Tag Archives: China

உன் ஐடியாவை சீனா தான் நனவாக்கும்

இன்றைக்கு நாள்காட்டி தத்துவமாக ‘செத்த எறும்பை நீ சர்க்கரையில் தான் பார்ப்பாய்’ போட்டு இருந்தார்கள். இதற்கு முன்பு கேட்டிராத பழமொழி.

முதல் அர்த்தமாக, எனக்கு வேண்டியதை எடுத்துக் கொண்டு இடத்தை காலி செய்தால் பிழைக்கலாம். சாரி சாரியாக செல்லும் எறும்புக் கூட்டம். இந்த மொழியின் படி தனித்து நின்றால் சாகும். அனைத்து பெண் நடிகைகளும் தமிழ் கலாச்சாரப்படி நடிக்கும் போது குஷ்பு மாதிரி கற்பு கருத்தோ, த்ரிஷா மாதிரி குடி கருத்தோ சொன்னால் கல்லடி படுவார்கள்.

இரண்டாவது பொருளாக, கறுப்பு நிறமான எறும்பை வெள்ளை நிறத் துகள் நிறைந்த சர்க்கரையில் எளிதில் பார்க்கலாம். எல்லோரும் செக்கு மாடு வாழ்க்கையில் ஓட, ஒருவர் மட்டும் எதிர் திசையில் வித்தியாசமாக யோசித்தால் ஒன்று நிம்மதியாக வாழலாம்; அல்லது மொத்தமாக இறக்கலாம். தப்பித்துச் செல்ல முடியாது.

கடைசி அர்த்தமாக, தமிழகத்தில் எப்பொழுதுமே குளிர் காலம் கடுமையாக இருந்ததில்லை என்று அந்தக் காலத்தில் நிலவிய தட்ப வெட்ப சீதோஷ்ண நிலையை அறியலாம்.

‘Breaking India: Western Interventions in Dravidian and Dalit Faultlines’ by Rajiv Malhotra and Aravindan Neelakandan

The book focuses on role of US and European churches, academics, government and human rights groups in fostering separation of the identities of Dravidian and Dalit communities from the rest on India.

Publisher: Amaryllis.
Pages: 640.
Price: 695 INR

Rajiv Malhotra
His Infinity Foundation, seeks to foster a better global understanding of Indian civilization. Rajiv’s work argues that the dharma offers a complex and open framework for a genuine dialogue among diverse peoples, rather then a zero sum game. He shows the limitations of globalization when it is a parochial imposition of Western paradigms. He is well known as a speaker and writer for a wide audience and is frequently interviewed and invited to deliver keynote addresses. He serves on the Board of Governors of the India Studies program at the University of Massachusetts, and served as a Chairman for the Asian Studies Education Committee of the State of New Jersey.

Aravindan Neelakandan
Aravindan Neelakandan has worked for the past decade with an NGO in Tamil Nadu serving marginalized rural communities in sustainable agriculture. He was awarded a junior research fellowship in cultural economics by the India’s Ministry of Tourism to research the economic potentials of the neglected ruins in Kanyakumari district, in southern Tamil Nadu. These experiences provided him with in-depth knowledge of the history and sociology of Tamil people. He is also a popular science writer in Tamil and a columnist with UPI-Asia, a leading news portal.

1. எஸ் குருமூர்த்தி, துக்ளக் சோ ராமசாமி, தயானந்த சரஸ்வதி பேசியதை ‘தி ஹிந்து’ தொகுக்கிறது.

2. புத்தக வெளியீட்டு நிகழ்வில் அரவிந்தன் உரை – இங்கே

3. புத்தகத்தின் வலையகம்

4. ராஜீவ் மெஹ்ரோத்ராவின் வலைப்பதிவு

5. 6 Provocations In “Breaking India”

  1. Dravidian Identity Constructed, Exploited & Politicized
  2. Linking Of Dravidian & Dalit Identities
  3. Foreign Nexus Exploits India’s Faultiness
  4. Religion’s Role in the Competition for Soft Power
  5. Interrogating the Term “Minority”
  6. Controlling the Discourse on India

6. Rajiv Malhotra along with Aravindan Neelakandan is going to discuss “Breaking India: Western Interventions in Dravidian and Dalit Faultlines” in New Delhi on Feb 9 at 4:30 pm, on the occassion of the launch of their book by the same name. The venue is Vivekananda International Foundation, 3, San Martin Marg, Chanakya Puri. Web: http://www.vifindia.org

Book launch and keynote address are by Ram Jethmalani. Speakers include B Raman (Director, Institute for Topical Studies), S. Gurumurthi, Vice Admiral (Retd) Raman Puri, and Upendra Baxi (Emeritus Professor of Law, University of Warwick).

7. தமிழ் ஹிந்து அறிவிப்பு

நூல் பற்றிய அறிமுகம்:

இந்தியாவின் ஒருமைப்பாடும் இறையாண்மையும் உலகளாவிய மூன்று பெரும் பகாசுர சக்திகளால் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளன –

  1. அ) பாகிஸ்தானை மையமாகக் கொண்டு இயங்கும் இஸ்லாமிய பயங்கரவாதம்
  2. ஆ) சீனாவை மையமாகக் கொண்டு இயங்கும் மாவோயிஸ்டுகள் மற்றும் இதர மார்க்சிய அமைப்புகள்
  3. இ) மேற்கத்திய நாடுகளால் மனித உரிமை என்ற பெயரில் ஊட்டி வளர்க்கப் படும் திராவிட, தலித் பிரிவினைவாதம்.

இவற்றில் மூன்றாவதைப் பற்றி விரிவான ஆய்வுகளையும், அலசல்களையும் உள்ளடக்கியது இந்த நூல்.

அமெரிக்க, ஐரோப்பிய கிறிஸ்தவ நிறுவனங்களின் பணபலத்துடன் இந்தியாவுக்குள் திராவிட, தலித் பிரிவினைவாதத்தை வளர்க்கக் களமிறக்கப் படும்

  • மனித உரிமை அமைப்புகள்
  • கல்வியாளர்கள்
  • சிந்தனை வட்டங்கள்
  • மத அமைப்புகள்

ஆகியவை நிழலுருவில் செயல்படும் விதம் குறித்து விரிவான ஆய்வுகளை இந்த நூல் அளிக்கிறது. ஆரிய திராவிட இனவாதம் உருவான வரலாறு, புனித தாமஸ் பற்றிய கட்டுக் கதையை மையமாக வைத்து உருவாக்கப் படும் “திராவிட கிறிஸ்தவம்”, தென்னிந்திய வரலாற்றை உள்நோக்கங்களுடன் திரிக்கும் முயற்சிகள் ஆகியவை பற்றியும் இந்த நூல் விரிவாகப் பேசுகிறது.

நூலாசிரியர்கள் இது பற்றி கடந்த ஐந்து ஆண்டு காலமாக தீவிர ஆய்வுகள் மேற்கொண்டனர். அந்த ஆய்வுகளின் தொகுப்பாக இந்த நூல் வெளிவருகிறது.

போதையில் அமிழும் சீனாவும் வேலையில்லா திண்டாட்டம் நிறை கியூபாவும்

1. Self-immolation as protest

உடன்கட்டை ஏறின ‘சதி’ காலம் முதல் தீக்குளிப்பது இந்திய கலாச்சாரம். ஈழத் தமிழருக்காக முத்துக்குமாரின் அர்ப்பணிப்பு வீணாகியது. ஆனால், டுனீசியாவில் ஜனாதிபதி போய், பிரதம மந்திரி ஆட்சி பிடித்துள்ளார்.

இந்தக் கட்டுரை ஹங்கேரி, தென் கொரியா, ஜப்பான் நாடுகளிலும் நடக்கும் தீக்குளிப்பை கேள்வி கேட்கிறது. நியாயமான கோரிக்கைக்காக தற்கொலை செய்து கொள்வது அறமா?


2. Cuba Issues Thousands Of Self-Employment Licenses

தமிழ்நாட்டில் ஆட்சி மாறி அதிமுக அரியணை ஏறினால், அரசு ஊழியருக்கு கெடுபிடி அதிகமாகும். ஆனால், காஸ்ட்ரோ ஆட்சி மாறாவிட்டாலும் கியூபாவில் ஐந்து லட்சம் அரசு ஊழியர்களை வேலைநீக்கம் செய்கிறது சோஷலிஸம்.

கவர்ன்மென்ட் பணிநீக்கத்தை ஈடுகட்டுவதற்காக 75,000 புதிய தொழில் முனைவர்களுக்கான உரிமங்களைக் கொடுக்கிறது கம்யூனிச க்யூபா. ஏற்கனவே, கள்ளச்சந்தையில் அதிகாரபூர்வமற்று செயல்பட்டவருக்கே, அத்தனை லைசன்சும் சென்று விட்டது. அதனால், அரசுக்கு வரி கட்டவேண்டும் என்பது தவிர, புதிதாய் பிசினஸ் முளைக்காது.

திடீரென்று பத்து சதவிகித பாட்டாளிகள் ரோடுக்கு அனுப்பப்பட்டால் என்னவித விளைவுகள் நேரும்?


3. Trash hotel

குப்பையை வைத்து உருவாக்கிய பொருட்களை ‘பாய்ஸ்’ படப் பாடல் ‘பூம் பூம்’ போல் உதவாக்கரை விஷயங்களை வகித்தே உருவான ஹோட்டல்.


4. Cameroon battles brain drain

80களில் படித்த இந்தியாவின் பெருங்கவலைகளில், ‘ப்ரெயின் ட்ரெயின்’ முக்கிய இடம் பிடித்தது. இன்று அமெரிக்காவே அவுட்சோர்சிங் பேதியும் கணினி ஏற்றுமதி பீதியிலும் அல்லலுறுகிறது. ஆனால், கேமரூனின் பதினைந்து சாலர் சம்பளத்தை விட்டுவிட்டு, மருத்துவர் கப்பலேறிப் போய்விடுகிறார்களாம்.


5. Drug use growing in China

வளர்ந்த நாட்டுக்கான அறிகுறி என்ன?
அ) 1.76 லட்சம் கோடி ஊழல்
ஆ) போதை ஏற்றுமதி பிரச்சினையை விட இறக்குமதி விசுவரூபம் எடுப்பது
இ) அமைதிக்கான நோபல் பரிசு பெறுவதை விரும்பாதது


6. A 2000-year-old business

நாடி ஜோசியம், ஏடு பார்த்தல் வரிசையில் தாயாதி முறை, செட்டியார் ஒன்பது வீடு தொடர்ச்சியாக தங்களின் 72 குடும்பத்தினரின் கிளைகளை யேசு கிறிஸ்து பிறந்த காலத்தில் இருந்து பாதுகாத்து, மெயின்டெயின் செய்து வருபவர்களின் கதையை சொன்னார்கள்.


Top Polluting Cities in India: Environment & Global Warming: Carbon footprint with Gold

நன்றி: ஹிந்துஸ்தான் டைம்ஸ் :: இ-பேப்பர்

Real issues vs Personal nuisances

நண்பரிடமிருந்து வந்த மடல்:

ஏதாவது மக்கள் சம்பந்தப்பட்டதாக, அசல் தூலப் பிரச்சினைகளாக யோசிப்போமே?

இன்று நார்வேயில் பெரும் பனிப் பாளங்களின் அடியில் கட்டப்பட்ட ஒரு புதைகுழிப் பெட்டகத்தில் உலகத் தாவரங்களின் வித்துகளைச் சேமித்து வைத்திருப்பதைத் தொலைக் காட்சியில் காட்டினார்கள்.

‘Doomsday’ seed vault opens in Norway – CNN.com:
“# Ultimate safety net for the world’s seed collections has opened in Norway
# The vault received inaugural shipments of 100 million seeds
# Norwegian govt. built vault in glacial mountain between Norway and North Pole”

  • இத்தனை குளிரில் விதைகள் பல வருடம் வைக்கப்பட்டால் அவை உயிருள்ளவை என்றால் பின்னால் எப்படி மறுபடி உயிர்க்கும்?
  • இந்த வகை விதைப் பாதுகாப்பு முயற்சிகள் இந்தியாவில் உண்டா?
  • எங்கு, யார் கையில் உள்ளன அவை?

2. கள்ள நோட்டுகள் ஏராளமாக இந்தியாவில் புழங்குவதாகச் செய்திகள் வருகின்றன.

  • இவற்றால் இந்தியப் பொருளாதாரத்துக்கு என்ன ஆகும்?
  • இவை எந்த வகை மனிதரிடம் அதிகம் புழ்ங்குகின்றன?
  • அந்த வகை மனிதர் கையில் பொருளாதாரக் கட்டுப்பாடு போய்ச் சேர்ந்தால் நாடு என்ன ஆகும்?

Fake currency notes can destabilise our economy: “There was a small news item a few days ago about ink used in printing currency missing in transit. According to the report, a consignment of OVI intaglio ink was sent from the Swiss SICPA unit in Sikkim to the Reserve Bank Note Mudra unit in Mysore and about 5 kg ink was found to be missing on arrival.

Official estimates put the number of FICN in circulation at 61,000 million pieces of different denominations worth Rs 1,69,000 crore till the year 2000. In comparison, the actual seizures amounted to Rs 5.57 crore in 2002, Rs 5.29 crore in 2003 and Rs 6.81 crore in 2004.”

3. துவக்கப் பள்ளி:

  • நாட்டில் எத்தனை துவக்கப் பள்ளிகள் உண்டு?
  • அவற்றில் எத்தனை மிலியன் குழந்தைகள் படிக்கிறார்கள்?
  • ஒவ்வொரு குடும்பமும் தாம் வாங்கும் புத்தகங்களை என்ன செய்கின்றன?
  • அவை கைமாற்றிக் கொடுக்கப்பட்டு மறு உபயோகிப்புக்கு வருகின்றனவா?
  • எத்தனை ஆசிரியர்கள் வருடா வருடம் தயாராகிறார்கள்?
  • அவர்களுக்குக் கொடுக்கப் படும் ஊதியத்தால் அரசுடைய நிதித் திட்டத்துக்கு எத்தனை பளு?

இப்படி எதார்த்தமான விஷயங்களைப் பற்றி அதிகமாகவும், பண்பாட்டு அவலங்களைப் பற்றிக் குறைவாகவும் யோசித்தால் பதிவின் தாக்கம் அதிகமாக இருக்கும்.

இறுதியில் மனிதரின் தன்னியல்பு என்பது தலை தூக்கவே செய்கிறது.

ஒபாமா: ‘இந்தியா போக்கிரி நாடு’?

ஜார்ஜ் புஷ் பதவி விலகிய பிறகு இந்தியாவின் மவுசு குறைந்து போய் விட்டதாக வாஷிங்டன் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.

நியு யார்க் டைம்ஸ் பத்தி எழுத்தாளர்கள் துவங்கி டெமொக்ரட்ஸ் கருத்தாக்கத்தை தலையங்கம் தீட்டுபவர் பலரும் இந்தியாவின் செல்வாக்கை குறைத்து, மண்டையில் தட்டி மிரட்ட வேண்டிய அவசியத்தை எடுத்து வைக்கிறார்கள்.

    1. அணு ஆயுதம் வைத்திருக்கும் நாடெல்லாம் நம்ம நாடாக இருக்கவேண்டும். பாகிஸ்தான் என்ன? இந்தியா என்ன? இரண்டும் ஒரே வைரஸ் புகுந்த கணினி மாதிரி அச்சுறுத்தல் தருபவை.
    2. பாகிஸ்தான் தலைவர்கள் மதவெறி பிடித்தவர்கள் அல்ல! அதனால் தாலிபான் + அல் க்வெய்தா பக்கம் வேண்டுமென்றே சாய்பவர்கள் கிடையாது. பாகிஸ்தானுக்கு இந்திய வெறுப்பு உள்ளது. இருந்துட்டுப் போகட்டுமே.
    3. காஷ்மீர் பிரச்சினையை இந்தியா தீர்க்க நினைத்தால் சுபமஸ்து போடலாம். ஆனால், என்றாவது அமெரிக்கா சொல்வதை செவிமடுத்து ஒரு வார்த்தையாவது கேட்கிறார்களா? திபெத்துக்கு சுண்ணாம்பு; காஷ்மீருக்கு வெண்ணெய்யா?
    4. அமெரிக்காவிற்கு பணம் வேண்டுமானால் ஆபத்பாந்தவராக அள்ளிக் கொடுக்கும் சீனாவை திருப்தி செய்யவேண்டும். தற்போதைய நிதி நெருக்கடி நிலையில் அச்சிடும் கடன் பத்திரத்தை வாங்கும் சைனா சொற்படி கேட்கவேண்டும்.
    5. சுதந்திர நாட்டோடு நட்பு வைத்திருப்பதை விட அதிகாரத்தைப் பிடிக்குள் வைத்திருக்கும் தலைவர்களுடன் உறவாடுவதே ஸ்திரத்தன்மைக்கு வழிகோலுகிறது. குடியாட்சியை விட மன்னராட்சியும் கொடுங்கோல் அரசுகளுமே உத்தமம்.
    6. இந்தியாவிற்கு அவுட்சோர்சிங்  செய்தோம். கால் சென்டர்களை அனுப்பினோம். பதிலுக்கு என்ன கிடைத்தது? சீனாவிற்கும்தான் தொழிற்பேட்டைகளை ஏற்றுமதி ஆக்கினோம். எவ்வளவு முதலீடு கிடைக்கிறது? சீனா சொன்னால் வட கொரியா தலையாட்டுகிறது. பாகிஸ்தான் பயங்கரவாதம் கூட பயப்படுகிறது. இந்தியாவினால் உள்ளூர் மும்பையைக் கூட காப்பாற்ற வக்கில்லை.
    7. வல்லரசாக வேண்டுமானால், நல்லரசாக நடிக்கவாது தெரியவேண்டும். மனித உரிமை துஷ்பிரயோகத்தில் முன்னிலை வகித்து, பர்மா, இலங்கை, சுடான் என்று நசுக்கல் நாடுகளை அரணாகக் கட்டிக் காக்கும் இந்தியாவை கண்டித்து Non aligned Movement என்னும் கண்ணெரிச்சல் இயக்கத்தை முடக்க வேண்டும்.
    8. வாக்கு கொடுத்தால் காப்பாற்றத் தெரியணும். 123 அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் இன்று கையெழுத்திடுவது; நாளை இடதுசாரி ஆதரவு கிடைக்கவில்லை என்று பேரம் பேசுவது. நிலையான உறுதி கிடைக்காத இடத்தில் என்ன பேச்சுவார்த்தை வேண்டிக் கிடக்கு?
    9. Nuclear Non-Proliferation Treaty (NPT) ஆகட்டும்; தோஹா ஆகட்டும்; சுற்றுச்சூழல் வர்த்தகம் ஆகட்டும். ஆளுங்கட்சி மாறினாலும் இம்மி கூட விட்டுக் கொடுக்காத முரண்டுக் குழந்தை நிலைப்பாடு.
    10. இந்தியாவை எப்பொழுது வேண்டுமானாலும் தூண்டில் போட்டு இழுக்கலாம். எதிரிகளை மிக அருகில் நெருக்கமாக வைப்பதுதான் இன்றைய உடனடி தேவை.


      அமெரிக்காவால்/அமெரிக்காவினால்/அமெரிக்காவில் ஏவியன் ஃப்ளூ?

      அதிகாரபூர்வ அமெரிக்கா செய்தி:

      Feds apologize but insist birds had to be poisoned – NJ.com: Hundreds of birds that dropped dead on Somerset County cars, porches and snow-covered lawns, alarming residents over the weekend, were all of a rather foul breed of fowl — the notorious European starling, which the United States Department of Agriculture killed on purpose.

      Everything from Avian influenza to West Nile disease, both bird-killing ailments that also affect humans, was feared. But no humans or pets were ever at risk, said the USDA, contending the pesticide, known as DRC-1339, is inert once it is eaten by the birds and becomes metabolized.


      கனடா செய்தி: 60,000 B.C. turkeys culled in avian flu outbreak:

      “The mass destruction of thousands of turkeys on a farm near Abbotsford, B.C., began Monday after the Canadian Food Inspection Agency (CFIA) confirmed a positive test result for avian flu over the weekend.

      ‘Today the Canadian Food Inspection Agency has started the humane destruction of approximately 60,000 birds on the infected premises in British Columbia where H5 avian influenza has been confirmed,’ said Sandra Stephens, a CFIA disease control specialist.”


      இந்தியா செய்தி:

      பறவைக் காய்ச்சல்: கோழிகள் அழிப்பு தொடர்கிறது: இரு கிராமங்களிலும் நேற்று 2ஆவது நாளாக சுமார் 7 ஆயிரம் கோழிகள் அழிக்கப்பட்டதாகவும், மால்டாவில் 600 கோழிகள் பறவைக்காய்ச்சலாம் உயிரிழந்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

      45 ஆயிரம் கோழிகளை அழிப்பதற்கு கூடுதல் காலம் தேவைப்படுதால், 32 குழுக்களாக பிரிந்து அழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.


      அமெரிக்காவில் என்ன நடக்கிறது?

      சீனாவில் பறவைக்காய்ச்சல் என்று நிருபணம் ஆன பின், நியு ஜெர்சியில் விஷம் கலந்த மாத்திரைகளை கொடுத்து பறவைகளை கொல்ல சொல்லி உத்தரவு.

      நியுஜெர்சி வீடுகளில் பறவைகளாக செத்து விழுந்திருக்கிறது. ஒரு சில வீட்டு கூரைகளில் நாற்பதுக்கும் மேலாக கொத்தாக பொத்தென்று மரணம் எய்திருக்கின்றன. அவற்றை அகற்றுவது வீட்டு சொந்தக்காரரின் கடமை எனவும் சொல்லப்பட்டுவிட்டது.

      நியு ஜெர்ஸி நாளிதழில் செய்தி வந்திருக்கிறது. ஆனால், இதுகுறித்து எதுவும் எழுதக்கூடாது சொல்லவும் கூடாது என்று கட்டளை இட்டது போல் இராட்சச விநியோக இதழ்களில் கப்சிப்.

      அதிக பறவைத்தொகை, அதனால் கொன்று விட்டோம் என்பது மேல் துடைப்பு.

      அப்படி இருந்தால் வழக்கம் போல வேட்டைக்கு அனுமதி தந்திருப்பார்கள். இதே போல் பொது நலத்துறை மூலமாக ஒரு முறை வாத்து முட்டைக்குள் விஷம் ஊசி மூல நிரப்பினார்கள்.

      இதன் தொடர்பாக ஆப்கானிஸ்தானில் சிலர் பரிசோதித்துக் கொண்டிருக்கும் போது பாதிக்கப்பட்டு பிளேக்கால் இறந்தனர். இதை உளவுத்துறை மிக இரகசியமாக வைத்திருக்கிறது. ஆக ஸ்ட்ரெயின் தயார்.


      தொடர்புள்ள சில செய்திக் குறிப்பு:

      1. AFP: Japan suspends imports of French foie gras, poultry

      2. Bird flu strikes Cooch Behar – Kolkata – Cities – The Times of India: After Malda and Darjeeling, bird flu has now spread to Cooch Behar.

      3. The Ecologist – 10 things you didn’t know about bird flu: The biblical concept of ‘dominion over the fish of the sea and over the birds of heaven; and every living thing that moved upon the earth’ has populated a veritable Pandora’s box full of humankind’s greatest killers. Scourges such as smallpox and measles, which have claimed hundreds of millions of lives in recent centuries, were birthed in the barnyard about 10,000 years ago.

      Smallpox likely came from camelpox and measles from the rinderpest virus of cattle. Before the domestication of ducks, there was likely no such thing as the human flu or influenza pandemics. Domesticated pigs probably gave us whooping cough, and water buffalo, leprosy. Horses likely gave us the common cold.

      பாஸ்போர்ட் – சீனப் புரட்சி

      உரிமைதுறப்பு: நான் சீனா சென்றதில்லை. சீனாவில் என்னுடன் கல்லூரியில் படித்த இரு நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்களிடம் இந்தக் கட்டுரையைக் காட்டியபோது, கருத்து சொன்னால் தலை கொய்யப்படும் என்று சொல்லி, மாற்றங்களைப் பரிந்துரைக்க மறுத்துவிட்டார்கள். எனவே, இந்த செய்திக் கோர்வை முழுக்க முழுக்க ஊடகத் தகவலை அடிப்படையாகக் கொண்டது.

      அடக்குமுறையைத் தவிர வேறொன்றையும் அறிந்திருக்கவில்லை சீனா. வெகுண்டு எழுந்து சீனர்கள் போராட ஆரம்பிக்கும் ஒவ்வொரு சமயமும் அவர்கள் மிருகத்தனமாக ஒடுக்கப்பட்டனர். ஆண்டான் அடிமை மனோபாவம் தகர்த்தெறியப்படவேண்டும். உழைக்கும் மக்களின் ஆட்சி அமையவேண்டும்.

      சீனா ஒரு குடியரசாக மலர வேண்டும்.

      புத்தக அறிமுகத்தில் இருந்து.

      தொடர்பான சமீபத்திய செய்தி இரண்டு

      1. மக்கள் எழுச்சி, வேலையில்லாத் திண்டாட்டம், சோசலிசம்

      China warned to expect greater public unrest as job prospects worsen – Times
      Online
      :

      முதற்கண் சீனப் புத்தாண்டு வாழ்த்து.

      சீன அரசு வெளியீடு (The Outlook Magazine, published by the Government’s Xinhua news agency) புத்தாண்டு வாழ்த்து சொன்ன கையோடு வன்முறை கலந்த போராட்டங்கள் நிறைந்த வருடமாக அடுத்த வருடம் அமையும் என்றும் கணித்திருக்கிறது.

      புதிதாக பட்டம் பெறும் கோடிக்கணக்கான மாணவர்களும் ஏற்கனவே வேலையில்லாமல் இருக்கும் பத்து மில்லியன் கூலியாள்களும் கோபப்பட்டு இந்த எழுச்சி நிகழும் என்று அரசே ஒத்துக் கொண்டிருக்கிறது.

      சீன கம்யூனிசக் கட்சிக்கு இது மணி விழா ஆண்டு. வரும் அக்டோபர் ஒன்றாம் தேதி அறுபதாம் கல்யாணம் கட்டிக் கொள்ளும் தருணத்தில் ஒலிம்பிக்சின் போது செய்த மோடி மஸ்தான் வேலையை மீண்டும் அரங்கேற்றும் கணத்தில், இந்தப் போராட்டம் எழலாம்.

      சென்ற ஆண்டில் மட்டும் எண்பத்தி மூன்று லட்ச தொழிலாளர்களுக்கு வேலை பறிபோனதையும் அரசாங்க ஆய்வு குறிப்பிட்டிருக்கிறது.

      இதைப் போன்ற ஆயிரக்கணக்கான (அரசுக் கணக்குப் படி ஆயிரம் என்றால், பத்தாயிரம் எழுச்சிகளாவது இருக்கும்) கொடி தூக்கல்களை நசுக்கி எறிவது போல் இந்த உரிமைக்கோறலையும் துச்சமாக தூக்கி எறிய கபர்தார் போட்டிருப்பது வெட்ட வெளிச்சமாகி உள்ளது.


      2. கம்யூனிசமும் ஊழலும் – பிரிக்கமுடியாத இரத்த உறவு!

      *Corruption taints every facet of life in China – Los Angeles Times:

      லியாவ் (Liao Mengjun) பள்ளிக் கல்வியை முடித்து விட்டான். ‘ஸ்கூலில் இருந்து டிசி வாங்கப் போறேம்மா’ என்று சொல்லிவிட்டுக் கிளம்பியவனை பிணவறையில்தான் அடுத்துப் பார்ப்போம் என்பதை பெற்றோர் அறிந்திருக்கவில்லை.

      பதினைந்து வயது பாலகனின் நெற்றியைப் பிளந்திருந்தார்கள். வலது முட்டி எலும்புக்கூடாக காட்சியளித்தது. கைகள் இரன்டும் உடைந்து தனியாக இருந்தது.

      அனாதரவாக இருந்த கையிலிருந்த சுட்டு விரலை கோரமாக சிதைத்திருந்தார்கள்.

      எதையோ ஒப்புதல் வாக்குமூலம் செய்ய முயற்சித்திருக்கிறார்கள். யார்?

      அவனுடைய வாத்தியார்தான்.

      ஏன்?

      பள்ளிக்கூடங்களில் நடைபெறும் ஊழலையும் அநியாயமாகப் பறிக்கப்படும் பணத்தையும் கல்விச்சாலையில் பிடுங்கப்படும் முறைகேடான லஞ்சமும் காரணம்.

      சீனாவில் ஊழல் செய்து எவராவது பெருந்தலை மாட்டிக் கொண்டால் பேரளவிற்கு உடனடியாக தூக்கில் போட்டுவிடுவார்கள். அவரை விசாரித்தால், தாங்களும் மாட்டிக் கொண்டு விடுவோம் என்னும் அச்சம் முதல் காரணம். ஆக்சன் கிங் போல் செயலில் உத்வேகம் கொண்டிருப்பதாய் காட்டுவது இரண்டாம் காரணம்.

      ஆனால், சைனாவில் ஊழலும் லஞ்சமும் புரையோடி வளர்ந்து சர்வ அடுக்குகளிலும் வியாபித்து கோலோச்சி வருகிறது.

      இப்படி ஊழல் இராச்சியமாக இருப்பது அறிந்திருந்தால் சீன கம்யூனிசக் கட்சி என்ன செய்கிறது? தங்கள் நலனிற்கும் ஆட்சிக்கும் பங்கம் விளையாத வரை ‘நீ பிறரை எவ்வளவு அடித்தாலும் பிரச்சினை இல்லை’ என்று தாராள சிந்தனையோடு நீருற்றி வளர்த்து வருகிறது.

      சுதந்திரம் இருந்தால்தானே இதை காவல் நிலையத்திலோ, நீதிமன்றங்களிலோ, சட்டமன்றத்திலோ முறையிட முடியும்?

      சுதந்திரம் இருந்தால் பேச்சுரிமை பெற்று கொத்தடிமை முறையும் ஒழிந்துவிடுமே?

      எதுக்கு சுதந்திரம் தந்து, ஊழலை அம்பலமாக்கி, தங்கள் பதவியை, அதிகார போதையை, பணந்தரும் கல்பதருவை இழக்க வேண்டும் என்கிறது சீன கம்யூனிசம்.

      அவர்கள் நிலையில் நீங்கள் இருந்தாலும் இப்படித்தான் முடிவெடுப்பீர்கள்.

      சீனப் பொருளாதாரம் ஏழு ட்ரில்லியன் டாலர் மதிப்பு கொண்டது. இதில் ஒரு டிரிலியன் லஞ்ச வர்த்தகம்.

      ‘ஊழலை எல்லோரும் வெறுக்கிறார்கள். குறிப்பாக பொதுசனத்துக்கு கடுங்கோபம் வருது. அதற்கு காரணம் அவர்களுக்கு லஞ்சம் வராததுதான்!’ என்று கூலாக சொற்பொழிவாற்றுகிறார் இரயில்வே துறை மீது வழக்கு தொடுக்க முயற்சித்த ஜியாவ் (Qiao Zhanxiang).

      Foshan, or “Buddha Mountain” :: ஃபோஷான் (அ) புத்தமலை

      • குருவி படத்தில் கொத்தடிமையாக இருந்தது போல் உழைப்பாளிக் கூட்டம் இங்கே நிஜத்தில் நடத்தப்படுகிறது.
      • உடம்பு சரியில்லையா? அவசரமாக கவனிக்கணுமா? சோசலிச நாட்டில் பணம் அதிகம் கொடுத்தால் உடனடி மருத்துவ சேவை உத்தரவாதம்.
      • வண்டி ஓட்டத் தெரியாமல் உரிமம் வேண்டுமா? அப்படி ஓட்டிய வண்டு எவரையாவது கொன்றால் வழக்கு தள்ளுபடி ஆக வேண்டுமா? வெட்டுங்க பணத்தை!

      “போசான் மட்டுமல்ல; ஒட்டு மொத்த சீன அரிசிக்கு ஃபோசான் ஒரு பருக்கை பதம்,” என்கிறார் ரென் (Ren Jianming, vice director of the Clean Government Research Center at Beijing’s Qinghua University)

      திபெத் விடுதலை அடைய தலாய் லாமா எவ்வளவு லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று யாராவது சீன ஜனாதிபதியிடம் கேட்டு சொல்லுங்களேன்.

      ஜெயந்தி சங்கர்: புது புத்தகங்கள்

      mana-pirigai-novel-fiction-tamil-literature-jayanthi-shankar1. மனப்பிரிகை (நாவல்)

      அவனுக்கும் அவளுக்கும் ஒருவரையொருவர் பிடித்துப் போகிறது. ஆனால், இருவருமே ‘திருமணம்’ எனும் வாழ்நாள் கமிட்மெண்டுக்குத் தயாராகவில்லை என்று கருதுகிறார்கள்.

      அவ்வாறான வாழ்நாள் பந்தத்துக்கு ஒருவருக்கொருவர் சரியானவர் தானா என்று எப்படித்தான் தெரிந்து கொள்வது என்று யோசிக்கிறார்கள். ஒரு உடன்படிக்கைக்கும் வருகிறார்கள். என்ன உடன்படிக்கை? சந்தியாவும் கோபியும் சேர்ந்தார்களா? திருமணத்திலா? என்னதான் நடந்தது?

      நிறைய கிளைக்கதைகளுடன் சிங்கப்பூரில் நடக்கும் இந்தக்கதை புதிய மொழியிலும் வடிவிலும் சொல்லப்பட்டுள்ளது.

      பக்கம்- 275 :: சந்தியா பதிப்பகம்


      thirai-kadalodi-jeyanthy-sankar-books2. திரைகடலோடி (சிறுகதைகள்)

      ஆசிரியரின் ஐந்தாவது சிறுகதைத் தொகுதியான ‘திரைகடலோடி’யில் பத்து சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன.

      ரவி சுப்ரமணியம் எழுதியிருக்கும் முன்னுரையில் இருந்து: ‘இந்தக்கதைகளில் வரும் மனிதர்கள் நம் மனிதர்கள். இரண்டாயிரம் வருஷமாய் பொருள் தேடப் பிரிந்து செல்லும் மரபுடைய நம்மினத்தின் வாரிசுகள்.

      கதைகளைத் திறம்படச் சொல்வதில் தேர்ச்சி பெற்றிருக்கும் உள்ளடக்கத் தேர்வில் செலுத்தும் கவனம் அசாத்தியமானதாக இருக்கிறது. மொழியையும் உணர்வுகளையும் சம்பவங்களையும் சம்பாஷணைகளையும் ஊடுபாவாய் இவர் இணைக்கும் விதம், கதைக்குள் தென்படும் தற்காலத் தன்மை போன்றவை இவரைத் தனித்துக் காட்டுகிறது.’

      பக்கம் – 130 :: மதி நிலையம் வெளியீடு


      meen-kulam-chinese-shorts-children-jayanthy-sankar3. மீன் குளம்

      (சிறார் சீனக் கதைகள் – ஆங்கிலம் வழி)

      அரிசி வீதி, இந்த மருத்துவமனையில் பேய் இருக்கிறது, நீர்ச் சக்கரம், டிராகனின் முத்து, மீன் குளம், தவளையின் கால்கள் உள்ளிட்ட 33 சிறார்கதைகள் அடங்கிய இந்த நூல் சிறார்கள் படிக்கக்கூடிய எளிய மொழியில் ஆங்காங்கே கோட்டோவியங்களுடன் அழகிய வண்ண அட்டையில் அமைந்துள்ளது. சீனக்கலாசாரத்தில் சிறார்களுக்கு ருசியும் ஈடுபாடும் ஏற்படக்கூடிய சுவாரஸியம் நிறைந்த கதைகள்.

      பக்கம் – 160 :: மதி நிலையம் வெளியீடு

      இந்தியாவிற்கு அமெரிக்காவின் காஷ்மீர் தீர்வு? அகண்ட ஆஃப்கானிஸ்தானும் பங்கிடப்பட்ட பாகிஸ்தானும்

      தாலிபானுக்கு நிதி எங்கே இருந்து வருகிறது தெரியுமா? அமெரிக்காதான் ஒசாமாவையும் அல் கெயிதாவையும் ஆதரித்து வளர்த்துக் கொண்டிருக்கிறது.

      ஏன்?

      பாகிஸ்தான் இராணுவத்தை இவ்விதமாக திசைதிருப்பி, பாகிஸ்தானில் இருக்கும் அணு ஆயுதத்தைக் கைப்பற்றுவதற்காக இந்த மாதிரி ஏற்பாடு என்றார்கள்.

      Memo From Islamabad – Ringed by Foes, Pakistanis Fear the U.S., Too – News Analysis – NYTimes.com By JANE PERLEZ (NYT): There is an increasing belief among some Pakistanis that what the U.S. really wants is the breakup of Pakistan.

      A Controversial Imagining of Borders

      Graphic: A Controversial Imagining of Borders

      தொடர்புள்ள இடுகை:

      1. Its A Thin Line – The Lede – Breaking News – New York Times Blog

      2. ARMED FORCES JOURNAL – Blood borders – June 2006: “How a better Middle East would look”

      3. ARMED FORCES JOURNAL – A model for modern insurgency – August 2008: “Anbar, properly adapted, offers lessons for quelling Pakistan’s tribal regions”