’உலக நாயகன்’ விஸ்வரூபம் எடுக்கும் பத்மஸ்ரீ கமல் தோழர் கு ஞானசம்பந்தன் உரை
கவிப்பேரரசு வைரமுத்து
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேச்சு
இரண்டாம் பாகம் (தொடர்ச்சி)
எஸ் ராமகிருஷ்ணன் ஏற்புரை
இரண்டாம் பாகம் (தொடர்ச்சி)
Posted in Tamil Blog
குறிச்சொல்லிடப்பட்டது appreciation, Authors, Awards, ஆக்கம், இயல், உயிர்மை, எழுத்தாளர், எஸ் ராமகிருஷ்ணன், கனடா, கவிஞர், படைப்பு, பேச்சு, மனுஷ்யபுத்திரன், ரஜினி, வைரமுத்து, Canada, Chennai, EssRaa, Events, Felicitation, Fiction, Functions, Iyal, kavi perarasu, Kaviyarasu, Lit, Literarture, Literary, madras, Maushyaputhiran, Rajini, Rajnikanth, Ramkrishnan, S Ramakrishnan, Shorts, Speech, SR, Story, Tales, Tamil, Uyirmmai, Vairamuthu, VM, Writers
முந்தையக் குறிப்பு: 35th Chennai Book Fair 2012: Inauguration And Award Function
1. 35வது சென்னை புத்தகக் கண்காட்சி: தொடக்க விழா: விருது வழங்கல்: ஆர் பொன்னம்மாள் – குழந்தை எழுத்தாளர்
2. சென்னை நிகழ்வுகள்: புத்தக விழா: 2012: குத்துவிளக்கு தொடக்கம்: இலக்கிய நிகழ்வுகள்
Posted in Tamil Blog
குறிச்சொல்லிடப்பட்டது 2012, 35, Authors, அழ வள்ளியப்பா, ஆக்கம், ஆர் பொன்னம்மாள், எழுத்தாளர், குழந்தை, செய்தி, ஜெயக்குமார், தொகுப்பு, நூல், புத்தகம், புனைவு, விருது, விழா, விழியம், வீடியோ, BAPASI, Chennai, Children, Chutti Vikadan, Events, Exhibitions, Gokulam, Kalki, Kids, madras, Ponnammal, Publications, Publishers, Rathnabala, RP, sutti Vikatan, Tamil, Videos, Writers
Earlier Post: அழ வள்ளியப்பா நினைவு விருது: சிறந்த குழந்தை எழுத்தாளர்
Posted in Tamil Blog
குறிச்சொல்லிடப்பட்டது 2012, 35, ADMK, AIADMK, Authors, Azha Valliappa, ஆக்கம், எழுத்தாளர், காமகோடி, குழந்தைகள், கோகுலம், சிறுவர், சுட்டி, தமிழ், புனைவு, பொன்னம்மாள், ரத்னபாலா, வானதி, விகடன், BAPASI, Books, Chennai, Children, Images, Jeyakkumar, Jeyakumar, Kids, Lit, madras, nalli kuppusamy, Photos, Pictures, Prizes, Publications, Publishers, R Ponnammal, RP, Tamil, Writers
ராஜராஜன் என்னும் முடிந்த பெருங்கனவும் முடியாத ஆதிக்கப் புன்மரபும் « பிரபஞ்சன்
இராஜராஜ சோழர் குறித்து எழுத்தாளர் பா. ராகவன்:
கிழக்கில் ராஜராஜ சோழனை மக்கள் தாவி அள்ளும் காட்சியைப் பார்க்கும்போது வியக்காமல் இருக்க முடிவதில்லை.
நூலை எழுதிய ச ந கண்ணன் புத்தகக் குறிப்பில் இருந்து:
ராஜராஜ சோழனின் ஆட்சி, பொற்காலம் என்று அழைக்கப்படுகிறது. வலுவான சோழ சாம்ராஜ்ஜியத்தைக் கட்டமைத்தவராக கொண்டாடப்படும் அதே சமயம், மக்கள் நலன் மீது அக்கறை செலுத்திய பேரரசராகவும் ராஜராஜன் நினைவுகூரப்படுகிறார்.
கேரளப் போரில் ஆரம்பித்து இலங்கை, மாலத்தீவு வரை ராஜராஜனின் படைகள் முன்னேறி வெற்றிகொண்டன. ஆனால், எல்லைகளை விரிவாக்கிக்கொள்வதற்கு மட்டும் தன் அதிகாரத்தையும், படை வலிமையையும் அவர் பயன்படுத்தவில்லை. போர் வெற்றிகள் மூலம் கிடைத்த செல்வத்தைக் கொண்டு, மக்கள் வங்கி ஒன்றை உருவாக்கினார். எளியோருக்குக் கடன் வழங்கினார்.
ராஜராஜன் ஆட்சிக்காலத்தில் வரி வசூல் மட்டுமல்ல, மக்கள் நலப் பணிகளும் அதிகம். மக்களின் வாழ்க்கை நிலை உயர்ந்தது. காலமெல்லாம் அவர் புகழ் பாடும் தஞ்சைப் பெரிய கோயில் கட்டப்பட்டது. கலை, ஆட்சி முறை, சமயம், இலக்கியம், பொருளாதாரம், பண்பாடு என்று ராஜராஜனால் செழிப்படைந்த துறைகள் ஏராளம். அந்த வகையில், தென்னிந்தியாவில் மட்டுமல்ல, இந்திய வரலாற்றிலும்கூட ராஜராஜனின் ஆட்சி பொற்காலம்தான்.
ச ந கண்ணன் பதிவில் இருந்து சில பகுதிகள்:
சோழர்கள் வரலாற்றை முழுமூச்சில் ஆய்வு செய்தவர்களில் மிகமுக்கியமானவர், நீலகண்ட சாஸ்திரி. அவருடைய சோழர்கள் வரலாறு நூலின் ஒவ்வொரு பக்கத்திலும் தகவல் குவியல்தான். ஒரு நாவல்போல அந்த நூலை கிடுகிடுவென வாசித்துவிடமுடியாது. ஒவ்வொரு பக்கத்துக்கும் அவர் இணைத்துள்ள ஃபுட்நோட்டே ஒரு நூலின் கனம் தாங்கும். மா. ராசமாணிக்கனாரின் ’தென்னாட்டு வரலாறு’ நூல் உள்ளதில் மிக எளிமையான மொழியைக் கொண்டது. குடவாயிலின் தஞ்சாவூர் நூல், முழுக்க முழுக்க தஞ்சாவூரின் வரலாறைச் சொல்லும் அதிஅற்புதம். இந்த நூல்களோடு, ராஜராஜனின் ஆயிரமாண்டு சிறப்பிதழுக்காக வரலாறு டாட் காம் உள்பட இணையத்தில் எழுதப்பட்ட பல்வேறு கட்டுரைகளும் ராஜராஜ சோழனின் வாழ்க்கையை இன்னும் ஆழமாகப் புரிந்துகொள்ள எனக்கு உதவி புரிந்தன.
இதுவரை, சோழர்கள் வரலாற்றின் ஒரு பகுதியாகவே ராஜராஜ சோழனின் வரலாறு எழுதப்பட்டு வந்துள்ளது. க.த. திருநாவுக்கரசு மட்டும் ராஜராஜ சோழன் பற்றி தனிநூல் எழுதியிருக்கிறார். ஆதாரங்கள் குறைவு என்பதால் அவரைப் பற்றிப் பிரத்தியேகமாக நூல் எழுதுகிற அளவுக்கு யாரும் முயலவில்லை.
// ஆனால், கிட்டத்தட்ட 400 கடைகள் உள்ள கண்காட்சியில் கிழக்கு தவிர வேறு எங்கும் நீங்கள் இந்தச் சோழனைப் பற்றிய ஒரு புத்தகத்தையும் பார்க்க முடியாது. [என்.சி.பி.எச்சில் நீலகண்ட சாஸ்திரியின் சோழர் வரலாறு இருக்கிறது.] //
அன்னம் ஸ்டாலில் “இராஜராஜேஸ்வரம்” (குடவாயில் பாலசுப்பிரமணியம்) கிடைக்கிறது! பெரிய கோயில் ஆயிரமாவது ஆண்டு சிறப்பு வெளியீடாக வந்திருக்கும் செம்பதிப்பு. ஒரு அருமையான கலை, வரலாற்றுக் களஞ்சியம் இந்தப் புத்தகம்.
short cutல் மயங்காமல் ராஜராஜன் பற்றியும் தஞ்சைக் கோவில் பற்றியும் ஆழமாக்த் தெரிந்து கொள்ள விரும்புவோர் நாடவேண்டிய புத்தகம்.
என்னுடைய அம்மா ஆர் பொன்னம்மாளும் இராஜராஜரைக் குறித்து புத்தகம் எழுதியிருப்பதாலும், என் பன்னிரெண்டெ முக்கால் வயதிலேயே இராஜராஜனைக் குறித்து ஆறு நூல்களை தேவநேயப் பாவாணரின் வரலாற்றுப் பகுதியிலும் இரண்டு நூல்களை Oriya Literature பகுதியிலும் கண்டெடுத்தன் தொடர்ச்சியான விசன ட்விட் .
ட்விட்டரில் நான் கருதியது:
கிளியோபாட்ரா, ராஜ ராஜ சோழன் எல்லாம் பெஸ்ட்செல்லர்ஸ்னு சொல்லிக் கொள்ளும் நிலையில் தமிழ் புத்தக வெளியீட்டாளர்கள் இன்றும் இருப்பதை நெனச்சா
அதற்கு மூலகர்த்தா குறளையும் பார்த்து விடுவோம்:
அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் நினைக்கப்படும்
பொருள்: நல்லவர்கள் வறுமையில் வாடுவதையும், தீயவர்கள் செல்வத்தில் திளைப்பதையும் மக்கள் தம் விழிப்புணர்வால் சிந்திக்க வேண்டும்; உரிய மாற்றத்தை சமுதாயத்தில் உருவாக்க வேண்டும்.
இதன் தொடர்ச்சியாக நந்திதா தாஸ் போன்ற சிறப்பான ஆய்வுநூல்களும், ஹன்சிகா மொட்வானி போல் விதந்தோத வேண்டிய புதினங்களும் வெளியாகும் சூழலில் இன்னமும் ஸ்ரீதேவி காலத்து கிளியோபாட்ராவும் எஸ். வரலட்சுமி பாடல் பெற்ற இராஜ ராஜ சோழனின் ரீ-மிக்ஸ்களும் சூப்பர் ஹிட்டாகிறதே என்னும் அங்கலாய்ப்புதான்.
தொடர்புள்ள பதிவுகள் இரண்டு:
1. 2009ல் வெளியான நாவல்கள் :: நேசமுடன் வெங்கடேஷ்
2. தமிழ் நூல் பரிந்துரை – 2010 :: பாஸ்டன் பாலா
3. கே.பி.டி. சிரிப்பு ராஜ சோழன் :: கிரேஸி மோகன் (கிழக்கு)
4. சுஜாதா: “சோழனை ‘ராஜாதி ராஜா’ என்பதெல்லாம் டூ மச்?”
Posted in Tamil Blog
குறிச்சொல்லிடப்பட்டது Authors, ஆய்வு, ஆர் பொன்னம்மாள், எழுத்தாளர், கண்காட்சி, சரித்திரம், சென்னை, சோழன், நூல், புக்ஸ், புத்தகம், முதல், ராஜ ராஜ சோழர், ராஜராஜன், வரலாறு, Book Fair, Books, Cholan, Cholar, Chozha, Chozhan, madras, Ponammal, Ponnamal, Ponnammal, Publishers, Rajarajan, Rajarajar, Research, Thiru Arasu, Thiruvarasu, Vanathi, Vanathy, Varalaaru, Writers
ஞாநி எனக்கு தற்செயலாகத்தான் அறிமுகமானார். ‘கண்டதை சொல்கிறேன்‘ என்னும் ஜெயகாந்தனின் பாடலில் மயங்கி அதன் இரு அர்த்தங்களுக்காகவும் என் தலைப்பாக வைத்து 2003ஆம் ஆண்டில் வலைப்பதிவுக்கு தலைப்பாக்கினேன். கொஞ்ச நாள் கழித்து பழைய ‘இந்தியா டுடே’க்களை தமிழகம் சென்றபோது புரட்டினால் அதே தலைப்பில் ‘ச்’ கூட்டி ஞாநியும் பத்தி எழுதியிருந்தார்; எழுதி வந்தார்.
அட… அபாரம்! சேம் ப்ளட்!! என்று கிள்ள வைத்தார்.
கொஞ்சம் படித்த பிறகு அவர் நம்மைப் போல் அல்ல, ‘நேர்மையான கொம்பன்’ என்று விளங்கியது. குருதிப்புனல் திரைப்படத்தில் கமல் சொல்வார்; இவர் எழுத்தில், செயலில், எண்ணத்தில் வாழ்ந்து காட்டுபவர். நடுத்தர வர்க்கத்தின் மனசாட்சியை தூங்க விடாமல் குடைச்சல் கொடுப்பவர்.
கொஞ்ச நாள் கழித்துப் பார்த்தால் டாக்டர் மாத்ருபூதம் ஜூனியர் ஆகியிருந்தார். ‘அறிந்தும் அறியாமலும்’ தொடர் பலருக்கு ‘புதிரா; புனிதமா’ பார்ட் டூ. கைமைதுனம், சொப்பன ஸ்கலிதம் முதல் குட்டிப் பாப்பாவுக்கு மலம் அலம்பி விடுவதின் சூட்சுமம் வரை படம் போட்டு வெளிச்சமாக்கி புரிய வைத்தவர். மருத்துவர் மாத்ரு பூதம் போல் காமெடி லபக்குதாஸாகவோ, வில்லன் அப்பாவாகவோ மாறும் வாய்ப்புகளும் மணி ரத்னத்தின் ‘இராவணன்’ மூலம் நிறைவேறும் சாத்தியக்கூறுகளும் இருக்கவே செய்கின்றன.
இனி… அவருடைய குறிப்புகளில் இருந்து…
பத்திரிகை, நாடகம், வீடியோ ஆகிய துறைகளில் முப்பதாண்டுகளுக்கு மேல் செயல்பட்டு வரும் ஞாநியை பல தடைகளை மீறித் தொடர்ந்து இயக்குவது, மனித வாழ்வைத் தொழும் அனைத்தின் மீதும் உள்ள அக்கறையே.
வாழ்க்கை குறித்தும் நாடகம் குறித்தும் நடுத்தர வகுப்பில் நிலவும் போலி நம்பிக்கைகளை இனம் கண்டு களைய முற்படுவதே ஞாநியின் நாடகக் கொள்கையாகும்.
எப்போதும் யாருடனாவது உரையாடிக் கொண்டிருப்பதில் எனக்கு சிறு வயது முதலே விருப்பம் அதிகம். ஓயாமல் பேசிக் கொண்டிருப்பவனாகவே நான் என் உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் அறியப்படிருக்கிறேன். எனக்கு சிலை வைத்தால், ஒரு பெரிய வாயின் உருவமும், அதன் கீழே அறுந்து விழுந்து கிடக்கிற பல காதுகளையும் தான் சிலையாக வடிவமைக்க வேண்டும் என்பது நண்பன் வைத்தியின் பிரபலமான கிண்டல்.
தமிழ் படைப்பாளிகளில் மகாஸ்வேத தேவிகள் இன்று வரை இல்லை. வெகுஜன அளவில் 1965 & 1967 காலகட்டத்தில் நிகழ்ந்த மொழிப்போர் பற்றியே தமிழ்ப் படைப்பாளிகள் இதுவரை எழுதத் தூண்டப்படவில்லை என்கிற நிலையில் எண்பதுகளின் நக்சல்பாரிகள் மீதான ஒடுக்குமுறை போன்ற விளிம்பு நிலைப் போராட்டங்கள் பற்றி எழுதும் வாய்ப்பேது…
வன்முறையை துளியும் விரும்பாத எனக்கு, நக்சல்பாரிகளின் வழிமுறைகளுடனோ, அரசியல் பார்வைகள் பலவற்றுடனோ உடன்பாடு இல்லைதான். எத்தனைதான் சீரழிந்திருந்தாலும், தேர்தல் ஜனநாயகத்தின் மீது சராசரி குடிமக்களுக்கு இருக்கும் நம்பிக்கையில் எனக்கும் பங்குண்டு.
தீம்தரிகிட போன்ற சமூகத்துக்கு தேவையான கறாரான ஒரு இதழ் நின்று போவதற்குக் காரணம் நமது சமூகத்தில் அயோக்கியர்களும் முட்டாள்களும் இருப்பதாகும். அயோக்கியர்கள் எண்ணிக்கையில் குறைவானாலும் அவர்கள் கையில் பண பலமும் அதிகார பலமும் இருக்கிறது. நல்லவர்கள் எண்ணிக்கை மிகப் பெரியதாக இருந்தாலும் அவர்களில் கணிசமானவர்கள் முட்டாள்களாக இருக்கிறார்கள்.
அரசியல் விமர்சனம் என்ற முத்திரை என் விருப்பத்தை மீறி என் மீது பலமாக விழுந்துவிட்ட காரணத்தால், நான் அக்கறை காட்டும் இதர பல விஷயங்கள் பற்றிய என் பார்வைகள் போதிய கவனம் பெறாமல் போயிருக்கின்றன:
‘ஏன் உருப்படாத அரசியல்வாதிகள் பற்றி எழுதி உங்கள் நேரத்தையும் சக்தியையும் இதுவரை வீணாக்கிக் கொண்டிருந்தீர்கள்? இது போன்ற துறைகளில் இன்னும் அதிகம் எழுதியிருக்கலாமே’, என்று செல்லமாகக் கடிந்துகொண்ட வாசகர்கள் பலர்.
வாழ்க்கைத் திறன்கள் என்பதை நான் தனி நபர் முன்னேற்றம் சார்ந்ததாக மட்டும் பார்க்கவில்லை. அரசியல்வாதி, சினிமா படைப்பாளி, மருத்துவர், ஆடிட்டர், ஆசிரியர், எழுத்தாளர், அலுவலக ஊழியர் என்று சமூகத்தை பாதிக்கும் அனைத்துத் துறையிலும் ஆரோக்கியமான மாற்றங்கள் வருவதற்கு, நல்ல மதிப்பீடுகள் தழைப்பதற்கு நமக்குத் தேவைப்படும் பல்வேறு ஆயுதங்களில் வாழ்க்கைத் திறன்கள் முக்கியமானவை என்பது என் கருத்து.
நாடகத்தின் மீது அவருக்கு தீவிர காதலை ஏற்படுத்திய பள்ளி ஆசிரியர்கள் எம்.ஈ. ஸ்ரீரங்கன், ஜி. வேணுகோபால், கே.வீ. ஸ்ரீனிவாசன், முத்துகிருஷ்ணன், கல்லூரி ஆசிரியர் கிருஷ்ணசாமி (எ) கலைமணி ஆகியோருக்கு தன் நாடக வெளியீடுகளை சமர்ப்பிக்கும், அவரின் கனவுகளில் ஒன்று வருடம் முழுவதும் நாடகப் பயிற்சியும் நிகழ்ச்சிகளும் நிகழும் நாடக அரங்கம் ஒன்றைக் கட்டுவதாகும்.
முந்தைய பதிவுகள்:
1. ஞாநி: பயோடேட்டா « Snap Judgment
2. Njaani visit to US: அமெரிக்காவில் ஞாநி « Snap Judgment
3. Gnani in Boston – 10 Pics « 10 Hot
4. Writer, Filmmaker & the Argumentative Tamilan Gnani in New York/NJ « 10 Hot
Posted in Tamil Blog
குறிச்சொல்லிடப்பட்டது Celebrations, Chennai, Dashara, Dolls, Dussehra, Festivals, Gods, Golu, Halloween, Hinduism, Hindus, Kabali, Kapaleesvarar, Kapaleeswarar, Kapali, Kapalisvarar, Kapaliswarar, Karpagamabal, madras, Mylai, Mylapore, navarathri, Navaratri, Navarthri, Navratri, Sundal, Tamil Nadu, Temples, TN
Posted in Tamil Blog
குறிச்சொல்லிடப்பட்டது Brahmins, Chennai, Climate, Cold, Culture, Dassara, Decor, Decorations, Dolls, Dussehra, Festival, Golu, Greetings, Hinduism, Holidays, India, Iyengar, Iyer, Krishna, madras, Navarathiri, navarathri, Navaratri, Navrathiri, Navratri, Rama, Season, Steps, Tamil Nadu, TN, Winter
நலம். நாடலும் அதுவே.
கடிதம் பார்த்தவுடன் பதில் எழுதணும்னு தோணிச்சு. ஆனால், என்ன எழுதலாம் என்று தெரியல.
வேலையில் காய்ச்சு எடுத்துக் கொண்டிருந்தார்கள்னு ஒரு சால்ஜாப்பு சொல்லத் தோணுது. அதற்கப்புறமா இந்தியா + சென்னை போய் மூணு வாரம் ஓய்வெடுத்தப்போ கூட எழுத முடியாமப் போனதுக்கு வருத்தம் சொல்லிக்கறேன்.
மன்னிக்க 🙂
ஆணி புடுங்கறதுனு அலுத்துக்கொள்வது எங்களுக்கு கைவந்த கலை. எழுத்துத் திறமைக்கு மதிப்பில்ல என்று சலித்துக் கொள்வது படைப்பாளிக்கு வலை வந்த கலை.
சென்னையில் ஆட்டோ ஓட்டுறவனோடு பேசிக் கொண்டிருந்தேன். கார்த்தால நாலு மணிக்கு எந்திரிச்சு நாலரைக்கு வண்டிய ஆரம்பிக்கிறவன், மதியானம் ஒன்றரை மணி வரை ஓட்டுறான். அப்புறம் சாப்பாடு; கொஞ்சம் ரெஸ்ட். வெயில் தாழ, நாலு மணிக்கு மீண்டும் இன்னொரு ஷிஃப்ட் போட்டு ராத்திரி 11 மணி வரை அடுத்த ஓட்டம். அதற்கப்புறமும் உழைக்க அவன் ரெடியாம். சவாரி வருவதில்லை என்பதால் உறக்கம்.
நானா இருந்தா இந்தக் கொடுமைய நினைந்து நினைந்து உருகி நாலு பதிவு போட்டிருப்பேன். அவன் ‘சொந்த ஆட்டோ’ என்று பெருமிதம் கொண்டிருந்தான்.
அடுத்தவரை நினைத்து தன்னை மதிப்பிடுபவனுக்கு என்றுமே நிம்மதியில்லை என்பதை இன்றைய நியு யார்க் டைம்சில் பிகோ ஐயரும் சொல்லியுள்ளார். மகிழ்ச்சி என்பது காசினால் வருவதில்லையாம்.
வீட்டில் அனைவரும் நலம்.
மகளுக்கு அவ்வப்பொழுது பொது அறிவு சிற்றுரையாடுகிறேன். கொஞ்சமாய் ஆங்கிலம் சொல்லிக் கொடுக்க முயல்கிறேன். தினமும் அரை மணி நேரம் அவளுடன் செலவழிக்க முடிகிறது.
மற்ற நேரம் டிவி.
வாரயிறுதியில் காரில் பயணிக்கும் நேரம் அவள் கூட இருந்தாலும், இன்னும் சரியாக உபயோகிக்கலாம் என்னும் குற்றவுணர்வுடன் பறக்கிறது.
எம்பிஏ-விலோ எஞ்சினியரிங்கிலோ குழந்தை வளர்ப்பை கட்டாயப் பாடம் ஆக்கலாம். திருமணம் ஆவதற்கு முன் செர்டிஃபிகேட் படிப்பு முடித்தால்தான் தாலி என்றாவது வைக்க வேண்டும். சமைக்கக் கற்று கொடுத்தல் முதல் முதலுதவி மருத்துவம் வரை இதில் சேர்க்க வேண்டும்.
மனைவியுடன் சிறு சிறு பிணக்குகள். பிறகு சமாதானங்கள் என்று சௌகரியமாகவே வாழ்க்கை செல்கிறது.
சமீபத்தில் படித்த புத்தகம் எதுவும் மனதில் நிற்கவில்லை. குள்ளசித்தன் சரித்திரம், யாமம் போன்ற புகழ்பெற்ற வெகுசன நாவல்கள்; நூலகத்தில் எடுத்த சில ஆங்கிலப் புத்தகங்கள்… குறிப்பிட்டு பரிந்துரைக்க எதுவும் இல்லை.
நாளிதழ் வீட்டுக்கு வருவதை நிறுத்தி விட்டேன். இணையத்தில் மட்டுமே தினசரி செய்திகள். இங்கே பாஸ்டன் க்ளோப் திவாலாகும் நிலை.
இதுவரை இமையத்தை நான் வாசித்ததில்லை. இப்பொழுதுதான் கோவேறு கழுதைகள் நியு புக்லேன்ட்ஸில் வாங்கினேன்.
சென்ற வருடம் வரை கடல் ஷிப்பிங் இருந்தது. அமெரிக்கா வந்து சேர்வதற்கு இரண்டரை மாதம் எடுத்துக் கொண்டாலும் சல்லிசான காசு. இப்பொழுது அதை எடுத்துவிட்டார்கள். SAL என்கிறார்கள். சுண்டைக்காய் அரைப்பணம்; சுமகூலி முக்காப் பணம் கதை. 4000 ரூபாய்க்கு புத்தகம். அனுப்ப 5000த்திற்கு மேல் எடுக்கிறது! ஸ்பீட் போஸ்ட்டில் எட்டாயிரத்து சில்லறைதானாம்.
இன்னொருத்தர் பார்க்க புத்தகங்களை எடுப்பது எனக்கு ஒவ்வாதது. இந்த முறை உண்மைத் தமிழன அகப்பட்டு விட்டார். சொல்லவும் முடியாமல் நெளியவும் முடியாமல், படித்து, புரட்டி, அலசி தீர்மானித்தேன்.
நியூ புக்லேன்ட்சுக்கோ கடையை மூடும் நேரம். ஒரு நாள் கூத்துக்காக தாமதமாக திறந்து வைத்திருந்தார்கள்.
அங்கே ஒ ஏ கே தேவரின் மகன், சீரியலில் நடிப்பவர் வந்திருந்தார். குழந்தை வளர்ப்பு + பராமரிப்பு குறித்த புத்தகம் வாங்கிச் சென்றார்.
இருக்கும் புத்தகங்களை படித்தால்தான் புதியது வாங்குவது என்பது இனி மசான வைராக்கியம் அல்ல. வீட்டில் குவிந்திருக்கும் நூல்களை ஒரு முறையாவது அலசி ஆராய்ந்து விமர்சனமோ பதிவோ இட்ட பிறகுதான் இனி அடுத்த வாங்குதல் வைபவம்.
நியூ புக்லேன்ட்ஸ் முழுக்க நிறைய தெரிந்த, அறிந்த முகங்களின் புத்தகங்களைப் பார்க்க மகிழ்ச்சியாகவும் பொறாமையாகவும் இருந்தது. இத்தனை பேரை ஒரளவாவது நேரடியாக அறிந்திருக்கிறோமே என்பதில் சந்தோசம். இவர்கள் எல்லாம் எழுதும்போது நமக்கு எழுத வாய்க்க வகையில்லையே என்பதில் திறமை மீது ஏக்கம்.
எனக்கு இந்த வருட கோட்டா முடிந்தது. அடுத்த வருடம் பிழைத்துக் கிடந்தால் ஜனவரியில்தான் சென்னை செல்ல வேண்டும் என்று ஆசை. அது கிடக்கிறது ஜனவரி 2011! பார்ப்போம்.
விடுமுறையில் சொந்த ஊர் சென்று வந்தால் புத்துணர்ச்சியாகத்தான் இருக்கிறது. ‘என்னத்த செஞ்சு… என்னத்த பண்ணி’ என்று கன்னையாவாக அமிழ்ந்திருக்கும் மனசு புத்துணர்ச்சி அடைய வைக்கிறது. சொந்த பிசினெஸ் துவங்கணும், ஏதாவது புதுசாக் கத்துக்கணும், மனைவியை இன்னும் கொஞ்சம் ஒழுங்கா நேசிக்கணும், குழந்தைய மதிக்கணும் என்றெல்லாம் தோன்றுகிறது.
சொந்த இடம் வந்தவுடன் வேதாளம்… முருங்கை மரம்…
சீக்கிரம் ரிடையர் ஆகணும். இல்லை… கொஞ்சம் பெரிய லீவாப் போட்டு ஊர் நெடுக சுற்றிவிட்டு அலுத்தபிறகு மீண்டும் வேலைக்கு திரும்பணும்.
நிறைய புலம்பிட்டேன்.
யாரைப் பார்த்தாலும் இப்படி அட்வைஸும் ஆலோசனையுமாக சொற்பொழிவதை நிறுத்த வேண்டும் என்பதை திருப்பதியில் ஒரு மருந்துக்கடைகாரர் சொல்லிக் கொடுத்தார்.
எனக்கு தொண்டையில் கிச்கிச். ஹால்ஸ் எடுத்தோம். அதன் கூட இன்னொரு பெயர் தெரியாத வஸ்து தனிக்கட்டையாக இருந்தது. விக்ஸ் போல் இருமல் மாத்திரை என்று எடுத்துப் பார்த்தேன்.
அதுவோ, சப்புகிற மிட்டாய் அல்ல. கடித்துத் துவைக்கும் இனிப்பு மருந்து. வைத்துவிட்டேன்.
அண்ணன் பையனுக்கு அது பிடிக்கும் என்று நச்சரித்துக் கொண்டிருந்தான்.
‘சின்னப் பயன் சார்… கேட்கிறத வாங்கிக் கொடுக்காவிட்டால் துவண்டு போயிடுவான்; பிஞ்சு வெம்பிடும்’ என்று கருத்து சொல்லி தள்ளிவிடப் பார்த்த ஓனரை பொரிந்து தள்ளியவுடன் தான் இன்டெர்னெட்டில் அனானிமஸ் வசதி எம்புட்டு பெருசு என்று புரிந்து கொண்டேன்.
வாழ்த்துகளுடன்,
அடியேன்
சென்னை இராஜாங்கம்: V
அவ்வப்போது அமெரிக்காவில் விழும் ஒரு இன்ச் snow, ஒன்றரை மில்லிமீட்டர் பனியை, வீட்டு வாயிலில் இருந்து தெருவுக்குத் தள்ளிவிடுவதற்கே கண்களாலும் மூக்காலும் அழுபவன் நான். மிக மிக எளிமையாக வாசலைத் தெளித்துக் கோலம் போடுவது போன்ற கைங்கர்யம் அது.
குட்டி எவரெஸ்ட் மாதிரி இருக்கும் மணற்குவியலை, தலைக்கு மேல் இருக்கும் குப்பை வண்டியில் shovel செய்தவரைப் பார்த்தவுடன் மனம் நாணிக் கோணியது. சர்வ சாதாரணமாக, பகல் 41 டிகிரி வெயிலில் தூக்கிப் போட்டார். நீல்மெட்டல் சென்னையை சுத்தமாக மாற்றியுள்ளது.
முப்பது வருடம் முன்பு ரூபவாஹினிக்காக இலங்கை ஆண்டெனாக்கள் மொட்டை மாடிகளை நிறைத்திருக்கும். காக்கைகளும் அவற்றை ஆசையாகத் திருப்பி வைக்கும். ராஜபக்ஸே தமிழ்த் தொலைக்காட்சியை நிறுத்தி விட்டாரா என்று நாராயணனை விட்டு விசாரிக்க சொல்லவேண்டும். இன்றைய மாடிகள் முழுக்க சாடிலைட் டிஷ் ஆக்கிரமிப்பு. காக்கைகளும் காணாமல் போய்விட்டது. வேடந்தாங்கலிலாவது இருக்கிறதா என்று ப்ளாஸ்டிக் பைகளில் சோறு கட்டி சென்று பார்த்துவர வேண்டும்.
ஆட்டோக்காரர்கள் மெமரி கார்ட் கொண்டு பாட்டு போடுகிறார்கள். ஆயிரம் ரூபாய் கொடுத்தால் கிளம்பிய இடத்தில் இருந்து சேரும் இடத்திற்கே கேட்கும் அலறலுடன் கூடிய எம்பி3 ஒலி. வேண்டிய பாடல்களை ஐபாட் shuffle ஆக மாற்றும் வசதி. பண்பலை என்னாச்சு என்னும் கேள்விக்கு ‘போயே போச்சு‘ங்கிறார்.
‘ஏன்’?
கேள்விக்கு பத்ரி மொட்டை மாடியில் பதில் சொன்னார்.
மோகம் முப்பது தபா; ஆசை அறுபது ராவு என்பது போல் சிட்டி சென்டரும், எக்ஸ்டென்ஷன்களில் உலவும் ஸ்பென்சரும் பல்கிப் பெருத்தபின் சென்னை யுவன்களுக்கும் காரிகைகளுக்கும் மால் அலுத்துப் போய்விட்டது. அல்லது ஜாகையை மாற்றிக் கொண்டுவிட்டார்கள்.
இன்றளவிலும் ‘சூடிதாரில் நான் வருவேன். சல்வார் கமீஸை நான் மறவேன்’ என்று மதுரை சோமுவாகிறார்கள். லுங்கியைப் போன்ற வண்ணமயமான காற்றோட்டமான ஸ்கர்ட், அதிர்ச்சி மதிப்பீடாக தாவணி, நாகரிகமும் குறையாமல் கற்பும் காக்கும் முக்கால் பேன்ட் எதுவும் காணோம். அதெல்லாம் வந்தால் ‘ராம சேனா’வும் பாரதிய ஜனதாவும் வந்துவிடும் என்னும் பயமோ!
‘கடந்த 48 மணி நேரமாக பெண்களுடன் கலந்துரையாடி, பின்தொடர்ந்து “What women wantனு புரிந்து கொள்வதிலேயே நேரம் போவதாக’ சலித்துக்கொண்டவரிடம்தான் விசாரிக்கவேண்டும்.
பின்னூட்டமொன்றை இடுக
Posted in Tamil Blog
குறிச்சொல்லிடப்பட்டது Antenna, Cell, Chennai, Citicenter, City Centre, Cleanup, Commentary, cricket, Dish, Drive, Environment, FM, IPL, Live, madras, Malls, Move, MP3, Music, Radios, Removal, Satellite, Spencers, Sun, Tamil nada, Television, TN, Trash, TV, Waste