Tag Archives: Visits

நகரேஷு நியு யார்க்

பிரையன் ஈனோ இங்கே கதை சொல்கிறார். அந்தக் கதையை நான் இவ்வாறு என் மொழியில் சொல்லிப் பார்க்கிறேன்:

1978ஆம் வருடம். நியு யார்க் நகரத்தில் இருந்தேன். அரசல் புரசலாக எனக்கு அறிமுகமாகியிருந்த அந்தப் பணக்காரரின் புதுமனைப் புகுவிழாவிற்கு அழைப்பு வந்திருந்தது. குண்டும் குழியுமான சாலைப் பயணம். வாடகைக் கார் ஓட்டுனர் என்னை சந்தேகாஸ்தபமாகப் பார்த்துக் கொண்டேதான் வண்டியோட்டினார்.  போகும் வழியி்ல் வீட்டின் வெளிச்சுவர்களில் விவகாரமான மொழியில் கரியினால் மிரட்டப்பட்ட கிறுக்கல்களும் காணக்கிடைத்தது.

இறுதியாக அந்தப் பாழடைந்த பழைய பின்னி மில்ஸ் கட்டிடம் போல் சிதிலமடைந்த கோடவுனில் வண்டியை நிறுத்தினார். அதன் வாயிற்படிகளில் இருவர் மயங்கி உலகமறியாத போதையில் கிடந்தனர். தெருவில் வேறு அரவமே இல்லை.

”நாம தப்பா வந்துட்டோம்னு நெனக்கிறேன்”, என்று ஈனஸ்வரத்தில் சொல்லிப் பார்த்தேன்.

அவர் சரியான விலாசத்திற்குத்தான் கொண்டு வந்து சேர்ந்த்திருந்தார். என்னுடைய நண்பன் உற்சாகமாகக் கூவினான், “மேல் மாடி!!”. எனக்கு இன்னும் கொஞ்சம் நம்பிக்கை பாக்கி இருந்தது. அவன் விளையாட்டுப் பையன். அழைப்பு மணியை அடித்துவிட்டு, திறக்கும்போது, “எல்லாம் நிஜம்னு நம்பிட்டியா…” என்று வேடிக்கை மாயம் செய்யப்போகிறான் என கற்பனை செய்துகொண்டேன்.

மின்தூக்கி க்ரீச்சிடும் அபாய ஓசையுடன் அசைந்தாடி அதல பாதாளத்தில் தள்ளும் பிரக்ஞையுடன்  வந்து சேர்ந்தது. லிஃப்டில் இருந்து வெளியே வந்தால், தகதகவென இழைக்கப்பட்ட கோடானுகோடி மினுக்கும் மாளிகை அரண்மனைக்குள் கால் வைத்தேன்.

எனக்கு விளங்கவில்லை. இவ்வளவு படோடாபமாய், இத்துணை பணம் வாரியிறைத்து, இந்த மோசமான பகுதியில் எதற்காகக் குடியேற வேண்டும்? விருந்துபசரிக்கும்  அவனின் குடும்பத்தலைவியிடம் கேட்டே விட்டேன்: “உங்களுக்கு இந்த டஞ்சன் பிரதேசம் பிடித்திருக்கிறதா?”

“நான் குடியிருந்த வீடுகளிலேயே, இந்த இடம்தான் பெஸ்ட்!

“ஆனால், வெளியில் பார்த்தால் பயமாக இருக்கிறதே?”

“ஓ… பேட்டையைச் சொல்கிறீர்களா! அது வெளியில் அல்லவா இருக்கிறது!?!”

நியு யார்க் என்றால் இந்த மனநிலைதான். இந்த மனோபாவம்தான் என்னை மீண்டும் மீண்டும் நியு யார்க் நகரத்திற்கு இழுக்கிறது. எல்லாமே கொண்டாட்டம்; எதிலும் வேகம்; இப்பொழுதைய தருணத்தைக் கொண்டாடுவோம்; நாளை நம் நாளோ… நமன் நாளோ!

New_York_Pigeon_Sky_Towers

இந்த தடவை நான்கு நாள் நகரத்தில் கழிக்க முடிந்தது.

  1. முதல் நாள்: விட்னி அருங்காட்சியகம்
  2. இரண்டாவது நாள்: செண்ட்ரால் பார்க்
  3. உலக வர்த்தக மையம் + 9/11 நினைவுச் சின்னம்
  4. டைம்ஸ் சதுக்கம் & அலாவுதீனும் அற்புத விளக்கும்

நான்கையும் பற்றி தனித்தனியே எழுத வேண்டும். எல்லாவற்றுக்கும் மேல் இயக்குநர் இளமுருகுவையும் எழுத்தாளர் அரவிந்தன் கன்னையனையும் சந்தித்ததையும் நண்பர் டைனோ மற்றும் அவரின் மனைவியின் அறுசுவை விருந்தோம்பலையும் அவர்களின் உபசரிப்பையும் டைனோ வீட்டில் உண்ட நளபாக விருந்தையும் விவரிக்க வேண்டும்.

இன்ஷா நியு யார்க்.

ஜெயமோகன் அமெரிக்க வருகை

விதுரர்களின் வீடுகள்

மகாபாரதத்தில் புகழ் பெற்ற கதை இது.

கௌரவர்களின் தலைநகரமான ஹஸ்தினாபுர நகரத்திற்கு பகவான் கிருஷ்ணன் வருகிறார். நீண்ட பயணத்திற்கு பின் களைப்போடு காணப்படுகிறார் கிருஷ்ணன். எல்லோரும் அவரவர் வீட்டிற்கு அழைக்கிறார்கள்.

விஷ்ணு சஹஸ்ராமம் அருளிய பிதாமகர் பீஷ்மர் அழைக்கிறார்: “என் வீட்டில் தங்குவாயா கிருஷ்ணா?”

அரசன் துரியோதனன் சொல்கிறான்: “நல்ல விருந்தைத் தயார் செய்திருக்கிறேன். சகல சௌகரியங்களும் செய்திருக்கிறேன். பட்டு மெத்தையோடு, கச்சேரிகளும், நடன நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்திருக்கிறேன். எங்கள் அரணமனைக்கு வா கிருஷ்ணா!”

பிருஹஸ்பதியின் அவதாரமான துரோணாச்சாரியார் சொல்கிறார்: “உன் ஆத்ம நண்பன் அர்ஜுனனின் குருவான என் வீட்டிற்கு வாயேன்… கிருஷ்ணா!”

வேத வியாசர் போன்று சப்தரிஷிகளில் ஒருவரான ஆச்சாரியார் கிருபரும் தன் இல்லத்திற்கு அழைக்கிறார்.

முற்பிறவியில் மகாவிஷ்ணுவின் மிகச்சிறந்த பக்தனான பிரகலாதனாக இருந்த பாலிகன் அழைக்கிறார்.

அந்த வீதியின் மூலையில் இருக்கும் சிறு குடிலைக் காண்பித்து, “அந்த வீடு யாருடையது?” என்று கிருஷ்ணர் கேட்கிறார். ”அது உன்னுடைய வீடு.” என்கிறார் விதுரர். அங்கே தங்கப் போவதாக கண்ணன் அறிவிக்கிறார்.

அங்கே சென்று விதுரரின் மனைவி அளித்த வாழைப்பழத் தோல்களை உண்டதாகக் கதை வளரும். அவ்வாறு பல பெரிய பெரிய அழைப்புகள் இருந்தாலும், அவர்களையெல்லாம் விட்டு விட்டு, எளியவர்களின் வீடுகளில் ஜெயமோகன் தங்கத் திட்டமிட்டு இருக்கிறார்.


JeMo-writer-jayamohan-tamil-authors-Jeyamohan

पत्रं पुष्पं फलं तोयं यो मे भक्त्या प्रयच्छति ।
तदहं भक्त्युपहृतमश्नामि प्रयतात्मनः ॥९- २६॥

பத்ரம் புஷ்பம் ப²லம் தோயம் யோ மே ப⁴க்த்யா ப்ரயச்ச²தி |
தத³ஹம் ப⁴க்த்யுபஹ்ருதமஸ்²நாமி ப்ரயதாத்மந: || 9- 26||

ய: ப⁴க்த்யா = எவர் அன்புடனே
பத்ரம் புஷ்பம் ப²லம் தோயம் = இலையேனும், பூவேனும், கனியேனும், நீரேனும்
மே ப்ரயச்ச²தி = எனக்கு அளிப்பவன் ஆயின்
ப்ரயதாத்மந: = முயற்சியுடைய அவர்
ப⁴க்த்யுபஹ்ருதம் = அன்புடன் அளித்த
தத் அஹம் அஸ்²நாமி = அவற்றை நான் அருந்துகிறேன்

இலையேனும், பூவேனும், கனியேனும், நீரேனும் அன்புடனே எனக்கு அளிப்பவன் ஆயின், முயற்சியுடைய அன்னவன் அன்புடன் அளித்ததை உண்பேன் யான்.


இந்த முறை அமெரிக்க வருகையின் போதும் பாஸ்டனிலும் மூன்று நாள் இருப்பதாகச் சொல்லி இருக்கிறார். ஜூன் 23 மாலை முதல் ஜூன் 26 காலை வரை நியு இங்கிலாந்து பகிதியில் இருப்பார். அவரை சந்திக்க விரும்புவோர் தொடர்பு கொள்ளவும்.

மற்ற இடங்களுக்கான முடிவுறாத இறுதி பயணத் திட்டம்:
ஜூன் 26, 27, 28 (வெள்ளி – ஞாயிறு) – வாஷிங்டன் டிசி
ஜூன் 29, 30 & ஜூலை 1 – நியு ஜெர்சி, நியு யார்க்
ஜூலை 2 & 3ஃபிலடெல்ஃபியா, பென்சில்வேனியா
ஜூலை 4கனெக்டிகட்
ஜூலை 5 முதல் 10 – டொலீடோ, டெட்ராய்ட், மிச்சிகன், பிட்ஸ்பர்க்
ஜூலை 11,12,13ராலே, வடக்கு கரோலினா
ஜூலை 14 முதல் சான் ஃபிரான்சிஸ்கோ

தொடர்புடைய பதிவுகள்:

ஜெயமோகன் வலையகம் :: கனடா – அமெரிக்கா பயணம்: இயல் விருது பெறுவதற்காக நான் வரும் ஜூன் 10 அன்று கனடா கிளம்புகிறேன். 11 டொரெண்டோவில். 13 அன்று இயல்விழா. இருபத்தைந்து வரை கனடா.


சென்ற 2009ல் வருகை புரிந்த போது:

1. 9 more Meet the Author Jeyamohan Events: Listings | ஜெயமோகன் நிகழ்ச்சிகள்

2. பாஸ்டனில் ஏழு ஒளிப்படங்கள்: எழுத்தாளர் ஜெயமோகன் | புகைப்படங்கள்

3. ஜெயமோகனின் பன்னிரு முகங்கள் | பயணத்தின் போது எடுத்த படங்கள்

4. அமெரிக்கா: ஜெயமோகன்.இன்

5. அமெரிக்கா திட்டம்..: 2009 புறப்பாடு

6. அமெரிக்கா பயணம்: 2009 – jeyamohan.in

7. Interview with Jeyamohan: Videos & Audio Chat | வீடியோக்கள், ஒலிக்கோப்புகள், நேர்காணல் பதிவுகள்

8. Obla Vishvesh :: Three days with Jayamohan | ஆங்கிலப் பதிவு

9. ஃப்ளோரிடாவில் ஜெயமோகன் | சிறில் அலெக்ஸ் – புகைப்படக் கோப்புகள்

10. ஆல்பெனியில் எழுத்தாளர் ஜெயமோகன் | ஓப்லா விஸ்வேஷ்

JeMo-Fiction_Novelist-jayamohan-tamil-authors-Jeyamohan

சுற்றுலா நகைச்சுவை

பாரிஸ் நகர வாயிலில் வருகையாளர்களுக்கான தகவல் மையம் அமைத்திருந்தார்கள். முதலாவதாக ஒருத்தன் விசாரிக்க வந்தான்.

“நான் நாலு மாசம் இங்கேயே இருக்கப் போறேன். முழுப் பாரிஸையும் சுத்திப் பாத்துடலாம் இல்லியா?”. கவுண்ட்டருக்கு அந்தப் பக்கத்தில் இருந்து பதில் வந்தது: “பத்து சதவிகிதம் கூட பார்த்து முடிக்க முடியாது!”

வரிசையில் அடுத்தவர் வந்தார்: “நான் நாலு வாரம் இங்கேயே இருக்கப் போறேன். சொஞ்சமாவது பாரிஸையும் சுத்திப் பாத்துடலாம் இல்லியா?”. பரிமாற்றகர் கொஞ்சம் பிரகாசமடைந்து “ஐம்பது சதவிகத சுற்றுலாத் தலங்களை பார்த்துடலாம்!”

இரண்டையும் கேட்ட மூன்றாமவர் கேட்கிறார்: “நான் நாலு மணி நேரம்தான் இங்கே இருக்கப் போறேன். எவ்வளவு பாரிஸைப் பார்க்கலாம்?”. கல்லாகாரர் தீர்க்கமாக சொல்கிறார். “உங்களால் அனைத்து நகரத்தையும் முழுமையாகப் ரசித்து சுற்ற முடியும்.”

நானும் அடுத்த வாரம் முதல் பாரிஸ் பக்கம் செல்கிறேன். பாரிஸில் ஒரு ட்வீட் அப் போடணும். நீங்க சந்திப்புக்கு வர விருப்பம் என்றால் தொடர்பு கொள்ளுங்களேன்

A Visit with Mahatma Gandhi: 1924: Atlantic Archives

0_Atlantic_Weekly_Archives_Bharat_Freedom_Intro

1_Mahatma_Gandhi_Hindu_Muslim_Untouchability_Pariah_Dalits

2_MK_Gandhi_India_Visits_Freedom_Non_Violence

3_Mahatma_Mohandas_Karamchand_Gandi_India_Travelogue_Experiences

4_Mahatma_Gandhi_1920_Atlantic_India_Independence

Vaishnavist Thiruppathy Tour Guide: 108 Divya Desam Book by Ponnammal

Thanks: Kalki Book Reviews

108 Divya Desangal: R Ponnammal Books

The Hindu Book Intro

108 Divya Desangal - Tamil Books


Kumudham Jothidam

108 Thiviya Thesangal

Sahitya Academy winner & Noted Tamil writer Nanjil Nadan at Boston – Quick Notes

முந்தைய பதிவு: அமெரிக்காவில் எழுத்தாளர் நாஞ்சில் நாடனுடன் வாசகர் சந்திப்புகள்

பொத்தான் நீக்காத முழுக்கை நீளும் வெளிர் நீல சட்டை. இஸ்திரி கலையாத கருநீல முழுக்கால் சட்டை. அமெரிக்க பொறியியலாளர்களுக்கு போட்டியாக விப்ரோ ஏற்றுமதி செய்யும் நாற்பதாயிர வெள்ளி சமபளத்திற்கு நிறைவான வேலை நல்கும் குந்துரத்தர் போல் தெரியும் நாஞ்சில் நாடன் வந்தார்.

முதல் முறை அமெரிக்க பயணம். ஆனாலும், வரும் வழியில் இரு குடும்பத்தாருக்கு அவர்களுக்கு உரிய விமானத்தை வழி காட்டி, ஆங்கிலம் தெரியாத மூன்று முதல் விஜயத்தாருக்கு படிவங்களை நிரப்பி உதவி வழியனுப்பி, இன்னும் சில சந்தேகப் பேர்வழிகளின் ஐயங்களை நீக்கி வழிநடத்தி தானும் வந்து சேர்ந்தார்.

கம்ப ராமாயணத்தில் குகனுடன் ஐவரானோம் மாதிரி அவர்கள் எல்லோரும் நாஞ்சிலுடன் இணைந்தார்களா என்று தெரியவில்லை. ஆனால், அவர்களுக்கு தமிழ் தெரிந்திருந்தால், கம்பனின் சுவையை அவர்களின் நுனி நாக்கில் ஏற்றி இருந்திருப்பார்.

நாஞ்சில் நாடனுக்கு நேம் டிராப்பிங் என்றால் பொய்கையாழ்வார், குமரகுருபரர், தேம்பாவணிக்கு உரை எழுதிய புனித *%$#&@+>, சீறாப்புராணத்திற்கு பதம் பிரித்த புண்ணியவான் ஆகியோர்.

இந்த மாதிரி சிறப்பு விருந்தினர்களை வருவித்து விருந்தினராக்குவதற்காக ராஜனுக்கு சிறப்பு நன்றி.

வாசர்களையும் தமிழ் சிந்தனையாளர்களையும் கோர்க்கும் பெருமை திருமலை ராஜனையே சாரும். முன்னதாக ஜெயமோகன் வந்தார். இப்பொழுது நாஞ்சிலார். கிழக்கு கடற்கரை நண்பர்களை ஒருங்கிணைப்பதில் ஆகட்டும்; புதிதாக அணுக நினைப்பவர்களை இயல்பாக்குவதில் ஆகட்டும்; எல்லோரிடமும் நிதி வசூலிப்பது ஆகட்டும்; வாரயிறுதி மட்டுமே கோறுபவர்களிடம் கறாராக பேசுவதில் ஆகட்டும்; விசா நடைமுறைகளை சிக்கலின்றி பெற்றுத் தருவதில் ஆகட்டும்.

ராஜன் இல்லாவிடில் இந்த மாதிரி இயல்பான அன்னியோன்யமான சந்திப்புகள் சாத்தியப்படாது.

என்னை மாதிரி எழுதுவோரை நாஞ்சில் நாடன் அம்பறாத் துணியில் சில்லறையைப் போட்டு வில்லேந்துபவராக வருணிப்பார்.

அதாவது எதிர்த்தாப்பில் இராவணன். ஒரு கணம் தாமதித்தாலும் மோதி பஸ்மமாக்கி விடுவான். அப்பேர்ப்பட்ட அவசரத்தில் விநாடி நேரம் கூட வீணாக்காத இராமன். அம்பறாத்துணியில் அம்பு நிறைந்திருக்க வேண்டும். சரியான அஸ்திரமாக இருக்க வேண்டும். உடனடியாக கையில் வர வேண்டும். விரல்களை பதம் பார்க்காமல், வில்லில் வகையாக ஏறி, வில்லனை வீழ்த்த வேண்டும்.

எழுத்தாளனுக்கு வார்த்தையும் இப்படி சுழல வேண்டும். அவனுடைய அம்பறாத்துணியாகிய மூளையில் சிந்தனை வில்லுக்கேற்ற சொற்கள் சிக்க வேண்டும். எல்லா இடத்திலும் பற்றி, என்று, ஆகவே போன்று தேய்வழக்கு கூடாது.

இது எப்படி சாத்தியம்?

எவர் கர்ம சிரத்தையாக சங்க இலக்கியமும் காப்பியங்களும் கீழ்க்கணக்கையும் வில்லியையும் வாசிக்கிறோம்?

நாஞ்சில் நாடனைப் போல் வாத்தி கிடைத்தால் எவரும் வாசிப்போம்.

நிறுத்தி நிதானமாக கம்பனின் வெண்பாக்களை நினைவு கூர்கிறார். சீதையைத் தேடி வரும் மாயமானைப் போல் கம்பரின் செய்யுளை சொல்லும்போது பளபளப்பாக இருக்கிறது; ஆனால் கைவசம் சிக்காமல், நழுவுகிறது; எனினும் ஆசையாக மனம் உத்வேகம் கொள்ள வைக்கிறது.

நண்பர் பாஸ்டன் வேல்முருகன் ஜென் கதையை அடிக்கடி சொல்வார்:

ஜென் துறவி மாதிரி நானும் மையமாக தலையாட்டி வைத்தேன். இதை யாரும் அவருக்கு சொல்லி விடாதீர்கள்.

Rajinikanth Interview on ‘Endhiran’ The Robot on Sun TV

முந்தைய ரஜினி பதிவு: Happy Birthday to Rajni: ’ராஜாதிராஜா’வின் உரை

On Director Shankar:

On Actress and Heroine Aishwarya Rai:

On his Spiritual Journeys to Kedarnath and Badrinath:

Why Rajni is so successful? What makes him tick?

Rajnikanth’s dance movements and Next Projects:

லாஸ் வேகாஸ் குறிப்புகள்

தமிழ்நாட்டில் தினமும் ஒரு பழைய கேசினோ (தியேட்டர்) இடிக்கப்பட்டு, அந்த இடத்தில் புதிய ஷாப்பிங் மால் உருவாகிறது. லாஸ் வேகாசில் வருடந்தோறும் ஒரு பழைய கேசினோ (சூதாட்ட மையம் + விடுதி) இடிக்கப்பட்டு, அங்கே ஒரு புதிய ரிசார்ட் (கடை, கண்ணி, சூதாட்டம், கேளிக்கை, விடுதி) அமைக்கப்படுகிறது.

இந்த தடவை பெங்களூரை பார்த்தபோது மலைப்பு ஏற்பட்டது. வெளிச்சுற்றுச்சாலை, வொயிட்ஃபீல்ட் நகர மையம், விமான நிலையம் என பல மாற்றங்கள். ஆனால், வேகாசில் ஐந்தாண்டு முன்பு வந்ததற்கும், தற்போதைய நிலைக்கும் பெரிய அளவில் மாறுதல் இல்லை. அதே புகழ் பெற்ற கேசினோக்கள். இப்பொழுது இன்னும் பெரிய பார்க்கிங் கட்டிடங்கள். அலிபாபா போன்ற பெயர் மாற்றங்கள்.

வேகாசுக்கும் திருப்பதி திருமலைக்கும் சில ஒற்றுமைகள் இருக்கின்றன. இரண்டும் இடமுமே கம்யூனிஸ்ட்களுக்கு ஒத்துக்காது என்பது தவிர…

திருமலை திருப்பதி

லாஸ் வேகாஸ்

1. அங்கே எல்லாவிடத்திலும் பெருமாளும் தாயாரும் போட்டோவிலாவது காட்சி கொடுப்பர். இங்கே ஸ்லாட் மெஷின்கள்.
2. உறங்கா நகரம். 24 மணி நேரம்; ஏழு நாள்; 365 நாள்; கிறிஸ்துமசுக்குக் கூட விடுமுறை இல்லை.
3. அசல் மொட்டை. ஒட்ட சுரண்டும் மொட்டை.
4. ஏகாந்த சேவை ரொம்பவே பிரபலமானது. சயனிக்கும் நேரத்திற்கான revue காட்சிகளுக்குப் புகழ்பெற்றது.
5. நித்ய அன்னதானம். வித விதமான 150 உணவுவகைகளைக் கொண்ட பஃபேக்கள் பிரசித்தம்.
6. உண்டியலில் சில்லறை கொட்டும் சத்தமும், காணிக்கை காசுகளை எண்ணும் ஒலியும் பிரகாரங்களில் ரீங்கரிக்கும். எங்கு திரும்பினாலும் ஸ்லாட் மெஷின்களின் ஓசை.
7. குபேரனுக்குக் கொடுத்த கடனை இன்னும் வெங்கடாசலபதி அடைக்காததாக கேள்வி. கடனில்தான் அமெரிக்காவே ஓடுகிறது; லாஸ் வேகாஸ் எம்மாத்திரம்?
8. பல மணி நேரம் காத்திருந்தால்தான் இலவச தரிசனம் கிடைக்கும். பல மணி நேரம் சூது விளையாடினால்தான் இலவச மது கிடைக்கும்.
9. கடவுளிடம் சொன்னது வெளியில் வராது. வாட் ஹாப்பன்ஸ் இன் வேகஸ், ஸ்டேஸ் ஹியர்.

சஹாரா மூடப்பட்டுவிட்டது. கொஞ்ச காலம் முன்பு வந்தபோது தங்கியிருக்கிறேன். முயல் குட்டி போடுவது போல் சர்க்யூ டீ சொலே, நிகழ்ச்சிகளை பெருக்கியிருக்கிறார்கள். ஒவ்வொரு கேசினோவிற்கும் ஒரு சர்க்யு டி சொலில் நிகழ்வு. “ஓ”வின் தண்ணீர் அரங்கை, பலர் பல விதமாக பிரதிபலித்து, தங்கள் தியேட்டரிலும் அரங்கேற்றுகிறார்கள். ஆனால், ஆங்கில விமர்சனத்தைப் படித்துவிட்டு, காப்பியடிக்கும் சாரு நிவேதிதாவாக அவை எல்லாம் நிறையவே பிசிறு தட்டுகின்றன.

குடித்து விட்டு வண்டி ஓட்டுவதாலோ… ஊருக்குப் புதிதாய் லட்சக்கணக்கானோர் சாலைகளை நிறைத்திருப்பதாலோ… தினமும் ஆறேழு விபத்துகளாவது கண்ணில் படுகிறது. இருபது கார்களாவது பலத்த சேதத்தில் காணப்படுகிறது. இந்த ஊருக்கா, இன்பச் சுற்றுலா வந்தோம் என்று மரண பயம் கிலியூட்டுகிறது.

மக்கள் வாழ்வை கண்டு போபோ-வாக பச்சாதபம் ஏற்படாமல் இல்லை. கிறிஸிதுமஸ் அன்று காபி கலந்து கொடுக்கும் ஸ்டார்பக்ஸ் ஊழியரிடம் பூர்ஷ்வா பொஹீமியனாக வருத்தம் ஏற்படுகிறது. ‘நீ 99% சதவீதம்தானே? ஆக்குபை வால் ஸ்ட்ரீட்டில் கலந்து கொண்டாயா? இன்று விடுமுறை தினமல்லவா? பண்டிகை கொண்டாட்டத்தில் நீ ஈடுபடவில்லையா? ஸ்க்ரூஜ் போன்ற முதலாளியா? அவரை சார்லஸ் டிக்கன்ஸ் படிக்க சொல்லவா?’ என்று தத்துவ விசாரத்தில் ஈடுபட மனம் விரைந்தாலும், காபிக்கு, கொழுப்பு நீக்கிய பால் கலக்க சொல்கிறேன்.

நாற்பத்தைந்தாயிரம் டாலருக்கு ஓவியம். எண்பதாயிரத்தி முன்னூறு ரூபாய்க்கு சர்க்கஸ் கோமாளி சிற்பம். பெரும் சூதாடிகளுக்கு மட்டும் திறக்கும் கேசினோ கதவு. எங்கிருந்து நோட்டு அடிக்கிறார்கள் என்று தெரியவில்லை. ஆனால், கிருஷ்ணரையோ சகுனியையோ மட்டும் மாமாவாய்க் கொண்டிருந்தால், நிச்சயம் எனக்காக ஆடும் படி அழைத்துச் சென்றிருப்பேன்.

Aa Eraa Venkata Chalapathy – Interview Questions

கொஞ்ச காலம் முன்பு A.R. Venkatachalapathy (Professor of History, Madras Institute of Development Studies) சந்திக்கும் சமயம் கீழ்க்காணும் கேள்விக்கான பதிலை வாங்கித் தொகுத்துப் போடும் எண்ணம் இருந்தது. நேர்கண்ட பொழுதெல்லாம், பிற சுவாரசிய உரையாடலில் சென்றதினால், வினாக்கள் மட்டும் இங்கே…

1. அகாடெமிக்கில் இருப்பவர்கள் இலக்கியம் பக்கம் ஒதுங்குவது ரொம்பக் குறைவு. நீங்கள் எப்படி இரு பக்கமும் குதிரையோட்டுகிறீர்கள்?

2. கல்வித்துறை, ஆராய்ச்சியாளர்களின் கவனமும் நவீன தமிழிலக்கியம் மீதான ஆர்வமும் எந்த நிலையில் இருக்கிறது? வருங்காலப் போக்கு எப்படி இருக்கும்?

3. காலச்சுவடு ஆசிரியர் குழுவில் நீண்ட காலமாக பணியாற்றுகிறீர்கள். உங்களின் பங்களிப்பு, சாதனை என்ன? இன்னும் என்ன செய்ய திட்டம்? இன்னும் இதை செய்யமுடியவில்லையே என்று வருத்தம் ஏதாவதுண்டா?

4. தங்கள் புனைவுகள் அதிகம் வெளியானதில்லை. சிறு வயதில் கதை/கவிதை எழுதியதுண்டா? நாவல், சிறுகதை பக்கம் எட்டிப்பார்க்கும் திட்டமுள்ளதா? ஏன் தாங்கள் இன்னும் அந்தப் பக்கம் தலைவைக்கவில்லை?

5. லஷ்மி ஹால்ம்ஸ்ட்ராமுக்கு இயல் விருது கிடைத்தபோது எழுந்த கருத்துகளுக்கு தாங்கள் எந்த ஊடகவெளியிலும் பதிலளிக்கவில்லை. விருதுக்குழுவின் நடுவர்கள் தங்களின் தேர்வுமுறைகளுக்கான முடிவுகளைப் பொதுவில் பகிர்வதில் தவறில்லையே?

6. உங்கள் எழுத்துகளைப் படித்ததில், கேட்டதில், ‘மென்மையான கருத்துகளை முன்வைப்பவர்; பிரச்சினைகளுக்குள் செல்லாமல் விவகாரமான விஷயங்களை அலசுபவர்’ என்னும் எண்ணம் எழுகிறது. இது எவ்வாறு சாத்தியமாகிறது? எங்காவது வம்பில் மாட்டிக் கொண்டதுண்டா?

7. மேற்கத்திய உலகின் ஆராய்ச்சியாளர்கள் தொடர்ச்சியாக தொலைக்காட்சியில் தோன்றுகிறார்கள். விவாதங்களில் பங்கெடுக்கிறார்கள். காலையில் பேட்டி கொடுக்கிறார்கள். புத்தகங்களையும் விற்று சிந்தனைகளையும் அலசி சவுன்ட் பைட்களும் தூவிச் செல்கிறார்கள். தமிழகச் சூழலில் டிவி கருத்தரங்கங்கள் குறித்த தங்கள் பார்வை என்ன?

8. ஆராய்ச்சி எழுத்தாளர்கள் என்றறியப்படுபவர், தன் புத்தகத்தைத் தொடர்ந்து, அதைக் காட்சிப்படுத்தலுக்கு கொண்டு செல்கிறார்கள். அதே போல், ஆஷ் கட்டுரை, வ.உ.சி. புத்தகம், புதுமைப்பித்தன் தொகுப்பை ஆவணப்படமாக எடுப்பது சாத்தியமா? திட்டம் உள்ளதா?

9. குழந்தைகள் விரும்பும் fairy taleகளையும் மகாபாரதம் போன்ற இதிகாசங்களையும் மீள்பார்வை கொடுத்து, கதாபாத்திரங்களின் கோணங்களில் இருந்தோ, மாற்றுக் கருவுருக்காமோ செய்வார்கள். அதே போல் கலாச்சார, சமூக, அரசியல் சரித்திரத்தை, புகழ்பெற்ற தலைவர்களின் கோணத்தில் வித்தியாச வரலாறாக செய்யும் எண்ணம் உண்டா? அப்படி உருவாக்கினால் எவரது பதிவு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும்?

10. வரலாற்றாராய்ச்சி எவ்வாறு முக்கியத்துவம் பெறுகிறது? இன்னும் தமிழ் பண்பாட்டு ஆய்வில் என்ன என்ன இடங்களில் தொக்கி நிற்பதாக தாங்கள் கருதுகிறீர்கள்?

11. வாசகராகவோ இரசிகராகவோ இருந்து இலக்கியம் பற்றிய அடிப்படைகளின் மேல் நின்று விமர்சிப்பதற்கும், முனைவராகவோ பேராசிரியராகவோ இருந்து வரலாற்றுப் போக்கில் மதிப்பிடுவதற்கும் வித்தியாசங்கள் உள்ளனவா?

12. தமிழருக்கு என்று பல குணாதிசயங்கள் உரித்தாவதாக பண்டிதர்களும் அரசியல்வாதிகளும் சொல்கிறார்கள். தங்கள் பார்வையில் தமிழ்நாட்டுக்கும் திராவிட இனத்திற்கும் சொந்தமான கண்டுபிடிப்புகள், அரிய அதிசயங்கள், சமூக முன்னெடுப்புகள், கலாச்சாரத் தாக்கங்கள் என்ன?

13. திராவிட இயக்க ஆய்வு குறித்த பல புத்தகங்களில் முக்கியமானதும், நம்பகத்தன்மை கொண்டதாக தாங்கள் பரிந்துரைப்பது எது?

14. உங்களை உருவாக்கியவர்களில், உங்கள் ஆதர்சங்களில் சிலருடனான அனுபவங்களைப் பகிர முடியுமா?

15. லன்டன், சிகாகோ, பாரிஸ்… பல ஊர்கள். உலகெங்கும் மனிதர்களிடையே சிந்தனையில் ஒற்றுமை உள்ளதா? கலாச்சாரமும் சமூக அமைப்பும் மாறுபடுவதால் குணங்களும் வேறுபடுகிறதா?

16. தங்கள் வசித்த, விசிட் அடித்த நகரங்களில் பிடித்த ஊர் எது? ஏன்?

17. மற்றவர்களின் கடுமையான விமர்சனங்கள் தங்களை எப்படி பாதிக்கிறது? பத்து வருட உழைப்புக்கு கிடைக்கும் பதிலடிகளை எப்படி எதிர்கொள்கிறீர்கள்?

18. சங்கப்பாடல்கள் குறித்தும், பழந்தமிழ் பாக்கள் குறித்தும் தங்கள் அவ்வப்பொழுது புதிய பரிமாணங்களை நயம்பட எடுத்துவைக்கிறீர்கள். இதைத் தொடராக, வெகுசன இதழ்களில் எழுதும் எழுதலாமே?

19. வைரமுத்துவிற்காக ‘காக்கை – நரி – வடை – கதை’ எழுதும் வெங்கடாசலபதியை காண முடிவதில்லையே? எப்பொழுது அடுத்து தென்படுவார்?

20. நாள்தோறும் ஐநூறு வார்த்தை பதிவுகளை எழுதும் தமிழ் வலையுலகத்திற்கு நடுவே, அவ்வப்போது மட்டுமே எழுதுவது ஏன்? அவ்வாறு நெடிய இடைவெளி விட்டு வெளியாகும்போது காணாமல் போகும் அபாயம் இருக்கிறதா?

21. தமிழிணையம் வாசிப்பதுண்டா? எந்த வலைத்தளங்கள் தாங்கள் அன்றாடம் செல்கிறீர்கள்?

22. Kindle, Nook, iPad என்று கையடக்கக் கணினி எங்கும் நிறைந்திருக்கும் இக்காலத்தில் தமிழில் அச்சு ஊடகங்களின் எதிர்காலம் குறித்த தங்கள் கணிப்பு என்ன?

23. அமெரிக்காவில் இப்பொழுதுதான் தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. இங்கிருக்கும் அரசியல், பொது நிறுவனங்களின் கட்சி விளம்பரத்துக்கான காணிக்கை, பெரும் பொருட்செலவில் அரங்கேறும் தேர்தல் நிதிவசூல், கூடவே மக்கள் வரிப்பணமும் கட்சி வேட்பாளருக்கு ஒதுக்கும் சட்டதிட்டம் ஆகியவை குறித்து இந்தியாவுடன் ஒப்பிட்டு பார்க்க முடியுமா?

24. தங்கள் மாணவர்களின் ஆராய்ச்சிகளில் எதை ஆர்வத்துடன் எதிர்நோக்குகிறீர்கள்? அடுத்த பெரிய பிராஜக்ட் என்ன?


சிறுகுறிப்பு

தமிழ்நாட்டில் உள்ள குறிப்பிடத்தகுந்த வரலாற்று ஆய்வாளர்களுள் ஒருவர். ‘அந்த காலத்தில் காப்பி இல்லை’, ‘நாவலும் வாசிப்பும்’ ‘முச்சந்தி இலக்கியம்’ போன்ற சில முக்கிய ஆய்வுக்கட்டுரைகள் அடங்கிய புத்தகங்களை எழுதினவர். குறிப்பாக ‘புதுமைப்பித்தனின் சிறுகதைகளை’ கவனமாக தொகுத்து செம்பதிப்பை தயாரித்தவர். பாரதியின் சில அபூர்வ படைப்புகளை லண்டனிலிருந்து கொண்டு வந்தவர். பாரதியின் கட்டுரைகளை வ.உ.சியின் கடிதங்களை தொகுத்தவர், சு.ராவின் ஜே.ஜே.சில குறிப்புகள்’ புதினத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்.