Tag Archives: University

கல்வியின் தரமும் இளைஞர்களின் ஆற்றலும்

இந்தியாவில், 2017 ம் ஆண்டிற்கான சிறந்த செயல்திறம் வாய்ந்த பல்கலைக்கழகங்கள் + கல்லூரிகளின்  பட்டியலை (2017 ranking of institutions based on performance) மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

அதையொட்டி சில எண்ணங்கள்:

  1. பொறியியல் கல்லூரிகள்:

    முதலில் இருக்கும் கல்லூரிகள் எல்லாம் ஏன் தொழில்நுட்பம் அல்லது பொறியியல் அல்லது அறிவியல் கல்லூரிகளாகவே இருக்கின்றன? கலை மற்றும் பொருளாதாரம் மற்றும் நிதி மற்றும் கல்லூரிகளுக்கு இந்தியாவில் மரியாதை கிடையாதா?

  2. ஆராய்ச்சி மையங்கள்: இந்தக் கல்லூரிகளில் இருந்து எவ்வளவு ஆராய்ச்சிக் கட்டுரைகள் மதிக்கத்தக்க இடங்களில் வெளியாகின்றன? ஒவ்வொரு ஆண்டிலும் உலக அளவில் உரிமைக்காப்புகள் எத்தனை வாங்கப்படுகின்றன? இங்கிருந்து படித்து கரையேறுபவர்கள் எத்தனை நிறுவனங்களைத் தோற்றுவிக்கிறார்கள்? இந்த தலை பத்து பல்கலைக்கழகங்களில் பட்டதாரி பட்டம் பெறுபவர்களில் எத்தனை பேர் கவனிக்கத்தக்க கண்டுபிடிப்புகளைக் கொடுத்திருக்கிறார்கள்?
  3. மேலாண்மை:

    தலை இருபது கல்லூரிகளில் நான்கே நான்கு மட்டுமே மற்றவர்களுக்கு கிட்டியிருக்கிறது. இதில் ஓரளவு உண்மை இருந்தாலும், அரசுத்துறையின் பட்டியல் என்பதால் அரசாங்கம் நடத்தும் கல்லூரிகளுக்கு முன்னுரிமை தரப்பட்டதா?
  4. களத்தில் பயிற்சி: இந்தியாவில் நிஜ வாழ்க்கைக்கும் கல்லூரிகளில் கற்றுத்தரும் விஷயங்களுக்கும் பெரிய இடைவெளி உண்டு. இன்னும் மதிப்பெண்களில் நம்பிக்கை கொண்ட நாடு இந்தியா. இன்றளவும் தொடர்ச்சியான பரீட்சைகள் வைக்காமல், பத்தாம் வகுப்பு இறுதித் தேர்வு, செமஸ்டர் முடிவில் ஒரேயொரு தேர்வு என்று செயல்படும் நாடு. இதில் அசலான நிறுவனங்களில் சுயமான செயல்பாடு என்பதைக் கணக்கிலேயே எடுத்துக் கொண்டிருக்கமாட்டார்கள். ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது என்று பழமொழி மட்டும் பேசுவார்கள்.
  5. தமிழகக் கல்லூரிகள்: அண்ணா பல்கலை, 13ம் இடம் பெற்றது. நஷ்டத்தில் இயங்கும் அண்ணாமலை பல்கலை, 92ம் இடம் பெற்றது. நுாற்றாண்டு பழமையான, சென்னைப் பல்கலை, 64ம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. பாரதியார் பல்கலைக்கு, 45ம் இடம் கிடைத்துள்ளது. மதுரை காமராஜர் பல்கலை, சேலம் பெரியார் பல்கலை போன்றவை, 100க்கும், 150க்கும் இடையிலான, இரண்டாம் கட்ட பட்டியலில் மட்டுமே, இடம் பெற்றுள்ளன.

    பல்கலைகளுக்கான தரவரிசை பட்டியலில், பாரதியார் பல்கலை, 28; பாரதிதாசன் பல்கலை, 88ம் இடங்களை பிடித்துள்ளன. திருவள்ளுவர், மனோன்மணியம் சுந்தரனார், சட்ட பல்கலை, இசை பல்கலை, ஆசிரியர் கல்வியியல் பல்கலை போன்றவை, தரவரிசைக்கு விண்ணப்பித்தோர் பட்டியலில் இடம் பெறவில்லை.

    கல்லுாரிகளுக்கான தனி தரவரிசை பட்டியலில், முதல், 100 இடங்களிலும், 100 முதல், 150 வரையிலான, இரண்டாம் கட்ட பட்டியலிலும், தமிழக அரசின் கலை, அறிவியல் கல்லுாரிகள் எதுவும் இடம் பெறவில்லை

  6. சுய சிந்தனை வளர்க்கும் கல்விக்கூடங்கள்: எப்படிப்பட்ட ஆளுமைகளை இந்நிறுவனங்கள் தயார் செய்கின்றன? அவர்களுக்கு வரலாறு, இந்தியத்துவம், சூழலியல் போன்ற பல்துறைகளில் நாட்டம் வரவைக்குமாறு கல்வி பயிற்றுவிக்கப்படுகிறதா? குடியியல் கொள்கை இந்திய அரசாண்மை என்று சமூகம் சார்ந்தவற்றில் விருப்பம் தரவைக்கிறார்களா?
  7. வேலைவாய்ப்பு: இதை மட்டுமே அஸ்திவாரமாகக் கொண்டு பல்கலை தரவரிசையை தயார் செய்திருக்கிறார்களோ என நினைக்க வைக்கும் பட்டியல் இது.
  8. நிரலிக்கான விதிமுறையை எவ்வாறு திட்டமிட்டார்கள்:
    1. கல்விமுறை மற்றும் அடிப்படை வளவசதிகள் – 30%
    2. ஆராய்ச்சி மற்றும் சீரிய நடைமுறை – 30%
    3. பட்டம் பெற்ற பிறகு கிடைக்கும் பயன்கள் – 20%
    4. எல்லோரையும் சேர்த்துக் கொள்ளும் ஏற்றுக்கொள்ளும் தன்மை மற்றும் சமூகப் பிணைப்பு – 10%
    5. கல்லூரியைக் குறித்த பொது மனநிலை – 10%
  9. செய்தி: The Hindu | தி இந்து | கல்வி நிறுவனங்களின் தேசிய தரவரிசை பட்டியல் வெளியீடு
  10. தொடர்புள்ள பதிவுகள்: 37/100 மட்டும்தானாடா? வோத்தாடாய், எவ்ளோ வொளச்சிர்க்கோம் – மிச்சம் கீர 63ஐயும் எங்க்ளுக்கே கொடுங்கடா! | ஒத்திசைவு
  11. பிட்ஸ், பிலானி: எல்லாவற்றையும் சொல்லிவிட்டு நான் படித்த பிர்லா இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜி & சயின்சஸ் பற்றி சொல்லாவிட்டால் ‘மிஸ்டர் ரோபாட்’ தொலைக்காட்சி சீரியலில் பாதியில் “இதுவரை சொன்னதெல்லாம் கற்பனை!” என்று ஏமாற்றுவது போல் ஆகிவிடும். அசலில் கலக்கும் மாணவர்களை உருவாக்குவதற்கும் பேப்பரில் புலிகளை உரும விடுவதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது.

பொறியியல் – கல்விக்கு அப்பால்: வாசகர் மறுவினை

Jobs_lost_Employment_Gained_Sectors_Industries_Work_Compensation_Industry_Salary_WSJ_Graphics

பொறியியல் – கல்விக்கு அப்பால் கட்டுரை வாசித்தேன். தமிழ் பதிப்புலகில் அதிகம் பேசப்படும் சினிமாவும் அரசியலும் தவிர்த்த கட்டுரை என்ற அளவிலேயே கட்டுரை எடுத்துக் கொண்ட பேசுபொருளும், அதன் தொடர்பான எண்ணங்களும் முக்கியமானவை. மதிப்பெண்களைத் துரத்தும் கல்விமுறை குறித்தும் அசலான ஆய்வுகளை ஊக்குவிக்கும் வழிமுறைகள் குறித்த ஆசிரியரின் கருத்தோடு பெரும்பாலும் ஒத்துப் போகிறேன்.

எனினும், கட்டுரையில் ஆங்காங்கே தடாலடி பொதுமையாக்கங்கள் இருக்கின்றன. தான் அறிந்த சூழலை வைத்து, அதை இந்தியா முழுக்க நீட்டும் சூத்திரங்களும் இருக்கின்றன. இவை இரண்டும் கட்டுரை சொல்லும் கருவிற்கு பங்கம் உண்டாக்குகின்றன. பின்குறிப்பின் மூலம், இந்த வாதத்தை நிராகரித்து முற்றுப்புள்ளியும் வைக்கிறார்.

இப்பொழுது கேள்விகள்:

1. ஆராய்ச்சியைத் தூண்டும் கல்வியை ஊக்குவிக்க மூன்று காரணிகள் இருக்கின்றன: புதிய கண்டுபிடிப்புகளினால் ’செல்வம்’ சேர்க்கும் வாய்ப்பு; தேடலின் முடிவில் கிடைக்கும் சமூக ’அந்தஸ்து’; நாம் வாழும் உலகை மாற்றியமைக்கும் நாகரிகத்தை முன்னெடுத்தோம் என்னும் ஆத்ம ’திருப்தி’. இவற்றை இந்திய அமைப்புகள் தரும் சூழல் நிலவுகிறதா?

2. டிப்லோமா படிப்புகள் – இவை செயல்முறையை முன்னிறுத்தும் கல்வி. அவற்றை பொறியியல் படிப்போடு ஒப்பிட்டுப் பார்க்க இயலுமா?

3. மேற்குலகில் பொறியியல் படிக்காதவர்களும் பொறியியல் சார்ந்த வேலைகளில் ஈடுபடுகிறார்கள். இந்தியச் சூழலில் பொறியியல் பட்டயம் என்பது ”இவர் பொறுப்பானவர்; ஒழுங்காக வேலை செய்வார்; எதைக் கொடுத்தாலும் கற்றுக் கொள்வார்.” என்பதற்கான சான்றாதாரமாக விளங்குகிறதா?

4. கணிமொழியியல் – அமெரிக்காவில் கணித்துறை சார்ந்த வேலைக்கு பொறியியல் படிப்பு தேவையாக இருப்பதில்லை. பத்தாவது படித்தவரை வேலைக்கு அமர்த்துகிறார்கள். கணிவிளையாட்டுகளைக் கொண்டு பரிசோதித்து, அதில் திறம் வாய்ந்தவராக இருந்தால் கணினித்துறையில் நல்ல பதவியில் அமர்த்துகிறார்கள். இந்த நிலை இந்தியாவில் உருவாகுமா? (அதாவது பத்தாம் வகுப்புத் தேர்வு முடிந்து, ஓரளவு பக்குவம் வந்தவுடனேயே, டிசிஎஸ் போன்ற நிறுவனங்கள், மாணவர்களைப் பயிற்சிக்கு அழைத்துச் சென்றுவிடும். மூன்று வருடக் கால வேலை+பயிற்சிக்குப் பின் அசல் வேலையில் அமர்த்திக் கொள்வார்கள்.)

5. ஆராய்ச்சிக் கல்வி – இதற்கான சமூக அந்தஸ்து இந்தியாவில் எப்படி இருக்கிறது? நிறுவனத்தில் டைரக்டர், வைஸ் பிரசிடெண்ட் என்றால் அதிக மதிப்பு கிடைக்கிறதே! அதே சமயம் கண்டுபிடிப்புகளை காசாக்கும் சூழல் இந்தியாவில் எப்படி நிலவுகிறது?

6. மேற்குலகில் mentor எனப்படும் வழிகாட்டியை வாழ்நாள் முழுக்க துணையாக வைத்துக் கொள்கிறார்கள். இந்தியச் சூழலில், இதை மாமா, சித்தப்பா போன்ற குடும்ப உறவுகளும் கிராம சமூகங்களும் நிரப்பின. இன்றைய நகரமயமாக்கப்பட்ட நிலையில் உற்றாரின் ஆலோசனைகளும் கேட்பதில்லை. அண்டை வீட்டாரும் சொந்த விஷயங்களில் கருத்துச் சொல்வதை அந்தரங்கத்தின் குறுக்கீடாகவே எடுத்துக் கொள்கிறோம். இந்த வழித்துணைகளின்ம் உதவி கிடைத்தால் ஒவ்வொருவரின் தனித்தன்மையும் ஆர்வமும் தூண்டப் பெற்று ஆராய்ச்சிப் பாதைகளில் தெளிவு கிடைக்குமோ?

7. இதன் தொடர்ச்சியாக பத்ரி சேஷாத்ரி எழுதிய ”தமிழகத்தின் பல பொறியியல் கல்லூரிகளில் ஐ.டி என்ற பாடப்பிரிவை நீக்கியிருக்கிறார்கள்”, த.நி. ரிஷிகேஷ் ராகவேந்திரன் எழுதிய “தரகர், அலுவலர்,வேலை பெற்றுத் தருபவர் தேவை- ஆசிரியர்கள் தேவையில்லை” வாசிக்கப் பெற்றேன். தங்கள் கட்டுரையைப் போன்றே பெங்களூரூ சாணக்கியன் எழுதிய ‘வேலை’ கடிதம் வாசித்தீர்களா?

8. ஜெயமோகன் தளத்தில் கல்வியைக் குறித்தும் பாடத்திட்டத்தின் தேர்வுமுறைகள் குறித்தும் தொடர்ச்சியாக எழுதி வருகிறார். அவற்றில் அவர் குழந்தைகளுக்குக் கொடுக்கும் சுதந்திரத்தையும் தான் பழகிய ஆசிரியர்களையும் கல்வி குறித்த செய்திகளையும் அலசுகிறார். அதில் குறிப்பாக பெற்றொரின் பங்கு குறித்து நிறைய எழுதியிருக்கிறார். நம்முடைய பெற்றோர் இட்ட கட்டளைக்குப் பணிந்து நடப்பது போல், பொறியியல் கல்விக்கு அப்புறமும் மேலாளரின் கட்டளைக்கு அடிபணிய விழைகிறோமா?

9. வேலைக்குப் புதியதாகச் சேரும் எவரையும் எந்த நிறுவனமும் உடனடியாக பொறுப்புகளை சுமத்துவதில்லை. அதிலும் கல்லூரியில் இருந்து புத்தம்புதிதாக வருபவரை இரண்டு வாரங்களுக்காவது தனிப் பயிற்சிக்கு அனுப்புகிறார்கள். தங்கள் அலுவலில் பயன்படுத்தும் நுட்பங்களையும் வழிமுறைகளையும் விவரமாகக் கற்றுத் தருகிறார்கள். அதன் பிறகு இரண்டு மாதங்களுக்காவது, பரீட்சார்த்தமான வேலைகளில் மட்டுமே ஈடுபடுத்துகிறார்கள். மூன்று மாதம் ஆன் பிற்பாடு, நிஜ வேலைக்குள் நுழையும்போது துணை நிற்க அனுபவசாலி ஒருவரை கூடவே கண்காணிப்பாக வைக்கிறார்கள். இதை முதலீடாகக் கருதுகிறார்கள். இந்தியாவின் ஆய்வுத்துறையில் இவ்வாறு ஒவ்வொரு ஆராய்ச்சியாளருக்கும் தனிப்பட்ட கவனம் வழங்க பொருளும் மனிதவளமும் இருக்கின்றதா?

10. வாழ்க்கை ஆதாரமாக கல்வியும், அந்தக் கல்வியினால் கிடைக்கும் வேலையும் அமைந்திருக்கிறது. மேற்குலகில் இருபதில் இருந்து முப்பது வரை பரீட்சார்த்தமாக வாழ்வதை நடைமுறையாக வைத்திருக்கின்றனர். அதாவது, தனக்குப் பிடித்த விஷயத்தில் இளவயதில் தீவிரமாக இயங்குவது; அதில் வெற்றி பெற்றால் கோடிகளை அள்ளுவது; தோல்வி அடைந்தால் மீண்டும் கல்லூரிக்குச் சென்று வேறொரு பாதையைத் தேர்ந்தெடுப்பது. – ஒரு முறையோ, பல முறையோ கீழே விழுந்தால், அஞ்சாமல், கைதூக்கி ஊக்கமும் மீண்டும் நிதியும் கொடுக்கும் சமூக அமைப்பு இந்தியாவில் வர வேண்டுமா?

destroying.jobs_.chart_Decoupling_Productivity_Unemployment_Manufacturing_Economhy_Income_GDP_USA_America_Automation

சுதந்திர மென்பொருள், ஆய்வுக் கட்டுரை, இலவச விடுதலை

ஆரன் ஷ்வார்ஸ் தற்கொலை வருத்தமும் கோபமும் பயமும் தருகிறது.

எம்.ஐ.டி. ஆய்வுகளை உலகிற்கு தர விரும்புகிறார். பல்கலைக்கழக பேராசிரியர்களின் மேட்டர்களை எல்லோரும் படித்து பயன்பெற விழைகிறார். ராமானுஜர் போல் தான் பெற்றதை உலகெங்கும் பரப்ப நினைக்கிறார். சந்தா கட்டி காசு கொடுத்தால்தான் வாசல் திறக்கும் என்பதை எதிர்த்தார்.

அதற்காக முப்பத்தைந்தாண்டு கடுங்காவல் தண்டனை. சில மில்லியன் டாலர் அபராதம் என்று தில்லி வெறியர்களை தாக்கும் பொதுசனம் போல் எம்.ஐ.டி. பல்கலையும் நடுவண் அரசும் வழக்கு தொடுக்கிறது.

இருபதுகளில் உள்ள ஆராய்ச்சியாளர் ஜெயிலுக்குப் போனால்… தற்கொலை செய்துகொண்டுவிட்டார்

அமெரிக்கா: இந்தியக் கோவிலில் தீவிரவாதத் தாக்குதல்

அமெரிக்காவில் குழந்தைகளுக்கு பேன் வந்திருந்தால் பள்ளிக்கு செல்ல முடியாது. ஆனால், துப்பாக்கி வைத்திருந்தால் செல்ல முடியும். இந்தக் காலத்தில் பேன் வந்த தலைகளை பார்ப்பது அரிது. ஆனாலும், பேன் கொண்டு வந்த தொற்று நோய்களையும் கொள்ளை நோய்களையும் எண்ணிப் பார்த்தால் மனித வர்க்கத்தின் மீதான அதன் வீரியத்தை அறிய முடியும்.

காதிற்கு அருகேதான் பேன்களுக்கு விருப்பமான இடம். உறவு மேற்கொண்டவுடன் தன் முட்டைகளை நல்ல கோந்து போட்டு ஒட்டி வைக்கும். அவை குஞ்சு பொரித்து பன்மடங்காக பெருகும். எதுவுமே நமக்குத் தெரியாது. அது பாட்டுக்கு குடும்பம் நடத்தி வளரும். பேன்களினால் பறக்க முடியாது. எனவே, நேரடியான நெருக்கமான சந்திப்புகளில் தொற்றிக் கொள்ளும்.

பேன்கள் போலத்தான் வெள்ளை மேட்டிமையுணர்வாளர்கள். அந்தக் காலத்தில் இராணுவ கூடாரங்களிலும் போர் நடக்கும் இடங்களிலும் பேன் செழித்தது. முதலாம் உலகப் போரில் கால் பங்கு போர் வீரர்கள் நோய்வாய்ப்பட்டதற்கு பேன் மூலமாகப் பரவிய சுரங்களே காரணம்.

பத்தொன்பதாம் நூற்றாண்டிலும் ‘ஜெயில் ஜுரம்’ என்ற பெயரில் ஐரோப்பவிலும் வட அமெரிக்காவிலும் தலை விரித்தாடியது. நீதிபதிகளையும் பீடித்து கொன்று குவித்தது. நான் பேன்களைப் பற்றித்தான் சொல்லுகிறேன். வெள்ளை நிறத்தின் மீதான மீயுணர்விற்குள்ளேயே போகவில்லை.

ஆண்டி பயாடிக் போல் மார்டின் லூதர் கிங் வந்தாலும் இன்னும் பேன் நடமாட்டம் உண்டு.

அமெரிக்காவில் துப்பாக்கி வாங்குதல் எளிது. அதனினும் எளிது, அந்தத் துப்பாக்கிக்கு ஜோடியாக ஏகே47 வகை தானியங்கி துப்பாக்கிகள் சேர்த்து வாங்குவது. அதனினும் மிக எளிது, அந்தத் துப்பாக்கிகளுக்கான தோட்டாக்கள்.

இந்த மாதிரி சல்லிசான விலையில் தோட்டாக்களும் துப்பாக்கிகளும் வாங்கியவர்கள், அதை பயன்படுத்த இடம் தேடுகிறார்கள். வீடீயோ கேம்ஸில் பொய்யாக சுட்டு அலுத்துப் போனவர்கள், இரு கைகளிலும் ஆயுதம் ஏந்தி நிஜ மனிதர்களை சாகடிக்க விரும்புகிறார்கள்.

சிலருக்கு பள்ளிக்கூட வளாகம்.
சிலருக்கு கல்லூரி கேம்பஸ்.
சிலருக்கு நாடாளுமன்ற உறுப்பினரின் சொற்பொழிவு கூட்டம்.
புதியதாக இந்திய வழிபாட்டு ஆலயங்களும் இந்தப் பட்டியலில் சேர்ந்திருக்கிறது.

சாதாரணமாக வகுப்புகளில் எல்லோரும் கேலி செய்வதைப் பொறுக்காதவர்கள், துப்பாக்கி தாங்கி, கிண்டல் செய்தவர்களையும் நடுவில் தென்படுபவர்களையும் கொன்று குவிப்பார். ஆராய்ச்சி மாணவர், மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று இந்த மாதிரி மனச்சிதைவுக்கு உள்ளானோர் கொல்வது சகஜம்.

பத்தாவது படிக்கும் பள்ளிக்கூடமும் பி.எச்டி. செய்யும் பல்கலைக்கழகமும் பிணக்கிடங்காக ஆவது அமெரிக்காவில் மாதம் ஒரு முறையோ அல்லது இரு முறையோ நடக்கிறது.

ஆனால், இந்தியர்களை குறிவைத்து தாக்குவது இதுவே முதல் முறை.

ஐரோப்பாவில் நடந்தது மாதிரி வெள்ளைத் தோலின் உன்னதத்தை நிலை நாட்ட நடந்த தாக்குதலில் இது அமெரிக்காவின் முறை.

சீக்கியர்களின் கோயிலில் ஒருவர் புகுந்து துப்பாக்கிச்சூடு நடத்தியதில் துப்பாக்கிச்சூடு நடத்திய ஒருவன் உள்பட 7 பேர் பலியாயினர். அமெரிக்காவில் கடந்த இரு வாரங்களுக்கு முன் பேட்மேன் படம் திரையிடப்பட்ட சினிமா தியேட்டரில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் படம் பார்த்துக் கொண்டிருந்த 12 பேர் உயிர் இழந்த சுவடு மறைவதற்குள் ‌சீக்கிய கோயிலான குருத்துவாராவில் அடுத்த சம்பவம் நடந்துள்ளது.

இறந்தவர்கள் பாடு தேவலாம். இந்த மாதிரி ஃபையரிங்கில் மாட்டி கை கால் இழந்தவர்களின் பாடு பேஜார். இது வரை நல்ல திடகாத்திரமாக இருந்துவிட்டு, திடீரென்று ஒரு நாளில் டிஸ்ஏபிள்ட் ஆகிறார்கள். சம்பளம் குறைப்பு, வேலையில் பாதிப்பு என்று சீரழிகிறார்கள்.

வெள்ளை மேட்டிமையை நம்புபவர்களுக்கு பல பிரச்சினை.

கருப்பின ஒபாமா தலைவராக இருப்பது சின்ன விஷயம். தங்களின் ராஜ்ஜியத்தில் கறுப்பர்கள் அடிமைகளாக இல்லாதது நிறையவே வருத்தமான விஷயம். அண்டை நாடுகளான மெக்சிகோவில் இருந்து அயல்நாட்டின் லத்தீன் அமெரிக்கர்கள், உள்ளே நுழைவது சினம் தரும் விஷயம். எல்லாவற்றிற்கும் மேலாக இஸ்லாமியர்களையும் அமெரிக்காவில் சுதந்திரமாக உலவ விடுவது உச்சந்தலை வரைக்கும் உசுப்பேற்றி இரத்த நாளங்களை முறுக்கேற்றி உள்ளூர் தீவிரவாதத்தை உருவாக்கும் விஷயம்.

கோபம் தலைக்கேறினால் எந்த மதமும் கண்ணுக்குத் தெரிவதில்லை. டர்பன் கட்டியவர் எல்லாம் முஸ்லீம்; தாடி வளர்த்தவர் எல்லாம் ஒசாமா பின் லாடன்.

எடுத்தார் துப்பாக்கியை… கொன்றார் சீக்கியர்களை!

இந்தியர்கள் மீதான வெறுப்பிற்கும் பல காரணங்களை சொல்லலாம்.

எச்1பி விசாவில் வந்து நூறாயிரத்திற்கு மேல் வாங்க வேண்டிய சம்பளத்திற்கு பதில் பாதி விலையில் நிறைவான வேலை செய்து, மண்ணின் மைந்தருக்கு வேலையில்லாத் திண்டாட்டத்தை உருவாக்குவது…

சொகுசான கார்; ஆசைக்கொரு பையன்; ஆஸ்திக்கொரு பெண் என்று மகிழ்ச்சியாக உலவுவது…

ஆஃப்ஷோரிங், அவிட்சோர்சிங் என்று தினந்தோறும் தொலைக்காட்சி பிரச்சாரத்தை பார்ப்பது…

இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் எல்லாம் அகண்ட பாரதமாக நினைப்பது…

தன்னுடைய சர்ச்சில் தென்படாதது…

கடவுளைத் தொழ கோவிலுக்கு சென்றால், இனி கோவிலிலேயே சமாதி ஆகுவோம் என்று பயம் வரும். அதுவும் அந்த திரிசூலத்துடன் மகிஷாசுர மர்த்தினியை பார்க்கும்போது காங்கிரஸ் ஊழலுக்கு எதிராக நின்ற அன்னா ஹசாரே போல் நம்பிக்கையும் வரலாம்.

1945,ஆகஸ்ட் மாதம், 6-ம் தேதி, ஜப்பானின் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீது அமெரிக்கா அணுகுண்டு வீசி தாக்குதல் நடத்தியது. மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் எரிந்து சாம்பலாயினர்.மேலும் கதிர்வீச்சால், பல்லாயிரக்கணக்கானோர் நோயால் பாதிக்கப்பட்டனர்.

அன்று உலகப் போர் முடிவிற்கு வந்தது. மேலாதிக்க மனப்பான்மை முடிவிற்கு வருவது எக்காலமோ!

ஸ்ரீசாய்ராம் பொறியியல் கல்லூரி: கவிஞர் வைரமுத்து, நடிகர் ஸ்ரீகாந்த், மணிகண்டன்

வைரமுத்து பேச்சு

வரவேற்புரை & மணிகண்டன் நகைச்சுவை

தலைமை உரை

முதல்வர் உரை

ஸ்ரீகாந்த் சிரிப்புரை

நினைத்தாலே இனிக்கும்

காலம் கலிகாலம். அமெரிக்கா செல்வது அமிஞ்சிகரைக்கு செல்வதைவிட எளிதாகிவிட்ட காலம். கல்யாணத்தை கான்டிராக்டரிடம் விடுவது மாதிரி மொத்த குத்தகைக்கு எல்லா சாமான், செட், சூட், டை, சூட்கேசு வாங்கிக் கொடுத்து மெட்ரோ பார்க் சீஸன் டிக்கெட்டும் கொடுத்து அனுப்பும் இன்ஃபோசிஸ்கள் பெருகி களிக்கும் காலம்.

நான் சொல்லப் போகும் சம்பவம் சற்றே ஏறக்குறைய இருபதாண்டுகளுக்கு முந்தைய துவாபர யுகத்தில் நடந்த விஷயங்கள். ஹாலிவுட்டில் ஃப்ளாஷ்பேக்கிற்கு இடமில்லை. இது ஹாலிவுட் இல்லை என்பதால், கறுப்பு-வெள்ளை காலத்திற்கு மெதுவாக பின்னோக்கி செல்லலாம்.

எஞ்சினியரிங்கில் கூடப் படித்த நந்தினிக்கு இடம் கிடைத்த கல்லூரியிலேயே எனக்கும் சீட் போட்டுக் கொடுத்துவிட்டார்கள். அன்டார்டிகாவின் குளிருக்கு அசராதவர் கூட இருப்பார்கள்; நந்தினி சைக்கிள் ஓட்டும் அழகில் மயங்காதவர் இலர். ஷாம்பூ விளம்பரம் போல் கேசவர்த்தினி போடாத தலைவிரி கோலத்தைத் தவிர்த்துவிட்டால் நிச்சயம் மயங்கி விடுவீர்கள். என் கற்பனைக்கு கூந்தல் தடையாக இருந்தது இல்லை. முடியை எல்லாம் எவர் கவனிப்பார்கள்!?

‘காலை எழுந்தவுடன் நாளைய கேள்வி; அது கையில் கிடைத்த பின்னும் துடிக்குது ஆவி ‘. கண்ணதாசன் சொன்னதற்கேற்ப அந்த நாளும் வந்தது.

“ரேகாவிற்கு 37ஈ கொடுத்துட்டாங்க. நீ அங்கே உட்கார முடியுமா?”

‘பஞ்சுப் பொதிகளாம் மேகங்களை எடுத்து நெய்தலாடை தரவா’ என்று சங்கம் கலந்த மு. மேத்தா (அந்தக் காலத்தில் நா முத்துக்குமார் இல்லை) எனக்குள் எட்டிப் பார்த்த போது ரியலிஸத்திற்கு இட்டு வந்தாள் நந்தினி.

“சாரி சார்! இந்த இருக்கைக்கு சிக்கன்தான் சொல்லியிருக்காங்க.” ஏவிஎமெல், ஏவிஎம்எல் என்று ஒரே சீட்டை நான்கு தடவை லுஃப்தான்ஸாவைக் கூப்பிட்டு ஊர்ஜிதம் செய்ததற்கு ரேகாவிற்கு ஏவிஎம்எல் ப்ராப்திரஸ்து. எனக்கு சேவற்கொடியோனே நேரில் பிரத்யட்சமஸ்து. பசி வந்திட பத்தும் பறந்து போகும் என்பது பழமொழி; பசி வந்திட பறவையும் உள்ளே போகும் – இது விமான மொழி.

கார் எவ்வளவு வேகமாக ஓடினாலும் குடிக்கிற பெட்ரோலைக் குடிக்கத்தான் செய்யும். பிரியமானவளின் பெட்டி என்றாலும் கனக்கத்தான் செய்யும். பிரயத்தனப்படாமல் எடுக்க பிரயத்தனப்பட்டு, மிகுந்த பிரயாசையுடன் சூட்கேசுகள் தள்ளுவண்டியில் வைக்கப்பட்டது.

“கேர்ள்சுக்கு பார்த்திருந்த அபார்ட்மென்ட் காலியாகல. பிஎச்டி பண்ணுறேன்னுட்டு அங்கே இருக்கறவங்க, அப்படியே கன்டினியூ செய்யறாங்க. உங்க வீட்டுலதான் மூணு ரூம் இருக்கே. ஒரு ரூமை ரேகாவிற்கும் நந்தினிக்கும் அலாட் செஞ்சிருக்கோம். அடுத்த மாசம் வேற இடம் பார்த்துடலாம்.”

காதில் ஜிகிர்தண்டா பாய்ந்தது. புதிய பூமியில் பக்கத்து பக்கத்து அறை. காலையில் காபியுடன் எழுப்பி விடுவாள். ஞாயிறு க்ரிப்டிக் குறுக்கெழுத்து போட்டி போடுவோம். ஃபீனிக்சில் இறங்கிய முகூர்த்தம்; ஃபீனிக்ஸ் பறவையாக கற்பனை பறந்தது.

கம்ப்யூட்டரில் பவர்பாயின்ட் இருப்பதால் மட்டும் அருமையான மேடைப்பேச்சு அமைந்து விடாது. ஒரே வீட்டில் நந்தினியுடன் இருப்பதால் மட்டும் நேசம் மலர்ந்து விடாது என்று ஜெட்-லாக் வரவழைத்த விழிப்புமற்ற உறக்கமுமற்ற அசமஞ்ச நிலை உணர்த்தியது. சுயம்வரத்திற்கு தயாராகும் சிப்பாய்களின் மனநிலையில் சமையலறையில் நுழைந்தோம். அம்மாவிடம் கற்றுக்கொண்ட நாற்பது நாள் சமையலை சரி பார்க்கும் பலிபீடத்திற்கு காஸ் ஏற்ற தீப்பெட்டி தேடல் துவங்கியது.

‘அமெரிக்காவில் ஏதுடா கரண்ட் கட்? ஹோம்லைட் இங்கேயே இருக்கட்டும்!’ அசரீரியாக அம்மாவின் குரல்.

‘சென்னைக்கு சென்று எடுத்து வந்து விடலாம்?’ உள்ளூர ஹோம் சிக்னெஸ்.

நாங்கள் தம் அடிக்காத மார்ல்போரோ மாந்தர்கள். எவரிடமும் கையில் வத்திப்பெட்டி இல்லை. நந்தினிக்கும் புகை பிடிக்கும் பழக்கம் இருக்காது என்னும் அபார நம்பிக்கையும் இருந்ததால், அவளை எழுப்ப மனம் ஒப்பவில்லை. இந்தியாவில் எங்கு சுற்றுலா சென்றாலும் கேன்டில் லைட் உணவிற்காகவோ, அல்லது அந்த உணவை சமைப்பதற்காகவோ மெழுகுவர்த்தியும் சீட்டா ஃபைட்டும் தற்காலத்தின் ப்லூடூத்தும் செல்பேசியும் போல் இணைபிரியாமல் வந்து கொண்டிருக்கும்.

முண்டா பனியனும் லுங்கி சகிதமாக பக்கத்து வீட்டு சீனியர் மச்சான்கள் கதவைத் தட்டினோம்.

“கேஸைத் திறந்தாலே பத்திக்குமே!” அவர்களின் 340வது இ-மெயிலின் 16வது ஷரத்தில் இதைக் குறிப்பிட்டார்கள். கண்டம் விட்டு கண்டம் மாறினாலும் கைக்கடிகாரம், தானாக தன் நேரத்தை மாற்றிக் கொள்வதில்லை. எவராவது, ‘இதுதானம்மா… நீ காட்ட வேண்டிய டைம்’ என்று முள்ளை உள்ளூருக்கு ஏற்ப திருப்பி வைத்தால், சரியானபடி வேலை செய்யும். நாங்கள் கடிகாரமாக கிடைத்த தகவலை கிரகித்துக் கொண்டு, திரும்பினோம்.

“எங்கே போயிட்டீங்க… இந்தாங்க டீ!” நந்தினி நீட்டினாள்.

வர்த்தகம், வன்முறை, வாசிப்பு, வருமானம் – செல்வன்

செல்வனின் முதல் பதிவின் தொடர்ச்சி:

3. ஒவ்வொரு அதிபரும் அவ்வப்போது பற்றிக்கொள்ளும் தீயை அணைப்பதிலேயே நேரங்கழித்து விடுகிறார்களா? ரேகனுக்கு ருசியா; புஷ்ஷுக்கு 9/11. கல்வி, உள்நாட்டு வன்முறை போன்ற பல முக்கிய பிரச்சினைகள் இந்தத் தேர்தலில் கவனம் பெறவில்லை. பொருளாதாரம் மீண்டாலும் கிரிமினல்களை தவிர்ப்பதற்கும் கல்வியை செறிவாக்குவதற்கும் எந்த மாதிரி தொலைநோக்கு திட்டங்கள் தேவை?

கிரிமினல்களை ஒழிப்பது எந்த நாட்டு அரசாலும் முடியாது. குற்றங்களை மட்டுப்படுத்த மட்டுமே முடியும். அதிக எண்ணிக்கையில் போலீசை பணிக்கமர்த்துவது மட்டுமே இதற்கு தீர்வல்ல. சமூக ரீதியிலான மாற்றங்களை நிறைய செய்ய வேண்டும்.

உதாரணம்: கருப்பருக்கெதிராக கருப்பர் நடத்தும் குற்றங்கள்.அந்த சமூகத்தில் கல்வி, வேலைவாய்ப்புக்களை அதிகரித்தால் இது தானாக குறையும்.

பொருளாதார மந்த நிலை காரணமாக அமெரிக்க மாநில அரசுகள் பல்கலைகழகங்களுக்கு அளிக்கும் நிதியுதவியை குறைக்கின்றன. நீண்டகால அடிப்படையில் இது தேசத்துக்கு நல்லதல்ல. இந்த விஷயத்தில் ஒபாமா பல்கலை மாணவர்களுக்கு அளிக்கவிருக்கும் உதவித்தொகை வரவேற்கத்தகுந்த திட்டம் தான்.

அமெரிக்க பல்கலைகழகங்களில் நிலவும் ஆசிரியர் பற்றாகுறையை போக்க வேண்டும். வேலைக்கு போகும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பதால் பாடத்திட்டங்களையும், வகுப்புகளையும் அதற்கேற்ராற்போல் மாற்ற வேண்டும்.

நிதி மட்டுமே உடனடி பிரச்சனையாக தெரிகிறது.மற்றபடி அமெரிக்க பல்கலைகழகங்கள் உலகின் தலைசிறந்த கல்விக்கூடங்களே ஆகும். ஓரளவு உதவி செய்தால் அவையே தம்மை கைதூக்கி விட்டுக்கொள்ளூம்.

4. உலக வர்த்தகம்: ஒத்துழைக்கும் கொலம்பியாவோடு முரண்டு பிடிக்கும் ஒபாமா ஒத்துக் கொள்ளாத கொள்கை கொண்ட வெனிசுவேலாவோடு சரிசமமாக அமர்வேன் என்கிறார். ஏற்கனவே சட்டைப்பையில் அமர்ந்திருக்கும் கொலம்பியா போன்ற நாடுகளின் சொந்தப் பிரச்சினைகளை கண்டும் காணாமல் போவது அமெரிக்காவுக்கு ஷேமமா? புவிவெம்மையைக் கட்டுபடுத்தும் விதமாக நாப்ஃதாவை மீண்டும் பேரம் பேசுவது, அமெரிக்கத் தொழிலாளர் நலனுக்காக தென் கொரிய கார் ஏற்றுமதியைக் கட்டுப்படுத்துவது என்று ஒபாமா முன்வைக்கும் கொள்கைகள், அமெரிக்காவை தனிமைப்படுத்துமா?

நாப்தாவில் தொழிலாளர் உரிமை, மற்றும் சுற்றுப்புர சூழல் காப்பு ஆகியவற்றை சேர்ப்பேன் என்கிரார் ஒபாமா. கொலம்பியாவில் தொழிலாளர் உரிமை சட்டங்கள் கடுமையாக்கப்பட்டால் தான் அதனுடன் சுதந்திரவணிக ஒப்பந்தத்தில் கையெழுத்திட போகிறேன் என்கிறார்.

இதெல்லாம் டெமக்ராடிக் கட்சியினரின் பெட் புராஜெக்ட்கள். அடுத்த நாடுகளை முதலில் இதுபோல் அமெரிக்கா வலியுறுத்துவது அவற்றின் உள்விவகாரங்களில் தலையிடுவது போல்தான். சுற்றுப்புற சூழலுக்கு செலவு செய்யும் அளவுக்கு கொலம்பியா, மெக்சிகோவிடம் நிதி இருக்கிறதா என்பதே கேள்விக்குறி. இது போன்ற பர்சனல் அஜெண்டாக்கள் அமெரிக்காவின் நலனுக்கு எள்ளளவும் உகந்ததல்ல.

5. நிதி கட்டுப்பாடு: மெகயின் என்னதான் சொல்கிறார்? கடந்த ஆண்டுகளில் ‘கட்டவிழ்த்துவிடு’ என்று தீவிரமாக இயங்கியதும், சடாரென்று பத்து நாளைக்கு முன் சடன் ப்ரேக் அடித்து, தன் நிலையை மொத்தமாக மாற்றியதும் என்பதாக இருப்பதில் எந்தப் பாதை இன்றைய நிலையில் வால் ஸ்ட்ரீட்டை வழிக்குக் கொண்டுவரும்?

ஆலன் கிரீன்ஸ்பான் காலத்து பப்பிள் எக்கானமியின் விளைவுகள் இன்று உணரப்படுகிறது. மெக்கெயின் மட்டுமல்ல, வேறு யாருமே அன்று நடந்த தவறுகளின் விளைவுகளை சரியாக யூகித்திருக்க முடியாது.

பான்னி மே, பிரட்டி மாக்கை கிரடிட் ஸ்கோர் சரியாக இல்லாதவர்கள், மற்றும் மைனாரிட்டி இனத்தவரை குறிவைத்து வீட்டுகடனுதவி அளிக்க செய்து டெமக்ராடிக் கட்சியினரின் ஓட்டுவங்கியை ஸ்திரப்படுத்திக்கொண்ட பில்க்ளின்டனை தான் வீட்டுகடனுதவி சந்தை சரிந்ததற்கு முதலில் குற்றம் சுமத்தவேண்டும்.

மெக்கெயின் பெயிலவுட் பாக்கேஜ் விவகாரத்தில் ஆடியது டிராமா. அது சரியாக வேலை செய்யவில்லை. மற்றபடி மெக்கெயினிடம் ஸ்திரமான பொருளாதார கொள்கை இல்லை. அலாஸ்காவில் கினறு தோண்டினால் எண்னை பிரச்சனை தீர்ந்துவிடும் என்று நம்பிக்கொண்டிருக்கிறார்.

மொத்தத்தில் இந்த இருவர் மேலும் எனக்கு நம்பிக்கை இல்லை. 2012க்காக காத்திருக்கிறேன்.

நன்றி: செல்வன்.

அமெரிக்கா எங்கு பின்தங்கி இருக்கிறது? – வெங்கட்

4. வெற்றிபெற்ற அடுத்த அமெரிக்க ஜனாதிபதி உங்களை ஆலோசகராக நியமிக்கிறார். என்ன அட்வைஸ் கொடுப்பீர்கள்?

அமெரிக்காவின் உள்விவகாரங்களிலெல்லாம் என்னை ஆலோசனை கேட்கமாட்டார்கள் என்பது சர்வநிச்சயம். எனவே பொதுவில் அமெரிக்காவின் நடப்பு குறித்தும் உலகில் அமெரிக்காவின் பங்கு குறித்துக் கொஞ்சம் சொல்லலாம். இறுதியாக அறிவியல் தொழில் நுட்ப ஆலோசனை கொஞ்சம்.

அரசியல், மதம், ராணுவம், அறிவியலில் பொதுவாக அரை நூற்றாண்டுக்கு முந்தைய சிந்தனையில் தேங்கிப் போகிறார்கள் அமெரிக்கர்கள் என்ற வருத்தம் கலந்த மதிப்பீடு இருக்கிறது எனக்கு.

யுத்தங்கள்

இரண்டாம் உலகப்போருக்குப் பிறகான உலகில் பரவலாக அமெரிக்காவிற்கு உன்னத பிம்பம் இருக்கிறது. அமெரிக்காவின் வெற்றிகளை (போர் வெற்றிகளையல்ல, ஈடுபட்ட போர்கள் எதிலுமே அமெரிக்கா தீர்மானமான வெற்றியடையவில்லை, இதில் வியட்நாம், குவைத், ஈராக், ஆப்கானிஸ்தான் இன்னும் ராணுவத் தலையீடுகளைக் கொண்ட க்யூபா, சிலி, நிகராகுவா, போன்ற பல விஷயங்களிலும் அமெரிக்கா பெரிதாகச் சாதிக்கவில்லை. ஆனால் சோகமான உண்மை, சரியாகப் பாதி அமெரிக்கர்கள் இந்தத் தோல்விகளையே வெற்றியாகக் கொண்டாடும் மயக்கத்திலிருக்கிறார்கள்).

போர்வீரர்களை முன்னிருத்தும் நிலை அமெரிக்காவில் ஒழிந்தாலேயொழிய அமெரிக்காவிற்கு உலகில் மதிப்பு கூடப்போவதில்லை, உலகிற்கும் அமெரிக்காவின் தொல்லை குறையப்போவதில்லை. எல்லாவற்றையுமே இராணுவத்தால் தீர்த்துவிட முடியும் என்ற அசட்டுத்தனத்தை அமெரிக்கா கைவிட்டாக வேண்டும். ஆனால் ஜார்ஜியாவை நேட்டோவில் கொண்டுவர ரஷ்யாவின் மீது போர் தொடுக்கலாம், அதன் மூலம் ரஷ்யாவிற்குப் பாடம் கற்பிக்க வேண்டும் என்று உளறும் ரிவால்வார் ரீட்டா ஸேரா பேலின் போன்றவர் துனை ஜனாதிபதியாக வந்தால் இதற்கெல்லாம் சந்தப்பம் குறைவுதான்.

புவி சூடேற்றம்

எண்ணைய்க்குத் துளையிடுவதன் மூலம் அமெரிக்கப் பொருளாதாரத்தை வளர்த்துவிட முடியும் என்பது அபத்தமானது. அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டிருக்கும் உலகளாவியச் சூடேற்றத்திற்குச் செவிமடுப்பதன் மூலம் ஒரு புதிய பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப முடியும். சூடேற்றத்தின் அச்சுறுத்தலையே ஒரு புதிய துவக்கத்திற்கான வாய்ப்பாக மாற்றும் தீர்க்கம் வரவிருக்கும் அமெரிக்க அதிபருக்கு வரவேண்டும் என்று விரும்புகிறேன்.

மாசுகட்டுப்பாடுகளுக்குத் தடை விதிப்பதன் மூலம் பொருளாதாரம் சரியும் என்பது பொய்க்கூற்று. (குறிப்பிடத்தக் அமெரிக்க முதலாளிகளின் பொருளாதராம அச்சுறுத்தப்படும் என்பதே உண்மை). கடந்த இருபது வருடங்களாகத் தொடர்ச்சியாக மாசுக்கட்டுப்பாட்டை ஸ்வீடன், பின்லாந்து, டென்மார்க், போன்ற நார்டிக் நாடுகள் அதிகரித்து வருகின்றன. ஆனால் அவர்களின் பொருளாதாரமும் வாழ்க்கைத் தரமும் பிரமிக்கத்தக்க அளவிற்கு முன்னேறியிருக்கிறது.

ஜெர்மனி, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் புதுப் பொருளாதாரத்திற்குத் தங்களைத் தயார் செய்துவருகின்றன. ஆனால் அமெரிக்கா தேக்கநிலையை அடைந்திருக்கிறது. ஹைட் ரோ கார்பன் பொருளாதாரத்தில் விடிவில்லை என்பதை அமெரிக்க அதிபர் உணரவேண்டும். தவிர்க்க முடியாத பொருளாதாரச் சரிவிலிருக்கும் ஜப்பான் கூட இன்றைய பொருளாதார இறக்கத்தை மறுக்காமல் அதேசமயத்தில் வரவிருக்கும் புதுப் பொருளாதாரத்திற்குத் தன்னைத் தயார் செய்துகொள்கிறது.

வளர்நிலையிலிருக்கும் சீனா சில வியக்கத்தக்க முடிவுகளை எடுத்து வருகிறது. இவற்றுடன் ஒப்பிட அமெரிக்கா தேக்கச் சிந்தனையில் இருக்கிறது.

பொருளாதாரம்

வலதுசாரி பொருளாதாரக் கொள்கைகளில் எனக்கு ஓரளவுக்கு நம்பிக்கை உண்டு. ஆனால், இலக்கற்ற வலதுசாரித்தனம் அழிவிற்குக் கொண்டுசெல்லும் என்பதற்கு சமீபத்தில் சரிந்துகொண்டிருக்கும் வீட்டுச் சந்தை உதாரணம். ஃபானி மே, ஃப்ரெட்டி மாக் போன்ற ‘மொதலாளிகள்’ நேர்மையாக இருப்பார் என்று கருதி அவர்களுக்கு முழுச்சுதந்திரம் கொடுத்ததால் வந்த வினை இது. சந்தை தன்னைத்தானே சரி செய்துகொள்ளும் என்பது பெருமளவுக்கு உண்மை என்றாலும் அதற்கான காலத் தேவை மிக அதிகம், அந்த இடைவெளிகளில் பெரும்பாலும் அழிந்துபோகிறவர்கள் ஏழைகளாகத்தான் இருக்கிறார்கள்.

இடது சாய்வுள்ள சந்தைப் பொருளாதாரம் எப்படி சிறப்பாக நடக்க முடியும் என்பதற்கு , ஸ்விட்ஸர்லாந்து, ஃபின்லாந்து, ஸ்வீடனிலிருந்து உதாரணங்களைப் பெறமுடியும். உலகிலேயே இந்த நாடுகளில்தான் வரிகள் மிக அதிகம்; பொருளாதார வளர்ச்சியில் முதல் ஐந்து இடங்களில் இந்த நாடுகள் இருக்கின்றன.

அப்படியான அரசுகள் இரும்புக்கரத்துடன் உலக வல்லரசாக இருப்பது இயலாததுதான், ஆனால் உலக நண்பனாக, ஆதர்சமாக இருப்பது சாத்தியம். குறைகள் இல்லாத மனிதர்களே கிடையாது, எனவே தீர்மானமான வலது/இடது சாரி சிந்தனைகள் ஒருக்காலத்திலும் வெல்லமுடியாது. எப்படி தீர்மானமான கம்யூனிசம் படிப்பதற்குக் கவர்ச்சியாக, நடைமுறையில் சாத்தியமில்லாமல் இருக்கின்றதோ அதே போல முற்றான மூலதனவாதமும் வறட்டுக் கற்பனைதான்.

நெகிழ்ச்சியற்ற பொருளாதாரக் கொள்கைகளால் எந்தப் பயனுமில்லை என்பதை உணர்ந்து அமெரிக்க அதிபர் வறட்டுச் சித்தாந்தங்களுக்கு அப்பாற்பட்டவராக இருப்பது அமெரிக்காவுக்கும், பொதுவில் உலகிற்கும் நல்லது.

அறிவியல்

ஊனமுற்றோர், வறியோர், முதியோர், வேலையிழந்தோர், போன்றவர்களைக் காலில் போட்டு நசுக்குவது வலதுசாரிகளின் பொழுதுபோக்கு. ஆனால், தமக்கென்று வரும்பொழுது தற்பால் நாட்டம் கொண்ட மகளை நெருக்கி அணைத்துக் கொள்வார்கள் (டிக் செய்னி), கரு ஆதாரச் செல்களில் (Embryonic Stem Cell) ஆராய்ச்சி நடத்தியாவது அல்ஸைமருக்கு மருந்து காணலாம் (நான்ஸி ரேகன்) என்பார்கள்.

தலைவலியும் திருகுவலியும் தனக்கென வரும்பொழுது தங்கள் குடும்பத்திற்கு மாத்திரம் இடதுசாரிகளாக மாறுவது இவர்கள் வழக்கம். தனிநபர் செல்வத்தாலும், ராணுவ பலத்தாலும் பணக்கார நாடாகவும், வல்லரசாகவும் இருக்கலாம், ஆனால் முழுக்க ஏழ்மையற்ற, அவலங்களற்ற, பயங்களற்ற நல்லரசாக இருப்பது சாத்தியமில்லை. வரப்போகும் அமெரிக்க அதிபர் உன்னதத்தை நாடுபவராக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.

அயல்நாட்டுக் கொள்கை

இராக்கில் அமெரிக்கப் படைகளின் இருப்பை எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாது. எனவே அதைவிட்டு விரைவில் வெளிவருவது அமெரிக்காவிற்கும் உலகிற்கும் நல்லது. ஆப்கானிஸ்தானில் படிப்படியாக வெளியேவர முயற்சிக்க வேண்டும்.

சீனாவைப் பற்றிய மயக்கங்கள் நிறைந்த தோற்றம்தான் அமெரிக்காவிலும் உலகிலும் இருக்கிறது; இது பொதுவில் யாருக்குமே நல்லதில்லை. தோழமைகாட்டி சீனாவை வெளியே அழைத்துவர முயற்சிக்க வேண்டும்.

வெனிசூலா, ஈரான் போன்ற நாடுகளிடம் மீசையை முறுக்குவதில் எந்த வீரமும் இல்லை. ஒன்றும் பேசாமலிருந்தாலே போதுமானது. இப்பொழுது இருக்கும் அரசாங்கம் மாறாக அவர்களை உசுப்பேற்றிவிடுவதிலேயே குறியாக இருக்கிறது.

பாரம்பரியம் (பழமைவாதம்)

சிறுவயது முதலிருந்தே அமெரிக்காவில் எனக்கு ஆர்வம் இருந்தது அறிவியல், நுட்பத்தில் அவர்களின் அபார சாதனைகள் வாயிலாகத்தான். தடைகளற்ற ஆர்வம் பெருகும் சிந்தனைகளினால் அமெரிக்கா அறிவியல் உலகிற்கு அளப்பரிய பங்காற்றியிருக்கிறது. கடந்த பத்து/பதினைந்து வருடங்களில் தொடர்ச்சியாக அமெரிக்காவில் அறிவியலுக்கு எதிரான அணுகுமுறை வளர்ந்து வருகிறது (இது ரீகன் காலத்தில் தொடங்கியது; புஷ் இளையர் காலத்தில் உச்சத்தை எட்டியிருக்கிறது).

மதத்தீவிரவாதம் கொஞ்சம் கொஞ்சமாக கட்டற்ற சிந்தனை என்ற அமெரிக்க வாழ்முறையை பாறையிடை வேராகப் பிளந்து வருகிறது. வலதுசாரி அரசியல் முழுக்க முழுக்க இதையே நம்பியிருக்கிறது. முன்னெப்போதுமில்லாத அளவிற்கு அறிவியல் சிந்தனைகள் மீது, கற்பித்தல் மீது, அறிவியல் நிர்வாகத்தின் மீது என்று பல முனைகளிலும் அறிவியல் தொடர்ச்சியாகத் தாக்கப்பட்டு வருகிறது.

நானோநுட்பம், உயிர்நுட்பம், மரபியல் தொடங்கி சூடேற்றம், மருத்துவ ஆய்வு என்று பல துறைகளில் இன்றைய ஆட்சியாளர் கேட்க விரும்புவதை மாத்திரமே அறிஞர்கள் சொல்ல வேண்டும் என்று வற்புத்தப்படுகிறார்கள். இந்தப் புற்று நோய் முற்றுமுன் இதிலிருந்து அமெரிக்கச் சிந்தனையை மீட்டெடுக்க வேண்டிய கட்டாயம் வரவிருக்கும் அதிபருக்கு இருக்கின்றது. அடிப்படை அறிவியலுக்கான ஆதரவு அமெரிக்காவில் வெகுவாகக் குறைந்து வருகிறது (மறுபுறத்தில் ஜப்பான், சீனா, ஜெர்மனி போன்ற நாடுகளில் இது அதிகரித்து வருகிறது).

அறிவியலுக்கு எதிராகத் திரும்பிவரும் அமெரிக்க சமூகத்தை ஒழுங்கமைக்க வேண்டியது வளமையான அமெரிக்க எதிர்காலத்திற்கு முக்கியம்.

5. ஜான் எட்வர்ட்ஸிடம் உங்களுக்கு மதிப்பு இருந்தது. திருமணத்திற்கு அப்பால் உறவு கொண்டதால் அது சரிந்துள்ளதா? அவரின் கொள்கைகள் அப்படியே இருக்கும் பட்சத்தில், பில் க்ளின்டன் பாதம் பணியும் ஒட்டுமொத்த ஜனநாயகக் கட்சியும் — அவரை நிராகரித்து ஒதுக்குவது எப்படி சரியாகும்?

நாளையுடன் முடியும்