ப்ளாட் என்பது என்ன? பாட் போல் அதுவும் கணினியில் மட்டும் இயங்குவது.
நம் துணைவர் எப்படி இருக்க வேண்டும்? என்னுடைய விஷயத்தில் அக்கறை எடுப்பார். தும்மினால், இருமினால் என்னாச்சு என்பார். எவனாவது இணையத்தில் தாக்கினால் குரல் கொடுப்பார். நான் செய்யும் அச்சுபிச்சுகளைப் பொறுப்பார். ப்ரூ காபி விளம்பரம் போல் எதிர்பாராததை செய்வார். வெறுமனே காமத்திற்கு மட்டும் என்னை உபயோகிக்க மாட்டார்.
மாடு பிடிப்பது போல் ஆணைத் தேடும் சமூகம். சந்தை போல் குவிந்திருக்கிறார்கள். அதில் பாதி பேர் போலி. கொஞ்ச காலம் துணையாக நடிப்பார்கள். பார்ப்பதற்கு கவர்ச்சியாக இருப்பவர்கள் சட்டென்று இன்னொரு பெண்ணின் பின் சென்று விடுகிறார்கள். கரிசனத்துடன் விசாரிப்பவர்கள் பின்னொரு நோக்கத்தோடு வேறொரு பாதையில் போய் விடுகிறார்கள்.
இந்த நிலைமையில் எப்படி பொருத்தம் பார்ப்பது? யோனி, ரஜ்ஜு எல்லாம் போதுமா? பழக வேண்டும். ஆணின் உண்மையான குணாதிசயம் தெரிய வேண்டும். அந்தரங்கம் வெளிப்பட வேண்டும். ஆத்மார்த்தமான அன்பு உணரப்பட வேண்டும்.
இதைத் தற்காலத்திற்கேற்ப இந்தக் கதை சொல்கிறது.
கதாநாயகிக்கு நிறைய பிரச்சினைகள். முன்னாள் குடிப்பழக்கம்; தனிமை; அனாதரவாக விட்ட தந்தை; புதிய நகர வாசம்.
இருந்தாலும் நாயகி உயர்வாக உணர்கிறாள். சத்தான பழரசம்; பாவப்பட்ட ஜென்மம்; வஞ்சிக்கப்பட்டவள்.
This piece has some things in common with the recent one in The New Yorker, “Kid Positive” by Adam Levin (interrogation of our backstories, notions of real vs. fake and where the lines blur), as well as Elvia Wilk’s 2019 novel Oval, Ishiguro’s neo-classic Never Let Me Go, Jonathan Lethem’s novel from a few years back A Gambler’s Anatomy, and the stories of Aimee Bender (நன்றி: Kate Folk: “Out There” – The Mookse and the Gripes)
இயந்திரத்தனமாக நடப்பதை விரும்பாதவரின் கதை இது. நாயகியும் எந்திரத்தனமாகும் கதை இது. வேண்டுவதை செய்யும் கணவனை எதிர்பார்க்கிறோம். எப்போதும் ஒரே மாதிரி செயல்படும் புருஷனை எதிர்பார்க்கிறோம். இது சலிப்பூட்டும். எது வேண்டுகிறோமோ, அதுவே கிடைத்துவிட்டால், இடைவெளியை கோருகிறோம்.
இப்பொழுது ‘தரமணி’ படத்திற்கு இது எப்படி பொருந்துகிறது என்று பார்ப்போம்:
‘இந்த ஊர் எப்போ சென்னைக்குள் நொழைஞ்சது?’
“1977ல் சென்னைக் குடிநீர் வடிகால் வாரியம் உருவானது. அப்பொழுது தரமணி பஞ்சாயத்தும் மதராஸ் மாநகராட்சிக்குள் இணைக்கப்பட்டது.”
‘அந்த வருடம்தான் ’அவர்கள்’ படமும் ’ஆறு புஷ்பங்கள்’ படமும் வந்தது. அப்பொழுது எப்படி சினிமாவை எடுத்தார்களோ, அதே மாதிரிதான் இப்பொழுதும் ராம் படம் எடுத்துக் கொண்டிருக்கிறார்”
Aronofsky has a response for those people: “They are missing the whole point. It’s misogyny if it says that this is good . . . I think [any spit-take revulsion is] just like an initial reaction to being punched. We are telling the story of Mother Nature turning into a female energy, and we defile the earth. We call her dirt. We don’t clean up after our mess. We drill in her. We cut down her forests. We take without giving back. That’s what the movie is.” Referencing Hurricane Irma, which was touching down in Florida as the film premiered, Aronofsky added, “Naomi Klein, one of the great eco-feminist out there, sent me a text yesterday, talking about the irony of the film premiering yesterday with what’s happening right now in America.”
வன்புணர்வு காட்சியைக் காண்பித்தால் அசிங்கமாக இருக்க வேண்டும். ஆசைப்பட வைக்கக் கூடாது.
‘தரமணி’ திரைப்படத்தில் பெண்ணியமும் இல்லை; முடிச்சும் இல்லை. இரண்டையும் கேவலப்படுத்துகிறது. இந்த மாதிரி ராம் படம் எடுப்பதற்கு ஃபேர் அண்ட் லவ்லி விளம்பரம் எடுக்கலாம். அதில் நேர்மை இருக்கிறது.
5. கொஞ்சம் காட்டம் ஜாஸ்தியாகி விட்டது. நகைச்சுவை இடைவேளை:
ஒரு ஊரில் நான்கு பேர் இருந்தார்கள். ஒரு பொறியாளர்; ஒருவர் கணக்காய்வாளர்; ஒருவர் வேதியியலாளர்; மற்றொருவர் அரசு ஊழியர். நால்வரும் ஆளுக்கொரு நாய் வளர்த்தார்கள். தங்களின் நாய்தான் திறமை வாய்ந்த நாய் என்று பெருமிதம் கொண்டிருந்தார்கள்.
முதலில் எஞ்சினீயர் தன் நாயை அழைத்தார். ”ஏ… மின்னலு! உன்னோட வித்தைய காமி…” என்கிறார். அந்த நாய் மேஜையில் இருக்கும் தாளை எடுத்து வந்தது. அடுத்து பென்சிலைக் கொணர்ந்தது. வெள்ளைத்தாளில் முழு வட்டத்தை செவ்வனே வரைந்தது. அதன் பின் சதுரம் போட்டது. முக்கோணைத்தையும் தன் கால்வண்ணத்தில் கொணர்ந்தது. எல்லோரும் அதை வியந்து பாராட்டினர்.
ஆனால், கணக்கரோ தன் நாய் இதைவிடத் திறமை வாய்ந்தது என்றார். ”ஏய்… அட்சரா! இங்கே வந்து நம்ம மேட்டர செய்ரா!!” என விளிக்கிறார். அட்சரா எனப்பட்ட நாய் சமையலறைக்கு ஓடிப்போகிறது. அங்கிருந்து எடுத்துவந்த ஒரு டப்பா கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர்பாகை அரைக்காலாக பிரிக்கிறது. அரைக்காலை அடுத்து ஐந்து காணி விள்ளல்கள் ஆக்குகிறது. அடுத்து வேதியிலாளர், “ரசா… வாடா! அவுத்துவிடு.” என்கிறார்.
ரசாயனம் என பெயரிட்ட அந்த நாய் ஃப்ரிட்ஜைத் திறந்து ஒரு படி பாலை எடுக்கிறது. அதை நான்கு உழக்கு ஆகப் பிரிக்கிறது. கீழே ஒரு துளிக் கூட சிந்தாமல் 4 உழக்கை எட்டு ஆழாக்கு ஆக்குகிறது. எல்லோரும் மூக்கின் மேல் விரல் வைக்கிறார்கள். இப்பொழுது அரசாங்க சிப்பந்தியைப் பார்த்து, “உன் நாய் என்ன செய்யும்?” என வினவுகிறார்கள். அவரும், “ஏய் திண்ணைத்தூங்கியே… செஞ்சு முடி.” என்கிறார்.
துள்ளியெழுந்த அந்த நிர்வாக நாய் முதலில் மைசூர்பா எல்லாவற்றையும் ஒரே மூச்சில் கபளீகரம் செய்தது. தாகசாந்திக்கு அனைத்துப் பாலையும் உறிஞ்சிக் குடித்தது. பேப்பரில் கக்கா போனது. அதன் பிறகு முன்று நாய்களிடமும் வல்லுறவு கொண்டது. வன்கொடுமையின் போது தன் முதுகுத்தண்டு தடம் புரண்டதாக புகாரையும் பதிந்தது. அது போல் தரமணி திரைப்படமும் இயக்குநர் ராமும் நிறைய வித்தை காட்டுகிறார்கள்.
அ) YOU PLAY THE GIRL: On Playboy Bunnies, Stepford Wives, Train Wrecks, and Other Mixed Messages By Carina Chocano
ஆ) ONE DAY WE’LL ALL BE DEAD AND NONE OF THIS WILL MATTER By Scaachi Koul
இ) BITCH DOCTRINE: Essays for Dissenting Adults By Laurie Penny
வேலை குறைவாகவும் வலை நிறைவாகவும் இருந்த காலம். அன்று மட்டும் காலையிலேயே ஏதோ தலை போகிற பிரச்சினை. நுழைந்ததும் நுழையாததுமாக என்னுடைய மேலாளர் வாயிலிலேயே தடுத்தாட்கொண்டு, “உன்னுடைய அரைகுறை ஆடைகள் தாங்கிய கன்னியர் புகைப்படங்களைப் பார்த்து விட்டு, செட்டில் ஆனபிறகு என்னுடைய அறைக்கு வந்து சேர்… முக்கிய வேலை காத்திருக்கிறது” என்று சொல்லிவிட்டு, நமுட்டு சிரிப்புடன் சென்று விட்டார்.
தட்ஸ்தமிழோ, தமிழ் சிஃபியோ, யாஹூ செய்திகளோ, ரீடிஃப் தகவல் மையமோ… எந்த வலையகத்தைத் திறந்தாலும் இடப்பக்கத்தில் கவர்ச்சிப் படமும் வலப்பக்கத்தில் கிளுகிளுப்பும் ஈசானிய மூலையில் கிசுகிசுவும் மட்டுமே நிறைந்த வலைக்காலம் அது. அப்படி தமிழக நிகழ்வுகளை அறியும் தாகத்தில் இருப்பவனை, காலையில் வந்தவுடன் ஜெயமாலினி படத்தில் கண் விழிப்பவன் என்று சொல்லிவிட்டாரே என்னும் தர்மசங்கடம் கலந்த குற்றவுணர்வுடன் கணினியைத் திறந்தேன்.
குறைவாக வேலை இருந்தாலும் பக்கத்து இருக்கை ஜான் கணினியில் இருந்து ’க்ளிக்…க்ளிக்’ சத்தம் கேட்டுக் கொண்டே இருந்தது. அப்படி என்னதான் எலியை வைத்துக் கொண்டு விளையாடுகிறான் என எட்டிப் பார்த்தேன். பெண்களின் புகைப்படங்களாக இண்டெர்னெட் எக்ஸ்ப்ளோரரில் தோன்றிக் கொண்டே இருந்தது. ஒவ்வொன்றிற்கும் ஒன்றில் இருந்து பத்துக்குள் மதிப்பெண் போட்டுக் கொண்டிருந்தான்.
மணப்பெண் பார்ப்பதற்கு கல்யாணத் தரகர் வைத்திருக்கும் ஆல்பம் போல் அடுக்கு அடுக்காக புகைப்படங்கள் வந்து கொண்டே இருந்தது. ஒருவருக்கு தரவரிசையில் ஐந்தோ, ஆறோ, ஏழோ க்ளிக்கினால், தானியங்கியாக அடுத்த புகைப்படம் தோன்றியது. ஒருவருக்கு ஒரு எண் கொடுத்துவிட்டால், அடுத்த ஆளின் படம் வரும். அடுத்தடுத்து தொடர் சங்கிலியாக ரகவாரியாக நிழற்படங்கள் மாறிக் கொண்டே இருக்கும்.
இந்தத் தளத்தின் பெயர் ’நான் அம்சமாக இருக்கிறேனா?’ (“Am I Hot or Not?”) இது 2000ம் ஆண்டிற்கு முந்தைய பொற்காலம். வைய விரிவு வலையின் துவக்க காலம். “பையனுக்கு தொந்தி” என்று மூஞ்சியில் அடித்தது போல் சொல்லி பத்துக்கு ஒரு மார்க் போடலாம். பொண்ணு பிடிக்கல” என்று போய்க்கொண்டே இருக்கலாம். ’ஏன் பிடிக்கவில்லை… அவளுக்கு ஒரு மனம் இருக்காதா! அது நோகாதா?’ என்றேல்லாம் சஞ்சலமடைய வேண்டாம்.
இதன் பின்தோன்றலாக இன்றைய யூ டியூப்.காம் தொடங்கியது. ’ஹாட் ஆர் நாட்’ பார்த்தபிறகு யூடியூப் துவங்கியதாக ஜாவேத் கரீம் சொல்கிறார். யார் வேண்டுமானாலும், எவரின் புகைப்படத்தை வேண்டுமானாலும் வலையில் ஏற்றி, பலருக்கும் காட்சிப்படுத்தலாம் என்பதை ஹாட் ஆர் நாட் முன்னிறுத்தியது. அதுவரை, காப்புரிமையைக் கண்டு பயந்த வலையகங்கள், ஒவ்வொருவரும் சொந்தமாக எடுத்த படங்களை மட்டுமே தளத்தில் ஏற்றலாம் என்ற விதிமுறையை வைத்திருந்தது. ஹாட் ஆர் நாட் இந்த விதியைத் தளர்த்தி, ‘உங்களின் முன்னால் காதலி படத்தை இங்கே கொடுத்து பழி தீர்த்துக் கொள்ளுங்கள்’ என்று அழைத்தது. அதைப் பார்த்த ஜாவேத், ‘அசையாத படங்களுக்கு பதில் அசையும் படங்களைக் கொடுத்தால்!’ என்று யோசித்ததில் யூ ட்யூப் பிறந்தது.
ஹாட் ஆர் நாட்.காம் மூலம் ஊக்கம் பெற்று உருவான இன்னொரு கோடீஸ்வரர் ஃபேஸ்புக் கொடுத்த மார்க் சக்கர்பர்க். ஹார்வார்டு பல்கலையில் படித்த பொழுது சக மாணவர்களை ஒப்பிட ஃபேஸ்மாஷ் நிரலியை உருவாக்கினார் மார்க் சக்கர்பர்க். ”ஆஷா அழகா? ஆயிஷா அதிக அழகா?” என்று இருவரை பக்கத்தில் வைத்து ஒப்பிட்டு வரும் கேள்விக்கு ஒருவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அனைத்து கல்லூரி மாணவர்களின் புகைப்படங்களையும் திருடியோ, திருடவைத்தோ பெற்றுவிட்டார். அதே நபர்களுக்கு, உங்களின் நண்பர் எவ்வளவு மதிப்பெண் கொடுத்தார் என்பதை அறியும் வசதியெல்லாம் பின்னர் வந்தது. புகைப்படங்களுக்குக் கீழே பின்னூட்டங்களும் சூடாக இட முடியும். அவற்றையெல்லாம் படிக்கவோ, அலசவோ நேரம் இல்லாவிட்டால், பிடிச்சிருக்கு/பிடிக்கலை என்பதை மட்டும் சொல்லிக் கொண்டே இருக்கலாம். ’தி ஃபேஸ்புக்’ துவங்கியபோது, ‘பிடிக்கவில்லை’ நீக்கப்பட்டு, ‘லைக்’ மட்டும் நிலைத்திருக்கிறது.
பெண்களை முகப்பில் போட்டு வியாபாரம் செய்வது இணையம் வந்த பிறகு வந்தப் பழக்கமல்ல. நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்பே அரைகுறை ஆடைப் பெண்களை அட்டையில் போட்டு புகையிலையை விற்பது புகழ் பெற்றிருந்தது. ஆனால், வலைத்தளங்களின் புகழைப் பரப்ப வியாபாரத்திற்கு வருகையாளர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க இந்த சூட்சுமத்தை அனைவருமே பயன்படுத்துகிறார்கள்.
இணையத்திற்கு மட்டுமல்ல. ‘பூத் பேப்’ (Booth Babes) என்பது கலாச்சாரத்தில் ஊன்றி நிற்கும் தொன்மம். விளையாட்டுக்களை விற்கும் இடமாக இருக்கட்டும். புது கார்களை அறிமுகம் செய்வதில் ஆகட்டும். அல்லது மைக்ரோசாஃப்டின் நவீன விண்டோஸ் எட்டு.ஒன்று துவக்கம் ஆகட்டும். மந்திரா பேடி போல் வர்ணணையாளரை நாம் நிச்சயம் பார்க்கலாம். புன்சிரிப்புடன் ஆண்களை நேசமாக அழைத்து, அவர்களின் ஜாதக விவரங்களைப் பெற்றுக் கொள்வதற்கு பெண்கள் துணை நிச்சயம் தேவைப்படுகிறது. பெரும்பாலான மாநாடுகளுக்கு ஆண்களே அனுப்பப்படுவதும், மேற்கத்திய உலகில் நிரலி எழுதுவதில் ஆண்களின் ஆக்கிரமிப்பு நீடித்து இருப்பதாலும் இந்த நிலை தொடர்ந்து நீடித்து வருகிறது.
எங்கெல்லாம் வியாபாரம் நடக்க வாய்ப்பு இருக்கிறதோ, அங்கெல்லாம் ஏமாறவும் பெரும் வாய்ப்பு இருக்கிறது. ஃபேஸ்புக் மூலம் பொய் முகத்தைக் காட்ட நிறைய வாய்ப்பு அமைந்திருக்கிறது. தன்னை இளம்பெண்ணாகவும், தனது இக்கட்டில் இருந்து மீள பணம் தேவை என்றும் கட்டமைத்து பணம் பறித்தவர்களின் செய்திகளை மாதத்திற்கு ஒரு முறையாவது தினசரிகள் வெளியிடுகிறது. இவர்கள் எல்லோரும் அதிகாரபூர்வமாக ஏமாந்தவர்கள். குட்டு வெளிப்பட வேண்டாம் என்று கம்மென்று இருப்பவர்கள் ஏராளம். தவணை அட்டையை தந்துவிட்டு காசை இழப்பது, கல்யாணம் செய்து கொள்வார் என நம்பி வங்கிக்கணக்கில் இருந்து பட்டுவாடா செய்வது என்று எப்படி எல்லாம் கறக்க முடியுமோ அப்படி எல்லாம் திருட இணையமும் பாலியல் இச்சையும் வழிசெய்து தந்திருக்கிறது.
கிரெக்ஸ் லிஸ்ட் (Craigslist) மூலமாக ஏய்த்தவர்களுக்கென்றே முன்னூறு பக்க புத்தகம் எழுதலாம். மேலும் பாலியல் பரீட்சார்த்தங்களை சுலபமாக செய்து பார்க்க கிரெக்ஸ் லிஸ்ட் சிறந்த சோதனைச்சாவடியாக இருக்கிறது. மாட்ச்.காம் (Match.com) போன்ற வலைப்பக்கங்கள் இரண்டாயிரம் ரூபாய் கொடுத்தால்தான் உள்ளே வரலாம் என பணம் பிடுங்கிகளாக வியாபாரம் பார்த்துக் கொண்டிருக்கும் இந்தக் காலத்தில் நயா பைசா இல்லாமல் நுழைய கிரெக்ஸ்லிஸ்ட் அனுமதிக்கிறது. இது கள்வர்களுக்கும் கொண்டாட்டாம். கணினியையேக் கட்டிக்கொண்டு அழுபவர்களுக்கும் கொண்டாட்டம்.
இந்தியாவில் ஈ-பே (e-bay)யை விட பாஸி.காம் (Baazee.com) புகழ்பெற்றிருந்தது. ‘பாஸி’ தளத்தில் பள்ளி மாணவியின் செக்ஸ் வீடியோவை விற்றதற்காக பாஸி.காம் நிறுவனத்தின் தலைவர் அவ்னிஷ் பஜாஜ் கைது செய்யப்பட்டார்.
இந்தக் கைது அருமையான முன்னுதாரணமாகத் தோன்றுகிறது. டாக்டர் பிரகாஷ் போல் சொந்தமாக படம் பிடிக்காதவர் அவ்னிஷ் பஜாஜ். பலான படத்தைக் கூட தானே நேரடியாக விற்காமல், இடைத்தரகராக தொடுப்பு மட்டும் கொடுத்தவர். ஓரளவு செல்வாக்கும் பணபலமும் உடையவர். ஈ-பே (eBay).காம் என்னும் அமெரிக்க கம்பெனியின் கீழ் இயங்குபவர். எதையும் செய்து தப்பித்து, பதுங்கி, ஒதுங்கி, அடக்கி, ஒளிந்து விடலாம் என்று எண்ணுபவர்களை கொஞ்சமாவது யோசிக்க வைத்திருக்கும்.
திருடராய்ப் பார்த்து திருந்தாவிட்டாலும், திருடரை ஒழிக்க ஆப்பிள் முடிவு கட்டியது. ஐ-போனில் பலான விஷயம் செய்ய முடியாது என கட் அண்ட் ரைட்டாக சொல்லிவிட்டது. எந்தவித செக்ஸ் சமாச்சாரமும் ஆப்பிள் கடை (apps) மூலமாக விற்கவோ வாங்கவோ முடியாது. அந்த மாதிரி பலான தளங்களுக்கும் செல்வதற்கான தடையை நிரலியிலேயே வைத்துக் கொண்டிருந்தது. பச்சிளம் பாலகரிடம் கூட நம்பிக்கையாக ஆப்பிள் ஐபோனைத் தரலாம். அவரால் லட்சுமணன் ரேகாவை மீறி பெரும்பாலும் தப்புதண்டா செய்ய முடியாது. அப்படித்தான் இரும்புக்கோட்டையாக ஆப்பிள் ஐஓஎஸ் இருந்தது. ஆனால், சில காலம் முன்பு துவங்கி கொஞ்சம் கொஞ்சமாகத் தளர்த்தி இப்பொழுது கிட்டத்தட்ட முழுவதுமாக திறந்த வழியாக்கி விட்டிருக்கிறது.
இருபதாண்டுகளுக்கு முன்னால் வலையகங்களைத் திறந்தால் வஞ்சியரின் வண்ணப்படங்கள். இன்றோ, செல்பேசியின் அப்ளிகேஷன்களை தரவிறக்க சென்றால் விதவிதமாக 17+ தரச் சான்றிதழுடன் அழைப்புகள். கணினித்திரை மாறியிருக்கிறது. நுட்பம் மாறியிருக்கிறது. உள்ளடக்கம் கூட முப்பரிமாணத்தில் தத்ரூபமாக உயிர் பெற்றிருக்கிறது. ஆனால், விற்கும் வழியிலோ சந்தையாக்கத்திலோ முகப்பில் தோன்றும் பெண்களின் ஆடைகளிலோ மாற்றம் நிகழவில்லை.
உடன் பணியாற்றுபவர்களில் ஒன்றிரண்டு மகளிர் மட்டுமே இருப்பது, மேற்கத்திய உலகின் கணினியில் குப்பை கொட்டுபவர்களின் குறைபாடுகளில் முக்கியமான ஒன்று.
சென்னை சாஃப்ட்வேர் நிறுவனங்களில் ஐம்பது சதவிகிதமாவது பெண் பொறியாளர்கள் இருப்பார்கள். இந்திய கல்லூரிகளில் பெண்களுக்கும் ஆண்களுக்குமான விகிதாசாரம் கிட்டத்தட்ட சம அளவில் இருக்கிறது. அந்த சமன்பாடு அலுவல் வேலைகளிலும் வெளிப்படுகிறது.
அமெரிக்க கல்லூரிகளிலும் சம விகிதங்களில் இரு பாலினரும் படிக்கிறார்கள். ஆனால், பெண்கள் பெரும்பாலும் கணிதம் / கம்ப்யூட்டர் / தொழில் நுட்பம் போன்ற அறிவியல் துறைகளைத் தேர்ந்தெடுப்பதில்லை. இதற்கு பள்ளிப் பருவத்தில் படிப்பை விட அழகில் கவனம் செலுத்துவதற்கான நிர்ப்பந்த சூழலை குற்றஞ்சாட்டலாம்.
அலுவலில் வெரைட்டியான மனிதர்கள் இருப்பது நிறுவனத்திற்கு முக்கியம். வெள்ளை, கறுப்பு, தாத்தா, இளநரை, கல்லூரி மணம் மாறாத பாலகன், ரூபவதி எல்லோரும் இருந்தால் குழுவில் கலந்து கட்டி வேலை நடக்கும். ஆனால், சௌந்தரிகளுக்கு மனிதவளமும் மார்க்கெடிங்கும் சிறந்த தொழிற்துறையாக அடையாளப்படுத்தி இருக்கும் அமெரிக்காவில் மெலிஸா மேயர்கள் சீ.ஈ.ஓ.க்களாகி விடுகிறார்கள்.
1. வாக்காளர்களுக்கு இரத்தமும் சதையுமான தலைவர் வேண்டும். பற்றற்ற, விஷயம் மட்டும் பேசுகிற வழக்கறிஞர் தேவையில்லை. கொஞ்சம் நகைச்சுவை, நிறைய கோஷம், குடும்பஸ்தர் தோற்றம்: எல்லாம் ப்ரவுனிடம் இருந்தது.
2. தீவிர வலதுசாரி முழக்கங்களை பிரவுன் தவிர்த்தார். ரஷ் லிம்பா, சாரா பேலின் போன்ற துருவங்களை விட்டுவிட்டு, முன்னாள் நியு யார்க் மேயர் ரூடி ஜியூலியானி போன்ற அனைவருக்கும் கவர்ச்சியான ஆதர்சங்களை அழைத்தார்.
3. ஒபாமாவின் மோகம் முப்பது நாள் முடிந்தது. ஒரு வருடம் முடிந்தவுடன் ஜனாதிபதிக்கு மண்டகப்படி துவங்கும். அது இப்போது ஸ்டார்டிங்.
4. பொருளாதாரம்: முதலீட்டாளர்களுக்கு செம வருவாய். வங்கி முதலைகளுக்கு இரட்டிப்பு போனஸ். பங்குச்சந்தைக்காரர்களுக்கு கொண்டாட்டம். அன்றாடங்காய்ச்சிக்கு பஞ்சப்படி கூட கொடுப்பது நிறுத்தம். இப்படிப்பட்ட வேலையே இல்லாத சூழலில், வேலை தேடி சலித்தவர்களை வோட்டு போட சொன்னால்…
6. படுத்துக் கொண்டே ஜெயிப்போம்: ஆண்டிப்பட்டிக்கு வேட்பாளர் வராமலே ஜெயிக்கக் கூடிய கட்சி அ.இ.அதிமுக. அது மாதிரி கால் நகம் தேயாமல் வெல்லக்கூடிய இடம். இருந்தாலும், சுகவனங்கள் தோன்றிக் கொண்டேதானே இருக்கின்றனர்?
7. மாயை: ‘அவர்கள்தான் எல்லாம் செய்கிறார்கள். அறுபது போக்கிரிகளின் அழிச்சாட்டியம்! தங்களுக்கு என்ன வேண்டுமோ நிறைவேற்றிக் கொள்கிறார்கள்’ – இது குடியரசு கட்சியின் பிரச்சாரம். நாற்பது பேரை வைத்துக் கொண்டு எந்தவித மசோதாவையும் இம்மியளவு கூட நகரவிடாத கட்சியின் கூக்குரல்.
8. விட்டுக்கொடுக்கும் மந்திரம்: சென்றதுடன் தொடர்புடையது. என் வீட்டில் ‘மதுரை’ ஆட்சிதான். இருந்தாலும், மீனாட்சி என்னவோ, ‘சிதம்பரம்’ என்று நடராஜனையே சொல்லவைக்கும் மேனேஜரின் சூட்சுமத்துடன் செயல்படுவார். ஒபாமாவிற்கு இந்த மாதிரி ராஜதந்திரம் போதவில்லை. போதிய பெரும்பான்மை இல்லாமலேயே காரியத்தை சாதித்துக் கொண்ட ஜார்ஜ் புஷ்ஷின் சாமர்த்தியத்தைப் பார்த்தால் கடுப்பு கலந்த ஆச்சரியம் வரவே செய்கிறது.
9. கோஷ உச்சாடனம்: ஆள்குறைப்பை முடித்தவுடன், ‘இதுதான் கடைசி வேலைநீக்கம். இனிமேல் சென்மாந்திரத்திற்கும் எவரையும் வீட்டுக்கு அனுப்ப மாட்டோம்!’ என்று வாய்கூசாமல் பொய் சொல்லும் மேலாளரின் திறமைக்கொப்ப, தன்னுடைய சொந்த விருப்பு வெறுப்புகளைப் பற்றி பேசாமல், வாக்காளரின் கவலையை பேசுவது நல்ல வேட்பாளரின் லட்சணம். குழந்தைகளுக்கும் ஏகே 47; அதே குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே குழந்தை பெறும் திட்டம் என்பதெல்லாம் மனதோடு வைத்துக் கொண்டு, புறத்தே பிறிதொன்று பகர்வது வெற்றிக்கனியை சித்திக்கும்.
10. அதுதான் இந்தப் பதிவில் துவக்கத்தில் சொல்லியாகி விட்டதே.‘ஏன் பெண்ணென்று பிறந்தாய்?’
அமெரிக்காவின் மொத்த மக்கள் தொகை: 307,006,550
மிகக் குறைந்த வாக்காளர் கொண்ட 20 மாகாணங்களின் மக்கள் தொகை: 31,434,822
அதாவது 10%
ஓரு மாகாணத்திற்கு இரு செனேட்டர்கள்.
20 * 2 = 40 செனேட்டர்.
அமெரிக்காவில் மொத்த மாநிலங்கள்: 50; எனவே, மொத்த செனேட்டர்கள் எண்ணிக்கை: 50 * 2 = 100
அதாவது, வெறும் 10 சதவிகிதம், 40 சதவீதத்திற்கு வழிவகுத்தது.
இப்பொழுது நடுநிலையான தேர்தலில் அமெரிக்காவின் குறுக்குவெட்டு சித்திரமான மாநிலத்தில் இருந்து உண்மையாகவே தேர்ந்தெடுக்கப்பட்ட செனேட்டர் – ஸ்காட் ப்ரௌன்.
காலம் கலிகாலம். அமெரிக்கா செல்வது அமிஞ்சிகரைக்கு செல்வதைவிட எளிதாகிவிட்ட காலம். கல்யாணத்தை கான்டிராக்டரிடம் விடுவது மாதிரி மொத்த குத்தகைக்கு எல்லா சாமான், செட், சூட், டை, சூட்கேசு வாங்கிக் கொடுத்து மெட்ரோ பார்க் சீஸன் டிக்கெட்டும் கொடுத்து அனுப்பும் இன்ஃபோசிஸ்கள் பெருகி களிக்கும் காலம்.
நான் சொல்லப் போகும் சம்பவம் சற்றே ஏறக்குறைய இருபதாண்டுகளுக்கு முந்தைய துவாபர யுகத்தில் நடந்த விஷயங்கள். ஹாலிவுட்டில் ஃப்ளாஷ்பேக்கிற்கு இடமில்லை. இது ஹாலிவுட் இல்லை என்பதால், கறுப்பு-வெள்ளை காலத்திற்கு மெதுவாக பின்னோக்கி செல்லலாம்.
எஞ்சினியரிங்கில் கூடப் படித்த நந்தினிக்கு இடம் கிடைத்த கல்லூரியிலேயே எனக்கும் சீட் போட்டுக் கொடுத்துவிட்டார்கள். அன்டார்டிகாவின் குளிருக்கு அசராதவர் கூட இருப்பார்கள்; நந்தினி சைக்கிள் ஓட்டும் அழகில் மயங்காதவர் இலர். ஷாம்பூ விளம்பரம் போல் கேசவர்த்தினி போடாத தலைவிரி கோலத்தைத் தவிர்த்துவிட்டால் நிச்சயம் மயங்கி விடுவீர்கள். என் கற்பனைக்கு கூந்தல் தடையாக இருந்தது இல்லை. முடியை எல்லாம் எவர் கவனிப்பார்கள்!?
‘காலை எழுந்தவுடன் நாளைய கேள்வி; அது கையில் கிடைத்த பின்னும் துடிக்குது ஆவி ‘. கண்ணதாசன் சொன்னதற்கேற்ப அந்த நாளும் வந்தது.
“ரேகாவிற்கு 37ஈ கொடுத்துட்டாங்க. நீ அங்கே உட்கார முடியுமா?”
‘பஞ்சுப் பொதிகளாம் மேகங்களை எடுத்து நெய்தலாடை தரவா’ என்று சங்கம் கலந்த மு. மேத்தா (அந்தக் காலத்தில் நா முத்துக்குமார் இல்லை) எனக்குள் எட்டிப் பார்த்த போது ரியலிஸத்திற்கு இட்டு வந்தாள் நந்தினி.
“சாரி சார்! இந்த இருக்கைக்கு சிக்கன்தான் சொல்லியிருக்காங்க.” ஏவிஎமெல், ஏவிஎம்எல் என்று ஒரே சீட்டை நான்கு தடவை லுஃப்தான்ஸாவைக் கூப்பிட்டு ஊர்ஜிதம் செய்ததற்கு ரேகாவிற்கு ஏவிஎம்எல் ப்ராப்திரஸ்து. எனக்கு சேவற்கொடியோனே நேரில் பிரத்யட்சமஸ்து. பசி வந்திட பத்தும் பறந்து போகும் என்பது பழமொழி; பசி வந்திட பறவையும் உள்ளே போகும் – இது விமான மொழி.
கார் எவ்வளவு வேகமாக ஓடினாலும் குடிக்கிற பெட்ரோலைக் குடிக்கத்தான் செய்யும். பிரியமானவளின் பெட்டி என்றாலும் கனக்கத்தான் செய்யும். பிரயத்தனப்படாமல் எடுக்க பிரயத்தனப்பட்டு, மிகுந்த பிரயாசையுடன் சூட்கேசுகள் தள்ளுவண்டியில் வைக்கப்பட்டது.
“கேர்ள்சுக்கு பார்த்திருந்த அபார்ட்மென்ட் காலியாகல. பிஎச்டி பண்ணுறேன்னுட்டு அங்கே இருக்கறவங்க, அப்படியே கன்டினியூ செய்யறாங்க. உங்க வீட்டுலதான் மூணு ரூம் இருக்கே. ஒரு ரூமை ரேகாவிற்கும் நந்தினிக்கும் அலாட் செஞ்சிருக்கோம். அடுத்த மாசம் வேற இடம் பார்த்துடலாம்.”
காதில் ஜிகிர்தண்டா பாய்ந்தது. புதிய பூமியில் பக்கத்து பக்கத்து அறை. காலையில் காபியுடன் எழுப்பி விடுவாள். ஞாயிறு க்ரிப்டிக் குறுக்கெழுத்து போட்டி போடுவோம். ஃபீனிக்சில் இறங்கிய முகூர்த்தம்; ஃபீனிக்ஸ் பறவையாக கற்பனை பறந்தது.
கம்ப்யூட்டரில் பவர்பாயின்ட் இருப்பதால் மட்டும் அருமையான மேடைப்பேச்சு அமைந்து விடாது. ஒரே வீட்டில் நந்தினியுடன் இருப்பதால் மட்டும் நேசம் மலர்ந்து விடாது என்று ஜெட்-லாக் வரவழைத்த விழிப்புமற்ற உறக்கமுமற்ற அசமஞ்ச நிலை உணர்த்தியது. சுயம்வரத்திற்கு தயாராகும் சிப்பாய்களின் மனநிலையில் சமையலறையில் நுழைந்தோம். அம்மாவிடம் கற்றுக்கொண்ட நாற்பது நாள் சமையலை சரி பார்க்கும் பலிபீடத்திற்கு காஸ் ஏற்ற தீப்பெட்டி தேடல் துவங்கியது.
‘சென்னைக்கு சென்று எடுத்து வந்து விடலாம்?’ உள்ளூர ஹோம் சிக்னெஸ்.
நாங்கள் தம் அடிக்காத மார்ல்போரோ மாந்தர்கள். எவரிடமும் கையில் வத்திப்பெட்டி இல்லை. நந்தினிக்கும் புகை பிடிக்கும் பழக்கம் இருக்காது என்னும் அபார நம்பிக்கையும் இருந்ததால், அவளை எழுப்ப மனம் ஒப்பவில்லை. இந்தியாவில் எங்கு சுற்றுலா சென்றாலும் கேன்டில் லைட் உணவிற்காகவோ, அல்லது அந்த உணவை சமைப்பதற்காகவோ மெழுகுவர்த்தியும் சீட்டா ஃபைட்டும் தற்காலத்தின் ப்லூடூத்தும் செல்பேசியும் போல் இணைபிரியாமல் வந்து கொண்டிருக்கும்.
முண்டா பனியனும் லுங்கி சகிதமாக பக்கத்து வீட்டு சீனியர் மச்சான்கள் கதவைத் தட்டினோம்.
“கேஸைத் திறந்தாலே பத்திக்குமே!” அவர்களின் 340வது இ-மெயிலின் 16வது ஷரத்தில் இதைக் குறிப்பிட்டார்கள். கண்டம் விட்டு கண்டம் மாறினாலும் கைக்கடிகாரம், தானாக தன் நேரத்தை மாற்றிக் கொள்வதில்லை. எவராவது, ‘இதுதானம்மா… நீ காட்ட வேண்டிய டைம்’ என்று முள்ளை உள்ளூருக்கு ஏற்ப திருப்பி வைத்தால், சரியானபடி வேலை செய்யும். நாங்கள் கடிகாரமாக கிடைத்த தகவலை கிரகித்துக் கொண்டு, திரும்பினோம்.
தற்சமயம் அமெரிக்காவில் புகழ்பெற்ற Phillip Garrido குறித்த செய்தி: Questions arise over how kidnapper went undetected – Yahoo! News: “For 18 years, Phillip Garrido managed to elude detection as he pulled off what authorities are calling an unfathomable crime, kidnapping and raping 11-year-old Jaycee Dugard, keeping her as his secret captive for nearly two decades and fathering two of her children.”
பள்ளிக்கு செல்லும் பேருந்து. அதைப் பிடிக்க தன் வளர்ப்பு தந்தையோடு நடந்து செல்கிறாள் 11 வயதுச் சிறுமி. அப்பொழுது அரக்கபரக்க வரும் கார், அவளைக் கடத்தி சென்றுவிடுகிறது.
பதினெட்டு வருடமாக காணாமல் போனவர்கள் பட்டியலில் இருக்கிறாள். போன வாரம் கண்டெடுத்திருக்கிறார்கள். பதினோரு வயதில் இருந்து பாலியல் அடிமை போல் இருந்தவளுக்கு இரு பெண் குழந்தைகள். 13… வெறும் பதின்மூன்று வயதிலேயே முதல் குழந்தையைப் பெற்றுப் போட்டிருக்கிறாள்.
மூத்த மகளுக்கு 15 வயசு. இரண்டாமவளுக்கு 11. அம்மாவாது பதினொன்று வயது வரை சுதந்திரமாக இருந்தாள். இவர்களோ, பிறந்த நாளில் இருந்து முடக்கம். இருவரும் வெளியுலகை பார்த்ததில்லை. அவர்களும் செக்சுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கலாம்.
இந்தச் சிறுமிகள் பள்ளிக்கு சென்றதில்லை. தடுப்பூசி எதுவும் கிடைக்கவில்லை. நோய்வாய்ப்பட்டால், மருத்துவரிடம் கூட சென்றது கிடையாது.
அமெரிக்காவில் இப்படி நடக்கும் என்று என்னைப் போல் பலரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ‘அச்சமுண்டு அச்சமுண்டு‘ வெளியான சமயம் இந்த செய்தி வெளியாகியுள்ளது.
நல்ல வேளை.
‘கமல்ஹாசன் – ஒரு தீர்க்கதரிசி‘ போன்று அருண் வைத்தியநாதன் குறித்த அஞ்சல் எதுவும் வந்துசேரவில்லை. வாயில் லிங்கம் எடுப்பது போன்ற இந்த மாதிரி மாயாஜாலங்கள் எல்லாமே ஹம்பக் என்பது என்னுடைய ஆழமான நம்பிக்கை.
அப்படியே தொடர்பான சமீபத்திய இரு பதிவுகளும், அதில் பொருத்தமான மேற்கோள்களும்:
மாந்திரீகம், மேஜிக், மாயாஜாலம் – மூடநம்பிக்கை x கலாச்சாரம்
1. சாரு நிவேதிதா ஆன்லைன் – கடவுளைக் கண்டேன் :: பரமஹம்ஸ நித்யானந்தர் – யோகம் நிரோதம்: “ஒரே சமயத்தில் இரண்டு பேருக்கு ஒரே நபரின் பௌதிகத் தோற்றம் காட்சியளித்தால் அது எப்படி மாயத்தோற்றமாக இருக்க முடியும்? இந்தச் சம்பவத்துக்குப் பிறகும் எனக்கு ஒரு அதிசயம் நடந்தது.”
2. ஜெயமோகன் :: jeyamohan.in » ஆன்மீகம், போலி ஆன்மீகம், மதம்: “இந்த புராணங்கள் தத்துவ விளக்கத்துக்கான கருவிகளாக அமைந்தன. ஏனென்றால் தத்துவ விளக்கத்துக்கு எப்போதுமே படிமங்கள் தேவை. அப்படிமங்களை நம் புராணங்கள் தொடர்ச்ச்சியாக வழங்கின. ஆகவே பின்னர் புராணங்கள் ஒரு தனிமொழியாக [Meta Language] மாறின. அதில் நம் தத்துவம் விரிவாக பேசப்பட்டது. இது புராணங்களின் தத்துவ முகமாக இன்று நீடிக்கிறது.
புராணங்கள் மிக மேலோட்டமாக , வெறும் அற்புதக் கதைகளாக மட்டுமே வாசிக்கபப்டும் புரிந்துகொள்ளப்படும் சூழல் உருவாகியது.
இக்கடிதம் இந்த எளிய புராணமனநிலையில் நின்று எழுதப்பட்டிருக்கிறது. இந்த மனநிலை இன்று இந்துக்களிடம் மிகப்பரவலாக உள்ளது. இதைப் பயன்படுத்திக் கொள்ளும் மனிதர்களே இன்று நாம் தொலைக்காட்சிகளில் மேடைகளில் மிக அதிகமாக கண்டுகொண்டிருப்பவர்கள். சொல்லப்போனால் நாம் இந்து மதம் சார்ந்தவர்களாக காண்பவார்கள் அனைவருமே இப்படித்தான் இன்று இருக்கிறார்கள். அவர்கள் தங்களை அற்புத மனிதர்களாக காட்டிக்கொள்கிறார்கள். அருள்வாக்கு சொல்கிறார்கள். ஆசி அளிக்கிறார்கள். நோய் குணமாக்குகிறர்கள். நீர் மேல் நடக்கிறார்கள். நெருப்பில் நீந்துகிறாரர்கள்.”
இப்பொழுதாவது செய்தியில் நிறைய அடிபடுகிறார்களா? தடுப்பது குறித்து விவாதம் எழும்புகிறதா?
அமெரிக்காவில் இன பேதத்திற்கும் இதற்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா? ஹார்வார்ட் பேராசிரியர் கேட்ஸ் வழக்கில் வெள்ளையன், கறுப்பினம் என்றார்களே… அந்த மாதிரி பிலிப் காரிடோ மட்டும் கருப்பனாக இருந்தால், சீக்கிரமே ஆராயப்பட்டிருப்பாரா? அல்லது குறைந்தபட்சம் கடுங்காவலிலேயே வைக்கப்பட்டிருப்பாரா?
மேற்கத்திய உலகுகளில் எப்பொழுதாவது நடக்கும் ஒன்றிரண்டு சம்பவம் பெரிதாக்கப்படுகிறதா? எத்தனை குற்றம் அம்பலமேறுகிறது? எவ்வளவு சதவிகிதம் சந்தேகத்திற்கு இடமின்றி முற்றுப்பெற்று நீதி கிடைக்கிறது?
அதெல்லாம் சரி… ஆரம்பத்தில் கடவுள் குறித்து ஏன் இவ்வளவு பில்ட்டப்பு?
பாலியல் குற்றவாளி – Sex Offender
சிறுவன்களையோ சிறுமிகளையோ வன்புணர்பவர்
அவ்வாறு வன்முறைக்குள்ளாக்கியதை நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டு ஒப்புக் கொண்டவர்.
குழந்தைகளிடம் செக்ஸ் வைத்த குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு சிறை சென்றவர்.
சிறார்களிடம் உறவு வைத்துக் கொள்வதை வீடியோ, புகைப்படம் எடுத்து உலவ விடுபவர்.
மேற்சொன்னதை பல தடவை பல்வேறு குழந்தைகளிடம் விதம் விதமாக தொடர்ந்து செய்து வருபவர்.
ரேப், பொது இடத்தில் ஆடையின்றித் திரிவது, பலர் பார்க்குமாறு மலஜலம் கழிப்பது போன்ற சிறு குற்றங்களும் இதில் அடக்கம்.
மதநம்பிக்கை & கடவுள் மீது பழிபோடும் பக்த சுபாவம்
அந்தக் காலத்தில் வள்ளியும் தெய்வானையும் கந்தசாமிக்கு துணையிருந்தார்கள். தெய்வானையை மணந்த பிறகு, வள்ளியை, யானைகளைக் கொண்டு பயமுறுத்தி இழுத்துக் கொண்டு வந்திருக்கிறார் முருகன். எம்பெருமான் தண்டபாணியைக் கூட பாலியல் பலாத்கார லிஸ்டில் திருத்தணிகை காவல்நிலையம் விசாரிக்க வேண்டும். ஆனால், போலீஸ் ஸ்டேசனிலேயே இந்த மாதிரி ரேப் நடந்தேறுவது சினிமாவில் அடிக்கடி பார்க்கும் நிஜம்.
ஃபிலிப்பும் இதையேதான் தன் நம்பிக்கையாக சாட்சியம் சொல்கிறார். கடவுள் அவர் காதில் வந்து ஓதியிருக்கிறார். இளம்வயதில் பெண்ணின் அடக்குமுறையால் பாதிக்கப்படும் ‘சிவப்பு ரோஜாக்களி‘ல் இந்தப் பொண்ணுங்களே இப்படித்தான். குத்துங்க எசமான் குத்துங்கஎன்பதாக எழும் குரோதம், தனக்கு பலம் கிடைத்தபின், அந்த அதிகாரத்தை பிரயோகிக்க, அடக்கியாள கீழ்ப்படிந்த சிறுவயது சிறுமியை நாடுகிறது. அதற்கு அல்லாவும் துணையாகிறார். பிலிப்புக்கு ஜீஸஸ்.
‘மாயாவி‘ திரைப்படத்தில் சூர்யாவால் சிறைவைக்கப்படும் ஜோதிகா, திருடன் மேலே காதல்வயப்படும் ஸ்டாக்ஹோம் தாக்கீட்டின்படி 11 வயதில் கவரப்பட்ட Dugardம் இப்பொழுது தன்னை டென்ட் கொட்டகையில் அடைத்து வைத்தவன் மீது பாசமோ, பரிதாபமோ கொண்டிருக்கிறார்.
‘நான் மிகவும் முக்கியமானவன்’ என்று எனக்கு கூட வலையில் இயங்குவதால் பொய்யாகத் தோன்றும். வாழ்க்கையில் மிட்-லைஃப் போராட்டத்தில், நாய்க்குணம் எட்டிப்பார்க்கும் நாற்பது வயதில் இந்த மாதிரி திரிபுணர்ச்சிகள் சாதாரணம். மாயத்தோற்றங்களை இறையாணையாகக் கனவு கொண்டு, செயலாக்கலில் ஈடுபடுவது அபாயம்.
தனிநபர் சுதந்திரம் & குற்றவாளிக்கு மறுவாழ்வு: புனர்வாழ்வும் புணர்வாழ்வும்
பாலியல் வக்கிரம் பிடித்தவன் என்பதை பிலிப் காரிட் ஏற்கனவே ஒப்புக் கொண்டிருக்கிறான். மூன்று தமிழ் சினிமாக்களை எடுத்துக் கொள்ளலாம்.
1. மகாநதி: சிறைவாசம் குறைப்பு: ஆயுள் தண்டனையாக ஐம்பதாண்டு காலம் கடுஞ்சிறையில் இருந்திருக்க வேண்டியவன். பரோல் என்பது குற்றத்தை ஒப்புக் கொண்டு மன்னிப்பு கேட்டல். அவ்வாறு மனந்திருந்திய செய்கைக்காக, கடவுள் நல்வழி காட்டினார் என்னும் ஒப்புதலுக்காக பத்தாண்டுகளிலேயே விடுவிக்கப்படுகிறான். வெளியே வந்ததும், யேசுவின் சொற்படி வேட்டை தொடர்கிறது.
2. வேட்டையாடு விளையாடு: – Garrido came under suspicion in the unsolved murders of several prostitutes in the 1990s, raising the prospect he was a serial killer as well. Several of the women’s bodies — the exact number is not known — were dumped near an industrial park where Garrido worked during the 1990s. Police executed a search warrant at his home in the investigation.
3. நந்தா: இந்த மாதிரி ஆளுங்களையெல்லாம் வெளியில் விடுவதில் தப்பேயில்லை. சுதந்திரம் அவசியம். சிறையை விட்டு அனுப்புமுன் சுன்னியை மட்டும் வெட்டி விடுதல் எல்லோருக்கும் நலம்.”
உங்கள் ஊரில் பாலியல் வக்கிரம் பிடித்தவர் இருக்கிறாரா?
3. Just another week of rapes | Life and style | The Guardian: “Nearly 50,000 rapes and attempted rapes take place in the UK every year, but only a few are covered by the media. Julie Bindel gives a snapshot of which cases are reported – and how”
பரோல் கொடுத்த மகராசர் இனிமேலாவது தாராளப் பிரபுவாக இல்லாம, தன்னுடைய குடும்பத்த ஒரு தடவ நெனச்சுண்டு ரிலீஸ் செய்வாரா?
கோடவுனிலிருந்து விடுதலை கிடைச்சாச்சு… ஆனா, புத்தகம் போடு, சுயசரிதை சொல்லு, ஓப்ராவில் வா என்று துரத்தும் மீடியாவிலிருந்து அவளுக்கு எப்போ விடுதலை?
அன்னிக்குக் குற்றவாளிங்கள ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பிச்சாங்க.. அந்த மாதிரி புத்தம் புது பூமிய உருவாக்கி, அங்கே இந்த மாதிரி பன்னாடைங்கள பதுக்கி வைக்கலாமே!
Why Narcissists "Breadcrumb" You
Breadcrumbing is when a person gives someone just enough attention to "string the… twitter.com/i/web/status/1…2 days ago
The 2023 “QS World University Rankings” have been published. These contain rankings by subject matter, including ph… twitter.com/i/web/status/1…3 days ago
British Journal for the History of Philosophy Awards: Michael Kremer (Chicago) “Margaret MacDonald and Gilbert Ryle… twitter.com/i/web/status/1…5 days ago
Godfrey Cheshire of The New York Press prescient essay titled “The Death of Film, the Decay of Cinema.”
NYT Magazi… twitter.com/i/web/status/1…6 days ago
A.O. Scott conducts his own exit interview as he moves to a new post after more than two decades of reviewing films… twitter.com/i/web/status/1…6 days ago
Our Film Critic on Why He’s Done With the Movies
A.O. Scott discusses how American cinema has evolved over his 23… twitter.com/i/web/status/1…6 days ago
These Mushrooms Are Not for Eating
Anthropologist Anna Tsing’s book “The Mushroom at the End of the World,” which… twitter.com/i/web/status/1…6 days ago
Los Angeles’s Metro Is Using Classical Music as a Weapon
The music — described to me as “earplugs-at-a-concert lou… twitter.com/i/web/status/1…1 week ago
American Masters: Roberta Flack follows the music icon from a piano lounge through her rise to stardom. From “First… twitter.com/i/web/status/1…1 week ago
Writers Guild of America WGA Would Allow Artificial Intelligence in Scriptwriting, as Long as Writers Maintain Cred… twitter.com/i/web/status/1…1 week ago
World Poetry Day: What is the best use of poems in cinema?
Interstellar: Dylan Thomas – Do Not Go Gentle Into That… twitter.com/i/web/status/1…1 week ago
The End of ‘Life’ As You Know It
Society’s outdated ideas about what it means to be alive are obstructing progress… twitter.com/i/web/status/1…1 week ago
Vikesh Kapoor is the winner of the 2022 Daylight Photo Awards! Vikesh's project See You At Home is an ongoing perso… twitter.com/i/web/status/1…1 week ago
* Accept that some days you’re the pigeon, and some days you’re the statue.
* Solitude is independence
* Call no man happy until he is dead - Oedipus
* It is what you read when you don't have to that determines what you will be when you can't help it. - Oscar Wilde
* The difference between literature and journalism is that journalism is unreadable and literature is not read. - Oscar Wilde