Tag Archives: Canada

July 14 S Ramakrishnan Event at Toronto: Kaalam Magazine Invite

கனடாவில் கதாசிரியர் ஜெயமோகன் உரை: தமிழ் சினிமாவும் ஹாலிவுட் திரைப்படங்களும்

பேசியவரின் பதிவு: திரைப்பட விழா » எழுத்தாளர் ஜெயமோகன்

உரையில் சொன்ன நான்கு மையக்கருத்துக்கள்.

1. தமிழ் வணிகசினிமா பற்றிய ஒரு இளக்காரமான பார்வை பொதுவாக அறிவுஜீவிகளிடம் உள்ளது. என்னிடமும் இருந்தது. ஆனால் உலகமெங்கும் உள்ள வட்டாரசினிமாக்களை ஹாலிவுட் சினிமா முற்றாக அழித்து அம்மக்கள் தங்களுக்குள் பேசிக்கொள்ளும் வெகுஜன ஊடகமாக சினிமா அமையாமல் ஆக்கிவிட்டிருக்கிறது. அந்த அபாயத்தை சமாளித்து இங்கே தமிழ் வணிகச்சினிமா வெற்றிகரமாக இருப்பதே ஒரு பண்பாட்டுச்சாதனை. அது,தொடர்ச்சியான ஃபீட் பேக் மெக்கானிசம் மூலம் உருவாக்கப்பட்டது. ஆகவே தமிழ்ச்சமூகத்தின் சராசரியால் உருவாக்கப்பட்டது அதன் தரம்.

2 இக்காரணத்தால் தமிழில் சராசரிக்கு மேலான ஒரு தளத்தில் படங்கள் வரமுடியவில்லை. அப்படி ஒரு படத்தை உருவாக்கும் முயற்சிகள் பல நடக்கின்றன. அதன்விளைவாக உருவான ஒன்றே குறும்பட இயக்கம். அதற்குப் பொருளியல் சுமை இல்லை என்பதனால் அது சுதந்திரமாக இயங்க முடியும் என்ற நிலை இருந்தது. ஆனால் நடைமுறையில் அது வெற்றியா என்ற தயக்கம் இருக்கிறது. ஆரம்பத்தில் குறும்படங்கள் மீது இருந்த எதிர்பார்ப்பு இல்லை இப்போது.

3 . காரணங்கள் இரண்டு. இந்தப் படங்களிலேயே அவை தெரிகின்றன. ஒன்று இலக்கியவாசிப்போ, அறிமுகமோ இல்லாதவர்களால் இப்படங்கள் எடுக்கப்படுகின்றன. ஆகவே கதைக்கருவிலும் வாழ்க்கை அவதானிப்புகளிலும் ஒரு முதிர்ச்சி இல்லை மிகச் சாதாரணமான கதைகளைச் சாதாரணமாக எடுக்கிறாகள். இந்தக்குறும்படங்களின் கதைகளைக் குமுதம் கூட வெளியிடுமா என்பது சந்தேகமே. பெரும் சிறுகதைச்சாதனைகள் நிகழ்ந்த ஒரு மொழியில் இத்தகைய படங்கள் வருவதை நாம் ஒரு சரிவு என்றே நினைக்கவேண்டும். இரண்டாவதாக இப்படங்கள் குறைந்த நேர அளவுள்ள, சிறிய சட்டகம் கொண்ட படங்கள். இதற்கான ஒரு திரைமொழி , திரைக்கதை வடிவம் உருவாக்கப்படவேண்டும். ஆனால் பெரிய படங்களின் அதே திரைமொழி, அதே திரைக்கதை உத்தியில் இவை எடுக்கப்படும்போது பார்வையனுபவம் சிறப்பாக அமைவதில்லை.


ஏறத்தாழ முப்பது பேர் பார்வையாளர்கள். மூன்று நபர்கள் கொண்ட ஜூரி.

தமிழ் வணிக சினிமாவை நிராகரித்துப் பேச முடியாது. தமிழ்ப்படங்கள் என்பது ஒரு பண்பாட்டு உரையாடல். அவை சராசரி மனிதர்களுடன் பேசக்கூடியவை. ஆவரேஜ் ஆளுக்காகத்தான் படமெடுக்க முடியும். எதிர்காலத்தில் கலைப்படங்கள் காலூன்றலாம். ஆனால், இன்றைக்கு அந்த நிலை கிடையாது.

பகுதி ஒன்று

* உணவு: பெரிய சாப்பாட்டு மேஜை. அயிரம் பேர் உண்ணக் கூடிய விருந்து போன்ற அயிட்டங்கள் காட்டப்பட வேண்டும். பார்வையாளனுக்கு பசியாக இருக்கலாம். கல்யாண சாப்பாடு தேவையிருக்கலாம். அதைத் தீர்க்க வேண்டும்.

* ஆடை, அணிகலன்: நாயகி தன்னுடைய டிரெஸரைத் திறந்து நூற்றுக்கணக்கான புடைவையை அலசுவாள். அவற்றில் இருந்து ஒன்றைத் தேர்ந்தெடுப்பாள். சினிமா பார்ப்பவனுக்கு அத்தனை புடவை எடுத்து தர முடியாது. பார்ப்பவளுக்கு இந்த மாதிரி சாய்ஸ் இருப்பது போல் கற்பனை தருவதற்கு சரோஜாதேவியும் ஜெயலலிதாவும் இவ்வ்வாறு செலக்சன் செய்ய வேண்டும்.

* இடம், லொக்கேஷன்: ஒவ்வொரு ஊரில் ஒவ்வொரு கலாச்சாரம். அனைத்து ஊர்களிலும் பிடிக்குமாறு புரியுமாறு எடுக்க வேண்டிய தேவை இருக்கிறது. சென்னையில், சின்னாளப்பட்டியில், சிகாகோவில், ஸ்கார்பரோவில் என்று எல்லா இடத்திற்கான சராசரி விருப்பங்களை உள்ளடக்கி எடுக்கிறார்கள்.

* ரிலாக்ஸேஷன்: இரண்டே கால் மணி நேரம் படம் ஓட வேண்டும். சினிமாவிற்கு கிளம்புவதற்கு பெரிய விஷயம். அந்தளவு சிரமப்பட்டு வருபவர்கள், டக்கென்று எண்பது மணித்துளிகளில் முடித்து அனுப்ப முடியாது.

* வணிக சினிமா: காதல் இல்லாத தமிழ் சினிமா எடுபடாது; எடுக்கணும்னு அவசியம் இல்ல. தமிழகச் சூழலில் காதல் செய்யும் வாய்ப்பு இல்லாததால் ஈடேற்றம் செய்வதற்கு இளமையும் காதலும் சினிமாவில் நிறைவேற்றுகிறது.

பகுதி இரண்டு

* சிறு பத்திரிகைக்காரன்: நா பார்த்தசாரதி, அகிலன், கல்கி எல்லாம் வணிக எழுத்தாளர்கள். அவர்கள் மட்டுமே புகழ் பெற்று விளங்கிய காலம் உண்டு. இன்று வெகுசன இலக்கியம் அல்லாதவர்கள்தான் புகழ் பெற்றவர்களாக இருக்கிறார்கள். நான் சிறுபத்திரிகைக்காரன். இன்று மைய எழுத்தாக விளங்குகிறேன். அது போல் குறும்படக்காரர்களும் மெயின் நீரோட்டத்தை நிர்ணயிப்பவர்களாக ஆகலாம்.

* இலக்கிய வாசிப்பு: கதைகளை தேர்தெடுக்கும்போது எண்ணங்களை மையமாக வைக்காமல், சிறப்பான சிறுகதைகளை எடுத்துக் கொள்ளலாம்.

தொடர்புள்ள தற்கால செய்தி: Manushyaputhiran vs Arivumathy on S Ramakrishnan vs Kamalahasan: Marketing Kaliyugam Movie Songs

கலியுகம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் முதலில் பேசிய கவிஞர் அறிவுமதி, மனுஷ்யபுத்திரன் குங்குமத்தில் வழக்கு எண் படத்தை துவைத்து காயப்போட்டுவிட்டதாக குறைபட்டுக் கொண்டார். இதுபோல் மனுஷ் போன்ற இலக்கியவாதிகளே செய்தால், அடுத்து வரும் தயாரிப்பாளர்களும் வர மாட்டார்கள்.. இது தமிழ்ச் சினிமா துறையின் வளர்ச்சியையே பாதிக்கும். அது மிக அருமையான படம் என்று சொன்னார்.

Acceptance speech by EssRaa at Canada: Tamil Literary Garden Iyal Virudhu: Award Meeting for S Ramakrishnan

முந்தைய விழாவும் வீடியோவும்:
S Ramakrishnan’s Felicitation Function: Canada’s Iyal Award Event at Chennai by Uyirmmai

நன்றி சொல்லப்பட்டவர்கள்

1. கவிஞர் தேவதச்சன் – ஆசான்

2. யுவன் சந்திரசேகர்

3. பெருமாள் முருகன்

4. தோழர் எஸ் ஏ பெருமாள்

5. முதல் வகுப்பு ஆசிரியை சுப்புலட்சுமி

6. முழு சுதந்திரம் தந்திருக்கும் மனைவி – ”வீட்டின் சுமையை தன் மீது சுமத்தாதவர். எழுத்தாளனாக இரு என்று திருமணத்திற்கு முன் சொல்வது சுலபம்; ஆனால், அதை பதினேழு ஆண்டுகளாக செயலாக்குபவர்.”

7. மகன்கள்

8. நண்பர்கள் – ”என் கிட்ட பணம் இல்ல… என்ன பண்ணுவ? என்று கேட்ட ஒரு மணி நேரத்திற்குள் என் வங்கிக் கணக்கில் ஒரு லட்சம் டெபாசிட் செய்தவர்கள் இருக்கிறார்கள். ’ஒரு எழுத்தாளனாக நீ வாழும்போது பொருளாதாரக் காரணங்களுக்காக நீ எழுதமுடியாமப் போயிட்டா, நாங்கள்ளாம் உன் நண்பர்களாக இருந்து பிரயோசனமேயில்ல!’ என்னுடைய பர்ஸில் எனக்குத் தெரியாமல் தன்னுடைய கிரெடிட் கார்டை சொருகி, ’உலகில் எங்கு போனாலும், அவனுக்குத் தேவையானதை வாங்கிக்கட்டும்’ என்று மனைவியிடம் சொல்லிச் செல்பவர்கள் இருக்கிறார்கள்”

9. வாசகர்கள்

10. அ முத்துலிங்கம்

11. தமிழ் இலக்கியத் தோட்டம்

கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2011க்கான வாழ்நாள் தமிழ் இலக்கிய சாதனை விருது பெற்ற எஸ்.ராமகிருஷ்ணன் ஆற்றிய ஏற்பு உரை:

ஏற்புரை பேச்சில் நான் கவனித்தவை

* வாழ்ந்த கதையச் சொல்லவா? வீழ்ந்த கதையை சொல்ல்வா? தெரிஞ்ச கதையை சொல்ல்வா? தெரியாத கதையை சொல்ல்வா? நாம ஜெயிச்ச கதையை சொல்ல்வா? தோத்த கதையை சொல்ல்வா… எந்தக் கதையை சொல்ல! என்பார்கள்.

* நான் பாணர்களோட வரிசையை சேர்ந்தவனாகத்தான் நினைக்கிறேன்.

* ருட்யார்ட் கிப்ளிங் என்னும் யானை டாக்டர்

* (கனடியத் தமிழர்?) மொழி தெரிந்தவரின் அணுக்கம்: நம்முடைய அடையாளம் நம் மொழி – தமிழ் தெரிந்தவரை தேடும் ஏக்கம்.

* (ஈழம்?) திரும்பி பார்க்க முடியாத இடம்: உப்பு பாறை – அனைவருமே மீண்டும் மீண்டும் சொந்த ஊரையும் இறந்த வாழ்க்கையையும் கடைசியாக திரும்பித் திரும்பி பார்க்கிறோம்: Lot’s wife looked back, and she became a pillar of salt.

* அறம்: உணவகம் தயாரிப்பவர் எவ்வாறு கொள்கைப் பிடிப்புடன் இருக்கிறார்?

* பிரிவு: வீட்டில் இருந்து வெளியேறுகிறார்கள்; ஆனால், மீண்டும் ஊர் சென்று ஒன்று கூடுகிறார். உணர்ச்சியைக் கட்டுப்படுத்த, வேதனையை மட்டுப்படுத்த இனிப்பையும் உணவையும் கொண்டாடுகிறார்கள். இலக்கியத்திலும் இந்தத் துயரம் பிரதிபலிக்கிறது.

* மறைந்து வாழும் காலகட்டம்: அர்ச்சுனன் கூட பேடியாக ஒரு வருடம் வாழ்ந்திருக்கிறான். மிகப் பெரிய வீரன் கூட ஒளிந்திருந்து அமைதி காத்த கதை அது.

* தன் சீடர் கூட்டத்துடன் இரவு தங்குவதற்கு இடம் தேடி ஜென் துறவி சத்திரத்திற்கு வருகிறார். அந்த இடத்தின் காப்பாளனோ, இவர்களைப் பார்த்தவுடன் ஒரு கோப்பை நிறைய பாலுடன் வருகிறான். அதைப் பார்த்த சன்னியாசி, சிரித்துவிட்டு, அந்த பாலின் மீது ஒரு இலையைப் போடுகிறார். இதைப் பார்த்து சத்திரத்து இன் சார்ஜ் இடம் கொடுத்து விடுகிறார்.

என்ன நடந்தது அங்கே?

சத்திரம் ஹவுஸ்ஃபுல். அங்கே இருப்பவர்கள் குடித்திருக்கிறார்கள். அதை பால் நிரம்பிய கோப்பை குறிப்பிடுகிறது. அதன் மீது ஒரு இலை போடுவதன் மூலம், ஒரு மூலையில் ஒதுங்கிக் கொள்வதாக சாது சொல்கிறார்.

Tamil Literary Garden of Toronto, Canada has Honored Tamil Writer S. RAMAKRISHNAN with ‘Lifetime Literary Achievement Award‘ in Tamil for the year 2011, “IYAL VIRUDHU” as pronounced in Tamil, for his life time achievement in literary contribution to the Tamil Literature.

Profile

S. Ramakrishnan is an influentially important writer of modern Tamil literature.

He is a full-time writer who has been active over the last 25 years in diverse areas of Tamil literature like short stories, novels, plays, children’s literature and translations.

Born in 1966, he is a native of Mallankinar village of Virudhunagar district of Tamilnadu. He has travelled all over India and having experience of living in its different parts of the country.

His short stories are noted for their modern story-telling style in Tamil. He had, as Editor, brought out the literary publication, Atcharam for five long years. Now, his web site http://www.sramakrishnan.com serves as a serious literary movement for young readers since it has become an important web site where contemporary literary innovations, world literature and world cinema congregate in a fertile ambience. An inspiring aspect of this site is that it has secured 23 lakh visits from readers all over the world. His short stories and articles have been translated and published in English, Malayalam, Hindi, Bengali, Telugu, Kannada and French.

A great story-teller, he has organized over thirty story-telling camps for school children, all over Tamilnadu. He has authored four books for children. He has organized a special story-telling camp for children with dyslexia-related learning disabilities. He has also organized screenplay writing camps for short film directors and students of cinema creation in important cities like Chennai, Coimbatore, etc.

His novel Upa Paandavam, written after a deep research into Mahabharata, was not only selected as the best novel in Tamil, it was widely well received by the readers. The novel Nedum Kuruthi, which spoke of the dark and tragic existential experiences of the tribe of oppressed people cruelly stamped as criminal tribe by the British, secured the Ghanavaani award for the Best Novel. His novel Yaamam, written with Chennai city’s three hundred years history as back drop, is another widely appreciated creation. His Urrupasi is a novel that conveys the stirring mental agonies of a young man who was unemployed because he took his degree majoring in Tamil language.

He became a celebrated author to lakhs of readers through his series of articles like Thunai Ezhuthu, Desanthari, Kathavilaasam, Kelvikurri and Chiridhu Vellicham which appeared in the highly circulated Tamil weekly, Ananda Vikatan. He is the first writer in Tamil to have created a broad circle of readers for his columns. The compilation book of the articles, Thunai Ezhuthu, has created a new history by selling almost a lakh of copies.

A connoisseur of world cinema, he has compiled an introductory compendium on world cinema with thousand pages called Ulaga Cinema. He has written four important books on cinema viz. Ayal Cinema, Pather Panchali, Chithirangalin Vichithirangal and Paesa Therindha Nizhalgal.

The short film Karna Motcham with his screenplay won the National Award for Best Short Film and went on to win, so far, 27 important awards in Indian and International Film Festivals. Another short film Matraval has won three coveted awards as the best Tamil Short Film.

He has worked as Screenplay and Dialogue writer in Tamil films like

* Baba,
* Album,
* Chandaikkozhi,
* Unnale Unnale,
* Bhima,
* Dhaam Dhoom,
* Chikku Bukku
* Yuvan Yuvathi
* Modhi Vilaiyadu ,
* Avan Ivan

with over ten films to his credit. Some of these films have successfully crossed 100 days of continuous screening in theatres.

He has written and published five novels, ten collections of short stories, 24 collections of articles, four books for children, three books of translation and nine plays. He also has a collection of interviews to his credit.

Among the many important awards won by him are Tagore Litearay Award for his novel Yamam. Sangeetha Nataka Academy Award for Best Young playwright, Iyal Award from Canada, Award for Best Novel from Government of Tamilnadu, Award of Literary Thoughts, CKK Literary Award, Best Novel Award of Progressive Writers’ Union, Jnanavaani Award and Young Achiever Award, Periyar Award. Salem Tamil Sangam award and also the winner of Kannadasn Award.

Three Doctorates and 13 M.Phil. Degrees have been awarded to scholars for researching into his writings. His books have been prescribed as part of syllabi of 2 Universities and 9 Autonomous Colleges.

S. Ramakrishnan lives in Chennai with wife Chandra Prabha and sons Hariprasad and Aakash.

S Ramakrishnan’s Felicitation Function: Canada’s Iyal Award Event at Chennai by Uyirmmai

’உலக நாயகன்’ விஸ்வரூபம் எடுக்கும் பத்மஸ்ரீ கமல் தோழர் கு ஞானசம்பந்தன் உரை

கவிப்பேரரசு வைரமுத்து

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேச்சு

இரண்டாம் பாகம் (தொடர்ச்சி)

எஸ் ராமகிருஷ்ணன் ஏற்புரை

My experiences with A Muttulingam

சொல்வனம் இதழில் வெளியான வியத்தலும் உண்டே கட்டுரையில் இருந்து:

நெடுஞ்சாலைப் பயணத்தின் நடுவே ஜெயமோகன் இணைந்து கொண்டார். கையில் பத்துத் தோட்டாக்குறிகள் போட்ட சிறு குறிப்பு வைத்திருக்கிறார். அதில் இருந்து கேள்விகள் விழுகின்றன. ‘உங்கள் நாவல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் முயற்சிகள் எங்ஙனம் உள்ளன?’; ‘கனவுக்கும் எழுத்துக்கும் உள்ள தொடர்பு?’

முழுவதும் வாசிக்க: முத்துலிங்கத்துடன் ஒரு தினம்


தொடர்புள்ள பேட்டி & சுட்டி:

அ.முத்துலிங்கம் நேர்காணல் – ஜெயமோகன்: “நீங்கள் அதன்மேல்தான் நிற்கிறீர்கள்!” :: சொல் புதிது ஏப்ரல் 2003 இதழில் வெளியான பேட்டி

ஈழ எழுத்தாளரான அ. முத்துலிங்கம் கல்லூரியில் படிக்கும்போதே தன் முதல் சிறுகதை தொகுதியான ‘அக்கா ‘ வை கைலாசபதி முன்னுரையுடன் வெளியிட்டு பரவலான கவனத்தை கவர்ந்தார் . பிறகு வேலை நிமித்தம் வெளிநாடு சென்றார் .

ஐ நா அதிகாரியாக ஆப்ரிக்க நாடுகளிலும் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானிலும் பணியாற்றினார். இந்த வலுவான அனுபவப்பின்னணியுடன் நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் எழுத வந்தார் . அவரது அடுத்த சிறுகதை தொகுப்பை மித்ர வெளியிட்டது . ‘திகட சக்கரம். ‘ தொடர்ந்து ‘ வடக்கு வீதி ‘ முதலிய தொகுதிகள் வெளிவந்தன.

சமீபத்தில் காலச்சுவடு வெளியீடாக வந்துள்ள ‘மகாராஜாவின் ரயில் வண்டி ‘ மிகவும் இலக்கிய முக்கியத்துவம் பெற்றதாக உள்ளது. அ.முத்துலிங்கத்தின் கட்டுரைகளும் புகழ்பெற்றவை. இலங்கை அரசின் சாகித்ய விருது பெற்றுள்ளார் .


A Muttulingam « Tamil Archives

A Muttulingam is free! But, why? « Snap Judgment

கடற்கரய் in தீராதநதி (குமுதம்) – ஜூன் 1, 2007: “ஜனநாயக்தில் எனக்கிருந்த நம்பிக்கையும், மதிப்பும் போய்க்கொண்டிருக்கிறது – அ.முத்துலிங்கம்”

சமகால தமிழிலக்கியத்திற்கு ஈழம் வழங்கியுள்ள கொடை என்று அ.முத்துலிங்கம் படைப்புகளைச் சொல்லலாம். ஒரு வனத்தின் புதிர்ப் பாதையைப்போன்று விரியும் இவரின் படைப்புகள் ஒரு வானத்தின் திடீர் திடீர் வண்ணமாறுதலுக்கு ஒத்து இயங்குபவை. கூடவே இவரின் படைப்புலகம் மரபின் வேர்களிலிருந்து விடுபட்டுவிடாதவை.

1958 முதல் எழுதிவரும் முத்துலிங்கம் யாழ்ப்பாணத்தில் பிறந்து பல அரசியல் நெருக்கடிகளால் புலம் பெயர்ந்தவர். இருபது வருடங்களாக ஐக்கியநாடுகள் சபையில் அதிகாரியாகப் பணிபுரிந்துவிட்டு ஓய்வு பெற்றபின் தன் மனைவியுடன் தற்சமயம் கனடாவில் வசிக்கிறார்.

இலங்கை அரசின் ‘சாகித்ய விருது’ (1998), ‘இலக்கியச் சிந்தனை விருது’, ‘இந்திய ஸ்டேட் வங்கி பரிசு’ என பல விருதுகள் பெற்றவர். இவரின் 75 சிறுகதைகள் அடங்கிய முழுத் தொகுதி ‘அ. முத்துலிங்கம் கதைகள்’ ஒன்றும், ‘அங்கே இப்ப என்ன நேரம்’ என்ற முழு கட்டுரைத் தொகுதி ஒன்றையும் ‘தமிழினி’ வெளியிட்டிருக்கிறது. ‘வியத்தலும் இலமே’ என்ற, இவர் எடுத்த உலக எழுத்தாளர்கள் நேர்காணல் நூல் காலச்சுவடு வெளியீடாகவும் வந்திருக்கிறது.

‘கடிகாரம் அமைதியாக எண்ணிக் கொண்டிருக்கிறது’’ ‘உயிர்மை’ வெளியிட்டிருக்கும் நூலின் தொகுப்பாசிரியர் இவர்.

Obla Vishvesh :: Three days with Jayamohan

ஒளிப்படங்களுக்கு: ஆல்பெனியில் எழுத்தாளர் ஜெயமோகன்

I have known from personal encounters that it is a strange experience to meet a man of letters who has lived in one’s world of ideas alone. For, an image of the writer is unconsciously built in one’s mind as one reads more and more of his writings. I remember Sri Aurobindo’s remarks on D.H.Lawrence :

‘Anyhow it seems to me Lawrence must have been a difficult man to live with, even for him it must have been difficult to live with himself.’

Such impressions that the reader forms in his mind makes the writer, I believe, a curious object of observation when he is met in person. One at least unconsciously wants to see if the writer fits in the mould that one has already cast the image of the writer!

I have known the Tamil writer Jeyamohan only a year or so. I must have heard his name before but the name had not registered in my mind since I hadn’t read any of his works. Even now, I haven’t read any of his novels but the few articles that I read in the last one year from his website gave me the impression that here was a writer to whom writing was a commitment in life. A sense of such commitment isn’t some choice one makes as one chooses a profession or even a social service, but something that arises out of an inward response to human life. And such a response is invariably informed not only by a mastery of the writings of many great writers but also through conscious and unconscious observations of life in all its complexities. One not only learns from such writers but also enriches one’s life reading them.

When I knew that a good friend of mine was arranging a trip in US for Jeyamohan and that he would be spending a few weeks in the East Coast, I thought it would be a great occasion for me to spend a few days with a good writer by offering to take him around a few places. We meet people all the time and each encounter makes impressions some of which fade and some of which make a permanent remark. I was very curious to know if a writer (as him) would be a different person from most of the people I have liked to observe.

The first impression that I had of him as he stepped out of the greyhound bus from Boston brought a smile to me, since he didn’t have a mustache and the pictures that I had seen of him had it! He had arrived Albany with the distinction of traveling in a greyhound bus within five days of landing in the US (I have friends in the US who have never boarded a greyhound bus though they have been living here for fifteen years!).

As if it were not enough the bus he had originally booked got overbooked as well and he had to board in a later bus to Albany from Boston (which must be one of the rare events in the history of Greyhound bus service in the US, which gets hardly filled). He was shorter than me and a little older.

In the first few minutes itself, I remember I asked him if he spoke Malayalam at home, since his Tamil sounded strange to me (I found out later that I was not familiar with that accent that is common in Kanyakumari district). He was a little tired and sounded taciturn. I remembered Vairamuthu and I was wondering if he too would talk only a little, though he didn’t look stiff as Vairamuthu. That was only till we reached home.

It was already late in the night when I brought him home. From that moment, except for a short time when he was with his laptop, it was him talking, talking all the time till he dropped out of my car and boarded in another that took him to Milford, CT, along with another set of friends.

One cannot judge a person by his capacity to mingle with people (most great writers are very reserved in their nature; Wordsworth and Lawrence, despite their passion for human relationship and their acute sense of togetherness, were loners in their lives), but one observes an admirable openness towards life in the kind of unreserved nature that Jeyamohan had. He became talkative the moment he settled in our couch.

There was no sense of uneasiness of meeting someone and his family for the first time in life. And when he started talking about the Sourashtrians in Tamilnadu, of whom he knew a lot of information, and his acquaintance with M.V.Venkatram, a Sourashtrian-born Tamil writer, there was no more ice to be broken since he had touched the things that wear dear to my family as Sourashtrians — he was no more a stranger for us from then. The man who had been bits and bytes of written text for me began to materialize himself in flesh and blood as Captain Kirk and his Star Trek Crew would materialize from thin air! And as I found out in the next two days with him, he was not just a store house of information (which he possessed in an amazing quantity), but someone to whom such information was not a matter of some kind of intellectual curiosity, but something that gave a direction in his life.

We went to a few picturesque places around. While those places held their regular charm for me, I was more interested in listening to him. I wasn’t in the least disappointed that he didn’t have anything to say about D.H.Lawrence other than the fact that though he had read ‘Sons and Lovers’ and ‘Lady Chatterley’s Lovers’, he had only found Lawrence to be ‘dated’, for which I would have loved to enter into a heated argument with someone else.

Nor was I perturbed when he said Sri Aurobindo’s exposition of the Gita sounded to him as written for Westerners’ understanding. For, I found that an argument about them would lead nowhere since he had the same interests, the interest in Life as related to the Mind and Civilization both had — only that his interests were given shape from another perspective. And there was no need for me to make a point as well, since I was in the presence of someone who had read far greater than me and hence had a lot to hear from.

On a lonely hiking trail along Lake George, one of the most picturesque lakes in North America, after taking a ride in the ferry which was sparsely filled because of intermittent rains that only added more charm to the lake with one half of it reflecting the somber light and the other half reflecting the lush green of the mountains around, he spoke on the relevance of philosophical thinking and the difference between the Eastern and Western modes of philosophical thought.

He elaborated on the snake-rope analogy of the Upanishads and related it to the two modes of perception and also took it to another level as expounded by his spiritual master, Nithya Chaitanya. Since it seemed to be a subject he loved to speak he was animated but pretty dispassionate in what he spoke. He didn’t seem to lose his mental poise at all when making his point.

Through his explanation I could see that he was reiterating a string of thought that he had in his mind for a long time but which needed constant articulation to strengthen itself into a meaningful argument : the very mode of philosophical thinking (which most readers find often repetitive).

Interestingly he had explained to me earlier how Philosophy relates to learning and life. I had earlier been struck by his simplified remarks on Wittgenstein from one of his essays and hence brought in this subject.

What was the purpose of writing thousands and thousands of pages if one could simplify a philosopher as that? That it gave one a sense of the process of thought (as he explained) was evident in the way he expounded his thoughts on its relevance. One may not need to read someone as Wittgenstein in depth to make a remark as he did in his essay on him, but without informed by the achievement of a voluminous philosopher as Wittgenstein, which can come only by reading him seriously, one could not speak the way he could on such subjects.

After a long talk that lasted till we came to the end of the trial, his eyes suddenly caught an animal that peeped out of its hole from the root of a tree and he was immediately fascinated by it. The lake was looking stunning as well and we switched over to talking something else.

A few friends at Albany wanted to meet him. He for sure seemed to be popular, at least through the quarrels in the battlegrounds of bloggers, if not through his novels. A few friends came to meet him at the Niagara Falls from Toronto .

As always, Niagara falls was crowded. I have never been attracted by this water falls except in unusual occasions as winter when the water freezes, but I was glad that Jeyamohan met some of his good friends from Toronto there and had a nice chat with them, which I too enjoyed listening to. The long drive to and fro Niagara Falls was memorable as well, since he continuously kept talking.

The third day after he came to Albany I dropped him off on the way to Connecticut , where he got picked up by his other friends. His unceasing voice, I kept hearing all through my drive back home.

ஆல்பெனியில் எழுத்தாளர் ஜெயமோகன்

அனைத்துப் புகைப்படங்களும்: DhooL.com :: View topic – SOTD #551: Vishvesh Obla | சொல்வனம் » ஓப்லா விஸ்வேஷ்

அரசியல் பங்களிப்பு, தமிழர் நலன்: வெளிநாடுகளில் தெற்காசியர்கள் – வெங்கட்

2. அமெரிக்காவுடன் ஒப்பிட்டால் கனடா அரசியலில் தெற்காசியர்கள் பெருமளவில் ஈடுபடுவதாக உணர்கிறேன். உண்மையா? இதனால் தமிழர்களின் நலன் முன்னெடுத்துச் செல்லப்படுகிறதா? அமெரிக்காவில் இந்திய வம்சாவழியினரின் தேர்தல் பங்களிப்பு குறித்த உங்கள் எண்ணங்கள் ப்ளீஸ்…

உன்மைதான். தெற்காசியர்களின் பங்கேற்பு கனேடிய அரசியலில் தொடர்ச்சியாக அதிகரித்துவருகிறது. இதில் தாராளக் கொள்கைகளைக் கொண்ட புதிய ஜனநாயாகக் கட்சியின் பங்கை மிகவும் பாராட்டியாக வேண்டும். (தலைவர் ஜாக் லெய்ட்டனின் மனைவி சீன வம்சாவளி ஒலிவியா சௌ). அதிக அளவில் சிறுபான்மையினரை நிறுத்துவது இவர்கள்தான்.

அதற்கு அடுத்தபடியாக லிபரல்கள். பஞ்சாபியனர் அதிகம் வசிக்கும் (சொல்லப்போனால் பஞ்சாபியர் மாத்திரமே வசிக்கும்) டொராண்டோவின் வடமேற்குப் புறநகர் ப்ராம்ப்டனில் (Brampton) ரூபி பல்லா தற்பொழுதைய லிபரல் எம்.பி. அழகுப்போட்டி ஒன்றையே மூலதனமாக அரசியலில் இவர் வந்தபொழுது எனக்கு நம்பிக்கையில்லை; ஆனால் தற்பொழுது தொகுதியின் அடிப்படை நலன்களை நல்ல முறையில் பாதுகாக்கிறார். இன்னும் சில பஞ்சாபியினர் எம்.பிக்களாக இருக்கிறார்கள், (ஒண்டாரியோ, அல்பெர்ட்டா, ப்ரிட்டிஷ் கொலம்பியா மாநிலங்களில்). பஞ்சாபியரைப் போலவே பாக்கிஸ்தானியர், இரானிய வம்சாவளியினர் என்று சிலரும் எம்பிக்களாக இருக்கிறார்கள். சீனர்களைச் சொல்லவே வேண்டாம்.

வலதுசாரி கன்ஸர்வேட்டிவினர் பொதுவில் அமெரிக்க ரிபப்ளிக்கன் கட்சியைப் போலத்தான் இவர்கள் கூட்டத்தில் பொற்றலை (Blond) இல்லாதவர்கள்தான் சிறுபான்மை. கறுப்பு, சீனர், இந்தியர் இவர்கள் யாராவது தென்பட்டால் அதிசயம்தான். ஆனால் சமீபத்தில் பார்க்க நன்றாக இருப்பதால் ஸ்டீபன் ஹார்ப்பரின் எல்லா போட்டோக்களிலும் பின்னால் நீல டர்பனை அணிந்த ஒரு சீக்கியரும், இடுப்புக்குக் கீழே ஒளிந்துகொண்டு ஒரு சீனரும் தென்படுகிறார்.

ப்ளாக் க்யெபெக்வாவுக்கு இந்த நாடகமாடும் தேவைகூட கிடையாது.

ஆனால் தமிழர் யாரும் இன்னும் மத்திய அரசியலில் முதலடியைக் கூட எடுத்து வைக்கவில்லை. இங்கிருக்கும் இந்தியத் தமிழர்களின் அதிகபட்ச சமூக நடவடிக்கை கர்நாடக சங்கீதக் கச்சேரிக்குப் போவதுதான். எனவே அவர்களை ஒதுக்கிவிடலாம்.

டொராண்டோ பெருநகர் பகுதியில் மாத்திரம் இரண்டரை லட்சம் ஈழத்தமிழர்கள் இருக்கிறார்கள். இவர்கள் சமூகத்தில் எல்லா அடுக்குகளிலும் இடம்பெற்றிருக்கிறார்கள்; மருத்துவர், வழக்கறிஞர், தொடங்கி மாஃபியா வரை எல்லாமே உண்டு. ஆனால் ஜனநாயக முறை அரசியலில் இவர்கள்க்கு இன்னும் இடமில்லை. இதற்குக் காரணம் கடின உழைப்பாளிகள் பலருக்கு அரசியல் தேவையற்றதாக இருக்கிறது. அரசியலுக்கு வரும் பிற தமிழர்கள், தமிழர் நலனை மாத்திரமே முன்வைக்கிறார்கள். (அதாவது விடுதலைப்புலிகளின் நிலைப்பாட்டை). இது தொகுதியில் இருக்கும் பிற சமூகத்தினரின் ஒரு ஓட்டுகூட அவர்களுக்குக் கிடைக்காமற் செய்துவிடுகிறது.

கனேடியத் தமிழர்கள் பெரும்பாலும் உள்ளார்ந்த பார்வையையே கொண்டவர்கள், இதை உதறிவிட்டு கனேடியப் பொதுநலனை முன்னிருத்தி அதன் வாயிலாகத் தமிழர் நலனை முன்னெடுத்துச் செல்லாதவரை இவர்களுக்கு மத்திய அரசில் என்ன, உள்ளூர் மாநகராட்சித் தேர்தலில்கூட ஒரு இடமும் கிடைக்கப்போவதில்லை. பஞ்சாபியனர் இதைத் திறமையாகச் செய்கிறார்கள், பாக்கிஸ்தானியர் கூட. ஆனால் 2.5 லட்சம் தமிழர்களில் இன்னும் ஐந்து வருடங்களிலாவது உள்ளூர் நகர்மன்ற உறுப்பினராகும் வாய்ப்புகூட யாருக்கும் இல்லை என்பது வருத்தமான நிலைதான்.

அமெரிக்க அரசியலில் இந்தியர்களின் பங்களிப்பைக் குறித்து என்னைவிடத் திறமையாகக் கருத்து சொல்லப் பலரும் இருக்கிறார்கள். நான் பார்த்தவரை அரசியலில் ஈடுபடும் பல இந்திய வம்சாவளி அமெரிக்கர்கள் தங்கள் பின்புலத்தின் காரணமாகவோ, அதன் நலனுக்காகவோ இல்லை. அதையும் மீறித்தான் அவர்கள் அரசியலில் இருக்கிறார்கள். (Indians are not in American politics because of it, they are there despite of it.) தனிப்பட்ட நலன்கள் மாத்திரமே அவர்கள் முன்வைப்பது. பாபி ஜிந்தால் ஒருவர்தான் ஓரளவுக்கு அமெரிக்க அரசியலோடு இயைந்துபோகிறார் என்று தோன்றுகிறது.

3. டோக்யோவிலும் தாங்கள் வசித்ததுண்டு அல்லவா? ஜப்பான் சூழலோடு அமெரிக்க அதிபர் தேர்ந்தெடுப்பு எவ்வாறு வேறுபடுகிறது?

ஜப்பானிய அரசியல் அமெரிக்கக், கனேடிய, ஏன் இன்னும் பல ஜனநாயக முறைகளிலிருந்து வேறுபட்டது.

1950களில் அமெரிக்கா பல பில்லியன் டாலர்களை இரகசியமாகச் செலவிட்டு தஙகள் சித்தாந்தங்களை ஜப்பானிய மண்ணில் வேரிடச் செய்தார்கள். இதே ரீதியாக பாக்கிஸ்தான், சிலி, ஈரான் உட்பட பல நாடுகளில் அவர்கள் கொடுங்கோலர்களை வளர்ந்த்தெடுக்க ஜப்பான் கொஞ்சம் தப்பித்துக் கொண்டு ஜனநாயகத்தைப் பற்றிக் கொண்டது. 1955 தொடங்கி இன்றுவரை ஜப்பானில் (ஒரு சிறிய இடைவெளியைத் தவிர) லிபரல் டெமாக்ரடிக் என்று சொல்லப்படும் ஒரே கட்சிதான் ஆண்டுவருகிறது. இது கலவை இடது-வலது கட்சி.

தனியார் தொழில் முன்னேற்றம் போன்ற விஷயங்களில் ரிபப்ளிக்கன் கட்சியை ஒத்தது இதன் கொள்கை, ஆனால் வலுவான, எல்லாவற்றிலும் தலையிடும் மத்திய அரசு, இலவசப் படிப்பு, மருத்துவம், ஓய்வுப் பாதுகாப்பு போன்ற பல விஷயக்களில் அமெரிக்க டெமாக்ரட்களை ஒத்தவர்கள். அதைத்தவிர பொதுவில் ஜப்பானின் கலாச்சாரம் இடதுசாயும் லிபரல் கலாச்சாரம்தான், இங்கே கருக்கலைப்பு எதிர்ப்பு, வலுவான ராணுவம், எல்லோரும் துப்பாக்கி வைத்துக் கொண்டு சுடலாம் போன்ற சித்தாந்தங்கள் வேகாது.

ஜப்பானிய ஜனநாயகம் என்பது லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் (ஜியூ மின்ஷுதோ) உட்கட்சி ஜனநாயகம் என்ற வகையில் மிகவும் செழிப்பாகவே இருக்கிறது. ஜியூவின் உள்ளே பல பிரிவுகள் உண்டு. இவர்களுக்குளே பூசல் மிகவும் பிரபலம். 55 தொடங்கி ஐம்பது வருடங்களில் கிட்டத்தட்ட 25 பிரதமர்கள் என்று ஆட்சி-ஆட்சிக்கலைப்பு ஆட்டங்கள் ஜப்பானில் சாதாரணம். ஆனால், ஜியூக்கள் மற்றவர்கள் தலையெழும்பச் செய்யாமல் பார்த்துக்கொள்ளும் திறமையில் உன்னதம் கண்டவர்கள். கட்சியில் அடுக்கு முறைகள் வலுவானவை.

இதையெல்லாம் தாண்டி ஒபாமா மாதிரி ஒருவர் ஜப்பானில் வந்துவிட முடியாது.

அடுக்கு முறையில் படிப்படியாக மேலெழும்பி வருபவர்கள்தான் பிரதமர்கள். 1999-2001 ல் ஜப்பானில் நான் வசித்த பொழுதே யோஷிரோ மோரி, ஜுனிச்சிரோ கொய்ஸுமி, ஷின்ஷோ அபே போன்றவர்களின் பெயர்கள் கெய்ஸோ ஒபூச்சிக்கு அடுத்தபடியாக அடிபட்டன. இவர்கள் அனைவரும் பின்னால் ஒவ்வொருவராக பிரதமர்கள் ஆனார்கள். அப்பொழுது மேலடுக்கில் இருந்ததில் இன்னும் பிரதமர் ஆகாமல் இருப்பவர் டோக்கியோ மேயர் இஷிகாரா ஒருவர்தான். எனவே ஜப்பானிய ஜனநாயகம் என்பது லிபரல் டெமாக்ரடிக் கட்சிக்குள்ளே ஒழுங்காகக் கட்டமைக்கப்பட்ட வரிசையில் நகர்ந்து இலக்கை அடைவதுதான்.

பெண்களுக்கு ஜப்பானிய அரசியலில் இன்னும் சொல்லிக்கொள்ளும் இடமில்லை.

4. வெற்றிபெற்ற அடுத்த அமெரிக்க ஜனாதிபதி உங்களை ஆலோசகராக நியமிக்கிறார். என்ன அட்வைஸ் கொடுப்பீர்கள்?

தொடரும்…

'தேர்தல் நடக்கும் சுவடே இங்கே வெளியே தெரியாது'

இந்த வாரம் வெங்கட்டுடன் உரையாடல்.

1. கனடாவிலும் புதிய தலைவர் வரப்போகிறார் போலிருக்கிறதே… பக்கத்து பக்கத்து நாடுகளின் உறவு எப்படி மாறும்? அமெரிக்க கோலகலத்தோடு ஒப்பிடுங்களேன்.

கனடாவில் புதிய தலைவர் வரப்போகிறாரா இல்லையா என்று தெரியவில்லை. இப்பொழுதிருக்கும் நிலவரத்தில் வலதுசாரி கன்ஸர்வேட்டிவ் பிரதமர் ஸ்டீவன் ஹார்ப்பரே திரும்ப வரக்கூடும். அமெரிக்கா கனடா விவகாரத்தைப் பார்க்குமுன் கனடாவின் அரசியல் அமைப்பைக் கொஞ்சம் தெரிந்துகொள்ளலாம்.

  • வலதுசாரி – கன்ஸர்வேட்டிவ் – தற்பொழுதைய பிரதமர் ஸ்டீவன் ஹார்ப்பர் (Stephen Harper) – ஜார்ஜ் புஷ்ஷின் நண்பர், (கொச்சையாக அமெரிக்க அடிவருடி என்று இங்கே சொல்லப்படுபவர்). அல்பெர்ட்டா எண்ணைய் முதலாளிகளின் நண்பர்

  • இடதுசாரி – லிபரல் – கிட்டத்தட்ட பதினைந்து வருட ஆட்சிக்குப் பின் இரண்டு வருடங்களாக முக்கிய எதிர்க்கட்சி – தலைவர் ஸ்டெஃபான் டியான் (Stéphane Dion) – பசுமை விரும்பி.
  • அதி இடதுசாரி – நியு டெமாக்ரடிக் – நிரந்த மூன்றாமிடம் – தொழிற்சங்க ஆதரவு; தலைவர் ஜாக் லெய்ட்டன் (Jack Layton)
  • க்யெபெக் பிரிவினைவாதி கட்சி – ப்ளாக் க்யெபெக்வா (Bloc Québécois) – தலைவர் கில் ட்யூஸெப் (Gilles Duceppe) – தற்பொழுது பல் பிடுங்கப்பட்ட பாம்பு; சித்தாந்தத்தில் லிபர்ல்களையொத்த இடதுசாரிகள்.

(இன்னும் கொஞ்சம் விபரம் என்னுடைய பழைய தேர்தல் பதிவிலிருக்கிறது)

  1. கனேடியத் தேர்தல் பிரச்சாரம் – முதல் வாரப் போக்கு
  2. கனேடிய அரசு நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் தோல்வி
  3. இந்திய பிராண்ட் அரசியல் கனடாவில் பரபரப்பாக விற்பனை

இதைத் தவிர புதிதாகப் பலம்பெற்று வரும் பசுமைக் கட்சி. ஆனால் இவர்களுக்கு ஒரூ இடம் கிடைத்தாலே பெரிய வெற்றியாகக் கருதப்படும். கடந்த இரண்டு ஆண்டுகளாக சிறுபான்மையாக அரசு நடத்திவரும் ஹார்ப்பர் தன் அரசாங்கம் செயலிழந்த நிலையிலிருப்பதாகச் சொல்லி அரசைக் கலைத்திருக்கிறார். இதற்கு முக்கிய காரணம் புதிய லிபரல் தலைவர் ஸ்டெஃபான் டியான் கொள்கைப் பிடிப்பு இருக்குமளவுக்கு ஜனரஞ்சக அரசியல் நடத்தத் தெரியாதவர். பேச்சுத் திறனற்றவர். (வரவிருக்கும் பிரதமர் விவாதங்களில் ஸ்டீவன் ஹார்ப்பரும் ஜாக் லெய்ட்டனும் இவரைக் கடித்துக் குதறப்போவது உறுதி).

அதி-இடதான புதிய ஜனநாயகத்தின் இருப்பு லிபரல்களை விட நாங்கள் லிபரல்களானவர்கள் என்று காட்டுவதில் இருப்பதால் அவர்களுக்கு கன்ஸர்வேட்டிவ்களைவிட டியான்-தான் முக்கிய எதிரி. என் கணிப்பில் மீண்டும் சிறுபான்மை ஆட்சியாக, ஆனால் முன்னைவிட சற்று அதிக இடங்களைப் பெற்று கன்ஸர்வேட்டிவ்கள் திரும்ப வரக்கூடும். ஆனால் இவர்களுக்கு கனடாவின் பொருளாதார இதயமான ஒண்டாரியோ மாநிலத்தில் சொல்லிக் கொள்ளத்தக்க எந்த வெற்றியும் கிடைக்காது.

படிப்பறிவு குறைந்த, எண்ணெய்வளம் மிக்க அல்பெர்ட்டா மற்றும் மேற்கு மாநிலங்களில்தான் ஆதரவு கிட்டும். க்யெபெக்கில் பிரிவினை கட்சி பலமிழந்து காணப்படுவதால் அங்கு வலதுசாரியினர் ஒன்றிரண்டு புது இடங்களைப் பெருவார்கள். மொத்தத்தில் இந்தத் தேர்தல் முற்றிலும் தேவையற்றது. லிபரல்களை இன்னொரு தோல்விக்குள்ளாக்கி (தான் முழு வெற்றி பெறாவிட்டாலும்) உட்கட்சிப் பூசலை வளர்த்து பலவீனப்படுத்துவது ஒன்றே இதன் நோக்கம். இந்தப் பம்மாத்தை மக்களிடம் பரிய வைக்கச் செய்யும் பேச்சுத்திறன் ஸ்டெஃபான் டியானுக்குச் சற்றும் கிடையாது.

இனி அமெரிக்க ஒப்பீடு:

அமெரிக்காவைப் பார்க்க இங்கே தேர்தல் அவ்வளவு கோலாகலம் கிடையாது. அதிகபட்சம் யாராவது ஒருவர் வீட்டில் மூன்று தட்டிகள் புல்பரப்பில் குத்தியிருப்பார்கள் (அவர் போட்டியாளர் அல்லது அவரின் மச்சானாக இருக்கக்கூடும்). மொத்தம் ஐந்து வாரங்களில் எல்லாம் முடிந்துவிடும்.

ஒருவரை ஒருவர் அதிகம் திட்டிக்கொள்ளமாட்டார்கள். (நீ முட்டாள் என்றுகூடச் சொல்லமாட்டார்கள், “ஏனுங்க நீங்க முட்டாளமாதிரி பேசுறீங்க” என்றுதான் சொல்வார்கள்). இங்கே பிட்புல், ஹாக்கி அம்மாக்கள், ராணுவத்தில் குண்டடிபட்டவர்கள், கீழே வேலைசெய்யும் பெண்ணிடம் தவறாக நடந்து கொள்பவர்கள், என்றெல்லாம் தலைவர்கள் பீற்றிக் கொள்ளமாட்டார்கள். குடும்பங்கள் பெரும்பாலும் அரசியலில் இழுக்கப்படாது. தொலைக்காட்சி விவாதத்தில் பணவீக்கம், படைக்குறைப்பு, பசுமையாக்கம் என்றுதான் பேசுவார்கள். (அதனால் எந்த சுவாரசியமும் இருக்காது, மறுநாள் பேப்பரில் படித்தால் போதும்).

ஒரு விஷயத்தைச் சொல்லியாக வேண்டும்; சராசரி கனேடியரின் விழுமியக்களெல்லாம் இடதுசாரிதான். கனேடிய வலதுசாரி கன்ஸர்வேட்டிவ்கள் அமெரிக்க டெமாக்ரடிக்களைவிட அதிகமாகவே லிபரல்கள். 40 மில்லியன் ஸ்பானிஷ் பேசும் ஹிஸ்பானிய அமெரிக்கர்களுக்கு அமெரிக்காவில் எந்தத் தனியுரிமையும் கிடையாது. ஆனால் க்யெபெக்கில் மாத்திரமே இருக்கும் ப்ரெஞ்சுக் குடிமகன் இரண்டுநாள் கார் பயணம் செய்து சென்றாக வேண்டிய அல்பெர்ட்டாவிலும்கூட ப்ரெஞ்சு உரிமைகளைப் பெறுவார். இதை எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் மாற்றமுடியாது.

அதே போலே

  • அடிப்படைக் கல்வி,
  • இலவசக மருத்துவ உதவி,
  • ஓய்வுக்காலப் பாதுகாப்பு,
  • சிறுபான்மை (இந்தியர், சீனர்) குடிவரவு,
  • தற்பாலர் உரிமைகள்,
  • கருக்கலைப்பில் பெண்களுக்கான உரிமை,

போன்றவற்றை கனேடியர்கள் பொதுவாக ஏற்றுக்கொள்கிறார்கள். அதில் பெருமிதமடைகிறார்கள். இதில் தீவிர வலதுசாரிகளும் அடக்கம், நான் சம்பாதிக்கிறேன், நான்தான் பலனடைய வேண்டும் என்ற வலதுசாரி இங்கே எடுபடாது.

ஹார்ப்பர் வந்தால், கூடவே மெக்கெய்னும் வந்தால் அமெரிக்க அராஜகங்களுக்கு அடுத்த நொடியிலேயே துணைநிற்பார். ஸேரா பேலின் ஜார்ஜியாவைக் காப்பாற்ற என்று சொல்லி ரஷ்யா மீது படையெடுத்தால் ஹார்ப்பர் அவர்களுக்கு பூட்ஸ் பாலீஷ் போடுக்கொடுப்பார். அமெரிக்கா எண்ணைக்காகத் துளையிட்டால் ஹார்ப்பர் அதைவிட ஆழமாக அல்பெர்ட்டாவில் துளையிட்டு அந்த எண்ணையை டெக்ஸாஸ்க்கு அனுப்புவார். அமெரிக்காவை உதாரணம்காட்டி இங்கும் மாசுக்கட்டுப்பாடு தேவையில்லை என்று சொல்வார்.

பொதுவில் இழந்துபோன ஆஸ்திரேலிய, ஸ்பெயின் நட்புகளை அமெரிக்கா கனடாவின் தோழமையால் சரிகட்டிக் கொள்ளலாம். அல்பெர்ட்டாவில் மெக்கெய்-பேலினுக்குக் கோவில்கட்டி அங்கும் கருக்கலைப்புக்குத் தடைவிதிக்க முயல்வார்கள். பொதுவில் லிபரல்களான பிற கனேடியர்களால் இது தீவிரமாக எதிர்க்கப்படும். ஆனால் உருப்படியாக அமெரிக்க-கனேடிய பரஸ்பர ஒப்பந்தம் எதுவும் வரும் என்ற நம்பிக்கை எனக்கில்லை. ஏனென்றால் அந்த நிலையில் பயனடையப்போவது ஒண்டாரியோ மாநிலமாகத்தான் இருக்கும், சக்திவாய்ந்த ஒண்டாரியோ ஹார்ப்பருக்கு எப்பொழுதுமே தலைவலிதான். எனவே கனடாவுக்கு அமெரிக்காவிலிருந்து எந்த நன்மையும் வராமல் பார்த்துக்கொள்வார்.

ஹார்ப்பர் வந்து ஒபாமா வந்தால் அடுத்த நொடியிலேயே ஹார்ப்பர் அவரிடமும் நட்பு பாராட்டுவார். ஆனால் ஒபாமா தேர்ந்தெடுக்கப்படாமல் இருக்க ஹார்ப்பர் ரிபப்ளிக்கன் கட்சிக்கு உதவ முயன்றதை ஒபாமா எளிதில் மன்னிப்பார் என்று தோன்றவில்லை. (ஜனநாயக் கட்சி ஆரம்ப கட்டத் தேர்தல் சமயத்தில், கனேடிய அரசு அதிகாரி ஒருவரிடம் தான் ஆட்சிக்கு வந்தால் கனேடிய நலன்கள் எந்த வகையிலும் மாற்றமடையாது என்று சொன்னார், உடனே கன்ஸர்வேட்டிவ் ஆட்கள் அதை அமெரிக்க ஊடகத்தில் பரப்ப ஒபாமா அமெரிக்க நலனுக்கு எதிரானவர் என்று ஹில்லரி முழங்கினார். கனேடிய பொதுநலனைவிட அமெரிக்க ரிபப்ளிக்கன்களின் நலன் முக்கியமா என்று எதிர்க்கட்சிகள் இங்கே வெடிக்க, அரசு அதிகாரி ஒருவரை பதவிநீக்கி ஹார்ப்பர் தன்னைக் காத்துக்கொண்டார்). ஒபாமா வருவது ஹார்ப்பருக்கு உவந்ததாக இருக்காது.

ஏதாவது அசம்பாவிதம் நடந்து லிபரல்கள் ஆட்சிக்கு வந்து மறுபுறத்த்தில் மெக்கெய்ன் ஆட்சிக்கு வந்தால் புஷ்ஷின் முதல் நான்காண்டுகளைப் போல கனடாவின் இருப்பை அமெரிக்க அரசு முற்றிலும் மறக்கும். வீராங்கனை பேலினுக்கு பஸ்மண்டை (nerd) டியோனை சீண்டி அழவிடுவது பொழுதுபோக்காக அமையும். அவரது அழுகையை மீண்டும் மீண்டும் ஒலிபரப்பி ரிபப்ளிக்கன் ஊடகங்கள் மாத்திரமல்லாமல் முழு அமெரிகாவுமே பொழுதுபோக்கு பெறும். குடியரசுக்கட்சியனர் எப்பாடுபட்டாவது கனடிய லிபரல் ஆட்சியை ஒழித்து கண்ஸர்வேட்டிவ்களைக் கொண்டுவர நன்றிக்கடனாக உதவுவார்கள்.

அந்த அசம்பாவிதம் இங்கே நடக்கும்பொழுது ஒபாமா ஆட்சிக்கு வந்தால் அமெரிக்க நலன்களுக்கு எதிராகக் கனடாவுக்கு உதவுவதாக ஒபாமாவை ரிபப்ளிக்கன்கள் சீண்டிக்கொண்டிருப்பார்கள். ஆனால் சில நீண்டகால ஒப்பந்தங்கள் உருவாகும். அதிகக் கூச்சல்கள் இல்லாமல் சில திட்டங்கள் நடக்கக்கூடும்.

ஆனால் எது எப்படியோ கிளிண்டன் போகும்பொழுது அமெரிக்காவும், க்ரெய்ட்ச்யென் போகும்பொழுது கனடாவும் பொருளாதாரத்தில் ஏறுமுகமாக இருந்தன. புஷ்ஷுக்குப் பிறகான அமெரிக்காவும் தற்பொழதைய வலதுசாரி அரசியலில் கனடாவும் பொருளாதாரச் சரிவில் இருக்கின்றன. இந்த நிலையில் அமெரிக்காவின் வேலைவாய்ப்புகளைக் கனடா பறித்துக்கொள்கிறது என்று அமெரிக்கார்கள் கூச்சலிடுவதையும் (இது அமெரிக்காவே முன்னின்று நடத்தும் உலகமயமாக்கலின் பின்விளைவுதான் என்பதை அமெரிக்கர்கள் உணர்வதாகத் தெரியவில்லை), கனடாவின் நீர், உலோகங்கள், பெட்ரோலியம், மரம் போன்ற இயற்கை வளங்களை அமெரிக்கா சூறையாடுகிறது என்று முனகும் கனேடியர்களும் பொருளாதாரச் சரிவு நிலையில் பரஸ்பர வெறுப்பைத்தான் உமிழப்போகிறார்கள் என்று தோன்றுகிறது. எல்லாம் நன்றாக இருக்கும் நிலையில் நட்பும் நன்றாகவே இருக்கும், கஷ்டகாலத்தில் நட்புகள் விரிசலடைவது இயற்கைததான்.

நான் இங்கே பொதுவான பார்வையைத்தான் வைத்திருக்கிறேன்.

பொருளாதாரம், பாதுகாப்பு, எல்லைப் பாதுகாவல், இயற்கை வளப் பகிர்வு, என்று பல விஷயங்களை விரிவாக அலச இங்கே இடமில்லை.

2. அமெரிக்காவுடன் ஒப்பிட்டால் கனடா அரசியலில் தெற்காசியர்கள் பெருமளவில் ஈடுபடுவதாக உணர்கிறேன். உண்மையா? இதனால் தமிழர்களின் நலன் முன்னெடுத்துச் செல்லப்படுகிறதா? அமெரிக்காவில் இந்திய வம்சாவழியினரின் தேர்தல் பங்களிப்பு குறித்த உங்கள் எண்ணங்கள் ப்ளீஸ்…

பதில் நாளை…