Tag Archives: South Asia

Invitation: Articles for Solvanam

சொல்வனம் பத்திரிகை இதழ் எப்பொழுதும் புது எழுத்துகளைச் சிறப்பிக்கும் இதழாக அமையும். புதியவர்களையும் இளையவர்களையும் பற்றிய கட்டுரைகளை வரவேற்கிறோம். ஆர்வமுள்ள வாசகர்கள், தங்கள் என்ன தலைப்பில், எதைக் குறித்து எழுதப் போகிறோம் என்பதை எங்களுக்கு solvanam.editor@gmail.com தெரிவியுங்கள்.

அனைத்து இதழிலும் பிரபலமடைந்த எழுத்தாளர்கள் சிலரோடு, அத்தனை பிரபலமாகாத பல எழுத்தாளர்களையும் வாசக கவனத்திற்குக் கொண்டு வர முனைய வேண்டும். என்னவெல்லாம் எழுதலாம் என்று யோசித்தவுடன் தோன்றிய எண்ணங்கள் இவை:

அ) இரண்டு குழுக்களாக வயதையொட்டிப் பிரித்துக் கொண்டு அவர்களின் படைப்புகளை மொத்தமாக அணுகலாம். இருபது வயது முதல் முப்பது வயது வரையிலானவர்கள்; முப்பதில் இருந்து நாற்பது வயதை எட்டியவர் வரை – இந்த இரு தலைமுறையினரில் எவரெவரை நீங்கள் வாசித்து இருக்கிறீர்கள்? அவர்களுக்கு இடையேயான ஒற்றுமைகள் என்ன? அந்தப் புனைவுகளை எவ்வாறு விமர்சனப் பூர்வமாக அணுகுகிறீர்கள்?

ஆ) கடந்த பத்தாண்டுகளில் உங்களைக் கவர்ந்த மூன்று முக்கியமான நூல்கள் என்ன? கட்டுரையில் வித்தியாசமான முறையில் அணுகுகிறார் என்று எவரைச் சொல்வீர்கள்? சிறுகதைத் தொகுப்பில் எதையெல்லாம் விரும்பி வாசித்தீர்கள்?

இ) முகப் புத்தகம் (ஃபேஸ்புக்), உடனடி எழுத்து (ஃப்ளாஷ் ஃபிக்ஷன்), குறுங்கதை என்றெல்லாம் எழுதித் தள்ளுபவர் எவர்? அவற்றில் எது நெஞ்சில் நிற்கின்றன?

ஈ) கவிதைகள்: ஹைக்கூ, திரைப்பாடல், யாப்பு இலக்கணத்திற்கு உட்பட்ட வெண்பா, டிவிட்டர் குறுமொழிகள் என்று பல வகைகளில் ஒவ்வொன்றிலும் உங்களைக் கவர்ந்த ஆக்கங்கள் என்ன? ஏன் அந்தக் கவிதைகள் உங்களுக்கு நெருக்கமாகின?

உ) தினசரி எவரை வாசிக்கிறீர்கள்? எப்பொழுதாவது மட்டுமே ஒருவர் எழுதினாலும், எவர் எழுதியதை தவறவிடாமல் வாசிக்கிறீர்கள்? அத்தி பூத்தது போல் எழுதுபவர்கள் யார்? காட்டுமல்லியாகப் பூத்துக் குலுங்குவது யார்?

ஊ) எந்த முன்னணி எழுத்தாளர்கள் எவரைப் பரிந்துரைக்கிறார்கள்? அவர்களின் முக்கியமானப் படைப்புகள் என்ன? எவர் அச்சுலகில் புத்தகங்கள் நிறைய வெளியிட்டிருக்கிறார்? அவற்றில் எது இலக்கியத் தரமானது?

எ) யுவ புரஸ்கார், இளம் எழுத்தாளர் விருது போன்ற பட்டியல்களில் இருந்து நீங்கள் நாவல்களையும் கதைகளையும் தேர்ந்தெடுத்து வாசித்து, உங்கள் பார்வைகளை முன்வைக்கலாம்.

ஏ) காலச்சுவடு, உயிர்மை, தமிழினி, யாவரும், டிஸ்கவரி, சந்தியா, கிழக்கு, வல்லினம், நற்றிணை, புலம், எதிர், சிக்ஸ்த் சென்ஸ், எழுத்து, ஜீரோ டிகிரி , விடியல், தேநீர், சீர்மை, செங்கனி இன்ன பிற – புதிய எழுத்தாளர்களை எவர்கள் வெளியிடுகிறார்கள்? எந்தப் புனைகதைகளை வாசித்து இருக்கிறீர்கள்?

ஐ) நீங்கள் சிறுகதைகளைப் படிக்கிறீர்களா? கேட்கிறீர்களா? ஒலிப்புத்தக வடிவில் எதை ரசித்து உள்வாங்கினீர்கள்? கிளப்ஹவுஸ், டிவிட்டர் ஸ்பேசஸ் போன்ற தளங்களில் உங்களின் இலக்கிய கருத்துக்களையும் வாசக விமர்சனங்களையும் பதிவிடுவது உண்டா?

ஒ) புனைவு எழுதுவது என்பது செயல்பாடு; ஒரு சார்பு நிலையை எடுப்பது. அதற்கு சமூக ஊடகங்களில் தன் கொள்கை சார்ந்த நிலை எடுத்து பின் தொடர்பவர்களின் எண்ணிக்கையைப் பெருக்குதல் அவசியம். இந்த வகையில் பிரபலமாக இரட்டைக் குதிரை சவாரி செய்பவர்கள் யார்? அவர்களின் எழுத்துக்களை எப்படி மதிப்பிடுவீர்கள்?

ஓ) கதை மீறும் கதை, நாடகம், மொழியாக்கம், மாந்திரீக எதார்த்தம், பேய்க்கதை, துப்பறியும் கதை, காதல் கதை, அறிபுனைவுகள், வரலாற்றுப் புனைவு, மர்மக் கதை, தொன்ம மருவுருவாக்கம், திகில் கதை, பதின்ம வய்தினருக்கான ஆக்கம் – இவற்றில் ஒவ்வொரு வகையிலும் எந்தப் புத்தகங்களை பரிந்துரைப்பீர்கள்?

ஔ) கதைகளின் செவ்வியல் மற்றும் நவீன வடிவங்கள், உலக மொழிகளிலும், தமிழிலும் நிகழ்ந்துவரும் பரிசோதனை முயற்சிகள் என்ன?

இணையத்தில் எத்தனை உள்ளடுக்குகள் இருந்தாலும் எதுவொன்று சுழித்து மேலெழுந்து வருகிறதோ, அதுவே பார்வையில் விழுந்து உணர்வைத் தொடுகிறது. ஒரே சமயத்தில் ஒரு பெரும் களஞ்சியமாகவும் பொங்கிப் பெருகும் புதுவெள்ளத்தின் குமிழாகவும் நித்தியத்தையும் நிலையின்மையையும் தன் இயல்பாய்க் கொண்டது இணையம். அச்சுக்கு உரிய நேர்த்தொடர்ச்சி இணையத்தில் இல்லை, அதன் போக்கு சுழன்று விரிவது. உரையாடல்களும் எதிர்வினைகளும் பகிர்தல்களுமே இணையத்தில் உள்ள படைப்புகளுக்கு உயிர் அளிக்கின்றன. எனவே வாசகர்கள் புதிய படைப்புகள் குறித்து தொடர்ந்து பகிர்ந்து உரையாட வேண்டுமென்றும் எழுத்தாள நண்பர்கள் தம் பங்களிப்பை தொடர்ந்து அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.

எந்த ஒரு இதழுமே படைப்புகளால்தான் கவனம் பெறுகின்றது. #solvanam அந்தப் படைப்பாளிகளின் மொத்த பங்களிப்பைக் குறித்த அறிமுகத்தையும் விமர்சனத்தையும் வரவேற்கிறது. இந்த இதழுக்குப் பல நண்பர்களும் படைப்பாளிகளும் ஒத்துழைக்க அழைக்கிறோம்.

உங்கள் தொடர்ந்த நல்லாதரவிற்கு மனமார்ந்த நன்றி. உங்கள் எண்ணங்களை எடிட்டருக்கு அனுப்பவும்- அவரது மின் அஞ்சல் முகவரி இது – solvanam.editor@gmail.com

ஓவாது கூஉநின் உடற்றியோர் நாடே

அமெரிக்கா அசல் நாட்டாமை. உலகெங்கும் அதன் ஊடகம். அதன் சந்தையாக்கம். அதன் கேளிக்கை. அதன் இன்ஸ்டாகிராம். அதன் டிவிட்டர். அதன் ஃபேஸ்புக்.

மேற்குலகம் சொல்வதை வேதவாக்காக பிரச்சாரம் செய்து பரப்ப தேவதூதர்கள் நிறைய உண்டு. பிபிசி ஒரு பக்கம் ஓதும். இன்னொரு புறம் சி.என்.என்.

கத்தார் நாட்டிற்கு என்று அல்ஜஸீரா. ருஷியா தேசத்திற்கு ஆர்.டி. எல்லாம் கொஞ்சம் போல் ஆங்கிலத்தில் பரப்புரைத்தாலும், ஆப்பிளும், ஆண்டிராயிடும் டைம்ஸ் நாளிதழையும் என்.பி.ஆர். வானொலியையும் மட்டுமே உங்கள் செய்தியோடையில் காட்டும்.

இந்த வித்தையை சைனா சிறப்பாக கற்றுத் தேர்ந்திருக்கிறது. டிக் டாக் துவங்கி கண்ணுக்குத் தெரியாத பிக்ஸல் வரை வியாபித்தது.

சீனா வானொலி தமிழ்ப் பிரிவு நாள்தோறும் ஒலிபரப்புச் சேவையை வழங்குகிறது.
தாய்லாந்து நாட்டின் புகழ்பெற்ற முக்கிய ஊடகமானது, சீன அரசு ஊடகத்திடமிருந்து அவர்களின் செய்தியை விநியோகம் செய்ய ஒப்பந்தம் செய்திருக்கிறது.
மலேசியாவில் கம்யூனிசம் தழைத்தோங்க சீன மொழியில் செய்திகளை வழங்க அந்த நாட்டின் நான்கில் ஒரு குடிமகனைக் கவர சீனா இன்னொரு ஒப்பந்தம் கையெழுத்திட்டிக்கிறது.

கடைசியாக, அமெரிக்க கல்வி ஸ்தாபனங்களைக் குறி வைத்திருக்கிறது. தங்களின் தாய்நாட்டையோ பீஜிங் அரசையோ சற்றேனும் மாற்றுப் பார்வை பார்க்கும் ஆசிரியரோ, பாடத்திட்டமோ இருந்தால் அரிவாளையும் சுத்தியலையும் கையில் எடுத்து அவர்களை பதவி விலக்கி கரும்புள்ளி செம்புள்ளி குத்தி விடுகிறார்கள்.

ஹாங்காங் குறித்தும் சிஞ்சியாங் உய்குர் முஸ்லிம்கள் குறித்தும் சீன நாட்டின் அதிகாரபூர்வ அடக்குமுறையை விதந்தோத இவை உதவும்.

தென் கிழக்கு ஆசியாவில் நிரம்பி வழியும் இந்த கண்கட்டி அந்தகராக்கும் நிலையை அகற்றி பரந்துபட்ட பன்முகப் பார்வையைப் போக்க #சொல்வனம் துவங்கிய காலத்தில் இருந்து முயல்கிறது.

அந்த வகையில் இரு கட்டுரைகள் இந்த இதழில் #solvanam இதழில் வெளியாகி இருக்கின்றன. அவற்றை வாசித்து செய்திகளையும் கொள்கைகளையும் பொதுவுடைமை ஆக்குங்கள்.

கட்டுரை 1 – நேபாளமும் சீனாவும் இந்தியாவை எவ்வாறு அச்சுறுத்துகின்றன?

கட்டுரை 2 – தாய்வானை நோக்கி தொடர்ச்சியாக தாக்குதல் நடத்துவதால் போர் பயத்தில் எவ்வாறு இந்த பிரதேசத்தை பதற்றத்தில் வைத்து பொருளாதார வளர்ச்சியை முடக்குகிறார்கள்?

தாயில்  தூவாக்   குழவி   போல –
தாயில்லாத உண்ணாக் குழவி போல;  ஓவாது  கூஉம் ஒழியாது
கூப்பிடும்;  நின்    உடற்றியோர்    நாடு    –    நின்னைச்
சினப்பித்தவருடைய நாடு

புறநானூறு – 4: சோழன் உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னி

அரசியல் பங்களிப்பு, தமிழர் நலன்: வெளிநாடுகளில் தெற்காசியர்கள் – வெங்கட்

2. அமெரிக்காவுடன் ஒப்பிட்டால் கனடா அரசியலில் தெற்காசியர்கள் பெருமளவில் ஈடுபடுவதாக உணர்கிறேன். உண்மையா? இதனால் தமிழர்களின் நலன் முன்னெடுத்துச் செல்லப்படுகிறதா? அமெரிக்காவில் இந்திய வம்சாவழியினரின் தேர்தல் பங்களிப்பு குறித்த உங்கள் எண்ணங்கள் ப்ளீஸ்…

உன்மைதான். தெற்காசியர்களின் பங்கேற்பு கனேடிய அரசியலில் தொடர்ச்சியாக அதிகரித்துவருகிறது. இதில் தாராளக் கொள்கைகளைக் கொண்ட புதிய ஜனநாயாகக் கட்சியின் பங்கை மிகவும் பாராட்டியாக வேண்டும். (தலைவர் ஜாக் லெய்ட்டனின் மனைவி சீன வம்சாவளி ஒலிவியா சௌ). அதிக அளவில் சிறுபான்மையினரை நிறுத்துவது இவர்கள்தான்.

அதற்கு அடுத்தபடியாக லிபரல்கள். பஞ்சாபியனர் அதிகம் வசிக்கும் (சொல்லப்போனால் பஞ்சாபியர் மாத்திரமே வசிக்கும்) டொராண்டோவின் வடமேற்குப் புறநகர் ப்ராம்ப்டனில் (Brampton) ரூபி பல்லா தற்பொழுதைய லிபரல் எம்.பி. அழகுப்போட்டி ஒன்றையே மூலதனமாக அரசியலில் இவர் வந்தபொழுது எனக்கு நம்பிக்கையில்லை; ஆனால் தற்பொழுது தொகுதியின் அடிப்படை நலன்களை நல்ல முறையில் பாதுகாக்கிறார். இன்னும் சில பஞ்சாபியினர் எம்.பிக்களாக இருக்கிறார்கள், (ஒண்டாரியோ, அல்பெர்ட்டா, ப்ரிட்டிஷ் கொலம்பியா மாநிலங்களில்). பஞ்சாபியரைப் போலவே பாக்கிஸ்தானியர், இரானிய வம்சாவளியினர் என்று சிலரும் எம்பிக்களாக இருக்கிறார்கள். சீனர்களைச் சொல்லவே வேண்டாம்.

வலதுசாரி கன்ஸர்வேட்டிவினர் பொதுவில் அமெரிக்க ரிபப்ளிக்கன் கட்சியைப் போலத்தான் இவர்கள் கூட்டத்தில் பொற்றலை (Blond) இல்லாதவர்கள்தான் சிறுபான்மை. கறுப்பு, சீனர், இந்தியர் இவர்கள் யாராவது தென்பட்டால் அதிசயம்தான். ஆனால் சமீபத்தில் பார்க்க நன்றாக இருப்பதால் ஸ்டீபன் ஹார்ப்பரின் எல்லா போட்டோக்களிலும் பின்னால் நீல டர்பனை அணிந்த ஒரு சீக்கியரும், இடுப்புக்குக் கீழே ஒளிந்துகொண்டு ஒரு சீனரும் தென்படுகிறார்.

ப்ளாக் க்யெபெக்வாவுக்கு இந்த நாடகமாடும் தேவைகூட கிடையாது.

ஆனால் தமிழர் யாரும் இன்னும் மத்திய அரசியலில் முதலடியைக் கூட எடுத்து வைக்கவில்லை. இங்கிருக்கும் இந்தியத் தமிழர்களின் அதிகபட்ச சமூக நடவடிக்கை கர்நாடக சங்கீதக் கச்சேரிக்குப் போவதுதான். எனவே அவர்களை ஒதுக்கிவிடலாம்.

டொராண்டோ பெருநகர் பகுதியில் மாத்திரம் இரண்டரை லட்சம் ஈழத்தமிழர்கள் இருக்கிறார்கள். இவர்கள் சமூகத்தில் எல்லா அடுக்குகளிலும் இடம்பெற்றிருக்கிறார்கள்; மருத்துவர், வழக்கறிஞர், தொடங்கி மாஃபியா வரை எல்லாமே உண்டு. ஆனால் ஜனநாயக முறை அரசியலில் இவர்கள்க்கு இன்னும் இடமில்லை. இதற்குக் காரணம் கடின உழைப்பாளிகள் பலருக்கு அரசியல் தேவையற்றதாக இருக்கிறது. அரசியலுக்கு வரும் பிற தமிழர்கள், தமிழர் நலனை மாத்திரமே முன்வைக்கிறார்கள். (அதாவது விடுதலைப்புலிகளின் நிலைப்பாட்டை). இது தொகுதியில் இருக்கும் பிற சமூகத்தினரின் ஒரு ஓட்டுகூட அவர்களுக்குக் கிடைக்காமற் செய்துவிடுகிறது.

கனேடியத் தமிழர்கள் பெரும்பாலும் உள்ளார்ந்த பார்வையையே கொண்டவர்கள், இதை உதறிவிட்டு கனேடியப் பொதுநலனை முன்னிருத்தி அதன் வாயிலாகத் தமிழர் நலனை முன்னெடுத்துச் செல்லாதவரை இவர்களுக்கு மத்திய அரசில் என்ன, உள்ளூர் மாநகராட்சித் தேர்தலில்கூட ஒரு இடமும் கிடைக்கப்போவதில்லை. பஞ்சாபியனர் இதைத் திறமையாகச் செய்கிறார்கள், பாக்கிஸ்தானியர் கூட. ஆனால் 2.5 லட்சம் தமிழர்களில் இன்னும் ஐந்து வருடங்களிலாவது உள்ளூர் நகர்மன்ற உறுப்பினராகும் வாய்ப்புகூட யாருக்கும் இல்லை என்பது வருத்தமான நிலைதான்.

அமெரிக்க அரசியலில் இந்தியர்களின் பங்களிப்பைக் குறித்து என்னைவிடத் திறமையாகக் கருத்து சொல்லப் பலரும் இருக்கிறார்கள். நான் பார்த்தவரை அரசியலில் ஈடுபடும் பல இந்திய வம்சாவளி அமெரிக்கர்கள் தங்கள் பின்புலத்தின் காரணமாகவோ, அதன் நலனுக்காகவோ இல்லை. அதையும் மீறித்தான் அவர்கள் அரசியலில் இருக்கிறார்கள். (Indians are not in American politics because of it, they are there despite of it.) தனிப்பட்ட நலன்கள் மாத்திரமே அவர்கள் முன்வைப்பது. பாபி ஜிந்தால் ஒருவர்தான் ஓரளவுக்கு அமெரிக்க அரசியலோடு இயைந்துபோகிறார் என்று தோன்றுகிறது.

3. டோக்யோவிலும் தாங்கள் வசித்ததுண்டு அல்லவா? ஜப்பான் சூழலோடு அமெரிக்க அதிபர் தேர்ந்தெடுப்பு எவ்வாறு வேறுபடுகிறது?

ஜப்பானிய அரசியல் அமெரிக்கக், கனேடிய, ஏன் இன்னும் பல ஜனநாயக முறைகளிலிருந்து வேறுபட்டது.

1950களில் அமெரிக்கா பல பில்லியன் டாலர்களை இரகசியமாகச் செலவிட்டு தஙகள் சித்தாந்தங்களை ஜப்பானிய மண்ணில் வேரிடச் செய்தார்கள். இதே ரீதியாக பாக்கிஸ்தான், சிலி, ஈரான் உட்பட பல நாடுகளில் அவர்கள் கொடுங்கோலர்களை வளர்ந்த்தெடுக்க ஜப்பான் கொஞ்சம் தப்பித்துக் கொண்டு ஜனநாயகத்தைப் பற்றிக் கொண்டது. 1955 தொடங்கி இன்றுவரை ஜப்பானில் (ஒரு சிறிய இடைவெளியைத் தவிர) லிபரல் டெமாக்ரடிக் என்று சொல்லப்படும் ஒரே கட்சிதான் ஆண்டுவருகிறது. இது கலவை இடது-வலது கட்சி.

தனியார் தொழில் முன்னேற்றம் போன்ற விஷயங்களில் ரிபப்ளிக்கன் கட்சியை ஒத்தது இதன் கொள்கை, ஆனால் வலுவான, எல்லாவற்றிலும் தலையிடும் மத்திய அரசு, இலவசப் படிப்பு, மருத்துவம், ஓய்வுப் பாதுகாப்பு போன்ற பல விஷயக்களில் அமெரிக்க டெமாக்ரட்களை ஒத்தவர்கள். அதைத்தவிர பொதுவில் ஜப்பானின் கலாச்சாரம் இடதுசாயும் லிபரல் கலாச்சாரம்தான், இங்கே கருக்கலைப்பு எதிர்ப்பு, வலுவான ராணுவம், எல்லோரும் துப்பாக்கி வைத்துக் கொண்டு சுடலாம் போன்ற சித்தாந்தங்கள் வேகாது.

ஜப்பானிய ஜனநாயகம் என்பது லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் (ஜியூ மின்ஷுதோ) உட்கட்சி ஜனநாயகம் என்ற வகையில் மிகவும் செழிப்பாகவே இருக்கிறது. ஜியூவின் உள்ளே பல பிரிவுகள் உண்டு. இவர்களுக்குளே பூசல் மிகவும் பிரபலம். 55 தொடங்கி ஐம்பது வருடங்களில் கிட்டத்தட்ட 25 பிரதமர்கள் என்று ஆட்சி-ஆட்சிக்கலைப்பு ஆட்டங்கள் ஜப்பானில் சாதாரணம். ஆனால், ஜியூக்கள் மற்றவர்கள் தலையெழும்பச் செய்யாமல் பார்த்துக்கொள்ளும் திறமையில் உன்னதம் கண்டவர்கள். கட்சியில் அடுக்கு முறைகள் வலுவானவை.

இதையெல்லாம் தாண்டி ஒபாமா மாதிரி ஒருவர் ஜப்பானில் வந்துவிட முடியாது.

அடுக்கு முறையில் படிப்படியாக மேலெழும்பி வருபவர்கள்தான் பிரதமர்கள். 1999-2001 ல் ஜப்பானில் நான் வசித்த பொழுதே யோஷிரோ மோரி, ஜுனிச்சிரோ கொய்ஸுமி, ஷின்ஷோ அபே போன்றவர்களின் பெயர்கள் கெய்ஸோ ஒபூச்சிக்கு அடுத்தபடியாக அடிபட்டன. இவர்கள் அனைவரும் பின்னால் ஒவ்வொருவராக பிரதமர்கள் ஆனார்கள். அப்பொழுது மேலடுக்கில் இருந்ததில் இன்னும் பிரதமர் ஆகாமல் இருப்பவர் டோக்கியோ மேயர் இஷிகாரா ஒருவர்தான். எனவே ஜப்பானிய ஜனநாயகம் என்பது லிபரல் டெமாக்ரடிக் கட்சிக்குள்ளே ஒழுங்காகக் கட்டமைக்கப்பட்ட வரிசையில் நகர்ந்து இலக்கை அடைவதுதான்.

பெண்களுக்கு ஜப்பானிய அரசியலில் இன்னும் சொல்லிக்கொள்ளும் இடமில்லை.

4. வெற்றிபெற்ற அடுத்த அமெரிக்க ஜனாதிபதி உங்களை ஆலோசகராக நியமிக்கிறார். என்ன அட்வைஸ் கொடுப்பீர்கள்?

தொடரும்…