உரிமைதுறப்பு: நான் சீனா சென்றதில்லை. சீனாவில் என்னுடன் கல்லூரியில் படித்த இரு நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்களிடம் இந்தக் கட்டுரையைக் காட்டியபோது, கருத்து சொன்னால் தலை கொய்யப்படும் என்று சொல்லி, மாற்றங்களைப் பரிந்துரைக்க மறுத்துவிட்டார்கள். எனவே, இந்த செய்திக் கோர்வை முழுக்க முழுக்க ஊடகத் தகவலை அடிப்படையாகக் கொண்டது.
அடக்குமுறையைத் தவிர வேறொன்றையும் அறிந்திருக்கவில்லை சீனா. வெகுண்டு எழுந்து சீனர்கள் போராட ஆரம்பிக்கும் ஒவ்வொரு சமயமும் அவர்கள் மிருகத்தனமாக ஒடுக்கப்பட்டனர். ஆண்டான் அடிமை மனோபாவம் தகர்த்தெறியப்படவேண்டும். உழைக்கும் மக்களின் ஆட்சி அமையவேண்டும்.
சீனா ஒரு குடியரசாக மலர வேண்டும்.
– புத்தக அறிமுகத்தில் இருந்து.
தொடர்பான சமீபத்திய செய்தி இரண்டு
1. மக்கள் எழுச்சி, வேலையில்லாத் திண்டாட்டம், சோசலிசம்
China warned to expect greater public unrest as job prospects worsen – Times
Online:
முதற்கண் சீனப் புத்தாண்டு வாழ்த்து.
சீன அரசு வெளியீடு (The Outlook Magazine, published by the Government’s Xinhua news agency) புத்தாண்டு வாழ்த்து சொன்ன கையோடு வன்முறை கலந்த போராட்டங்கள் நிறைந்த வருடமாக அடுத்த வருடம் அமையும் என்றும் கணித்திருக்கிறது.
புதிதாக பட்டம் பெறும் கோடிக்கணக்கான மாணவர்களும் ஏற்கனவே வேலையில்லாமல் இருக்கும் பத்து மில்லியன் கூலியாள்களும் கோபப்பட்டு இந்த எழுச்சி நிகழும் என்று அரசே ஒத்துக் கொண்டிருக்கிறது.
சீன கம்யூனிசக் கட்சிக்கு இது மணி விழா ஆண்டு. வரும் அக்டோபர் ஒன்றாம் தேதி அறுபதாம் கல்யாணம் கட்டிக் கொள்ளும் தருணத்தில் ஒலிம்பிக்சின் போது செய்த மோடி மஸ்தான் வேலையை மீண்டும் அரங்கேற்றும் கணத்தில், இந்தப் போராட்டம் எழலாம்.
சென்ற ஆண்டில் மட்டும் எண்பத்தி மூன்று லட்ச தொழிலாளர்களுக்கு வேலை பறிபோனதையும் அரசாங்க ஆய்வு குறிப்பிட்டிருக்கிறது.
இதைப் போன்ற ஆயிரக்கணக்கான (அரசுக் கணக்குப் படி ஆயிரம் என்றால், பத்தாயிரம் எழுச்சிகளாவது இருக்கும்) கொடி தூக்கல்களை நசுக்கி எறிவது போல் இந்த உரிமைக்கோறலையும் துச்சமாக தூக்கி எறிய கபர்தார் போட்டிருப்பது வெட்ட வெளிச்சமாகி உள்ளது.
2. கம்யூனிசமும் ஊழலும் – பிரிக்கமுடியாத இரத்த உறவு!
*Corruption taints every facet of life in China – Los Angeles Times:
லியாவ் (Liao Mengjun) பள்ளிக் கல்வியை முடித்து விட்டான். ‘ஸ்கூலில் இருந்து டிசி வாங்கப் போறேம்மா’ என்று சொல்லிவிட்டுக் கிளம்பியவனை பிணவறையில்தான் அடுத்துப் பார்ப்போம் என்பதை பெற்றோர் அறிந்திருக்கவில்லை.
பதினைந்து வயது பாலகனின் நெற்றியைப் பிளந்திருந்தார்கள். வலது முட்டி எலும்புக்கூடாக காட்சியளித்தது. கைகள் இரன்டும் உடைந்து தனியாக இருந்தது.
அனாதரவாக இருந்த கையிலிருந்த சுட்டு விரலை கோரமாக சிதைத்திருந்தார்கள்.
எதையோ ஒப்புதல் வாக்குமூலம் செய்ய முயற்சித்திருக்கிறார்கள். யார்?
அவனுடைய வாத்தியார்தான்.
ஏன்?
பள்ளிக்கூடங்களில் நடைபெறும் ஊழலையும் அநியாயமாகப் பறிக்கப்படும் பணத்தையும் கல்விச்சாலையில் பிடுங்கப்படும் முறைகேடான லஞ்சமும் காரணம்.
சீனாவில் ஊழல் செய்து எவராவது பெருந்தலை மாட்டிக் கொண்டால் பேரளவிற்கு உடனடியாக தூக்கில் போட்டுவிடுவார்கள். அவரை விசாரித்தால், தாங்களும் மாட்டிக் கொண்டு விடுவோம் என்னும் அச்சம் முதல் காரணம். ஆக்சன் கிங் போல் செயலில் உத்வேகம் கொண்டிருப்பதாய் காட்டுவது இரண்டாம் காரணம்.
ஆனால், சைனாவில் ஊழலும் லஞ்சமும் புரையோடி வளர்ந்து சர்வ அடுக்குகளிலும் வியாபித்து கோலோச்சி வருகிறது.
இப்படி ஊழல் இராச்சியமாக இருப்பது அறிந்திருந்தால் சீன கம்யூனிசக் கட்சி என்ன செய்கிறது? தங்கள் நலனிற்கும் ஆட்சிக்கும் பங்கம் விளையாத வரை ‘நீ பிறரை எவ்வளவு அடித்தாலும் பிரச்சினை இல்லை’ என்று தாராள சிந்தனையோடு நீருற்றி வளர்த்து வருகிறது.
சுதந்திரம் இருந்தால்தானே இதை காவல் நிலையத்திலோ, நீதிமன்றங்களிலோ, சட்டமன்றத்திலோ முறையிட முடியும்?
சுதந்திரம் இருந்தால் பேச்சுரிமை பெற்று கொத்தடிமை முறையும் ஒழிந்துவிடுமே?
எதுக்கு சுதந்திரம் தந்து, ஊழலை அம்பலமாக்கி, தங்கள் பதவியை, அதிகார போதையை, பணந்தரும் கல்பதருவை இழக்க வேண்டும் என்கிறது சீன கம்யூனிசம்.
அவர்கள் நிலையில் நீங்கள் இருந்தாலும் இப்படித்தான் முடிவெடுப்பீர்கள்.
சீனப் பொருளாதாரம் ஏழு ட்ரில்லியன் டாலர் மதிப்பு கொண்டது. இதில் ஒரு டிரிலியன் லஞ்ச வர்த்தகம்.
‘ஊழலை எல்லோரும் வெறுக்கிறார்கள். குறிப்பாக பொதுசனத்துக்கு கடுங்கோபம் வருது. அதற்கு காரணம் அவர்களுக்கு லஞ்சம் வராததுதான்!’ என்று கூலாக சொற்பொழிவாற்றுகிறார் இரயில்வே துறை மீது வழக்கு தொடுக்க முயற்சித்த ஜியாவ் (Qiao Zhanxiang).
Foshan, or “Buddha Mountain” :: ஃபோஷான் (அ) புத்தமலை
- குருவி படத்தில் கொத்தடிமையாக இருந்தது போல் உழைப்பாளிக் கூட்டம் இங்கே நிஜத்தில் நடத்தப்படுகிறது.
- உடம்பு சரியில்லையா? அவசரமாக கவனிக்கணுமா? சோசலிச நாட்டில் பணம் அதிகம் கொடுத்தால் உடனடி மருத்துவ சேவை உத்தரவாதம்.
- வண்டி ஓட்டத் தெரியாமல் உரிமம் வேண்டுமா? அப்படி ஓட்டிய வண்டு எவரையாவது கொன்றால் வழக்கு தள்ளுபடி ஆக வேண்டுமா? வெட்டுங்க பணத்தை!
“போசான் மட்டுமல்ல; ஒட்டு மொத்த சீன அரிசிக்கு ஃபோசான் ஒரு பருக்கை பதம்,” என்கிறார் ரென் (Ren Jianming, vice director of the Clean Government Research Center at Beijing’s Qinghua University)
திபெத் விடுதலை அடைய தலாய் லாமா எவ்வளவு லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று யாராவது சீன ஜனாதிபதியிடம் கேட்டு சொல்லுங்களேன்.