Tag Archives: Money

Appraising Destination Imagination: Project Outreach: Real to Reel

பள்ளிக் குழந்தைகளுக்கான போட்டியில் நடுவர் வேலை கிடைத்த்திருந்தது. முடி நரைப்பதில் இப்படியும் சில நல்ல விஷயங்கள் இருக்கின்றன.

ஒவ்வொரு பள்ளியிலிருந்தும் இரண்டு, மூன்று குழுக்கள். ஒவ்வொரு குழுவிலும் ஆறேழு மாணவர்கள். அனைத்துக் குழுவும் ஏதாவது ஒரு தொண்டு நிறுவனத்திற்காக நிதியோ பொருளோ சேகரிக்க வேண்டும்; அல்லது தன்னார்வலர்களாக களத்தில் இறங்கி பணி புரிந்திருக்க வேண்டும்; அல்லது தங்கள் நோக்கங்களை பரவலாக சென்றடையுமாறு பிரச்சாரம் செய்து சமூகத்தில் மாற்றம் கொணர்ந்திருக்க வேண்டும்.

இப்பொழுது என்னை செய்யச் சொன்னால் கூட தயங்குகிறேன். இந்த வயதில் இத்துணை நண்பர்களையும் தொடர்புகளையும் வைத்திருந்தாலும் அனைவரையும் திரட்டி ஒரு கொள்கைக்காக ஒருங்கிணைத்து களப்பணி செய்ய இயலுவதில்லை. ‘அவன் என்ன நினைப்பானோ’, ‘வாரயிறுதியில் ஓய்வு எடுத்துக் கொள்ளலாம்’ என்று தட்டிக் கழிக்கிறேன்.

நூற்றுக்கணக்கான பாடசாலையில் இருந்து பல்வேறு நலத் திட்டங்கள்; பரப்புரைகள்; செயலாக்கம் செய்து முடித்தவர்களின் பெருமிதமான பங்களிப்புப் பட்டியல்கள். ரொம்ப நிறைவாக இருந்தது.

யார் வென்றார் என்பதை எப்படி கணக்கிடச் சொன்னார்கள்?

நிறைய காசு திரட்டுவதால் வெற்றியாளரை தீர்மானிக்கக் கூடாது. அதிக பேரை மனம் மாற்றியதாலோ, மிகப் பெரிய அளவில் கொண்டு சென்றதாலோ வாகை காணமுடியாது. ஃபேஸ்புக்கில் பெரும்பாலான லைக்குகள் கிடைப்பதாலோ, ட்விட்டரில் அதிக நபர்கள் பின் தொடர்வதாலோ முதல் பரிசு கொடுக்கக் கூடாது.

செய்த காரியத்தை எப்படி படிப்படியாக நகர்த்தினார்கள் என்று விளக்குவதிலும், அதில் ஏற்பட்ட தடங்கல்களையும், அவற்றை எதிர்கொண்ட விதத்தை முன்வைப்பதை மட்டுமே கருத்தில் கொண்டு தீர்மானித்தோம்.

களப்பணியாளர்களும் பெட்டிசன் கைங்கர்யவாதிகளும்

இணையத்திற்கு வந்த புதிதில் குறிஞ்சி மலர் பூத்தது போல் இல்லாவிட்டாலும், அத்தி பூத்தது போலத்தான் மின்னஞ்சல் வரும். அந்த மாதிரி வரும் மடல்களில் அளவுக்கதிகமாகவே பெட்டிஷன் இருக்கும்.

‘காஷ்மீருக்கு விடுதலை கொடு’
‘சோனியா காந்தியை வெளியேற்று’
‘எலிக்கும் ஆலமரத்திற்கும் திருமண சட்டதிருத்தம் நிறைவேற்று’
‘பொதுவில் கொட்டாவி விட ஒப்புதல் வழங்கு’

இப்படி கலந்துகட்டி இருக்கும். தட்டச்சத் தெரிந்த ஒரே காரணம் மட்டுமல்ல. இருபத்து நான்கு மணி நேர இண்டெர்நெட்டும் இருப்பதால் மட்டுமே தினசரி நாலைந்து பெட்டிசன் விண்ணப்பங்களில் பெயர் போட்டு, முகவரி இட்டு, தொலைபேசி கொடுத்து நிரப்பி இருக்கிறேன்.

வைய விரிவு வலை வயசுக்கு வந்ததும், இந்த முகவரிகளுக்கு கடிதம் போடத் துவங்கினார்கள்….
’பனிக்கரடியைக் காப்பாற்ற பத்து பைசா கொடுத்தால் போதும்!’
‘துப்பாக்கிகளை ஒழிக்க நன்கொடை தாரீர்!’
‘இரத்த தானம் தரமுடியவில்லையா… பணமாக அள்ளித் தரலாமே!’

கொடுக்காதவுடன், செல்பேசியிலும் வீட்டு போனிலும் அழைத்துக் கேட்டார்கள். கூடவே, பெட்டிசனிலும் கையொப்பம் கேட்டார்கள்.

இந்தியா போல் அமெரிக்காவில் தெரு முக்குகளிலோ காபி கடை வாயிலிலோ அறிமுகமில்லாத நாலைந்து பேர் சட்டென்று கூடி கதைக்க முடியாது. இந்த மாதிரி impromptu free speech கூட்டங்களுக்கு 144 தடா.

அதனால், பெட்டிசன் நியாயமான உணர்வுபூர்வமான அணுகுமுறை. சிதறிக் கிடப்பவர்களை ஒன்று சேர்க்கவும், குட்டி குட்டி ஊர் அன்னியர்களை அறிந்து கொண்டு ஒருங்கிணைக்கவும் சாலச் சிறந்த வழி.

அசோக ராஜா காலத்து வழக்கமான இந்தியாவில் எதற்கு இன்னும் பெட்டிசனில் மட்டும் விண்ணப்பத்தைப் போடுகிறார்கள்?

Mitt Romney or Barack Obama: 4 More Days or 4 More Years?

அமெரிக்காவின் அடுத்த அதிபர் யார் என்பது நவம்பர் ஆறாம் தேதி தெரிந்து விடும். ஜனாதிபதி ஆனவுடன் முதல் விருந்தை இந்தியாவிற்கு தந்து கௌரவித்த ஒபாமாவா? அல்லது பால்ய வயதிலேயே, இருபதாண்டுகளுக்கு முன்பே அவுட்சோர்சிங் செய்து இந்தியர்களின் கணக்குப்பிள்ளை சூட்டிகையை உலகுக்கு அறிவித்த மிட் ராம்னியா?

மிட் ராம்னியை அறிமுகம் செய்யுமுன் புகழ்பெற்ற மகாபாரதக் கதையை பார்த்து விடலாம்.

பாண்டவர்களில் மூத்தவர் தருமபுத்திரர் வீட்டில் விருந்து. ஏக தடபுடலாக ஆயிரக்கணக்கானோர் விதவிதமான உணவுகளை ருசித்து மகிழ்கிறார்கள். கை கழுவும் இடத்தில் அணில் ஒன்று புரண்டு புரண்டு குளிக்கிறது. முதுகுப்புறம் மட்டும் தங்கமாக ஜொலிக்கிறது. இந்த விநோதத்தை கிருஷ்ணர் சுட்டுகிறார். அணிலை அழைத்து எவ்வாறு அது தங்க நிறம் அடைந்தது என்று விசாரிக்கிறார்.

அது தன் பூர்வ கதை சொல்கிறது. ‘பக்கத்து குக்கிராமத்தில் ஏழை விவசாயி இருக்கிறார். தன் மனைவியுடனும் மகனுடனும் வசிக்கிறார். அன்றாடங்காய்ச்சி. தினசரி உணவை மூன்று பங்காக்கி உண்பார்கள். சாப்புடறப்ப கதவு தட்டற சத்தம். வாசலில் பிச்சை கேட்டு வந்தவனை உள்ளே அழைக்கிறார்கள். தங்கள் கஞ்சியை நான்காகப் பிரித்து ஒரு பகுதியை அவனுக்குக் கொடுத்தார்கள். போதாது என்றான். குடும்பத் தலைவன் தன் பங்கைக் கொடுத்தான். போதாது… இன்னும் வேண்டும் என்கிறான். மனைவியும் மகனும் தங்கள் சோறைக் கொடுக்கும் வரை விடாமல் கேட்டு சாப்பிட்டு விடுகிறான். அவன் கை கழுவிய தண்ணீர் என் மேல் பட்டதால் என் பின்புறம் தங்கமானது’ என்கிறது.

பராக் ஒபாமாவை எதிர்க்கும் மிட் ராம்னிக்கு இந்தக் கதை நிச்சயம் ரொம்ப பிடிக்கும்.

ஏழைகளின் வருவாயில் இருந்து கொஞ்சம் பங்கு போட்டு பணக்கார பிச்சைக்காரர்களுக்கு தர வேண்டும். அதன் மூலம் அவர்கள் கை கழுவி செலவழிப்பார்கள். அதனால் தளர்ந்த அமெரிக்கா முழுக்க தங்கம் மிளிறும் என்கிறார்.

கடந்த நான்காண்டுகளில் ஒபாமாவினால் அமெரிக்காவை பொருளாதாரத்தில் தலை நிமிர வைக்க முடியவில்லை என்பதே நிஜமான நிதர்சனம். படித்தவர்களுக்கு நல்ல வேலை எளிதில் கிட்டுகிறது. ஆனால், சராசரி அமெரிக்கருக்கு, பள்ளிப்படிப்பு முடிக்காதவருக்கு நிதிநிலைமையும் வாய்ப்புகளும் படு மோசம்.

சென்ற ஆட்சிக் காலத்தில் ஜார்ஜ் புஷ் போர் தொடுத்தார். அதனால், ஆவரேஜ் அமெரிக்கர்களுக்கு ஏதோ ஊழியம் கிடைத்தது. அதற்கும் முந்திய பில் கிளிண்டன் காலத்தில் இண்டெர்நெட் ஜாக்பாட் அடித்தது. எல்லோரும் கொழித்தார்கள். ஆனால், ஒபாமாவிற்கு பச்சை சுற்றுச்சூழல், உள்கட்டமைப்பு சீரமைப்பிற்காக கோடானுகோடி வாரியிறைப்பு எதுவுமே கை கொடுக்கவில்லை. வேலையில்லா திண்டாட்டம் பெருமளவில் நீடிக்கிறது.

அமெரிக்கா முன்னேறுவது இருக்கட்டும். இந்தியாவிற்கு யார் வந்தால் நல்லது? தெற்காசியாவில் என்ன விதமான மாற்றங்கள் நிகழும்?

வங்காளம் கற்றுக் கொடுக்கும் இந்த ஊர் பல்கலைக்கழக பேராசிரியரை சந்தித்தபோது சொன்ன விஷயம் தோன்றியது. ‘சண்டை போட்டாத்தான் மதிப்பு. விடுதலைப் புலிகள் இருந்தவரைக்கும் எங்க டிபார்ட்மெண்டுக்கு நல்ல கவனிப்பு. அங்கே இருப்பவர்களை ஆராயணும்னு சொன்னால் போதும். டூர் அடிக்கலாம். தீவுகளில் சுற்றலாம். செம ஜாலியாக இருக்கும். இப்போ, அராபி கத்துக்கோ… தூய உருது பேசு என்று மாறிட்டாங்க’ என்றார்.

இந்தியாவைப் பொறுத்தவரை சமர்த்து நாடு. நாலு நாள் மின்சாரம் இல்லாமல் இருந்தாலும் சமாளிக்கிறார்கள். ஏழைகளுக்கும் நடுத்தர வர்க்கத்திற்கும் இடையே உள்ள வருவாய் ஏற்றத்தாழ்வு அதிரடியாக வளர்ந்தாலும் அழுக்காறு கொண்டு வன்முறை பெருகுவதில்லை. அன்னா அசாரே உதித்தாலும் எகிப்து மாதிரியோ, சிரியா மாதிரியோ ஊதிப் பெரிதாக்க முடியவில்லை. ஷியா, சன்னி, குர்து, சூஃபி என்று இஸ்லாமை பிரித்தாளும் சூழ்ச்சியும் தேறவில்லை. சீனா ஆக்கிரமித்தாலும் விட்டுக் கொடுக்கிறார்கள். ஊர் புகுந்து பாகிஸ்தான் சுட்டுத் தள்ளினாலும் பொறுமை காக்கிறார்கள்.

இந்த மாதிரி தேமேயென்று அமைதி காக்கும் பூமி குறித்து அமெரிக்க அதிபர்கள் கவலை கொள்ள வேண்டாம். ஒன்று பிரச்சினையை உருவாக்கத் தெரிய வேண்டும். அது இஸ்ரேல் வழி. இன்னொன்று பிரச்சினையை வளர்க்கத் தெரிய வேண்டும். இது இரான் வழி. இரண்டிலும் பாரதம் செல்ல மாட்டேன் என்பதனால் இந்தியாவை இன்னொரு ஐரோப்பிய நாடாக, ஆஸ்திரேலியாவாக அமெரிக்கா கருதுகிறது.

ஸ்திரமான நண்பன். நம்பிக்கையான அடியாள். காலாகாலத்திற்கும் சேவகம். தலைமுறை விசுவாசம். சொன்னதெல்லாம் கேட்பவர்.

ஒபாமாவின் ஆட்சிக்காலத்தில் இந்திய நிறுவனங்களின் அமெரிக்க வளர்ச்சியை ஒடுக்கும் முயற்சிகள் எடுக்கப்பட்டது. இந்தியர்களை விசா தில்லுமுல்லு செய்ததாக இன்ஃபோசிஸ் குற்றஞ்சாட்டப்பட்டு அதன் மீது அபராதம் விதித்தார்கள். வெளிநாடுகளில் வேலைக்காரர்கள் வைத்திருந்தார்கள் நிதிச்சுமையை கூட்டினார்கள். இந்த மாதிரி நெருக்கடிகளை கூகிள், மைக்ரோசாஃப்ட் போன்ற தொழில்நுட்ப ஜாம்பவான்கள் எதிர்த்தார்கள்.

இன்னொரு முறை பதவிக்கு வந்தால் ‘அமெரிக்கா அமெரிக்கருக்கே’ என்னும் சுதேசிக் கொள்கையை இன்னும் தீவிரமாக ஒபாமா அமலாக்குவார். மிட் ராம்னி தாராள சிந்தனை கொண்டவர். உலகெங்கும் வேலை வாய்ப்பு பெருகினாலும், அமெரிக்கா சுபிட்சமாகும் என்று நம்புபவர். மேலும், வர்த்தக பின்னணியில் இருந்து வருவதால், இந்த மாதிரி சின்ன விஷயங்களில் ஆர்வம் காட்டாமல், பெரிய பிரச்சினைகளில் கவனம் தருவார்.

சரி… யார் ஜெயிப்பார்கள்?

சென்ற முறை ஒபாமா வென்றதற்கு மிக முக்கிய காரணம், அவரின் பணம் திரட்டும் லாவகம். நின்றால் ஆயிரம் டாலர், பேசினால் லட்சம் டாலர் என்று கறந்து, அதை விளம்பரங்களிலும் வாக்கு சேகரிப்பிலும் செலவழித்து ஜெயித்தார்.

இந்த முறை அவ்ரின் எதிரி மிட் ராம்னியோ கோடானு கோடிக்கு சொந்தக்காரர். தன்னுடைய கைக்காசு, அவருடைய கோடீஸ்வர நண்பர்களின் மறைமுக காணிக்கை மூலமாக பராக் ஒபாமாவை விட பத்து மடங்கு முதல் போட்டு தலைவலியாக போட்டியிடுகிறார்.

எனினும், பணம் மட்டுமே வாக்குப்பெட்டிகளை நிரப்புமா என்ன!

பதிவு? வாசிப்பு? முதலீடு?

கல்வியா? செல்வமா? வீரமா? என்பது போல், செலவு அதிகமாகுமா? நேரம் குறைவாக்க வேண்டுமா? தரம் உயர வேண்டுமா? எனக் கேட்கும் முக்கோணம்


இலவசமாக போடப்படும் பதிவுகளா? சிறு பத்திரிகை எழுத்துகளா? இலவச வண்ணத் தொலைக்காட்சி மனப்பான்மையா?

Chicago Ramar Temple: Ram = Problems

ராமர்  கோவில் என்பதற்கு பிரச்சினை என்று அர்த்தம். கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்னும் பழமொழிக்கேற்ப, அமெரிக்காவில் ஒவ்வொரு நகரத்திலும் ஹிந்து மந்திர் இருக்கிறது. அங்கே நடக்கும் சண்டையில், பிரிந்து போய் இரண்டாவது கோவிலும் நிச்சயமாக இருக்கும்.

கத்ரு, வினதை கதை ஆகட்டும்; காந்தாரி x குந்தி ஆகட்டும். புராண காலத்தில் இருந்து போட்டிக்கு பிள்ளை பெறுவது இந்தியர் வழக்கம். வாஷிங்டன் டிசி நகரத்தில் ஒரே தெருவில் இரு ஆலயங்கள். சிகாகோவில் பத்து மைல் வட்டத்துக்குள் இரு ஆலயங்கள்.

அரோரா ஆலயம் திருப்பதி போல் என்றால் பக்கத்து ஊரான லெமாண்ட் ஆலயம் கொஞ்சம் வடக்கிந்திய பாணியில் ஹரே ராம் ஹரே கிருஷ்ணா கலந்த பத்ராசலம் இராமர்.

மூலஸ்தானத்தில் பளிங்கு கற்களும் இருக்கும்; கூடவே கருங்கற் சிலையும் இருக்கும்; பஞ்சலோக உற்சவரும் காணக்கிடைப்பார்.

இந்த நிலையில் திடீரென்று வடக்கு வழக்கத்திற்கு நாக் அவுட் கிடைத்திருக்கிறது.

போட்டி கோவிலிலேயே போட்டி. பலிபீடத்திற்கு யார் பலி என்றெல்லாம் தமிழ்ப் பேப்பர் தலைப்பு கொடுத்திருக்கும். ஆனால் அமெரிக்காவில் ஆங்கில நாளிதழ் மட்டுமே இதை கவனித்திருக்கிறது.

உள்ளூர்காரர்கள்தான் உள்விஷயங்களை சொல்ல வேண்டும்.

துவக்க காலத்தில் கோவிலை அமைத்தவர்களின் கருத்தை கவனத்தில் கொள்ள வேண்டுமா? தென்னிந்திய ஆகமவிதிப்படி மொழுமொழு சிலைகள் மூலஸ்தானத்தை ஆக்கிரமிக்கலாமா? தெலுங்கு வண்ணமான கருப்பு அல்லாத வெள்ளை வெளேர் சிலைகள் நீக்குவது தர்மமா என்றெல்லாம் கோர்ட்டில் வாதாடி இருப்பார்கள் என்று நம்புகிறேன்.

கோவில் பொக்கீடு கணக்கு: HTGC – Lemont – Chicago – Temple -IL – Financials – Annual Report 2009_new

Trade Policy & Financial Savings: Indian Economy

நன்றி: ஹிந்துஸ்தான் டைம்ஸ் :: இ-பேப்பர்

Real issues vs Personal nuisances

நண்பரிடமிருந்து வந்த மடல்:

ஏதாவது மக்கள் சம்பந்தப்பட்டதாக, அசல் தூலப் பிரச்சினைகளாக யோசிப்போமே?

இன்று நார்வேயில் பெரும் பனிப் பாளங்களின் அடியில் கட்டப்பட்ட ஒரு புதைகுழிப் பெட்டகத்தில் உலகத் தாவரங்களின் வித்துகளைச் சேமித்து வைத்திருப்பதைத் தொலைக் காட்சியில் காட்டினார்கள்.

‘Doomsday’ seed vault opens in Norway – CNN.com:
“# Ultimate safety net for the world’s seed collections has opened in Norway
# The vault received inaugural shipments of 100 million seeds
# Norwegian govt. built vault in glacial mountain between Norway and North Pole”

  • இத்தனை குளிரில் விதைகள் பல வருடம் வைக்கப்பட்டால் அவை உயிருள்ளவை என்றால் பின்னால் எப்படி மறுபடி உயிர்க்கும்?
  • இந்த வகை விதைப் பாதுகாப்பு முயற்சிகள் இந்தியாவில் உண்டா?
  • எங்கு, யார் கையில் உள்ளன அவை?

2. கள்ள நோட்டுகள் ஏராளமாக இந்தியாவில் புழங்குவதாகச் செய்திகள் வருகின்றன.

  • இவற்றால் இந்தியப் பொருளாதாரத்துக்கு என்ன ஆகும்?
  • இவை எந்த வகை மனிதரிடம் அதிகம் புழ்ங்குகின்றன?
  • அந்த வகை மனிதர் கையில் பொருளாதாரக் கட்டுப்பாடு போய்ச் சேர்ந்தால் நாடு என்ன ஆகும்?

Fake currency notes can destabilise our economy: “There was a small news item a few days ago about ink used in printing currency missing in transit. According to the report, a consignment of OVI intaglio ink was sent from the Swiss SICPA unit in Sikkim to the Reserve Bank Note Mudra unit in Mysore and about 5 kg ink was found to be missing on arrival.

Official estimates put the number of FICN in circulation at 61,000 million pieces of different denominations worth Rs 1,69,000 crore till the year 2000. In comparison, the actual seizures amounted to Rs 5.57 crore in 2002, Rs 5.29 crore in 2003 and Rs 6.81 crore in 2004.”

3. துவக்கப் பள்ளி:

  • நாட்டில் எத்தனை துவக்கப் பள்ளிகள் உண்டு?
  • அவற்றில் எத்தனை மிலியன் குழந்தைகள் படிக்கிறார்கள்?
  • ஒவ்வொரு குடும்பமும் தாம் வாங்கும் புத்தகங்களை என்ன செய்கின்றன?
  • அவை கைமாற்றிக் கொடுக்கப்பட்டு மறு உபயோகிப்புக்கு வருகின்றனவா?
  • எத்தனை ஆசிரியர்கள் வருடா வருடம் தயாராகிறார்கள்?
  • அவர்களுக்குக் கொடுக்கப் படும் ஊதியத்தால் அரசுடைய நிதித் திட்டத்துக்கு எத்தனை பளு?

இப்படி எதார்த்தமான விஷயங்களைப் பற்றி அதிகமாகவும், பண்பாட்டு அவலங்களைப் பற்றிக் குறைவாகவும் யோசித்தால் பதிவின் தாக்கம் அதிகமாக இருக்கும்.

இறுதியில் மனிதரின் தன்னியல்பு என்பது தலை தூக்கவே செய்கிறது.

வாலிபம் – வளப்பம் – வணிகம்

அமெரிக்காவின் புதிய தலைமுறைபணக்காரரின் அலுப்பு :: The Phoenix > Lifestyle Features > Living beyond their means?: “The go-go ’80s have receded into the oh-no aughties, but not everyone has gotten the memo.”

ஏற்றிவிடுவதில் அமெரிக்காவின் கெட்டிக்காரத்திற்கு நிகர் கிடையாது. இந்தியாவில் காதலில் மட்டுமே ஊக்க வார்த்தை கொண்டு நிரப்பும் நண்பர் உலகம் என்றால், இங்கே பள்ளியில் துவங்கி பெற்றோர் வரை எல்லோருமே ‘உன்னால் முடியும் தம்பி’ உதயமூர்த்திகள். இப்படி உசுப்பேற்றியே உருப்படாமல் போனதின் குணச்சித்திரமாக Seinfeld தொடரின் ஜார்ஜ் பாத்திரம், நடப்பு ஆண்டில் பட்டதாரியானவரின் முன்னோடியாக காணப்படுகிறார்.

இந்த வருடம் கல்லூரியை முடித்தவர் என்ன செய்கிறார்?

  • ஃப்ளிக்கரில் புகைப்படம் ஏற்றி, ட்விட்டரில் இருக்கும் இடத்தை சொல்லி, நாளொன்றுக்கு எட்டு டாலர் பொக்கீடில் உலகம் சுற்றக் கிளம்புகிறார்.
  • இன்னும் கொஞ்சம் கடன் வாங்கி, மேற்படிப்புக்கு சென்று விடுகிறார்.
  • முதலீட்டு தேவதைகளின் துணை கொண்டு, சொந்தமாக வெப் 3.0 நிறுவனம் துவங்குகிறார்.
  • அப்பாவின் கோடை வாசஸ்தலத்தில் ஆறு மாசம்; அம்மாவின் இரண்டாவது விவாகரத்தில் கிடைத்த ஐரோப்பிய வீட்டில் ஆறு மாசம் தங்க ஆரம்பிக்கிறார்.
  • மருத்துவத்துறையில் நர்ஸ், உள்நாட்டு பாதுகாப்பு, ஆசிரியப் பயிற்சி என்றெல்லாம் சீக்கிரமே அலுக்கும் வேலையைப் புறக்கணித்து, சிரம பரிகாரம் எடுக்கிறார்.

மேற்கத்திய உலகில் வேலை எப்போதுமே அவசியமாக ஒன்றாக இருந்ததில்லை. சமூக அந்தஸ்து செய்யும் தொழிலினால் நிர்ணயிக்கப்படுவதில்லை. பொருளாதார அந்தஸ்து என்பது ரஜினி படம் மாதிரி – சில சமயம் அமோகமாக சோபிக்கும்; சில சமயம் பாபா ஆகி விடும்.

இந்தியாவிலும் இந்தத் தலைமுறையினரின் எண்ணம் இவ்வாறே உள்ளது. “என் அண்ணனைப் போல் எனக்கு குழந்தை, குட்டி கிடையாது. அப்பாவை போல் பிடிக்காத வேலை செய்யப் போவதில்லை. வாலிபம் இருக்கும்போதே வளப்பமாக இல்லாவிட்டாலும், ஆடிப் பாடி கொண்டாடுவோம்” என்னும் நிகழ்காலத்தைக் கொண்டாடுபவர்கள்.

எனக்குக் கிடைக்கும் ஊழியத்தை விட, மாதா மாதம் சம்பளம் தரும் சம்பாத்தியத்தை விட, நான் விரும்பி செய்ய நினைப்பதை — அன்றாடம் பணியாக அமைவதே லட்சியம் என்கிறார்கள்.

நாலு நாள் குண்டி காஞ்சா பவுசும் பராக்கிரமும் தெரியவரும்.

வறுமையின் நிறம் சிகப்பு நிஜ வாழ்க்கையின் பகிடி :: iowahawk: Hot New Trend: Carefree Hipsters Go For Funemployment, Starve-cation: Jobless jitters? Not for these young folks, who are embracing idleness and finding fulfillment in local Del Taco dumpsters.

தொடர்புள்ள முந்தைய பதிவு: வேலையில்லாதவன்தான்! வேலை தெரிஞ்சவன்தான்?

வைணவத் தத்துவத்தில் கேபிடலிசமும் கம்யூனிசமும்

உயிகளின் பகுப்பு: வைணவ மரபும் மெய்ப்பொருளியலும்: கம்பன் காட்டும் வைணவப் பேருலகம்

உயிகளின் பகுப்பு: வைணவ மரபும் மெய்ப்பொருளியலும்: கம்பன் காட்டும் வைணவப் பேருலகம்

  • வீடு பேறு பெற்றோர் – முக்தர்: நித்தியர்
  • ஒரு பொழுதும் தளைக்குட்படாத நிலையானவர்
  • தளைக்குட்பட்டோர்  – பக்தர்கள்
    • புனித நூல்களால் வழிநடத்தப்படாதவை: பயிரினங்களும் விலங்கினங்களும்
    • புனித நூல்களால் வழிநடத்தப்படுவோர்: மனிதர்கள் & கடவுள்
      • உலகப்பயன்களை நுகர விழைவோர்: புபுட்சு
        • நன்மையை நாடுவோர்: தர்மபரர்
        • பொருள், இன்பம் விழைவோர்: அர்த்தகாமர்
          • »பல கடவுளைச் சார்ந்து நிற்போர்: வேதாந்த பரர்
          • »ஒரே கடவுளைச் சார்ந்து நிற்போர்:: பகவர் பரர்
            • துன்புறுவோர்: அர்த்தர்
            • அறிவு விழைவோர்: சிக்ஞாசர்
            • பொருளை நாடுவோர்: அர்த்தார்த்தி
      • வீடுபேறடைய விரும்புவோர்:  முமுட்சு
        • தன்னை தூய நிலையில் உணர விழைவோர்: கைவல்யபரர்
        • இறைவனுடன் கூடியிருக்க விழைவோர்: மோட்சபரர்
          • »அன்புவழிப்பட்டோர்: பக்தர்கள்
            • அன்பினை வழியாக ஏற்றோர்: சாதனை பக்தர்
            • அன்பினை முடிவாகக் கொண்டோர்: சாத்திய பக்தர்
          • »புகல்வழிப்பட்டோர்: பிரபன்னர்கள்
            • அறிவு அன்பு மட்டுமே இறைவனிடமிருந்து பெற விழைவோர்: பரமை கரந்திகள்
            • உறுதிப் பொருளை இறைவனிடமிருந்தே பெற விழைவோர்: ஏகாந்திகள்
              • முன்வினைப்பயன் நுகர்வின் முடிவில் இறைவனுடன் கூடியிருக்க விழைவோர்: திருப்தர்
              • புகலுறுதி மேற்கொண்டவுடன் இறைவனுடன் கூடியிருக்க விழைவோர்: ஆர்த்தர்

பணம் பூத்தும் செய்யும்

Adade-Mathy-Dinamani-Money-Politics-Poll-Percentages-Voters-Cash