Tag Archives: Culture

Colorless Tsukuru Tazaki and His Years of Pilgrimage – Book Reviews

இன்னொருத்தருடன் உங்களுடைய இதயம் இணக்கமாக இருக்க ஒத்திசைவு மட்டும் காரணம் அல்ல. இரண்டு பேருக்கும் இடையே பொதுவாக நடந்த ரணங்களால்தான் இதயங்கள் இணைகின்றன. – சுகுரு டசாகி

ஜப்பானிய பழமொழியில் சொல்கிறார்கள்: ‘தலையைத் துருத்திக் கொண்டு தெரியும் ஆணியை, அடித்து உள்ளே தள்ளு!’

ஜப்பானில் சுற்றம் என்பது குடும்பத்தையும் தாண்டியது. வாழ்க்கையின் ஒவ்வொரு பாதையிலும் அந்த ஐக்கியமாகும் எண்ணம் பாய்கிறது. நீங்கள் தனித்துத் தெரிந்தால், பத்தோடு பதினொன்றாக ஆக்கப்படுவீர்கள். ஆமே (甘え) என்னும் சித்தாந்தம் இந்தக் குழுமப் பண்பாட்டை புரிந்து கொள்ள உதவும். ஆமே (甘え) என்பதன் அர்த்தம் ’அடுத்தவரிடம் அன்பைத் தேடு’. குழந்தைப்பருவத்திலேயே இது மூளையில் ஏற்றப்படுகிறது. இன்னொருவரிடம் பரிபூரண விசுவாசம் கொண்டிருப்பதற்கும் சமூகக் கூட்டமைப்பாக வாழ்வதற்கும் இந்த உணர்வு முக்கியம் என்று கற்றுத் தருகிறார்கள். சொல்லப் போனால், ஜப்பானிய மொழியில் சுய ஆளுமையைச் சொல்லும் கொஜின் ஷுகி (こじん-しゅぎ) என்றால் அது சுயநலம்/பேராசை போன்ற மோசமான அர்த்தத்திலேயே பயன்பாட்டில் இருக்கிறது.

ஆமே (甘え) என்பது குழந்தைக்கும் பெற்றோருக்கும் இடையே உள்ள உறவு போன்றது. அது எழுதப்படாத சமூக விதி. உங்களின் சக தொழிலாளரை, உங்களுடன் கூடப் படிக்கும் மாணவரை, உங்களுடன் கூட்டத்தில் வரும் பயணியை – ஒவ்வொருவருக்கும் நீங்கள் வாக்கு கொடுக்கிறீர்கள். நின்ஜோ (にんじょ) என்றால் உள்ளார்ந்து எழும் அனிச்சையான செயல்பாடு. அதாவது, ’நான் என்னுடைய கடமையாக, உங்களுக்கு பரிபூரண அன்பையும் எதிர்பார்ப்பற்ற அர்ப்பணிப்பையும் நல்குவேன்.’ அனைவரும் அனைவருடன் கைகோர்த்து வாழ்வோம் என்பதை பாலபாடமாக பதித்துக் கொள்கிறார்கள். இவ்வாறான சமூகக் குழுமங்களை கிரி (ぎり) என்கிறார்கள்.

இந்த மாதிரி உள்வட்டத்தில் இல்லாதவர்களை டனின் (たにん) என அழைக்கின்றனர். நின்ஜோ (にんじょ) உள்வட்டத்திலோ, கிரி (ぎり) குழுமத்திலோ இல்லாதவர்களை டனின் (たにん) எனக் கருதுகின்றனர். அதாவது, குடும்பமோ, பள்ளித் தோழமையோ, அலுவல் சகாக்களோ, அல்லாதவர்கள். டனின் (たにん)களுடன் எந்தப் பற்றுதலும் கிடையாது.

கடைசியாக வா (わ) என்னும் பதம். வா (わ) என்றால் ஒத்திசைவு; இணக்கம். இதுதான் ஜப்பானிய அறம். பழங்காலத்தில், நெல் விளைவிக்க தேவைப்படும் நதிநீரைப் பகிர வேண்டும். நெல்விளைச்சலைப் பாதுகாக்க வேண்டும். இந்த சமயத்தில்தான் குடியானவ சமூகத்தில் அமைதி நிலவ, வா (わ) சட்டத்தை அரசர் ஷொடொகு டைஷி முன்வைக்கிறார். விளையாட்டில், வர்த்தகத்தில் என்று எந்தத் துறையிலும் வா (わ) சித்தாந்தத்தைக் காணலாம். பரஸ்பர நம்பிக்கை, விட்டுக் கொடுத்து வாழ்தல், ஒத்துழைப்பு, மேலதிகாரியிடம் அசைக்கவியலா பற்றுறுதி, ஆகியவையே வா (わ)கருத்தியல். தனிமனித விளையாட்டான டென்னிஸ் போன்றவற்றில் ஜப்பானியர்கள் ஓரளவிற்கு மேல் எழும்ப முடியாததற்கும் இந்த அடிப்படைக்கும் பெரும் தொடர்பு உண்டு.

ஜப்பானில் தனித்துவம் தழைத்தோங்க, ஒரு சில துறைகளே இருக்கிறது: மலர் அலங்காரங்களைச் செய்யும் பணி, கவிதை புனைதல், கலை வெளிப்பாடு மற்றும் இசை.

உசாத்துணை: Phyllis Kepler, Brook S. Royse and John Kepler. Windows to the World: Themes for Cross-Cultural Understanding. Glenview, IL: GoodYearBooks, 1996

Haruki_Murakami_Colorless_Tsukuru_Tazaki_Novel_NYT

oOo

ஹருகி முரகமி எழுதிய ”நிறமற்ற சுகுரு டஸாகியும் அவன் யாத்திரை மேற்கொண்ட வருடங்களும் (Colorless Tsukuru Tazaki and His Years of Pilgrimage) படித்து முடித்தேன். ’மனிதரில் இத்தனை நிறங்களா’ என படம் வந்திருந்தது. இந்தக் கதையில் ஐந்து இளைஞர்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நிறம். ஒருத்திக்கு கருப்பு, இன்னொருத்திக்கு வெள்ளை; ஒருவனுக்கு சிவப்பு; இன்னொருவனுக்கு நீலம். கடைசியாக இருக்கும் ஐந்தாமவன் கதாநாயகன் – நிறமற்றவன்.

ஹருகி முரகமி எல்லா இடங்களிலும் ரசிகர்களை வைத்திருக்கிறார். அவருடைய புத்தகங்கள் பரபரவென்று விற்றுத் தள்ளுகின்றன. மகாரஷ்டிரா அளவில் இருக்கும் ஜப்பானில் மட்டுமே ஒரு மில்லியன் புத்தகங்கள் விற்கிறது! அதன் பிறகு, அதே புத்தகம் ஐம்பது மொழிகளில் மொழியாக்கம் காணப்பட்டு மேலும் ரசிகர்களைக் கவர்கிறது. இத்தனைக்கும் சிட்னி ஷெல்டன் போல், கென் ஃபாலெட் போல் பரபரப்பான துப்பறியும் மசாலா நாவல்களை முரகமி படைக்கவில்லை. நோபல் பரிசுக்கான ஓட்டத்தில் நெடுங்காலமாக இருக்கிறார். ஜேகே ரவுலிங் எழுதிய ஹாரி பாட்டார் போல் ஹருகி முரகமியின் நூல் நாயகர்களும் தங்களுக்கென்று உலகை சிருஷ்டித்துக் கொள்கிறார்கள். அவருடைய நூல்களின் கதாபாத்திரங்களின் அக மனது அபிலாஷைகள், யாரும் எதிர்பார்க்காத திசைகளில் பயணித்து, நமக்கு அறிமுகமான எண்ணங்களை பரிச்சயம் செய்வித்து, திக்கற்ற முக்குகளுக்கு இட்டுச் சென்று நம்முடைய சிந்தனையில் நீண்ட நாள் நிலைக்கும் பாதைகளை உருவாக்கவல்லது.

நாகர்கோவில் போன்ற குறுநகரத்தில் இருந்து டோக்கியோ நகரத்துக்கு வருகிறான் சுகுரு டஸாகி. அவனுக்கு கலைகளில் நாட்டம் கிடையாது. எந்தவிதமான பொழுதுபோக்கும் கிடையாது. எந்த கைவினைத் தொழிலும் தெரியாது. எளிதாக புன்னகைப்பான். சட்டென்று யாரோடும் பழக மாட்டான். புதியதாக எவராவது அறிமுகமானால், அவருடன் நட்பு பயில சிரமப்படுவான். வெளிப்படையாக பட்டெனப் பேசுவதில் சிரமம். தனியாகவே உலா வருகிறான். எவருடைய துணையும் இன்றி வாழ்க்கையை நடத்துகிறான். பேச்சுத் துணை கிடையாது. செல்பேசி அரட்டை கிடையாது. அலுவலில் நண்பர் கிடையாது. உண்ணும்போது சம்பவங்களைப் பகிர எவரும் கிடையாது. டிவி மாந்தர்களைக் கூட தொலைக்காட்சியில் பார்ப்பது கிடையாது.

சுகுரு என்பது அவனுடைய அப்பா, அவனுக்கு இட்ட பெயர். அந்தப் பெயருக்கு அர்த்தம் ‘பொருள்களைச் செய்பவன்’. இதனால், அவனுக்கு ஸ்திரமான விஷயங்கள் பிடித்துப் போகிறது. சின்ன வயதில் இருந்து தொடர்வண்டிகள் மேல் காதல். நாள் முழுக்க ரயில் நிலையத்தில் உட்கார்ந்திருக்கிறான். பயணிகளின் அவசரத்தைப் பார்க்கிறான். விற்கப்படும் பொருள்களை கவனிக்கிறான். தண்டவாளங்களில் தாண்டவமாடும் சுருதியை ரசிக்கிறான். இம்மி பிசகாமால், மாறி மாறிப் போகும் புகைவண்டிகளைப் பார்ப்பதோடு நில்லாமல், அந்தத் துறையிலேயே வேலை தேடவும் நாட்டம் கொள்கிறான்.

kuro_pottery

சுகுரு டஸாகியினுடைய குறுநகரத்தில் அவனுக்கு நான்கு நண்பர்கள் இருக்கிறார்கள். எப்பொழுதும் ஒன்றாகவே வளைய வருகிறார்கள். சுகுரு டஸாகி மட்டும் டோக்கியோவிற்கு கல்லூரியில் சேருகிறான். அதன் பிறகு நண்பர்களை இழக்கிறான். நண்பியைக் காமத்துடன் பார்க்கிறான். மூக்கு அரிப்பெடுத்தால் சொறிந்துகொள்வது போல், தன்னியல்பாக தினசரி பல மைல் தூரம் நீந்துகிறான். தற்பால் விருப்பமோ என கனவுறுகிறான்.

உங்களின் அத்யந்த சிநேகிதர்கள், சடாரென்று ஒரு நாள் – உங்களை ஒதுக்கி வைத்து விட்டால் என்ன செய்வீர்கள்? நிராகரிப்பை எப்படி எதிர்கொள்கிறீர்கள்? காதல் தோல்வி என்பது போல் தோழர்களின் தோல்வி என்று இந்த நிலையைச் சொல்லலாம். அவர்களிடம் சென்று ‘ஏன் என்னுடன் பேச மாட்டேன் என்கிறீர்கள்?’ என விசாரிப்போம். அவர்கள், நம்மை புறந்தள்ளும் காரணத்தை அறிய முயற்சிப்போம். நட்பை மீண்டும் உயிர்ப்பிக்க என்ன செய்ய வேண்டும் என்று முயல்வோம். சுகுரு டஸாகி அவ்வாறெல்லாம் எதுவும் செய்வதில்லை. டஸாகிக்கு அந்த மாதிரி ஆராய இயலாத உள்ளுக்குள்ளேயே மருகும் மனம். தானாகவேப் புழுங்கி தனக்குள்ளேயே குற்றங்களை உருவாக்கி அதற்கான தண்டனைகளை ஏற்றுக் கொண்டு நிர்க்கதியாக அலையும் சிந்தையைக் கொண்டிருக்கிறான் டஸாகி.

துப்பறியும் கதை போல் வேகமாக விரைகிறது இந்த நாவல். ஏன் அவனை வெறுத்து ஒதுக்கினார்கள் என்பது முதல் முடிச்சு. அப்படி வெறுத்து ஒதுக்கிய, பதின்ம வயது தோழமை எல்லோரையும் எதிர் கொள்வானா என்பது இரண்டாம் முடிச்சு. ஒவ்வொருவரையும் சந்திக்கும் போது, அவர்கள் சொல்லும் மனப்பதிவுகளும் அதன் தொடர்ச்சியான தகவல்களும் ‘அடுத்து என்ன… அடுத்து என்ன?’ என்று ஆர்வமூட்டுகிறது.

ஒவ்வொரு நண்பரும், பிறரை அவர்கள் எவ்வாறு பார்க்கிறார்கள் என்பதை வெளிக்கொணர்ந்தது நன்றாக இருந்தது. பியானோ இசைக் குறிப்புகளும் அதன் தொடர்ச்சியான ஆபரா, சிம்பொனி விமர்சனங்களும் வாழ்க்கையைச் சொல்கிறாரா, இசையைச் சொல்கிறாரா என எண்ண வைத்தது. ஃபிரான்ஸ் லிஸ்ட் என்பவரின் பியானோ இசைத்தட்டு ஆன Années de pèlerinage நாவல் நெடுக இடம்பெறுகிறது. கதையின் தலைப்பான ’யாத்திரை மேற்கொண்ட வருடங்களும்’ என்பதற்கும் பொருந்துகிறது.

tsukuru_overboard

கதைக்குள்ளேயே பல உபகதைகளும், கிளைக்கதைகளும், சிறுகதைகளும் உண்டு. நாவலின் நடுவே பியானோ வாசிப்பவர் குறித்த அத்தியாயம் வருகிறது. இது இந்த நாவலின் மிக சுவாரசியமான இடம். பியானோ கலைஞருக்கு சிறப்பு சக்தி வந்து இருக்கிறது. அவர் சாத்தானை சந்தித்து இருக்கிறார். அதனிடம் இருந்து, ஒருவரைப் பார்த்தவுடன் அவருடைய நிறம் என்ன என்பது அவருக்குத் தெரிந்து விடும் சக்தியைப் பெறுகிறார். தன்னுடைய நிறம் போலவே இருப்போருடன் அவருக்கு ஒத்துப் போகும், என்பதையும் அறிகிறார். இந்த ஞானமும், பிறரைப் பார்த்தவுடன் உணர்ந்து கொள்ளும் உள்ளுணர்வும் வந்ததால், அவரது நெடுநாள் ஆயுள், மாதங்களாகச் சுருங்கிவிட்டது. இந்த சிறப்புப் பார்வை கிடைக்கும் சூட்சுமத்தை அவர் யாருக்கு வேண்டுமானாலும் தாரை வார்க்கலாம். ஆனால், யாருக்குக் கொடுக்கிறாரோ, அவருடைய ஆயுள்காலமும் எண்ணப்படும் நாள்களாகிக் குறைந்து விடும். அவர் எப்பொழுது பியானோ வாசித்தாலும், தன்னுடைய ஜாடியை, பியானோ மேல் வைத்து விட்டு வாசித்தால்தான், பியானோ வாசிப்பு களை கட்டும். அவருக்கு ஆறாம் விரல் இருந்திருக்கிறது. ஆனால், ஆறாம் விரலோ, பியானோ வாசிப்பிற்கு இடையூறாக இருந்திருக்கும். அதை வெட்டி எடுக்கச் சொல்லி இருப்பார்கள். அந்த ஆறாம் விரல்தான் ஜாடியில் இருந்ததா? ரொம்ப நாளைக்கு, இந்த இடம் மனதிலே சிந்தையைக் கிளறிக் கொண்டே இருக்கும்.

நியு யார்க் டைம்ஸில் சொல்லி இருந்தார்கள். கனவை சிலர் நன்றாக எழுதுவார்கள். அற்புதமாக விவரிப்பார்கள். நிஜம் போலவே இருக்கிறமாதிரி கதையில் உருவாக்கி விடுவார்கள். ஆனால், முரகாமியோ, எது கனவு, எங்கே நிஜம் என சிந்தை திகைக்கும் அளவு கொண்டு செல்கிறார். இதை மீ எதார்த்தம் (surrealism) எனலாம். குழந்தைகளுக்கான கற்பனை உலகம் என்றும் எளிமையாக்கலாம்.

முரகாமியிடம் என்னவெல்லாம் எதிர்பார்த்தேனோ, அவை எல்லாமும் இந்தப் புத்தகத்திலும் கிடைத்தது: கொஞ்சம் போல் பாலுறவு வர்ணனை; இசையும் அதன் தாளங்களையும் வாழ்க்கையோடு சங்கமிக்கும் லயம்; அமானுஷ்யமான உணர்வுகளை காற்றோடு உலவவிடுதல்; அர்த்தமற்ற வாழ்க்கையை தேடல் நிறைந்ததாக ஆக்கிக் கொள்ளும் முட்டாள்தனம்; பிறரோடு ஒட்டாமல், குழுவாகத் திரிய விரும்பும் விசித்திரம்; ஓட்டப்பந்தயம் போல் முடிவைத் தொடும் பயணமாக இல்லாமல், 4×100 தொடர் பந்தயமாக மாரத்தான் ஓடும் உயிர் வித்தை – எல்லாம் போதிய அளவில் கலந்திருக்கிறது.

டிரெயின் ஸ்டேஷன் போல் வாழ்க்கை. போக நினைக்கும் ஊரை மனதில் வைத்து அவசரமும் ஆர்வமும் பதற்றமும் கொண்டு தொடர்வண்டியில் ஏறுகிறோம்; இறங்குகிறோம். பயணங்களில் நிறைய பேரை சந்திக்கிறோம். சிலருடன் அதே இடங்களில் வசிக்கிறோம். சில சமயம் வழியனுப்ப மட்டும் ரெயில்வே ஸ்டேஷனுக்குச் செல்கிறோம். மேலிருந்து ஒருத்தன், இந்த கால அட்டவணையை உருவாக்கி, மின்வண்டியைப் போல் எல்லோரையும் இயந்திர கதியில் செலுத்துகிறான்.

tsukuru_train

பிறரின் இறப்பிற்கு நாம் காரணமாக இருக்கும்போது எப்படி உணர்கிறோம்? எதை உருவாக்குகிறோம்? யாரை திருப்தி செய்ய வாழ்கிறோம்? காதல் என்றால் என்ன? வெற்றி பெறுவது எப்போது? நிறைய யோசிக்க வைக்கிறது.

“நினைவுகளை மறைத்து விடலாம். ஆனால், அந்த நினைவை உருவாக்கிய சம்பவங்களை அழித்துவிட இயலாது.” – சுகுரு டசாகியிடம் சாரா சொல்வது

Vanji Kottai Vaaliban and Braveheart: Historical Fiction in Movies

ராகா.காம் செய்யும் மிக உத்தமமான காரியம் என்பது நான்-ஸ்டாப் கன்னலில் பாடல்களை தொடர் ஒலிபரப்பாக கோர்ப்பதுதான். ஒரு நாள் சந்திரபாபு, இன்னொரு நாள் இசையமைப்பாளர் வேதா, என்னும் வரிசையில் இன்று கிளாசிக்ஸ் ஓடிக் கொண்டிருந்தது.

அப்பொழுது வஞ்சிக் கோட்டை வாலிபன் படத்தில் கொத்தமங்கலம் சுப்பு எழுதி சீர்காழி கோவிந்தராஜன் பாடிய ‘வெற்றிவேல்… வீரவேல்’ கிடைத்தது.

பல நல்ல புறநானூறு பாடல்களையும் பரணி பாடிய வரலாற்றையும் எழரை நிமிடத்திற்கான நாடகக் காட்சியாக ஒருங்கிணைத்திருக்கிறார்கள். சட்டென்று ‘பிரேவ் ஹார்ட்’ திரைப்படத்தை நினைவிற்கு கொண்டு வந்தது.

ஸ்காட்லாந்து மக்கள் பிரிட்டிஷாருக்கு எதிராக ஏன் சண்டை போட்டார்கள்? போர்களுக்காக வில்லியம் வாலஸ் எவ்வாறு மக்களை சேர்த்தார்? Offence is the best defense என்பதை தற்கால விளையாட்டு பயிற்றுநர்களுக்கு, அக்கால வரலாறு கொண்டு விளக்கிய படம். மெல் கிப்சன் நடித்த ’பிரேவ்ஹார்ட்’டில் சிலந்தியைப் பார்த்து விடாமுயற்சியைக் கற்றுக் கொண்ட ராபர்ட் ப்ரூஸும் இருந்தார்.

இரண்டுமே பிரும்மாண்டமான போர்ப்படங்கள். வில்லன்களாக அரசர்களைக் கொண்டவை. காதல் நிறையவே உண்டு. இரண்டு நாயகிகள் கொண்ட கதை. வீரதீரம் நிறைந்த நாயகன். 1958ல் தமிழில் வெளியான ‘வ.கோ.வா.’ சூப்பர் ஹிட். ப்ரேவ்ஹார்ட்டும் நல்ல வசூல் கொடுத்தது.

மீண்டும் இந்த மாதிரி சரித்திரத்தையும் மசாலாவையும் தேசப்பற்றையும் சரியாக மிக்ஸ் செய்யும் மசாலாக்கள் எப்பொழுது வரும்?

நாட்டு வளம்: பனை மரத்தின் பயன்: இலங்கையும் தமிழ்நாடும்

சாப்பாட்டு நிகழ்ச்சியைக் கூட புதிய தலைமுறை டிவியின் ‘கொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு’ செய்முறை விளக்கமாக சுருக்காமல், ‘நீங்கள் கேட்ட பாடல்’ விஜயசாரதி போல் தகவல் அடுக்கும் சாதனமாக மாற்றி இருக்கிறது.

சமீபத்தில் கலிஃபோர்னியா சென்று வந்ததில் இருந்து பனை மரம் மீது பாசம் கலந்த ஆர்வம் தொற்றிக் கொண்டிருந்தது. இந்த சமயத்தில் சமீபத்தில் ’சோற்று சரித்திர’த்தத்தை பனை மர ஸ்பெஷலாக்கி இருந்தார்கள்.

பனம்பழ புட்டு, வீட்டுக்கு மேலே பனை ஓலை, பனங்கிழங்கு ஃப்ரை என்று இத்தனை உபயோகங்களை ஆதிகாலத்தி தமிழர் கண்டு பிடித்திருக்கிறாள்! மரமாக வளர வைத்து பயன்படுத்துகிறாள். குட்டிச் செடியாகவே எடுத்தும் உபயோகிக்கிறாள்.

இன்றைய சமூகம் இணையத்தைக் கொண்டு சின்ன சின்ன சேவைகளை அறிமுகம் செய்வது போல் அன்றைய நாகரிகம் இயற்கைப் பொருள்களை வைத்து புதுப் புது பயன்களை கண்டுபிடித்துக் கொண்டே இருந்திருக்கிறது.

கூடவே நன்றாக தின்றும் மகிழ்ந்திருக்கிறார்கள்.

அம்பேத்கார் கார்ட்டூன் – வரைபடங்களும் பாடப்புத்தகங்களும்

ஒரு கார்ட்டூன். மாணவர்களுக்கு அந்தக் கால சூழலை எளிதில் உணர்த்துவதற்காக பாடப்புத்தகத்தில் இருக்கிறது. அதற்கு எதிர்ப்பு.

புத்தகத்தை புரட்டியிருப்பார்களா என்பது சந்தேகம். அந்தப் பக்கத்தையாவது பார்த்திருப்பார்களா என்பது அதனினும் சந்தேகம். இவர்களுக்கு இடஞ்சுட்டிப் பொருள் விளக்கம் கற்றுக் கொடுக்கும் பொறுப்பு யாரைச் சேரும்?

இந்த மாதிரி கவன ஈர்ப்பு கட்சி எம்.எல்.ஏ., எம்பி.க்களுக்கு ஆழமாக ஆராய, முழுவதுமாக வாசித்து கருத்து சொல்ல எப்பொழுது நேரமும் பொறுமையும் தன்னடக்கமும் கிட்டும்?

சரித்திரத்தை சுவாரசியமாக்குவது பிடிக்கவில்லையா? சமகால சினிமா மூலமாக சிந்திக்க வைப்பதை விரும்பவில்லையா? வரலாற்று நூலை வாசித்து யோசிக்குமாறு அமைத்திருப்பது ரசிக்கவில்லையா?

செய்தி

The school textbook cartoon of BR Ambedkar which created a furore in parliament on Friday was sketched by cartoonist Keshav Shankar Pillai in the 1950s while the Constitution was being framed, said a human resource development ministry official.

The cartoon depicts Nehru as asking Ambedkar to speed up the work on the Constitution.

The issue was raised by Dalit activist Thol Thirumavalavan, the Lok Sabha MP who heads the Viduthalai Chiruthaigal Katchi of Tamil Nadu, where protests were staged over the row.

Shankar, as he was popularly called, later founded the publishing house, Children’s Book Trust, in 1957. He made cartoons for newspapers and his magazine, Shankar’s Weekly, started in 1948. The government of India honoured him with Padma Shri in 1956, Padma Bhushan in 1966 and Padma Vibhushan in 1976.

The controversial cartoon was probably first published in 1948 and has been a part of NCERT’s (National Council Of Educational Research And Training) Class XI textbook in Tamil Nadu since 2006. The cartoon is credited to Children’s Book Trust.

It shows Ambedkar, a Dalit leader and creator of the Indian Constitution, seated on a snail with ‘Constitution’ written on it and India’s first prime minister, Jawaharlal Nehru, whipping the snail. In the background is a crowd.

காந்தியும் பாரத மாதவும் – ஓம் – இந்துத்வா கோஷம்

இந்தக் கார்ட்டூன் அடுத்து கண்டனத்திற்கு உள்ளாகலாம்

Pictures like this reveal how Mahatma Gandhi was perceived by people and represented in popular prints Within the tree of nationalism, Mahatma Gandhi appears as the looming central figure surrounded by small images of other leaders and sages.

அரசியல் பாடம்

பாடத்தை எப்படி விளக்குகிறார்கள்?

எவ்வாறு எளிமையாக்குகிறார்கள்?

செய்தித்தாள் வாசிக்காதே

ஆர் கே லஷ்மண் கார்ட்டூன்கள் இடம் பிடித்திருக்கின்றன:

கருத்துப்படம்

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமை நக்கல் அடிக்கிறார்கள் எனலாம்.

படேல்

நேருவின் பேரன்களும் பேத்திகளும் அரியணையில் அம்ர்ந்திருப்பதால், சர்தார் வல்லபாய் படேல் நக்கலடிக்கப் படுவதை கண்டு கொள்ளவில்லை என்று பாரதீய ஜனதா கட்சி சொல்ல வேண்டும்.

இந்திரா காந்தி

போராட்டமும் வளர்ச்சியும் – முரண்

’அமெரிக்கா’ உதயகுமார் கூடங்குளத்தில் நடத்தும் வியாபாரப் போராட்டத்தை குறிப்பால் உணர்த்தி இருப்பதால், அந்த கேலி சித்திரத்தையும் நீக்கும் வரை உண்ணாவிரதப் போராட்டம்:

இந்தி எதிர்ப்பு கிளர்ச்சி – இராஜாஜி

கவிதை

Namdeo Dhasal

Turning their backs to the sun, they journeyed through centuries.
Now, now we must refuse to be pilgrims of darkness.
That one, our father, carrying, carrying the darkness is now bent;
Now, now we must lift the burden from his back.
Our blood was spilled for this glorious city
And what we got was the right to eat stones
Now, now we must explode the building that kisses the sky!
After a thousand years we were blessed with sunflower giving fakir;
Now, now, we must like sunflowers turn our faces to the sun.

English translation by Jayant Karve and Eleanor Zelliot of Namdeo Dhasal’s Marathi poem in Golpitha.

கவுண்டமணி – செந்தில்

நகைச்சுவை காமெடி ஜோக்குகள் இடம் பெற்றிருக்கின்றன

A Communist Party bureaucrat drives down from Moscow to a collective farm to register a potato harvest.
“Comrade farmer, how has the harvest been this year?” the official asks.

“Oh, by the grace of God, we had mountains of potatoes,” answers the farmer.

“But there is no God,” counters the official.

“Huh”, says the farmer, “And there are no mountains of potatoes either.”

ஈழம் & இலங்கைப் பிரச்சினை

அடுத்ததாக தொல் திருமா போன்ற தமிழின உணர்வுத்தூண்டிகள் விடுதலைப் புலிகள் குறித்து தி ஹிந்து கார்ட்டூன் எடுத்துக் கொள்வார்கள் என நம்பலாம்

காங்கிரசு அல்லாத பிரதம மந்திரிகள்

ஜனதா கட்சியை தாழ்த்துகிறார்கள் என முழங்க வேண்டும். ‘நிலையான ஆட்சி’ தாரக மந்திரத்தை ஓதும் சாத்தான் படம்!

பத்திரிகை முகப்பு

ஏன் இல்லுஸ்டிரேடட் வீக்லி, சண்டே, சண்டே இந்தியன், தி வீக், போன்றவை இடம் பிடிக்க வில்லை?

அமுல்

விளம்பரம் போடுகிறார்கள். மற்ற பாலாடை கம்பெனிகளும் பட்டர் நிறுவனங்களும் போர்க்கொடி தூக்கலாம்.

ஏன் கார்ட்டூன் தேவை?

சில பகீர் கார்ட்டூன்கள் முடிந்த பின் சிந்தனையைத் தூண்டும் கேள்விகளும் கீழ்க்காணும் வினாக்களும் இருக்கின்றன

1. Suppose you are the Secretary of State in the US (their equivalent of our Minister of External Affairs). How would you react in a press conference to these cartoons?

2. Drawn by well known Indian cartoonist Kutty, these two cartoons depict an Indian view of the Cold War.

3. If you were to draw this, who would you show as waiting in the wings?

4. Why does the cartoonist use the image of the ship Titanic to represent EU?

5. The two cartoons, one from India and the other from Pakistan, interpret the role of two key players who are also interested in the region. Do you notice any commonality between their perspectives?

6. How should the world address issues shown here?

7. Do you agree with this perspective?

இட ஒதுக்கீடு

சமூக நீதியை எப்படி சுருக்கமாக சொல்வது?

சமமாக மக்களை நடத்த வேண்டியதை எவ்வாறு மனதில் நிலைநிறுத்துவது?

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் அவர்களுக்காக பாபாசாஹேப் அம்பேத்கார் மேற்கோள்:

குத்துங்கம்மா குத்து: தமிழ் பேட்டை ராப், துள்ளல் கும்மாளம் & சாவு மேளம்

Avan Ivan

People offended by “Chola descent” lyrics in Lady Gaga’s Born The Way Lyrics

சோழாவை கிராமியில் பார்த்தவுடன் செல்வராகவனின் ‘ஆயிரத்தில் ஒருவனு‘ம் கிழக்கு பதிப்பக ச ந கண்னனின் ‘இராஜ ராஜ சோழனு‘ம்லேடி காகா -வை உச்சநிலைக்கு எடுத்துச் சென்று அந்த வரியைப் புகுத்தியிருக்கிறதோ என்று பயந்தே போனேன்.

In fact, Lady Gaga came to Chennai Book fair என்று தமிழ் பேப்பரில் பதிவு இருப்பதாக இரும்பூது எய்தினேன்.

சோலோ (Cholo) எங்கிருந்து வருகிறார்?

நீக்ரோ, அரிஜன், பறையன் என்பது போல் இழிவழக்கு. கரெக்டாக சொன்னால், ‘நாயே‘!

சோலோ தற்போதைய மடோனா ஆன, லேடி காகா பாடலில் இடம் பிடிக்கிறார். அமெரிக்காவின் அனைத்து இனத்தவரையும் கவரும் வகையில் பாடல் வரிகள் அமைய வேண்டும். ஏற்கனவே பதின்ம வயது வெள்ளையரைக் கவர்ந்தாயிற்று. ஆடை நீக்கியதால், அனைத்து வயதினரையும் சொக்குப் பொடி போட்டாயிற்று.

தொடர்ச்சியாக ஆப்பிரிக்க அமெரிக்கர், ஸ்பானிஷ் மொழி பேசுவோர், சீனர், ஜப்பானியர், கொரியர், வியட்நாமியர், மங்கோலியர், என்று பழுப்பு/கறுப்பு அனைத்து நிறத்தவரையும் டார்கெட் செய்வதன் விளைவு.

// The Racism in “Born This Way” and Why it Matters: ““cholo” and “chola” is often used to refer to Latino people in gangs and drug culture, who wear certain types of gang attire and prescribe to certain types of gang behavior”

நாம் இடக்கரடக்கல், குழுஊக்குறி விரும்பிகள். சென்ற காலத்தின் கெட்ட வார்த்தைகளை தவிர்க்க புதிய நல்ல வார்த்தைகளைத் தேர்ந்தெடுப்போம். நாள்டைவில் அவை சுடுசொற்களாகத் தோன்றுவதால், அவற்றையும் அல்லன சொற்கள் பட்டியலில் சேர்ப்போம். புதிய சைவ மொழியைத் தோற்றுவிப்போம். :: Our ‘Love Affair’ With Euphemisms : NPR


Mommy’s Little Cholo (Mommy’s Little Monster)

Artist (Band):Manic Hispanic
Lyrics

mommy’s little cholo dropped out of school
drinking 40 ouncers and smoking a dozen bowls
he loves to go out crusing with his homeboys,
he loves to go out and make some noise
he doesn’t wanna be a gardnerer
or a dude diggin’ a ditch
he’s 20 years old never had a job,
and the wellfare pays his rent

look what i did last night. little monsters forever, on the arm that holds my mic.

chola tattoo from shamrock

his brothers in the pinta
and his sisters on parol
his parents say mijo,
we’re praying for your soul

he’s mommy’s little cholo,
he’s mommy’s little cholo,
dont wake him in a fit

mommy’s little chola shoots methadrine,
mommy’s little chola had sex at 15
all the homegirls thinks she’s cool,
shes gonna go out to beauty school
she has no problem with he vatos in the bed
she’s got a homeboy his names little ben,
he knocked her up before he went to jail
and shes got no money for his bail

her eyes were like a racoons
she wasn’t born with a silver spoon,
hair sprayed up to the sky,
teardrop tattoo under her eye

she’s mommy’s little chola,
she’s mommy’s little chola,
dont take her life away

her eyes were like a racoons
she wasn’t born with a silver spoon,
hair sprayed up to the sky,
teardrop tattoo under her eye

she’s mommy’s little chola,
she’s mommy’s little chola,
dont take her life away

she’s mommy’s little chola [x4]


லேடி காகா பாடல் வரிகள்

It doesn’t matter if you love him, or capital h-i-m
Just put your paws up
‘Cause you were born this way, baby

Verse:
My mama told me when I was young
We are all born superstars

She rolled my hair and put my lipstick on
In the glass of her boudoir

“there’s nothin wrong with lovin who you are”
She said, “’cause he made you perfect, babe”

“so hold your head up girl and you’ll go far,
Listen to me when I say”

Chorus:
I’m beautiful in my way
‘Cause god makes no mistakes
I’m on the right track baby
I was born this way

Don’t hide yourself in regret
Just love yourself and you’re set
I’m on the right track baby
I was born this way

Post-chorus:
Ooo there ain’t no other way
Baby I was born this way
Baby I was born this way
Ooo there ain’t no other way
Baby I was born-
I’m on the right track baby
I was born this way

Don’t be a drag -just be a queen
Don’t be a drag -just be a queen
Don’t be a drag -just be a queen
Don’t be!

Verse:
Give yourself prudence
And love your friends
Subway kid, rejoice your truth

In the religion of the insecure
I must be myself, respect my youth

A different lover is not a sin
Believe capital h-i-m (hey hey hey)
I love my life I love this record and
Mi amore vole fe yah (love needs faith)

Repeat chorus + post-chorus
Bridge:

Don’t be a drag, just be a queen
Whether you’re broke or evergreen
You’re black, white, beige, chola descent
You’re lebanese, you’re orient
Whether life’s disabilities
Left you outcast, bullied, or teased
Rejoice and love yourself today
‘Cause baby you were born this way

No matter gay, straight, or bi,
Lesbian, transgendered life
I’m on the right track baby
I was born to survive
No matter black, white or beige
Chola or orient made
I’m on the right track baby
I was born to be brave

Repeat chorus
Outro/refrain:

I was born this way hey!
I was born this way hey!
I’m on the right track baby
I was born this way hey!

I was born this way hey!
I was born this way hey!
I’m on the right track baby
I was born this way hey.

அமெரிக்காவில் திராவிட கலாச்சாரம்

மதியம் பதினொன்றே முக்கால்.

‘இன்று எங்கே சாப்பிடலாம்?’

‘மினர்வா போகலாமா?’

‘சரி’

நானும் அவளும் என்னுடைய காரில் பயணிக்க ஆரம்பித்தோம்.

‘ஏதாவது இந்தியப் பாட்டு போடேன்’

கொஞ்சம் தர்மசங்கடம். ஐ-பாடில் ‘ஆடுங்கடா என்ன சுத்தி’, ‘கெடா காறி’; தூக்கத்தை விரட்டும் பாடல்கள் எனக்கு உவப்பானவை. அதிர்ஷ்டவசமாக சிடி-யில் ரங்கீலா இருந்தார்.

‘அனிமல் கிங்டம் மாதிரி ம்யூசிக் ஆக இருக்கே? காட்டுவாசி தீமா?’

இல்லை என்று மறுத்தேன். அமெரிக்காவில் இந்திய ப்ரெட்டும், சிக்கன் டிக்கா மசாலாவும் பிடித்த தக்கினியூண்டு இடத்தை, ஆஸ்கார் ரெஹ்மான் கூட பிடிக்க முடியாது. சாரு, ஷாஜி சொல்வதிலும் பாயின்ட் இருக்கிறது.

வழக்கம் போல் பஃபே தேர்ந்தெடுத்தேன்.

அமெரிக்காவில் மதுவருந்தும் பப்களில் மாபெரும் தொலைக்காட்சி திரை இருக்கும். நாலு டிவியும் நாற்புறம் நிறைந்திருக்கும். எல்லாவற்றிலும் ஏதாவது விளையாட்டு காண்பிப்பார்கள். அவர்களுக்குப் போட்டியாக இந்திய உணவகங்களில் பெரிய திரை வைக்கிறார்கள்.

இந்திப் பாடல், தெலுங்கு ஆட்டம், தமிழ் குத்து என்று ஒருங்கிணைப்புடன் தேசிய உணர்வு பொங்க விடுகிறார்கள்.

‘யூ ட்யூபில் உங்க சண்டைக் காட்சி பார்த்தேன். பஞ்சதந்திரக் கதை மாதிரி மேஜிக்கலா இருந்தது. மலைக்கு நடுவில் கயிற்றுப் பாலம். நட்ட நடுவில் ஒருத்தன் ஆக்ட்ரெஸோட விரலப் பிடிச்சுண்டு இருக்கான். இன்னொருத்தன் அவனோட காலைத் தழுவித் தொங்கிண்டு இருக்கான். தீடீர்னு தன்னோட லெக் பீஸை கட் பண்ணிக்கிறான். பாலத்தை அறுத்து பறந்து போய் ஹீரோயினை அந்தப் பக்கம் விடறான். ரொம்ப காமெடியா இருந்துச்சு.’

‘இராவணன்?’

‘தெரியல… ரெண்டு மூணு பார்த்தேன்! எல்லாமே ஒரே மாதிரி இருந்தது. வெரி கன்ஃப்யூஸிங்.’

மணி ரத்தினத்தின் வழுக்கலுக்கு சுகாசினியே காரணம் என்பதை சுருக்கமாக விளக்கினேன்.

‘இதென்ன சாங்? இஸ் இட் தி எக்ஸ்ப்ளாயிடெடிவ் சீக்வென்ஸ்?’

“என் பேரு மீனாகுமாரி” போய்க் கொண்டிருந்தது. ‘அதென்ன exploitative song?’

‘நீதானே சொல்லிக் கொண்டிருந்தாய். ரொமான்ஸ், சோகம், வீரம், ருத்ரம் போன்ற நவரசங்களும் ஒவ்வொரு படத்தில் எட்டு பாடலாக அமையும் என்று… அது போல் இது போல் டான்சிங்?’

‘இது குடும்பப் படம். இது சூப்பர் மேன் பற்றியது. இந்தியாவில் “தெய்வம் மனுஷ ரூபம்” என்னும் தொன்மத்தை பின்பற்று முருகரை அடியொற்றி “கந்தசாமி” என்று யூ செர்டிஃபிகேட்… அதான் G for General Audiences அத்தாட்சி முத்திரையுடன் வெளியான படம்.’

இந்த முறை அவள் ம்ம்ம்ம்.

‘இதென்ன ரோட்டில் யாருமே இல்லை. வழிப் போக்கர்கள் கூட டீக்கா இருக்காங்களே!’

‘கஜினி; அவனுக்கு அஞ்சு நிமிஷம்தான் உலகம் நினைவில் இருக்கும். அதன் பிறகு மறந்து போகும். மெமண்டோ பார்த்திருப்பியே? அதன் முன் தோன்றிய தமிழன். நீ குந்தர் கிராஸ் மாதிரி. ரொம்பக் கேள்வி கேட்கிறே. உனக்கு ஒரு சமூகமே நொந்து நூடில்ஸாய் இருக்குனு புரிய வாய்ப்பேயில்ல. கலைகள் எங்க நாட்டில் இருக்கக் கூடாதா? உனக்கு இது சதைக் காட்சிசாலை. எங்களுக்கு நிர்வாணா!’

தெம்பாய் இன்னொரு நாப்கின் எடுத்து துடைத்தெறிந்தோம்.

Chennai Golu: Navarathri Greetings

Golu Photos - Tamil Nadu: Navarathri: Dussehra in Chennai

Oasis’ 91: 333 031

வைணவத் தத்துவத்தில் கேபிடலிசமும் கம்யூனிசமும்

உயிகளின் பகுப்பு: வைணவ மரபும் மெய்ப்பொருளியலும்: கம்பன் காட்டும் வைணவப் பேருலகம்

உயிகளின் பகுப்பு: வைணவ மரபும் மெய்ப்பொருளியலும்: கம்பன் காட்டும் வைணவப் பேருலகம்

  • வீடு பேறு பெற்றோர் – முக்தர்: நித்தியர்
  • ஒரு பொழுதும் தளைக்குட்படாத நிலையானவர்
  • தளைக்குட்பட்டோர்  – பக்தர்கள்
    • புனித நூல்களால் வழிநடத்தப்படாதவை: பயிரினங்களும் விலங்கினங்களும்
    • புனித நூல்களால் வழிநடத்தப்படுவோர்: மனிதர்கள் & கடவுள்
      • உலகப்பயன்களை நுகர விழைவோர்: புபுட்சு
        • நன்மையை நாடுவோர்: தர்மபரர்
        • பொருள், இன்பம் விழைவோர்: அர்த்தகாமர்
          • »பல கடவுளைச் சார்ந்து நிற்போர்: வேதாந்த பரர்
          • »ஒரே கடவுளைச் சார்ந்து நிற்போர்:: பகவர் பரர்
            • துன்புறுவோர்: அர்த்தர்
            • அறிவு விழைவோர்: சிக்ஞாசர்
            • பொருளை நாடுவோர்: அர்த்தார்த்தி
      • வீடுபேறடைய விரும்புவோர்:  முமுட்சு
        • தன்னை தூய நிலையில் உணர விழைவோர்: கைவல்யபரர்
        • இறைவனுடன் கூடியிருக்க விழைவோர்: மோட்சபரர்
          • »அன்புவழிப்பட்டோர்: பக்தர்கள்
            • அன்பினை வழியாக ஏற்றோர்: சாதனை பக்தர்
            • அன்பினை முடிவாகக் கொண்டோர்: சாத்திய பக்தர்
          • »புகல்வழிப்பட்டோர்: பிரபன்னர்கள்
            • அறிவு அன்பு மட்டுமே இறைவனிடமிருந்து பெற விழைவோர்: பரமை கரந்திகள்
            • உறுதிப் பொருளை இறைவனிடமிருந்தே பெற விழைவோர்: ஏகாந்திகள்
              • முன்வினைப்பயன் நுகர்வின் முடிவில் இறைவனுடன் கூடியிருக்க விழைவோர்: திருப்தர்
              • புகலுறுதி மேற்கொண்டவுடன் இறைவனுடன் கூடியிருக்க விழைவோர்: ஆர்த்தர்