம். இது நம் பக்கமும் வரலாம். ஒரு விஷயத்தை வலையில் பகிருமுன் சரி பாருங்கள். இதை நம் அப்பா படித்தால்… நம் மகள் படித்தால்… எப்படி இருக்கும் என்று யோசியுங்கள். அவர்களுக்கு தகுந்த மொழியில் எழுதுங்கள்.

நம் மகளோ மனைவியோ படித்தால் நம்மை எளிதில் தொடர்பு கொண்டு அவர்கள் தரப்பு கருத்தை சொல்லலாம். மற்றவர்களுக்கு என்ன வழி? உங்களைத் தொடர்பு கொள்ளும் முகவரியை பிரதானமாகப் போடுங்கள். மறுமொழிப் பெட்டியை வைத்திருங்கள். பதில் போட பல வழிகள் கொடுங்கள்.

அதற்காக, அனாமதேயமாக வருபவர்களுக்கு இடம் கொடுக்க வேண்டாம். முகங்காட்டாமல் வருபவர்கள், உங்களின் இடத்தை உபயோகப்படுத்தி பிறரை தூற்றலாம். அதற்கு இடம் கொடுக்க வேண்டாம். என் வீட்டில் நடக்கும் விருந்தில் அனைவருக்கும் இடமுண்டு. அதற்காக என் முகத்தில் குத்துபவருக்கும் இலவச இடம் தரமாட்டேன். முக்கியமாக சாப்பிட வந்திருக்கும் சக விருந்தினரை குத்த நிச்சயம் அனுமதி கிடையாது.

நீங்களும் முகமூடி போட்டு போலி மின்னஞ்சல் கொண்டு எங்காவது கருத்து சொல்லும்போது கவனமாக இருக்கவும். எந்த மாதிரி முகத்திரை போட்டாலும் அது அழுந்து தொங்கும். அது விக்கிலீக்ஸ் ஜூலியன் அசாஞ்சேயாகவே இருந்தாலும் சரி. நிச்சயம் பல நாள் போலி ஒரு நாள் அகப்படுவான்.

தகவலை பகிரும் ஆசையில் எங்கிருந்து இந்தத் தகவல் கிடைத்தது என்பதை போட மறந்து விடுவோம். இன்னாரைப் பற்றி இன்னார் என்னா சொன்ன்னார் என்று தெளிவாக இடஞ்சுட்டி விடுங்கள். இது காப்பிரைட் தகராறுகளில் இருந்து நம்மைக் காப்பாற்றும். நாளைக்கே எவறாவது அவதூறு என்று கிளம்பினாலும், ‘அந்த உடுப்பி பவன் சாம்பார்தான் இங்கே ஊற்றப்பட்டது. இது நான் சொந்தமாக சமைத்தது அல்ல!’ என்று கைகாட்டி தப்பித்து விடலாம்.

ஃபேஸ்புக்கிலும் ட்விட்டரிலும் யூடியூபிலும் கருத்து வந்து விழுந்தவுடன் வேகமாக எதிர்வினை செய்வது அவசியம். என்னைப் பற்றி பேசுகிறார் என்றால் சும்மா ஒட்டு மட்டும் கேட்டால் போதும். என்னைக் குறித்து தப்பான பிரச்சாரம் நடக்கிறது என்றால் அதை நிச்சயம் தட்டிக் கேட்க வேண்டும். தவறு நம் பக்கம் இருந்தால் மன்னிப்பு கேட்டு விடுங்கள். இல்லாவிட்டால், எதிராளி மன்னிப்பு கேட்கும்வரை விடாதீர்கள்.

சட்டென்று செயல்படுவது எனக்கு மிகவும் பிடிக்கும்.

பத்து பேரை கேட்காமல், புத்தகங்களை நாலு மணி நேரம் புரட்டாமல் கீபோர்ட் துணையோடு கூகிள் வேகம் பிடித்திருக்கிறது. கால்பந்தாட்டத்தின் கடைசி நிமிடத்தில் குறுக்கே பாய்ந்து கோல் போடும் விறுவிறுப்பான ஆட்டம் ரசிக்கிறது. திறமைக்கும் இளமைக்கும் அடையாளமாக வேகம் திகழ்கிறது. ’வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ என்பது போல் நான் ஈயாக இருந்தாலும் இக்கட்டான சூழ்நிலையிலும் உடனடி பாய்ச்சல் அனைவரையும் வசீகரிக்கிறது.

இந்த அபார வேகம் சமூக வலைப்பின்னல் தளங்களில் இயங்க மிகவும் தேவை. இந்த வேகத்தை நிதானம் இழக்காமல் இயக்க அசுர நிதானம் அதைவிட அத்தியாவசியமான தேவை.

டென்னிஸ் வீரரையே எடுத்துக் கொள்வோம். எதிராளி பந்து போட்டவுடன் அவசரப்படுபவரை விட அனுமானித்து ஆடுபவரே வெற்றி அடைகிறார். பந்து எங்கே விழும், எப்படி சுழலும், பந்தை எங்கே இருந்து எப்படி போடுகிறார், என்றெல்லாம் கணித்து ஆடுபவரால் மட்டுமே வேகமான பந்தை சரியாக ஆட முடிகிறது. சொல்லப்போனால் விரைவாக அடிப்பதை விட பந்தைக் குறித்த தகவல்களை சேமிப்பதே முக்கியமாகி விடுகிறது.

ஃபேஸ்புக்கிலும் ட்விட்டரிலும் யூடியூபிலும் கருத்து வந்து விழுந்தவுடன் வேகமாக எதிர்வினை செய்வது அவசியம். நாம் சார்ந்திருக்கும் நிறுவனம் குறித்த அவதூறையோ, நம்முடைய உயரிய விழுமியத்திரற்கு எதிரான பிரச்சாரத்தையோ தோன்றிய புதிதில் தடுத்தாட்கொள்ளுதல் மிகவும் முக்கியம்.

ஆனால், டென்னிஸ் வீரரின் கணிப்பு போல் இந்தக் விவாதம் எவ்வாறு மாறும், எங்ஙனம் உருப்பெறும் என்று யோசிக்கவும் வேண்டும்.

இதற்கு மூன்று கட்டமாக திட்டம் வகுக்கலாம்.

1) பத்தியம் – சாதாரணமாகச் சொன்னால் கவனமாக இருத்தல்; பத்தியமாக இருப்பது என்றால் பாதுகாப்பாக இருத்தல். தகவல்களையும் நண்பர்களையும் உசாத்துணைகளையும் சேர்த்தல்.

2) செயற்பாங்கு – திரும்ப திரும்ப ஒன்றை செய்வதன் மூலமே நம் வேகம் அதிகரிக்கிறது. ’எனக்கு பத்தாயிரம் வித்தை தெரிந்தவனைக் குறித்து கவலையில்லை; ஆனால், ஒரே வித்தையை பத்தாயிரம் தடவை பயிற்சி செய்தவனை நினைத்துதான் அஞ்சுகிறேன்’ என்று ப்ரூஸ்லீ சொன்ன மாதிரி பயின்ற செயல்முறையில் இருந்து ஒன்றைத் தேர்ந்தெடுத்தல்.

3) கூத்து – நடவடிக்கையை செவ்வனே நிறைவேற்றுவது.

வாரத்திற்கு ஒரு முறை என்பதற்கு பதில் ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் என்றோ, ஒரு மணி நேரத்திற்கு ஐந்து நிமிடம் என்றோ தொடர்ந்த கவனிப்பில் இருக்க வேண்டும். கெட்ட பழக்கங்களை நீக்க கடும் பிரயத்தனத்தில் இறங்க வேண்டாம்; சிறப்பான நடவடிக்கைகளை அன்றாட செயல்பாடாக ஆக்கவும். அன்றாட செயல்களை தொடர்பயிற்சியின் மூலம் கூராக்கவும்.

தோட்டக்காரனைப் போல் யோசித்து, தச்சனைப் போல் செயல்படவும்.

அன்றாட செய்திகளுக்கு விமர்சனம், சமூக அவலங்களுக்கு எதிராக ஆமீர் கான் போல் அரட்டை கோஷம் என இவை எல்லாவற்றையும் விட உங்களுக்கு லட்சியமான ஒரு விஷயத்தை கெட்டியாகப் பிடித்துக் கொள்ளுங்கள். அது கனடாவின் கரடிகளைக் காப்பாற்றும் பிரச்சாரமாக இருக்கலாம்; போபால் விஷவாயுவிற்கான நஷ்டஈடாக இருக்கலாம். உங்கள் பெயரைச் சொன்னால், அனைவருக்கும் அந்த சிக்கல்தான் நினைவிற்கு வரவேண்டும்.

சிக்கல் இல்லாமல் வலையில் உலா வாருங்கள்.

இறுதியாக புத்தகத்தைப் பயில வேண்டுமானால், படித்த புத்தகத்தை மூட வேண்டும். அதே போல் சமூக நட்புகளை நிஜமாக்க வேண்டுமானால், அவர்களோடு சமூக வலைப்பின்னல் தளம் தாண்டியும் நட்பு பயில வேண்டும். அவ்வாறு தோழமைக்கு உருவமும் உயிரும் இருந்தால்தான் நம்மைக் குறித்து அவர்களுக்கு அக்கறையும் அவர்களைக் குறித்து நமக்கு பொறுப்பும் இயல்பாக உருவாகும்.

குடுகுடுவென்று காரியத்தில் இறங்காதே! காலத்தே பயிர் செய்யாமலும் இராதே!!

தொடர்புள்ள பதிவு: BBC News – Need a job? Learn to impress the robots

Tamilmanam

‘தமிழ்மணம்’ காசி உரையாடல்

1. இணையத்தில் தமிழ் உள்ளடக்கங்கள் தேவையான அளவுக்கு உள்ளன என்று எண்ணுகிறீர்களா?

எதைத் தேடினாலும் கிடைக்கிறது. எப்படித் தேட வேண்டும்

  • (ஒருங்குறி எழுத்துக்களை அடிப்பது,
  • தூய தமிழ்ப்பதங்கள் x ஒத்த தமிங்கிலம்,
  • ஆங்கிலத்தில் தட்டச்சினால் தமிழில் வரும் முடிவுகள்)

போன்றவற்றில் சிக்கல் இருந்தாலும், தமிழிணையத்தில் இல்லாத தலைப்பு என்பது அரிதாகவே அமைகிறது.

கணினியும் இணையமும் கிடைக்க வசதியுள்ள தமிழர் இன்னும் இவற்றில் அதிகமாகத் தமிழில் புழங்கவேண்டுமானால் என்னவெல்லாம்
செய்யவேண்டும்?

கணினிக் கிடைக்கப் பெற்றவர்களை

  1. அயலகத் தமிழர்,
  2. தமிழ்நாட்டினர்

என்று இரண்டாகப் பிரிக்கலாம். முந்தையவருக்கு இணைய நேரம் அதிகம்.

தமிழகத்தில் இருந்து உபயோகிப்போருக்கு தொலைக்காட்சி, பத்திரிகை தாண்டி கேளிக்கைக்கு செலவிட இணைய நேரம் குறைச்சல்.

இவர்களை மூன்று குழுக்களாக வைத்துக் கொள்ளலாம்.

  1. ஓய்வுபெற்றவர்களுக்கான குழுமங்கள் (mello.in போல்) பிரபலமாக வேண்டும்.
  2. நடுத்தரவயதினர் தட்டுத் தடுமாறி வெப்2.0 நுட்பங்களைப் பிடித்து, வலைப்பதிவு குழாம்களுக்குள் வெற்றிகரமாக நுழைந்து விடுகிறார்கள்.
  3. இளசுகளுக்கு ட்விட்டர், ஃபேஸ்புக் போன்றவற்றில் அறிமுகம் அதிகம். இவர்கள் வலைப்பதிவுகளுக்குள் இருக்கும் பெருசுகளின் உட்குழுக்கள் பக்கம் தலைவைத்தும் படுப்பதில்லை.

Digital divide போக்க ஊர்ப்புற கிராமங்களுக்கு குறைந்த விலை கணினியும் வலையும் எளிதில் சாத்தியப்ப்பட வேண்டும். நாட்டாமை குடும்பம் தவிர கடைநிலை குடும்பங்களுக்கும் அது, செல்பேசி போல் சென்றடைய வேண்டும். அதில் தமிழ் இடைமுகம், தட்டச்சு போன்ற சமாச்சாரங்கள் தொடக்கம் முதலே அறிமுகமாக வேண்டும். அது மட்டுமே முக்கியம்.

2. தகவல்-நுட்பப் புரட்சியின் முழுப் பயனையும் தமிழர் சமூகம் அனுபவிக்கிறதா? உ.ம். ஊடாடுதல் (மின்னஞ்சல், குறுஞ்செய்தி, மின்னரட்டை போன்றவை தமிழ் மூலமாக); மின்வணிகம் (வங்கி, இணையக்கடை, கட்டணம் செலுத்தல் போன்றவை தமிழில்); அரசாளுமை (வரிவிதிப்பு, அரசாணை, அரசின் அங்கங்களிடம் தமிழில் சேவை பெறுதல்) இதழ்கள் (செய்தி,இலக்கியம் வாசித்தல், வலைப்பதிவு, குறும்பதிவு, போன்ற வெப் 2.0 ஊடகங்கள் தமிழில்).

நான் அஸ்காவும் க்ரௌனிங் க்ளோரியும் வாங்கிய அண்ணாச்சி கடையில் துண்டு சீட்டில் ரசீது கொடுத்தல் வழக்கம். (வணிகம்)

மின் கட்டணத்திற்கு ஆங்கிலம் உபயோகித்த சென்னை வாசம். (அரசாளுமை)

பள்ளியில் ஊடாடியதெல்லாம் கிரிக்கெட்டின் மிட் ஆன், சில்லி பாயின்ட்ஸ்; கல்லூரியில் அரட்டை அடித்தால் க்ரூப் டிஸ்கசனுக்கு உதவும் ஆங்கிலம்.

நல்ல கேள்வி. தவறான ஆளிடம் கேட்கப்பட்டுவிட்டது.

3. தன்னார்வலர்களின் பங்களிப்பும் விக்கிப்பீடியா போன்ற குழுக்களின் பங்களிப்பும் இணையத்தில், கணினியில், தமிழின் பயன்பாடு அதிகரிக்க எந்த அளவுக்கு உதவியுள்ளன? உங்கள் பார்வையில் முக்கியமானவை, மேலும் முன்னெடுத்துச் செல்லவேண்டியவை என எவற்றைக்குறிப்பிடுவீர்கள்?

விஜய்காந்த்துக்கு தொலைபேசி இருக்கலாம். லியாகத் அலி கானிடம் கேட்டாவது என்னுடைய கீழ்க்கண்ட கேள்விகளுக்கு பதில் தந்திருப்பார்.

தமிழகத்தில் எத்தனை பல்கலைக்கழகங்கள் இருக்கு? இந்தியாவின் செம்மொழிக்கு எத்தனை நகரங்களில் துறை இருக்கு? உலகம் முழுக்க எவ்வளவு கல்லூரிகளில் தமிழ் கற்பிக்கப்படுகிறது? என்றெல்லாம் புள்ளிவிவரம் அடுக்கியிருப்பார்.

அவர்களில் பயிலும் எம்.ஃபில்களும் முதுகலைகளும் முனைவர் பட்டதாரிகளும் தங்கள் ஆய்வை இணையத்தி(லும்) வெளியாகும் peer reviewed journalஇல் சமர்ப்பித்து (பின்னூட்டங்களுக்கும்) பதிலளித்தால் மட்டும் டிகிரி கிடைக்க வைக்கலாம்.

காப்பியடித்து டாக்டரேட் வாங்கும் கனவான்களும், காசு கொடுத்து கரெக்ட் செய்யும் பேராசிரியர்களுக்கு கொடுக்கும் சம்பளத்திற்கு வேலை வாங்க முடியும்.

இந்தியாவில் எங்கு சென்றாலும் மாடு இருக்கும்; அடி பம்பு காற்று வாங்கும்; கணேசர்ருள்பாலிப்பார் என்பதெல்லாம் so 1950கள். செல்பேசிகள் நீக்கமற இரண்டு கைகளிலும் குடியிருக்கும் ஒளிர்காலம் இது. எளிய முறையில், செல்பேசியில் தமிழ் கொண்டு புழங்குவது எங்ஙனம்?

பேசுவதை தானியங்கியாக தமிழில் தட்டச்சி (முடிந்தால் ஆங்கில மொழிபெயர்ப்பும்) மைக்ரோசாஃப்ட் வோர்ட் கோப்பாக சேமிப்பது; ‘தேங்கா மண்டி ராசேந்திரனை வீட்டில கூப்புடு’ என்றால் உடனடியாக அழைப்பது; ‘ப்ரெசில் மிளகா நேத்து என்ன விலை’ என்று கேட்டால் விடை கொடுப்பது — சாத்தியம் ஏராளம்.

4. நாளையே அரசின் தகவல்-நுட்பத்துறைக்கு உங்களைத் தலைமையேற்கச் சொன்னால் மேற்சொன்னவகையிலான தமிழ்ப் பயன்பாட்டு விரிவாக்கத்துக்கான செயல்களாக எவற்றை உடனடியாக மேற்கொள்வீர்கள்?

அ) தமிழக கிராமங்களில் நூலகத்தில் இலவச கணினி மையமும், இணைய வசதியும் கிடைக்க செய்வது. அங்கு வருவோருக்கான தேவைகளை அறிந்து பூர்த்து செய்ய, சிறப்பு பயிற்சி அளிப்பது.

ஆ) ஆங்கில நிரலி ஏதாவது போட்டால் கண்டுபிடிக்கும் ‘கிருமி’ கொண்ட, தமிழில் மட்டும் ஊடாடும் வசதி கொண்ட செல்பேசிக்கு வரிவிலக்கு தருவது.

இ) சிறப்பான முறையில், திறமூல மென்பொருளாக தமிழ் OCR செய்பவருக்கு உரிய மானியத் தொகை தரப்படும் என்னும் தண்டோரா.

5. தமிழ் வலைப்பதிவுகளை பற்றிய உங்கள் பொதுவான கருத்து என்ன? புதிதாக வலைப்பதிக்க வருவோருக்கான யோசனைகளாக எவற்றைக் கூறுவீர்கள்?

தமிழ்ப்பதிவுகள் ஜோராக இருக்கின்றன. எதிர்பார்த்த விதத்தில், அபரிமிதமான வளர்ச்சி அடைந்திருக்கிறது. குறிப்பிட்ட வகையினரே (கல்லூரி முடித்து முப்ப்பத்தைந்து வயதுக்குள்ளான கணினி வல்லுநர்) பெரும்பாலும் நிறைந்திருப்பது காலப்போகில் சமனாகும்.

புதிய பதிவர்களுக்கு சில துப்புகள்:

அ) தமிழ்மணம், தமிலீஷ், திரட்டி, ப்ளாகுட், தமிழ்வெளி போன்ற எந்தத் திரட்டியும் விட வேண்டாம். எல்லாவற்றிலும் இணைந்துவிடுங்கள்.

ஆ) திண்ணை, தமிழோவியம், நிலாச்சாரல், அந்திமழை, சொல்வனம், தமிழ் ஹிந்து, கீற்று, என எல்லா இணைய சஞ்சிகைக்கும் உங்கள் ஆக்கங்களை அனுப்புங்கள். ஒவ்வொன்றுக்கும் எல்லாவற்றையும் அனுப்பாமல், ஒருவருக்கு அனுப்பியதையே இன்னொருத்தருக்கும் மீண்டும் பார்சல் செய்யாமல், அனுப்பிப் பாருங்கள். அவர்கள் அங்கீகரித்தால், உங்கள் எழுத்துக்கு பலம் கூடும்.

இ) குறிச்சொல் (லேபிள் அல்லது tag) நிறைய கொடுங்கள். ஓரிரண்டு பகுப்பு (category) வைத்துக் கொள்ளுங்கள். கவர்ச்சியான தலைப்பை விட பொருத்தமான தலைப்பாக வைக்கவும். தடித்த எழுத்துக்களை ஆங்காங்கே பயன்படுத்தவும். சம்பந்தமுள்ள புகைப்படம் ஒன்றாவது இடம்பெறுமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

கடைசியாக, அவியல், குவியல், மிக்சர் என்று எல்லாவற்றையும் கலந்து கட்டி அடிக்காமல், ஒரு விஷயத்தைக் குறித்து மட்டும் ஒரு பதிவு இடவும். கூகிளுக்கு அதுதான் பிடிக்கும். நான்கு மேட்டரை ஒன்றாக குவிக்காமல், one thing at a time என்று எழுதுவது நிறைய பதிவுகளை, எண்ணிக்கையையும் தரும்.

கட்டாங்கடைசியாக, உங்கள் பதிவு ஒவ்வொன்றிலும், நீங்களே self referenceஆக சுட்டி தரவேண்டும்:

1. பதிவர் டிப்ஸ்

2. புதிதாய் பதிபவர்களுக்கு வழிகாட்டிகள்

6. தமிழ்மணம் வரும் ஆகஸ்ட் 23ஆம் நாள் தன் சேவையின் ஐந்து ஆண்டுகளை நிறைவுசெய்கிறது. இந்த 5 ஆண்டுகளில் தமிழ்மணத்தின் சேவையைப் பற்றிய உங்கள் கருத்துகள் என்ன? வரும் ஆண்டுகளில் தமிழ்மணம் செய்யவேண்டியவை எவை?

ட்விட்டரைக் குறித்து நக்கலடிப்பவர்கள், குறை சொல்லுபவர்கள் எல்லோருமே, ட்விட்டருக்குள் இருந்துகொண்டேதான் அதை செய்து வந்திருக்கிறார்கள். தமிழ்மணமும் அதே போல் அதனை விமர்சித்தவர்களையும், சேறு அப்பினவர்களையும், DDoS செய்தவர்களையும் வைத்துக் கொண்டே இயங்கி வந்திருக்கிறது; இயங்குகிறது; இயங்கும்!

ஈழப்பிரச்சினை குறித்த தகவல்களையும் கட்டுரைகளையும் முன்னிறுத்தியது வேறு எந்த தமிழ் ஊடகமும் செய்யாத விஷயம். அதற்காக சிறப்பு நன்றிகள்.

ஆலோசனை சொல்வது எளிது என்பதை அறிவேன். எனவே, இன்று போல் என்றும் தமிழ்மணம் தொடர்ந்தாலே போதுமானது என்றாலும்…

1) சூடான இடுகைகள் இல்லாத தமிழ்மணம், பாடல் இல்லாத படம் போல் சோபிக்கவில்லை. பாட்டு ஹிட்டானால்தான், படம் ஜெயிக்கும் என்றில்லைதான். இருந்தாலும், ஆடலுடன் பாடலைக் கேட்டு ரசிப்பதிலேதான் சுகம். அதிகம் சுட்டப்பட்ட பதிவுகள் மீண்டும் வேண்டும்.

2) அகரவரிசைப்படி அழைக்கும் வகுப்பு போல், நேரப்படி காட்டும் முறை மாற்றியமைக்க வேண்டும். வாசகர் பரிந்துரை பெரிதாக்கப்பட்டு, முகப்பில் இன்னும் பிரதானமாக்கலாம். அந்தக்கால ‘பூங்கா’ போல் தமிழ்மண ஆசிரியர் குழுவினரின் ‘பெட்டக’த் தெரிவுகளும் முன்வைக்கலாம்.

3) சாரு, எஸ் ராமகிருஷ்ணன், பா ராகவன், ஜெயமோகன் என்று பெரிய எழுத்தாளர் கும்பலே இருக்கிறது. இந்த மாதிரி செய்தியோடை வழங்குபவர்களை தமிழ்மணத்தின் ஓரத்திலாவது தொடுப்பு காட்டுவது, காலத்தின் கட்டாயம்.

4) விளம்பரம். என் பதிவுக்கு நான் காசு தந்து 24 மணி நேரம் முகப்பில் வைத்திருக்க தயார் என்றால், அதற்கு திரட்டி இடம் கொடுக்கலாம். புத்தக விளம்பரங்களுக்கு காலச்சுவடு முதல் வார்த்தை போன்ற பத்திரிகைகள் வரை 50% தள்ளுபடி தரும். அந்த மாதிரி, விளம்பரப் பதிவுகளுக்கு ஆடித் தள்ளுபடி கொடுக்கலாம்.

5) ‘அண்மையில் இணைக்கப்பட்ட பதிவுகள்’, ‘நீங்கள் உறங்கியபோது எழுதப்பட்ட பதிவுகள்’, ‘நேற்று சூடான இடுகைகள்’ என்றெல்லாம் கலந்துகட்டி ஆங்காங்கே தூவப்பட்டோ, தனியாக tabஇடப் பட்டோ வந்தால் சுவாரசியம் அதிகரிக்கும். இப்பொழுது செத்தவன் கையில் வெத்தலை பாக்காக, ரொம்ப சைவமாக இருக்கிறது.

இளையராஜா போல் ‘உலகம் இப்போ எங்கோ போவுது; எனக்கு இந்த சொந்த நாடு போதும்!’ என்றில்லாமல், திக்கெட்டும் சென்று பன்மொழிகளிலும் கால் பதித்து, மேன்மேலும் உயரும். அடிச்சு தூள் கெளப்புங்க!

Real issues vs Personal nuisances

நண்பரிடமிருந்து வந்த மடல்:

ஏதாவது மக்கள் சம்பந்தப்பட்டதாக, அசல் தூலப் பிரச்சினைகளாக யோசிப்போமே?

இன்று நார்வேயில் பெரும் பனிப் பாளங்களின் அடியில் கட்டப்பட்ட ஒரு புதைகுழிப் பெட்டகத்தில் உலகத் தாவரங்களின் வித்துகளைச் சேமித்து வைத்திருப்பதைத் தொலைக் காட்சியில் காட்டினார்கள்.

‘Doomsday’ seed vault opens in Norway – CNN.com:
“# Ultimate safety net for the world’s seed collections has opened in Norway
# The vault received inaugural shipments of 100 million seeds
# Norwegian govt. built vault in glacial mountain between Norway and North Pole”

  • இத்தனை குளிரில் விதைகள் பல வருடம் வைக்கப்பட்டால் அவை உயிருள்ளவை என்றால் பின்னால் எப்படி மறுபடி உயிர்க்கும்?
  • இந்த வகை விதைப் பாதுகாப்பு முயற்சிகள் இந்தியாவில் உண்டா?
  • எங்கு, யார் கையில் உள்ளன அவை?

2. கள்ள நோட்டுகள் ஏராளமாக இந்தியாவில் புழங்குவதாகச் செய்திகள் வருகின்றன.

  • இவற்றால் இந்தியப் பொருளாதாரத்துக்கு என்ன ஆகும்?
  • இவை எந்த வகை மனிதரிடம் அதிகம் புழ்ங்குகின்றன?
  • அந்த வகை மனிதர் கையில் பொருளாதாரக் கட்டுப்பாடு போய்ச் சேர்ந்தால் நாடு என்ன ஆகும்?

Fake currency notes can destabilise our economy: “There was a small news item a few days ago about ink used in printing currency missing in transit. According to the report, a consignment of OVI intaglio ink was sent from the Swiss SICPA unit in Sikkim to the Reserve Bank Note Mudra unit in Mysore and about 5 kg ink was found to be missing on arrival.

Official estimates put the number of FICN in circulation at 61,000 million pieces of different denominations worth Rs 1,69,000 crore till the year 2000. In comparison, the actual seizures amounted to Rs 5.57 crore in 2002, Rs 5.29 crore in 2003 and Rs 6.81 crore in 2004.”

3. துவக்கப் பள்ளி:

  • நாட்டில் எத்தனை துவக்கப் பள்ளிகள் உண்டு?
  • அவற்றில் எத்தனை மிலியன் குழந்தைகள் படிக்கிறார்கள்?
  • ஒவ்வொரு குடும்பமும் தாம் வாங்கும் புத்தகங்களை என்ன செய்கின்றன?
  • அவை கைமாற்றிக் கொடுக்கப்பட்டு மறு உபயோகிப்புக்கு வருகின்றனவா?
  • எத்தனை ஆசிரியர்கள் வருடா வருடம் தயாராகிறார்கள்?
  • அவர்களுக்குக் கொடுக்கப் படும் ஊதியத்தால் அரசுடைய நிதித் திட்டத்துக்கு எத்தனை பளு?

இப்படி எதார்த்தமான விஷயங்களைப் பற்றி அதிகமாகவும், பண்பாட்டு அவலங்களைப் பற்றிக் குறைவாகவும் யோசித்தால் பதிவின் தாக்கம் அதிகமாக இருக்கும்.

இறுதியில் மனிதரின் தன்னியல்பு என்பது தலை தூக்கவே செய்கிறது.

H1N1 (Swine) Flu? Are you in Danger? Will you die?

Mottai Maadi Info Meet on Kizhakku (NHM) Publishers: H1N1 Flu (Swine Virus)

Mottai Maadi Info Meet on Kizhakku (NHM) Publishers: H1N1 Flu (Swine Virus)

பயப்படுணுமா?

எனக்கு பேக்டீரியாவுக்கும் வைரசுக்கும் வித்தியாசம் தெரியாது.

விக்சனரி அகராதிப்படி Bacteria என்றால் நுண்ணுயிரி; Virus என்றால் நோய்க்கிருமி.

ஸ்வைன் காய்ச்சல் என்று இரண்டு மாதம் முன்பு அழைக்கப்பட்டு இன்றளவில் எச்1என்1 என்று ஏதோ அமெரிக்க விசா போல் உருமாற்றம் கண்டிருக்கும் பன்றி ஃப்ளுவிற்கு நீங்கள் பயப்பட வேண்டுமா?

  • நூறு டிகிரி தாண்டும் காய்ச்சல்
  • தொண்டை அரிப்பு
  • ஜலதோஷம், மூக்கடைப்பு

போன்றவை உங்களுக்கு இருந்தால் பன்றிக்காய்ச்சல் வந்திருக்கிறதா என்பதை அறிய சோதனை செய்யவேண்டும். இந்தியாவில் அந்த சோதனைச் சாலை தற்போதைக்கு இரண்டே இடத்தில்தான் உள்ளது: மும்பை அருகே புனே மற்றும் தலைநகரம் எயிம்ஸ், புது டெல்லி.

உங்களின் சாம்பிள் அங்கே பரிசோதனைக்குச் சென்றபின் 48 மணி நேரம் கழித்தே, உங்களுக்கு பன்றிக் காய்ச்சல் உள்ளதா என்பதை ஓரளவு தெரிந்துகொள்ள முடியும். அதற்குள் பலகீனமானவர் என்றால் இறவனடி போய் சேர்ந்திருப்பார்.

எப்படி வரமால் தடுக்கலாம்?

அமெரிக்க துணை ஜனாதிபதி பிடென் வாக்குப்படி, வாசற்படியைத் தாண்டக் கூடாது. எங்கேயாவது கோவில், கோர்ட்டு, கோயிஞ்சாமி கூட்டம் சென்றாலும் பீடிக்கும்.

வருடாவருடம் அமெரிக்காவில் ஃப்ளூ எனப்படும் காய்ச்சலுக்கு இறப்பவர்களின் எண்ணிக்கை: முப்பத்தாறாயிரம் என்பார்கள் சிலர் (36,000 Americans died of Flu related causes each year during the 1990’s.). ஆனால், வழுக்கி விழுந்து இறந்தால் கூட மாரடைப்பு என்று வகைப்படுத்தும் வகையறா என்கிறது CDC – Influenza (Flu) | Q & A: 2007-08 Flu Season

  • கை சுத்தம்: டெட்டாலோ, மெடிமிக்ஸொ… சோப் போட்டு கையை அவ்வப்போது அலம்பி சுத்தாமாக்கிக் கொள்ளுங்கள். மிக முக்கியமாக எதையாவது உண்பதற்கு முன்.
  • சளி நீக்கி: கைகுட்டை பழைய ஹைதர் காலத்து நாகரிகம். க்ளீனெக்ஸ் போல் பேப்பர் துண்டு கைவசம் வைத்துக் கொள்ளுங்கள். தும்மல் வந்தால் அதைப் பயன்படுத்தவும். உடனடியாக குப்பையில் போடவும்.
  • துஷ்டனைக் கண்டால் தூரவிலகு: எவருக்காவது உடம்பு கொதிக்கிறது, காய்ச்சல் என்றால் காத தூரம் ஓடிப் போவிடுங்கள்.
  • அடைந்து கிடக்கவும்: விமானம், இருவுள் பயணம், பேருந்து சவாரி, ஆலயம், அலுவலகம், பள்ளிக்கூடம் போன்ற மூடிய பிரதேசங்களைத் தவிர்க்கவும்.
  • மேலும் விவரங்கள்

சுவாரசியாமான மறுமொழிகளுக்கும் அறிவிப்பும்: பேப்பர் » கிழக்கு மொட்டைமாடிக் கூட்டம்

வயது என்ன?

பின் பதின்வயது, இருபதுகள் என இந்த வைரஸ் இளைஞர்களையே பாதிக்கிறது. இயல்பாக இவர்களுக்கு நோய் எதிர்ப்புத் திறன் சிறப்பாக இருக்கும். 50 வயதுகளில் இருப்போரை H1N1 இன்ஃப்ளுயன்சா குறைவாகவே தாக்கியுள்ளது.

தொற்றுநோய் எச்சரிக்கை

உலக சுகாதார நிறுவனம் (WHO) எச்சரிக்கை நிலையை 5-6 நிலைகளுக்கு உயர்த்தியுள்ளது. 1968 ஆம் ஆன்டுக்குப் பிறகு, ப்ளூ காய்ச்சலுக்காக விடுக்கப்படும் அதிகபட்ச எச்சரிக்கை இது. உலகின் ஒரு பகுதியில் உள்ள இரண்டு நாடுகள், மற்றொரு பகுதியில் ஒரு நாட்டில் நோய் பரவினால் தொற்றுநோய் எச்சரிக்கை விடுக்கப்படும்.

  • நிலை 1-3: பெருமளவு விலங்குகளிடமும் சில மனிதர்களிடமும் பாதிப்பு
  • நிலை 4: மனிதர்களிடையே தொடர்ந்து பரவிக் கொண்டிருப்பது
  • நிலை 5-6 / தொற்றுநோய்: மனிதர்கள் இடையே மிகப் பரவலாகத் தொற்றிய நிலை.
  • உச்சத்துக்குப் பின்: மீண்டும் மீண்டும் தொற்றுவதற்கான வாய்ப்பு
  • தொடர் தொற்றுநோய்: பருவகாலத்துக்கு ஏற்ப நோய் தொற்றுவது.

தடுப்பு மருந்து கிடையாது

இப்போதைக்கு டாமிஃப்லூவைப் போல், தடுப்பு மருந்துகளுக்கு கட்டுப்பட்டு வருகிறது. ஆனால் இது விரைவிலேயே மருந்துக்கு கட்டுப்படாமல் போகலாம். இன்னும் பயங்கரமானதாக உருமாறலாம்.

தடுப்பு மருந்துகள் உருவாக்கப்பட்டாலும் கூட அதன் தடுப்புத் திறன், உரிய பாதுகாப்புத் திறனை பரிசோதிக்க பல்லாண்டு காலம் ஆகும்.

தடுப்பு மருந்து கிடைத்தாலும், வளரும் நாடுகளுக்கு அது போய்ச் சேருமா?

விரைவில் காலத்துக்கு ஏற்ப பரவும் ஃப்லூ காய்ச்சல் உருவாகலாம்.

இதுவரை சேதம்

டபிள்யு.எச்.ஓ அறிக்கைப்படி, 29 நாடுகளில் உள்ள 3,440 ஆய்வுக் கூடங்களில் 48 இறப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இது இன்னும் பரவினால், வேறு வைரஸ்களுடன் கலந்து மேலும் அதிகமாகப் பரவி, இன்னும் மோசமான ஒன்றாக மாறுவதற்கு அதிக வாய்ப்புள்ளது.

தெளிவாக கணிக்க இயலாததாகவும் தொடர்ச்சியாக மாறிக் கொண்டிருப்பதாகவும் இந்த வைரஸ் இருக்கிறது என்று வொர்ல்ட் ஹெல்த் ஆர்கனைசேஷன் தெரிவிக்கிறது. எனவே அதன் தற்போதைய வடிவம் பறவை, பன்றி, மனிதர்களின் மரபணுக்களைப் பெற்றுள்ளது.

இது தொற்றுநோயாக மாறலாம்.

ஏன்? எதற்கு? எப்படி?

H1N1-Avian-Bird-Flu-Pigs-Swine-Influenza-Health-Medical-Doctor

சில தகவல் உதவி: இந்தியா டுடே

What advice will U give to a new blogger?

I would say three things:

1. Focus:

Which things do U know really well?
What is ur knowledge domain?
Where can U give good tips, tricks, suggestions?

2. Quantity:

When #1 Focus is too demanding switch to give regular updates like
– comments on news
– experiences, life events
– Refer articles to read, invite friends to contribute, interview them

3. Online Presence

Submit to aggregators – Digg, Blogkut
Post it in Social Networking sites – Facebook, Twitter
Good Practices to the post – Machine readable (Google understandable) Title, lot of Tags, one or two categories

Any other useful info or sites?

Again 3 things:

a. Quality of content (Audience)

– The visitor might hv come via Search Engine: Sound research, useful tidbits shd be there in each post
– Regular reader: Don’t repeat; say the obvious
– Occasional onlooker: came via social networking sites like reddit.com, Digg, Del.icio.us, clipmarks

b. Short attention span

– Keep it in bulletpoints (summarize each post at top or bottom) ; Use blockquotes: Be aware of HTML
–  Add a relavant Photo – attracts the user to the content, writing; summarize the post in 140 chars in Twitter
– Read a lot; write in simple language

c. Interaction with Visitors

– comment regularly on ur visitor blogs
– write lengthy rebuttals to popular bloggers (like those listed in Desipundit.com)
– don’t cheat ur feed readers: write often; atleast once every day!

Finally Technical Notes:

1. Use wordpress.com (instead of blogger.com)
2. As much a spossible avoid writing lengthy discourses on Politics (at least when starting to write blogs)
3. Never ever post ur Kavithai, story, fiction etc in blogs – Not many will read there
4. Give lots of link to relevant posts from other blogs – Link Love

If at all going via Blogspot route:

http://mashable.com/2009/01/26/blogger-widgets
http://mashable.com/2009/01/16/blogger-toolbox/
http://mashable.com/2008/05/17/70-plus-new-and-beautiful-blogger-templates/
http://mashable.com/2008/12/22/blogger-template-resources/
http://mashable.com/2007/09/13/blogger-templates/
http://mashable.com/2007/09/10/bloggercom-toolbox/

புத்தாண்டு வாழ்த்து

  1. வெறுமனே புத்தாண்டு வாழ்த்தாக பதிவிடாமல், படிப்பவருக்கு ஏதாவது பிரயோசனப்படுமா என்றும் யோசித்து பதிவிடவும். (உதாரணம்: பத்ரி: புத்தாண்டு உறுதிமொழி
  2. நிறைய வாசிக்கவும். (உ.: How to be picky with blog posts? – Primer for selective reading)
  3. டிப்ஸ் கொடுக்கவும். (உ.: பா ராகவன்: திருவிழாவுக்குத் தயாராகுங்கள்!)
  4. blog-stats-2008-visitor-graphs-tamil-jeyamohan

  5. பதிவொன்றுக்கு படமொன்று இடவும்.
  6. மொக்கையோ, கருத்தோ, அனுபவத்தை அணு அணுவாகப் பகிர்தலோ: 250 வார்த்தைகளுக்கு மிக வேண்டாம். (உ.: வேர் இஸ் தி பார்ட்டி – பொழிப்புரை)
  7. 250 வார்த்தைக் கோட்டைத் தாண்டுபவர், உயிரோசைக்கோ திண்ணை போன்றவற்றுக்கோ எழுதி எழுத்தைக் கூர்மையாக்கிக் கொள்ளவும். இரண்டிலும் உன் எழுத்து வெளியாகாவிட்டால், மனுஷ்யபுத்திரனை நேரில் சந்தித்து நட்பு கொள்ளலாம் (அ) அடுத்த புல்லட் பாயின்ட்டை படிக்க.
  8. இந்தப் பதிவைப் போல் புள்ளி புள்ளியாகப் பிரித்து 1,2,3 என்று இடுக.
  9. அப்படியே 250ஐத் தாண்டுமென்றால் அடுத்தவரைக் குறித்த ருசிகரத் தகவலோ, லாவகமான மொழிப்பிரவாகமோ, ஏதோவென்று உள்ளேயிருந்து கிச்சுகிச்சு மூட்ட வேண்டும். (உ.: ஜெயஸ்ரீ: பரித்ரானாய ஸாதூனாம்… – Part 2)
  10. புத்தகமெழுதிய மனிதரெல்லாம் பதிவரில்லை; பதிவு வைத்திருக்கும் மனிதரெல்லாம் புத்தகம் எழுதத் தகுதியானவரில்லை. பதிவு நடை என்பது வேறு; புத்தக ஆக்கம் என்பது வேறு. (இரட்டை குதிரை சவாரிக்கு உ.: முகில்: அகம் – புறம் – அந்தப்புரம்)
  11. முன்பே எழுதியதைத் திரும்ப திரும்ப வேறு வேறு விதமாக சொல்ல அஞ்ச வேண்டாம். (உ.: வலைப்பதிவருக்கு டிப்ஸ், புதிதாய் பதிபவர்களுக்கு வழிகாட்டி)
  12. புதிய வாசகர் தினந்தோறும் சேரும் காலமிது. எனவே, பழம்பாடல் ரீமிக்ஸாக (பதிவுக்குள்ளேயே) சொன்னதை சுவைபட மாற்றி மாற்றி எழுதிப் பதிவாக்கு. (உ.: லக்கிலுக்/யுவகிருஷ்ணா: தமிழ் வலையுலக மார்க்கெட்டிங் உத்திகள்!)
  13. அதற்காக, ஒரே சப்ஜெக்டில் அடுத்தடுத்து தொடர்ந்து எழுத வேண்டாம். (உ.: 2008ன் கலக்கல் பதிவர்)
  14. சிவனின் அடிமுடி கொண்டவராக ஒரு சப்ஜெக்டில் ஆழமான அறிவு இருப்பின், அதை மட்டும் முன்னிலை நிறுத்த தனிப்பதிவு துவங்கலாம். (உ.: தமிழில் புகைப்படக்கலை: PiT Photography in Tamil)
  15. எளிமையான வார்ப்புரு வைத்திரு. உன் பதிவுக்கு எவ்வளவு பேர் எப்படி வந்தார் என்பது எனக்குத் தேவையில்லாத தகவல். உலாவியில் சீக்கிரம் வருகிறதா என்பது மட்டுமே முக்கியம்.(டெம்பிளேட் உ.: கூடுதுறை)
  16. பாட்டு கேட்க வேண்டுமானால், எனக்கு விருப்பமானதை மனதிற்கு உவந்த முறையில் (ரேடியோ, எம்பி3, ஐபாட்) என்று கேட்டுக் கொள்வேன். தானியங்கியாக சத்தத்தை அலற விடாதீர்.(காதுக்கு கேடு உ.: தமிழ்த்துளி)
  17. பதிவின் நடுவில் பொருத்தமாக அடுத்தவருக்கு சுட்டுவதை பெருக்கவும்: chrisbrogan.com: 27 Blogging Secrets to Power Your Community
  18. உன் பதிவிற்கும் பொருத்தமான இடங்களில் தாராளமாக உரல் இடவும். (உ.: வலைப்பதிவரின் வாழ்க்கைச்சுழல் & வலைப்பூ வைரஸ்)
  19. பதிய நினைத்தால் பதியலாம்; வழியா இல்லை பூமியில்? (உ.: இராயர் காப்பி கிளப்: வலைப்பதிவுகளிலும் என்ன எழுதலாம்?
  20. அரசியல், சினிமா, சமூகம் ஆகியவை குறித்து மட்டுமே தொடர்ந்து அரியணையில் இருந்து முத்து உதிர்க்கப் போவதாக இருந்தால் ட்விட்டர் மட்டுமே உங்களுக்குப் போதுமானது. (உ.: ட்விட்டர்: எளிய அறிமுகம்)
  21. 250 ஆகிவிட்டது. முற்றும்.

நியு யார்க் நகரம் – தாங்ஸ்கிவிங் வாரம்

சென்ற வாரம் நியு யார்க் நகரமும் அதன் சார்ந்த வட்டாரங்களிலும் சுற்றிய கதை:

  • வாடகைக் கார் அமெரிக்க தயாரிப்பு. பெரியதாக இருந்தது. துளியசைத்தால் முன்பின் நகர்ந்து சாய்ந்து உயர்ந்து வளைந்து நெளியும் இருக்கை முதல் உள்ளே ஓட்டுநருக்கு ஒரு வெப்பநிலை, பயணிக்கு இன்னொரு குளிர்நிலை வைக்கும் வரை சின்னச் சின்ன சௌகரியங்கள் நிறைந்திருந்தன. எஞ்ஜின் சரியில்லாவிட்டாலும் கவரிங் தூள்.
  • பாஸ்டனில் இருந்து நியுயார்க் செல்லும்வழியில் ஒரு மணி நேரத்திற்கு சராசரியாக 68 மைல் வேகத்தில் சென்றதாக புள்ளிவிவரம் காட்டியது. திரும்பிவரும்போது கும்பலோடு கோவிந்தா போட்டதினால் 35 மைல்தான் ஒரு மணி நேரத்தில் சராசரியாக செய்ய முடிந்தது. மெதுவாக செல்வதற்கு ட்ராஃபிக் மாமா நிறுத்துவாரா?
  • நியுயார்க் கென்ன்டி விமான நிலையம் செல்லும் போதெல்லாம் முன்னுமொரு காலத்தில் எனக்கு நேர்ந்த சம்பவத்தை கூட இருப்பவர்களோடு நினைவு கூர்வேன். பதினெட்டாவது தடவையாக மனைவியும், மூன்றாவது தடவையாக மகளும் கேட்டுவைத்தார்கள். பாஸ்டனில் அந்த மாதிரி செய்தால் கப்பம் கட்ட சொல்கிறார்கள்.
  • நியூ யார்க் ஃப்ளஷிங் கணேஷா கோவில் புனருத்தாரணம் செய்கிறார்கள். நான் அமெரிக்க வந்தபிறகு கட்டி முடிக்கப்பட்ட அரங்கத்திற்கு முதன் முறையாக மேயர் ப்ளூம்பர்க் வந்திருந்தார். மும்பை குண்டுவெடிப்புக்கு இரங்கல் சொன்னார். வலைப்பதிவர்களும் ஒரு நிமிட அஞ்சலி செலுத்தியிருக்கிறார்கள்.
  • உள்ளாட்சி அமைப்பின் சபாநாயகரும் வந்திருந்தார்.  ‘இப்போது முறைப்படி பூரணகும்ப மரியாதை செய்யமுடியவில்லை. அடுத்த முறை சாஸ்திரோப்தமாக அழைப்பதாக’ கோவில் நிர்வாகி வாக்களித்தார். இந்து மதம் லெஸ்பியன்களை எப்படி பார்க்கிறது?
  • நியுயார்க்கில் சென்ற இடமெல்லாம் மும்பை குண்டுவெடிப்பிற்காக மன்னிப்பு கோரினார்கள். ‘நீங்கள் இந்தியர்தானே!? உங்கள் ஊரில் இப்படி நடந்துருச்சே! ரொம்பவும் சாரிஈஈஈ… தங்கள் உறவினர், தெரிந்தவர் யாருக்கும் சேதமில்லையே?’ என்று பரிவுடன் விசாரித்தார்கள். அமெரிக்காவின் விடிவெள்ளி சி என் என்னுக்கும் விடாக்கண்டர் லஷ்கர் – இ – தொய்பாவுக்கும் உயிர் நீத்த ஆறு அமெரிக்கர்களுக்கும் நன்றி.
  • நடுத்தெருவில் புதிய ப்ராட்வே ஷோவிற்காக துண்டுச்சீட்டு கொடுப்பவர் முதல் ஃபாந்தம் ஆஃப் தி ஓபராவிற்கு கோட் சூட் போட்ட கனவான் வரை முகமன் கூறி, புன்னகை சிந்தி, துக்கம் விசாரித்தார்கள். ‘இந்தியராகப் பிறந்திட மாதவம் செய்ய வேண்டும்’ என்பது போன்ற அரச கவனிப்பு.
  • ஃப்ளஷிங் கணேஷ் கோவில் சாப்பாடு ஏ1. அது கேண்டீன் என்று சொல்வது இழுக்கு. நியூ ஜெர்சி சரவண பவன் அண்ணாச்சி தொழிலும்  சுவையும் சேவையும் கற்கவேண்டிய தலம்.
  • இதற்கு நேர் எதிர்மாறாக நியு ஜெர்சி ப்ரிட்ஜ்வாட்டர் பெருமாள் உணவகம். சட்னியும் சாம்பாரும் ஜொலிக்காவிட்டால் தோசை சோபிக்காது என்பதை இவர்களுக்கு சொல்ல வேண்டும். எனக்கு தெலுங்கு தெரிசிலது ஆதலால், ஃப்ரீயா விட்டுவிட்டேன்.
  • நியு ஜெர்சி கோவிலில் அபிஷேகம் என்று கேலன் கேலனாக பால் கொட்டாமல் கால் கேலன் பால், அரைக் கரண்டி தயிர் என்று சிக்கனமாக செய்கிறார்கள். சாக்கடையும் சீக்கிரம் ரொம்பி சுற்றுச்சூழலை பாதிக்காமல், கடவுள் பக்தியும் குறைக்காமல், நல்ல பேலன்ஸ். கோவிந்தா வாழ்க!
  • நியூயார்க் நகரத்தில் இரவில் யாரும் உறங்குவதில்லை. வீட்டில் சமைப்பதுமில்லை. பின்னிரவு ஒரு மணிக்கு கூட சாப்பாட்டுக் கடைகளில் க்யூ வரிசை நீள்கிறது. சாலை முக்குகளில் கூட்டம் கூட்டமாக அரட்டை. மெக்டொனால்ட்ஸ் 24 மணி நேரமும் ஃபாஸ்ட் ஃபுட் செய்து தர வைத்திருக்கிறார்கள். பூஜ்யம் டிகிரி குளிருக்காக கதகதப்பாக இறுக்கியணைத்தபடி இணைந்த உடல்களாக அறுபத்தி மூவர் விழா பவனியாக சாரி சாரியான மக்கள். இந்த டவுன்டர்ன், ரிசெஷன் என்பதெல்லாம் வால் ஸ்ட்ரீட் செஞ்ச போலி என்றார்கள்.
  • கோளரங்கம், நேஷனல் ஜியாகிரபியின் 3டி படம் போல் நான் தூங்குவதற்கு இன்னொரு இடம் அகப்பட்டது. ஃபாந்தம் அஃப் தி ஒபராவின் இன்னிசையும் கும்மிருட்டும் ஜெகஜ்ஜாலங்களும் தாலாட்டி உறங்கச் சொன்னது. ‘மகள் குறட்டை பெரிதா, என் குறட்டை பெரிதா?’ என்று சாலமன் பாப்பையா மன்றத்தில் அடுத்த தூக்கம் தொடர எண்ணம். ஆராரிரோ என்பது மேற்கத்திய உச்சரிப்பில் மறுவி ஆபரா ஆனதாக தமிழறிஞர் எவரும் நிறுவவில்லையா?
  • பாம்பே ட்ரீம்ஸ் இன்னும் ஓடுதா? ஃபாந்தம் ஆஃப் தி ஓபரா இருபதாண்டுகளாக நிறையரங்குகளாக வெற்றிகரமாக நடத்தப்படுகிறது. மெழுகுவர்த்தி நிறைந்த பேய்வீடு, ஊஞ்சல், படிக்கட்டு, பறந்து உலாவுதல், பட்டாசு வெடிகள் என்று உறக்கத்தைக் கலைக்க அரும்பாடு பட்டாலும் ஒபரா பாடல்கள் மெல்லிசையாகவே அமைந்திருக்க வேண்டும்.
  • எம்பயர் ஸ்டேட் ப்ல்டிங்கின் 83-வது மாடியை உள்ளரங்கமாக மாற்றவேண்டும். கடுங்குளிரில் புகைப்படம் சுட்டு சூடேற்ற முடியுமா?
  • பர்மா பசார் கனால் தெரு, ஏழாண்டுகளாக தரைமட்டமாகி இருக்கும் உலக வர்த்தக மைய வளாகம், இந்த ஆண்டு தரைமட்டமான வால் தெரு, தொலைக்காட்சிசூழ் டைம்ஸ் சதுக்கம், திரைப்பட தீவிரவாதிகளால் தகர்க்கப்படும் மேன்ஹட்டன் மேம்பாலங்கள், காபந்து கெடுபிடி நிறைந்த சுதந்திர தேவி, காந்தி பொம்மையும் வசிக்கும் மெழுகு காட்சியகம், ரிப்ளியின் நம்பினால் நம்புங்கள் போன்ற புனிதத்தலங்களில் காலடியும் புகைப்பட ஃப்ளாஷ் அடியும் எடுக்காமல் படேல் வால்யூ எனப்படும் தலபுராணம் நிறைவுறாது.

Courteous Commenting

Before you make any questionable comment to someone, you should always ask yourself three questions:

  • Is the comment sexually explicit or derogatory of a protected characteristic?
  • How well do I know the person and what he or she finds offensive?
  • Is it possible that someone might overhear me?

If you have asked yourself the three questions and are still unsure whether a comment is appropriate or not, think about how you would answer these questions:

  1. Would I want this comment made to my spouse, significant other, or child?
  2. Would I say this if my supervisor, spouse, significant other, or child could hear me?
  3. Would I feel comfortable if my comment were replayed on the 11 o’clock news?
  4. Would I feel comfortable repeating my comment in court?

ட்விட்டர்: எளிய அறிமுகம்

1. ட்விட்டர் எங்கே இருக்கு? Twitter.com

2. அது என்ன கேள்வி ‘What are you doing?‘ பெட்-காபி குடிக்கறீங்களா, அம்ருதா ராவ் படங்களைத் தேடறீங்களா, டெஹல்காவில் எதைப் படிக்கறீங்க, என்பனவற்றைக் குறிக்கிறது.

3. பார்ப்பது, முகர்வது, தொடுவது, கேட்பது, பேசுவது மட்டும்தான் ட்விட்டலாமா? சுவைப்பது எதுவாயினும் சொல்லலாம். தினசரி கோல்கேட் கொண்டு பல் தேய்ப்பதை சொல்லிக் கொண்டிருந்தால் எவரும் ஃபாலோ செய்யமாட்டார்கள். “காலியான பற்பசையை இரண்டாக அறுத்து, பிதுக்கி, பாக்கி இருக்கும் க்ளோஸ் – அப்பை ‘நீ பாதி… நான் பாதி’யாக மக்கட்செல்வத்துக்கு பகிர்ந்தளித்தேன்” போன்ற பணவீக்கத்திற்கேற்ற துப்புகள் அளிக்கவேண்டும்.

4. அது என்ன ‘ஃபாலோ’ செய்வது? ஒருவரின் கொள்கையை பின்பற்றுவதா? ஆர்குட்டில் ‘நண்பன்’; ஃபேஸ்புக்கில் ‘விசிறி’; ஃப்ரெண்ட்ஃபீட்டில் ‘சந்தாதாரர்’. தளங்கள் தோறும் வாசகராக சேர்த்துக்கொள்வது வித்தியாசப்படும். அதுபோல், இன்னாரை பின் தொடர்ந்து அவரின் செய்கைகளை, தகவல்களை ட்விட்டர் கொண்டு அறிய விரும்பினால் ‘ஃபாலோ’.

5. ட்விட்டரில் தத்துவம், வாழ்க்கை அவதானிப்பு, பொதுமைப் படுத்துதல் செய்யலாமா? செய்யலாம்.

6. அது தவிர வேறு என்ன செய்யலாம்? நான் தொடரும் சிலர் எழுதியதில் இருந்து உதாரணங்கள். வலைப்பதிவுக்கு முன்னோட்டமாக சில குறிப்புகளை ரத்தின சுருக்கமாக எடுத்து வைக்கலாம். கூகிள் அரட்டைக்கு பதிலாக பயன்படுத்தலாம்.

7. 140 எழுத்துக்களுக்குள் என்ன கருத்து சொல்லிவிட முடியும்? நவீன உலகின் திருக்குறள் எனப் போற்றப்படுவது குறுந்தகவல். மனதில் நினைப்பதை நச்சென்று சுருக்கமாக சொல்லமுடியாவிட்டால், நாகரிக உலக வாசகரின் கவனம் சிதறிப் போகலாம். அப்படி சிதறாது என்றால், இருக்கவே இருக்கிறது வலைப்பதிவு.

8. மௌனமொழியாக புகைப்படங்களை ஏற்றுமதி செய்யலாமா? பத்ரி ஷோஜு (Shozu.com) உபயோகிக்கிறார். ஸ்னாப்ட்வீட் மற்றுமொரு புகழ்பெற்ற சேவை. செல்பேசியில் இருந்தே படங்களை அனுப்ப Twitxr -உம் உண்டு. என்னோட பரிந்துரை: ட்விட்பிக்.

9. இந்தியாவிலும் வேலை செய்யுமா? Vakow உபயோகிக்க பரிந்துரைக்கிறார்கள். நேரடியாகவும் 5566511 அல்லது 5566595 மூலம் குறுஞ்செய்தி அனுப்பலாம் என்றாலும் ‘வாகோவ்‘தான் இந்தியர்களின் இதயத்தை கொள்ளை கொண்டிருக்கிறது.

10. அப்படியானால் ட்விட்டரில் செய்தி அனுப்ப செல்பேசி அவசியம் வேண்டுமா? தேவையே இல்லை. நேரடியாக வலையகத்தில் இருந்தே குறுந்தகவல்களை அனுப்பிக் கொண்டே இருக்கலாம்.

11. பதிவுகளைப் படிக்க கூகிள் ரீடர், டிவி நிகழ்ச்சிகளைப் பார்க்க ட்யூப்தமிழ், என்பது போல் ட்விட்டர் தகவல்களை வேறு வழியில் படிக்க, கோர்க்க இயலுமா? நீங்களே ஒன்றை தயாரித்துக் கொள்ளலாம் என்பதைப் போன்று ட்விட்டர் API கொடுத்திருக்கிறது. அதை உபயோகித்து பல நிரலிகள் புழகத்தில் இருக்கின்றன

  1. ட்வீட் டெக்: புதுசு கண்ணா புதுசு; தமிழ் வராது; வகைப்படுத்தல் வசதி இருக்கிறது
  2. ட்விட்டர் ஃபாக்ஸ்: ஃபயர் ஃபாக்சுடன் ஒட்டி உறவாடும்; நம்பகமானது இல்லை.
  3. ட்விட்டர் பார்: இனிமேல்தான் உபயோகிக்க வேண்டும். ஃபயர் ஃபாக்ஸ் பயனர்களுக்கானது.
  4. ட்வஹிர்ல்: உச்சரிப்பதற்கு கடினமாக இருந்தாலும், உபயோகத்தில் எளிதானது. பல பயனர் கணக்குகளை ஒருங்கே மேய்க்கலாம். என்னுடைய தேர்வு.

இது தவிர:

12. என்னிடம் ஃபேஸ்புக் கணக்கு இருக்கிறது. அங்கே கேட்கும் ‘What are you doing right now?’க்கு பதில் சொல்லித்தான் வழக்கம்! ஒன்றும் பிரச்சினையில்லை. இணைத்துவிடலாம்.

13. என்னிடம் ‘டைப் பேட்’ வலைப்பதிவு இருக்கிறது. இணைக்க முடியுமா? முடியும்.

14. நான் வோர்ட்பிரெஸ், ப்ளாகர் போன்ற செய்தியோடை தரும் இடங்களில் பதிகிறேன். ஆர்.எஸ்.எஸ்ஸை எவ்வாறு சேர்த்து விடுவது? ட்விட்டர் ஃபீட் பயன்படுத்தலாம்.

15. அங்கே இருந்து ட்விட்டருக்கு வந்தாச்சு. இப்போ, ட்விட்டரில் இருந்து, ப்ளாகர், வோர்ட்பிரெஸ் போன்ற வலைப்பதிவுகளுக்கு கொண்டு செல்வது எவ்வாறு? இப்படி.

16. இது வார்ப்புருவில், பக்கவாட்டில் மட்டுமே இடுகிறது. என்னுடைய பதிவே அன்றாட ட்விட்டர்களில் இருந்து தயாராக்க முடியுமா? உங்களுக்குத் தேவை லவுட் ட்விட்டர்.

17. எனக்கு ‘தசாவதாரம்’ குறித்த தகவல் அனைத்தும் தெரிய வேண்டும். எப்படி அறிந்து கொள்வது? ட்ராக்கிங் வசதியைக் கொண்டு செல்பேசியில் ‘தசாவதாரம்’ வார்த்தை வரும் அனைத்து குறுஞ்செய்திகளையும் பெறலாம். எனக்கு சம்மைஸ் கொண்டு தேடி, தேடல் முடிவுகளின் ஓடையைப் பெற்றுக் கொள்ளுதல் தோதுப்படுகிறது.

18. அட… ட்விட்டரில் தேட முடியுமா? சம்மைஸ் கொண்டு இதுவரை கதைத்ததை தெரிந்து கொள்ளலாம். அதுதான் என்னுடைய பெரும்பாலான தேடல்களுக்கு பயனாகிறது என்றாலும், ட்வீட் ஸ்கான் கூட தேவலாம்தான்.

19. என் நண்பர்கள், எதிரிகள், முன்னாள் காதலிகளைக் கண்டு கொள்வது எப்படி? இவர்களை மட்டுமல்ல. அறியவேண்டிய சகாக்களை ட்வெலோ அடையாளம் காட்டுகிறது.

20. இவர்களை எல்லாம் பின்பற்றி என்ன பிரயோசனம். ஏதாவது சுட்டி மாட்டுமா? விஷயம் புகழ்பெறுவதற்கு முன்பே ட்விட்டரில் உரையாடப்படுகிறது. அதை அடிப்படையாகக் கொண்டு, ட்விட்டரில் அதிகம் சுட்டப்படும் உரல்களைத் தொகுத்து, தகவல் யுகத்தின் நுனிக்கே செல்லலாம்.

21. இம்புட்டு விஷயமா! எவ்வளவு தகவல் கிட்டுகிறது! ‘பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம் பிற, செய்யாமை, செய்யாமை நன்று’ என்னும் குறளை படிக்காதவங்க சிலரும் ட்விட்டரில் சுற்றுவதால் கவனம் தேவை. எளிதில் வதந்தி உலாவும் இடம் இது.

22. நான் எல்கியவாதி. ட்விட்டரின் கட்டுப்பாடுகள் எனக்கு ஒத்துவராது! யாராக இருந்தாலும் டக்கென்று பதில் வாங்குவது முதல் சட்டென்று வாசகரை கவர்ந்திழுக்க செல்பேசி புரட்சிக்கு தயாராக இருக்கோணும்.

23. ட்விட்டர் வியாதியாகும் அபாயம் உண்டா? சோதித்துக் கொள்ளவும்.

24. ரொம்பப் பேசறீங்க. இன்னும் சுருக்கமா ஒரு வார்த்தையில் சொல்ல முடியுமா? ஒரேயொரு வார்த்தையா! உங்களுக்கு எடாகு சரிப்படலாம்.

25. என்னோட கேள்வி ஒன்றுக்குக் கூட விடை கிடைக்கவில்லையே!? இங்கு செல்லவும். மேலும் விலாவாரியான பயனர் புத்தகமும் கிடைக்கிறது.

கொசுறு: இன்னும் நிறைய ட்விட்டர் நிரலிகள் இருக்கிறதாமே? அவற்றில் மெச்சக் கூடியவை எவை? பகுதி #5– இல் இட்டிருக்கும் பட்டியல் பார்க்கவும்.

கருத்துப்படம்: டேவிட்