Tag Archives: Ponnammal

சிறார் கதைகளும் ஆன்மிகமும் சற்றே ஜோதிடமும் – ஆர். பொன்னம்மாள்

ஆசானின் தளத்தில் அம்மாவைப் பற்றி பார்த்தபொழுதில் பெரிதும் மகிழ்ச்சியாக இருந்தது.

அதிலும் எங்கோ சிம்மாசனத்தில் காந்தியைப் போல், ராமானுஜரைப் போல், ரஜினியைப் போல் அமர்த்தி வைத்து பின்பற்றுவோனை “நண்பர்” என்று வேறு சொல்லியிருந்தது ஊக்கமும் பெருமிதமும் கொள்ள வைத்தது.

ஜெயமோகன் எப்பொழுதுமே செயல்வேகமும் தண்மையான பரிந்துணர்வும் கொண்டவர். அம்மாவும் ஒரு வகையில் அவ்வாறே.
ஜெ.மோ. எப்பொழுது கடிந்து கொள்வார், எவ்வாறு அறச்சீற்றம் என்னை இடித்துரைக்கும் என்று புயல் கடந்த பிறகே உணர முடியும். அம்மாவும் ஒரு வகையில் அவ்வாறே.
ஜெயம் என்றால் எழுத்துப் பிசாசு, கதைசொல்லி. அம்மாவும் ஒரு வகையில் அவ்வாறே.

ஆர்.பொன்னம்மாள் – Tamil Wiki

விக்கி பக்கத்தைக் குறித்து அம்மாவிடம் காண்பித்தேன்; சொன்னேன்.

“நீயும் விக்கிப்பீடியா பக்கம் செய்யறேன்னு சொன்னே… என்னிக்காவது நேரம் கிடைக்கும்போது, ரிடையர் ஆனபிறகு செஞ்சுடுவே! நம்பிக்கை இருக்கு… ஒண்ணும் அவசரமில்ல!” என்றார்.

வாழும் போது கிடைக்கும் மரியாதை அட்சர லட்சம்!

ஆர்.பொன்னம்மாள் | எழுத்தாளர் ஜெயமோகன் (jeyamohan.in)

ஸ்ரீமத் ராமானுஜ வைபவம்: ஆர்.பொன்னம்மாள்

Srimadh_Ramanuja_Vaibhavam_R_Ponnammal_Cover

Via Senkottai Sriram

வானதி பதிப்பகத்தின் சார்பில் நூலாகியுள்ளது. ஆர்.பொன்னம்மாள் எழுதியுள்ளார். ஸ்ரீமத் ராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டு திருநட்சத்திரத்தை ஒட்டி வெளியிடப்பெற்றுள்ள தொகுப்பு!

வழக்கமாக தற்போது நடைபெறும் புத்தக வெளியீடுகள் போல் அல்லாது, வித்தியாசமாக யோசித்தார் வானதியின் பெயரன் சரவணன்.

ஒருநாள் காலை… கைபேசியில் அழைத்தார். அண்ணா, ஸ்ரீமத் ராமானுஜர் புத்தகம் போடுகிறோம்.. என்று சொல்லி, நூல் தலைப்பு, உள்ளடக்க குறிப்பு தொடர்பாக சில விளக்கங்களைக் கேட்டார். சொன்னேன். அடுத்த சில நாட்களில் மீண்டும் அழைத்தார். அண்ணா… நாம ஸ்ரீபெரும்புதூர் போய், அங்கேயே உடையவர் சந்நிதியில் நூலை வெளியிட்டு உடையவர் பாதத்தில் வைத்து வந்துடலாம். நீங்கதான் வெளியிட வரணும். உங்க கையால் வெளியீடு. ராமானுஜ நூற்றந்தாதி பாடிய உஷா பத்மநாபன் அம்மாவ அழைச்சிண்டு வரேன். அவர் முதல் பிரதியை வாங்கிப்பார் என்றார்.

மறுக்கவில்லை. சரியாக நேற்று திருவாதிரை. எம்பெருமானார் திருநட்சத்திரம். காலை அடியேன் பொத்தேரியில் இருந்து வண்டியில் ஸ்ரீபெரும்புதூருக்கு சென்றுவிட்டேன். அவர்களும் வந்தார்கள். சந்நிதிக்குச் சென்று பெருமாளை, உடையவரை ஸேவித்தோம். பாதத்தில் புத்தகக் கட்டை வைத்து ஆசி பெற்றோம். அப்போது நம் எம்பார் ஜீயர் நினைவுக்கு வர, சரவணனிடம் சொன்னேன்…. நம் ஜீயர் ஸ்வாமிதான் புத்தகத்தை வெளியிட சிறப்பானவர். அவர் திருமாளிகைக்குப் போய், அவர் கையாலேயே வெளியிட்டுவிடுவோம் என்றேன்.

Senkottai_Sengottai_Sriram_Book_Release_Ramanujar_Ponamal_Vaishnaivism

அவ்வாறே சென்றோம். ஜீயர் ஸ்வாமி திருமாளிகையில் அன்று அன்பர் குழாம் அதிகம்! அதோடு அதாக, ஜீயர் ஸ்வாமி புன்னகையுடன் நூலை வெளியிட்டு, பிரதியை உஷா பத்மநாபனுக்கும் அடியேனுக்கும் வழங்கினார்.

பின்னர், அப்படியே எல்லாரும் அமருங்கள். பிரசாதம் சாப்டுட்டு போயிடலாம் என்றார் ஸ்வாமி. அருமையான கதம்ப சாதம், தயிர் சாதம்..! பக்கத்தில் உள்ள மதுரமங்கலம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த சிஷ்ய கோடிகள் பாகவத சிரோமணிகள் வழக்கமாக திருவாதிரை நட்சத்திரத்தில் கோயிலுக்கு வந்துவிட்டு ஸ்வாமி சந்நிதிக்கு வந்து மதியம் சாப்பிட்டு விட்டுச் செல்வார்களாம். அதனால் ஒரே தடபுடல்!

பரம திருப்தியுடன் எளிய, ஆனால் ஆத்மார்த்தமான ஒரு நிகழ்வுடன் அங்கிருந்தே அலுவலகம் விரைந்தேன்.

பின் இணைப்பு:
புத்தகம் குறித்து பலரும் விசாரிப்பதால், வானதி பதிப்பக எண் தருகிறேன்… போனில் விசாரித்துக் கொள்ளுங்கள்..
VANATHI PATHIPPAKAM
23,Deenadayalu street,T.nagar, Chennai-17
Ph-no: 044 – 2434 2810 / 2431 0769

செங்கோட்டை ஸ்ரீராம்

Srimadh_Ramanuja_Vaibhavam_R_Ponnammal_Back_Cover_Book

நூலின் முன்னுரையில் சுதா சேஷய்யன் எழுதியதில் இருந்து சில பகுதிகள்:

(இந்த நூலின்) சிறப்பு, நூலின் எழுத்தமைப்பால் ஏற்படுகிறது. பன்னெடுங்காலமாகப் புழக்கத்தில் உள்ள செய்திகளை, அதுவும் மரபும், சமயமும் சார்ந்த செய்திகள, எடுத்துரைக்கும்போது, அவ்வாறான நூலின் மொழி நடை, பாரம்பரியமும், பரிபாஷையும் சார்ந்ததாக அமைந்துவிடும் வாய்ப்பு உண்டு. மிகுதியான பரிபாஷைச் சொற்களும் வடமொழி மணிப்ரவாளச் சொற்களும் கலந்துவிடுமானால், வாசகர்கள் பால்ர் ஒதுங்கிவிடுவார்கள். குறிப்பாக இளைய தலைமுறை வாசகர்கள் அத்தகைய நூலைக் கையிலெடுக்கவே தயக்கம் காட்டுவார்கள்.

Srimadh_Ramanuja_Vaibhavam_R_Ponnammal_Sudha_Seshayyan_1

நூலின் மூன்றாவது சிறப்பு, கருப்பொருளுக்கு முன்னாலும், பின்னாலும் உள்ள வரலாற்றுக் குறிப்புகளைத் தக்க இடங்களில், தக்க முறைகளில் அமைத்திருக்கும் பாங்கு. …

Srimadh_Ramanuja_Vaibhavam_R_Ponnammal_Sudha_Seshayyan_2_Munnurai_Preface

… வைணவ குரு பரம்பரையின் பிரபாவத்தை வாசகனுக்குக் கொடுக்க வேண்டும் என்பதை உணர்ந்த நூலாசிரியர், அதற்கான தகவல்களை, திருமலை நம்பி – ராமானுஜர் ஆகியோரின் உரையாடல்களில் பொதித்துக் கொடுப்பது மிகச் சிறந்த யுத்தி.

வைணவ உரைகளில் ‘ஈடுகள்’ முக்கிய இடம் பெறுகின்றன. ஈடு என்பது என்ன, எதைக் கொண்ட ஈட்டுக் கணக்கு வருகிறது போன்ற தகவல்களையும் நூலாசிரியர் போகிற போக்கில் விளக்கியுள்ளார்.
Srimadh_Ramanuja_Vaibhavam_R_Ponnammal_Sudha_Seshayyan_3

விஷயம் தெரியாமல் காலை விட்டால் விஸ்வரூபம்

தீபம் இதழில் வெளியான பொன்னம்மாள் பக்கங்களில் இருந்து:

Deepam_PonnammalPakkam

தீபம்: பொன்னம்மாள் பக்கம்

என் எண்ணங்கள்:

1. நல்ல மேஜிகல் ரியலிசம் உதிக்க லத்தீன் அமெரிக்கா செல்ல வேண்டாம். இந்து மதப் புராணம் படித்தாலே போதுமானது.

2. தமிழ்ப் படங்களில் வில்லன் இருப்பது போல், அந்தக் காலத்தில் சகல குற்றங்களுக்கும் காரணம் இந்திரன்.

3. பொன்னம்மாள் பக்க அளவை கொஞ்சம் நீட்டிக்கலாம்.

நன்றி: தீபம்

Vaishnavist Thiruppathy Tour Guide: 108 Divya Desam Book by Ponnammal

Thanks: Kalki Book Reviews

பொன்னம்மாள் பக்கம் in தீபம்

நன்றி: http://www.kalkionline.com/deepam/2012/sep/20092012/deepam0901.php

35th Chennai Book Fair: Videos and News: Inauguration by Speaker Jeyakkumar

முந்தையக் குறிப்பு: 35th Chennai Book Fair 2012: Inauguration And Award Function

தினமணி செய்திக் குறிப்பு

1. 35வது சென்னை புத்தகக் கண்காட்சி: தொடக்க விழா: விருது வழங்கல்: ஆர் பொன்னம்மாள் – குழந்தை எழுத்தாளர்

2. சென்னை நிகழ்வுகள்: புத்தக விழா: 2012: குத்துவிளக்கு தொடக்கம்: இலக்கிய நிகழ்வுகள்

3. 35th Chennai Book fair Videos: Youtube Links: Publisher Exhibitions: BAPASI: Best Children Writer Awards: Prizes for Kids’ Author

அழ வள்ளியப்பா நினைவு விருது: சிறந்த குழந்தை எழுத்தாளர்

பரிசு பெறுபவர்: ஆர் பொன்னம்மாள்: R Ponnammal: Awards, Prizes and Life Notes

அழைப்பிதழ்: தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் – விருது, விழா: BAPASI

BAPASI - Madras Book Exhibition: Chennai Publishers Fair: Tamil Authors Guild

ராஜ ராஜ சோழன் – தமிழ் புத்தகத் தொகுப்புகள்

ராஜராஜன் என்னும் முடிந்த பெருங்கனவும் முடியாத ஆதிக்கப் புன்மரபும் « பிரபஞ்சன்

இராஜராஜ சோழர் குறித்து எழுத்தாளர் பா. ராகவன்:

கிழக்கில் ராஜராஜ சோழனை மக்கள் தாவி அள்ளும் காட்சியைப் பார்க்கும்போது வியக்காமல் இருக்க முடிவதில்லை.

நூலை எழுதிய ச ந கண்ணன் புத்தகக் குறிப்பில் இருந்து:
ராஜராஜ சோழனின் ஆட்சி, பொற்காலம் என்று அழைக்கப்படுகிறது. வலுவான சோழ சாம்ராஜ்ஜியத்தைக் கட்டமைத்தவராக கொண்டாடப்படும் அதே சமயம், மக்கள் நலன் மீது அக்கறை செலுத்திய பேரரசராகவும் ராஜராஜன் நினைவுகூரப்படுகிறார்.

கேரளப் போரில் ஆரம்பித்து இலங்கை, மாலத்தீவு வரை ராஜராஜனின் படைகள் முன்னேறி வெற்றிகொண்டன. ஆனால், எல்லைகளை விரிவாக்கிக்கொள்வதற்கு மட்டும் தன் அதிகாரத்தையும், படை வலிமையையும் அவர் பயன்படுத்தவில்லை. போர் வெற்றிகள் மூலம் கிடைத்த செல்வத்தைக் கொண்டு, மக்கள் வங்கி ஒன்றை உருவாக்கினார். எளியோருக்குக் கடன் வழங்கினார்.

ராஜராஜன் ஆட்சிக்காலத்தில் வரி வசூல் மட்டுமல்ல, மக்கள் நலப் பணிகளும் அதிகம். மக்களின் வாழ்க்கை நிலை உயர்ந்தது. காலமெல்லாம் அவர் புகழ் பாடும் தஞ்சைப் பெரிய கோயில் கட்டப்பட்டது. கலை, ஆட்சி முறை, சமயம், இலக்கியம், பொருளாதாரம், பண்பாடு என்று ராஜராஜனால் செழிப்படைந்த துறைகள் ஏராளம். அந்த வகையில், தென்னிந்தியாவில் மட்டுமல்ல, இந்திய வரலாற்றிலும்கூட ராஜராஜனின் ஆட்சி பொற்காலம்தான்.

ராஜராஜ சோழன் நூல் பற்றி பாரா, பத்ரி.

ச ந கண்ணன் பதிவில் இருந்து சில பகுதிகள்:
சோழர்கள் வரலாற்றை முழுமூச்சில் ஆய்வு செய்தவர்களில் மிகமுக்கியமானவர், நீலகண்ட சாஸ்திரி. அவருடைய சோழர்கள் வரலாறு நூலின் ஒவ்வொரு பக்கத்திலும் தகவல் குவியல்தான். ஒரு நாவல்போல அந்த நூலை கிடுகிடுவென வாசித்துவிடமுடியாது. ஒவ்வொரு பக்கத்துக்கும் அவர் இணைத்துள்ள ஃபுட்நோட்டே ஒரு நூலின் கனம் தாங்கும். மா. ராசமாணிக்கனாரின் தென்னாட்டு வரலாறு’ நூல் உள்ளதில் மிக எளிமையான மொழியைக் கொண்டது. குடவாயிலின் தஞ்சாவூர் நூல், முழுக்க முழுக்க தஞ்சாவூரின் வரலாறைச் சொல்லும் அதிஅற்புதம். இந்த நூல்களோடு, ராஜராஜனின் ஆயிரமாண்டு சிறப்பிதழுக்காக வரலாறு டாட் காம் உள்பட இணையத்தில் எழுதப்பட்ட பல்வேறு கட்டுரைகளும் ராஜராஜ சோழனின் வாழ்க்கையை இன்னும் ஆழமாகப் புரிந்துகொள்ள எனக்கு உதவி புரிந்தன.

இதுவரை, சோழர்கள் வரலாற்றின் ஒரு பகுதியாகவே ராஜராஜ சோழனின் வரலாறு எழுதப்பட்டு வந்துள்ளது. க.த. திருநாவுக்கரசு மட்டும் ராஜராஜ சோழன் பற்றி தனிநூல் எழுதியிருக்கிறார். ஆதாரங்கள் குறைவு என்பதால் அவரைப் பற்றிப் பிரத்தியேகமாக நூல் எழுதுகிற அளவுக்கு யாரும் முயலவில்லை.

ஜடாயு:

// ஆனால், கிட்டத்தட்ட 400 கடைகள் உள்ள கண்காட்சியில் கிழக்கு தவிர வேறு எங்கும் நீங்கள் இந்தச் சோழனைப் பற்றிய ஒரு புத்தகத்தையும் பார்க்க முடியாது. [என்.சி.பி.எச்சில் நீலகண்ட சாஸ்திரியின் சோழர் வரலாறு இருக்கிறது.] //

அன்னம் ஸ்டாலில் “இராஜராஜேஸ்வரம்” (குடவாயில் பாலசுப்பிரமணியம்) கிடைக்கிறது! பெரிய கோயில் ஆயிரமாவது ஆண்டு சிறப்பு வெளியீடாக வந்திருக்கும் செம்பதிப்பு. ஒரு அருமையான கலை, வரலாற்றுக் களஞ்சியம் இந்தப் புத்தகம்.

short cutல் மயங்காமல் ராஜராஜன் பற்றியும் தஞ்சைக் கோவில் பற்றியும் ஆழமாக்த் தெரிந்து கொள்ள விரும்புவோர் நாடவேண்டிய புத்தகம்.

என்னுடைய அம்மா ஆர் பொன்னம்மாளும் இராஜராஜரைக் குறித்து புத்தகம் எழுதியிருப்பதாலும், என் பன்னிரெண்டெ முக்கால் வயதிலேயே இராஜராஜனைக் குறித்து ஆறு நூல்களை தேவநேயப் பாவாணரின் வரலாற்றுப் பகுதியிலும் இரண்டு நூல்களை Oriya Literature பகுதியிலும் கண்டெடுத்தன் தொடர்ச்சியான விசன ட்விட் .

ட்விட்டரில் நான் கருதியது:

கிளியோபாட்ரா, ராஜ ராஜ சோழன் எல்லாம் பெஸ்ட்செல்லர்ஸ்னு சொல்லிக் கொள்ளும் நிலையில் தமிழ் புத்தக வெளியீட்டாளர்கள் இன்றும் இருப்பதை நெனச்சா

அதற்கு மூலகர்த்தா குறளையும் பார்த்து விடுவோம்:

அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் நினைக்கப்படும்

பொருள்: நல்லவர்கள் வறுமையில் வாடுவதையும், தீயவர்கள் செல்வத்தில் திளைப்பதையும் மக்கள் தம் விழிப்புணர்வால் சிந்திக்க வேண்டும்; உரிய மாற்றத்தை சமுதாயத்தில் உருவாக்க வேண்டும்.

இதன் தொடர்ச்சியாக நந்திதா தாஸ் போன்ற சிறப்பான ஆய்வுநூல்களும், ஹன்சிகா மொட்வானி போல் விதந்தோத வேண்டிய புதினங்களும் வெளியாகும் சூழலில் இன்னமும் ஸ்ரீதேவி காலத்து கிளியோபாட்ராவும் எஸ். வரலட்சுமி பாடல் பெற்ற இராஜ ராஜ சோழனின் ரீ-மிக்ஸ்களும் சூப்பர் ஹிட்டாகிறதே என்னும் அங்கலாய்ப்புதான்.

தொடர்புள்ள பதிவுகள் இரண்டு:
1. 2009ல் வெளியான நாவல்கள் :: நேசமுடன் வெங்கடேஷ்
2. தமிழ் நூல் பரிந்துரை – 2010 :: பாஸ்டன் பாலா
3. கே.பி.டி. சிரிப்பு ராஜ சோழன் :: கிரேஸி மோகன் (கிழக்கு)
4. சுஜாதா: “சோழனை ‘ராஜாதி ராஜா’ என்பதெல்லாம் டூ மச்?”